Madhavan narayanan
Member
- Messages
- 60
- Reaction score
- 86
- Points
- 18
மார்கழித் திங்கள்..!
அத்யாயம் - 5
அவளைக் கண்டு கொள்ளாமல் அவன் செல்ல பவிக்கு சூடேரியது.. சே.. மேனர்ஸே இல்லாதவன்...
பவி... என்ன ஆச்சு.. அமைதியாவே இருக்க... காபி சாப்பிடு... ஆறிடப் போறது... சுந்தரவல்லி விளிக்க , தலை நிமிர்ந்து பார்த்தாள் பவி..
மடமடவென காப்பிக் கோப்பையை வாயில் சாய்த்துக் கொண்டு எழுந்தாள்..
ஓகே மாமி... நான் கெளம்பரேன்.. நேரம் ஆயிடுச்சு.. வீட்ல தேடுவாங்க..
அப்படியா...சரிம்மா.. நீ வந்தது ரொம்ப சந்தோஷம்... ஃப்ரீயா இருக்கும் போது அப்பப்போ வா... என்ன.. இத உன் வீடுமாதிரி நெனச்சுக்கோ..
ம்ம்ம்.... புன்னகையை உதிர்த்து கிளம்பினாள் பவித்ரா...
பவி.. ஒரு நிமிஷம்.... இதோ வந்துட்ரேன்... உள்ளே சென்ற சுந்தரவல்லி குங்குமச் சிமிளுடன் ஒரு சிறிய துணியையும் தட்டில் கொண்டு வந்தாள்... இந்தா இத எடுத்துக்கோ..
குங்குமத்தை நெற்றியில் கீற்றிட்டுக் கொண்டு அதை பெற்றுக் கொண்டு கிளம்பினாள் பவி..!
ஆட்டோ பிடித்துக் கொண்டு வீட்டுக்கு விரைந்தாள்... உள்ளுக்குள் அவன் மீது கோபம் கோபமாக வந்தது... என்ன ஒரு திமிரு.. ஒருதடவ இன்சல்ட் பண்ணது பத்தாதுன்னு என்ன வார்த்தையெல்லாம் சொல்லிட்டான்.. அந்த மாமி பேச்ச கேட்டு அவங்க வீட்டுக்கு போனது என் தப்பு.. இவன் மட்டும் என்ன பெரிய மேதாவி மாதிரி பேசிட்டு போறான்.. வந்த கோவத்துல ஒரு அறை விட்டுருக்கனும்.. அப்ப தெருஞ்சிருக்கும்..
பொறுமிக் கொண்டே வீட்டிற்குள் வந்தாள்..
வீட்டிற்குள் நுழைந்தவள் தன்னறைக்கு சென்று அமர்ந்து கொண்டாள். மறுபடியும் மறுபடியும் அவன் கூறியது நினைவலையில் ஓடியது.. நாள் முழுக்க அவனது சிந்தனையாகவே இருந்தது... அவன் கூறியதையே திரும்பத் திரும்ப ஆராய்ந்தது.. மனதை சமாதானப் படுத்த இயலாமல் புகைந்தாள்..
சே... இனிமே அந்த மாமிகிட்ட கூட பேசக் கூடாது... எப்டி அவாய்ட் பண்றது.. அதுக்காக.. கோயிலுக்கு போகாம இருக்க முடியுமா.. என்ன இது வேண்டாத தொல்லை... சே... இது இவ்ளோ பெரிய விஷயமாகி என் நிம்மதியே குலைக்கறதே.. மனதுக்குள் புலம்பினாள்..
வெளியில் எதுவும் நடக்காதது போல் முகத்தை வைத்துக் கொண்டு வலம் வந்தாள்.. இருப்பினும் இருமுறை அவன் தன்னை அவமானப் படுத்தியதும் , அவனது அலட்சிய வார்த்தைகளும் அவளை அலைக்கழித்தது..
எப்பொழுதும் பொங்கும் சந்தோஷமின்றி ஒருவித இருக்கத்துடன் இருந்தாள்.. வீட்டில் இருந்தவர்கள் பார்வைக்கு புலப்படாமல். அடிக்கடித் தனியாக அமர்ந்து அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள்.. அவனது வார்த்தைகள் அவளை மிக பாதித்தது.. நாட்கள் இப்படியாக ஓடியது.. ஒருவாரம் தாண்ட...
சுகுமாரி பாட்டிக்கு மட்டும் அவளது மாற்றத்தை மெலிதாய் உணர முடிந்தது.. அவளது கல்யாணப் பேச்சை எடுத்த பிறகுதான் பவித்ரா மனநிம்மதி இன்றி அலைகிறாள் எனத் தோன்றியது.. அவ அப்பா.. வரனப்பத்தி பேசினப்பறம், தன்கிட்ட தன் சமதத்தை கேக்கலைன்னு கோபப்பட்டாளே.. அவ மனசுலயும் தன் வாழ்க்கைய பத்தின அபிப்ராயம் இருக்காதா.. எப்படி இருக்கனும் ஆசை இருக்கும் தானே.. அந்த காலத்ல நமக்கு பண்ணினது மாதிரி இந்த தலைமுறைக்கும் ஆகிடக் கூடாது.. சுதந்திரமே இல்லாம..! பெரியவா பேச்சக் கேட்டு நடக்கற பொண்ணு.. பாவம் குழந்தை.. மனசுல எதையோ வெச்சுண்டு சொல்ல மாட்டாம தடுமாறறா. நம்ம பெரிய மனிஷியா இருக்கோம்.. அவளுக்கு நான்தானே ஆறுதலா இருக்கனும்.. அவ மனசுக்கு புடுச்சாத் தான் எந்த பையனா இருந்தாலும் கல்யாணம்.. அவ விருப்பம்தான்.. நாம கூட இருந்து அவளோட ஆசைய நிறைவேத்தனும்.. மனதில் சிந்தனைகள் ஓட பவியை அழைத்தாள் பாட்டி சுகுமாரி..
பவி கண்ணு.. இங்க வா...
என்னபாட்டி.. என்ன வேணும்... காபி கொண்டுவரவா...
அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்... இங்கவந்து உட்கார்..
என்ன என்ற குழப்பத்துடன் மெதுவாக அவளருகில் அமர்ந்தாள் பவித்ரா...
சொல்லு பாட்டி... என்ன விஷயம்...
அவள் கண்களை பார்த்துக் கொண்டிருந்தாள் பாட்டி... முகத்தை சட்டெனத் தாழ்த்திக் கொண்டாள் பவி..
பவி... என்ன ஆச்சு.... ம்ம்ம்....
ஒன்றும் தெரியாதவள் போல் விழித்தாள்... என்ன ஆச்சு... ஒன்னுமில்லையே... நல்லாத்தான இருக்கேன்.. ம்ம்...
பாட்டி மென்மையாக புன்னகைத்தாள்.. இல்லையே .. இந்த ஒருவாரமா உன்ன கவனுச்சுண்டுதான் வரேன்... என்னவோ போல இருக்கியே..
சமயோஜிதமாக சிரித்தாள்.. இல்லியே.. நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்..
