Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL யார் மீது குற்றம்? -Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
780
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Rishi 24

Member
Vannangal Writer
Team
Messages
54
Reaction score
33
Points
18
அத்தியாயம் 01

யாருமற்ற அந்த அடர்ந்த காடே அமானுஷ்யமாகத் தான் காட்சி அளித்ததோ???

இருந்தும் அதில் நடுவே அமர்ந்திருந்தவனுக்கு பயத்தையும் தாண்டிய ஓர் குரூரம் முகத்தில்....

ஓர் மரக் குற்றியின் மேல் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தவனின் கையில் இரத்தம் சொட்டச் சொட்ட ஓர் கூரிய கத்தி...

காண்கையில் உடல் வெளவெளத்துப் போகும் அளவு அவன் முன் சிதைந்து கிடந்தன எத்தனையோ உடல்கள்!!!

யார் அவன்???

......

"விஷ்ணு..." கண்ணாடியின் முன் நின்று தன் முடியை சரி செய்து கொண்டிருந்த நண்பனை அழைத்தவாறே உள்ளே நுழைந்தான் அவன்...

அஜய் மித்ரன்!!!

ஆறடிக்கும் சற்று குறைவான தேகம் தினம் நடக்கும் உடற்பயிற்சியினால் சற்றே என்ன அதிகமாகவே இறுகி இருந்ததுவோ!!!

அவன் அணிந்திருந்த கருப்பு நிற டீ ஷர்ட்டையும் தாண்டி திமிரிக் கொண்டிருந்தன அவன் புஜங்கள்...

பெண்களையே மிஞ்சி விடும் அவன் நிறத்திற்கு எடுப்பாய் அந்த சிரிக்கா உதடுகளின் மேலே கம்பீரமாய் வீற்றிருந்தது அவன் மீசை நானே ராஜா என்பது போல்...

காலில் அடிடஸ் ஷூ அணிந்திருந்தவனை பார்க்கும் போதே தெரிந்தது ஜாகிங் முடித்து விட்டு அப்போது தான் உள்ளே நுழைகிறான் என....

"சொல்லு மச்சி?" நண்பன் புறம் திரும்ப

"நியூ கேஸ் வந்திருக்கு... பட் நாம அதுக்காக ரொம்ப அலையணும் போல இருக்கு" யோசனையுடன் சொன்ன நண்பனை முறைத்தான் விஷ்ணு.

"தெளிவா பேச கூடாதுன்னு நேர்த்தி கடன் வெச்சிருக்கியா?" அவன் சற்றே கடுப்பாக கேட்டதில் புன்னகைத்தானா என்பது போல் இருந்தது அவனின் மின்னி மறைந்த இதழ்பிரித்த செய்கை...

"ரெடியாகி இரு... " பதில் சொல்லாமல் வெளியேறியவனை பார்த்து தலையிலடித்துக் கொண்டான் நண்பன்!!!

தேடலின் ஆரம்பம் இது தானா???

யார் மீது குற்றம்???

......

காரை லாவகமாக ஓட்டிக் கொண்டிருந்தாலும் ஏதோ தீவிர சிந்தனையின் பிடியில் ஆழ்ந்திருந்த நண்பனை புருவம் சுருக்கிப் பார்த்தான் விஷ்ணு.

"மித்ரா" எத்தனை அழைத்தும் அவனில் அசைவில்லாது போக அவன் தோளை பிடித்து உலுக்கியதில் கார் சற்றே தடுமாற நண்பனை திரும்பி முறைத்தான் அஜய் மித்ரன்.

"ஹி... ஹி... பாசமா பாக்காத மச்சான்... வெக்கமா வருது" அவர் சமாளித்ததில் இன்னும் முறைத்தவன்

"கருமம்... என்னன்னு சொல்லு முதல்ல" என்றான் பற்களை கடித்தவாறு...

"இல்ல... ஏதோ கேஸ்னு சொன்ன... அதுக்கப்பறமா எதுவுமே பேசல... அதான் என்னன்னு கேக்கலாம்னு கூப்டேன்"

"காட்டுப் பகுதியில ஒரு இடத்துல மர்மமான முறைல ஒரு உடல் கொல்லப்பட்டிருக்குன்னு கமிஷ்னருக்கு எவனோ தகவல் சொல்லி இருக்கான்... அவரு ஒருத்தன அனுப்பி விசாரிச்சதுல உண்மைன்னு தெரிய வர அந்த கேஸ இப்போ நம்ம கிட்ட கொடுத்திருக்காரு... இதான் மேட்டர்.. "

"சரி தான்டா ஆனால் ஏன் இதுக்கு இவ்வளவு யோசிக்குற... இது மாதிரி எத்தன கேஸ் டீல் பண்ணி இருப்போம்"

"கமிஷனருக்கும் நமக்கும் செட்டே ஆகறது இல்ல... இந்த கேஸ நமக்கு கொடுத்ததுக்கு பின்னாடி ஏதாவது சதி இருக்குமான்னு நெருடலா இருக்கு விஷ்ணு "

"அப்பிடி எல்லாம் எதுவும் இருக்காது மித்ரா... நீ தான் சும்மா குழப்பிக்கிறியோன்னு தோனுது"

"சரி விடு... " கொஞ்ச தூரம் ஓட்டியவன் காரை ஓரமாக நிறுத்த நண்பன் புறம் திரும்பினான் விஷ்ணு.

"முன்னாடி ஹோட்டல் இருக்கு... வா ஏதாவது சாப்புட்டு வந்துடலாம்" சொல்லிக் கொண்டே அவன் இறங்கி நடக்க தானும் இணைந்து நடந்தான் அவனுடன்...

.....

அவர்கள் உள்ளே இருக்கும் போது தூரலாக பெய்து கொண்டிருந்த மழை வெளியேற எண்ணி காலடி எடுத்து வைக்க நினைத்த நொடி திடீரென வலுக்க ஆரம்பிக்க நண்பனிடம் தலையசைத்தவன் நனைந்து கொண்டே ஓட அப்படியே நின்ற விஷ்ணு மித்ரன் காரை எடுத்துக் கொண்டு வந்து அருகில் நிறுத்தவும் ஏறிக் கொண்டான்.

"ஏன்டா திடீர்னு மழை... காட்டுப் பகுதின்னு வேற சொன்ன... எந்த இடம்... பேரு என்னடா?"

"கொ..." ஏதோ சொல்ல வாயெடுத்தவன் காரை ஒடித்துத் திருப்பி நிறுத்திய வேகத்தில் இடது பக்கமாக அடிபட்டது விஷ்ணுவுக்கு...

"என்னதான்டா ஆச்சு?" அவன் கேட்டுக் கொண்டிருக்க இறங்கி ஓடிய மித்ரனை குழப்பமாய் பார்த்தவன் பக்கவாட்டாக திரும்ப அங்கே தங்கள் காருக்கு சற்றே தள்ளி ஓர் பெண் அடிபட்டு விழுந்திருப்பது கண்டு தானும் இறங்கி ஓடினான்...

