- Messages
- 60
- Reaction score
- 86
- Points
- 18
மார்கழித் திங்கள்.!
அத்யாயம் - 20
புன் சிரிப்புடன் வீட்டில் நுழைய வாசலிலே நின்றிருந்த அம்மாவின் கோபமான குரல் பவியை திடுக்கிடச் செய்தது..!
" ஏன்டி.. எவ்ளோ நேரமா உனக்கு கால் பண்றது.. எங்கடி போய்ட்டு வர.. " பங்கஜம் சத்தமாகக் கேட்க பவிக்கு திக்கென்று இருந்தது.. விழித்தாள்..
" நீ போனை எடுக்கலையேன்னு ரம்யாவுக்கு போன் பண்ணா அவ என்னவோ இப்ப வந்துடுவா அப்ப வந்துடுவான்னு சொல்றா.. மணி என்ன ஆறது.. ம்ம்ம்.. உங்கப்பா உனக்காக எவ்ளோ நாழி வெயிட் பண்றார் தெரியுமா.. உனக்கு செல்லங்குடுத்தது தப்பா போயிடுத்து.. இது சரியில்ல பவி சொல்லிட்டேன்.." பங்கஜம் கடுமையாக பேச வெலவெலத்து போனாள் பவி..
" இ.. இல்லம்மா.. ரம்யா ஆத்லேந்து கெளம்பிட்டேன்.. பஸ் கெடைக்கல.. அ.. அதான்.." தயங்கி தயங்கி பொய் சொன்னாள்.
" டைம் ஆயிடுத்துன்னா ஒரு போன் பண்ண மாட்ட.. மனசு கெடந்து அடுச்சுக்கறது.. எத்தன போன்கால் பண்றது.. போன பாரு.."
தடுமாறி பேக்கினுள் இருந்த போன எடுத்து பார்த்தாள்.. வீட்டிலிருந்தும் ரம்யாவிடமிருந்தும் பத்து கால்களுக்கு மேல் வந்திருந்தது.. ரிஷியுடன் இருக்கும் போது ரம்யா போன் செய்து வம்பு செய்வாளோ என சைலன்ட் மோடில் போட்டது அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது..
" போன்.. வைப்ரேட்ல இருந்ததால கவனிக்கலம்மா.. "
" நன்னாதான் இருக்கு போ... அப்பா ரொம்ப கோபமா இருக்கார். உன்கிட்ட முக்கியமா பேசனும்னு ஆறுமணிலேந்து காத்துண்டு இருக்கார்.. இப்டி பண்றியே பவி.. மொதல்ல உள்ள போ.. " அவள் இழுத்துக் கொண்டு நடக்க பதட்டத்துடன் உள்ளே சென்றாள் பவி..!
பாட்டி குழப்பமாக அமர்ந்திருக்க , நடேசன் பொறுமையின்றி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்.. பவி உள்ளே நுழைய..
" என்ன பவி இது.. உன் இஷ்டத்துக்கு வெளில போயிட்டு வர்ரே.. வயசாயிடுத்து இல்ல.. ஒரு பொறுப்பு வேண்டாம்.. ஆத்ல தேடுவாளேன்னு ஒரு பயம் இருக்கா.. அப்டி என்ன ப்ரண்டாத்துக்கு போய் படிக்கறது.. இங்க படிச்சா ஆகாதா.. வயத்துல நெருப்ப கட்டிண்டு நாங்க இங்க இருக்கனும்.. நீ எதுக்கும் கவல படாதைக்கு போயிடுவே.. அப்டிதானே.." நடேசன் படபடவென கொட்ட பயத்துடன் அவரை பார்த்துக் கொண்டிருந்தாள் பவி..
" இ... இல்லப்பா.. சீக்கறம் கெளம்பிட்டேன்.. போன் சைலன்ட்ல இருந்தது.. சா.. சாரிப்பா.." தலையை கவிழ்ந்து கொண்டாள்.. தொண்டையை அடைத்தது.. அப்பா எதற்காகவும் இவ்வளவு உணர்ச்சிவசப் பட்டதில்லை..
" உனக்கு நல்ல மாப்ள அமையனுமேன்னு நான் அங்கயும் இங்கயும் அலஞ்சுண்டு இருக்கேன்.. நீ என்னடான்னா.. நேரங்கெட்ட நேரத்ல வர்ரே.." நடேசன் மறுபடியும் பொறும.. சுகுமாரி பாட்டி இடைமறித்தாள்..
" சரிடா... எதோ ஃப்ரண்டோட படிக்கனும் போயிருக்கா.. போன்தான் சைலன்ட்ல இருந்திருக்கே.. அதுக்கு அவோ என்ன பண்ணுவா.. அதுக்கு குழந்தைய இப்டி பேசறியே.. விடு.. " பாட்டி பேச கோபமானார் நடேசன்.
" அவளச் சொல்லி குத்தமில்ல , எல்லாம் நீ குடுக்கற செல்லம்.. நாளைக்கு இன்னொரு ஆத்துக்கு போக வேண்டியவ.. இப்டி பொறுப்பில்லாம இருந்தா எப்டிமா.."
பாட்டியின் முகம் மாறியது.. " நடேசா.. கோபத்ல பொறுமை இழக்காத.. அதான் காரணத்த சொல்லிட்டாளே.. பவித்ரா பொறுப்பில்லாத பொண்ணு இல்ல.. அவள எதுவும் சொல்லாத.. நேக்கு சங்கடமா இருக்கு.." அவரை கடிந்து கொண்டு பவியை அழைத்தாள்.." வாடி கண்ணு.. பாட்டிட்ட வா.."
பாட்டியிடம் சென்று அமர்ந்தவள் பாட்டி தலையை வருட தொண்டை அடைத்த அழுகை குபுக்கென கண்களில் நீராய் வழிந்தது.. பாட்டியின் மடியில் தலை சாய்ந்து கொண்டாள்..
அவ்வளவு நேரம் கோபமாய் இருந்த நடேசனுக்கு அவளது கண்கள் கலங்குவதைக் கண்டு மனம் தவித்தது..
" பவி... அப்பா உன் நல்லதுக்கு தானே சொல்றேன்.. இனிமே இப்டி இருக்காதம்மா.. என்ன... சந்தோஷமான விஷயம் உன்ன வெச்சுண்டு எல்லார்கிட்டயும் சொல்லனும் காத்துண்டு இருந்தேன்.. நீ வரலைன்னதும் கொஞ்சம் கோபப்பட்டுட்டேன்.. " வாஞ்சையுடன் அவளை பார்த்தார்..
என்ன விஷயம் என எல்லோரும் அவரை பார்க்க..
" என்னடா சந்தோஷமான விஷயம்.. மத்யானம் வெளில போய்ட்டு வந்ததுலேந்து எதுவும் சொல்லவே இல்லையே.. " பாட்டி நடேசனை ஆர்வமாக பார்க்க.. பவிக்கு குழப்பத்துடன் கலக்கமும் சேர்ந்து கொண்டது..
" பகவான் கண்ண தெறந்துட்டார்.. நம்ம பவிக்கு நல்ல வரன் ஒன்னு வந்துருக்கு.. அதச் சொல்லனும்னு தான் காத்துண்டு இருந்தேன்.." அவர் கூற கூற பவியின் அடிவயிற்றில் பயம் பற்றிக் கொண்டது..
" ஜாதகம் பார்க்க குடுத்திருக்கேளா.." பங்கஜம் சலிப்புடன் கேட்க..
" ஜாதகம் குடுத்து பொறுத்தமும் பாத்துட்டா.. நம்ம சோம சேகரோட ஒன்னுவிட்ட தங்கை பையன். அவன் ஆத்துக்குதான் போய்ட்டு வரேன்.. ரெண்டு பேரோட ஜாதகத்லயும் ஏழு பொருத்தம் இருக்கு.. அடுத்த வாரம் பாக்க வரேன்னு சொல்லிருக்கா..." கண்கள் ஒளியேற அவர் கூற..
