carolinemary C
Saha Writer
- Messages
- 6
- Reaction score
- 1
- Points
- 1
நானா அவள்..
- கி.கரோலின்மேரி
"என்ன சாப்பாடு இது உப்பும் இல்லை காரமும் இல்லை"
"என்ன தான் உன்னுடைய அம்மா செய்கிறாள்"
"சும்மா தானே இருக்கிறாள்"
"வாய்க்கு ருசியாக செய்தால் என்ன"
இதுபோன்ற பேச்சுகள் தனக்கு பழக்கம் தான் என்பதை போல் இருந்தது அவரின் முகம்.
மஞ்சள் பூசிய முகமும், நெற்றியில் குங்குமம் வைத்து, தலையை வாரி பின்னல் இட்டு பூ சூடி, எப்போதும் முகத்தில் தவழும் புன்சிரிப்போடு தன் அருகே வந்து நின்ற தாயை முறைத்தாள் வசுமதி.
மகளின் கோபத்திற்கு என்ன காரணம் என்பதை அறிந்தும், எதுவும் அறியாதவர் போல்
"என்ன டா" என்று தலையை கோதியவாறு கேட்க
தாயின் கையை வெடுக்கென்று தட்டி விட்டாள்.
"மதி" என்று சற்று அழுத்தமாக அழைக்க
"ஆமாம் என்கிட்ட மட்டும் தான் இதெல்லாம் அங்க ஒருத்தர் இருக்கிறார் அவரிடம் போய் இது மாதிரி பேசுறது" என்று கூறிய அடுத்த நிமிடம்
"அய்யோ மதி என்ன பேசுகிறாய்? அவரிடம் எப்படி நான் இதுபோல் பேசுவது?" என்று குரல் நடுங்க கேட்டார்.
"எதுக்கு மா உனக்கு இந்த பயம்?அவர் உன் கணவர் மா.நீ தைரியமா பேச கொஞ்சம் முயற்சி பண்ணு"
அந்த பக்கம் பதிலேதும் வரவில்லை.
"அம்மா நான் உன்கிட்ட தான் பேசுகிறேன். நீ இப்படியே அமைதியா இருப்பதால் தான் அப்பா எதுக்கு எடுத்தாலும் குறை சொல்கிறார், மற்றவர்கள் முன்னால் அவமானம் படுத்துகிறார் " என்று தன் தாய்க்கு அவரின் நிலையை புரிய வைக்க முயன்றாள்.
"போதும் மதி.நேரம் ஆகுது நீ போய் குளி" என்று கூறிவிட்டு அகன்றார்.
இப்படி சொல்லிவிட்டு போகிறவரிடம் என்ன சொல்லியும் பயன் இல்லை என்பதை உணர்ந்த வசுமதி பெருமூச்சுயுடன் குளியலறை நோக்கி நடந்தாள்.
நம் சமூகத்தில் இவரை போன்ற சில பெண்கள் இன்றும் வாழ்கிறார்கள்.
கணவன் என்ன தான் அவமானம் படுத்தினாலும், அதை பொறுத்து கொண்டு அவர்கள் கூறும் குறைகளை ஏற்றுக்கொண்டு வாழ பழகி கொள்கிறார்கள்.
எதிர்த்து பேச ஒரு நொடி ஆகாது ஆனால் அப்படி பேசுபவர்களின் வார்த்தைகளை சரியாக புரிந்து கொள்ளாது சில உறவுகள் சறுக்கி உள்ளது.
இந்த நிலை வர கூடாது என்பதால் என்னவோ சில குடும்பங்களில் ஆணின் குரல் மட்டுமே ஓங்கி ஒலிக்கிறது.
அதே நிலைதான் இந்த வீட்டிலும்.
அங்கு வந்து நின்ற மனைவியை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை ராஜன்.
"என்னங்க" என்று மெல்லிய குரலில் அழைத்தவரை
'என்ன' என்பதுபோல் ஒரு பார்வை பார்க்க
"இன்னிக்கு சீக்கிரம் வர முடியுமா" என்று கேட்க
"எதுக்கு" என்ற கேள்வி சூடாக வந்தது.
"கோவிலுக்கு"
"ஏன்" என்று அடுத்த கேள்வி இன்னும் சூடாக
"அது நம்முடைய கல்யாண நாள் அதான்" என்று வார்த்தைகளை மென்று விழுங்கி ஒருவாறு கூறிவிட்டார்.
"நான் வாழ்க்கையில் செய்த முதல் தவறு உன்னை கல்யாணம் செய்தது அந்த தவறுக்கு இப்போ ஒரு கொண்டாட்டம் வேறு" என்று சொல் அம்புகளை பாரபட்சம் பார்க்காமல் வீசிவிட்டு அமைதியின் சிகரம் போல் முகத்தை வைத்து கொண்டு வேலைக்கு கிளம்பிவிட்டார்.
கண்களை கண்ணீர் மறைத்து கொண்டு 'இப்போது விழவா' என்று அனுமதி கேட்டவாறு நிற்க அதை சேலை தலைப்பில் அழுந்த துடைத்து விட்டு நிமிர்ந்தார் சத்யவாணி.
மகளும் சிறிது நேரத்தில் கல்லூரி சென்றவிட்டாள்.
தன் வாழ்க்கையை பின் நோக்கி பார்க்க தொடங்கினார் சத்யவாணி.
வீரபாண்டியன்- செவ்வந்தி தம்பதியின் செல்ல மகள் சத்யவாணி.
அழகும்,அறிவும் நிறைவாக பெற்றவள்.
மகளின் மீது அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்தார் வீரபாண்டியன்.
அவருக்கு சொந்தமாக இரு துணி கடைகள் உண்டு.பண்டிகை காலங்களில் அவருடைய கடைகளில் கூட்டம் அலைமோதும்.ஊரிலும் நல்ல பெயர் இவருக்கு உண்டு.
"அம்மாடி வாணி" என்ற தாயின் குரலுக்கு
"சொல்லுங்க மா" என்று வந்து நின்று மகளை கண்டவரின் முகம் பெருமையில் பூரித்தது.
காலையில் குளித்து புது மலராக வந்து நின்ற மகளுக்கு நெற்றியில் முத்தமிட்டு
"அப்பா உன்னை வர சொன்னாங்க போயிட்டு வா டா" என்று அனுப்பி வைக்க
சரி என்று கூறிவிட்டு தந்தையை நோக்கி சென்றாள்.
அங்கு ஏதோ வேலை செய்து கொண்டு இருந்தவர்.
அந்த கொலுசு ஒலியை வைத்தே வருவது யார் என்பதை உணர்ந்து
"வாணி மா" என்று அழைக்க
"என்ன பா" என்று கேட்க
"நீ எந்த ஊரில் இருக்கும் கல்லூரிக்கு படிக்க போகிறாய்" என்று வினவ
"நம்ம ஊரில் தான் பா"
"உனக்கு வெளியூரில் படிக்க விருப்பம் இருந்தாலும் சொல்லு டா.நான் ஏற்பாடு செய்கிறேன்" என்று கூறிய தந்தையின் கரங்களை பற்றிக்கொண்டு
"உங்களை,அம்மாவை எல்லாம் விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன் பா" என்று கூறிய மகளின் கரங்களை ஆதுரமாய் பற்றியவர்.
இருந்தும் மனம் கேளாது "அது இல்லை டா உன்னுடைய" என்று ஏதோ கூற வந்தவரை தடை செய்தது அவரின் மனைவியின் குரல்.
"என்னங்க இது புள்ள வேண்டாம் தானே சொல்கிறாள் நீங்க ஏன் திரும்ப திரும்ப அதை பேசிட்டு இருக்கீங்க" என்று கூறி முறைக்க
"அதுக்கு இல்ல செவ்வந்தி" என்று ஆரம்பித்த கணவரை பார்வையால் அடக்கியவர்.
மகளின் புறம் திரும்பி "நீ உள்ளே போய் ஏதாவது செய் வாணி" என்று கூறி அவளை அறைக்கு அனுப்பிவிட்டவர்.
பின் கணவரிடம் "சொல்லுங்க என்ன விஷயம்" என்று நேரடியாகவே கேட்க
"எனக்கு தெரிந்தவங்க எல்லாம் வாணிக்கு வரம் பார்க்க ஆரம்பிக்க சொல்றாங்க பிள்ளை இங்க இருந்தால் சரி வராது அதான் படிக்க வெளியூர் அனுப்பலாம் என்று யோசித்தேன்"
"நீங்களா இப்படி பேசுறது?எப்போதுமே மற்றவர்களின் விருப்பத்தை நீங்க ஏற்க மாட்டீங்க உங்க மனசுக்கு பிடித்து இருந்தால் மட்டும் தான் அதை செய்வீங்க"
மனைவி தன் குணத்தை துல்லியமாக சொன்னதை எண்ணி மனம் மகிழ்ந்தார் வீரபாண்டியன்.