"விஷ்ணு நெத்தியில அடிபட்ருக்கு போலடா" நண்பனிடம் கூறிக் கொண்டே தன் கை குட்டையை எடுத்து இரத்தம் வராமல் கட்டுப் போட்டவன் அசையாமல் நின்ற நண்பனை யோசனையாய் ஏறிட்டுப் பார்த்தான்.

"டேய்..."

"ஹாங்... என்ன மித்ரா?"

"ம்..நொன்ன... என்ன யோசிச்சு கிட்டு இருக்க இடியட்... தூக்குடா" மித்ரனின் கட்டளைக்குட்பட்டு தூக்கினாலும் அதே நிலையில் இருந்தவனை கடுப்புடன் முறைந்தான் நண்பன்.

"மச்சான்.... இவள எங்கேயோ பாத்திருக்கேன்டா..." விஷ்ணுவின் கூற்றில் புருவம் சுருக்கியவன் அப்போது தான் அந்தப் பெண்ணின் முகத்தை உற்றுப் பார்த்தான்.

ஆமாம் அவனும் எங்கேயோ பார்த்திருக்கிறான்...

ஆனால் யாராக இருக்கும்???

"ஆமாடா நானும் பாத்திருக்கேன்..." மித்ரனும் யோசனையாய் கூற

"சரி அத அப்பறமா பாக்கலாம்... முதல்ல பஸ்ட் எய்ட் கொடுத்துட்டு விசாரிக்கலாம்" தன்னை மீட்டுக் கொண்டு அவளை தானும் தூக்க இருவரும் தன்னை காருக்கு தூக்கிச் செல்வது கண்டு அவளிதழ்களில் ஓர் வெற்றிப் புன்னகை மின்னி மறைந்ததுவோ???

தேடல் தொடரும்....

15-05-2021.

உங்கள் கருத்துக்களை கீழே லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்க நண்பா.

நன்றி நன்றி ❤️

 
Last edited:

Rishi 24

Member
Vannangal Writer
Team
Messages
54
Reaction score
33
Points
18
அத்தியாயம் 02

"பக்கத்துல ஏதாவது ஹாஸ்பிடல் இருக்கானு பாரு மச்சி" நண்பனுக்கு கட்டளையிட்டவாறே வேகமாக வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான் மித்ரன்.

மழை வேறு அடித்து ஊற்றிக் கொண்டிருக்க முன் முகப்புக் கண்ணாடி சாலையை மறைத்துக் கொண்டிருந்ததில் மேலும் மேலும் எரிச்சலும் படபடப்பும் அவனுக்குள்...

"மித்ரா ரிலாக்ஸ்டா... எதுக்கு இவ்வளவு பதட்டம்?" வெளியே ஏதாவது ஹாஸ்பிடல்கள் தென்படுகிறதா என பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணு நண்பனை சமாதானப்படுத்தவும் மறக்கவில்லை...

அவனுக்கும் ஏனிந்த திடீர் பதற்றமென புரியவே இல்லை...

மனதிற்கு மிக நெருக்கமான ஒருவருக்கு ஏதாவது ஆகி விட்டால் துடிப்பது போல் இருந்தது அவன் நிலை...

"மச்சான் கூகிள் மேப் ல எதுக்கும் ஒரு தடவை பாக்கறேன் இருடா" டேஷ் போடில் இருந்த தன் மொபைலை எடுத்தவனுக்கு டவர் கிடைக்காததில் எரிச்சலாய் வந்தது.

"ச்சே இந்த மழை வேற... மித்ரா அங்கே பாரு..." தூரத்தே ஏதோ வெளிச்சம் தெரியவும் நண்பன் கை காட்டிய திசை நோக்கி பார்த்தவனுக்கும் அப்போது தான் நிம்மதியாயிற்று.

"இது என்ன இடம்னு தெரிலயே டா" யோசனையாய் சொன்னான் மித்ரன்.

"எந்த இடம்னு அப்பறமா பாக்கலாம் மச்சான்... அந்த பொண்ணு வேற மயக்கத்துல இருக்கா நீ முதல்ல வண்டிய அந்த கிளினிக் முன்னாடி நிறுத்து" விஷ்ணுவின் கூற்றை ஆமோதித்தவாறே ஓரமாய் வண்டியை நிறுத்தியவன் பின்னால் திரும்ப அவ்வளவு நேரம் கண்களை திறந்திருந்தவள் படக்கென விழிகளை மூடிக் கொண்டாள்.

.......

"ஷீ இஸ் ஆல்ரைட் நௌ... அவங்களுக்கு எதுவுமில்ல மிஸ்டர். மித்ரன்... நீங்க போயி பாக்கலாம்.. " டாக்டர் அவ்விடம் விட்டகலவும் பணம் கட்டி விட்டு விஷ்ணு அருகில் வந்தமரவும் சரியாக இருந்தது.

"விஷ்ணு...."

"சொல்லு மச்சி"

"அந்த பொண்ண நாம ட்ரெயினிங்ல பாத்திருக்கோம்" நண்பனின் கூற்றில் விலுக்கென நிமிர்ந்து பார்த்தவனுக்கும் அப்போது தான் ஞாபகம் வந்தது.

"அட ஆமா டா... ஒரே ஒரு நாள் ட்ரெயினிங்ல இருந்துட்டு தலைமறைவாகினா... அவல்ல இவ?"

"அவளே தான்"

இருவருக்கும் ஓர் நாள் பார்த்த முகம் என்பதால் தான் சட்டென ஞாபகம் வரவில்லை போலும்...

முதல் நாள் ட்ரெயினிங்கில் ஜாயின் பண்ணி இருந்தவள் இரண்டாம் நாள் வெளியேறியது அவர்களுக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது...

அதன் பின் அவளை மறந்தே போயினர் இருவரும்.....

இன்று தான் அதுவும் இந்த நிலையில் தான் மீண்டும் ஓர் சந்திப்பு...

எதற்காக சென்றாளென்றெல்லாம் அவர்களுக்கு அவஷியமில்லையாயினும் அவளும் ஒரு போலிஸ் என்பதே இருவருக்குள்ளும் நெருடியது.

"மச்சான் இவ அப்போ போலிஸாடா?" மித்ரனின் மனதிற்குள் தோன்றிய அதே கேள்வியையே விஷ்ணு கேட்கவும் அவனை நிமிர்ந்து பார்த்து ஆமென்றான் இன்னும் யோசனையாய்...

"அய்யே அவ எவளா இருந்தா நமக்கென்ன டா... என்னாச்சுன்னு கேட்டுட்டு நாம கேஸை பாக்க போகலாம்" விஷ்ணு எழுந்து கொள்ள தானும் எழுந்தவன் அவளு அறை நோக்கி நடந்தான்.

......

இருவரும் உள்ளே வந்ததை உணர்ந்தவள் கண்களை திறக்க அவளையே ஆராய்ச்சியாய் பார்த்து வைத்தன மித்ரனின் கண்கள்....

"தேங்க்ஸ் " பொதுவாக மொழிந்தவள் எழுந்து கொள்ள

"என்னாச்சு...யாரு அப்பிடி பண்ணது?" விஷ்ணுவின் கேள்வியில் ஓர் நிமிடம் அதிர்ந்தவள் தன்னை சட்டென சமாளித்துக் கொண்டாள்.

