Madhavan narayanan
Member
- Messages
- 60
- Reaction score
- 86
- Points
- 18
மார்கழித் திங்கள்..!
அத்யாயம் - 10
அத்தனை களேபரத்திலும் குருமூர்த்தி எந்தவித அக்கரையும் இன்றி மாப்பிள்ளை அலட்சியத்துடன் அமர்ந்திருப்பதை பார்த்த ருக்மணிக்கு என்னவோ போல் இருந்தது..
" என்னவோ பொண்ணு சோனியா இருந்தாலும் முகம் களையாத்தான் இருக்கு... என்னடா மூர்த்தி.. பாத்துண்டயா.. உனக்கு என்ன மனசுல படறது.." தன் மகனிடம் பர்வதம் கேட்க..
" நேக்கு என்னம்மா.. பெரியவா நீங்க பாத்து சொன்னா சரி.. கழுதைக்கு தாலி கட்டச் சொன்னா கூட சரிதான்.." சிரித்தபடி தலை அசைத்தான்..
பர்வதத்தின் முகத்தில் பெருமை தாண்டவமாடியது.. " எம்பையன் நான் கிழுச்ச கோட்ட தாண்ட மாட்டான்.. அப்படி வளத்திருக்கேன்.. சரி.. இந்தாங்கானும்.. சுப்ரமண்யம்.. உங்காத்து பொண்ணுக்கு என்ன நகை போடுவேள்.. ம்ம்.. ஏன்ணா.. நானே எல்லாத்தையும் கேட்டுண்டு இருக்கேனே. நீங்க விஜாரிக்கலாம்லயோ.. " சதாசிவத்தை பார்த்துக் கடிந்து கொண்டாள்..
தொண்டையை செறுமிக் கொண்டு பேச ஆரமித்தார் சதாசிவம்..
" பொண்ணு வயசுல சின்னவளா இருந்தாலும் எம்பையனுக்கு ஏத்தவளாத்தான் இருக்கா.. அழகா இல்லாட்டாலும் லக்ஷணம் இருக்கு.. பையனுக்கும் உம்ம பொண்ணுக்கும் ஏழுவயசுதான் வித்யாசம்.. பரவால்லை.. அவனும் சின்னவன் தானே.. நான் ஜாதகம் பாத்துட்டேன்.. எட்டு பொருத்தம் கூடி இருக்கு... அதுக்காகத் தான் பொண்ண பாக்கவே வந்தோம்.. எம் பையன் ஜாதகத்துக்கு அவா அவா வரிசைல வந்து நிக்கறா.. இருந்தாலும் எங்க அந்தஸ்துன்னு இருக்கேள்யோ.. உங்களுக்கு தெரியாதது இல்லை.. எம்பாட்டனார் புலியூர் கோட்டை ஜட்ஜாக்கும்.. என் தோப்பனார் பேர் போன மாஜிஸ்தரேட்.. அப்படிபட்ட பரம்பரை.. எங்காத்து சொத்து பத்து ஆயிரக் கணக்கா இருக்கு.. அதெல்லாம் சொல்ல வேண்டிய அவஸ்யம் இல்லை.. அதுக்கேத்தா மாதிரி உங்க பொண்ணுக்கு நகை நட்டு போட்டு அனுப்ப இஷ்டம்னா அடுத்து மேற்கொண்டு பேசிப்பிடலாம்..." அவர் கூறிக் கொண்டே போக சுப்ரமண்யம் முகம் சோர்ந்தது..
" எனக்கு குமாஸ்தா உத்யோகம் தான்.. அப்பா புரோகிதம் தான்.. அவருக்கு சம்பாத்யம்னு பெருசா இல்லை.. பாட்டனார் சொத்தா நாலு ஏக்கரா நெலம் இருக்கு.. இந்த வீடு.. அவ்வளவு தான்... அதுபோக என் சம்பாத்யத்லே இவளுக்குன்னு இருபது சவரன் நகை சேத்திருக்கேன்... பொறந்ததும் பொண்ணா போய்டுத்து.. என்ன பண்றது.. என்பலத்துக்கு என்ன ஆகுமோ அத செஞ்சுடறேன்.. கல்யாணத்தையும் நன்னா நடத்திடறேன்.. " தயங்கித் தயங்கிக் கூறினார்..
" என்னது.. இருபது பவுனா.. நன்னா இருக்கு போங்கோ.. எங்காத்து தூப்பா குழிக்கு ஆகுமா அது... " பர்வதம் உறும..
பேச இயலாமல் பார்த்துக் கொண்டிருந்தார் சுப்ரமண்யம்..
" தோ பாருங்கோ... அம்பது பவுன் நகை போட்டுடுங்கோ.. பையனுக்குன்னு மோதிரம் செயின் அது இதுன்னு ஒரு அஞ்சு பவுன்.. அதெல்லாம் முறைதானே.. இதுக்கு ஒத்துண்டேள்னா நல்ல நாள் பாத்து சொந்தக்காராள கூட்டி மண்டபத்துல தட்ட மாத்திண்டடலாம்.. " பர்வதம் தணிந்து வர..
" ஏண்டி பர்வதம்... உங்க அந்தஸ்துக்கு சரியான இடம் இல்லையேடி.. வேண்டாம்னு சொல்லிட்டு நடைய கட்ட வேண்டியதுதானே.. இதுக்கேன் இத்தன மெனக்கெடறே.." பின்னால் இருந்த பர்வதத்தின் நெருங்கிய சொந்தமும் அவளது நண்பியுமான லோகநாயகி கிசுகிசுத்தாள்..
