HoneyGeethan
Active member
- Messages
- 175
- Reaction score
- 169
- Points
- 43
மந்திரம் : 20
குழலும் , லிங்கேஷும் பேசியபடியே தோப்புக்குள் வர லிங் குழலிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவன் பார்வை ரூபாவையே தேடியது. இதை கவனித்த குழல்
“என்ன அண்ணா ? யாராவது வராங்களா என்ன ? யாரை எதிர்பார்த்து தேடிட்டு இருக்கீங்க ? “– குழல்
ஆங் ! அதெல்லாம் ஒண்ணுமில்லைமா ? – லிங்
ரூபாவை தேடுறீங்களா என்ன? – குழல்
அதெல்லாம் இல்லம்மா ! சும்மா பார்த்தேன் என்று லிங் மழுப்ப
ஓ ! என் அண்ணாவும் நீங்களும் பேசுக்கிட்டதைப் பார்த்து நீங்க அவள விரும்புறீங்கனு நினைச்சேன் அண்ணா! நான்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன் போல என்று குழல் கூற
லிங் வேகமாக பேசினான்.
இல்லைமா ! அவள பார்த்தவுடனே பிடிச்சிருச்சு ! ஆனா அதை உன்கிட்ட சொல்ல ஒருமாதிரி இருந்துச்சு என்று லிங் தயங்கியபடியே கூற
வாவ் ! அண்ணா ! நிஜமாவா சொல்றீங்க ? – குழல்
ஆமாம் குழல் ! அவ அதற்கு ஒத்துக்கணுமே ! அவளுக்கும் என்னை பிடிக்கணுமே ! – லிங்
கவலைய விடுங்க அண்ணா ! அவள சம்மதிக்க வச்சுடுவோம் என்று குழல் கூற அதை கேட்ட லிங் சந்தோசமாக முறுவல் செய்தான்
இருவரும் பேசிக் கொண்டே வர தூரத்தில் இனியன் வண்டியை நிறுத்தி ஏதோ செய்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் குழல் வேகமாக அவன் அருகில் சென்றாள்.
அவன் அருகில் சென்றவள் என்னாச்சு ? ஏன் இங்க நிக்கிறீங்க ? – குழல்
அவள் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்த இனியன் மறுபடியும் குனிந்து கொண்டு வண்டியை ஆராய்ச்சி செய்தபடியே பேசினான்.
“ பார்த்தா தெரியல வண்டி ரிப்பேர் சரி செஞ்சுட்டு இருக்கேன்” – இனியன்
அதை கொஞ்சம் தன்மையா சொன்னா என்னவாம் எப்ப பாரு திமிராவே பதில் சொல்றது . ஜடம் ! ஜடம் ! என்று குழல் வாய்க்குள் முணங்க
அதை இனியன் கவனித்துவிட்டான். வேகமாக அவளிடம் திரும்பியவன்
இப்ப என்ன சொன்ன நீ ? திரும்பச் சொல்லு – இனியன்
ஒண்ணும் சொல்லலையே ? – குழல்
இல்லை ஏதோ சொன்ன- இனியன்
அய்யோ பாவம் ! வண்டி இப்படி ஆகிருச்சேனு சொன்னேன்- குழல்
இல்லை என்னை எதோ சொல்லி திட்டுன ? மறுபடியும் சொல்லு அதை என்று இனியன் கேட்க
‘அய்யோ குழல் வாயை வச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா ! பாரு இப்ப நல்லா மாட்டிக்கிட்ட ! சொல்லாம இவர் விடமாட்டார் போலயே ! சொல்லிடு குழல் என்று மனசாட்சி கூற
ஹ்ம்ம் ஜடம்னு சொன்னேன் ! போதுமா! என்று அவள் சொன்னதுதான் தாமதம் அதை கேட்ட இனியன் குழலையே பார்த்தபடியே இருக்க
குழல் தான் சொன்னதும் அவன் தன்னை திட்டுவான் என்று எதிர்பார்த்திருக்க ஆனால் இது எதுவும் செய்யாமல் அவன் தன்னை பார்த்ததும் அதுவும் அவனின் பார்வையில் தோன்றிய வித்தியாசத்தை குழப்பமாக குழல் பார்த்துக் கொண்டிருந்தாள்
இவர்களின் சம்பாஷணையை சுவாரசியமாக பார்த்துக் கொண்டே அருகில் வந்தான் லிங் .
சார் ! தள்ளுங்க நான் பார்க்குறேன் என்று லிங் கூற
இனியன் லிங்கை கேள்வியாகப் பார்த்தான்.
அதை கவனித்த குழல் லிங்கை இனியனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்
இவர் லிங்கேஷ் என் அண்ணா பிரண்ட் என்று குழல் கூற
ஓ ! அப்படியா ! நான் தேவஇனியன் ! இந்த ஊருக்கு புதுசா வந்திருக்கிற போலிஸ் ஆபிசர் ! என்று லிங்கிடம் கை குலுக்கினான் இனியன்.
ஓ! அப்படியா என்று கை குலுக்கிய லிங்
என்ன சார் பிரச்சனை ? என்று கேட்க
என்னை இனியன்னு கூப்பிடுங்க லிங்கேஷ் .. என்னனு தெரியல வண்டி start ஆக மாட்டுங்கிது – இனியன்
ஓ ! ஒகே இனியன் என்று லிங் கூறியபடியே வண்டியைப் பார்க்க
நண்பா ! ஒண்ணும் பிரச்சனை இல்லையே என்று இனியன் கூறியபடியே அருகில் நிற்க
இனியன் நண்பா என்று கூப்பிட்டதும் லிங்கிற்குள் ஏதோ ஞாபக ஊர்வலம் நடந்தது. இனியனை பார்த்தபடியே நின்றான் லிங்
என்னாச்சு நண்பா ? – என்று இனியனும்
அண்ணா என்று குழலும் உலுக்கவும் ஏதோ கனவில் இருந்து விழிப்பவன் போல் விழித்தான் லிங்
ஒன்றுமில்லை இனியா ! ஏதோ ஞாபகம் ! என்று கூறியவன் வண்டியை ஏதோ செய்ய சற்று நேரத்தில் வண்டி சரியாகி ஓட ஆரம்பித்தது.