"என்னங்க" என்று அழைத்து கணவனின் தோளை தொட்டார்.
"நீ சொல்லுவது எல்லாம் சரிதான் மா அவங்களுக்காக மட்டும் இதை நான் சொல்லவில்லை" என்று கூறியவர்
ஒரு இடைவெளி விட்டு பின் தொடர்ந்தார்.
"வாணி எல்லா விஷயத்திலும் நம்மையே எதிர்பார்த்து இருக்கா ,கூண்டு கிளியாக இருக்கிறவளை சுதந்திர பறவையாக பறக்க விட ஆசை படுகிறேன்"
"நீங்க ஆயிரம் காரணம் சொல்லலாம் ஆனா வாணியை பிரிந்து என்னால் ஒரு நாள் கூட இருக்க முடியாது. இன்னும் குறைந்தது நாலு வருஷம் இங்கு இருப்பாள் அப்புறம் வேறு வீட்டுக்கு போய் விடுவாள் அதுவரைக்கும் அவள் என்னோடு தான் இருப்பாள் இருக்கணும்" என்று திட்டவட்டமாக பேசிவிட்டு நகர்ந்தார் செவ்வந்தி.
மகளின் பயந்த சுபாவம் மாற வேண்டும் என்று நினைத்து அவர் ஒன்றை செய்ய முயன்றால் ,அவரின் மனைவியோ அதற்கு இப்படியொரு முட்டுக்கட்டை போடுவாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.
பார்க்கலாம் காலம் என்ன செய்ய காத்திருக்கிறது என்று..
சத்யவாணி அந்த ஆண்டு பொது தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தாள்.
மகளின் விருப்படியே அந்த ஊரில் இருக்கும் கலை கல்லூரியில் இளங்கலை படிப்பில் தமிழ் இலக்கியத்தில் சேர்த்து விட்டார்.
அவர் எண்ணியது போல் மகள் தன் கூட்டில் இருந்து வெளியே வந்து அவளின் முயற்சியால் சிறகுகளை விரித்து பறக்க தொடங்கினாள்.
சத்யவாணி கல்லூரியில் நடக்கும் அனைத்து பேச்சு போட்டியிலும் கலந்து கொண்டு பரிசுகளை வென்றாள்.
அதனை தொடர்ந்து கதை, கவிதை, கட்டுரை எழுதி தன் திறமைகளை வளர்த்து கொள்ள அவளின் தந்தை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
கல்லூரியில் நடக்கும் பட்டிமன்றங்களில் சத்யவாணி என்ற பெயரை கேட்டாலே எதிரணி நடுங்கும் என்ற அளவுக்கு இருந்தது அவளின் பேச்சு.
படபடவென பொரிந்து தள்ளாமல், நிறுத்தி நிதானமாக அதுவும் அழுத்தமான கருத்துக்களை கொண்டு பேசும் அவளின் உரைக்கு பலபேர் அடிமை.
மூன்று வருடங்கள் விரைவாகவே நகர்ந்தது.
கல்லூரி படிப்பை முடித்தவுடன், சத்யவாணிக்கு நல்ல வரன் அமைந்துவிட்டது.
ராஜன் வருமான வரி துறையில் உயர்ந்த பதவியில் இருக்கிறார்.பெற்றோருக்கு ஒரே மகன்.கைநிறைய சம்பளம், சொந்த வீடு என பெண் வீட்டாரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய திருமண தேதி உறுதி செய்யப்பட்டது.
சீரும் சிறப்புமாக மகளின் திருமணத்தை நடத்தி வைத்தார் வீரபாண்டியன்.
வரவேற்பு, மறுவீட்டு விருந்து என அனைத்தும் முடிந்தபின் இருவரின் பெற்றோரும் இணைந்து சென்னையில் வீடு பார்த்து இருவரையும் தனிக்குடித்தனம் வைத்தனர்.
தனியாக வந்தபின் தான் கணவனின் குணம் சத்யவாணியால் அறிய முடிந்தது.
ராஜனின் ஆணாதிக்க குணத்தை கண்டு அஞ்ச தொடங்கினாள்.
சாப்பாட்டில் குறை கூறுவது என்று தொடங்கி அதன் பிறகு அவள் எது செய்தாலும் அதில் ஒரு தவறை கண்டுபிடிக்க தன் கணவரை எண்ணி வருந்தினாள்.
கல்லூரி படிக்கும் போது இருந்த சத்யவாணிக்கும் இப்போது இருப்பவளுக்கும் எத்தனையோ வித்தியாசங்கள்.
சில நேரம் தன்னை பார்த்து அந்த கேள்வியை கேட்டு கொள்வாள்.
நானா அவள் என்று அதற்கு விடை தான் பூஜ்யமாக இருக்கும்.
ஒரு முறை கடற்கரை சென்றபோது ஏதோவொரு ஆர்வத்தில் அருகே நின்ற கணவனின் கரத்தை பற்றி இழுத்தாள் சத்யவாணி.
மனைவி சட்டென்று தன் கரத்தை பிடித்து இழுப்பாள் என்று அறியாது நின்ற ராஜன்.
தன்னை நிலைப்படுத்த முயற்சி செய்ய அதற்குள் கரங்களில் இருந்த ஐஸ்கிரீம் சிதறி அவருடைய ஆடையை அபிஷேகம் செய்தது.
சத்யவாணி தன் தவறை உணராது "என்னங்க என்னங்க" என்று மீண்டும் அழைக்க
சிறிதும் கசங்கல் இல்லாத ஆடையை அணிபவரை இந்த ஐஸ்க்ரீம் அபிஷேகம் கோபத்தை கிளப்பியது.
பொது இடம் என்றும் பாராமல் மனைவியின் தோளை பற்றி திருப்பி 'பளார்' என்று ஒரு அறை விட்டு முரட்டுத்தனமாக கைகளை பிடித்து இழுத்து வீட்டுக்கு வந்தார்.
கடிந்து கூட பேசாத தாய், தந்தைக்கு பிறந்தவளை கரம் நீட்டி அடித்ததை எண்ணி சிறிதும் யோசிக்காமல் தன் வார்த்தைகளால் மனைவியை விளாசி கொண்டு இருந்தார்.
"கிராமத்தில் இருந்த உன்னை போய் எனக்கு ஜோடி சேர்த்தாங்க பார் அவங்களை சொல்லனும்"
"பொது இடத்தில் எப்படி நடக்கணும் கூட தெரியலை நீ எல்லாம் என்ன படித்த பெண்"
"உங்கப்பா காசு கொடுத்து தான் டிகிரி வாங்கி தந்து இருப்பார்"
"எனக்கு கொஞ்சம் கூட சரிசமமாக இல்லாத உன்னை போய் " என்று தன் பேச்சால் மனைவியை வாயடைத்து நிற்க வைத்தார்.
தேள் போல் வார்த்தையால் கொட்டி விட்டு அகன்றார்.
கணவன் அடித்தது கூட சத்யவாணிக்கு வலிக்கவில்லை ஆனால் பேசிய வார்த்தைகள் இதயத்தை வாள் கொண்டு அறுத்தது.
இரவில் உணவு கூட அருந்தாமல் தூங்க சென்றவளை கணவனின் கரங்களை வளைத்து கொண்டது விடுபட முயன்றும் தோல்வியே எஞ்சியது.
பகல் முழுவதும் கதிரவனை போல் அனலை வீசிவிட்டு, இரவில் சந்திரன் போல் குளுமையை தரும் கணவனை எந்த வகையில் சேர்ப்பது என்று புரியாது குழம்பினாள் .
இந்த குழப்பங்களுக்கு மத்தியில் சத்யவாணி கர்ப்பம் தரித்தாள்.
இதை அறிந்த இருவரின் பெற்றோரும் மகிழ்ந்தனர்.
ராஜன் எப்போதும் போலவே இருந்தார் முகத்தில் துளியும் மகிழ்ச்சி இல்லை.
நாட்கள் நகர்ந்தது.
ராஜன் - சத்யவாணி தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறக்க அவளுக்கு வசுமதி என்று பெயர் சூட்டினர்.