" அப்டி இல்லேடி லோகு.. இந்த மாதிரி இடமா இருந்தாத்தான் சம்பந்தக்காரா கை கட்டி வாயப் பொத்திண்டு நிப்பா.. அதுவுமில்லாம...." குரலை மெள்ள தாழ்த்தி.. " நம்ம சீமந்தபுத்ரன் கல்யாண குணத்துக்கு இந்த மாதிரி இடம்தான்டி லோகு தோதா இருக்கும்.. அந்த பிராமணனப் பாரு கப்சிப்புன்னு ஒக்காந்துண்டு இருக்கறத.. ஹாஹா..." சிரித்தாள்..
" மூளைக்காரிதான்டி பர்வதம் நீ.." லோகுவும் சிரித்தாள்.
மந்தகாசப் புன்னகையுடன் நிமிர்ந்த பர்வதம் சுப்ரமணியம் சொல்லப் போவதற்காய் காத்திருந்தாள்..
பின்னால் திரும்பி ருக்மணியையும் சுகுமாரியையும் கொஞ்சம் வெறுப்புடன் பார்த்தவர்.. " அம்பது பவுன்னா இப்ப ஒடனே ஆகாதே.. முப்பது பவுன் வேணும்னா யார் கையகாலப் புடுச்சாவது தேத்திடுவேன்.. இங்க நான் செஞ்சாத்தான் உண்டு.. உபகாரம் பண்ணன்னு எந்த சொந்தமும் சரியா இல்லை.. கல்யாணத்துக்கு முப்பது பவுன் போட்டுடறேன்.. மீதிய ஒரு ஆறுமாச காலம் பொறுத்து போட்டுடறேன்.. இந்த சுப்ரமண்யம் சொன்ன வாக்க தவறமாட்டான்... நம்புங்கோ..."
பர்வதமும் சதாசிவமும் ஒருவரை ஒருவரை பார்க்க பின்னால் லோகநாயகி காதில் கிசுகிசுத்தாள்.. " ஏன்டி பர்வதம்.. அந்த மனுஷன் உடனே ஒத்துண்ட்டானே.. பொண்ணுக்கு ஏதும் குறை இருக்கான்னு இப்பவே நன்னா பாத்துண்டுடு.. பின்னாடி நீ கஷ்டப்படப் போறே... போ.. போய் பாத்துடு.."
அவள் தூண்டிவிட..
மெள்ள எழுந்து சுகுமாரியின் அருகில் வந்தவள் அவளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தாள்.. கழுத்தில் அணிந்திருந்த நகையை கைகளில் தாங்கி பரிசோதித்தாள்..
" பொண்ணுக்கு கைகால்லாம் ஊனமில்லையே.. ம்ம்ம்.." கேட்டவாரே அவள் தாடையை தூக்கி தலையை இங்கும் அங்கும் திருப்பிப் பார்த்தாள்..
" ஐயயோ.. அதெல்லாம் ஒரு ஊனமும் இல்லை.. நன்னா நடப்பா.. கைகாலெல்லாம் நன்னா இருக்கு.." பதறினார் சுப்ரமண்யம்.
" வர்ரச்சே காலத் தேச்சு தேச்சு நடந்து வந்தாளே.. உங்க பொண்ணுக்கு நடக்க தெரியாதா.. காலத்தேச்சுண்டு நடந்தா ஆத்துக்கு ஆகாதுன்னு சொல்லித் தரலியா.. நன்னாத்தான் வளத்திருக்கேள்.. ம்ஹூம்.." சரிசரி.. இந்தாடி மா... ம்ம்.. பேரென்ன.. சந்ரகுமாரியா சூரியகுமாரியா..."
" சு.. சுகுமாரி..." மெதுவாய் அவள் சொல்ல..
" என்ன பேரோ... சுகுமாரி.. கருமாரின்னு.. ஹ்ம்... சரி... சுகுமாரி.. எங்காத்லே மனுஷாள் அதிகம்.. சொந்தம் பந்தம்னுட்டு பெருங்குடும்பம்.. புரியறதா.. நீ தான் ஆத்து மூத்த நாட்டுப் பொண்ணா வரப்போறவ.. அந்த ஸ்தானத்த புருஞ்சுண்டு என்னென்ன கத்துக்கனுமோ கல்யாணத்துக்கு முந்தி சுருக்க கத்துக்கோ.. என்ன.. பின்ன உன்னால எங்கபேர் கெட்டுடப்டாது.. புருஞ்சதா.." பர்வதம் பார்த்த பார்வையில் வெலவெலத்து வேகமாக தலை அசைத்தாள் சுகுமாரி..
திரும்பி வந்து அமர்ந்த பர்வதம் சதாசிவத்திடம் கண்களால் கேள்வி கேட்டாள்.. அவர் சரியென தலை அசைத்தார்..
" ஏதோ ஜாதகப் பொருத்தம் நன்னாருக்கு.. மத்தபடி எங்க அந்தஸ்த்துக்கு ஏத்த இடம் இல்லைதான்... ம்ம்.. என்ன பண்றது.. பொறுத்துக்க வேண்டியதுதான்.. இது தான் அமையனும்னு என் பையன் தலைல எழுதி இருக்கோ என்னவோ.. என்னடா குரு மூர்த்தி.. பொண்ண பிடிச்சிருக்கேள்யோ.. அப்பறம் நாங்க சொன்னமேன்னு நீ கட்டிண்டு கஷ்டப் படப்படாது.. வாழப் போறது நீ தான்.. ஒருதரைக்கு ரெண்டுதரம் யோஜனை பண்ணி சொல்லு.. " பர்வதம் தன் பையனின் ஒப்புதலை கேட்க..