பவிக்கு ஒரு நிமிடம் தலையே சுற்றியது.. பேரிடி விழுந்ததுபோல் தலையில் கையால் அழுத்திக் கொண்டாள். இதயம் தாறுமாறாய் எகிரியது..
கலங்கிய கண்களுடன் அப்பாவையே வெறித்துப் பார்த்தாள்.. தன் காதல் கனவு இப்படி ஒரே நொடியில் தரைமட்டமாகும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை.. சிறிது நேரத்திற்கு முன்வரை இருந்த அத்தனை சந்தோஷமும் கரைந்து வடிந்து காய்ந்து போனது..
பாட்டியின் முகத்தில் மெல்லிய அதிர்ச்சி பரவ பவியை பார்த்தாள்.. மெள்ள அவளை அணைத்துக் கொண்டாள்..
" என்ன.. எல்லாருக்கும் சந்தோஷம் தானே.. பொண்ணு பாக்கறது சிம்பிளா இருந்தா போதும்னு சொல்லிட்டா அவா.. பையன் போட்டோ குடுத்திருக்கா.. இத பாருங்கோ.. பவி நீயும் பாரு.." அவர் படத்தை காமிக்க அதை பார்க்கும் நிலையில் இல்லாமல் தலையை கவிழ்த்துக் கொண்டாள் பவி..
" நம்ப பவி போட்டாவ பாத்து அவாளுக்கு ரொம்ப புடுச்சு போச்சாம்.. எதையும் பெருசா எதிர்பார்க்க மாட்டாளாம்.. சம்பிரதாயத்துக்கு அடுத்த வாரம் நல்ல நாள் பாத்து பொண்பாக்க வராளாம்.. ஓகே ஆயிடுத்துன்னா அப்பவே தட்டு மாத்திண்டுடலாம்னு சொல்லிருக்கா.." நிம்மதியுடன் சிரித்தார்.
" பையன் எப்டி ஏதுன்னு நன்னா விஜருச்சியா.. நல்ல குடும்பம் தானே.." பாட்டி கொஞ்சம் கலக்கத்துடன் கேட்டாள்..
" நல்ல பையன்.. நல்ல கம்பெனில வேல பாக்கறான்.. வசதியான குடும்பம்தான்.. ஒரே பையன்தான்.. பிக்கல் பிடுங்கல் இல்லை.. நம்ம சோமசேகரன் குடும்பம் பத்தி நோக்கு தானே தெரியுமேம்மா.."
" பவிக்கும் பிடிக்கனுமே.. அவ விருப்பத்தையும் கேக்க வேண்டாமா.."
" அவ என்னமா சின்ன பொண்ணு.. பிடிச்சுருக்கு பிடிக்கலன்னு சொல்ல என்ன இருக்கு.. நம்ப பவி அப்டிலாம் வேண்டாம்னு சொல்ல மாட்டா.. இல்லையா பவி.. பையன் ராஜாவாட்டம் இருக்கான்.. அப்புறம் என்ன.. என்ன பங்கஜம்.. போட்டோவ நீயும் பாத்துக்கோ.." அவளிடம் போட்டோவை குடுத்தார்.. பங்கஜத்திற்கும் இந்த வரன் சரியானதென தோன்றியது.. புன்னகையுடன் தலையாட்டினாள்..
" இல்லடா... இன்னும் படிப்பு முடிக்கலையே... அதுக்குள்ள.. " பாட்டி ஆரம்பிக்க..
" அம்மா , திரும்ப ஆரம்பிக்காதே.. படுச்சு முடுச்சாலும் ஒருத்தனுக்கு வாக்கப்பட்டு அவாத்துக்கு தானே போயாகனும்.. இந்த வரன் கைகூடட்டும்.. வேனும்னா அப்பறம் சொல்லிக்கலாம்.. அதுக்கும்மேல அவா உடனே கல்யாணத்த முடிக்கனும்னா பண்ணிட வேண்டியதுதான்.. உன் பேத்திக்கு நல்ல வரன் அமைஞ்சதேன்னு சந்தோஷ பட்டுக்கோ.. வேற எதுவும் சொல்லாதே.." அவர் கொஞ்சம் கோபத்துடன் கூற பாட்டி அமைதியானாள்..
உள்ளுக்குள் ஆயிரம் பூகம்பம் வெடிக்க அமர்ந்திருந்தாள் பவித்ரா.. என்ன செய்வது எனத் தெரியாமல் திக்குமுக்காடி போனாள்.. ஒருபக்கம் கோபமும் ஒரு பக்கம் அழுகையும் வந்தது.. ரிஷியை விரும்புவதை சொல்லிவிடுவோமா என எண்ணம் அவளை தூண்டியது.. வாய் வரை வந்த வார்த்தைகள் மேலெழ தைரியமின்றி தொண்டைக்குழியில் சிக்கி வெளிவர இயலாமல் மூழ்கி மூழ்கி நெஞ்சுக்குள் புதைந்தது.. கனத்த எண்ணங்கள் நெஞ்சம் அடைக்க கண்களில் ஏனோ நீர் வழிந்தது.. கண்களை அழுந்த துடைத்துக் கொண்டாள்.. வேகமாக எழுந்து அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டாள்..
பின்னால் உள்ளே வந்த பங்கஜம்.. " பவி.. எதுக்கிப்ப கண்ண கசக்கிண்டு இருக்கே.. அப்பா ஏதோ கோபத்ல பேசிட்டார்... அதுக்கு போய் அழலாமா.. குழந்த மாதிரி.." கண்களை துடைத்துவிட்டாள்.
அவளிடமாவது தன் காதலை சொல்லிவிடலாமா என இருந்தது.. பவி வாயெடுக்க..
" பவி... ஒரு விஷயம்.. அப்பா சொல்றதும் நியாயம் தானே.. எப்டியும் படிப்பு முடுச்சாலும் கல்யாணம் பண்ணின்டு அடுத்தாத்துக்கு போய்தான் ஆகனும்.. நல்ல குடும்பமா அமஞ்சிருக்கு.. அது இதுன்னு மனச குழப்பிண்டு இருக்காதே.. நடக்கறது நல்லபடியா நடக்கும்.. உனக்கேத்தவனா தான் இருப்பான் பாரு.. கல்யாணம் ஆயிடுத்துன்னா , போகப் போக எல்லாம் பழகிடும்.. அப்பறம் வேல பாக்கனும் அது இதுன்னு நீ நெனச்சுண்டு இருந்ததெல்லாம் சில்லியான விஷயமா போய்டும்.. அதனால அவா வரும்போது எதுவும் உணர்ச்சி வசப்பட்டுடாதே.. அப்பறம் அப்பா ஒடஞ்சு போயிடுவார்.."
" அ... அது.. அது இல்லமா.. நா.. நா..." பவி திக்கி திணற..
" படிக்கனும் , வேல பாக்கனும்.. அதானே.. கல்யாணம் ஆயிடுத்துன்னா உன் ஆத்துகாரர் ஒப்புதலோட வேலைக்கு போயேன்... யார் வேண்டாம்கறா.. அவர் சரின்னு சொல்லிட்டா வேற யார் கேக்க போறா உன்ன... சரியா.. மனச விடாம இரு.. உன் மனசுபோல நடக்கும்.. இன்னும் என்ன கண்ண கசக்கிண்டு.. சிரி.. சிரி.. " பங்கஜம் அவள் கன்னத்தை கிள்ள..
வெடிக்க காத்திருந்த உணர்வுகளை அழுத்தி அடக்கி மெள்ள சிரித்தாள் பவி... விதியின் சதியை எண்ணி..
" சரி.. சரி.. ட்ரெஸ்ஸ மாத்திண்டு முகத்த அலம்பிண்டு வா சாப்படலாம்.. அப்பா காத்துண்டு இருப்பார்.." கூறிக் கொண்டே சென்றாள் பங்கஜம்..
யாரிடமும் சரியாக பேசாமல் , சாப்பிடப் பிடிக்காமல் ஏனோதானோவென கொறித்துவிட்டு தன் அறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள்..