அப்படியா... எப்பவும் கலகலன்னு ஆத்த சுத்தி சுத்தி வருவே... பாட்டி பாட்டின்னு என்ன ஒட்டிப்பியே... இப்போ பாட்டிய கண்டுக்கறதே இல்லையே... ம்ம்ம்...
அ... அது... தடுமாறினாள்.. பாட்டி.. அப்படில்லாம் எதுவுமில்ல... பைனல் இயர் எக்ஸாம் , படிப்பு , ஆத்து வேலை அப்டி இப்டின்னு போயிடறதா.. அதான் உன்கூட ஒக்காந்து பேச முடியல.. ஹூம்.. பாட்டிமா.. நீ தான் எனக்கு ப்ரண்ட் , ஃபிலாசஃபர் எல்லாமே... உன் கிட்ட மறைப்பேனா.. நீ எதுவும் வருத்தப் பட்டுக்காத.. நான் எப்பவும் போல சந்தோஷமா தான் இருக்கேன்..... சரியா..
இல்ல பவி.. உன் மனசு எனக்குத் தெரியும்.. மனச போட்டு அலட்டிக்காத.. சரியா... அப்பா சொல்லிட்டான்.. அதுக்காக அவன் பாக்கற மாப்பிள்ளையத் தான் நீ கட்டிக்கனும்னு இல்லை.. இந்த கல்யாணத்தப் பொறுத்தவரையில உன் இஷ்டம் தான் கண்ணு.. அதுக்கு எப்பவும் உன் பாட்டி துணையா இருப்பா.. சரியா.. அத நெனச்சே கவலப்படாதைக்கு சந்தோஷமா இரு.. பாட்டி இருக்கேன்.." அவள் கன்னத்தை வாஞ்சையுடன் வருடினாள் சுகுமாரி..
"அதெல்லாம் ஒன்னுமில்ல பாட்டி.. நீ எப்பவும் என்கூட இருப்பன்னு எனக்கு தெரியும்.. ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணுவியா..."
"என்ன கண்ணு..."
"அப்பாட்ட சொல்லி இந்த கல்யாணத்த போஸ்ட்போன் பண்ணிடு.. காலேஜ் படிப்பெல்லாம் முடிஞ்சு கொஞ்ச நாளைக்கு நான் ஃப்ரீயா இருந்துக்கறேனே... ம்ம்ம்.."
"ஹா.. ஹா.. சரி சொல்றேன்.. படிப்பு முடுச்சு ஒரு மூனு மாசமோ.. ஆறுமாசமோ தானே... அதுக்குள்ள நல்ல வரன் உனக்கு அமையும்.. அப்போ வேணும்னா கல்யாணத்த மட்டும் கொஞ்சம் தள்ளி போட்டுக்க சொல்லிடலாம்.. இப்போ அவன் பாக்கறபடி பாக்கட்டும்.. எடுத்த எடுப்புலயே வேண்டாம்னு சொன்ன சங்கடப் பட்டுடுவான்.. பாவம்.."
"ஹூம்... சரி பாட்டி... நான் ரம்யாவ பாத்துட்டு வந்துடறேன்.. ஒருவாரம் ஆச்சு அவள பாத்து... வரேன் பாட்டி.." பவி கிளம்பினாள்..
அவள் நடந்து செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த சுகுமாரியின் கண்களில் அந்த நினைவு வந்து போனது...
"அம்மா...... நேக்கு... இப்போ எதுக்கு கல்யாணம்.. வேண்டாமே.. " மருண்ட கண்களுடன் அம்மாவை பார்த்து மெதுவாகக் கூறினாள் சுகுமாரி...
அவளை விநோதமாகப் பார்த்தாள் ருக்மிணி.. " அச்சச்சோ.. என்னடி இது, புதுசா கல்யாணம் வேண்டாம் அது இதுன்னு பெரிய மனுஷி மாதிரி பேசறே... அப்டிலாம் சொல்லக் கூடாது..
அப்பா கேட்டார் அவ்வளவு தான்.. தாண்டவம் ஆடிடுவர்.. பொண் குழந்தைகள் வயசுக்கு வந்துட்டா அடுத்து கல்யாணம் தானே.. கல்யாணம் பண்ணின்டு வாய்க்கு ருஜியா சமைச்சுப் போட்டுண்டு குழந்தை குட்டிகளோட ஆத்துகாரற நன்னா பாத்துக்கறத விட்டுட்டு வேற என்ன இருக்கு பொண்களுக்கு.. தொங்கத் தொங்க தாலி கட்டிண்டு பூவும் பொட்டோட சுமிங்கிலியா இருக்கறது தானே பொண்ணா பொறந்ததுக்கு பெருமை.. அதுதானே சாஸ்வதம்..
தெரண்ட குழந்தைகளுக்கு காலாகாலத்ல கல்யாணம் ஆனுமேன்னு அவாஅவா வயத்துல நெருப்பக் கட்டிண்டு தவிக்கறா.. நோக்கென்ன தெரியும்.. சின்னகுட்டி.. இனிமே இப்டிலாம் பேசப்டாது.. ஆத்துப் பெரியவா சொல்றத கேட்டு நடக்கனும்.. எதையோ யோஜன பண்ணின்டு இருக்கக் கூடாது... சரியா..
ம்ம்ம்... மெள்ளத் தலையாட்டினாள் சுகுமாரி..
அடுப்பில் பாலைக் காய்ச்சிக் கொண்டிருந்த வேதவல்லியிடம் திரும்பி.. "பாருங்கோம்மா.. இப்பவே இப்படி எதுத்து கேள்வி கேக்கறதுகள்.. என்ன சொல்றது... எனக்கு கல்யாணம் ஆகும்போது வயசு எட்டு... அவருக்கு பதினாலு.. அப்போ நீங்க ரங்கன புள்ளையாண்டு இருந்தேள்.. ஞாபகம் இருக்கா.. ஹாஹா.. அந்த மாதிரி இவளுக்கும் பண்ணாம இல்லாதைக்கு இந்த வயசுல கல்யாணம் எதுக்காம்.. என்ன சொல்றது.. ஊரும் உலகமும் கெட்டுப் போயிடுத்து.. ஹூம்.. சுகு.. ஆத்த பெருக்கிட்டு கைகால் அலம்பி நெத்திக்கு இட்டிண்டு பூஜ ரூம்ல வெளக்கேத்திடுமா.. சந்த்யா காலம் ஆகப்போறது.. இத பார். தாவணி தலப்ப பின்னால தொங்கவிட்டுண்டே வேல பாக்கக் கூடாது... நன்னா இறுக்க கட்டிக்கனும்.. சரியா.. போ...
ம்ம்ம்... சரிம்மா.. தலையாட்டினாள். வேறெதுவும் கேட்கத் தோணவில்லை..
மாலை, வேலை முடிந்து உள்ளே நுழைந்தார் சுப்ரமணியன்..
எதிரே சுகுமாரி கையில் ஒரு கதை புத்தகத்தை வைத்துக் கொண்டு சிரித்தபடி ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தாள்.. புத்தகத்தில் ஆழ்ந்தவள் அவர் வருவதை கவனிக்கவில்லை..