சுகுமாரியை ஒரு முறை ஏறஇறங்கப் பார்த்து பல்இளித்தான்.. " ம்ம்ம்... சரிமா.. நேக்கு பிடிச்சிருக்கு.. பேசி முடுச்சுடுங்கோ.."
" பையனுக்கு பிடிச்சதனால இந்த சம்பந்தத்த ஏத்துக்கறோம்.. மத்த சமாச்சாரம்லாம் ஆத்துக்குபோயி கலந்து பேசி கடிதாசி போட்டுடலாம்.. என்ன நான் சொல்றது.." பர்வதம் முடிவெடுக்க தலை ஆட்டினார் சதாசிவம்..
உள்ளே இருந்து பார்த்துக் கொண்டிருந்த ருக்மணிக்கு கோபமாக வந்தது.. குருமூர்த்தியின் அலட்சிய போக்கும் , பர்வதத்தின் டாம்பீகமும் அவளுக்கு வெறுப்பை தந்தது.. சுகுமாரியை பார்வையிட்டாள்.. பருந்திடம் அகப்பட்ட கோழிக்குஞ்சு போல் அவள் முகம் தடுமாற்றத்துடன் இருக்க , மாட்டுச் சந்தையில் விற்கப்படும் மாடு போல் தன் மகளை ஏலம் விடுவதைக்கண்டு மனம் கொதித்தது.. மெள்ள முன்னால் வந்து சுகுமாரியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்..
" என்ன.. சுப்ரமண்யம்.. சந்தோஷம் தானே.. பெரிய இடமா உம்ம பொண்ணுக்கு அமஞ்சது உமக்கு அதிர்ஷ்டம் தான்.." சதாசிவம் பெருமையுடன் பேச..
" மஹா சந்தோஷம்.. பெரியவா கருணை.. இப்படிபட்ட வரன் அமைஞ்சது நேக்கு பெருமைதான்.. உங்க சம்பந்தம் நேக்கு கெளரவம்.. தயை பண்ணி எல்லாரும் போஜனம் பண்ணிட்டு போகனும்.. " பவ்யமாகக் கூறினார் சுப்ரமண்யம்.
ருக்மணியும் , செம்பா மாமியும் இன்னும் இரண்டு பெண்கள் இலையைப் போட்டு பறிமாற அனைவரும் சிலபல குறைகளைக் கூறியபடி சப்புக் கொட்டி சாப்பிட்டனர்..
" பக்ஷணம்லாம் யார் பண்ணது.. மைசூர்பாக்லே நெய்யே சேக்கலயா.. ஒரே கல்லாட்டம் இருந்தது.. தேங்குழல் பல்லுபோனவா சாப்டறா மாதிரி ஒரே வதங்கல்.. திருக்கன்னமுதுலே முந்திரியை தேட வேண்டி இருக்கு.. ஹூம்.. கல்யாண பந்திலயாவது கண்ல காமிப்பாளோ இல்ல சிக்கனமா இப்படியே முடுச்சுடுவாளோ என்னவோ.." லோகநாயகி தன் பங்குக்கு அர்ச்சித்தாள்..
" அய்யயோ.. ஏதோ அவசரகதியா பண்ணிலதால இப்டி ஆயிடுத்து.. க்ஷமிக்கனும்.. கல்யாணத்த ஒரு குறையும் இல்லாம பண்ணிடறேன்..." இழைந்தார் சுப்ரமண்யம்..
" சரி.. நாங்க கிளம்பறோம்.. உங்க பொண்ண எங்காத்துக்கு அனுப்ப தயார் பண்ணி வைங்கோ.. எதச்சொன்னாலும் மலங்க மலங்க முழிச்சுண்டு நிக்கறா.. சரியா.." கூறிவிட்டு கூட வந்த படையுடன் ஒருவழியாய் கிளம்பினர் பர்வதம் குடும்பத்தினர்..
அவர்களை வழி அனுப்பிவிட்டு உள்ளே நுழைந்த சுப்ரமண்யத்திற்கு தலையெல்லாம் வலித்தது.. அவர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் தலையைத் தலையை ஆட்டியதில் கழுத்தெல்லாம் வலி எடுத்தது..
கூடி இருந்த அக்கம் பக்கத்தினரும் விடை பெற்று கிளம்ப , வாடிய பூவாய் அகம் பழைய நிலைக்கு திரும்பியது..
" ருக்கு.. அடியே ருக்கு.. காப்பி கொண்டு வா... ஒரே தலவேதனை.." சுப்ரமண்யம் தன் சுயரூபத்தை எடுத்து கொள்ள..
உள்ளிருந்த ருக்மணிக்கு கோபம் தலைக்கேறியது.. அடக்கிக் கொண்டு காபியை கலந்து கொண்டு வந்து கொடுத்தாள்..
" ஹப்பா... ஒரு வழியா எப்டியோ பேசி இந்த வரன முடிச்சாச்சு.. பாத்தியா.. அவா என்னன்ன கேக்கறான்னு.. உன் பொண்ண நீ வளர்த்த லட்சணம் அப்டி.. சந்தி சிரிக்க வெச்சுட்டே.. இன்னும் புஸ்தகத்த குடுத்து நடுகூடத்ல உட்கார வெச்சு , படிச்சு சிரிச்சுண்டு இருக்க சொல்லு.. இன்னும் நன்னாருக்கும்.. " வார்த்தையால் குத்தினார்..
அதுவரை அமைதியாக இருந்த ருக்மணி வாயைத் திறந்தாள்..
" எம்பொண்ண நான் நன்னாத்தான் வளத்திருக்கேன்.."