முதுமை காரணமாக இருவரின் பெற்றோரும் ஒன்றன் பின் ஒன்றாக இறைவடியை நாடினர்.
மகள் மட்டுமே உலகம் என்று ஆனது சத்யவாணிக்கு.
கணவனின் புறக்கணிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க ஒரு கட்டத்தில் பேச்சுக்கு கூட பஞ்சம் ஆனது.
இருந்ததும் பாறையில் முட்டிய கல் போல் கணவனிடம் பேச முயற்சித்து கொண்டே இருந்தார்.
வசுமதிக்கு தந்தையின் இந்த குணம் பிடிப்பது இல்லை எனவே அவரிடம் எப்போதும் ஒதுங்கியே இருப்பாள்.
வீட்டுக்கு யாராவது வந்தால் மனைவியை எல்லோர் முன்னிலையில் ஏதாவது ஒன்றை கூறி மட்டம் தட்டுவார்.
முதலில் மனம் வருந்த செய்தது பின் அதுவே அவருக்கு பழகிவிட்டது.
கடிகாரம் தன் இருப்பை காட்ட நிகழ்காலத்துக்கு வந்தார்.
"அச்சோ நேரம் ஆகிவிட்டது மதி வந்துவிடுவாள் ஏதாவது செய்வோம்" என்று தனக்குள் பேசியபடி சமையலறை பக்கம் சென்றார்.
மகளுக்கு பிடித்த வாழைப்பூ வடையும்,பாயாசமும் செய்தார்.
"அம்மா" என்று கூறிக்கொண்டே வந்து தாயை பின்னால் இருந்து வசுமதி அணைத்தாள்.
"என்ன என்னுடைய செல்லம் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க என்ன விஷயம் " என்று கூறி தானும் மகளின் மகிழ்ச்சியில் பங்குகொண்டவாறு கேட்க
"இன்னிக்கு ஒரு கேம்பஸ் இன்டெர்வியூ இருந்தது அதில் தேர்வாகி இருக்கிறேன் படிப்பு முடிந்தபிறகு வேலைக்கு சேர சொல்லி இருக்காங்க மா" என்று மகிழ்ச்சியில் துள்ளி குதித்தவாறு சொல்ல
"சந்தோஷம் டா"என்று கூறி மகளை அணைத்து உச்சி முகர்ந்தார்.
மகளுக்கு செய்தவற்றை எல்லாம் ஊட்டி விட்டார்.
அவர்களின் இந்த மகிழ்ச்சிக்கு ஆயுள் குறைவு என்பதை பாவம் அவர்கள் அறியவில்லை.
வீட்டிற்கு வந்தவுடன் முதல் வேளையாக மனைவியை அழைத்தார் ராஜன்.
அதிசயமாக கணவன் அழைப்பை எண்ணி வியந்தவாறு அவரின் அருகே வந்து " என்னங்க"என்று ஆசையாக அழைக்க
"இந்த கவரை பிரித்து பார்" என்று ஒன்றை அவரின் கையில் திணிக்க
என்னவாக இருக்கும் என்று எதிர்ப்பார்ப்புடன் பிரித்து பார்க்க அதில் ஒரு பையனின் புகைப்படமும்,அவனை பற்றிய விவரங்களும் இருந்தது.
"பையன் நல்ல இருக்கிறான் யாருக்கு பார்க்கிறாங்க " என்று கேட்க
"வசுமதிக்கு" என்ற ஒற்றை வார்த்தையில் அவர்களின் மகிழ்ச்சி மங்கி போனது.
"மதிக்காக அவள் சின்ன பெண் அதுக்குள்ள எதுக்கு கல்யாணம்"என்று தன் மறுப்பை தெரிவிக்க
இதெல்லாம் காது கொடுத்து கேட்கும் ரகம் அல்ல ராஜன்.
"நான் உங்களுடைய விருப்பத்தை எல்லாம் கேட்கலை வரும் வெள்ளிக்கிழமை பெண் பார்க்க வருவாங்க அதுக்கு வேண்டியதை பண்ணு" என்று உத்தரவிட்டார்.
வசுமதி தயங்கியவாறு" அப்பா நான் வேலைக்கு போயிட்டு இரண்டு வருஷத்துக்கு அப்புறம் கல்யாணம் பண்ணுகிறேன் ப்ளீஸ் பா"என்று கெஞ்சும் குரலில் சொல்ல
"என்னுடைய வார்த்தைக்கு அவ்வளவு தான் மரியாதையா இந்த வீட்டில்" என்று சத்தம் போட்டவர்.
மனைவியை பார்த்து"எல்லாம் உன்னால் தான்" என்று கோபமாக கத்த
"நான் என்ன செய்தேன் திருமணம் அவள் விருப்படி தான் நடக்கணும் நீங்க கட்டாயப்படுத்தி நடத்தி வைக்க கூடாது" என்று அவரும் குரலை உயர்த்த
"என்ன சத்தம் அதிகமா இருக்கு" என்று அதட்டியவாறு கேட்க
"ஆமாம் என் பெண்ணுக்காக நான் பேசுவேன் தான்" என்று சொல்ல
வாய் சண்டை கை சண்டை மாறும் நிலை ஏற்பட
"போதும் நிறுத்துங்கள்" என்று வசுமதி கத்த
மனைவியை அடிக்க ஓங்கிய ராஜனின் கரம் கீழே இறங்கியது.
பெற்றோர் முகத்தை பார்த்து "எனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம் "என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்று கதவை அடைத்தாள்.
மனைவியை ஒரு வெற்றி புன்னகை பார்த்து விட்டு கடந்து சென்றார் ராஜன்.
அதை அலட்சியம் செய்து விட்டு மனம் படபடக்க மகளை காண விரைந்தார் சத்யவாணி.
அழுகையில் குலுங்கும் மகளின் முதுகை ஆதரவாக வருட
அந்த ஸ்பரிசத்தில் தன் அழுகையை நிறுத்திவிட்டு தாயை அணைத்து கொண்டாள் வசுமதி.
"மதி எதுக்கு அப்படி சொன்னாய்"
"என்னால் உங்க இரண்டு பேருக்கும் சண்டை வர வேண்டாம் மா" என்று கண்ணீரோடு சொல்ல
"உங்க அப்பா அடிக்கடி தான் என்னிடம் சண்டை போடுவார் அதுக்காக உன்னுடைய கனவை கலந்து போக செய்துவிட்டாயே" என்று மனம் ஆறாமல் கேட்க
"விடு மா இதுதான் விதி போல" என்று சோர்வாக உரைக்க
"நான் பேசி பார்க்கிறேன் மதி"என்று தைரியம் சொல்ல
"வேண்டாம்"என்று அழுத்தமாக கூறிவிட்டு தாயின் மடியில் முகம் புதைத்தாள்.
அடுத்து என்ன செய்வது என்று யோசித்தவாறு மகளை தட்டி கொடுத்து தூங்க வைத்தார்.
வெள்ளிக்கிழமை பெண் பார்க்கும் படலம் நடந்தது.
மகளுக்கு பார்த்து இருக்கும் பையனின் பெயர் நெடுஞ்செழியன். வங்கியில் பணிபுரிகிறான்.நல்ல குடும்பம் குறை என்று கூற எதுவும் இல்லை.
அனைவருக்கும் வசுமதியை பிடித்து விட, பெரியவர்கள் இணைந்து திருமணம் தேதியை உறுதி செய்தார்கள்.
இத்தனை நாளும் நத்தை போல் நகர்ந்த நாட்கள் எல்லாம் இப்போது காலில் சக்கரம் கட்டிகொண்டு ஓடியது.
திருமணம் நல்லபடியாக முடிய முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அறைக்கு வந்த வசுமதியை பார்த்து சிரித்தான் நெடுஞ்செழியன்.
தந்தையின் செயலால் வருத்தத்தில் இருந்தவளை கணவனின் இந்த சிரிப்பு சினத்தை ஏற்படுத்தியது.
"எதுக்கு இப்போ இந்த சிரிப்பு நான் என்ன கோமாளி மாதிரி இருக்கிறேனா" என்று கோபத்தில் புசுபுசுவென்று மூச்சு விட்டவாறு கேட்க
"சாரி சாரி" என்று மன்னிப்பு வேண்ட
இன்னும் கோபம் தணியாது தன்னை முறைத்து கொண்டு இருக்கும் மனைவியின் கரம் பற்றி அருகே அமர வைத்தான்.