அதைப் பார்த்து கோபம் தலைக்கேற அவளை முறைத்தவர் சத்தமாக செறுமினார்.. சடாரென நிமிர்ந்தவள் எழுந்து நின்று விலகினாள்.. "வா... வாங்கோ... வாங்கோப்பா.."
" ருக்கு.. அடி ருக்கு.. இங்கவாடி.. " சத்தமாகக் கூப்பிட்டார்..
பதறிக் கொண்டு வெளியே வந்தவள் அறையின் ஓரமாய் நின்று கொண்டு தலைப்பால் தோளை மூடிக்கொண்டாள்.. என்ன என்பது போல அவரைப் பார்க்க..
" நன்னா வளத்து வெச்சிருக்கே உன் சீமந்த புத்ரியை.. யார் வர்ரா.. யார் போறான்னு கூட தெரியாதைக்கு நடுவீட்ல வெக்கமில்லாம சிரிச்சுண்டு ஒக்காந்திருக்கா.."
"என்ன புஸ்தகம்டி அது.." அவள் கையில் இருந்ததை படக்கெனப் பிடிங்கிப் பார்த்தார்..
குழந்தைகளுக்கான கதைப் புத்தகமென அட்டைப் படத்தில் தெரிந்தது.. தூக்கி எறிந்தார் அதை..
" நன்னாருக்கு.. கல்யாணம் ஆகி புக்காத்துக்கு போக வேண்டிய வயசுல கதைபுத்தகத்த படுச்சுண்டு ஒக்காந்திரு.. அங்க போனப்பறம் அவா என்ன காரி துப்பட்டும்.."
பயத்துடன் கண்களில் மெள்ள நீர் கோர்த்தது.. அம்மாவை மெள்ள திரும்பிப் பார்த்தாள். அவள் கண்களால் சமாதானம் செய்தாள்..
"குழந்த ஏதோ நேரம் போலையேன்னு..."
" ஆமா.. இப்போ நேரம் போலயேன்னு கண்டத படிப்பா.. நாளைக்கு அங்க போயும் இதத்தான செய்வா.. பேசறா பாரு.. கூறுகெட்டத் தனமா.."
" சுகுமாரி... இது தான் கடைசி... இனிமே புஸ்தகத்த வெச்சுண்டு அங்கஇங்க ஒக்காந்துண்டு பல்ல காமிச்சுண்டு இருந்தியோ அவ்வளவு தான்.. ஜாக்ரதை
பொண்ணா அடக்கமா ஆத்து வேல கத்துண்டு இருக்கியா... குதிரு மாதிரி வளத்து வெச்சிருக்கேள்.. ஒரு வேலைக்கும் லாயிக்கு இல்லையேன்னு சம்மந்தி பேர் நாளைக்கு என்ன கேள்வி கேட்டா நான் எங்க போய் முட்டிக்கறது.. பொறந்த ஒன்னும் பொண்ணா போய்த் தொலஞ்சுடுத்து.. அடுத்தத எதையும் பெத்துக் குடுக்க உங்கம்மாக்கு துப்பு இல்லை.. வயத்த அடச்சுப் போச்சு.. பெண்ண பெத்தவன் தல குனிஞ்சு போக வேண்டிய துர்பாக்யம் எனக்கு... தலையெழுத்து.. இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்கா ஆத்து வேலய பண்ணப் பழகு.. புரியறதா.. போ...." அவர் கர்ஜிக்க மூச்சடைத்துப் போய் அடுக்களைக்குள் ஓடினாள் சுகுமாரி..
தொண்டையை அடைக்க கண்களில் நீர் வழிந்தது.. சத்தமில்லாமல் கேவிக் கேவி அழுதாள்.. பின்னால் வந்த ருக்மணி அவளை அணைத்துக் கொண்டு கண்களை அழுந்த துடைத்துவிட்டாள்..
" அழாதடி கண்ணு.. அப்பா உன்னோட நல்லதுக்கு தானே சொல்றார்.. நாளைக்கு இன்னொரு ஆத்துக்கு போக வேண்டியவ நீ.. அங்க போய் அவா எல்லாரையும் அனுசருச்சு போக வேண்டியது உன் கடமைம்மா.. பெரியவா எதாவது சொல்றான்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கும்.. இனிமே புஸ்தகத்த வெச்சுண்டு ஒக்காறப் படாது.. அம்மாவோட அடுக்களைல வேலய கவனுச்சுக்கோ.. சரியா.. தோளில் சாய்த்துக் கொண்டாள்..
"ருக்கு.. ருக்மணி.. அங்க என்ன பண்ணின்டு இருக்கே.. உன் பொண்ண சமாதானம் பண்ணது போதும்.. இங்க வா..."
ருக்மணி வெளியே வர பின்னால் வேதவல்லி பாட்டியும் நின்று கொண்டாள்..
" சம்மந்திப் பேர் நாளைக்கு சாயங்காலம் சம்மந்தம் பேச வர்ரா.. அவா முன்னாடி இவோ அங்க இங்க அலஞ்சுண்டு இருக்க போறா.. பாத்து உள்ளே இருந்துக்க சொல்லு.. நாப்பது பேர் வர்ராலாம் வண்டி கட்டிண்டு.. அத்தே , மாமா , சொந்தம் பந்தம்னு அவாத்து பேர் பெரும்படையாம்.. புரியறதா.. அவாளுக்கு வேண்டிய பக்ஷணங்கள் தயார் பண்ணிடு... கூடமாட ஒத்தாசைக்கு சுகுமாரியையும் வெச்சுக்கோ.. என்ன.. நான் போயி.. நம்மாத்து மனுஷள்கிட்ட சேதி சொல்லிட்டு வந்துட்ரேன்.." அவளது பதிலை எதிர்பாராமல் கட்டளை இட்டவாரு துண்டைத் தட்டி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பினார்..
ருக்மணி , வேதவல்லி முகத்தில் சந்தோஷ ரேகை ஊர்ந்தது...
" சுகுமாரி.. உன்ன பொண்ணு பாக்க வர்றாலாம் நாளைக்கு.. நன்னா அலங்காரம் பண்ணிக்கனும்.. ருக்கு.. அந்த மயில்கண் நிறத்துல பட்டுப் புடவை இருக்கே.. போன ஆடிக்கு வாங்கினதே.. அது புதுசாத்தானே இருக்கு அத கட்டிக்கச் சொல்லு.. தங்க விக்ரகம் மாதிரி ஜொலிப்பா... என் கண்ணு.." பாதிபோன பல்தெரிய சிரித்தபடி சுகுமாரியின் கன்னத்தை வருடியவாரு நெட்டி முறித்தாள் வேதவல்லி பாட்டி..
புதுப் புடவை கட்டிக் கொள்ளும் ஆசையில் கவலை மறந்து சிரித்தாள் சுகுமாரி..
நினைவுகளில் மூழ்கியவள் முகத்திலும் புன்னகை விரிந்திருந்தது..
.......
ஹாய் ரம்மி... எப்டிடி இருக்க... விரிந்த புன்னகையுடன் அவள் வீட்டின் உள் நுழைந்தாள் பவித்ரா...
ஹே.. ஒட்டகம்.. எப்டி இருக்கடி.. வாட் எ சர்ப்ரைஸ்.. என்னடி திடீர்னு வந்திருக்க.. ஒரு வாரமா ஆளயே காணும்... வா.. வா... அவளை இழுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு ஓடினாள் ரம்யா....
யேய்... கேக்கறேன்ல... என்ன ஒரு வாரமா ஆளையும் காணும் ஃபோனையும் காணும்.. என்ன ஆச்சு..
ஒ... ஒன்னுமில்லடி... எக்ஸாம்ஸ் வருதுல்ல.. அதான் படிப்புல மூழ்கிட்டேன்..
இன்னது... படிப்புல மூழ்கிட்டியா.. அடியே... என் காதுலயே பூ சுத்தாத.. உன்னப் பத்தி எனக்கு தெரியும்.. முகத்துலயும் சந்தோஷத்தையே காணும்.. குச்சி முட்டாய் வாங்கித் தரலைன்னு வீட்ல சண்ட போட்டியா... அப்பா எதாவது திட்டிட்டாரா.. ஆ.. ஹாஹா.. பெரிதாகச் சிரித்தாள்..
பவித்ராவிற்கு பக்கென்று இருந்தது.. பாட்டி கூறியது போல இவளும் கேட்கிறாளே என...
சீ... நான் ஹேப்பியாத்தான் இருக்கேன்... உங்களுக்கெல்லாம் தான் அப்டி தெரியுது...
உங்களுக்கா.... ஆ... அப்போ கன்பார்ம் தான்... எதோ திருட்டுத் தனம் பண்ணிருக்க.. ஒழுங்கா சொல்லிரு... இல்ல.. புடுச்சு கீழ தள்ளி விட்ருவேன்...
அமர்ந்திருந்த அவளை பிடித்து பின்னால் சாய்க்க....
ஏய்ய்ய்..... பக்கி... விடு என்ன..
ஹா.. ஹா... பவி.. உன் மூஞ்சியே காட்டிக் குடுத்திருது நீ மூட் அவுட்ல இருக்குன்னு.. என்கிட்ட சொல்லக் கூடாதா...
பவிக்கு கொஞ்சம் அவமானமாக இருந்தது... சே... இப்டி எல்லாருக்கும் தெரியும்படியா இருப்ப பவி.. நீ சுத்த வேஸ்ட்.." தன்னைத் தானே கடிந்து கொண்டாள்..
கொஞ்சம் அமைதியானவள் பேச ஆரம்பித்தாள்...
அன்னிக்கு அந்த துணிக்கடைல பாத்தோமே.. அந்த அம்மா, அவங்க பையன்...
ம்ம்ம்... நைஸ் கை... அழகா இருக்கான்ல....
ஆமா... அழகு.. அது ஒன்னுதான் குறைச்சல்.. முட்டாள்....
என்னடி ஆச்சு.....
அந்த அம்மா அவங்க வீட்டுக்கு வரனும்னு ஒரே பிடிவாதமா இருந்தாங்க.. நான் வரலைன்னு சொண்னேன். கேக்கல.. போன ஞாயித்து கிழமை வீட்டுக்கு வந்தே ஆகனும்னு கம்பல் பண்ணி கூட்டிட்டு போயிட்டாங்க..
ம்ம்ம்... சரி....
அங்க அவனும் இருந்தான்..
சோ வாட்....
"சரியான திமிருடி அவனுக்கு.. பெரிய இவனாட்டம் என்ன கண்டுக்கவே இல்ல.. என்ன இன்சல்ட் பண்ற மாதிரி தெனாவெட்டா நடந்துக்கிட்டான்.. எனக்கு செம்ம கடுப்பு... அவங்க வீடாச்சேன்னு அடக்கிட்டு இருந்தேன்.. இதுவே வெளி இடமா இருந்தா வேறமாதிரி ஆகியிருக்கும்..." ஜாக்ரதையாக அங்கு நடந்ததை முழுமையாகக் கூறாமல் மேலோட்டமாய் அவனது குற்றத்தை மட்டும் கூறினாள் பவித்ரா..
என்ன பத்திதான் உனக்கு தெரியுமே.. எனக்கு இந்த ஈகோ புடுச்சவங்களக் கண்டாலே பிடிக்காது.. தூர வெளகிடுவேன்னு...
ம்ம்ம்... அப்டி என்னதான்டி பண்ணான்..
அவன் ஏற்கனவே என்கிட்ட மிஸ்பிகேவ் பண்ணி திட்டு வாங்கினான்னு சொன்னேன்ல.. அத மனசுல வெச்சுகிட்டு திமிரா நடந்துகிட்டான்.. சரி.. அந்த மாமியோட முகத்துக்காக அவன்ட்ட ஃபார்மாலிட்டிக்கு பேசினேன்.. என்னவோ உலகத்துலயே இவன் ஒருத்தன் தான் ஆம்பள மாதிரி சீனக் காமிச்சுட்டு எழுந்து போயிட்டான்.. வந்த கோவத்துல செம்ம மூட் அவுட்.. ஒருவாரமா எனக்கு அத ஜீரணிக்கவே முடியல... அதான் எங்கயும் போல.. கோயிலுக்கு கூட.. போனா அந்த மாமிய திரும்ப பாக்கனும்.. என்னால சும்மா இருக்க முடியாது... தேவையில்லாம அவங்கள்ட இதைப்பத்தி பேசவும் முடியாது.. வேண்டாத வேலடி எனக்கு..
படபடவென அவள் பேச அவளை பார்த்துக் கொண்டிருந்தாள் ரம்யா....
ம்ஹூம்.. இந்த பசங்களுக்கே பெரிய இவனுங்கன்னு நெனப்பு... கொஞ்சம் அழகா ஹேன்ட்ஸமா இருந்தாப் போதும் வானத்துலேந்து வந்தவங்க மாதிரி திரிவாய்ங்க... நீ அவன விட்ருக்க கூடாதுடி.. நானா இருந்தா அந்த எடத்துலயே லெப்ட் அன்டு ரைட் வாங்கிருப்பேன்...
பவிக்குள் ஓர் சந்தோஷப் புன்னகை மின்னியது.. ஆமாடி நீ சொல்றது ரொம்ப கரெக்ட்... பெரிய இவன்னு நெனப்பு.. என்னலாம் பேசறான்....
என்னது.....
ஆ.... ஒ... ஒன்னுமில்ல... என்ன கண்டுக்காம தெனாவெட்டா போனான்ல அத சொன்னேன்..
ம்ம்ம்... பவி... இத இப்டியே விடக் கூடாது... அவனுக்கு நீ நோஸ் கட் குடுத்தே ஆகனும்.. அவனப் பாக்க அடுத்த சான்ஸ் வரும் போது ஒரு புடி புடுச்சிடு... நாம என்ன கிள்ளுக்கீரையா அவனுக்கு...
என்ன நடந்தது என முழுவதும் அறியாத ரம்யா பவியை ஏத்திவிட...
ம்ம்ம்... தலை அசைத்தாள் பவித்ரா..
தொடரும்..
அத்யாயம் - 5
அவளைக் கண்டு கொள்ளாமல் அவன் செல்ல பவிக்கு சூடேரியது.. சே.. மேனர்ஸே இல்லாதவன்...
பவி... என்ன ஆச்சு.. அமைதியாவே இருக்க... காபி சாப்பிடு... ஆறிடப் போறது... சுந்தரவல்லி விளிக்க , தலை நிமிர்ந்து பார்த்தாள் பவி..
மடமடவென காப்பிக் கோப்பையை வாயில் சாய்த்துக் கொண்டு எழுந்தாள்..
ஓகே மாமி... நான் கெளம்பரேன்.. நேரம் ஆயிடுச்சு.. வீட்ல தேடுவாங்க..
அப்படியா...சரிம்மா.. நீ வந்தது ரொம்ப சந்தோஷம்... ஃப்ரீயா இருக்கும் போது அப்பப்போ வா... என்ன.. இத உன் வீடுமாதிரி நெனச்சுக்கோ..
ம்ம்ம்.... புன்னகையை உதிர்த்து கிளம்பினாள் பவித்ரா...
பவி.. ஒரு நிமிஷம்.... இதோ வந்துட்ரேன்... உள்ளே சென்ற சுந்தரவல்லி குங்குமச் சிமிளுடன் ஒரு சிறிய துணியையும் தட்டில் கொண்டு வந்தாள்... இந்தா இத எடுத்துக்கோ..
குங்குமத்தை நெற்றியில் கீற்றிட்டுக் கொண்டு அதை பெற்றுக் கொண்டு கிளம்பினாள் பவி..!
ஆட்டோ பிடித்துக் கொண்டு வீட்டுக்கு விரைந்தாள்... உள்ளுக்குள் அவன் மீது கோபம் கோபமாக வந்தது... என்ன ஒரு திமிரு.. ஒருதடவ இன்சல்ட் பண்ணது பத்தாதுன்னு என்ன வார்த்தையெல்லாம் சொல்லிட்டான்.. அந்த மாமி பேச்ச கேட்டு அவங்க வீட்டுக்கு போனது என் தப்பு.. இவன் மட்டும் என்ன பெரிய மேதாவி மாதிரி பேசிட்டு போறான்.. வந்த கோவத்துல ஒரு அறை விட்டுருக்கனும்.. அப்ப தெருஞ்சிருக்கும்..
பொறுமிக் கொண்டே வீட்டிற்குள் வந்தாள்..
வீட்டிற்குள் நுழைந்தவள் தன்னறைக்கு சென்று அமர்ந்து கொண்டாள். மறுபடியும் மறுபடியும் அவன் கூறியது நினைவலையில் ஓடியது.. நாள் முழுக்க அவனது சிந்தனையாகவே இருந்தது... அவன் கூறியதையே திரும்பத் திரும்ப ஆராய்ந்தது.. மனதை சமாதானப் படுத்த இயலாமல் புகைந்தாள்..
சே... இனிமே அந்த மாமிகிட்ட கூட பேசக் கூடாது... எப்டி அவாய்ட் பண்றது.. அதுக்காக.. கோயிலுக்கு போகாம இருக்க முடியுமா.. என்ன இது வேண்டாத தொல்லை... சே... இது இவ்ளோ பெரிய விஷயமாகி என் நிம்மதியே குலைக்கறதே.. மனதுக்குள் புலம்பினாள்..
வெளியில் எதுவும் நடக்காதது போல் முகத்தை வைத்துக் கொண்டு வலம் வந்தாள்.. இருப்பினும் இருமுறை அவன் தன்னை அவமானப் படுத்தியதும் , அவனது அலட்சிய வார்த்தைகளும் அவளை அலைக்கழித்தது..
எப்பொழுதும் பொங்கும் சந்தோஷமின்றி ஒருவித இருக்கத்துடன் இருந்தாள்.. வீட்டில் இருந்தவர்கள் பார்வைக்கு புலப்படாமல். அடிக்கடித் தனியாக அமர்ந்து அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள்.. அவனது வார்த்தைகள் அவளை மிக பாதித்தது.. நாட்கள் இப்படியாக ஓடியது.. ஒருவாரம் தாண்ட...
சுகுமாரி பாட்டிக்கு மட்டும் அவளது மாற்றத்தை மெலிதாய் உணர முடிந்தது.. அவளது கல்யாணப் பேச்சை எடுத்த பிறகுதான் பவித்ரா மனநிம்மதி இன்றி அலைகிறாள் எனத் தோன்றியது.. அவ அப்பா.. வரனப்பத்தி பேசினப்பறம், தன்கிட்ட தன் சமதத்தை கேக்கலைன்னு கோபப்பட்டாளே.. அவ மனசுலயும் தன் வாழ்க்கைய பத்தின அபிப்ராயம் இருக்காதா.. எப்படி இருக்கனும் ஆசை இருக்கும் தானே.. அந்த காலத்ல நமக்கு பண்ணினது மாதிரி இந்த தலைமுறைக்கும் ஆகிடக் கூடாது.. சுதந்திரமே இல்லாம..! பெரியவா பேச்சக் கேட்டு நடக்கற பொண்ணு.. பாவம் குழந்தை.. மனசுல எதையோ வெச்சுண்டு சொல்ல மாட்டாம தடுமாறறா. நம்ம பெரிய மனிஷியா இருக்கோம்.. அவளுக்கு நான்தானே ஆறுதலா இருக்கனும்.. அவ மனசுக்கு புடுச்சாத் தான் எந்த பையனா இருந்தாலும் கல்யாணம்.. அவ விருப்பம்தான்.. நாம கூட இருந்து அவளோட ஆசைய நிறைவேத்தனும்.. மனதில் சிந்தனைகள் ஓட பவியை அழைத்தாள் பாட்டி சுகுமாரி..
பவி கண்ணு.. இங்க வா...
என்னபாட்டி.. என்ன வேணும்... காபி கொண்டுவரவா...
அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்... இங்கவந்து உட்கார்..
என்ன என்ற குழப்பத்துடன் மெதுவாக அவளருகில் அமர்ந்தாள் பவித்ரா...
சொல்லு பாட்டி... என்ன விஷயம்...
அவள் கண்களை பார்த்துக் கொண்டிருந்தாள் பாட்டி... முகத்தை சட்டெனத் தாழ்த்திக் கொண்டாள் பவி..
பவி... என்ன ஆச்சு.... ம்ம்ம்....
ஒன்றும் தெரியாதவள் போல் விழித்தாள்... என்ன ஆச்சு... ஒன்னுமில்லையே... நல்லாத்தான இருக்கேன்.. ம்ம்...
பாட்டி மென்மையாக புன்னகைத்தாள்.. இல்லையே .. இந்த ஒருவாரமா உன்ன கவனுச்சுண்டுதான் வரேன்... என்னவோ போல இருக்கியே..
சமயோஜிதமாக சிரித்தாள்.. இல்லியே.. நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்..