மெல்லிய அதிர்ச்சியுடன் அவளை ஏறெடுத்துப் பார்த்தவர் குரல் தடித்து வந்தது.. " என்ன.. என்ன நன்னா வளத்திருக்கே.. வந்தவா முன்னாடி பதில் பேசத் தெரியாதைக்கு பேந்த பேந்த முழுச்சுண்டு கண்ண கசக்கிண்டு நிக்கறா.. வளத்திருக்காளாம்.. இந்த அசமஞ்சத்த கரைசேர்க்க நான் இன்னும் எவன் எவன் கால்ல விழனுமோ.. ஹூம்.. வந்துட்டா.. வாயை நீட்டி முழச்சுண்டு.. போடி உள்ள.."
அங்கயே நின்று கொண்டிருந்தாள் ருக்மணி..
" என்னடி.. சொல்லிண்டே இருக்கேன்.. நின்னுண்டே இருக்க.. " அவர் உரும...
" சுகுமாரிக்கு இந்த சம்பந்தம் வேண்டாம்.. " அவரை தீர்க்கமாக பார்த்து கூறினாள்..
" என்னது... வேண்டாமா.. நீ யாரு அத முடிவு பண்ண.. நோக்கென்ன தெரியும்.. வேண்டாமாமே.. வந்துட்டா.. போடி உள்ள.. சமைச்சு போட்டமா , மிச்சத்த தின்னமான்னு இரு.. வாய் பேசினே.. எட்டி மிதிச்சுப்புடுவேன்.."
" எம்பொண்ணுக்கு இந்த வரன் வேண்டாம்கறேன்.. அவள புதைகுழில தள்ள நான் விடமாட்டேன்.. இப்டி எதுவும் பேசாதைக்கு எல்லாத்தையும் கேட்டுண்டு கஷ்டப்பட்டதெல்லாம் என்னோட முடியட்டும்.. என் குழந்தைய கண்ணக் கட்டி காட்ல விட நான் தயாரா இல்லே.. "
" என்னடி பெருசா குத்தம் கண்டுபுடுச்சுட்டே அவாள்ட்ட.. எவ்வளவு பெரிய பரம்பரை... சொத்து பத்து உள்ளவா.. டோக்கு டோக்கா பணம் வர்ரது... மாப்பிள்ளை ராஜாவாட்டம் இருக்கான்... இன்னும் என்ன குறை உம்பொண்ணுக்கு.. அவ லட்சனத்துக்கு இந்த மாதிரி வரன் அமைய அவ பூர்வ ஜன்ம புண்யம் பண்ணிருக்கனும்.. இந்த வரன விட்டுட்டு தெருவுல போற பரதேசிய கட்டிவைக்க சொல்றியா.. ம்ம்ம்... என் கெளரவத்துக்கு ஏத்த எடமாத்தான் பாத்திருக்கேன்.. அதுதான் நேக்கு பெருமை.. வேண்டாமாம்.. அறிவு கெட்டவளே.. தத்து பித்துன்னு உளறிண்டு.. போடி.. " கர்ஜித்தார்..
" பாத்தேனே உங்க கெளரவத்த.. எம்பொண்ண கொலு பொம்மை மாதிரி நடுக்கூடத்தில நிக்க வெச்சு யாரோ ஒரு பொம்மணாட்டிய பேச விட்டு வேடிக்க பாத்துண்டு கூத்தடுச்சேளே.. பெருமையாம் பெருமை.. பையன் ராஜாவாட்டம் இருந்தா போதுமா... அவன் பார்வையும் , லட்சனமும்.. சை.. எம்பொண்ண சபைல நிக்க வெச்சு ஆளாளுக்கு அவள தூத்திண்டு இருக்கா.. அவன்பாட்டுக்கு சிரிச்சுண்டு உட்காந்திருக்கான்.. இப்பவே இப்டினா.. நாளைக்கு எம்பொண்ண வெச்சு எப்டி காப்பாத்துவான்.. அவன் அம்மா பேச்சக் கேட்டுண்டு இவள இம்சபடுத்த மாட்டான்னு என்ன நிச்சயம்.. அந்த பையன் நம்ம பொண்ணுக்கு வேண்டாம்.. " கோபத்துடன் ருக்மணி சத்தமாகப் பேச..
" என்னடி... விட்டா பேசின்டே போறே.. அவ்வளவு தைரியம் வந்துடுத்தோ.. உன்ன.. " உக்ரமான சுப்ரமண்யம் கை உயர்த்த..
பளார் எனக் கன்னத்தில் அறை விழுந்தது ருக்மணிக்கு... !
அதை எதிர்பார்க்காத ருக்மணி துடிதுடித்து கைகளால் அழுத்திக் கொண்டாள்.. கண்களில் நீர் வழிந்தது..
உள்ளறையிலிருந்து இதை பார்த்துக் கொண்டிருந்த சுகுமாரிக்கு உடம்பெல்லாம் நடுங்கிப் போனது..
" ஏய்.. சுகுமாரி வாடி இங்க.. " அப்பாவின் கர்ஜனையில் பயந்து தடுமாறியபடி அவர் முன்னால் வந்து நின்றாள்.
" தோ பார்.. இவ சொல்றத கேட்டுண்டு கல்யாணம் வேண்டாம் அது இதுன்னு முரண்டு புடுச்சியோ... அவ்ளவுதான்.. ஜாக்ரதை.. ஒழுங்கா இருக்கனும்.. புருஞ்சதா.." அவரின் அதிர்ந்த குரலுக்கு பதில் ஏதும் கூறவரது வேகமாக தலை அசைத்து சம்மதித்தாள் சுகுமாரி..!
