Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL மார்கழித் திங்கள்! - Tamil Novel

Status
Not open for further replies.
மார்கழித் திங்கள்..!

அத்யாயம் - 10

அத்தனை களேபரத்திலும் குருமூர்த்தி எந்தவித அக்கரையும் இன்றி மாப்பிள்ளை அலட்சியத்துடன் அமர்ந்திருப்பதை பார்த்த ருக்மணிக்கு என்னவோ போல் இருந்தது..

" என்னவோ பொண்ணு சோனியா இருந்தாலும் முகம் களையாத்தான் இருக்கு... என்னடா மூர்த்தி.. பாத்துண்டயா.. உனக்கு என்ன மனசுல படறது.." தன் மகனிடம் பர்வதம் கேட்க..

" நேக்கு என்னம்மா.. பெரியவா நீங்க பாத்து சொன்னா சரி.. கழுதைக்கு தாலி கட்டச் சொன்னா கூட சரிதான்.." சிரித்தபடி தலை அசைத்தான்..

பர்வதத்தின் முகத்தில் பெருமை தாண்டவமாடியது.. " எம்பையன் நான் கிழுச்ச கோட்ட தாண்ட மாட்டான்.. அப்படி வளத்திருக்கேன்.. சரி.. இந்தாங்கானும்.. சுப்ரமண்யம்.. உங்காத்து பொண்ணுக்கு என்ன நகை போடுவேள்.. ம்ம்.. ஏன்ணா.. நானே எல்லாத்தையும் கேட்டுண்டு இருக்கேனே. நீங்க விஜாரிக்கலாம்லயோ.. " சதாசிவத்தை பார்த்துக் கடிந்து கொண்டாள்..

தொண்டையை செறுமிக் கொண்டு பேச ஆரமித்தார் சதாசிவம்..

" பொண்ணு வயசுல சின்னவளா இருந்தாலும் எம்பையனுக்கு ஏத்தவளாத்தான் இருக்கா.. அழகா இல்லாட்டாலும் லக்ஷணம் இருக்கு.. பையனுக்கும் உம்ம பொண்ணுக்கும் ஏழுவயசுதான் வித்யாசம்.. பரவால்லை.. அவனும் சின்னவன் தானே.. நான் ஜாதகம் பாத்துட்டேன்.. எட்டு பொருத்தம் கூடி இருக்கு... அதுக்காகத் தான் பொண்ண பாக்கவே வந்தோம்.. எம் பையன் ஜாதகத்துக்கு அவா அவா வரிசைல வந்து நிக்கறா.. இருந்தாலும் எங்க அந்தஸ்துன்னு இருக்கேள்யோ.. உங்களுக்கு தெரியாதது இல்லை.. எம்பாட்டனார் புலியூர் கோட்டை ஜட்ஜாக்கும்.. என் தோப்பனார் பேர் போன மாஜிஸ்தரேட்.. அப்படிபட்ட பரம்பரை.. எங்காத்து சொத்து பத்து ஆயிரக் கணக்கா இருக்கு.. அதெல்லாம் சொல்ல வேண்டிய அவஸ்யம் இல்லை.. அதுக்கேத்தா மாதிரி உங்க பொண்ணுக்கு நகை நட்டு போட்டு அனுப்ப இஷ்டம்னா அடுத்து மேற்கொண்டு பேசிப்பிடலாம்..." அவர் கூறிக் கொண்டே போக சுப்ரமண்யம் முகம் சோர்ந்தது..

" எனக்கு குமாஸ்தா உத்யோகம் தான்.. அப்பா புரோகிதம் தான்.. அவருக்கு சம்பாத்யம்னு பெருசா இல்லை.. பாட்டனார் சொத்தா நாலு ஏக்கரா நெலம் இருக்கு.. இந்த வீடு.. அவ்வளவு தான்... அதுபோக என் சம்பாத்யத்லே இவளுக்குன்னு இருபது சவரன் நகை சேத்திருக்கேன்... பொறந்ததும் பொண்ணா போய்டுத்து.. என்ன பண்றது.. என்பலத்துக்கு என்ன ஆகுமோ அத செஞ்சுடறேன்.. கல்யாணத்தையும் நன்னா நடத்திடறேன்.. " தயங்கித் தயங்கிக் கூறினார்..

" என்னது.. இருபது பவுனா.. நன்னா இருக்கு போங்கோ.. எங்காத்து தூப்பா குழிக்கு ஆகுமா அது... " பர்வதம் உறும..

பேச இயலாமல் பார்த்துக் கொண்டிருந்தார் சுப்ரமண்யம்..

" தோ பாருங்கோ... அம்பது பவுன் நகை போட்டுடுங்கோ.. பையனுக்குன்னு மோதிரம் செயின் அது இதுன்னு ஒரு அஞ்சு பவுன்.. அதெல்லாம் முறைதானே.. இதுக்கு ஒத்துண்டேள்னா நல்ல நாள் பாத்து சொந்தக்காராள கூட்டி மண்டபத்துல தட்ட மாத்திண்டடலாம்.. " பர்வதம் தணிந்து வர..

" ஏண்டி பர்வதம்... உங்க அந்தஸ்துக்கு சரியான இடம் இல்லையேடி.. வேண்டாம்னு சொல்லிட்டு நடைய கட்ட வேண்டியதுதானே.. இதுக்கேன் இத்தன மெனக்கெடறே.." பின்னால் இருந்த பர்வதத்தின் நெருங்கிய சொந்தமும் அவளது நண்பியுமான லோகநாயகி கிசுகிசுத்தாள்..

" அப்டி இல்லேடி லோகு.. இந்த மாதிரி இடமா இருந்தாத்தான் சம்பந்தக்காரா கை கட்டி வாயப் பொத்திண்டு நிப்பா.. அதுவுமில்லாம...." குரலை மெள்ள தாழ்த்தி.. " நம்ம சீமந்தபுத்ரன் கல்யாண குணத்துக்கு இந்த மாதிரி இடம்தான்டி லோகு தோதா இருக்கும்.. அந்த பிராமணனப் பாரு கப்சிப்புன்னு ஒக்காந்துண்டு இருக்கறத.. ஹாஹா..." சிரித்தாள்..

" மூளைக்காரிதான்டி பர்வதம் நீ.." லோகுவும் சிரித்தாள்.

மந்தகாசப் புன்னகையுடன் நிமிர்ந்த பர்வதம் சுப்ரமணியம் சொல்லப் போவதற்காய் காத்திருந்தாள்..

பின்னால் திரும்பி ருக்மணியையும் சுகுமாரியையும் கொஞ்சம் வெறுப்புடன் பார்த்தவர்.. " அம்பது பவுன்னா இப்ப ஒடனே ஆகாதே.. முப்பது பவுன் வேணும்னா யார் கையகாலப் புடுச்சாவது தேத்திடுவேன்.. இங்க நான் செஞ்சாத்தான் உண்டு.. உபகாரம் பண்ணன்னு எந்த சொந்தமும் சரியா இல்லை.. கல்யாணத்துக்கு முப்பது பவுன் போட்டுடறேன்.. மீதிய ஒரு ஆறுமாச காலம் பொறுத்து போட்டுடறேன்.. இந்த சுப்ரமண்யம் சொன்ன வாக்க தவறமாட்டான்... நம்புங்கோ..."

பர்வதமும் சதாசிவமும் ஒருவரை ஒருவரை பார்க்க பின்னால் லோகநாயகி காதில் கிசுகிசுத்தாள்.. " ஏன்டி பர்வதம்.. அந்த மனுஷன் உடனே ஒத்துண்ட்டானே.. பொண்ணுக்கு ஏதும் குறை இருக்கான்னு இப்பவே நன்னா பாத்துண்டுடு.. பின்னாடி நீ கஷ்டப்படப் போறே... போ.. போய் பாத்துடு.."

அவள் தூண்டிவிட..

மெள்ள எழுந்து சுகுமாரியின் அருகில் வந்தவள் அவளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தாள்.. கழுத்தில் அணிந்திருந்த நகையை கைகளில் தாங்கி பரிசோதித்தாள்..

" பொண்ணுக்கு கைகால்லாம் ஊனமில்லையே.. ம்ம்ம்.." கேட்டவாரே அவள் தாடையை தூக்கி தலையை இங்கும் அங்கும் திருப்பிப் பார்த்தாள்..

" ஐயயோ.. அதெல்லாம் ஒரு ஊனமும் இல்லை.. நன்னா நடப்பா.. கைகாலெல்லாம் நன்னா இருக்கு.." பதறினார் சுப்ரமண்யம்.

" வர்ரச்சே காலத் தேச்சு தேச்சு நடந்து வந்தாளே.. உங்க பொண்ணுக்கு நடக்க தெரியாதா.. காலத்தேச்சுண்டு நடந்தா ஆத்துக்கு ஆகாதுன்னு சொல்லித் தரலியா.. நன்னாத்தான் வளத்திருக்கேள்.. ம்ஹூம்.." சரிசரி.. இந்தாடி மா... ம்ம்.. பேரென்ன.. சந்ரகுமாரியா சூரியகுமாரியா..."

" சு.. சுகுமாரி..." மெதுவாய் அவள் சொல்ல..

" என்ன பேரோ... சுகுமாரி.. கருமாரின்னு.. ஹ்ம்... சரி... சுகுமாரி.. எங்காத்லே மனுஷாள் அதிகம்.. சொந்தம் பந்தம்னுட்டு பெருங்குடும்பம்.. புரியறதா.. நீ தான் ஆத்து மூத்த நாட்டுப் பொண்ணா வரப்போறவ.. அந்த ஸ்தானத்த புருஞ்சுண்டு என்னென்ன கத்துக்கனுமோ கல்யாணத்துக்கு முந்தி சுருக்க கத்துக்கோ.. என்ன.. பின்ன உன்னால எங்கபேர் கெட்டுடப்டாது.. புருஞ்சதா.." பர்வதம் பார்த்த பார்வையில் வெலவெலத்து வேகமாக தலை அசைத்தாள் சுகுமாரி..

திரும்பி வந்து அமர்ந்த பர்வதம் சதாசிவத்திடம் கண்களால் கேள்வி கேட்டாள்.. அவர் சரியென தலை அசைத்தார்..

" ஏதோ ஜாதகப் பொருத்தம் நன்னாருக்கு.. மத்தபடி எங்க அந்தஸ்த்துக்கு ஏத்த இடம் இல்லைதான்... ம்ம்.. என்ன பண்றது.. பொறுத்துக்க வேண்டியதுதான்.. இது தான் அமையனும்னு என் பையன் தலைல எழுதி இருக்கோ என்னவோ.. என்னடா குரு மூர்த்தி.. பொண்ண பிடிச்சிருக்கேள்யோ.. அப்பறம் நாங்க சொன்னமேன்னு நீ கட்டிண்டு கஷ்டப் படப்படாது.. வாழப் போறது நீ தான்.. ஒருதரைக்கு ரெண்டுதரம் யோஜனை பண்ணி சொல்லு.. " பர்வதம் தன் பையனின் ஒப்புதலை கேட்க..

சுகுமாரியை ஒரு முறை ஏறஇறங்கப் பார்த்து பல்இளித்தான்.. " ம்ம்ம்... சரிமா.. நேக்கு பிடிச்சிருக்கு.. பேசி முடுச்சுடுங்கோ.."

" பையனுக்கு பிடிச்சதனால இந்த சம்பந்தத்த ஏத்துக்கறோம்.. மத்த சமாச்சாரம்லாம் ஆத்துக்குபோயி கலந்து பேசி கடிதாசி போட்டுடலாம்.. என்ன நான் சொல்றது.." பர்வதம் முடிவெடுக்க தலை ஆட்டினார் சதாசிவம்..

உள்ளே இருந்து பார்த்துக் கொண்டிருந்த ருக்மணிக்கு கோபமாக வந்தது.. குருமூர்த்தியின் அலட்சிய போக்கும் , பர்வதத்தின் டாம்பீகமும் அவளுக்கு வெறுப்பை தந்தது.. சுகுமாரியை பார்வையிட்டாள்.. பருந்திடம் அகப்பட்ட கோழிக்குஞ்சு போல் அவள் முகம் தடுமாற்றத்துடன் இருக்க , மாட்டுச் சந்தையில் விற்கப்படும் மாடு போல் தன் மகளை ஏலம் விடுவதைக்கண்டு மனம் கொதித்தது.. மெள்ள முன்னால் வந்து சுகுமாரியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்..

" என்ன.. சுப்ரமண்யம்.. சந்தோஷம் தானே.. பெரிய இடமா உம்ம பொண்ணுக்கு அமஞ்சது உமக்கு அதிர்ஷ்டம் தான்.." சதாசிவம் பெருமையுடன் பேச..

" மஹா சந்தோஷம்.. பெரியவா கருணை.. இப்படிபட்ட வரன் அமைஞ்சது நேக்கு பெருமைதான்.. உங்க சம்பந்தம் நேக்கு கெளரவம்.. தயை பண்ணி எல்லாரும் போஜனம் பண்ணிட்டு போகனும்.. " பவ்யமாகக் கூறினார் சுப்ரமண்யம்.

ருக்மணியும் , செம்பா மாமியும் இன்னும் இரண்டு பெண்கள் இலையைப் போட்டு பறிமாற அனைவரும் சிலபல குறைகளைக் கூறியபடி சப்புக் கொட்டி சாப்பிட்டனர்..

" பக்ஷணம்லாம் யார் பண்ணது.. மைசூர்பாக்லே நெய்யே சேக்கலயா.. ஒரே கல்லாட்டம் இருந்தது.. தேங்குழல் பல்லுபோனவா சாப்டறா மாதிரி ஒரே வதங்கல்.. திருக்கன்னமுதுலே முந்திரியை தேட வேண்டி இருக்கு.. ஹூம்.. கல்யாண பந்திலயாவது கண்ல காமிப்பாளோ இல்ல சிக்கனமா இப்படியே முடுச்சுடுவாளோ என்னவோ.." லோகநாயகி தன் பங்குக்கு அர்ச்சித்தாள்..

" அய்யயோ.. ஏதோ அவசரகதியா பண்ணிலதால இப்டி ஆயிடுத்து.. க்ஷமிக்கனும்.. கல்யாணத்த ஒரு குறையும் இல்லாம பண்ணிடறேன்..." இழைந்தார் சுப்ரமண்யம்..

" சரி.. நாங்க கிளம்பறோம்.. உங்க பொண்ண எங்காத்துக்கு அனுப்ப தயார் பண்ணி வைங்கோ.. எதச்சொன்னாலும் மலங்க மலங்க முழிச்சுண்டு நிக்கறா.. சரியா.." கூறிவிட்டு கூட வந்த படையுடன் ஒருவழியாய் கிளம்பினர் பர்வதம் குடும்பத்தினர்..

அவர்களை வழி அனுப்பிவிட்டு உள்ளே நுழைந்த சுப்ரமண்யத்திற்கு தலையெல்லாம் வலித்தது.. அவர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் தலையைத் தலையை ஆட்டியதில் கழுத்தெல்லாம் வலி எடுத்தது..

கூடி இருந்த அக்கம் பக்கத்தினரும் விடை பெற்று கிளம்ப , வாடிய பூவாய் அகம் பழைய நிலைக்கு திரும்பியது..

" ருக்கு.. அடியே ருக்கு.. காப்பி கொண்டு வா... ஒரே தலவேதனை.." சுப்ரமண்யம் தன் சுயரூபத்தை எடுத்து கொள்ள..

உள்ளிருந்த ருக்மணிக்கு கோபம் தலைக்கேறியது.. அடக்கிக் கொண்டு காபியை கலந்து கொண்டு வந்து கொடுத்தாள்..

" ஹப்பா... ஒரு வழியா எப்டியோ பேசி இந்த வரன முடிச்சாச்சு.. பாத்தியா.. அவா என்னன்ன கேக்கறான்னு.. உன் பொண்ண நீ வளர்த்த லட்சணம் அப்டி.. சந்தி சிரிக்க வெச்சுட்டே.. இன்னும் புஸ்தகத்த குடுத்து நடுகூடத்ல உட்கார வெச்சு , படிச்சு சிரிச்சுண்டு இருக்க சொல்லு.. இன்னும் நன்னாருக்கும்.. " வார்த்தையால் குத்தினார்..

அதுவரை அமைதியாக இருந்த ருக்மணி வாயைத் திறந்தாள்..

" எம்பொண்ண நான் நன்னாத்தான் வளத்திருக்கேன்.."