"இங்கே பாருடா" என்று முகத்தை பற்ற
'பார்க்க மாட்டேன்' என்பதை போல் தலையை ஆட்டினாள்.
அவளின் சிறுபிள்ளை தனத்தில் மனதை தொலைத்தவன்.
"வசு" என்று அழைத்து நெற்றியில் முத்தமிட
கணவனின் இந்த பிரத்தியேக அழைப்பில் அவளின் முகம் பிரகாசம் அடைந்தது.
பெண் பார்க்க வந்த போதே அவனை பிடித்து இருந்தது ஏனோ தந்தையின் செயலால் சற்று விருப்பம் இல்லாதவள் போல தன்னை காட்டி கொள்ள முயன்றாள்.
கணவனின் இந்த அழைப்பு அவள் மனதை கவர்ந்தது.
மெல்ல தன் விழிகளை உயர்த்தி அவனை பார்த்தாள்.
"உனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று எனக்கு தெரியும் ஆனால் நான் உன்னை விரும்பி தான் திருமணம் செய்தேன்"
"புரியலை"
"நான் உனக்கு காலேஜ்ல சீனியர்"
"வாட்"
"ஆமாம். நான் கடைசி வருஷம் படிக்கும் போது தான் நீ சேர்ந்தாய் ஏனோ தெரியலை உன் முகத்தை அடிக்கடி பார்த்து தோணும் அதுக்காகவே உன்னுடைய க்ளாஸ் பக்கம் வருவேன்"
"நான் உங்களை பார்த்தது இல்லை"
"தெரியும் நீ எல்லாம் தான் நிலத்தை பார்த்து நடக்கிற பெண்ணு பிரிவை சேர்ந்தவள் ஆச்சே " என்று கிண்டலாக கூற
"போதும் செழியன்" என்று சிணுங்க
"அப்பா என்னுடைய பெயரை ஆறு மாதத்திற்கு அப்புறம் சொல்லிட்டே"
"சொல்லுங்க ப்ளீஸ்"
"சரி சொல்கிறேன் அப்போ எனக்கு அது என்ன உணர்வு என்று சொல்ல தெரியலை நானும் அப்படியே விட்டேன் ஆனா உன்னை மறக்கலை படிப்பு முடிந்தவுடன் வேலை அப்படின்னு நாட்கள் போயிடுச்சு அப்புறம் வீட்டில் கல்யாண பேச்சு வந்தது உன்னுடைய போட்டோ பார்த்தவுடனே எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா சொல்ல வார்த்தையே இல்லை நான் ரொம்ப ஆசையா உன்னை பார்க்கலாம் என்று வந்தால் நீ என் முகத்தை கூட பார்க்காம காபி கொடுக்கிறாய்" என்று அவளின் காதை பிடித்து கிள்ள
அது என்று ஏதோ கூற வந்தவளை கை உயர்த்தி தடுத்தான்.
"நான் பேசி முடிக்கிறேன். எனக்கு மனசு கஷ்டமா இருந்தது என்ன செய்யலாம்னு யோசிக்கும் போது தான் உன்னுடைய அம்மா போன் பண்ணாங்க" என்று சொல்லி நிறுத்த
"அம்மா என்ன சொன்னாங்க"
"உனக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று சொன்னாங்க"
"செழியன் அது" என்று தயங்க
"அத்தை எல்லாத்தையும் சொல்லிட்டாங்க வசு உன்னுடைய விருப்படி நீ வேலைக்கு போகலாம் அதற்கு தடையா நான் இருக்க மாட்டேன்"
"ரொம்ப நன்றி செழியன்" என்று கண்ணீரோடு கூறியவளை ஆறுதலாக அணைத்து கொண்டான்.
"வசு எதை நினைத்தும் நீ கவலைப்பட கூடாது சரியா" என்று கேட்க
'சரி' என்று தலையாட்ட
"குட் இப்போ தூங்கலாம் வா" என்றவனை கேள்வியாக பார்க்க
"நம்மை நாம் புரிந்து கொண்ட பிறகு தான் இதெல்லாம்" என்று கூறி படுத்துக்கொண்டு அவளையும் தூங்க வைத்தான்.
சத்யவாணிக்கு மகளை பற்றிய கவலை சிறிதும் இல்லை மருமகன் நன்றாக பார்த்து கொள்வார் என்ற நம்பிக்கை பிறந்துவிட்டது.
நெடுஞ்செழியன்- வசுமதியின் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக எவ்வித சண்டையும் இல்லாமல் காதலுடன் சென்றது.
ஒரு வருடம் கழித்து வசுமதி கருவுற்றாள்.
மகளை கண்ணும் கருத்துமாக சத்யவாணி பார்த்து கொள்ள சுக பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது அவனுக்கு கவிநேயன் என்று பெயர் சூட்டினர்.
நாட்கள் நகர ராஜனின் ஆதிக்கம் அந்த வீட்டிலில் குறைந்தது.
மனைவியை குறை கூறுவதை குறைத்து கொண்டு ஓரிரு வார்த்தைகள் பேச ஆரம்பித்தார்.
ஏனோ அது கடவுளுக்கு பொறுக்கவில்லை போல
வழக்கம் போல் இரவு உறங்க சென்ற சத்யவாணி காலையில் கண் விழிக்கவில்லை.
யோசனையாக மனைவியின் மூக்கில் கை வைக்க அவரின் சுவாசம் நின்று இருந்ததை அப்போது தான் உணர்ந்தார்.
அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றவர்.
மருமகனுக்கு தகவல் சொல்ல மொத்த குடும்பமும் அங்கே வந்தது.
அதன்பின் அனைத்து காரியங்களும் மடமடவென்று நடந்தது.
வசுமதி கதறி கதறி அழுதுகொண்டு இருக்க நெடுஞ்செழியன் மனைவியை சமாதானம் செய்ய முயன்று தோன்றான்.
கவிநேயன் "பாட்டி பாட்டி" என்று அழைத்தவாறு நிற்க
ராஜன் எதையும் உணர தோன்றாது நின்றார்.
எல்லாம் முடிந்தது சத்யவாணி இறந்து இன்றோடு இருபது நாட்கள் ஆகிவிட்டது.
ராஜனை மகள் தன் வீட்டுக்கு அழைத்தும் அங்கு செல்லாமல் இங்கேயே இருந்தார்.
பொருட்களை சுத்தம் செய்யலாம் என்று எண்ணி ஒரு பெட்டியை திறந்து பார்க்க அப்படியே அதிர்ந்தார்.
அந்த பெட்டியில் ஏறக்குறைய முப்பது புத்தகங்கள் இருந்தது அவற்றை எல்லாம் எழுதியது தன் மனைவி என்ற செய்தியே அவரை அதிர செய்தது.
கவிதை மற்றும் கதை புத்தகங்கள் என்று நிரம்பி வழிந்தது.
ஒரு புத்தகத்தை எடுத்து பார்த்து தன் நடுக்கும் கரங்களால் வருடி பார்த்தார்.
'ஒரு பெண்ணின் ஏக்கம்' என்று தலைப்பும் ஆசிரியர் பெயர் 'சத்யா ராஜன்' என்று இருக்க
அதில் தன் மனைவியின் ஏக்கங்கள் அப்பட்டமாக வெளிப்பட்டு இருப்பதை வாசித்தவரின் கண்கள் கண்ணீர் மூலம் கூறியது.
தன்னுடைய வெறுப்புகளை எல்லாம் பொறுத்து கொண்டு வாழ்ந்த மனைவியின் மறுபக்கத்தை அவர் அறியவில்லை.
அறிந்தபின் அவர் இல்லையே...
காலம் கடந்த பின்னால் மனைவி மீது காதல் பிறக்க அதை பகிர்ந்து கொள்ள அவரின் சத்யா அருகே இல்லை.
மனைவியின் புகைப்படம் முன்பு வந்து கண்ணீரோடு "மன்னித்து விடு சத்யா" என்று கூற
மாலையில் இருந்த ஒரு ரோஜா மொட்டு கீழே விழுந்து அவரின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை உணர்த்தியது.
திறமை இல்லாதவள் தன் மனைவி என்று எண்ணி மட்டம் தட்டி வார்த்தைகளை சிதறவிட்டார் ராஜன்.
திறமை இருந்தும் அதை கணவனுக்கு தெரியபடுத்தாமல் மறைத்து மறைந்தார் சத்யா.
ஆணாதிக்கம் பெண் ஆதிக்கம் இரண்டையும் களைந்து அன்பை மட்டுமே ஆதிக்கம் செய்வோம்..
முற்றும்...
- கி.கரோலின்மேரி
"என்ன சாப்பாடு இது உப்பும் இல்லை காரமும் இல்லை"
"என்ன தான் உன்னுடைய அம்மா செய்கிறாள்"
"சும்மா தானே இருக்கிறாள்"
"வாய்க்கு ருசியாக செய்தால் என்ன"
இதுபோன்ற பேச்சுகள் தனக்கு பழக்கம் தான் என்பதை போல் இருந்தது அவரின் முகம்.
மஞ்சள் பூசிய முகமும், நெற்றியில் குங்குமம் வைத்து, தலையை வாரி பின்னல் இட்டு பூ சூடி, எப்போதும் முகத்தில் தவழும் புன்சிரிப்போடு தன் அருகே வந்து நின்ற தாயை முறைத்தாள் வசுமதி.
மகளின் கோபத்திற்கு என்ன காரணம் என்பதை அறிந்தும், எதுவும் அறியாதவர் போல்
"என்ன டா" என்று தலையை கோதியவாறு கேட்க
தாயின் கையை வெடுக்கென்று தட்டி விட்டாள்.
"மதி" என்று சற்று அழுத்தமாக அழைக்க
"ஆமாம் என்கிட்ட மட்டும் தான் இதெல்லாம் அங்க ஒருத்தர் இருக்கிறார் அவரிடம் போய் இது மாதிரி பேசுறது" என்று கூறிய அடுத்த நிமிடம்
"அய்யோ மதி என்ன பேசுகிறாய்? அவரிடம் எப்படி நான் இதுபோல் பேசுவது?" என்று குரல் நடுங்க கேட்டார்.
"எதுக்கு மா உனக்கு இந்த பயம்?அவர் உன் கணவர் மா.நீ தைரியமா பேச கொஞ்சம் முயற்சி பண்ணு"
அந்த பக்கம் பதிலேதும் வரவில்லை.
"அம்மா நான் உன்கிட்ட தான் பேசுகிறேன். நீ இப்படியே அமைதியா இருப்பதால் தான் அப்பா எதுக்கு எடுத்தாலும் குறை சொல்கிறார், மற்றவர்கள் முன்னால் அவமானம் படுத்துகிறார் " என்று தன் தாய்க்கு அவரின் நிலையை புரிய வைக்க முயன்றாள்.
"போதும் மதி.நேரம் ஆகுது நீ போய் குளி" என்று கூறிவிட்டு அகன்றார்.
இப்படி சொல்லிவிட்டு போகிறவரிடம் என்ன சொல்லியும் பயன் இல்லை என்பதை உணர்ந்த வசுமதி பெருமூச்சுயுடன் குளியலறை நோக்கி நடந்தாள்.
நம் சமூகத்தில் இவரை போன்ற சில பெண்கள் இன்றும் வாழ்கிறார்கள்.
கணவன் என்ன தான் அவமானம் படுத்தினாலும், அதை பொறுத்து கொண்டு அவர்கள் கூறும் குறைகளை ஏற்றுக்கொண்டு வாழ பழகி கொள்கிறார்கள்.
எதிர்த்து பேச ஒரு நொடி ஆகாது ஆனால் அப்படி பேசுபவர்களின் வார்த்தைகளை சரியாக புரிந்து கொள்ளாது சில உறவுகள் சறுக்கி உள்ளது.
இந்த நிலை வர கூடாது என்பதால் என்னவோ சில குடும்பங்களில் ஆணின் குரல் மட்டுமே ஓங்கி ஒலிக்கிறது.
அதே நிலைதான் இந்த வீட்டிலும்.
அங்கு வந்து நின்ற மனைவியை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை ராஜன்.
"என்னங்க" என்று மெல்லிய குரலில் அழைத்தவரை
'என்ன' என்பதுபோல் ஒரு பார்வை பார்க்க
"இன்னிக்கு சீக்கிரம் வர முடியுமா" என்று கேட்க
"எதுக்கு" என்ற கேள்வி சூடாக வந்தது.
"கோவிலுக்கு"
"ஏன்" என்று அடுத்த கேள்வி இன்னும் சூடாக
"அது நம்முடைய கல்யாண நாள் அதான்" என்று வார்த்தைகளை மென்று விழுங்கி ஒருவாறு கூறிவிட்டார்.
"நான் வாழ்க்கையில் செய்த முதல் தவறு உன்னை கல்யாணம் செய்தது அந்த தவறுக்கு இப்போ ஒரு கொண்டாட்டம் வேறு" என்று சொல் அம்புகளை பாரபட்சம் பார்க்காமல் வீசிவிட்டு அமைதியின் சிகரம் போல் முகத்தை வைத்து கொண்டு வேலைக்கு கிளம்பிவிட்டார்.
கண்களை கண்ணீர் மறைத்து கொண்டு 'இப்போது விழவா' என்று அனுமதி கேட்டவாறு நிற்க அதை சேலை தலைப்பில் அழுந்த துடைத்து விட்டு நிமிர்ந்தார் சத்யவாணி.
மகளும் சிறிது நேரத்தில் கல்லூரி சென்றவிட்டாள்.
தன் வாழ்க்கையை பின் நோக்கி பார்க்க தொடங்கினார் சத்யவாணி.
வீரபாண்டியன்- செவ்வந்தி தம்பதியின் செல்ல மகள் சத்யவாணி.
அழகும்,அறிவும் நிறைவாக பெற்றவள்.
மகளின் மீது அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்தார் வீரபாண்டியன்.
அவருக்கு சொந்தமாக இரு துணி கடைகள் உண்டு.பண்டிகை காலங்களில் அவருடைய கடைகளில் கூட்டம் அலைமோதும்.ஊரிலும் நல்ல பெயர் இவருக்கு உண்டு.
"அம்மாடி வாணி" என்ற தாயின் குரலுக்கு
"சொல்லுங்க மா" என்று வந்து நின்று மகளை கண்டவரின் முகம் பெருமையில் பூரித்தது.
காலையில் குளித்து புது மலராக வந்து நின்ற மகளுக்கு நெற்றியில் முத்தமிட்டு
"அப்பா உன்னை வர சொன்னாங்க போயிட்டு வா டா" என்று அனுப்பி வைக்க
சரி என்று கூறிவிட்டு தந்தையை நோக்கி சென்றாள்.
அங்கு ஏதோ வேலை செய்து கொண்டு இருந்தவர்.
அந்த கொலுசு ஒலியை வைத்தே வருவது யார் என்பதை உணர்ந்து
"வாணி மா" என்று அழைக்க
"என்ன பா" என்று கேட்க
"நீ எந்த ஊரில் இருக்கும் கல்லூரிக்கு படிக்க போகிறாய்" என்று வினவ
"நம்ம ஊரில் தான் பா"
"உனக்கு வெளியூரில் படிக்க விருப்பம் இருந்தாலும் சொல்லு டா.நான் ஏற்பாடு செய்கிறேன்" என்று கூறிய தந்தையின் கரங்களை பற்றிக்கொண்டு
"உங்களை,அம்மாவை எல்லாம் விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன் பா" என்று கூறிய மகளின் கரங்களை ஆதுரமாய் பற்றியவர்.
இருந்தும் மனம் கேளாது "அது இல்லை டா உன்னுடைய" என்று ஏதோ கூற வந்தவரை தடை செய்தது அவரின் மனைவியின் குரல்.
"என்னங்க இது புள்ள வேண்டாம் தானே சொல்கிறாள் நீங்க ஏன் திரும்ப திரும்ப அதை பேசிட்டு இருக்கீங்க" என்று கூறி முறைக்க
"அதுக்கு இல்ல செவ்வந்தி" என்று ஆரம்பித்த கணவரை பார்வையால் அடக்கியவர்.
மகளின் புறம் திரும்பி "நீ உள்ளே போய் ஏதாவது செய் வாணி" என்று கூறி அவளை அறைக்கு அனுப்பிவிட்டவர்.
பின் கணவரிடம் "சொல்லுங்க என்ன விஷயம்" என்று நேரடியாகவே கேட்க
"எனக்கு தெரிந்தவங்க எல்லாம் வாணிக்கு வரம் பார்க்க ஆரம்பிக்க சொல்றாங்க பிள்ளை இங்க இருந்தால் சரி வராது அதான் படிக்க வெளியூர் அனுப்பலாம் என்று யோசித்தேன்"
"நீங்களா இப்படி பேசுறது?எப்போதுமே மற்றவர்களின் விருப்பத்தை நீங்க ஏற்க மாட்டீங்க உங்க மனசுக்கு பிடித்து இருந்தால் மட்டும் தான் அதை செய்வீங்க"
மனைவி தன் குணத்தை துல்லியமாக சொன்னதை எண்ணி மனம் மகிழ்ந்தார் வீரபாண்டியன்.
"என்னங்க" என்று அழைத்து கணவனின் தோளை தொட்டார்.
"நீ சொல்லுவது எல்லாம் சரிதான் மா அவங்களுக்காக மட்டும் இதை நான் சொல்லவில்லை" என்று கூறியவர்
ஒரு இடைவெளி விட்டு பின் தொடர்ந்தார்.
"வாணி எல்லா விஷயத்திலும் நம்மையே எதிர்பார்த்து இருக்கா ,கூண்டு கிளியாக இருக்கிறவளை சுதந்திர பறவையாக பறக்க விட ஆசை படுகிறேன்"
"நீங்க ஆயிரம் காரணம் சொல்லலாம் ஆனா வாணியை பிரிந்து என்னால் ஒரு நாள் கூட இருக்க முடியாது. இன்னும் குறைந்தது நாலு வருஷம் இங்கு இருப்பாள் அப்புறம் வேறு வீட்டுக்கு போய் விடுவாள் அதுவரைக்கும் அவள் என்னோடு தான் இருப்பாள் இருக்கணும்" என்று திட்டவட்டமாக பேசிவிட்டு நகர்ந்தார் செவ்வந்தி.
மகளின் பயந்த சுபாவம் மாற வேண்டும் என்று நினைத்து அவர் ஒன்றை செய்ய முயன்றால் ,அவரின் மனைவியோ அதற்கு இப்படியொரு முட்டுக்கட்டை போடுவாள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.
பார்க்கலாம் காலம் என்ன செய்ய காத்திருக்கிறது என்று..
சத்யவாணி அந்த ஆண்டு பொது தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தாள்.
மகளின் விருப்படியே அந்த ஊரில் இருக்கும் கலை கல்லூரியில் இளங்கலை படிப்பில் தமிழ் இலக்கியத்தில் சேர்த்து விட்டார்.
அவர் எண்ணியது போல் மகள் தன் கூட்டில் இருந்து வெளியே வந்து அவளின் முயற்சியால் சிறகுகளை விரித்து பறக்க தொடங்கினாள்.
சத்யவாணி கல்லூரியில் நடக்கும் அனைத்து பேச்சு போட்டியிலும் கலந்து கொண்டு பரிசுகளை வென்றாள்.
அதனை தொடர்ந்து கதை, கவிதை, கட்டுரை எழுதி தன் திறமைகளை வளர்த்து கொள்ள அவளின் தந்தை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
கல்லூரியில் நடக்கும் பட்டிமன்றங்களில் சத்யவாணி என்ற பெயரை கேட்டாலே எதிரணி நடுங்கும் என்ற அளவுக்கு இருந்தது அவளின் பேச்சு.
படபடவென பொரிந்து தள்ளாமல், நிறுத்தி நிதானமாக அதுவும் அழுத்தமான கருத்துக்களை கொண்டு பேசும் அவளின் உரைக்கு பலபேர் அடிமை.
மூன்று வருடங்கள் விரைவாகவே நகர்ந்தது.
கல்லூரி படிப்பை முடித்தவுடன், சத்யவாணிக்கு நல்ல வரன் அமைந்துவிட்டது.
ராஜன் வருமான வரி துறையில் உயர்ந்த பதவியில் இருக்கிறார்.பெற்றோருக்கு ஒரே மகன்.கைநிறைய சம்பளம், சொந்த வீடு என பெண் வீட்டாரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய திருமண தேதி உறுதி செய்யப்பட்டது.
சீரும் சிறப்புமாக மகளின் திருமணத்தை நடத்தி வைத்தார் வீரபாண்டியன்.
வரவேற்பு, மறுவீட்டு விருந்து என அனைத்தும் முடிந்தபின் இருவரின் பெற்றோரும் இணைந்து சென்னையில் வீடு பார்த்து இருவரையும் தனிக்குடித்தனம் வைத்தனர்.
தனியாக வந்தபின் தான் கணவனின் குணம் சத்யவாணியால் அறிய முடிந்தது.
ராஜனின் ஆணாதிக்க குணத்தை கண்டு அஞ்ச தொடங்கினாள்.
சாப்பாட்டில் குறை கூறுவது என்று தொடங்கி அதன் பிறகு அவள் எது செய்தாலும் அதில் ஒரு தவறை கண்டுபிடிக்க தன் கணவரை எண்ணி வருந்தினாள்.
கல்லூரி படிக்கும் போது இருந்த சத்யவாணிக்கும் இப்போது இருப்பவளுக்கும் எத்தனையோ வித்தியாசங்கள்.
சில நேரம் தன்னை பார்த்து அந்த கேள்வியை கேட்டு கொள்வாள்.
நானா அவள் என்று அதற்கு விடை தான் பூஜ்யமாக இருக்கும்.
ஒரு முறை கடற்கரை சென்றபோது ஏதோவொரு ஆர்வத்தில் அருகே நின்ற கணவனின் கரத்தை பற்றி இழுத்தாள் சத்யவாணி.
மனைவி சட்டென்று தன் கரத்தை பிடித்து இழுப்பாள் என்று அறியாது நின்ற ராஜன்.
தன்னை நிலைப்படுத்த முயற்சி செய்ய அதற்குள் கரங்களில் இருந்த ஐஸ்கிரீம் சிதறி அவருடைய ஆடையை அபிஷேகம் செய்தது.
சத்யவாணி தன் தவறை உணராது "என்னங்க என்னங்க" என்று மீண்டும் அழைக்க
சிறிதும் கசங்கல் இல்லாத ஆடையை அணிபவரை இந்த ஐஸ்க்ரீம் அபிஷேகம் கோபத்தை கிளப்பியது.
பொது இடம் என்றும் பாராமல் மனைவியின் தோளை பற்றி திருப்பி 'பளார்' என்று ஒரு அறை விட்டு முரட்டுத்தனமாக கைகளை பிடித்து இழுத்து வீட்டுக்கு வந்தார்.
கடிந்து கூட பேசாத தாய், தந்தைக்கு பிறந்தவளை கரம் நீட்டி அடித்ததை எண்ணி சிறிதும் யோசிக்காமல் தன் வார்த்தைகளால் மனைவியை விளாசி கொண்டு இருந்தார்.
"கிராமத்தில் இருந்த உன்னை போய் எனக்கு ஜோடி சேர்த்தாங்க பார் அவங்களை சொல்லனும்"
"பொது இடத்தில் எப்படி நடக்கணும் கூட தெரியலை நீ எல்லாம் என்ன படித்த பெண்"
"உங்கப்பா காசு கொடுத்து தான் டிகிரி வாங்கி தந்து இருப்பார்"
"எனக்கு கொஞ்சம் கூட சரிசமமாக இல்லாத உன்னை போய் " என்று தன் பேச்சால் மனைவியை வாயடைத்து நிற்க வைத்தார்.
தேள் போல் வார்த்தையால் கொட்டி விட்டு அகன்றார்.
கணவன் அடித்தது கூட சத்யவாணிக்கு வலிக்கவில்லை ஆனால் பேசிய வார்த்தைகள் இதயத்தை வாள் கொண்டு அறுத்தது.
இரவில் உணவு கூட அருந்தாமல் தூங்க சென்றவளை கணவனின் கரங்களை வளைத்து கொண்டது விடுபட முயன்றும் தோல்வியே எஞ்சியது.
பகல் முழுவதும் கதிரவனை போல் அனலை வீசிவிட்டு, இரவில் சந்திரன் போல் குளுமையை தரும் கணவனை எந்த வகையில் சேர்ப்பது என்று புரியாது குழம்பினாள் .
இந்த குழப்பங்களுக்கு மத்தியில் சத்யவாணி கர்ப்பம் தரித்தாள்.
இதை அறிந்த இருவரின் பெற்றோரும் மகிழ்ந்தனர்.
ராஜன் எப்போதும் போலவே இருந்தார் முகத்தில் துளியும் மகிழ்ச்சி இல்லை.
நாட்கள் நகர்ந்தது.
ராஜன் - சத்யவாணி தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறக்க அவளுக்கு வசுமதி என்று பெயர் சூட்டினர்.
முதுமை காரணமாக இருவரின் பெற்றோரும் ஒன்றன் பின் ஒன்றாக இறைவடியை நாடினர்.
மகள் மட்டுமே உலகம் என்று ஆனது சத்யவாணிக்கு.
கணவனின் புறக்கணிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க ஒரு கட்டத்தில் பேச்சுக்கு கூட பஞ்சம் ஆனது.
இருந்ததும் பாறையில் முட்டிய கல் போல் கணவனிடம் பேச முயற்சித்து கொண்டே இருந்தார்.
வசுமதிக்கு தந்தையின் இந்த குணம் பிடிப்பது இல்லை எனவே அவரிடம் எப்போதும் ஒதுங்கியே இருப்பாள்.
வீட்டுக்கு யாராவது வந்தால் மனைவியை எல்லோர் முன்னிலையில் ஏதாவது ஒன்றை கூறி மட்டம் தட்டுவார்.
முதலில் மனம் வருந்த செய்தது பின் அதுவே அவருக்கு பழகிவிட்டது.
கடிகாரம் தன் இருப்பை காட்ட நிகழ்காலத்துக்கு வந்தார்.
"அச்சோ நேரம் ஆகிவிட்டது மதி வந்துவிடுவாள் ஏதாவது செய்வோம்" என்று தனக்குள் பேசியபடி சமையலறை பக்கம் சென்றார்.
மகளுக்கு பிடித்த வாழைப்பூ வடையும்,பாயாசமும் செய்தார்.
"அம்மா" என்று கூறிக்கொண்டே வந்து தாயை பின்னால் இருந்து வசுமதி அணைத்தாள்.
"என்ன என்னுடைய செல்லம் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க என்ன விஷயம் " என்று கூறி தானும் மகளின் மகிழ்ச்சியில் பங்குகொண்டவாறு கேட்க
"இன்னிக்கு ஒரு கேம்பஸ் இன்டெர்வியூ இருந்தது அதில் தேர்வாகி இருக்கிறேன் படிப்பு முடிந்தபிறகு வேலைக்கு சேர சொல்லி இருக்காங்க மா" என்று மகிழ்ச்சியில் துள்ளி குதித்தவாறு சொல்ல
"சந்தோஷம் டா"என்று கூறி மகளை அணைத்து உச்சி முகர்ந்தார்.
மகளுக்கு செய்தவற்றை எல்லாம் ஊட்டி விட்டார்.
அவர்களின் இந்த மகிழ்ச்சிக்கு ஆயுள் குறைவு என்பதை பாவம் அவர்கள் அறியவில்லை.
வீட்டிற்கு வந்தவுடன் முதல் வேளையாக மனைவியை அழைத்தார் ராஜன்.
அதிசயமாக கணவன் அழைப்பை எண்ணி வியந்தவாறு அவரின் அருகே வந்து " என்னங்க"என்று ஆசையாக அழைக்க
"இந்த கவரை பிரித்து பார்" என்று ஒன்றை அவரின் கையில் திணிக்க
என்னவாக இருக்கும் என்று எதிர்ப்பார்ப்புடன் பிரித்து பார்க்க அதில் ஒரு பையனின் புகைப்படமும்,அவனை பற்றிய விவரங்களும் இருந்தது.
"பையன் நல்ல இருக்கிறான் யாருக்கு பார்க்கிறாங்க " என்று கேட்க
"வசுமதிக்கு" என்ற ஒற்றை வார்த்தையில் அவர்களின் மகிழ்ச்சி மங்கி போனது.
"மதிக்காக அவள் சின்ன பெண் அதுக்குள்ள எதுக்கு கல்யாணம்"என்று தன் மறுப்பை தெரிவிக்க
இதெல்லாம் காது கொடுத்து கேட்கும் ரகம் அல்ல ராஜன்.
"நான் உங்களுடைய விருப்பத்தை எல்லாம் கேட்கலை வரும் வெள்ளிக்கிழமை பெண் பார்க்க வருவாங்க அதுக்கு வேண்டியதை பண்ணு" என்று உத்தரவிட்டார்.
வசுமதி தயங்கியவாறு" அப்பா நான் வேலைக்கு போயிட்டு இரண்டு வருஷத்துக்கு அப்புறம் கல்யாணம் பண்ணுகிறேன் ப்ளீஸ் பா"என்று கெஞ்சும் குரலில் சொல்ல
"என்னுடைய வார்த்தைக்கு அவ்வளவு தான் மரியாதையா இந்த வீட்டில்" என்று சத்தம் போட்டவர்.
மனைவியை பார்த்து"எல்லாம் உன்னால் தான்" என்று கோபமாக கத்த
"நான் என்ன செய்தேன் திருமணம் அவள் விருப்படி தான் நடக்கணும் நீங்க கட்டாயப்படுத்தி நடத்தி வைக்க கூடாது" என்று அவரும் குரலை உயர்த்த
"என்ன சத்தம் அதிகமா இருக்கு" என்று அதட்டியவாறு கேட்க
"ஆமாம் என் பெண்ணுக்காக நான் பேசுவேன் தான்" என்று சொல்ல
வாய் சண்டை கை சண்டை மாறும் நிலை ஏற்பட
"போதும் நிறுத்துங்கள்" என்று வசுமதி கத்த
மனைவியை அடிக்க ஓங்கிய ராஜனின் கரம் கீழே இறங்கியது.
பெற்றோர் முகத்தை பார்த்து "எனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம் "என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்று கதவை அடைத்தாள்.
மனைவியை ஒரு வெற்றி புன்னகை பார்த்து விட்டு கடந்து சென்றார் ராஜன்.
அதை அலட்சியம் செய்து விட்டு மனம் படபடக்க மகளை காண விரைந்தார் சத்யவாணி.
அழுகையில் குலுங்கும் மகளின் முதுகை ஆதரவாக வருட
அந்த ஸ்பரிசத்தில் தன் அழுகையை நிறுத்திவிட்டு தாயை அணைத்து கொண்டாள் வசுமதி.
"மதி எதுக்கு அப்படி சொன்னாய்"
"என்னால் உங்க இரண்டு பேருக்கும் சண்டை வர வேண்டாம் மா" என்று கண்ணீரோடு சொல்ல
"உங்க அப்பா அடிக்கடி தான் என்னிடம் சண்டை போடுவார் அதுக்காக உன்னுடைய கனவை கலந்து போக செய்துவிட்டாயே" என்று மனம் ஆறாமல் கேட்க
"விடு மா இதுதான் விதி போல" என்று சோர்வாக உரைக்க
"நான் பேசி பார்க்கிறேன் மதி"என்று தைரியம் சொல்ல
"வேண்டாம்"என்று அழுத்தமாக கூறிவிட்டு தாயின் மடியில் முகம் புதைத்தாள்.
அடுத்து என்ன செய்வது என்று யோசித்தவாறு மகளை தட்டி கொடுத்து தூங்க வைத்தார்.
வெள்ளிக்கிழமை பெண் பார்க்கும் படலம் நடந்தது.
மகளுக்கு பார்த்து இருக்கும் பையனின் பெயர் நெடுஞ்செழியன். வங்கியில் பணிபுரிகிறான்.நல்ல குடும்பம் குறை என்று கூற எதுவும் இல்லை.
அனைவருக்கும் வசுமதியை பிடித்து விட, பெரியவர்கள் இணைந்து திருமணம் தேதியை உறுதி செய்தார்கள்.
இத்தனை நாளும் நத்தை போல் நகர்ந்த நாட்கள் எல்லாம் இப்போது காலில் சக்கரம் கட்டிகொண்டு ஓடியது.
திருமணம் நல்லபடியாக முடிய முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அறைக்கு வந்த வசுமதியை பார்த்து சிரித்தான் நெடுஞ்செழியன்.
தந்தையின் செயலால் வருத்தத்தில் இருந்தவளை கணவனின் இந்த சிரிப்பு சினத்தை ஏற்படுத்தியது.
"எதுக்கு இப்போ இந்த சிரிப்பு நான் என்ன கோமாளி மாதிரி இருக்கிறேனா" என்று கோபத்தில் புசுபுசுவென்று மூச்சு விட்டவாறு கேட்க
"சாரி சாரி" என்று மன்னிப்பு வேண்ட
இன்னும் கோபம் தணியாது தன்னை முறைத்து கொண்டு இருக்கும் மனைவியின் கரம் பற்றி அருகே அமர வைத்தான்.
"இங்கே பாருடா" என்று முகத்தை பற்ற
'பார்க்க மாட்டேன்' என்பதை போல் தலையை ஆட்டினாள்.
அவளின் சிறுபிள்ளை தனத்தில் மனதை தொலைத்தவன்.
"வசு" என்று அழைத்து நெற்றியில் முத்தமிட
கணவனின் இந்த பிரத்தியேக அழைப்பில் அவளின் முகம் பிரகாசம் அடைந்தது.
பெண் பார்க்க வந்த போதே அவனை பிடித்து இருந்தது ஏனோ தந்தையின் செயலால் சற்று விருப்பம் இல்லாதவள் போல தன்னை காட்டி கொள்ள முயன்றாள்.
கணவனின் இந்த அழைப்பு அவள் மனதை கவர்ந்தது.
மெல்ல தன் விழிகளை உயர்த்தி அவனை பார்த்தாள்.
"உனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று எனக்கு தெரியும் ஆனால் நான் உன்னை விரும்பி தான் திருமணம் செய்தேன்"
"புரியலை"
"நான் உனக்கு காலேஜ்ல சீனியர்"
"வாட்"
"ஆமாம். நான் கடைசி வருஷம் படிக்கும் போது தான் நீ சேர்ந்தாய் ஏனோ தெரியலை உன் முகத்தை அடிக்கடி பார்த்து தோணும் அதுக்காகவே உன்னுடைய க்ளாஸ் பக்கம் வருவேன்"
"நான் உங்களை பார்த்தது இல்லை"
"தெரியும் நீ எல்லாம் தான் நிலத்தை பார்த்து நடக்கிற பெண்ணு பிரிவை சேர்ந்தவள் ஆச்சே " என்று கிண்டலாக கூற
"போதும் செழியன்" என்று சிணுங்க
"அப்பா என்னுடைய பெயரை ஆறு மாதத்திற்கு அப்புறம் சொல்லிட்டே"
"சொல்லுங்க ப்ளீஸ்"
"சரி சொல்கிறேன் அப்போ எனக்கு அது என்ன உணர்வு என்று சொல்ல தெரியலை நானும் அப்படியே விட்டேன் ஆனா உன்னை மறக்கலை படிப்பு முடிந்தவுடன் வேலை அப்படின்னு நாட்கள் போயிடுச்சு அப்புறம் வீட்டில் கல்யாண பேச்சு வந்தது உன்னுடைய போட்டோ பார்த்தவுடனே எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருந்தது தெரியுமா சொல்ல வார்த்தையே இல்லை நான் ரொம்ப ஆசையா உன்னை பார்க்கலாம் என்று வந்தால் நீ என் முகத்தை கூட பார்க்காம காபி கொடுக்கிறாய்" என்று அவளின் காதை பிடித்து கிள்ள
அது என்று ஏதோ கூற வந்தவளை கை உயர்த்தி தடுத்தான்.
"நான் பேசி முடிக்கிறேன். எனக்கு மனசு கஷ்டமா இருந்தது என்ன செய்யலாம்னு யோசிக்கும் போது தான் உன்னுடைய அம்மா போன் பண்ணாங்க" என்று சொல்லி நிறுத்த
"அம்மா என்ன சொன்னாங்க"
"உனக்கு கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று சொன்னாங்க"
"செழியன் அது" என்று தயங்க
"அத்தை எல்லாத்தையும் சொல்லிட்டாங்க வசு உன்னுடைய விருப்படி நீ வேலைக்கு போகலாம் அதற்கு தடையா நான் இருக்க மாட்டேன்"
"ரொம்ப நன்றி செழியன்" என்று கண்ணீரோடு கூறியவளை ஆறுதலாக அணைத்து கொண்டான்.
"வசு எதை நினைத்தும் நீ கவலைப்பட கூடாது சரியா" என்று கேட்க
'சரி' என்று தலையாட்ட
"குட் இப்போ தூங்கலாம் வா" என்றவனை கேள்வியாக பார்க்க
"நம்மை நாம் புரிந்து கொண்ட பிறகு தான் இதெல்லாம்" என்று கூறி படுத்துக்கொண்டு அவளையும் தூங்க வைத்தான்.
சத்யவாணிக்கு மகளை பற்றிய கவலை சிறிதும் இல்லை மருமகன் நன்றாக பார்த்து கொள்வார் என்ற நம்பிக்கை பிறந்துவிட்டது.
நெடுஞ்செழியன்- வசுமதியின் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக எவ்வித சண்டையும் இல்லாமல் காதலுடன் சென்றது.
ஒரு வருடம் கழித்து வசுமதி கருவுற்றாள்.
மகளை கண்ணும் கருத்துமாக சத்யவாணி பார்த்து கொள்ள சுக பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது அவனுக்கு கவிநேயன் என்று பெயர் சூட்டினர்.
நாட்கள் நகர ராஜனின் ஆதிக்கம் அந்த வீட்டிலில் குறைந்தது.
மனைவியை குறை கூறுவதை குறைத்து கொண்டு ஓரிரு வார்த்தைகள் பேச ஆரம்பித்தார்.
ஏனோ அது கடவுளுக்கு பொறுக்கவில்லை போல
வழக்கம் போல் இரவு உறங்க சென்ற சத்யவாணி காலையில் கண் விழிக்கவில்லை.
யோசனையாக மனைவியின் மூக்கில் கை வைக்க அவரின் சுவாசம் நின்று இருந்ததை அப்போது தான் உணர்ந்தார்.
அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றவர்.
மருமகனுக்கு தகவல் சொல்ல மொத்த குடும்பமும் அங்கே வந்தது.
அதன்பின் அனைத்து காரியங்களும் மடமடவென்று நடந்தது.
வசுமதி கதறி கதறி அழுதுகொண்டு இருக்க நெடுஞ்செழியன் மனைவியை சமாதானம் செய்ய முயன்று தோன்றான்.
கவிநேயன் "பாட்டி பாட்டி" என்று அழைத்தவாறு நிற்க
ராஜன் எதையும் உணர தோன்றாது நின்றார்.
எல்லாம் முடிந்தது சத்யவாணி இறந்து இன்றோடு இருபது நாட்கள் ஆகிவிட்டது.
ராஜனை மகள் தன் வீட்டுக்கு அழைத்தும் அங்கு செல்லாமல் இங்கேயே இருந்தார்.
பொருட்களை சுத்தம் செய்யலாம் என்று எண்ணி ஒரு பெட்டியை திறந்து பார்க்க அப்படியே அதிர்ந்தார்.
அந்த பெட்டியில் ஏறக்குறைய முப்பது புத்தகங்கள் இருந்தது அவற்றை எல்லாம் எழுதியது தன் மனைவி என்ற செய்தியே அவரை அதிர செய்தது.
கவிதை மற்றும் கதை புத்தகங்கள் என்று நிரம்பி வழிந்தது.
ஒரு புத்தகத்தை எடுத்து பார்த்து தன் நடுக்கும் கரங்களால் வருடி பார்த்தார்.
'ஒரு பெண்ணின் ஏக்கம்' என்று தலைப்பும் ஆசிரியர் பெயர் 'சத்யா ராஜன்' என்று இருக்க
அதில் தன் மனைவியின் ஏக்கங்கள் அப்பட்டமாக வெளிப்பட்டு இருப்பதை வாசித்தவரின் கண்கள் கண்ணீர் மூலம் கூறியது.
தன்னுடைய வெறுப்புகளை எல்லாம் பொறுத்து கொண்டு வாழ்ந்த மனைவியின் மறுபக்கத்தை அவர் அறியவில்லை.
அறிந்தபின் அவர் இல்லையே...
காலம் கடந்த பின்னால் மனைவி மீது காதல் பிறக்க அதை பகிர்ந்து கொள்ள அவரின் சத்யா அருகே இல்லை.
மனைவியின் புகைப்படம் முன்பு வந்து கண்ணீரோடு "மன்னித்து விடு சத்யா" என்று கூற
மாலையில் இருந்த ஒரு ரோஜா மொட்டு கீழே விழுந்து அவரின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை உணர்த்தியது.
திறமை இல்லாதவள் தன் மனைவி என்று எண்ணி மட்டம் தட்டி வார்த்தைகளை சிதறவிட்டார் ராஜன்.
திறமை இருந்தும் அதை கணவனுக்கு தெரியபடுத்தாமல் மறைத்து மறைந்தார் சத்யா.
ஆணாதிக்கம் பெண் ஆதிக்கம் இரண்டையும் களைந்து அன்பை மட்டுமே ஆதிக்கம் செய்வோம்..
முற்றும்...