ரிஷியிடம் உடனே கூற வேண்டும் என மனம் அடித்துக் கொண்டது.. அவனை பிரிவதா என நினைக்கையிலே உடல்நடுங்க
உணர்வு பீறிட்டு எழுந்தது.. மெள்ள அழுதாள்.. சத்தம் வெளியில் கேட்டுவிடுமோ என தலையணையில் முகம் புதைத்துக் கொண்டாள்.. அந்த வேளையில் அரவணைப்பு தேவைப்பட்டது பவிக்கு.. ஆறுதல் கூற யாருமின்றி தலையணையை இறுக பற்றிக் கொண்டு கரைந்தாள்.. ரிஷி பார்த்த தினம் முதல் அவன் காதல் சொன்னது அவன் விரல் ஸ்பரிசம் அவனது அணைப்பு முதல் முத்தம் என அத்தனையும் கண்முன்னே தோன்றி அவளை இம்சித்தது... ரிஷியின் முகம் கண்முன் நிழலாடி அவளை சோகக் கடலில் ஆழ்த்தியது.. இரவு முழுக்க உறக்கமின்றி தீவிர சிந்தனையில் இருந்தாள்..
மறுநாள் காலை..
உடலெல்லாம் வலிக்க , சிவந்த கண்கள் தூக்கமின்றி பொங்கி போய் எரிந்தது.. மெள்ள எழுந்து வெளியே வந்தாள்.. காலை வெகுநேரமாகி இருந்தது.. அப்பா வேலைக்கு சென்றிருந்தார்.. அம்மா அடுக்களையில் இருக்க தள்ளாடியபடி வெளியே வந்தாள்.. ஹாலில் பாட்டி அமர்ந்திருந்தாள்..
" என்ன பவி.. உடம்பு சரியில்லையா.. அம்மா வந்து எழுப்பினா எந்திரிக்கவே இல்லையே.. நான் தான் தூங்கட்டும்னு விட சொல்லிட்டேன்.. என்னாச்சு கண்ணு.."
" ஒ.. ஒன்னுமில்ல பாட்டி... " சுரத்தில்லாமல் கூறியபடி அங்கிருந்து அகன்றாள். மனம் சஞ்சலத்தில் உழன்று கொண்டிருந்தது..
குளித்து முடித்து ஏதோ பறி கொடுத்தது போல் அமர்ந்திருந்தாள்.. உணவு உண்ண பிடிக்கவில்லை.. ரிஷியிடம் உடனே இதைப் பற்றி கூற வேண்டும் என மனம் பதைபதைத்தது.. அவனிடம் கூறினாள் என்ன செய்வான்.. எனை கூட்டிப் போக வருவானா.. இல்லை அப்பா பேச்சை கேட்டு எனை விட்டுவிடுவானா.. குழப்பத்தில் மனம் அலைந்தது..
" பவி.. கண்ணு.. இங்க கொஞ்சம் வாயேன்.. " பாட்டி அழைக்க.. விருப்பமின்றி மெள்ள எழுந்து சென்றாள்.
" என்னம்மா.. என்ன ஆச்சு.. "
.................
" சொல்லும்மா.. அப்பா வரன் பாத்தது பிடிக்கலையா.. என்ன செய்யறது பவி.. அவன் அவசரப் படறானே.. திரும்ப திரும்ப எத்தன தடவ சொல்றது.. அவன் பிடிவாதமா இருக்கானே.. எனக்கும் ரொம்ப கவலையாத்தான் இருக்கு.. வர்ர வரன் நல்ல குடும்பமா இருக்கனும்.. உனக்கு சம்மதம்னாத் தான் இந்த கல்யாணம் இல்லைனா வேண்டாம்னு நானே அவன்ட்ட சொல்லிடறேன். என்ன சரியா.. அதுக்காக கவல பட்டுண்டு உடம்ப கெடுத்துக்காதடி செல்லம்.."
பீறிட்டு வந்த அழுகையை அடக்க இயலாமல் பாட்டியின் மடியில் தலை சாய்ந்து குலுங்கினாள்..
" பவி... என்னம்மா இது.. குழந்த மாதிரி இருக்கியே.. அழாத.. தைரியமா இருக்கனும் என்ன மாதிரி.. எது இருந்தாலும் என்கிட்ட சொல்லு.. உன் விருப்பம் தான்.." சுகுமாரி தலையை வருடிக் கொடுத்தாள்..
பாட்டியிடம் தன் காதலைப் பற்றி சொல்லி விடலாமா என்ற எண்ணம் மனதிற்குள் ஓடியது பவிக்கு.. கண்களை துடைத்தபடி பாட்டியை பார்த்தாள்..
" சொல்லுமா.. "
" பாட்டி... எ.. எனக்கு இந்த கல்யாணத்திலே இஷ்டம் இல்ல பாட்டி.."
" ம்ம்ம்.. பொண் பார்க்கதானே வரேன்னு சொல்லிருக்கா.. பாக்கலாம்.. அதுக்குள்ள எதுவும் முடிவெடுக்காதே.. உன் அப்பாவும் கேக்க மாட்டேங்கறானே.."
" அ... அது.. இல்ல பாட்டி... நா... நா... " திணறினாள்..
" சொல்லு கண்ணு.. பாட்டிட்ட தானே சொல்ற.. பயப்படாத.."
" நா... நா.... வேற... ஒருத்தர... " தடுமாறி தலை குனிந்தாள் பவி.. பாட்டி புரிபடாமல் குழப்பமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்..
" நான் ஒருத்தர விரும்பறேன் பாட்டி.." பவி திக்கி திக்கி கூற.. சுகுமாரியின் முகத்தில் அதிர்ச்சி அலை பரவியது..
" எ.. என்னடி சொல்றே..." அதிர்ந்து போனாள்..
மெள்ள அசைத்தபடி தலையை குனிந்தாள் பவி..
" ஆமாம் பாட்டி.. நான் கல்யாணம் பண்ணின்டா அவரத் தான் பண்ணிப்பேன்.. " அழுத்தமாக கூறினாள்..
அதிர்ச்சிமேல் அதிர்ச்சியாக சுகுமாரி ஒரு கணம் வாய்பேச இயலாமல் தடுமாறினாள்.. " எ.. என்ன சொல்றே பவி.. நே.. நேக்கு புரியலை.."
" நான் ஒருத்தர விரும்பறேன் பாட்டி . அவரும் என்ன விரும்பறார்.. கல்யாணம்னா அவரோட மட்டும் தான்... வேற யாருக்கும் என் வாழ்க்கைல இடமில்ல பாட்டி." தீர்க்கமாக மெல்லிய குரலில் கூறினாள் பவி..
" என்னடி.. திடீர்னு தலைல கல்லத் தூக்கிப் போடறயே.. யார்டி பவி அது.." பாட்டி பதட்டத்துடன் கேட்க..
" நான் கோயிலுக்கு போகும் போது ஒரு மாமி பாப்பேன்னு சொல்வேன்ல.. அவங்க பையன்.. பேரு ரிஷி.."
" இதுவரைக்கும் எதுவும் என்கிட்ட சொன்னதில்லையே.. திடீர்னு எப்டி பவி.. நீ அப்டி பட்ட பொண்ணு இல்லையே.. " ஆச்சர்யமும் அதிர்ச்சியும் பொங்க பார்த்தாள் சுகுமாரி..
தலையை குனிந்து கொண்டாள் பவி.. சிறிது நேரம் அமைதியில் கடக்க..
" பவி... நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க கூடாது.. உன் வயசுல இந்த மாதிரி வர்ரது சகஜம் தான் பவி.. அ.. ஆனா.. அதெல்லாம் ஒரு நிலைல ஒன்னுமில்லைனு ஆயிடும்.. வயசு கோளாரு.. யாரு எப்டின்னுலாம் பாக்காது.. மனசு பேதலிச்சுதான் போகும்.. எங்க காலத்லே பத்து பதினஞ்சு வயசுக்குள்ள கல்யாணம் பண்ணி வெக்க இதுவும் ஒரு காரணம்..
புரியாத வயசுலயே கல்யாணம் பண்ணி வெச்சுட்டா , இவன் தான் உனக்கு இவ தான் உனக்குன்னு ஒருத்தரோட பந்தத்த ஏற்படுத்தி விட்டுட்டா,மனசு கண்டதத் தேடி அலையாது.. ஒரு கட்டுப்பாடு ரெண்டுபேருக்குள்ளயும் இருக்கும்னு நம்பினா.. ஆனா, இப்போ காலம் மாறி பருவ வயச தாண்டி கல்யாணம் பண்ணி வைக்கும் போது தன் விருப்பம் தனக்கானது இதுதான்னு மனசு தேவையில்லாதத கற்பனை பண்ணிக்கறது.. அது மாதிரி நீயும் வெறும் படோடோபத்தையோ அழகையோ பாத்து ஏமாந்துடாத பவி.. காலம் ரொம்ப கெட்டுகிடக்கு.. அவன் எப்படி ஏதுன்னு எதுவும் யோசிக்காம மனச லயிக்க விட்டுடாதே.. அப்பறம் எல்லாருக்குமே சங்கடம் தான்.. உனக்கு ஒன்னுன்னா என்னால தாங்க முடியாது பவி.." பாட்டியின் கண்களில் நீர் கோர்க்க..
" இல்ல பாட்டி.. நான் விரும்பறது வெறும் பணத்த பாத்தோ , அழக பாத்தோ இல்ல பாட்டி.. ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பேசி புருஞ்சுண்டுதான் விருப்பத்தையே சொன்னோம்.. அவரும் என்ன மனப்பூர்வமாதான் விரும்பறார்.. பார்த்ததும் காதல் , அதுக்காக உயிரையே தருவேன்கற மாதிரியான சினிமா காதல் இல்ல பாட்டி.. எனக்கும் வயசாயிடுத்து.. யோசிக்கற பக்குவம் இருக்கு.. அவரோட குணத்த பாத்துதான் சம்மதிச்சேன்.. அவருக்கும் என்மேல உண்மையான ப்ரியம் இருக்கு.. அத என்னைக்கும் நான் விட்டுக் குடுக்க மாட்டேன்.. எப்போ இருந்தாலும் , எனக்கு வாழ்க்கை துணையா இருந்தா அது அவர் மட்டும் தான்.." தெளிவாகக் கூறினாள் பவி..
என்ன சொல்வது என பேச இயலாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள் சுகுமாரி.. அமைதியில் சிலநிமிடங்கள் கரைந்தது..
" அ.. அப்பாட்ட பேசி நீதான் சம்மதிக்க வைக்கனும் பாட்டி.." பவி கூற சுகுமாரி முகம் கலக்கத்தில் சுறுங்கியது..
" எ.. எப்டி பவி அவன்கிட்ட சொல்றது.. ஏற்கனவே ஒரு மாப்பிள்ளைய பாத்து வரச் சொல்லிருக்கான்.. இப்போ போய் அவன்கிட்ட எப்டி சொல்றதுடி.. வானதுக்கும் பூமிக்கும் குதிப்பானே.. அவன் ஒத்துக்கனுமே பவி.." பெருமூச்செறிந்தாள் சுகுமாரி.
" எனக்கு உன்னவிட்டா வேறு யாரும் இருக்கா.. நீ... நீ தான் பேசி சம்மதிக்க வைக்கனும்.. ப்ளீஸ் பாட்டிம்மா.. " பவி கண்கள் கசிந்தது.
குழப்பமும் மன பாரத்துடனும் பெருமூச்செரிந்து அரைகுறையாக தலை அசைத்தாள் சுகுமாரி..
இங்கு..
ஊரிலிருந்து அகிலா வந்துவிட்ட சேதி அறிந்த சுந்தரவல்லி உடனே அவளுக்கு கால் செய்தாள்..!
" ஹாய் அகிலா.. ஊர்லேந்து வந்தாச்சா.. ப்ரோக்ராம்லாம் எப்டி இருந்தது.. ஜனு குட்டி நன்னா ஆடினாளா.. அவள பாத்து ரொம்ப நாளாச்சு.. உன்னையும் பாத்துதான்.. ஹாஹா.. "
" யா.. எஸ் சுந்தரி.. எல்லாம் நல்லபடியா முடிஞ்சது.. ரொம்ப நன்னா ஆடிட்டா.. ஒரே பாராட்டு மழைதான் போ.. ஹ்ம்.. கிளப் ஆக்ட்டிவிட்டீஸ்லாம் எப்டி போயிண்டு இருக்கு.. அப்பறம் ஹவ் இஸ் ரிஷி.. " அகிலா கேட்டாள்.
" அவன் நன்னா இருக்கான்.. அதான் ஏற்கனவே ரிஷி ஜனனி பத்தி உன்கிட்ட பேசனும்னு சொல்லிருந்தேனே.. நீ கூட ஊருக்கு போய்ட்டு வந்து பேசறேன் சொன்னியே.. "
" ஓ... எஸ்.. எஸ்... நியாபகம் இருக்கு.. பேசலாம்.. ஃப்ரீயா இருந்தா ஆத்துக்கு வா..."
" கண்டிப்பா.. நான் ஒரு யோஜன பண்ணி வெச்சுருக்கேன்.. அத உன்கிட்ட கலந்து பேசி ஒரு முடிவெடுத்திடலாமேன்னு நினச்சேன்.."
" ம்ம் சரி சுந்தரி.. வா.. கொஞ்சம் வெளில போனும் போனை வெச்சுடவா.."
" ஓகே.. ஓகே.. பாக்கலாம்.." சிரிப்புடன் போனை கட் செய்தாள் சுந்தரவல்லி.. மனதில் எப்படியும் இதை நடத்திவிடவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது..
போனை கட்செய்து திரும்பிய அகிலா முன் நின்றிருந்தாள் ஜனனி..
" யாரும்மா போன்ல.."
" சுந்தரி.. ஏதோ முக்கியமா பேசனுமாம்.. வரேன் சொன்னா.. அபோட் யுவர் மேரேஜ்.."
" அம்மா.. எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லமா.. சொல்லிடு அவங்கள்ட்ட.."
" ஒய் ஜனு.. என்ன திடீர்னு.. வாட் ஹேப்பண்ட்.." அதிர்ச்சியாக பார்த்தாள் அகிலா..
" எஸ்.... எனக்கு ரிஷி வேண்டாம்.."
" என்ன ஜனு.. இப்டி சொல்ற.. நீங்க ரெண்டு பேரும் க்ளோஸா தானே இருந்தேள்.. உனக்கு அவன புடுச்சுருக்குன்னு தானே சுந்தரிகிட்ட இந்த ப்ரபோஸையே ஒத்துண்டேன்.. அதபத்தி பேசதான் அவ வரேன்னு சொல்லிருக்கா.. நெள.. நீ இப்டி சொல்றே.. எதாவது சண்ட போட்டுண்டேளா.. நீ அவன விரும்பறே தானே.." அகிலா குழப்பத்துடன் கேட்க..
" நான் அவன விரும்பறேன்... பட்.. அவன் என்ன விரும்பலயே..." ஜனனி சொல்ல அகிலாவிற்கு அதிர்ச்சி முகத்தில் பரவியது..
" வாட் டு யூ மீன்..."
" எஸ் மம்மி.. ஹீ லவ்ஸ் சம் அதர் கேர்ள்... அவன் வேறொருத்திய லவ் பண்றான்.."
" என்னது.. என்ன சொல்ற ஜனு.. ஹி.. ஹி இஸ் நாட் லைக் தட் பெர்சன்.. எப்படி சொல்றே ஜனு.."
" ஆமாம்மா.. அவனுக்கு என்ன பிடிக்கலையாம்.. வேற பொண்ண லவ் பண்றேன்.. என்கிட்ட வராதன்னு நேரடியாவே சொல்லிட்டான்.. எ.. எனக்கு அவமானமா போச்சும்மா.." ஜனனி கண்கள் கலங்க அகிலா துடித்து போனாள்..!
அவள் முகம் கோபத்தில் இறுகியது.!
