- Messages
- 938
- Reaction score
- 1,132
- Points
- 93
இது நாள் வரை ராதாவே குழந்தையை குளிக்க வைப்பதும் மற்றைய மருந்துகளை அவளை குடிக்க வைப்பதுமாக செய்து கொண்டிருந்ததால், எதையும் சரிவர செய்யத் தெரியாமல் திணறினாள் அதிதி.
அவளின் திணறலை கண்ட விக்ரமன் என்ன தான் அவள் மேல் கோபம் இருந்தாலும் ஜானகியம்மாளை அவளுக்கு உதவி புரிய அனுப்பி வைத்தான். அவளும் அவரது உதவியை ஏற்றுக் கொண்டாள்.
ஒரு வார காலமாக ஜானகியம்மாள் உதவியுடன் குழந்தைக்கு வேண்டிய ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தவள், இன்றைக்கு தானே குழந்தையை குளிக்க வைக்கலாம் என நினைத்து குழந்தையைத் தூக்கிக்கொண்டு குளியலறைக்குள் சென்றாள்.
அந்நேரம் பார்த்து வீட்டினுள் நுழைந்த விக்ரமன் குளியல் அறையிலிருந்து சத்தம் கேட்கவும் அங்கு சென்று பார்த்தான்.
அங்கு ஒரு சிறிய பலகையில் அமர்ந்து தனது புடவையை முழங்கால் வரை உயர்த்திக் கொண்டு, குழந்தையை கால்களில் குப்புறப் படுக்க வைத்து கொஞ்சம் கொஞ்சமாக அதன் உடம்பிற்கு சோப்பு தேய்த்து குளிக்க வைத்துகொண்டே, தன்போக்கில் பேசிக் கொண்டிருந்தாள் அதிதி.
அவள் குழந்தையை குளிக்க வைக்கும் அழகை ஓரத்தில் நின்று ரசித்து பார்த்துக் கொண்டிருந்த விக்ரமன், சிறிது நேரத்திற்குப் பிறகே அதிதியின் வாழைத்தண்டு கால்களை கவனித்தான்.
மூன்றரை மாதமாக அவளை விட்டு விலகியே நிற்பவனுக்கு திடீரென பழைய நினைவுகள் தோன்றி திக்கு முக்காட வைக்க, காமன் அனுப்பும் அம்புகளை உடைக்க பாடாதபாடு பட்டான்.
திரும்பிச் சென்று விடுவோமா? என நினைத்தவன், மறுபடியும் இந்த தரிசனம் எப்போது கிடைக்குமோ? என மீண்டும் தன் விழிவேட்டையினை தொடர்ந்தான்.
இதுயெதையும் அறியாதவள் குழந்தையை குளிப்பாட்டி முடித்தவுடன், "அவ்வளவு தான். என் அம்முலுமா குளிச்சாச்சு. எங்க பாப்புக்குட்டி குளிச்சாச்சு. என் புஜ்ஜிமா ரொம்ப சமத்து!" என அழாமல் குளித்தக் குழந்தையை கொஞ்சி, துண்டால் துடைத்துக்கொண்டே திரும்பினாள்.
கதவில் சாய்ந்து நின்றிருந்தவனைக் கண்டு முதலில் திகைத்தவள் பின், கண்டு கொள்ளாமல் குழந்தையுடன் கட்டிலில் அமர்ந்து குழந்தையின் குட்டி நகங்களை சிறிய நகவெட்டியால் மெதுவாக வெட்டினாள்.
முகம் மற்றும் உடலிற்கு பவுடர் போட்டு, நெற்றி, கன்னம், உள்ளங்கால் என அனைத்து இடங்களிலும் கண்மையால் வட்டப் பொட்டு வைத்தவள் பின், தான் கட்டிலில் எடுத்து வைத்திருந்த சிறிய காட்டன் கவுனை அணிவித்து விட்டாள். குழந்தையும் குளித்த சோக்கில் ஃபேன் காற்றில் மயங்கித் தூங்கியது.
இவை அனைத்தையும் சோபாவில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தவன் பின், தான் தேடி வந்த கோப்பை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டான். அவன் வெளியே செல்வதைப் பார்த்த ராதா தயங்கிக்கொண்டே அவ்வறைக்குள் நுழைந்தார்.
"அதிதி" என்றழைத்து அவள் அருகிலும் அமர்ந்தார்.
"குழந்தையை குளிப்பாட்டுறதை பெரிய வித்தை மாதிரி காட்டி என் குழந்தையை எங்கிட்டயிருந்து இவ்வளவு நாளா பிரிச்சி வச்சிட்டீங்கல்ல? எந்த முகத்தோட என்னைப் பார்க்க வந்தீங்க?" என அவர் கூற வந்ததை கேட்காமல் வெளியே அனுப்பி கதவைச் சாத்தினாள் அதிதி.
ஒருவேளை விக்ரமனிடம் கேட்டதற்குப் பதில் உயிரிழந்த அந்த இரண்டு ஜீவன்கள் யாரென ராதாவிடம் கேட்டிருந்தால் உண்மை புலப்பட்டிருக்குமோ என்னவோ?
யாருடனும் பேசாமல் முறைத்துக் கொண்டிருந்தவள் அவ்வீட்டின் பூச்செண்டுகளிடம் மட்டும் அன்பான சித்தியாய் நடந்துகொண்டாள்.
அவளின் திணறலை கண்ட விக்ரமன் என்ன தான் அவள் மேல் கோபம் இருந்தாலும் ஜானகியம்மாளை அவளுக்கு உதவி புரிய அனுப்பி வைத்தான். அவளும் அவரது உதவியை ஏற்றுக் கொண்டாள்.
ஒரு வார காலமாக ஜானகியம்மாள் உதவியுடன் குழந்தைக்கு வேண்டிய ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தவள், இன்றைக்கு தானே குழந்தையை குளிக்க வைக்கலாம் என நினைத்து குழந்தையைத் தூக்கிக்கொண்டு குளியலறைக்குள் சென்றாள்.
அந்நேரம் பார்த்து வீட்டினுள் நுழைந்த விக்ரமன் குளியல் அறையிலிருந்து சத்தம் கேட்கவும் அங்கு சென்று பார்த்தான்.
அங்கு ஒரு சிறிய பலகையில் அமர்ந்து தனது புடவையை முழங்கால் வரை உயர்த்திக் கொண்டு, குழந்தையை கால்களில் குப்புறப் படுக்க வைத்து கொஞ்சம் கொஞ்சமாக அதன் உடம்பிற்கு சோப்பு தேய்த்து குளிக்க வைத்துகொண்டே, தன்போக்கில் பேசிக் கொண்டிருந்தாள் அதிதி.
அவள் குழந்தையை குளிக்க வைக்கும் அழகை ஓரத்தில் நின்று ரசித்து பார்த்துக் கொண்டிருந்த விக்ரமன், சிறிது நேரத்திற்குப் பிறகே அதிதியின் வாழைத்தண்டு கால்களை கவனித்தான்.
மூன்றரை மாதமாக அவளை விட்டு விலகியே நிற்பவனுக்கு திடீரென பழைய நினைவுகள் தோன்றி திக்கு முக்காட வைக்க, காமன் அனுப்பும் அம்புகளை உடைக்க பாடாதபாடு பட்டான்.
திரும்பிச் சென்று விடுவோமா? என நினைத்தவன், மறுபடியும் இந்த தரிசனம் எப்போது கிடைக்குமோ? என மீண்டும் தன் விழிவேட்டையினை தொடர்ந்தான்.
இதுயெதையும் அறியாதவள் குழந்தையை குளிப்பாட்டி முடித்தவுடன், "அவ்வளவு தான். என் அம்முலுமா குளிச்சாச்சு. எங்க பாப்புக்குட்டி குளிச்சாச்சு. என் புஜ்ஜிமா ரொம்ப சமத்து!" என அழாமல் குளித்தக் குழந்தையை கொஞ்சி, துண்டால் துடைத்துக்கொண்டே திரும்பினாள்.
கதவில் சாய்ந்து நின்றிருந்தவனைக் கண்டு முதலில் திகைத்தவள் பின், கண்டு கொள்ளாமல் குழந்தையுடன் கட்டிலில் அமர்ந்து குழந்தையின் குட்டி நகங்களை சிறிய நகவெட்டியால் மெதுவாக வெட்டினாள்.
முகம் மற்றும் உடலிற்கு பவுடர் போட்டு, நெற்றி, கன்னம், உள்ளங்கால் என அனைத்து இடங்களிலும் கண்மையால் வட்டப் பொட்டு வைத்தவள் பின், தான் கட்டிலில் எடுத்து வைத்திருந்த சிறிய காட்டன் கவுனை அணிவித்து விட்டாள். குழந்தையும் குளித்த சோக்கில் ஃபேன் காற்றில் மயங்கித் தூங்கியது.
இவை அனைத்தையும் சோபாவில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தவன் பின், தான் தேடி வந்த கோப்பை எடுத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டான். அவன் வெளியே செல்வதைப் பார்த்த ராதா தயங்கிக்கொண்டே அவ்வறைக்குள் நுழைந்தார்.
"அதிதி" என்றழைத்து அவள் அருகிலும் அமர்ந்தார்.
"குழந்தையை குளிப்பாட்டுறதை பெரிய வித்தை மாதிரி காட்டி என் குழந்தையை எங்கிட்டயிருந்து இவ்வளவு நாளா பிரிச்சி வச்சிட்டீங்கல்ல? எந்த முகத்தோட என்னைப் பார்க்க வந்தீங்க?" என அவர் கூற வந்ததை கேட்காமல் வெளியே அனுப்பி கதவைச் சாத்தினாள் அதிதி.
ஒருவேளை விக்ரமனிடம் கேட்டதற்குப் பதில் உயிரிழந்த அந்த இரண்டு ஜீவன்கள் யாரென ராதாவிடம் கேட்டிருந்தால் உண்மை புலப்பட்டிருக்குமோ என்னவோ?
யாருடனும் பேசாமல் முறைத்துக் கொண்டிருந்தவள் அவ்வீட்டின் பூச்செண்டுகளிடம் மட்டும் அன்பான சித்தியாய் நடந்துகொண்டாள்.