மார்கழித் திங்கள்.!
அத்யாயம் 3
அந்த பிரம்மாண்ட துணிக்கடையால் அத்தெருவில் எப்பொழுதும் திருவிழாக் கூட்டம் தான்.. இதில் வார இறுதி நாள் ஆஃபர் என இன்னும் கூட்டம்..!
"ஏய் பவி... எரும.. வீட்ல ஏசில ஒரு துக்கத்தப் போட்ருப்பேன்.. இந்த மட்டமத்தியான வெய்யில்ல என்னை அலைய வெச்சு இந்த கூட்டத்துல.. ம்ம்ம்" என அலுத்துக்கொண்டாள் ரம்யா.
நா எருமைனா நீ பொறுமை ரம்மி கண்ணு.. என பவித்ரா நக்கலடிக்க.... ஆமா ரம்மி கும்மி.. ரம்மு பீர்னு என் பேர கொல பண்ணு.... எனக்குன்னு வந்து வாச்ச பாரு ஃபிரண்டுனு.. என லேசாக அவள் கன்னத்தில் இடித்தாள் ரம்யா..
இருவரது ஐந்து வருட கல்லூரி நட்பு வெகு இயல்பாக நெருக்கமான நட்பாக மாறியிருந்தது... பவித்ராவின் ஒரே நட்பும் ரம்யாவுடன் தான்... வெளியில் எங்கு சென்றாலும் அது ரம்யாவுடன் தான்..
சரி வா... காட்டன் டிரெஸ் எல்லாம் தர்டு ஃப்ளோர்ல தான்... வா அங்க போலாம் ரம்மி... பவி அழைக்க...
அய்யயோ.. காட்டன் டிரஸ்ஸ பாத்தா விடமாட்டயே.. தயவு செஞ்சு ரொம்ப நேரம் ஆக்காம சீக்கரம் முடிடி மை ஒட்டகசிவிங்கி..
ஏய்.. ஒத... நான் என்ன அவ்வளவு உயரமாவா இருக்கேன் தலைய நீட்டிக்கிட்டு.. எத்தந்தரவ சொல்லிருக்கேன் பப்ளிக்ல என்ன அப்டி கூப்டாதடின்னு.. ஹூம்.. பொய் கோபம் காட்டினாள்..
ஹா.. ஹா.. பவி கண்ணு நான் என்ன பொய்யாவா சொல்றேன்... இப்டி நெலக்கதவு இடிக்கறமாதிரி வளந்துருக்க... பின்ன எப்படி கூப்படிவாங்களாம்.. சோ... செல்லமா நீ ஒட்டகந்தான்...
ஹேய்.... வளவளன்னு பேசிட்டே இருக்கியே.... உன் வாய் வலிக்காதாடி... மிஸ் ரம்மி...
அது பழகி போச்சுபா.. பேசலேன்னா எனக்கு பைத்தியமே பிடுச்சுடும்.. அதான் கேக்கறதுக்கு நீ இருக்கியே.. மை பெஸ்ட் ஃபிரண்ட்...
போதும் போதும்.. காதுல ரத்தம் வழியறது எனக்குதான தெரியும்.... ஹே தர்டு ஃப்ளோர் வந்திருச்சு.. பேசாம எங்கூடவா.. டிஸ்டர்ப் பண்ணாத...
உத்தரவு மஹாராணி.... போடி.. நா அப்டிதான் பேசிட்டு வருவேன்.... என்ன பண்ணுவ.. ஆ....
வந்து தொல....
இருவரும் அந்த பரந்த குளிரூட்டப்பட்ட அறைக்குள் நுழைந்தனர்.. அந்த அறை முழுவதும் மனிதத் தலைகள்.. தப்பு தப்பு மங்கையர் தலைகள்...!
ஹப்பா.. எவ்ளோ கூட்டம்.. பவிகுட்டி.. நீ சமத்தா உள்ள எல்லாம் சுத்திபாத்துட்டு மெதுவா துணி எடுத்துட்டு வா.. நான் கொஞ்சம் ஏசில ஒக்காந்து தூங்கிக்கறேன்... என்ன.. ரம்யா கூற கடுப்பானாள் பவித்ரா....