மெல்லிய அதிர்ச்சியுடன் அவளை ஏறெடுத்துப் பார்த்தவர் குரல் தடித்து வந்தது.. " என்ன.. என்ன நன்னா வளத்திருக்கே.. வந்தவா முன்னாடி பதில் பேசத் தெரியாதைக்கு பேந்த பேந்த முழுச்சுண்டு கண்ண கசக்கிண்டு நிக்கறா.. வளத்திருக்காளாம்.. இந்த அசமஞ்சத்த கரைசேர்க்க நான் இன்னும் எவன் எவன் கால்ல விழனுமோ.. ஹூம்.. வந்துட்டா.. வாயை நீட்டி முழச்சுண்டு.. போடி உள்ள.."

அங்கயே நின்று கொண்டிருந்தாள் ருக்மணி..

" என்னடி.. சொல்லிண்டே இருக்கேன்.. நின்னுண்டே இருக்க.. " அவர் உரும...

" சுகுமாரிக்கு இந்த சம்பந்தம் வேண்டாம்.. " அவரை தீர்க்கமாக பார்த்து கூறினாள்..

" என்னது... வேண்டாமா.. நீ யாரு அத முடிவு பண்ண.. நோக்கென்ன தெரியும்.. வேண்டாமாமே.. வந்துட்டா.. போடி உள்ள.. சமைச்சு போட்டமா , மிச்சத்த தின்னமான்னு இரு.. வாய் பேசினே.. எட்டி மிதிச்சுப்புடுவேன்.."

" எம்பொண்ணுக்கு இந்த வரன் வேண்டாம்கறேன்.. அவள புதைகுழில தள்ள நான் விடமாட்டேன்.. இப்டி எதுவும் பேசாதைக்கு எல்லாத்தையும் கேட்டுண்டு கஷ்டப்பட்டதெல்லாம் என்னோட முடியட்டும்.. என் குழந்தைய கண்ணக் கட்டி காட்ல விட நான் தயாரா இல்லே.. "

" என்னடி பெருசா குத்தம் கண்டுபுடுச்சுட்டே அவாள்ட்ட.. எவ்வளவு பெரிய பரம்பரை... சொத்து பத்து உள்ளவா.. டோக்கு டோக்கா பணம் வர்ரது... மாப்பிள்ளை ராஜாவாட்டம் இருக்கான்... இன்னும் என்ன குறை உம்பொண்ணுக்கு.. அவ லட்சனத்துக்கு இந்த மாதிரி வரன் அமைய அவ பூர்வ ஜன்ம புண்யம் பண்ணிருக்கனும்.. இந்த வரன விட்டுட்டு தெருவுல போற பரதேசிய கட்டிவைக்க சொல்றியா.. ம்ம்ம்... என் கெளரவத்துக்கு ஏத்த எடமாத்தான் பாத்திருக்கேன்.. அதுதான் நேக்கு பெருமை.. வேண்டாமாம்.. அறிவு கெட்டவளே.. தத்து பித்துன்னு உளறிண்டு.. போடி.. " கர்ஜித்தார்..

" பாத்தேனே உங்க கெளரவத்த.. எம்பொண்ண கொலு பொம்மை மாதிரி நடுக்கூடத்தில நிக்க வெச்சு யாரோ ஒரு பொம்மணாட்டிய பேச விட்டு வேடிக்க பாத்துண்டு கூத்தடுச்சேளே.. பெருமையாம் பெருமை.. பையன் ராஜாவாட்டம் இருந்தா போதுமா... அவன் பார்வையும் , லட்சனமும்.. சை.. எம்பொண்ண சபைல நிக்க வெச்சு ஆளாளுக்கு அவள தூத்திண்டு இருக்கா.. அவன்பாட்டுக்கு சிரிச்சுண்டு உட்காந்திருக்கான்.. இப்பவே இப்டினா.. நாளைக்கு எம்பொண்ண வெச்சு எப்டி காப்பாத்துவான்.. அவன் அம்மா பேச்சக் கேட்டுண்டு இவள இம்சபடுத்த மாட்டான்னு என்ன நிச்சயம்.. அந்த பையன் நம்ம பொண்ணுக்கு வேண்டாம்.. " கோபத்துடன் ருக்மணி சத்தமாகப் பேச..

" என்னடி... விட்டா பேசின்டே போறே.. அவ்வளவு தைரியம் வந்துடுத்தோ.. உன்ன.. " உக்ரமான சுப்ரமண்யம் கை உயர்த்த..

பளார் எனக் கன்னத்தில் அறை விழுந்தது ருக்மணிக்கு... !

அதை எதிர்பார்க்காத ருக்மணி துடிதுடித்து கைகளால் அழுத்திக் கொண்டாள்.. கண்களில் நீர் வழிந்தது..

உள்ளறையிலிருந்து இதை பார்த்துக் கொண்டிருந்த சுகுமாரிக்கு உடம்பெல்லாம் நடுங்கிப் போனது..

" ஏய்.. சுகுமாரி வாடி இங்க.. " அப்பாவின் கர்ஜனையில் பயந்து தடுமாறியபடி அவர் முன்னால் வந்து நின்றாள்.

" தோ பார்.. இவ சொல்றத கேட்டுண்டு கல்யாணம் வேண்டாம் அது இதுன்னு முரண்டு புடுச்சியோ... அவ்ளவுதான்.. ஜாக்ரதை.. ஒழுங்கா இருக்கனும்.. புருஞ்சதா.." அவரின் அதிர்ந்த குரலுக்கு பதில் ஏதும் கூறவரது வேகமாக தலை அசைத்து சம்மதித்தாள் சுகுமாரி..!


For Comments plz click below link

Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
 
மார்கழித் திங்கள்..!!

அத்யாயம் - 11

மெள்ள மெள்ள அந்த நினைவுகளிலிருந்து திரும்ப சுகுமாரி பாட்டி பெருமூச்சொன்றை உதிர்த்தாள்..

" ஹூம்.. இவனும் அவா மாதிரி கல்யாண விஷயத்தில இப்டி கண்டிப்பா இருக்கானே.. பெருமாளே குழந்தைக்கு நல்ல வரனா அமையனும்.." மனதிற்குள் வேண்டிக் கொண்டாள்.

" அம்மா... நான் காலேஜூக்கு கிளம்பறேன்.. நேரம் ஆச்சு.. பாட்டிமா... போய்ட்டு வரேன்.." பாட்டியிடம் வந்து சொல்லிவிட்டு கை அசைத்துவிட்டு வேகமாக நகர்ந்தாள் பவித்ரா..

அந்த காலைவேளை பரபரப்பில் தன்னை இழந்து பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸை எதிர்பார்த்தபடி நின்றிருந்தாள்..

திடீரென பின்னால் ஓர் கை அழுத்த பதறித் திரும்பினாள்.. எதிரே வெடி சிரிப்புடன் நின்றிருந்தாள் அகல்யா..

" யேய்... இப்டி பயந்தாகொள்ளியா இருக்கா.. ஹாஹாஹா..."

" அடச் சீ.. நீதானா.. ஒரு நிமிஷம் பயந்தே போய்ட்டேன்.. இப்டியா திடீர்னு கைய வெப்ப.. பக்கி..."

" ஹாஹா... சாரி.. சாரி.. எதுக்குடி இவ்ளோ பரபரப்பா இருக்க... நம்ம போற பஸ் வர்ரதுக்கு இன்னும் அரைமணி நேரம் இருக்குள்ள.."

கைக்கடிகாரத்தை பார்த்தபடி ஆசுவாசமானாள் பவி... " ஆமால்ல.. என்னமோ ஒரு அவசரம்.. ஸ்டடி ஹாலிடேஸ் முடுஞ்சு திரும்ப போறோமா.. அதான்.. எங்க கிளாஸ மிஸ் பண்ணிடுவோமோன்னு..."

" அடியே மிடில் பெஞ்சு.. என்ன பர்ஸ்ட் பெஞ்ச் பசங்க மாதிரி சீன் போடற.. "

" ஹூம்.. லாஸ்ட் பெஞ்ச் அறிவாளி... நீ என்கிட்ட சொல்றியா.. நாங்களும் படிப்பாளிதான் தெரிஞ்சுக்க..."

" ஹையோ... மன்னிச்சுக்கங்க ஆபிசர்.. " இருகைகளை மடித்து சல்யூட் அடித்தாள்.

" ஏய் ரொம்பப் பண்ணாத.. எங்கடி மீனாவையும் ஷர்மிளியையும் காணோம்.. வரலையா.."

" ஹூம்.. அதுங்க க்ளாஸ கட்டடுச்சுட்டு எங்க சுத்திட்டு இருக்குங்களோ.. அதான் துணைக்கு நான் வந்துட்டேன்ல.. அதுங்கள எதுக்கு தேடற.. ஆமா.. உன் உயிர்த் தோழி.. இணைபிரியா நண்பி அந்த லொடலொட ரம்யா எங்கடி.."

" ஹே ஆமாம்ல.. அவசரத்துல அவள மறத்துட்டேன் பாரு... இரு காலடிக்கறேன்..." கையிலிருந்த மொபைலை இயக்கினாள்.. முழுவதுமாய் ரிங் சென்று , உங்கள் அழைப்பை ஏற்கவில்லை என ஒருத்தி தேன்குரலில் கூறினாள்..

" சே... போன எடுக்காம இந்த அலட்டி என்ன பண்றா... ம்ம்ம்.. " மறுமுறை அடித்தாள்.. சிறிது நேரம் செல்ல போனை எடுத்தாள் ரம்யா....

" அலோஒஒஒஒ.... அலோஒஒஒஒ.... அ.... லோஒஒஒஒ...."

" ஏய் ரம்யா... என்னடி பண்ற.. "

" அலோஒஒஒ... அலோஒஒஒ..."

" அடியே... இப்டியே லோலோன்னு கத்திட்டு இருந்த நேர வந்து அடிப்பேன்... காலேஜூக்கு கெளம்பாம என்னடி பண்ற.. ஆ.. " பவி சத்தமாகக் கேட்க..

அரைதூக்கத்தில் இருந்தவள் படீரென முழித்தாள்.. " ஹலோ... ஏய் பவி... என்னடி சொல்ற... காலேஜா...."

" ஏய் தூங்குமூஞ்சி.. இன்னிக்கு காலேஜ் ஆரம்பம்.. தெரியாதா.. என்னடி பண்ற.. "

" அய்யயோ.. காலேஜா..... நோ.... என்னக் கொடுமை சரவணா..." கைகளை நெற்றியில் அடித்து கதறினாள்..

" இப்போ ஒழுங்கா கெளம்பி வர்ர.. இல்ல மிஸ்கிட்ட மாட்டி விட்ருவேன்.."

" நோ... நோ.. பவிகுட்டி.. நல்ல பொண்ணுல... மிஸ்கிட்ட போட்டுகுடுத்துடாதடி.. நைட்டெல்லாம் யூடியூப்ல புதுபுதுசா வெரைட்டி டிஷ் எல்லாம் பாத்துட்டு டயர்டாகி தூங்கிட்டேன்டி.. ரொம்ப தூக்கமா வருது.. நாளைக்கு வந்துர்ரனே.. காய்ச்சல்ல பெட்ல கெடக்கேன்னு சொல்லி சமாளிடி.. ப்ளீஸ் இன்னிக்கு லீவ் போட்டுக்கறேனே.." கெஞ்சினாள்..

" உன்ன.. என்ன பண்ணா தேவலை.. தூங்கப்போறியா.. ஒழுங்கா மரியாதையா பல்ல வெளக்கிட்டு மூஞ்சிய கழுவிட்டு ஓடி வர்ர.. இன்னும் பஸ்ஸூ வரல.. மரியாதையா வந்துரு..."

" அடச்சே... நீ ஒருத்தியே போதும் எனக்கு.. இரு.. வந்து தொலைக்கிறேன்.." சொல்லிவிட்டு போனை கட் செய்தாள் அவள்..

பவியின் முகத்தில் தன் ஸ்நேகிதியை நினைத்து புன்னகை பூத்தது..

" என்னடி சொல்றா அவ... வர்ராலா வரலியா.." அகல்யா ஆர்வமுடன் கேட்க..

" வருவா.. விட்ருவேனா.. டைம்பாஸூக்கு அவ வேணா.. இன்னும் பத்து நிமிஷத்துல ஓடி வருவா பாரு.."

சொன்னபடியே அரைகுறை அலங்காரத்துடன் ஓடி வந்தாள் ரம்யா..

" பஸ்ஸூ வந்துருச்சா.. வந்துருச்சா.. சே.. டைத்துக்கு வரமாட்டானே... எப்ப பாத்தாலும் லேட்டு.. பிரின்ஸிகிட்ட சொல்லி அந்த டிரைவரை தூக்கனும்... எப்ப பாரு லேட்டு.. என்னடி பவி.. சரிதான.." ரம்யா சீரியஸாகச் சொல்ல பவியும் அகல்யாவும் அவளை முறைத்தனர்..

" ஹூம்.. நீ மொதல்ல டைத்துக்கு வர்ர வழியப்பாரு.. தூங்கி வழுஞ்சுட்டு இங்க வந்து சீன் காட்டறயா.." பவி அகல்யாவை பார்த்து சிரித்தாள்.

மூவரும் பேசிக் கொண்டிருக்க அந்த பஸ் வந்தது.. மூவரும் ஏறிக் கொண்டனர்..

" டிரைவர் அண்ணே.. இப்டி ஆடி அசஞ்சு வரீங்களே நாங்க நேரத்துக்கு எப்டி காலேஜ் போறது.. வீட்டுபக்கமும் வரமாட்டேங்கறீங்க.. ரெண்டு கிலோமீட்டர் நடந்து வந்து பஸ்ஏற வேண்டியிருக்கு... " ரம்யா டிரைவரை வம்பிக்கிழுக்க..

" அய்யே... இதப் பாரு.. எங்கயோ சந்துபொந்துக்குள்ள வீட்ட வெச்சுக்கிட்டு இது பேசறத பாரு..

யம்மா மவராசி.. மெயின்ரோடு வரைக்குந்தா எனக்கு அலோடு... வேனுன்னா பிரின்ஸிபலு மேடத்துகிட்ட சொல்லு.. அவங்க சொன்னா உங்க தெருவுக்கு , ஏன் உங்க வீட்டாண்டயே வந்து கூட்டிட்டு போறே.. " அவன் கலாய்க்க இதழ் சுளித்து தலையை திருப்பிக் கொண்டாள் ரம்யா.

அருகில் அமர்ந்திருந்த பவியும் அகல்யாவும் வாயை பொத்திக் கொண்டு சிரித்தனர்.. " உனக்கு இது தேவையா.. சைலன்டா வரவேண்டியதுதான.. ஹாஹா.."

" சீ பே.... ஒட்டக சிவிங்கி.." அவள் பழிப்பம் காட்ட கை ஓங்கினாள் பவி..

சிரிப்பும் பேச்சுமாய் காலேஜை அடைந்தனர்..

மனதில் இருந்த சஞ்சலத்தை மறந்து கொஞ்சம் சந்தோஷமாய் நண்பிகளுடன் கல்லூரி நேரத்தில் மூழ்கினாள் பவித்ரா..

அன்று மாலை , பவித்ராவும் ரம்யாவும் காலேஜைவிட்டு வந்து கொண்டிருந்தனர்..

" ஹூம்.. காலேஜ் டேஸ் , காலேஜ் டேஸ்தான்டி.. இது பைனல் இயர்.. இன்னும் கொஞ்ச நாள் படிப்பு முடிஞ்சிருச்சுன்னா அடுத்து வேல தேடனும்.. படிச்ச படிப்புக்கு வேல கிடைக்கனும்... இனிமே லைஃப் சவால்தான்..." ரம்யா அங்கலாய்த்துக் கொண்டாள்.

" ஹா... என்ன பிரசங்கம்லாம் பண்ற.. இதுல தத்துவம் வேற.. நக்கல் கிண்டலடிக்கற ரம்மி எங்கம்மா.. ம்ம்ம்.. " சுற்றுமுற்றும் தேடுவது போல் பாவனை செய்தாள் பவி..!

" ஏய்.. நான் பேசறது உனக்கு கிண்டலா இருக்கா.. நான் என்னடி காமெடி பீஸா உனக்கு.. ம்ம்ம்.." கோபம் காட்டினாள் ரம்யா..

" சே.. சே.. இல்லடி.. ஏதோ ஜோக்கா உன் ஃபீல் தெரியாம சொல்லிட்டேன்டி ரம்யா.. ப்ளீஸ் சாரிடி.. என நிஜ வருத்தத்துடன் பவி மன்னிப்பு கேட்டாள்..