இனியன் வியப்பாக லிங்கைப் பார்க்க குழல் லிங்கிடம்
எப்படி அண்ணா வண்டியை ரிப்பேர் பண்ணிங்க? இது கூட உங்களுக்கு தெரியுமா ? – குழல்
படிக்குற காலத்தில் இந்த மாதிரி வண்டி சர்விஸ் பண்ணுற ஷாப்பில் பார்ட் டைம் வேலை செஞ்சு இருக்கேன்மா என்று லிங் கூற
இனியன் அவனை ஆராய்ச்சிப் பார்வை பார்த்துக் கொண்டே
இங்க பக்கத்தில் தான் எங்க வீடு வாங்க ஒரு கப் காபி சாப்பிட்டுப் போகலாம் நண்பா ! என்று இனியன் கூற
குழலிடம் தோன்றிய ஆர்வமிகுதியை பார்த்த லிங் அதற்கு சம்மதமாக தலையசைத்தான்
இனியனின் பக்கத்தில் லிங் அமர , பின்னால் அமர்ந்து கொண்டாள் குழல்
இனியனும் லிங்கும் பேசிக் கொண்டே வர, குழல் இனியனை பார்த்துக் கொண்டே வந்தாள்.
பேசிக் கொண்டே வந்த இனியன் சட்டென்று திரும்பி குழலைப் பார்க்க அதை எதிர்பார்க்காத குழல் திருதிருவென்று முழித்தாள்
அவள் பார்வைவையை சந்தித்தவன் புருவங்களை ஏற்றி என்ன என்று கேட்க வேகமாக ஒன்றுமில்லை என்று தலையை ஆட்டியபடியே கீழே குனிந்து கொண்டாள் குழல்.
தனக்குள் சிரித்துக் கொண்டே வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான் இனியன்.
கனிகா இனியனின் தாய் வண்டியின் சத்தம் கேட்டு வெளியே வந்தார்.
யார்டா ! இவங்க இனியா – கனிகா
அம்மா! இது லிங்கேஷ் என்று இனியன் கூற
லிங்கைப் பார்த்த கனிகா கண்களால் ஏதோ கேட்க இனியன் அதற்கு ஆம் என்று தலையாட்டினான்.
கனிகா அருகில் சென்று குழல் நிற்க கனிகா குழலிடம்
உன் பெயர் என்னம்மா ? – கனிகா
குழல் என்று இனியன் அதற்கு பதில் சொல்ல கனிகா ஆச்சரியமாக அவனைப் பார்த்தார்
என்னம்மா படிக்கிற ? – கனிகா
காலேஜில் கடைசி வருடம் படிக்கிறாமா – இனியன்
இனியா ! நான் அவகிட்ட கேட்டேன் ? – கனிகா
யார் சொன்னா என்னம்மா ! பதில் கிடைச்சிருச்சுல்ல – இனியன்
இவன்விட்டா வெளியில் நின்னு பேசியே அனுப்பிடுவான். வாம்மா !உள்ள நீயும் வாப்பா ! என்று இருவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றவர் சோபாவில் அமர வைத்துவிட்டு
இருங்க ! நான் காபி போட்டு கொண்டு வரேன் என்று கூறியவர் கிட்சனுக்குள் செல்ல
இதோ வந்துடறேன் என்று இனியனும் அவர் பின்னால் சென்றான்.
உள்ளே வந்த இனியனை பார்த்த கனிகா ஏதோ கேட்க முயல உள்ளே நுழைந்தாள் குழல்
அவள் வரவை கண்ட கனிகா தான் சொல்ல வந்ததை நிறுத்திவிட்டு அவளிடம் திரும்பினார்
என்னம்மா ! என்ன வேணும் ? – கனிகா
இல்லை சும்மா உட்கார்ந்து இருக்க ஒருமாதிரி இருந்தது அதான் வந்தேன் ஆண்ட்டி – குழல்
ஓ ! அப்படியாம்மா ! வா !இங்க வந்து நில் ! அப்புறம் சொல் மா படிப்பு எப்படிப் போகுது ? அடுத்து வேலைக்குப் போகப் போறியா ? இல்லை கல்யாணமா ? என்று இனியனை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே கனிகா கேட்க
தெரியல ஆண்ட்டி ? என்று கூறியபடியே குழல் இனியனைப் பார்த்துக் கொண்டே அவர் அருகில் நிற்க
ஓ ! நீ சொல்லுமா ! எப்படி இருக்கணும் ? உனக்கு வரப் போறவன் ? என்று கனிகா கேட்க
குழல் இனியனைப் பார்த்துக் கொண்டே
ஹ்ம்ம் ஒரு ஜடம் மாதிரி இல்லாம ஆசையா என்னைப் பார்த்துக்கனும் ஆண்ட்டி - குழல்
அதைக் கேட்டு அருகில் நின்று தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த இனியனுக்கு புரை ஏறியது
வேகமாக அவன் அருகில் வந்த கனிகா அவன் தலையை தட்டியபடியே பார்த்துடா ? என்று கூற
அவளை முறைத்துப் பார்த்தபடியே
அம்மா ! நான் வெளியே வெயிட் பண்றேன் . சீக்கிரம் வேலையை முடிச்சுட்டு வாங்கம்மா என்று கூறியவன் வெளியேற
அவன் செல்வதை ஒரு சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் குழல்
அவளையும் இனியனையும் கவனித்துக் கொண்டிருந்த கனிகா
“ பையன் நல்லா மாட்டிக்கிட்டான் என்று தனக்குள் நினைத்து சிரித்துக் கொண்டார் ‘
அவரிடம் நெருங்கிய குழல்
ஆண்ட்டி ! நான் வேணா காபி போடவா என்று அவள் கூற
கனிகாவும் சந்தோஷமாக அதற்குச் சம்மதம் தெரிவித்தார்
இருவரும் பேசியபடியே கிட்சனுக்குள் இருக்க
வெளியே வந்த இனியன் முன் வந்து நின்றாள் ஒரு பெண்.அவளை அழைத்துக் கொண்டு இனியன் ரூமிற்குள் செல்லவும் கனிகாவும் , குழலும் வெளியே வரவும் சரியாக இருந்தது..
குழல் லிங்கிடம் காபிக் கப்பை நீட்டியபடியே இனியனை கண்களால் தேடினாள் . அதை கவனித்த லிங் மேலே உள்ள ரூமைக் காட்டி அங்கு போயிருக்கிறார்மா என்று அவன் கூறியதும் குழல் மேலே சென்றாள் .