"நான் ஒரு போலிஸ்..." அவள் ஆரம்பிக்க

"அதை நாங்களே கண்டு பிடிச்சுட்டோம்.... மேல சொல்லு" இடையிட்டான் மித்ரன்.

"ட்ரெயினிங்ல கூட உங்க ரெண்டு பேரையும் பாத்திருக்கேன்"

"அட ஏன் மா நீ வேற... என்ன ஆச்சுன்னு சொல்லு" மீண்டும் விஷ்ணு.

"இல்ல கொல்லி மலை காட்டுக்கு பக்கத்துல இருக்க ஊருக்கு ட்ரான்ஸ்பர் கிடைச்சிருந்துது... அதுக்காக நின்னு கிட்டு இருந்தப்போ ஒரு பைக்காரன் திடீர்னு இடிச்சுட்டு போக... அதிர்ச்சியில தான் மயங்கிட்டேன்" தலை குனிந்து அவள் சொல்ல இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"ஆமா ஏன் அங்க ட்ரான்ஸ்பர் போட்டாங்க... நம்புறா மாதிரி இல்லையே" தாடையை தடவிய மித்ரனை நண்றாக திட்டித் தீர்த்தாள் பெண்...

'இவன் ஒருத்தன்... சிபிஐ ஆபிஸர் மாதிரி நொய்யி நொய்யின்னு கிட்டு'

"அது அது... நான் தான் கேட்டு வாங்கி கிட்டேன்"

"ஏன்?"

"சார் நானும் போலிஸ் தான்... நான் எங்கே ட்ரான்ஸ்பர் வாங்கி கிட்டா உங்களுக்கு என்ன?" வெடுக்கென கேட்டு விட்டவள்

'அய்யோ போச்சா' புலம்பிக் கொண்டே மலங்க விழிக்க என்ன நினைத்தானோ

"நாங்களும் அந்த பக்கமா தான் போறோம்... வர்றதுன்னா வரலாம்" தோள்களை குலுக்கி விட்டு வெளியேறி விட அவளையும் நண்பனையும் மாறி மாறி பார்த்த விஷ்ணு தானும் வெளியேறி விட

'எங்கே அவன் கூட போறதுக்கு திரும்ப ட்ராமா ஆரம்பிக்கணுமோன்னு பயந்துட்டேன்... ஹப்பாடா... வேலை முடிஞ்சுது... அவன் கூடவே கிளம்ப வேண்டியது தான்' சட்டென கட்டிலை விட்டு இறங்கியவள் வெளியே வந்து அவர்கள் முன் வந்து நின்றாள்.

......

"அம்மா...." தாயை அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் அந்த ஆறடி ஆண்மகன்.

கிட்டத்தட்ட ஐந்தடிக்கும் ஆறுக்கும் இடையேயான உயரம்... பார்ப்போரோ உடனே வசீகரிக்கும் முகமென்றாலும் ஓர் அப்பாவித்தனம் எப்போதுமே ஒட்டிக் கொண்டிருக்கும்....

கண்களில் கண்ணாடி அணிந்திருந்தாலும் சிரிக்கும் கண்கள் அப்படியே படம் பிடித்து காட்டி விடும் அவன் உள்ளத்து உணர்வுகளை....

அவன் உதய்!!!

"உதய்... வந்துட்டியா... எவ்வளவு நேரமா வெயிட் பண்றேன் தெரியுமா... வா வந்து சாப்புடு முதல்ல..." அவனை விட சற்றே உயரம் குறைவாக இருந்தாலும் அவர் முகத்திலிருக்கும் தெளிவே அவரை உயர்த்துவதாய்...

ராஜி!!!

"அம்மா எத்தன தடவ சொல்லி இருக்கேன் எனக்காக வெயிட் பண்ணாம நீங்க சாப்புடுங்கன்னு... என்னம்மா இது... வாங்க நீங்களும்... " தாயின் தோளை பிடித்து தள்ளியவாறே கூட்டிச் சென்று அமர வைத்தவன் தானும் அமர்ந்து அவருக்கு தட்டை எடுத்து வைக்க மகனை வாஞ்சையாய் பார்த்தார் ராஜி.

"என்னை எவ்வளவு நேரம் தான் மா சைட் அடிச்சுகிட்டே இருப்பீங்க... சாப்புடுங்க" சிரித்துக் கொண்டே அவன் சாப்பிட ஆரம்பிக்க

"வாலு" தானும் சாப்பிட ஆரம்பித்தார் தாய்...

"எங்கே போன உதய்... மழை வேற பெய்யுது... இந்த நேரத்துல எதுக்கு வெளியில போற?"

"நான் என்ன சின்ன பையனாமா... எதுக்கு இவ்வளவு பதட்டப்பட்றீங்க... சும்மா தான் வெளியில போனேன்... அது ஒரு குத்தமா?"

"அப்பிடி இல்ல கண்ணா... எனக்குன்னு இருக்கறது நீ மட்டும் தானே... அம்மாக்கு பிள்ளையோட பாதுகாப்ப தவிர வேறு என்ன யோசனை இருக்க போகுது? "

"காட்.... அம்மாஆஆஆ.... அதான் நான் வந்துட்டேன்ல.... இனி சாயங்காலம் ஐஞ்சு மணி தாண்டுனா வீட்ல டான்னு நிப்பேன் சரியா... இப்போ சிரி மா" அவனை போலியாய் முறைத்தவர் முடியாமல் சிரித்து விட சாப்பிட்டு விட்டு எழுந்து கொண்டான் மகன்.

"செம தூக்கம் டாக்டர் மேடம்... நீங்களும் எதுவும் யோசிக்காம தூங்குங்க குட் நைட்" தாயை அணைத்து விடுவித்தவன் அவர் கண்ணத்தில் முத்தமிட்டு விட்டு தனதறைக்குள் நுழைய தாயின் முகம் பூரிப்பில் மலர்ந்திருந்தது.

.......

காலை...

"டேய் நாம நெருங்கிட்டோம்...." கொட்டாவி விட்டவாறே வெளியே பார்த்தான் விஷ்ணு.

பின்னிருக்கையில் அவள் இன்னுமே தூங்கிக் கொண்டிருக்க வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவன் ஓர் முறை திரும்பிப் பார்த்து விட்டு மீண்டும் திரும்பி விட்டான்.

"டேய் நைட் கொஞ்ச நேரம் தூங்கலாம்னு தூங்குனோம்லடா.... எப்போ வண்டி ஓட்ட ஆரம்பிச்ச?"

"ம்... ஒரு பேயி வந்து என்ன எழுப்பி விட்டுடுச்சு... அதான் முழிச்சுகிட்டேன்" என்றான் கடுப்புடன்...

"மித்ரா நீ ரொம்ப டயர்டா இருக்க... வண்டிய நிறுத்துடா நான் ஓட்றேன்"

"இட்ஸ் ஓகே மச்சி... இன்னும் கொஞ்ச தூரம் தான் இருக்கு... போய்டலாம்" சமாதானப்படுத்தியவாறே அங்கிருந்த கிளைச்சாளைக்குள் வண்டியை விட்டவனுக்கு உடல் திடீரென தூக்கிப் போட்டது!!!