" சரி விடுடி.. இதுக்கு போய்... உங்கவீட்ல உனக்கு கல்யாணம் பேச ஆரம்பிச்சுட்டாரு உங்க அப்பா.. எனக்கு... அப்பா போய் சேர்ந்துட்டாரு.. அம்மா பாவம் எதோ வேல செஞ்சு எங்கள காப்பத்தறாங்க.. நான் தலையெடுத்தாதான் அவங்க நிம்மதியா இருக்க முடியும்.. நான் வேலைக்கு போய்த்தான் ஆகனும்.. அதுக்கு நல்ல வேலை கிடைக்கனும்.. அதத் தேடனும்.. செட் ஆகனும்.. ம்ஹ்ம்.. இவ்வளவும் சவால்தானே..." ரம்யா தன் நிலையை எண்ணி பெருமூச்சு விட்டாள்.

" உன் கவலை , சூழ்நிலை புரியுது ரம்மி.. லைஃப் முழுக்க சவால்தான்.. படிப்பு முடியறவரை அப்பா அம்மா பாத்துக்கறதால நமக்கு எதுவும் தெரியல.. ஆனா.. சவால்னு சொன்னியே அது உனக்கு மட்டும் இல்லடி.. எனக்கும்தான்.." பவி நிறுத்த..

" என்னடி சொல்ற.. உனக்கு என்ன சவால் இருக்கு.. புரியலையே..."

" இல்ல ரம்யா.. படிப்பு முடுஞ்சு வேல பாக்கனும் இருக்கு எனக்கு.. ஒரு வருஷம் போட்டும்னு அப்பாகிட்ட சொன்னேன்..ஆனா அப்பா முடியாது இன்னும் படிப்பு முடிய ஆறுமாசம் இருக்குல்ல அதுபோதும்னு கல்யாணத்துக்கு அவசர படுத்தறாரு.. ஒடனே கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பம் இல்ல.. அவரோட இந்த அவசரம் சுத்தமா பிடிக்கல.. அதுக்காக ரொம்ப எதிர்ப்பும் காட்ட முடியல.." ஹ்ம்ம்.. கொஞ்சம் அமைதியானாள்.. "இவ்ளோநாள் பெருசா ஒன்னும் இல்லைனாலும் நல்ல படிப்பு, வேண்டிய வசதின்னு லைஃப் ஸ்மூத்தா போச்சு.. வீட்லயும் செல்லமாத்தான் நடத்தறாங்க.. இ... இப்ப போய் எதிர்த்து பேச மனசு வரலடி.. ஹ்ம்.. இப்போ சொல்லு.. எனக்கும் அது சவால்தான.. எவன் வருவானோ.. எப்படி இருப்பானோ.. ஏதோ உன்கூட இருக்கும் போதும் காலேஜ் வரும்போதும் தான் இத மறந்து இருக்கேன்.. ம்ஹூம்.. என்ன ஆகுமோ போ..." என பெருமூச்சுடன் மெளனமாய் நடந்தாள்..

அவளது மனநிலை புரிந்து கொண்ட ரம்யா.. " என்ன ஆகும்.. ஒரு அழகான ஹீரோ புல்லட்ல வந்து உன்ன கடத்திட்டு போயிடுவான்.. அப்பறம் அப்பறம் இத்யாதி.. இத்யாதிதான்.. ஹாஹாஹா.. " கடகடவென சிரித்தாள்..

" அடச் சீ.. போடி... உன்ன... " தன் கவலையிலிருந்து சட்டென வெளிவந்த பவி சிறிது வெட்கக் கூச்சத்துடன் அவளை அடிக்க துரத்தினாள்..

" ஹே.... சரிசரி... விடு.. ஏதோ நீ சோகக் கடல்ல மூழ்கிட்டியேன்னு உன்ன டைவர்ட் பண்ண பாத்தேன்.. விடுடி.. எல்லாம் பாத்துக்கலாம்.. நல்லபடியாத்தான் நடக்கும்.. உனக்கேத்த ஒரு ஒட்டகசிவிங்கி இங்கதான் எங்கயாவது புல்ல மேய்ஞ்சுகிட்டு இருக்கும்.. வா.. நம்ம ஆஸ்த்தான மனமகிழ் கூடத்துல போய் சில்லுன்னு... சே... சூடா ஓர் குழம்பிய மண்டிட்டு வீட்டுக்கு போலாம்... வாடி.. " பவியை இழுத்துக் கொண்டு போனாள் ரம்யா..

இருவரும் அவர்கள் வழக்கமாக செல்லும் அந்த காபி ஷாப்பிற்குள் நுழைந்தனர்..

முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்து உயர் ரக காபியை ஆர்டர் செய்துவிட்டு கதை பேச ஆரம்பித்தனர்..

" ஏ ஒரு விஷயம் தெரியுமா... நம்ம ஒபாமா பொண்ணு இருக்குல்ல.. அந்த பொண்ணு இந்த மாதிரி ஒரு ரெஸ்டாரண்ட்ல சர்வரா வேல பாத்து அந்த காசுல படிக்குதாம்.. ஹூம்.. இங்கயும் தான் வாழுது.. நம்ம வீஐபிகளோட பசங்கள இப்டி படிக்க சொன்னா என்ன ஆவானுங்க.. ஹாஹா.." கதைத்தபடியே அங்கும் இங்கும் கண்களை அலையவிட்ட ரம்யா பக்கவாட்டில் கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்தவர்களை பார்த்து பேச்சை நிறுத்தினாள்..

" என்னடி ரம்யா.. திடீர்னு சைலன்ட் ஆயிட்ட.. யாருடி அங்க.. பவியும் அவள் பார்த்துக் கொண்டிருந்த திசையை பார்த்தாள்.. அருகில் இருந்த தூண் மறைக்க முகம் அவளுக்கு சரியாக புலப்படவில்லை..

" யாரிடி.... "

" ஹேய்... அது.. அது... அந்த ஊறுகா பார்ட்டிதான.. "

" ஊறுகாயா.. யாருடி.." பவி எட்டிப் பார்க்க பக்கவாட்டில் அமர்ந்திருந்தவரின் பாதி முகம் தென்பட்டது..

" அடியே.. நம்ம ஹீரோடி.. சீ.. சீ.. உன்னோட ஹீரோ.." ரம்யா சிரிப்புடன் கண்ணடித்தாள்..

" யாருடி... ஹீரோ அதுஇதுன்னு குழப்பற.." ஆர்வம் தாளாமல் அமர்ந்திருந்தவள் எழுந்து பார்க்க..

அங்கே பார்மல் ட்ரெஸில் டீக்காக ரிஷி அமர்ந்திருந்தான்.. பார்த்ததும் கண்கள் மின்ன மெல்லிய புன்னகை இதழில் மலர்ந்தது..

" என்ன.. உங்க ஹீரோ ஸ்டால் போடறதோட நிப்பாட்டாம காபி ஷாப்புக்கெல்லாம் ஊறுகா விக்க ஆரம்பிச்சுட்டான் போல.. ஸ்டாலைத் தவிர கிளைகள் வேறெங்கும் கிடையாதுன்னு நெனச்சேன்.. சே.. செம்மடி உன் ஹீரோ.." ரம்யா நக்கலடித்தாள்..

" அடச்சீ.. என் ஹீரோல்லாம் இல்ல.. மூஞ்சியப்பாரு.. எரும... " பவி கூறினாலும் உள்ளுக்குள் ரம்யா கூறியது சந்தோஷக் கீற்றாக மின்னலென வெட்டிச் சென்றது.. அவன் தனைப் பார்ப்பானா , பாத்தா பேசுவானா.. இல்லை தானே சென்று பேசுவோமா என்ற சிறுதவிப்புடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் பவித்ரா..

" என்னடி ஒட்டகம்.. தலைய நீட்டி நீட்டி என்ன அங்கயே பாத்துட்டு இருக்க.. ம்ம்.. அந்த ஊறுகாய்கிட்ட போய் பேசப் போறியா.." ரம்யா அவளை சீண்ட..

" ஹேய்.. அவர் பேர் ரிஷி.. ஊறுகாய்லாம் இல்ல.. "

" ஓஒஒ.. ரிஷியா... பெரிய முனிவரா.. அதச் சொல்லலயே நீ.. எங்க தாடி , காவி கமண்டலத்தையெல்லாம் காணும் உங்க அவருக்கு.. ம்ம்ம்..." என அழுத்தமாகக் கேட்டாள் ரம்மி..

" ஹே.. சீ.. போடி.. ஏதோ மரியாதைக்கு அவர்னு சொன்னா.... ரொம்ப ஓட்டு்ற..." கொஞ்சம் கோபமானாள் பவித்ரா..

இன்னொருவருடன் தொழில் ரீதியாக மும்முறமாகப் பேசிக் கொண்டிருந்த ரிஷி எதேச்சியாக இவள் பக்கம் திரும்பினான்.. பவித்ரா தன்னை பார்த்துக் கொண்டு நிற்பதைக் கண்டவன் ஒருகணம் ஆச்சர்யப் பட்டு கண்களை விரித்தான்.. கூட வந்தவரை தவிர்க்க இயலாமல் பேச்சுடன் இவளைப் பார்த்து மெள்ள சிரித்தான்..

சிறிது நேரம் பார்வையால் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர் இருவரும்..

அவன் அங்கிருந்து எழுந்திருக்க தன்னிடம் வருவான் என எதிர்பார்த்து ரம்யாவின் அருகில் சிரிப்புடன் அமர்ந்தாள் பவி..

இவளுடன் பேச ஆர்வமாக இருந்தாலும் கூட வந்தவர் தடையாக இருக்கக் கொஞ்சம் தயக்கம் கொண்டான் ரிஷி..

பவி அவன் வரவை எதிர்பார்க்க இவளைக் கடந்து சென்றவன் திரும்பி ஓர் ஸ்நேகப் புன்னகையுடன் வருகிறேன் எனத் தலை அசைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான்..

அநிச்சையாக தலை ஆட்டிய பவிக்கு அவன் பேசாமல் சென்றது சிறிது வருத்தத்தை தருவித்தது...

அருகில் இருந்த ரம்யா ஏளனமாக இவளைப் பார்த்து சிரித்தாள்..

" என்னடி.... நம்ம ஹீரோ உண்மையாவே முனிவர் தான் போல.. பொண்ண கண்டா.. அதான் உன்னக் கண்டா இப்பிடி கண்ண மூடிட்டு ஓடறான்.. ஆ... ஹாஹா..."

" ஏய்.. சீ.. அவர் ஏதோ வேலை விஷயமா யாரோடையோ வந்திருக்காரு.. எப்டி பேச முடியும்.. " சிறு ஏக்கம் அவள் கண்களில் நிழலாடியது..

" சரி.. சரி.. சப்பு கட்டினதெல்லாம் போதும்.. வா வா.. கடைய மூடிறப் போறாய்ங்க.. ஒரு காபி குடிக்க இவ்ளோ நேரமான்னு அடுச்சு பத்தி விட்ருவாங்க.. கெளம்பு.. கெளம்பு.."
இருவரும் கிளம்பினர்.

ரம்யா வழியில் எதையோ பேசிக் கொண்டுவர.. வேறு நினைவில் பயணித்துக் கொண்டிருந்தாள் பவித்ரா..

" அடியே.. வீட்ட பாத்துபோடி.. இப்டியே பராக்கு பாத்துட்டு எங்கயாவது போயிடாத.. நா கெளம்பறேன்.. நாளைக்கு பாக்கலாம்.. பை.. " கை அசைத்துவிட்டு விடை பெற்றாள் ரம்யா..

அவன் பவியின் மனதை மெள்ள அசைத்துக் கொண்டிருந்தான்...!!

தன்னிடம் அவன் பேசவில்லையே என்ற மெல்லிய வருத்தம் மனத்திற்குள் ஓடிக் கொண்டே இருந்தது.. " கூட யாரும் இல்லைனா கண்டிப்பா வந்து பேசிருப்பான்.. போகும் போது கூட வரேன்னு தலையாட்டிட்டு தானே போனான்.. டீசன்ட்டான ஆள்தான்.. ஒருவேளை இந்த ரம்யா பக்கிய பாத்து பயந்துட்டானோ.. ஹாஹாஹா.." தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள்..

நேரம் நீள அப்படியே உறங்கிப் போனாள்..!!

மறுநாள்...

For Comments plz click below link

Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
 
மார்கழித் திங்கள்..!

அத்யாயம் - 12

மறுநாள் வழக்கம்போல பரபரப்புடன் தொடங்கிய காலை வேளையில் அவரவர் வேலையை கவனிக்க, காலேஜூக்கு கிளம்பிச் சென்றாள் பவித்ரா..

எப்பொழுதும் போல நண்பிகளின் ஆர்ப்பாட்டம் , ரம்யாவின் வாயோயாத பேச்சு , கவனமான படிப்பு , சின்ன சின்ன கோபங்கள் என அன்றைய வகுப்பு முடிய ரம்யாவிடம் விடை பெற்று வீட்டிற்கு வந்தாள் பவித்ரா..

வாசலில் காலையில் போட்ட கோலம் சாணியின் பசுமை நிறத்தில் பளபளப்புடன் அப்படியே இருந்தது.. நீண்ட வளைவுகளுடன் பெரிய கோலமாக தான் வரைந்ததைப் பார்த்து தானே பெருமை கொண்டபடி அதை மிதிக்க மனமின்று பக்கவாட்டில் தாண்டி குதித்து உள்ளே நுழைந்தாள்..

ஹாலில் அமர்ந்திருந்த ஸ்ரீதர் அவளை பார்க்காது மும்முறமாக ஏதோ வரைந்து கொண்டிருந்தான். கூடத்தைத் தாண்டி தன் அறைக்குள் நுழைந்தவள் அயர்வுடன் புத்தகப் பையை ஓரமாக வைத்துவிட்டு அமர்ந்து கொண்டாள்.. முழுவருடப் பரிச்சைகள் ஆரம்பிக்க இன்னும் சிலமாதமே இருக்க படிக்க வேண்டிய பாடங்கள் கொஞ்சம் பயமுறுத்தின.. " ஹூம்.. " பெருமூச்சுடன் கைகளால் கண்களை தேய்த்துக் கொண்டாள்..

" பவி.... பவி... வந்துட்டியா.. என்னம்மா டயர்டா இருக்கா... காபி கலந்துண்டு வரவா.." வாஞ்சையுடன் கேட்டபடி உள்ளறைக்குள் வந்தாள் பங்கஜம்..

அவள் அருகில் வந்து அமர்ந்தவள் மெல்லிய புன்னகையுடன் பவியின் தலையை வருடினாள்..

மெள்ள அம்மாவின் மடியில் பவி தலைசாய பாசமுடன் அவளது தலையை வருடிக்கொடுத்தாள் பங்கஜம்.. அவள் மனதிற்குள் பவி தன் சூழ்நிலையை நினைத்து வெளிகாட்ட முடியாமல் மறுகுகிறாளோ என எண்ணம் ஓடியது..

மெள்ள பேச்சை ஆரம்பித்தாள்..

" பவி.... அம்மா ஒன்னு சொன்னா கேட்டுப்பியா.. ம்ம்ம்.."

தலையை நிமிர்த்தி என்னவென அம்மாவை பார்த்தாள் பவி..

" அப்பா கண்டிப்பா இருக்கறது உனக்கு கோவமா இருக்கா... "

" ப்ச்... அதெல்லாம் ஒன்னுமில்ல.. "

" அப்பாக்கும் நீ செல்லப் பொண்ணுதானே.. அதனாலதான் உன்கிட்ட நேரடியா பேசமுடியாம என்கிட்ட சொன்னா.. அப்பாவையும் நீ கொஞ்சம் புருஞ்சுக்கனும்.. அவர் ஸ்தானத்ல இருந்து பாக்கனும் பவி.. தன் பொண்ணுக்கு காலத்ல நடக்க வேண்டியத நடத்தி வைக்கனும்னு எந்த அப்பாக்கும் இருக்கும்தானே.. சொல்லு.. அதனால அவர் கொஞ்சம் அவசரப் படறார்.. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் குடுத்துட்டா அவருக்கும் ஒரு நிம்மதி.. பொண்ண நல்ல எடத்துலே கொடுத்துட்டோம்னு.."

" அதுக்கு.... " பேச வாயெடுத்தாள் பவி..

