Erode Karthik
Active member
- Messages
- 315
- Reaction score
- 71
- Points
- 28
அத்தியாயம் 11
விக்னேசின் கையிருந்த டார்ச் வட்ட வடிவமாக வெளிச்சத்தை கக்கியது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பனி மூடி கிடந்த தெருவில் இருவரும் அந்த தீப்பிழம்பை நோக்கி நடக்க தொடங்கினர். "கால் கட்டை விரல்கூட கணணுக்கு தெரியலைடா" என்றான் விக்னேஷ். "தொப்பை அவ்வளவு பெருசா வா வளர்ந்திருக்கு" என்றான் அருண்.
"அவ்வளவு பனிடா" என்றான் விக்னேஷ். காற்றில் இலைகள் சலசலக்கும் ஓசை கூட வெகு துல்லியமாக கேட்டது. எங்கோ ஒரு தெரு நாய் ஊளையிட்டு பீதியை கிளப்பியது. தீ பிழம்பின் அருகே நெருங்கிய போது தான் அதன் அருகே யாரும் இல்லை என்பதை இருவரும் கவனித்தார்கள்." யாரு இதை பற்ற வைத்திருப்பார்கள்?" என்றான் அருண்.
" இதை பற்ற வைத்தவன் இங்கே பக்கத்தில் தான் இருக்கனும்." என்றான் விக்னேஷ்.
இருவரும் சுற்றும் முற்றும் பார்த்த போது அருணின் முதுகை யாரோ தொட்டார்கள். ஒரு நிமிடம் அருணின் இதயம் நின்று துடித்தது. துப்பாக்கியின் ட்ரிக் கரை இறுக்கி பிடித்த வன் சட்டென்று திரும்பி அதிர்ந்தான். காலை யில் போலீஸ் ஸ்டேசன் வாசலில் மாயா உங்க மேல கோபமா இருக்கா என்று சொன்னவன் உடலை சுற்றி ஒரு போர்வையை போர்த்தியபடி பேயை போல் நின்றான்.
பிச்சைக்காரனா ம ன நிலை தவறியவனா என்று கணிக்க முடியாத அவனை பார்த்து அருண் "யோவ்’ இங்க என்ன செய்கிறாய்?" என்றான்.
அவனோ பதில் பேசாமல் உதட்டுக்கு நடுவே ஆட்காட்டி விரலை வைத்து “உஷ்" சத்தம் போடாதே”" என்றான்.
"ஏன்?" என்றான் விக்னேஷ்.
"மாயா வேட்டைக்கு கிளம்பிட்டா’ ரத்தம் பாக்காம இனி அவதூங்க மாட்டா”
"நீங்க யாரு?மாயாவோட பி.ஏவா?" என்றான் அருண்.
" அருண். கிண்டல் வேணாம். சரி நைட்டு எங்கே படுத்திருந்தீங்க?" என்றான் விக்னேஷ்.
"அந்த கடை வாசல்ல தான் ‘" என்று அவன் கை காட்டியதிசையில் பேப்பர்கள் விரித்து போடப்பட்டு ஒரு கொசுவர்த்தி சுருள் புகைந்து கொண்டிருந்தது.
" மாயா எப்பத்தான் வேட்டைய நிறுத்துவா ? என்றான் விக்னேஷ்
" அந்த குழாய்ல புகை வராத போது மாயா அமைதியாயிருவா, " என்றவன் பெர்லைட் டின் பிரமாண்ட சிமிழிகளை கை காட்டினான்.
"புகை வந்தா என்னாகும்?”
"மாயாவுக்கு கோபம் வரும் “
“மாயாவுக்கு கோபம் வந்தா என்ன பண்ணுவா?”
"கொல்லுவா’ உங்களை எல்லாம் கொல்லுவா"
" அந்த வீட்டு பக்கம் வந்தியா?" என்றான் அருண் தங்கள் வீட்டை காட்டி.
"இல்லை" என்று தலையசைத்தவன் தீக்காய உட்கார்ந்து கொண்டான்.
தீயையே இலக்கின்றி வெறிக்கத் துவங்கினான் அவன். இனி அவன் எதையும் பேச மாட்டான் என்பதை இருவருமே புரிந்து கொண்டனர்.." ப்ளீச்’ என்ற சத்தத்துடன் கரண்ட் வந்தது. அதுவரை இருளில் இருந்த தெருவிளக்குகள் திக்கி திணறி எரியத் துவங்கின.
அவன் சட்டென்று எழுந்து " மாயா தன்னோட வேட்டையை முடிச்சிட்டா" என்றபடி தீப்பிழம்பை சுற்றி ஆட தொடங்கினான்.
"லூசுபயல் நம்ம தூக்கத்தை கெடுத்துட்டான்”" என்றான் அருண்.இருவரும் திரும்ப வீட்டிற்கு வந்து கதவை தாழிட்டனர். "இப்பத்தான் பாஸ் காஜல் அகர்வாலை பெட்டு ல. வைச்சு கசமுசா பண்ண ஆரம்பிச்சேன்" என்றான் அருண். "பரவாயில்லை மறுபடியும் முதல்லருந்து ஆரம்பி. ஆனா பெட்ஷீட்டை ஈரமாக்கி ராத. டயபர் கூட வாங்கி தந்துர்றேன்" என்றான் விக்னேஷ்." “நீங்க லுங்கிலடெண்ட் அடிக்காம குப்புற படுங்க பாஸ்" என்றான் அருண்.இருவரும் விட்ட உறக்கத்தை தேடி பிடித்து உறங்க தொடங்கினர்.
அதிகாலையில் கதவு தட்டப்பட்டது.விக்னேஷ் கொட்டாவி விட்டபடி கதவை திறந்தான். வெளியே பதட்டத்துடன் நின்றிருந்த கோபால் "ஸாரி பார் த டிஸ்ட பர்ன்ஸ் சார். நைட்டு இரண்டு கொலை நடந்திருக்கு சார். எல்லாம் மாயாவோட வேலை" என்றான்.
அருணும் விக்னேசும் ஒரு திடுக் உணர்வுக்கு ஆளானார்கள்.
விக்னேசின் கையிருந்த டார்ச் வட்ட வடிவமாக வெளிச்சத்தை கக்கியது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பனி மூடி கிடந்த தெருவில் இருவரும் அந்த தீப்பிழம்பை நோக்கி நடக்க தொடங்கினர். "கால் கட்டை விரல்கூட கணணுக்கு தெரியலைடா" என்றான் விக்னேஷ். "தொப்பை அவ்வளவு பெருசா வா வளர்ந்திருக்கு" என்றான் அருண்.
"அவ்வளவு பனிடா" என்றான் விக்னேஷ். காற்றில் இலைகள் சலசலக்கும் ஓசை கூட வெகு துல்லியமாக கேட்டது. எங்கோ ஒரு தெரு நாய் ஊளையிட்டு பீதியை கிளப்பியது. தீ பிழம்பின் அருகே நெருங்கிய போது தான் அதன் அருகே யாரும் இல்லை என்பதை இருவரும் கவனித்தார்கள்." யாரு இதை பற்ற வைத்திருப்பார்கள்?" என்றான் அருண்.
" இதை பற்ற வைத்தவன் இங்கே பக்கத்தில் தான் இருக்கனும்." என்றான் விக்னேஷ்.
இருவரும் சுற்றும் முற்றும் பார்த்த போது அருணின் முதுகை யாரோ தொட்டார்கள். ஒரு நிமிடம் அருணின் இதயம் நின்று துடித்தது. துப்பாக்கியின் ட்ரிக் கரை இறுக்கி பிடித்த வன் சட்டென்று திரும்பி அதிர்ந்தான். காலை யில் போலீஸ் ஸ்டேசன் வாசலில் மாயா உங்க மேல கோபமா இருக்கா என்று சொன்னவன் உடலை சுற்றி ஒரு போர்வையை போர்த்தியபடி பேயை போல் நின்றான்.
பிச்சைக்காரனா ம ன நிலை தவறியவனா என்று கணிக்க முடியாத அவனை பார்த்து அருண் "யோவ்’ இங்க என்ன செய்கிறாய்?" என்றான்.
அவனோ பதில் பேசாமல் உதட்டுக்கு நடுவே ஆட்காட்டி விரலை வைத்து “உஷ்" சத்தம் போடாதே”" என்றான்.
"ஏன்?" என்றான் விக்னேஷ்.
"மாயா வேட்டைக்கு கிளம்பிட்டா’ ரத்தம் பாக்காம இனி அவதூங்க மாட்டா”
"நீங்க யாரு?மாயாவோட பி.ஏவா?" என்றான் அருண்.
" அருண். கிண்டல் வேணாம். சரி நைட்டு எங்கே படுத்திருந்தீங்க?" என்றான் விக்னேஷ்.
"அந்த கடை வாசல்ல தான் ‘" என்று அவன் கை காட்டியதிசையில் பேப்பர்கள் விரித்து போடப்பட்டு ஒரு கொசுவர்த்தி சுருள் புகைந்து கொண்டிருந்தது.
" மாயா எப்பத்தான் வேட்டைய நிறுத்துவா ? என்றான் விக்னேஷ்
" அந்த குழாய்ல புகை வராத போது மாயா அமைதியாயிருவா, " என்றவன் பெர்லைட் டின் பிரமாண்ட சிமிழிகளை கை காட்டினான்.
"புகை வந்தா என்னாகும்?”
"மாயாவுக்கு கோபம் வரும் “
“மாயாவுக்கு கோபம் வந்தா என்ன பண்ணுவா?”
"கொல்லுவா’ உங்களை எல்லாம் கொல்லுவா"
" அந்த வீட்டு பக்கம் வந்தியா?" என்றான் அருண் தங்கள் வீட்டை காட்டி.
"இல்லை" என்று தலையசைத்தவன் தீக்காய உட்கார்ந்து கொண்டான்.
தீயையே இலக்கின்றி வெறிக்கத் துவங்கினான் அவன். இனி அவன் எதையும் பேச மாட்டான் என்பதை இருவருமே புரிந்து கொண்டனர்.." ப்ளீச்’ என்ற சத்தத்துடன் கரண்ட் வந்தது. அதுவரை இருளில் இருந்த தெருவிளக்குகள் திக்கி திணறி எரியத் துவங்கின.
அவன் சட்டென்று எழுந்து " மாயா தன்னோட வேட்டையை முடிச்சிட்டா" என்றபடி தீப்பிழம்பை சுற்றி ஆட தொடங்கினான்.
"லூசுபயல் நம்ம தூக்கத்தை கெடுத்துட்டான்”" என்றான் அருண்.இருவரும் திரும்ப வீட்டிற்கு வந்து கதவை தாழிட்டனர். "இப்பத்தான் பாஸ் காஜல் அகர்வாலை பெட்டு ல. வைச்சு கசமுசா பண்ண ஆரம்பிச்சேன்" என்றான் அருண். "பரவாயில்லை மறுபடியும் முதல்லருந்து ஆரம்பி. ஆனா பெட்ஷீட்டை ஈரமாக்கி ராத. டயபர் கூட வாங்கி தந்துர்றேன்" என்றான் விக்னேஷ்." “நீங்க லுங்கிலடெண்ட் அடிக்காம குப்புற படுங்க பாஸ்" என்றான் அருண்.இருவரும் விட்ட உறக்கத்தை தேடி பிடித்து உறங்க தொடங்கினர்.
அதிகாலையில் கதவு தட்டப்பட்டது.விக்னேஷ் கொட்டாவி விட்டபடி கதவை திறந்தான். வெளியே பதட்டத்துடன் நின்றிருந்த கோபால் "ஸாரி பார் த டிஸ்ட பர்ன்ஸ் சார். நைட்டு இரண்டு கொலை நடந்திருக்கு சார். எல்லாம் மாயாவோட வேலை" என்றான்.
அருணும் விக்னேசும் ஒரு திடுக் உணர்வுக்கு ஆளானார்கள்.