- Messages
- 419
- Reaction score
- 659
- Points
- 93
தொடுக்காத பூச்சரமே! அத்தியாயம் 19
நிறையோ பூவணியின் கண்களைப் பார்த்து அதிர்ந்தாள். கண்களில் ஒளி என்பதே இல்லாமல் பொலிவு இழந்து பார்க்கவே பரிதாபமாக இருந்தாள்.
பூவணியோ, நிறையை ஆசையாக கட்டிக் கொண்டு, "எப்படி டீ இருக்கே உடம்புக்கு என்ன..?" என்று பதட்டமாக கேட்டாள்.
நிறையோ, "எனக்கு ஒன்றுமில்லை.. உனக்கு என்ன? ஏன் இப்படி மெலிந்து போய் இருக்கிறாய்?” என்று கேட்டாள். அவள் இன்னும் பூவணியை முழுதாக பார்க்கவில்லை.
உதியனம்பியும் மருத்துவர் அறையிலிருந்து வெளியே வந்தான். கண்களால் மனைவியைத் தேடியவன், அவள் பூவணியுடன் பேசிக் கொண்டு இருப்பதைப் பார்த்து அவர்களிடம் சென்றான்.
பூவணியோ நிறை கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் சிரித்தாள்.
நிறையோ, "ஏண்டி நான் கேட்டதற்கு பதிலே சொல்லாமல் சிரிக்கிறாய்..?" என்று கடிந்து கொண்டவளிடம்..
"நிறை முதலில் பூவணியை உட்காரச் சொல். அவள் நிலையைப் பார்த்து விட்டு இப்படித் தான் நிற்க வைத்து கேள்வி கேட்பாயா?" என்று உதியனம்பி கடிந்து கொண்ட பின் தான் தன் தோழியை உச்சி முதல் பாதம் வரை பார்த்தாள். அப்போது தான் பூவணியின் மேடிட்ட வயிறு அவள் கண்ணுக்கு புலப்பட்டது.
பூவணியோ, உதியனம்பியைப் பார்த்தவுடன், "நம்பி அண்ணா நல்லா இருக்கீங்களா..? உடம்புக்கு என்ன? இருவரும் வந்து இருக்கீங்க.." என்று அவன் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.
நிறையோ, தோழியின் நிலையைக் கண்டு மகிழ்ச்சியுடன் பேச்சற்று.. அவளை ஆரத் தழுவிக் கொண்டாள்.
உதியனம்பியோ, இருவரையும் அமரச் சொல்லிவிட்டு, தாங்கள் எடுக்க வேண்டிய இரத்த பரிசோதனைக்கு பணம் கட்டச் சென்றான்.
நிறையோ, பூவணியிடம், "இது எத்தனாவது மாசம். குழந்தை நல்லா இருக்கா..? ஏன்டி சொல்லவில்லை.. தனியாகவா டெஸ்ட்க்கு வந்தாய். சத்தாக சாப்பிடுகிறாயா?" என்று கேள்வியாக கேட்டு துளைத்து எடுத்தாள்.
பூவணியோ, "அடியே போதும்.. போதும், என்னைக் கொஞ்சம் பேச விடு.." என்று கேலியாக பேசினாள்.
இருவரும் தங்களுக்கு தேவையான தகவலைப் பகிர்ந்துக் கொண்டனர்.
சிறிது நேரத்தில் நிறையாழியும், உதியனம்பியும் பரிசோதனைக்கு இரத்தம் கொடுத்து விட்டு, பூவணியை அழைத்துக் கொண்டு கேன்டீன் சென்று பேசிக் கொண்டே உணவு உண்டார்கள்.
பூவணியின் தோற்றமும், வாடிய முகமும் ஏதோ அவளிடம் சரியில்லை என்று கணவன், மனைவி இருவருக்கும் புரிந்தது.
நிறையோ, தோழியிடம் துளைத்து.. துளைத்து, பேசியே தோழியின் நிலையை அறிந்து கொண்டாள்.
நிறையாழிக்கு, தோழி சொன்னதைக் கேட்டு தாங்க முடியாத வேதனையும், பாரமும் மனம் முழுவதும் ஆட்கொண்டது.
பூவணி கல்யாணம் முடிந்த அன்றே உதி சொன்னானே, அது எவ்வளவு சரி என்று நினைத்து வருந்தினாள்.