For Comments plz click below link
Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/
அத்யாயம் - 10
அத்தனை களேபரத்திலும் குருமூர்த்தி எந்தவித அக்கரையும் இன்றி மாப்பிள்ளை அலட்சியத்துடன் அமர்ந்திருப்பதை பார்த்த ருக்மணிக்கு என்னவோ போல் இருந்தது..
" என்னவோ பொண்ணு சோனியா இருந்தாலும் முகம் களையாத்தான் இருக்கு... என்னடா மூர்த்தி.. பாத்துண்டயா.. உனக்கு என்ன மனசுல படறது.." தன் மகனிடம் பர்வதம் கேட்க..
" நேக்கு என்னம்மா.. பெரியவா நீங்க பாத்து சொன்னா சரி.. கழுதைக்கு தாலி கட்டச் சொன்னா கூட சரிதான்.." சிரித்தபடி தலை அசைத்தான்..
பர்வதத்தின் முகத்தில் பெருமை தாண்டவமாடியது.. " எம்பையன் நான் கிழுச்ச கோட்ட தாண்ட மாட்டான்.. அப்படி வளத்திருக்கேன்.. சரி.. இந்தாங்கானும்.. சுப்ரமண்யம்.. உங்காத்து பொண்ணுக்கு என்ன நகை போடுவேள்.. ம்ம்.. ஏன்ணா.. நானே எல்லாத்தையும் கேட்டுண்டு இருக்கேனே. நீங்க விஜாரிக்கலாம்லயோ.. " சதாசிவத்தை பார்த்துக் கடிந்து கொண்டாள்..
தொண்டையை செறுமிக் கொண்டு பேச ஆரமித்தார் சதாசிவம்..
" பொண்ணு வயசுல சின்னவளா இருந்தாலும் எம்பையனுக்கு ஏத்தவளாத்தான் இருக்கா.. அழகா இல்லாட்டாலும் லக்ஷணம் இருக்கு.. பையனுக்கும் உம்ம பொண்ணுக்கும் ஏழுவயசுதான் வித்யாசம்.. பரவால்லை.. அவனும் சின்னவன் தானே.. நான் ஜாதகம் பாத்துட்டேன்.. எட்டு பொருத்தம் கூடி இருக்கு... அதுக்காகத் தான் பொண்ண பாக்கவே வந்தோம்.. எம் பையன் ஜாதகத்துக்கு அவா அவா வரிசைல வந்து நிக்கறா.. இருந்தாலும் எங்க அந்தஸ்துன்னு இருக்கேள்யோ.. உங்களுக்கு தெரியாதது இல்லை.. எம்பாட்டனார் புலியூர் கோட்டை ஜட்ஜாக்கும்.. என் தோப்பனார் பேர் போன மாஜிஸ்தரேட்.. அப்படிபட்ட பரம்பரை.. எங்காத்து சொத்து பத்து ஆயிரக் கணக்கா இருக்கு.. அதெல்லாம் சொல்ல வேண்டிய அவஸ்யம் இல்லை.. அதுக்கேத்தா மாதிரி உங்க பொண்ணுக்கு நகை நட்டு போட்டு அனுப்ப இஷ்டம்னா அடுத்து மேற்கொண்டு பேசிப்பிடலாம்..." அவர் கூறிக் கொண்டே போக சுப்ரமண்யம் முகம் சோர்ந்தது..
" எனக்கு குமாஸ்தா உத்யோகம் தான்.. அப்பா புரோகிதம் தான்.. அவருக்கு சம்பாத்யம்னு பெருசா இல்லை.. பாட்டனார் சொத்தா நாலு ஏக்கரா நெலம் இருக்கு.. இந்த வீடு.. அவ்வளவு தான்... அதுபோக என் சம்பாத்யத்லே இவளுக்குன்னு இருபது சவரன் நகை சேத்திருக்கேன்... பொறந்ததும் பொண்ணா போய்டுத்து.. என்ன பண்றது.. என்பலத்துக்கு என்ன ஆகுமோ அத செஞ்சுடறேன்.. கல்யாணத்தையும் நன்னா நடத்திடறேன்.. " தயங்கித் தயங்கிக் கூறினார்..
" என்னது.. இருபது பவுனா.. நன்னா இருக்கு போங்கோ.. எங்காத்து தூப்பா குழிக்கு ஆகுமா அது... " பர்வதம் உறும..
பேச இயலாமல் பார்த்துக் கொண்டிருந்தார் சுப்ரமண்யம்..
" தோ பாருங்கோ... அம்பது பவுன் நகை போட்டுடுங்கோ.. பையனுக்குன்னு மோதிரம் செயின் அது இதுன்னு ஒரு அஞ்சு பவுன்.. அதெல்லாம் முறைதானே.. இதுக்கு ஒத்துண்டேள்னா நல்ல நாள் பாத்து சொந்தக்காராள கூட்டி மண்டபத்துல தட்ட மாத்திண்டடலாம்.. " பர்வதம் தணிந்து வர..
" ஏண்டி பர்வதம்... உங்க அந்தஸ்துக்கு சரியான இடம் இல்லையேடி.. வேண்டாம்னு சொல்லிட்டு நடைய கட்ட வேண்டியதுதானே.. இதுக்கேன் இத்தன மெனக்கெடறே.." பின்னால் இருந்த பர்வதத்தின் நெருங்கிய சொந்தமும் அவளது நண்பியுமான லோகநாயகி கிசுகிசுத்தாள்..
" அப்டி இல்லேடி லோகு.. இந்த மாதிரி இடமா இருந்தாத்தான் சம்பந்தக்காரா கை கட்டி வாயப் பொத்திண்டு நிப்பா.. அதுவுமில்லாம...." குரலை மெள்ள தாழ்த்தி.. " நம்ம சீமந்தபுத்ரன் கல்யாண குணத்துக்கு இந்த மாதிரி இடம்தான்டி லோகு தோதா இருக்கும்.. அந்த பிராமணனப் பாரு கப்சிப்புன்னு ஒக்காந்துண்டு இருக்கறத.. ஹாஹா..." சிரித்தாள்..
" மூளைக்காரிதான்டி பர்வதம் நீ.." லோகுவும் சிரித்தாள்.
மந்தகாசப் புன்னகையுடன் நிமிர்ந்த பர்வதம் சுப்ரமணியம் சொல்லப் போவதற்காய் காத்திருந்தாள்..
பின்னால் திரும்பி ருக்மணியையும் சுகுமாரியையும் கொஞ்சம் வெறுப்புடன் பார்த்தவர்.. " அம்பது பவுன்னா இப்ப ஒடனே ஆகாதே.. முப்பது பவுன் வேணும்னா யார் கையகாலப் புடுச்சாவது தேத்திடுவேன்.. இங்க நான் செஞ்சாத்தான் உண்டு.. உபகாரம் பண்ணன்னு எந்த சொந்தமும் சரியா இல்லை.. கல்யாணத்துக்கு முப்பது பவுன் போட்டுடறேன்.. மீதிய ஒரு ஆறுமாச காலம் பொறுத்து போட்டுடறேன்.. இந்த சுப்ரமண்யம் சொன்ன வாக்க தவறமாட்டான்... நம்புங்கோ..."
பர்வதமும் சதாசிவமும் ஒருவரை ஒருவரை பார்க்க பின்னால் லோகநாயகி காதில் கிசுகிசுத்தாள்.. " ஏன்டி பர்வதம்.. அந்த மனுஷன் உடனே ஒத்துண்ட்டானே.. பொண்ணுக்கு ஏதும் குறை இருக்கான்னு இப்பவே நன்னா பாத்துண்டுடு.. பின்னாடி நீ கஷ்டப்படப் போறே... போ.. போய் பாத்துடு.."
அவள் தூண்டிவிட..
மெள்ள எழுந்து சுகுமாரியின் அருகில் வந்தவள் அவளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தாள்.. கழுத்தில் அணிந்திருந்த நகையை கைகளில் தாங்கி பரிசோதித்தாள்..
" பொண்ணுக்கு கைகால்லாம் ஊனமில்லையே.. ம்ம்ம்.." கேட்டவாரே அவள் தாடையை தூக்கி தலையை இங்கும் அங்கும் திருப்பிப் பார்த்தாள்..
" ஐயயோ.. அதெல்லாம் ஒரு ஊனமும் இல்லை.. நன்னா நடப்பா.. கைகாலெல்லாம் நன்னா இருக்கு.." பதறினார் சுப்ரமண்யம்.
" வர்ரச்சே காலத் தேச்சு தேச்சு நடந்து வந்தாளே.. உங்க பொண்ணுக்கு நடக்க தெரியாதா.. காலத்தேச்சுண்டு நடந்தா ஆத்துக்கு ஆகாதுன்னு சொல்லித் தரலியா.. நன்னாத்தான் வளத்திருக்கேள்.. ம்ஹூம்.." சரிசரி.. இந்தாடி மா... ம்ம்.. பேரென்ன.. சந்ரகுமாரியா சூரியகுமாரியா..."
" சு.. சுகுமாரி..." மெதுவாய் அவள் சொல்ல..
" என்ன பேரோ... சுகுமாரி.. கருமாரின்னு.. ஹ்ம்... சரி... சுகுமாரி.. எங்காத்லே மனுஷாள் அதிகம்.. சொந்தம் பந்தம்னுட்டு பெருங்குடும்பம்.. புரியறதா.. நீ தான் ஆத்து மூத்த நாட்டுப் பொண்ணா வரப்போறவ.. அந்த ஸ்தானத்த புருஞ்சுண்டு என்னென்ன கத்துக்கனுமோ கல்யாணத்துக்கு முந்தி சுருக்க கத்துக்கோ.. என்ன.. பின்ன உன்னால எங்கபேர் கெட்டுடப்டாது.. புருஞ்சதா.." பர்வதம் பார்த்த பார்வையில் வெலவெலத்து வேகமாக தலை அசைத்தாள் சுகுமாரி..
திரும்பி வந்து அமர்ந்த பர்வதம் சதாசிவத்திடம் கண்களால் கேள்வி கேட்டாள்.. அவர் சரியென தலை அசைத்தார்..
" ஏதோ ஜாதகப் பொருத்தம் நன்னாருக்கு.. மத்தபடி எங்க அந்தஸ்த்துக்கு ஏத்த இடம் இல்லைதான்... ம்ம்.. என்ன பண்றது.. பொறுத்துக்க வேண்டியதுதான்.. இது தான் அமையனும்னு என் பையன் தலைல எழுதி இருக்கோ என்னவோ.. என்னடா குரு மூர்த்தி.. பொண்ண பிடிச்சிருக்கேள்யோ.. அப்பறம் நாங்க சொன்னமேன்னு நீ கட்டிண்டு கஷ்டப் படப்படாது.. வாழப் போறது நீ தான்.. ஒருதரைக்கு ரெண்டுதரம் யோஜனை பண்ணி சொல்லு.. " பர்வதம் தன் பையனின் ஒப்புதலை கேட்க..
சுகுமாரியை ஒரு முறை ஏறஇறங்கப் பார்த்து பல்இளித்தான்.. " ம்ம்ம்... சரிமா.. நேக்கு பிடிச்சிருக்கு.. பேசி முடுச்சுடுங்கோ.."