For Comments plz click below link
Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
அத்யாயம் - 20
புன் சிரிப்புடன் வீட்டில் நுழைய வாசலிலே நின்றிருந்த அம்மாவின் கோபமான குரல் பவியை திடுக்கிடச் செய்தது..!
" ஏன்டி.. எவ்ளோ நேரமா உனக்கு கால் பண்றது.. எங்கடி போய்ட்டு வர.. " பங்கஜம் சத்தமாகக் கேட்க பவிக்கு திக்கென்று இருந்தது.. விழித்தாள்..
" நீ போனை எடுக்கலையேன்னு ரம்யாவுக்கு போன் பண்ணா அவ என்னவோ இப்ப வந்துடுவா அப்ப வந்துடுவான்னு சொல்றா.. மணி என்ன ஆறது.. ம்ம்ம்.. உங்கப்பா உனக்காக எவ்ளோ நாழி வெயிட் பண்றார் தெரியுமா.. உனக்கு செல்லங்குடுத்தது தப்பா போயிடுத்து.. இது சரியில்ல பவி சொல்லிட்டேன்.." பங்கஜம் கடுமையாக பேச வெலவெலத்து போனாள் பவி..
" இ.. இல்லம்மா.. ரம்யா ஆத்லேந்து கெளம்பிட்டேன்.. பஸ் கெடைக்கல.. அ.. அதான்.." தயங்கி தயங்கி பொய் சொன்னாள்.
" டைம் ஆயிடுத்துன்னா ஒரு போன் பண்ண மாட்ட.. மனசு கெடந்து அடுச்சுக்கறது.. எத்தன போன்கால் பண்றது.. போன பாரு.."
தடுமாறி பேக்கினுள் இருந்த போன எடுத்து பார்த்தாள்.. வீட்டிலிருந்தும் ரம்யாவிடமிருந்தும் பத்து கால்களுக்கு மேல் வந்திருந்தது.. ரிஷியுடன் இருக்கும் போது ரம்யா போன் செய்து வம்பு செய்வாளோ என சைலன்ட் மோடில் போட்டது அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது..
" போன்.. வைப்ரேட்ல இருந்ததால கவனிக்கலம்மா.. "
" நன்னாதான் இருக்கு போ... அப்பா ரொம்ப கோபமா இருக்கார். உன்கிட்ட முக்கியமா பேசனும்னு ஆறுமணிலேந்து காத்துண்டு இருக்கார்.. இப்டி பண்றியே பவி.. மொதல்ல உள்ள போ.. " அவள் இழுத்துக் கொண்டு நடக்க பதட்டத்துடன் உள்ளே சென்றாள் பவி..!
பாட்டி குழப்பமாக அமர்ந்திருக்க , நடேசன் பொறுமையின்றி அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்.. பவி உள்ளே நுழைய..
" என்ன பவி இது.. உன் இஷ்டத்துக்கு வெளில போயிட்டு வர்ரே.. வயசாயிடுத்து இல்ல.. ஒரு பொறுப்பு வேண்டாம்.. ஆத்ல தேடுவாளேன்னு ஒரு பயம் இருக்கா.. அப்டி என்ன ப்ரண்டாத்துக்கு போய் படிக்கறது.. இங்க படிச்சா ஆகாதா.. வயத்துல நெருப்ப கட்டிண்டு நாங்க இங்க இருக்கனும்.. நீ எதுக்கும் கவல படாதைக்கு போயிடுவே.. அப்டிதானே.." நடேசன் படபடவென கொட்ட பயத்துடன் அவரை பார்த்துக் கொண்டிருந்தாள் பவி..
" இ... இல்லப்பா.. சீக்கறம் கெளம்பிட்டேன்.. போன் சைலன்ட்ல இருந்தது.. சா.. சாரிப்பா.." தலையை கவிழ்ந்து கொண்டாள்.. தொண்டையை அடைத்தது.. அப்பா எதற்காகவும் இவ்வளவு உணர்ச்சிவசப் பட்டதில்லை..
" உனக்கு நல்ல மாப்ள அமையனுமேன்னு நான் அங்கயும் இங்கயும் அலஞ்சுண்டு இருக்கேன்.. நீ என்னடான்னா.. நேரங்கெட்ட நேரத்ல வர்ரே.." நடேசன் மறுபடியும் பொறும.. சுகுமாரி பாட்டி இடைமறித்தாள்..
" சரிடா... எதோ ஃப்ரண்டோட படிக்கனும் போயிருக்கா.. போன்தான் சைலன்ட்ல இருந்திருக்கே.. அதுக்கு அவோ என்ன பண்ணுவா.. அதுக்கு குழந்தைய இப்டி பேசறியே.. விடு.. " பாட்டி பேச கோபமானார் நடேசன்.
" அவளச் சொல்லி குத்தமில்ல , எல்லாம் நீ குடுக்கற செல்லம்.. நாளைக்கு இன்னொரு ஆத்துக்கு போக வேண்டியவ.. இப்டி பொறுப்பில்லாம இருந்தா எப்டிமா.."
பாட்டியின் முகம் மாறியது.. " நடேசா.. கோபத்ல பொறுமை இழக்காத.. அதான் காரணத்த சொல்லிட்டாளே.. பவித்ரா பொறுப்பில்லாத பொண்ணு இல்ல.. அவள எதுவும் சொல்லாத.. நேக்கு சங்கடமா இருக்கு.." அவரை கடிந்து கொண்டு பவியை அழைத்தாள்.." வாடி கண்ணு.. பாட்டிட்ட வா.."
பாட்டியிடம் சென்று அமர்ந்தவள் பாட்டி தலையை வருட தொண்டை அடைத்த அழுகை குபுக்கென கண்களில் நீராய் வழிந்தது.. பாட்டியின் மடியில் தலை சாய்ந்து கொண்டாள்..
அவ்வளவு நேரம் கோபமாய் இருந்த நடேசனுக்கு அவளது கண்கள் கலங்குவதைக் கண்டு மனம் தவித்தது..
" பவி... அப்பா உன் நல்லதுக்கு தானே சொல்றேன்.. இனிமே இப்டி இருக்காதம்மா.. என்ன... சந்தோஷமான விஷயம் உன்ன வெச்சுண்டு எல்லார்கிட்டயும் சொல்லனும் காத்துண்டு இருந்தேன்.. நீ வரலைன்னதும் கொஞ்சம் கோபப்பட்டுட்டேன்.. " வாஞ்சையுடன் அவளை பார்த்தார்..
என்ன விஷயம் என எல்லோரும் அவரை பார்க்க..
" என்னடா சந்தோஷமான விஷயம்.. மத்யானம் வெளில போய்ட்டு வந்ததுலேந்து எதுவும் சொல்லவே இல்லையே.. " பாட்டி நடேசனை ஆர்வமாக பார்க்க.. பவிக்கு குழப்பத்துடன் கலக்கமும் சேர்ந்து கொண்டது..
" பகவான் கண்ண தெறந்துட்டார்.. நம்ம பவிக்கு நல்ல வரன் ஒன்னு வந்துருக்கு.. அதச் சொல்லனும்னு தான் காத்துண்டு இருந்தேன்.." அவர் கூற கூற பவியின் அடிவயிற்றில் பயம் பற்றிக் கொண்டது..
" ஜாதகம் பார்க்க குடுத்திருக்கேளா.." பங்கஜம் சலிப்புடன் கேட்க..
" ஜாதகம் குடுத்து பொறுத்தமும் பாத்துட்டா.. நம்ம சோம சேகரோட ஒன்னுவிட்ட தங்கை பையன். அவன் ஆத்துக்குதான் போய்ட்டு வரேன்.. ரெண்டு பேரோட ஜாதகத்லயும் ஏழு பொருத்தம் இருக்கு.. அடுத்த வாரம் பாக்க வரேன்னு சொல்லிருக்கா..." கண்கள் ஒளியேற அவர் கூற..
