dharshini chimba
Saha Writer
- Messages
- 308
- Reaction score
- 228
- Points
- 43
20. விரல்களின் வாசிப்பில் மன்னிப்பு!
'யார் வந்தா நமகென்னடி நம்ம படிக்கிற வேலைய மட்டும் பார்ப்போம்" என்று தன் தோழிக்கு பதில் கூறிவிட்டு அடுத்து வரப்போகும் பாடத்தின் புத்தகத்தை எடுத்து பார்த்துக்கொண்டிருந்தாள்.அவளின் கவனத்தை கலைக்கும் விதமாக வந்தது அவளின் மொபைல் ஓசை.
"நமக்கு யாரு இந்த நேரத்துல மெச்செஜ் பண்ண போறா? அப்பாம்மாகூட பேசறதில்லை. நம்ம புருஷன் சுத்தம். அவருக்கு அவர் வேலைதான் முக்கியம். ஒருவேளை இந்த கம்பனிக்காரன் எவனாவது அனுப்பியிருப்பானோ?" என்று நினைத்துக்கொண்டு திறந்து பார்க்கையில், அவள் கண்களையே நம்பமுடியவில்லை. அந்த குறுஞ்செய்தி அவள் கணவனிடம் இருந்து தான் வந்திருந்தது.
இரண்டு மெச்செஜ் முழுவதும்”சாரி” என்றிருந்தது.
'ஹக்கும்... வீட்ல இருக்கும்போது நேரடியா பேசறதுக்கு நேரமில்லை, இப்போ இந்த சாரிய அவன் டைப் பண்ணியா அனுப்பியிருப்பான்? நிச்சயமா இல்லை. பிராடு பைய, ஒரு தடவை டைப் பண்ணிட்டு அப்படியே காபி பேஸ்ட் பண்ணிருப்பான். அவனாவது இவ்ளோநேரம் டைப் பண்ணி டைம் ஸ்பென்ட் பண்றதாவது?' என்று யோசித்து கொண்டிருக்கும்போதே அடுத்த செய்தி வந்தது”ஐ லவ் யூ” என்று அந்த மெச்செஜ் முழுவதும் இருந்தது.
'என்ன சாருக்கு இன்னைக்கு லவ் ஓவரா பொங்குது?' என்று நினைக்கும்பொழுதே அடுத்ததும் வந்தது.
"பேபிமா! நீ நிச்சயமா என்ன நினைகிறேன்னு நான் கரெக்டா சொல்லட்டா? இவனுக்கு நம்மகூட பேசறதுக்கே டைம் ஸ்பென்ட் பண்ணமுடியல இவன் எங்க இதெல்லாம் டைப் பண்ணிருக்க போறான். பிராடு பையன்னு தான் நினைச்ச? உன் மேல சத்தியமா இல்லல்ல. குட்டிம்மா இந்த உலகத்துல நீ அதிகமா நேசிக்கிற என் மேல சத்தியமா நான் தான் இதெல்லாம் டைப் பண்ணி அனுப்பினேன். ஐ மிஸ் யூ சோ மச் டி செல்லம். ஐ வான்ட் யூ பேட்லி டார்லிங்" என்று வந்திருந்தது.
'டேய்! எனக்கு இங்க வேலை இருக்கு. உன் லவ் தான் அன்னைக்கே தெரிஞ்சிருசே? இந்த மெச்செஜ் டைப் பண்ணி என் டைம் வேஸ்ட் பண்ணாத. உன்னோட பொன்னான வேலைய பாரு. என்ன டிஸ்டர்ப் பண்ண. ஐ வில் கில் யூ" என்று சிரித்துக்கொண்டே அனுப்பினாள்.
"ஐ லவ் யூ சொல்லவேண்டிய வாயால ஐ கில் யூ சொல்லலாமா செல்லம். இவ்ளோதூரம் கெஞ்சுரேனே இந்த மாமாவை மன்னிக்க கூடாதா? அன்னைக்கு... நான்... ப்ம்ச்... நான் உனக்கு இன்னைக்கு எல்லாத்தையும் சொல்லிடறேன் பிளிஸ்டி.. நீ இப்படி என்னை அவாய்ட் பண்றது என்னால தாங்க முடியலடி.. ஐ லவ் யூ சோ மச்.. எனக்கு இன்னொரு சான்ஸ் கொடுக்க கூடாதா? நான் பாவம்ல?" என்று தன் கணவன் அனுப்பியதை படித்து சிரித்தாள்.