அப்படியா... எப்பவும் கலகலன்னு ஆத்த சுத்தி சுத்தி வருவே... பாட்டி பாட்டின்னு என்ன ஒட்டிப்பியே... இப்போ பாட்டிய கண்டுக்கறதே இல்லையே... ம்ம்ம்...
அ... அது... தடுமாறினாள்.. பாட்டி.. அப்படில்லாம் எதுவுமில்ல... பைனல் இயர் எக்ஸாம் , படிப்பு , ஆத்து வேலை அப்டி இப்டின்னு போயிடறதா.. அதான் உன்கூட ஒக்காந்து பேச முடியல.. ஹூம்.. பாட்டிமா.. நீ தான் எனக்கு ப்ரண்ட் , ஃபிலாசஃபர் எல்லாமே... உன் கிட்ட மறைப்பேனா.. நீ எதுவும் வருத்தப் பட்டுக்காத.. நான் எப்பவும் போல சந்தோஷமா தான் இருக்கேன்..... சரியா..
இல்ல பவி.. உன் மனசு எனக்குத் தெரியும்.. மனச போட்டு அலட்டிக்காத.. சரியா... அப்பா சொல்லிட்டான்.. அதுக்காக அவன் பாக்கற மாப்பிள்ளையத் தான் நீ கட்டிக்கனும்னு இல்லை.. இந்த கல்யாணத்தப் பொறுத்தவரையில உன் இஷ்டம் தான் கண்ணு.. அதுக்கு எப்பவும் உன் பாட்டி துணையா இருப்பா.. சரியா.. அத நெனச்சே கவலப்படாதைக்கு சந்தோஷமா இரு.. பாட்டி இருக்கேன்.." அவள் கன்னத்தை வாஞ்சையுடன் வருடினாள் சுகுமாரி..
"அதெல்லாம் ஒன்னுமில்ல பாட்டி.. நீ எப்பவும் என்கூட இருப்பன்னு எனக்கு தெரியும்.. ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணுவியா..."
"என்ன கண்ணு..."
"அப்பாட்ட சொல்லி இந்த கல்யாணத்த போஸ்ட்போன் பண்ணிடு.. காலேஜ் படிப்பெல்லாம் முடிஞ்சு கொஞ்ச நாளைக்கு நான் ஃப்ரீயா இருந்துக்கறேனே... ம்ம்ம்.."
"ஹா.. ஹா.. சரி சொல்றேன்.. படிப்பு முடுச்சு ஒரு மூனு மாசமோ.. ஆறுமாசமோ தானே... அதுக்குள்ள நல்ல வரன் உனக்கு அமையும்.. அப்போ வேணும்னா கல்யாணத்த மட்டும் கொஞ்சம் தள்ளி போட்டுக்க சொல்லிடலாம்.. இப்போ அவன் பாக்கறபடி பாக்கட்டும்.. எடுத்த எடுப்புலயே வேண்டாம்னு சொன்ன சங்கடப் பட்டுடுவான்.. பாவம்.."
"ஹூம்... சரி பாட்டி... நான் ரம்யாவ பாத்துட்டு வந்துடறேன்.. ஒருவாரம் ஆச்சு அவள பாத்து... வரேன் பாட்டி.." பவி கிளம்பினாள்..
அவள் நடந்து செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த சுகுமாரியின் கண்களில் அந்த நினைவு வந்து போனது...
"அம்மா...... நேக்கு... இப்போ எதுக்கு கல்யாணம்.. வேண்டாமே.. " மருண்ட கண்களுடன் அம்மாவை பார்த்து மெதுவாகக் கூறினாள் சுகுமாரி...
அவளை விநோதமாகப் பார்த்தாள் ருக்மிணி.. " அச்சச்சோ.. என்னடி இது, புதுசா கல்யாணம் வேண்டாம் அது இதுன்னு பெரிய மனுஷி மாதிரி பேசறே... அப்டிலாம் சொல்லக் கூடாது..
அப்பா கேட்டார் அவ்வளவு தான்.. தாண்டவம் ஆடிடுவர்.. பொண் குழந்தைகள் வயசுக்கு வந்துட்டா அடுத்து கல்யாணம் தானே.. கல்யாணம் பண்ணின்டு வாய்க்கு ருஜியா சமைச்சுப் போட்டுண்டு குழந்தை குட்டிகளோட ஆத்துகாரற நன்னா பாத்துக்கறத விட்டுட்டு வேற என்ன இருக்கு பொண்களுக்கு.. தொங்கத் தொங்க தாலி கட்டிண்டு பூவும் பொட்டோட சுமிங்கிலியா இருக்கறது தானே பொண்ணா பொறந்ததுக்கு பெருமை.. அதுதானே சாஸ்வதம்..
தெரண்ட குழந்தைகளுக்கு காலாகாலத்ல கல்யாணம் ஆனுமேன்னு அவாஅவா வயத்துல நெருப்பக் கட்டிண்டு தவிக்கறா.. நோக்கென்ன தெரியும்.. சின்னகுட்டி.. இனிமே இப்டிலாம் பேசப்டாது.. ஆத்துப் பெரியவா சொல்றத கேட்டு நடக்கனும்.. எதையோ யோஜன பண்ணின்டு இருக்கக் கூடாது... சரியா..
ம்ம்ம்... மெள்ளத் தலையாட்டினாள் சுகுமாரி..
அடுப்பில் பாலைக் காய்ச்சிக் கொண்டிருந்த வேதவல்லியிடம் திரும்பி.. "பாருங்கோம்மா.. இப்பவே இப்படி எதுத்து கேள்வி கேக்கறதுகள்.. என்ன சொல்றது... எனக்கு கல்யாணம் ஆகும்போது வயசு எட்டு... அவருக்கு பதினாலு.. அப்போ நீங்க ரங்கன புள்ளையாண்டு இருந்தேள்.. ஞாபகம் இருக்கா.. ஹாஹா.. அந்த மாதிரி இவளுக்கும் பண்ணாம இல்லாதைக்கு இந்த வயசுல கல்யாணம் எதுக்காம்.. என்ன சொல்றது.. ஊரும் உலகமும் கெட்டுப் போயிடுத்து.. ஹூம்.. சுகு.. ஆத்த பெருக்கிட்டு கைகால் அலம்பி நெத்திக்கு இட்டிண்டு பூஜ ரூம்ல வெளக்கேத்திடுமா.. சந்த்யா காலம் ஆகப்போறது.. இத பார். தாவணி தலப்ப பின்னால தொங்கவிட்டுண்டே வேல பாக்கக் கூடாது... நன்னா இறுக்க கட்டிக்கனும்.. சரியா.. போ...
ம்ம்ம்... சரிம்மா.. தலையாட்டினாள். வேறெதுவும் கேட்கத் தோணவில்லை..
மாலை, வேலை முடிந்து உள்ளே நுழைந்தார் சுப்ரமணியன்..
எதிரே சுகுமாரி கையில் ஒரு கதை புத்தகத்தை வைத்துக் கொண்டு சிரித்தபடி ஒரு ஓரமாய் அமர்ந்திருந்தாள்.. புத்தகத்தில் ஆழ்ந்தவள் அவர் வருவதை கவனிக்கவில்லை..
