RS DHAR
Member
- Messages
- 31
- Reaction score
- 23
- Points
- 8

இந்தியாவில் அந்தக் குறிப்பிட்ட கோயிலில் இருக்கும் விலைமதிப்பற்ற நகை, திருடு போவதற்கு முன் அந்த அழைப்பு அதிகாலை வந்த போது, இருவருமே தூங்கிக்கொண்டிருந்தனர்;
ஆண்டன் டேவி கோவையிலும், பிரஸன்னா கும்பகோணத்திலும்.
முதலில் எடுத்தவன் பிரஸன்னாதான், "ஹலோ, யார் வேணும் ?" என்றான்.
அலைபேசி இணைப்பு ஒரு சில வினாடிகள் அமைதி காத்துவிட்டு, உயிர்பெற்றது, "ஹே ப்ரஸ்" என்றான், ப்ராட் (Brad) எனப்படும் ப்ராட் ஸல்லிவன் (Brad Sullivan), அமெரிக்காவிலிருந்து. "எஸ், ப்ராட்" என்றான் பிரஸன்னா.
"நண்பா, நான் சொன்னதை யோசித்தாயா? எனக்குப் பதில் எப்போது கிடைக்கும்? நீ சொல்வதை வைத்துதான் நான் இந்தியா வர வேண்டும்" என்றான் ப்ராட் ஸல்லிவன்.
"நிச்சயம் நினைவிருக்கிறது, ப்ராட். அந்த வேலையில்தான் இருக்கிறேன். இன்னும் ஒன்றிரண்டு நாள் வேண்டும் முழு விவரமும் சேகரிக்க" என்றான் பிரஸன்னா.
"மேலும் தாமதம் வேண்டாம் நண்பா, நான் உன்னை ஞாயிறு அன்று கூப்பிடுகிறேன். நல்ல பதிலாக எதிர்பார்க்கிறேன்" இணைப்பைத் துண்டித்தான் ப்ராட்.
ஆண்டன் டேவி கோவையிலும், பிரஸன்னா கும்பகோணத்திலும்.
முதலில் எடுத்தவன் பிரஸன்னாதான், "ஹலோ, யார் வேணும் ?" என்றான்.
அலைபேசி இணைப்பு ஒரு சில வினாடிகள் அமைதி காத்துவிட்டு, உயிர்பெற்றது, "ஹே ப்ரஸ்" என்றான், ப்ராட் (Brad) எனப்படும் ப்ராட் ஸல்லிவன் (Brad Sullivan), அமெரிக்காவிலிருந்து. "எஸ், ப்ராட்" என்றான் பிரஸன்னா.
"நண்பா, நான் சொன்னதை யோசித்தாயா? எனக்குப் பதில் எப்போது கிடைக்கும்? நீ சொல்வதை வைத்துதான் நான் இந்தியா வர வேண்டும்" என்றான் ப்ராட் ஸல்லிவன்.
"நிச்சயம் நினைவிருக்கிறது, ப்ராட். அந்த வேலையில்தான் இருக்கிறேன். இன்னும் ஒன்றிரண்டு நாள் வேண்டும் முழு விவரமும் சேகரிக்க" என்றான் பிரஸன்னா.
"மேலும் தாமதம் வேண்டாம் நண்பா, நான் உன்னை ஞாயிறு அன்று கூப்பிடுகிறேன். நல்ல பதிலாக எதிர்பார்க்கிறேன்" இணைப்பைத் துண்டித்தான் ப்ராட்.
************************************************
இதற்கு இரண்டு நிமிட இடைவெளியில், டேவி அலைபேசியை எடுத்து அதில் ஒளிரும் எண்ணைப் பார்த்துவிட்டு, "டேவி" என்றான்.
மறுமுனையில் சிரித்த அந்தப் பெண் குரல், "பரவாயில்லையே, அதிகாலையிலேயே மிகத் தெளிவாக இருக்கிறாய் டேவி" என்றாள் லூஸி.
"நீ சொன்ன ஏற்பாடுகளைக் கிட்டத்தட்ட முடித்துவிட்டேன், லூஸி. கோமல் என்பது மிகச்சிறிய ஊர், ஏறக்குறைய கிராமம். எனவே, ஏற்பாடு செய்வதில் ஒன்றும் சிக்கலில்லை. திரும்பி வரும் வழி எது என்பதில் சற்றுத் தெளிவு தேவை, எச்சரிக்கையும் தேவை" என்றான் டேவி.
"நல்லது, அதற்காகத்தான் உன்னிடம் பேரம் எதுவும் பேசாமல், நீ கேட்ட பணத்தைத் தருவதாக ப்ராட் ஒப்புக்கொண்டுள்ளார். அட்வான்ஸ் தொகையும் கொடுத்தாகிவிட்டது. திட்டத்தில் சொதப்பல் எதுவும் வேண்டாம், டேவி" என்ற லூஸி, பதிலுக்காகக் காத்திருக்காமல் இணைப்பைத் துண்டித்திருந்தாள்.
லூஸி, ப்ராடிடம் இந்தியாவில் அந்தக் குறிப்பிட்ட கோயிலில் இருக்கும் விலைமதிப்பற்ற நகை திருட்டுக்கு ஆயத்தங்கள் மும்முரம் என்று தகவல் சொல்லி, ப்ராடை மகிழ்ச்சியுறச் செய்தாள்.
மறுமுனையில் சிரித்த அந்தப் பெண் குரல், "பரவாயில்லையே, அதிகாலையிலேயே மிகத் தெளிவாக இருக்கிறாய் டேவி" என்றாள் லூஸி.
"நீ சொன்ன ஏற்பாடுகளைக் கிட்டத்தட்ட முடித்துவிட்டேன், லூஸி. கோமல் என்பது மிகச்சிறிய ஊர், ஏறக்குறைய கிராமம். எனவே, ஏற்பாடு செய்வதில் ஒன்றும் சிக்கலில்லை. திரும்பி வரும் வழி எது என்பதில் சற்றுத் தெளிவு தேவை, எச்சரிக்கையும் தேவை" என்றான் டேவி.
"நல்லது, அதற்காகத்தான் உன்னிடம் பேரம் எதுவும் பேசாமல், நீ கேட்ட பணத்தைத் தருவதாக ப்ராட் ஒப்புக்கொண்டுள்ளார். அட்வான்ஸ் தொகையும் கொடுத்தாகிவிட்டது. திட்டத்தில் சொதப்பல் எதுவும் வேண்டாம், டேவி" என்ற லூஸி, பதிலுக்காகக் காத்திருக்காமல் இணைப்பைத் துண்டித்திருந்தாள்.
லூஸி, ப்ராடிடம் இந்தியாவில் அந்தக் குறிப்பிட்ட கோயிலில் இருக்கும் விலைமதிப்பற்ற நகை திருட்டுக்கு ஆயத்தங்கள் மும்முரம் என்று தகவல் சொல்லி, ப்ராடை மகிழ்ச்சியுறச் செய்தாள்.
*********************************************
பிரஸன்னா கேட்ட கேள்வியினால் சற்றே குழம்பினார் ‘பத்து’ எனப்படும் பத்மநாப ராவ். "புரியல பிரஸன்னா, அந்தக் கிணத்துத் தண்ணியில அப்படி என்ன விசேஷம்?" என்றார் சற்று சந்தேகத்துடன்.
"புரியல ராவ்ஜி, எதோ மூலிகைத் தண்ணியாம், ரொம்ப மெடிக்கல் பவர் இருக்குன்னு சொல்றார், அதைப் பார்க்கறதுக்குக்காக அமெரிக்காவிலே இருந்து செலவழிச்சிண்டு இங்க வராளாம். அதுதான் உங்ககிட்ட பெர்மிஷன்....." என்று இழுத்தான் பிரஸன்னா.
பத்மநாப ராவ் சிரித்தார்,
"பரவாயில்லை ராவ்ஜி, இதுக்கு கோயிலுக்கு ஒரு லட்சம் நன்கொடை தர்றேங்கிறா, வாங்கிக்கலாமே?" என்றான் பிரஸன்னா சந்தேகத்துடன்.
"போடா ப்ரம்மஹத்தி. பெரியவர், காதுல விழுந்தா நம்ம ரெண்டு பேரையும் தொலைச்சுப்பிடுவார், தொலைச்சு.”
“கோயிலுக்கு எக்ஸ்டரா வருமானம் வந்தா நல்லதுதான். ஆனா, அவர் கேக்க மாட்டார். இங்க வர்ற பக்தாள் காணிக்கை, விசேஷ தரிசன டிக்கெட் காசு, கோயில் விழா கைங்கரியத்துக்கு இந்த ஊர்ல இருக்கிற நாலஞ்சு பெரிய மனுஷா ரெகுலரா தர்ற டொனேஷன் பணம், இது போக, பெருமாள் புண்ணியத்துல கோயில் நிலத்தில இருந்து வர்ற வருமானம்,,,,,..இதே யதேஷ்டம்னு சொல்லிண்டு இருக்கார். அவர் கிட்ட போய் இதெல்லாம் சொல்லி....அந்த டொனேஷன் எல்லாம் வேண்டாம், கிணத்துத் தண்ணி வேணும்னா, எடுத்து ஃப்ரீயா குடுத்துடலாம். வேத்து மதத்துக்காரா கோயிலுக்குள்ள வரவேண்டாம்னுட்டார் பெரியவர்" என்றார் பத்மநாப ராவ்,.
பிரஸன்னாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ப்ராட் கேட்டபடி தண்ணீர் ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டாலே போதும்.
பழைய காலக் கோயில்களை ஒரு தேர்ந்த ஆர்க்கிடெக்ட் பார்வையிலிருந்து பார்ப்பதற்கு ஆசைப்படும் ஒரு பெண்மணி, லூஸி, தன்னோடு வருவதாகவும், அந்தப் பெண்மணிக்கு ஸ்ரீ சக்ரநாராயணன் கோயிலைச் சுற்றிக்காட்ட வேண்டும் என்று பேசிதானே ஐம்பதாயிரம் ரூபாய் தருவதாகச் சொல்லி, அதில் இருபதாயிரம் அட்வான்ஸும் அனுப்பிவிட்டான் ப்ராட். இப்போது இந்த ராவ் கிழம் இப்படி சொதப்புகிறதே என்று எரிச்சலாக வந்தது அவனுக்கு. இப்போது ப்ராடை அழைத்து இந்த விஷயத்தைச் சொல்லவும் முடியாது. சட்.....அலுத்துக்கொண்டான் பிரஸன்னா.
அந்தக் கோயில் குறைந்தது 1000 வருடங்கள் மேலான புராதனக் கோயில். சோழர் காலக் கல்வெட்டுகளை கோயில் வளாகத்தில் பார்த்திருப்பதாக அவன் நண்பன், தொல்பொருள் ஆராய்ச்சியாளன், சந்துரு சொல்லியிருக்கிறான்.
பெரியவர் என்று அனைவராலும் அன்போடும், மரியாதையோடும் அழைக்கப்படும் சேஷாத்ரியின் குடும்பமே வழிவழியாக அந்தக் கோயிலை நிர்வகித்து வருகிறது. அவர்கள் வைணவர்கள், தீவிர பக்தர்கள்.. பிரஸன்னாவுக்குத் தெரிந்த வரையில் அதிக பணத்தாசை இல்லாதவர்கள்.
படிப்பு மண்டையில் ஏறாததால், பிரஸன்னாவுடைய மாமா மூலம்தான் ராவ் அவனுக்குப் பழக்கம். அவர் மூலம் கோயிலுக்குள் ஒரு சிறிய கடை வைத்துக்கொண்டு அதில் அர்ச்சனைப் பொருட்கள், கோயில் பிரஸாதம் போன்றவற்றை விற்கும் வாய்ப்பு கிடைத்தது.
அடிக்கடி வரும் வெளிநாட்டவர் மூலம் ப்ராட் ஒருமுறை அறிமுகமானான். அவன் மூலமாகவே இப்போது இந்த கூடுதல் வருமானம். இதற்கும் ராவ் மூலம் குந்தகம் விளைந்துவிடுமோ என்ற பயமே பிரஸன்னாவிற்கு.
சொன்னது போலவே ஞாயிறு காலை ப்ராட் அவனை அழைத்தபோது, சட்டென்று போட்டு உடைத்துவிட்டான், "கோயில் தண்ணீர் எடுத்துக்கொடுக்க எந்த விதப் பிரச்சினையும் இல்லை. ஆனால், கோயில் நிர்வாகி பெரியவர் சற்றுத் தீவிரமாக வேற்று மதத்தினர் கோயிலுக்குள் வரக்கூடாது என்கிறார். என்ன செய்வது? நீ சொன்னது போல அந்த லூஸி, கோயிலின் உள்ளே வந்து உலவ முடியாது. மன்னித்துக் கொள்" என்று சொல்லி மூச்சு வாங்கினான்.
அதிசயமாக, ப்ராட் அதைப் பெரிது படுத்தவில்லை. "பரவாயில்லை ப்ரஸ், எனக்கு ஒரே ஒரு உதவி. நல்ல வெளிச்சத்தில் கோயிலின் உட்புறங்களை, ஸ்வாமி சந்நிதி உட்பட எல்லாவற்றையும் உன் மொபைலில் தெளிவாகப் படம் எடுத்து அனுப்பு. உனக்கு, எக்ஸ்ட்ராவாக ஒரு இருபத்தையாயிரம் அனுப்புகிறேன்" என்று சொன்ன சில நிமிடங்களில் பணம் அனுப்பிவிட்டதாகவும் உறுதி செய்தான்.
மறுபடியும் ராவ்விடம் இதுபற்றி சொன்னபோது,அவர் சிரித்தார், "உன்னை எனக்கு நன்றாகத் தெரியும் பிரஸன்னா. உன்னுடைய அமெரிக்க நண்பன் ஏதாவது பணஉதவி செய்தால் வாங்கிக்கொள், மறுக்காதே. சனிக்கிழமை உச்சிகாலப் பூஜை முடிந்தபின் படம் எடுத்துக்கொள். அர்ச்சகர் சௌரியிடம் சொல்லி, பெரியவரிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன்" என்றார் கனிவுடன்.
"புரியல ராவ்ஜி, எதோ மூலிகைத் தண்ணியாம், ரொம்ப மெடிக்கல் பவர் இருக்குன்னு சொல்றார், அதைப் பார்க்கறதுக்குக்காக அமெரிக்காவிலே இருந்து செலவழிச்சிண்டு இங்க வராளாம். அதுதான் உங்ககிட்ட பெர்மிஷன்....." என்று இழுத்தான் பிரஸன்னா.
பத்மநாப ராவ் சிரித்தார்,
"பரவாயில்லை ராவ்ஜி, இதுக்கு கோயிலுக்கு ஒரு லட்சம் நன்கொடை தர்றேங்கிறா, வாங்கிக்கலாமே?" என்றான் பிரஸன்னா சந்தேகத்துடன்.
"போடா ப்ரம்மஹத்தி. பெரியவர், காதுல விழுந்தா நம்ம ரெண்டு பேரையும் தொலைச்சுப்பிடுவார், தொலைச்சு.”
“கோயிலுக்கு எக்ஸ்டரா வருமானம் வந்தா நல்லதுதான். ஆனா, அவர் கேக்க மாட்டார். இங்க வர்ற பக்தாள் காணிக்கை, விசேஷ தரிசன டிக்கெட் காசு, கோயில் விழா கைங்கரியத்துக்கு இந்த ஊர்ல இருக்கிற நாலஞ்சு பெரிய மனுஷா ரெகுலரா தர்ற டொனேஷன் பணம், இது போக, பெருமாள் புண்ணியத்துல கோயில் நிலத்தில இருந்து வர்ற வருமானம்,,,,,..இதே யதேஷ்டம்னு சொல்லிண்டு இருக்கார். அவர் கிட்ட போய் இதெல்லாம் சொல்லி....அந்த டொனேஷன் எல்லாம் வேண்டாம், கிணத்துத் தண்ணி வேணும்னா, எடுத்து ஃப்ரீயா குடுத்துடலாம். வேத்து மதத்துக்காரா கோயிலுக்குள்ள வரவேண்டாம்னுட்டார் பெரியவர்" என்றார் பத்மநாப ராவ்,.
பிரஸன்னாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ப்ராட் கேட்டபடி தண்ணீர் ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டாலே போதும்.
பழைய காலக் கோயில்களை ஒரு தேர்ந்த ஆர்க்கிடெக்ட் பார்வையிலிருந்து பார்ப்பதற்கு ஆசைப்படும் ஒரு பெண்மணி, லூஸி, தன்னோடு வருவதாகவும், அந்தப் பெண்மணிக்கு ஸ்ரீ சக்ரநாராயணன் கோயிலைச் சுற்றிக்காட்ட வேண்டும் என்று பேசிதானே ஐம்பதாயிரம் ரூபாய் தருவதாகச் சொல்லி, அதில் இருபதாயிரம் அட்வான்ஸும் அனுப்பிவிட்டான் ப்ராட். இப்போது இந்த ராவ் கிழம் இப்படி சொதப்புகிறதே என்று எரிச்சலாக வந்தது அவனுக்கு. இப்போது ப்ராடை அழைத்து இந்த விஷயத்தைச் சொல்லவும் முடியாது. சட்.....அலுத்துக்கொண்டான் பிரஸன்னா.
அந்தக் கோயில் குறைந்தது 1000 வருடங்கள் மேலான புராதனக் கோயில். சோழர் காலக் கல்வெட்டுகளை கோயில் வளாகத்தில் பார்த்திருப்பதாக அவன் நண்பன், தொல்பொருள் ஆராய்ச்சியாளன், சந்துரு சொல்லியிருக்கிறான்.
பெரியவர் என்று அனைவராலும் அன்போடும், மரியாதையோடும் அழைக்கப்படும் சேஷாத்ரியின் குடும்பமே வழிவழியாக அந்தக் கோயிலை நிர்வகித்து வருகிறது. அவர்கள் வைணவர்கள், தீவிர பக்தர்கள்.. பிரஸன்னாவுக்குத் தெரிந்த வரையில் அதிக பணத்தாசை இல்லாதவர்கள்.
படிப்பு மண்டையில் ஏறாததால், பிரஸன்னாவுடைய மாமா மூலம்தான் ராவ் அவனுக்குப் பழக்கம். அவர் மூலம் கோயிலுக்குள் ஒரு சிறிய கடை வைத்துக்கொண்டு அதில் அர்ச்சனைப் பொருட்கள், கோயில் பிரஸாதம் போன்றவற்றை விற்கும் வாய்ப்பு கிடைத்தது.
அடிக்கடி வரும் வெளிநாட்டவர் மூலம் ப்ராட் ஒருமுறை அறிமுகமானான். அவன் மூலமாகவே இப்போது இந்த கூடுதல் வருமானம். இதற்கும் ராவ் மூலம் குந்தகம் விளைந்துவிடுமோ என்ற பயமே பிரஸன்னாவிற்கு.
சொன்னது போலவே ஞாயிறு காலை ப்ராட் அவனை அழைத்தபோது, சட்டென்று போட்டு உடைத்துவிட்டான், "கோயில் தண்ணீர் எடுத்துக்கொடுக்க எந்த விதப் பிரச்சினையும் இல்லை. ஆனால், கோயில் நிர்வாகி பெரியவர் சற்றுத் தீவிரமாக வேற்று மதத்தினர் கோயிலுக்குள் வரக்கூடாது என்கிறார். என்ன செய்வது? நீ சொன்னது போல அந்த லூஸி, கோயிலின் உள்ளே வந்து உலவ முடியாது. மன்னித்துக் கொள்" என்று சொல்லி மூச்சு வாங்கினான்.
அதிசயமாக, ப்ராட் அதைப் பெரிது படுத்தவில்லை. "பரவாயில்லை ப்ரஸ், எனக்கு ஒரே ஒரு உதவி. நல்ல வெளிச்சத்தில் கோயிலின் உட்புறங்களை, ஸ்வாமி சந்நிதி உட்பட எல்லாவற்றையும் உன் மொபைலில் தெளிவாகப் படம் எடுத்து அனுப்பு. உனக்கு, எக்ஸ்ட்ராவாக ஒரு இருபத்தையாயிரம் அனுப்புகிறேன்" என்று சொன்ன சில நிமிடங்களில் பணம் அனுப்பிவிட்டதாகவும் உறுதி செய்தான்.
மறுபடியும் ராவ்விடம் இதுபற்றி சொன்னபோது,அவர் சிரித்தார், "உன்னை எனக்கு நன்றாகத் தெரியும் பிரஸன்னா. உன்னுடைய அமெரிக்க நண்பன் ஏதாவது பணஉதவி செய்தால் வாங்கிக்கொள், மறுக்காதே. சனிக்கிழமை உச்சிகாலப் பூஜை முடிந்தபின் படம் எடுத்துக்கொள். அர்ச்சகர் சௌரியிடம் சொல்லி, பெரியவரிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன்" என்றார் கனிவுடன்.
***********************************************
சனிக்கிழமை மதியம் சுளீர் சுளீர் என ஃபிளாஷ் அடித்து, படங்கள் சேகரித்து ப்ராட்டுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பிவிட்டான் பிரஸன்னா.
லூஸி இட்ட வேண்டுகோளின்படி தகவல்கள் சேகரித்து வாட்ஸ்அப் மூலம் அனுப்பிவிட்டான் ஆண்டன் டேவி,.
லூஸி இட்ட வேண்டுகோளின்படி தகவல்கள் சேகரித்து வாட்ஸ்அப் மூலம் அனுப்பிவிட்டான் ஆண்டன் டேவி,.
***********************************************
அந்த இண்டிகோ விமானம் தரையைத் தொட்டதும் மானஸீக சிலுவைக் குறியிட்டுக் கொண்டான் ப்ராட். அருகிலிருந்த லூஸி ஆர்வமாக பாட்டு கேட்டுக்கொண்டிருந்தாள்.
"ப்ரஸ், திருச்சி வந்துவிட்டோம். இங்கிருந்து கிளம்பும்போது மறுபடியும் தகவல் தருகிறேன்" என்று சொல்லி, பிரஸன்னாவின் பதிலைக் கேட்டுவிட்டு தலையாட்டினான் ப்ராட்.
அன்று மாலை மாயவரத்தை அடைந்தபோது, சொன்ன இடத்தில் நின்றிருந்தான் பிரஸன்னா. காரில் ஏறிக்கொண்டவன், "அந்தக் கிணற்றுத் தண்ணீர் ரெடி ப்ராட். எப்போது வேண்டும் என்று சொல். அந்த வாட்டர் கேனை உன் கார் டிக்கியில் வைத்துவிடுகிறேன்" என்றான்.
அவனைப் பார்த்து சிரித்த ப்ராட், "லேட்டர் ப்ரஸ், மச் லேட்டர்" என்றான். இருவரையும் அவர்கள் தூங்கப்போகும் ஜே பி நிவாஸ் கெஸ்ட் ஹௌஸில் இறக்கிவிட்டுவிட்டு சென்றான் பிரஸன்னா.
"ப்ரஸ், திருச்சி வந்துவிட்டோம். இங்கிருந்து கிளம்பும்போது மறுபடியும் தகவல் தருகிறேன்" என்று சொல்லி, பிரஸன்னாவின் பதிலைக் கேட்டுவிட்டு தலையாட்டினான் ப்ராட்.
அன்று மாலை மாயவரத்தை அடைந்தபோது, சொன்ன இடத்தில் நின்றிருந்தான் பிரஸன்னா. காரில் ஏறிக்கொண்டவன், "அந்தக் கிணற்றுத் தண்ணீர் ரெடி ப்ராட். எப்போது வேண்டும் என்று சொல். அந்த வாட்டர் கேனை உன் கார் டிக்கியில் வைத்துவிடுகிறேன்" என்றான்.
அவனைப் பார்த்து சிரித்த ப்ராட், "லேட்டர் ப்ரஸ், மச் லேட்டர்" என்றான். இருவரையும் அவர்கள் தூங்கப்போகும் ஜே பி நிவாஸ் கெஸ்ட் ஹௌஸில் இறக்கிவிட்டுவிட்டு சென்றான் பிரஸன்னா.
***********************************************
சிறிது நேரத்தில் அறைக்குள் நுழைந்த லூஸியைப் பார்த்து சிரித்த ப்ராட், "எல்லாமே நம் திட்டப்படி போகிறது லூஸி. கோமல் இங்கிருந்து வெகு அருகில் இருக்கிறது. நாளை மதியம் பூஜைக்குப் பிறகு கோயிலைப் பூட்டிவிட்டால், பிறகு மாலை ஐந்து மணிக்குத்தான் திறப்பார்கள். நாம் இரண்டிலிருந்து - இரண்டரைக்குள் கோயிலுக்குள் சென்று, பிரம்மதேவனின் அந்த பிரஸித்தி பெற்ற அந்த மூக்குத்தியை எடுத்து விடலாம். கோயிலுக்குள் நம்மைப் போன்ற வேற்று மதத்தினர் வரக்கூடாது என்ற கோயில் நிர்வாகத்தின் சட்டத்தை மீற அதிகப்படியாக அவனுக்கு முப்பதாயிரம் கொடுத்தவுடன் அந்தப் பிரஸன்னா குதூகலம் ஆகிவிட்டான். இவனைப் போன்றவர்களுக்கு பணம் மட்டுமே துருப்புச் சீட்டு"
பெரிதாக சிரித்த ப்ராடைப் பார்த்துக் கேட்டாள் லூஸி, "அப்போது நமக்கு?"
"குறைந்த பட்சம் ஐந்து கோடி பெண்ணே.....அந்த மூக்குத்தியின் தங்கமோ, அதிலிருக்கும் வைரமோ இன்றைய சந்தையில் அவ்வளவு விலைக்குத் தேறாது. ஆனால், அதன் புராதன மதிப்பு? 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட புகழ்பெற்ற நகை லூஸி, நமக்கென்ன? சர்ச்சாக இருந்தாலும், இது போன்ற கோயிலாக இருந்தாலும் ஒரே வேலைதான். வாங்கிகொள்ளப்போகும் ஜேக்கப் ஒரு பில்லினர்.....அவருக்கு இதெல்லாம் சில்லரைச் செலவு" என்றான் புன்னகையுடன்.
பெரிதாக சிரித்த ப்ராடைப் பார்த்துக் கேட்டாள் லூஸி, "அப்போது நமக்கு?"
"குறைந்த பட்சம் ஐந்து கோடி பெண்ணே.....அந்த மூக்குத்தியின் தங்கமோ, அதிலிருக்கும் வைரமோ இன்றைய சந்தையில் அவ்வளவு விலைக்குத் தேறாது. ஆனால், அதன் புராதன மதிப்பு? 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட புகழ்பெற்ற நகை லூஸி, நமக்கென்ன? சர்ச்சாக இருந்தாலும், இது போன்ற கோயிலாக இருந்தாலும் ஒரே வேலைதான். வாங்கிகொள்ளப்போகும் ஜேக்கப் ஒரு பில்லினர்.....அவருக்கு இதெல்லாம் சில்லரைச் செலவு" என்றான் புன்னகையுடன்.
**********************************************
வீட்டில் சாப்பிட அமர்ந்த பிரஸன்னாவின் மனதில் ராவுடன் உரையாடியது ஒலித்தது: "ஒரு அரக்கனிடம் தான் இழந்த நான்கு வேதங்களை மீண்டும் பெற வேண்டி பிரம்மன் தன் மனைவிகளான சரஸ்வதி, காயத்ரி தேவிகளுடன் யாகம் செய்கிறார். ஹோமத்தில் அக்னி சரியாக வளர்ந்து எரியவில்லை.
ஏதோ தெய்வக் குற்றம் ஆகி இருக்கிறது என்று பிரம்மன் எண்ணும் போது. சரஸ்வதி தேவி அதைக் கவனித்துவிட்டு, ப்ரம்மனுக்கு மூன்று தலைகள்தான் இருக்கின்றன. ஆனால் காயத்ரி தேவிக்கு ஐந்து தலைகள் இருப்பதால்தான் குற்றம் என்பதைக் கண்டுபிடிக்கிறார்.
இதைக் கவனிக்கும் காயத்ரி தேவி தன்னுடைய ஐந்தாவது தலையை ஆன்மீக சக்தியால் பிரம்மனின் பின்புறத் தலையோடு ஐக்கியம் செய்கிறார். பெண் முகமும் ஆண் முகமும் எண்ணிக்கையில் சமமாக ஒன்றானது. ஆனால் காயத்ரி தேவி மூக்குத்தி மட்டும் அதே ஜொலிப்போடு பிரம்மதேவர் முகத்தில் இருந்தது. இன்றளவும் இருக்கிறது.
பிரம்மன் விக்ரஹத்தின் பின்பக்கச் சுவரின் மேல் ஒரு நிலைக் கண்ணாடி வைத்து அதற்குத் திரை போட்டு . சில விசேஷ நாட்களில் மட்டும் திறப்பார்கள். அப்போது பிரம்மனின் நான்காவது முகத்திலுள்ள அந்த விசேஷ மூக்குத்தியைத் தரிசிக்கலாம். பொதுவா சக்ரத்தாழ்வார் சந்நிதியில் சக்ரத்தாழ்வாரின் பின்னால் உள்ள நரசிம்ஹரைக் கண்ணாடி வழியா தரிசனம் செய்வோமே அதுபோல" .
"அது சரி, இவ்ளோ வருஷமா கோயிலுக்கு வர்ற, தினமும் தரிசனம் பண்ற, உனக்கு நம்ம கோயில் பிரம்மதேவரோட மூக்குத்திப் பத்தி தெரியாதா?" என்று கேட்டார் ராவ்.
"இல்ல ராவ்ஜி, நம்ம அர்ச்சகர் சுந்தர் சொல்லியிருக்கார். கூட்டத்தோடு கேக்கும்போது அவ்வளவா கவனிச்சதில்ல, அதுதான்......." பிரஸன்னா முடிக்கும் முன் இடைமறித்தார் ராவ்,
"சரி, சரி, ஆனா, இதெல்லாம் நமக்கு ரொம்பப் பெருமை தர்ற விஷயங்கள், தெரிஞ்சிக்கணும்" என்று சொல்லி சிரித்தார்.
அன்று காலை காரி வரும்போது ப்ராட் தாராளமாக முப்பதாயிரம் ரூபாயை இரண்டாயிரம் நோட்டுகளாகக் கொடுத்து, "மாட்டேன் என்று மட்டும் சொல்லாதே ப்ரஸ். இந்த லூஸி என் தலையைத் தின்கிறாள். ஏதோ மூக்குத்தியாம். ப்ரம்மாவாம். பார்த்தே ஆக வேண்டும் என்கிறாள். நாளைக் காலையில் சுத்தமாகக் குளித்துவிட்டு என்வி எதுவும் சாப்பிடாமல், காலில் சாக்ஸ் கூட இல்லாமல் செருப்புடன் கோயிலுக்கு வருகிறோம். நாமிருவரும் அந்தக் கிணற்றுத் தண்ணீரைப் பார்க்கும்போது, அவள் அந்த மூக்குத்தியைப் பார்க்கட்டும். ஏதோ திரையிட்டு மூடியிருக்குமாமே, அதை எடுத்து விட்டு அவள் இரண்டே நிமிடம் பார்க்கட்டும். அப்புறம் போய்விடலாம்" என்றான் மிக மிருதுவான குரலில்.
பிரஸன்னவைப் பொறுத்த வரையில் அவனுக்கு மத பேதம், கிறிஸ்து. கிருஷ்ணர் என்றெல்லாம் கிடையாது. ஆனால், திரையைத் திறந்து??...…..
முப்பதாயிரம் கையில் மொடமொடப்பான 2000 நாடுகளாக வந்தவுடன் அவனுடைய சந்தேகங்கள் விலகிவிட்டன.
தூங்கும்போது, ப்ராட் ஐம்பதாயிரத்தில் ஆரம்பித்து இதுவரை ஒரு லட்சம் தந்துவிட்டதை எண்ணி சிரித்துக்கொண்டான்.
**********************************
மறுநாள் காலையில் ராவ் அவனிடம், "தோ பாரு பிரஸன்னா, உன்னை நம்பி சாவியைக் கொடுத்துட்டு போறேன். அந்தத் தண்ணியை மட்டும் எடுத்து உன் அமெரிக்க நண்பனிடம் கொடுத்து விடு. வெளியே செக்யூரிட்டி சேதுராமன் இருப்பான், ஆனா, அவன் டமாரச் செவிடு. மத்தியானம் குறட்டை விட்டுத் தூங்குவான், அதுனால நீதான் பாத்துக்கணும். பெரியவர் கிட்ட மட்டுமில்ல, யார்கிட்டயும் நான் சொல்லப்போறதில்ல, ஜாக்கிரதை. பெரியவருக்குத் தெரிந்தால் என் தோலை உரித்துவிடுவார்" என்றார் சீரியஸான குரலில்.
"ராவ்ஜி, உங்களுக்கு எந்தவித பயமும் வேண்டாம். நான் நல்லபடியா பாத்துக்கறேன்" என்றவனைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்துவிட்டுச் சென்றார் பத்மநாப ராவ்.
"ராவ்ஜி, உங்களுக்கு எந்தவித பயமும் வேண்டாம். நான் நல்லபடியா பாத்துக்கறேன்" என்றவனைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்துவிட்டுச் சென்றார் பத்மநாப ராவ்.
**********************************
மதியம் இரண்டு மணிக்கு கோயிலின் வலதுபுறம் இருக்கும் கதவைத் திறந்து உள்ளே ப்ராட் மற்றும் லூஸியை அனுமதிக்கும்போது பிரஸன்னா மணியைப் பார்த்தான். 2:05 என்றது அவன் கையிலிருந்த அந்த டைட்டன்.
இருவரும் சொன்னபடியே, செருப்பை வெளியே விட்டுவிட்டு உள்ளே நுழைந்து ஆர்வமாக பார்த்துக் கொண்டு வந்தார்கள். பிரம்மதேவரின் சந்நிதி அருகே லூஸியை விட்டுவிட்டு, "லூஸி, மொத்தம் பத்து நிமிடத்திற்கு மேல் கிடையாது. நானும், நண்பன் பிரஸ்ஸும் தண்ணீர் கேனை எடுத்துவருவதற்குள் உன் தரிசனத்தை முடித்துவிட்டு" ப்ராட் இதைச் சொல்லிவிட்டு லூஸியைப் பார்த்து கண் சிமிட்டியதை பிரஸன்னா கவனிக்கவில்லை.
**************************************
மாலை திருச்சி விமான நிலையம் வந்து சென்னை செல்லும் விமானம் ஏறும்போதுகூட ப்ராடுக்கு படபடப்பு அடங்கவில்லை. சென்னையிலிருந்து அன்றிரவே நியூ யார்க் பயணம். காரில் வரும்போது லூஸி ஒரு கணம் அவள் பர்ஸைத் திறந்து மூக்குத்தியைக் காட்டி, மூடும்போது அதன் அபார ஜ்வலிப்பு ப்ராடின் ரத்த அழுத்தத்தை எகிறச் செய்தது.
**********************************
நியூ யார்க் ஜே.ஃஎப்.கே விமான நிலையத்தில் இறங்கும்போது ப்ராட் மெதுவான குரலில் சொன்னான், "லூஸி, இன்னும் இரண்டு மூன்று நாட்களில் ஜேக்கப் பணத்தை மொத்தமாகக் கொடுத்தவுடன் உனக்குச் சொல்லுகிறேன். நீ, என்ன, இங்கே க்வீன்ஸில் தானே இருக்கிறாய். நாம் சந்திப்போம், பிறகு நான் நியூ ஜெர்ஸி செல்கிறேன்"என்றான்.
**********************************
அன்றிரவு லேட்டாக வீட்டுக்குள் நுழைந்த பிரஸன்னாவைப் பார்த்து அவன் தங்கை காயத்ரி, "எங்கடா இவ்ளோ லேட்டு ? ராவ்ஜி மாமா இரண்டு - மூணு தடவை என் செல்லுல கூப்பிட்டார். உன் நம்பர் ஏன் ஸ்விட்ச் ஆஃப் ன்னு வந்தது?" என்றாள்
"சார்ஜ் பண்ண மறந்துட்டேன் காயு, அதுதான். நான் ராவ்ஜிகிட்ட பேசிக்கிறேன்" என்றான்.
**********************************
சாப்பிடும்போது யோசித்தான், என்னவாக இருக்கும்? ப்ராட் மற்றும் லூஸி இருவரும் திருச்சிக்கு காரிலேறியவுடன், பிரம்மதேவர் சந்நிதியைப் பூட்டப்போனவன் திடுக்கிட்டான். திரை விலகி இருக்க, பிரம்மரின் மூக்குத்திப் பளபளப்பைக் காணவில்லை. ஐயோ, பாவி ஒரு லட்சம் ரூபாய் ஆசைகாட்டி இப்படி செய்துவிட்டானே ? இப்போது என்ன செய்வது? ப்ராடின் அலைபேசி எண்னை பலமுறை முயன்றும் "நாட் ரீச்சபிள்" என்ற செய்தி வந்த போது ஆச்சரியமாக இல்லை பிரஸன்னாவுக்கு.
அந்தப் பரபரப்பிலும் கதவுகளை மூடிக்கொண்டு வெளியே வந்தவன் கோயிலருகே இருந்த பூ விற்கும் வசந்தாவிடம் கேட்டான், "அக்கா, என் தங்கை காயு ஒரு மூக்குத்தி, நல்லா பளபளன்னு கல்லு வச்சது, வேணும்கிறா? எங்க வாங்கறது?" என்றவனைப் பார்த்து புன்னகைத்த வசந்தா, "நல்ல புள்ளை, தங்கச்சிக்கு வாங்கிக் கொடுக்க என்ன அக்கறை! மாயவரம் கடைதெருல சிவசாமி கடைக்குப் போ, நல்ல பொருளா தருவாரு. என் பேரைச் சொல்லு" என்றாள் சிரிப்புடன்.
சிவசாமி காட்டிய மூக்குத்தி சிறிதாக, நல்ல பளபளப்பில், கிட்டத்தட்ட பிரம்மதேவர் மூக்குத்தி போலவே இருந்ததாகப் பட்டது பிரஸன்னாவுக்கு. அவர் சொன்ன 400 ரூபாயை மறுபேச்சு பேசாமல் கொடுத்து வாங்கிக்கொண்டு, வலதுபுற வழியாக வந்து, பிரம்மதேவரின் சந்நிதிக்குள் சென்று அவர் மூக்கில் மாட்டிவிட்டு, கண்ணாடி வழியே பார்த்தபோது பெரிய வித்தியாசம் இருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை.
சாப்பிட்டு முடித்து ராவுக்கு ஃபோன் செய்தபோது, "பிரஸன்னா, அப்பா, இப்போவாவது கூப்டியே, நாளைக்குக் காலைல கோயிலுக்குக் கொஞ்சம் சீக்கிரம் வா, உன்கிட்ட பேசணும், ரொம்ப முக்யம்" என்றார்.
அந்தப் பரபரப்பிலும் கதவுகளை மூடிக்கொண்டு வெளியே வந்தவன் கோயிலருகே இருந்த பூ விற்கும் வசந்தாவிடம் கேட்டான், "அக்கா, என் தங்கை காயு ஒரு மூக்குத்தி, நல்லா பளபளன்னு கல்லு வச்சது, வேணும்கிறா? எங்க வாங்கறது?" என்றவனைப் பார்த்து புன்னகைத்த வசந்தா, "நல்ல புள்ளை, தங்கச்சிக்கு வாங்கிக் கொடுக்க என்ன அக்கறை! மாயவரம் கடைதெருல சிவசாமி கடைக்குப் போ, நல்ல பொருளா தருவாரு. என் பேரைச் சொல்லு" என்றாள் சிரிப்புடன்.
சிவசாமி காட்டிய மூக்குத்தி சிறிதாக, நல்ல பளபளப்பில், கிட்டத்தட்ட பிரம்மதேவர் மூக்குத்தி போலவே இருந்ததாகப் பட்டது பிரஸன்னாவுக்கு. அவர் சொன்ன 400 ரூபாயை மறுபேச்சு பேசாமல் கொடுத்து வாங்கிக்கொண்டு, வலதுபுற வழியாக வந்து, பிரம்மதேவரின் சந்நிதிக்குள் சென்று அவர் மூக்கில் மாட்டிவிட்டு, கண்ணாடி வழியே பார்த்தபோது பெரிய வித்தியாசம் இருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை.
சாப்பிட்டு முடித்து ராவுக்கு ஃபோன் செய்தபோது, "பிரஸன்னா, அப்பா, இப்போவாவது கூப்டியே, நாளைக்குக் காலைல கோயிலுக்குக் கொஞ்சம் சீக்கிரம் வா, உன்கிட்ட பேசணும், ரொம்ப முக்யம்" என்றார்.
*********************************"
“இப்படி சிவப்பாக வீங்கியிருக்கிறது? எங்கே சென்றாய் லூஸி?" டாக்டர் ரோஜர் கேட்டபோது சட்ரென்று நினைவுக்கு வந்தது. கோயிலுக்குள் இருக்குபோது காலில் சுருக்கென்று எதுவோ கடித்ததை உணர்ந்து காலை உதறினாள். இருளில் ஒரு பெரிய சைஸ் எலி ஓடியதைக் கவனிக்க முடிந்தது.
இப்போது நான்கு நாட்கள் கழித்து தாங்க முடியாத ஒரு வலி. கடித்த இடம் சிவப்பாக கன்னிப்போய் வலித்தது.
விவரம் சொன்னாள்.
ரோஜர் சிரித்தார். "ஒரு டெட்டனஸ் ஷாட் கொடுக்கிறேன். உள்ளே சாப்பிட ஆன்டி-பயாட்டிக்ஸ் எழுதித் தருகிறேன். எலி வந்து கடிக்கும் வரை என்ன செய்தாய்? ஏன் காலில் ஷூ இல்லை?"
பதில் சொல்ல முடியாமல் சிரித்து மழுப்பிய லூஸி, வெளியே வந்து காரில் ஏறும்போது டாக்டர் ரோஜர் சொன்னது மனதில் கனமாக ஓடியது.
"உனக்குத் தெரியுமா? லெப்டோஸ்பைரோஸிஸ் (Leptospirosis) வரலாம். இதன் அறிகுறிகள் உன்னிடம் இருக்கின்றன. காய்ச்சல், சிவப்பாக வீக்கம், வாந்தி, வயிற்றில் வலி.....இந்த லெப்டோஸ்பைரோஸிஸ் கிட்டத்தட்ட 10% அளவுக்குத்தான் ஃபேட்டல் (fatal), ஆனால், கேன்ஸர், ஹெச்ஐவி போன்றவை இருப்போருக்கு ஆபத்தின் அளவு மிக அதிகம், நீ சமீபத்தில் கேன்ஸர் வந்து மீண்டிருக்கிறாய், ஜாக்கிரதை, மருந்தை உட்கொள். ஒரு வாரம் கழித்துப் பார்க்கலாம்.
" ************************************
காரில் சென்று கொண்டிருந்த ப்ராட்க்கு ஒரு நிமிடம் அலைபேசியில் கோபமாக ஜேக்கப் கத்தியதற்கு காரணம் புரிந்து கொள்ள முடியவில்லை..
“என்னையே ஏமாற்றுகிறாயா? முழுவதும் உன்னை நம்பினேன், நீ கேட்ட அட்வான்ஸ் கொடுத்துள்ளேன், உன்னை சும்மா விடப்போவதில்லை. டூப்ளிகேட் மூக்குத்தியைக் கொடுத்து ஏமாற்றுகிறாயா?" தொடர்ந்து ஜேக்கப் அலறியதைக் கேட்க முடியாமல் அலைபேசியைத் துண்டித்து…......."டூப்ளிகேட்டா?",
மகாவேகத்தில் லைன் மாறிய அந்த ராட்சத லாரியைச் சற்று தாமதமாகக் கவனித்து, மூளைக்குச் செய்தி பதிவாகி, கால்கள் பிரேக்கை மிதிக்க, ஹைட்ராலிக் கோபம் டயர்களுக்குப் பாய்ந்து பிடிக்க, டயர்கள் தேய...... லேட்……...
ப்ராட்டின் கார், கிட்டத்தட்ட 70 மைல் (அமெரிக்காவில் இன்னும் மைல்தான்) வேகத்தில் வந்த அந்த ராட்சத லாரியின் மோதலில் அப்பளமாகி, கார் ஹார்ன் தொடர்ந்து அடிக்க, எங்கும் ரத்த வெள்ளம்.
“என்னையே ஏமாற்றுகிறாயா? முழுவதும் உன்னை நம்பினேன், நீ கேட்ட அட்வான்ஸ் கொடுத்துள்ளேன், உன்னை சும்மா விடப்போவதில்லை. டூப்ளிகேட் மூக்குத்தியைக் கொடுத்து ஏமாற்றுகிறாயா?" தொடர்ந்து ஜேக்கப் அலறியதைக் கேட்க முடியாமல் அலைபேசியைத் துண்டித்து…......."டூப்ளிகேட்டா?",
மகாவேகத்தில் லைன் மாறிய அந்த ராட்சத லாரியைச் சற்று தாமதமாகக் கவனித்து, மூளைக்குச் செய்தி பதிவாகி, கால்கள் பிரேக்கை மிதிக்க, ஹைட்ராலிக் கோபம் டயர்களுக்குப் பாய்ந்து பிடிக்க, டயர்கள் தேய...... லேட்……...
ப்ராட்டின் கார், கிட்டத்தட்ட 70 மைல் (அமெரிக்காவில் இன்னும் மைல்தான்) வேகத்தில் வந்த அந்த ராட்சத லாரியின் மோதலில் அப்பளமாகி, கார் ஹார்ன் தொடர்ந்து அடிக்க, எங்கும் ரத்த வெள்ளம்.
.********************************
ஒரு கணம் ராவ் சொன்னதை பிரஸன்னாவால் நம்ப முடியவில்லை, "ராவ்ஜி, நான் வந்து..." என்று தடுமாறினான்.
"தெரியும்டா, நீ என் பையன் மாதிரி. ஒரு பத்து நாளைக்கு முன்னால காயத்ரியை மார்க்கட்ல பாத்தபோது சொன்னா, உன்கிட்ட பணம் நிறைய புழங்கறதுன்னு....அப்புறம், அந்த அமெரிக்க சகவாசம், அப்புறம் திடீர்னு சாவி வேணும்னுட்டு நீ கேட்டது....சாதாரணமா இருந்தா கோயில்ல எல்லாரும் இருக்கறச்சயே அந்த தண்ணீர் கேனை எடுத்து அவனுக்குக் கொடுக்கலாமே? அது ஏன் கோயில் நடை சாத்தியிருக்கிற நேரத்துல...? உன்கிட்ட சாவிய கொடுக்கிறது முத நா ராத்திரியே, மாயவரம் பஜார்ல நம்ம சிவசாமி கடைல கிட்டத்தட்ட அதே மாதிரி மூக்குத்தி விக்கிறான், அதுல ஒண்ணு வாங்கி ஸ்வாமி மூக்குல மாத்திட்டு, அசலை எடுத்து கஜானா ரூம்ல மத்த நகைங்களோட வச்சுப் பூட்டிட்டேன்.....நல்ல வேளை...வில்லங்கமா ஒண்ணும் நடக்கலை.....அந்த அமெரிக்காகாரன் குடுத்த காசுல உன் தங்கை காயத்ரிக்கு உருப்படியா ஏதாவது வாங்கிக்குடு."
பிரஸன்னா எதுவும் பேசாமல் எதிரே சந்நிதியில் கம்பீரமாக நின்றிருந்த ஸ்ரீ சக்ர நாராயணனைப் பார்க்க, அவர் மௌனமாகப் புன்னகைத்துக்கொண்டிருந்தார்.
===================================================
பி.கு:
கும்பகோணத்தில் ஸ்ரீ வேதநாராயணன் கோயிலுள்ள பிரம்மதேவர் மூக்குத்தி மிகப் பிரசித்தி பெற்றது. அதன் அடிப்படையில் எழுதிய ஸ்ரீ சக்ர நாராயணன் கோயில் என் கற்பனை என்றாலும், கோயில் பற்றிய மற்ற விவரங்கள் ஸ்ரீ வேதநாராயணன் கோயிலைச் சேர்ந்தவை.
கும்பகோணத்தில் ஸ்ரீ வேதநாராயணன் கோயிலுள்ள பிரம்மதேவர் மூக்குத்தி மிகப் பிரசித்தி பெற்றது. அதன் அடிப்படையில் எழுதிய ஸ்ரீ சக்ர நாராயணன் கோயில் என் கற்பனை என்றாலும், கோயில் பற்றிய மற்ற விவரங்கள் ஸ்ரீ வேதநாராயணன் கோயிலைச் சேர்ந்தவை.