" சரி.. இப்போதானே ஒருத்தர் ஜாதகம் பாக்கன்னு கேட்ருக்கா.. அது பொருந்தலாம் பொருந்தாமையும் போகலாம்.. அதுக்காக உடனே எல்லாம் நடந்திடுமா.. நீ மனச அலட்டிக்காம இரு..
இன்னும் எவ்வளவு இடம் வருமோ இல்ல அடுத்தது அமையுமோ.. அதுவரைக்கும் நீ பாட்டுக்கு எப்போதும் போல இரு.. கண்டதும் யோசிக்க வேண்டாம் சரியா.. நல்லபடியா படிப்பமுடி.. அது உனக்கு எப்பொழுதும் பக்கபலமா இருக்கும்.." பங்கஜம் அவளை சமாதானப்படுத்தினாள்.. எதுவும் பேசாமல் மோட்டுவளையத்தை பார்த்தபடி படுத்திருந்தாள் பவித்ரா.. அம்மா கூறியதும் நியாயமாகப் பட்டது.. இருப்பினும் தனக்கான சுதந்திரத்தை விட்டுக் கொடுக்கவும் மனம் போராடியது.. அதற்குமேல் படுக்க இயலாது விருட்டென எழுந்தாள்..

" அம்மா காபி கலந்து வை.. முகம் கைகால் அலம்பிண்டு வந்துடறேன்.." மறுபடியும் அந்த சிந்தனை தனக்குள் சலனத்தை ஏற்படுத்திடகூடாது என மனதை வேறுதிசையில் மாற்ற முயன்றாள்..

கொள்ளையில் இருந்த கிணற்றில் குளிர்ந்த நீரினை இறைத்து முகத்தில் சொரியா ஓர் புத்துணர்ச்சி மூளைக்குள் உற்பத்தியானது.. அள்ளி அள்ளி இறைத்துக் கொண்டாள்.. முகத்தை அலம்பிவிட்டு சிறு பின்னலாக முடியை கோர்த்துக் கொண்டு கண்ணாடியின் முன் நின்றாள்.. தான் கொஞ்சம் வளர்ந்துவிட்டதாக அது தோற்றுவித்தது.. முகம் கொஞ்சம் பூசினாற் போல் இருந்தது.. எப்பொழுதும் தோன்றும் குழந்தைத் தனம் மறைந்து முகம் கொஞ்சம் தெளிவுடன் இருந்தது போல் தோன்றியது.. முகத்தை கண்ணாடியின் அருகில் சென்று உற்றுப்பார்த்தாள்.. பருவ வயதை அடைந்துவிட்டதை கன்னத்தில் ஆங்காங்கே தோன்றியிருந்த பருக்கள் பறைசாற்றியது.. மேனி பளபளப்பாகத் தெரிந்தது.. " ம்ம்ஹ்ம்... அழகாத் தான் இருக்கேன்.. தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள்.. முன்னும் பின்னும் பார்த்துவிட்டு கூடத்தை நோக்கி வந்தாள்.. அம்மா சூடான காபி கோப்பையை கொடுக்க வாங்கிப் பருக இதமாய் இருந்தது..

குப்புறப் படுத்து கால்களை ஆட்டிக் கொண்டே ஏதோ பேப்பரில் கிறுக்கிக் கொண்டிருந்த ஸ்ரீதர் இவளை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு தலை குனிந்தான்..

அவன் அருகில் உட்கார்ந்தவள்... " டேய்.. ஹோம் ஒர்க் பண்ணலயா.. என்னமோ பரிட்சை முடுஞ்சு லீவு விட்டாப்ல ஹாயா படுத்துண்டு இருக்க.. ஆ..."

தலையை நிமிர்த்தியவன்.. " போ.. அப்பறமா எழுத்திக்கிறேன்.."

" தம்பி.... ஒம்பதாப்பு படிக்கற.. அடுத்து பப்ளிக் எக்ஸாம்டா.. ஒழுங்கா படி.. இல்ல அப்பாட்ட போட்டு குடுத்துருவேன்.."

முகத்தை சுருக்கியவன்.. " சொல்லிக்கோ.. எனக்கென்ன.. "

" அடி.. எந்திரிடா.. என்னமோ நீச்சல் பழகறவன் மாதிரி தரைல பொறண்டுன்டு இருக்க.." அவனது காதைப் பிடித்து இழுத்தாள்..

" ஸ்ஸ்ஸ்ஆஆஆ.... ஏய்... வலிக்குது.. நான் படிக்கமாட்டேன் போ.... " முரண்டு பிடித்தான்.

" அம்மாா... இங்க பாரும்மா.. ஸ்ரீதர் படிக்க மாட்டேங்கறான்... வா... வந்து என்னன்னு கேளு..."

" விட்றி பாவம்.. குழந்த இப்பத்தான் ஸ்கூல் முடுஞ்சு வந்துருக்கான்.. அப்பறமா படிப்பான்.. சமத்து அவன்.." உள்ளிருந்து பங்கஜம் பையனுக்கு சப்போர்ட் செய்தாள்.. பவியை பார்த்து நாக்கை துறுத்தி பழிப்பம் காட்டினான் ஸ்ரீதர்..

" உன்ன... அம்மா.. எனக்கு மட்டும் உபதேசம் பண்றே.. உன் பையன் மட்டும் உசத்தியா.... ஹ்ம்ம்.. டேய் போய் புக் எடுத்துண்டு வா.. என்ன போர்ஷன்டா முடுச்சிருக்கா..." பவி அவனை மிரட்ட.. அலுத்துக் கொண்டு புத்தகப் பையை எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்தான்..

அன்றைய வீட்டுபாடத்தை பிரித்து பவி சொல்லி கொடுக்க எழுத ஆரம்பித்தான்..

சிறிது நேரம் போக உள்ளே நுழைந்தார் நடேசன்.. கொஞ்சம் சோர்ந்திருந்தார்..

எதுவும் பேசாமல் தன் அறைக்குள் சென்று உடை மாற்றியவர் அசதியாக வந்து சோபாவில் அமர்ந்தார்..

சுகுமாரி பாட்டியும் தன்அறையிலிருந்து மெள்ள வந்து ஹாலில் அமர்ந்து கொண்டாள் மாலைநேரத்தில் டீவியில் வரும் பக்தி பிரசங்கத்தைக் காண..

உள்ளிருந்து வந்த பங்கஜம் அவர் முகத்தில் ஓடிய வருத்தத்தை கண்டு கொண்டு மெள்ள கேட்டாள்..

" என்ன ஒருமாதிரியா இருக்கேள்.. என்னாச்சுண்ணா.. எப்போதும் ஆபிஸ் முடுஞ்சு கலகலன்னு வருவேள்.. இன்னிக்கு வேலை ஜாஸ்தியா.."

" ம்ஹ்ம்ம்... அதெல்லாம் இல்லே... " ஏதோ சொல்லத் தயங்கினார்..

எல்லோரும் அவரை பார்க்க.. பவி பாடத்தை நடத்துவதை விட்டு அவர்பக்கம் திரும்பி கவனித்தாள்.. இதுதான் சாக்கென்று மெள்ள எழுந்த ஸ்ரீதர் நைசாக வாசலின் வெளியே ஓடினான்..

" என்னாச்சுண்ணா.."

" இல்லே.. நம்ம கோவிந்தன்ட ஜாதகம் குடுத்திருந்தேன்லயோ.. "

" ஆமா... என்ன சொன்னாலாம்.. " பங்கஜம் ஆர்வமாக.. பவிக்கு படபடப்பு கூடியது.. இமைகள் படபடவென அடித்துக் கொண்டது.. பாட்டியும் அவர் சொல்லப் போவதை எதிர்பார்த்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

" அ.... அந்த வரன் தட்டிப்போச்சு.. ஜாதகம் பொருந்தலையாம்.. கோவிந்தன் தயங்கி தயங்கி சொன்னான் பாவம்.. அதான் கொஞ்சம் சங்கடமாயிடுத்து.." அவர் கூறக் கூற.. படபடப்பிலிருந்த பவியின் கண்கள் சந்தோஷத்தில் சிரித்தது...

சுகுமாரி பாட்டிக்கும் உள்ளுக்குள் கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது.. அதை மறைத்து.. " நடேசா.. நான் தான் ஏற்கனவே சொன்னேனே.. இதுக்கெல்லாம் சங்கடப் பட்டுக்காதே.. இது முதல் வரன் தானே.. இதெல்லாம் சகஜம்.. கல்யாணம்னா சும்மாவா , கடைக்கு போய் கறிகாய் வாங்கறா மாதிரி சமாச்சாரமா.. பொறுமையா இரு.. இன்னும் நாலஞ்சு இடத்துல பாப்போம்.. எல்லாம் கூடி வரும்... வேள வந்தா தானா நடக்கும்.. ஒன்னு இல்லைனா ஒடனே சோர்ந்து போயிடப்படாது.." அவருக்கு ஆறுதல் சொன்னாள்..

பங்கஜம் பவியைப் பார்த்து சந்தோஷமா என்பது போல் தலையாட்டி மெள்ள சிரித்தாள்..

பவியின் மனது லேசானது.. தற்காலிகமாக இதிலிருந்து விடுதலை கிடைத்ததே என..!

மறுநாள் மிக உற்சாகத்துடன் எழுந்து எப்பொழுதும் இருக்கும் துள்ளலுடன் அம்மாவிற்கு அடுப்பு வேலைகளுக்கு உதவி செய்துவிட்டு பாட்டியிடம் விடை பெற்று காலேஜிற்கு கிளம்பினாள்..


ஒருத்தரை ஒருத்தர் ஓட்டிக்கொண்டு அந்த பொழுதை ஓட்டிவிட , வீட்டிற்கு வந்தாள் பவி..

இதமான மாலை சூழலை ரசிக்க மனம் ஆசை கொண்டது.. அம்மாவிடம் கூறிவிட்ட மொட்டை மாடிக்கு சென்றாள் பவி..

இருளாத மாலைப் பொழுது ரம்யமான காட்சிகளை பொழிந்து கொண்டிருந்தது.. அருகில் இருந்த மாமரத்தில் வீசிய காற்று முகத்தில் மோத முழுவதுமாய் இழுத்து சுவாசித்தாள்.. சுகமாக இருந்தது.. மஞ்சள் வானம் செம்மையை தீட்டிக் கொண்டு வெளிர் நீலமாய் நீண்டிருந்தது.. வெண்மேகங்கள் ஆங்காங்கே தோனிபோல் மிதந்து சென்றன..

இயற்கை தீட்டிய ஓவியத்தை அதன் வர்ணஜாலத்தை ரசித்தபடி லயித்திருந்தாள் பவி.. மனதிற்கு இதமான காட்சி, குளிரான தென்றல் ஏதோ ஒரு சிலிர்ப்பை பரவச் செய்திருந்தது..

ரசித்துக் கொண்டிருந்தவள் கவனத்தை கலைத்தது மொபைல்... ரிங்கியது..
எடுத்துப் பார்த்தாள்.. புது நம்பராய் இருந்தது.. மார்க்கெட்டிங் காலோ என நினைத்து சிறு எரிச்சலுடன் அட்டண்ட் செய்தாள்..

" ஹலோ...."

................. எதிர் முனை அமைதியாக இருந்தது..

" ஹலோ... யாரு.... "

" ஹ.. ஹலோ.... " தந்தி அடித்தது போல் வார்த்தை விட்டு விட்டு வந்தது..

" யாருங்க.... "

" அ.... அது... நீங்க.... வந்து.... " தடுமாறியது குரல்..

" ஹலோ யாருங்க வேணும்.. "

" இது.. ராஜ் இருக்காறா... நீங்க ராஜ் தான.... " ஓர் ஆண் குரல்..

" என்ன.. என்ன பாத்தா ஆம்பள மாதிரி இருக்கா.. நான்சென்ஸ்.. ராங் கால்.. போன வைங்க..." அணைக்கப் போனவளை அந்த குரல் பதட்டத்துடன் தவிர்த்தது..

" நீ.... நீங்க பவித்ரா தான... "

ஆச்சர்ய குழப்பமாய் இருந்தது பவித்ராவிற்கு.. " ஆமா..... நீங்க... "

" நா... நான்.... ரிஷி..... "

ஆச்சர்யத்தில் கண் விரித்தாள்..

" ரிஷி.... ரிஷியா... சுந்தரவல்லி மாமி பையனா.... " ஒருமுறை ஊர்ஜிதப் படுத்திக் கொண்டாள்.. .

" எஸ்... எஸ்.... நான் தான்.... "

அவன் தான்.. அவன் குரலை நியாபகப் படுத்தி சரி பார்த்துக் கொண்டாள்..

" ஓ.... "

" ஆமாம்... வேற ஒரு நம்பருக்கு ட்ரை பண்ண போயி... தவறுதலா.... உங்களுக்கு... " மென்மையாக சிரித்தான்..

" ஓஹ்.... அப்படியா.. சரி.. சரி... "

" ஆமா........ "

அடுத்து என்ன பேசுவதென இருவருக்கும் தெரியவில்லை..

" அப்பறம்.... ம்ம்.. எப்டி இருக்கீங்க.. " ரிஷி கேட்டான்..

" நல்லாருக்கேன்... நீங்க..... "

" நல்லாருக்கேன்... சாரிங்க தெரியாம.. உங்களுக்கு பண்ணிட்டேன்.. உங்க நம்பர்னு தெரியாது.. "

" பரவால்லங்க.. தப்பு இல்லை... "

" அன்னிக்கு காஃபி ஷாப் வந்தப்போ சரியா பேச முடியல.. கொலிக் வேற இருந்தாரு... அதான்..."

" ஆமா.... அதான் நானும்.... எதுவும் பேசல... "

" ஓ...... அதான்.. சாரி சொல்லலாம்னு போன் பண்ணேன்... "

" பரவால்ல... பரவால்ல... இதுல என்ன வந்திருக்கு.. "

" ம்ம்ம்... தாங்க்ஸ்... அப்பறம்... "

" ம்ம்ம்.. "

" அப்பறம்.... இதுதான் என் நம்பர்.." கொஞ்சமாய் தடுமாறினான்..

" ம்ம்... சரிங்க... " மென்மையாக பதிலளித்தாள்..

" சரிங்க.... தென்.... "

" ஹ்ம்ம்ம்...... "

அதற்கு மேல் என்ன பேசுவது என இருவருக்கும் தெரியவில்லை... அமைதியை பரிமாறிக் கொண்டனர்..

கீழிருந்து அம்மா கூப்பிடும் குரல் கேட்க... " சரிங்க.... அப்பறம் பேசறேன்..." பவி சொல்ல..

" ஓகேங்க.... " இருவரும் போனை வைத்தனர்..

" பவி... யாரோட பேசிண்டு இருக்கே... " மேலே வந்த அம்மா கேட்க..

" பி.. பிரண்ட் மா.." எப்படி சொல்வது எனக் கொஞ்சம் தடுமாறினாள்..

" யாரு... அந்த அகலிகா வா.. சரி வா.. கீழ அப்பா வந்துட்டார்.." கீழே இறங்கினர்..

அவனது நம்பரை சேமிக்கலாம் என நினைக்கும் போது சடாரென ஒன்று நினைவுக்கு வந்தது...

"ஆமா.. அவன்கிட்டதான் என் நம்பர் இல்லயே.... எப்டி கால் பண்ணான்.. அதுவும் மாத்தி கால் பண்ணேன்னு சொன்னான்... " பவி யோசித்தபடி கீழே இறங்கினாள்..

இங்கே...

ரிஷி போனை அணைத்துவிட்டு மெள்ள சிரித்தான்... அவளுடன் பேசிய திருப்தி முகத்தில் படர்ந்திருந்தது..

" ஹூம்... அம்மா சொன்ன மாதிரி நல்ல பொண்ணுதான்..

வெட்டி ஆர்பாட்டம் அலட்டல்னு எதுவும் இல்லாம.. ஹோம்லியாத்தான் இருக்கா.. இப்போ கூட நான்தான் பேசறேன்னு தெரிஞ்சும் உடனே சகஜமால்லாம் பேசலயே.. தயங்கிதான பேசினா..."

"ஹ்ம் , காலேஜ் டேஸ்லயும் சரி , வேல பாக்கற எடத்துலயும் சரி மார்டன் அன்ட் சோசியலான பொண்ணுங்கதான் பாத்திருக்கேன்.. அதுக்கு ஏத்தா மாதிரி அதுங்க இருக்கும்.. அவங்க ஒரு விதம்னா இவ ஒரு விதம்.. ஐ லைக் இட்.. " மெள்ள சிரித்தபடி சிந்தனையில் மூழ்கினான்..

அவளது சிந்தனையில்...!!

For Comments plz click below link

Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
 
மார்கழித் திங்கள்..!

அத்யாயம் - 13

அவனிடம் பேசிவிட்டு கீழே இறங்கி வந்த பவிக்கு ஒன்னும் ஓடவில்லை.. எதற்காக போன் செய்தான்.. என்ன காரணம் எனக் குழப்பமாக இருந்தது..