" பையனுக்கு பிடிச்சதனால இந்த சம்பந்தத்த ஏத்துக்கறோம்.. மத்த சமாச்சாரம்லாம் ஆத்துக்குபோயி கலந்து பேசி கடிதாசி போட்டுடலாம்.. என்ன நான் சொல்றது.." பர்வதம் முடிவெடுக்க தலை ஆட்டினார் சதாசிவம்..
உள்ளே இருந்து பார்த்துக் கொண்டிருந்த ருக்மணிக்கு கோபமாக வந்தது.. குருமூர்த்தியின் அலட்சிய போக்கும் , பர்வதத்தின் டாம்பீகமும் அவளுக்கு வெறுப்பை தந்தது.. சுகுமாரியை பார்வையிட்டாள்.. பருந்திடம் அகப்பட்ட கோழிக்குஞ்சு போல் அவள் முகம் தடுமாற்றத்துடன் இருக்க , மாட்டுச் சந்தையில் விற்கப்படும் மாடு போல் தன் மகளை ஏலம் விடுவதைக்கண்டு மனம் கொதித்தது.. மெள்ள முன்னால் வந்து சுகுமாரியை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்..
" என்ன.. சுப்ரமண்யம்.. சந்தோஷம் தானே.. பெரிய இடமா உம்ம பொண்ணுக்கு அமஞ்சது உமக்கு அதிர்ஷ்டம் தான்.." சதாசிவம் பெருமையுடன் பேச..
" மஹா சந்தோஷம்.. பெரியவா கருணை.. இப்படிபட்ட வரன் அமைஞ்சது நேக்கு பெருமைதான்.. உங்க சம்பந்தம் நேக்கு கெளரவம்.. தயை பண்ணி எல்லாரும் போஜனம் பண்ணிட்டு போகனும்.. " பவ்யமாகக் கூறினார் சுப்ரமண்யம்.
ருக்மணியும் , செம்பா மாமியும் இன்னும் இரண்டு பெண்கள் இலையைப் போட்டு பறிமாற அனைவரும் சிலபல குறைகளைக் கூறியபடி சப்புக் கொட்டி சாப்பிட்டனர்..
" பக்ஷணம்லாம் யார் பண்ணது.. மைசூர்பாக்லே நெய்யே சேக்கலயா.. ஒரே கல்லாட்டம் இருந்தது.. தேங்குழல் பல்லுபோனவா சாப்டறா மாதிரி ஒரே வதங்கல்.. திருக்கன்னமுதுலே முந்திரியை தேட வேண்டி இருக்கு.. ஹூம்.. கல்யாண பந்திலயாவது கண்ல காமிப்பாளோ இல்ல சிக்கனமா இப்படியே முடுச்சுடுவாளோ என்னவோ.." லோகநாயகி தன் பங்குக்கு அர்ச்சித்தாள்..
" அய்யயோ.. ஏதோ அவசரகதியா பண்ணிலதால இப்டி ஆயிடுத்து.. க்ஷமிக்கனும்.. கல்யாணத்த ஒரு குறையும் இல்லாம பண்ணிடறேன்..." இழைந்தார் சுப்ரமண்யம்..
" சரி.. நாங்க கிளம்பறோம்.. உங்க பொண்ண எங்காத்துக்கு அனுப்ப தயார் பண்ணி வைங்கோ.. எதச்சொன்னாலும் மலங்க மலங்க முழிச்சுண்டு நிக்கறா.. சரியா.." கூறிவிட்டு கூட வந்த படையுடன் ஒருவழியாய் கிளம்பினர் பர்வதம் குடும்பத்தினர்..
அவர்களை வழி அனுப்பிவிட்டு உள்ளே நுழைந்த சுப்ரமண்யத்திற்கு தலையெல்லாம் வலித்தது.. அவர்கள் கேட்ட கேள்விக்கெல்லாம் தலையைத் தலையை ஆட்டியதில் கழுத்தெல்லாம் வலி எடுத்தது..
கூடி இருந்த அக்கம் பக்கத்தினரும் விடை பெற்று கிளம்ப , வாடிய பூவாய் அகம் பழைய நிலைக்கு திரும்பியது..
" ருக்கு.. அடியே ருக்கு.. காப்பி கொண்டு வா... ஒரே தலவேதனை.." சுப்ரமண்யம் தன் சுயரூபத்தை எடுத்து கொள்ள..
உள்ளிருந்த ருக்மணிக்கு கோபம் தலைக்கேறியது.. அடக்கிக் கொண்டு காபியை கலந்து கொண்டு வந்து கொடுத்தாள்..
" ஹப்பா... ஒரு வழியா எப்டியோ பேசி இந்த வரன முடிச்சாச்சு.. பாத்தியா.. அவா என்னன்ன கேக்கறான்னு.. உன் பொண்ண நீ வளர்த்த லட்சணம் அப்டி.. சந்தி சிரிக்க வெச்சுட்டே.. இன்னும் புஸ்தகத்த குடுத்து நடுகூடத்ல உட்கார வெச்சு , படிச்சு சிரிச்சுண்டு இருக்க சொல்லு.. இன்னும் நன்னாருக்கும்.. " வார்த்தையால் குத்தினார்..
அதுவரை அமைதியாக இருந்த ருக்மணி வாயைத் திறந்தாள்..
" எம்பொண்ண நான் நன்னாத்தான் வளத்திருக்கேன்.."
