Erode Karthik
Active member
- Messages
- 315
- Reaction score
- 71
- Points
- 28
அத்தியாயம் 11
" என்ன பாஸ்! அந்த ராகே சோட ஆள் அந்த பெயர் தெரியாதவன் துப்பாக்கியை நீட்டியதும் ச ட்டென்று பால் மாறி விட்டீர்களே?" என்றான் அருண் காரை ஓட்டியபடி.
வெளியே ஓடிக் கொண்டிருந்த மரங்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த வினோத் "நான் எங்கே பால் மாறினேன் ? நான் உன்னிடம் அமுதனை ஒப்படைத்த பின் அவனை கொல்வதை விட கிருஷ்ணமூர்த்தியிடம் ஒப்படைத்த பின் அவனை கொல்வது நல்லது என்று தானே கூறினேன் ? அதை நல்ல யோசனை என்று நம்பித்தானே நம்மை உயிரோடு வெளியே விட்டிருக்கிறான். உயிரோடு இருப்பதால் தானே நீ இந்த கேள்விகளை கேட்டு கொண்டிருக்கிறாய்?"
"அப்போது மெய்யாகவே அமுதன் கிடைத்து விட்டால் அவனைகிருஷ்ணமூர்த்தியிடம் ஒப்படைக்காமல் ராகே சிடம் ஒப்படைக்கப் போகிறோம்?"
"பாருஅருண் ! எப்போதுமே ஒன்றுக்கு மேற்பட்ட பிரச்சனைகள் வரும் போது எது அதி முக்கியமோ அதற்கு முதலில் முக்கியத்துவம் கொடுப்போம். இப்போதைய முக்கிய பிரச்சனை அமுதனை கண்டுபிடிப்பது. முதலில் அதில் கவனம் செலுத்துவோம்"
" ரைட் பாஸ் .! அமுதனை நாம் எங்கிருந்து தேடுவது ?ஓரு நூலிழை தொடக்கம் கிடைத்தால் பின்பற்றி பின்னால் போகலாம்.இதில் அப்படி எதையும் காணோமே?"
"ஏன் தொடக்கம் இல்லை என்று நினைக்கிறாய்? மூன்றாம் தேதி இரவிலிருந்து அமுதனன காணவில்லை. நமக்கான தொடக்க புள்ளி அது தான். நான்காம் தேதியிலிருந்து இன்றைய தேதி வரை வந்த எல்லா நியூஸ் பேப்பரையும் சேகரி. தலைப்பு செய்திகளிலிருந்து பெட்டி செய்தி வரை அலசு. ரயிலில் அடிபட்டு இறந்த அனாதை பிணங்கள், அடையாளம் தெரியாத மார்ச்சு வரி பிணங்கள், நான்காம் தேதியிலிருந்து போலீஸ் லாக்கப்பில் அடைபட்டவர்கள், ஹாஸ்பிடலில் அட்மிட்டானவர்கள்,நினைவிழந்து ஹாஸ்பிட்டலில் அட்மிட்டானவர்கள் என்று சகலத்தையும் தோண்டி எடு இவற்றில் ஏதோ ஒன்றில் அமுதனுக்கான செய்தி ஓளிந்திருக்கலாம். நாம் தான் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும்" என்றான் வினோத்.
"நீங்கள் நியூஸ் பேப்பரை ஆராயுங்கள். மீதமுள்ளவற்றை நான் பார்த்து கொள்கிறேன்"
"எனக்கு நாற்பது நாட்களின் பேப்பர்கள் வேண்டும்?."
" மாலைக்குள் உங்கள் டேபிளில் அத்தனை பேப்பர்களும் இருக்கும். இந்த ராகேஷ் மிரட்டியதை கிருஷ்ணமூர்த்தியிடம் சொல்ல வேண்டாமா?"
" கதையில் டுவிஸ்ட் எப்படி வேண்டுமானாலும் வரலாம். அப்போது இந்த விவகாரம் நமக்கு பாதகமாக கூட வந்து சேரலாம். அதனால் இப்போதைக்கு அவரிடம் ராகேஷ் விவகாரத்தை சொல்லாமல் இருப்பதே உத்தமம். "
"ஒருவேளை நாம் அமுதனை கண்டுபிடித்து கிருஷ்ணமூர்த்தியிடம் ஒப்படைத்து விட்டாலும் ராகேஷ் அவனை கொன்று விடுவான். அதை நம்மால் தடுக்க முடியாது இல்லையா பாஸ்?"
"அவனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விடலாம். இல்லை அவனுக்கு பலத்த பாதுகாப்பை தரலாம்.இதை எல்லாவற்றையும் விட உத்தமமான விசயம் ராகேஷ் கேட்பதை கொடுத்து காம்ப்ரமைஸ் செய்து கொள்ளலாம் வேறு நல்ல வழி எதுவும் எனக்கு தோன்றவில்லை"
அருண் காரின் ஆக்சிலேட்டரை மிதித்தான். கார் விரைந்தது.
அன்று மாலை நாற்பது நாட்களுக்கான மொத்த நியூஸ்பேப்பர்களும் வினோத்தின் டேபிளில் மலையென குவிந்தன. அருண் போலீஸ் ஸ்டேசனுக்கும், கவர்மெண்ட் மார்ச்சு வரிக்கும் அலைய ஆரம்பித்திருந்தான். ஓவ்வொரு இடத்திலும் ஏமாற்றமான செய்திகளை சுமந்தபடி திரும்ப வந்து கொண்டிருந்தான். வினோத் இரண்டு முறை கிருஷ்ணமூர்த்தியை தொடர்பு கொள்ள முயன்றான். ஒரு தேன் தடவிய குரல் கிருஷ்ணமூர்த்தி பல் பிடுங்கப்பட்டு பேச முடியாமல் ஓய்வில் இருப்பதாக தெரிவித்தது. அந்த குரலுக்கு சொந்தக்காரி புது செக்ரட்டரி வினோதா என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டது.
அருண் தன் முயற்சிகள் அத்தனையிலும் தோற்று போய் உட்கார்ந்திருந்தான். உதடு பிதுக்கியவனை பார்த்த வினோத்" என்னாச்சு ?" என்றான்.
"ஓன்னும் தேறலை பாஸ். எனக்கென்னமோ நாம் தவறான பாதையில் போவதாக தோன்றுகிறது " என்றான் சலிப்பாக.
"நம்பிக்கையை கைவிடாதே! இதோ இந்த பேப்பர்களில் எதாவது கிடைக்கிறதா என்று பார் .நான் இதுவரை பார்த்த பேப்பர்களை தனியாக வைத்திருக்கிறேன்"
"நான் புத்தகத்தின் கடைசி பக்கத்திலிருந்து படித்து பழகியவன். நான்காம் தேதியிலிருந்து தேடுகிறேன்."
அருணும் தேடலில் இணைந்து கொண்டான்.
ஐந்தாம் தேதி பேப்பரின் ஐந்தாவது பக்கத்தில் ஒரு பெட்டி செய்தி பிரசுரமாகியிருந்தது.
"ரயில்வே டிராக்கில் அடிபட்டு இறந்த அடையாளம் தெரியாத வாலிபர் "
அதைப் பார்த்ததும் அருணின் முகத்தில் பல்ப் எரிந்தது.
"இது தான் நாம் தேடிய செய்தி என்று நினைக்கிறேன்"
" அப்படியென்றால் மார்ச்சு வரியில் இந்த பிணத்தை பற்றிய செய்தி உனக்கு கிடைத்திருக்க வேண்டுமே?" என்றான் வினோத்.
"ஆமா பாஸ்! எங்கேயோ தப்பு நடந்திருக்கிறது.வாங்க! போய் பார்ப்போம்!"
"அமுதனை நாம் அவன் வீட்டில் போட்டோ வாகத்தான் பார்த்திருக்கிறோம். அவனை பை ரப்பா தான் அடையாளம் காட்ட வேண்டும்"
"அப்ப கிருஷ்ணமூர்த்தி "
"இது தெரிஞ்சா செத்துருவார்.விசயம் தெளிவாகட்டும். நாமே பக்குவமாக அவரிடம் சொல்லலாம்."
"அப்ப முதலில் பைரப்பாவை பிடிப்போம்"
இருவரும் எழுந்தார்கள்.
தேடாதே! கிடைக்க மாட்டேன்.
" என்ன பாஸ்! அந்த ராகே சோட ஆள் அந்த பெயர் தெரியாதவன் துப்பாக்கியை நீட்டியதும் ச ட்டென்று பால் மாறி விட்டீர்களே?" என்றான் அருண் காரை ஓட்டியபடி.
வெளியே ஓடிக் கொண்டிருந்த மரங்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த வினோத் "நான் எங்கே பால் மாறினேன் ? நான் உன்னிடம் அமுதனை ஒப்படைத்த பின் அவனை கொல்வதை விட கிருஷ்ணமூர்த்தியிடம் ஒப்படைத்த பின் அவனை கொல்வது நல்லது என்று தானே கூறினேன் ? அதை நல்ல யோசனை என்று நம்பித்தானே நம்மை உயிரோடு வெளியே விட்டிருக்கிறான். உயிரோடு இருப்பதால் தானே நீ இந்த கேள்விகளை கேட்டு கொண்டிருக்கிறாய்?"
"அப்போது மெய்யாகவே அமுதன் கிடைத்து விட்டால் அவனைகிருஷ்ணமூர்த்தியிடம் ஒப்படைக்காமல் ராகே சிடம் ஒப்படைக்கப் போகிறோம்?"
"பாருஅருண் ! எப்போதுமே ஒன்றுக்கு மேற்பட்ட பிரச்சனைகள் வரும் போது எது அதி முக்கியமோ அதற்கு முதலில் முக்கியத்துவம் கொடுப்போம். இப்போதைய முக்கிய பிரச்சனை அமுதனை கண்டுபிடிப்பது. முதலில் அதில் கவனம் செலுத்துவோம்"
" ரைட் பாஸ் .! அமுதனை நாம் எங்கிருந்து தேடுவது ?ஓரு நூலிழை தொடக்கம் கிடைத்தால் பின்பற்றி பின்னால் போகலாம்.இதில் அப்படி எதையும் காணோமே?"
"ஏன் தொடக்கம் இல்லை என்று நினைக்கிறாய்? மூன்றாம் தேதி இரவிலிருந்து அமுதனன காணவில்லை. நமக்கான தொடக்க புள்ளி அது தான். நான்காம் தேதியிலிருந்து இன்றைய தேதி வரை வந்த எல்லா நியூஸ் பேப்பரையும் சேகரி. தலைப்பு செய்திகளிலிருந்து பெட்டி செய்தி வரை அலசு. ரயிலில் அடிபட்டு இறந்த அனாதை பிணங்கள், அடையாளம் தெரியாத மார்ச்சு வரி பிணங்கள், நான்காம் தேதியிலிருந்து போலீஸ் லாக்கப்பில் அடைபட்டவர்கள், ஹாஸ்பிடலில் அட்மிட்டானவர்கள்,நினைவிழந்து ஹாஸ்பிட்டலில் அட்மிட்டானவர்கள் என்று சகலத்தையும் தோண்டி எடு இவற்றில் ஏதோ ஒன்றில் அமுதனுக்கான செய்தி ஓளிந்திருக்கலாம். நாம் தான் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும்" என்றான் வினோத்.
"நீங்கள் நியூஸ் பேப்பரை ஆராயுங்கள். மீதமுள்ளவற்றை நான் பார்த்து கொள்கிறேன்"
"எனக்கு நாற்பது நாட்களின் பேப்பர்கள் வேண்டும்?."
" மாலைக்குள் உங்கள் டேபிளில் அத்தனை பேப்பர்களும் இருக்கும். இந்த ராகேஷ் மிரட்டியதை கிருஷ்ணமூர்த்தியிடம் சொல்ல வேண்டாமா?"
" கதையில் டுவிஸ்ட் எப்படி வேண்டுமானாலும் வரலாம். அப்போது இந்த விவகாரம் நமக்கு பாதகமாக கூட வந்து சேரலாம். அதனால் இப்போதைக்கு அவரிடம் ராகேஷ் விவகாரத்தை சொல்லாமல் இருப்பதே உத்தமம். "
"ஒருவேளை நாம் அமுதனை கண்டுபிடித்து கிருஷ்ணமூர்த்தியிடம் ஒப்படைத்து விட்டாலும் ராகேஷ் அவனை கொன்று விடுவான். அதை நம்மால் தடுக்க முடியாது இல்லையா பாஸ்?"
"அவனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விடலாம். இல்லை அவனுக்கு பலத்த பாதுகாப்பை தரலாம்.இதை எல்லாவற்றையும் விட உத்தமமான விசயம் ராகேஷ் கேட்பதை கொடுத்து காம்ப்ரமைஸ் செய்து கொள்ளலாம் வேறு நல்ல வழி எதுவும் எனக்கு தோன்றவில்லை"
அருண் காரின் ஆக்சிலேட்டரை மிதித்தான். கார் விரைந்தது.
அன்று மாலை நாற்பது நாட்களுக்கான மொத்த நியூஸ்பேப்பர்களும் வினோத்தின் டேபிளில் மலையென குவிந்தன. அருண் போலீஸ் ஸ்டேசனுக்கும், கவர்மெண்ட் மார்ச்சு வரிக்கும் அலைய ஆரம்பித்திருந்தான். ஓவ்வொரு இடத்திலும் ஏமாற்றமான செய்திகளை சுமந்தபடி திரும்ப வந்து கொண்டிருந்தான். வினோத் இரண்டு முறை கிருஷ்ணமூர்த்தியை தொடர்பு கொள்ள முயன்றான். ஒரு தேன் தடவிய குரல் கிருஷ்ணமூர்த்தி பல் பிடுங்கப்பட்டு பேச முடியாமல் ஓய்வில் இருப்பதாக தெரிவித்தது. அந்த குரலுக்கு சொந்தக்காரி புது செக்ரட்டரி வினோதா என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டது.
அருண் தன் முயற்சிகள் அத்தனையிலும் தோற்று போய் உட்கார்ந்திருந்தான். உதடு பிதுக்கியவனை பார்த்த வினோத்" என்னாச்சு ?" என்றான்.
"ஓன்னும் தேறலை பாஸ். எனக்கென்னமோ நாம் தவறான பாதையில் போவதாக தோன்றுகிறது " என்றான் சலிப்பாக.
"நம்பிக்கையை கைவிடாதே! இதோ இந்த பேப்பர்களில் எதாவது கிடைக்கிறதா என்று பார் .நான் இதுவரை பார்த்த பேப்பர்களை தனியாக வைத்திருக்கிறேன்"
"நான் புத்தகத்தின் கடைசி பக்கத்திலிருந்து படித்து பழகியவன். நான்காம் தேதியிலிருந்து தேடுகிறேன்."
அருணும் தேடலில் இணைந்து கொண்டான்.
ஐந்தாம் தேதி பேப்பரின் ஐந்தாவது பக்கத்தில் ஒரு பெட்டி செய்தி பிரசுரமாகியிருந்தது.
"ரயில்வே டிராக்கில் அடிபட்டு இறந்த அடையாளம் தெரியாத வாலிபர் "
அதைப் பார்த்ததும் அருணின் முகத்தில் பல்ப் எரிந்தது.
"இது தான் நாம் தேடிய செய்தி என்று நினைக்கிறேன்"
" அப்படியென்றால் மார்ச்சு வரியில் இந்த பிணத்தை பற்றிய செய்தி உனக்கு கிடைத்திருக்க வேண்டுமே?" என்றான் வினோத்.
"ஆமா பாஸ்! எங்கேயோ தப்பு நடந்திருக்கிறது.வாங்க! போய் பார்ப்போம்!"
"அமுதனை நாம் அவன் வீட்டில் போட்டோ வாகத்தான் பார்த்திருக்கிறோம். அவனை பை ரப்பா தான் அடையாளம் காட்ட வேண்டும்"
"அப்ப கிருஷ்ணமூர்த்தி "
"இது தெரிஞ்சா செத்துருவார்.விசயம் தெளிவாகட்டும். நாமே பக்குவமாக அவரிடம் சொல்லலாம்."
"அப்ப முதலில் பைரப்பாவை பிடிப்போம்"
இருவரும் எழுந்தார்கள்.
தேடாதே! கிடைக்க மாட்டேன்.