" அவன் என்கூட பேசத்தான் போன் பண்ணிருக்கான்.. அத சொல்லக் கூடாதுன்னு சமாளிக்கறான்.. இல்லேன்னா என்னோட நம்பர் அவனுக்கு எப்டி கிடைக்கும்.. சுந்தரவல்லி மாமிட்டேந்து சுட்ருக்கான்.. நல்ல ஆளுதான்.." தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள் பவி..

" சே.. அன்னிக்கு பேசினாமாதிரி கொஞ்சம் தைரியமா பேசிருக்கலாம்.. ஏதோ உளறி கொட்டி போன வெச்சுட்டேன்.. அவனும் பிரண்ட் மாதிரி தானே.. சகஜமா பேசிருக்கலாமோ... ஆமா... நான் பாட்டுக்கு எதையோ யோசிச்சுகிட்டு இருக்கேனே.. பழக்கமில்லாத ஒரு ஆம்பளகிட்ட சிரிச்சு பேச முடியுமா... அவன் தான் போன் பண்ணானா நானும் அப்டி பேச முடியுமா.. இந்த மாதிரி தெரியாத ஆம்பளகிட்டலாம் பேசி எனக்கு பழக்கம் இல்லையே.. " யோசனையில் ஆழ்ந்தாள்..

பாடங்கள் அதிகமாக இருக்க படிக்கலாம் என அமர்ந்தவளுக்கு கண்கள் புத்தகத்தை மேய்ந்ததே ஒழியா மூளைக்குள் ஏனோ அவனைப் பற்றிய சிந்தனை மட்டுமே ஓடியது.. " சே.. அவன் இவ்வளவு தூரம் நம்மள மதிச்சு பேசியும் நான் சரியா ரெஸ்பாண்ட் பண்ணமா இருந்துட்டேனே.. ம்ஹ்ம்... கொஞ்சம் சகஜமா பேசிருக்கலாம்.. அவன் என்ன நெனச்சிருப்பானோ.. இன்னும் திமிரா இருக்கேன்னு நெனச்சிருப்பானா.. அடச்சே... ஹ்ம்ம்.. போன் பண்ணி திரும்ப பேசிடுவோமா... ம்ம்ம்.." தயக்கத்துடன் போனை எடுத்தாள்..

உள்ளிருந்து அம்மாவின் குரல் அழைத்தது.. " பவி... எவ்ளோ நேரம் படிப்பே.. சாப்ட வா.. மணி ஒன்பதாயிடுத்து.. எல்லாரும் சாப்ட்டாச்சு.. வா வா.. பாத்தரம்லாம் ஒழுச்சு போடனும்... "

" ப்ச்.... " இந்த இடையூறுகளுக்கு நடுவில் அவனிடம் எப்படி சகஜமாக பேசுவது அதுவும் வீட்டில் எல்லோரும் இருக்கும்பொழுது எனத் தயக்கத்துடன் போனை வைத்துவிட்டு எழுந்தாள்..!

காலேஜ் வீடு என எந்த சூழ்நிலையும் அவனிடம் பேச தோதாக இல்லாமல் போக அந்த வாரம் அப்படியே ஓடியது..

மறுவாரம் சனிக்கிழமை..

"அம்மா..... லிஸ்ட்லாம் எழுதிட்டியா... அப்பறம் அதுவாங்கலை இது வாங்கலன்னு வந்தப்பறம் திரும்ப அனுப்புவ... சனிக்கிழமை அரைநாள் காலேஜ்னா போதும் என்னையே கடைக்கு போகச் சொல்லற... ம்ஹ்ம்ம்.."

" கோச்சுக்காதடி பவி.. அம்மாவால அவ்ளோ தூரம்லாம் போய்ட்டு வர முடியலை.. அந்த சூப்பர் மார்க்கெட்லதான் எல்லாம் கிடைக்கறதே... லிஸ்ட்ல எதாவது விட்டு போச்சுன்னா நீயே பாத்து வாங்கிண்டு வந்துடு.. என்ன... வேனும்னா துணைக்கு ஸ்ரீதர கூட்டிண்டு போ..." பங்கஜம் லிஸ்ட்டை குடுத்தாள்..

" அய்யோ... அந்த கழுத்தறுப்பையா.... வேண்டவே வேண்டாம்.. கடைக்கு போனா அதவாங்கிக் குடு இதவாங்கிக்குடுன்னு என்ன சாவடுச்சுடுவான்.. நானே தனியா போய்க்கறேன்... வேணா சாமி.." கையெடுத்து கும்பிட்டாள்..

பே என ஓர் பெரும் சங்கு ஊதியது... பதறி திரும்பியவள் முன் வாயை அகலத் திறந்து அழுது கொண்டிருந்தான் ஸ்ரீதர்...

" டேய்.. ஏண்டா இப்டி பெருமாள் கோவில் சங்கு மாதிரி கத்தற.. வாய மூடு... "

" நானும் வருவேன்... ஆஆஅஅஅஅ.. " கீழே படுத்துக் கொண்டு கையைக் காலை உதைத்தான்..

" அடச் சீ... வயசு பன்னென்டு ஆச்சு.. இன்னும் சின்ன குழந்த மாதிரி அடம்பிடிக்கறத பாரு.. இங்க பாரு நீ சைலன்ட்டா வீட்ல இருந்தா அக்கா உனக்கு லாலிபாப் வாங்கிண்டு வருவேன்..."

படக்கென எழுந்து அமர்ந்து வராத கண்ணீரை துடைத்துக் கொண்டான்..

" அதெல்லாம் நேக்கு வேண்டாம்... நானே வந்து என்னவேனுமோ வாங்கிக்கறேன்.. "

" நீ... ஒன்னும் வரவேண்டாம்... அங்கவந்து ஏ உயிர எடுப்ப... "

" பே......... " சங்கூதியது..

" ஏன்டி பவி... குழந்த வந்தா உனக்கென்ன.. அவன் பாட்டுக்கு வந்துட்டு அவனுக்கு என்ன பிஸ்கட் பிடிக்கறதோ அத வாங்கிக்க போறான்.. கூட்டிண்டு போயேன்.. ராஜா... அழாதடி செல்லம்.." பங்கஜம் அவனை அணைத்துக் கொண்டாள்..

" சே... வந்து தொல..." ஒரு கையில் அவனை பிடித்துக் கொண்டு இன்னொரு கையில் பையுடன் கிளம்பினாள் பவித்ரா.. முகமெல்லாம் புன்னகையுடன் கூட சென்றான் ஸ்ரீதர்..

சூப்பர் மார்க்கெட்டில் சாமான்களை வாங்குவதை விட ஸ்ரீதரை கவனிப்பதே பெரும் வேலையாக இருந்தது.. சாக்லேட்டையும் பிஸ்கட் பாக்கெட்டுகளையும் கூடையில் அள்ளி நிறைத்துக் கொண்டிருந்தான்...

" அடேய்... நீயே கூடைய ரொப்பிட்டேனா நா என்னத்த வாங்கறது.. ஒழுங்கா மரியாதையா ரெண்டு பிஸ்கட் பாக்கெட்ட வெச்சுண்ட்டு மிச்சத்த அங்க வை.. " மிரட்டினாள்...

அவன் அவள் சொல்வதை காதிலே கேட்காமல் அங்கும் இங்கும் ஓடி ஓடி எடுத்துக் கொண்டிருந்தான்...

பவி டென்ஷனாகி அவனை பிடித்து இழுக்க...

" ஹலோ.. இங்க என்ன பண்றீங்க..." பின்னாலிருந்து ஒரு குரல் அவளை திசை திருப்பியது..

ஸ்ரீதரை பிடித்தபடி திரும்பியவள் கொஞ்சம் அதிர்ந்தாள்..

முகம் நிறைந்த சிரிப்புடன் அங்கு நின்று கொண்டிருந்தான் ரிஷி..

ஸ்ரீதர் கண்ணாடியை ஏத்திவிட்டுக் கொண்டு அவனை விநோதமாக
பார்க்க பவித்ரா தடுமாறிப் போனாள்..

" என்னங்க அப்டி பாக்கறீங்க.. ம்ம்ம்.. "

" ஒ... ஒன்னுமில்ல... "

" காலேஜ் பக்கம்லாம் போறதே கெடையாதா.... ம்ம்ம்.. காஃபி ஷாப், துணிக்கடை , சூப்பர் மார்க்கெட்னு பாக்கறப்பலாம் ரவுண்ட் அடுச்சுட்டே இருக்கீங்க..."

ஸ்ரீதர் பவியை சந்தேகத்துடன் ஏற இறங்க பார்த்து ரிஷியிடம் திரும்பினான்..

" அ... அது... அது... போவேனே... காலேஜ்..... ஆமா..."

ஸ்ரீதர் முன் அவனிடம் என்ன பேசுவது எனத் தெரியாமல் தவித்தாள்..

" ஹாஹா.. பாக்கறப்பலாம் வெளிலே இருக்கீங்களே அதான் கேட்டேன்.. அப்பறம்... அன்னிக்கு காபி ஷாப்ல பாத்தும் பேச முடியல... அதான்.... உங்களுக்கு.... "

" ஆ... ஆமா.. தப்பில்ல.... இப்போ.. இப்போ எதுக்கு அது... "

அவன் போன் பேசியதை சொல்லி விடுவானோ என்ற பயத்துடன் இடை மறித்தாள் பவித்ரா..

" இல்ல பவித்ரா.. எனக்கு கொஞ்சம் கஷ்டமா போச்சு.. உங்கள இன்சல்ட் பண்ண மாதிரி ஆயிடக் கூடாதுல.. அதான்... அன்னிக்கு... "

" ஹையோ... அதெல்லாம் இப்ப எதுக்கு... நா எதுவும் நெனைக்கல.... பரவால்ல..... "

ஸ்ரீதர் இருவரையும் மாறி மாறி பார்த்து விழித்துக் கொண்டிருந்தான்..

பவிக்கு ரிஷியை எப்படி அனுப்புவது எனத் தெரியாமல் தவித்துப் போனாள்... ஸ்ரீதர் வீட்டில் சொல்லிவிட்டால்... அடி வயிற்றில் ஜிவ்வென ஏறியது...

" ஓகே.. பவித்ரா.. நீ தப்பா நெனைக்கலைனா சரி.. ஆமா இது யாரு... " ஸ்ரீதரை நோக்கிக் கேட்டான்..

" அய்யயோ.. இந்த குட்டிசாத்தான் வாய வெச்சுட்டு சும்மா இருக்க மாட்டானே... கடவுளே.... " மனம் தவித்தது.

" ஹாய்... ஐ யம் ஸ்ரீதர்... பவியோட தம்பி.. ஆமா நீங்க யாரு.. உங்கள இதுக்கு முன்னாடி பாத்ததில்லையே.. " கண்ணாடியை ஏத்திக் கொண்டு ரிஷியை குறுகுறுவென பார்த்தான்..

" ஹாஹா.... ஐ யம் ரிஷி.. நைஸ் மீட்டிங் யூ.. யூ லுக் க்யூட்... உன் கண்ணாடி அழகா இருக்கு... " ரிஷி அவனுடன் கைகுலுக்கி ஆர்வமாக பேச பவிக்கு உதறலெடுத்தது..

" ஹா.. ஹா.. யா... ஹி இஸ் சோ க்யூட்... ஓகே.. நாங்க கெளம்பறோம்.. டைம் ஆச்சு.. டேய்.. ஸ்ரீதரா இன்னும் ரெண்டு சாக்லேட் வாங்கிக்கறியா.. அதோ அங்க இருக்கு பாரு.. போய் எடுத்துண்டு வா கெளம்பலாம்... " அவசரப்படுத்தினாள்.. ஸ்ரீதர் அங்கேயே நின்று கொண்டு ரிஷியை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தான்..

" உங்க வீடு எங்க இருக்கு ஸ்ரீதர்... ம்ம்ம்.. பவி உங்க வீட்டுக்கெல்லாம் கூப்பிட மாட்டீங்களா.. அம்மா உங்கள எங்கவீட்டுக்கு இன்வைட் பண்ணாங்கள்ள.. நாளைக்கு நான் உங்க வீட்டுக்கு வர்ரேன்... ஓகேவா ஸ்ரீதர்.."

ஒருநிமிடம் அதிர்ந்து போனாள் பவி... அவள் திகைத்து நிற்பதை பார்த்து கடகடவென சிரித்தான் ரிஷி..

" ஹாஹா... பயந்துட்டீங்களா.. டோன்ட் ஒரி.. சும்மா சொன்னேன்... அம்மா கூட உங்கள்ட்ட எதோ பேசனும் சொல்லிட்டு இருந்தாங்க.. அவங்கள்ட பேசுங்க.."

" சரி... நாங்க கெளம்பறோம்..." பதைபதைத்தாள்..

" ஹே.. இப்போ தான் வந்த மாதிரி இருந்தது... எல்லாம் வாங்கிட்டீங்களா.. அப்பறம் " ரிஷி விடுவதாய் இல்லை..

" ஆ .. ஆமா.. வாங்கியாச்சு.. நாம.. அப்பறம் பேசலாமே... ப்ளீஸ்.. "

" ஹ்ம்ம்.... ஓகே.... கண்டிப்பா பேசலாம்.. பை... " அவன் ஒருவழியாய் விடை கொடுக்க சாமான்களை அள்ளிக் கொண்டு ஸ்ரீதரை அழைத்துக் கொண்டு விடுவிடுவென வெளியேறினாள் பவி...

சிரிப்புடன் அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி..
அவளுடன் பேச அவனுக்கு பிடித்திருந்தது.. அவளை பார்த்து பேசிய பின்தான் மனம் லேசானது போல் இருந்தது.. கடந்த இரண்டு நாட்களாக அவன் மனதை அலைக்கழித்த சம்பவம் கசப்பான காட்சியாய் கண்முன் நிழலாடியது..

" ரிஷி நாளைக்கு நீ ஃப்ரீயா... கொஞ்சம் வெளில போகனும்டா.. " சுந்தரவல்லி கேட்டாள்

" எதுக்கும்மா... நாளைக்கும் எதாவது ஸ்டால் போடப் போறேளா உங்க லேடிஸ் கிளப்லேந்து.. ஹாஹா.. வேற எங்க நீ போகப் போறே.. சுந்தரவல்லி கெட்டா லேடிஸ் க்ளப்.... ஹாஹாஹா.. " கடகடவென சிரித்தான்.

" ஹ்ம்.. எங்க லேடிஸ் க்ளப் பிரசிடென்ட் அகிலா வைத்யநாதன் வீட்டுக்கு தான் போனும்.. தமிழ்நாடு வளரும் கலைஞர்கள் குழு சார்பா ஒரு கல்சுரல் ப்ரோக்ராம் நடத்தப்போறோம்.. அதுல செக்ரட்டரி பொண்ணும் ஒரு ப்ரோக்ராம் பண்றா.. அது விஷயமா அவள்ட்ட பேசனும்.. அதான்.. என்ன கூட்டிண்டு போடா.. அவா ஆம் திருவான்மையூர் கிட்ட இருக்கு.. அவ்ளோ தூரம் என்னால தனியா போக முடியாதுடா.."

" என்னம்மா நீ... எதோ உனக்கு ஹெல்ப் பண்ணினா எல்லா லேடிஸ் க்ளப் ஆக்டிவிட்டீஸுக்கும் என்னையே கூப்படற.. அங்கெல்லாம் நான் வரல.. நாளைக்கு காலைல முக்கியமான மீட்டிங் வேற இருக்கு.."

" காலைல தானே... முடிச்சுட்டு வா.. ஈவினிங் நாலுமணிக்கு போனாப் போதும்.. ப்ளீஸ்டா.. அம்மாக்கு ஹெல்ப் பண்ணுடா.."

" போம்மா.. எப்ப முடியும்லாம் தெரியது.. நீ ஆட்டோ புடுச்சு போய்ட்டு வா... "

" டேய் ரிஷி.. ப்ளீஸ்டா.. அம்மா தனியா போக முடியாதுடா... போய்ட்டு சுருக்க திரும்பிடலாம்.. என்ன.."

" ம்ஹ்ம்ம்.... பாக்கலாம்.. பட் நிச்சயமா சொல்ல முடியாது.. " சொல்லிக் கொண்டே தனது அறைக்கு சென்றுவிட்டான்..

சுந்தரவல்லி அவனை எப்படியும் அழைத்து செல்லும் முனைப்புடன் இருந்தாள்.

மறுநாள்..

மதியத்திலிருந்து அவனுக்கு போன் செய்ய ஆரம்பித்தாள்.. அரைமணிக்கொருமுறை அவனை அழைத்து ஊர்ஜிதப்படுத்திக் கொண்டாள்..

