Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL மந்தகாச மந்தாரகையே - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
665
Reaction score
825
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

anuchandran

New member
Messages
17
Reaction score
18
Points
3
தாரகை 1

மாயைகள் புதிதல்ல

மாயாஜாலங்களும் புதிரல்ல

உன் முன் நிற்கும்

அந்த நிமிடங்களே

எனக்கு இவையனைத்தையும்

புலப்படாத

மர்மங்களானது…

இரவு ஒன்பது மணியளவில் அவ்விடத்தில் ஆள் நடமாட்டம் முற்றாய் அடங்கியிருக்க சூழ்ந்திருந்த இருளின் பரவலை மட்டுப்படுத்திருந்திருந்தது மின்கம்ப விளக்குகள். இரவின் பனித்தூறலும் அவ்விடத்திற்கே பிரத்யேகமான சீதோஷண காலநிலையும் குளிரின் வீரியத்தை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்தபடியிருக்க அதையெல்லாம் பொருட்படுத்தாது அங்கிருந்த நிமிடங்களை அனுபவித்துக்கொண்டிருந்தது ஐவரை கொண்ட அந்த நால்வர் குழு.

விறகுகளை கொத்தாய் அடுக்கி அதில் தீமூட்டி அதன் செந்தணல் உமிழ்ந்த வெப்பத்தில் குளிர்காய்ந்தபடியே கதை பேசிக்கொண்டிருந்தனர் அந்த நால்வரும்.

“டேய் ஆகாஷ் எப்படிடா எங்க போனாலும் உன்னை தேடி வந்தே எல்லாரும் கலாய்க்கிறாங்க?” என்று பிரவீன் தன் கேலியை ஆரம்பிக்க ரக்ஷிதாவோ

“ இன்னைக்கு யாருகிட்ட மொக்க வாங்குனான்?” என்று கேட்க

“அது ரச்சு…” என்று தொடங்கிய பிரவீன் ஆகாஷை குறுகுறுவென பார்த்தபடியே ஏதோ கூறவர அவன் திட்டத்தை புரிந்து கொண்ட ஆகாஷ் பாய்ந்து வந்து பிரவீனின் வாயை மூடினான்.

பிரவீனோ தன் வாயினை அரணிட்டிருந்த ஆகாஷின் கையை கடித்திட அவனோ கையை உதறியபடியே வலியில் அலறியபடி பிரவீனை திட்டினான்.

“மனிஷனாடா நீ… இப்படி கடிக்கிற?”

“நீ ஏன்டா என் வாயை மூடுன?”

“அது நீ ரச்சுகிட்;ட அந்த அட்டுபிகர் என்னை கலாய்ச்சதை சொல்லிடுவனு தான்.” என்றவனுக்கு அப்போது தான் தன் வாயால் உளறியது புரிந்தது.
மானசீகமாய் தலையில் அடித்தபடியே ஈயேன்று பல்லை காட்டியபடியே ரக்ஷிதாவை பார்த்தான் ஆகாஷ். அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தபடியிருக்க பிரவீனோ சத்தமாக உருண்டுபிரண்டு சிரித்தான்.

பிரவீனின் செய்கையை கண்டு ஆகாஷிற்கு அவனை ஏறிமிதிக்க தோன்றிய போதிலும் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்ததால் அவனை முறைக்கமட்டுமே முடிந்தது அவனால்.

ஆகாஷ் எதிர்பார்த்தது போல் அவன் காதலியும் தோழியுமான ரக்ஷிதா பல்லை கடித்தபடியே பிரவீனிடம்
“என்ன நடந்தது பிரவீன்?”

“ அது எப்பவும் போல உன்னை முன்னுக்கு போகச்சொல்லிட்டு பின்னாடி வந்த அத்தனை பொண்ணுங்களையும் வரிசையாக ஜொள்ளு விட்டுட்டே வந்தான். அதுல ஒரு பொண்ணு இவனை ரொம்ப பயங்கரமா கலாய்ச்சிட்டு கடைசில கைலாசா போய் ட்ரெயினிங் எடுத்துட்டு வானு ப்ரீ அட்வைசும் கொடுத்துட்டு போனா ரச்சு.” என்று சின்ன விஷயத்தை பெரிதாய் கூறி ரக்ஷிதாவின் கோபத்திற்கு பிரவீன் தூபம் போட அவள் கோபத்தில் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள்.

நடப்பதை சுவாரசியமாய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பவித்ரா ரக்ஷிதாவை சமாதானப்படுத்த முயல அவளோ நின்று கேட்டிடவில்லை. ஆகாஷ் பிரவீனை திட்டியபடியே ரக்ஷிதாவை அழைத்துக்கொண்டே அவள் பின்னாடியே ஓடினான்.

அவர்கள் இருவரும் சென்றதும் பவித்ரா பிரவீனிடம்
“ஏன்டா இப்படி?”

“நமக்கு டைம் பாஸாக வேணாமா பவி?”

“அதுக்குனு இப்படியா கொளுத்தி போடுவ?பாவம்டா அவன்.”

“நீ நினைக்கிற அளவுக்கு எதுவும் நடக்காது. இந்நேரம் அவன் ரச்சு கால்ல விழுந்து சரண்டராகியிருப்பான்.”

“அது என்னமோ உண்மை தான். இந்த நவீன் எங்க போயிட்டான்?ஆளையே காணோம்.” என்று நெடுநேரமாய் காணாமல் போயிருந்த அந்த ஐவர் கூட்டணியின் ஐந்தாவது நபரான நவநீதனை பவித்ரா தேட
கால்களை முன்னால் நீட்டி கைகளை பின்னுக்கு முட்டுக்கொடுத்தபடி ஒய்யாரமாய் அமர்ந்த ஆகாஷ்

“அவன் தான் ஒன்பது மணியானாலே காணாமல் போயிடுறானே.”

“என்னடா சொல்லுற?”

“ஆமா பவி. இரண்டு நாளா அந்த லேக்குக்கு பக்கத்துல இருக்க மரத்தை பார்க்க போறேன்னு கிளம்பி போயிடுறான். இரண்டு நாளாக ஏதோ வேண்டுதல் போல அதையே சுத்திவந்துட்டு இருக்கான்.”

“இவன் எப்ப இருந்துடா மண்ணை நோண்டுறதை விட்டுட்டு மரத்தை சுத்த ஆரம்பிச்சான்?”

“அதான் சொன்னேனே இரண்டு நாளானு. ஏதோ கேர்ள ;ப்ரெண்டை பார்க்க போறமாதிரி நைட்டு ஒன்பது மணிக்கு கிளம்பிபோயிட்டு நடுச்சாமம் 12 மணிக்கு திரும்பி வரான். எனக்கென்னவோ ஏதோ பேயை கரெக்ட் பண்ணிட்டான்னு தோனுது.” என்று கூற தலையில் அடித்துக்கொண்டாள் பவித்ரா.

“எப்படிடா உனக்கு மட்டும் இப்படியான சந்தேகமெல்லாம் வருது?”

“ஒரு சிங்கிளோட பிரச்சினை இன்னொரு சிங்கிளுக்கு தான் புரியும். அதனால நான் சொன்ன மாதிரி தான் நடந்திருக்கும்.” என்றவனை என்ன செய்வதென்று தெரியாது பார்த்துக்கொண்டிருந்தாள் பவித்ரா.
இவர்களது உரையாடலின் காரணகர்த்தாவான நவநீதனோ அந்த மரத்தடியில் அமர்ந்து யாரையோ எதிர்பார்த்தபடியிருந்தான்.

இருளின் ஆக்கிரமிப்பை முழுநிலவின் ஒளி தடைசெய்திருக்க உடுக்களும் அதற்கு வலு சேர்க்கும் வகையில் இருளின் படையெடுப்பை தன் சிறு ஒளியினால் தடுத்தபடியிருந்தது. வானில் இவ்வாறானதொரு யுத்தம் நடந்தபடியிருக்க மண்ணிலோ அதற்கு நேரெதாய் சுற்றம் முழுதும் மயான அமைதியால் தத்தெடுக்கப்பட்டிருந்தது.

ஏரியின் நீரோட்டமும் பச்சைவண்ண மரங்களின் அசைவும் சூழல் அடங்கியதும் பூத்துக்குலுங்கி மணம் பரப்பும் புஷ்பங்களின் நறுமணமும் மட்டுமே அவ்விடத்தில் உயிர்ப்புடன் இருந்தது. ஆனால் இவை எதையும் உணரும் நிலையிலோ அனுபவிக்கும் நிலையிலோ நவநீதன் இல்லை. அவன் எண்ணம் முழுதும் இரண்டு நாட்களாய் அவன் எண்ணங்களில் குடிகொண்டு அவனை ஆட்டிப்படைக்கும் அந்த மஞ்சளாடை அழகியிடமே ஸ்தம்பித்து நின்றது. இத்தனை நாட்களில் எந்த பெண்ணும் அவனை இத்தனை தூரம் இம்சித்ததில்லை. அவன் அவளை பார்த்தது இரண்டு நாட்கள் மட்டுமே. அதுவும் சில விநாடிகள் மட்டுமே. எதை கண்டு அவள் மீது இத்தனை பித்தானான் என்று அவனுக்கு புரியவில்லை. ஆனால் இது வெறும் ஈர்ப்பில்லையென்று மட்டும் அவனுக்கு நன்றாய் புரிந்தது. நேற்று அந்த மஞ்சளாடைப்பெண் ஏதோவொரு செடியை ஏக்கமாக பார்த்திருப்பதை கண்டவன் அந்த பெண் அங்கிருந்து சென்றதும் அது என்ன செடியென்று ஆராய்ந்து கண்டுகொண்டான்.

நவநீதனின் தாய் காத்யாயினியும் தந்தை அமரேந்திரன் இருவரும் தாவரவியல் நிபுணர்கள். பல இடங்களுக்கு சென்று பல அறியவகை தாவர இனங்களை கண்டறிந்து அதற்காக பல விருந்துகளும் பட்டங்களும் பெற்றுக்கொண்ட புத்திஜீவிகள். அவர்கள் மூலம் நவநீதனுக்கும் தாவரங்கள் பற்றி நல்ல புலமை உண்டு. என்ன தான் புலமை இருந்தபோதிலும் அவனுக்கு அதில் நாட்டமிருக்கவில்லை. அவன் மூளையோ வரலாற்றின் பழமையினை அறிவதில் ஆவலைக்காண்பிக்க அவன் மனமும் அகழ்வாராய்ச்சி நிபுணத்துவத்திற்கு பலத்த ஆதரவு வழங்கிட அத்துறையிலேயே தன் பயணத்தை தொடர்ந்தான். இன்றுவரை அவன் பயணம் அவன் எதிர்பார்த்தது போல் பல சுவாரஸ்யமான அனுபவங்களை அள்ளி வழங்கியிருக்க இன்றோ அதற்கு நேர்மாறான ஒரு சூழ்நிலையில் சிக்கியிருந்தான் நவநீதன்.

ஆண்டு முழுவதும் அகழ்வாரய்ச்சி கண்டுபிடிப்புகள் என்று இருப்பவன்
வருடத்திற்கு ஒரு முறை மூன்று வாரங்கள் விடுமுறையில் தன் பள்ளி நட்புக்களுடன் சுற்றுலா சென்றுவிடுவான். இப்போதும் மூன்று வாரவிடுமுறையிலேயே நிலையூருக்கு தன் நட்புக்களுடன் வந்திருந்தான். இயற்கையின் மொத்த அழகையும் வரமாய் பெற்றிருப்பதாய் அவ்வூரை அவனது பெற்றோர் அடையாளப்படுத்த தன் படையை கிளப்பிக்கொண்டு அங்கு வந்திருந்தான் நவநீதன்.

விடுமுறையை கொண்டாட வந்தவனுக்கு விடுகதையானது அந்த மஞ்சளாடை அழகியின் வருகை. முதல்முறை அவளை பார்த்தபோது இந்தநேரத்தில் இந்த பெண் இங்கென்ன செய்கிறாள் என்ற கேள்வியே அவன் மனதில் எழுந்தது.

அவளை கவனித்தபடியே அவளருகே சென்றபோது அவளது ஏக்கம் தோய்ந்த முகமும் ஏமாற்றத்தை தாங்கிய கண்களுமே அவன் கண்களில் பட்டது. அவை இரண்டும் அந்த நிலவின் பிரகாசத்தில் அத்தனை கவர்ச்சியாகவும் ரசிக்கும் விதமாகவும் இருந்தது. அவளது வாட்டமே நவநீதனை சிந்தை குலையச்செய்துவிட அவளிடம் ஏதேனும் உதவி வேண்டுமா என்று விசாரிக்க வந்தவனின் கால்கள் அசைய மறுத்து அங்கேயே வேரோடிநின்றுவிட்டது. புதுமணப்பெண்ணின் தயக்கத்தை போல் அவளிடம் பேச மறந்து தயங்கி நின்றதை நினைக்கையில் நவநீதனுக்கே சற்று ஆச்சரியமாக தான் இருந்தது.

இந்த தயக்கத்திற்கான காரணத்தை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவன் தயக்கம் புதிதாயிருக்க அதைபற்றி என்ன முடிவெடுப்பதென்று தெரியாது அங்கிருந்து சென்றுவிட்டான். ஆனால் அவள் நினைவுகள் அவனை விட்டு விலகியபாடில்லை. பார்பதனைத்திலுமே அவள் முகம் தான் தெரிந்தது. அவன் எண்ணம் முழுதும் அவள் நிறைந்திருக்க மறுநாள் இரவு அவள் நிச்சயம் அவ்விடத்திற்கு வருவாளென்ற நம்பிக்கையுடன் அந்த மரத்தடியில் மறைவாக அவளுக்காக காத்திருந்தான்.

அவன் நம்பிக்கையை பொய்யாக்காமல் அன்றும் அந்த அழகி அங்கு வந்தாள். இன்று அவள் மென்சிவப்பாடையில் வந்திருந்தாள். அங்கு வந்தவள் முதல்நாள் போல் அந்த செடியையே ஏக்கமாக பார்த்துவிட்டு அருகிலிருந்த மரத்தின் பொந்தினுளிருந்த மரத்தாலான ஒரு வயலினை எடுத்து அதை மீட்டத்தொடங்கினாள்.

இவையனைத்தையும் பார்த்திருந்தபோது நவநீதனுக்கு ரவிவர்மனின் ஓவியங்கள் நினைவிற்கு வந்தது. பெண்களுக்கே உரித்தான சில நளினமான உணர்வுகளை ரவிவர்மனின் ஓவியங்கள் எப்போதுமே வெளிப்படுத்த தவறியதில்லை. பெண்களுக்கே உரித்தான குணங்களான அச்சம்,மடம்,நாணம்,பயிர்ப்பு ஆகிய குணங்கள் வெவ்வெறு சந்தர்ப்பங்களில் வெளிப்படும் நளினத்தை அவரது ஓவியங்கள் வர்ணங்களின் துணையோடு வர்ணித்திடும். இன்று இந்த மஞ்சளாடைப்பெண்ணை பார்த்தபோது அவனுக்கு ரவிவர்மனின் ஓவியங்கள் இவளளவு உணர்வுகளை பிரதிபலிக்கவில்லையென்றே தோன்றியது.

இருள் சூழ்ந்திருந்த ஆகாயத்திற்கு வெளிச்சத்தினை அள்ளிக்கொடுக்கும்
நிலவினை போல் இராப்பட்சிகளின் இரைச்சலாலும் இலைச்சருகுகளின் சலசலப்பினாலும் கனத்திருந்த அந்த சூழலிற்கு கவர்ச்சியை வழங்கியிருந்தது அவளது இருப்பு. அதிலும் அவள் அந்த மரத்தாலான வயலினை மீட்டியபோது அதிலுண்டான இசை நம்பவே முடியாத அளவிற்கு அத்தனை இனிமையாயிருந்தது. மரத்தாலான வயலினிலிருந்து அத்தனை இனிமையான ஒலி வருமென்று அவன் இதுவரை கேள்விபட்டதில்லை. ஆனால் இன்று நேரில் கண்ட பிறகு அவனால் நம்பாமல் இருக்கமுடியவில்லை.

அந்த இரவின் தனிமைக்கு அவளது தரிசனமும் அவள் மீட்டிய வயலினின் ஒலியும் இதமாயிருந்தது. இதையெல்லாம் ரசித்தபடியிருந்தவனுக்கு அவளருகே செல்லும் எண்ணம் மறந்துபோனது. இயற்கையின் மாயையும் அவள் இசைத்த இசையின் மாயையும் அவனை உலகம் மறந்திடச்செய்தது. கண்விழித்திருந்தபோதிலும் அவன் மூளையில் பல காட்சிகள் ஓடியது. அந்த காட்சிகள் மனதில் பல எண்ணவோட்டங்களுக்கு அஸ்திவாரமிட அவன் ஆழ்மனம் வேறொரு உலகத்தில் சஞ்சரிப்பதை உணர்ந்த மூளை அதற்கு தடையிடுவதற்கான முயற்சியிலிருக்க அந்த வயலின் இசையோ அதற்கெல்லாம் இடம் கொடுக்கவில்லை. இவ்வாறு பல விநாடிகள் கடந்திருக்க நடுச்சாமம் ஒருமணியளவிலேயே தன்னிலையடைந்தான் நவநீதன்.

தன்னிலையடைந்தவன் அந்த மஞ்சளாடை பெண்ணைத்தேட அவள் அங்கிருப்பதற்கான தடயமே இருக்கவில்லை. சுற்றும் முற்றும் தேடியவனுக்கு குழப்பமே மிஞ்சிட அப்போது அவன் கண்ணில் பட்டது அரும்புவிடத்தொடங்கியிருந்த அந்த செடி. அதை பார்த்தவனுக்கு அப்போதுதான் அந்த பெண் இந்த செடியை ஏக்கமாய் பார்த்தது நினைவில் வந்தது. அதை உற்று கவனித்தவனுக்கு அது எந்தவகை செடியென்று தெரியவில்லை. உடனடியாக அதனை தன் மொபைலில் புகைப்படமாக பதிந்து கொண்;டவன் அதன் இலையை பறித்து பத்திரப்படுத்திக்கொண்டு அந்த பெண் இருக்கிறாளா என்று நோட்டம் விட்டபடியே அங்கிருந்து
சென்றான்.

இரவோடிரவாக அது எந்தவகை செடியென்று கண்டு கொண்டவன் அதைபற்றி தெரிந்துகொண்டான். இன்று எப்படியேனும் அந்த பெண்ணிடம் பேசிட வேண்டுமென்று காத்திருந்தவனது கண்களுக்கு விருந்தானது அவளது வருகை. இன்றும் நேற்று போல் அந்த பெண் அந்த செடியை ஏக்கமாய் பார்த்திருக்க அவளருகே வந்தான் நவநீதன்.

“இன்னைக்கு இந்த நிஷாகாந்தி பூ கண்டிப்பா பூக்கும்.” என்;றவனது வார்த்தைகளை கேட்டு திரும்பிப்பார்த்தாள் அந்த மஞ்சளாடைப்பெண்.
அவனை அந்த பெண் ஒருவித அச்சத்துடன் பார்க்க அதை புரிந்து கொண்ட நவநீதன்

“பயப்படாதீங்க. நீங்க இரண்டு நாளாக இங்க வருவதையும் அந்த செடியை ஏக்கமாக பார்க்கிறதையும் பார்த்தேன். உங்களுக்காக இது என்ன வகையான செடினு தேடும் போது தான் இது நிஷாகாந்திப்பூனு தெரிஞ்சிக்கிட்டேன். ரொம்ப நன்றிங்க. உங்களால தான் ரொம்ப அரிதாக பூக்கின்ற இந்த நிஷாகாந்திப்பூ மலர்வதை பார்க்கிற சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருக்கு.” என்று நவநீதன் பேசிக்கொண்டே போக அந்த பெண்ணின் முகத்தில் எந்தவித மாற்றமும் இல்லை.

நிஷாகாந்தி பூ ஆங்கிலத்தில் நைட் குயின் (Night Queen) என்றழைக்கப்படும் கள்ளி இனத்தை சேர்ந்த தாவர வகையாகும். இது இரவில் மிக அரிதாக பூக்கும் தாவர வகையை சேர்ந்தது. அதாவது வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறைமட்டுமே பூக்கக்கூடியது. இதன் சிறப்பே இரவு ஒன்பது மணிக்கு மேல் மலர்ந்து விடியற்காலை நான்கு மணிக்கு முதல் உதிர்ந்துவிடும். அதன் இந்த இயல்பினால் பலருக்கு இப்படியொரு பூ இருப்பது தெரியாது. அதனாலேயே இதனை இரவின் ராணி என்று அழைக்கின்றனர். அதோடு இந்த பூ தொடர்பான பல மூடநம்பிக்கைகளும் உண்டு.

சட்டென்று எழுந்த அப்பெண் எதிர்திசையில் நடக்க ஆரம்பிக்க நவநீதனோ எதுவும் புரியாது அவளை நிறுத்தமுற்பட அந்த பெண்ணோ நின்றபாடில்லை.

அப்போது திடிரென அவனெதிரே கண்களை கூசச்செய்யும் ஒரு ஒளி விழ நவநீதனோ கண்களை மூடி கைகளை அதற்கு கவசமாக்கி நிலைதடுமாறியபடியே பின்னே நகன்றான்.

பௌர்ணமி நிலவிலிருந்து தோன்றிய அந்த வெள்ளொளி நேராக அந்த நிஷாகாந்தி செடியில் விழ மொட்டாயிருந்த நிஷாகாந்தி இப்போது மலராய் உருவெடுத்திருந்தது. அது வழமைபோலில்லாது அந்த பூவினை சுற்றி தங்கநிறத்தாலான ஒரு வளையம் இருந்தது.

எதிர்திசையில் நடந்துசென்றுக்கொண்டிருந்த அந்த பெண் ஏதோ தோன்ற பின்னால் திரும்பி பார்த்தாள்.

அப்போது நிலவொளி பட்டு அந்த பூ பூத்திருப்பதை கண்டவளின் வதனத்தில் அத்தனை மகிழ்ச்சி. உலகை வென்ற உவகையுடன் அந்த மலரருகே ஓடிவந்தவளின் முன் வெள்ளை நிற புகையில் தோன்றி அதில் ஒரு பெண்ணின் முகம் தென்பட்டது.

அது அவளிடம்
மும்டிம்க்ம்கும்ரிம்யம் மம்ன்ம்னம்வன் கைம்சேம்ர்த்ம்து வாம்ங்கும்கைம்யில் கிம்ட்டும் பம்லம்மம்னைத்தும் ஜெம்ய் ஜெம்ய்.” என்று கூறிவிட்டு மறைந்து போக இப்போது ஸ்தம்பித்து போனாள் அந்த மஞ்சளாடை அழகி.

அந்த புகையில் தோன்றிய பெண் கூறிய வார்த்தைகள் அவளை நிலைகுலையச்செய்தது. இத்தனை நேரம் அவள் மனதில் தாண்டவமாடிய மகிழ்ச்சி உருத்தெரியாமல் போனது. அடுத்து என்ன செய்வது என்று புரியாது நின்றவளது கண்ணில் பட்டான் அந்த ஒளியின் பிரகாசத்தை ச

அந்த மஞ்சளாடை பெண் அவன் கரம் பற்றி அவனை அந்த நிஷாகாந்தி செடியினருகே அழைத்து சென்றாள். அவனை அந்த செடியை தொடச்செய்தாள். அவனும் தொட்டான். அப்போது தான் அவள் மனதில் ஒரு நிம்மதி பரவியது. அடுத்து தன் கையின் மேல் அவன் கையை வைத்தவள் வாயில் ஏதோ முணுமுணுத்தபடியே பளபளத்துக்கொண்டிருந்த அந்த நிஷாகாந்தி பூவை பறித்தாள். அவர்கள் கை பட்டதும் அந்த பூ முழுவதும் தங்கநிறமாய் மாறியது. அதை பறித்ததும் அந்த நிலவிலிருந்து வெளிபட்ட வெள்ளொளியும் காணாமல் போனது. பூ அவர்கள் கைக்கு வந்ததும் அது சுடர்விட்டெரியும் விளக்கின் ஒளியை போன்றதொரு பிரகாசத்தை உமிழ்ந்துவிட்டு பழைய நிலைக்கு திரும்பியது. நவநீதனின் கையை தன் கையிலிருந்து விலக்கிய அந்த மஞ்சளாடைப்பெண் வாயில் ஏதோ முணுமுணுத்துவிட்டு அந்த பூவை கண்ணிரண்டிலும் ஒற்றிக்கொண்டவள் தன் அருகில் இருந்தவனை பார்த்தாள்.

அவன் முன் சொடக்கியதும் ஏதோ கனவிலிருந்து விழித்தவன் போல் மலங்க மலங்க விழித்தான் நவநீதன். அவன் செயல் அந்த மஞ்சளாடை பெண்ணிற்கு புன்னகையை உண்டாக்க லேசாக சிரித்தாள் அந்த பெண். அது அவன் கண்ணில் பட அப்போது தான் சற்று நேரத்திற்கு முன் நடந்தது அனைத்தும் நினைவில் வந்தது. வானை நோக்கி எதையோ தேடியவன் அந்த பெண்ணிடம் திரும்பி

“ஏங்க ஒரு வெளிச்சம் வந்துச்சே அது எங்கங்க?” என்று அவன் கேட்க மீண்டும் புன்னகையையே பதிலாக கொடுத்தாள் அப்பெண்.

அப்போது அந்த பெண்ணின் கையிலிருந்த நிஷாகாந்தி பூவை பார்த்தவன்
“பூத்திடுச்சாங்க? நான் சொன்னேன்ல? ரொம்ப அழகா இருக்குங்க.” என்று அவன் கூற அவளோ அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அந்த பூவை ஏந்தியபடியே நடக்கத்தொடங்கினாள்.

அவள் திடிரென நடக்கத்தொடங்கியதும் என்னானது என்று புரியாமல் அவளை அழைத்தபடியே பின்தொடர்ந்தான் நவநீதன்.

வேகக்கதியில் நடந்தவள் கடைசியில் நின்றது ஒரு ஆலமரத்தினடியில். அந்த ஆலமரத்தின் தோற்றமே ஆளை மிரட்டுவதாய் இருந்தது. இரவின் வீரியம் வேறு அதற்கு வலு சேர்க்க அது பார்ப்பவரின் மனதில் மிரட்சியை அதிகப்படுத்துவதாயிருந்தது. அந்த ஆலமரத்தின் பொந்தின் முன் சென்று சம்மணமிட்டு அமர்ந்த அந்தப்பெண் கைகளில் அந்த நிஷாகாந்திப்பூவினை ஏந்தியபடியே கண்மூடி ஏதோ முணுமுணுத்தாள். அப்போது அந்த ஆலமரம் திடிரென தங்கமாய் மினுமினுக்கத்தொடங்கியது. அந்த திடிர் மாற்றத்தை அதிர்ச்சியுடனும் குழப்பத்துடனும் பயத்துடனும் பார்த்தபடியிருந்த நவநீதனுக்கோ ஏதோ மாயாஜால நிகழ்ச்சி பார்ப்பது போல் இருந்தது. கண்முன்னால் நடந்ததனைத்தையும் உண்மையில்லையென்று அவனால் புறந்தள்ளமுடியவில்லை.

அப்போது அந்த மரத்திலிருந்து ஒரு ஜோதி வெளிப்பட்டது. அதை உணர்ந்தது போல் அப்பெண்ணும் கண்திறந்து எழுந்து நின்று தன் கைகளிலிருந்த அந்த மலரினை உயர்த்திப்பிடித்தாள். அப்போது மரத்திலிருந்து வெளிப்பட்ட அந்த ஜோதி காற்றில் மிதந்து வந்து அந்த பூவில் ஐக்கியமானது. அந்த ஜோதி ஐக்கியமானதும் தன் கையிலிருந்த அந்த பூவை தலையில் சூடிக்கொண்டாள் அந்தப்பெண்.
அவள் தலையில் சூடிய மறுகணம் அந்த பூ சிறிதாகி அவள் கூந்தலில் மறைந்து தன் அடையாளத்தை மறைத்துகொண்டது.

இவையனைத்தையும் வாய்பிளந்து பார்த்திருந்த நவநீதனுக்கு தான் காண்பது கனவோவென்றொரு சந்தேகம் எழுந்திட தன்னை ஒருமுறை கிள்ளிப்பார்த்துக்கொண்டான். ஆனால் அனைத்துமே நிஜம். ஒரு நிமிடம் அடுத்து என்ன செய்வதென்று புரியாத நிலையிலிருந்தான் நவநீதன். அப்படியே நின்றிருந்தவனது அருகில் வந்தாள் அந்தப்பெண்.

சற்று நேரத்திற்கு முன் வரை அவளை காதலுடன் ரசித்த அவன் கண்கள் இப்போது மிரட்சியை உமிழ்ந்தது. ஆனால் அது அப்பெண்ணை பாதித்ததாக தெரியவில்லை. அவனை பார்த்து அழகாயொரு புன்னகையை சிந்தியவள்

“நடந்ததை கண்டு நா கட்டுண்டு இருக்கிறீரோ?” என்று கேட்க

“நீங்… நீ யாரு?”

“தம்மை தேடியலைந்த பட்சி நான்”

“நீ நீ என்ன சொல்ற?”

“நான் தற்சமயம் உரைப்பது தமக்கு புரிவதற்கு வாய்ப்பில்லை. காலச்சக்கரம் அதை தமக்கு விளக்கிடும் காலமும் வெகு தொலைவில் இல்லை.”

“நீ சொல்லுறது எதுவும் புரியலை. நீ இவ்வளவு நேரம் பண்ணது ப்ளாக் மேஜிக்கா?” என்று தன் மனதில் எழுந்த சந்தேகத்தை நவநீதன் கேட்க அந்த பெண்ணோ குழப்பமாய் பார்க்க

“ அதாவது இந்த ஏவல் பில்லி சூனியம்னு சொல்லுவாங்களே அதுவா?” என்று கேட்க மீண்டும் சிரித்தாள் அந்த பெண்.

“எம்மை பார்த்தால் தமக்கு சூனியக்கிழவி போலா தெரிகிறது?” என்று ஆளை வசியம் செய்யும் புன்னகையுடன் கேட்டவளை பார்த்தவனது மனது

“ஆமா நீ எனக்கு ஏதோ சூனியம் வைத்து தான் இரண்டு நாளாக உன்னை நினைச்சிட்டே அலைஞ்சிட்டிருந்தேன்.” என்று கூக்குரலிட அதை அடக்கியவன்

“அது… அது… நீ இப்படியெல்லாம் பண்ணவும்…”

“இவை எதையும் யான் செய்திடவில்லை. இவையனைத்தும் இறைசித்தத்தின் படி நடந்தேறிய சம்பவங்கள். இவையனைத்திலும் நாமிருவரும் பார்வையாளர்கள் மட்டுமே.”

“நான் பார்வையாளர்னு சொல்லுங்க ஒத்துக்கிறேன். ஆனா நீங்க?” இவ்வளவு நேரம் அவளை ஒருமையில் விளித்திருந்தவன் இப்போது அவளை மரியாதையாய் விளிக்கத்தொடங்கியிருந்தான்.

“யானும் பார்வையாளர் மட்டுமே… அதனாலேயே எமக்கான கட்டளையை மட்டும் செய்தோம்.” என்று தெளிவாகவும் புதிரோடும் பேசியவளை குழப்பத்தோடு பார்த்தவன்

“சரி இவ்வளவு நேரம் நீங்க என்ன செய்தீங்க? எப்படி மரம் தங்கமாக மினுமினுத்துச்சு? மரத்துல இருந்து ஒரு ஜோதி வந்திச்சே அது என்ன? அந்த பூ எப்படி சின்னதாக மாறி உங்க தலைக்குள்ள மறைந்து போனது?” என்று தன் சந்தேகங்கள் அனைத்தையும் நவநீதன் அடுக்கிக்கொண்டே போக

“ அதனை நாடகத்தின் கதாசிரியரிடமல்லவா தாங்கள் வினவ வேண்டும்? பார்வையாளரான என்னிடம் வினவுவதில் எவ்வித உபகாரமும் இல்லை.”

“என்னது நாடகமா? அது யாரு கதாசிரியர்? நீங்க சொல்றது எதுவுமே புரியலைங்க?”

“நான் முன்னமே கூறியது போல் இவையனைத்தும் இறைசித்தத்தின் படி நடந்தேறியவை. இதில் நாம் வெறும் பார்வையாளர்கள் மட்டுமே. எனக்கிடப்பட்ட கட்டளையை நான் சரிவர நிறைவேற்றினேன் அவ்வளவே. இதில் தங்கள் பங்கு சற்று இருந்ததையும் மறுக்கமுடியாது.” என்றவளை மீண்டும் குழப்பமாக பார்த்தவன்

“நீங்க சொல்றது எதுவும் எனக்கு சுத்தமாக புரியலைங்க. முதல்ல இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க. நீங்க யாரு?எங்க இருக்கீங்க? இங்க எதுக்கு வந்தீங்க? எதுக்காக அந்த பூ எப்போ பூக்கும்னு எதிர்பார்த்திட்டிருந்தீங்க?இந்த கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்க.” என்று நடப்பை தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் கேட்டவனது கேள்வியில் மெலிதாய் புன்னகைத்தவள்

“தம் தொழில்பற்றை இப்போது என்னால் அறிந்து கொள்ளமுடிகிறது.” என்று அந்தப்பெண் கூற இப்போது அதிர்ந்து நின்றான் நவநீதன்.

“நீங்க… நீங்க… உங்களுக்கு எப்படி என்னை பற்றி?உங்களுக்கு நிஜமாகவே என்னை பற்றி தெரியுமா?”

“ஓரளவுக்கு கணித்துவிட்டேன். கணித்தவரை உரைக்கவா அல்லது முழுதாய் கணித்துவிட்டு உரைத்திடவா?” என்று மாறாபுன்னகையுடன் கேட்டவளை ஒரு சந்தேகப்பார்வையோடு பார்த்தவன் அவளை பார்த்து

“ம்ம்ம் சொல்லுங்க.” என்று கூற அவனது மொத்த ஜாதகத்தையும் ஒப்புவிக்கத்தொடங்கினாள் அந்த பெண்.
 
Last edited:

anuchandran

New member
Messages
17
Reaction score
18
Points
3
“மழையை வரமாய் பெறுவதற்காகவே உலகில் நிலைத்திருக்கும் பச்சை விருட்சங்களையும் அதன் சந்ததியினையும் பாதுகாப்பதற்காகவென பிறப்பெடுத்த ஜீவன்களின் சந்தானம் தாம். ஈன்றவர்களின் விருப்பத்திற்கு மாறாய் மண்ணில் புதைந்திருக்கும் ரகசியங்களை கண்டறியும் தொழிலை தேர்ந்தெடுத்து அதற்காய் வாழ்நாளை கழித்திட எண்ணியிருந்தவரின் மனதில் ஒரு சலனம் முளைத்திருக்கிறது. நான் உரைத்தது சரியா?” என்று கேட்க சற்று அதிர்ந்தவன் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு

“இதெல்லாம் என்னை உளவு பார்த்திருந்தாலோ கண்டுபிடிக்கக்கூடிய விஷயங்கள். வேற ஏதாவது சொல்லுங்க.” என்றவனை அதே மாறாப்புன்னகையுடன் பார்த்தவள்

“தம் பத்தாவது அகவையில் தாம் கடலன்னையின் சதிவலையில் சிக்கி மரணத்தின் உச்சத்தை தொட்டு திரும்பி வந்தது தமக்கு நினைவிலுள்ளதா?” என்று கேட்க இப்போது நிஜமாய் அதிர்ந்து போனான் நவநீதன். ஆனால் எப்போதும் அவனில் இருக்கும் எதையும் நம்பமறுக்கும் குணமானது

“இப்படியொரு சம்பவம் நடந்ததா இல்லையானு நான் சொல்றதுக்கு முதல்ல நீங்க அது எங்க எத்தனை மணிக்கு யார்கூட இருக்கும் போது நடந்ததுனு எல்லா விவரத்தையும் சரியாக சொல்லுங்க.” என்று கேட்க எதிரிலிருந்தவளோ கண்களை ஒரு கணம் மூடித்திறந்துவிட்டு

“தமக்கு ஜோதிட கணிப்பில் உள்ள அவநம்பிக்கை பற்றி தெரியாமல் தம்மை இந்த விளையாட்டிற்கு அழைத்துவிட்டேன். ஜோதிட கணிப்பென்பது எதிர்கால ஆபத்துக்கள் பற்றிய ஒரு அரைகூவல் மட்டுமே. அதனால் விதிப்பயனையோ கர்மபலனையோ மாற்றமுடியாது. விதிக்கப்பட்டவை அனைத்தும் நடந்தேறுமென்பது காலசக்கரத்தின் சூட்சுமம். அதன் தாக்கத்தினை கையாளமட்டுமே ஜோதிடம். ஜோதிடத்தை துல்லியமாக கணிக்கும் வல்லமை பெற்ற மகாமுனிகளால் கூட எதிர்காலத்தில் நடக்கப்போவதை காட்சிபிழைக்காமல் எடுத்துரைக்கமுடியாது. தாம் சந்தித்த சந்திக்க போகின்ற ஆபத்துக்களை பட்டியல் படுத்தமுடியுமே தவிர அதை தெளிவாய் வரையறுக்கும் ஞானஷக்தியை இறைசக்தி என்வசப்படுத்த அனுமதியளிக்கவில்லை. இதை தாம் சரியாக உணர்ந்துகொள்வீரென நம்புகின்றேன்.” என்று தன்மையாய் பதிலளித்தவளின் பதில் அவனை பெரிதாய் திருப்திபடுத்தவில்லை.

“இல்லைங்க. நீங்க சொல்றதுல எனக்கு நம்பிக்கை வரலை.”

“சரி. தம் சந்தேகத்தை தீர்பதற்காக ஒரு யோசனை கூறவா?”

“சொல்லுங்க.”

“நாளை தாங்கள் சந்திக்க போகும் ஒரு முக்கிய நபர் பற்றி ஒருவிடுகதை கூறுகிறேன். அதற்கான பதில் தாம் அவரை சந்திக்கும் வேளைதனில் கிட்டும். அப்போதாவது தமக்கு என் கணிப்பின் மீது நம்பிக்கை எழுந்திடுமா?”

“பார்க்கலாம். நீங்க சொல்றது நடக்குதானு?”

பட்சி பார்த்திட பர்வதம் ஏறியவன் கண்களுக்கு வரமாய் தென்பட்ட ஒரு புஷ்பம் மண்ணடியில் புதைந்திட அதை நோக்கி நகர்ந்த கால்கள் இடறி தொட்டது பர்வதத்தின் உச்சியை.” என்று விடுகதையை தொடுத்திட அதை மனதில் நன்றாய் பதிப்பித்துக்கொண்டவன்

“இது உண்மையாக இருந்தா நான் என்ன பண்ணனும்?”

“இது சரியாக இருக்கும் பட்சத்தில் நாளை தாம் தம் நட்புக்களோடு இதே நாழிகையில் இங்கு வந்திட வேண்டும்.”

“அவங்க எதுக்கு?”

“தாம் அச்சம் கொள்ள தேவையில்லை. என்னால் தமக்கோ தம்மை சார்ந்தவர்களுக்கோ எந்தவித இடரும் நேராதென்பதை நான் வணங்கும் இறைசக்தியின் ஆணையாய் இங்கு எடுத்தியம்புகிறேன். நான் மேற்கொண்ட பிரமாணத்தை நான் மீறும் தருணத்தில் என் ஆன்மா உன் உடல் விட்டு நீங்குமென்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.” என்று குரலில் அளவுக்கதிகமான உறுதியுடன் கூறியவளை இப்போதும் சந்தேகத்துடனே பார்த்தான் நவநீதன்.

“அப்படி நீங்க சொன்னது பொய்யாக இருந்தா என்ன பண்ணலாம்?”

“அவ்வாறிருக்கும் பட்சத்தில் இதுவே யான் தங்களை இறுதியாய் சந்திக்கும் கடைசி நாழிகையாயிருக்கும்.” என்றவளின் முகம் அதே வாடா புன்னகையை தாங்கியிருக்க அதை பார்த்தவனது மனமோ அவனை அறியாமலோ நாளை அவளை சந்திப்பதற்காகவாவது அவள் கூறிய ஆருடம் பலித்திடவேண்டுமென எண்ணிக்கொண்டான்.

அவன் எண்ணங்களின் பிடியில் சிக்கியிருக்கையில் அவன் கவனத்தை கலைக்காதவகையில் அங்கிருந்து காணாமல் போனாள் அந்த மஞ்சளாடை அழகி.

தன்னிலை திரும்பியவன் அவளை தேட அவளை காணவில்லை. பல வகையான குழப்பங்களின் பிடியில் சிக்கியிருந்தவனுக்கு அப்போது அவளை தேடும் எண்ணம் இல்லாமலிருக்க அந்த ஏரிக்கரையருகே வந்து தான் மறைத்து வைத்திருந்த தன் மொபைலை எடுத்தவன் அதில் ஓடிக்கொண்டிருந்த காணொளியை நிறுத்தி அதை சேமித்துவிட்டு தன் இருப்பிடம் நோக்கி சென்றான்.

தன் அறைக்கு வந்து உடைமாற்றிவிட்டு படுக்கையில் விழுந்தவனை கேள்விகளால் துளைத்தெடுத்த பிரவீனை சமாளித்துவிட்டு கண்களை மூடியவனுக்கு உறக்கம் எதிர்பாராவிதமாய் உடனடியாக வந்து ஆக்கிரமித்திட அந்த நொடியிலிருந்து பல கனவுகள் அவன் மூளையில் படையெடுத்து அவன் ஆழ்மனதிலிருந்த சில உண்மைகளை அவனுக்கு உணர்த்திடும் பணியில் இறங்கியது.
 
Last edited:

anuchandran

New member
Messages
17
Reaction score
18
Points
3
அத்தியாயம் 2

ஒற்றை கமலத்தில்
ஓராயிரம்
மர்மங்கள் புதைந்திருக்க
அதன் ரகசியங்கள்
கண்டறிவது கூட
ஒரு வகை மர்மமே…

மறுநாள் அதிகாலையிலேயே எழுந்த நவநீதன் முதலில் தேடியது அவன் மொபைலை தான். இரவு முழுதும் பல கனவுகள்அவன் மூளையை குழப்பியிருக்க அவனது மனமோ எதையோ கண்டறிந்திட ஆர்பரித்துக்கொண்டிருக்க அதற்கு பதில் தெரிந்துகொள்ள எத்தனித்தவனின் மூளை நேற்று பதிவு செய்த காணொளியை ஆராய்ந்திட கூறியது. விரைந்து தன் மொபலை எடுத்தவன் அந்த காணொளியை ஓடவிட்டான். முதல் நாள் அந்த பெண் வந்ததும் அந்த வெளிச்சம் வந்தது என்று அனைத்தும் பதிவாகியிருந்தது. கடைசியாக அவள் அவனை தொட்டதும் இருவரும் சேர்ந்து நிஷாகாந்தி மலரை பறித்தது என்று அனைத்தும் பதிவாகியிருக்க
அதை பார்த்திருந்தவனுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது.

அந்த காணொளியின் பிற்பாதியில் நடந்த சில விஷயங்கள் எதுவும் அவன் நினைவில் இல்லை. இதை பார்த்தவனுக்கு குழப்பம் மட்டுமே மேலிட மீண்டும் காணொளியை ஓடவிட்டு பார்த்தான். அதில் அந்த வெளிச்சம் வரும் காட்சி வந்ததும் அதன் வேகத்தை குறைத்து ஒவ்வொரு காட்சியையும் நுன்னிப்பாய் கவனித்தான். அப்போது அந்த பெண் யாருடனோ பேசுவது போல் இருக்க தன் ஹெட்செட்டை எடுக்க படுக்கையில் இருந்து எழுந்தான் நவநீதன்.

அப்போது அவனருகில் படுத்திருந்த ப்ரவீன்

“டேய் இந்த நேரத்துல என்னடா பண்ணிட்டு இருக்க?”

“ஒன்னும் இல்லை நீ தூங்கு.”

“ஒன்னும் இல்லாமலா போனை நோண்டிட்டு இருக்க?”

“டேய் தயவு செய்து பேசாமல் தூங்கு. ஒரு முக்கியமான வேலையில் இருக்கேன்.”

“இப்போ நீ என்னனு சொல்லலைனா மத்தவங்களையும் போன் பண்ணி இங்க வரவச்சிடுவேன்.” என்று மிரட்டியவனுக்கு நவநீதனின் செயல்களை பார்த்து சற்று பயமாகவே இருந்தது. என்ன தான் மற்றவர்களிடம் அவனது செயல்களை சாதாரணமாக சொன்னபோதிலும் ப்ரவீனுக்குமே அவனது இந்த நடவடிக்கைகள் சற்று விசித்திரமாகவே இருந்தது. அதற்கு காரணமும் இருந்தது.

நவநீதன் என்ன தான் தன் தொழிலில் முழு மூச்சாக இருந்தாலும் இதுநாள் வரை இவ்வாறு விடுமுறைக்கு வரும் போது அவன் இப்படி எப்போதும் இருந்ததில்லை. இந்த மாதிரி நேரத்தில் வேலை விஷயமாக போன் வந்தால் கூட அவன் அதை ஏற்பதில்லை. இவர்கள் எடுக்கச்சொன்னால் கூட

“351 நாளும் அதை தானோடா செய்றேன். ஒரு இரண்டு கிழமை செய்யலைனா ஒன்னும் ஆகாது. அப்படியே அவசரம்னாலும் என்னோட குழு பார்த்துக்கும். நாம வந்த வேலையை பார்க்கலாம்.” என்பவன் இப்படி திடிரென காணாமல் போவதும் ஏதோ யோசனையில் இருப்பதுமாயிருப்பது அவனுக்கும் சற்று குழப்பமாகவே இருந்தது.

அவன் தொழிலே தேடல் தொடர்பானது தான் என்றபோதிலும் ஏதோ கனவுலகத்தில் சஞ்சரிப்பவன் போன்ற பாவனையுடன் வலம் வருபவனை எண்ணி அவனுக்கு சற்று கலக்கமாய் தான் இருந்தது. அத்துடன் நேற்று இரவு வேறு உறக்கத்தில் ஏதேதோ உளறியவனின் உளறல்கள் அனைத்தும் சற்று விசித்திரமாகவே இருந்தது.
அவனை ஒருவாறு அமைதிப்படுத்தி உறங்க வைத்தவன் கண்களில் தலைமாட்டிலிருந்த நவநீதனின் மொபைல் தென்பட்டது.

ஏதோ தோன்ற அதை எடுத்து பார்த்தவன் கடைசியாக அவன் பார்த்த செயலிகளை பார்வையிட்டான். அதில் அவன் கேலரி திறந்ததாய் காண்பிக்க அதை திறந்து பார்த்தவனுக்கு கடைசியாய் ஒரு வீடியா எடுக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அதை திறந்து பார்த்தவனது கண்கள் நொடிக்கு நொடி விரிந்தது.

அதில் அவன் பார்த்த காட்சிகள் அனைத்தும் அவன் பயத்தை அதிகரிப்பதாகவே இருந்தது. ஒரு நொடி அவனால் அவன் கண்களையே நம்ப முடியவில்லை. அந்த காணொளியை அணைத்தவன் நினைவில் ஒருநாள் அவனை வலுகட்டாயமாய் வழிமறித்து ஒரு பிச்சைக்காரன் சொன்ன மர்ம வார்த்தைகள் நினைவில் வந்தது.

“மழையும் இருக்கும் வெயிலும் இருக்கும் மண்ணும் இருக்கும் மரமும் இருக்கும் நீயும் இருப்ப. உன்னை சார்ந்தவங்களும் இருப்பாங்க. இதெல்லாம் சாத்தியமாகிற சந்தர்ப்பம் ஒரு பூ உனக்கு புதிராகும். அது பூவா பூம்பாவையானு நீ தெரிஞ்சுக்கும் போது ஒரு மர்ம பயணத்துக்கு நீ தயாராகுற சந்தர்ப்பம் வரும். அதை நீ முடிச்சிட்டு வந்தா நீ சிரஞ்சீவி.” என்று அந்த பிச்சைக்காரன் கூறிய வார்த்;தைகளுக்கும் இந்த காணொளிக்கும் ஏதோ தொடர்பு இருப்பது போல் இருந்தது. ஆனால் இதை நம்புவதற்கு அவன் மனம் தயாராக இல்லை. நாளை இதற்கு ஏதேனும் முடிவுகட்ட வேண்டுமென்று எண்ணியன் உறங்கச்சென்றிருந்தான்.

நேற்று இரவு அனைத்தையும் பார்த்தவன் நவநீதனிடம் அனைத்தையும் கேட்டு தெளிவுபடுத்த வேண்டுமென்ற முடிவுக்கு வந்திருந்தான். பதில் கூறாமல் மழுப்பமுயன்றவனிடம்

“டேய் நான் அந்த வீடியா பார்த்துட்டேன். இப்போ சொல்லு என்ன நடந்தது?யாரு அந்த பொண்ணு?நேத்து நைட்டு என்ன நடந்தது? நீ எப்படி அங்க போன?” என்று ப்ரவீன் கேட்க தனக்கு தெரிந்த அனைத்தையும் ஒப்புவித்தான் நவநீதன்.

இதை அனைத்தையும் கேட்டிருந்த ப்ரவீனுக்கு ஏதோ மாயாஜால கதை கேட்பது போல் இருக்க

“இப்ப என்ன தான்டா பண்ண போற?”

“அந்த பொண்ணு யாருனு கண்டுபிடிக்கனும். அதுக்கு தான் இந்த வீடியாவை பார்த்திட்டு இருந்தேன். அப்போ தான் ஒரு தடயம் கிடைத்தது.”

“தடயமா?”

“ஆமாடா. இதை கொஞ்சம் நல்லா பாரு. அந்த வெளிச்சம் வந்ததும் அந்த பொண்ணு திரும்பி வந்து யாருகிட்டயோ பேசுற மாதிரி தெரியல?” என்று கூறி அந்த காட்சியை நவநீதன் சூம் செய்து காட்ட அதை பார்த்த நவநீதனும்

“ஆமாடா. அந்த பொண்ணு எதையோ பார்த்துட்டு இருக்கமாதிரி தான் இருக்கு. ஆனா எப்படி பேசுறானு உறுதியாக சொல்லுற?”

“அவ ரியாக்ஷன்ஸை கொஞ்சம் கவனமாக பாரு. யாரோ பேசுறதை கவனிச்சிட்டு பதில் சொல்ல முயற்சி பண்ணுறமாதிரி தெரியல?” என்று நவநீதன் கூற அதை உற்று கவனித்த ப்ரவீனும்

“ஆமாடா. பார்க்க அப்படி தான் தெரியிது. ஆனா இது சாத்தியம்னு நீ நம்புறியா?”

“இரு அதை கன்பார்ம் பண்ண தான் இன்னொரு வேலை பார்க்க போறேன்.” என்றவன் அந்த வீடியோவினை ஆடியோவாக மாற்றி அதனை கூகுள் டைரைவில் சேமித்துவிட்டு அதன் இணைப்பை தன் நண்பன் ஒருவனுக்கு அனுப்பிவிட்டு அவனை தொடர்பு கொண்டான்.

“ஹாய் ப்ரணீத். எப்படி இருக்க? இப்போ அங்க பகல்ல?”

“….”

“ஆமாடா. நீ எனக்கு ஒரு சின்ன உதவி பண்ணனும். நான் உனக்கொரு ஆடியோ கூகுள் ட்ரைவில் அனுப்பியிருக்கேன். அதோட ஆடியோ க்ளியர் இல்லாமல் இருக்கு. எனக்கு அதோட க்ளியர் ஆடியோ வேண்டும். அதாவது ரொம்ப சின்ன ப்ரீக்குவென்சில உள்ள வோக்கலோட க்ளியர் ஆடியோ
வேண்டும்.”

“….”

“இன்னைக்குள்ள முடியாதா? ரொம்ப அர்ஜென்ட்டா.”

“….”

“தேங்க்ஸ்டா. அன்ட் சாரி. சரிடா. பாய்.” என்றவன் அழைப்பை துண்டித்தான்.
நவீன் பேசிவிட்டு அழைப்பை வைத்ததும் ப்ரவீன் அவனிடம்

“யார்கிட்டடா பேசுன?”

“என்னோட ப்ரெண்ட் ஒருத்தன் அப்ரோட்ல சவுண்ட் என்ஜினியராக வர்க் பண்ணுறான். அவன்கிட்ட அந்த ஆடியோவை அனுப்பியிருக்கேன். அவன் அந்த ஆடியோவோட க்ளியர் ரெக்கார்ட்டை அனுப்ப சொல்லியிருக்கேன். அவன் அனுப்;புனதும் ஏதாவது தெளிவு கிடைக்;குதானு பார்ப்போம்.”

“சரிடா. ஆ கேட்க மறந்துட்டேன். அந்த பொண்ணு ஒரு விடுகதை சொன்னதாக சொன்னியே அது என்னது?

“பட்சி பார்த்திட பர்வதம் ஏறியவன் கண்களுக்கு வரமாய் தென்பட்ட ஒரு புஷ்பம் மண்ணடியில் புதைந்திட அதை நோக்கி நகர்ந்த கால்கள் இடறி தொட்டது பர்வதத்தின் உச்சியை.”

“இது என்னடா விடுகதை… இதுக்கு எப்படி விடை கண்டுபிடிக்கப்போற…”

“இன்னைக்கு நான் சந்திக்கப்போற யாரோ ஒருத்தர் தான் இந்த விடுகதையோட விடை…”

“ஆனா இது நிஜம்னு நம்புறியா?நிச்சயமாக ஏதும் இருக்கும்னு நினைக்கிறியா?”

“ஆமானும் சொல்ல முடியாது இல்லைனும் சொல்ல முடியாது. இப்போ அந்த பொண்ணு நமக்கு ஒரு மர்ம முடிச்சை போட்டுட்டு போயிருக்கா. அதை தேடனுங்கிற எண்ணம் தான் நம்ம மனசுல இருக்கு. இது பார்க்கிற எல்லாத்தையும் அந்த மர்மத்தோட தொடர்புபடுத்தி தான் பார்க்கச்சொல்லும். இது தொடர்ந்தா நிச்சயம் நம்ம மனசும் அதை உண்மைனு நம்ப தொடங்கிடும். அப்படி மட்டும் நடந்திடுச்சுனா அந்த பொண்ணு என்ன சொன்னாலும் நம்ம மனசு நம்ப ஆரம்பிச்சிடும்.”

“இப்ப என்ன சொல்லுற? அந்த பொண்ணு நம்மளை எதுக்கோ டார்கெட் பண்றானு சொல்லுறியா?”

“ஆமா… அவளுக்கு ஏதோ ஒரு விஷயத்துக்கு நம்ம உதவி தேவை. நம்ம உதவியை பெறனும்னா நாம அவளை நம்பனும். அதுக்காக கூட அவ இப்படி ஏதோ சொல்லி குழப்பியிருக்கலாம்.”

“இப்போ என்னடா பண்ணலாம்னு சொல்லுற?”

“தெரியல பார்ப்போம். இன்னைக்கு அவ சொன்னபடி அந்த விடுகதைக்கு விடை கிடைக்குதான்னு பார்ப்போம். அதுக்கு பிறகு மற்றதை யோசிப்போம்.”

“எனக்கு என்னமோ அந்த பொண்ணுகிட்ட பல ரகசியங்கள் ஒளிஞ்சிருக்குனு தோனுது. எது செய்றதுனாலும் கொஞ்சம் யோசித்து செய். உன்னோட தொழில் இது என்னன்னு தெரிஞ்சிக்க சொல்லி ஆர்வப்படுத்தும். ஆனா இதனால வேற எந்த பிரச்சினையும் வந்திடக்கூடாது.”

“சரி பார்த்துக்கலாம் விடுடா.” என்றவன் மீண்டும் அந்த காணொளியை பார்க்கத்தொடங்கினான்.

அவனை பார்த்தபடியே தன் படுக்கையில் விழுந்த ப்ரவீனிற்கோ மனதில் பல குழப்பங்கள்.

சரியாக ஒரு மணிநேரம் கழித்;து நவநீதனின் போன் ஒலித்தது. அழைப்பை ஏற்றவன் பேசிவிட்டு உடனடியாக தன் மெயிலை திறந்து அவன் நண்பன் அனுப்பியிருந்த ஆடியோவை டவுன்லோட் செய்து அதனை ஹெட்செட்டியின் உதவியோடு கேட்டான்.

அதை கேட்டவனுக்கு குழப்பம் அதிகரிக்க நெற்றியை சுருக்கியபடி எதையோ யோசிக்கத்தொடங்கினான்.

அலைபேசி அலறியதிலிருந்து அவனையே பார்த்தபடியிருந்த ப்ரவீன்

“என்னடா ஆச்சு? ஏதாவது தெரிஞ்சதா?” என்று கேட்க

“ஏதோ பேசுறாங்கடா… ஆனா என்ன பேசுறாங்கனு தான் புரியலை.”

“என்னடா சொல்லுற?”

“அவங்க பேசுற பாஷை என்னனு தெரியலடா... ஆனா சில வார்த்தைகள் எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு.” என்று கூற அவனிடமிருந்து ஹெட்செட்டை வாங்கி அணிந்துகொண்டு தானும் அந்த ஆடியோவை கேட்டான் ப்ரவீன்.
அவனிற்கும் இதற்கு முன் சில வார்த்தைகள் எங்கயோ கேட்டது போல் இருக்க அவனும் யோசிக்கத்;தொடங்கினான்.

சற்று நேரம் யோசித்தனுக்கு மூளையில் ஏதோ பளிச்சிட நவநீதனிடம்

“டேய் நான் சொல்லுறதை அப்படியே போனில் தமிழில் டைப் பண்ணு சீக்கிரம்.” என்று கூற நவநீதனும் அவன் அந்த ஆடியோவில் கேட்டு கூறியவற்றை தன் மொபைலில் டைப் செய்தான்.

அதை டைப் செய்ததும் அதை வாங்கி பார்த்த ப்ரவீன்

“நவீ இது தமிழ் தான்டா. நாம ஸ்கூல் படிக்கும் போது நம்ம தமிழ் சார் ஒரு விளையாட்டு சொல்லிக்கொடுத்தாரே உனக்கு நியாபகம் இருக்கா?ஒவ்வொரு வார்த்தைக்கு இடையிலேயேயும் ஒரு எழுத்தை போட்டு பேசனும்னு. அதாவது இங்க வா அப்படினா இடையில் ல் ல னு இரண்டு எழுத்தையும் சேர்த்து இல்லங்கல்ல வால்ல அப்படி சொல்லனும்னு ஒரு கேம் விளையாடினோமே… நான் கூட இதை வச்சி திட்டுறேன்னு நம்ம பக்கத்து கிளாஸ் பையனை வம்பு பண்ணேனே… உனக்கு நியாபகமில்லையா?” என்று கேட்க அப்போது தான் நவநீதனுக்கு நினைவில் வந்தது.

இந்த வார்த்தை கோர்வைகளை நன்றி உற்று கவனித்தவனுக்கு ஒவ்வொரு வார்த்தைகளின் நடுவிலும் ம் என்ற வார்த்தை புகுத்தப்பட்டிருப்பது புரிய அதை ஒவ்வொன்றாக நீக்கினான்.

இப்போது அந்த வாக்கியத்தை வாசித்தான்.

“முடிக்;குரிய மன்;னவன் கைசேர்த்து வாங்குகையில் கிட்டும் பலமனைத்தும் ஜெய் ஜெய்” என்று வாசித்தான் நவநீதன்.”

இதை கேட்டிருந்த ப்ரவீன்
“பார்த்தியா இது தமிழ் தான்.”

“ஆமாடா… ஆனா இந்த வார்த்தைகளுக்கான உண்மையான அர்த்தம் என்ன?அது தான் குழப்பமாக.”

“இந்த வார்த்தைகளை மனசுல வச்சிக்கிட்டு மறுபடியும் அந்த வீடியோவை பாரு. ஏதாவது க்ளு கிடைக்கும்.” என்று ப்ரவீன் கூற நவநீதனும் அவன் கூறியபடியே மீண்டும் அந்த காணொளியை பார்த்தான்.
அப்போது அவனுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.

“ப்ரவீன். அந்த பூவை வைத்து தான்டா ஏதோ மர்மம் இருக்கு. அந்த குரல் பேசிய அடுத்த நிமிஷம் இந்த பூ பறிக்கிற சீன் தான் நடந்திருக்கு. அப்படினா இந்த பூ தான் இந்த மர்மத்துக்கெல்லாம் ஆரம்பபுள்ளி.”

“ஆனா பூவை வைத்து என்ன மர்மம் இருக்க போகுது. நீ தான் அது ஒரு சாதாரண பூனு சொன்னியே…”

“ஆமாடா… விஞ்ஞான ரீதியாக அது சாதாரண பூ தான். ஆனா நம்ம சமூகத்தில் அந்த பூ பற்றிய சில மர்மக்கதைகள் இருப்பதாக கேள்வி பட்டிருக்கேன்.”

“என்னடா புதுசு புதுசா ஏதேதோ சொல்லுற?”

“ஆமாடா. நீ தான் ஐடி புலியாச்சே. உன் பாஸ் கூகுள் ஆண்டவர்கிட்ட கேட்டு பாரு.”

“ஏன்டா கூகுளில் வேலை செய்றேங்கிற ஒரே காரணத்துக்காக என்னென்ன வேலையெல்லாம் பார்க்கச்சொல்லுற…” என்று புலம்பியபடியே தன் மொபைலை எடுத்து அந்த பூவை பற்றி தேடத்தொடங்கினான்.

ப்ரவீன் கடந்த ஐந்து வருடங்களாக கூகுளில் ஆன்ரொயிட் செயலி பிரிவில் உதவி மேலாளர் பொறியியலாராக பணிபுரிகிறான். பல பேரின் கனவாயிருந்த அந்த வேலை அவனது திறமையால் அவன் வசமாகியிருக்க அதை சிறப்பாகவும் பொறுப்பாகவும் புத்திசாதூர்யத்துடனும் செய்து வருகிறான்.

தொழில் நிமித்தமாக ப்ரவீன் தொழில்நுட்ப தொழிற்பாடு சற்று அதிகமாக உள்ள அலைபேசியையே பயன்படுத்துவதுண்டு. அதுவும் தற்போது வர்ச்சுவல் மொபைலுக்கான திட்;டங்கள் கூகுளால் பரிட்சிக்க படுவதால் அதன் தொழிற்பாட்டினை ஆராய்வதற்காக பணியாளர்கள் அந்த கண்டுபிடிப்பை பயன்படுத்துவதற்கு கூகுள் நிறுவனம் அனுமதிக்கும். அதன் விளைவாகவே ப்ரவீனும் தன் மொபைலாக அந்த வர்ச்சுவல் மொபைலை உபயோகித்திருந்தான்.

தன் மொபைலை ஆன் செய்தவன் அதன் திரையை அழுத்தி தன் முன்னே கொண்டு வந்து அதனை பெரிதாக்கி நவநீதனிடம்

“டேய் அந்த பூவோட பெயரை சொல்லு.” என்றுவிட்டு அந்த வர்ச்சுவல் ஸ்க்ரீனிலிருந்த வாய்ஸ் கமாண்ட் ஆப்ஷனை அழுத்தினான் ப்ரவீன்.

ப்ரவீன் கூறியபடியே நவநீதன் அந்த பூவின் பெயரோடு அது தொடர்;பான மூடநம்பிக்கைகள் என்று கூற மறு கணமே பல லட்ச இணைப்புகள் வந்தது. அதில் முதல் இருபது இணைப்புக்களை மட்டும் வெவ்வேறு இணைப்புக்களாக திறந்து பெரிதாக்கினான்.

அதை பார்த்த நவநீதன்
“ஏன்டா இந்த லிங்குகளை மட்டும் ஓபன் பண்ண?”

“இந்த லிங்க்ஸ்ல உள்ள தகவல்;கள் மட்டும் தான் அதிகளவான ஆட்களால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள். இதெல்லாம் பொய்யான தகவல்களாக இருப்பதற்கான சதவீதம் 0.01. இதுவும் இந்த வர்ச்சுவல் மொபைலோட ஒரு முக்கிய தொழிற்பாடு. பொதுவாக கூகுளில் அதிகம் பார்க்கப்படுகின்ற இணைப்புக்கள் தான் நாம தேடும் போது முன்னாடியே வந்து நிற்கும். அந்த தகவல்கள் உண்மையா இல்லையானு நம்மால சொல்ல முடியாது. ஆனா இதுல அப்படி இல்லை. முதல் இருபது இணைப்புக்கள் முற்றும் முழுதான உண்மையான தகவல்கள் மட்டும் தான். அதற்கு பிறகு அந்த உண்மைத்தன்மையோடு சதவீதம் குறையும். அது தான் இந்த இணைப்புக்களை மட்டும் திறந்திருக்கேன். இது பிக் டேட்டாவோட உதவியால உருவான லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு. இப்போதைக்கு எங்களோடு குழு ஆட்களுக்கு மட்டும் இதை பயன்படுத்த அனுமதிச்சிருக்காங்க. இதோட தொழிற்பாடு எப்படி இருக்கு… இன்னும் என்னென்ன முன்னேற்றங்கள் செய்யலாம்னு ஆராய்ந்து எல்லாரும் சொன்ன பிறகு தான் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு போறதை பத்தி நிர்வாகம் யோசிக்கும்.” என்று விளக்கிக்கொண்டே ப்ரவீன் முதல் லிங்கை திறக்க நவநீதன் ஒவ்வொன்றாக படிக்கத்தொடங்கினான்.

அந்த இணைப்புக்கள் அனைத்திலும் சில பொதுவான விஷயங்களே இருக்க அதை படித்துக்காட்டினான் நவநீதன்.

அதை கேட்டிருந்த ப்ரவீனோ

“இந்த பூ வருஷத்துக்கு ஒருதடவை பூக்கும். அதோட ராத்திரி பூக்கும்ங்கிறதை தானே எல்லாரும் பொதுவாக சொல்லுறாங்க. விஞ்ஞான ரீதியாக உரிய காலநிலையும் உகந்த மண் வளமும் இருந்தா மட்டுமே இந்த கள்ளியின செடியில் பூ பூக்கிறதாக சொல்லுறாங்க. அதோடு இதன் வாசம் ஆளை தூக்கிற மாதிரியானதும் அதுக்கு காரணம் அந்த மலர்ல இருக்கிற பென்சைல் செலிஸிலேட் னு ஒரு வேதிப்பொருள்னும் சொல்லியிருக்காங்க. அதோடு இந்த பூக்கள் இரவில் பூப்பதால் இதோடு மகரந்த சேர்க்கையை இரவில் உலாவும் பட்சிகளுக்கு தெரியப்படுத்துறதுக்காக பெரிதாக இருப்பதாகவும் சொல்லுறாங்க. இதோட பரம்பல் முறை இலைத்தண்டுகள் மூலம்னும் இது கள்ளி இனத்தை சேர்ந்ததால் தண்ணீர் தேவை அதிகம் இல்லைனு சொல்லியிருக்காங்க. இதை தவிர வேற ஏதும் முக்கியமாக சொல்லலையேடா. நீ சொன்ன மாதிரி மர்மக்கதைகள் எதுவும் யாராலும் உறுதிப்படுத்தப்படல. அதெல்லாம் அவங்கவங்களோட கற்பனைகள் தான்.” என்று கூற

“டேய் இதெல்லாம் எனக்கு ஆல்ரெடி தெரியும். இந்த பூவை பற்றி தேடும் போதே இதெல்லாம் தெரிஞ்சிக்கிட்டேன். எனக்கு வேண்டியது இந்த பூ பற்றிய கட்டுக்கதைகள் தான். அது மூலமாக கூட நமக்கு ஏதாவது தகவல் கிடைக்கலாம்.” என்று நவநீதன் கூற மற்றைய தகவல்களை ஆராயத்தொடங்கினான் ப்ரவீன்.

“டேய் இங்க பாருடா விஷ்ணுவோட தொப்புள் கொடியிலிருந்து வந்த ப்ரம்மா குடியிருக்க பூ தான் இதுனு சொல்லியிருக்காங்க. அதனால இதுக்கு நிறைய மருத்துவ குணங்கள் இருக்குனு சொல்லியிருக்காங்க. வெட்டுக்காயங்கள், மலட்டுத்தன்மை, உயர் ரத்த அழுத்தம்னு நிறைய நோய்களுக்கும் காயங்களுக்கும் மருந்தாக பயன்படுத்தியிருக்காங்க. இந்த பூவை பற்றி நிறைய மலையாள இலக்கியங்களில் சொல்லிருக்கதாகவும் சங்ககால இலக்கியங்களில் இந்த பூ பற்றிய குறிப்புக்கள் இருக்கிறதாகவும் சொல்லியிருக்காங்க. அதோடு இந்த பூவை மகிழ்ச்சியோட சின்னமாக சொல்லுறாங்க.

கேரளாவில் இந்த பூவோட பெயரில் ஒரு திருவிழா கூட நடக்குதாம். ஜனவரி மாசக்கடைசியில் ஏழு நாட்கள் திருவனந்தபுர மாளிகையில் சுற்றுலாத்துறை சார்பில் நடக்கிறதாகவும் சொல்லியிருக்காங்க. இந்த கொண்டாட்டத்தோட மெயின் தீமே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான்.அதவாது அந்த திருவிழா முழுவதும் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்திருக்கனும்னு தான் அதுக்கு நிஷாகாந்தி திருவிழானு பெயர் வச்சிருக்காங்களாம். அதுமட்டும் இல்லடா இன்னொரு விஷயமும் இருக்கு. இந்த பூவுக்கு குலேபகாவலி பூனு ஒரு பெயரும் இருக்காம். இந்த பெயரை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த குலேபகாவலிங்கிற படத்தை நினைவுபடுத்துறதுக்காக வச்சதாகவும் ஒரு தகவல்.”

“இது என்னடா புதுசா?”

“அந்த படத்துல எம்.ஜி.ஆர் சார் அரசரான தன்னோட அப்பாவோட கண்பார்வையை திரும்பப்பெற ஒரு அதிசய பூவை தேடி பகாவலினு ஒரு நாட்டுக்கு போவாறாம். அந்த படம் அரபு மொழியை தழுவி எடுக்கப்பட்டதால் அதுக்கு குலேபகாவலினு பெயர் வச்சாங்கலாம். குல்னா அரபு மொழியில பூனு அர்த்தமாம். அந்த படத்துல அவர்; ஒரு அதிசய பூவை தேடி பகாவலினு ஒரு நாட்டுக்கு போறதால அந்த பெயரை வச்சாங்கலாம். இந்த பூவும் தென்னாபிரிக்காவில் இருந்து நம்ம நாட்டை தேடி வந்ததால அதுக்கும் இதே
பேரை பட்ட பெயரா வச்சிருக்காங்க. பார்த்தியா நம்ம பயலுகளோட அறிவை…”

“அப்போ இந்த பூவோட பூர்விகம் இமயமலை இல்லையா?”

“இங்க பெயரோ இன்னும் முடிவாகல… நீ பூர்வீகத்தை பத்தி ஏன்டா கவலைப்படுற?”

“டேய் மொக்க போடாதமல் வேற ஏதும் இருக்கானு பாரு…”

“இரு பார்க்கிறேன். ஆ இங்க பாரு… இந்த பூவை இயேசு பிறந்தப்போ அவரை பார்க்க போன மூன்று அரசர்களுக்கு வழிகாட்டுன வால் நட்சத்திரத்துக்கு ஒப்பிடுறாங்க. அதோடு புத்தர் இலங்கைக்கு போனப்போ அவரை பார்க்கிறதுக்காக வான் தேவதைகள் இந்த பூவாக இந்த உலகத்துக்கு வந்ததாகவும் ஒரு நம்பிக்கை இருக்கு. ஜப்பான் நாட்டுல இந்த பூவோட வரவு மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் இதை யார்கிட்டயாவது இருந்து பரிசாக வாங்குனா அவங்களுக்குள்ள உள்ள உறவு செழிக்கும்னு ஒரு நம்பிக்கை இருக்கதாகவும் சொல்லுறாங்க. அதோடு நிறைய புனைக்கதைகளில் இந்த பூவை ஸ்லீபிங் பியூட்டியோட ஒப்பிட்டிருக்காங்க…”

“ஸ்லீப்பிங் பியூட்டியா?”

“ஆமாடா. ஸ்லீப்பிங் பியூட்டியை எழுப்ப ஒரு இளவரசன் வருவான்ல. அதேமாதிரி இந்த பூ பூக்குறதுக்கு முழு நிலவு வரணுமாம்.”

“டேய் இதெல்லாம் ரொம்ப ஓவர்டா.”

“டேய் அப்படி தான்டா சொல்லியிருக்கானுங்க. அதுக்கு நான் என்னடா பண்ணுறது… இந்த பூகிட்ட யாருக்கும் தெரியாத ஒரு மர்மம் இருக்குடா…”

“எனக்கு தெரிஞ்சு அது யாரும் பார்க்ககாத போது பூத்து பார்க்கிறதுக்கு முன்னாடியே வாடுறது மட்டும் தான் அதிசயம்னு தோனுது. அதோடு அதோட அமைப்பு ரொம்ப கவர்கின்ற விதமாய் இருக்கிறதால அதை ஒவ்வொரு தெய்வத்தோடும் லிங்க் பண்ணி தற்செயலாக நடந்த விஷயங்களுக்கும் அது தான் காரணம்னு கதைகட்டிவிட்டு அதை ஏதோ அதிசயப்பூவாகவே மாத்திட்டாங்க. இதுக்கு இந்த பூ ரொம்ப அரிதாக பூக்குறதும் ஒரு காரணம்.”

“அப்போ அந்த பூவுல பெருசாக ஏதும் இல்லைனு நிச்சயமாக நம்புறியா?”

“ஆமாடா… அந்த பொண்ணு நிச்சயம் ஏதோ கண்கட்டி வித்தை பண்ணி என்னை ஏமாத்தி இருக்கு…”

“இது உனக்கு தெளிவாக இருந்தா எனக்கு அது போதும். சரி இனியாவது அந்த பொண்ணை பத்தி யோசிக்காமல் கொஞ்ச நேரம் தூங்கு…” என்ற ப்ரவீன் நவநீதனை படுக்கச்சொல்லிவிட்டு அவனும் படுக்கையில் விழுந்தான்.

ப்ரவீனை சமாளிப்பதற்காக நவநீதன் ஒன்றுமில்லையென்று கூறியபோதிலும் அவனுக்கு அதில் சிறிதளவு கூட நம்பிக்கையில்லை. நிச்சயம் ஏதோ மர்மம் இருக்கின்றதென நம்பினான். அதுவும் ப்ரவீன் கூறிட அந்த ஸ்லீப்பிங் பியூட்டி கதை ஏதோவொரு விஷயத்தை மறைமுகமாய் தெரிவிப்பது போல் இருந்தது. அது என்னவென்று யோசித்தபடியே நவநீதன் தன் நேரத்தை கடத்திக்கொண்டிருக்க ப்ரவீனும் அதே சிந்தனையிலேயே உழன்றுகொண்டிருந்தான்.

அவனுக்கு தெரியும் நவநீதன் அத்தனை சுலபத்தில் எதையும் விட்டுவிடமாட்டான். அவனின் கேள்விகளுக்கு ஆதாரபூர்வமாக பதில்கள் கிடைக்கும் வரை தன் தேடலை அவன் என்றும் இடைநிறுத்தியதில்லை. தன்னை அமைதிபடுத்துவதற்காகவே அவன் அவ்வாறு சொல்கிறான் என்றும் புரிந்தது. ஆனால் அவனை தனியே எதற்கும் அனுமதிக்கக்கூடாது என்று முடிவெடுத்தவன் தான் இன்று சேகரித்த தகவல்கள் அனைத்தையும் மீண்டும் அலசியபடியே அவனின் நேரத்தை கடத்தினான்.
 

anuchandran

New member
Messages
17
Reaction score
18
Points
3
தாரகை 3

நொடிக்கு நொடி

அதிகரிக்கும் சுவாரஸ்யங்கள்

விருவிருப்பான திருப்புமுனைகள்

எதிர்பாரா சம்பவங்கள் கூட

மர்மத்தின் தேடல் தான்…

காலை நவநீதனும் ப்ரவீனும் கிளம்பி மற்றவர்களுக்காக காத்திருக்க அப்போது ஆகாஷ_ம் அங்கு வந்து சேர்ந்தான். அவனை கண்டதும் ப்ரவீன்

“என்னடா முகம் ப்யூஸ் போன பல்ப் மாதிரி இருக்கு? நைட் கவனிப்பு ரொம்ப பலமாக இருந்துச்சோ?” என்று குரலில் கேலியுடன் கேட்க அவனை கொன்றுவிடும் வெறியோடு முறைத்தான் ஆகாஷ்.

அவன் முறைப்பே நேற்று என்ன நடந்திருக்கும் என்று தெரியப்படுத்திட பலமாய் சிரித்தான் ப்ரவீன்.

அப்போது நவநீதன்
“என்னடா ரச்சு ப்ரேக்கப்னு சொல்லிட்டாளா?” என்று கேட்க ஆகாஷ் பதில் சொல்வதற்குள் ப்ரவீன்

“எத்தனாவது ப்ரேக்கப்டா இது?” என்று வெகு சீரியஸாக கேட்க அவனை அடிக்கத்துரத்தினான் ஆகாஷ்.

ஒருவாறு இருவரையும் பிடித்து நிறுத்திய நவநீதன் ப்ரவீனிடம்

“டேய் சும்மா இருக்கமாட்டியா நீ?” என்று கடிந்துவிட்டு ஆகாஷிடம்

“சரி பீல் பண்ணாத… அவ கோபம் குறைந்ததும் போய் பேசு…” என்று கூட அதை ஆமோதிக்கும் முகமாக தலையாட்டிய ஆகாஷ் ப்ரவீனை பார்த்து முறைத்தான்.

சற்று நேரத்தில் பவித்ராவும் ரக்ஷிதாவும் அங்கு வந்திட ஐவரும் அந்த ரிசோட்டிலே தம் காலை உணவை முடித்துக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.

முதலில் அவ்வூரிலிருந்த ஒரு புராதன கோயிலிற்கு சென்றனர். அக்கோயிலின் அமைவிடம் வித்தியாசமானது என்று அவ்வூரார் கூறியிருக்க தன் நட்புக்களுடன் அங்கு சென்றான் நவநீதன்.

அங்கு சென்றதும் தான் அவர்கள் அனைவருக்கும் புரிந்தது ஊராரின் கூற்று சரிதானென்று. அந்த கோவில் பல அடுக்கப்பட்ட பாறைகளின் மேல்; அமைக்கப்பட்டிருந்தது. அதாவது கற்பனையில் கணிக்கமுடியாத அளவு உயரமான விண்ணைத்தொடும் மாளிகையொன்றின் இடிபாடுகள் குவிந்திருக்க அதன் மேல் அமர்ந்திருக்கும் கட்டடம் போல் இருந்தது அதன் அமைப்பு.

இயற்கையாகவே அமைந்திருந்த அந்த விஸ்தரமான பாறை அடுக்குகளின் அமைப்பில் வியந்த அவ்வூரை பல நூற்றாண்டுகளுக்கு முன் ஆட்சிசெய்த ஒரு சிற்றரசன் அதன் உச்சியில் ஒரு கோவிலை அமைத்து அவ்விடத்தின் அடிப்பகுதியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாகவும் அங்கிருந்தவர்கள் கூறினார்கள். அதோடு பல ஆண்டுகளுக்கு முன் அங்கு எழுந்திருக்கும் எம் பெருமானை தரிசிக்க வந்த நவயோகி சித்தர் அவ்விடத்திலேயே சமாதியடைந்ததாகவும் கூறினார்கள்.

அந்த கோவிலின் அமைவிடம் அவ் ஐவரையும் வியக்கச்செய்திட குறுக்கும் நெடுக்குமாக இருந்த அந்த படிக்கட்டு பாதையினூடாக கோவிலை அடைந்தார்கள் ஐவரும்.

தூரத்திலிருந்து பார்க்கும் போது அவ்விடம் எவ்வளவு ப்ரம்மிப்பாயிருந்ததோ அதை விட ப்ரம்மிப்பாயிருந்தது அக்கோவிலின் உட்கட்டமைப்பு. மேற்புறம் ஒரு வட்ட வடிவான கற்களாலான ஒரு மேடை அமைக்கப்பட்டிருக்க அதன் நடுவே ஒரு பெரிய துளை வடிவிலான ஒரு இடைவெளியிருந்தது. அந்த இடைவெளியின் அடியினில் முப்பதடி உயரத்தில் ஒரு சிவலிங்கம் அமைந்திருந்தது.அந்த கற்மேடையை சுற்றியிருந்த பாறைச்சுவரில் பல தெய்வங்களின் உருவங்கள் செதுக்கப்பட்டு அதற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தது. பல வருடங்களுக்கு முன் செதுக்கப்பட்ட சிற்பங்கள் என்றபோதிலும் மனிதர்களின் தொடுதலோ பூஜை புனஸ்காரங்களோ எவ்விதத்திலும் பாதித்ததாக தெரியவில்லை. அத்தனை நேர்த்தியாக இருந்தது அந்த சிற்பங்கள்.

இதை பார்த்திருந்த நவநீதன் யோசனையில் இருக்க பவித்ராவும் இவற்றையெல்லாம் புகைப்படங்களாய் சேமித்துக்கொண்டிருக்க ஆகாஷ் ரக்ஷிதாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் அவளை நாய்குட்டிபோல் பின்தொடர்ந்தபடியிருக்க ப்ரவீனோ தன் மண்டையை குடைந்துக்கொண்டிருந்த கேள்விக்கான பதிலை தேடும் முயற்சியில் சுற்றியிருந்த ஒவ்வொரு கட்டமைப்புக்களையும் ஆராய்ந்தபடியிருந்தான்.

ஆனால் அவன் கேள்விக்கான பதில் கிடைக்காமல் போக நவநீதனை நாடிவந்த ப்ரவீன்

“நவீ எனக்கு ஒரு விஷயம் புரியல… எப்படி இவ்வளவு நாளாகியும் அந்த சுவர் சிற்பங்கள் எந்தவித சேதாரமும் இல்லாமல் இருக்கு? எந்தவித முற்பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லாமலும் எப்படி இவ்வளவு நேர்த்தியாக இருக்குனு தான் புரியமாட்டேங்கிது. உனக்கு ஏதாவது ஐடியா இருக்காடா?” என்று ப்ரவீன் கேட்க நவநீதனுமே அதே யோசனையில் தான் இருந்தான்.

அப்போது அங்கிருந்த பூசாரியை அழைத்த நவநீதன் அவரிடம்

“ஐயா இந்த இடத்ததை பற்றி கொஞ்சம் சொல்லுறீங்களா? மத்த கோவில்களை விட இங்க என்ன விசேஷம் இருக்கு?” என்று கேட்க அந்த பூசாரியும் கூறத்தொடங்கினார்.

“தம்பி இந்த கோவில் பல நூற்றாண்டுகள் சிறப்பு வாய்ந்தது. இதோட முக்கிய சிறப்பே இது வருஷத்துக்கு ஒரு மாசம் மட்டும் தான் திறந்திருக்கும். அதாவது எந்த மாசம் இந்த ஊருல மழையில்லாமல் கடும் வெயில் மட்டும் இருக்கோ அந்த மாசம் மட்டும் கோவில் திறந்து பூஜை புனஸ்காரங்கள் நடக்கும். இங்க வைகாசியில மட்டும் தான் வெயில் ரொம்ப கடுமையாக இருக்கும். வைகாசி ஒன்னு காலையில உரிய பூஜைகளோட நடை திறப்போம். தொடர்ந்து முப்பது நாளைக்கு இங்க பூஜை புனஸ்காரங்கள் மட்டும் தான். இந்த பூஜை புனஸ்காரங்கள் இங்கு தவகோலத்துல வீற்றிருக்கும் எம்பெருமானை மகிழ்ச்சிபடுத்தி அவரோட அருட்பார்வை பெற்று அது இந்த ஊரிலுள்ள கெட்டதையெல்லாம் அழித்து ஊருக்கு நல்லதை செய்யுங்கிறது இங்க உள்ளவங்களோட நம்பிக்கை.

அதோடு வருஷம் முழுதும் தண்ணிக்கடியில லிங்கமாக இருக்கிற எம்பெருமான் இந்த ஒரு மாசம் மட்டும் தான் எல்லாருக்கும் காட்சி கொடுப்பாருங்கிறதும் இந்த கோவிலோட சிறப்பு. எம்பெருமானோட இருப்பிடமாக எப்பவும் இருப்பதாலேயே இங்க அடியில் இருக்க தீர்த்த நீருக்கு பல அபார சக்தி இருக்கு. இந்த நீர் இருக்க இடத்துல எந்த நோயோ தீயசக்தியோ அண்டாதுனு முன்னோர்கள் சொல்லியிருக்காங்க. இங்க உள்ள சித்த வைத்தியர்கள் இந்த தண்ணீரை மூலப்பொருளாக கொண்டு தான் அவங்க மருந்துகளை செய்றாங்க. ஆதியும் அந்தமுமான எம்பெருமானின் ஜடாமுடியிலிருந்து பாயும் கங்கையோட புனிதத்துக்கு சமனானது இந்த தண்ணீர்னு எல்லாரும் நம்புறோம்.” என்று அந்த பூசாரி முழுதாய் விளக்க ப்ரவீனும் நவநீதனும் அவர்களிடத்திலிருந்து கீழே எட்டிபார்க்க அங்கு சிவலிங்கம் நீரால் ஆக்கிரமிக்கப்படாது அமைந்திருக்க அதை பார்த்த நவநீதன்

“ஐயா கீழே தண்ணியிருக்கிற மாதிரி எதுவும் தெரியலையே…”

“தம்பி கீழே தெரியிற சிவலிங்கம் எப்பவும் தண்ணிக்கு அடியில தான் மறைந்திருக்கும். இந்த வைகாசி மாசம் மட்டும் தான் தண்ணியோட அளவு ரொம்ப கம்மியாகி லிங்கத்தோட அடிப்பாகத்துல மட்டும் இருக்கும்.”

“அப்போ வழமையாக எவ்வளவு தண்ணியிருக்கும்?” என்று ப்ரவீன் கேட்க

“நாம நிற்கிற உயரம் வரைக்கும் இருக்கும்.” என்று அந்த பூசாரி கூற நவநீதனும் ப்ரவீனும் அதிர்ச்சியில் விழி விரித்து நின்றனர்.

அவர்கள் அவர் கூறுவதை நம்பமுடியாமல்
“நீங்க சொல்லுறது நிஜமா ஐயா?”

“ஆமா தம்பி. வைகாசி ஒன்னு காலையில நாங்க நடை திறக்கும் போது இந்த உயரத்துக்கு தண்ணியிருக்கும். இங்க இருந்தே பூஜையை முடிச்சிட்டு பிரசாதமாக அந்த தண்ணியை தான் கொடுப்போம். வைத்தியர்களும் அப்போ தான் அந்த தண்ணியை வாங்கிப்பாங்க. ஆனா சாயங்கால பூஜைக்கு வரும் போது தண்ணி இருந்ததுக்கான அடையாளமே இருக்காது. அந்த நேரம் தான் இந்த லிங்கோற்பவரை முழுதாக பார்க்கமுடியும். அதற்கு பிறகு வைகாசி முப்பது காலை பூஜை முடிந்ததும் தண்ணி ஊறத்தொடங்கும். சாயங்கால பூஜைக்கு தண்ணி முழுசாக லிங்கத்தை மூடிடும்.” என்று கூற நவநீதனாலும் ப்ரவீனால் இதை நம்பமுடியவில்லை.

அந்த பூசாரியிடம் நன்றி கூறி அனுப்பிவைத்தவர்கள் அவ்விடம் முழுதும் ஆராய்ந்தார்கள். அவ்விடம் இப்போது அவர்களுக்கு விசித்திரமாக தெரிந்தது. அந்த பூசாரி கூறியதை அவர்களால் முற்றாக நம்பமுடியவில்லை. ஆனால் அவர் சொல்வது போல் நடப்பதற்கு ஏதும் வாய்ப்புள்ளதா என இருவரும் ஆராயத்தொடங்கும் போது அவர்கள் அருகே வந்த பவித்ரா

“நவீ இந்த இடத்தை பத்தி என்னென்னமோ சொல்லுறாங்கடா… இந்த தீர்த்தத்துக்கும் ஒரு கதை சொல்லுறாரு இந்த பூசாரி. அவர் கொடுத்த தண்ணியை என்னோட பாட்டில்ல பில் பண்ணியிருக்கேன். இதை லாப் டெஸ்ட் பண்ணி பார்க்கப்போறேன்.” என்று கூறினாள் லாப் டெக்னீஷியனாக வேலை பார்க்கும் பவித்ரா.

உடனே நவநீதன்
“நல்ல வேலை பண்ண பவி. நானே இதை பத்தி உன்கிட்ட சொல்லலாம்னு இருந்தேன். அந்த தண்ணியோட எல்லா ரிப்போர்ட்ஸ்சும் நாம திரும்பி போனதும் எனக்கு அனுப்பிவிடு.”

“அதை வைத்து என்னடா பண்ணபோற?” என்று ப்ரவீன் கேட்க

“என்னோட அடுத்த ரிசர்ச் இந்த கோவில் தான். . அதோடு இந்த இடம் டேம் ப்ரூப்பிங் முறையில் அமைக்கப்பட்டிருக்குனு நினைக்கிறேன். அதாவது இந்த பெரிய பாறைகளுக்கு தண்ணி புகவிடாத்தன்மை இருக்கனும். இல்லைனா இதை அமைத்தவங்க அதுக்கான வேலைகளை செய்திருக்கனும். அதோடு இந்த தண்ணியும் இதோட நிலையான தன்மைக்கு காரணமாக இருக்கலாம். இதை உறுதிப்படுத்தனும்னா இந்த இடத்தோட சேம்பிள் மற்றும் தண்ணியோட சேம்பிள் வேணும். அந்த பாறையை பற்றி தெரிஞ்சிக்க ஒரு கற்துண்டை எடுத்து பத்திரப்படுத்திட்டேன். இப்போ தண்ணியும் இருக்கு. இதை வைத்தே இந்த இடத்தை பற்றிய ஆராய்ச்சியை ஆரம்பிக்கலாம்.”
என்று கூறியவன் தன் ஆராய்ச்சி பார்வையை சுற்றிலும் மேயவிட்டான்.

இவர்கள் மூவரும் இப்படியிருக்க ஆகாஷோ தன் காதலியை சமாதானப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருந்தான்.

வந்ததிலிருந்து தன் பின்னாலேயே நாய்குட்டி போல் அலைந்து கொண்டிருப்பவனை கண்;டு பாவமாய் இருந்தாலும் அவனுக்கு இந்த தண்டனை தேவைதான் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டாள் ரக்ஷிதா.

அதோடு அவளுக்கும் அவனை இப்படி அலையவிடுவதில் ஒரு சிறு சந்தோஷம். அவளுக்கு நன்றாகவே தெரியும். அவளின் இந்த தண்டனை அவனது சேட்டைகளை எப்போதும் அடக்கிடப்போவதில்லை. ஆனால் அதற்காக அவனை அவன் போக்கிலேயே விட்டிட முடியாது அவளால்.

வேண்டுமென்றே அவனை அலைக்கழிப்பதற்காக அங்குமிங்கும் சென்றுகொண்டிருக்க ஆகாஷ_ம் அவளை பின்தொடர அப்போது ஒரு

நடுத்தர வயதான ஒருவர் வந்து ஆகாஷ_டம்
“யார் தம்பி நீ? நானும் ரொம்ப நேரமாக பார்க்கிறேன் நீ அந்த பொண்ணு பின்னாடியே சுத்திட்டு இருக்க. அந்த பொண்ணும் உன்னை அடிக்கடி திரும்பி பார்த்து முறைக்கிது.” என்று அந்த நபர் ஆகாஷை சந்தேகமாய் மேலும் கீழும் பார்த்தபடி கேட்க ஆகாஷ் ஏதோ கூற வருவதற்குள் ரக்ஷிதா முன் வந்து

“அண்ணா இவன் என்னை ரொம்ப நேரமாக…” என்று முடிப்பதற்குள்ளே அந்த நபர் ஆகாஷின் சட்டை காலரை பற்றி

“பொறுக்கி ராஸ்கல் கோவில்குள்ள வந்து உன் பொறுக்கி தனத்தை காட்டுறியா?” என்று ரக்ஷிதா தடுக்கும் முன் ஆகாஷை அடித்திட சத்தம் கேட்டு அங்கிருந்த மற்றவர்களும் அவ்விடத்தில் கூடிட சத்தம் கேட்டு பவித்ராவோடு உரையாடியபடியிருந்த ப்ரவீனும் நவநீதனும் அங்கு வந்து சேர்ந்தனர்.

ரக்ஷீதாவோ அந்த நபரை தடுக்கமுயன்றபடியிருக்க அந்த மனிதனோ அதை காது கொடுத்து கேட்டிடாமல் ஆகாஷை அடித்தபடியிருந்தார்.

அங்கிருந்த மற்றவர்களோ அவரை தடுக்காமலிருக்க அங்கு வந்த நவநீதனும் ப்ரவீனும் அந்த நபரிடமிருந்து பெருத்த போராட்டத்திற்கு பிறகு ஆகாஷை காப்பாற்றினர். ஆனாலும் அந்த மனிதன் ஆகாஷை அடிக்க பாய அதற்குள்

அங்கு வந்த வயதான பெண்மணி
“மயிலா…” என்றழைக்க இத்தனை நேரமாய் பாம்பாய் சீறிக்கொண்டிருந்த அந்த மனிதன் சட்டென அமைதியாகி அந்த பெண்ணின் முன் சென்று தலை குனிந்து நின்றிருக்க அந்த பெண்ணோ அவனை உக்கிரமாக முறைத்துவிட்டு கோவிலை விட்டு வெளியேற அவளை பின் தொடர்ந்தான் அந்த மனிதன்.

இத்தனை நேரம் நடந்த ஆர்பாட்டம் அந்த பெண்ணின் ஒற்றை அழைப்பில் மொத்தமாய் அடங்கிட அனைவருக்கும் அப்போது தான் மூச்சே வந்தது. அந்த மனிதனின் தாக்குதலில் ஆகாஷிற்கு முன்நெற்றியிலிருந்தும் வாயிலிருந்தும் இரத்தம் வர அவனை அழைத்துக்கொண்டு வெளியே வந்தனர் மற்ற நால்வரும்.

கோவிலுக்கு வெளியே இருந்த படிக்கட்டில் ஆகாஷை நவநீதனும் ப்ரவீனும் அமர வைத்ததும் ரக்ஷிதா விரைந்து தன் பையில் எப்போதும் இருக்கும் சிறிய முதலுதவி பெட்டியை எடுத்தவள் அதிலிருந்த பஞ்சின் உதவியோடு ஆகாஷின் காயங்களை துடைக்க முயன்றாள். ஆனால் ஆகாஷோ அவளை தடுத்துவிட்டு அவள் கையிலிருந்த பஞ்சினை வாங்கி

“ப்ரவீன் நீ துடைச்சுவிடு…” என்று கூற ப்ரவீனோ இருவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு அந்த பஞ்சினை வாங்கி துடைக்கத்தொடங்கினான். இதை பார்த்திருந்த ரக்ஷிதாவிற்கோ கண்களில் கண்ணீர் முட்டிட அங்கிருந்து நகர்ந்தாள்.

நவநீதன் பவித்ராவிற்கு கண்ணை காட்ட அவளும் ரக்ஷிதாவை பின்தொடர்ந்தார்.

பெண்கள் இருவரும் அங்கிருந்து சென்றதும் நவநீதன்
“ஏன்டா இப்படி பண்ண? பாரு அவ அழுதுட்டே போறா…”

“டேய் அவளுக்கு பயந்து தான்டா இப்படி பண்ணேன். அவ டாக்டர் தான். ஆனா எனக்கு அடிப்பட்டா அவ ரொம்ப டென்ஷனாகி ஒரு நிலையில் இருக்கமாட்டா. அதுவும் அவளால தான் எனக்கு இப்படி நடந்துச்சுனு தன்னை தானே குத்தம் சொல்லிப்பா… அப்புறம் அவளை சமாதானப்படுத்துறது ரொம்ப கஷ்டம். உங்களுக்கே தெரியும் அவ என்னோட விஷயத்துல எவ்வளவு சென்சிட்டிவ்னு. இதனால மறுபடியும் அவளுக்கு உடம்புக்கு முடியாமல் போனா என்னால அதை தாங்கிக்க முடியாதுடா. அதனால தான் அவளை இங்கேயிருந்த அனுப்புறதுக்காக அப்படி பண்ணேன்.” என்று கூற ப்ரவீனோ

“இப்போ மட்டும் பீல் பண்ண மாட்டானு நினைக்கிறியா?” என்று ஆகாஷை முறைத்துக்கொண்டே அவன் காயத்திற்கு மருந்து போட

“பண்ணுவா தான். ஆனா இப்போ அவ மனசுல நான் கோவிச்சிக்கிட்டேங்கிற விஷயம் தான் ஓடிட்டு இருக்கும். அதை சமாளிக்கிறது ஒரு பெரிய விஷயமில்லை. இன்னை இதை வச்சே அவளை எப்படி வேலை வாங்குறேன்னு வெயிட் ஆன்ட் வாட்ச்.” என்று கூற மற்ற நண்பர்கள் இருவரும் தலையாட்டியபடியே சிரித்தனர்.

ஆகாஷ் சொன்னபடியே ரக்ஷிதாவும் அவன் கோபத்தை பற்றி தான் சொல்லி புலம்பிக்கொண்டிருந்தாள். அவள் அவ்வாறு அந்த மனிதர் ஆகாஷை சட்டென தாக்குவாரென எதிர்பார்க்கவில்லை. ஏதோ விளையாட்டாய் செய்ய நினைத்தது இவ்வாறு முடியுமென்று அவள் கற்பனை கூட செய்யவில்லை. ஆனால் தான் செய்தது தவறு தான் என்றபோதிலும் ஆகாஷ் இப்படி முகம் திருப்புவாளென்று அவள் நினைக்கவில்லை. அவன் திட்டியிருந்தால் கூட அவள் மனம் சாதானமடைந்திருக்கும். ஆனால் அவன் அவளிடம் முகம் கொடுக்க மறுத்துவிட்டானென்பதே அவளால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

அப்போது ஆண்களுகள் நின்றிருந்த இடத்திற்கு வந்த மூன்று பெரியவர்கள் ஆகாஷை பார்த்துவிட்டு
“ தம்பி என்னாச்சு? ஏன் அந்த மயிலன் உங்களை அடிச்சான்?” என்று கேட்க ப்ரவீனிற்கோ ஆத்திரம் மேலோங்க அவர்களை பார்த்து முறைத்தபடியே

“என்னங்க இவனை அந்த ஆள் போட்டு அந்த அடி அடிக்கிறான். ஆனா நீங்க யாருமே தடுக்காமல் அமைதியாக பார்த்திட்டு இருந்துட்டு இப்போ வந்து என்னாச்சுனு விசாரிக்கிறீங்களா?” என்று சற்று காட்டமாக கேட்க அந்த
மூன்று பேரில் ஒருவர்

“உங்க கோபம் நியாயமானது தான் தம்பி. ஆனா எங்களால அந்த மயிலனை தடுக்க முடியாது. அவனை கட்டுப்படுத்தக்கூடிய ஒரே ஆள் அந்த கொள்ளித்தாய் கிழவி தான். அவளை தவிர அந்த மயிலனை தொடுறதுக்காக தைரியம் யாருக்கும் கிடையாது.”

“என்னது கொள்ளித்தாய் கிழவியா… இப்போ கோவிலுக்கு வந்தாங்களே அவங்களையா சொல்;லுறீங்க?” என்று நவநீதன் கேட்க

“ஆமா அவ தான். அவளோட வளர்ப்பு மகன் தான் இந்த மயிலன். அந்த கிழவி இந்த ஊரோட எல்லையில அதாவது சுடுகாட்டுக்கு பக்கத்துல தான் இருக்கு. அவளோட முழுநேர தொழிலே இந்த ஏவல் பில்லி சூனியம் தான். அதோட அவளுக்கு பட்சி சாஸ்திரம் தெரியும்னு ஊருக்குள்ள சொல்லுவாங்க. அதனால அவளையோ இந்த மயிலனையோ ஊருல யாரும் தொந்தரவு பண்ண மாட்டாங்க. அப்படி பண்ணா அவங்க அடுத்த நாள் உயிரோட இருக்கமாட்டாங்க. அதனால தான் அந்த மயிலன் உங்களை தாக்கினப்போ யாரும் எதுவும் பண்ணாமல் அமைதியாக பார்த்திட்டு இருந்தோம்.” என்று அந்த பெரியவர் கூற அப்போ நவநீதன் கேலியாய்

“அப்போ அந்த ஆளு இவனை அடிச்சி கொன்றிருந்தாலும் அப்படியே அமைதியாக தான் இருந்திருப்பீங்களா?”

“அப்படி இல்ல தம்பி… அந்த கொள்ளி தாய் கிழவி எப்படியும் அங்க வந்திடும்னு தெரியும். அதனால தான் நாங்க அமைதியாக இருந்தோம். அந்த மயிலன் பய எங்க பிரச்சினை பண்ணாலும் அந்த தாய்க்கிழவி எப்படியோ அங்க வந்து அவனை அழைச்சிட்டு போயிடும்.” என்று அந்த பெரியவர் கூறியதை கேட்டதும் நவநீதனால் அவர்களின் முட்டாள் தனத்தை கண்டு வியக்காமலிருக்கமுடியவில்லை.

“இதெல்லாம் அடி முட்டாள் தனம். இந்த காலத்திலயுமா இதெல்லாம் நம்புவீங்க?அந்த ஆளை பார்த்தாலே தெரியிது ஏதோ மனநிலை சரியில்லைனு. அவனை ஆஸ்பிடலில் சேர்த்து மருத்துவம் பார்க்காமல் பூதம் சாஸ்திரம்னு ஏதேதோ கதை சொல்லிட்டு இருக்கீங்க?” என்று ப்ரவீனும் தன் எண்ணத்தை கூற அதை கேட்டு மெலிதாய் சிரித்த அந்த மூவரில் ஒருவர்

“தம்பி உங்களுக்கு இதெல்லாம் முட்டாள் தனமாக தெரியலாம். ஆனா இது தான் நிஜம். பட்சி கொண்டவன்கிட்ட பகைவச்சிக்கிட்டா நம்ம சந்ததியே உருத்தெரியாமல் அழிந்து போயிடும்னு நம்ம பெரியவங்க சொல்லியிருக்காங்க. அதுவும் இந்த கிழவி இங்கயிருக்க ஆருட மலைக்கு போய் அங்கயிருக்க சித்தர்களோட அருட்பார்வையால பட்சி சாஸ்திரம் தெரிஞ்சிக்கிட்டவ. அந்த மலைக்கு போனவங்க யாருமே திரும்பி வந்ததில்லை அந்த கிழவியை தவிர… அந்த கிழவி முதல் தடவை அங்க போனப்போ ஒரு மரத்துக்கு அடியில ஒரு பூ கிடைச்சதாகவும் அந்த பூ அந்த கிழவியோட சக்தியை அதிகப்படுத்தியதாகவும் அதுக்கு பிறகு அந்த கிழவியை பகைச்சிக்கிட்ட யாரும் உயிரோடு இல்லைனும் சொல்வாங்க. மத்த விஷயங்களை கூட அந்த கிழவி மன்னிச்சு விட்டுடும். ஆனா இந்த மயிலன் பயலை யாராவது ஏதாவது சொல்லிட்டாலோ அடிச்சிட்டாலோ அவங்களை அந்த கிழவி சும்மா விடாது. அதுக்கு பயந்து தான் இந்த தம்பியை அவன் அடிக்கும் போது யாரும் தடுக்க வரல.” என்று கூற நண்பர்கள் மூவருக்கும் இந்த கதைகள் சற்றும் நம்பமுடியாதவையாகவும் எரிச்சலூட்டுவதாகவும் இருக்க

“சரி சார் நாங்க பார்த்துக்கிறோம். எதுக்கும் அந்த மனிஷனை ஏதாவது டாக்டர்கிட்ட காட்ட முடியுமானு பாருங்க.” என்ற நவநீதன் மற்றவர்களையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி படிக்கட்டுக்களில் இறங்கத்தொடங்கினான்.

அப்போது ப்ரவீன்
“ஏன்டா நவீன் இவங்க சொன்ன கதையை நான் இதுக்கு முதல்ல எங்கயோ பார்த்திருக்கேன்டா.” என்று கூற ஆகாஷோ

“என்னது பார்த்திருக்கியா?”

“ஆமாண்டா. ஒரு ஊருல ஒரு கிழவி இருக்கும் அதுக்கு ஒரு எடுபிடி மாதிரி ஒரு பைத்தியக்காரன் இருப்பான். அந்த கிழவி கேட்டு ஏதாவது கொடுக்கலைனா அந்த கிழவி அவங்களுக்கு சாபம் கொடுத்திடும். அந்த சாபமும் சரியாக ஒரு கிழமைல நடந்துடும் இப்படி ஒரு நாடகம் பார்த்ததாக நியாபகம் இருக்கு. அதுல அந்த பைத்தியகாரராக பசுபதி சார் தான் நடச்சிருப்பாரு. இந்த கதையும் அந்த பெரிய மனிஷங்க சொன்ன கதையும் முழுசாக ஒத்து போகுது. ஆனா அந்த சீரியல்ல அந்த கிழவிக்கு ஒரு அழகான பொண்ணு இருக்கும். இந்த கிழவிக்கும் அதே மாதிரி ஒரு அழகான பொண்ணு இருந்தா அந்த சீரியல்ல நடக்கிற மாதிரியே நானும் அந்த பொண்ணை கரெக்ட் பண்ணிருவேன்.” என்று ப்ரவீன் சீரியஸாக சொல்ல மற்ற இருவரும் தலையிலடித்துக்கொண்டனர்.

பெண்கள் இருவரும் முன்னே சென்று கொண்டிருந்ததால் அவர்களுக்கு இவர்கள் பேசியது கேட்கவில்லை.

இவ்வாறு பேசியபடியே அவர்கள் பாதி தூரம் சென்றிருக்க அவ்வூர் மக்களால் கொள்ளித்தாய் கிழவி என்றழைக்கப்பட்ட அந்த மூதாட்டி அவ்வழியின் ஓரமாய் அமர்ந்திருக்க நவநீதனும் ஆகாஷ_ம் ப்ரவீனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

அவர்கள் அங்கு வருவதை கண்ட அந்த மூதாட்டி எழுந்து நின்று அவர்கள் அனைவரையும் பார்வையாலேயே அளந்துவிட்டு நவநீதனருகே வந்து அவன் முகத்திற்கு நேரே சிரித்துவிட்டு

“விதியோட விளையாட்டுக்கு உடனே விடை கிடைச்சிட்டா அதோட சுவாரஸ்யம் காணாமல் போயிடும். ஆனா அதுக்காக தேடலை விடுறது முட்டாள் தனம். பெண்ணும் மென்மையானவ தான். பூவும் மென்மையானது தான். ஆனா அதை அனுகிப்பார்க்காமல் முடிவெடுப்பது முட்டாள் தனம். சந்தேகம் சாதாரணம் தான். ஆனா அதுவே பல சம்பவங்களுக்கு முட்டுக்கட்டையாகிடக்கூடாது. போ… உன் மனசு சொல்றதை தேடிப்போ. நிச்சயம் உன்னால முடிக்கப்படவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு.” என்று கூறிவிட்டு அந்த மூதாட்டி சிரித்துவிட்டு ப்ரவீன் முன்னே வந்;து நின்றுக்கொண்டு

“தடுக்காத… துணையா நில்லு… நீ ஒரு அரண்ங்கிற விஷயத்தை மனசுல வச்சிக்கோ. அவங்கவங்களுக்கு விதிக்கப்பட்டதை அவங்கவங்க அனுபவிச்சி தான் ஆகனும்.” என்றுவிட்டு மற்ற மூவரையும் பார்த்து

“தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பல சோதனைகள் ஆட்கொள்ளும். ஆனால் அது தற்காலிகம் தான் . நிரந்தரமில்லைங்கிற விஷயத்தை மனசுல வச்சிங்கோங்க.” என்றுவிட்டு அந்த மூதாட்டி பவித்ராவின் கையில் ஒரு தாயத்தை திணித்தாள்.

“உயிர் நீங்கும் தேவை வரும் போது இது உனக்கு உதவும்.” என்றுவிட்டு அந்த மூதாட்டி அங்கிருந்து சென்றிட அனைவரும் அவள் செல்வதையே பார்த்தபடியிருந்தனர்.

யாருக்குமே அந்த மூதாட்டி கூறியதெதுவுமே புரியாமலிருக்க தத்தமது யோசனைகளில் உழன்றபடியே படிக்கட்டுக்களினூடாக கீழே வந்தனர். சற்று நேரத்திற்கு முன் நடந்த பல குழப்பங்கள் அனைவரையும் சோர்வடையச்செய்திருக்க அனைவரும் ரிசார்ட்டிற்கு செல்வதென்று முடிவு செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.

உணவை முடித்துவிட்டு ஓய்வெடுப்பதற்காக ஐவரும் தத்தமது அறைகளில் அடைந்து கொண்டனர் .

அறைக்கு வந்ததும் ப்ரவீன் நவநீதனிடம்
“டேய் அந்த பாட்டி சொன்னதுல உனக்கு ஏதாவது புரிஞ்சிச்சா டா?அந்த பாட்டி சம்பந்தமே இல்லாமல் ஏதேதோ சொல்லுது. இதை தான் இந்த ஊருல ஏவல் பில்லி சூனியம்னு நம்புறாய்ங்க போல இருக்கு. எனக்கென்னவோ அந்த பாட்டிக்கும் மூளை சரியில்லைனு தான் தோனுது.” என்று கூற நவநீதனோ

“இல்லைடா.. அந்த பாட்டி ஏதோ மறைமுகமாக சொல்லியிருக்குனு தான் தோனுது. அதோடு அந்த விடுகதையோட விடை தான் தாங்கிறதை மறைமுகமாக சொல்லிட்டு போயிருக்கு.”

“டேய் நீ என்னடா புதுசா குழப்புற?”

“நான் குழப்பலடா… நீ நல்லா யோசித்து பாரு… அந்த பாட்டி ஏன் பொண்ணையும் பூவையும் பத்தி சம்பந்தமில்லாமல் பேசனும்? எதுக்காக அணுகி பாருனு சொல்லனும்?” என்று கேட்க அப்போது தான் ப்ரவீனும் அதை பற்றி யோசிக்கத்தொடங்கினான்.

“அதோடு அந்த பொண்ணு சொன்ன விடுகதையை நல்லா யோசித்து பாரு. பட்சி பார்க்க பர்வதம் ஏறியவன்… இதுக்கு அர்த்தம் யாரோ மலைக்கு ஏறியிருக்காங்கங்கிறது தானே. அந்த பெரியவர் சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கா? இந்த பாட்டி பட்சி சாஸ்திரம் படிக்க ஆருடமலைக்கு போனதாகவும் அங்க ஒரு பூவை பார்த்ததாகவும் அது மூலமாக அந்த பாட்டி தன்னோட சக்தியை அதிகப்படுத்திக்கிட்டதாகவும் சொன்னாரே. இந்த விடுகதை படி பட்சி பார்த்திட பர்வதம் ஏறியது அந்த பாட்டி .அதோட கண்களுக்கு வரமாய் தென்பட்ட ஒரு புஷ்பம் தான் அந்த பெரியவர் சொன்ன பூ. மண்ணடியில் புதைந்திட கால்கள் இடறி தொட்டது பர்வதத்தின் உச்சியை அப்படிங்கிறது அந்த பாட்டிகிட்ட மோதுனவங்களை மொத்தமாக அழிக்கிற சக்தி அந்த பாட்டிகிட்ட இருக்குங்கிறதை தான் அந்த பொண்ணு அப்படி சொல்லியிருக்கானு நான் நினைக்கிறேன்.” என்று நவநீதன் அந்த விடுகதைக்கான விளக்கத்தை வரிவரியாய் விலக்கிட ப்ரவீனுக்குமே அவனது விளக்கம் சரி தானனென்று பட்டது.

ஆனால் அவன் மனதினுள் இது ஏதாவது சதிவேலையாக இருக்குமோ என்ற ஐயமும் இருந்தது. ஆழம் அறியாமல் எந்தவொரு செயலையும் செய்ய அவன் தயாராக இல்லை. அதனால்

“சரி அந்த பொண்ணு சொன்னபடியே அந்த பாட்டி தான் நீ சந்திக்கப்போற நபர்னு வச்சிப்போம். ஆனா அந்த பொண்ணுக்கும் பாட்டிக்கும் ஏதும் தொடர்பு இருக்காதுனு நீ நிச்சயம் நம்புறியா?”

“அதை என்னால நிச்சயமாக சொல்லமுடியாது. ஆனா இதுல நம்ம செய்ய வேண்டிய விஷயம் ஏதோ இருக்குனு என் மனசுக்கு தோனுது.”

“இப்போ நீ என்ன தான் சொல்லுற?”

“நாம இன்னைக்கு அந்த பொண்ணை சந்திக்கப்போறோம்.”

“முடிவே பண்ணிட்டியா?”

“ஆமாடா… மத்தவங்க கிட்டயும் விஷயத்தை சொல்லி அவங்க வர்றாங்களானு கேட்போம். அவங்களுக்கு விருப்பம் இல்லைனா விட்டுடலாம்.” என்று கூற ப்ரவீனும் அதை ஒப்புக்கொண்டு மற்றவர்களிடமும் அதை பற்றி தெரிவித்தான்.

அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்திட இரவு உணவை முடித்துவிட்டு
ஐவரும் அந்த ஏரிக்கரையருகே சென்றனர்.

அவர்கள் எதிர்பார்த்தது போல் அந்த பெண்ணும் அங்கு வந்தாள் வெள்ளை
நிற தேவதையாய்.
 

anuchandran

New member
Messages
17
Reaction score
18
Points
3
தாரகை 4

மர்மமுடிச்சுகள்
மர்மமாய் அடையாளப்படுத்தவே
முடியப்பட்டவை…
அவை அவிழ்க்கப்படும்
வேளைதனில்
பல முடிச்சுக்கள்
முடியப்படுகின்றதென்பதே
நிஜம்…


நேரம் இரவு பத்தை நெருங்கியிருக்க அங்கு வந்து சேர்ந்தாள் அந்த மஞ்சளாடை அழகி. அங்கு வந்தவளை பார்த்து நவநீதன் ப்ரவீனை தவிர மற்ற மூவரும் சற்று அதிர்ச்சியுடன் பார்த்திருந்தனர்.

அப்போது பவித்ரா
“அது நிகனிகா தானே?” என்று கேட்க அப்போது ரக்ஷிதா

“ஹே உனக்கும் நிகனிகாவை தெரியுமா?” என்றுவிட்டு ஆகாஷை பார்த்து

“டேய் உனக்கு நியாபகம் இருக்காடா?” என்று கேட்க அவனும்

“ஆமா ரச்சு. இந்த பொண்ணு தானே அன்னைக்கு நமக்கு ஹெல்ப் பண்ணாங்க?” கேட்க

“ஹேய் வெயிட் வெயிட்… பவி உனக்கு எப்படி அவங்களை தெரியும்?” என்று ரக்ஷிதா கேட்க

“இவங்க தான் பவி நான் பர்சை மிஸ் பண்ணிட்டு தேடிட்டு இருக்கும்போது அதை கண்டுபிடித்து கொடுத்தாங்க.” என்று மூவரும் கூறிய காரணங்களை கேட்டிருந்த நவநீதனும் ப்ரவீனும் அதிர்ந்தனர்.

அப்போது அவர்களுக்குள் இருந்த அந்த சந்தேகம் துளிர்விட ஆரம்பித்தது. ஏற்கனவே நவநீதனுக்கும் ப்ரவீனிற்கும் அந்த பெண் தங்களை உளவு பார்த்திருக்கிறாளோ என்ற சந்தேகம் இருந்தது. இப்போது அந்த சந்தேகத்திற்கு வலு சேர்ப்பது போல் மற்ற மூவருக்கும் அவளை தெரியுமென்று கூற அந்த பெண் ஏதோ திட்டத்தோடு தான் தம்மை அணுகியிருக்கிறாளென்று அவர்களுக்கு உறுதியானது. நவநீதனும் ப்ரவீனும் தம் நட்புக்களிடம் இந்த பெண்ணை பற்றி கூறியபோது அந்த வீடியோவை காட்டிடவில்லை. அவ்வாறு காட்டியிருந்தால் அந்த பெண் யாரென்று அவர்களது நட்புக்கள் அடையாளம் காட்டியிருப்பார்கள். அப்படி காண்பித்திருந்தால் நவநீதனும் ப்ரவீனும் தம் நண்பர்களை அழைத்துக்கொண்டு இங்கு வந்திருக்க மாட்டார்கள்.

அதற்குள் அந்த மஞ்சளாடை அழகி அருகில் வந்து அவர்கள் ஐவரையும் பார்த்து சிநேகமான புன்னகைத்தாள்.

அவளை பார்த்து ரக்ஷிதா
“நீங்க நிகனிகா தானே?” என்று கேட்க ஆமென்பதாய் தலையசைத்த நிகனிகா என்றழைக்கப்பட்ட அந்த மஞ்சளாடை பெண் நவநீதனை நோக்கி

“நான் தொடுத்த விடுகதைக்கான விடை கிட்டிவிட்டதென்று நினைக்கிறேன்” என்று கேட்க அப்போது ஆகாஷ்

“ என்னங்க செந்தமிழ்ல பேசுறீங்க?அன்னைக்கு நல்லா தானே பேசுனீங்க?” என்று கேட்க அப்போதும் அதே மாறாப்புன்னகையுடன்

“அன்று நான் என் நாமத்தை தவிர வேறெதும் உரைத்ததாய் நினைவில்லையே…” என்று கூற கடுப்பான ரக்ஷிதா பலமாய் ஆகாஷின்
காலை மிதித்தாள்.

அவள் மிதித்ததும் ஆவென்று கத்த வாய்திறந்த ஆகாஷ் ரக்ஷிதாவின் முறைப்பை பார்த்ததும் வலியை பொறுத்துக்கொண்டே கஷ்டப்பட்டு சிரித்துவைத்தான்.

அப்போது ப்ரவீன் நிகனிகாவிடம்
“உங்களுக்கு என்ன வேணும்? எதனால எங்களை சந்திக்க விரும்புனீங்க?” என்று நேரடியாகவே கேட்டிட அதற்கும் அழகாய் புன்னகைத்தவள்

“என் மீதான ஐயம் நியாயமானது தான். அதுவே மனித இயல்பு. நான் கூறப்போகும் விடயத்தை கேட்டபின் தங்களின் ஐயம் அதிகமாகப்போவதும் உறுதி. ஆனால் என்னை நம்பியவர்களுக்காக நான் இதை செய்து தான் ஆகவேண்டும். அதோடு எந்த சந்தர்ப்பத்திலும் இந்த ஜீவன் இருக்கும் வரை தங்கள் ஐவருக்கும் எந்தவித தீங்கும் நேரவிடமாட்டேனென்று இந்நொடியில் உறுதியளிக்கின்றேன்.”

“தயவு செய்து என்ன விஷயம்னு விளக்கமாக சொல்லுங்க. இதை பத்தி யோசித்தே மண்டை காயுது.”
என்று நவநீதன் கூற மற்றவர்களும் ஆமோதித்தனர்.

“கூறுகிறேன். எனது நாமம் நிகனிகா. நான் இந்த பிரபஞ்சத்தின் நடுப்பகுதியை சேர்ந்தவள்.”

“நடுப்பகுதியா?அப்படியெல்லாம் கூட ஊர் பெயர் இருக்கா?” என்று ஆகாஷ் கேட்க

“அது ஊரல்ல. அது இந்த அகன்று விரிந்த பிரபஞ்சத்தின் இன்னொரு பகுதி.” என்று கூற நவநீதனோ

“பூமியின் நடுப்பகுதியில மனிதன் வாழ்வதற்கு தேவையான எதுவுமே இல்லையே. விஞ்ஞானிகளோட கண்டுபிடிப்பு படி பூமியோட நடுப்பகுதியில் அதிகளவான நிக்கலும் இரும்பும் இருப்பதாகவும் நடுப்பகுதியில் ஈர்ப்பு விசை இல்லாததால் உயிரினங்கள் வாழ்வதற்கான எந்தவித சாத்தியங்களும் இல்லைனு தானே சொல்லியிருக்காங்க.” என்று நவநீதன் கூற அப்போதும் அழகாய் புன்னகைத்தவள்

“கூறியிருப்பார்கள். ஆனால் அதனை அவர்கள் விழிவழியே கண்டதுண்டா?” என்று கேட்க

“பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு கண்டறிந்த ஒரு முடிவை பொய்னு சொல்லுறீங்களா?”

“நான் பொய்யென்று உரைக்கவில்லை. ஆனால் எதற்கும் மாற்றுக்கருத்தும் விதிவிலக்கும் இல்லையென்று தம்மால் மறுக்க முடியுமா?” என்று கேட்க

“மறுக்கமுடியாது தான். ஆனா அந்த விதிவிலக்குக்கும் ஆதாரம் வேண்டும்.” என்று விவாதிக்க தொடங்க இடைபுகுந்த ஆகாஷ்

“டேய் நான் சும்மாவே இந்த ஜாக்ரபி பாடத்துல வீக்கு. அதனால இந்த உலகத்தோட உள்பகுதி வெளிப்பகுதினு க்ளாஸ் எடுக்காமல் அவங்க என்ன சொல்லுறாங்கனு முதல்ல கேட்க விடு.” என்று கூற ப்ரவீனும்

“நவி அவங்க சொல்லி முடிக்கட்டும். அதற்கு பிறகு மற்றதை பத்தி பேசலாம்.” என்று கூற அவனும் அமைதியானான்.

“பிரபஞ்சத்தின் நடுப்பகுதியே எங்கள் உலகமான மத்யுக உலகம். பல ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் இறை தூதர்களுக்கும் துர்சக்திகொண்ட அனாகத வீரர்களுக்குமிடையில் பாரிய யுத்தமொன்று நடைபெற்றது. அந்த யுத்தத்தில் இரண்டு குழுக்களிலும் மனிதர்கள் இருந்தார்கள். இரண்டு குழுக்களுமே மும்முரமாக போர் புரிந்தது.
இறைவனின் ஆசியினாலும் இறைத்தூதர்களின் நல்லெண்ணத்தாலும் இறைத்தூதர் குழு வெற்றிவாகை சூடிட அனாகத வீரர்கள் குழு தோல்வியை தழுவினார்கள்.தாங்கள் வாழும் இந்த பிரபஞ்சம் இறைத்தூதர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அதன் பிறகு அனாகத வீரர்கள் குழு மத்யுக உலகிற்கு குடியேறவேண்டியேற்பட்டது. ” அப்போது ப்ரவீன்

“இந்த உலகத்துக்கும் உங்க உலகத்துக்கும் என்ன வித்தியாசம்? எல்லாருமே ஒரே உலகத்துல வாழ்ந்திருக்கலாமே?” என்று கேட்க

“ஆரம்பத்தில் அனைவரும் ஒன்றாய் கூடியே வாழ்ந்திருந்தனர். ஆனால் அனாகதர்கள் பிரபஞ்சத்தின் செழுமையையும் நன்மைகளையும் தம் செயல்களால் சீர்கெடச்செய்தனர். அதனால் கோபமடைந்த இயற்கை பிரபஞ்சத்தை அழிக்கும் செயலில் இறங்கிட சில மனித குழுக்கள் இறைவனின் தூதர்களின் மூலமாக இறைவனிடம் மன்னிப்பு வேண்டினர்.
அனாகதயர்களின் செயல்களால் கோபமடைந்திருந்த எம்பெருமான் மனமிரங்க மறுத்துவிட்டார். அதனால் உலகம் முற்றாய் அழியும் நிலைக்கு தள்ளப்பட செய்வதறியாது திகைத்தனர் இறைதூதர் குழுவினர்கள்.
இந்த நேரத்தில் கூட அனாகதயர்கள் தம் சீர்கேடான செயல்களை நிறுத்தாமலிருக்க பிரபஞ்சத்தை இழந்திடும் அபாயத்திலிருந்த இறைதூதர்கள் கோபமடைந்து அனாகதயர்கள் மீது போர் தொடுத்தனர். பிரபஞ்சத்தை காப்பதற்காக தொடுக்கப்பட்ட போரில் இறைதூதர்கள் வென்று தாங்கள் வாழும் இப்பிரபஞ்சத்தை தம் வசப்படுத்திவிட்டு அனாகதயர்களால் இனி எந்தவித அபாயமும் வரக்கூடாதென்றெண்ணி அவர்களை வலுக்கட்டாயமாய் பூமியின் நடுப்பகுதியில் அமைந்திருக்கும் மத்யுக உலகில் குடியமர்த்தினார்கள்.
அவர்கள் மீண்டும் பிரபஞ்சத்தின் மேற்பகுதிக்கு வரக்கூடாதென்று எண்ணி இறைதூதர்களின் சக்தியின் உதவியோடு மேற்பகுதிக்கும் கீழ் பகுதிக்கும் இடையிலொரு நெருப்பு வளையத்தை உருவாக்கினர். அந்த நெருப்பு வளையத்தின் அனல் நெருங்க முயற்சிப்பவர்களை உருத்தெரியாமல் அழித்திட அதை நெருங்க பயந்து அனாகதயர்களும் அவர்களுக்கு உதவிய மனிதர்களும் மத்யுக உலகத்திலேயே வாழத்தொடங்கினர்.” அப்போது பவித்ரா

“எல்லாம் சரி நிகனிகா. ஆனா இப்போ எதுக்கு நீங்க எங்களை தேடி வந்திருக்கீங்க?” என்று கேட்க

“இத்தனை நாட்களாக மத்யுக உலகத்திலேயே இருந்த அனாகதயர்கள் இப்போது பிரபஞ்சத்தின் மேற்பகுதிக்கு வர முயற்சிக்கின்றனர். அப்படியொரு நிகழ்வு நடந்தேறிவிட்டால் இப்பிரபஞ்சம் முழுதும் உருத்தெரியாமல் அழிந்துவிடும்.” என்று நிகனிகா கூற அப்போது நவநீதன்

“நீங்க சொல்றது எதுவும் நம்பும் படியாக இல்லை. ஆனால் உங்க கண்களிலேயோ பேச்சிலேயே பொய் இருக்க மாதிரியும் தெரியல… நாங்க என்ன பண்ணனும்னு எதிர்பார்க்கிறீங்க?”

“இறைதூதர்கள் உருவாக்கிவிட்டு சென்ற அந்த நெருப்பு வளையத்தை முற்றாக உடைத்திட அனாகதயர்களின் தற்போதைய தலைவரான அதுராதகன் முயற்சி செய்துகொண்டிருக்கிறார். அந்த முயற்சி இன்னும் இரண்டு திங்களில் வெற்றியடைந்திட வேண்டும். இல்லையெனின் எப்போதும் அனாகதயர்களால் அந்த நெருப்பு வளையத்தை உடைத்திட முடியாது.” என்று கூற ப்ரவீன்

“அது எப்படிங்க இத்தனை நூற்றாண்டுகளாக உடைக்கமுடியாத அந்த நெருப்பு வளையத்தை இப்போ உடைக்கமுடியும்?” என்று கேட்க

“இத்தனை நூற்றாண்டுகளாக அதற்கான வேலைகள் நடைபெற்ற வண்ணமே இருந்தது. அந்நெருப்பு வளையத்தின் சக்தியை குறைப்பதற்காக மத்யுக உலகத்திலுள்ள மந்திர வேள்வி மெய்யுனர்கள் வருடம் முழுதும் வேள்வி நடத்துகின்றனர். அதன் பலனாக அந்த நெருப்பு வளையத்திலிருந்து தீக்குழம்பு வெளியேறி பிரபஞ்சத்தின் மேற்பகுதியை அடையும். இவ்வாறு தொடர்ந்து நடந்ததால் அந்த நெருப்பு வளையம் தன் முக்கால் பங்கு சக்தியை இழந்துவிட்டது. இப்போது இறுதி வேள்வி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த வேள்வி இரண்டு திங்களில் நிறைவுறுகின்றது. அந்த வேள்வி நிறைவுற்ற மறுநொடியே மீதமுள்ள அந் நெருப்பு வளையமும் தன் சக்தியிழந்து தீக்குழம்பாய் மாறி பிரபஞ்சத்தின் மேல் பகுதியை வந்தடைந்துவிடும். அதன் பின் அனாகதயர்களின் வருகையை யாராலும் தடுக்க முடியாது.” என்று நிகானிகா கூற ரக்ஷிதா

“நீங்க இன்னும் நாங்க என்ன பண்ணனும்னு சொல்லவே இல்லையே…”

“கூறுகிறேன். இந்த பேராபத்தை தடுக்க இரண்டு மார்க்கங்களே உள்ளன. ஒன்று அந்த வேள்விதனை நிறுத்த வேண்டும். அல்லது நெருப்பு வளையத்தின் சக்தியை அதிகப்படுத்த வேண்டும். அந்த வேள்வியை நிறுத்துவதென்பது அத்தனை சுலபமல்ல. அந்த வேள்வி தடைபடாமலிருக்க பல மந்திரகட்டுக்களை அமுல்படுத்தியிருக்கிறார்கள்.
தன்னை அண்டநினைப்பவர்களை கூட உருத்தெரியாமல் அழித்திடும் வல்லமைகொண்டது அந்த மந்திரகட்டுக்கள். அத்தோடு மந்திரக்கட்டை உடைத்திடும் முயற்சியில் சிறு பிழையேற்படினும் கூட அது நம் உயிரையே பறித்துவிடும். ஆதலால் அந்த நெருப்பு வளையத்தின் சக்தியை அதிகரிப்பதற்கான வேலையை செய்திட வேண்டும். அதற்கு தம் ஐவரின் உதவியை நாடியே யான் இங்கு வந்துள்ளேன்.” என்று கூற ஐவரும் ஒருவர் மற்றவர் பார்த்துக்கொண்டனர்.

இந்த பெண்ணை எப்படி நம்புவது என்ற கேள்வியே அனைவர் மனதிலும் இருந்தது. ஐவருக்கும் அவள் கூறியவற்றில் சற்றும் நம்பிக்கையில்லை. நடைமுறையில் உள்ளவற்றை கூறியிருந்தால் கூட அவர்கள் நம்பியிருப்பார்கள். ஆனால் இந்த பெண்ணோ கற்பனை கதைகளை எல்லாம் நிஜமென்று கூறி அதற்கு அவர்களின் உதவியை நாடிட அவங்களுக்கு தயங்குவதை தவிர வேறு வழியிருக்கவில்லை.

அவர்களின் தயக்கத்தை உணர்ந்த நிகனிகாவிற்கு எவ்வாறு அவர்களை சம்மதிக்க வைப்பதென்று தெரியவில்லை.

ஐவரும் தத்தமக்குள் ஏதோ பேசியபடியிருக்க அப்போது ஏதோ சத்தம் கேட்டு நிகனிகாவை திரும்பி பார்த்தனர் ஐவரும்.

அவர்களெதிரே நின்றிருந்த நிகனிகா இப்போது தரையில் விழுந்துகிடந்தாள். அவள் நிலைமையை பார்த்து பதறிய ஐவரும் அவளருகே ஓடிச்சென்று அவளை எழுப்பமுயன்றனர்.

அவளை தன் மடியில் கிடத்திக்கொண்ட நவநீதன் அவள் கன்னம் தட்டி எழுப்பமுயல பவித்ரா நிகனிகாவை பரிசோதனை செய்தாள்.
அவள் நாடித்துடிப்பை பரிசோதித்தவள்

“இவங்க பல்ஸ் ரேட் ரொம்ப லோவாக இருக்குடா. உடனடியாக ஆஸ்பிடல் அழைச்சிட்டு போகலனா அவங்க உயிருக்கே ஆபத்தாகிடும்.” என்று கூற அப்போது நவநீதனின் மடியில் கிடந்தவளின் உதடுகள் மெதுவாக அசைந்தது.

“என்னுயிர் சில விநாடிகளில் இவ்வுடலை விட்டு நீங்கி என் உலகினை அடைந்திட வேண்டும். இல்லையேல் எம் முயற்சிகள் அனைத்தும் மகாராஜாவின் செவிகளை எட்டிவிடும்.” என்றுவிட்டு மீண்டும் எந்தவித அசைவுமின்றி கிடக்க ஐவருக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை.

அவர்கள் தாமதித்த நொடிதனில் அவளின் உயிர் அவ்வுடலைவிட்டு நீங்கி அவளிருப்பிடம் சென்றுவிட்டது.

அவள் உயிர் அவ்வுடலை விட்டு நீங்கியதும் நவநீதனின் மடியில் கிடந்த அவள் உடலும் சிறுசிறு பட்டாம்பூச்சிகளாய் மாறி அங்கிருந்து பறந்துசென்றது. அதை பார்ந்திருந்த நால்வரும் அதிர்ந்து பின்னே அசைய நவநீதனோ பேயறைந்தது போல் அமர்ந்திருந்தான்.

அப்போது அவ்விடத்தையே அதிரச்செய்யும் வகையில் கேட்ட அந்த சிரிப்புசத்தத்தில் ஐவரும் தன்னிலையடைந்தனர்.

தன்னிலையடைந்ததும் ஐவரும் எழுந்து நின்று அச்சிரிப்பு சத்தம் எங்கிருந்து வருகின்றதென அறிய முற்பட அப்போது அவர்கள் எதிரே தென்பட்டார் கொள்ளித்தாய் கிழவி.

அவளை அங்கு எதிர்பார்க்காத ஐவரும் அவளை ஆச்சர்யத்துடனும் அதிர்ச்சியுடனும் பார்த்தபடியிருக்க கொள்ளித்தாய் கிழவி
“அவ உலகத்துக்கு அவ போயிட்டா. அவ இனி திரும்பி இங்க வர முடியாது.” என்று அவர் கூற அப்போது ப்ரவீன்

“அப்போ உங்களுக்கு அவங்களை தெரியுமா?உங்களுக்கும் அவங்களுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்க அதற்கு நகைத்த அந்த கொள்ளித்தாய் கிழவி

“தெரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள் குவிந்து கிடக்க என்னோட ஆதிமூலம் அந்தி மூலத்தை தெரிஞ்சிக்க வேண்டிய அவசியம் எப்போ வந்தது?” என்று ஏளனமாய் கூற ப்ரவீனிற்கு அதற்கு மேல் என்ன கேட்பதென்று தெரியவில்லை.

அப்போது நவநீதனை பார்த்த கொள்ளித்தாய் கிழவி
“உயிரை பயணம் வைத்து கூடுவிட்டு கூடு தாவி இன்னொரு உலகத்துக்கு வருவது சுலபமல்ல. தெய்வசித்தமில்லாமல் அது நிறைவேறுவதும் சாத்தியமில்லை. உன் அறிவை உண்மையை கண்டறிய பயன்படுத்தாத. சிக்கல்கள் நிறைந்த முடிச்சுக்களை அவிழ்க்க உபயோகப்படுத்து. நான் சொன்னது போல தாமதிக்கிற ஒவ்வொரு நொடியும் சோதனைகள் தான்.” என்று கூற அப்போது பவித்ரா

“இப்போ நாங்க என்ன பண்ணனும்?” என்று கேட்க அவளை மெச்சுதலாய் பார்த்த கொள்ளித்தாய் கிழவி

“நீங்க ஐந்து பேரும் அவளோட உலகத்துக்கு போய் அவளை பாருங்க. அவ உங்களுக்கு உதவி பண்ணுவா. அவ உங்க சந்தேகம் அனைத்துக்கும் விடை கொடுப்பா.” என்று கூறிவிட்டு தன் இடுப்பில் தொங்கிக்கொண்டிருந்த அந்த சுருக்கு பையை எடுத்தாள் கொள்ளித்தாய் கிழவி.

அதை திறந்து அதனுள்ளே இருந்த சாம்பலை கையில் எடுத்தவள் கண் மூடி ஏதோ முணுமுணுத்துவிட்டு அதை காற்றில் வீசினாள்.

அந்த சாம்பல் ஒரு வெள்ளை நிற வளையத்தை உருவாக்கியதோடு அதிலிருந்து வெள்ளையும் மென்சிவப்புநிறமும் கலந்தாட்போல் ஒரு ஒளி வீசியது. அது பார்ப்பவர்களின் கண்களை கூசச்செய்யாதபோதிலும் அந்த இரவு நேரத்தில் அது பிரகாசமாகவே இருந்தது.

அதை பார்த்திருந்த ஐவரும் நடப்பதனைத்தையும் நம்பமுடியாமல் பார்த்தபடியிருக்க அப்போது அந்த கொள்ளித்தாய் கிழவி
“இந்த வழியாக அவ உலகத்துக்கு போங்க. அவ உங்களுக்காக காத்திருப்பா.” என்று கூற ஐவரும் சற்று தயங்கினர்.

ஆனால் இறுதியாக ரக்ஷிதா முன் வந்து
“நாம போகலாம். இவ்வளவு தூரம் வந்திடுச்சு. இனி தயங்குறதுல எந்தவித அர்த்தமும் இல்லை. இதனால எத்தனை பிரச்சினை வந்தாலும் நாம ஐந்து பேரும் சேர்ந்தே சமாளிக்கலாம்.” என்று கூற மற்றவர்களும் அதை ஏற்றுக்கொண்டு அந்த வளையத்தினுள் செல்ல தயாரானார்கள்.

அப்போது அந்த கொள்ளித்தாய் கிழவி
“இது இந்த உலக நன்மைக்காக போராட்டம். இதுல உங்களோட வெற்றி பல அனுமானிக்க முடியாத அழிவைகளை தடுக்கும். உங்களோட முன்னோக்கிய நகர்வு தான் எதிரிகளுக்கு எதிரான ஆயுதம். தயக்கம் கூட ஒருவகை சோதனை தான். கடந்து போங்க. எல்லாம் விதிப்படி சரியாக நடக்கும்” என்று கூறிவிட்டு தன் கையிலிருந்த அந்த சுருக்கு பையை ரக்ஷிதாவிடம் கொடுத்துவிட்டு

“இதுல உள்ள சாம்பல் உங்களுக்கொரு கேடயமாக இருக்கும். தகுந்த நேரம் வரும் போது இது உங்களுக்கு உதவும். ஜெயம் கிட்டட்டும்.” என்று கூறிவிட்டு அவர்களை அந்த வளையத்தினுள் செல்லச்சொன்னார். ஒவ்வொருவராய் உள்ளே நுழைய அவர்களது உருவம் மறைந்து காணாமல் போனது.

ஐவரும் உள்ளே சென்றதும் அந்த வளையம் மறைந்திட அதை பார்த்திருந்த கொள்ளித்தாய் கிழவி நேரே அங்கிருந்து ஆருட மலை நோக்கி சென்றாள்.

மலையின் அடிவாரத்தை அடைந்ததும் மலையின் உச்சியை நோக்கியபடியே கைகூப்பியவள்
“குருதேவரே உங்க சிஷ்யை கொள்ளித்தாய் வந்திருக்கேன். எனக்கு காட்சி கொடுங்க.” என்று மனதினுள் வேண்ட அடுத்த நிமிடம் அவள் முன் ஒரு உருவம் தோன்றியது.

அந்த உருவத்தை பணிந்து வணங்கிய கொள்ளித்தாய் கிழவி
“ குருதேவரே உங்க ஆசியால உலக நன்மைக்கான ஒரு செயலில் பங்பெடுப்பதற்கான பாக்கியம் எனக்கு கிடைச்சிருக்கு. நீங்க எனக்கு கற்றுக்கொடுத்த பஞ்சபட்சி சாஸ்திரத்தோட உதவியால தான் என்னால் இந்த ஐந்து பேரையும் இந்த போராட்டத்துக்கு தெரிவு செய்யமுடிந்தது. பஞ்ச பட்சி சாஸ்திரப்படி அந்த அதுராதகன் காகத்தை தன்னோட பட்சியாக கொண்டவன். அதை தெரிஞ்சிக்கிட்டுதான் அவன் இந்த மேல் பகுதி பிரபஞ்சத்தை தன் வசப்படுத்த நினைக்கிறான்.
ஆனா அது நடக்காம இருக்கனும்னா அவனோட பட்சியாக இருக்கிற ஐந்து பேரை கொண்ட ஒரு குழு மூலம் அவனை முடக்கனும். இந்த ஐந்து பேரும் பஞ்சபட்சி சாஸ்திரப்படி காகத்தை தங்களோட பட்சிகளாக கொண்டவங்க. அதோட இவங்களோட கிரகப்பலன் படி இரண்டு திங்களுக்கு இவங்களோட பலம் ரொம்ப குறைவாக தான் இருக்கும். ஆனா பாதாள உலக விதிப்படி பிரபஞ்சத்தோட அடிப்பகுதியை நோக்கி நகரும் போது மேற்பகுதியில் என்ன கிரகபலன்கள் இருக்கோ அதற்கு நேர்மாறாக இருக்கும். அதை சந்தர்ப்பமாக பயன்படுத்தி தான் அவங்க ஐந்து பேரையும் மத்யுக உலகத்துக்கு அழைச்சிட்டு போக சொன்னேன்.” என்று கொள்ளித்தாய் கிழவி தன் செயலுக்கான விளக்கத்தை தன் குருவிடம் கூற தேஜஸ் மிளிர்ந்த அவர் வதனம் அவளை பார்த்தபடியே ஒரு புன்னகையை சிந்தியது.

பின்
“கொள்ளித்தாய் நீ என் ஆஷ்டான சிஷ்யை. பஞ்சபட்சி சாஸ்திரத்தை இவ்வுலகில் உன்னை விட யாராலும் சரியாய் கணித்திட முடியாது. உன் கணிப்புக்கள் அத்தனையும் சரியே. ஆனாலும் கவனம் தேவை. விதியை வெல்லும் மதியும் உண்டு. சாஸ்திர கணிப்புக்களை உடைக்கும் சதியும் உண்டு. உன் கணிப்புக்களை மேலும் பலப்படுத்த எம்பெருமானின் அனுக்கிரஹம் உன் வசப்படவேண்டும். அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒரு காரண காரியம் உண்டு. இந்த கணிப்புக்கள் பலனை சற்று தாமதப்படுத்துமே ஒழிய நடப்பவற்றை முற்றாய் நிறுத்திடாது. ஆதலால் எம்பெருமானின் திருவடிகளை சரணடைந்து விடு. அவர் உனக்கு துணையாய் நின்றிடுவார்.”

“குருதேவா உங்க அறிவுரையை நான் ஏத்துக்கிறேன். என்னோட முதுமை இந்த போராட்டத்துக்கு எந்த காலத்துலயும் தடையாக இருக்கக்கூடாது நினைக்கிறேன். இந்த இரண்டு திங்களுக்கு என்னோட முழு ஞானத்தையும் பயன்படுத்த வேண்டியிருக்கும். அதனால் என்னோட உயிருக்கு கூட ஆபத்து வரலாம். அப்படி மட்டும் நடந்துட்டா என்னால சில விஷயங்களை சரிப்படுத்த முடியாமல் போயிடும். இந்த யுத்தம் முடியும் வரைக்கும் நான் உயிரோடு இருக்கனும் குருதேவா. அதற்கு எனக்கு உங்க உதவி வேண்டும்.”

“உன் கவலை எனக்கு புரிகிறது கொள்ளித்தாய். ஆனால் பிறப்போ இறப்போ காலசக்கரத்துடன் தொடர்பு பட்டது. அதனை இறைவனால் கூட நிறுத்திடமுடியாது. ஆனால் தள்ளிப்போடமுடியும். வைகாசி திருவிழாவிற்காக எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் காலம் வரை ஊரில் எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெற முடியாது. இக்காலத்தல் ஊரிற்குள் எமனின் வருகையென்பது சாத்தியப்படாது. அதனால் நீ கவலை கொள்ளத்தேவையில்லை. உனக்கு மரணம் சம்பவித்தாலும் மகோற்சவம் முடியும் வரை உன் ஆன்மா இவ்விடத்தை விட்டு நீங்க முடியாது. ஆதலால் நீ கவலை கொள்ள அவசியமில்லை.”

“நன்றி குருதேவா. என் முயற்சிகள் வெற்றியடைய என்னை ஆசிர்வதிங்க.” என்று கொள்ளித்தாய் கிழவி கைகூப்பி பாதம் பணிய அவரும் அவளை ஆசிர்வதித்துவிட்டு அங்கிருந்து மறைந்து போனார்.

அவர் சென்றதும் கொள்ளித்தாய் கிழவியும் அங்கிருந்து சென்றாள்.
 
Last edited:

anuchandran

New member
Messages
17
Reaction score
18
Points
3
தாரகை 5

மாய மோகினிகள்
மயக்கும் புன்னகைகளை
சிந்துமென்று அறிந்திருக்கிறேன்
ஆனால் அதன்
பிரதி நீ என்று
நான் எண்ணிடவில்லை.

அந்த வளையத்தின் வழியே மத்யுக உலகத்திற்குள் நுழைந்த ஐவரும் ஒவ்வொருராய் மங்கிய வெளிச்சத்தால் சூழப்பட்டிருந்த அந்த அறையின் தரையில் கால் பதித்ததும் அவ்வறையை சுற்றும் முற்றும் பார்த்தனர்.
அந்த அறையின் இரு ஓரங்களில் இரண்டு தீப்பந்தங்கள் மட்டும் ஏற்றப்பட்டிருக்க அவ்வறையில் அதை தவிர வேற ஏதும் இல்லை.

அப்போது திடிரென அந்த அறையின் மரக்கதவு திறக்கப்பட கையில் மூன்று விளக்குகளுடன் மூவர் அவ்வறையினுள் வந்தனர்.

அவர்கள் முழுதாய் தம்மை கருப்புநிற போர்வைகொண்டு மறைத்திருக்க அவர்கள் யாரென்று ஐவராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அந்த மூவரும் அருகில் வந்ததும் அதில் ஒரு உருவம் தன் கையிலிருந்த விளக்கை உயர்த்தி பிடித்து ஐவரின் முகத்தையும் நோட்டம் விட்டது. அந்த வெளிச்சம் அந்த விளக்கை ஏந்திக்கொண்டிருந்தவர் ஒரு நடுத்தர வயதை சேர்ந்த பெண்மணி என்று தெரியப்படுத்த அவரை ஆராய்ந்தனர் ஐவரும்.

அப்போது அந்த பெண்மணி தன் பின்னால் நின்றிருந்த மற்ற நபரை திரும்பி பார்க்க அந்த நபரும் தன் கையிலிருந்த விளக்கை உயர்த்தி பிடிக்க இரண்டு விளக்கொளிகளின் பிரகாசமும் சேர்ந்து இரண்டு குழுக்களையும் ஒருவர் மற்றொருவருக்கு அடையாளம் காட்டியது.

அவ்விரு விளக்கொளியும் பின்னாலிருந்த இருவரும் அழகிய இளம் பெண்களென அடையாளம் காட்டிட அதில் நிகனிகா இருக்கிறாளாவென ஆராய்ந்தனர் ஐவரும். ஆனால் அந்த இரண்டு பெண்களின் உருவ அமைப்பும் அதில் நிகனிகா இல்லையென்றுரைத்திட அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் பரிட்சயமில்லாத பார்வையை பரிமாறிக்கொண்டனர்.

அப்போது முன்னாலிருந்த அந்த பெண்மணி

“நீம்ங்ம்கம் தாம்னம்; நிம்கம்னிம்காம் கூம்றிம்யம் மேம்ற்ம்பம்கும்திம் பிம்ரம்பம்ஞ்ம்சம்த்ம்தைம் சேம்ர்ம்ந்ம்தம்வம்ர்ம்கம்ளாம்?” என்று கேட்ட நவநீதன் உட்பட்ட ஐவருக்கும் அவர் என்ன பேசுகிறாரென்று புரியாமல் திருதிருத்தபடிநின்றிருந்தனர்.

அப்போது பின்னாலிருந்த பெண்
“ஆம்ரிம்மாம் அம்வம்ர்ம்கம்ள்ம் தாம்ன்ம். ஆம்னாம்ல்ம் அம்வம்ர்ம்கம்ள்ம் நம்ம் மொம்ழிம் அம்றிம்யம்மாம்ட்ம்டம்ர்ம்” என்று கூற அப்போது தான் நினைவு வந்தவர் போல் தன் இடைச்செருகிலிருந்த ஒரு பையினை எடுத்து அதிலிருந்த ஐந்து மாலைகளை வெளியே எடுத்தார்.


அந்த ஐந்து மாலைகளிலும் ஒரு பச்சை நிற கல் பதிக்கப்பட்டிருக்க அதை ஐவரின் முன்னும் நீட்டி எடுத்துக்கொள்ளுமாறு சைகை காட்டினார் அந்த பெண்மணி.

அந்த சைகையை புரிந்து கொண்ட ஐவரும் அந்த மாலையை எடுத்து தம் கழுத்தில் போட்டுக்கொண்டதும் ஏதோ வித்தியாசமாக உணர்ந்தனர் ஐவரும். அந்த மாலையை அணிந்த பின் இதுவரை அவர்கள் செவிகளில் விழாத பல ஒலிகளை அவர்களால் கேட்க முடிந்தது.

அப்போது அந்த பெண்மணி
“தாங்களனைவரும் பிரபஞ்சத்தினுடைய மேற்பகுதியை சேர்ந்தவர்கள் அல்லவோ?” என்று கேட்க ஐவரும் ஒருவர் மற்றவரை பார்த்தபடி தயங்கி நின்றனர்.

அவர்கள் தயக்கத்திற்கும் காரணம் இருந்தது. ஏதோ ஒரு உந்துதலில் வந்துவிட்டனரே தவிர அவர்களுக்கு இன்னும் வரை தாம் என்ன செய்யமுனைகிறோம் என்ற தெளிவு இல்லை. அதோடு இங்கு உள்ளவர்களை பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. மேலும் அவர்களுக்கு நிகானிகா கூறியவை எவ்வளவு தூரத்திற்கு நிஜமென்று தெரியாது. அதனால் யாரேனும் தப்பானவர்களிடம் சிக்கிவிடுவோமோ என்ன பயமும் அவர்களிடமிருந்தது.

அதனால் சற்று தயக்கத்துடனே பிரவீன் அவரிடம்
“நீங்க யாரு?உங்களுக்கு எப்படி எங்களை தெரியும்?” என்று கேட்க தன் பின்னால் நின்றிருந்த பெண்ணை திரும்பிபார்த்த அந்த பெண்மணி

“தற்போது தாம் அனைவரும் என் கேள்விகளுக்கு விடையளித்தால் பின் தம் அனைவரின் கேள்விகளுக்கும் யாம் பதிலளிப்போம்.” என்று கூற அப்போது நவநீதன்

“ஆமா நாங்க பிரபஞ்சத்தின் மேற்பகுதியை சேர்ந்தவங்க தான். இப்போ சொல்லுங்க. நீங்க யாரு?” என்று கேட்ட அந்த பெண்மணியோ தன் பின்னாலிருந்த பெண்ணை பார்த்து

“நிகனி இவர்களனைவரையும் தங்குவதற்கான ஏற்பாடுகளை உடனேயே கவனி.” என்று கூற ஐவரும் பார்வையும் பின்னாலிருந்த பெண்ணின் மேல் படிந்தது.

அப்போது வெளியே யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்க அந்த பெண்மணி மற்றைய பெண்ணை பார்க்க அவள் தாமதிக்காது கதவினருகே சென்று யாரென்று பார்க்க முனைந்தாள்.

அப்போது அந்த பெண்மணி இவர்கள் புறம் திரும்பி

“தாம் அனைவரும் இப்போது சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். அதனால் பயம் கொள்ளத்தேவையில்லை. தற்சமயம் தாங்கள் அனைவரும் தங்குவதற்கென்று இவ்விடத்தின் அடித்தளத்தில் ஒரு இடத்தினை ஒழுங்கு செய்துள்ளேன். அவ்விடத்திற்கு நிகனி உங்களை அழைத்து செல்வாள். தாங்கள் அனைவரும் தற்சமயம் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். நாளை காலை மற்றவற்றை தங்களுக்கு விளக்குகிறேன்.” என்ற அந்த பெண்மணி நிகனிகா என்றழைக்கப்பட்ட அந்த பெண்ணை ஒரு பார்வை பார்த்துவிட்டு விறுவிறுவென வெளியே நடந்தாள்.

அந்த பெண்மணி வெளியே சென்றதும் பவித்ரா நிகனிகாவிடம்

“ நீ…நீங்க தான் நிகனிகாவா?” என்று கேட்க மெலிதாய் சிரித்த அந்த கருப்பு நிற போர்வைக்குள் அடங்கியிருந்த பெண்

“ஆம்.. நானே நிகனிகா. தாங்கள் மேற் பிரபஞ்சத்தில் பார்த்தது என்னுடைய மாய உருவத்தை. இதுவே என்ன நிஜம் தேகம்” என்று கூற நவநீதன்

“நீங்க நிஜமாத்தான் சொல்லுறீங்களா?” என்று சந்தேகத்துடன் கேட்க

“தாங்கள் நம்புவதற்கு மீண்டுமொரு விடுகதை தொடுக்கவா?” என்று கேட்க அப்போது அவனுக்கு அது நிகனிகாதானென உறுதியானது.

“தாங்களனைவரும் தற்போது தங்குவதற்கு ஒரு இடம் ஒழுங்கு செய்துள்ளோம். அங்கு தம் பாதுகாப்பிற்கு எந்தவித பாதிப்பும் வராது. இன்று தாங்கள் அங்கு ஓய்வெடுங்கள். நாளை காலை ஆரிமா தம் அனைவரின் கேள்விகளிற்கும் விடைகொடுப்பார்.” என்று கூற பல குழப்பங்களின் பிடியில் சிக்கியிருந்தவர்களுக்கு அப்போது ஏதும் கேட்கத்தோன்றாது அவளை பின்தொடர மட்டும் செய்தனர்.

அவர்களை அந்த அறையிலிருந்து வெளியே அழைத்து வந்த நிகனிகா எதிர்புறத்திலிருந்த படிக்கட்டுக்களினூடாக அவர்களை அடித்தளத்திற்கு அழைத்து சென்றாள்.

அந்த அடித்தளம் விசாலமாயிருந்தது. அங்காங்கே ஏற்றப்பட்டிருந்த தீப்பந்தங்களையும் ஐந்து பஞ்சணைகளையும் தவிர அங்கு வேறெந்த அலங்காரங்களும் இல்லை. அங்கு சாளரம் எதுவும் இல்லாத போதிலும் அவ்விடம் குளுமையுடனேயே இருந்தது.

அவர்களுக்கு அவ்விடத்தை காட்டியவள்
“இன்றிறோரிரவு மாத்திரம் இவ்விடத்தில் தங்கிக்கொள்ளுங்கள். நாளை காலை தமக்கு சௌகரியமானதொரு இடத்திற்கு அழைத்து செல்கிறேன். திடிரென தங்கள் வரவு முடிவானதால் வேறு பாதுகாப்பான இடத்தினை ஒழுங்கு படுத்திடமுடியவில்லை. இன்று மட்டும் பொறுத்தருளவேண்டும்.” என்று கூற அனைவரும் அதை ஏற்றனர்.

அவர்களுக்கு தேவையான மற்ற அனைத்தையும் ஒழுங்கு செய்து கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள் நிகனிகா.

பல்வேறு குழப்பங்களிலும் சிந்தனைகளிலும் இருந்ததனால் அனைவரும் பேசாது தம் படுக்கைகளில் விழுந்தனர்.

மறுநாள் காலை முதலில் கண்விழித்தான் ப்ரவீன். படுக்கையிலிருந்து சோம்பல் முறித்தபடியே எழுந்து அமர்ந்தவன் ஆகாஷ் விழித்திருப்பதை கண்டான். ஆகாஷ் விழித்திருப்பதை கண்ட ப்ரவீன் மற்றவர்கள் உறக்கம் கலையாதவாறு எழுந்து சென்று அவன் படுக்கையில் அவனருகே அமர்ந்துகொண்டவன் அவனின் சிவந்திருந்த கண்களை பார்த்து

“என்னடா நைட்டெல்லாம் நீ தூங்கலயா?” என்று கேட்க அதற்கு ஆகாஷ்

“தூங்குறதா? இவ்வளவு சத்தம் கேட்டா மனுஷன் எப்படி தூங்குறதாம்.?”

“நைட்டு நாங்க முழிச்சப்போ நீ கும்பகர்ணனோட கொள்ளுப்பேரன் மாதிரியில தூங்கிட்டு இருந்த?”

“நீங்க எல்லாரும் எப்போ முழிச்சீங்க?”

“நைட்டு ஏதேதோ சத்தம் கேட்டுட்டே இருந்துச்சு. எங்க யாருக்கும் தூங்க முடியல. அதனால முழிச்சோம்.”

“அப்புறம்?”

“அப்புறமென்ன என்ன செய்றதுனு யோசிச்சோம். அப்போ ரச்சு நாம போட்டிருந்த மாலையை கழட்டுனா சத்தம் கேட்காதுனு சொன்னா. சரினு நாங்களும் ட்ரை பண்ணி பார்த்தோம். அது வர்க் அவுட்டாகிச்சு. எல்லாரும் அதை கழட்டி வச்சிட்டு தூங்கிட்டோம்.”

“என்னையும் எழுப்பி ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல?”

“நீ தான் நல்லா தூங்கிட்டு இருந்தியே அதனால தான் உன்னை எழுப்பல.” என்று பேசிக்கொண்டிருக்க அப்போது தூரத்தில் யாரோ வரும் சத்தம் கேட்டது ஆகாஷிற்கு.

ப்ரவீன் மாலையை கழற்றியிருந்ததால் அவனுக்கு எந்த சத்தமும் கேட்கவில்லை..

ஆகாஷ் யாரோ வருவது போலிருப்பதை தெரிவிக்க ப்ரவீனும் விரைந்து சென்று தன் மாலையை கழுத்தில் மாட்டிக்கொண்டு மற்றவர்களின் உறக்கம் கலையாத வண்ணம் ஆகாஷை அழைத்துக்கொண்டு படிகட்டுகளிற்கு அருகே வந்தான்.

அங்கே நிகனிகாவும் அவளுடன் நேற்று வந்த மற்றைய பெண்ணும் கையில் இரண்டு தட்டுகளுடன் நின்றிருந்தனர். நிகனிகா கையிலிருந்த தட்டில் உயரமான ஒரு பழங்கால குவளை இரண்டிருக்க மற்ற பெண்ணின் கையிலிருந்த தட்டில் சிறிய நீர் அருந்தும் கோப்பைகள் சில இருந்தன.

அவர்கள் கையிலிருந்தவற்றை பார்த்த ஆண்கள் இருவரும் அது என்னவென்று விசாரிக்க காலைத்தேநீர் என்ன கூறினாள் நிகனிகா.
அதை அவர்கள் கையிலிருந்து வாங்கிக்கொண்ட ப்ரவீனும் ஆகாஷ_ம் நன்றி கூறிவிட்டு உள்ளே செல்ல முயல அவர்களை தடுத்தாள் நிகனிகா.

“சற்று நேரத்தில் நாம் அனைவரும் இங்கிருந்து கிளம்பிட வேண்டும். நேரத்தை இவ்விடத்தில் கடத்துவது பாதுகாப்பில்லையென ஆரிமா கூறியிருக்கிறார். ஆகையால் சீக்கிரம் இங்கிருந்து கிளம்பியாகவேண்டும்.” என்று மறைமுகமாய் ஏதோ எச்சரிக்கை கொடுக்க அதை புரிந்து கொண்டது போல் அவர்களும் சீக்கிரம் கிளம்புவதாக உறுதியளித்தார்கள்.

உள்ளே வந்த இருவரும் மற்ற மூவரையும் எழுப்பி சீக்கிரம் கிளம்புவதற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளச்சொன்னார்கள். அவர்கள் கிளம்புவதற்கும் நிகனிகாவும் மற்றைய பெண்ணும் திரும்பி வருவதற்கும் சரியாயிருந்தது.

ஐவரிடமும் வெவ்வேறு உடைப்பொதிகளை கொடுத்த நிகனிகா

“ஐவரும் இந்த உடைகளை மாற்றிக்கொள்ளுங்கள். அப்போது தான் செல்லும் வழியில் யாரேனும் தங்கள் ஐவரையும் பார்க்க நேர்ந்தால் கூட எந்தவித ஐயமும் எழாது.” என்று கூற அதை வாங்கிக்கொண்ட ஐவரும் அந்த உடைகளை மாற்றிக்கொண்டு வந்தனர்.

பெண்கள் இருவரும் நிகனிகா மற்றும் மற்றைய பெண்ணின் உதவியோடு கச்சையையும் நீண்டு அகன்று நிலத்தை தொட்டுக்கொண்டிருந்த பாவாடையும் அணிந்து கொண்டனர். அதன் மேல் ஆளுயர துண்டொன்று சேலையின் மாராப்பு போல் அவர்களது முன் பகுதியை மறைத்திட அது இருவருக்கும் பாந்தமாய் பொருந்தியது. அதோடு அந்த துண்டின் ஒரு முனை அவர்களின் பாதி முகத்தினையும் மறைத்திருந்தது. இருவருக்கும் ஒருவரை மற்றொருவர் பார்த்தபோது ஏதோ மம்மி ரிட்டன்ஸ்ஸில் வரும் அரேபிய அழகிகள் போல் இருப்பதாக தோன்றியது. அவர்களது நேர்த்திக்கு மேலும் மெருகூட்டும் விதமாக கழுத்தில் தொங்கிய அந்த கல் பதித்த மாலையும் மற்றைய அலங்காரங்களும் பாந்தமாய் பொருந்தியிருந்தது.

பெண்கள் இவ்வளவு அழகாயிருக்க ஆண்களும் அவர்களின் உடைகளில் ஆண்மைக்கேற்ற அழகுடனும் நிமிர்வுடனும் நின்றிருந்தனர். தலையில் கனமில்லாத சிறிய தலைப்பா வீற்றிருக்க பஞ்ச கச்சம் போன்ற அமைப்புடனிருந்த கீழாடையை அணிந்திருந்தனர். அவர்களது கழுத்தை பஞ்ச கச்சத்தை ஒத்த நிறமுடைய ஒரு சிறிய பட்டுத்துண்டு அரணிட்டிருந்தது.

ஆண்களுக்கு உடை மாற்றுவதில் உதவ முடியாத காரணத்தால் நிகனிகா தன் வீட்டிலிருந்த தன் தந்தையின் ஓவியத்தை எடுத்து வந்ததோடு அதை போல் ஆண்களை அலங்கரித்துக்கொள்ளுமாறு கூறினாள். அவர்களும் அவள் காட்டிய புகைபடத்திலுள்ளதை போலவே தம்மை அலங்கரித்துக்கொண்டனர்.

ஐவரும் தயாராகி வந்ததும் ரக்ஷிதாவை பார்த்த ஆகாஷ்

“ரச்சு இது என்ன பேஸ் மாஸ்க் எல்லாம் போட்டுட்டு ரெடியாகி வந்திருக்க?” என்று கேட்க ப்ரவீனும் நவநீதனும் கூட அப்போது தான் பெண்களிருவரின் உடையையும் கவனித்தார்கள். இதற்கிடையில் நவநீதனின் கண்கள் அவனை அறியாமலேயே நிகனிகாவின் மீதும் பட்டு திரும்பியது.

அப்போது நிகனிகாவுடன் நின்றிருந்த மற்றைய பெண்

“இது எம் மக்களின் வழக்கம். மங்கையர் தம் முகத்தை தனக்கானவனுக்கு மட்டுமே காட்டிடவேண்டுமென்பது இங்கு எழுதப்படாத நியதி,” என்று கூற

அப்போது ப்ரவீன்

“டேய் நவீ இங்க லவ் மேரேஜிற்கெல்லாம் வாய்ப்பே இல்லை போலடா.” என்று கூறினான். அவன் வார்த்தைகளில் ஆங்கிலம் கலந்திருந்த போதிலும் அந்த கல்லின் சக்தி அதை அவர்களின் மொழிக்கு சரியாய் மொழிபெயர்த்திருந்தது.

அப்போது அந்த பெண் உடனடியாக

“இல்லையில்லை. இங்கு காதல் திருமணங்கள் மட்டுமே நடைமுறையிலுள்ளது. தமக்கான துணைகளை தாமே தேடிக்கொள்ள வேண்டும். அவர்களால் முடியாத பட்சத்தில் அவர்கள் சன்னியாசம் பெற்றிட வேண்டும்.” என்று கூற அப்போது ப்ரவீன்

“இது நல்லா இருக்கே. ஆனா எப்படி உங்களுக்கான துணைகளை தேடுவீங்க? முகத்தை மூடிக்கிட்டு இருக்க உங்களை எப்படி ஆண்கள் தங்களுக்கானவங்கனு கண்டுபிடிப்பாங்க?”

“அதுவொன்றும் அத்தனை கடினமில்லை. எம் விழிகளை கண்டே யார் தமக்கானவளென்று அறிந்தகொள்ளும் வல்லமை அவர்களுக்குண்டு. அவர்கள் எம் விழிகளை காணும் போது அவ்வாறு தோன்றினால் எம்மை அணுகி தம் விருப்பத்தை தெரிவிப்பர். எமக்கும் விருப்பம் இருக்கும் பட்சத்தில் வீட்டிலுள்ள பெரியோர் முன்னிலையில் அவரவர் குடும்ப முறைப்படி மணந்து கொள்வோம்.” என்று கூற ஆகாஷ்

“என்னது ஒரு பொண்ணை கரெக்ட் பண்ணுறது இவ்வளவு சுலபமான வேலையா இங்க? இப்படியொரு சான்ஸ் கிடைச்சிருந்நதா இன்னேரம் எத்தனையோ பேரை கரெக்ட் பண்ணியிருப்பேனே.” என்று கூறியவனை முறைத்தாள் ரக்ஷிதா.

ஆனால் ஆகாஷ் எப்போதும் போல் பயப்டாமல் அசட்டையாக

“பேசமால் இங்கேயே ஒரு பொண்ணை கரெக்ட் பண்ணிட்டு செட்டிலாகிடலாம் போல. திட்டு வாங்க தேவையில்லை. துட்டு செலவளிக்க தேவையில்லை. கண்ணை மட்டும் கெட்டியாக வச்சிக்கிட்டா போதும்.” என்று ரக்ஷிதாவை மேலும் கடுப்பேற்றும் விதமாய் கூற ப்ரவீனோ அவன் காதருகே
வந்து

“டேய்… ரொம்ப ஆடாத. நாம திரும்பி போனதும் நடக்கக்கூடிய பின்விளைவுகளையும் கொஞ்சம் மனசுல வச்சிக்கோ.” என்று நினைவுபடுத்தினான்.

ஆனால் ஆகாஷிற்கோ ரக்ஷிதாவின் முறைப்பு சுவாரஸ்யத்தை கொடுக்க அவளை வெறுப்பேற்றி அதில் குளிர்காய முடிவு செய்திருந்தான்.

“ஏங்க இங்க யாரெல்லாம் சிங்கிளாக இருக்காங்கனு சொல்லுங்க. எனக்கு யாரு செட்டாகுறாங்கனு பார்க்கலாம்.” என்று அவன் சீரியஸாக வேலையில் இறங்கிட அப்போது இடைபுகுந்த நவநீதன்

“முதல்ல இங்கேயிருந்து கிளம்புற வேலையை பார்க்கலாம்.” என்று கூற அனைவரும் அங்கிருந்து கிளம்பினர்.

அந்த படிக்கட்டினூடாக மேலே வந்தவர்கள் அங்கிருந்த வளைவினூடாக திரும்பினர். அங்கும் சில படிகட்டுக்களிருக்க அதனூடாக மேல் தளத்தை அடைந்து அங்கிருந்து அவ்விடத்தின் வாசலிற்கு வந்தனர்.

மேலே வந்ததும் சூழ்ந்திருந்த இருளை கண்ட ஐவரும் ஏதோ கேட்க முற்பட அவர்களை தன் கண்ஜாடையாலேயே அமைதியாக இருக்கச்சொன்ன நிகனிகா அவர்களை நடைபாதை வழியாக எங்கோ அழைத்து சென்றாள்.

முதலில் அந்த பாதையில் பல மனிதர்களும் சில ஆதிகால கட்டிடங்களும் மட்டும் இருக்க போகப்போக அந்த நடைபாதை யாருமின்றி தரிசு நிலமாயிருந்தது. அவர்கள் அணிந்திருந்த அந்த கல் பதித்த மாலை தன் வெளிச்சத்தால் அவர்களுக்கு பாதையை தெளிவாய் காண்பித்தது.

சில நிமிட பயணத்திற்கு பின் அவர்களை மரங்கள் நிறைந்ததொரு காட்டுப்பகுதிக்கு அழைத்து வந்தனர் நிகனிகாவும் மற்றைய பெண்ணும்.
வரும் வழியெங்கும் ஒரு மரம் கூட இல்லையென எண்ணியபடி வந்தவர்களுக்கு இவ்விடம் ஆச்சரியத்தை கொடுத்தது.

அவ்விடம் முழுதும் மரங்கள் மட்டுமே இருந்தது. அப்போது தூரத்திலிருந்த பெரிய மரமொன்று அசைவது போலிருக்க ஐவரின் நடையும் நின்றது.
அவர்களது நடை தடைபட்டதை உணர்ந்து கொண்ட மற்றைய பெண்

“அதிலேயே ஆரிமா வசிக்கிறார்.” என்று கூற அவளை சந்தேகத்துடன் பார்த்தனர் ஐவரும்.

நிகனிகாவும் அவளின் கூற்றினை ஆமோதிக்க அப்பெண்களை பின்தொடர்வதை தவிர அவர்களுக்கு வேறு வழியிருக்கவில்லை.

ஒருவழியாக அவர்களது நடைபயணம் முடிந்திட கடைசியாக அந்த அசைந்த மரத்தின் முன் நின்றனர் அனைவரும். அங்கிருந்த கதவை திறந்துகொண்டு நிகனிகா அவர்களை உள்ளே அழைத்து சென்றாள்.

உள்ளே சென்றவர்கள் ஆச்சரியத்தில் விழி விரித்து நின்றனர். அவர்களின் ஆச்சரியத்திற்கு காரணம் அந்த வீட்டின் கட்டமைப்பே.

விருட்சத்தின் தண்டினை சுவராக கொண்டிருந்த அந்த மனையின் தரை வேரினால் வேயப்பட்டது போன்றதொரு அமைப்பிலிருந்தது. பார்ப்பவர்களை அவ்வமைப்பு அச்சப்படுத்தும் வகையிலிருந்தால் கூட அது கலைத்துவத்துடனேயே இருந்தது. அந்த தண்டுச்சுவரிலிருந்து ஆங்காங்கே சில கிளைகள் வந்திருக்க அதில் சில அலங்கார பொருட்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. அதனோடு சில விளக்குகளும் ஆங்காங்கே எரிந்தபடியிருந்தது.

அந்த தண்டுச்சுவரில் சில ஓவியங்கள் வரையபட்டு வண்ணம் தீட்டப்பட்டிருப்பதையும் பார்த்தனர். அதோடு ஒரு இடத்தில் தண்டுச்சுவரிலிருந்து வெளிவந்திருந்த கிளையில் வெள்ளையும் மென்சிவப்பு நிறமும் கலந்த நிறத்திலான பூக்கள் சில பூத்தும் சில தரையில் சிதறிக்கிடப்பதையும் பார்த்தனர். அதற்கு அருகேயே மரத்தின் வேரொன்று நிலத்தை உடைத்துக்கொண்டு மேலே வந்தது போலிருக்க அதிலிருந்து நீர் சொட்டு சொட்டாய் வடிந்து அங்கிருந்த பெரிய பாத்திரமொன்றை நிறைத்துக்கொண்டிருந்தது.

கற்பனைக்கு மிஞ்சிய அவ்வீட்டின் கட்டமைப்பினை பார்த்தவர்களுக்கு தாம் பார்ப்பதனைத்தும் நிஜமென்று உணர்வதற்கே சில விநாடிகள் பிடித்தது.
அப்போது பவித்ரா மற்ற பெண்ணிடம்

“இது நிஜமாகவே வீடுதானா?ஏதோ மரத்தோட உட்பகுதிக்குள்ள வந்தமாதிரி இருக்கு”

“இது மரத்தின் உட்பகுதி தான். இதனையே தன் இல்லமாக மாற்றியுள்ளார் எங்கள் ஆரிமா.” என்று கூற சுற்றும் பார்த்தபடியிருந்தவர்கள் வேறு ஏதும் கேட்கவில்லை.

வந்ததிலிருந்து விசித்திரங்களையும் அதிசயங்களையும் மட்டுமே பார்க்க நேர்ந்ததால் இவற்றை ஆராய்வதற்கு சலிப்பு தட்டியிருந்தது அவர்களுக்கு. அதனால் வெறுமனே அனைத்தையும் ரசித்தல் மட்டுமே போதுமானதென முடிவு செய்திருந்தனர்.

அப்போது உள்ளே இருந்து வெளியே வந்திருந்தார் ஆரிமா.

அவரை கண்டதும் நிகனிகாவும் மற்றைய பெண்ணும் அவர் முன் தன் கையிரண்டையும் குறுக்கி தலை குனிய இதனை மற்ற ஐவரும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது ஆரிமா மற்ற பெண்ணை பார்த்து
“தாத்மினி நீ சென்று இவர்களின் உணவிற்கான வேலைகளை கவனி;. நிகனி நீ இவர்களை அழைத்துக்கொண்டு ப்ரத்யேக அறைக்கு வா.” என்று கூறிவிட்டு உள்ளே நடந்தார். அவர் சொல்லிற்கேற்ப நிகனிகா வழிகாட்ட மற்ற ஐவரும் பின்தொடர்ந்தனர்.

அவர்களை ஒரு அறைக்கு அழைத்து சென்ற நிகனிகா ஒரு விரிப்பை தரையில் விரித்து அவர்களை அமரச்சொன்னாள். அவர்கள் அமர்ந்ததும் அவர்களோடு அவளும் அமர்ந்து கொள்ள அவர்களெதிரே வந்தமர்ந்தார் ஆரிமா.

அவர் அமர்ந்ததும் நவநீதன் பேசத்தொடங்கினான்.

“இப்போ வரைக்கும் நடக்கிற எதையுமே எங்களால் நம்பமுடியல. இந்தநொடி வரை நாங்க பார்க்கிற எல்லாம் உண்மையா பொய்யானு எங்களுக்கு தெரியலை.” என்று தன் மனதிலுள்ளவற்றை கூற அப்போது ஆரிமா

“தங்கள் அனைவரின் மனக்குழப்பமும் புரிகிறது. நிகனி இதற்கு முதல் நடந்த அனைத்தையும் தங்களுக்கு விளக்கியதாய் என்னிடம் கூறினாள். ஆனால் தாங்கள் ஐவரையும் ஏன் இங்கு அழைத்து வந்தோமென்ற ஐயம் உங்கள் உள்ளத்தில் இருப்பதை யான் அறிவோம். உங்கள் உள்ளங்களில் எழுந்த ஐயம் சரிதான். மேல் பிரபஞ்சத்திலிருந்து உங்கள் ஐவரை மட்டும் அழைத்து வர காரணமிருக்கிறது.

இவ்வுலகை இப்போது ஆட்சி செய்யும் அதுராதகன் முற்றும் முழுதாய் அனாகத வம்சத்தை சேர்ந்தவன். அதாவது அவனின் மூதாதையர்கள் எவரும் மானிடர்களுடன் உறவுகொண்டு தம் வம்சத்தை விருத்தி செய்திடவில்லை.. அதனால் அவன் அனாகதயர்களின் மொத்த சக்தியையும் கைவரப்பெற்றிருந்தான். அவனின் இந்த பலம் அவன் செருக்கினை அதிகரித்திட அது மொத்த பிரபஞ்சத்தையும் அவன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்திட வேண்டுமென்ற எண்ணத்தை அவன் மனதினுள் விதைத்தது. மேற்பகுதி பிரபஞ்சத்தை தன் பிடிக்குள் கொண்டுவருவதற்காக பல யாகங்களையும் வேள்விகளையும் நடத்தி வந்தான் அதுராதகன். அதன் பலனாக அவன் அந்த நெருப்பு வளையத்தினை முக்கால்பகுதி சக்தியிழக்கச்செய்துவிட்டான். அந்த வளையம் முழுதாய் சக்தியிழக்கும் முன் அதை தடுத்தி;ட வேண்டும். அதற்கு ஏதேனும் வழியிருக்கிறதா என்று ஆராய்ந்த போது தான் கொள்ளித்தாய் பற்றி அறிந்து கொண்டேன்.” என்று கூற அப்போது தான் அந்த கொள்ளித்தாய் கிழவியும் இதில் சம்பந்தப்பட்டிருப்பாரோ என்று அவர்களுக்கிருந்த சந்தேகம் தெளிவானது.

“அப்போ இதெல்லாவற்றிலுமே அவங்க பங்கும் இருந்திருக்கு?” என்று ப்ரவீன் கேட்க அவசரமாய் மறுத்த ஆரிமா

“இல்லை. தாங்கள் நினைப்பது போலல்ல. கொள்ளித்தாய் சாதாரண மானிட படைப்பல்ல. அவள் சர்வ வல்லமை பெற்ற நவயோகி சித்தர்பெருமானின் ஆஷ்டான சிஷ்யை. அவளை சந்திப்பதென்பது அத்தனை சுலபமில்லை. அவள் சம்மதமில்லாமல் அவளை சந்திக்க முயற்சிப்பது எமனிடம் நாமே நம் உயிரை தானமாய் கொடுப்பதற்கு சமன். அவள் நா உதிர்க்கும் சொற்களிற்கு அத்தனை சக்தி உண்டு. அவளை சந்திப்பதற்கு நிகனிகா பல முயற்சிகள் எடுக்கவேண்டியிருந்தது.

முதல் முறை நிகனிகா அவளை சந்திக்க முயற்சித்தபோது நிகனிகா பல விஷப்பரிட்சைகளுக்கு முகங்கொடுக்கவேண்டியிருந்தது. அதில் கடைசி பரிட்சையே அந்த நிஷாகாந்தி மலர்.” என்று கூறிவிட்டு ஆரிமா நிகனிகாவை பார்க்க அவள் தொடர்ந்தாள்.

“ஆரிமா கூறியது போல் பல விஷபரிட்சைகளுக்கு முகங்கொடுத்து என் நோக்கம் நேர்மையானதென கொள்ளித்தாயிற்கு உணர்த்தினேன். அதில் இறுதி பரிட்சையான நிஷாகாந்திப்பூவினை கண்டறிவதில் நான் தோற்றுவிடுவேனென்று எண்ணியிருந்த வேளையில் தான் தங்களனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.” என்று கூற அப்போது நவநீதன்

“நிஷாகாந்தி பூவை கண்டுபிடிக்கிறதுல என்ன இருக்கு?அது அரியவகை தாவரம் தான். ஆனா அதுக்காக அது அந்த இடத்தை தவிர வேறெங்கும் இருக்கமுடியாதுனு அர்த்தமில்லையே?”

“தங்கள் எண்ணம் சரிதான். ஆனால் கொள்ளித்தாயின் பரிட்சையின் படி நான் அவர் கூறிய அம்சங்களை கொண்ட நிஷாகாந்தி பூவினை பறித்து தலையில் சூடிக்கொள்ளவேண்டும்.” என்று கூற அப்போது ரக்ஷிதா

“அப்படி என்ன கண்டிஷன்ஸ் சொன்னாங்க அவங்க?”

“சிவபூமியில் ஜனித்திருக்க வேண்டும். எம்பெருமான் திருவுருவ தரிசனத்திற்காக தவமிருந்தது போல் அந்த காலத்தினுள் பூத்து குலுங்கி மடிந்திட வேண்டும். பௌர்ணமி நிலவின் ஒளித்தாக்கம் இருந்திடவேண்டும். இவையெல்லாம் ஒன்று சேரும் நாளில் என் நோக்கம் பரிசுத்தமானதெனின் ஒரு ஆடவனின் உதவியோடு நிஷாகாந்தி மலரினை பறித்திடும் பாக்கியம் எனக்கு கிட்டும். அவ்வாறில்லையெனின் என்னால் அந்த மலரை பறித்திடமுடியாது. அதைமீறி நான் பறிக்க முற்பட்டால் அவ்விடமே என் மாயதேகம் தீபற்றி எரிந்திடுமென்று கொள்ளித்தாய் கூறியிருந்தார். அவர் கூறியது போல் அனைத்து அமசங்களும் பொருந்திய அந்த நிஷாகாந்தி மலரை பல முயற்சிகளுக்கு பின் கண்டுகொண்டேன். ஆனால் அந்த நொடி நவநீதனின் உதவியால் அம்மலரை பறிப்பேனென்று நான் நினைத்திருக்கவில்லை. நான் அம்மலரை சூடியதும் தன் ஞானதிருஷ்டியினூடக என்னிடம் பேசிய கொள்ளித்தாய் நவநீதனும் அவரின் குழுவுமே எமக்கு உதவக்கூடியவர்களென்று கூறினார்.என்று கூற அப்போது நவநீதன்

“அப்போ அவங்க மூலமாக தான் என்னை பற்றி தெரிஞ்சிக்கிட்டிங்களா?”

“தாமே எமக்கு உதவக்கூடியவர் என்பதை மட்டுமே அவர் என்னிடம் உரைத்தார். மற்றதனைத்தும் யான்; செய்ததே.” என்று நிகனிகா கூற இதையெல்லாம் கேட்டிருந்த ப்ரவீன்

“நீங்க இன்னும் எங்களை எதுக்காக வரவைத்தீங்கனு சொல்லலை?” என்று கேட்க ஆரிமா அவர்கள் செய்யவேண்டியவற்றை ஒவ்வொன்றாய் விளக்கத்தொடங்கினாள்.
 

anuchandran

New member
Messages
17
Reaction score
18
Points
3
தாரகை 6

விளக்கங்கள்
குழப்பங்களுக்கு
விடையாகலாம்
ஆனால்
முடிவாகிடமுடியாது.

ஆரிமா தன் திட்டத்தை விளக்கி முடித்ததும் ஐவருக்கும் அதை ஏற்பதை தவிர வேறு வழியிருக்கவில்லை. ஆனாலும் அந்த திட்டத்தை மேலுமொருமுறை ஆராயவேண்டுமென்று ஐவரும் நினைத்துக்கொண்டனர்.

ஏனோ அந்த திட்டங்களில் தவறு இருப்பதாகவே ஐவருக்கும் தோன்றியது. ஆனால் இது அவர்களிடமல்ல. இங்குள்ள நிலைமையை அவர்களை விட ஆரிமாவும் நிகனிகாவுமே நன்றாக அறிவர். அதனால் அவர்கள் கூறுவதை ஒப்புக்கொள்வது தவிர வேறு வழி இருந்திடவில்லை.

ஆரிமா அனைத்தும் விளக்கியதும் அவர்கள் ஐவரையும் நிகனிகா மற்றும் தாத்மினி தலைமையில் இரு குழுக்களாக பிரித்து இருவேறு இடங்களில் தங்குவைப்பதென்று முடிவானது.

நிகனிகாவின் குழுவில் பவித்ராவும் நவநீதனும் இருக்க தாத்மினியின் குழுவில் ரக்ஷிதா, ஆகாஷ், மற்றும் ப்ரவீனும் இருந்தனர்.

ஆரிமாவின் திட்டத்தின் படி பிரிந்து செல்வதற்கு முன் தன் நட்புக்களுடன் உரையாட நினைத்தான் நவநீதன்.

நிகனிகாவிடமும் தாத்மினியிடமும் கூறிவிட்டு தன் நட்புக்களை தனியே அழைத்து வந்த நவநீதன் மற்றவர்களிடம் கழுத்திலிருந்த மாலையை கழற்றச்சொல்லிட்டு தானும் கழற்றியவன்

“அந்த ஆரிமா சொன்ன திட்டத்துல ஏதோ குளறுபடி இருக்கிறதாக உங்களுக்கு தோனலயா?” என்று கேட்க பவித்ராவும்

“எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு நவீ. நமக்கு இங்குள்ள நடைமுறை எப்படினு தெரியலைனா கூட சில விஷயங்களை கூடவா நம்மால ஊகிக்க முடியாது?” என்று கேட்க

“ஆமாடா. அவங்க சொன்ன சில விஷயங்கள் முன்னுக்கு பின் முரணாக இருக்கு. நாம எது செய்றதுனாலும் ஒருதடவைக்கு இரண்டு தடவை ஆராய்ந்து செய்யனும்.” என்று ப்ரவீன் கூற

“எனக்கும் ப்ரவீன் சொல்லுறது தான் சரினு தோன்றுது. ஆனால் நிகனிகாவும் தாத்மினியும் அதுக்கு தடையாக இருந்தா என்ன பண்றது?” என்று ரக்ஷிதா கேட்க நவநீதன்

“நாம முதல்ல இந்த இடத்தை பத்தின விவரங்களை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சேகரிக்கனும். நமக்கான நேரம் ரொம்ப கம்மியாக இருக்கு. அதோடு நாம செய்யப்போற எந்த செயலையும் செய்றதுக்கு முதல்ல நமக்குள்ள அதை பத்தி டிஸ்கஸ் பண்ணனும். இந்த மாலையை நாம கழட்டிட்டா நம்ம மொழி அவங்களுக்கு புரியாதுங்கிறது தான் நமக்குள்ள ஒரே ப்ளஸ். தேவையேற்படும் போது அதை நாம சரியாக பயன்படுத்திக்கனும். இன்னொரு விஷயம் நமக்குள்ள தொடர்பாடலுக்கு ஏதாவது வழியிருக்கானு தெரிஞ்சிக்கனும்.”

“நான் அந்த பொண்ணு தாத்மினிகிட்ட கேட்டேன். அவ அதுக்கு ஏற்பாடு பண்ணுறதாக சொல்லியிருக்கா.” என்று ப்ரவீன் கூற

“ம்ம்… அது என்னதுனு பாரு. அவங்களுக்கு தெரியாமல் அதை நாம பயன்படுத்தமுடியுமானு தெரிஞ்சிக்கோ.” என்று நவநீதன் கூற

“சரிடா. அதை நான் பார்த்துக்கிறேன். எல்லாரும் உங்களோட சுய பாதுகாப்புக்கு என்னென்ன செய்யமுடியுமோ அதை செய்துக்கோங்க. அதை மத்தவங்களுக்கு தெரியப்படுத்த முடிந்தால் தெரியப்படுத்துங்க.” என்று ப்ரவீன் கூற அனைவரும் அதை ஆமோதித்தனர்.

அவர்கள் பேசி முடித்ததும் மீண்டும் மாலையை அணிந்து கொண்டவர்கள் மீண்டும் தாத்மினி மற்றும் நிகனிகாவிடம் வந்தார்கள்.

அவர்களை அழைத்துக்கொண்டு இருவரும் இரு வேறு திசையில் நடந்தனர்.
நிகனிகா நவநீதனையும் பவித்ராவையும் அழைத்துக்கொண்டு ஆட்கள் நடமாட்டம் நிறைந்திருந்த இடத்திற்கு அழைத்து சென்றாள்.

அவ்விடம் ஆட்களாலும் வெவ்வேறு பொருட்களாலும் நிறைந்து சந்தை போலிருந்தது. நிகனிகாவிடம் கேட்டபோது அது அப்பிராந்தியத்தின் சந்தை என்றாள்.

“இங்கேயும் எங்க உலகத்தை போல நாடுகள் கண்டம்னு பிரிவுகள் இருக்கா?” என்று நவநீதன் கேட்க

“ஆம். இங்கும் பிரிவுகள் உண்டு. ஆனால் மேற்பிரபஞ்சம் போன்று அத்தனை விஸ்தரமானதல்ல. மொத்தமாக மத்யுக உலகத்திற்கு சொந்தமாக 78 பிராந்தியங்கள் உள்ளன. அவ் ஒவ்வொரு பிராந்தியமும் மனிதர்களால் ஆளப்படுகிறது. அந்த 78 பிராந்தியங்களும் 8 தேசாந்திரங்களுக்கு கீழ் நிர்வகிக்கப்படுகிறது. அந்த தேசாந்திரங்களை அனாகதய வம்சாவளியை சேர்ந்தவர்கள் நிர்வகிக்கின்றனர். அந்த 8 தேசாந்திரங்களும் மகாராஜா அதுராதகனின் ஒற்றையாட்சியின் கீழ் வருகின்றது. இப்போது நாம் நின்றிருப்பது. ருத்விது ப்ராந்தியம். இங்கு தான் மகாராஜா அதுராதகனின் ரத்ன மாளிகை அமைந்திருக்கிறது. நாம் அனைவரும் பணியாளர்களாக மாறு வேடம் பூண்டு மாளிகையினுள் புகுந்திட வேண்டும். அதற்கு தேவையானவற்றை வாங்கிடவே தங்களை இவ்விடம் அழைத்து வந்தேன்.” என்று கூற சற்று தயங்கினர் மற்ற இருவரும்.

ஆதுரி இந்த திட்டத்தை கூறிய போது அவர்களுக்கு இது பல ஆபத்துக்களை தேடித்தருமென்றே தோன்றியது. அப்போது நவநீதன்

“நிகனிகா நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. நாம கட்டாயம் அந்த மாளிகைக்கு பணியாளர்களாக போகனுமா?”

“இது தானே ஆரிமாவின் திட்டம்.” என்று நிகனிகா கேட்க அப்போது பவித்ரா

“ஆமா நிகனிகா. எனக்கும் நவீ சொல்றது சரினு தான் படுது. இன்னும் எங்களுக்கு இந்த உலகத்துல உள்ள பழக்கவழக்கங்கள் நடைமுறைகள் எதுவும் புரியலை. இது எதுவுமே தெரியாமல் மாளிகைக்குள்ள போறது அத்தனை பாதுகாப்பில்லை. ஆரிமா நேரம் கம்மியாக இருப்பதால இதை பற்றி யோசித்திருக்கமாட்டாங்க. ஆனால் அவங்க சொன்னபடியே எதை பற்றியும் தெரிஞ்சிக்காமல் உள்ளே போனா நிச்சயம் எங்களோட நடவடிக்கைகளே எங்களை காட்டிக்கொடுத்திடும். இதனால் நீங்களும் மாட்டிக்க வாய்ப்பிருக்கு இருக்கு.” என்று பவித்ரா யதார்த்தத்தை கூற நிகனிகாவிற்கும் அது சரியென்றே தோன்றியது.

“இப்போது என்ன செய்வது?” என்று கேட்க நவநீதன்

“நாம மாளிகைக்கு வெளியே தங்கலாம். இங்க இருந்தே மாளிகையை உளவுபார்க்க முடியுமானு பார்க்கனும். இங்க இருந்தபடியே நம்ம திட்டத்தை ஆரம்பிக்கலாம். உள்ள போய் ஆகனுங்கிற நிலைமை வந்தா உள்ள போகலாம்.” என்று கூற மற்றவர்களும் அதை ஒப்புக்கொண்டனர்.

மீண்டும் நவநீதன்

“நம்ம திட்டத்துல நாம செய்திருக்க மாற்றம் நம் மூன்று பேரை தவிர இப்போதைக்கு வேறு யாருக்கும் தெரியவேண்டாம். தேவையேற்படும் போது அவங்களுக்கு தெரியப்படுத்தலாம்.” என்று கூற மற்றவர்களும் சரியென்றனர்.

அதன் படியே அந்த சந்தைக்கு சென்று நிகனிகாவின் உதவியோடு தமக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டவர்கள் அதன் பின் ரத்ன மாளிகையின் பின்புறமிருந்த ஒரு சந்தினுள் அவர்களை அழைத்து சென்றாள் நிகனிகா.

அந்த சந்தின் இரண்டு புறமும் ஒரு கோர்வையாக மண்சுவற்றாலான வீடுகள் அமைந்திருந்தது.

அந்த சந்தின் முடிவிற்கு அவர்களை அழைத்து சென்றவள் அவளின் இடப்புறமிருந்த வீட்டின் கதவினை தட்டினாள்.

சற்று நேரத்தில் ஒரு பெண் கதவை திறந்து அவர்களை உள்ளே வரச்சொன்னாள். உள்ளே வந்ததும் அந்த பெண் நிகனிகாவிடம்

“மாளிகைக்கு செல்வதாக கூறினாய்?”

“ஆம். ஆனால் திட்டத்தில் சில மாற்றம். அதனாலேயே இவர்களை இங்கு அழைத்து வந்தேன்.”

“ஓ…. ஆகட்டும். அவர்களை அழைத்துக்கொண்டு கீழ் தளத்திற்கு செல். நான் சற்று நேரத்தில் வருகிறேன்.” என்றுவிட்டு அந்த பெண் உள்ளே சென்றிட நிகனிகாவும் அவர்களை அழைத்துக்கொண்டு அவள் கூறிய அடித்தளத்திற்கு சென்றாள்.

அந்த அடித்தளமும் இன்னொரு வீடு போன்றே காணப்பட்டது.

அங்கு வந்ததும் நிகனிகா

“இது என் தோழியின் இடம். தற்சமயம் அவள் மட்டுமே இங்கிருக்கிறாள். இங்கு வெளியாட்கள் யாரும் வரமாட்டர்.” என்று நிகனிகா அவ்விடத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திட மற்றைய இருவரும் அதை ஏற்றுக்கொண்டனர்.

அப்போது தன் முகத்தை மறைத்துக்ககொண்டிருந்த அந்த துண்டினை அகற்றிய பவித்ரா ஒரு பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு

“எப்படி தான் இதையெல்லாம் முழு நேரமும் போட்டிருக்கீங்க. இந்த கொஞ்ச நேரத்துலயே எனக்கு வெறுத்து போயிடுச்சு. இதுக்கு மாஸ்கே தேவலாம் போல இருக்கு.”

“தமக்கிது புதியதென்பதால் அவ்வாறிருக்கிறது. எமக்கோ இது பல வருட பழக்கம்.” என்று நிகனிகா கூற

“அதுவும் சரி தான்.” என்று நிகனிகா கூறியதை ஆமோதித்தாள் பவித்ரா.
பெண்களின் சம்பாஷணைகளில் கலந்துகொள்ளாத நவநீதன் அந்த அடித்தளம் முழுதையும் கண்களால் அலசினான்.

அங்கு படுக்கை முதற்கொண்டு விளக்கு, மேஜை, ஒரு சிறிய அலுமாரி, தண்ணீர் ஜாடி, இரண்டு முக்காலிகளென்று அனைத்தும் இருந்தது. சுற்றும் முற்றும் ஆராய்ந்தவன் நிகனிகாவின் புறம் திரும்பி

“இங்கேயிருந்தபடி மாளிகையை உளவு பார்க்க ஏதும் வழியிருக்கா?” என்று கேட்டான் நவநீதன்.

பேசியபடியே தாம் வாங்கிவந்திருந்த பொருட்களை பவித்ராவின் உதவியோடு அந்த அலுமாரியில் அடுக்கிக்கொண்டிருந்த நிகனிகா திரும்பி

“மாளிகையில் என்ன நடப்பதென்று தெரிந்து கொள்வது அத்தனை சுலபமல்ல. வெளியிலிருந்து யாரும் மாளிகையை உளவு பார்க்க முடியாதபடியே அதன் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனாலேயே ஆரிமா நம்மை மாளிகையினுள் நுழையச்சொன்னார்.”

“எல்லாம் சரி. ஆனா என்ன தான் பாதுகாப்பானதாக அமைக்கப்பட்டிருந்தாலும் அதில் உளவு பார்ப்பதற்கு ஏதுவாக ஒரு ரகசிய வழி இருக்கும். அது வெளியில் யாருக்கும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் இருக்கும். அதை கண்டுபிடிச்சிட்டா நம்ம வேலை சுலபமாகிடும்.”

“ரகசிய வழியொன்றுண்டு. ஆனால் அதன் மூலம் நாம் உளவு பார்ப்பதென்பது முடியாத காரியம். அது பல நாட்களுக்கு முன்பே மூடப்பட்டு விட்டது.” என்று கூற சற்று யோசித்த நவநீதன் ரத்ன மாளிகையின் வரைபடம் கிடைக்குமா என்று கேட்க தான் அதற்கு ஏற்பாடு செய்வதாக கூறினாள் நிகனிகா.

அப்போது மேல் தளத்திலிருந்து கீழே வந்தாள் நர்த்தகி என்றழைக்கப்படும் நிகனிகாவின் தோழி.

அவளை கண்டதும் ஏதோ பேச வாயெடுத்த நவநீதன் அமைதியாகிட அதை கண்டுகொண்டவள் போல்

“என்னிடம் ரகசியம் காத்திடுமளவிற்கா நான் சந்தேகத்திற்குரியவளாக தெரிகிறேன்?” என்று கேட்க நிகனிகாவோ அவளை முறைத்தபடியே

“உன் ஓயாத நாவினை பற்றி நன்கு தெரிந்தபின் அதன் அவசியத்தை அவர்கள் உணர்ந்திடுவர்.” என்று அவளை கேலி செய்ய

“என் புகழ் பரப்பிட நீயொருத்தியே இம் மத்யுக உலகத்திற்கு போதுமடி.” என்று சலித்துக்கொள்ள

“உற்ற தோழியாயிருந்து இதை செய்யத்தவறினால் அது நம் நட்பிற்கு அழகன்றே.” என்ற நிகனிகாவை முறைப்பது இப்போது நர்த்தகியின் முறையானது.

“என்னை கேலி செய்து கேடயம் பெற்றிடவே உனக்கு அந்த பிரம்மன் உருக்கொடுத்தானா?”

“உண்மையை உரைப்பதற்கு கேடயமெதற்கடி?என் ஆருயிர் சகியே.” என்று ஒருவரை மாற்றி ஒருவர் வம்பு செய்துகொண்டிருக்க இதை விட்டால் இப்படியே தொடருமென்றெண்ணிய நவநீதன்

“எனக்கு அந்த மாளிகையோட வரைபடம் கிடைக்குமா?” என்று கேட்க அதில் சுற்றுப்புறம் உணர்ந்த பெண்கள் இருவரும் அசடு வழிந்தனர்.

அப்போது நர்த்தகி தன் கையிலிருந்த சிறு பொதியொன்றை அவன் முன் நீட்டினான்.

“இது என் பாட்டனார் ரத்ன மாளிகையை பற்றி சேமித்து வைத்திருந்த குறிப்புகள். இது பற்றி அவரை தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள். அவர் தன் இறுதி நாட்களை எண்ணிக்கொண்டிருந்த வேளைதனில் இவற்றை என் வசம் ஒப்படைத்து இவற்றின் அடையாளத்தை அழித்திடுமாறு கூறினார். ஆனால் ஏதோவொரு உந்துதலில் நான் இவற்றை பத்திரப்படுத்தியிருந்தேன். அவர் மரணத்தின் பின் இதனை பற்றி ஆராய்ந்தபோது தான் இது ரத்ன மாளிகை பற்றிய குறிப்பேடென்று புரிந்தது.” என்று கூற அவசரமாக அதனை நர்த்தகியின் கையிலிருந்து வாங்கிய நவநீதன் அந்த பொதியிலிருந்தவற்றை எடுத்து அங்கிருந்த மேஜை மீது கடை பரப்பினான்.

அதில் பல காகிதங்களிருக்க அவை ஒவ்வொன்றாக நவநீதன் பிரித்துப்பார்க்கத்தொடங்க அவனுக்கு உதவினாள் பவித்ரா.

அந்த காகிதங்களில் எதிலும் வரைபடங்களோ ரத்ன மாளிகைகள் பற்றிய விவரங்களோ இல்லை. அந்த காகிதங்களில் இருந்தவையெல்லாம் ஒரு உருவமும் இரண்டு வரிகளில் வார்த்தை கோவைகளும். அதுவும் அந்த வார்த்தைகள் வித்தியாசமாகயிருக்க பவித்ராவிற்கும் நவநீதனுக்கும் எதுவும் புரிந்திடவில்லை.

இவற்றை பார்த்து குழம்பிப்போன நவநீதன்

“இதுல வரைபடம் ஏதும் இருக்கிற மாதிரி தெரியலையே.” என்று நர்த்தகியை பார்த்து கேட்க

“இதில் வரைபடமெதுவும் இல்லை. இதில் குறிப்புகள் மட்டுமே உள்ளது. இந்த ரத்ன மாளிகையை எம் வம்சாவளியினரே பல நூற்றாண்டுகளுக்கு முன் வடிவமைத்தனர். ரத்னமாளிகை இருநூறு வருடங்களுக்கு ஒரு முறை புனருத்தாரனம் செய்யப்படும். அதனை மேற்கொள்ளும் பொறுப்பு எம் வம்சாவளியினரையே சேரும். கடைசியாக என் பாட்டனாரின் காலத்திலேயே புனருத்தாரனம் நிகழ்ந்தது. அப்போது அவருக்கு ரத்னமாளிகையை முழுதாய் சுற்றிபார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி மாளிகையின் வரைபடத்தை வரைந்துள்ளார். அவர் ரகசியமாக செய்த இச்செயல் மன்னரின் செவிகளை எட்டிட அதன் விளைவாக அவரின் நாவும் கையும் துண்டிக்கப்பட்டதோடு உண்மையான பிரதி தீக்கு இறையானது. ஆனால் அதிஷ்டவசமாக என் பாட்டனார் வரைபடத்தை வரைவதற்கு முன் அவர் மட்டும் அனுமானிக்கும் வகையில் சில குறிப்புக்களை குறித்து வைத்திருந்தார். அதனையே என்னிடம் கொடுத்து அழித்திடக்கூறியிருக்கிறார்.”

“இந்த விஷயம் உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று பவித்ரா கேட்க

“இவையனைத்தும் என் பாட்டனாரின் உயிர்த்தோழர் ஒருவரின் மூலம் அறிந்துகொண்டேன். ஆனால் அவருக்கு பாட்டனார் வசம் இப்படியானதொரு குறிப்புத்தொகுப்பு இருப்பது தெரியாது. அவர் பாட்டினாரின் இந்த நிலைமைக்கு காரணம் என்னவென்று விளக்கியபோதே இத்தனை விவரங்களையும் அறிந்துகொண்டேன். பாட்டனார் கொடுத்த குறிப்பு ஒன்றின் வாசகத்தில் இருந்த சில சொற்களை நான் ரத்னமாளிகையின் வாயிலில் கண்டேன். அச்சந்தர்ப்பத்திலேயே இந்த குறிப்புக்கள் மாளிகை பற்றியதென அறிந்துகொண்டேன்.” என்று நர்த்தகி அனைத்தையும் விளக்கினாள்.

அப்போது நவநீதன்

“சரி. எனக்கு இந்த மொழி புரியலை. இதை ஒருதடவை படிச்சி காட்ட முடியுமா?பவி நீ நர்த்தகி படிச்சிக்காட்ட அதை எழுது. எனக்கு நிகனிகா படிச்சி காட்டட்டும். நான் எழுதிக்கிறேன்.” என்று கூற பவித்ராவும் அவன் சொன்னபடி செய்யத்தொடங்கினாள்.

வினாடிகள் கடந்திருக்க அனைத்தையும் எழுதிமுடித்ததும் நவநீதன் நிகனிகா மற்றும் நர்த்தகியிடம்

“உங்களுக்கு தெரிந்;த அரண்மணையில் இருக்கிற இடங்களையும் அது எந்தெந்த திசையில் இருக்குதுங்கிற விவரத்தையும் ஒரு வரைபடமாக வரைந்து தாங்க. நானும் பவியும் இந்த குறிப்புகளிலிருந்து ஏதாவது கண்டுபிடிக்கமுடியுமானு பார்க்கிறேன்.” என்று கூற பெண்கள் இருவரும்
அவன் கூறியபடி செய்யத்தொடங்கினர்.

இங்கொரு முயற்சி நடந்துக்கொண்டிருக்க மற்றவர்களை அழைத்து சென்ற தாத்மினி அவர்களை அந்த பிராந்தியத்தின் வேறொரு முனைக்கு அழைத்து சென்றாள்.

செல்லும் வழியில் ஒருவன் தாத்மினியை வழிமறித்து

“தாத்மி யாரிவர்கள்? இதற்கு முதல் இவர்களை எங்கும் பார்த்ததாய் நினைவில்லையே?” என்று அத்வைதன் என்றழைக்கபடும் நபர் கேட்க

தாத்மினியோ
“உமக்கு உம் காதலி யாரென்றே சரியாய் நினைவிருக்காத பட்சத்தில் இவர்களை நினைவிருக்க வாய்ப்பிருக்குமா?” என்று கூற தலையை நாலாபுறமும் அசைத்த அத்வைதன்

“நான்…நீ…” என்றவன் தடுமாற அதைகண்ட தாத்மினி

“என்ன இப்போது பேசவேண்டியதையும் மறந்துவிட்டிரா?” என்று அவனை மீண்டும் வாரிட

“உன்னிடம் நாகொடுப்பதற்கு முன் என் மதியை பயன்படுத்தத்தவறியதின் விளைவை அனுபவிக்கிறேன் இப்போது.”

“விஷயம் புரிந்ததல்லவா? இப்போது யாம் அனைவரும் செல்லும் வழிவிட்டு விலகி நில்லும்.” என்று கூறிவிட்டு மற்றவர்களை அழைத்துக்கொண்டு அவள் முன்னே நடக்க அத்வைதனோ தன்னை நொந்துக்கொண்டு அங்கிருந்து சென்றான்.

இதை பார்த்திருந்த ப்ரவீன் ஆகாஷிடம்

“எங்க போனாலும் உன்னை மாதிரியே ஒருத்தன் இருக்கான்டா.” என்று கூற அதை ஆமோதிப்பது போல் ரக்ஷிதாவும்

“சரியாக சொன்ன ப்ரவீன். இப்போ இவங்க அந்த ஆளை அசிங்கப்படுத்துன மாதிரி தான் இவனையும் நிறைய பொண்ணுங்க கலாய்ச்சிருக்கும்.” என்று கூறியபடியே ஆகாஷை முறைக்க அவனோ வெளியே இளித்தபடியே உள்ளே

“அவ சும்மா இருந்தாலும் இவன் விடமாட்டான் போல . டேய் நீ தனியாக மாட்டும் போது உனக்கு இருக்குடா.” என்று மனதிற்குள் ப்ரவீனை திட்டிக்கொண்டான்.

இவர்கள் மூவரும் சற்று பின்னால் வந்தபடியே மெதுவான குரலில் பேசிக்கொண்டதால் இவர்கள் பேசியதெதுவும் தாத்மினியிற்கு கேட்கவில்லை.

சுமார் அரை மணித்தியால நடைபயணத்திற்கு பின் அவர்களை ஒரு கட்டடத்தின் முன் றிறுத்தினாள்.

அந்த கட்டடம் அந்த நீண்ட பரந்த வெளியில் பாதி இடத்தினை ஆக்கிரமித்திருக்க அதன் அமைப்பு சற்று வித்தியாசமாக இருந்தது. அதன் அமைப்பு நிலத்திற்கடியிலிருந்து முளைத்த கள்ளிச்செடிபோல் இருக்க கள்ளிச்செடியில் காணப்படும் முட்கள் போல் அந்த கட்டிடத்தை பனித்துளிகள் ஆக்கிரமித்திருந்தது. அதை பார்த்து வியந்தவர்கள் சுற்றும் முற்றும் பார்த்தனர்.

அவர்கள் தேடலிற்கான அர்த்தத்தை புரிந்து கொண்ட தாத்மினி

“இவை பார்ப்பதற்கு பனிக்கட்டிகள் போன்றிருந்தாலும் இவை பனிக்கட்டிகளல்ல. இவையனைத்தும் வேள்வியின் வெற்றியை தெரிந்து கொள்வதற்காக மெய்யுனர்களால் உருவாக்கப்பட்ட மாய சிமிழிகள்” என்று தாத்மினி விளக்க அதை கேட்ட ப்ரவீன்

“சிமிழிகள்னா?” என்று வினவ

“இக்கட்டிடத்தின் மேற்பரப்பு முழுதும் லட்சக்கணக்காக மாயசிமிழிகள் உள்ளன. வேள்வியின் விளைவால் நெருப்பு வளையத்தின் சக்தி குறைவடையும் வீதத்திற்கு அமைவாக இங்குள்ள மாய சிமிழிகள் ஒளிரும். நான் அறிந்தவரை நெருப்பு வளையத்தின் சக்தி மாய உருவம் பெற்று இங்கு தான் சேமிக்கப்படுகிறது.” என்று கூற அப்போது ரக்ஷிதா

“ஆனா நிகனிகா நெருப்புவளையம் தன்னோட நெருப்பை மேற்பகுதிக்கு அனுப்புறதாக தானே சொன்னாங்க?” என்று கேட்க

“ஆம் அது உண்மை தான். ஆனால் நெருப்புவளையத்தின் சக்தியை குறைப்பதற்கு அதன் சக்தியை அதிலிருந்து களைந்திட வேண்டும். களையப்பட்ட சக்தியியை உரிய விதத்தில் பத்திரப்படுத்தாவிட்டால் அது உருமாறி மீண்டும் நெருப்புவளையத்தை அடைந்திட வாய்ப்புள்ளது. அதனாலேயே களையப்பட்ட சக்தியை மாந்திரீக சக்தியின் உதவியோடு மாய சிமிழியினுள் அடைத்திடுவர். சக்தியை இழந்த நெருப்பு துகள்களே மேற்பகுதி பிரபஞ்சத்திற்கு அனுப்பப்படுகிறது.” என்று கூற அவளது அனுபப்படுகிறது என்ற வார்த்தை மற்றவர்களை ஸ்தம்பிக்கச்செய்தது.

“என்னது அனுப்பப்படுதா?அப்போ இதை யாரோ வேணும்னு தான் செய்றாங்களா?” என்று பவித்ரா கேட்க

“ஆம். சக்தியிழந்த நெருப்புத்துகள்கள் இங்கேயே தங்கிவிட்டால் அது மத்யுக உலகத்திற்கு பல பாதிப்புக்களை ஏற்படுத்திடுமென்பதாலும் மாயசிமிழிகளுக்குள் அடைந்திருக்கும் சக்தி தவறுதலாக வெளிப்பட்டுவிட்டால் அந்த துகள்களுடன் சேர்ந்துவிடுமென்ற அச்சத்தாலும் அவற்றிலிருந்து சக்தி களையப்பட்டதும் உடனடியாக அவை மாயப்புயலினாடாக வெளியேற்றப்படுகிறது.” என்று தாத்மினி கூறியதை கேட்டு சற்று அதிர்ந்து தான் போனார்கள் மூவரும்.

இத்தனை நாட்களாய் எரிமலை வெடிப்பினை இவர்கள் இயற்கையின் சீற்றமென்று எண்ணியிருக்க இன்றோ அது உலகின் இன்னொரு பகுதியிலுள்ளவர்களின் சதியென்று புரிந்துகொண்டனர்.

செய்திகளில் பார்த்த எரிமலை வெடிப்புக்களின் பாதிப்புக்கள் மூவரின் கண்முன்னே வர அவர்களுள் எழுந்த கோபம் அவரவர் விழிகளில் வெளிப்பட்டது.

அதை உணர்ந்தது போல் தாத்மினியும்

“சினம் கொள்ள இது உரிய நேரமுமோ தகுந்த இடமுமோ அல்ல. தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் நாம் தோல்விக்கான படிகளை நோக்கி நகர்கிறோமென்று மனதில் கொள்ளுங்கள்.” என்று கூற மற்றவர்களுக்கும் அதை ஒப்புக்கொள்வதை தவிர வேறு வழியிருக்கவில்லை.

“இப்போ நாம எங்க தங்கப்போறோம்.” என்று ஆகாஷ் கேட்க

“ஆரிமாவின் திட்டப்படி நாம் இங்கு உதவியாளர்களாக பணியாற்றப்போகிறோம். நம் திட்டப்படியே நீங்கள் அனைவரும் ஊமையர்களாக நடித்திடவேண்டும். எந்த காரணம் கொண்டும் தாம் அனைவரும் யாரென்று மற்றவர்கள் அறிந்திடக்கூடாது. அவ்வாறு தெரிந்திடும் பட்சத்தில்…” என்று நிறுத்த

“அப்படி தெரிந்த ஆட்களை ஆரிமா சொன்ன மாதிரி செய்யனும். அதானே?” என்று ப்ரவீன் கூற

“ஆம். நான் இப்போது தங்களனைவரையும் உள்ளே அழைத்து செல்லப்போகின்றேன். அவர்கள் முன் எக்காரணம் கொண்டும் தலையை உயர்த்திட வேண்டாம். கடைக்கண் பார்வை கூட ஆபத்து தான். நினைவில் கொள்ளுங்கள்.” என்று அவர்களை எச்சரித்;துவிட்டு உள்ளே அழைத்து சென்றாள்.

அவர்களை உள்ளே அழைத்து சென்ற தாத்மினி யாரிடமோ ஏதோ கூறிவிட்டு இவர்களை ஒரு அறைக்குள் அழைத்து சென்றாள்.

அங்கொருவர் அங்குமிங்கும் அலைந்தபடி ஏதோ செய்தபடியிருக்க அவரின் முன் தலைகுனிந்து நின்றவள்

“உதவிக்கு சிலரை அழைத்து வந்துள்ளேன்.” என்று கூற அங்கிருந்த நபர் நொடி நின்று நிதானித்துவிட்டு

“உன் பெயரென்ன?” என்று பொதுவாக கேட்க யாரை கேட்கிறாரென்று அறிந்து கொள்ள தலையுயர்த்த முயன்ற மூவருக்கும் தாத்மினியின் வார்த்தைகள் நினைவு வர மூவரும் அதே நிலையில் நின்றனர்.

அவர்கள் மூவரையும் ஆழ்ந்த பார்த்த அந்த நபர்

“இவர்களை மதினாவிடம் அறிமுகப்படுத்திவிட்டு இவர்களுக்கான வேலைகளை பிரித்துக்கொடு.” என்று கூறிவிட்டு அந்த நபர் தன் வேலையை தொடர அவர் கூறியபடி மதினா என்ற பெண்ணிடம் அவர்களை அறிமுகப்படுத்திவிட்டு அவர்;களை வெளியே அழைத்து வந்தவள் அவர்களிடம் சில விடயங்களை தெளிவுபடுத்திவிட்டு அவ்விடத்தின் பின்புறத்திற்கு அழைத்து சென்றாள்.
 

anuchandran

New member
Messages
17
Reaction score
18
Points
3
தாரகை 7

காண்பவை
உணர்பவை
அறிந்தவை
அனைத்து
அறிந்திடாத
உணர்ந்திடாத
கண்டிடாத
கற்பனைகளே…

பவித்ராவும் நவநீதனும் தம் வேளையில் மும்முரமாகயிருக்க தாத்மினியும் நர்த்தகியும் தமக்கான வேலையை முடித்துவிட்டு அதனை பவித்ரா நவநீதனிடம் ஒப்படைத்தவர்கள் அவர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக வெளியே வந்தனர்.

அவ்வீட்டின் சமையறையினுள் நுழைந்த பெண்கள் சமையலுக்கான வேலையை கவனித்தபடியே ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.

“நிகனி இன்றைய சமையல் சற்று கடினமாகத்தான் இருக்கக்கூடும்.” என்று நர்த்தகி ஆரம்பிக்க

“சமைப்பதில் என்னவடி கடினம்?” என்று நிகனிகா கேட்க

“எனக்கு ருசிப்பது மட்டுமே சுகம். மற்றவையனைத்தும் கடினம் தான்.” என்றவளை திரும்பி பார்த்து கேலியாய் முறைத்த நிகனிகா

“அது இவ் மத்யுக உலகமே நன்கறிந்த விடயமாயிற்றே.” என்றவளின் முன் தன் விரலை நீட்டிய நர்த்தகி

“இந்த சில நாட்களாய் உன் வாய் துடுக்கு எல்லை கடந்து சென்றுவிட்டது நிகனி.”

“உண்மையை கூறினால் அதற்கு பெயர் வாய்துடுக்கா நர்த்தி?”

“உண்மை என்ற உண்மைக்கு அப்பால் இந்த சில நாட்களாய் உன்னிடம் சில சுவாரஸ்யமான மாற்றங்கள் தென்படுவதை என் கண்கள் கவனிக்கத்தவறவில்லை.”

“இப்போதெல்லாம் சோமபானம் அருந்தாமலேயே உளறத்தொடங்கிவிட்டாயா?”

“நான் சோமபானமருந்தியதை நீ எப்போதடி பார்த்தாய்?” என்று சற்று பதட்டத்துடன் கேட்ட நர்த்தகியை பார்த்து கேலியாய் சிரித்த நிகனிகா

“அன்று பாதுஷாவின் இரவு விருந்;தின் போது கலவை பானமென்றெண்ணி சோமபானமருந்தியதோடு பேசி பேசி பாடாய் படுத்திவிட்டு எவ்வாறு அறிந்தேனென்றா வினவுகிறாய்?”

“அன்று ஏதோ தவறுதலாக ஆர்வமிகுதியில் கவனியாது சோமபானத்தை அருந்திவிட்டேன்.”

“அருந்தியதோடு நிறுத்தியிருந்தால் மன்னித்துவிடலாம். ஆனால் நீ?” என்ற நிகனிகா இழுக்க

“அன்று நான் எதையும் உணரும் நிலையில் இருக்கவில்லை. அந்த நிமிடங்களில் நான் சொர்க்கத்தில் உலாவருவதாகவே நினைத்திருந்தேன்.”

“அவ்வாறு நினைத்தவள் நினைப்போடு நிறுத்தாமல் பாதுஷாவின் மனைவியிடம் வம்பு வளர்த்து அன்றைய நிகழ்வையே அமர்க்களப்படுத்திவிட்டாய்.”

“அது…அது அனைவரும் பாதிதூக்கத்தில் உழன்றபடி அலைந்திருந்தனர். அவர்களை சற்று உற்சாகப்படுத்துவதாக எண்ணி அவ்வாறு…” என்று நர்த்தகி இழுக்க

“அவர்களை உற்சாகப்படுத்துவற்காக நீ அமர்களவாதியாகிவிட்டாய் அப்படிதானே?” என்று மீண்டும் அவளை வார

“என்னை கேலி செய்வதை விட்டுவிட்டு இன்றைய உணவுபட்டியலை கூறு.” என்று நர்த்தகி கேட்க நிகனிகாவும் உணவுவுபட்டியலை கூறினாள். அவள் கூறிய அனைத்தையும் கேட்டவள்

“அவர்கள் இருவருக்கும் இவ்வகை உணவுகள் பிடிக்குமென்று நீ நினைக்கிறாயா?”

“ஆம். அவர்கள் உலகத்திலும் நாம் உண்ணும் உணவுவகைகள் உண்டு. ஆனால் அதற்கான செய்முறைகளும் பெயருமே சற்று வித்தியாசமாக இருந்தது. நான் அங்கு இருந்த நாட்களில் அவர்கள் இவ்வகை உணவுகளை ருசிப்பதை கண்டுள்ளேன்.”

“நிஜமாகவா?”

“ஆம் நவநீதனுக்கு பச்சை இலைகள் சார்ந்த உணவுகளில் அலாதி பிரியம் இருப்பதை அறிந்து கொண்டேன்.அதுவும் சில தாவர இலைகளை உரியமுறையில் பதப்படுத்தி செய்யும் உணவுவகைகள் எப்போதும் அவரது உணவு பட்டியலில் இருக்கும். அதோடு குடற்புண் காரணமாக காரம் அதிகமிருக்கும் உணவுகளை அவர் எடுத்துக்கொள்வதில்லை.” என்று நிகனிகா கூறிக்கொண்டே செல்ல அவளை கண்களில் குறும்புடன் பார்த்த நர்த்தகி

“ஓ…அப்படி…புரிந்தது… புரிந்தது….” என்று நர்த்தகி கூற அவர் கேலிக்கான அர்த்தம் புரியாமல்

“என்ன புரிந்தது உனக்கு? சமையலில் அகரவரிசை கூட அறியாத உனக்கு இவை எப்படி இத்தனை இலகுவில் புரிந்தது?” என்று நிகனிகா வினவ

“புரிய வேண்டியவை நன்றாகவே புரிந்தது…” என்றவளின் குரலிலிருந்த கேலி அப்போது தான் நிகனிவாவிற்கு புரிந்தது.

சட்டென தன் பார்வையை நர்த்தகியின் புறம் திருப்பியவள் கண்களை குறுக்கியப்படியே

“உனக்கு என்ன புரிந்ததென்று எனக்கு புரியவில்லை.” என்றவளை பார்த்து கேலியாக சிரித்த நர்த்தகி

“உன் விழிகள் ஒருவரை ரசிப்பதும் உன் மனம் அந்த ஒருவரின் விருப்பங்களை அறிந்திட முயல்வதும் எனக்கு புரிந்தது.” என்று கூறி குறும்புடன் பார்த்தவளின் பார்வை ஒரு நொடி நிகனிகாவை தடுமாறச்செய்தாலும் மறுநொடியே அதை சமாளித்துக்கொண்டு

“எந்த ஒருவரையும் என் விழிகள் ரசித்திடவில்லை. வீணாய் கற்பனைகளில் உழன்று நேரத்தை கடத்தாமல் வேலையை கவனி.” என்றவளின் தடுமாற்றம் நர்த்தகியிற்கு எதையே உறுதிப்படுத்திட தனக்குள் சிரித்தபடியே வேலையை தொடர்ந்தாள்.

விரைவாக உணவு தயாரித்துவிட்டு நவநீதனையும் பவித்ராவையும் உணவுண்ண அழைத்தனர் இருவரும். அவர்களோடு இவர்களும் உணவில் இணைந்து கொண்டனர்.

பவித்ரா உணவை ரசித்துண்ண நவநீதனோ விரைந்து உணவை முடித்துவிட்டு விட்டுவந்திருந்த வேலையை முடிக்கச்சென்றான்.
இதை பார்த்திருந்த நிகனிகாவின் முகம் சுருங்க அதை கவனித்த நர்த்தகியிற்கு அவளை எண்ணி பாவமாயிருந்தது.

உணவை முடித்ததும் பவித்ரா

“சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சுங்க. சாப்பாடு வகைகள் வித்தியாசமாக இருந்தாலும் சுவை ரொம்ப நல்லா இருந்துச்சு.” என்று கூற நர்த்தகி நிகனிகாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு பவித்ராவிடம்

“மெய்யாகவே உணவு சுவையாயிருந்ததா?நவநீதன் எதுவும் கூறாமல் சென்றதால் உணவை உங்கள் இருவருக்கும் பிடித்தவிதமாய் அமைந்திடவில்லையோ என்று எண்ணினோம்.” என்று கூற

“அது அப்படி இல்லைங்க. அவன் வேலையினு இறங்கிட்டான்னா அவனோட கவனம் மொத்தமும் வேலையில் தான் இருக்கும். அது முடியும் வரைக்கும் அவனை சுத்தி நடக்கிற வேலையோட சம்பந்தப்படாத எந்த விஷயமும் அவன் மனசுல பதியாது. இப்போ கூட அவன்கிட்ட என்ன சாப்பிட்டனு கேட்டா தெரியாதுனு தான் சொல்லுவான். அதனால நீங்க அவன் எதுவுமே சொல்லலையேனு வருத்தப்படாதீங்க. அவனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.” என்று பவித்ரா நிலைமையை விளக்க நிகனிகா அவளை சமாதானப்படுத்துவதாய்

“இது மன்னிப்பு வேண்டுமளவிற்கு அத்தனை பெரிய விஷயமில்லை. விருந்தினராய் வந்திருப்பவர்களை முறையாக கவனிக்க தவறிவிட்டோமா என்ற மனக்குறையிலேயே நர்த்தகி அவ்வாறு வினவிவிட்டாள். தங்கள் இருவருக்கும் உணவு ஏற்றதாய் சுவையாய் இருந்ததே எமக்கு திருப்தி.” என்று கூறி பவித்ராவை அனுப்பிவைத்தாள் நிகனிகா.

பவித்ரா அங்கிருந்து சென்றதும் நிகனிகா முன் வந்து நின்ற நர்த்தகி அவள் முகத்தை ஊன்றி கவனித்துவிட்டு கேலி கலந்த குரலில்

“வாடி நின்ற ஆம்பல் மலர் சட்டென மலர்ந்து விரிந்து பிரகாசிப்பதற்கு காரணம் நானறிவேன்.” என்று கூறிவிட்டு அவள் தோள் மீது கைவைத்து அவள் காதுகளில் ஏதோ கூறிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாள் நர்த்தகி.
நர்த்தகியின் வார்த்தைகளில் ஒரு நிமிடம் சிவந்து நின்றவள் மறுநொடியே தன் மாற்றத்தை சமாளித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

நர்த்தகியும் நிகனிகாவும் அங்கு வந்த போது பவித்ராவும் நவநீதனும் முக்கால்வாசி வேலையை முடித்திருந்தனர். நிகனிகாவும் நர்த்தகியும் கொடுத்திருந்த குறிப்புக்களும் அவர்களது வேலையை துரிதப்படுத்தியிருந்தது.

நான்கு குறிப்புக்கள் மட்டுமே மிகுதியாயிருக்க அதை கண்டறிய முயன்றுக்கொண்டிருந்தனர் இருவரும். ஆனால் அந்த குறிப்புக்கள் மற்ற குறிப்புக்கள் போல் நேரிடையாக இல்லாமல் சற்று குழப்பமாயிருந்தது. அதை ஆராய்ந்தபடியிருந்தவர்களருகே வந்த நிகனிகாவும் அவர்கள் என்ன செய்கின்றரென பார்த்துக்கொண்டிருந்தனர்.

அவர்களது வரவை உணர்ந்த நவநீதன் அந்த குறிப்பை நிகனிகாவின் புறம் நீட்டி

“இதை படிச்சிட்டு உங்களுக்கு என்ன தோனுதுனு சொல்லுங்க.” என்று கூற அதை வாங்கி நிகனிகாவும் நர்த்தகியும் படிக்கத்தொடங்கினர்.

“கல்லடுக்கில் அமர்ந்திருந்து ஆம்பல் நோக்கும் வேளையில் நால்புறமும் தெறித்திடும் ஆதவனின் ஒளிக்கற்றைகள் ஒளிந்திட முடியாத கல்லிடுக்கின் வழி கல்லொன்றினை அடித்தளமாயிட அது தந்திடும் வழி ஆதவனின் ஆக்கிரமிப்பிற்கு அப்பாற்பட்டது.” என்று நிகனிகா படித்துமுடிக்க அதை கேட்ட நர்த்தகி

“இந்த குறிப்பு ஏதொவொரு தடாகத்தை பற்றி தான் விளக்குகிறது. ஆனால் இது மாளிகையிலுள்ளஅஎந்த தடாகத்தை பற்றியதென்று தெரியவில்லையே.” என்று கூற

“தாமரைப்பூ நிச்சயம் தடாகத்தில் தான் இருக்கனுமா?” என்று பவித்ரா கேட்க

அப்போது நர்த்தகி
“மாளிகையில் அசல் ஆம்பல்களை தவிர்த்து நிறைய போலி ஆம்பல்களும் உள்ளன. அது அங்குள்ள ஓரிருவரை தவிர வேறு யாராலும் சரியாய் பிரித்தரியமுடியாது.” என்று கூற நவநீதனோ

“எதற்காக இப்படி இரண்டையும் வச்சிருக்காங்க?”

“அது பற்றிய விவரம் எனக்கு தெரியாது. ஆனால் நான் மாளிகையில் பணியாற்றும் போது இது பற்றி அறிந்துகொண்டேன்.” என்று நர்த்தகி கூற பவித்ரா அவளிடம்

“மாளிகையில் தாமரை பூவை பார்த்த இடங்களை எழுதித்தரமுடியுமா?” என்று கேட்க நர்த்தகியும் யோசித்து தான் ஆம்பல் மலரை பார்த்த இடங்கள் அனைத்தையும் பட்டியலிட்டாள்.

அவள் பட்டியலிட்டு முடித்ததும் அதை வாங்கி பார்த்த பவித்ரா நவநீதனிடம்
“நவீ இதுல நாம கண்டுபிடித்த இடங்களை மார்க் பண்ணா ஏதாவது க்; கிடைக்கும்.” என்று கூற அவளது யோசனையை புரிந்து கொண்டவன் அதை நடைமுறைபடுத்தினான்.

அவள் கூறிய அனைத்து இடங்களுமே அவர்கள் கண்டுபிடித்த இடங்களாக இருக்க அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை. சற்று நேரம் யோசித்த நவநீதன் மீண்டும் அந்த குறிப்பை படித்தான். அப்போது ஏதோ தோன்றிட நர்த்தகியிடம்

“இந்த இடங்களில் எந்தெந்த இடங்களில் உட்கார்ந்து தாமரைப்பூவை பார்க்கலாம்?” என்று நவநீதன் கேட்க அவளோ குழப்பத்துடன்

“தாங்கள் கூறுவது…”

“இந்த குறிப்புல கல்லடுக்குனு சொல்லியிருக்காங்க. அதாவது அங்க உட்கார்ந்து தாமரைப்பூவை பார்க்கலாங்கிறதை சொல்லத்தான் இந்த சொல்லை பயன்படுத்தியிருக்காங்கனு நினைக்கிறேன். சூரியனோட கதிர் தெறிக்கிறதுனு சொன்னா நிச்சயம் அது அசல் தாமரையாக தான் இருக்கனும். இப்போ நாம கண்டுபிடிக்கவேண்டியது என்னதுனா எந்தெந்த இடங்களில் சூரியனோட ஒளியும் உட்கார்ந்து பார்க்கிறதுக்கான இடமும் இருக்குனு தெரிஞ்சிக்கனும்.” என்று கூற அவனின் திட்டம் என்னவென்று புரியாத போதிலும் அவன் கேட்டபடி அவன் நிபந்தனைகளுக்கு ஒத்துபோகும் இடங்களை பட்டியலிட்டாள் நர்த்தகி.

அந்த இடங்களை பார்வையிட்டவன் அதில் இரண்டு இடங்களை தேர்வு செய்து அதை நர்த்தகியிடம் கொடுத்து

“இந்த இரண்டு இடங்களோட உட்கட்டமைப்பு எப்படி இருக்கும்னு உங்களுக்கு தெரிந்ததை சொல்லமுடியுமா?” என்று கேட்க நர்த்தகியும் விவரிக்கத்தொடங்கினாள்.

அதை கவனமாய் கேட்டுக்கொண்டவன் அதை இரண்டு வரைபடமாய் வரைந்து அதனை மேஜையின் மீது வைத்தவன் அந்த இரண்டு வரைபடத்தின் இரண்டு இடங்களிலும் வட்டமிட்டான்.

அவ்விரு இடங்களையும் நர்த்தகியிடம் காண்பித்து

“நீங்க சொன்னபடி பார்த்தா இந்த இரண்டு வரைபடங்களிலும் இந்த இரண்டு இடங்களில் மட்டும் தான் சூரிய ஒளி விழாது. இந்த இரண்டு இடங்களில் ஏதோவொரு இடம் தான் ரகசிய பாதைக்கான வழியாக இருக்கனும்.” என்று கூற அப்போது பவித்ரா

“எப்படிடா அது ரகசியபாதைக்கான வழினு சொல்ற?”

“இந்த குறிப்புப்படி அந்த வழியில் சூரியனோட ஆக்கிரமிப்பு இருக்காது. அதாவது அந்த இடத்துல சூரிய வெளிச்சம் இருக்காது. அப்படினா அது சுரங்கப்பாதையாகவோ அல்லது ரகசியபாதையாகவோ தான் இருக்கனும். இந்த விஷயத்துல இது நிச்சயம் ரகசியப்பாதையாக தான் இருக்கனும். அதனால தான் இதுக்கு இவ்வளவு மறைமுககுறிப்புக்கள். இது என்னோட யூகம் தான். இது தவறாக இருப்பதற்கும் வாய்ப்புக்கள் இருக்கு.” என்று நவநீதன்கூற மற்ற அனைவரும் அவன் விளக்கத்தை கேட்டுக்கொண்டிருந்தனர்.

“நர்த்தகி நீங்க எனக்கு ஒரு உதவி பண்ணனும். உங்களால முடியும்னா இந்த இரண்டு இடங்களையும் மறுபடியும் பார்த்துட்டு வந்து அங்க என்னென்ன இருக்குனு சரியாக சொல்லமுடியுமா?” என்று கேட்க சற்று யோசித்த நர்த்தகி சரியென்று கூறிவிட்டு வெளியே சென்றாள்.

அவள் உடனே சென்றதை பார்த்த பவித்ராவும் நவநீதனும்

“அவங்களால நினைத்த உடனேயே மாளிகைக்குள்ள போக முடியுமா?” என்று குழப்பத்துடன் கேட்க

“நர்த்தகியின் நாவே அவளின் பலம். எந்த இடமாயினும் அங்கு எவ்வாறாயினும் சென்று விடுவாள். அத்துடன் அவள் ரத்னமாளிகை அரசியின் விருப்பத்திற்குரிய தாசிப்பெண். அவளை எதுவும் சொல்வதற்கோ தடுப்பதற்கோ யாரும் அங்கில்லை. அவள் நினைத்த இடத்திற்கு நினைத்த மாத்திரத்தில் செல்ல அவளுக்கு அனுமதி உண்டு. அவளைத்தவிர வேறு எவருக்கும் அம்மாளிகையின் இடங்களை பற்றி இத்தனை விவரங்கள் தெரியாது. அதனாலேயே மாளிகைக்குள் நுழைய அவளிடம் உதவி கேட்டிருந்தேன்.” என்று கூற அதை கேட்ட பவித்ரா

“அவங்களை நம்பலாமா? அவங்க நிஜமாகவே நம்ம திட்டத்துக்கு உதவுவாங்களா?” என்று சந்தேகத்துடன் கேட்க நிகனிகா

“அவளை நம்பிட தயக்கம் தேவையில்லை. அவளும் இந்த கூட்டணியின் ஒரு அங்கமே. அவளை பொறுத்தமட்டில் அனாகதயர்கள் அவளது வம்சத்தவர்களுக்கு தீங்கிழைத்தவர்கள். அவர்களது செயல்கள் எப்போது நீதிக்கு புறம்பாகவே இருக்கும். அதனால் அவர்களை எதிர்ப்பவர்கள் தர்மத்திற்குட்பட்டவர்களாகவே இருப்பரென்று நம்புகிறாள். அதனாலேயே எந்தவித தயக்கமுமின்றி நமக்கு உதவுகிறாள்.” என்று நிகனிகா கூற மற்றவர்களுக்கும் அதை ஏற்பதை தவிர வேறு வழி இருந்திடவில்லை.

மறுபுறம் இருள் சூழ்ந்து தனித்திருந்த அறையொன்றினுள் ஒரு உருவம் நுழைய அதனை பின் தொடர்ந்து இன்னொரு உருவம் நுழைந்தது. அவர்களை தொடர்ந்து நுழைந்த இன்னொரு உருவம் அந்த இருளின் ஆக்கிரமிப்பினை மட்டுப்படுத்துவதற்காக தன் கரங்களில் ஏந்தியிருந்த தீப்பந்தத்தை உரிய இடத்தில் பொருத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்தது.
அந்த தீப்பந்தத்திலிருந்து கசிந்த ஒளி இரு உருவங்களுக்கும் ஒருவரை மற்றவருக்கு நன்றாய் அடையாளம் காட்டிட அதனை தம் முகபாவனைகளில் காட்டிக்கொண்டனர்.

அப்போது ஒரு உருவம் நகர்ந்து சென்று அங்கிருந்த இருக்கையில் கம்பீரமாய் அமர்ந்து கொண்டு கண்களில் ஒருவித கடுமையுடன்

“கற்கள் கைவசப்படுவதற்கான முயற்சிகள் ஆரம்பித்தாகிவிட்டதா?” என்று கேட்க மற்ற உருவமோ இருக்கையில் ராஜ தோரணையுடன் அமர்ந்திருந்த உருவத்தின் முன் மண்டியிட்டு தலைகுனிந்தபடி

“அனைத்து திட்டங்களும் உரிய ஆயத்தங்களுடன் ஆரம்பித்தாகிவிட்டது. திட்டமிட்டபடியே குரு ராஷ்டிரத்தில் குறிப்பிட்ட நாளன்று அனைத்து கற்களும் உரியவர்கள் மூலம் தங்கள் வசப்படும்.”

“கற்களின் இருப்பு பற்றி ஏதேனும் தகவல் கிடைத்ததா?”

“கற்களின் இருப்பு உரியவர்களின் தொடுகையின் போதே வெளிப்படுமென்பது அதன் நியதி. அவை தம் இருப்பை வெளிப்படுத்தும் வரை உரியவரால் கூட அதன் இருப்பை அறிந்திடமுடியாது.”

“அதை உரியவர் அறியும் வழி?”

“அதற்கு காலமே பதில் சொல்லிட வேண்டும்.”

“பதிலில் பவ்வியமில்லையே..” என்றவரின் குரலில் கடுமையின் தாக்கம் அதிகமாயிருந்ததை உணர்ந்த மற்ற உருவம் அதே பவ்வியத்துடன்

“இத்தனை யுக கணிப்பிற்கு பின்னும் அந்த கற்களின் இருப்பிடத்தை கண்டறியமுடியவில்லை. அதற்கான பாதையும் எவ்விடமும் புலப்படவில்லை. அவற்றின் சக்தியின் அளப்பரியம் சிருஷ்டித்தவர்களின் படைப்பு நியதிக்கு உட்பட்டு இத்தனை யுகங்களாய் வெளிப்பட மறுக்கிறது.”

“ மாற்று வழியிற்கு வாய்ப்புண்டா?”

“இத்தனை நாட்களில் அதற்கான வாய்ப்புகள் மிக அரிதென்றே புலப்படுகின்றது.”

“ம்ம். இரண்டு திங்கள்….ஆறு கற்கள்…அண்ட சராசரங்களையும் ஆட்டிவைக்கும் வல்லமை…ம்ம்ம்…”

“ஆறு கற்களின் சேர்க்கையே அவ்வல்லமையை வசப்படுத்தும்.”

“இத்தனை யுகங்களாய் மறைந்திருந்த ரகசியம் இந்த யுகத்தில் வெளிப்பட்டதன் அவசியமே அதன் சேர்க்கை நிகழ்த்திடத்தான். இது விதியின் தீர்ப்பு. சேர்க்கையின் விளைவே எனக்கான சிரஞ்சீவி வரம்.” என்ற அந்த உருவம் தன் இருக்கையில் இருந்து எழுந்து தன் முன் மண்டியிட்டு அமர்ந்திருந்த உருவத்தினை ஒருமுறை பார்த்துவிட்டு

“வசப்படும் காலத்தில் கவனம் தேவை. அனைத்து அசைவுகளும் கண்காணிக்கப்பட வேண்டும். மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வீணடைவது தற்கொலைக்கு சமனென்பது நினைவிருக்கட்டும்.” என்றுவிட்டு அந்த உருவம் வெளியே சென்றிட மண்டியிட்டிருந்த உருவமும் எழுந்து நின்று பெருமூச்சொன்றை வெளியிட்டுவிட்டு அந்த அறையிலிருந்து வெளியேறியது.

தாத்மினியின் உதவியோடு அந்த யாகம் நடைபெறும் இடத்திற்கு உதவியாளர்களாக சேர்ந்த ப்ரவீன் ஆகாஷ் மற்றும் ரக்ஷிதாவை அங்கு பின்புறமிருந்த குடிலுக்கு அழைத்து சென்றாள் தாத்மினி.

அங்கு சென்றதும் ப்ரவீன் தாத்மினியிடம்

“இன்னைக்கே வேலையை ஆரம்பிச்சிடலாமா?” என்று கேட்க

“ஆம். இன்றிரவு இங்கொரு சிறப்பு பூஜை இடம்பெறவுள்ளது. அதில் இவ்வுலகத்தை சேர்ந்த அத்தனை மகாமுனிகளும் மாந்திரீக மெய்யுனர்களும் கலந்துகொள்கின்றனர். அவர்களுள் தாந்திரீயரும் அம்புஜவானரும் கலந்துகொள்கின்றனர். நானும் ரக்ஷிதாவும் அவருக்கு பணிவிடை செய்யும் தருணமே தாம் இருவருக்குமான சரியான தருணம். அதை பயன்படுத்தி அனைத்தையும் செய்திடவேண்டும்.”

“ம்ம் நாங்க பார்த்துக்கிறோம். நீங்க இரண்டு பேரும் கவனமாக இருங்க.” என்று ப்ரவீன் கூற

“ம்ம்.. இப்போது நீங்கள் இருவரும் இங்கே ஓய்வெடுங்கள். நான் ரக்ஷிதாவை என்னுடன் அழைத்து செல்கிறேன்.” என்று கூறிவிட்டு ரக்ஷிதாவை அழைத்துக்கொண்டு வெளியே செல்ல அவர்களிருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறினாள் ரக்ஷிதா.
 

anuchandran

New member
Messages
17
Reaction score
18
Points
3
தாரகை 8

நினைவுகளும்
நிஜங்களும்
நின்று
நிதானிக்க
நித்தம்
நினைப்பது
நிதர்சனமல்லவே

தாத்மினியும் ரக்ஷிதாவும் சென்றதும் ப்ரவீன் ஆகாஷிடம்

“எனக்கென்னமோ இவங்க மேல நம்பிக்கையே வர மாட்டேங்குது.” என்றவனை திரும்பி பார்த்த ஆகாஷ் அவனிடம்

“ரச்சுவும் அதையே தான்டா சொன்னா. எனக்கும் அவங்களை பார்த்தா நம்பிக்கைக்கு பதிலா சந்தேகம் தான்டா வருது.” என்று ஆகாஷும் ஆமோதிக்க இருவருக்கும் குழப்பமே மிஞ்சியது.

தாத்மினி கூறி சென்றது போல் ப்ரவீனும் ஆகாஷும் மாலை தயாராக இருந்தனர்.

அப்போது தாத்மினி மட்டும் உள்ளே வர அவளை ப்ரவீன் கேள்வியாய் பார்க்க ஆகாஷோ வெளியே எட்டிப் பார்த்தபடியே அவளிடம்

“ரக்ஷிதா எங்கங்க?” என்று கேட்க

“அவள் யாகம் நடந்திடும் இடத்திற்கு செல்லும் குழுவினரின் உதவியாளுடன் இருக்கிறாள். அவள் செய்யவேண்டியவற்றை அவளுக்கு நினைவு படுத்தி விட்டேன். தாங்கள் இருவரும் தயார் தானே?”என்றவளின் பார்வை ஆண்கள் இருவரையும் ஆராய அதை அவர்களிருவரும் உணர்ந்த போதிலும் எந்தவித எதிர்வினையையும் காட்டிடாமல் ஆமென்று தலையாட்டினர்.

அவர்களது ஒப்புதலை பெற்றுக்கொண்டவள் தன் இடுப்பு மறைவிலிருந்த இரண்டு பொதிகளை எடுத்து அவர்கள் புறம் நீட்டி

“இதில் தம் இருவருக்கும் தேவையானவை இருக்கின்றது. உரிய நேரத்தில் இவற்றினை பயன்படுத்தி நம் திட்டத்தினை செயற்படுத்திட வேண்டும்.”என்று கூற அதை பெற்றுக்கொண்ட ப்ரவீன்

“ம்ம்.. அதை நாங்க பார்த்துக்கிறோம். நீங்க சொன்ன அம்புஜவானரையும் தாந்திரியரையும் நாங்க எப்படி கண்டுபிடிக்கிறது?” என்று கேட்க

“அங்கு சென்றதும் நானே தங்களுக்கு அவர்கள் இருவரையும் அடையாளம் காட்டுகிறேன்.”என்று தாத்மினி கூற ஆகாஷ்

“சரிங்க... நாம கிளம்பலாம்.” என்று கூற மூவரும் அங்கிருந்து கிளம்பி முன் கூடத்திற்கு வந்தனர்.

அங்கு இரவு பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்தபடியிருக்க அதில் ப்ரவீனும் ஆகாஷூம் செய்யவேண்டியவற்றை கூறிவிட்டு ‌தாத்மினி ரக்ஷிதா இருந்த இடம் நோக்கி சென்றாள்.

ரக்ஷிதா அங்கிருந்த பூஜைக்கான பொருட்களை ஒழுங்குபடுத்தியபடியிருக்க அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவளுக்கு உதவி புரியத் தொடங்கினாள்.

பூஜைக்கான ஆயத்தங்கள் முடிந்ததும் அனைவரும் அங்கிருந்து வெளியேறினர்.

அப்போது ரக்ஷிதாவும் தாத்மினியும் அங்கேயே நின்றிட அதை பார்த்த இன்னொரு பெண்

“தாத்மி நீ சுவாமிகளை வரவேற்க வரவில்லையா?” என்று கேட்க தாத்மினி ரக்ஷிதாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு

“இந்த பெண்ணிற்கு இங்குள்ள நடைமுறைகள் தெரியாது. இன்று பூஜையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென இவளுக்கு கற்றுக்கொடுக்கவேண்டியுள்ளது‌. இவள் அறியாமையால் ஏதேனும் தவறாக நடந்துவிட்டால் நானே அனைவரின் சினத்திற்கும் ஆளாக வேண்டும். அதனால் நீ முன்னே செல். நான் இவளுக்கு அனைத்தையும் விளக்கிவிட்டு இவளோடு அங்கு வந்துவிடுகிறேன்.” என்று கூற மற்ற பெண்ணும் அதை ஏற்றது போல்

“ஆம் அதுவும் சரிதான். ஊமைப்பெண் வேறு... ஏதும் தவறாக நடந்தால் கூட இவளால் தனியாக சமாளித்திட முடியாது. நீ அவளை கவனித்துக்கொள்.” என்றுவிட்டு அந்த பெண் வெளியேறினாள்.

அனைவரும் சென்றதை உறுதிப்படுத்திய தாத்மினி ரக்ஷிதாவை பார்க்க அவளும் புரிந்து கொண்டது போல் தன் இடைச்சொருகிலிருந்த அந்த பையினை கையில் எடுத்தாள்.

“தாத்மினி அதோ அங்க இருக்கிற இரண்டு தட்டுக்கள் தான் அவங்க இரண்டு பேரும் பயன்படுத்தப்போற தட்டுக்கள்.” என்று கூறியபடியே தன் கையிலிருந்த பொதியிலிருந்து ஏதோவொரு தூளினை கையில் எடுத்தாள்.

தாத்மினி அவள் கூறிய இரண்டு தட்டுக்களையும் எடுத்து வந்ததும் அதன் மேல் தன் கையிலிருந்த தூளினை கூவினாள் ரக்ஷிதா.

அந்த தூள் அந்த தட்டிலிருந்த விபூதிப்பொடியின் மீது பட்டதும் அது உடனேயே கருநீலமாக மாறியது. ஆனால் கணநேரம் கூட தாமதிக்காது அது மீண்டும் தன் பழைய நிலையை அடைந்தது.

இவ்வாறு இரண்டு தட்டின் மீதும் அந்த தூளை தூவியதும் அந்த தட்டினை அதன் இடத்தில் வைத்துவிட்டு இருவரும் வெளியே வந்தனர்.

ரத்னமாளிகைக்கு வந்த நர்த்தகியை வாசலில் வழிமறித்த காவலன் ஒருவன்

“அரசியாரின் ஆஸ்தான பணிப்பெண்ணை விழிகொண்டு கண்டிட இந்த மாளிகையே காத்திருப்பது தெரிந்தும் நர்த்தகி அம்மையார் தாமதமாய் வருவதற்கு ஏதேனும் காரணம் உண்டோ?” என்றவனை மேலும் கீழும் ஒரு முறை பார்த்த நர்த்தகி

“மாளிகை காவலனுக்கு மாளிகையை காக்கும் பணியோடு இப்போது சாதாரண பணிப்பெண்ணை நோட்டம் விடுவதும் பணியாகிவிட்டதோ?” என்னவளின் குரலில் கேலியிருக்க அதை புரிந்து கொண்ட அந்த காவலன் அசடு வழிந்தபடியே

“மாளிகை வாசிகளின் நலன் பற்றி அறிந்துகொள்வது கூட காவலனின் பணி என்று யாரோ கூறினார்கள்.”

“கூற்று சரி தான். ஆனால் அதன் அர்த்தத்தை தவறாக புரிந்து கொண்டவர் தாம். நான் மாளிகை வாசியல்ல. யான் சாதாரண பணிப்பெண் மட்டுமே. ஆதலால் என் நலனை பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் தமக்கில்லையென எண்ணுகிறேன். அதோடு யாரிற்கும் விளக்கம் கொடுக்கவேண்டிய தேவையும் எனக்கில்லையென்பதை தாம் உணர வேண்டும்.” என்றவள் அந்த காவலரை கடந்து மாளிகையினுள் சென்றாள்.

அவள் செல்வதை பின்னாலிருந்து பார்த்தபடி நின்றிருந்த அந்த காவலனருகே வந்த இன்னொரு காவலாளி

“அந்த வாயாடி மங்கையிடம் வாய்கொடுத்து நொந்துக்கொள்ளும் தைரியம் இந்த மாளிகையில் உனக்கும் மட்டும் தான் உண்டடா.”

“சுவாரஸ்யங்கள் வேண்டுமெனில் இதையெல்லாம் சந்தித்து தான் ஆகவேண்டுமடா.”

“அவ்வாறே சந்தித்து அவளிடம் நன்றாக வாங்கிக்கட்டிக்கொள்.” என்றுவிட்டு மற்றைய காவலாளி தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து செல்ல அந்த காவலாளி நர்த்தகி செல்லும் வழியே பார்த்திருந்தான்.

மாளிகையினுள்ளே சென்ற நர்த்தகி நேரே அந்தப்புரத்திற்கு சென்றாள்.

அங்கே பணிப்பெண்கள் அனைவரும் கூடியிருந்தனர். திடீரென அனைவரும் அங்கு கூடியிருந்ததை கண்ட நர்த்தகி சற்று யோசித்தபடியே உள்ளே வந்தாள்.

அங்கிருந்த அந்த பரந்த மேசையின் மீது ஒரு துணி விரிக்கப்பட்டிருக்க அதில் ஓவியம் தீட்டிக்கொண்டிருந்தார் மகதாயினி அரசியார்.

மன்னர் அதுராதகனின் காதல் மனைவி மகதாயினி அரசியார். அனைத்துல பேரழகிகளையும் பொறாமை கொள்ளச் செய்யும் வனப்பினை தன் வசப்படுத்திய மங்கையவள்.

பார்ப்பவர்கள் அனைவரும் படைப்பின் மூலக்கடவுளின் கலைத்திறமையை எண்ணி வியக்கும் அளவிற்கு அவள் எழில் அமைந்திருந்தது.

கொடியிடையாளான அரசி மகதாயினி தன் வேல் விழிகளாலே எதிரிலுள்ளவர்களை மதிமயங்கச்செய்யும் வல்லமையுடையவள். வெண்மதியாய் வளைந்திருக்கும் முன்நெற்றியும், பாதி கடித்த முந்திரிப்போல் வளைந்திருக்கும் அந்த கவர்ச்சியான நாசியும், ரோஜா இதழ்களால் பதியமிடப்பட்டு புன்னகையெனும் ஆபரணத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அவ்விளஞ்சிவப்பு மென்னிதழ்களுமே அவரின் ஒட்டுமொத்த அழகிற்கும் எடுத்துக்காட்டு.

கோபத்திலும் நாணத்திலும் மறுக்காமல் சிவந்திடும் அந்த குழிவிழும் கன்னங்கள் தம் இருப்பை உணர்த்திட பளபளக்கும் சந்தர்ப்பங்களை பார்க்க நேரிட்டவர்கள் மனதில் இவளென்ன மெழுகுப்பாவையா என்ற எண்ணத்தையே தோற்றுவித்திடும்.

மஞ்சள் வெயில் தேகமும் இடையினை மீறி நீண்டு சுருளிக்கொப்புக்களாய் படர்ந்திருக்கும் அந்த கார்குழலும் அவள் அழகிற்கு ஆபரணமாகிட அழகின் மொத்த இலக்கணமாய் திகழ்ந்தவளை கண்டு அதுராதகன் காதல் கொண்டதில் ஆச்சரியமில்லை.

இயற்கை அழகிற்கு புறம்பாய் வாசனைப் பொருட்களும் ஒப்பனைகளும் ஆடையணிகளும் அவளை அதிரூப வனமோகினியாய் காண்பிக்க தவறிடவில்லை.

இத்தனை அழகினையும் ஒட்டுமொத்தமாகப் கைவரபெற்றவளுக்கு முக்கலைகளையும் பரிசாய் அருளியிருந்தாள் கலைமகள்.

இயல்,இசை,நாடகமென்று அனைத்திலுமே கைத்தேர்ந்தவளாக இருந்த மகதாயினியிற்கு வர்மக்கலையின் சூட்சுமங்களும் வாற் சண்டையின் நுணுக்கங்களும் தெரிந்திருந்திருந்தது அவளை மற்றைய பெண்களிடமிருந்து தனித்து நிற்கச்செய்தது.

இவ்வனைத்து சிறப்புகளையும் தன்வசமாக்கியிருந்த மகதாயினி அரசியார் இன்று தன் மணவாளனுக்கு பரிசளிப்பதற்காக ஓவியமொன்றை வரைந்துக்கொண்டிருந்தார்.

அதனை சுற்றி நின்று சில பணிப்பெண்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க சிலர் அரசியாருக்கு வேண்டிய உதவிகளை செய்து கொண்டிருந்தனர்.

இதனை தூரத்திலிருந்து பார்த்தபடியே அருகில் வந்த நர்த்தகி அவரது கலைத்திறமையை மனதினுள் மெச்சிய படியே

“ஓவியமொன்று உயிர்பெற்று எழுந்து வந்து வண்ணம் தீட்டுகிறதோவென்று எண்ணி ஒரு நிமிடம் குழம்பிவிட்டேன்." என்றவளின் குரல் கேட்டு தலையுயர்த்திய மகதாயினின் கரம் அதன் வேலையை தற்காலிகமாய் நிறுத்தியது.

இதழில் புன்னகையுடன் தலையுயர்த்தி பார்த்த மகதாயினி

"தாமதத்திற்கான காரணத்தை விசாரிப்பேனென்று புகழுரையுடன் ஆரம்பித்துவிட்டாயோ?"

"ஐயகோ... என்ன வார்த்தை கூறிவிட்டீர்கள் தேவி? நர்த்தகியின் வார்த்தைகள் என்றுமே சத்தியத்தை மட்டுமே தாங்கி நிற்கும்."

"இதை இங்குள்ள யாரும் நம்பமாட்டார்கள். பர்மி கூட நம்பமாட்டாள். வேண்டுமானால் பர்மியிடம் கேட்டுப்பார்." என்று மகதாயினி தன் செல்லப்பிராணியான கிளி போன்றிருந்த அந்த இளஞ்சிவப்பு நிற பறவையிடம் கேட்க அதுவும் மகதாயினியின் குரல் கேட்டு தன் கூண்டின் கதவை மெதுவாய் தள்ளிக்கொண்டு வெளியே வந்து மகதாயினியையும் நர்த்தகியையும் மாறி மாறிப்பார்த்தது.

இறுதியாக நர்த்தகியை பார்த்த பர்மி தன் குறுகிய சிவப்பு நிற விழிகளை மூடித்திறந்துவிட்டு

"பொய்யுரைப்பதற்கு சிறப்பு தேர்ச்சி பெற்ற நர்த்தகி...." என்று கூறிவிட்டு மீண்டும் தன் கூட்டிற்குள் சென்று அடைந்து கொண்டது.

சுற்றியிருந்தவர்கள் அனைவரும் அப்பறவையின் வார்த்தைகளில் சிரிக்க நர்த்தகியோ எழுந்து சென்று அதன் கூண்டின் முன் நின்று இடுப்பில் கைவைத்தபடி

"என்னை கேலி செய்வதென்றால் மட்டும் உன் நா நான்கு அங்குலத்திற்கு திறந்திடுமே. பழம் வேண்டி நர்த்தகியென்று என்னிடம் வருவாயல்லவா அப்போது உன்னை கவனித்துக்கொள்கிறேன்." என்றவள் மீண்டும் மகதாயினியின் அருகில் வந்தாள்.

"தேவி நான் கூறியவை அனைத்தும் நிஜம். தாங்கள் ஓவியம் தீட்டிக்கொண்டிருந்தது அத்தனை அழகாய் ரம்மியமாய் இருந்தது.தம்மை இப்போது பேரரசர் கண்டாரானால் நிச்சயம் மதி மயக்கி விழி மூட மறந்து காதல் போதை தலைக்கேற தள்ளாடியபடி நின்றிருப்பார்‌." என்றவளை பார்த்து முறைத்த மகதாயினி

"உன் கற்பனை ஏன் இத்தனை அபத்தமாய் உருப்பெறுகிறது? என் மன்னவரை ஏதோ சோமபானத்திற்கு அடிமையானவரை போல் சித்தரிக்கிறாய்." என்று கூற

"ஐயகோ தேவி. நான் உங்கள் வனப்பு மன்னவரை முற்றாய் கவர்ந்திடும் என்பதையே அவ்வாறு கூறினேன். இந்த நாவிற்கு இதே வேலையாகிவிட்டது. தவறான நேரத்தில் சரியானவற்றை தவறாக கூறிவிட்டு‌ என்னை வம்பில் சிக்கவைப்பதையே முழு நேர வேலையாக செய்கிறது." என்றவளின் வார்த்தைகளில் சிரித்த மகதாயினி

"உன் நா சுழலும் வேகத்திற்கு ஈடுகொடுக்க யாராலும் முடியாது."

"அது சரி தேவி.இன்றைய ஓவியத்தின் கருப்பொருள்?"

"பார்வைகள் கலந்திடும் வேளைதனில் நாணம் படர்ந்திட ஆண்மை நிமிர்ந்திட ஜனித்த உறவு." என்று ஓவியத்திற்கான கருப்பொருளை மகதாயினி கவியாய் கூறிட

"ஆஹா காதலை இத்தனை அழகாய் வார்த்தைகளால் வடித்திட தம்மால் மட்டுமே முடியும்." என்று கூற மீண்டுமொருமுறை அழகாய் சிரித்தவள் இடைநிறுத்தியிருந்த தன் வேலையை மீண்டும் தொடர்ந்தாள்.

அந்த ஓவியத்தில் ஒரு பெண்ணும் ஆணும் இருக்க அவர்களிருவரும் ஒருவருக்கு எதிரே மற்றவர் நின்றுக்கொண்டிருந்தனர்.

அந்த பெண்ணின் முந்தானை காற்றில் பறந்தபடியிருக்க அதன் அடியிலிருந்த மணிகளில் சில கீழே சிதறுவது போலிருந்தது. அந்த பெண்ணிற்கு பின்புறமாக மென்சிவப்பு நிற பூக்களை கொண்ட மரமொன்றிருக்க அதிலிருந்து சிதறிய பூக்கள் சில மரத்திலும் சில அந்த பெண்ணின் தோள்பட்டையிலும் குடியேறியிருக்க இன்னும் சில அவள் கூந்தலில் கிரகப்பிரவேசம் செய்திருந்தன.

அந்த பெண்ணின் கண்கள் எதிரே நின்றிருந்தவனை நேருக்கு நேர் நோக்கியபடியிருந்தபோதிலும் கைகளோ நாணத்தை மறைப்பதற்காக ஒன்றையொன்று பிசைந்தபடியிருந்தது.

அந்த ஆணோ தன் ஒரு கையால் சிகையை கோதியபடியே தன் எதிரே நின்றிருந்த பெண்ணை ஆண்களுக்கே உரிய நாணத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். அவனின் மறு கையை உடலிற்கு பின்னால் இருக்க அதில் ஒரு பூங்கொத்து இருந்தது.

காதலர்களின் சுற்றத்தை ரம்மியமாக்கும் பொருட்டு வெண்மதி முழு நிலவாய் வானில் வலம் வந்துக்கொண்டிருக்க நட்சத்திரப்பட்டாளமும் அவற்றின் பின்னே ஊர்வலம் சென்றுக்கொண்டிருந்தது.
பச்சை புல்வெளியால் சூழப்பட்டிருந்த நிலம் பனித்துளிகளால் முற்றுகையிடப்பட்டிருந்தது.

இவையனைத்தையும் பார்த்த நர்த்தகி

"இன்று வழமைக்கு மாறாக தம் கைவண்ணத்தில் அதிக மிளிர்ச்சி இருப்பதாக உணர்கிறேன். அது உண்மை தானா?"

"ஆம்.. இன்றைய ஓவியத்தில் ஒரு சிறப்பு மறைந்திருக்கிறது." என்றவளின் வதனத்தில் வெட்கம் எட்டிப்பார்க்க அதை கண்டுக்கொண்ட நர்த்தகி

"தேவி தங்களை நாணம் முற்றுகையிட்டிருக்கிறதா?" என்றவளை பார்த்து செல்லமாய் முறைத்த மகதாயினி

"உனக்கு தைரியம் அதிகமாகிவிட்டது. மாமன்னர் அதுராதகனின் தர்மபத்தினியையே கேலி செய்கிறாயா?"

"ஐயகோ தேவி. நான் என் சிறிய மதியினுள் எழுந்த ஐயத்தை தெளிவித்துக்கொள்ளவே வினவினேன். தங்களை கேலி செய்யும் தைரியம் இம் மத்யுக உலகத்தில் எவருக்குண்டு?" என்றவளுக்கு பதில் வேறொரு இடத்திலிருந்து வந்தது.

"எனக்கு உண்டு." என்று குரல் வந்த திசையை நோக்கி அனைவரும் திரும்பி பார்க்க அங்கு இதழில் வசீகரிக்கும் புன்னகையுடன் கம்பீரமாய் நின்றிருந்தான் அதுராதகன்.

அவனை கண்டதும் மற்றைய பணிப்பெண்கள் அனைவரும் பின்னே நகர்ந்திட நர்த்தகி மட்டும் மகதாயினி அருகில் நின்றிருந்தாள்.

உறுதியுடன் ஒவ்வொரு அடிகளாக எடுத்து வைத்து மகதாயினி அருகே வந்த அதுராதகன் பிறர் உணரா வண்ணம் மகதாயினியை பார்த்து கண்சிமிட்டிவிட்டு நர்த்தகியை பார்க்க அவள் தலை குனிந்து தன் வணக்கத்தை தெரிவித்தாள்.

"தம் அரசியாரை கேலி செய்யும் உரிமை எனக்குண்டல்லவா?" என்று நர்த்தகியை பார்த்து அதுராதகன் கேட்க நர்த்தகியோ ஏதேதோ உளறத்தொடங்கினாள்.

"தாங்கள் மன்னர். தமக்கு உரிமை தேவியார்... ஐயகோ பதட்டத்தில் இந்த நா மிக மோசமாய் உளறுகிறதே.... மன்னா தங்கள் உளற... ஐயகோ..." என்றவளை பார்த்து இப்போது மகதாயினியும் அதுராதகனும் ஒரு சேர சிரித்தனர்.

நர்த்தகி பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு
"மன்னித்து விடுங்கள் மன்னர் பெருமானே. தாங்கள் திடீரென்று இங்கு வந்ததும் இந்த மூளை வேலை நிறுத்தம் பண்ணிட அதன் எதிரொலியால் நா ஏதேதோ உளறுகிறது." என்றவளை பார்த்து மீண்டும் சிரித்த மகதாயினியை பார்த்து செல்லமாய் முறைத்தபடியே

"தேவி நான் நந்தவனத்திற்கு சென்று தாம் விரும்பும் ரதிவதி மலரை பறித்து வருகிறேன். மாமன்னரும் தேவியும் எனக்கு அனுமதிதர வேண்டும்."என்றவளை இருவரும் வெளியேற அனுமதிக்க மற்றவர்களுக்கு கண்ஜாடை செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள் நர்த்தகி.

அவளை பின்தொடர்ந்து மற்றவர்களும் வெளியேறினர்.

அனைவரும் வெளியேறியதை உறுதிப்படுத்திக்கொண்ட அதுராதகன் தன்னருகே நின்றிருந்தவளை இழுத்து தன் மார்பின் மீது போட்டுக்கொண்டான்.

அவனது திடீர் செயலில் தடுமாறிய மகதாயினி அதுராதகனின் மார்பின் மீது இருந்தபடியே

"ஸ்வாமி என்னதிது?"

"என்ன மகதா?" என்று கண்களிலில் குறும்பு மின்ன கேட்டவனின் மார்பினில் அடித்தவள்

"இப்போதெல்லாம் பகல் பொழுதினிலும் கூட காதல் செய்யத்தொடங்கிவிட்டீரோ?"

"காதல் செய்வதற்கு எதற்கடி பொழுது? இருதயம் துடிக்கும் ஒவ்வொரு நொடியும் என் மனம் காதலித்தபடிதானிருக்கிறது."

"மத்யுக உலகின் சர்வ வல்லமை படைத்த மாமன்னர் அதுராதகன் காதல் போதையில் இவ்வாறு உளறுவதை வெளியில் யாரேனும் பார்த்தால் என்னாவது?"

"வேறு என்னாகும்...மாமன்னரை போல் நாமும் மனையாளை காதலிக்கவேண்டுமென ஆடவர்கள் நினைப்பர். மாமன்னரை போல் மணாளன் அமைய வேண்டுமென பெண்கள் நினைப்பர்." என்று அதுராதகன் பெருமையாய் கூற அவனின் வார்த்தைகளில் சிரித்த மகதாயினியை இன்னும் இறுக அணைத்துக் கொண்டான் அதுராதகன்.

வெளியே வந்த நர்த்தகி மற்றைய பணிப்பெண்களுக்கு ஒவ்வொரு வேலைகளை பணித்துவிட்டு நேரே நந்தவனத்திற்கு சென்றாள்.

நந்தவனத்தினை ஒருமுறை சுற்றி வந்தவளுக்கு நவநீதன் கூறியது போல் ஏதும் கண்ணில் படவில்லை. நந்தவனத்தின் நடுவே ஒரு தடாகம் இருந்த போதிலும் அதனருகே சூரிய ஒளி படாதவகையில் எந்தவொரு இடமும் இருக்கவில்லை. மீண்டுமொருமுறை நந்தவனத்தை சுற்றி வந்தவளது கண்களில் தடுப்புக்கள் கொண்டு மூடப்பட்டிருந்த அந்த இடம் எதையோ நினைவுபடுத்தியது.

முதல்முறை இந்த நந்தவனத்திற்கு வந்தபோது அவள் இவ்விடத்தை பற்றி விசாரித்தாள். நந்தவனத்தின் இந்த பகுதி பல வருடங்களாக மூடப்பட்டிருப்பதாகவும் யாரிற்கும் அங்கு செல்ல அனுமதியில்லையென்றும் காவலாளிகள் கூறினர். அவளுக்கு அங்கு என்ன இருக்கின்றதென தெரிந்துக்கொள்ள ஆவல் இருந்தபோதிலும் மன்னரின் உத்தரவை மீறி அங்கு செல்லும் தைரியம் அவளிடமில்லை.

ஆனால் இன்று அதற்கான தேவையிருப்பதை உணர்ந்தவள் அவ்விடத்திற்கு செல்ல முடிவு செய்தாள். சுற்றும் முற்றும் பார்த்தபடியே அவ்விடத்தை நெருங்கியவளை தடுத்தது ஒரு குரல்.

"நர்த்தகி அங்கு என்ன செய்கிறாய்?" என்றபடியே ஒரு பணிப்பெண் அவளருகே வர சற்று தடுமாறியவள் தன்னை சமாளித்துக்கொண்டு

"அது.. அது.. என்னுடைய மோதிரம் எங்கேயோ தவறி விழுந்துவிட்டது. அதை தேடிக்கொண்டிருக்கிறேன்."என்றவள் அந்த பணிப்பெண் அறியா வண்ணம் தன் கையிலிருந்த மோதிரத்தை கழற்றி உள்ளங்கையில் மறைத்துவைத்துக்கொண்டாள்.

"ஓ... அப்படியா?? சரி நானும் உனக்கு உதவுகிறேன்." என்ற அந்த பணிப்பெண் தரையில் தேடத்தொடங்க நர்த்தகியும் தேடுவது போல் பாவனை செய்துகொண்டே தன் கையிலிருந்த மோதிரத்தை தரையில் இட்டவள்

"ஆ... இதோ மோதிரம் இங்கிருக்கிறது." என்று கையில் எடுத்து அந்த பணிப்பெண்ணிடம் காண்பிக்க அவளும் அதை பார்த்துவிட்டு

"சரி வா... சீக்கிரம் இங்கிருந்து சென்றுவிடலாம். காவலாளிகள் பார்த்தால் சிக்கலாகி விடும்." என்றுவிட்டு நர்த்தகியை இழுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றாள்.

நர்த்தகியோ அவ்விடத்தை திரும்பிப்பார்த்தபடியே அங்கிருந்து சென்றாள்.
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom