Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நினைவலைகள்

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
கவிதைகள்

கவிதை1: அப்பா
உன்
உயிரினில்...
உதிரத்தில்...
ஒரு பாகமாய்
என்னை உருவாக்கினாய்...
உன்
வயிற்றினில்
ஈரைந்து மாதங்கள்
சுமந்து என்னை
பெற்றெடுக்க
வில்லை தான்...
ஆனாலும்
நான் உருவான
நொடி முதல்
உன் நெஞ்சினில்
சுமக்கின்றாய்
ஆயுள் முழுவதும்
சுகமாய்...
உன் தாயே
வந்து பிறந்ததாய்
என்னை பார்க்கும்
உன் விழிகள்...
கடவுளே
தந்தையின் வடிவில்
வந்ததாய் நோக்கும்
என் விழிகள்...
அதட்டுவதே அதிகம் என
அடிப்பதை தள்ளி வைப்பாய்...
இப்படித்தான் ஆகவேண்டும்
என்று திணிக்காமல்...
என் விருப்பத்தில்
என்னை செதுக்கினாய்...
விதியின்படி
பெண்பிள்ளையான நான்
மருமகளாய் வேறிடத்தில்
அடிவைத்து புதுமனை புக...
ஆதியும் அந்தமுமான
என் மகாலக்ஷ்மி
என்னை பிரிந்தாள்
என துயர்கொள்ளும்
தகப்பன்சாமி நீயே!
முற்பிறவியில் நான்
செய்த பலனாய்
தந்தையெனும் ரூபத்தில்
வந்த தெய்வமே...
உள்ளத்தால் என்றும்
உன்னை மறவாத
உன் அன்பு மகள்...
 
Top Bottom