அவளது அரிப்பை தாங்காது நாலுமணிக்கு அவசர அவசரமாக வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தான் ரிஷி... கொஞ்சம் எரிச்சலாய் இருந்தது..

" ஹய்.. ரிஷி... வந்துட்டியா.. காபி குடுச்சுட்டு.. குளுச்சுட்டு ப்ரெஷ்ஷா வா.. கிளம்பலாம்.. ம்ம்.. சீக்கரம்.. நாழி ஆயிடுத்து..." மணியை பார்த்துக் கொண்டே அவனை விரட்டினாள்.

" ஹ்ம்... ஏம்மா படுத்தறே.. அப்டி என்ன ரொம்ப முக்கியமா போகனும்.. அப்பா சும்மாதான இருப்பார்.. அவரக் கூட்டிண்டு போக வேண்டியதுதானே.. நானே வரனுமா.. "

" அச்சச்சோ... கதை கெட்டது போ.. அவர கூட்டிண்டு போயி.. அங்கவந்தும் என்ன வசவு பாடிண்டு இருப்பார்.. நீ வாடி தங்கம்.. போய் ரெடியாட்டு வா... கண்ணா.. ரிஷி.. நல்லா புது ட்ரெஸ்ஸா போட்டுண்டு ஜம்முனு வா.. அந்த.. புதுசா ஒரு சென்ட் அப்ராட்லேந்து உன் மாமா அனுப்சானே.. அத போட்டுண்டு வா.. கமகமன்னு இருக்கும்.. "

" ஹ்ம்.. சே... இரு வரேன்.. " சலிப்புடன் அறைக்குள் சென்று அரைமணி நேரத்தில் ரெடியாகி வந்தான்..

" ஓகே வா.... "

கருநீல நிற ஜீன்ஸ் பேட்டும் , மயில் கழுத்து நிற முழுநீல சட்டையும் அணிந்து கம்பீரமாக வந்து நின்றான்.. அவனது சிவந்த முகத்திற்கும் ஆறடிக்கு குறையாத அவன் கட்டுடலுக்கும் அந்த ஆடை எடுப்பாக இருந்தது..

" சமத்து.. ராஜாவாட்டம் இருக்கே.. என் கண்ணே பட்டுடும்.. போற இடம் பெரிய இ்டம்... நம்மளவிட அந்தஸ்து கூட இருக்கறவா.. உன்ன பாத்தா அசந்து போயிடுவா.." நெட்டி முறித்து சிரித்தாள் சுந்தரவல்லி.. தானும் ஓர் உயர் ரக ஆடை அணிந்து கொண்டு அவனுடன் கிளம்பினாள்..

அவள் கூறிய பாதையில் செல்ல அரைமணி நேரத்தில் அந்த இடத்தை அடைந்தனர்..

மேல்தட்டு மக்கள் வசிக்கும் அந்த ஏரியாவில் தனித்து மிக பிரம்மாண்டமாக காட்சி அளித்தது அந்த வீடு.. வீட்டின் முன்னே சமன்படுத்தப்பட்ட புல்வெளி அரை ஏக்கரை ஆக்ரமித்துக் கொள்ள அதன் நடுவே அமைந்த பாதையில் நடந்தாள் சுந்தரவல்லி.. கொஞ்சம் பிரமிப்புடன் அவளுடன் சென்றான் ரிஷி..

வீட்டின் அருகே உயர் ரக கார் ஒன்று நீளமாக நிற்க அதனைத் தாண்டி வீட்டின் முகப்பை அடைந்தனர்.. பெல்ஜியம் கண்ணாடியில் இழைக்கப்பட்டிருந்த முகப்பின் அருகில் ஒரு நடுத்தர வயது பெண்மணி ஒய்யாரமாக நின்றிருந்தார்..

" வெல்கம் மிஸஸ் சுந்தரவல்லி.. வி ஆர் வெயிட்டிங் ஃபார் யூ.. " பூரிப்புடன் சுந்தரவல்லியை அவள் அழைத்துப் போக பின்னால் கண்களை விரித்தபடி நுழைந்தான் ரிஷி..

மாளிகை போன்ற அமைப்புடன் இருந்த அதன் கூடத்தில் ஆங்காங்கே உயர்ரக அலங்காரப் பொருட்கள் அலங்கரித்துக் கொண்டிருந்தது.. சுற்றிப் பார்வையிட்டபடியே உள்ளே சென்ற ரிஷியை சோபாவில் அமரச் செய்து இருவரும் அமர்ந்தனர்..

" ஹாய்.. ஐ யம் அகிலா.. மிஸஸ் அகிலா வைத்யநாதன்.. ஐ யம் ரியலி ஹேப்பி டூ சீ யூ.. சுந்தரியும் நானும் குட் பிரண்ட்ஸ்.. ரொம்ப வருஷமா பழக்கம்.. உன்ன சாரி உங்கள இப்பதான் பாக்கறேன்.. யூ லுக் ஸ்மார்ட்.. நைஸ் மீட்டிங் டு யூ.. " அகிலா புன்னகைத்தாள். மரியாதைப் புன்னகையுடன் வணக்கம் செய்தான் ரிஷி..

அகிலாவும் சுந்தரவல்லியும் கல்சுரல் நிகழ்வுகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்க அந்த சூழ்நிலையில் ஒட்டாது அமர்ந்து சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தான் ரிஷி..

தனிவான குரலில் ரிஷியைப் பற்றி சுந்தரவல்லி கூற அகிலா அவனை மேலும் கீழும் பார்த்தபடி தலை ஆட்டிக் கொண்டிருந்தாள்.. அவளது பார்வை அவனை ஆராய்ந்து கொண்டிருந்தது..

சிறிது நேரத்தில் சுந்தர வல்லி ஏதோ கேட்க. " யா.. ஐ ல் கால் ஹர்.. " கூறிய படி உள்ளறையை நோக்கி அழைத்தாள் அகிலா..

" ஜனு.. ஜனு... ப்ளீஸ் கம் ஹியர்.. வி ஆர் வெயிட்டிங் ஃபார் யூ... கமான் பேபி.. " அவள் அழைக்க..

" யா... யா.. ஐ யம் கம்மிங்.... " சத்தமிட்டுக் கொண்டே உள்ளே இருந்து வந்தாள் அவள்..

" கம் ஜனு.. திஸ் இஸ் ரிஷி.. சுந்தரி மாமி' ஸ் சன்.. ரிஷி.. திஸ் இஸ் ஜனனி.. மை ஒன்லி ஒன் ப்யூட்டிஃபுல் ஏஞ்சல்.. மை டாட்டர்.." தன் மகளை ரிஷியிடம் அறிமுகப் படுத்தினாள் அகிலா..

" ஹாய்........ " கை அசைத்தவாரே அவனருகில் வந்தாள் அவள்..

அரிதாரம் மெலிதாகப் பூசப்பட்ட முகத்தில் டன் கணக்கில் புன்னகை ததும்ப உதட்டு சாயத்தின் நடுவே பற்கள் பளீரிட்டது..!

இருக்கமான மேலாடையும் நீண்டு தளர்ந்து பாவாடையா இல்லை டிராயரா என அறிய முடியாத ஓர் உடையில் பார்லரில் மாதம் இருமுறையென செதுக்கிவிடப்பட்ட கூந்தல் அலைய அவன் அருகில் வந்து அமர்ந்தாள் ஜனனி...

" ஹாய் ரிஷி... ஹவ் ஆர் யூ.. யூ லுக் சோ கார்ஜியஸ் இன் திஸ் ஃபார்மல்.. ஐ லைக் இட்.. " அவள் நெருங்கிய உறவு போல் அவனுடன் உரையாட கொஞ்சம் தடுமாறினான் ரிஷி..

" ஓஹ்..... தாங்க்ஸ்.... " நாகரீகமாக நன்றி பகர்ந்தான்..

" ஹே ரிஷி... நீ வருவன்னு அம்மா சொல்லிருந்தா... ஐ ம் சோ எக்ஸைட்டட் டு சீ யூ... இவ்ளோ நேரம் ஆச்சா.. ஆபிஸ் முடுஞ்சதா.. அப்பறம்.. நீங்க மெடிக்கல் லைன் தானே.. ஹவ் இஸ் தட்..."

அவளை பெருமையுடன் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் அகிலா.. " என் பொண்ணு ரொம்ப ஜோவியல்.. ஜனு லர்ன்ட் பர்தநாட்யம்.. அன்ட் யா.. ஷீ இஸ் எக்ஸலன்ட் டான்சர்.. சோ.. ஜனனி லைக்ஸ் டு டான்ஸ் இன் அவர் கல்சுரல் ப்ரோக்ராம்.. "

" அம்மா.. நீங்க விட்டா பேசின்டே இருப்பேள்.. ரிஷி கம்.. வி கோ அவுட் சைட்.. லெட் தெம் டாக்... " அவனது கை பிடித்து அவள் இழுத்துச் செல்ல வேண்டா வெறுப்பாய் அவளுடன் நடந்தான் ரிஷி..

அவள் பரிச்சயம் மிகுந்தவளாக அவனருகில் அமர்ந்து எதேதோ கதைகள் பேச , அவனுக்கு அவள் அத்தனை அன்யோன்யமாகப் பேசுவது ஏனோ பிடிக்கவில்லை.. கொஞ்சம் அசெளகர்யத்துடன் தலையாட்டிக் கொண்டிருந்தான்..

நேரம் நகர , பொறுமை இழந்து எழுந்தான்.. " எக்ஸ்க்யூஸ் மி ஜனனி.. ஐ ஹேவ் சம் அதர் இம்பார்ட்டன்ட் ஒர்க்.. இஃப் யூ டோன்ட் மைன்ட்... லெட் அஸ் டாக் லேட்டர்.. ப்ளீஸ்..."

" ஹோ.... ஷூயர்... " அவள் கொஞ்சம் முகம் சோர்ந்து அவனைப் பார்த்தாள்..

அவளை கண்டுகொள்ளாது வேகமாக ஹாலுக்குள் நுழைந்தான்.. பின்னால் அவளும் தொடர்ந்தாள்.

" ஹே ரிஷி.. என்ன.. ரெண்டு பேரும் ரொம்ப நேரம் ஜாலியா பேசிண்டு இருந்தீங்க போல.. ஜனுவோட யார் பேச ஆரம்பிச்சாலும் இப்டித்தான்.. ஹாஹா.. அவள அப்டி புடுச்சுப் போயிடும்... ஹாஹாஹா.." அகில சிரிக்க ரிஷிக்கு என்ன சொல்வதெனத் தெரியாமல் வந்தது..

" சாரி ஆண்ட்டி... கொஞ்சம் வேலை இருக்கு.. நான் கெளம்பனும்.. அம்மா... முடுஞ்சதா... போலாமா.. " சுந்தரவல்லியிடம் கேட்டபடியே கைக்கடிகாரத்தை பார்த்தான்..

" ஹா... இவன் இப்டித்தான்... கால்ல சக்ரத்த கட்டிண்டு இருப்பான்.. ஓகே அகிலா.. நாங்க கிளம்பறோம்.. வீ ஆர் வெரி ஹேப்பி.. "

" எஸ் சுந்தரி.. எனக்கும் ஜனனிக்கும் ரொம்ப சந்த்தோஷம்.. " அவள் விடை கொடுக்க..

அம்மாவை கூட்டிக் கொண்டு நடந்தான் ரிஷி..

பின்னால் திரும்பிய சுந்தரவல்லி அகிலாவை பார்த்து அர்த்தமாய் தலை அசைத்துவிட்டு அவனுடன் சென்றாள்..

வண்டியில் இருவரும் செல்ல... வழியில் மெதுவாக ஆரம்பித்தாள் சுந்தரவல்லி..

" ரிஷி... அந்த பொண்ணு ஜனனி ரொம்ப நல்லாருக்கால.. ரொம்ப இன்டலிஜென்ட்.. "

...............

" உனக்கு அவள புடுச்சிருக்கா... "

.................

" அகிலாக்கும் ஜனனிக்கும் உன்ன ரொம்ப பிடிச்சு போச்சு.. "

...................

"அந்த பொண்ணு நம்பாத்துக்கு மருமகளா வந்தா எவ்வளவு நல்லாருக்கும்.. " அகில கூற...

வேகமாக ஓடிய வண்டி சடாரென நின்று குலுங்கியது....

" வாட்..... என்ன சொல்ற.. " ரிஷி குழப்பத்துடன் சுந்தரவல்லியை பார்த்தான்..

" ஆமாடா... உனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பாத்துண்டு இருக்கற லிஸ்ட்ல ஜனனியும் இருக்கா... நீ ரொம்ப அதிர்ஷ்ட்ட காரன்டா.. அவளுக்கு உன்ன ரொம்ப புடுச்சுபோச்சு.... எவ்ளோ பெரிய இடம்.. "

சுந்தரவல்லிக் கூறக் கூற ரிஷியின் முகம் கோபத்தில் சிவக்க ஆரம்பித்தது..!

" நீ இந்த மாதிரி ஐடியா பண்ணிதான் என்ன இங்க கூட்டிண்டு வந்தியா.... சே.. நீ இப்டி நடத்துப்பன்னு நான் எதிர்பாக்கலமா.. என்னபத்தி என்ன நெனச்சுண்டு இருக்க.. அவளுக்கு புடுச்சா ஒடனே தலையாட்டிண்டு பின்னாடியே போவேன்னு நெனச்சியா.. ரிஷி இஸ் நாட் லைக் தட்.. எனக்கு புடிக்கனும்.. "

" அதுக்கு இல்லடா.. பெரிய இடம்.. நல்ல படிச்ச பொண்ணு.. உனக்கேத்தா மாதிரி அழகா இருக்கா... அதா....." சுந்தரவல்லி இழுக்க...

ஒருகணம் பவித்ராவின் முகம் வந்து போனது அவனுக்கு..

"அவ எவ்ளோ பெரிய பணக்காரியா இருந்தா எனக்கென்ன.. எனக்கு பிடிக்கல.. இனிமே உன்கூடலாம் எங்கயும் வரமாட்டேன்.. இதுதான் லாஸ்ட்.. சே..."

" ஏய் ரிஷி... பொறுமையா இருடா.. கோபப் படாதடா.. உனக்கு ஏத்த இடம்னு நெனச்சுதான் பாத்தேன்.. சரி விடு.. நான் பாத்துக்கறேன்..." சுந்தரவல்லி அவனை அப்பொழுதைக்கு சமாதனப் படுத்தினாள்.. இருந்தாலும் ஜனனியுடன் அவனை சேர்த்து வைக்க உள்ளுக்குள் எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது..

மெள்ள அந்த நினைவிலிருந்து விடுபட்டவன் பவித்ரா சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தான்..

பவித்ராவுடன் ஜனனியை மனம் ஒப்பிட்டு பார்த்தது..

" ஜனனி மாதிரி சும்மா எல்லாத்துக்கும் கூடக்கூட பேசறது.. எல்லாம் தெரியும்னு ஆர்பாட்டம் பண்றது இதெல்லாம் நமக்கு சரிபட்டு வராது.. பவித்ரா... என்ன புரிஞ்சுன்டு கவனுச்சுக்க பவித்ரா மாதிரி அடக்கமான பொண்ணுதான் எனக்கு சரியாகும்.. ஹா... பவித்ரா மாதிரி என்ன.. பவித்ரா தான் வேணும்...." கண்கள் ஒளிர தனக்குள் சிரித்துக் கொண்டான் ரிஷி..!

For Comments plz click below link

Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
 
மார்கழித் திங்கள்..!

அத்யாயம் - 14

ரிஷியின் இந்த அதிரடியான எதிர்ப்பை சுந்தரவல்லி எதிர்பார்க்கவில்லை.. தன்னைவிட அந்தஸ்துள்ள அகிலாவிற்கு சம்பந்தி ஆகிவிட்டால் தன் நிலையும் உயரும் , ரிஷிக்கும் வசதியான பெண்ணாய் அமைந்தது போல் இருக்கும் என்று கணக்கிட்டு இருந்தாள்.. அந்த கனவு கணநேரத்தில் ரிஷி உடைத்தது அவளுக்கு வருத்தமே.. இருப்பினும் ரிஷியை எப்படியாவது ஜனனியுடன் சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணம் உள்ளுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது.. !

இங்கு..

" என்னடி பவி... சுருக்க வந்துட்டே.. எல்லாம் வாங்கிட்டியா.. ம்ம்ம்.." கேட்டபடியே பையை வாங்கி ஆராய்ந்தாள் பங்கஜம்.. " என்னடி இது பாதி சாமானக் காணலயே.. "

" அ... அது.. அது... ஒன்னுமில்லமா.. ரொம்ப.. ரொம்ப கூட்டமா இருந்தது... அதான்.. நாளைக்கு மீதிய வாங்கிண்டு வந்து தரேனே... "

அவளை குழப்பத்துடன் ஏறெடுத்தாள் பங்கஜம்..