அதைப் பார்த்து கோபம் தலைக்கேற அவளை முறைத்தவர் சத்தமாக செறுமினார்.. சடாரென நிமிர்ந்தவள் எழுந்து நின்று விலகினாள்.. "வா... வாங்கோ... வாங்கோப்பா.."
" ருக்கு.. அடி ருக்கு.. இங்கவாடி.. " சத்தமாகக் கூப்பிட்டார்..
பதறிக் கொண்டு வெளியே வந்தவள் அறையின் ஓரமாய் நின்று கொண்டு தலைப்பால் தோளை மூடிக்கொண்டாள்.. என்ன என்பது போல அவரைப் பார்க்க..
" நன்னா வளத்து வெச்சிருக்கே உன் சீமந்த புத்ரியை.. யார் வர்ரா.. யார் போறான்னு கூட தெரியாதைக்கு நடுவீட்ல வெக்கமில்லாம சிரிச்சுண்டு ஒக்காந்திருக்கா.."
"என்ன புஸ்தகம்டி அது.." அவள் கையில் இருந்ததை படக்கெனப் பிடிங்கிப் பார்த்தார்..
குழந்தைகளுக்கான கதைப் புத்தகமென அட்டைப் படத்தில் தெரிந்தது.. தூக்கி எறிந்தார் அதை..
" நன்னாருக்கு.. கல்யாணம் ஆகி புக்காத்துக்கு போக வேண்டிய வயசுல கதைபுத்தகத்த படுச்சுண்டு ஒக்காந்திரு.. அங்க போனப்பறம் அவா என்ன காரி துப்பட்டும்.."
பயத்துடன் கண்களில் மெள்ள நீர் கோர்த்தது.. அம்மாவை மெள்ள திரும்பிப் பார்த்தாள். அவள் கண்களால் சமாதானம் செய்தாள்..
"குழந்த ஏதோ நேரம் போலையேன்னு..."
" ஆமா.. இப்போ நேரம் போலயேன்னு கண்டத படிப்பா.. நாளைக்கு அங்க போயும் இதத்தான செய்வா.. பேசறா பாரு.. கூறுகெட்டத் தனமா.."
" சுகுமாரி... இது தான் கடைசி... இனிமே புஸ்தகத்த வெச்சுண்டு அங்கஇங்க ஒக்காந்துண்டு பல்ல காமிச்சுண்டு இருந்தியோ அவ்வளவு தான்.. ஜாக்ரதை
பொண்ணா அடக்கமா ஆத்து வேல கத்துண்டு இருக்கியா... குதிரு மாதிரி வளத்து வெச்சிருக்கேள்.. ஒரு வேலைக்கும் லாயிக்கு இல்லையேன்னு சம்மந்தி பேர் நாளைக்கு என்ன கேள்வி கேட்டா நான் எங்க போய் முட்டிக்கறது.. பொறந்த ஒன்னும் பொண்ணா போய்த் தொலஞ்சுடுத்து.. அடுத்தத எதையும் பெத்துக் குடுக்க உங்கம்மாக்கு துப்பு இல்லை.. வயத்த அடச்சுப் போச்சு.. பெண்ண பெத்தவன் தல குனிஞ்சு போக வேண்டிய துர்பாக்யம் எனக்கு... தலையெழுத்து.. இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்கா ஆத்து வேலய பண்ணப் பழகு.. புரியறதா.. போ...." அவர் கர்ஜிக்க மூச்சடைத்துப் போய் அடுக்களைக்குள் ஓடினாள் சுகுமாரி..
தொண்டையை அடைக்க கண்களில் நீர் வழிந்தது.. சத்தமில்லாமல் கேவிக் கேவி அழுதாள்.. பின்னால் வந்த ருக்மணி அவளை அணைத்துக் கொண்டு கண்களை அழுந்த துடைத்துவிட்டாள்..
" அழாதடி கண்ணு.. அப்பா உன்னோட நல்லதுக்கு தானே சொல்றார்.. நாளைக்கு இன்னொரு ஆத்துக்கு போக வேண்டியவ நீ.. அங்க போய் அவா எல்லாரையும் அனுசருச்சு போக வேண்டியது உன் கடமைம்மா.. பெரியவா எதாவது சொல்றான்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கும்.. இனிமே புஸ்தகத்த வெச்சுண்டு ஒக்காறப் படாது.. அம்மாவோட அடுக்களைல வேலய கவனுச்சுக்கோ.. சரியா.. தோளில் சாய்த்துக் கொண்டாள்..
"ருக்கு.. ருக்மணி.. அங்க என்ன பண்ணின்டு இருக்கே.. உன் பொண்ண சமாதானம் பண்ணது போதும்.. இங்க வா..."
ருக்மணி வெளியே வர பின்னால் வேதவல்லி பாட்டியும் நின்று கொண்டாள்..
" சம்மந்திப் பேர் நாளைக்கு சாயங்காலம் சம்மந்தம் பேச வர்ரா.. அவா முன்னாடி இவோ அங்க இங்க அலஞ்சுண்டு இருக்க போறா.. பாத்து உள்ளே இருந்துக்க சொல்லு.. நாப்பது பேர் வர்ராலாம் வண்டி கட்டிண்டு.. அத்தே , மாமா , சொந்தம் பந்தம்னு அவாத்து பேர் பெரும்படையாம்.. புரியறதா.. அவாளுக்கு வேண்டிய பக்ஷணங்கள் தயார் பண்ணிடு... கூடமாட ஒத்தாசைக்கு சுகுமாரியையும் வெச்சுக்கோ.. என்ன.. நான் போயி.. நம்மாத்து மனுஷள்கிட்ட சேதி சொல்லிட்டு வந்துட்ரேன்.." அவளது பதிலை எதிர்பாராமல் கட்டளை இட்டவாரு துண்டைத் தட்டி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பினார்..
ருக்மணி , வேதவல்லி முகத்தில் சந்தோஷ ரேகை ஊர்ந்தது...
" சுகுமாரி.. உன்ன பொண்ணு பாக்க வர்றாலாம் நாளைக்கு.. நன்னா அலங்காரம் பண்ணிக்கனும்.. ருக்கு.. அந்த மயில்கண் நிறத்துல பட்டுப் புடவை இருக்கே.. போன ஆடிக்கு வாங்கினதே.. அது புதுசாத்தானே இருக்கு அத கட்டிக்கச் சொல்லு.. தங்க விக்ரகம் மாதிரி ஜொலிப்பா... என் கண்ணு.." பாதிபோன பல்தெரிய சிரித்தபடி சுகுமாரியின் கன்னத்தை வருடியவாரு நெட்டி முறித்தாள் வேதவல்லி பாட்டி..
புதுப் புடவை கட்டிக் கொள்ளும் ஆசையில் கவலை மறந்து சிரித்தாள் சுகுமாரி..
நினைவுகளில் மூழ்கியவள் முகத்திலும் புன்னகை விரிந்திருந்தது..
.......
ஹாய் ரம்மி... எப்டிடி இருக்க... விரிந்த புன்னகையுடன் அவள் வீட்டின் உள் நுழைந்தாள் பவித்ரா...
ஹே.. ஒட்டகம்.. எப்டி இருக்கடி.. வாட் எ சர்ப்ரைஸ்.. என்னடி திடீர்னு வந்திருக்க.. ஒரு வாரமா ஆளயே காணும்... வா.. வா... அவளை இழுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு ஓடினாள் ரம்யா....
யேய்... கேக்கறேன்ல... என்ன ஒரு வாரமா ஆளையும் காணும் ஃபோனையும் காணும்.. என்ன ஆச்சு..
ஒ... ஒன்னுமில்லடி... எக்ஸாம்ஸ் வருதுல்ல.. அதான் படிப்புல மூழ்கிட்டேன்..
இன்னது... படிப்புல மூழ்கிட்டியா.. அடியே... என் காதுலயே பூ சுத்தாத.. உன்னப் பத்தி எனக்கு தெரியும்.. முகத்துலயும் சந்தோஷத்தையே காணும்.. குச்சி முட்டாய் வாங்கித் தரலைன்னு வீட்ல சண்ட போட்டியா... அப்பா எதாவது திட்டிட்டாரா.. ஆ.. ஹாஹா.. பெரிதாகச் சிரித்தாள்..
பவித்ராவிற்கு பக்கென்று இருந்தது.. பாட்டி கூறியது போல இவளும் கேட்கிறாளே என...
சீ... நான் ஹேப்பியாத்தான் இருக்கேன்... உங்களுக்கெல்லாம் தான் அப்டி தெரியுது...
உங்களுக்கா.... ஆ... அப்போ கன்பார்ம் தான்... எதோ திருட்டுத் தனம் பண்ணிருக்க.. ஒழுங்கா சொல்லிரு... இல்ல.. புடுச்சு கீழ தள்ளி விட்ருவேன்...
அமர்ந்திருந்த அவளை பிடித்து பின்னால் சாய்க்க....
ஏய்ய்ய்..... பக்கி... விடு என்ன..
ஹா.. ஹா... பவி.. உன் மூஞ்சியே காட்டிக் குடுத்திருது நீ மூட் அவுட்ல இருக்குன்னு.. என்கிட்ட சொல்லக் கூடாதா...
பவிக்கு கொஞ்சம் அவமானமாக இருந்தது... சே... இப்டி எல்லாருக்கும் தெரியும்படியா இருப்ப பவி.. நீ சுத்த வேஸ்ட்.." தன்னைத் தானே கடிந்து கொண்டாள்..
கொஞ்சம் அமைதியானவள் பேச ஆரம்பித்தாள்...
அன்னிக்கு அந்த துணிக்கடைல பாத்தோமே.. அந்த அம்மா, அவங்க பையன்...
ம்ம்ம்... நைஸ் கை... அழகா இருக்கான்ல....
ஆமா... அழகு.. அது ஒன்னுதான் குறைச்சல்.. முட்டாள்....
என்னடி ஆச்சு.....
அந்த அம்மா அவங்க வீட்டுக்கு வரனும்னு ஒரே பிடிவாதமா இருந்தாங்க.. நான் வரலைன்னு சொண்னேன். கேக்கல.. போன ஞாயித்து கிழமை வீட்டுக்கு வந்தே ஆகனும்னு கம்பல் பண்ணி கூட்டிட்டு போயிட்டாங்க..
ம்ம்ம்... சரி....
அங்க அவனும் இருந்தான்..
சோ வாட்....
"சரியான திமிருடி அவனுக்கு.. பெரிய இவனாட்டம் என்ன கண்டுக்கவே இல்ல.. என்ன இன்சல்ட் பண்ற மாதிரி தெனாவெட்டா நடந்துக்கிட்டான்.. எனக்கு செம்ம கடுப்பு... அவங்க வீடாச்சேன்னு அடக்கிட்டு இருந்தேன்.. இதுவே வெளி இடமா இருந்தா வேறமாதிரி ஆகியிருக்கும்..." ஜாக்ரதையாக அங்கு நடந்ததை முழுமையாகக் கூறாமல் மேலோட்டமாய் அவனது குற்றத்தை மட்டும் கூறினாள் பவித்ரா..
என்ன பத்திதான் உனக்கு தெரியுமே.. எனக்கு இந்த ஈகோ புடுச்சவங்களக் கண்டாலே பிடிக்காது.. தூர வெளகிடுவேன்னு...
ம்ம்ம்... அப்டி என்னதான்டி பண்ணான்..
அவன் ஏற்கனவே என்கிட்ட மிஸ்பிகேவ் பண்ணி திட்டு வாங்கினான்னு சொன்னேன்ல.. அத மனசுல வெச்சுகிட்டு திமிரா நடந்துகிட்டான்.. சரி.. அந்த மாமியோட முகத்துக்காக அவன்ட்ட ஃபார்மாலிட்டிக்கு பேசினேன்.. என்னவோ உலகத்துலயே இவன் ஒருத்தன் தான் ஆம்பள மாதிரி சீனக் காமிச்சுட்டு எழுந்து போயிட்டான்.. வந்த கோவத்துல செம்ம மூட் அவுட்.. ஒருவாரமா எனக்கு அத ஜீரணிக்கவே முடியல... அதான் எங்கயும் போல.. கோயிலுக்கு கூட.. போனா அந்த மாமிய திரும்ப பாக்கனும்.. என்னால சும்மா இருக்க முடியாது... தேவையில்லாம அவங்கள்ட இதைப்பத்தி பேசவும் முடியாது.. வேண்டாத வேலடி எனக்கு..
படபடவென அவள் பேச அவளை பார்த்துக் கொண்டிருந்தாள் ரம்யா....
ம்ஹூம்.. இந்த பசங்களுக்கே பெரிய இவனுங்கன்னு நெனப்பு... கொஞ்சம் அழகா ஹேன்ட்ஸமா இருந்தாப் போதும் வானத்துலேந்து வந்தவங்க மாதிரி திரிவாய்ங்க... நீ அவன விட்ருக்க கூடாதுடி.. நானா இருந்தா அந்த எடத்துலயே லெப்ட் அன்டு ரைட் வாங்கிருப்பேன்...
பவிக்குள் ஓர் சந்தோஷப் புன்னகை மின்னியது.. ஆமாடி நீ சொல்றது ரொம்ப கரெக்ட்... பெரிய இவன்னு நெனப்பு.. என்னலாம் பேசறான்....
என்னது.....
ஆ.... ஒ... ஒன்னுமில்ல... என்ன கண்டுக்காம தெனாவெட்டா போனான்ல அத சொன்னேன்..
ம்ம்ம்... பவி... இத இப்டியே விடக் கூடாது... அவனுக்கு நீ நோஸ் கட் குடுத்தே ஆகனும்.. அவனப் பாக்க அடுத்த சான்ஸ் வரும் போது ஒரு புடி புடுச்சிடு... நாம என்ன கிள்ளுக்கீரையா அவனுக்கு...
என்ன நடந்தது என முழுவதும் அறியாத ரம்யா பவியை ஏத்திவிட...
ம்ம்ம்... தலை அசைத்தாள் பவித்ரா..
தொடரும்..