தொடரும்......

09-07-2021.

கதையை தொடர்ந்து கொடுக்காமல் போனதற்கு மன்னிச்சு...

இனி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை டான்னு யூடி போட்டுடுவேன் நண்பா

கீழே உள்ள திரியில் கதை எப்பிடி இருக்குன்னு ஒரு தடவை சொல்லிட்டு போயிடுங்க நண்பா

 

Rishi 24

Member
Vannangal Writer
Team
Messages
54
Reaction score
33
Points
18
அத்தியாயம் 03

அந்த ஊருக்குள் அவன் கார் நுழைந்த நொடி அவன் உடல் திடீரென தூக்கிப் போட்டதில் சடன் பிரேக் இட்டு வண்டியை நிறுத்திய மித்ரனை பதற்றமாய் திரும்பிப் பார்த்தான் விஷ்ணு.

"என்னாச்சு மச்சான்...?"

"இல்லடா ஏதோ... ஏதோ நமக்கு நெருங்குன ஒன்னு நமக்கிட்ட வர போறா மாதிரி பீல் ஆகுதுடா" அவன் வார்த்தைகளில் அதிர்ந்தது நண்பன் மட்டுமல்ல பின் இருக்கையில் அமர்ந்திருந்தவளும் தான்...

அவள் நிலாமதி!!!

"நெருங்குன ஒன்னு மாதிரியா... என்ன மச்சான் சொல்ற?"

"ப்ச் ஏன்னு தெர்லடா அப்பிடி தான் இருக்கு" கியரை மாற்றி விட்டு மீண்டும் வண்டியை எடுத்த நண்பனை யோசனையுடன் பார்த்தான் விஷ்ணு.

"ஏம்மா பொண்ணு... நீ எங்கே இறங்கணும்னு சொல்லு" தலையை பக்கவாட்டாக திருப்பினான் விஷ்ணு.

"அதோ அங்க இருக்க ப்ளாட் ல சார்... " அவள் தூரத்தே கை காட்டவும் ஒரு முறை பார்த்தவர்களில் மித்ரன் தான் அந்த அதி முக்கிய கேள்வியை கேட்டு வைத்தான்.

"ஆமா உன் பேரு என்ன?"

"ஹாங்... நி.. ம.. மதி... மதி" அவளின் ஓர் நொடி அதிர்வையும் தடுமாற்றத்தையும் உள்ளுக்குள் குறித்துக் கொண்டவன் எதுவும் பேசாமல் பார்வையை திருப்பி விட்டான்.

"சார் இங்க தான்..." அவள் காட்டிய ப்ளாட்டின் அருகே வண்டியை நிறுத்தியவன்

"அப்பறம்.... என் பேரு மித்ரன்.. இவன் விஷ்ணு... ஏதாவது ஹெல்ப்னா சொல்லு"

"சரிங்க..." தலையசைத்து விட்டு அவள் இறங்க

"டேக் கேர்" தன்னையும் மீறி உதிர்த்திருந்தான் வார்த்தைகளை...

இலேசாய் புன்னகைத்தவள் தலையசைத்து விட்டு கிளம்ப வண்டியை மீண்டும் ஓட்ட ஆரம்பித்தான் அஜய மித்ரன்.

"மச்சான் என்ன ஒரே லவ்ஸா? "

"கடுப்பேத்தாம ஓடிடு... "

"டேக் கேர் எல்லாம் சொல்ற?" வேண்டுமென்றே வாய் பொத்தி சிரித்தவனை கடுப்புடன் முறைத்தவனுக்கு அடிக்க முடியா நிலை...

"அவ நம்மள விட சின்ன பொண்ணு டா..."

"அட சின்ன பொண்ணு தான் செட் ஆவா மிஸ்டர். அஜய் மித்ரன்"

"டேய் கடுப்பேத்தாத... "

"ஹாஹா.... " அவன் வாய் விட்டுச் சிரிக்க தங்கள் தங்க வேண்டிய ஹோட்டல் முன் வண்டியை நிறுத்தியவன் நண்பனுக்கு நன்றாக இரண்டு போடு போட்டான்.

......

விடிந்தும் விடியாமல் இருந்த அந்த காலைப் பொழுதில் முகத்தில் குரூரப் புன்னகையுடன் அமர்ந்திருந்தான் அவன்...

கண்கள் வழமைக்கு மாற்றமாக அதிகமாய் சிவந்திருப்பது பார்ப்போரை ஓர் முறையேனும் திடுக்கிடச் செய்து விடும் நிச்சயமாய்...

அவன் அமர்ந்திருந்த மரக் கிளைக்கு சற்றே தள்ளி வளைந்து வீற்றிருந்த அந்த மரத்தில் ஓர் பிணம் இரத்தம் வடிய தொங்க வைக்கப்பட்டிருக்க அதை தான் பெரும் குதூகலத்துடன் பார்த்துக் கொண்டிருந்தன அவன் கண்கள்...

"ஹாஹாஹா...." காடே அதிர்ந்து போகும் அளவு திடீரென ஓர் அகோரச் சிரிப்பு அவனிடமிருந்து...

.....

"உதய்... உதய்... டேய் உதய்...." நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கியிருந்த மகனை எழுப்பிக் கொண்டிருந்தார் ராஜி.

"ம்மா... ப்ளீஸ் மா"

"டேய் நான் ஹாஸ்பிடல் போறேன்.. சாப்பாடு எடுத்து வெச்சிருக்கேன் சாப்புடு"

"குட் பை மம்மி... டேக் கேர்" தூக்கத்தில் கையை விரித்த மகனின் நெற்றியில் முத்தமிட்டவர் அறையை விட்டு வெளியேற மீண்டும் தூக்கத்தை தொடர்ந்தான் அவன்....

.......

"மச்சான் நாம ஸ்பாட்டுக்கு போயி அந்த பாடிய செக் பண்ணிட்டு அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்டா" கையில் கைக்கடிகாரத்தை மாட்டியவறே நண்பனிடம் பேசினான் மித்ரன்.

"ஓகே மச்சி... கமிஷ்னர் கிட்ட திரும்ப ஒரு தடவை இடத்தை ஷூர் பண்ணிட்டு வர்றேன் டா" விஷ்ணு தன் மொபைலுடன் தள்ளிச் செல்ல தன் மொபைல் அலறவும் அழைப்பை ஏற்று காதிற்கு கொடுத்தான் மித்ரன்.

"எஸ் மாம்"

"நல்லா இருக்கியா அஜய்?"

"ஆமா மாம்... நீங்க எப்பிடி இருக்கீங்க... கரெக்ட் டைமுக்கு சாப்டு மாத்திரை போட்டீங்களா?"

"ஆமாடா... எப்போ வர்ற?"

"மாம். .. நான் இன்னிக்கு தான் ஸ்பாட்டுக்கே போக போறேன்... இன்னும் இன்வெஸ்டிகேஷன் அது இதுன்னு எவ்வளவு இருக்கு... நீங்க எப்போ வர்றன்னு கேக்குறீங்க"

"சரி பா... ஆனா பாத்து பத்திரமா இரு"

"ஓகே மாம்... லவ் யூ... பை" அழைப்பை துண்டிக்கவும் விஷ்ணு உள்ளே வரவும் சரியாக இருந்தது.