அவள் சென்றதும் கனிகா லிங்கிடம் திரும்பினார்.
தம்பி என்ன பண்றிங்க ? எங்க இருக்கீங்க? என்று அவர் கேட்க லிங் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
இங்கு குழல் இனியனை தேடி அவன் ரூமிற்குள் செல்ல அங்கு ஒரு பெண் இனியன் கையைப் பிடித்துக் கொண்டு
“ சார் ! உங்களைத்தான் நான் நம்பி இருக்கேன் ! என்னை ஏமாத்திடாதீங்க சார் ! ‘’என்று அந்த பெண் கண்ணீர் மல்க கூற இதைப் பார்த்த குழலுக்கு கோபம் தலைகேறியது.
ம்க்கும் என்று தன் தொண்டையை செருமி தன் இருப்பை குழல் காண்பிக்க
குழலை வரவை பார்த்த இனியன்
ஓ கே மகி ! கவலைப்படாம வீட்டுக்குப் போங்க ! உங்க பிரச்சனையை இன்னைக்கு கண்டிப்பா முடிச்சிடுறேன் என்று இனியன் கூற
அந்தப் பெண்ணும் அவனுக்கு நன்றி கூறிவிட்டு சென்றாள்.
அந்தப் பெண் சென்றதும் இனியனிடம் காபி கப்பை குழல் நீட்ட
அதை வாங்கியவன் குடித்துக் கொண்டே ஒரு பைலை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தான். அவன் அருகில் சென்ற குழல் மெதுவாக
ரொம்ப பழக்கமா ? – குழல்
யாரைச் சொல்ற? என்று பைலில் மூழ்கியபடியே இனியன் கேட்க
இப்ப வந்துட்டு போனாங்கள அவங்க தான் ! – குழல்
அவள் அப்படிக் கூறியதும் அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தான் இனியன் . பின்பு மறுபடியும் தான் விட்ட வேலையைத் தொடர்ந்து செய்தபடியே
அது எதற்கு உனக்கு ? தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்டா எனக்கு பிடிக்காது – இனியன்
ஓ ! அப்படியா ? அப்ப தேவையான கேள்வி ? தேவையில்லாத கேள்வில்லாம் ஒரு லிஸ்ட் எடுத்துக் கொடுங்க நான் கேட்குறேன் ?
உரிமையா கையெல்லாம் பிடிக்குற அளவுக்கு பழக்கமா ? – குழல்
ஹேய் லிசன் ! இப்ப எதற்கு குற்றவாளி மாதிரி நிக்க வச்சு கேள்வி கேட்குற நீ ! எல்லாத்துக்கும் உன்கிட்ட என்னால ரீசன் சொல்லிட்டு இருக்க முடியாது . யூ காட் இட் என்று இனியன் கத்த
குழல் வேகமாக அவன் அருகில் சென்று வேகமாக பேசினாள் குழல் .
உங்க அருகில் வந்து உங்க கையை பிடிச்சுட்டு பேசுற , அதுக்கு காரணம் கேட்டா ஏன் இவ்வளவு கோபம் வருது உங்களுக்கு. ? – குழல்
அவள் அப்படி கேட்டதும் அவளை ஆழமாக பார்த்தவன் மெதுவாக பைலை அருகில் உள்ள பெட்டில் தூக்கிப் போட்டுவிட்டு அவள் அருகில்
வந்தான்.
அவ கூட பேசினா உனக்கு ஏன் கோபம் வருது என்று அவள் கண்களை கூர்மையாக பார்த்தபடியே கேட்டான் இனியன்.
அது வந்து என்று அவள் தயங்க
ம்ம்ம் சொல்லு . அப்படி பேசினா என்னடி பண்ணுவ ? சொல்லு ? என்று இனியன் கேட்க
அப்போது தான் குழல் உணர்ந்தாள் அவன் தன் அருகில் நின்று இருப்பதை.
வேகமாக அவனை விட்டு அவள் விலக முற்பட
அவன் கைகள் அவளை பிடித்துக் கொண்டது
அவனை அருகில் பார்க்கவும் அவளுக்கு பதட்டம் அதிகரிக்க
என்னை விடுங்க ! நான் போகனும் – குழல்
முதல என் கேள்விக்குப் பதில் சொல்லிட்டு போ என்று இனியன் தன் பிடியை தளர்த்தாமல் உறுதியோடு இருக்க
அது வந்து என்று குழல் இழுக்க
என்னம்மா ! இவ்வளவு நேரம் அந்த கத்து கத்தின பதில் கேட்டா மட்டும் சொல்ல மாட்ற என்று இனியன் கூற
குழல் வேகமாக
கண்டிப்பா ஒரு கொலை விழும் அவளை இல்லை உங்கள என்று குழல் தைரியத்தை வர வழைத்துக் கொண்டு பேச
ஓ ! ஏன்மா ! யார்கூடயும் நான் பேசக் கூடாது ? அப்ப உன் கூட மட்டும் தான் பேசனுமா என்ன ? என் பொண்டாட்டி மாதிரில அதிகாரம் பண்ற நீ . ஏன் இப்படி நடந்துக்குற ? காரணம் தெரிஞ்சுக்கலாமா ? – இனியன்
அதெல்லாம் தெரியாது ? பேசக்கூடாதுனா ? அவ்வளவு தான் – குழல்
ஓ என்று கூறியவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க
அவ என்னைவிட அழகா இருக்காளா ? – குழல்
ஏன் இந்த கேள்வி ? – இனியன்
சொல்லுங்க ? – குழல்
ஆமா ! என்று இனியன் அவளை ஆராய்ந்தபடியே கூற
குழல் முகம் கருத்துவிட்டது அதை கவனித்தவன் சுவாரசியம் பொங்க
அவள் அருகில் வந்தவன் அவள் கண்களைப் பார்த்தபடியே
கண்கள் செந்தேனோ
நான் மயக்கம் கொள்ள
இதழ்கள் பூவிதழோ
நான் பித்தம் கொள்ள
கண்ணக்குழி ஆழ்கிணறோ
நான் வீழ்ந்து போக
என்று அவன் ஒவ்வொன்றையும் அவளைப் பார்த்தபடியே வர்ணிக்க
அவன் அடுத்து கழுத்து என்று கூறி அவள் கழுத்தை பார்க்க ஆரம்பிக்க
வேகமாக அவனைத் தடுத்தாள் குழல்
போதும் அவளை பத்தி ஏன்கிட்டயே வர்ணிக்கிறீங்க என்று கண்ணில் நீர் தேக்கி வைத்தபடியே அவள் வருத்ததோடு கூற
அவளை பார்த்தபடியே அருகில் வந்தவன் அவள் கண்களைப் பார்த்தபடியே
இதுவரைக்கும் எந்த பெண்ணையும் நான் நேசித்ததில்லை அவளைத் தவிர . அதே மாதிரி இவ்வளவு நேரம் நான் வருணித்ததும் அவளை இல்லை என்று கூறி இடைவெளிவிட்டவன்
இவ்வளவு நேரம் நான் வர்ணித்தது உன்னைத்தான் என்று இனியன் கூற
குழல் முகம் மலர்ந்து பின் வாடியது
அப்ப நான் அழகா இல்லைனு அன்னைக்குச் சொன்னது – குழல்
அதை இன்னமுமா ஞாபகம் வச்சுருக்க ? அது நீ திமிரா பேசினதுக்காக அப்படிச் சொன்னேன் - இனியன்
குழல் சந்தோஷமாக தலையசைத்தபடியே
அவனைப் பார்க்க அவன் பார்வை மாற்றம் அவளை ஏதோ செய்தது.