ஏய்.. ரம்யா.... வெளையாடாத.. வா... ப்ளீஸ்.. நீதான் நல்லா செலக்ட் பண்ணுவ... வா.. அவளை இழுத்துக் கொண்டு மனிதக் குவியல்களுக்குள் புகுந்தாள் பவித்ரா..
அந்த அறையை சுற்றி சுற்றித் தேடித் தேடி டிசைன் கலர் குவாலிட்டி என ஆராய்ந்து ஆராய்ந்து , இரண்டு மணி நேர தேடலுக்குபின் ஒருவழியாய் இரண்டு பெரிய பைகளை நிறப்பிக் கொண்டு கைவலிக்க இருவரும் கவுண்டர் பக்கம் வந்தனர்.. பில் கவுண்டர் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது..
மலைத்துப் பார்த்த இருவரும் அயர்ந்து போயினர்...
ஏய் பவி... என்னடி இது.. திருவிழாவுல நீர்மோர் குடிக்க வந்த கூட்டம் மாதிரி இவ்ளோ கூட்டம் நிக்குது... யப்பா.. என்னால இந்தக் கூட்டதுல நிக்கமுடியாது பா.. நீயே போய் நில்லு... கூறியவாரே அருகில் இருந்த சேரில் பொத்தென அமர்ந்தாள் ரம்யா..
ஹேய் ரம்யா... என்னடி.. இந்த கூட்டத்துல என்ன தனியா கோத்துவிட்டு நீ எஸ்கேப் ஆகபாக்கற...
ஆங்... உனக்குதான டிரெஸ் எடுத்த.. நீயே போய் நில்லு... க்ம்ம்... நம்மளால ஆகாதுப்பா... பேய் கூட்டமா இருக்கு.. எவே நிக்கறது..
ஹே... ரம்மி செல்லம்.. இப்டி பண்ற பாத்தியா... சே... சரி... கொஞ்சநேரம் வெயிட் பண்ணி பாப்போம் கூட்டம் குறையுதான்னு.. உட்காந்து தொல... பவியும் அவளருகில் அமர்ந்தாள்...
அந்த கூட்ட சலசலப்பில் அருகில் ஏதோ பரிச்சயமான குரல் கேட்க திரும்பிப் பார்த்தாள் பவித்ரா...
அம்மா..... என்னாலலாம் அங்கபோய் பில் போட முடியாது.. வெரி சாரி... நீதான் போய் லைன்ல நிக்கனும்... செம்ம லேடிஸ் கூட்டமா இருக்கு...
டேய்.. டேய்... ரிஷி.. என்னால ரொம்ப நேரம் நிக்க முடியாதுடா... ப்ளீஸ்டா.....
ரிஷி அவன் அம்மா சுந்தர வல்லியிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த பவித்ராவிற்கு குப்பென்று வியர்த்தது..
எந்த க்ஷணமும் அவர்கள் பார்த்துவிடக்கூடும்.. சுந்தரவல்லியிடம் போய் பேசுவோமா வேண்டாமா என பவித்ரா குழம்பிக் கொண்டிருக்க, வரிசையை நோக்கி வந்த சுந்தரவல்லி எதேச்சியாக பவித்ராவை பார்த்து ஓர் ஆச்சர்ய புன்னகை உதிர்த்தாள்...
ஹே.. பவித்ரா.. நீ எங்க இங்க.. வீக் என்டு ஸ்பெஷலா.. ஹா..ஹா.. ட்ரெஸ் வாங்கிட்டியா....
ஆமாம் ஆன்டி... வாங்கியாச்சு.. பில்தான் போட முடியல.. எவ்ளோ கூட்டம் பாருங்க..
ஆமாமாம்.. என் பையன்கூட அங்க போய் நிக்க முடியாது லேடிஸ் கூட்டமா இருக்குன்னு வந்துட்டான்.. இரு அவன உனக்கு அறிமுகப் படுத்தறேன்.. எனக்கூறிவிட்டு திரும்பி ரிஷியை அழைத்தாள்.
இருவரையும் பார்த்தபடி அருகில் வந்தான் ரிஷி..