பவிக்கு ஒரு நிமிடம் தலையே சுற்றியது.. பேரிடி விழுந்ததுபோல் தலையில் கையால் அழுத்திக் கொண்டாள். இதயம் தாறுமாறாய் எகிரியது..
கலங்கிய கண்களுடன் அப்பாவையே வெறித்துப் பார்த்தாள்.. தன் காதல் கனவு இப்படி ஒரே நொடியில் தரைமட்டமாகும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை.. சிறிது நேரத்திற்கு முன்வரை இருந்த அத்தனை சந்தோஷமும் கரைந்து வடிந்து காய்ந்து போனது..
பாட்டியின் முகத்தில் மெல்லிய அதிர்ச்சி பரவ பவியை பார்த்தாள்.. மெள்ள அவளை அணைத்துக் கொண்டாள்..
" என்ன.. எல்லாருக்கும் சந்தோஷம் தானே.. பொண்ணு பாக்கறது சிம்பிளா இருந்தா போதும்னு சொல்லிட்டா அவா.. பையன் போட்டோ குடுத்திருக்கா.. இத பாருங்கோ.. பவி நீயும் பாரு.." அவர் படத்தை காமிக்க அதை பார்க்கும் நிலையில் இல்லாமல் தலையை கவிழ்த்துக் கொண்டாள் பவி..
" நம்ப பவி போட்டாவ பாத்து அவாளுக்கு ரொம்ப புடுச்சு போச்சாம்.. எதையும் பெருசா எதிர்பார்க்க மாட்டாளாம்.. சம்பிரதாயத்துக்கு அடுத்த வாரம் நல்ல நாள் பாத்து பொண்பாக்க வராளாம்.. ஓகே ஆயிடுத்துன்னா அப்பவே தட்டு மாத்திண்டுடலாம்னு சொல்லிருக்கா.." நிம்மதியுடன் சிரித்தார்.
" பையன் எப்டி ஏதுன்னு நன்னா விஜருச்சியா.. நல்ல குடும்பம் தானே.." பாட்டி கொஞ்சம் கலக்கத்துடன் கேட்டாள்..
" நல்ல பையன்.. நல்ல கம்பெனில வேல பாக்கறான்.. வசதியான குடும்பம்தான்.. ஒரே பையன்தான்.. பிக்கல் பிடுங்கல் இல்லை.. நம்ம சோமசேகரன் குடும்பம் பத்தி நோக்கு தானே தெரியுமேம்மா.."
" பவிக்கும் பிடிக்கனுமே.. அவ விருப்பத்தையும் கேக்க வேண்டாமா.."
" அவ என்னமா சின்ன பொண்ணு.. பிடிச்சுருக்கு பிடிக்கலன்னு சொல்ல என்ன இருக்கு.. நம்ப பவி அப்டிலாம் வேண்டாம்னு சொல்ல மாட்டா.. இல்லையா பவி.. பையன் ராஜாவாட்டம் இருக்கான்.. அப்புறம் என்ன.. என்ன பங்கஜம்.. போட்டோவ நீயும் பாத்துக்கோ.." அவளிடம் போட்டோவை குடுத்தார்.. பங்கஜத்திற்கும் இந்த வரன் சரியானதென தோன்றியது.. புன்னகையுடன் தலையாட்டினாள்..
" இல்லடா... இன்னும் படிப்பு முடிக்கலையே... அதுக்குள்ள.. " பாட்டி ஆரம்பிக்க..
" அம்மா , திரும்ப ஆரம்பிக்காதே.. படுச்சு முடுச்சாலும் ஒருத்தனுக்கு வாக்கப்பட்டு அவாத்துக்கு தானே போயாகனும்.. இந்த வரன் கைகூடட்டும்.. வேனும்னா அப்பறம் சொல்லிக்கலாம்.. அதுக்கும்மேல அவா உடனே கல்யாணத்த முடிக்கனும்னா பண்ணிட வேண்டியதுதான்.. உன் பேத்திக்கு நல்ல வரன் அமைஞ்சதேன்னு சந்தோஷ பட்டுக்கோ.. வேற எதுவும் சொல்லாதே.." அவர் கொஞ்சம் கோபத்துடன் கூற பாட்டி அமைதியானாள்..
உள்ளுக்குள் ஆயிரம் பூகம்பம் வெடிக்க அமர்ந்திருந்தாள் பவித்ரா.. என்ன செய்வது எனத் தெரியாமல் திக்குமுக்காடி போனாள்.. ஒருபக்கம் கோபமும் ஒரு பக்கம் அழுகையும் வந்தது.. ரிஷியை விரும்புவதை சொல்லிவிடுவோமா என எண்ணம் அவளை தூண்டியது.. வாய் வரை வந்த வார்த்தைகள் மேலெழ தைரியமின்றி தொண்டைக்குழியில் சிக்கி வெளிவர இயலாமல் மூழ்கி மூழ்கி நெஞ்சுக்குள் புதைந்தது.. கனத்த எண்ணங்கள் நெஞ்சம் அடைக்க கண்களில் ஏனோ நீர் வழிந்தது.. கண்களை அழுந்த துடைத்துக் கொண்டாள்.. வேகமாக எழுந்து அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டாள்..
பின்னால் உள்ளே வந்த பங்கஜம்.. " பவி.. எதுக்கிப்ப கண்ண கசக்கிண்டு இருக்கே.. அப்பா ஏதோ கோபத்ல பேசிட்டார்... அதுக்கு போய் அழலாமா.. குழந்த மாதிரி.." கண்களை துடைத்துவிட்டாள்.
அவளிடமாவது தன் காதலை சொல்லிவிடலாமா என இருந்தது.. பவி வாயெடுக்க..
" பவி... ஒரு விஷயம்.. அப்பா சொல்றதும் நியாயம் தானே.. எப்டியும் படிப்பு முடுச்சாலும் கல்யாணம் பண்ணின்டு அடுத்தாத்துக்கு போய்தான் ஆகனும்.. நல்ல குடும்பமா அமஞ்சிருக்கு.. அது இதுன்னு மனச குழப்பிண்டு இருக்காதே.. நடக்கறது நல்லபடியா நடக்கும்.. உனக்கேத்தவனா தான் இருப்பான் பாரு.. கல்யாணம் ஆயிடுத்துன்னா , போகப் போக எல்லாம் பழகிடும்.. அப்பறம் வேல பாக்கனும் அது இதுன்னு நீ நெனச்சுண்டு இருந்ததெல்லாம் சில்லியான விஷயமா போய்டும்.. அதனால அவா வரும்போது எதுவும் உணர்ச்சி வசப்பட்டுடாதே.. அப்பறம் அப்பா ஒடஞ்சு போயிடுவார்.."
" அ... அது.. அது இல்லமா.. நா.. நா..." பவி திக்கி திணற..
" படிக்கனும் , வேல பாக்கனும்.. அதானே.. கல்யாணம் ஆயிடுத்துன்னா உன் ஆத்துகாரர் ஒப்புதலோட வேலைக்கு போயேன்... யார் வேண்டாம்கறா.. அவர் சரின்னு சொல்லிட்டா வேற யார் கேக்க போறா உன்ன... சரியா.. மனச விடாம இரு.. உன் மனசுபோல நடக்கும்.. இன்னும் என்ன கண்ண கசக்கிண்டு.. சிரி.. சிரி.. " பங்கஜம் அவள் கன்னத்தை கிள்ள..
வெடிக்க காத்திருந்த உணர்வுகளை அழுத்தி அடக்கி மெள்ள சிரித்தாள் பவி... விதியின் சதியை எண்ணி..
" சரி.. சரி.. ட்ரெஸ்ஸ மாத்திண்டு முகத்த அலம்பிண்டு வா சாப்படலாம்.. அப்பா காத்துண்டு இருப்பார்.." கூறிக் கொண்டே சென்றாள் பங்கஜம்..
யாரிடமும் சரியாக பேசாமல் , சாப்பிடப் பிடிக்காமல் ஏனோதானோவென கொறித்துவிட்டு தன் அறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள்..
ரிஷியிடம் உடனே கூற வேண்டும் என மனம் அடித்துக் கொண்டது.. அவனை பிரிவதா என நினைக்கையிலே உடல்நடுங்க
உணர்வு பீறிட்டு எழுந்தது.. மெள்ள அழுதாள்.. சத்தம் வெளியில் கேட்டுவிடுமோ என தலையணையில் முகம் புதைத்துக் கொண்டாள்.. அந்த வேளையில் அரவணைப்பு தேவைப்பட்டது பவிக்கு.. ஆறுதல் கூற யாருமின்றி தலையணையை இறுக பற்றிக் கொண்டு கரைந்தாள்.. ரிஷி பார்த்த தினம் முதல் அவன் காதல் சொன்னது அவன் விரல் ஸ்பரிசம் அவனது அணைப்பு முதல் முத்தம் என அத்தனையும் கண்முன்னே தோன்றி அவளை இம்சித்தது... ரிஷியின் முகம் கண்முன் நிழலாடி அவளை சோகக் கடலில் ஆழ்த்தியது.. இரவு முழுக்க உறக்கமின்றி தீவிர சிந்தனையில் இருந்தாள்..
மறுநாள் காலை..
உடலெல்லாம் வலிக்க , சிவந்த கண்கள் தூக்கமின்றி பொங்கி போய் எரிந்தது.. மெள்ள எழுந்து வெளியே வந்தாள்.. காலை வெகுநேரமாகி இருந்தது.. அப்பா வேலைக்கு சென்றிருந்தார்.. அம்மா அடுக்களையில் இருக்க தள்ளாடியபடி வெளியே வந்தாள்.. ஹாலில் பாட்டி அமர்ந்திருந்தாள்..
" என்ன பவி.. உடம்பு சரியில்லையா.. அம்மா வந்து எழுப்பினா எந்திரிக்கவே இல்லையே.. நான் தான் தூங்கட்டும்னு விட சொல்லிட்டேன்.. என்னாச்சு கண்ணு.."
" ஒ.. ஒன்னுமில்ல பாட்டி... " சுரத்தில்லாமல் கூறியபடி அங்கிருந்து அகன்றாள். மனம் சஞ்சலத்தில் உழன்று கொண்டிருந்தது..
குளித்து முடித்து ஏதோ பறி கொடுத்தது போல் அமர்ந்திருந்தாள்.. உணவு உண்ண பிடிக்கவில்லை.. ரிஷியிடம் உடனே இதைப் பற்றி கூற வேண்டும் என மனம் பதைபதைத்தது.. அவனிடம் கூறினாள் என்ன செய்வான்.. எனை கூட்டிப் போக வருவானா.. இல்லை அப்பா பேச்சை கேட்டு எனை விட்டுவிடுவானா.. குழப்பத்தில் மனம் அலைந்தது..
" பவி.. கண்ணு.. இங்க கொஞ்சம் வாயேன்.. " பாட்டி அழைக்க.. விருப்பமின்றி மெள்ள எழுந்து சென்றாள்.
" என்னம்மா.. என்ன ஆச்சு.. "
.................
" சொல்லும்மா.. அப்பா வரன் பாத்தது பிடிக்கலையா.. என்ன செய்யறது பவி.. அவன் அவசரப் படறானே.. திரும்ப திரும்ப எத்தன தடவ சொல்றது.. அவன் பிடிவாதமா இருக்கானே.. எனக்கும் ரொம்ப கவலையாத்தான் இருக்கு.. வர்ர வரன் நல்ல குடும்பமா இருக்கனும்.. உனக்கு சம்மதம்னாத் தான் இந்த கல்யாணம் இல்லைனா வேண்டாம்னு நானே அவன்ட்ட சொல்லிடறேன். என்ன சரியா.. அதுக்காக கவல பட்டுண்டு உடம்ப கெடுத்துக்காதடி செல்லம்.."
பீறிட்டு வந்த அழுகையை அடக்க இயலாமல் பாட்டியின் மடியில் தலை சாய்ந்து குலுங்கினாள்..
" பவி... என்னம்மா இது.. குழந்த மாதிரி இருக்கியே.. அழாத.. தைரியமா இருக்கனும் என்ன மாதிரி.. எது இருந்தாலும் என்கிட்ட சொல்லு.. உன் விருப்பம் தான்.." சுகுமாரி தலையை வருடிக் கொடுத்தாள்..
பாட்டியிடம் தன் காதலைப் பற்றி சொல்லி விடலாமா என்ற எண்ணம் மனதிற்குள் ஓடியது பவிக்கு.. கண்களை துடைத்தபடி பாட்டியை பார்த்தாள்..
" சொல்லுமா.. "
" பாட்டி... எ.. எனக்கு இந்த கல்யாணத்திலே இஷ்டம் இல்ல பாட்டி.."
" ம்ம்ம்.. பொண் பார்க்கதானே வரேன்னு சொல்லிருக்கா.. பாக்கலாம்.. அதுக்குள்ள எதுவும் முடிவெடுக்காதே.. உன் அப்பாவும் கேக்க மாட்டேங்கறானே.."
" அ... அது.. இல்ல பாட்டி... நா... நா... " திணறினாள்..
" சொல்லு கண்ணு.. பாட்டிட்ட தானே சொல்ற.. பயப்படாத.."
" நா... நா.... வேற... ஒருத்தர... " தடுமாறி தலை குனிந்தாள் பவி.. பாட்டி புரிபடாமல் குழப்பமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்..
" நான் ஒருத்தர விரும்பறேன் பாட்டி.." பவி திக்கி திக்கி கூற.. சுகுமாரியின் முகத்தில் அதிர்ச்சி அலை பரவியது..
" எ.. என்னடி சொல்றே..." அதிர்ந்து போனாள்..
மெள்ள அசைத்தபடி தலையை குனிந்தாள் பவி..
" ஆமாம் பாட்டி.. நான் கல்யாணம் பண்ணின்டா அவரத் தான் பண்ணிப்பேன்.. " அழுத்தமாக கூறினாள்..
அதிர்ச்சிமேல் அதிர்ச்சியாக சுகுமாரி ஒரு கணம் வாய்பேச இயலாமல் தடுமாறினாள்.. " எ.. என்ன சொல்றே பவி.. நே.. நேக்கு புரியலை.."
" நான் ஒருத்தர விரும்பறேன் பாட்டி . அவரும் என்ன விரும்பறார்.. கல்யாணம்னா அவரோட மட்டும் தான்... வேற யாருக்கும் என் வாழ்க்கைல இடமில்ல பாட்டி." தீர்க்கமாக மெல்லிய குரலில் கூறினாள் பவி..
" என்னடி.. திடீர்னு தலைல கல்லத் தூக்கிப் போடறயே.. யார்டி பவி அது.." பாட்டி பதட்டத்துடன் கேட்க..
" நான் கோயிலுக்கு போகும் போது ஒரு மாமி பாப்பேன்னு சொல்வேன்ல.. அவங்க பையன்.. பேரு ரிஷி.."
" இதுவரைக்கும் எதுவும் என்கிட்ட சொன்னதில்லையே.. திடீர்னு எப்டி பவி.. நீ அப்டி பட்ட பொண்ணு இல்லையே.. " ஆச்சர்யமும் அதிர்ச்சியும் பொங்க பார்த்தாள் சுகுமாரி..
தலையை குனிந்து கொண்டாள் பவி.. சிறிது நேரம் அமைதியில் கடக்க..
" பவி... நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க கூடாது.. உன் வயசுல இந்த மாதிரி வர்ரது சகஜம் தான் பவி.. அ.. ஆனா.. அதெல்லாம் ஒரு நிலைல ஒன்னுமில்லைனு ஆயிடும்.. வயசு கோளாரு.. யாரு எப்டின்னுலாம் பாக்காது.. மனசு பேதலிச்சுதான் போகும்.. எங்க காலத்லே பத்து பதினஞ்சு வயசுக்குள்ள கல்யாணம் பண்ணி வெக்க இதுவும் ஒரு காரணம்..
புரியாத வயசுலயே கல்யாணம் பண்ணி வெச்சுட்டா , இவன் தான் உனக்கு இவ தான் உனக்குன்னு ஒருத்தரோட பந்தத்த ஏற்படுத்தி விட்டுட்டா,மனசு கண்டதத் தேடி அலையாது.. ஒரு கட்டுப்பாடு ரெண்டுபேருக்குள்ளயும் இருக்கும்னு நம்பினா.. ஆனா, இப்போ காலம் மாறி பருவ வயச தாண்டி கல்யாணம் பண்ணி வைக்கும் போது தன் விருப்பம் தனக்கானது இதுதான்னு மனசு தேவையில்லாதத கற்பனை பண்ணிக்கறது.. அது மாதிரி நீயும் வெறும் படோடோபத்தையோ அழகையோ பாத்து ஏமாந்துடாத பவி.. காலம் ரொம்ப கெட்டுகிடக்கு.. அவன் எப்படி ஏதுன்னு எதுவும் யோசிக்காம மனச லயிக்க விட்டுடாதே.. அப்பறம் எல்லாருக்குமே சங்கடம் தான்.. உனக்கு ஒன்னுன்னா என்னால தாங்க முடியாது பவி.." பாட்டியின் கண்களில் நீர் கோர்க்க..
" இல்ல பாட்டி.. நான் விரும்பறது வெறும் பணத்த பாத்தோ , அழக பாத்தோ இல்ல பாட்டி.. ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பேசி புருஞ்சுண்டுதான் விருப்பத்தையே சொன்னோம்.. அவரும் என்ன மனப்பூர்வமாதான் விரும்பறார்.. பார்த்ததும் காதல் , அதுக்காக உயிரையே தருவேன்கற மாதிரியான சினிமா காதல் இல்ல பாட்டி.. எனக்கும் வயசாயிடுத்து.. யோசிக்கற பக்குவம் இருக்கு.. அவரோட குணத்த பாத்துதான் சம்மதிச்சேன்.. அவருக்கும் என்மேல உண்மையான ப்ரியம் இருக்கு.. அத என்னைக்கும் நான் விட்டுக் குடுக்க மாட்டேன்.. எப்போ இருந்தாலும் , எனக்கு வாழ்க்கை துணையா இருந்தா அது அவர் மட்டும் தான்.." தெளிவாகக் கூறினாள் பவி..
என்ன சொல்வது என பேச இயலாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள் சுகுமாரி.. அமைதியில் சிலநிமிடங்கள் கரைந்தது..
" அ.. அப்பாட்ட பேசி நீதான் சம்மதிக்க வைக்கனும் பாட்டி.." பவி கூற சுகுமாரி முகம் கலக்கத்தில் சுறுங்கியது..
" எ.. எப்டி பவி அவன்கிட்ட சொல்றது.. ஏற்கனவே ஒரு மாப்பிள்ளைய பாத்து வரச் சொல்லிருக்கான்.. இப்போ போய் அவன்கிட்ட எப்டி சொல்றதுடி.. வானதுக்கும் பூமிக்கும் குதிப்பானே.. அவன் ஒத்துக்கனுமே பவி.." பெருமூச்செறிந்தாள் சுகுமாரி.
" எனக்கு உன்னவிட்டா வேறு யாரும் இருக்கா.. நீ... நீ தான் பேசி சம்மதிக்க வைக்கனும்.. ப்ளீஸ் பாட்டிம்மா.. " பவி கண்கள் கசிந்தது.
குழப்பமும் மன பாரத்துடனும் பெருமூச்செரிந்து அரைகுறையாக தலை அசைத்தாள் சுகுமாரி..
இங்கு..
ஊரிலிருந்து அகிலா வந்துவிட்ட சேதி அறிந்த சுந்தரவல்லி உடனே அவளுக்கு கால் செய்தாள்..!
" ஹாய் அகிலா.. ஊர்லேந்து வந்தாச்சா.. ப்ரோக்ராம்லாம் எப்டி இருந்தது.. ஜனு குட்டி நன்னா ஆடினாளா.. அவள பாத்து ரொம்ப நாளாச்சு.. உன்னையும் பாத்துதான்.. ஹாஹா.. "
" யா.. எஸ் சுந்தரி.. எல்லாம் நல்லபடியா முடிஞ்சது.. ரொம்ப நன்னா ஆடிட்டா.. ஒரே பாராட்டு மழைதான் போ.. ஹ்ம்.. கிளப் ஆக்ட்டிவிட்டீஸ்லாம் எப்டி போயிண்டு இருக்கு.. அப்பறம் ஹவ் இஸ் ரிஷி.. " அகிலா கேட்டாள்.
" அவன் நன்னா இருக்கான்.. அதான் ஏற்கனவே ரிஷி ஜனனி பத்தி உன்கிட்ட பேசனும்னு சொல்லிருந்தேனே.. நீ கூட ஊருக்கு போய்ட்டு வந்து பேசறேன் சொன்னியே.. "
" ஓ... எஸ்.. எஸ்... நியாபகம் இருக்கு.. பேசலாம்.. ஃப்ரீயா இருந்தா ஆத்துக்கு வா..."
" கண்டிப்பா.. நான் ஒரு யோஜன பண்ணி வெச்சுருக்கேன்.. அத உன்கிட்ட கலந்து பேசி ஒரு முடிவெடுத்திடலாமேன்னு நினச்சேன்.."
" ம்ம் சரி சுந்தரி.. வா.. கொஞ்சம் வெளில போனும் போனை வெச்சுடவா.."
" ஓகே.. ஓகே.. பாக்கலாம்.." சிரிப்புடன் போனை கட் செய்தாள் சுந்தரவல்லி.. மனதில் எப்படியும் இதை நடத்திவிடவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது..
போனை கட்செய்து திரும்பிய அகிலா முன் நின்றிருந்தாள் ஜனனி..
" யாரும்மா போன்ல.."
" சுந்தரி.. ஏதோ முக்கியமா பேசனுமாம்.. வரேன் சொன்னா.. அபோட் யுவர் மேரேஜ்.."
" அம்மா.. எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லமா.. சொல்லிடு அவங்கள்ட்ட.."
" ஒய் ஜனு.. என்ன திடீர்னு.. வாட் ஹேப்பண்ட்.." அதிர்ச்சியாக பார்த்தாள் அகிலா..
" எஸ்.... எனக்கு ரிஷி வேண்டாம்.."
" என்ன ஜனு.. இப்டி சொல்ற.. நீங்க ரெண்டு பேரும் க்ளோஸா தானே இருந்தேள்.. உனக்கு அவன புடுச்சுருக்குன்னு தானே சுந்தரிகிட்ட இந்த ப்ரபோஸையே ஒத்துண்டேன்.. அதபத்தி பேசதான் அவ வரேன்னு சொல்லிருக்கா.. நெள.. நீ இப்டி சொல்றே.. எதாவது சண்ட போட்டுண்டேளா.. நீ அவன விரும்பறே தானே.." அகிலா குழப்பத்துடன் கேட்க..
" நான் அவன விரும்பறேன்... பட்.. அவன் என்ன விரும்பலயே..." ஜனனி சொல்ல அகிலாவிற்கு அதிர்ச்சி முகத்தில் பரவியது..
" வாட் டு யூ மீன்..."
" எஸ் மம்மி.. ஹீ லவ்ஸ் சம் அதர் கேர்ள்... அவன் வேறொருத்திய லவ் பண்றான்.."
" என்னது.. என்ன சொல்ற ஜனு.. ஹி.. ஹி இஸ் நாட் லைக் தட் பெர்சன்.. எப்படி சொல்றே ஜனு.."
" ஆமாம்மா.. அவனுக்கு என்ன பிடிக்கலையாம்.. வேற பொண்ண லவ் பண்றேன்.. என்கிட்ட வராதன்னு நேரடியாவே சொல்லிட்டான்.. எ.. எனக்கு அவமானமா போச்சும்மா.." ஜனனி கண்கள் கலங்க அகிலா துடித்து போனாள்..!
அவள் முகம் கோபத்தில் இறுகியது.!
For Comments plz click below link
Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/