வேகமாக கதவினை நோக்கி குழல் செல்ல முயல்ல கதவினை நோக்கி நடந்தவள் அதன்பின் நகரமுடியாதபடி அவள் தாவணி பின்னால் இருந்து இழுக்கப்பட்டது
குழல் தாவணியை பிடித்தபடி
விடுங்க என்னை என்று சிணுங்கிக் கொண்டே திரும்ப
அங்கு தன் கைகளைக் கட்டிக் கொண்டே அவள் சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தான் இனியன்
அவள் குழப்பமாகப் பார்க்க
தன் தாவணி அருகில் இருந்த கதவின் இடுக்கில் மாட்டிக்கொண்டிருந்தது.
அதைக் கவனித்தவள் அதில் இருந்து தன் துப்பட்டாவை பிரித்தவிட்டுத் திரும்ப
மறுபடியும் தன் தாவணி மாட்டிக் கொண்டது
முன்னாடி திரும்பியபடியே இது வேற எதிலயாவது மாட்டிக்குது என்று முணுமுணுத்துக் கொண்டே திரும்ப
அங்கு அவள் தாவணியை பிடித்து நின்று கொண்டிருந்தான் இனியன்
அவன் கைகளில் தாவணியைப் பார்த்தவள்
விடுங்க என்று கூற
அதைப் பிடித்து அவன் இழுக்க அவன் மேலே போய் விழுந்தாள் குழல்
நான் ஜடமா ? என்று கூறியபடியே அவளை அருகில் இழுத்தவன் அவள் முகம் நோக்கி குனிய அவனை தள்ளிவிட்டு வேகமாக வெளியே ஓடினாள் குழல்.
அதை கண்டு சிரித்தபடியே கீழே இறங்கி வந்தான் இனியன்.
இனியனின் சிரிப்பை கண்டும் காணாமல் பார்த்தார் கனிகா.
லிங்கும் கனிகாவிடம் பேசியபடி குழலை கவனிக்கத் தவறவில்லை
லிங் அருகில் வந்த இனியன் டீ பாயில் வைத்திருந்த பைலை எடுத்தபடியே
“ அம்மா ! கொஞ்சம் வேலை இருக்கு ! இவங்களையும் அப்படியே போற வழியில் விட்டுட்டு போயிடுறேன் ‘’ என்று கூறியபடியே நகர முற்பட
அவன் கைகளில் இருந்த பைலில் இருந்து ஒரு புகைப்படம் கீழே விழுந்தது.
அதை கீழே குனிந்து எடுத்த லிங் அந்த புகைப்படத்தில் இருந்த நபரைக் கண்டதும் அதிர்ச்சியானான்.
அதில் ரூத்ரன் சிரித்துக் கொண்டிருந்தார் .
***************
புகை மண்டலம் சூழ்ந்து ஒருவரின் முன் போய் நின்றது
என்ன அடியாரே ! என்னிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற முயல்கிறாயா? – என்று கடோத்கஜன் ஆங்காரமாக கேட்க
எல்லாம் என் அப்பன் செயல் ! அவனின்றி ஒரு அணுவும் அசையாது ! புரிந்து நடந்து கொள் மூடா ! – அடியார்
உன் அப்பனையும் கட்டி வைக்கும் வித்தை தெரிந்தவன் நானடா – கடோத்கஜன்
என்ன கடோத்கஜா ! உன் உருவம் இழந்தும் உன் திமிர் இன்னும் அடங்கவில்லையாடா ! உன் அழிவு காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது – அடியார்
மூடா ! என் உருவம் போனால் என்ன ? காற்றாக மாறி என் இலக்கை அடைவேன் . பொளர்ணமி இரவிற்குள் மந்திர வியூகத்தை கைப்பற்றி உன் ஈசனையும் அடக்கி ஆளும் வல்லமை அடைவேன்டா நான் – கடோத்கஜன்
தீரேந்தரிடம் மந்திரவியூகத்தை கைப்பற்றப் போய் தோற்று போனது நினைவில்லையாடா ? மறுபடியும் உன்னை அழித்து உன்னை மண்ணோடு மண்ணாக்க மறுஜென்மம் எடுத்து வந்திருக்கிறாரடா அவர் !நீ அழிந்து போகப் போகிறாய் ! – அடியார்
அதையும் பார்க்கலாம்மடா ! என்று கூறிச் சிரித்தபடியே மறைந்து போனான் கடோத்கஜன்
அவன் மறைந்ததும்
ஈசனே ! உன்னை அழிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறான் இவன். இவனை ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறாய் ?
இருள் உலகத்தை ஆட்டிப் படைக்க துடித்துக் கொண்டிருக்கும் இவனை அழித்து அவனுக்கு மோட்சம் கொடுங்கள் பிரபு ! என்று அவர் கூற
மண்ணில் புழுதி பறந்து பூமியின் அடியில் இருந்து ஒரு சிவலிங்கம் தோன்றியது. அதைப் பார்த்தவர்
ஓம் நமச்சிவாய என்று கூறி வணங்கினார்.
வியூகம் தொடரும்...........
குழலும் , லிங்கேஷும் பேசியபடியே தோப்புக்குள் வர லிங் குழலிடம் பேசிக் கொண்டிருந்தாலும் அவன் பார்வை ரூபாவையே தேடியது. இதை கவனித்த குழல்
“என்ன அண்ணா ? யாராவது வராங்களா என்ன ? யாரை எதிர்பார்த்து தேடிட்டு இருக்கீங்க ? “– குழல்
ஆங் ! அதெல்லாம் ஒண்ணுமில்லைமா ? – லிங்
ரூபாவை தேடுறீங்களா என்ன? – குழல்
அதெல்லாம் இல்லம்மா ! சும்மா பார்த்தேன் என்று லிங் மழுப்ப
ஓ ! என் அண்ணாவும் நீங்களும் பேசுக்கிட்டதைப் பார்த்து நீங்க அவள விரும்புறீங்கனு நினைச்சேன் அண்ணா! நான்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன் போல என்று குழல் கூற
லிங் வேகமாக பேசினான்.
இல்லைமா ! அவள பார்த்தவுடனே பிடிச்சிருச்சு ! ஆனா அதை உன்கிட்ட சொல்ல ஒருமாதிரி இருந்துச்சு என்று லிங் தயங்கியபடியே கூற
வாவ் ! அண்ணா ! நிஜமாவா சொல்றீங்க ? – குழல்
ஆமாம் குழல் ! அவ அதற்கு ஒத்துக்கணுமே ! அவளுக்கும் என்னை பிடிக்கணுமே ! – லிங்
கவலைய விடுங்க அண்ணா ! அவள சம்மதிக்க வச்சுடுவோம் என்று குழல் கூற அதை கேட்ட லிங் சந்தோசமாக முறுவல் செய்தான்
இருவரும் பேசிக் கொண்டே வர தூரத்தில் இனியன் வண்டியை நிறுத்தி ஏதோ செய்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் குழல் வேகமாக அவன் அருகில் சென்றாள்.
அவன் அருகில் சென்றவள் என்னாச்சு ? ஏன் இங்க நிக்கிறீங்க ? – குழல்
அவள் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்த இனியன் மறுபடியும் குனிந்து கொண்டு வண்டியை ஆராய்ச்சி செய்தபடியே பேசினான்.
“ பார்த்தா தெரியல வண்டி ரிப்பேர் சரி செஞ்சுட்டு இருக்கேன்” – இனியன்
அதை கொஞ்சம் தன்மையா சொன்னா என்னவாம் எப்ப பாரு திமிராவே பதில் சொல்றது . ஜடம் ! ஜடம் ! என்று குழல் வாய்க்குள் முணங்க
அதை இனியன் கவனித்துவிட்டான். வேகமாக அவளிடம் திரும்பியவன்
இப்ப என்ன சொன்ன நீ ? திரும்பச் சொல்லு – இனியன்
ஒண்ணும் சொல்லலையே ? – குழல்
இல்லை ஏதோ சொன்ன- இனியன்
அய்யோ பாவம் ! வண்டி இப்படி ஆகிருச்சேனு சொன்னேன்- குழல்
இல்லை என்னை எதோ சொல்லி திட்டுன ? மறுபடியும் சொல்லு அதை என்று இனியன் கேட்க
‘அய்யோ குழல் வாயை வச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா ! பாரு இப்ப நல்லா மாட்டிக்கிட்ட ! சொல்லாம இவர் விடமாட்டார் போலயே ! சொல்லிடு குழல் என்று மனசாட்சி கூற
ஹ்ம்ம் ஜடம்னு சொன்னேன் ! போதுமா! என்று அவள் சொன்னதுதான் தாமதம் அதை கேட்ட இனியன் குழலையே பார்த்தபடியே இருக்க
குழல் தான் சொன்னதும் அவன் தன்னை திட்டுவான் என்று எதிர்பார்த்திருக்க ஆனால் இது எதுவும் செய்யாமல் அவன் தன்னை பார்த்ததும் அதுவும் அவனின் பார்வையில் தோன்றிய வித்தியாசத்தை குழப்பமாக குழல் பார்த்துக் கொண்டிருந்தாள்
இவர்களின் சம்பாஷணையை சுவாரசியமாக பார்த்துக் கொண்டே அருகில் வந்தான் லிங் .
சார் ! தள்ளுங்க நான் பார்க்குறேன் என்று லிங் கூற
இனியன் லிங்கை கேள்வியாகப் பார்த்தான்.
அதை கவனித்த குழல் லிங்கை இனியனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்
இவர் லிங்கேஷ் என் அண்ணா பிரண்ட் என்று குழல் கூற
ஓ ! அப்படியா ! நான் தேவஇனியன் ! இந்த ஊருக்கு புதுசா வந்திருக்கிற போலிஸ் ஆபிசர் ! என்று லிங்கிடம் கை குலுக்கினான் இனியன்.
ஓ! அப்படியா என்று கை குலுக்கிய லிங்
என்ன சார் பிரச்சனை ? என்று கேட்க
என்னை இனியன்னு கூப்பிடுங்க லிங்கேஷ் .. என்னனு தெரியல வண்டி start ஆக மாட்டுங்கிது – இனியன்
ஓ ! ஒகே இனியன் என்று லிங் கூறியபடியே வண்டியைப் பார்க்க
நண்பா ! ஒண்ணும் பிரச்சனை இல்லையே என்று இனியன் கூறியபடியே அருகில் நிற்க
இனியன் நண்பா என்று கூப்பிட்டதும் லிங்கிற்குள் ஏதோ ஞாபக ஊர்வலம் நடந்தது. இனியனை பார்த்தபடியே நின்றான் லிங்
என்னாச்சு நண்பா ? – என்று இனியனும்
அண்ணா என்று குழலும் உலுக்கவும் ஏதோ கனவில் இருந்து விழிப்பவன் போல் விழித்தான் லிங்
ஒன்றுமில்லை இனியா ! ஏதோ ஞாபகம் ! என்று கூறியவன் வண்டியை ஏதோ செய்ய சற்று நேரத்தில் வண்டி சரியாகி ஓட ஆரம்பித்தது.
இனியன் வியப்பாக லிங்கைப் பார்க்க குழல் லிங்கிடம்
எப்படி அண்ணா வண்டியை ரிப்பேர் பண்ணிங்க? இது கூட உங்களுக்கு தெரியுமா ? – குழல்
படிக்குற காலத்தில் இந்த மாதிரி வண்டி சர்விஸ் பண்ணுற ஷாப்பில் பார்ட் டைம் வேலை செஞ்சு இருக்கேன்மா என்று லிங் கூற
இனியன் அவனை ஆராய்ச்சிப் பார்வை பார்த்துக் கொண்டே
இங்க பக்கத்தில் தான் எங்க வீடு வாங்க ஒரு கப் காபி சாப்பிட்டுப் போகலாம் நண்பா ! என்று இனியன் கூற
குழலிடம் தோன்றிய ஆர்வமிகுதியை பார்த்த லிங் அதற்கு சம்மதமாக தலையசைத்தான்
இனியனின் பக்கத்தில் லிங் அமர , பின்னால் அமர்ந்து கொண்டாள் குழல்
இனியனும் லிங்கும் பேசிக் கொண்டே வர, குழல் இனியனை பார்த்துக் கொண்டே வந்தாள்.
பேசிக் கொண்டே வந்த இனியன் சட்டென்று திரும்பி குழலைப் பார்க்க அதை எதிர்பார்க்காத குழல் திருதிருவென்று முழித்தாள்
அவள் பார்வைவையை சந்தித்தவன் புருவங்களை ஏற்றி என்ன என்று கேட்க வேகமாக ஒன்றுமில்லை என்று தலையை ஆட்டியபடியே கீழே குனிந்து கொண்டாள் குழல்.
தனக்குள் சிரித்துக் கொண்டே வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான் இனியன்.
கனிகா இனியனின் தாய் வண்டியின் சத்தம் கேட்டு வெளியே வந்தார்.
யார்டா ! இவங்க இனியா – கனிகா
அம்மா! இது லிங்கேஷ் என்று இனியன் கூற
லிங்கைப் பார்த்த கனிகா கண்களால் ஏதோ கேட்க இனியன் அதற்கு ஆம் என்று தலையாட்டினான்.
கனிகா அருகில் சென்று குழல் நிற்க கனிகா குழலிடம்
உன் பெயர் என்னம்மா ? – கனிகா
குழல் என்று இனியன் அதற்கு பதில் சொல்ல கனிகா ஆச்சரியமாக அவனைப் பார்த்தார்
என்னம்மா படிக்கிற ? – கனிகா
காலேஜில் கடைசி வருடம் படிக்கிறாமா – இனியன்
இனியா ! நான் அவகிட்ட கேட்டேன் ? – கனிகா
யார் சொன்னா என்னம்மா ! பதில் கிடைச்சிருச்சுல்ல – இனியன்
இவன்விட்டா வெளியில் நின்னு பேசியே அனுப்பிடுவான். வாம்மா !உள்ள நீயும் வாப்பா ! என்று இருவரையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றவர் சோபாவில் அமர வைத்துவிட்டு
இருங்க ! நான் காபி போட்டு கொண்டு வரேன் என்று கூறியவர் கிட்சனுக்குள் செல்ல
இதோ வந்துடறேன் என்று இனியனும் அவர் பின்னால் சென்றான்.
உள்ளே வந்த இனியனை பார்த்த கனிகா ஏதோ கேட்க முயல உள்ளே நுழைந்தாள் குழல்
அவள் வரவை கண்ட கனிகா தான் சொல்ல வந்ததை நிறுத்திவிட்டு அவளிடம் திரும்பினார்
என்னம்மா ! என்ன வேணும் ? – கனிகா
இல்லை சும்மா உட்கார்ந்து இருக்க ஒருமாதிரி இருந்தது அதான் வந்தேன் ஆண்ட்டி – குழல்
ஓ ! அப்படியாம்மா ! வா !இங்க வந்து நில் ! அப்புறம் சொல் மா படிப்பு எப்படிப் போகுது ? அடுத்து வேலைக்குப் போகப் போறியா ? இல்லை கல்யாணமா ? என்று இனியனை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே கனிகா கேட்க
தெரியல ஆண்ட்டி ? என்று கூறியபடியே குழல் இனியனைப் பார்த்துக் கொண்டே அவர் அருகில் நிற்க
ஓ ! நீ சொல்லுமா ! எப்படி இருக்கணும் ? உனக்கு வரப் போறவன் ? என்று கனிகா கேட்க
குழல் இனியனைப் பார்த்துக் கொண்டே
ஹ்ம்ம் ஒரு ஜடம் மாதிரி இல்லாம ஆசையா என்னைப் பார்த்துக்கனும் ஆண்ட்டி - குழல்
அதைக் கேட்டு அருகில் நின்று தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த இனியனுக்கு புரை ஏறியது
வேகமாக அவன் அருகில் வந்த கனிகா அவன் தலையை தட்டியபடியே பார்த்துடா ? என்று கூற
அவளை முறைத்துப் பார்த்தபடியே
அம்மா ! நான் வெளியே வெயிட் பண்றேன் . சீக்கிரம் வேலையை முடிச்சுட்டு வாங்கம்மா என்று கூறியவன் வெளியேற
அவன் செல்வதை ஒரு சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் குழல்
அவளையும் இனியனையும் கவனித்துக் கொண்டிருந்த கனிகா
“ பையன் நல்லா மாட்டிக்கிட்டான் என்று தனக்குள் நினைத்து சிரித்துக் கொண்டார் ‘
அவரிடம் நெருங்கிய குழல்
ஆண்ட்டி ! நான் வேணா காபி போடவா என்று அவள் கூற
கனிகாவும் சந்தோஷமாக அதற்குச் சம்மதம் தெரிவித்தார்
இருவரும் பேசியபடியே கிட்சனுக்குள் இருக்க
வெளியே வந்த இனியன் முன் வந்து நின்றாள் ஒரு பெண்.அவளை அழைத்துக் கொண்டு இனியன் ரூமிற்குள் செல்லவும் கனிகாவும் , குழலும் வெளியே வரவும் சரியாக இருந்தது..
குழல் லிங்கிடம் காபிக் கப்பை நீட்டியபடியே இனியனை கண்களால் தேடினாள் . அதை கவனித்த லிங் மேலே உள்ள ரூமைக் காட்டி அங்கு போயிருக்கிறார்மா என்று அவன் கூறியதும் குழல் மேலே சென்றாள் .
அவள் சென்றதும் கனிகா லிங்கிடம் திரும்பினார்.
தம்பி என்ன பண்றிங்க ? எங்க இருக்கீங்க? என்று அவர் கேட்க லிங் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
இங்கு குழல் இனியனை தேடி அவன் ரூமிற்குள் செல்ல அங்கு ஒரு பெண் இனியன் கையைப் பிடித்துக் கொண்டு
“ சார் ! உங்களைத்தான் நான் நம்பி இருக்கேன் ! என்னை ஏமாத்திடாதீங்க சார் ! ‘’என்று அந்த பெண் கண்ணீர் மல்க கூற இதைப் பார்த்த குழலுக்கு கோபம் தலைகேறியது.
ம்க்கும் என்று தன் தொண்டையை செருமி தன் இருப்பை குழல் காண்பிக்க
குழலை வரவை பார்த்த இனியன்
ஓ கே மகி ! கவலைப்படாம வீட்டுக்குப் போங்க ! உங்க பிரச்சனையை இன்னைக்கு கண்டிப்பா முடிச்சிடுறேன் என்று இனியன் கூற
அந்தப் பெண்ணும் அவனுக்கு நன்றி கூறிவிட்டு சென்றாள்.
அந்தப் பெண் சென்றதும் இனியனிடம் காபி கப்பை குழல் நீட்ட
அதை வாங்கியவன் குடித்துக் கொண்டே ஒரு பைலை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தான். அவன் அருகில் சென்ற குழல் மெதுவாக
ரொம்ப பழக்கமா ? – குழல்
யாரைச் சொல்ற? என்று பைலில் மூழ்கியபடியே இனியன் கேட்க
இப்ப வந்துட்டு போனாங்கள அவங்க தான் ! – குழல்
அவள் அப்படிக் கூறியதும் அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தான் இனியன் . பின்பு மறுபடியும் தான் விட்ட வேலையைத் தொடர்ந்து செய்தபடியே
அது எதற்கு உனக்கு ? தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்டா எனக்கு பிடிக்காது – இனியன்
ஓ ! அப்படியா ? அப்ப தேவையான கேள்வி ? தேவையில்லாத கேள்வில்லாம் ஒரு லிஸ்ட் எடுத்துக் கொடுங்க நான் கேட்குறேன் ?
உரிமையா கையெல்லாம் பிடிக்குற அளவுக்கு பழக்கமா ? – குழல்
ஹேய் லிசன் ! இப்ப எதற்கு குற்றவாளி மாதிரி நிக்க வச்சு கேள்வி கேட்குற நீ ! எல்லாத்துக்கும் உன்கிட்ட என்னால ரீசன் சொல்லிட்டு இருக்க முடியாது . யூ காட் இட் என்று இனியன் கத்த
குழல் வேகமாக அவன் அருகில் சென்று வேகமாக பேசினாள் குழல் .
உங்க அருகில் வந்து உங்க கையை பிடிச்சுட்டு பேசுற , அதுக்கு காரணம் கேட்டா ஏன் இவ்வளவு கோபம் வருது உங்களுக்கு. ? – குழல்
அவள் அப்படி கேட்டதும் அவளை ஆழமாக பார்த்தவன் மெதுவாக பைலை அருகில் உள்ள பெட்டில் தூக்கிப் போட்டுவிட்டு அவள் அருகில்
வந்தான்.
அவ கூட பேசினா உனக்கு ஏன் கோபம் வருது என்று அவள் கண்களை கூர்மையாக பார்த்தபடியே கேட்டான் இனியன்.
அது வந்து என்று அவள் தயங்க
ம்ம்ம் சொல்லு . அப்படி பேசினா என்னடி பண்ணுவ ? சொல்லு ? என்று இனியன் கேட்க
அப்போது தான் குழல் உணர்ந்தாள் அவன் தன் அருகில் நின்று இருப்பதை.
வேகமாக அவனை விட்டு அவள் விலக முற்பட
அவன் கைகள் அவளை பிடித்துக் கொண்டது
அவனை அருகில் பார்க்கவும் அவளுக்கு பதட்டம் அதிகரிக்க
என்னை விடுங்க ! நான் போகனும் – குழல்
முதல என் கேள்விக்குப் பதில் சொல்லிட்டு போ என்று இனியன் தன் பிடியை தளர்த்தாமல் உறுதியோடு இருக்க
அது வந்து என்று குழல் இழுக்க
என்னம்மா ! இவ்வளவு நேரம் அந்த கத்து கத்தின பதில் கேட்டா மட்டும் சொல்ல மாட்ற என்று இனியன் கூற
குழல் வேகமாக
கண்டிப்பா ஒரு கொலை விழும் அவளை இல்லை உங்கள என்று குழல் தைரியத்தை வர வழைத்துக் கொண்டு பேச
ஓ ! ஏன்மா ! யார்கூடயும் நான் பேசக் கூடாது ? அப்ப உன் கூட மட்டும் தான் பேசனுமா என்ன ? என் பொண்டாட்டி மாதிரில அதிகாரம் பண்ற நீ . ஏன் இப்படி நடந்துக்குற ? காரணம் தெரிஞ்சுக்கலாமா ? – இனியன்
அதெல்லாம் தெரியாது ? பேசக்கூடாதுனா ? அவ்வளவு தான் – குழல்
ஓ என்று கூறியவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க
அவ என்னைவிட அழகா இருக்காளா ? – குழல்
ஏன் இந்த கேள்வி ? – இனியன்
சொல்லுங்க ? – குழல்
ஆமா ! என்று இனியன் அவளை ஆராய்ந்தபடியே கூற
குழல் முகம் கருத்துவிட்டது அதை கவனித்தவன் சுவாரசியம் பொங்க
அவள் அருகில் வந்தவன் அவள் கண்களைப் பார்த்தபடியே
கண்கள் செந்தேனோ
நான் மயக்கம் கொள்ள
இதழ்கள் பூவிதழோ
நான் பித்தம் கொள்ள
கண்ணக்குழி ஆழ்கிணறோ
நான் வீழ்ந்து போக
என்று அவன் ஒவ்வொன்றையும் அவளைப் பார்த்தபடியே வர்ணிக்க
அவன் அடுத்து கழுத்து என்று கூறி அவள் கழுத்தை பார்க்க ஆரம்பிக்க
வேகமாக அவனைத் தடுத்தாள் குழல்
போதும் அவளை பத்தி ஏன்கிட்டயே வர்ணிக்கிறீங்க என்று கண்ணில் நீர் தேக்கி வைத்தபடியே அவள் வருத்ததோடு கூற
அவளை பார்த்தபடியே அருகில் வந்தவன் அவள் கண்களைப் பார்த்தபடியே
இதுவரைக்கும் எந்த பெண்ணையும் நான் நேசித்ததில்லை அவளைத் தவிர . அதே மாதிரி இவ்வளவு நேரம் நான் வருணித்ததும் அவளை இல்லை என்று கூறி இடைவெளிவிட்டவன்
இவ்வளவு நேரம் நான் வர்ணித்தது உன்னைத்தான் என்று இனியன் கூற
குழல் முகம் மலர்ந்து பின் வாடியது
அப்ப நான் அழகா இல்லைனு அன்னைக்குச் சொன்னது – குழல்
அதை இன்னமுமா ஞாபகம் வச்சுருக்க ? அது நீ திமிரா பேசினதுக்காக அப்படிச் சொன்னேன் - இனியன்
குழல் சந்தோஷமாக தலையசைத்தபடியே
அவனைப் பார்க்க அவன் பார்வை மாற்றம் அவளை ஏதோ செய்தது.
வேகமாக கதவினை நோக்கி குழல் செல்ல முயல்ல கதவினை நோக்கி நடந்தவள் அதன்பின் நகரமுடியாதபடி அவள் தாவணி பின்னால் இருந்து இழுக்கப்பட்டது
குழல் தாவணியை பிடித்தபடி
விடுங்க என்னை என்று சிணுங்கிக் கொண்டே திரும்ப
அங்கு தன் கைகளைக் கட்டிக் கொண்டே அவள் சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தான் இனியன்
அவள் குழப்பமாகப் பார்க்க
தன் தாவணி அருகில் இருந்த கதவின் இடுக்கில் மாட்டிக்கொண்டிருந்தது.
அதைக் கவனித்தவள் அதில் இருந்து தன் துப்பட்டாவை பிரித்தவிட்டுத் திரும்ப
மறுபடியும் தன் தாவணி மாட்டிக் கொண்டது
முன்னாடி திரும்பியபடியே இது வேற எதிலயாவது மாட்டிக்குது என்று முணுமுணுத்துக் கொண்டே திரும்ப
அங்கு அவள் தாவணியை பிடித்து நின்று கொண்டிருந்தான் இனியன்
அவன் கைகளில் தாவணியைப் பார்த்தவள்
விடுங்க என்று கூற
அதைப் பிடித்து அவன் இழுக்க அவன் மேலே போய் விழுந்தாள் குழல்
நான் ஜடமா ? என்று கூறியபடியே அவளை அருகில் இழுத்தவன் அவள் முகம் நோக்கி குனிய அவனை தள்ளிவிட்டு வேகமாக வெளியே ஓடினாள் குழல்.
அதை கண்டு சிரித்தபடியே கீழே இறங்கி வந்தான் இனியன்.
இனியனின் சிரிப்பை கண்டும் காணாமல் பார்த்தார் கனிகா.
லிங்கும் கனிகாவிடம் பேசியபடி குழலை கவனிக்கத் தவறவில்லை
லிங் அருகில் வந்த இனியன் டீ பாயில் வைத்திருந்த பைலை எடுத்தபடியே
“ அம்மா ! கொஞ்சம் வேலை இருக்கு ! இவங்களையும் அப்படியே போற வழியில் விட்டுட்டு போயிடுறேன் ‘’ என்று கூறியபடியே நகர முற்பட
அவன் கைகளில் இருந்த பைலில் இருந்து ஒரு புகைப்படம் கீழே விழுந்தது.
அதை கீழே குனிந்து எடுத்த லிங் அந்த புகைப்படத்தில் இருந்த நபரைக் கண்டதும் அதிர்ச்சியானான்.
அதில் ரூத்ரன் சிரித்துக் கொண்டிருந்தார் .
***************
புகை மண்டலம் சூழ்ந்து ஒருவரின் முன் போய் நின்றது
என்ன அடியாரே ! என்னிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற முயல்கிறாயா? – என்று கடோத்கஜன் ஆங்காரமாக கேட்க
எல்லாம் என் அப்பன் செயல் ! அவனின்றி ஒரு அணுவும் அசையாது ! புரிந்து நடந்து கொள் மூடா ! – அடியார்
உன் அப்பனையும் கட்டி வைக்கும் வித்தை தெரிந்தவன் நானடா – கடோத்கஜன்
என்ன கடோத்கஜா ! உன் உருவம் இழந்தும் உன் திமிர் இன்னும் அடங்கவில்லையாடா ! உன் அழிவு காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது – அடியார்
மூடா ! என் உருவம் போனால் என்ன ? காற்றாக மாறி என் இலக்கை அடைவேன் . பொளர்ணமி இரவிற்குள் மந்திர வியூகத்தை கைப்பற்றி உன் ஈசனையும் அடக்கி ஆளும் வல்லமை அடைவேன்டா நான் – கடோத்கஜன்
தீரேந்தரிடம் மந்திரவியூகத்தை கைப்பற்றப் போய் தோற்று போனது நினைவில்லையாடா ? மறுபடியும் உன்னை அழித்து உன்னை மண்ணோடு மண்ணாக்க மறுஜென்மம் எடுத்து வந்திருக்கிறாரடா அவர் !நீ அழிந்து போகப் போகிறாய் ! – அடியார்
அதையும் பார்க்கலாம்மடா ! என்று கூறிச் சிரித்தபடியே மறைந்து போனான் கடோத்கஜன்
அவன் மறைந்ததும்
ஈசனே ! உன்னை அழிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறான் இவன். இவனை ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறாய் ?
இருள் உலகத்தை ஆட்டிப் படைக்க துடித்துக் கொண்டிருக்கும் இவனை அழித்து அவனுக்கு மோட்சம் கொடுங்கள் பிரபு ! என்று அவர் கூற
மண்ணில் புழுதி பறந்து பூமியின் அடியில் இருந்து ஒரு சிவலிங்கம் தோன்றியது. அதைப் பார்த்தவர்
ஓம் நமச்சிவாய என்று கூறி வணங்கினார்.
வியூகம் தொடரும்...........