பவித்ரா... இது என்னோட பையன் ரிஷி.. மெடிக்கல் லைன்ல ஒர்க் பண்றான்... ரிஷி.. இது பவித்ரா... நம்ம பெருமாள் கோயில்ல பிரண்ட் ஆனோம்.. ஹா..ஹா.. ரொம்ப நல்ல பொண்ணு.. ரொம்ப அமைதி...
அவளைப் பார்த்து ஓர் ஏளனப் புன்னகையை உதிர்த்தவாரே தலையாட்டினான்....
சரி... அம்மா... நான் போய் கியூல நிக்கறேன்.. நீயும் வரியா.. இல்ல லேட்டாகுமா வர...
இருடா.. இவங்களும் அதுக்குதான் வெயிட் பண்றாங்க.. பவித்ரா... நீயும் போறியா... சுந்தர வல்லி கேட்க...
அம்மா... நீயே போய் கியூல நில்லு.. அவங்க வரட்டும்.. ரிஷி சொல்ல அவனை நேருக்கு நேராகப் பார்த்தாள் பவித்ரா..
டேய் நீயும்வாடா.... ப்ளீஸ்..
ஹூம்... நான் போய் நிப்பேன்.. ஆனா.. அப்பறம் அங்கேயும் இலவச பட்டம் எனக்கு கெடைக்கும்... அதுதான் யோசிக்கறேன்.... பவித்ராவை பார்த்துக் கொண்டே அமைதியாகச் சொன்னான் ரிஷி.. பவித்ரா கண்களை தாழ்த்திக் கொண்டாள்...
டேய்... என்னடா.. என்னமோ சொல்ற.. ம்ம்ம்... சுந்தரவல்லி முழிக்க..
ரிஷி பவித்ராவை அர்த்தத்துடன் பார்த்திக் கொண்டிருந்தான்... அவளும் ஓர் குற்றவுணர்வுடன் அவனை பார்க்க...
அருகில் இருந்த ரம்யா பவியை லேசாக கிள்ளினாள்... " ஹலோ.. நான் இங்க ஒருத்தி இருக்கேன்.. நியாபகம் இருக்கா.. ம்ம்ம்....
ஸ்ஹாா.... ஹேய்... சாரி டி.. சாரி.... வா.. நாமலும் க்யூல போய் நிக்கலாம்.. ஓகே ஆன்டி அந்த இரண்டாவது வரிசை குறைஞ்சமாதிரி இருக்கு... நாங்க போறோம்.. எனக் கூறியவாரே அவனை நேர் கொண்டு பார்க்க முடியாமல் ரம்யாவை இழுத்துக் கொண்டு அந்த கூட்டத்தில் மறைந்தாள் பவித்ரா.. அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி..
கடையைவிட்டு வெளியில் வந்த பவித்ராவின் முகம் மாறி இருப்பதைக் கண்ட ரம்யா குழப்பமானாள்...
ஏன்டி... முகம் ஒரு மாதிரி இருக்கு... துணியெடுக்க ஜாலியாத் தான வந்த.. அந்த அம்மாவும் நல்லாத்தான பேசினாங்க... திடீர்னு ஏதோ திருடினவ மாதிரி கடையவிட்டு வேகமா வந்துட்ட.. என்னாச்சு பவி...
கொஞ்சம் கண்களை சுழலவிட்ட பவி மெதுவாகப் பேசினாள்... ஒரு விஷயம் இருக்கு ரம்யா... நாம அஞ்சுநாளா பாக்கலேல.... அப்போ.... ம்ம்ம்... இரு சொல்றேன்... ஏதாவது காபி ஷாப் போய் பேசலாம்... எனக் கூறியபடி நடந்தவள் அடுத்த தெருவில் தெரிந்த பிரபல காபி ஷாப்பிற்குள் ரம்யாவை கூட்டிக் கொண்டு நுழைந்தாள்..
என்னவாக இருக்கும் என்ற ஆவல் தாங்காமல் அவளுடன் சென்று அமர்ந்தாள் ரம்யா....
இருவருக்கும் மேல்நாட்டுவகை காபியை ஆடர் செய்துவிட்டு , ஏதோ அவஸ்தையில் நீண்ட பெருமூச்சுவிட்டாள் பவி..
ஏய்... என்னடி ஓவர் ரியாக்ஷன் பண்ற.. என்னனு சொல்லித் தொல... ஆர்வம் தாங்கல... என்ன ஆச்சு... ம்ம்ம்.... சொல்லு..... அவள் அவசரப் படுத்த கையமர்த்தினாள் பவி...
சொல்றேன்.. சொல்றேன்... நாம இப்போ துணிக்கடைல பாத்தோமே.. அந்த அம்மா.. அவங்க பையன்....
ஆமா.... கூர்ந்து கேட்க ஆரம்பித்தாள் ரம்யா...
அவங்க கோயில்ல அறிமுகமானவங்க.. எப்பவும் போல மார்கழி முதல்நாள் கோயிலுக்கு போயிருந்தேனா.. விடிகாலையில... அப்போ கோயில்ல செம்ம கூட்டம்.....
சரி.....
கூட்டத்தோட கூட்டமா எல்லாரும் வேண்டிக்கிட்டு வெளில வந்தமா.. அப்போ... பின்னாடி வந்த இவன் என்மேல சாஞ்சு இடுப்புல நல்லா அழுத்தி கைவெச்சுட்டான்...
அப்பறம்.. என்ன பண்ண... கொஞ்சம் அதிர்ச்சியுடன் ரம்யா கேட்டாள்..
வந்த கோபத்தில.. என்ன பொறுக்கித் தனம் பண்றியான்னு நல்லா நறுக்குன்னு திட்டிவிட்டுட்டேன்.. அவன் ஏதோ சொல்ல வந்தான்.. நா கேர் பண்ணாம விடுவிடுனு வெளில வந்துட்டேன்...
அதிர்ச்சி மாறாமல் ரம்யா அவள் சொல்வதையே கேட்டுக் கொண்டிருந்தாள்..
அப்பறம் ரெண்டு மூனுநாள் கோயிலுக்கே போல... என்னமோ மாதிரி இருந்துச்சு... அப்பறம் டூ டேஸ் பேக் ஈவினிங் கோயிலுக்கு போயிருந்தேன்.. அப்போ அந்த அம்மா பழக்கம் ஆனாங்க.. அவங்கள கூட்டிட்டு போக இவன் வந்திருந்தான்.. அப்பதான் தெருஞ்சது இவங்க பிள்ளைனு.. அ... அதான்.. அவன மறுபடியும் பாத்ததும் இப்போ ஒருமாதிரி இருக்கு...
அமைதியானார்கள் இருவரும்.. ஆனால் உள்ளுக்குள் விநாடிக்கு விநாடி பல எண்ணங்கள் ஓடியது பரவக்கு.. உடனே வீட்டுக்கு போயிடவேண்டும் என இருப்பு கொள்ளாமல் தவித்தாள்....
ஏய்.. இதுக்கு போய் ஏண்டி இவ்ளோ கலவரமாற.. அவன் உன் மேல விழுந்தான் நீ அவன திட்டின.. சரிதான.. விடு.. இதுக்குபோய் இவ்ளோ ஒரி ஆவற.. கமான் பவித்ரா.. பீ கூல்...
சாரிடி ரம்மி... நான் வீட்டுக்கு போகனும் வா கெளம்பலாம்... என எழுந்து கொண்டாள் பவித்ரா..
ம்ம்ம்.. சரிவா.. கெளம்பலாம்.. இருவரும் கிளம்பினர்..
என்னடி.... கடையையே அள்ளிண்டு வந்துட்டியா.. ஹாஹா... எத்தன பை கொண்டு வரா பாருங்கோ... சிரித்த படி பங்கஜம் பவித்ராவை வரவேற்க , சுரத்தே இல்லாமல் பைகளை டீபாயில் வைத்துவிட்டு அமர்ந்தாள்...
என்னம்மா... ஒரே காட்டன் டிரஸ்ஸா வாங்கி குவிச்சுட்ட போல.. ஹாஹா.. நன்னாருக்கு.. நன்னாருக்கு... அப்பாவும் தம்பியும் ஆர்வமுடன் அம்மா பிரித்து காட்டியதை பார்த்து சிரித்தனர்..
ஏய் பவி... எனக்கு ஒன்னும் வாங்கலயா.. எல்லாம் உனக்கே வாங்கிட்டு வந்துருக்க.... பாரும்மா இவள.. தம்பி ஸ்ரீதர் தன் கண்ணாடி வழியே அவளை முறைத்தான்..