மெல்லிய அதிர்ச்சியுடன் அவளை ஏறெடுத்துப் பார்த்தவர் குரல் தடித்து வந்தது.. " என்ன.. என்ன நன்னா வளத்திருக்கே.. வந்தவா முன்னாடி பதில் பேசத் தெரியாதைக்கு பேந்த பேந்த முழுச்சுண்டு கண்ண கசக்கிண்டு நிக்கறா.. வளத்திருக்காளாம்.. இந்த அசமஞ்சத்த கரைசேர்க்க நான் இன்னும் எவன் எவன் கால்ல விழனுமோ.. ஹூம்.. வந்துட்டா.. வாயை நீட்டி முழச்சுண்டு.. போடி உள்ள.."
அங்கயே நின்று கொண்டிருந்தாள் ருக்மணி..
" என்னடி.. சொல்லிண்டே இருக்கேன்.. நின்னுண்டே இருக்க.. " அவர் உரும...
" சுகுமாரிக்கு இந்த சம்பந்தம் வேண்டாம்.. " அவரை தீர்க்கமாக பார்த்து கூறினாள்..
" என்னது... வேண்டாமா.. நீ யாரு அத முடிவு பண்ண.. நோக்கென்ன தெரியும்.. வேண்டாமாமே.. வந்துட்டா.. போடி உள்ள.. சமைச்சு போட்டமா , மிச்சத்த தின்னமான்னு இரு.. வாய் பேசினே.. எட்டி மிதிச்சுப்புடுவேன்.."
" எம்பொண்ணுக்கு இந்த வரன் வேண்டாம்கறேன்.. அவள புதைகுழில தள்ள நான் விடமாட்டேன்.. இப்டி எதுவும் பேசாதைக்கு எல்லாத்தையும் கேட்டுண்டு கஷ்டப்பட்டதெல்லாம் என்னோட முடியட்டும்.. என் குழந்தைய கண்ணக் கட்டி காட்ல விட நான் தயாரா இல்லே.. "
" என்னடி பெருசா குத்தம் கண்டுபுடுச்சுட்டே அவாள்ட்ட.. எவ்வளவு பெரிய பரம்பரை... சொத்து பத்து உள்ளவா.. டோக்கு டோக்கா பணம் வர்ரது... மாப்பிள்ளை ராஜாவாட்டம் இருக்கான்... இன்னும் என்ன குறை உம்பொண்ணுக்கு.. அவ லட்சனத்துக்கு இந்த மாதிரி வரன் அமைய அவ பூர்வ ஜன்ம புண்யம் பண்ணிருக்கனும்.. இந்த வரன விட்டுட்டு தெருவுல போற பரதேசிய கட்டிவைக்க சொல்றியா.. ம்ம்ம்... என் கெளரவத்துக்கு ஏத்த எடமாத்தான் பாத்திருக்கேன்.. அதுதான் நேக்கு பெருமை.. வேண்டாமாம்.. அறிவு கெட்டவளே.. தத்து பித்துன்னு உளறிண்டு.. போடி.. " கர்ஜித்தார்..
" பாத்தேனே உங்க கெளரவத்த.. எம்பொண்ண கொலு பொம்மை மாதிரி நடுக்கூடத்தில நிக்க வெச்சு யாரோ ஒரு பொம்மணாட்டிய பேச விட்டு வேடிக்க பாத்துண்டு கூத்தடுச்சேளே.. பெருமையாம் பெருமை.. பையன் ராஜாவாட்டம் இருந்தா போதுமா... அவன் பார்வையும் , லட்சனமும்.. சை.. எம்பொண்ண சபைல நிக்க வெச்சு ஆளாளுக்கு அவள தூத்திண்டு இருக்கா.. அவன்பாட்டுக்கு சிரிச்சுண்டு உட்காந்திருக்கான்.. இப்பவே இப்டினா.. நாளைக்கு எம்பொண்ண வெச்சு எப்டி காப்பாத்துவான்.. அவன் அம்மா பேச்சக் கேட்டுண்டு இவள இம்சபடுத்த மாட்டான்னு என்ன நிச்சயம்.. அந்த பையன் நம்ம பொண்ணுக்கு வேண்டாம்.. " கோபத்துடன் ருக்மணி சத்தமாகப் பேச..
" என்னடி... விட்டா பேசின்டே போறே.. அவ்வளவு தைரியம் வந்துடுத்தோ.. உன்ன.. " உக்ரமான சுப்ரமண்யம் கை உயர்த்த..
பளார் எனக் கன்னத்தில் அறை விழுந்தது ருக்மணிக்கு... !
அதை எதிர்பார்க்காத ருக்மணி துடிதுடித்து கைகளால் அழுத்திக் கொண்டாள்.. கண்களில் நீர் வழிந்தது..
உள்ளறையிலிருந்து இதை பார்த்துக் கொண்டிருந்த சுகுமாரிக்கு உடம்பெல்லாம் நடுங்கிப் போனது..
" ஏய்.. சுகுமாரி வாடி இங்க.. " அப்பாவின் கர்ஜனையில் பயந்து தடுமாறியபடி அவர் முன்னால் வந்து நின்றாள்.
" தோ பார்.. இவ சொல்றத கேட்டுண்டு கல்யாணம் வேண்டாம் அது இதுன்னு முரண்டு புடுச்சியோ... அவ்ளவுதான்.. ஜாக்ரதை.. ஒழுங்கா இருக்கனும்.. புருஞ்சதா.." அவரின் அதிர்ந்த குரலுக்கு பதில் ஏதும் கூறவரது வேகமாக தலை அசைத்து சம்மதித்தாள் சுகுமாரி..!
For Comments plz click below link
Thread 'மார்கழித் திங்கள்! - Comments' https://www.sahaptham.com/community/threads/மார்கழித்-திங்கள்-comments.679/