......

பாதி சிதைக்கப்பட்ட உடலில் ஆங்காங்கே வெட்டுக் காயங்களும் கழுத்தில் அதிகமாகவும் சிவந்திருக்க போலிஸ் கண்காணிப்பின் கீழ் எவரும் உள்ளே நுழைய முடியாதளவு மறைத்து இருக்க நடுவில் இருந்த உடலை பார்க்கவே முடியவில்லை இருவராலும்...

"மித்ரா ரொம்ப டேஞ்சரான கேஸா இருக்கும் போலடா... எப்பிடி கொலை பண்ணி இருக்காங்க பாரு..."

"விஷ்ணு ஒன்னு கவனிச்சியா முதல்ல உடலை பலவீனமாக்கி அதுக்கப்பறமா தான் கொன்னிருக்கணும்"

"ஏன் டா?"

"அங்கே பாரு மச்சி... ஆழமான வெட்டு காயங்கள் கூட இல்ல... ஆனா உடம்புல சூடு போட்டிருக்காங்க... மே பீ அப்பிடி பண்ணதுக்கப்பறமா அந்த கொலைகாரன் இவன் துடிக்கறத ரசிச்சு கிட்டே கொலை செய்யப்பட்டவனோட கழுத்தை நெரிச்சு கொன்னிருக்கணும்... அந்த கழுத்துல ரோப்போட (கயிறு) அடையாளம் தெரியது மச்சி... "

"இவ்வளவு கொடூரமா கொலை பண்ற அளவுக்கு அந்த கொலைகாரனுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? "

"மச்சி நாம பொதுவா பாக்கற பார்வை மேலோட்டமா இருக்கறதால தான் கொலை ஏன் கொடூரமா இருக்கு அந்த கொலைகாரனுக்கு அப்பிடி என்ன நடந்துது ன்னு பாக்கறோம்... சேம் டைம் ஒரு கொலைகாரன் உருவாகறதுக்கு இந்த சமூகமே ஒரு காரணம் தான்டா... சின்ன வயசுல நடக்கற விஷயங்கள் ஒரு மனுஷனோட ஆழ்மனசுல அதிகமா பதிஞ்சு போயிடும்... அந்த விரக்தி நிலமைல கூட ஒரு மனுஷன் சைக்கோவாக அதாவது கொலைகாரனாக மாற நிறைய வாய்ப்புகள் இருக்கு... மேபி அப்பிடி ஏதாவது இந்த கொலைகாரனுக்கு நடந்து இருக்கலாம் யாருக்கு தெரியும்... பாக்கலாம்"

"இருந்தாலும் மச்சான்... நீ இவ்வளவு அறிவா இருக்க வேண்டாம் " சொல்லி விட்டு பக்கென சிரித்த நண்பனை முறைத்தான் மித்ரன்.

"உன்ன அப்பறமா கவனிக்கறேன்டா... முதல்ல இவன் டீடெயில்ஸ் கொடு படிச்சுட்டு அடுத்தது பத்தி யோசிக்கலாம்" அவன் கையை நீட்டி பேப்பர்ஸை வாங்கவும் அங்கே காக்கி உடையில் மதி வந்து சேரவும் சரியாக இருக்க

"மச்சி உன் ஆளுடா" நண்பனை முறைத்து விட்டு அவளிடம் திரும்பினான் மித்ரன்.

"குட் மார்னிங் சார்"

"குட் மார்னிங் மதி"

"சார்.... இதே காட்டுல அடுத்த பக்கத்துல கூட ஒரு டெட் பாடி இருக்கறதா தகவல் வந்திருக்கு"

"வாட்.." அதிர்ந்து கத்தினான் காளை...

"எஸ் சார்... இப்போ தான் தகவல் வந்துது" நண்பர்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள

"விஷ்ணு... நீ இங்கே சமாளிச்சு கிட்டு இருடா.... நான் அவசரமா பாத்துட்டு வர்றேன்.... மதி கம்" அவன் வேக நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் கிட்டத்தட்ட அவன் பின்னால் ஓடினாள் பெண்....

......

மக்கள் கூட்டம் நிரம்பி வழிய மீடியாவை தாண்டி உள்ளுக்குள் செல்வதற்குள் ஒரு வழியாகி விட்டனர் இருவரும்....

இந்த உடல் சற்று வித்தியாசமாக கொலை செய்யப்பட்டிருந்தது கண்டு குழப்ப ரேகைகள் படிந்தன வேங்கையின் முகத்தில்....

உடலின் கீழ்பாதி மிருகங்களுக்கு இரையாக்கப்பட்டிருக்க கை கால்கள் செயலிழந்து போயிருந்தது.

கழுத்தில் எந்தவொரு அடையாளமும் காணப்படாதது தான் அவனுக்கு குழப்பத்தை தூண்டியிருந்தது.

"சார்.... அதோ பாருங்க அங்க இருக்கற மரத்துல துணி ஒன்னு தொடங்கி கிட்டு இருக்கு... ஒருவேலை தற்கொலையா இருக்குமோ?" அவள் வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டவாறே கண்களால் அந்த இடத்தை அலசியவனுக்கு சிக்கியது அந்த ஊன்று கோல்!!!

"நோ இட்ஸ் அ மர்டர்" சந்தேகமே இல்லாமல் வெளி வந்தது அவனின் கம்பீரக் குரல்....

தொடரும்.....

13-07-2021.

உங்கள் கருத்துக்களை கீழே பகிர்ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள் நண்பா.

நன்றி.

 

Rishi 24

Member
Vannangal Writer
Team
Messages
54
Reaction score
33
Points
18
அத்தியாயம் 04

"ம... மர்டரா... எப்பிடி சார்... தற்கொலைக்கான ஆதாரமா அந்த மரத்துல துணி தொங்கி கிட்டு இருக்கே?"

"துணி தொங்கி கிட்டு இருந்தா அது தற்கொலைன்னு ஆயிடுமா மதி... பாருங்க அங்கே தூரத்துல ஒரு ஊன்றுகோல் இருக்கு... நடக்கவே கஷ்டப்பட்ற ஒருத்தர் காட்டுக்கு வந்து மரத்துல ஏறி துணியை கட்டி தான் தற்கொலை பண்ணி இருப்பாரா? "

"பட் சார் அது அவரோட ஊன்றுகோலா இல்லாம இருந்தால்..? அண்ட் நடக்க கஷ்டப்பட்றவர் எதுக்கு காட்டுக்கு வரணும்?"

"கிட்னாப்பா இருக்கலாம் இல்லையா மதி... அந்த கில்லருக்கு ஏதோ ஒரு வகையல பாதிப்பு ஏற்படுத்தினவனாகவோ அல்லது அவன் ஒரு சைக்கோவாக இருந்தா சும்மா கூட கொன்னிருக்கலாம்"

"வாட் இஸ் திஸ் சார்... சைக்கோவாக இருந்தா சும்மா இருக்கறவன கொலை பண்ணலாமா... சரியான லூசு"

"லூசுங்குற நிலை தாண்டி தான் சைக்கோன்னு சொல்றோம்" என்றான் மெலிதாக சிரித்து...