பூவணியின் கணவன், உதியனம்பி நினைத்தது போலவே கொஞ்சம் கூட சரியில்லாத குணம் கெட்டவன்.. குடிக்கு அடிமை.. சந்தேகப் பேர்வழி.. இத்துடன் பெண் சகவாசம் வேறு.. தினமும் அவளை அடிக்க வேறு செய்கிறானாம்..
பூவணி சொல்ல சொல்ல கணவன் மனைவி இருவருக்கும் அளவில்லா வேதனை உள்ளத்தை அரித்தது.
பூவணிக்கோ, யாரிடம் தன் சுமையை இறக்குவது என்று காத்திருந்தவள்.. தன் உடன்பிறவா சகோதரனாக நினைக்கும் நம்பியையும், தன் உயிர் தோழியையும் கண்டவுடன் தன் துக்கத்தை அவர்களிடம் கொட்டித் தீர்த்தாள்.
நிறையோ, "எதுக்குடி இன்னும் அவன் கூட இருக்கிறே? நீ பேசாமல் அம்மா அப்பாகிட்ட வந்துடலாம் தானே.." என்று பொறுக்க முடியாமல் கேட்டு விட்டாள்.
பூவணியோ, விரக்தியாக சிரித்தபடி, "நான் அங்கு போனால் பொண்ணு வாழாமல் வந்து விட்டாள்.. என்ன பொண்ணு வளத்தி வச்சு இருக்கீங்கன்னு ஊரும் சொந்தமும் பேசுமாம்.. அவர்கள் மானமும், கவுரவமும் போய்விடுமாம்.. அதனால் ஆம்பிளைன்னா அப்படி, இப்படித் தான் இருப்பாங்க.. நீ தான் அட்ஜஸ்ட் பண்ணிட்டு வாழனும்ன்னு புத்தி சொல்றாங்க.." என்றாள்.
நிறையோ, பூவணி கூறியதைக் கேட்டு கோவமுடன், "அங்கிளும் ஆண்டியும் எந்த காலத்தில் இருக்காங்க.. நீ கஷ்டப்படும் போது அந்த ஊரும் சொந்தமுமா வந்து நிற்கும். பெத்த பெண்ணை விட மானமும் கவுரவமும் தான் அவர்களுக்கு முக்கியமா..?" என்று பொரிந்து தள்ளினாள்.
உதியனம்பியோ, "வணிம்மா நான் வேண்டுமானால் அம்மா அப்பாகிட்ட பேசி பார்க்கட்டுமா..?"
"வேண்டாம் அண்ணா, அவர்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. என் தலையில் என்ன எழுதி இருக்கோ அதன்படி நடக்கட்டும்.." என்றவளின் விழிகளில் நீர் அருவியாய் கொட்டியது.
பூவணி அழுவதை தாங்க முடியாத நிறையோ, "வணி என்னால் உன்னை இப்படி பார்க்க முடியலையே.. ஏண்டி என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. என் மேலும் தப்பு தான், நானாவது அடிக்கடி உனக்கு போன் பண்ணி பேசி இருக்கனும்.. என்னை மன்னித்துவிடு டீ.." என்று மனம் கலங்கி சொன்னவளின் கைகளை அழுந்த பற்றிக் கொண்ட பூவணி..
"நிறை நீ என்ன செய்தாய் மன்னிப்பு கேட்க.. நான் தான் உன்னிடம் சொல்லி உன்னையும் கஷ்டப்படுத்த வேண்டாமென்று நினைத்தேன். ஆனால் இன்று விதி நம்மை சந்திக்க வைத்துவிட்டது. என் கதையைச் சொல்லி உன்னையும் சங்கடப்படுத்திட்டேன்.." என்றவள் எதேர்ச்சையாக தன் கைகடிகாரத்தைப் பார்த்த பூவணி பதறி எழுந்தாள்.
அவளின் பதற்றத்தைக் கண்டு கணவன் மனைவி இருவருமே சட்டென்று எழுந்து "என்னாச்சு..?" என்று கேட்டனர்.
பூவணியோ, அவர் வரும் நேரமாகிவிட்டது. நான் வீட்டில் இல்லை என்றால் அதற்கொரு சண்டை வரும்.. நான் உனக்கு போன் செய்றேன்.. இப்ப கிளம்பட்டுமா..?" என்று கேட்டவளை இருவரும் வலியுடன் பார்த்தனர்.
