Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மாய கண்ணன்..

Malar Bala

Member
Vannangal Writer
Team
Messages
39
Reaction score
72
Points
18
மாய கண்ணன்..
பல காலங்களாக
அன்பிற்கு ஏங்கியவளைக்
கண்டு கடவுளே
இறங்கி வந்தானோ!

அவன் கண்கள்
பேசும் வார்த்தைகளுக்கு
தனியகராதி உண்டோ?

தன் பின்பகாட்டியில்
என்னைக் காணும்பொழுது
பின்னில் நின்று
இரசிப்பவன் அவனே..

இருபது ஆண்டுகளாய்
என்னுடன் இருந்த
மனதுடன் சேர்த்து..
நானாக உண்ணும்
பழக்கத்தையும் பறித்துக்கொண்டான்..

இல்லையெனில் தாயைத்
தேடும் பிள்ளைப்போல,
உணவைக் கண்டதும்

அவன் கரம் தேடுவேனோ!!

அவனை விடவும்
அவன் நினைவுகளுக்கே
குறும்பு அதிகம்போல..

தனிமையில் அந்நினைவுகள்
சுகமாய் தோன்றும்..
ஆனால் அனைவருடன்
இருக்கும் பொழுதோ
தோன்றி ரணமாய் கீறும்...

அனைத்து நொடிகளிளும்
உயிராய் உணர்வாய்
கலந்தவன் இன்று
ஏனோ விலகிவிட்டான்..

இறைவா...
நான் கண்டது கனவா?
இல்லை காண்பது கனவா?
காண்பது கனவாயின்
விடியலை தா....

கண்டது கனவாயின்
என் கனவை
மீட்டுத் தா...

நினைவுகளின் மத்தியில்
^பாலா^
 
Top Bottom