"கிண்டல் பண்ணாதீங்க சார்... இப்போ இது மர்டரா இல்ல தற்கொலையா?"

"டெபினெட்லி இட்ஸ் அ மர்டர்"

"இப்போ என்ன பண்ண போறோம் சார்?"

"போஸ்ட் மார்ட்டம் பண்ணலாம்... ரிப்போர்ல இவன் கால் ஊணம் னா இது மர்டர்னு தெரிஞ்சிடும்... அப்பிடி இல்லன்னா இது தற்கொலையா இருக்கலாம்... தற்கொலைக்கான பர்ஸண்டேஜ் ரொம்ப குறைவு தான்... நீங்க இவரோட பேமிலி டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிட்டு இருங்க நான் மத்த பார்மாலிடீஸ முடிச்சுட்டு வர்றேன்" அவளுக்கு ஓர் வேலையை ஒதுக்கி விட்டு மீண்டும் அந்த உடலை ஆராய ஆரம்பித்தான் அஜய் மித்ரன்.

......

நண்பன் சொன்ன விதத்திலேயே உடலை பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுவுக்கு மித்ரன் சொன்னது தான் சரியாகப்பட்டது.

உடலை பலவீனமாக்கிய பின்னரே கொலை செய்யப்பட்டிருக்கிறது உடல்...

அப்படி என்ன வெறி அந்த முகமறியா கொலைகாரனுக்கு???

'இத கண்டு பிடிச்சு ஊரு போயி சேர்றதுக்குள்ள ஒரி வழி ஆயிடுவோம் போல இருக்கே' மனதிற்குள் தனியே புலம்பியவன் பேமிலி டீடெயில்ஸை சேகரித்து விட்டு நண்பனுக்காக காத்திருக்க துவங்கினான்.

.....

"சாப்டிருப்பானா...இல்ல இன்னும் தூக்கமானனு தெரிலயே..." மகனின் நிலையறியாது மனம் பிசைந்தது டாக்டர் ராஜிக்கு...

என்ன தான் வளர்ந்திருந்தாலும் ஒரு தாய்க்கு எப்போதும் அவர்கள் குழந்தைகள் தானே!

"உதய் சாப்டியா பா?" அவனுக்கு அழைத்து அடுத்த வார்த்தை அதைத் தான் கேட்டிருந்தார் தாய்.

"ம்... ஆமா மா.. இப்போ தான்..."

"சரி பத்திரமா இரு.. அம்மா வேலை முடிஞ்சதும் வந்துடுவேன்"

"மா.. நான் என்ன சின்ன குழந்தையா எங்கேயாவது தொலஞ்சி போக... சின்ன புள்ள மாதிரி ட்ரீட் பண்ணாத மா"

"சரி ஒன்னும் சொல்லல... வெச்சிட்றேட்" அழைப்பை துண்டித்தவருக்கு மனம் அப்போது தான் சாந்தமானது.

......

"எஸ்.. எஸ்... மித்ரன் தான் அந்த கேஸை இன்வெஸ்டிகேட் பண்றான்... கேஸ் சிபிஐ கைக்கு மாறினதால தான் மித்ரனை நான் நியமிச்சேன்.. " அழைப்பை துண்டித்தவர் யோசனையில் மூழ்கிப் போனார்.

அவர் கமிஷ்னர் சிவசங்கர்!

அவருக்கும் மித்ரனுக்கும் எப்போதும் ஆவதே இல்லையென்றாலும் அவன் அறிவின் மீது அபார நம்பிக்கை எப்போதுமே உண்டு அவருக்கு...

அவனிடம் கேஸை ஒப்படைத்ததில் கூட அவனுக்கு தன் மீது சந்தேகம் தான் வந்திருக்குமென்று அவரும் அறிவார் தான்...

ஆனால் அவருக்கு மித்ரனை விட்டு வேறொருவரிடம் இந்த கேஸை ஒப்படைப்பதில் திருப்தி இல்லை.. அதனால் தான் அவனுக்கே கொடுத்து விட்டிருந்தார்.

சில நாட்களுக்கு முன் சிஐடி ரகசிய போலிசாரால் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது அன்று நடந்த கொலை கேஸில் தான் சிபிஐக்கு மாறி இருந்தது.

முன் கையாண்ட கேஸ்களை போலல்லாது மிகவும் சிக்கலானது என தெரிந்தே தான் மித்ரனை போக விட்டார்.

இப்போது மறுபடியும் ஒரு கொலை என அதே செய்தி அவருக்கு வந்திருக்க அவன் இதை எப்பட சசமாளிக்கப் போகிறான் என்பதில் தான் யோசனையானார்.

......

"மதி... விஷ்ணு இருக்க ஸ்பாட்ல உங்கள ட்ராப் பண்ணிட்டு நான் ஹாஸ்பிடல் போயிட்டு வர்றேன்..." அவளிடம் கூறி விட்டு வண்டியை கிளப்பியவன் நேரே மருத்துவமனைக்கு வந்திருந்தான்.

தன் போலிஸ் அடையாள அட்டையை ரிசப்ஷனில் காட்டி விட்டு ஏற்கனவே வந்திருந்த உடலின் ரிப்போர்ட்டை வாங்குவதற்காக டாக்டரை தேடிச் சென்றான்.

.....

"விஷ்ணு சார்... மித்ரன் சார் ரொம்ப இன்டலிஜென்ட்ல?"

"லவ் ஒர்க்கவுட் ஆயிடுச்சு போலயே?"

"இடியட்.. அவர பத்தி சொன்னா லவ்னு அர்த்தமா?"

"அப்போ இல்லையா?"

"இல்லை... அவர பாத்தா எனக்கு சகோதர உணர்வு தான் வருது... லவ் எல்லாம் இல்ல"

"வட போச்சே..."

"ஏன் சார், வந்த இடத்துல கேஸை பாக்காம லவ்வர்ஸ சேத்து வைக்கிற வேலை தான் பாத்துட்ருக்கீங்க போல? "

"அடிங்... என்ன பாத்தா எப்பிடி தெரியுது?"

"மனுஷன் மாதிரி மட்டும் தெரில.. " அவள் வாய் பொத்தி சிரிக்க முறைத்தான அவளை...

"மதி.. உங்க கிட்ட பர்ஸனலா ஒரு கேள்வி கேக்கலாமா? "

"கேளுங்க விஷ்ணு சார்"

"ட்ரெயினிங் வந்த அடுத்த நாளே எதுக்கு காலி பண்ணிட்டு போயிட்டீங்க...? இன்பாக்ட் அது எங்களுக்கு மறந்தே போச்சு... ஆனா உங்களை மறுபடி பாத்ததுக்கப்பறமா தான் ஞாபகமே வந்துது.... அதான் கேட்டேன்"

"அன்னிக்கு நான் ட்ரெயினிங் வரவே இல்ல "

"வாட்..."