பூவணியோ வாயில் நோக்கி நடந்தபடியே, "நிறை உன் மனதிற்கு எல்லாம் நல்லதே நடக்கும்.. நீயும் சீக்கிரம் நல்ல செய்தி சொல்வாய்.. நாம் சீக்கிரம் சந்திப்போம்.." என்றாள்.
நிறையோ, "வணி உனக்கு எப்போதும் நான் இருக்கிறேன் என்பதை மறவாதே.. மனதில் எதையும் போட்டு குழப்பிக்காதே.. இந்த நேரத்தில் மகிழ்ச்சியாக இருக்கனும்.. குழந்தை பிறக்கும் நேரமாவது உனக்கு நல்லதாக நடக்கட்டும்.." என்று பூவணியின் கைகளை அழுத்திய படியே சொன்னாள்.. பூவணியோ வெற்று புன்னகை ஒன்றை உதிர்த்தாள்.
உதியனம்பியோ, "வணிம்மா, நீ எதில் வந்தாய் ஆட்டோவை கூப்பிடட்டுமா..?" என்று அக்கறையாக கேட்டான்.
பூவணியோ, "அண்ணா நான் வரும் போது பஸ்சில் தான் வந்தேன். நான் பஸ் பிடிச்சு போய்க்கிறேன்.." என்றவளிடம்..
நிறையோ, "ஆட்டோ பிடிச்சு கொடுங்க, இந்த நிலைமையில் பஸ்சில் எல்லாம் போக வேண்டாம்.." என்றாள் அக்கறையாக.
உதியும் அதையே நினைத்து வேகமாக சென்றவன்' ஆட்டோ ஒன்றை அழைத்து வந்தான்.
ஆட்டோ ஒட்டுநரிடமும், பூவணியிடமும் ஆயிரம் புத்திமதிகள் சொல்லி ஆட்டோவிற்கான பணத்தையும் பூவணி மறுக்க.. மறுக்க, ஆட்டோ ஒட்டுநரிடமும் கொடுத்து அவளை அனுப்பி வைத்தார்கள்.
பூவணி தலை மறையும் வரை பார்த்துக்கொண்டு நின்ற நிறையாழிக்கோ மனம் முழுவதும் சொல்ல முடியாத கவலை அரித்தது.
உதியனம்பி தன் வண்டியை எடுத்து வந்ததும் ஏறி அமர்ந்தவள் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக வந்தாள்.
உதியனம்பியும் பூவணியைப் பற்றி சிந்தித்த படியே வண்டியை வீடு நோக்கி செலுத்தினான்.
வீட்டிற்கு வந்தவர்களுக்கு மனம் எந்த வேலையிலுமே செல்லவிலலை.. இருவரும் இறுக்கத்துடனேயே வலம் வந்தனர்..
மனம் முழுவதும் பூவணியைப் பற்றியே எண்ணம் மேலோங்கி இருந்தது. ஆணோ, பெண்ணோ திருமண வாழ்க்கை மட்டும் நன்றாக அமையவில்லை என்றால் அவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகிறது.
இந்த காலம் தான் எப்போதும் ஒவ்வொருவருக்கும் ஒரு கஷ்டத்தை வைத்து காத்திருக்கிறது. யாருமே விதி விலக்கல்ல..
உதியனம்பியோ பூவணி வாழ்க்கைக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தான்.
நிறையாழியோ பூவணியைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்ததால் தன் பிரச்சனையிலிருந்து கொஞ்சம் வெளியில் வந்தாள்.
கெட்டதிலும் ஒரு நல்லது போல் பூவணியைச் சந்தித்தது அவளுள் பெரிய மாற்றத்தை கொண்டுவந்தது.
சின்ன கோடு பக்கத்தில் ஒரு பெரிய கோடு போட்டால் சின்ன கோடு மறைந்துவிடுவது போல்.. பூவணியின் பிரச்சனை முன் இவள் பிரச்சனை பெரிதாக தோன்றவில்லை.
எப்பவும் சதா குழந்தையைப் பற்றி சிந்தித்து கொண்டு இருந்தவள், இப்போது பூவணிக்கு எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து அவள் முகத்தில் பழைய படி சிரிப்பு வரனும் என்று கடவுளை வேண்டத் தொடங்கினாள்.
உதியனம்பி அன்று காலையில் கல்லூரியில் அவளை விடும் போதே.. மாலை வேலை இருக்கு, நீ பஸ் பிடித்து வீட்டுக்குப் போய்டு என்று சொல்லி இருந்தான்.
அதனால் கல்லூரி முடிந்து வீட்டுக்கு பஸ் பிடித்து வந்தவளுக்கு அலுப்பாக இருந்தது. சிறிது நேரம் படுத்து இருந்தவள் களைப்பு தீர குளித்து விட்டு வந்து காபி கலக்கி குடித்தாள்.
இரவு உணவையும் சமைத்து வைத்து விட்டு கொஞ்ச நேரம் தொலைக்காட்சியாவது பார்க்கலாம் என்று அதை ஓடவிட்டாள்.
ஆனால், அவள் மனம் அதில் செல்லவில்லை.. அன்று அவளுக்கு நேரத்தை நெட்டி தள்ள வேண்டியதாக இருந்தது. ஏனோ கணவன் ஞாபகமாகவே இருந்தது. இன்னும் அவனை காணோமே என்று வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனை நினைத்தாலே இப்போதெல்லாம் அவள் மனம் முழுவதும் மகிழ்ச்சி தான் பொங்கி வழிகிறது.
அவன் எண்ணங்களும், செயல்களும், சிந்தனைகளும் அவனைப் போலவே எத்தனை அழகு.. என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போதே.. அவளின் எண்ணத்தின் நாயகன் வந்துவிட்டான்.
உழைத்த களைப்பு அவன் உடைகளில் தெரிந்தாலும், அவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல், எப்போதும் போல் இவளைப் பார்த்து மென் சிரிப்பொன்றை உதிர்த்தவன், தன் வண்டியை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் வந்தான்.
அவனின் சிரிப்பு அவளையும் தொற்றிக்கொள்ள, "என்னங்க இன்னைக்கு வழக்கத்தை விட லேட் .." என்று புன்னகையுடன் கேட்டவளிடம்..
"ஆமாம் யாழி இன்னைக்கு வேலை கொஞ்சம் அதிகம்.." என்றான்.
"சரி நீங்க குளிச்சுட்டு வாங்க.. நான் டிபன் எடுத்து வைக்கிறேன்.." என்று திரும்பியவளை தடுத்து நிறுத்தியவன், அவள் கையில் ஒரு கவரைக் கொடுத்தான்.
அவளோ, அதை குழப்பத்துடன் வாங்கிக் கொண்டாள். அவளுக்கு சுத்தமாக மருத்துவ அறிக்கை பற்றி(ரிப்போர்ட்) ஞாபகமே இல்லை.
அவனோ, அவளின் குழம்பிய முகத்தைப் பார்த்தவாறே.. "யாழி இது நாம் நேத்து எடுத்த டெஸ்ட் ரிப்போர்ட். நான் ரிப்போர்ட் வாங்கிட்டு டாக்டரையும் பார்த்துட்டேன்.. இருவரின் ரிப்போர்ட்டும் நார்மல்ன்னு சொன்னாங்க. அந்த விட்டமின் மாத்திரையை மட்டும் கன்ட்நியூ பண்ணச் சொன்னாங்க, நீ பிரித்துப் பார்.." என்றவன், அவள் பிரிக்கும் வரை அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.
உதியனம்பி சொன்னதும், அவளுக்கு கலவையான உணர்வு. அந்த கவரை கை நடுங்க பிரித்து பார்த்தவள், மகிழ்ச்சியில் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தாள். அடுத்த நொடி "..உதி.." என்று அழைத்தபடி, அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, அவன் முகம் முழுவதும் முத்தமழை பொழிந்தாள்.
அவனோ, மனதிற்குள் சொல்ல முடியாத வலியுடன் மனைவியின் மகிழ்ச்சியை ரசித்தான்.
நிறையோ அதன் பிறகு வந்த நாட்களில் மகிழ்ச்சியுடனேயே வலம் வந்தாள்.. பழையபடி அவளுடைய குறும்புத்தனம் அதிகரித்தது.
செந்தழைக்கு கூட மகளின் மாற்றம் கொஞ்சம் நிம்மதியைக் கொடுத்தது.. தாயிடம் புலம்புவதையும் நிறுத்தி இருந்தாள்..
உதியனம்பியோ மனை
வியின் மாற்றத்தில் நிம்மதியாக இருந்தான்.
ஆனால் அந்த நிம்மதிக்கு அற்ப ஆயுள் என்பது அவனுக்கு அப்போது தெரியவில்லை...
தொடரும்..
Hi friends,
அடுத்த அத்தியாயம் நாளை காலை..இன்றைய அத்தியாயத்தை படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..இன்னும் 3 யூடியில் கதை நிறைவு பெறும்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
நிறையோ பூவணியின் கண்களைப் பார்த்து அதிர்ந்தாள். கண்களில் ஒளி என்பதே இல்லாமல் பொலிவு இழந்து பார்க்கவே பரிதாபமாக இருந்தாள்.
பூவணியோ, நிறையை ஆசையாக கட்டிக் கொண்டு, "எப்படி டீ இருக்கே உடம்புக்கு என்ன..?" என்று பதட்டமாக கேட்டாள்.
நிறையோ, "எனக்கு ஒன்றுமில்லை.. உனக்கு என்ன? ஏன் இப்படி மெலிந்து போய் இருக்கிறாய்?” என்று கேட்டாள். அவள் இன்னும் பூவணியை முழுதாக பார்க்கவில்லை.
உதியனம்பியும் மருத்துவர் அறையிலிருந்து வெளியே வந்தான். கண்களால் மனைவியைத் தேடியவன், அவள் பூவணியுடன் பேசிக் கொண்டு இருப்பதைப் பார்த்து அவர்களிடம் சென்றான்.
பூவணியோ நிறை கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் சிரித்தாள்.
நிறையோ, "ஏண்டி நான் கேட்டதற்கு பதிலே சொல்லாமல் சிரிக்கிறாய்..?" என்று கடிந்து கொண்டவளிடம்..
"நிறை முதலில் பூவணியை உட்காரச் சொல். அவள் நிலையைப் பார்த்து விட்டு இப்படித் தான் நிற்க வைத்து கேள்வி கேட்பாயா?" என்று உதியனம்பி கடிந்து கொண்ட பின் தான் தன் தோழியை உச்சி முதல் பாதம் வரை பார்த்தாள். அப்போது தான் பூவணியின் மேடிட்ட வயிறு அவள் கண்ணுக்கு புலப்பட்டது.
பூவணியோ, உதியனம்பியைப் பார்த்தவுடன், "நம்பி அண்ணா நல்லா இருக்கீங்களா..? உடம்புக்கு என்ன? இருவரும் வந்து இருக்கீங்க.." என்று அவன் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.
நிறையோ, தோழியின் நிலையைக் கண்டு மகிழ்ச்சியுடன் பேச்சற்று.. அவளை ஆரத் தழுவிக் கொண்டாள்.
உதியனம்பியோ, இருவரையும் அமரச் சொல்லிவிட்டு, தாங்கள் எடுக்க வேண்டிய இரத்த பரிசோதனைக்கு பணம் கட்டச் சென்றான்.
நிறையோ, பூவணியிடம், "இது எத்தனாவது மாசம். குழந்தை நல்லா இருக்கா..? ஏன்டி சொல்லவில்லை.. தனியாகவா டெஸ்ட்க்கு வந்தாய். சத்தாக சாப்பிடுகிறாயா?" என்று கேள்வியாக கேட்டு துளைத்து எடுத்தாள்.
பூவணியோ, "அடியே போதும்.. போதும், என்னைக் கொஞ்சம் பேச விடு.." என்று கேலியாக பேசினாள்.
இருவரும் தங்களுக்கு தேவையான தகவலைப் பகிர்ந்துக் கொண்டனர்.
சிறிது நேரத்தில் நிறையாழியும், உதியனம்பியும் பரிசோதனைக்கு இரத்தம் கொடுத்து விட்டு, பூவணியை அழைத்துக் கொண்டு கேன்டீன் சென்று பேசிக் கொண்டே உணவு உண்டார்கள்.
பூவணியின் தோற்றமும், வாடிய முகமும் ஏதோ அவளிடம் சரியில்லை என்று கணவன், மனைவி இருவருக்கும் புரிந்தது.
நிறையோ, தோழியிடம் துளைத்து.. துளைத்து, பேசியே தோழியின் நிலையை அறிந்து கொண்டாள்.
நிறையாழிக்கு, தோழி சொன்னதைக் கேட்டு தாங்க முடியாத வேதனையும், பாரமும் மனம் முழுவதும் ஆட்கொண்டது.
பூவணி கல்யாணம் முடிந்த அன்றே உதி சொன்னானே, அது எவ்வளவு சரி என்று நினைத்து வருந்தினாள்.
பூவணியின் கணவன், உதியனம்பி நினைத்தது போலவே கொஞ்சம் கூட சரியில்லாத குணம் கெட்டவன்.. குடிக்கு அடிமை.. சந்தேகப் பேர்வழி.. இத்துடன் பெண் சகவாசம் வேறு.. தினமும் அவளை அடிக்க வேறு செய்கிறானாம்..
பூவணி சொல்ல சொல்ல கணவன் மனைவி இருவருக்கும் அளவில்லா வேதனை உள்ளத்தை அரித்தது.
பூவணிக்கோ, யாரிடம் தன் சுமையை இறக்குவது என்று காத்திருந்தவள்.. தன் உடன்பிறவா சகோதரனாக நினைக்கும் நம்பியையும், தன் உயிர் தோழியையும் கண்டவுடன் தன் துக்கத்தை அவர்களிடம் கொட்டித் தீர்த்தாள்.
நிறையோ, "எதுக்குடி இன்னும் அவன் கூட இருக்கிறே? நீ பேசாமல் அம்மா அப்பாகிட்ட வந்துடலாம் தானே.." என்று பொறுக்க முடியாமல் கேட்டு விட்டாள்.
பூவணியோ, விரக்தியாக சிரித்தபடி, "நான் அங்கு போனால் பொண்ணு வாழாமல் வந்து விட்டாள்.. என்ன பொண்ணு வளத்தி வச்சு இருக்கீங்கன்னு ஊரும் சொந்தமும் பேசுமாம்.. அவர்கள் மானமும், கவுரவமும் போய்விடுமாம்.. அதனால் ஆம்பிளைன்னா அப்படி, இப்படித் தான் இருப்பாங்க.. நீ தான் அட்ஜஸ்ட் பண்ணிட்டு வாழனும்ன்னு புத்தி சொல்றாங்க.." என்றாள்.
நிறையோ, பூவணி கூறியதைக் கேட்டு கோவமுடன், "அங்கிளும் ஆண்டியும் எந்த காலத்தில் இருக்காங்க.. நீ கஷ்டப்படும் போது அந்த ஊரும் சொந்தமுமா வந்து நிற்கும். பெத்த பெண்ணை விட மானமும் கவுரவமும் தான் அவர்களுக்கு முக்கியமா..?" என்று பொரிந்து தள்ளினாள்.
உதியனம்பியோ, "வணிம்மா நான் வேண்டுமானால் அம்மா அப்பாகிட்ட பேசி பார்க்கட்டுமா..?"
"வேண்டாம் அண்ணா, அவர்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. என் தலையில் என்ன எழுதி இருக்கோ அதன்படி நடக்கட்டும்.." என்றவளின் விழிகளில் நீர் அருவியாய் கொட்டியது.
பூவணி அழுவதை தாங்க முடியாத நிறையோ, "வணி என்னால் உன்னை இப்படி பார்க்க முடியலையே.. ஏண்டி என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. என் மேலும் தப்பு தான், நானாவது அடிக்கடி உனக்கு போன் பண்ணி பேசி இருக்கனும்.. என்னை மன்னித்துவிடு டீ.." என்று மனம் கலங்கி சொன்னவளின் கைகளை அழுந்த பற்றிக் கொண்ட பூவணி..
"நிறை நீ என்ன செய்தாய் மன்னிப்பு கேட்க.. நான் தான் உன்னிடம் சொல்லி உன்னையும் கஷ்டப்படுத்த வேண்டாமென்று நினைத்தேன். ஆனால் இன்று விதி நம்மை சந்திக்க வைத்துவிட்டது. என் கதையைச் சொல்லி உன்னையும் சங்கடப்படுத்திட்டேன்.." என்றவள் எதேர்ச்சையாக தன் கைகடிகாரத்தைப் பார்த்த பூவணி பதறி எழுந்தாள்.
அவளின் பதற்றத்தைக் கண்டு கணவன் மனைவி இருவருமே சட்டென்று எழுந்து "என்னாச்சு..?" என்று கேட்டனர்.
பூவணியோ, அவர் வரும் நேரமாகிவிட்டது. நான் வீட்டில் இல்லை என்றால் அதற்கொரு சண்டை வரும்.. நான் உனக்கு போன் செய்றேன்.. இப்ப கிளம்பட்டுமா..?" என்று கேட்டவளை இருவரும் வலியுடன் பார்த்தனர்.
பூவணியோ வாயில் நோக்கி நடந்தபடியே, "நிறை உன் மனதிற்கு எல்லாம் நல்லதே நடக்கும்.. நீயும் சீக்கிரம் நல்ல செய்தி சொல்வாய்.. நாம் சீக்கிரம் சந்திப்போம்.." என்றாள்.
நிறையோ, "வணி உனக்கு எப்போதும் நான் இருக்கிறேன் என்பதை மறவாதே.. மனதில் எதையும் போட்டு குழப்பிக்காதே.. இந்த நேரத்தில் மகிழ்ச்சியாக இருக்கனும்.. குழந்தை பிறக்கும் நேரமாவது உனக்கு நல்லதாக நடக்கட்டும்.." என்று பூவணியின் கைகளை அழுத்திய படியே சொன்னாள்.. பூவணியோ வெற்று புன்னகை ஒன்றை உதிர்த்தாள்.
உதியனம்பியோ, "வணிம்மா, நீ எதில் வந்தாய் ஆட்டோவை கூப்பிடட்டுமா..?" என்று அக்கறையாக கேட்டான்.
பூவணியோ, "அண்ணா நான் வரும் போது பஸ்சில் தான் வந்தேன். நான் பஸ் பிடிச்சு போய்க்கிறேன்.." என்றவளிடம்..
நிறையோ, "ஆட்டோ பிடிச்சு கொடுங்க, இந்த நிலைமையில் பஸ்சில் எல்லாம் போக வேண்டாம்.." என்றாள் அக்கறையாக.
உதியும் அதையே நினைத்து வேகமாக சென்றவன்' ஆட்டோ ஒன்றை அழைத்து வந்தான்.
ஆட்டோ ஒட்டுநரிடமும், பூவணியிடமும் ஆயிரம் புத்திமதிகள் சொல்லி ஆட்டோவிற்கான பணத்தையும் பூவணி மறுக்க.. மறுக்க, ஆட்டோ ஒட்டுநரிடமும் கொடுத்து அவளை அனுப்பி வைத்தார்கள்.
பூவணி தலை மறையும் வரை பார்த்துக்கொண்டு நின்ற நிறையாழிக்கோ மனம் முழுவதும் சொல்ல முடியாத கவலை அரித்தது.
உதியனம்பி தன் வண்டியை எடுத்து வந்ததும் ஏறி அமர்ந்தவள் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக வந்தாள்.
உதியனம்பியும் பூவணியைப் பற்றி சிந்தித்த படியே வண்டியை வீடு நோக்கி செலுத்தினான்.
வீட்டிற்கு வந்தவர்களுக்கு மனம் எந்த வேலையிலுமே செல்லவிலலை.. இருவரும் இறுக்கத்துடனேயே வலம் வந்தனர்..
மனம் முழுவதும் பூவணியைப் பற்றியே எண்ணம் மேலோங்கி இருந்தது. ஆணோ, பெண்ணோ திருமண வாழ்க்கை மட்டும் நன்றாக அமையவில்லை என்றால் அவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகிறது.
இந்த காலம் தான் எப்போதும் ஒவ்வொருவருக்கும் ஒரு கஷ்டத்தை வைத்து காத்திருக்கிறது. யாருமே விதி விலக்கல்ல..
உதியனம்பியோ பூவணி வாழ்க்கைக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தான்.
நிறையாழியோ பூவணியைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்ததால் தன் பிரச்சனையிலிருந்து கொஞ்சம் வெளியில் வந்தாள்.
கெட்டதிலும் ஒரு நல்லது போல் பூவணியைச் சந்தித்தது அவளுள் பெரிய மாற்றத்தை கொண்டுவந்தது.
சின்ன கோடு பக்கத்தில் ஒரு பெரிய கோடு போட்டால் சின்ன கோடு மறைந்துவிடுவது போல்.. பூவணியின் பிரச்சனை முன் இவள் பிரச்சனை பெரிதாக தோன்றவில்லை.
எப்பவும் சதா குழந்தையைப் பற்றி சிந்தித்து கொண்டு இருந்தவள், இப்போது பூவணிக்கு எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து அவள் முகத்தில் பழைய படி சிரிப்பு வரனும் என்று கடவுளை வேண்டத் தொடங்கினாள்.
உதியனம்பி அன்று காலையில் கல்லூரியில் அவளை விடும் போதே.. மாலை வேலை இருக்கு, நீ பஸ் பிடித்து வீட்டுக்குப் போய்டு என்று சொல்லி இருந்தான்.
அதனால் கல்லூரி முடிந்து வீட்டுக்கு பஸ் பிடித்து வந்தவளுக்கு அலுப்பாக இருந்தது. சிறிது நேரம் படுத்து இருந்தவள் களைப்பு தீர குளித்து விட்டு வந்து காபி கலக்கி குடித்தாள்.
இரவு உணவையும் சமைத்து வைத்து விட்டு கொஞ்ச நேரம் தொலைக்காட்சியாவது பார்க்கலாம் என்று அதை ஓடவிட்டாள்.
ஆனால், அவள் மனம் அதில் செல்லவில்லை.. அன்று அவளுக்கு நேரத்தை நெட்டி தள்ள வேண்டியதாக இருந்தது. ஏனோ கணவன் ஞாபகமாகவே இருந்தது. இன்னும் அவனை காணோமே என்று வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனை நினைத்தாலே இப்போதெல்லாம் அவள் மனம் முழுவதும் மகிழ்ச்சி தான் பொங்கி வழிகிறது.
அவன் எண்ணங்களும், செயல்களும், சிந்தனைகளும் அவனைப் போலவே எத்தனை அழகு.. என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போதே.. அவளின் எண்ணத்தின் நாயகன் வந்துவிட்டான்.
உழைத்த களைப்பு அவன் உடைகளில் தெரிந்தாலும், அவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல், எப்போதும் போல் இவளைப் பார்த்து மென் சிரிப்பொன்றை உதிர்த்தவன், தன் வண்டியை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் வந்தான்.
அவனின் சிரிப்பு அவளையும் தொற்றிக்கொள்ள, "என்னங்க இன்னைக்கு வழக்கத்தை விட லேட் .." என்று புன்னகையுடன் கேட்டவளிடம்..
"ஆமாம் யாழி இன்னைக்கு வேலை கொஞ்சம் அதிகம்.." என்றான்.
"சரி நீங்க குளிச்சுட்டு வாங்க.. நான் டிபன் எடுத்து வைக்கிறேன்.." என்று திரும்பியவளை தடுத்து நிறுத்தியவன், அவள் கையில் ஒரு கவரைக் கொடுத்தான்.
அவளோ, அதை குழப்பத்துடன் வாங்கிக் கொண்டாள். அவளுக்கு சுத்தமாக மருத்துவ அறிக்கை பற்றி(ரிப்போர்ட்) ஞாபகமே இல்லை.
அவனோ, அவளின் குழம்பிய முகத்தைப் பார்த்தவாறே.. "யாழி இது நாம் நேத்து எடுத்த டெஸ்ட் ரிப்போர்ட். நான் ரிப்போர்ட் வாங்கிட்டு டாக்டரையும் பார்த்துட்டேன்.. இருவரின் ரிப்போர்ட்டும் நார்மல்ன்னு சொன்னாங்க. அந்த விட்டமின் மாத்திரையை மட்டும் கன்ட்நியூ பண்ணச் சொன்னாங்க, நீ பிரித்துப் பார்.." என்றவன், அவள் பிரிக்கும் வரை அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.
உதியனம்பி சொன்னதும், அவளுக்கு கலவையான உணர்வு. அந்த கவரை கை நடுங்க பிரித்து பார்த்தவள், மகிழ்ச்சியில் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தாள். அடுத்த நொடி "..உதி.." என்று அழைத்தபடி, அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு, அவன் முகம் முழுவதும் முத்தமழை பொழிந்தாள்.
அவனோ, மனதிற்குள் சொல்ல முடியாத வலியுடன் மனைவியின் மகிழ்ச்சியை ரசித்தான்.
நிறையோ அதன் பிறகு வந்த நாட்களில் மகிழ்ச்சியுடனேயே வலம் வந்தாள்.. பழையபடி அவளுடைய குறும்புத்தனம் அதிகரித்தது.
செந்தழைக்கு கூட மகளின் மாற்றம் கொஞ்சம் நிம்மதியைக் கொடுத்தது.. தாயிடம் புலம்புவதையும் நிறுத்தி இருந்தாள்..
உதியனம்பியோ மனை
வியின் மாற்றத்தில் நிம்மதியாக இருந்தான்.
ஆனால் அந்த நிம்மதிக்கு அற்ப ஆயுள் என்பது அவனுக்கு அப்போது தெரியவில்லை...
தொடரும்..
Hi friends,
அடுத்த அத்தியாயம் நாளை காலை..இன்றைய அத்தியாயத்தை படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..இன்னும் 3 யூடியில் கதை நிறைவு பெறும்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்