எல்லோரும் மாறிமாறி பேசிக் கொண்டிருக்க அங்கு இருக்க ஏனோ பிடிக்காமல் தன் அறையை நோக்கி நகர்ந்தாள்.. அருகில் இருந்த அறையில் பாட்டி படுத்திருக்க அவளிடம் செல்ல மனமில்லாமல் தன்அறைக்குள் சென்று தனியாக அமர்ந்து கொண்டாள்..
மனம் ஏனோ குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது.. ரிஷி , நான் திட்டினத அவன் அம்மாட்ட சொல்லிடுவானா.. அந்த அம்மா என்னபத்தி என்ன நெனைப்பாங்க.. சரியான வாயாடி , அடக்கம் இல்லாதவன்னு நெனைப்பாங்கல்ல... சே... பேசாம அவன்கிட்ட ஒரு சாரி சொல்லிடுவோமா... சிறிய குற்றவுணர்வு மேலெழுந்தது..
சாரியா... நா எதுக்கு சொல்லனும்.. திடீரென கோபம் கொப்பளித்தது.. அன்னிக்கு அவன் செஞ்சதுக்கு யாரா இருந்தாலும் அப்படித்தான் பேசிருப்பாங்க.... நானும் அதத்தான் பண்ணேன்... என் மேல என்ன தப்பு இருக்கு... ம்ம்ம்... அன்னிக்கு எப்டி என்மேல விழுந்து என் முதுகுல முழுசா சாஞ்சு என்ன கட்டிப்புடிக்கற மாதிரி என் இடுப்புல கைவெச்சு அழுத்தி........ அதை நினைக்க நினைக்க கோபத்திலிருந்த மனம் ஏனோ சட்டென மாறி கொஞ்சமாய் சலனப்பட ஆரம்பித்தது.. உள்ளுக்குள் இனம்புரியாத உணர்வு ஒன்று கிளர்ந்தெழுந்து முகத்தில் ஓர் சிரிப்பை உண்டு பண்ணியது.. கண்கள் நிலைத்திருக்க அதில் லயித்தவள் வெட்கமும் கூச்சமும் வர மெள்ள தலை கவிழ்ந்தாள்..
அன்னிக்கு நான் நடந்துண்டது தப்புதான்... தெரியாமத் தானே சத்தம் போட்டேன்... அவன் பாட்டுக்கு அவன் அம்மாட்ட சொல்லிட்டான்னா.. எப்படி என்பிள்ளைய சொல்லபோச்சுன்னு சண்டைக்கு வந்துட்டாங்கன்னா... சே.. பேசாமா அவன் அம்மாவோட வரும்போது தனியா பார்த்து சாரி கேட்டுட வேண்டியதுதான்.. அதோட முடுஞ்சுடும்... தேவையில்லாம.. இவ்ளோ சிம்பிளா முடியற விஷயத்த போய் நான் ஏ இவ்ளோ அலட்டிக்கறேன்.. பேசாம இருக்கறத விட்டுட்டு... சே... பவி நீ சிலசமயம் தேவையில்லாம குழம்பற... தன்னைத் தானே திட்டியபடி சிரித்தாள்.. மனம் கொஞ்சம் லேசானது..
பவி... பவித்ரா.... எங்க இருக்க... என் கண்ணாடிய காணமே.. பவி....
பாட்டி அழைக்க நினைவு சட்டென விலகியது பவிக்கு.. எழுந்து பாட்டியின் அறைக்குள் நுழைந்தாள்....
நேராக சென்று அலமாறியில் இருந்த கண்ணாடியை எடுத்து பாட்டியிடம் நீட்டினாள்.... இந்தா... இங்க இருக்கு....
சிரித்துக் கொண்டே வாங்கிய சுகுமாரி , வயசாச்சுல்ல.. அதான்.. எத எங்க வெச்சோம்னு ஞாபகம் வரமாட்டேங்குது.. ம்ஹூம் பழசெல்லாம் அச்சுபதுஞ்ச மாதிரி நல்லா ஞாபகம் இருக்கு.. இப்போ நடக்கறதுதான்.... புன்னகை பூத்தாள்..
பவிமா.. எதோ துணிகடைக்கு போனும்னு சொன்னியே.. போய்ட்டுவந்தாச்சா.. பாட்டிட்ட காட்டவே இல்லியே.. ம்ம்ம்..
வாங்கிட்டேன் பாட்டி... கொஞ்சம் தலவலிக்கறா மாதிரி இருந்தது.. நீயும் படுத்துண்டு இருந்தியா.... அதான்....
தலைவலியா... பட்டபடிக்கற வெயில்ல போகாதேன்னு சொல்றது.. கேக்கறியா... வெடிக்காலைல பச்ச தண்ணில குளிச்சுட்டு ஈரத்தலையோட இருக்கே.... கசாயம் எதும் குடிக்கறியா... அம்மாட்ட சொன்னியா ... சுகுமாரி பேசிக் கொண்டே போக...
அய்யோ... பாட்டி இப்போ இல்ல.. சரியாயிடுத்து... நீ பேச பேசறத கேட்டு தலைவலி வந்துடும் போல இருக்கு... ஹா...ஹா... வாய்விட்டு சிரித்தாள்...
பாட்டியும் நகைத்துக் கொண்டே.. அப்பறம்... யாரோட போனே... உன் சிநேகிதி ரம்யாவோடயா....
ஆமா.... கடைல ஒரே கூட்டம்... கவுண்டர் முன்னாடி எவ்ளோ கூட்டம் நிக்கறது... ஒருவழியா நின்னு வாங்கிண்டு வந்துட்டோம்... அப்பறம்........ என நிறுத்தினாள் பவி...
என்ன என்பது போல பார்த்த பாட்டி " சொல்லு... அப்பறம்..."
அந்த... அந்த மாமி இருக்கால்ல... அவா அங்க வந்திருந்தா....
யாரு.....
அதான்.... கோயிலுக்கு வருவான்னு சொன்னேனே.... அந்த பையனோட அம்மா....
ஓ.. அவாளா..... ம்ம்ம்....
ஆமா... அந்த பையனும் வந்திருந்தான்.. சொல்லிவிட்டு நிறுத்தினாள் பவி...
அவளை ஆராய்ந்தபடி பார்வையை ஓடவிட்டாள் பாட்டி சுகுமாரி...
சிறிது நேரம் போக... எதேச்சியா தான் அவாள பாத்தேன்.. அவங்க ரெண்டுபேரும் துணி எடுக்க வந்தாங்க போல.... கவுண்ட்டர் முன்னாடி நின்னுன்டு இருந்தா... என்ன பாத்ததும் ஓடி வந்துட்டா அந்த மாமி....
ம்ம்ம்...
அங்கு நடந்ததைப் பற்றி சொல்வதா வேண்டாமா என சிறு தடுமாற்றத்துடன்... அப்பறம் பேசிட்டு கிளம்பிட்டாங்க... நாங்களும் வந்துட்டோம்.. புன்னகைத்தாள்...
ம்ம்ம்..... வேறொன்னும் இல்லையே... அர்த்தத்துடன் கேட்டாள்...
அவ்ளோதான்.. வேறென்ன.... சரி பாட்டி ஒனக்கும் எனக்கும் சூடா காபி எடுத்துண்டு வர்ரேன்.... எனக் கூறிக் கொண்டே நழுவினாள் பவித்ரா...
மறுநாள் மாலை....
கோயிலில் கூட்டம் கொஞ்சம் கம்மியாக இருக்க, மெல்லிய குளிர் தென்றலை ரசித்தபடி பிரகாரத்தில் காலாற மெதுவாக சுற்றிவிட்டு வாசல் அருகில் வந்தாள் பவி.. சுவாமியை தரிசித்துவிட்டு சுந்தரவல்லியும் வெளியே வர இருவரும் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்...
மாமி... எப்டி இருக்கீங்க.. ஸ்வாமி சந்நதில உங்கள தேடினேன் காணல.. அதான் பிரகாரத்த சுத்திட்டு கெளம்பினேன்... லேட்டாயிடுத்தா...
ஆமா பவித்ரா... ஆத்ல கெஸ்ட் வந்துட்டா... அவாள கெளப்புவிட்டுட்டு வர நேரம் ஆயிடுத்து..
கண்களை மெதுவாக இங்கும் அங்கும் அலையவிட்டபடியே... உங்க பையன் வரலியா மாமி... மெதுவாகக் கேட்டாள்...
அவனும் டியூட்டிக்கு போய்ட்டான்.... வர்ரதுக்கு நேரம் ஆகும்னான்.. ஏதோ ஆடிட்டாம்... ஹூம்.. அதான் நானே ஆட்டோவ புடுச்சு வந்துட்டேன்....
ஓ அப்படியா... பவியின் முகம் சுறுங்கியது...... மாமி... உங்காம் எங்க இருக்கு... பாவம் ரொம்ப தூரத்லேந்து வரேள் போலவே.. நூல்விட ஆரம்பித்தாள்..
சே... சே..... ரொம்ப தொலவெல்லாம் இல்லை... இங்க தான் இந்திரா நகர்.. ஜஸ்ட் ரெண்டு கிலோமீட்டர்தான்... எங்க போகனும்னாலும் எம்பையன் தான் எப்பவும் கூட்டிண்டு போவான்.. அம்மா மேல அவனுக்கு அலாதி ப்ரியம்... ரொம்ப பொறுமை... ரொம்ப மரியாதை.. பொண்கள்ட முகம் குடுத்து பேச மாட்டான்.. அவ்ளோ சமத்து... தவமா தவமிருந்து கெடச்சவன்... அவன் பத்தி சொல்லனும்னா நேரம் பத்தாது.. இப்டித் தான் நேத்து எதித்தாத்து மாமிக்கு முடிலைன்னதும் ஓட்டமா ஓடி அவாளா ஆஸ்பத்ரில சேத்து... ராவெல்லாம் கண்ண முழுச்சு........ மாமி ராமாயணமாக அளந்து கொண்டே போக... பவியின் முகம் அஷ்டகோணலாய் போனது... வேறுவழியின்றி வலுக்கட்டாயமாக சிரிப்பை வரவழைத்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தாள்... மாமி நிறுத்தியபாடாய் இல்லை...!!
மா.. மாமி... நேரமாச்சு... இருட்டிருச்சு.. ஆத்ல தேடுவா.... நா கெளம்பரேனே.... பாவமாய் பார்த்தாள்....
இரும்மா.... என்ன அவசரம்.. போலாம்... வேணும்னா உன்ன ஆட்டோல கொண்டுவிட்டு நான் போறேன்.. இதுல என்ன வந்திருக்கு.. ஒருத்தருக் கொருத்தர் ஒத்தாசையா இல்லாம என்ன வேண்டி கிடக்கு....
அய்யயோ.. அதெல்லாம் வேண்டாம் மாமி.... எங்காம் இங்க பக்கம் தான்... நான் போயிக்கறேன்... மெல்ல நழுவினாள்...
சரி... பவித்ரா.... பாத்து போ... அப்பறம் எங்காத்துக்கு ஒருநாள் வாயேன்... ஆரஅமர பேசலாம்.... ரிஷியும் அவ அப்பாவும் மட்டும் தான்...
இ... இல்ல.. மாமி... பாக்கறேன்..
கூச்சப்படாதடிமா... நம்பாம்தான்... இப்போ ஒருஎட்டு வந்துட்டு காபி சாப்டுட்டு போறியா .. ஒன்ன திரும்ப கொண்டு விட்டுடறேன்....
இல்ல மாமி... அப்பறம் வரேன்....
சரி.... ஞாயித்து கிழமை வா.. அப்பதான் ஆத்ல எல்லாரும் இருப்பா... அவாளுக்கு உன்ன இன்ட்ரோடியூஸ் பண்ணி வெக்கறேன்.. இது தான் என் பிரண்டுன்னுட்டு.... கடகடவென சிரித்தாள்...
ரிஷியிடம் பேச சந்தர்ப்பம் தானாக அமைந்ததை எண்ணி நிம்மதியுடன் அவளிடம் விடைபெற்று நடந்தாள் பவித்ரா... ஞாயிற்று கிழமையை எதிர்பார்த்தபடி... ஆனால்..
Thread 'மார்கழித் திங்கள்! - Comments'
https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/