"என் படிப்பு முக்கியம்னு முடிவெடுத்து தான் என்கிட்டே இருந்து ஒதுங்கி இருக்கன்னு நினைச்சேன். அந்த லெட்டர்ல நீ எழுதி இருந்தத பார்த்துட்டு, நீ என்னை ரொம்ப நேசிக்கிற. இன்னும் பத்துநாள்ல தான் காலேஜ் முடியபோகுதே எதுக்கு உன்கிட்ட இருந்து பிரிஞ்சிருக்கனும்னு நினைச்சேன். ஆனா, நீ என் உணர்வுகளோட விளையாடற?" என்று திரும்பி அனுப்புகையில் அவள் கண்களில் இருந்து கண்ணீர்த்துளி எட்டி பார்த்தது .
"ஐ ஆம் சாரி" என்று வந்தது.
பதிலேதும் இவள் அனுப்பாமல் இருக்க,”ஐ லவ் யூ" என்று வர.
"ஐ ஹெட் யூ” என்று அனுப்பினாள்.
"இட்ஸ் ஓகே. ஐ லவ் யூ" என்று பதில் வர சிரித்தாள்.
'பொண்டாட்டிகிட்ட லவ்வகூட சொல்ல தெரியாதவன். இவனை எல்லாம் பெத்தாங்களா? இல்ல செஞ்ஜாங்களான்னே தெரியல?' என்று தன் விழிகளில் வழியும் நீரை துடைத்தபடி நினைத்தாள்.
"நான் உன்னை உடனே பார்க்கணும்"என்று அடுத்த செய்தி வர...
"முடியாது. எனக்கு கிளாஸ் ஸ்டார்ட் ஆக போகுது. ஈவனிங் வீட்ல பார்க்கலாம்” என்று அனுப்பினாள்.
"இன்னும் எவ்ளோநேரம் இருக்கு கிளாஸ் ஆரம்பிக்க?" என்று சரவணத்தமிழன் அனுப்ப.
"இன்னும் அஞ்சுநிமிஷம் தான் இருக்கு. பட் என்னால வெளியல்லாம் வரமுடியாது. யூ பெட்டர் கோ அண்ட் சி யுவர் வொர்க்" என்று அனுப்பினாள்.
"நோ. ஐ வான்ட் டு சி யூ இம்மிடியட்லி. நான் உன் கிளாஸ் ரூம் வெளிய வரவா?" என்று கேட்டான்.
"ஐயோ சாமி. இன்னும் ஒருவாரம் தான் இருக்கு காலேஜ் முடிய. என் படிப்புக்கு உலை வச்சிராத. எனக்கு கிளாஸ் ஸ்டார்ட் ஆக போகுது நான் அப்புறம் பேசறேன்" என்று அனுப்பிவிட்டு மொபைலை கிழே வைத்தவள், தன் எழுத்து பணியை தொடர்ந்தாள். அதனால் உள்ளே வந்தவனை கவனிக்கவில்லை.
"ஹேய்! செம்ம சூப்பரா இருக்காருடி. இவர் தான் நமக்கு சேப்டி கிளாஸ் எடுக்க போறாரு போல. இவனை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு ரொம்ப கொடுத்து வச்சவள்" என்று தன் தோழி வாய் ஓயாமல் பாராட்டி கொண்டிருப்பதை கேட்டு நிமிர்ந்தவள்.”ஹேய் இவன் எங்கண்ணன்டி" என்று கூறிவிட்டு தன் வேலையை தொடர நினைத்தவள்.”இரு இரு ஒரு நிமிஷம்" என்று தன் கண்களை நம்பாமல் மீண்டும் நிமிர்ந்து பார்த்தாள்.
'இந்த பயலுக்கு இங்க என்ன வேலை? அதுவுமில்லாம இவன் அவனோட பிரெண்டு இல்லை...? ரெண்டும் சேர்ந்து ஏதாவது வேலை காட்டுதுங்களோ?' என்று தன்னையே கேள்வி கேட்டு கொண்டிருக்கும் போதே பிரபு பேச ஆரம்பித்தான்.
"ஹாய் எவ்ரிஒன்! மை நேம் இஸ் பிரபு. உங்களுக்கு சேப்டி கிளாஸ் எடுக்கணும்னு உங்க காலேஜ்ல இருந்து ரெக்வெஸ்ட் பண்ணி கேட்டதால நாங்க வந்திருக்கோம்" என்றவனின் கண்கள் கடைசியாக அவன் சகோதரியின் மேல் நிலைக்க, அவள் முறைத்தாள்.
"வி ஆர் பிரம் கிரைம் பிரான்ச். உங்களுக்கு நான் தான் சொல்லிக்கொடுக்கிறதா இருந்தது ஆனா, எங்க கிரைம் பிரான்ச் ஹெட் இங்க பக்கத்துல ஒரு முக்கியமான வேலையா வந்ததால, இன்னைக்கு மட்டும் அவர் உங்களுக்கு கிளாஸ் எடுப்பார். சவுத் இந்தியா டீம்க்கு அவர் தான் ஹெட். சோ அவரோட டைம் ரொம்ப ப்ரிசியஸ் ஆனது. உங்களுக்கு த்ரீ டேஸ் கிளாஸ். மத்த ரெண்டு நாள் நான் எடுப்பேன். சோ யூ ஆல் வெல்கம் மிஸ்டர்.சரவணத்தமிழன்" என்று வெளியே சென்று எட்டி பார்க்க மிகுந்த கரவொளியின் நடுவில் மிடுக்கும் ஆண்மையின் மொத்த வடிவமாய் பார்ப்பவர்களின் கண்ணில் நிலைத்து நிற்கும் உருவில் கம்பிரத்தோடு உள்ளே சிரித்தபடி நுழைந்தான் நம் தாமரைசெல்வியின் கணவன்.
தன் மொத்த வகுப்பையும் திரும்பி பார்த்த செல்வி மிகவும் கடுப்பானாள். 'பின்னே, அவள் கணவனை அடுத்த பெண்கள் தங்களின் விழிமூடாது சைட்டடித்தால்.... அவளுக்கு குளுகுளு என்றா இருக்கும்?'
அவளின் விழிகளே அவனை விட்டு நகர மறுத்தன, இத்தனை நாள் பழக்கத்தில் ஒரு நாள் கூட இவ்வளவு மிடுக்காய் உடை அணிந்து அவள் பார்த்ததே இல்லை.
"ஹேய்! செம்மையா இருகார்டி உங்க அண்ணனை விட பயங்கர ஹாட்டா செம ஸ்மார்ட்டா இருக்கார் இல்லடி? உங்க அண்ணன் தான அப்போ உனக்கு இவரையும் தெரியுமா?" என்று சரவணத்தமிழனிடம் இருந்து கண்களை அகற்றாமல் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனாள் அவள் தோழி.
தன் கையால் வாயை மூடுமாறு சைகை செய்தவள், அவனை பார்க்காமல் கிழே குனிந்து இருந்தாள்.
"ஹலோ குட் ஆப்டர்நூன் கய்ஸ்! ஐ ஆம் சரவணத்தமிழன். நான் இதுவரைக்கும் எந்த பொது நிகழ்ச்சிலயும் கல்ந்துகிட்டதில்லை இன்பாக்ட் நீங்க எல்லாரும் தான் முதல்ல என்னை இந்த பொது இடத்துல ஆபீசரா பார்க்கிறிங்க" என்றதும் கரவொலி அதிர்ந்தது.
"என் பிரெண்ட் அண்ட் என் டிபார்ட்மென்ட்கு மட்டும் தான் என்னை இந்த போஸ்ட்ல தெரியும். இன்னும் சொல்ல போனா.... என் வுட்பிக்குகூட தெரியாது" என்று தாமரைச்செல்வியை அவன் விழிகள் நாட, அவளின் விழிகளில் அதிர்ச்சி நிறைதிருந்தது.
'என்னது பொண்டாட்டி நான் இங்க இருக்கும்போது வுட்பியா? யாருடா அவ? மகனே நீ இன்னைக்கு என்கிட்டே செத்த. உன்னை கொல்லாம விடப்போறதில்லை' என்று நினைத்து கொண்டிருக்கும்போதே மற்ற பெண்களிடம் ஒரே சலசலப்பு.
"கொடுத்துவச்சவடி அந்த பொண்ணு. இவரை மாதிரி ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க போறால்ல?" என்று கிசுகிசுப்பது காதில்விழ, உலை இல்லாமலே செல்வியின் மனது கொதிக்க ஆரம்பித்தது.
"இன்னும் பத்து நாளல்ல எங்களுக்கு கல்யாணம்." என்று கடிகாரத்தை பார்த்தவன்.
"டென் மினிட்ஸ் இதுலையே போய்டுச்சு. ஓகே லெட்ஸ் சி த கிளாஸ்" என்று ஆரம்பித்தவன் சேப்டி பற்றி நிறைய விஷயங்களை சொல்லிககொடுத்தான்.
அவனின் விழிகள் அவ்வபொழுது செல்வியின் விழிகளை சந்தித்து வந்தது.
அரைமணிநேரம் வகுப்பெடுத்து முடித்தவன்.
"ஓகே. இன்னைக்கு என்னோட கிளாஸ் முடிஞ்சுது. நாளைல இருந்து மிஸ்டர்.பிரபு வருவார். இது படிக்கற வயசு. பைனல் இயர் வேற? சோ படிப்புல முழுகவனத்தை செலுத்தி நல்லா படிங்க. பெஸ்ட் ஆப் லக். சி யூ கய்ஸ்" என்று வெளியே செல்ல எத்தனித்தவன் திரும்பி,”ஹ்ம்ம்.... ஒன்னு சொல்ல மறந்துட்டேன்" என்றான்.
எல்லோரின் விழிகளும் ஆர்வமாய் அவனின் இதழையே மொய்க்க...