ஸ்ரீதர் பவியை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.. " அம்மாட்ட சொல்லவா... சொல்லவா... " அவளை பார்த்து கண்களை ஆட்டி ஆட்டி கேட்டான்..

" கொரங்கு... வாய மூடிண்டு சும்மா இருடா... சொன்னே அடிவிழும்... " பற்களை கடித்துக் கொண்டு மெல்லிய குரலில் அவனை மிரட்டினாள் பவித்ரா..

" சாக்லேட் வாங்கித்தர மாட்டேன்னு சொன்னேல்யோ... இரு.. இரு... உன்ன.." எனக் கூறியவாரே..

" அம்மா... அக்கா பொய் சொல்றா.. அங்க.. ஒரு அங்கிள் வந்தாரா.. அவர பாத்து பயந்துண்டு பாதியோட ஓடி வந்துட்டா... ஹாஹாஹா... "

புருவம் சுருங்க அவளைப் பார்த்த பங்கஜம்.. " ஆரு... யாரு பவித்ரா..."

" அ... அது... ஒன்னுமில்லம்மா.. " தயங்கிய பவித்ரா தனை அறியாமல் " அந்த.. அந்த மாமி.... கோயில்ல பாத்தேன்னு சொன்னேனே... அவங்க... அவங்க பையன் அங்க இருந்தான்... அவன்... அவர் தான் பேசினார்.. நான்... நான் இவனக் கூட்டிண்டு வந்துட்டேன்... அதான்..." பாவமாக அம்மாவை பார்த்தாள் பவித்ரா..

அவள் முகத்தை பார்த்த பங்கஜம் கடகடவென சிரிக்க ஆரம்பித்தாள்.. " அசடு... இவ்ளோ பயந்தவளா இருக்கியே.. தெரிஞ்ச மாமியோட பையன் தானே.. சகஜமா பேசறத விட்டுட்டு யாராவது இப்டி பயந்துண்டு ஓடி வருவாளா.. நல்ல பொண்ணு போ... இன்னும் குழந்தையாவே இருக்கியே... இதுல உங்கப்பா கல்யாணம் பண்ணி வைக்க அவசரப்படறார்... ஹாஹாஹா... சரி.. சரி... இப்டி தெருஞ்சவா வந்தா மூஞ்சிய தூக்கிண்டு ஓடி வரப்டாது.. ரெண்டு வார்த்த சகஜமா பேசிட்டு வரனும்.. அவா என்ன உன்ன கடுச்சா முழுங்கிடப் போறா.. ஹாஹாஹா.. " சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்தாள் பங்கஜம்..

அப்பொழுதுதான் மூச்சே வந்தது பவித்ராவிற்கு.. " ஹ்ம்ம்..." பெருமூச்சுவிட்டவள் தன்னை பார்த்து பழிப்பம் காட்டிக் கொண்டிருந்த ஸ்ரீதரைக் கண்டு கோபம் பொங்க அடிக்க ஓடினாள்... " டேய்... டேய்.... குட்டி சாத்தான்.. ஒரு நிமிஷம் மூச்சே நின்னுடுத்து.. உன்ன.." அவள் துரத்த அவன் சிட்டாய் பறந்து போனான்..

மூச்சு வாங்க வீட்டிற்குள் ஓடியவள் அசந்து தன் அறைக்குள் சென்று அமர்ந்தாள்... படபடப்பு அடங்கி இருந்தது.. " சே... பேக்கு மாதிரி நான் ஓடி வந்துட்டேனே.. அம்மா சொன்னா மாதிரி அவன் என்ன என்னை கடுச்சா முழுங்கிடப் போறான்.. ஹாஹா... சகஜமா பேசிருக்கலாம்... ஆனா...... அவனப் பாத்தா ஏதோ ஒரு தயக்கம் வந்து பேச வர மாட்டேங்கறதே... ம்ம்ம்.." தனக்குள் ஏதேதோ சிந்தனை மூழ அதில் அடங்கிப் போனாள்..

மறுநாள்...

ஞாயிறுக்கிழமை கலகலப்பில் ரம்யாவுடன் போனில் வாயாடிவிட்டு ஸ்ரீதருடன் விளையாடிக் கொண்டிருந்தாள் பவித்ரா.. போன் ஒலித்தது.. யாராக இருக்கும் என்ற குழப்பத்துடன் போனை எடுத்துப் பார்த்தாள்..

சுந்தரவல்லி அழைத்துக் கொண்டிருந்தாள்.. என்ன என்ற யோசனையுடன் அட்டண்ட் செய்தாள்..

" ஹா.....ய் பவி.. மாமி பேசறேன்... எப்டி இருக்கே... "

" ஹா.. ஹாய் மாமி.. "

" என்னடிம்மா... மறந்து போயிட்டியா.. தயங்கி தயங்கி பேசறே... மாமி தான்டி..."

" ஆ... அதெல்லாம் ஒன்னமில்ல மாமி... நல்லாருக்கேன்... நீங்க எப்டி இருக்கேள்... "

" நான் ஜம்முனு இருக்கேன்.. இன்னிக்கு ஸ்டால் போட்டமா... அதான் உன் ஞாபகம் வந்தது.. "

" ஐயயோ.. போனதரம் வாங்கின ஊறுகாயே இன்னும் நெறைய இருக்கு மாமி..." பதறினாள் பவித்ரா...

" ஹாஹாஹா.. குறும்பு... ஊறுகாய்காக கூப்படலை... இன்னொரு விஷயம் இருக்கு... அதான் உனக்கு கால் பண்ணேன்.. என்ன விஷயம் சொல்லு பாக்கலாம்.. "

ரிஷி தன்னை சூப்பர்மார்கட்டில் பார்த்ததை சொல்லி இருப்பானோ என்ற எண்ணத்தில் " தெ.... தெரிலியே மாமி.... " தயங்கி தயங்கி கேட்டாள்..

" சரி... நானே சொல்றேன்.. அடுத்த சன்டே எங்க லேடிஸ் க்ளப் சார்பா ஒரு கலை நிகழ்ச்சி நடத்தறோம்.. அங்க எங்க பிரசிடென்ட் பொண்ணும் ஆடறா.. அதான் எல்லாரையும் இன்வைட் பண்ணிண்டு இருந்தேன்.. உன் ஞாபகமும் வந்தது... நீயும் வந்துடு.. உன் ப்ரண்ட்ஸ் இருந்தாலும் கூண்டிண்டு வா என்ன... "

" ம்ஹூம்... கூட்டம் கூட்டறதுக்கு நான்தான் கெடச்சேனா.. இந்த மாமி தொல்ல தாங்கலயே.." மனதில் நினைத்தவாறு அசட்டு சிரிப்பு சிரித்தாள் பவித்ரா.

" ஓ அப்டியா... நைஸ்... பட்... சன்டே எனக்கு.... " கட் செய்ய பார்த்தாள்..

" தெருஞ்சவா எல்லாரையும் இன்வைட் பண்ணின்டு இருக்கேன்.. கூட்டம் கூடினாத்தானே களைகட்டும்... நான் ரிஷியோட வண்டில போய்டுவேன்... நீ உன் ப்ரண்ட்ஸோட வந்துடு.. சுந்தரவல்லி கூற.. சட்டென முகம் மலர்ந்தது பவிக்கு..

" ஓ... ஓகே மாமி.... நான்.. வர்ரேன்.. எத்தன மணிக்கு.. எங்க வரனும்.. "

விலாசத்தை சுந்தரவல்லி கூற..

" ஓகே மாமி.. பை.. " போனை கட் செய்தாள்.. " ரிஷிட்ட நல்லபடியா பேச ஒரு சான்ஸ் கெடச்சது.. கொஞ்சம் சகஜமா பேசலாம்.. பாவம்.. என்ன நெனச்சிருப்பான்.." மனதில் நிம்மதி கொண்டாள் பவி..!

போனை அணைத்த சுந்தரவல்லி நேராக ரிஷியின் அறைக்கு சென்றாள்..

" ரிஷி.. ரிஷி.... "

" என்னம்மா... " லாப்டாப்பில் கண்களை பதித்தவாறு கேட்டான்..

" டேய்.... இங்க கொஞ்சம் பாரேன்... " கெஞ்சலுடன் அவனை அழைத்தாள்..

என்ன என்பது போல அவளை பார்த்தான் ரிஷி... " சொல்லு.... "

" அது.... அந்த கல்சுரல் ப்ரோக்ராமுக்கு அடுத்த சன்டே....... " இழுத்தவள் முன் கை காட்டினான்..

" சாரி... இனிமே அங்கல்லாம் நான் வரமாட்டேன்.. நீ ஆச்சு அந்த அகிலா வைத்யநாதன் ஆச்சு.. என்ன இனிமே டிஸ்டர்ப் பண்ணாத...." மெல்லிய கோபத்துடன் கண்டிப்பாக கூறினான்..

" ஹூம்.. எதுக்கு இவ்ளோ கோவப்படறே.. அதான் உனக்கு வேண்டாம்னு சொல்லிட்டேள்யோ.. அதுக்கப்பறம் அம்மா உன்ன கம்பல் பண்ணுவேனா.. இருந்தாலும் அவா பெரிய இடம் கண்ணா.. அவாளுக்கு நீ வருவன்னு சொல்லிட்டேன்.. "

" அதுக்கு.... "

" டேய்.. அம்மா நிலமைய புருஞ்சுக்கோ ரிஷி... அம்மா பண்ணது தப்புதான்... உன்ன அவாளுக்கு ரொம்ப புடுச்சு போச்சு.. நீ வரலேன்னா சங்கடப்பட மாட்டாளா.. வந்து தலைய மட்டும் காம்சுட்டு போயிடு.. மித்தத நான் பாத்துக்கறேன்.. என்ன..."

" இல்ல... முடியாதுமா... " அவன் சட்டை செய்யாது கூற...

" என்னாடா ரிஷி அடம்பிடிக்கறே... நீ கூட்டிண்டு போலேனா நான் எப்டி போறது.. எல்லாரையும் வரச் சொல்லிட்டு நான் போகலைன்னா எப்டிடா... தோ... இப்போ கூட பவித்ராக்கு போன் பண்ணி வரச் சொல்லிருக்கேன்.. இப்போ வந்து இப்டி சொன்னா எப்டிடா... ஆட்டோல போய் அங்க இறங்கினா என் ப்ரெஸ்டீஜ் என்ன ஆறது... ம்ம்ம்.. " சுந்தரவல்லி அலுத்துக் கொள்ள...

" என்.... என்னது... பவித்ரா வராளா... " முகத்தில் அவனை மீறிய ஆச்சர்யம் பரவியது..

" ஆமாம்டா... அவளையும் தான்.. அவ ப்ரண்ட்ஸ்லாம் கூட கூட்டிண்டு வர சொல்லிருக்கேன்... "

தனை மீறி வந்த ஆனந்த சிரிப்பை அடக்க இயலாம் அந்த பக்கமாய் திரும்பி சிரித்தான்.. சிறிது நேரம் போக முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு திரும்பினான்...

அவனையே பாவமாக பார்த்துக் கொண்டிருந்தாள் சுந்தரவல்லி..

" ம்ம்ம்.... எதோ ரொம்ப கெஞ்சறயேன்னு வரேன்.. அங்க வந்து அவள்ட பேசு இவள்ட பேசுன்னு டார்சர் பண்ணக் கூடாது.. நான் உனக்காக.... " நிறுத்தினான்.. " உ.. உனக்காகத் தான் வர்ரேன்.. " கண்களில் பவியின் பிம்பம் மட்டுமே நின்றது...

" ரொம்ப சந்தோஷம் ரிஷி.. உன் இஷ்டம்.. அங்க வந்து பாரு அம்மாவோட திறமைய... " சொல்லியபடி நிம்மதியுடன் நகர்ந்தாள் சுந்தரவல்லி.. அடுத்த சந்திப்பில் எப்படியும் ரிஷியை ஜனனியுடன் பேச வைத்து அவன் மனதை மாற்றிவிடலாம் என்ற திட்டம் ஓடியது..!

பவித்ரா தன் நண்பி ரம்யாவிற்கு கால் அடித்தாள்..

" ஏய் ரம்மி.. பக்கி... என்ன பண்ணிகிட்டு இருக்க... "

" ஹாய் ஒட்டகம்... என்னடி காலைல தான் ரெண்டுமணி நேரம் கதையடுச்ச.. இப்போ என்ன திரும்ப போன் பண்ற.. போர் அடிக்குதா... "

" சே.. அதெல்லாம் ஒன்னுமில்ல.. அடுத்த சன்டே ஃப்ரீயா... ப்ரோக்ராம் ஒன்னு இருக்கு.. போலாமா.."

" என்ன ப்ரோக்ராம்டி... "

" கல்சுரல் ப்ரோக்ராம் டி.. எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் நடத்தராங்க.. அதான்.. தனியா போகனும்.. நீயும் வந்தேன்னா ஜாலியா போய்ட்டு வரலாம்..."

" ஐயயே.. சாமி ஆள விடு.. நம்மளால நாலு மணி நேரம்லாம் ஒக்காந்திட்டு இருக்க முடியாது.. அதுவும் இதுங்க டான்ஸுன்னு ஆடறதெல்லாம் என்னால பாக்கமுடியாதுப்பா.... நீ போய்ட்டு வா.. நமக்கு ஆவாது... " அவள் கை விரிக்க..

" சே... போ பக்கி.. எப்ப பாரு கிச்சன கட்டிகிட்டே அழு... உன்ன கல்யாணம் பண்ணிக்க போறவன் சாப்ட்டே சாகப்போறான் பாரு..."

" போடி.. என் கைப் பக்குவம் யாருக்கு வரும்.. இப்போ கூட ஒரு டிஷ் பண்ணேன்.. என்னா டேஸ்ட்... ம்ம்மா.. "

" அடச்சீ... போய்த் தொல.. பை.. " போனை கட் பண்ணினாள் பவித்ரா..

சே... தனியா எப்டி போறாது... ம்ம்ம்.. பட்... அவன் வேற வருவானே.. தனியாத்தான் போய் பாப்பமே... " சிறிது நேர சிந்தனையில் ஓர் முடிவுக்கு வந்தாள்..

மறுவார ஞாயிற்று கிழமை..

" அம்மா.. அம்மா.. இன்னிக்கு ஒரு ஃபங்ஷன் இருக்கு..
கல்சுரல் ப்ரோக்ராம்.. போய்ட்டு வந்துடறேன்.. கொஞ்சம் லேட் ஆகும்.. " அம்மாவிடம் கூறிவிட்டு பாட்டியிடம் வந்தாள்.. " பாட்டிமா.. வெளில போய்ட்டு வரேன்.. "

" பாத்து போய்ட்டு சுருக்க வந்துடு கண்ணு.. "

" சரி பாட்டி.. வரேன்.." கூறியபடியே மெல்லிய படபடப்புடன் வீட்டிலிருந்து கிளம்பினாள் பவி.. சுந்தரவல்லி கூறிய விலாசத்தை தேடிப் பிடித்து அங்கு வந்தாள்.. பெரிய பெயர் பலகையுடன் கலை நிகழ்ச்சிகள் பற்றிய பேனர்கள் ஆங்காங்கே நிற்க அந்த பிரம்மாண்ட கட்டிடத்திற்குள் நுழைந்தாள்.. ஆங்காங்கே மக்கள் தலைகள் தெரிய சுந்தரவல்லியை தேடினாள்..

வாசலில் இரண்டு மூன்று பெண்கள் அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருக்க அவர்களிடம் சென்று தயக்கத்துடன் விசாரித்தாள்.. " இங்க... சுந்தரவல்லின்னு... எங்க இருக்காங்க.."

" ஓ அவங்களா.. மேக்கப் ரூம்ல இருப்பாங்க.. லெப்ட்ல போய் ரைட் சைட் திரும்புங்க அங்க லாஸ்ட்ல ஒரு ரூம் இருக்கும்.. அங்க இருப்பாங்க.. " அவள் கூறினாள்.

அவளுக்கு நன்றி பகிர்ந்துவிட்டு அந்த அறையை நோக்கி நகர்ந்தாள்.. கண்கள் ரிஷி எங்கும் தென்படுகிறானா என சுற்றித் தேடியது.. மெள்ள நடந்து அந்த அறையை அடைந்தாள்.. உள்ளே நாலைந்து பெண்கள் இருக்க ஜனனிக்கு இருவர் அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள்..

" எக்ஸ்க்யூஸ் மீ... சுந்தரவல்லி மேடம்.. இங்க... " கண்கள் அவளைத் தேடியது..

ஜனனியின் அருகில் நின்றிருந்த அகிலா திரும்பி சுந்தரவல்லியை அழைத்தாள்..

ஜனனிக்கு பூச்சடை முடிந்து கொண்டிருந்த சுந்தரவல்லி இவளை பார்த்து புன்னகைத்தவாரே வந்தாள்..

" ஹாய் பவித்ரா.. வந்துட்டியா.. என்ன தனியா வந்திருக்கே.. ப்ரண்ட்ஸ் யாரும் வரலையா.. "

" இல்ல மாமி.. யாரும் வரல.. நான் மட்டும் தான் வந்திருக்கேன்.."

" ஓ... சரிசரி.. இது எங்க க்ளப் ப்ரஸிடென்ட்.. திஸ் இஸ் ஜனனி... இன்னிக்கு ஜனனியோட ப்ரோக்ராம்தான் களைகட்ட போறது.. "

அகிலாவைப் பார்த்து ஓர் மென்புன்னகை வீசிவிட்டு சுந்தரவல்லியிடம் திரும்பினாள்.. ஜனனி இவளை கண்டுகொள்ளவே இல்லை..

" சரி பவித்ரா... ஹால்ல போய் உக்காந்துக்கோ.. செகன்ட் ரோ... ஃபர்ஸ்ட் ரோ ஃபார் விஐபி'ஸ்.." அவள் விளிக்க தலையாட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் பவித்ரா.. மனம் ரிஷியைத்தேடியது.. சுந்தரவல்லியிடம் கேட்கலாமா என்ற எண்ணத்தை தடைபோட்டு அரங்கத்தினுள் நுழைந்து அமர்ந்து கொண்டாள்..

ஒவ்வொருவராய் வரிசையாக வந்து அமர , முகவுரை முடிந்து கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமானது...

முன்னால் இரண்டு மூன்று இருக்கைகள் காலியாய் இருக்க அகிலா , சுந்தரவல்லி மற்றும் அவர்கள் குழு அமர்ந்து கொண்டிருந்தது..

" ரிஷி வரலையா.. வருவார்னு நெனச்சேனே.. மாமி அவரோடதான வரேன்னு சொன்னா.." மனச் சோர்வுடன் நிகழ்ச்சிகளில் லயிக்காமல் இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டிருந்தாள் பவி...

நேரம் நகர... கடைசி நிகழ்ச்சியாக ஜனனியின் நடனம் என அறிவிப்பு வர... சுந்தரவல்லி வேகமாக எழுந்து வெளியில் சென்றாள்... சிறிது நேரத்தில் அவள் உள்ளே நுழைய பின்னால் வந்தான் ரிஷி.. அவன் இவளைத் தாண்டி முன் இருக்கையில் அம்மாவுடன் அமர, முகத்தில் சந்தோஷம் படர்ந்தது பவிக்கு... அவன் தன்னை பார்ப்பானா என அவ்வப் பொழுது பார்த்துக் கொண்டிருந்தாள்..

ஜனனியின் நடனத்தை காணாது இவன் சுற்றும் முற்றும் எதையோ தேடிக் கொண்டிருந்தான்.. கண்கள் சுழல எதேச்சியாக பின்னால் திரும்ப, அங்கே பவித்ரா தன்னை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு முகம் மலர புன்னகைத்தான்.. கண்களால் வரவை பரிமாறிக்கொண்டனர்..

அதற்குப்பின் இருவரது சிந்தனையும் மேடையில் ஆடிக் கொண்டிருந்த ஜனனியின் மீது பதியவில்லை... அவள் ஆடி முடித்தபின் முன்வரிசையில் பெரும் கரகோசம் எழுந்தது.. வணங்கிவிட்டு அவள் நகர்ந்தாள்..

முடிவுரை , பரிசளிப்பு என எல்லாம் முடிய கூட்டம் கலைந்தது.. நிகழ்ச்சி நடத்திய க்ளப் மெம்பர்களும் நடனக் கலைஞர்களும் மிஞ்ச அந்த அரங்கம் காலியானது.. மெள்ள எல்லோரும் வெளியில் வர.. சுந்தரவல்லி அகிலாவுடன் நகர.. பவித்ராவை நோக்கி வந்தான் ரிஷி.. முகத்தில் சந்தோஷம் குடி கொண்டிருந்தது..

" ஹாய்... எப்ப வந்தீங்க... பாக்கவே இல்ல.. ஹவ் ஆர் யூ... "

" ஆரம்பிக்கும்போதே வந்துட்டேன்.. உங்களத்தான் பாக்க முடியல.. எங்க இருந்தீங்க..."

" எனக்கு இந்த மாதிரி நிகழ்ச்சிகள்லாம் அவ்ளோ ஈடுபாடு இல்ல.. அதான் மாடில இருந்தேன்.. அம்மா கூப்டதால உள்ள வந்தேன்... "

" ஓ... "

" ம்ம்ம்.... "

இருவருக்கும் அதற்கு மேல் என்ன பேசுவதெனத் தெரியவில்லை.. அவள் எதுவும் பேசுவாளா என ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.. அவனை நேருக்கு நேர் பார்க்க என்னவோ போல் இருந்தது பவிக்கு.. தலையை தாழ்த்தி மெள்ள சிரித்துக் கொண்டாள்..

" அப்பறம்..... " ரிஷி கேட்க..

ம்ம்ம்.... என்ன என்பது போல் பார்த்தாள் பவி... அவளுக்கு அவன் இருப்பு ஏனோ பிடித்திருந்தது..

" அன்னிக்கு அவ்ளோ அவசரமா போய்டீங்க.."

" ஆ.... ஆமா.. நேரம்.... ஆச்சுன்னு... த.. தம்பி வேற இருந்தான்.. அ... அதான்... " முடிக்காமல் தயங்கினாள்..

அவனுக்கு ஏதோ புரிந்தது.. தலை அசைத்தான்..

" சாரிங்க... சரியா பேச முடியல... நீங்க போன்.. பேசனதெல்லாம் வீட்டுக்கு தெரியாது.... அதான்.. கொஞ்சம்... தயக்கமாச்சு... "

" பரவால்ல... பரவால்ல.. புருஞ்சது... நான் போன் பண்ணதும் அம்மாக்கு தெரியாது.. உன்கிட்ட பேசனும்னு தான் அன்னிக்கு போன் பண்ணினேன்.. அம்மா மொபைல்லேந்துதான் உங்க நம்பர எடுத்தேன்.. " தவிப்புடன் அவளை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டே கூறினான்..

பவிக்கு அவன் தன்னுடன் பேச ஆசைப்பட்டதை நினைத்து சந்தோஷமாக இருந்தது.. சிரித்துக் கொண்டே " தெரியும்..." என்றாள்.

" தெரியுமா.. எப்டி " கொஞ்சம் கண் விரித்தான்..

" ராங் நம்பர்னு சொல்லிட்டு அப்பறம் பேசினப்பவே நெனச்சேன்.. " மறுபடியும் சிரித்தாள்..

கள்ளப் பார்வையுடன் தலைகுனிந்து கொண்டான்.. " இல்ல.. உங்கள்ட்ட சாரி கேக்கலாம்னு தான்.. அம்மாட்ட சொல்லிடாதீங்க ப்ளீஸ்.. அவங்களுக்கு தெரியாது.. " மெள்ள கூறியபடி சுற்றும் முற்றும் பார்த்தான்..

" ம்ம்ம்... " தலை அசைத்தாள்..

இருவரும் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருக்க..

சுந்தரவல்லி , அகிலா ஜனனியுடன் மேக்கப் ரூமில் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர்..

சுற்றும் முற்றும் தேடிய ஜனனி.. " ஆன்ட்டி ரிஷி எங்க... என்னை விஷ் பண்ணகூட மாட்டானா.." என ஆதங்கத்துடன் கேக்க..

" யா.. சுந்தரி.. ரிஷி பங்கஷன்ல கூட ஃபுல்லா இல்லையே.. எங்க இருக்கார்.." அகிலாவும் தன் பங்கிற்கு கேட்டாள்..

" இ.. இல்ல.. இங்கதான் இருப்பான்.. அவனுக்கு கூட்டம்னா ஆகாது... அதான்.. இருங்கோ.. கூட்டிண்டு வரேன்.." கொஞ்சம் தயக்கத்துடன் பொய் சொன்ன சுந்தரவல்லிக்கு ரிஷி மீது கோபமாக வந்தது , இப்படி இருக்கிறானே என்று..

வெளியில் வந்து தேடியவள் தூரத்தில் ரிஷி பவித்ராவுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு கடுப்பானாள்.. வேகமாக அவனிடம் வந்தாள்..

பவித்ராவை கண்டு கொள்ளாமல் " ரிஷி... எங்கூட வா.. " அவனை கூட்டிக் கொண்டு நடந்தாள்.. " ரிஷி.. அங்க உன்ன தேடின்டு இருக்கா.. நீ என்னடான்னா.. ஜஸ்ட் ஜனனி டான்ச பாராட்டி ரெண்டு வார்த்த பேசிட்டு வா.. எல்லாரும் பாராட்டி பேசிருக்கா... நீ பேசலைனா தப்பா நெனச்சுப்பா.. அது மரியாதையும் இல்ல.. வா.. " அவனை அழைத்துக் கொண்டு உள்ளே புகுந்தாள்.

ரிஷியை பார்த்து பிரகாசமான ஜனனி கை அசைத்தாள்.. " ஹே ரிஷி.. எங்க போனேள்.. வந்தபோது பார்த்தது தான்.. என்னோட டான்ஸ் பாத்தேளா.. எப்டி இருந்தது.." ஆர்வமுடன் அவள் கேட்க..

" யா.. பார்த்தேன்.. இட்ஸ் சோ நைஸ்.. நல்லா ஆடினீங்க.. கங்கிராட்ஸ்... " பொதுப்படையாய் வாழ்த்தினான்..

இவன் கைகளை பிடித்துக் கொண்டவள்.. " ரியலி.. ரொம்ப சந்த்தோஷம் ரிஷி... அம்மா சொன்னா , நீங்களும் ரொம்ப ரசிச்சேள்னு.. தாங்க் யூ சோமச்... "

" ஓகே ஜனு.. டைம் ஆச்சு.. சாப்ட போலாமா... சாப்பாடு காத்துண்டு இருக்கு.. ஹாஹா.. ரிஷி நீங்களும் வாங்கோ.." அகிலா அழைத்தாள்..

" யா மம்மி.. நீங்க போங்கோ.. நான் ரிஷியோட வர்ரேன்.. ரிஷி.. இஃப் யூ டோன்ட் மைன்ட்... ட்ரெஸ் சேஞ்ச் பண்ணின்டு வந்துடறேன்.. ப்ளீஸ்.. " அவள் கொஞ்சலாய் கூற..

அம்மாவை முறைத்தபடி வாசலுக்கு வந்தான்.. சுந்தரவல்லி அசட்டு சிரிப்புடன் அகிலாவைக் கூட்டிக் கொண்டு நகர்ந்தாள்..

வெளியில் வந்தவன் அங்கிருந்து பவித்ராவிடம் பொறு என கைகாட்டினான்.. அவள் மெள்ள தலை அசைத்தாள்..

சுந்தரவல்லி அகிலாவிடம் பேசிக் கொண்டே பவியை கண்டுகொள்ளாமல் மாடிக்கு சென்றாள்..

பவி அதை கவனிக்கத் தவறவில்லை.. ரிஷியுடன் பேசிய சந்தோஷத்தில் அதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..

சிறிது நேரத்தில் அவர்கள் செல்ல பவியிடம் வேகமாக வந்தான் ரிஷி... " பவி... சாப்பாடு மாடிலதான்.. வாங்க போலாம்.. " அவளைக் கூட்டிக் கொண்டு மாடிக்கு சென்றான்..

எல்லோரும் கைகளில் தட்டை ஏந்திக் கொண்டு வேண்டிய உணவுகளை வாங்கிக் கொண்டு குழுவாக நிற்க.. ரிஷி பவிக்கு வேண்டியதை கேட்டுக் கேட்டு தட்டில் வைத்துக்கொடுத்தான்.. தனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு கும்பலுடன் சேராமல் தனியாக அவளுடன் ஓரமாக நின்று கொண்டான்..

சிறிது நேரத்தில் ஜனனி இவனைத் தேடிக் கொண்டு மேலே வந்தாள்.. அங்கும் இங்கும் தேடிவிட்டு உணவுத் தட்டுடன் அம்மாவிடம் சென்று நின்று கொண்டாள்..

" ஜனு... ரிஷி எங்க.. " அகிலா கேட்க..

" தெரியலை மம்மி.. அங்க காணமே.. " சோகக் குரலுடன் கூறினாள்.

அவளிடமிருந்து தப்பிய சந்தோஷத்துடன் பவியிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்தான் ரிஷி..

சுந்தரவல்லி சுற்றும் முற்றும் தேடிப் பார்த்து பவித்ராவுடன் அவன் நிற்பதைப் பார்த்து அவனிடம் வந்தாள்..

" ரிஷி.... ஜனனிய விட்டுட்டு வந்துட்டியா.. பாவம் உன்னத் தேடிண்டு தனியா வந்துட்டா.. "


" எவ்ளோ நேரம்மா நிக்கறது.. பசிச்சது அதான் வந்துட்டேன்.. பவியும் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க... கூட்டிண்டு வந்தேன்.."

அவனை முறைத்த சுந்தரவல்லி என்ன சொல்வது எனத் தெரியாமல் நின்றிருந்தாள்... பின்னால் ஜனனி இவனைக் கண்டு வேகமாக வந்தாள்... " ஹே..... ரிஷி என்ன ஆச்சு... எப்போ வந்த... என்ன விட்டுட்டு வந்துட்ட பாத்தியா.... நாட்டி பாய்... உன்ன..." அவன் தோளில் அடித்தாள்..

பவிக்கு அவள் செய்கை ஒருமாதிரியாய் இருந்தது..

சுந்தரவல்லி அங்கிருந்து நகர..

" ஹே ரிஷி.... அன்னிக்கு வீட்டுக்கு வந்தப்போ கூட இப்டித்தான் நீ பாட்டுக்கு கெளம்பிட்ட.. அப்பறம்.. " அவள் அவனுடன் நெருக்கமாக பேச பவிக்கு கொஞ்சம் எரிச்சலாய் இருந்தது.. அவள் இருப்பதை ஜனனி சட்டை செய்யாமல் அவனுடன் பேசிக் கொண்டே இருந்தாள்.

" எக்ஸ்க்யூஸ் மீ... ஹலோ.. " சட்டைப்பையில் இருந்த போனை வேகமாக எடுத்து காதில் வைத்துக் கொண்டு யாருடனோ பேசுவது போல் நகர்ந்து சென்றான் ரிஷி.. சிறிது நேரம் பொருத்துப்பார்த்த ஜனனி பொறுமையின்றி அம்மாவிடம் சென்று நின்று கொண்டாள்..

அவள் செல்வதை பார்த்துவிட்டு நிம்மதியாக , திரும்ப பவித்ராவுடன் பேச ஆரம்பித்தான்..

அங்கிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஜனனிக்கு ரிஷி பவித்ராவுடன் பேசுவது எரிச்சலாக வந்தது..

அவளைத் தவிர்த்துவிட்டு தன்னிடம் தனிமையில் பேச ரிஷி ஆசைப்படுவதை நினைத்து பவித்ராவிற்கு கொஞ்சம் சந்தோஷமாய் இருந்தது.. அவனுடன் சகஜமாக பேச ஆரம்பித்தாள்.. இருவரும் இதழ்கள் பொதுப்படையாகப் பேசிக் கொண்டிருக்க கண்கள் இரண்டும் அவ்வப் பொழுது உரசிக் கொண்டிருந்தன..

ஜனனி தன்னையே பார்க்க, ரிஷி எதுவும் கவலை கொள்ளாது பவித்ராவை கவனிப்பதிலே இருந்தான்..

எல்லாம் முடிய... அனைவரும் விடை பெற்றுக் கொண்டனர்... ரிஷி கண்களால் பவிக்கு விடை கொடுக்க அவனது கண்களில் தெரிந்த அந்யோன்யத்தை ரசித்துக் கொண்டே தலை அசைத்தபடி நடந்தாள் பவி..!

உள்ளுக்குள் முழுமையாக அவன் நுழைந்ததை அறியாமல்..!!!


For Comments plz click below link

Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom