- Messages
- 45
- Reaction score
- 38
- Points
- 18
அத்தியாயம் - 8
என் கனவில் நிஜமானவனாய்
என்னுள் நுழைந்து....
உன் வதனம் காட்டாமல்
என்னிடம் காதலை சொல்லி....
காதலின் புது உலகிற்கு
அழைத்துச் சென்று....
நித்தமும் உன்னை காதலால்
நினைக்க வைத்தவனே....
என் நிஜத்தில் மட்டும்....
இன்னும் வராமல்
இருப்பது ஏனோ???
"அம்மாடி துமி... காலை டிபன் ரெடியா... இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் புருஷனும் என் புருஷனும் வந்து தையத்தக்கா தையத்தக்கா என்று நாட்டியம் ஆடி விடுவார்கள்... அதுக்கு நாம இடம் கொடுக்க கூடாது... டிபன் ஆச்சா இல்லையா..." என்று கேட்டார் பானுப்பிரியா...
"அதெல்லாம் ரெடி ஆகிடுச்சு அத்தை... காலையில தோசை சட்னி சாம்பார்... கூட பொடியும் இருக்கு... அப்பறம் இடியாப்பம் தேங்காய் பாலும் பண்ணி இருக்கேன்... எல்லாத்தையும் எடுத்து போய் டைனிங் டேபிள் மேல வச்சிட்டு வந்துட்டேன்... போதுமா..." என்று புன்னகையுடன் கேட்டாள் அவரின் மூத்த மருமகள் துமி...
"போதும் மா... வேற எதுவும் வேண்டாம்... ஹ்ம்ம்... மத்தியானம் சமையல் செய்ய தான் பாக்கணும்..." என்று பானு சொல்ல...
துமியோ... "அத்தை அத்தை... எல்லாத்தையும் நீங்க நேற்று இரவே சொல்லிட்டீங்க தானே... எல்லாம் சரியாக தான் நடக்கும்... நீங்க கொஞ்ச நேரம் அமைதியாக இருங்க..." என்று சொன்னாள்...
அதற்குள்...
"பானு... பானு..." என்று கத்திக் கொண்டு இருந்தார் பாரியவேல் நந்தியவர்மன்...
"இதோ... இதோ வரேன் ங்க..." என்று குரல் கொடுத்த படி வந்தார் பானுப்ரியா...
"எதுக்கு இப்படி மூச்சிரைக்க ஓடி வர... பொறுமையாக வந்தால் ஆகாதா..."
"அட... நீங்க தானே என் பேரை இம்புட்டு நேரம் ஏலம் விட கத்திட்டு இருந்தீங்க... அது பொறுக்க முடியாமல் தான் ங்க... நான் அப்படி அவசர அவசரமாக உங்களை தேடி ஓடியாந்தேன்..."
"உனக்கு இந்த பேச்சு மட்டும் உணக்கையாக பேச வரும்..." என்று முறைத்துக் கொண்டே கூறினான் பாரி...
அதை கேட்டு கலுக் என்று சிரித்த பானு... "இப்படி பேசினா தானே ங்க... நான் உங்க எல்லாரையும் பக்குவமாக சமாளிக்க முடியும்... இல்லன்னா என் தலையில் மிளகா அரைத்து விட மாட்டீங்க..." என்று கூறினார்...
அதற்கு முறைத்து பார்த்த பாரியவேல்... "காலை உணவு எல்லாம் செய்து வச்சாச்சா.." என்று கேட்க...
"ஹ்ம்ம்... ஆச்சு... வாங்க வந்து சாப்பிடுங்க..." என்று சொல்லிய பானுப்ரியா... அவருக்கு உணவை பரிமாறிக் கொண்டு இருக்க... பாரியவேலும் எதுவும் பேசாமல் உண்டு முடித்தார்...
அவர் சாப்பிட்டு முடித்ததும்... "பானு..."
"சொல்லுங்க..."
"நான் என் சித்தி வீடு வரை போய்ட்டு வரேன்..."
"ஹ்ம்ம்... சரி ங்க... நீங்க போய் வாங்க..." என்று சோர்ந்த குரலில் சொன்னார் பானு...
"எதுக்கு இப்படி விசனப் படற..."
"ப்ச்ச்... பாவம் ங்க அவங்க... ஒத்த ஆளாக இத்தனை வருஷம் தனியாக இருக்காங்க... நாம கூப்பிட்டாலும் இங்க வர மாட்றாங்க... ஹ்ம்ம்... எப்படி இருந்தவங்க இப்போ பாருங்க எப்படி இருக்காங்க..." என்று வருத்தம் நிறைந்த குரலில் சொன்னார் பானுப்ரியா...
"விடு பானு... இப்ப பேசி என்ன ஆக போகுது... நான் போய் அவங்களை பார்த்துட்டு வரேன்..." என்று சொல்லி விட்டு சென்றார் பாரியவேல்...
***********
மலர்மதிக்கு மனதில் இருந்த பயம்... தற்போது வேரூன்றி இருந்தது... தற்சமயம் வீட்டில் யாரும் இல்லை... கணவர் அலுவலகம் சென்று விட்டார்... மகளும் கல்லூரிக்கு சென்று விட்டாள்... அதனால் வீடு வெறிச்சோடி போய் இருந்தனர்...
அவர் மனமோ மீண்டும் மீண்டும் ஜோசியரிடம் போனதை பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தது...
கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தான் ஜோசியரை பார்க்க சென்றனர்... நம்பகமான பலரிடம் கேட்டு ஆலோசித்து பிறகு தான் நல்ல ஜோசியரிடம் போனார் மலர்...
அந்த இடத்தில் ஜோசியரை பார்க்க இருவரும் காத்துக் கொண்டு இருந்தனர்... அப்போது தான் மதிவாணனுக்கு முக்கியமான கிளையண்ட் வந்து இருப்பதாகவும்... அவர்களை உடனே சந்திக்க வேண்டும் என்றும் அழைப்பு வந்தது... அதை தவிர்க்க முடியாத காரணத்தால் மலரிடம் பக்குவமாக சொல்லி கிளம்பி விட்டார்...
பிறகு... அவரை உள்ளே அழைக்க... மலர்மதியும் உள்ளே சென்றார்...
"வாங்க மா... இப்படி வந்து உட்காருங்க..." என்று அந்த ஜோசியர் சொல்ல... அவரும் அங்கே சென்று அமர்ந்தார்...
"எதுக்காக வந்து இருக்கீங்க... யாருக்கு பார்க்கணும்..." என்று கேட்க...
"எனக்கும் என் குடும்பத்துக்கும் தான் சாமி..." என்று சொல்லி இரண்டு நாட்களாக நடந்த அனைத்தையும் விவரித்து சொன்னார் மலர்மதி...
"எனக்கு இது எல்லாம் ரொம்ப தவறாக தோன்றுத சாமி... இதை பற்றி வீட்டில் பேசினால் யாரும் பெருசாக எடுத்துக் கொள்ள வில்லை... சாதாரணமான விஷயத்தை பெருசு பண்றேன்னு மட்டும் தான் சொல்றாங்க... ஆனால்... என்னால அப்படி நினைக்க முடியல... இந்த எண்ணம் எல்லாம் என் மனசை உறுத்திக் கொண்டே இருக்கிறது சாமி... நான் அதை மாற்ற நினைத்தாலும்... மாற்றிக்க முடியல..." என்று கவலையுடன் சொன்னார் மலர்மதி...
"உங்க வீட்டில் இருப்பவர்கள் எல்லாருடைய ஜாதகத்தையும் கொடுங்க..." என்று சொல்லி அதை வாங்கி கொண்டார் அந்த ஜோசியர்...
ஒரு கால் மணி நேரம் அதை எல்லாம் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டு இருந்தார் அவர்...
"உங்க குடும்பத்துக்கு ஒரு கண்டம் இருக்கு மா..." என்று அழுத்தமாக சொன்னார் ஜோசியர்...
"என்ன சாமி சொல்றீங்க..." என்று துயரத்துடன் கேட்டார் மலர்...
"ம்ம்... ஆமா... கண்டம் தான்... அது உயிரை கூட காவு வாங்கி விடும்... அதே போல உங்க பொண்ணை பெற்ற நீங்க ரெண்டு பேரும் இருக்கும் வரை தான்... உங்க மகளுக்கு பாதுகாப்பு... இல்லன்னா உங்க பொண்ணுடைய வாழ்க்கை கேள்விக்குறி மட்டும் தான்..." என்று கண்களை மூடி நிதானமாக கூறினார்...
இதை கேட்டு வாய் திறக்க முடியாமல் விக்கித்து இருந்தார் மலர்மதி...
"அப்போ எங்களுக்கு ஏதாவது ஆகும்னு சொல்ல வரீங்களா சாமி..." என்று குரல் கம்மி போய் கேட்டார் அவர்...
"என்னால எதையும் வெளிப்படையாக சொல்ல முடியாது மா... அதே போல நான் சொல்வது எல்லாம் பொய்யும் கிடையாது... நீங்க வர வெள்ளிக் கிழமைக்குள் உங்களுடைய குலதெய்வம் கோவிலுக்கு போய் அபிகேஷம் பண்ணி... ஆராதனை பண்ணுங்க... உங்க குலசாமி உங்களுக்கு துணை நிற்கும்... நீங்க எதை நினைத்தும் கவலை படாதீங்க... எல்லாம் சரியா தான் நடக்கும் என்று நம்புங்க... இப்ப நீங்க போகலாம்..." என்று பொறுமையாக சொல்லி... அவர்களுடைய ஜாதகத்தை மலரின் கையில் கொடுத்தார் அந்த ஜோதிடர்...
இதை எல்லாம் கேட்டு... மனதில் இனம் புரியாத கவலையில் மூழ்கி போனார் மலர்மதி... அதன் பிறகு எப்படியோ வீடு வந்து சேர்ந்தார்... அவருடைய சிந்தை எதிலும் லயிக்க மறுத்தது... அவர் மனம் முழுவதும் பயம் மட்டுமே நிரம்பி இருந்தது...
மாலை கல்லூரி முடித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் மேகா...
"மலர் மா... மலர் மா..." என்று எப்போதும் கத்துவது போலவே கத்திக் கொண்டு வீட்டுக்குள் வந்தாள் அவள்...
ஆனால்... இன்று தாய் பதிலுக்கு குரல் கொடுத்தால் என்னவென்று யோசித்த படி உள்ளே போனாள்...
அவள் அம்மா ஹாலில் இல்லாததால்... மேகா அவரின் அறைக்கு சென்று பார்க்க... அங்கே மெத்தையில் அமர்ந்த படி சுவரை வெறித்து பார்த்த படி அமர்ந்து இருந்தார் மலர்மதி...
'என்ன ஆச்சு இந்த அம்மாக்கு பித்து பிடிச்ச போல ஒரே இடத்தை பார்த்து உட்கார்ந்து இருக்காங்க...' என்று மனதில் நினைத்த படி... தாயை தோள் தொட்டாள் மலர்க்குழலி...
அவளை பார்த்ததும்... "மேகா மா..." என்று சொல்லி அணைத்துக் கொண்டார் மலர்...
"அம்மா... அம்மா... என்ன மா ஆச்சு உனக்கு... எதுக்கு இப்படி எல்லாம் ரியாக்ட் பண்ணிட்டு இருக்க..." என்று பதறி போய் கேட்டாள் மேகா...
மகள் பதறிப் போவதை பார்த்த மலரோ... தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு... மனதினை அமைதிப் படுத்த முயற்சித்தார்...
"நான் நல்லா தான் இருக்கேன் மேகா... ஒன்னுமில்ல..." என்று சொல்லி அவளிடம் இருந்து விலகி நின்றார்...
"ஏன் மா... உடம்பு ஏதாவது முடியலையா என்ன..." என்று சொல்லி தாயின் கழுத்தில் கரம் வைத்து பார்த்தாள் மேகா...
"எனக்கு எதுவும் இல்லை டா... நான் நல்லா தான் இருக்கேன்..." என்று அவர் சொல்ல...
அப்போது தான் தாயின் முகத்தை நன்கு கவனித்து பார்த்தாள் மேகா...
"மலர்... உன் முகம் எல்லாம் வெளுத்து... வீங்கி போன மாதிரி இருக்கு... கண்ணு வேற சிவந்து போய் இருக்கு... நீ எதை நினைச்சாவது அழுதியா மலர்..." என்று தாயின் பெயர் சொல்லியே கோபத்துடன் கேட்டாள் மேகா மலர்க்குழலி...
"இல்ல மா..." என்று மலர் சொல்ல...
"பொய் சொல்லாத மலர்... என் கிட்ட உண்மையை சொல்லு..." என்று குரல் உயர்த்தி கேட்டாள் மேகா...
"அது... அது வந்து மா... நான் வர வழியில் கீழே விழுந்துட்டேன்... அதான் கால் ரொம்ப வலி... என்னால தாங்கவே முடியலை... அதனால் தான் அழுகை வந்துருச்சு..." என்று உண்மையை போல பொய் சொன்னார் மலர்மதி...
"பார்த்து ஒழுங்கா நடக்க மாட்டீயா ம்மா... அப்பா உன் கூட தானே மா வந்தாரு... எப்படி இந்த மாதிரி ஆச்சு..." என்று தாயை கடிந்து கொண்டாள் மேகா...
"அப்பா என்னை விட்டுட்டு ஒரு முக்கியமான கிளையண்ட் வந்து இருக்காங்க ன்னு போய்ட்டாங்க டா... அதான் நானே தனியா வீட்டுக்கு வந்தேன்..." என்று சொல்ல...
"இன்னைக்கு அப்பா வரட்டும்... அவருக்கு ஒரு பெரிய ஸ்பீச்சை பார்சல் பண்றேன்... உங்களை எதுக்கு தனியாக விட்டுட்டு போகணும்... இப்போ பாருங்க... எந்த நிலைமையில் இருக்கீங்க..." என்று கவலையுடன் சொல்லி... அவர் காலை பிடித்துக் கொண்டு எல்லா இடங்களிலும் தொட்டு பார்த்தாள் மலர்க்குழலி...
"அம்மா எங்க வலிக்குது என்று சொல்லுங்க... நான் தைலம் போட்டு விடறேன்... இல்லாட்டி சுடு தண்ணீர் ஒத்தடம் கொடுக்கிறேன்..." என்று மெல்லிய குரலில் சொன்னாள் அவள்...
மகளின் தலையை வருடிக் கொடுத்து... "எனக்கு ஒன்னும் இல்ல பாப்பா... அப்போ வலி கொடுத்தது... இப்ப இதமாக தான் இருக்கு... எனக்கு இப்ப வலி இல்ல மா..." என்று வெளியே வலுக்கட்டாயமாக சிரிப்பை வரவழைத்து கொண்டு கூறினார் மலர்மதி...
ஆனால்... அவர் மனதிற்குள்... 'சாரி டா குட்டிமா... அம்மா உன் கிட்ட பொய் தான் சொல்லிட்டு இருக்கேன்...' என்று நினைத்துக் கொண்டு வருந்தினார்...
"அம்மா... பரவாயில்லை... நீங்க அப்படியே படுத்துக்கோங்க... நான் உங்களுக்கு தைலம் தேய்த்து விடறேன்..."
"இல்ல மேகா செல்லம்... அதெல்லாம் எதுவும் வேண்டாம்... நீ இப்ப தான் காலேஜில் இருந்து வநது இருக்க... உனக்கு பசிக்கும்... நான் ஏதாவது போய் செய்யறேன்..." என்று சொல்லி மலர் எழுந்துக் கொள்ள... அவர் கையை பிடித்து எழ விடாமல் செய்தாள் மேகா...
"அம்மா எனக்கு அதெல்லாம் எதுவும் தேவை இல்லை... நான் சொல்லுற மாதிரி நீ கேளு... அது போதும்... ஹ்ம்ம்... நீ காலை நீட்டி நல்லா படுத்துக்க..." என்று சொல்லி விட்டு... போய் தைலத்தை எடுத்து வந்து அவர் காலில் தேய்த்து விட்டாள் அவள்...
"அம்மா கண்ணை மூடிக்கோ... நான் தலையிலும் தேய்ச்சு விடறேன்... நீ வேற அழுது இருக்க... உனக்கு தலை வலி வந்தாலும் வரும்... அதான் முன் எச்சரிக்கையாக தேய்த்து விட்டு போறேன்..." என்று சொல்லி விட்டு அவரின் பதிலை எதிர்பார்க்காமல் தேய்த்துக் கொண்டு இருந்தாள் மேகா மலர்க்குழலி...
அது என்னவோ மகளின் கை பட்டதும் தொண்டையை அடைத்து இருந்த துக்கம் எல்லாம் கொஞ்சம் விலகி போய்... அவரை தூக்கம் ஆட்கொண்டது...
பிறகு... அவள் அம்மா தூங்கியதும் வெளியே வந்து... அவளுடைய காலேஜ் ப்ராஜெக்ட் சம்மந்தப்பட்ட வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தாள் மேகா...
அதற்கிடையில் அவள் தன் தந்தைக்கு அழைக்கவும் தவறவில்லை... ஆனால் அவர் தான் ஃபோனை எடுக்க வில்லை... இன்றைக்கு அவருக்கு திட்டுக் கச்சேரி இருக்கிறது என்று மனதில் நினைத்துக் கொண்டாள் மலர்க்குழலி...
***********
உங்கள் பொன்னான கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே
என் கனவில் நிஜமானவனாய்
என்னுள் நுழைந்து....
உன் வதனம் காட்டாமல்
என்னிடம் காதலை சொல்லி....
காதலின் புது உலகிற்கு
அழைத்துச் சென்று....
நித்தமும் உன்னை காதலால்
நினைக்க வைத்தவனே....
என் நிஜத்தில் மட்டும்....
இன்னும் வராமல்
இருப்பது ஏனோ???
"அம்மாடி துமி... காலை டிபன் ரெடியா... இன்னும் கொஞ்ச நேரத்தில் உன் புருஷனும் என் புருஷனும் வந்து தையத்தக்கா தையத்தக்கா என்று நாட்டியம் ஆடி விடுவார்கள்... அதுக்கு நாம இடம் கொடுக்க கூடாது... டிபன் ஆச்சா இல்லையா..." என்று கேட்டார் பானுப்பிரியா...
"அதெல்லாம் ரெடி ஆகிடுச்சு அத்தை... காலையில தோசை சட்னி சாம்பார்... கூட பொடியும் இருக்கு... அப்பறம் இடியாப்பம் தேங்காய் பாலும் பண்ணி இருக்கேன்... எல்லாத்தையும் எடுத்து போய் டைனிங் டேபிள் மேல வச்சிட்டு வந்துட்டேன்... போதுமா..." என்று புன்னகையுடன் கேட்டாள் அவரின் மூத்த மருமகள் துமி...
"போதும் மா... வேற எதுவும் வேண்டாம்... ஹ்ம்ம்... மத்தியானம் சமையல் செய்ய தான் பாக்கணும்..." என்று பானு சொல்ல...
துமியோ... "அத்தை அத்தை... எல்லாத்தையும் நீங்க நேற்று இரவே சொல்லிட்டீங்க தானே... எல்லாம் சரியாக தான் நடக்கும்... நீங்க கொஞ்ச நேரம் அமைதியாக இருங்க..." என்று சொன்னாள்...
அதற்குள்...
"பானு... பானு..." என்று கத்திக் கொண்டு இருந்தார் பாரியவேல் நந்தியவர்மன்...
"இதோ... இதோ வரேன் ங்க..." என்று குரல் கொடுத்த படி வந்தார் பானுப்ரியா...
"எதுக்கு இப்படி மூச்சிரைக்க ஓடி வர... பொறுமையாக வந்தால் ஆகாதா..."
"அட... நீங்க தானே என் பேரை இம்புட்டு நேரம் ஏலம் விட கத்திட்டு இருந்தீங்க... அது பொறுக்க முடியாமல் தான் ங்க... நான் அப்படி அவசர அவசரமாக உங்களை தேடி ஓடியாந்தேன்..."
"உனக்கு இந்த பேச்சு மட்டும் உணக்கையாக பேச வரும்..." என்று முறைத்துக் கொண்டே கூறினான் பாரி...
அதை கேட்டு கலுக் என்று சிரித்த பானு... "இப்படி பேசினா தானே ங்க... நான் உங்க எல்லாரையும் பக்குவமாக சமாளிக்க முடியும்... இல்லன்னா என் தலையில் மிளகா அரைத்து விட மாட்டீங்க..." என்று கூறினார்...
அதற்கு முறைத்து பார்த்த பாரியவேல்... "காலை உணவு எல்லாம் செய்து வச்சாச்சா.." என்று கேட்க...
"ஹ்ம்ம்... ஆச்சு... வாங்க வந்து சாப்பிடுங்க..." என்று சொல்லிய பானுப்ரியா... அவருக்கு உணவை பரிமாறிக் கொண்டு இருக்க... பாரியவேலும் எதுவும் பேசாமல் உண்டு முடித்தார்...
அவர் சாப்பிட்டு முடித்ததும்... "பானு..."
"சொல்லுங்க..."
"நான் என் சித்தி வீடு வரை போய்ட்டு வரேன்..."
"ஹ்ம்ம்... சரி ங்க... நீங்க போய் வாங்க..." என்று சோர்ந்த குரலில் சொன்னார் பானு...
"எதுக்கு இப்படி விசனப் படற..."
"ப்ச்ச்... பாவம் ங்க அவங்க... ஒத்த ஆளாக இத்தனை வருஷம் தனியாக இருக்காங்க... நாம கூப்பிட்டாலும் இங்க வர மாட்றாங்க... ஹ்ம்ம்... எப்படி இருந்தவங்க இப்போ பாருங்க எப்படி இருக்காங்க..." என்று வருத்தம் நிறைந்த குரலில் சொன்னார் பானுப்ரியா...
"விடு பானு... இப்ப பேசி என்ன ஆக போகுது... நான் போய் அவங்களை பார்த்துட்டு வரேன்..." என்று சொல்லி விட்டு சென்றார் பாரியவேல்...
***********
மலர்மதிக்கு மனதில் இருந்த பயம்... தற்போது வேரூன்றி இருந்தது... தற்சமயம் வீட்டில் யாரும் இல்லை... கணவர் அலுவலகம் சென்று விட்டார்... மகளும் கல்லூரிக்கு சென்று விட்டாள்... அதனால் வீடு வெறிச்சோடி போய் இருந்தனர்...
அவர் மனமோ மீண்டும் மீண்டும் ஜோசியரிடம் போனதை பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தது...
கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தான் ஜோசியரை பார்க்க சென்றனர்... நம்பகமான பலரிடம் கேட்டு ஆலோசித்து பிறகு தான் நல்ல ஜோசியரிடம் போனார் மலர்...
அந்த இடத்தில் ஜோசியரை பார்க்க இருவரும் காத்துக் கொண்டு இருந்தனர்... அப்போது தான் மதிவாணனுக்கு முக்கியமான கிளையண்ட் வந்து இருப்பதாகவும்... அவர்களை உடனே சந்திக்க வேண்டும் என்றும் அழைப்பு வந்தது... அதை தவிர்க்க முடியாத காரணத்தால் மலரிடம் பக்குவமாக சொல்லி கிளம்பி விட்டார்...
பிறகு... அவரை உள்ளே அழைக்க... மலர்மதியும் உள்ளே சென்றார்...
"வாங்க மா... இப்படி வந்து உட்காருங்க..." என்று அந்த ஜோசியர் சொல்ல... அவரும் அங்கே சென்று அமர்ந்தார்...
"எதுக்காக வந்து இருக்கீங்க... யாருக்கு பார்க்கணும்..." என்று கேட்க...
"எனக்கும் என் குடும்பத்துக்கும் தான் சாமி..." என்று சொல்லி இரண்டு நாட்களாக நடந்த அனைத்தையும் விவரித்து சொன்னார் மலர்மதி...
"எனக்கு இது எல்லாம் ரொம்ப தவறாக தோன்றுத சாமி... இதை பற்றி வீட்டில் பேசினால் யாரும் பெருசாக எடுத்துக் கொள்ள வில்லை... சாதாரணமான விஷயத்தை பெருசு பண்றேன்னு மட்டும் தான் சொல்றாங்க... ஆனால்... என்னால அப்படி நினைக்க முடியல... இந்த எண்ணம் எல்லாம் என் மனசை உறுத்திக் கொண்டே இருக்கிறது சாமி... நான் அதை மாற்ற நினைத்தாலும்... மாற்றிக்க முடியல..." என்று கவலையுடன் சொன்னார் மலர்மதி...
"உங்க வீட்டில் இருப்பவர்கள் எல்லாருடைய ஜாதகத்தையும் கொடுங்க..." என்று சொல்லி அதை வாங்கி கொண்டார் அந்த ஜோசியர்...
ஒரு கால் மணி நேரம் அதை எல்லாம் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டு இருந்தார் அவர்...
"உங்க குடும்பத்துக்கு ஒரு கண்டம் இருக்கு மா..." என்று அழுத்தமாக சொன்னார் ஜோசியர்...
"என்ன சாமி சொல்றீங்க..." என்று துயரத்துடன் கேட்டார் மலர்...
"ம்ம்... ஆமா... கண்டம் தான்... அது உயிரை கூட காவு வாங்கி விடும்... அதே போல உங்க பொண்ணை பெற்ற நீங்க ரெண்டு பேரும் இருக்கும் வரை தான்... உங்க மகளுக்கு பாதுகாப்பு... இல்லன்னா உங்க பொண்ணுடைய வாழ்க்கை கேள்விக்குறி மட்டும் தான்..." என்று கண்களை மூடி நிதானமாக கூறினார்...
இதை கேட்டு வாய் திறக்க முடியாமல் விக்கித்து இருந்தார் மலர்மதி...
"அப்போ எங்களுக்கு ஏதாவது ஆகும்னு சொல்ல வரீங்களா சாமி..." என்று குரல் கம்மி போய் கேட்டார் அவர்...
"என்னால எதையும் வெளிப்படையாக சொல்ல முடியாது மா... அதே போல நான் சொல்வது எல்லாம் பொய்யும் கிடையாது... நீங்க வர வெள்ளிக் கிழமைக்குள் உங்களுடைய குலதெய்வம் கோவிலுக்கு போய் அபிகேஷம் பண்ணி... ஆராதனை பண்ணுங்க... உங்க குலசாமி உங்களுக்கு துணை நிற்கும்... நீங்க எதை நினைத்தும் கவலை படாதீங்க... எல்லாம் சரியா தான் நடக்கும் என்று நம்புங்க... இப்ப நீங்க போகலாம்..." என்று பொறுமையாக சொல்லி... அவர்களுடைய ஜாதகத்தை மலரின் கையில் கொடுத்தார் அந்த ஜோதிடர்...
இதை எல்லாம் கேட்டு... மனதில் இனம் புரியாத கவலையில் மூழ்கி போனார் மலர்மதி... அதன் பிறகு எப்படியோ வீடு வந்து சேர்ந்தார்... அவருடைய சிந்தை எதிலும் லயிக்க மறுத்தது... அவர் மனம் முழுவதும் பயம் மட்டுமே நிரம்பி இருந்தது...
மாலை கல்லூரி முடித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் மேகா...
"மலர் மா... மலர் மா..." என்று எப்போதும் கத்துவது போலவே கத்திக் கொண்டு வீட்டுக்குள் வந்தாள் அவள்...
ஆனால்... இன்று தாய் பதிலுக்கு குரல் கொடுத்தால் என்னவென்று யோசித்த படி உள்ளே போனாள்...
அவள் அம்மா ஹாலில் இல்லாததால்... மேகா அவரின் அறைக்கு சென்று பார்க்க... அங்கே மெத்தையில் அமர்ந்த படி சுவரை வெறித்து பார்த்த படி அமர்ந்து இருந்தார் மலர்மதி...
'என்ன ஆச்சு இந்த அம்மாக்கு பித்து பிடிச்ச போல ஒரே இடத்தை பார்த்து உட்கார்ந்து இருக்காங்க...' என்று மனதில் நினைத்த படி... தாயை தோள் தொட்டாள் மலர்க்குழலி...
அவளை பார்த்ததும்... "மேகா மா..." என்று சொல்லி அணைத்துக் கொண்டார் மலர்...
"அம்மா... அம்மா... என்ன மா ஆச்சு உனக்கு... எதுக்கு இப்படி எல்லாம் ரியாக்ட் பண்ணிட்டு இருக்க..." என்று பதறி போய் கேட்டாள் மேகா...
மகள் பதறிப் போவதை பார்த்த மலரோ... தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு... மனதினை அமைதிப் படுத்த முயற்சித்தார்...
"நான் நல்லா தான் இருக்கேன் மேகா... ஒன்னுமில்ல..." என்று சொல்லி அவளிடம் இருந்து விலகி நின்றார்...
"ஏன் மா... உடம்பு ஏதாவது முடியலையா என்ன..." என்று சொல்லி தாயின் கழுத்தில் கரம் வைத்து பார்த்தாள் மேகா...
"எனக்கு எதுவும் இல்லை டா... நான் நல்லா தான் இருக்கேன்..." என்று அவர் சொல்ல...
அப்போது தான் தாயின் முகத்தை நன்கு கவனித்து பார்த்தாள் மேகா...
"மலர்... உன் முகம் எல்லாம் வெளுத்து... வீங்கி போன மாதிரி இருக்கு... கண்ணு வேற சிவந்து போய் இருக்கு... நீ எதை நினைச்சாவது அழுதியா மலர்..." என்று தாயின் பெயர் சொல்லியே கோபத்துடன் கேட்டாள் மேகா மலர்க்குழலி...
"இல்ல மா..." என்று மலர் சொல்ல...
"பொய் சொல்லாத மலர்... என் கிட்ட உண்மையை சொல்லு..." என்று குரல் உயர்த்தி கேட்டாள் மேகா...
"அது... அது வந்து மா... நான் வர வழியில் கீழே விழுந்துட்டேன்... அதான் கால் ரொம்ப வலி... என்னால தாங்கவே முடியலை... அதனால் தான் அழுகை வந்துருச்சு..." என்று உண்மையை போல பொய் சொன்னார் மலர்மதி...
"பார்த்து ஒழுங்கா நடக்க மாட்டீயா ம்மா... அப்பா உன் கூட தானே மா வந்தாரு... எப்படி இந்த மாதிரி ஆச்சு..." என்று தாயை கடிந்து கொண்டாள் மேகா...
"அப்பா என்னை விட்டுட்டு ஒரு முக்கியமான கிளையண்ட் வந்து இருக்காங்க ன்னு போய்ட்டாங்க டா... அதான் நானே தனியா வீட்டுக்கு வந்தேன்..." என்று சொல்ல...
"இன்னைக்கு அப்பா வரட்டும்... அவருக்கு ஒரு பெரிய ஸ்பீச்சை பார்சல் பண்றேன்... உங்களை எதுக்கு தனியாக விட்டுட்டு போகணும்... இப்போ பாருங்க... எந்த நிலைமையில் இருக்கீங்க..." என்று கவலையுடன் சொல்லி... அவர் காலை பிடித்துக் கொண்டு எல்லா இடங்களிலும் தொட்டு பார்த்தாள் மலர்க்குழலி...
"அம்மா எங்க வலிக்குது என்று சொல்லுங்க... நான் தைலம் போட்டு விடறேன்... இல்லாட்டி சுடு தண்ணீர் ஒத்தடம் கொடுக்கிறேன்..." என்று மெல்லிய குரலில் சொன்னாள் அவள்...
மகளின் தலையை வருடிக் கொடுத்து... "எனக்கு ஒன்னும் இல்ல பாப்பா... அப்போ வலி கொடுத்தது... இப்ப இதமாக தான் இருக்கு... எனக்கு இப்ப வலி இல்ல மா..." என்று வெளியே வலுக்கட்டாயமாக சிரிப்பை வரவழைத்து கொண்டு கூறினார் மலர்மதி...
ஆனால்... அவர் மனதிற்குள்... 'சாரி டா குட்டிமா... அம்மா உன் கிட்ட பொய் தான் சொல்லிட்டு இருக்கேன்...' என்று நினைத்துக் கொண்டு வருந்தினார்...
"அம்மா... பரவாயில்லை... நீங்க அப்படியே படுத்துக்கோங்க... நான் உங்களுக்கு தைலம் தேய்த்து விடறேன்..."
"இல்ல மேகா செல்லம்... அதெல்லாம் எதுவும் வேண்டாம்... நீ இப்ப தான் காலேஜில் இருந்து வநது இருக்க... உனக்கு பசிக்கும்... நான் ஏதாவது போய் செய்யறேன்..." என்று சொல்லி மலர் எழுந்துக் கொள்ள... அவர் கையை பிடித்து எழ விடாமல் செய்தாள் மேகா...
"அம்மா எனக்கு அதெல்லாம் எதுவும் தேவை இல்லை... நான் சொல்லுற மாதிரி நீ கேளு... அது போதும்... ஹ்ம்ம்... நீ காலை நீட்டி நல்லா படுத்துக்க..." என்று சொல்லி விட்டு... போய் தைலத்தை எடுத்து வந்து அவர் காலில் தேய்த்து விட்டாள் அவள்...
"அம்மா கண்ணை மூடிக்கோ... நான் தலையிலும் தேய்ச்சு விடறேன்... நீ வேற அழுது இருக்க... உனக்கு தலை வலி வந்தாலும் வரும்... அதான் முன் எச்சரிக்கையாக தேய்த்து விட்டு போறேன்..." என்று சொல்லி விட்டு அவரின் பதிலை எதிர்பார்க்காமல் தேய்த்துக் கொண்டு இருந்தாள் மேகா மலர்க்குழலி...
அது என்னவோ மகளின் கை பட்டதும் தொண்டையை அடைத்து இருந்த துக்கம் எல்லாம் கொஞ்சம் விலகி போய்... அவரை தூக்கம் ஆட்கொண்டது...
பிறகு... அவள் அம்மா தூங்கியதும் வெளியே வந்து... அவளுடைய காலேஜ் ப்ராஜெக்ட் சம்மந்தப்பட்ட வேலைகளை பார்த்துக் கொண்டு இருந்தாள் மேகா...
அதற்கிடையில் அவள் தன் தந்தைக்கு அழைக்கவும் தவறவில்லை... ஆனால் அவர் தான் ஃபோனை எடுக்க வில்லை... இன்றைக்கு அவருக்கு திட்டுக் கச்சேரி இருக்கிறது என்று மனதில் நினைத்துக் கொண்டாள் மலர்க்குழலி...
***********
உங்கள் பொன்னான கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே