- Messages
- 906
- Reaction score
- 1,132
- Points
- 93
இந்த முறை அங்காளப் பரமேஸ்வரி தந்த ஜூஸை அருந்தியவர், "கேள்விப்பட்டோம், அந்த மினிஸ்டர் உங்கப் பேத்தியை நீங்க கல்யாணம் செஞ்சுத் தராம ஏமாத்திட்டதா நினைச்சு, தொழில்ல உங்களுக்கு உதவுறதை நிறுத்திட்டாராமே? அப்பறம் உங்க அரசும் கூட கவிழ்ந்திடுச்சாமே? பாவம் எம்.எல்.ஏ பதவி போய், தொழில் முடங்கிப் போய், இப்போ உங்க ஜமீன் மாப்பிள்ளை புண்ணியத்தால தான் உங்க வண்டி ஓடிக்கிட்டிருக்குனு கூட கேள்விப்பட்டேன். மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. இந்தக் கஷ்டத்தோட உங்கப் பேத்தியை வேற உங்கக்கிட்ட இருந்து பிரிச்சி ஏன் கூடக்கொஞ்சம் கஷ்டப்பட வைக்கணும்னு தான், நம்ம சண்டையை இத்தோட முடிச்சிக்கலாம்னு வந்தேன். உங்கப் பேத்திக்கு மகாலட்சுமி பிறந்திருக்கா. குழந்தை பிறந்து மூணு மாசமாகப் போகுது" எனவும்,
அவரின், பகை முடித்துக் கொள்ளலாம் என்கிற பேச்சில் நன்றி பெருக்குடன், "கேள்விப்பட்டேன்மா" என்றார் சங்கரப்பாண்டியன்.
"இன்னும் மூணு நாள்ல பேர் சூட்டு விழா வச்சிருக்கோம். நீங்க உங்க குடும்பத்தோட வந்து பிள்ளைகளை ஆசீர்வதிச்சிட்டுப் போகணும். இந்தாங்க, இந்த விஷேசத்தோட நம்ம விரோதத்தை முடிச்சிக்கலாம்." என தாம்பாளத்தட்டை வழங்கவும், சங்கரப்பாண்டியன் மனமுவந்து வாங்கிக் கொண்டார்.
பின், நாச்சியம்மையை காண தயங்கியபடியே உண்மையான வருத்தத்துடன், "நான் எவ்வளவு இழந்தாலும் அது உன் இழப்புக்கு ஈடாகாதும்மா. ஆனா, நீ அதை மறக்க முன் வந்ததே எனக்கு மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு. கண்டிப்பா விழாவுக்கு நாங்க வர்றோம்மா" எனக் கைகளைக்கூப்பினார்.
அவரைப் பார்த்து பதிலுக்கு கை கூப்பிவிட்டு தன் வீடு நோக்கிப் புறப்பட்டார் நாச்சியம்மை.
விழாவிற்கு முந்தைய நாள் காலை தன் வேலையனைத்தையும் முடித்துக்கொண்டு செங்குளம் வந்து சேர்ந்தான் கௌதமன்.
அவன் தன் எதிரில் வந்தாலே அவனைக் காண விரும்பாதவள் போல் வேறுபுறம் திரும்பிச் சென்றாள் அதிதி.
விழா அன்று காலையில் அம்முலுவுக்கு புத்தாடை அணிவித்துவிட்டு தானும் விழாவிற்கு கிளம்பிய அதிதி, பால்கனியில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த தன் கணவனிடம், "சீக்கிரமா கிளம்புங்க.. ஃபங்ஷனுக்கு நேரமாகிடுச்சி." என்று துரிதப் படுத்தினாள்.
அவனும் தன் ஆடைகளை எடுத்துக்கொண்டு குளியலறை நோக்கிச் சென்றான். அவன் குளித்து முடித்து வெளியே வர முகத்திற்கு ஒப்பனை செய்து கொண்டிருந்தாள் அதிதி.
அந்நேரம் கதவை தட்டிய வேலையாள் அவளின் குடும்பத்தினர் வந்திருப்பதாகக் கூறவும், "இதோ வர்றேன்!" என்று சொல்லி அனுப்பிவிட்டு, சோபாவில் தன் கணவனுக்காக காத்திருக்கலானாள் அதிதி.
"நீ கீழப் போ! நான் அப்புறம் வர்றேன்" என்றவனிடம்,
"இல்ல, இல்ல, ரெண்டு பேரும் ஒன்னாவே போகலாம்" என மறுத்தாள்.
இருவரும் ஒரு சேரக் கிளம்பி குழந்தையுடன் கீழே வர, அனைவரின் கண்களும் அவர்களின் மேல் தான் இருந்தது. விக்ரமன் வந்திருந்தவர்களை கண்டுகொள்ளாமல் ஐயரின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.
அதிதி தன் தாத்தா பாட்டியைப் பார்த்து ஆனந்தக் கண்ணீருடன், “வாங்க!” என்றாள்.
பின், குழந்தையுடன் அவர்களின் காலிலும் விழுந்து எழுந்தாள்.
அவளுக்கு விக்ரமனின் நடவடிக்கை துப்புரவாக பிடிக்கவில்லை. சுணக்கமான முகத்துடன், ‘வீடு தேடி வந்திருக்கவங்களை வாங்கனு சொன்னா தான் என்னவாம்? வாயிலிருக்கற முத்தா கொட்டிடும்?' என மனதுக்குள் நொடித்துக் கொண்டவள், அனைவரும் குழந்தையை கொஞ்சி விட்டு கொடுக்கவும் அவன் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.
விக்ரமனின் செல்வ வளத்தைக் கண்டு விழாவிற்கு வந்திருந்த அதிதியின் அத்தை ஆனந்தவதியும் சித்தி மானசாவும் வியப்பில் முகவாயில் கை வைத்தனர்.
அவரின், பகை முடித்துக் கொள்ளலாம் என்கிற பேச்சில் நன்றி பெருக்குடன், "கேள்விப்பட்டேன்மா" என்றார் சங்கரப்பாண்டியன்.
"இன்னும் மூணு நாள்ல பேர் சூட்டு விழா வச்சிருக்கோம். நீங்க உங்க குடும்பத்தோட வந்து பிள்ளைகளை ஆசீர்வதிச்சிட்டுப் போகணும். இந்தாங்க, இந்த விஷேசத்தோட நம்ம விரோதத்தை முடிச்சிக்கலாம்." என தாம்பாளத்தட்டை வழங்கவும், சங்கரப்பாண்டியன் மனமுவந்து வாங்கிக் கொண்டார்.
பின், நாச்சியம்மையை காண தயங்கியபடியே உண்மையான வருத்தத்துடன், "நான் எவ்வளவு இழந்தாலும் அது உன் இழப்புக்கு ஈடாகாதும்மா. ஆனா, நீ அதை மறக்க முன் வந்ததே எனக்கு மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு. கண்டிப்பா விழாவுக்கு நாங்க வர்றோம்மா" எனக் கைகளைக்கூப்பினார்.
அவரைப் பார்த்து பதிலுக்கு கை கூப்பிவிட்டு தன் வீடு நோக்கிப் புறப்பட்டார் நாச்சியம்மை.
விழாவிற்கு முந்தைய நாள் காலை தன் வேலையனைத்தையும் முடித்துக்கொண்டு செங்குளம் வந்து சேர்ந்தான் கௌதமன்.
அவன் தன் எதிரில் வந்தாலே அவனைக் காண விரும்பாதவள் போல் வேறுபுறம் திரும்பிச் சென்றாள் அதிதி.
விழா அன்று காலையில் அம்முலுவுக்கு புத்தாடை அணிவித்துவிட்டு தானும் விழாவிற்கு கிளம்பிய அதிதி, பால்கனியில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த தன் கணவனிடம், "சீக்கிரமா கிளம்புங்க.. ஃபங்ஷனுக்கு நேரமாகிடுச்சி." என்று துரிதப் படுத்தினாள்.
அவனும் தன் ஆடைகளை எடுத்துக்கொண்டு குளியலறை நோக்கிச் சென்றான். அவன் குளித்து முடித்து வெளியே வர முகத்திற்கு ஒப்பனை செய்து கொண்டிருந்தாள் அதிதி.
அந்நேரம் கதவை தட்டிய வேலையாள் அவளின் குடும்பத்தினர் வந்திருப்பதாகக் கூறவும், "இதோ வர்றேன்!" என்று சொல்லி அனுப்பிவிட்டு, சோபாவில் தன் கணவனுக்காக காத்திருக்கலானாள் அதிதி.
"நீ கீழப் போ! நான் அப்புறம் வர்றேன்" என்றவனிடம்,
"இல்ல, இல்ல, ரெண்டு பேரும் ஒன்னாவே போகலாம்" என மறுத்தாள்.
இருவரும் ஒரு சேரக் கிளம்பி குழந்தையுடன் கீழே வர, அனைவரின் கண்களும் அவர்களின் மேல் தான் இருந்தது. விக்ரமன் வந்திருந்தவர்களை கண்டுகொள்ளாமல் ஐயரின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான்.
அதிதி தன் தாத்தா பாட்டியைப் பார்த்து ஆனந்தக் கண்ணீருடன், “வாங்க!” என்றாள்.
பின், குழந்தையுடன் அவர்களின் காலிலும் விழுந்து எழுந்தாள்.
அவளுக்கு விக்ரமனின் நடவடிக்கை துப்புரவாக பிடிக்கவில்லை. சுணக்கமான முகத்துடன், ‘வீடு தேடி வந்திருக்கவங்களை வாங்கனு சொன்னா தான் என்னவாம்? வாயிலிருக்கற முத்தா கொட்டிடும்?' என மனதுக்குள் நொடித்துக் கொண்டவள், அனைவரும் குழந்தையை கொஞ்சி விட்டு கொடுக்கவும் அவன் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.
விக்ரமனின் செல்வ வளத்தைக் கண்டு விழாவிற்கு வந்திருந்த அதிதியின் அத்தை ஆனந்தவதியும் சித்தி மானசாவும் வியப்பில் முகவாயில் கை வைத்தனர்.