"ம்... ஆமா நான் சும்மா தான் வந்தேன்... அப்பா இன்ஸ்பெக்டரா இருந்தாரு... ஏதோ கேஸ் விஷயமா ரெண்டு நாள் தங்க போறேன்னு சொல்ல நானும் வர்றேன் பா எனக்கு இப்போவே ட்ரெயினிங்ல கலந்துகிட்டு பாக்கணும் போல இருக்குன்னு சொன்னேன்... அதான் அப்பா கூட வந்திருந்தேன்... அடுத்த நாள் அப்பா கிளம்பவும் கிளம்பிட்டேன்... சாரி உங்க எல்லோர் கிட்டவும் சொல்லி இருக்கணும்"

"ப்பூஊஊ இவ்வளவு தானா மேட்டரு... சரி இங்கே எதுக்கு போஸ்டிங் வாங்கிட்டு வந்தீங்க?"

"நான் எங்க வாங்குனேன் அப்பா தான் அனுப்பி விட்டாரு" மனதிற்குள் மறைத்தவள்

"எனக்கு த்ரில்லிங் கேஸஸ் டீல் பண்ண ஆசை அதான்... " என்றாள் உளறலாய்...

"த்ரில்லிங் கேஸஸ்... அட போமா நீ வேற... ஒன்னு செய்யி பேசாம பேய் நடமாட்டம் இருக்கற இடமா போயி இன்வெஸ்டிகேட் ஆரம்பி... ரொம்ப ஜாலியா இருக்கும்... " அவனை ஆன மட்டும் முறைத்து தள்ளினாள் பெண்...

.....

ஹாஸ்பிடல்....

"ஆமா மிஸ்டர். மித்ரன்... நீங்க கெஸ் பண்ணா மாதிரி அந்த பாடியோட கால் ஊணமா தான் இருந்திருக்கு..."

"எஸ்... இப்... " மொபைல் அதிர

"ஒன் செக்... " கமிஷ்னரிடமிருந்து வந்த அழைப்பை ஒரு வித எரிச்சலில் ஏற்று காதில் வைத்தான் மித்ரன்.

"எஸ் சார்..."

"கேஸ் எப்பிடி போய்கிட்ருக்கு மிஸ்டர். அஜய் மித்ரன் "

"ஆல் சூப்பேர்ப் சார்... புதுசா ஒரு கொலை கேஸ் வந்திருக்கு... அதுக்காக ஹாஸ்பிடல் வந்திருக்கேன் சார்"

"குட்... அப்டேட் சொல்லிட்டே இருங்க... டேக் கேர்" என்ன முயன்றும் கடைசி வார்த்தைகள் அவர் அனுமதியின்றியே வந்து விட அவன் முகம் இறுகியது.

"தேங்க் யூ சார்" பட்டென துண்டித்தவனுக்கு ஆத்திரமாய் வந்தது.

அவர் அவனின் தந்தை!!!

சிவசங்கர மித்ரன்!!!

யார் மீது குற்றம்???

தொடரும்....

22-07-2021.


......................................................................

ஹாய் நண்பா...

கதை எப்பிடி இருக்கு? பிடிச்சிருக்கா? த்ரில்லிங்கா இருக்கா இல்லை மர்மமா குழப்புதா?

அடுத்தடுத்த அத்தியாயங்கள்ல குழப்பம் தீர்ந்திடும் நண்பா.. அட்ஜஸ்ட் கரோ...

அப்பறம் உங்க கருத்துக்களை கீழே இருக்க திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்கள் தொடர் ஆதரவிற்கு நன்றி சகோஸ் ❤️

நன்றி.


 
Last edited:

Rishi 24

Member
Vannangal Writer
Team
Messages
54
Reaction score
33
Points
18
அத்தியாயம் 05

அழைப்பை துண்டித்து விட்டு நிமிர்ந்தவன் ஒட்டுமொத்த எரிச்சலையும் தனக்குள்ளே விழுங்கிக் கொண்டான்.

அவர் மேல் இருக்கும் கோபத்தை அந்த டாக்டரிடம் காட்டி விடக் கூடாது என்பதில் அவ்வளவு கட்டுப்பாடாய் இருக்க வேண்டிய நிலை அவனுக்கு...

"சாரி மிஸ்டர்.ராம்... சொல்லுங்க"

"மிஸ்டர். அஜய் நீங்க கெஸ் பண்ணா மாதிரி புல் பாடி செக்கப் பண்ணி பாத்ததுல இவர் ஒரு காலு ஊணமா தான் இருக்கு... உங்க கெஸ்ஸிங் கரெக்ட் தான்... இட்ஸ் அ மர்டர்... பட் ஏன் அவரு நடக்க முடியா நிலையில காட்டுக்குள்ள போனாருன்னு எனக்கே யோசனையா இருக்கு"

"மிரட்டல் ஆர் கிட்னாப்பா இருக்கலாம் டாக்டர்... என்னன்னு எங்களுக்கும் சரியா தெரில... எனிவேஸ் தேங்க் யூ பார் யூர் கோப்பரேஷன்" கை குழுக்கி விட்டு வெளியேறி நடந்து வந்து கொண்டிருந்தவனின் மூளை அதி தீவிரமான சிந்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது.

.....

"தோ வர்றேன்" நர்ஸ் ஒருவர் வந்து அழைத்திருக்க அவசரமாக ஐ. சி. யு வுக்கு விரைந்து வந்து கொண்டிருந்தவர் யோசனையில் வந்து கொண்டிருந்த அஜய்யுடன் மோத, தன் மீதும் பிழையிருப்பதை உணர்ந்தவன் "சாரி மேடம்" என்றான் அவசரமாக...

அவனை பார்த்து அதிர்ந்து நின்றிருந்தவருக்கு ஏனோ பயத்தில் வியர்த்து வழிந்தது.

"மேடம் ஆர் யூ ஓகே?" அவன் வார்த்தைகளில் திடுக்கிட்டு கலைந்தவர்

"ஐ... ஐ... அம் ஓகே... சாரி" பேசக் கூட முடியாமல் நா சண்டித்தனம் செய்து வைக்க அவசரமாக திரும்பி நடந்தவருக்கு அவனை கண்டதிலிருந்த படபடப்பு நீங்கவே இல்லை....

தோள்களை குலுக்கி விட்டு திரும்பி நடந்தவனுக்கும் அவர் அதிர்ச்சி சற்றே வித்தியாசமாகப் பட்டாலும் அவன் அதை கருத்தில் கொள்ளாதது தான் இங்கு பெரும் பிழையாய் போயிற்று...

.......


"விஷ்ணு சார்... மித்ரன் சாரை எங்கே இவ்வளவு நேரமா காணும்?"

"அவன் ஹாஸ்பிடல் போயிருக்கான்னு நீங்க தானே மதி சொன்னீங்க... அப்பறமும் என்ன கேள்வி?"

"ஏன் நான் சொன்னா திரும்ப கேள்வியே கேக்க கூடாதா நானு?"

"கேக்கலாமே நல்லா கேக்கலாமே... அதுக்கு ஏன் சூலாயுதம் ஏந்துன அம்மன் மாதிரி ஒரு முறைப்பு? "

"எதே?? சூலாயுதம் ஏந்துன அம்மன் மாதிரியா? என்னை பாத்தா எப்பிடி தெரியுது உங்களுக்கு? "

"ஹாஹா... சொல்லட்டுமா? "

"சொல்லுங்க"

"கர்மா இஸ் பூமெரங் ஆம்... அதனால நீங்க சொன்ன அதே டயலாக நான் திருப்பி படிக்குறேன்... சத்தியமா மனுஷன மாதிரி மட்டும் தெரில" சொல்லி விட்டு அவன் சிரிக்க பல்லை கடித்தாள் பெண்.

"என்ன நக்கலா? "

"இல்லையா பின்னே?"

"உங்க கூட மனுஷன் பேசுவானா?"

"ஆமாமா மனுஷங்க பேச மாட்டாங்க தான்" அதற்கும் அவன் கலாய்க்க

"சார் போதும் சார்" விட்டால் அழுது விடுவாள் போலும்...

"ஓகே ஓகே... " வாய் பொத்தினாலும் இன்னும் சிரிப்பு பீரிட்டது விஷ்ணுவுக்கு...

"இப்பிடியே பண்ணி கிட்டு இருந்தீங்கன்னா அப்பறம் நீங்க வந்த இடத்துல லவ்வர்ஸை சேத்து வெச்சிகிட்டு சுத்திட்ருக்கீங்கன்னு சொல்லிடுவேன் மித்ரன் சார் கிட்ட"

"என்ன சொல்லிடுவேன்" திடீரென பின்னால் கேட்ட குரலில் அதிர்ந்தாலும் விஷ்ணுவை பார்த்து ஒற்றை புருவம் உயர்த்தி பழிப்பு காட்டினாள் பாவை...

"அதுவா மச்சான்... மதி இருக்காங்கல்ல... அவங்களுக்கு உன் மேல லவ்... "

"நோ நோ மித்ரன் சார்... அப்பிடி எதுவும் இல்ல.. விஷ்ணு சார் தான் வந்திருக்க ப்ரஸ்ல ஒவ்வொரு பொண்ணா காட்டி அவ நல்லா இருப்பாளான்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க"

"அடிப்பாவி... பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு வேணாமா?" அவன் அதிர வாய் பொத்தி சிரித்தாள் அவள்.

"வாட் இஸ் திஸ் விஷ்ணு? "

"ஆமா வாட் இஸ் திஸ் விஷ்ணு... அவ சொன்னா நம்பிடுவியா... பொய் சொல்றாடா அவ... நண்பனை பத்தி தெரியாதாடா உனக்கு? "

"தெரிஞ்சதால தான் கேட்டேன்... " அவன் போலியாய் நெஞ்சில் கை வைப்பது கண்டு அவள் பக்கென சிரிக்க தானும் புன்னகைத்தவன்

"சரி டீடெயில்ஸ் கேட்டேன்ல? எங்கே கொடு" என்றான் கடமை தவறாது...

"இதோ இருக்கு டா... " அவன் நீட்டவும் மதியிடம் சேகரிக்க சொல்லி இருந்த டீடெயில்ஸையும் வாங்கிக் கொண்டான்.

"லெட்ஸ் கோ விஷ்ணு... ப்ரஸ் மீட் இருக்கு... அவனுங்களுக்கு பதில் சொல்ல ஆரம்பிச்சோம்னா விடியும் வரை விட மாட்டானுங்க... சீக்கிரமா கண்டு பிடிச்சிடுவோம்னு சொல்லிட்டு நகர வேண்டியது தான்... அப்பறம் மதி.. உங்க ஏரியாக்குள்ள நடந்திருக்க மர்டருங்கறதால உங்களையும் கார்னர் பண்ணுவாங்க... பீ கேர்புல்... பின் வழியா போங்க... நாங்க சமாளிச்சிட்றோம்... அண்ட் நைட்டுக்கு மப்டில போலிஸை காட்டை சுத்தி நிக்க வெச்சிடுங்க"

"ஓகே சார்" அவள் சல்யூட் அடிக்க தலையசைத்து விட்டு நண்பனுடன் இணைந்து நடந்தான் அஜய் மித்ரன்.


***

ஐ. சி. யு க்குள் இருந்தவருக்கு அப்போதும் படபடப்பு நீங்குவதாய் தெரியவே இல்லை..

நல்ல வேலையாக அவனுக்கு அவரை அடையாளம் தெரிந்திருக்கவில்லை..

இல்லையென்றால்???

நினைக்கவே நடுங்கியது அவருக்கு...

ஆபரேஷன் ஒன்றிற்காய் உள்ளே நுழைந்தவர் உடல் நடுக்கத்தில் அதை செய்ய முடியாதென உணர்ந்து, சொல்லி விட்டு வெளியே வந்து விட்டார்.

'கடவுளே... இது என்ன சோதனை... அவன் எப்படி இங்கே வந்தான்? ' மனதில் எழுந்த கேள்விகளுக்கு அவனிடமல்லவா பதில் இருக்கிறது.

"டாக்டர்... ஆர் யூ ஓகே?" ரவுண்ட்ஸ் வந்து கொண்டிருந்த வைத்தியர் ஒருவர் அவர் அமர்ந்து கொண்டிருந்த நீளிருக்கையருகே அவசரமாக வந்தமர்ந்தார்.

"என்னாச்சு?"

"நத்திங் சுமதி... கொஞ்சம் தலை வலி மாதிரி இருந்துது... அதான்.."

"ஓஹ்... டேப்லெட் போட்டீங்களா? இல்லன்னா வீட்டுக்கு கிளம்பறீங்களா? "

"நோ டாக்டர்... இன்னிக்கு முக்கியமான ஆப்பரேஷன் இருக்கு... வீட்டுக்கு போக முடியாது..."

"இட்ஸ் ஓகே ராஜி... நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க... நான் பாத்துக்கறேன் " சரியென்றவன் தன்னறைக்கு விரைந்தார்.


***


இரவு...

"மச்சான்... வெளியில ஏதோ சத்தம் கேக்குதுடா..." இருவர் கொடுத்த குடும்ப விபரங்களையும் அலசிக் கொண்டு அமர்ந்திருந்தவனை கலைத்தான் ப்ளாட்டின் ஜன்னலருகே நின்றிருந்த நண்பன்.

"கீழ போயி பாத்துட்டு வா" இயந்திர கதியில் மொழிந்தவன் பார்வையை திருப்பாதது கண்டு

"பெரிய சின்ஸியர் சிகாமனி... போடா" நக்கலடித்து விட்டு நகர நண்பன் வார்த்தைகளில் இளம் கீற்றாய் புன்னகை மலர்ந்தது மித்ரனின் உதடுகளில்....

.....

"மித்ரா நாம மப்டிக்கு மதி ஸ்டேஷன் போலிஸை நிறுத்தி இருந்தோம்ல... அவனுங்கள்ல ஒருத்தன் செத்து கிடக்குறானாம்டா... அது மட்டுமில்லாம காட்டுக்குள்ள எவனோ தீயை வேற வெச்சிருக்கானாம்டா" மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நண்பன் வந்து ஒப்பித்ததில் சடாரென தன்னிருக்கையை விட்டு எழுந்திருந்தான் மித்ரன்.


யார் மீது குற்றம்?

தொடரும்...

27-07-2021.


 
Status
Not open for further replies.
Top Bottom