அத்தியாயம் 02
"பக்கத்துல ஏதாவது ஹாஸ்பிடல் இருக்கானு பாரு மச்சி" நண்பனுக்கு கட்டளையிட்டவாறே வேகமாக வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான் மித்ரன்.
மழை வேறு அடித்து ஊற்றிக் கொண்டிருக்க முன் முகப்புக் கண்ணாடி சாலையை மறைத்துக் கொண்டிருந்ததில் மேலும் மேலும் எரிச்சலும் படபடப்பும் அவனுக்குள்...
"மித்ரா ரிலாக்ஸ்டா... எதுக்கு இவ்வளவு பதட்டம்?" வெளியே ஏதாவது ஹாஸ்பிடல்கள் தென்படுகிறதா என பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணு நண்பனை சமாதானப்படுத்தவும் மறக்கவில்லை...
அவனுக்கும் ஏனிந்த திடீர் பதற்றமென புரியவே இல்லை...
மனதிற்கு மிக நெருக்கமான ஒருவருக்கு ஏதாவது ஆகி விட்டால் துடிப்பது போல் இருந்தது அவன் நிலை...
"மச்சான் கூகிள் மேப் ல எதுக்கும் ஒரு தடவை பாக்கறேன் இருடா" டேஷ் போடில் இருந்த தன் மொபைலை எடுத்தவனுக்கு டவர் கிடைக்காததில் எரிச்சலாய் வந்தது.
"ச்சே இந்த மழை வேற... மித்ரா அங்கே பாரு..." தூரத்தே ஏதோ வெளிச்சம் தெரியவும் நண்பன் கை காட்டிய திசை நோக்கி பார்த்தவனுக்கும் அப்போது தான் நிம்மதியாயிற்று.
"இது என்ன இடம்னு தெரிலயே டா" யோசனையாய் சொன்னான் மித்ரன்.
"எந்த இடம்னு அப்பறமா பாக்கலாம் மச்சான்... அந்த பொண்ணு வேற மயக்கத்துல இருக்கா நீ முதல்ல வண்டிய அந்த கிளினிக் முன்னாடி நிறுத்து" விஷ்ணுவின் கூற்றை ஆமோதித்தவாறே ஓரமாய் வண்டியை நிறுத்தியவன் பின்னால் திரும்ப அவ்வளவு நேரம் கண்களை திறந்திருந்தவள் படக்கென விழிகளை மூடிக் கொண்டாள்.
.......
"ஷீ இஸ் ஆல்ரைட் நௌ... அவங்களுக்கு எதுவுமில்ல மிஸ்டர். மித்ரன்... நீங்க போயி பாக்கலாம்.. " டாக்டர் அவ்விடம் விட்டகலவும் பணம் கட்டி விட்டு விஷ்ணு அருகில் வந்தமரவும் சரியாக இருந்தது.
"விஷ்ணு...."
"சொல்லு மச்சி"
"அந்த பொண்ண நாம ட்ரெயினிங்ல பாத்திருக்கோம்" நண்பனின் கூற்றில் விலுக்கென நிமிர்ந்து பார்த்தவனுக்கும் அப்போது தான் ஞாபகம் வந்தது.
"அட ஆமா டா... ஒரே ஒரு நாள் ட்ரெயினிங்ல இருந்துட்டு தலைமறைவாகினா... அவல்ல இவ?"
"அவளே தான்"
இருவருக்கும் ஓர் நாள் பார்த்த முகம் என்பதால் தான் சட்டென ஞாபகம் வரவில்லை போலும்...
முதல் நாள் ட்ரெயினிங்கில் ஜாயின் பண்ணி இருந்தவள் இரண்டாம் நாள் வெளியேறியது அவர்களுக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது...
அதன் பின் அவளை மறந்தே போயினர் இருவரும்.....
இன்று தான் அதுவும் இந்த நிலையில் தான் மீண்டும் ஓர் சந்திப்பு...
எதற்காக சென்றாளென்றெல்லாம் அவர்களுக்கு அவஷியமில்லையாயினும் அவளும் ஒரு போலிஸ் என்பதே இருவருக்குள்ளும் நெருடியது.
"மச்சான் இவ அப்போ போலிஸாடா?" மித்ரனின் மனதிற்குள் தோன்றிய அதே கேள்வியையே விஷ்ணு கேட்கவும் அவனை நிமிர்ந்து பார்த்து ஆமென்றான் இன்னும் யோசனையாய்...
"அய்யே அவ எவளா இருந்தா நமக்கென்ன டா... என்னாச்சுன்னு கேட்டுட்டு நாம கேஸை பாக்க போகலாம்" விஷ்ணு எழுந்து கொள்ள தானும் எழுந்தவன் அவளு அறை நோக்கி நடந்தான்.
......
இருவரும் உள்ளே வந்ததை உணர்ந்தவள் கண்களை திறக்க அவளையே ஆராய்ச்சியாய் பார்த்து வைத்தன மித்ரனின் கண்கள்....
"தேங்க்ஸ் " பொதுவாக மொழிந்தவள் எழுந்து கொள்ள
"என்னாச்சு...யாரு அப்பிடி பண்ணது?" விஷ்ணுவின் கேள்வியில் ஓர் நிமிடம் அதிர்ந்தவள் தன்னை சட்டென சமாளித்துக் கொண்டாள்.
"நான் ஒரு போலிஸ்..." அவள் ஆரம்பிக்க
"அதை நாங்களே கண்டு பிடிச்சுட்டோம்.... மேல சொல்லு" இடையிட்டான் மித்ரன்.
"ட்ரெயினிங்ல கூட உங்க ரெண்டு பேரையும் பாத்திருக்கேன்"
"அட ஏன் மா நீ வேற... என்ன ஆச்சுன்னு சொல்லு" மீண்டும் விஷ்ணு.
"இல்ல கொல்லி மலை காட்டுக்கு பக்கத்துல இருக்க ஊருக்கு ட்ரான்ஸ்பர் கிடைச்சிருந்துது... அதுக்காக நின்னு கிட்டு இருந்தப்போ ஒரு பைக்காரன் திடீர்னு இடிச்சுட்டு போக... அதிர்ச்சியில தான் மயங்கிட்டேன்" தலை குனிந்து அவள் சொல்ல இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"ஆமா ஏன் அங்க ட்ரான்ஸ்பர் போட்டாங்க... நம்புறா மாதிரி இல்லையே" தாடையை தடவிய மித்ரனை நண்றாக திட்டித் தீர்த்தாள் பெண்...
'இவன் ஒருத்தன்... சிபிஐ ஆபிஸர் மாதிரி நொய்யி நொய்யின்னு கிட்டு'
"அது அது... நான் தான் கேட்டு வாங்கி கிட்டேன்"
"ஏன்?"
"சார் நானும் போலிஸ் தான்... நான் எங்கே ட்ரான்ஸ்பர் வாங்கி கிட்டா உங்களுக்கு என்ன?" வெடுக்கென கேட்டு விட்டவள்
'அய்யோ போச்சா' புலம்பிக் கொண்டே மலங்க விழிக்க என்ன நினைத்தானோ
"நாங்களும் அந்த பக்கமா தான் போறோம்... வர்றதுன்னா வரலாம்" தோள்களை குலுக்கி விட்டு வெளியேறி விட அவளையும் நண்பனையும் மாறி மாறி பார்த்த விஷ்ணு தானும் வெளியேறி விட
'எங்கே அவன் கூட போறதுக்கு திரும்ப ட்ராமா ஆரம்பிக்கணுமோன்னு பயந்துட்டேன்... ஹப்பாடா... வேலை முடிஞ்சுது... அவன் கூடவே கிளம்ப வேண்டியது தான்' சட்டென கட்டிலை விட்டு இறங்கியவள் வெளியே வந்து அவர்கள் முன் வந்து நின்றாள்.
......
"அம்மா...." தாயை அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் அந்த ஆறடி ஆண்மகன்.
கிட்டத்தட்ட ஐந்தடிக்கும் ஆறுக்கும் இடையேயான உயரம்... பார்ப்போரோ உடனே வசீகரிக்கும் முகமென்றாலும் ஓர் அப்பாவித்தனம் எப்போதுமே ஒட்டிக் கொண்டிருக்கும்....
கண்களில் கண்ணாடி அணிந்திருந்தாலும் சிரிக்கும் கண்கள் அப்படியே படம் பிடித்து காட்டி விடும் அவன் உள்ளத்து உணர்வுகளை....
அவன் உதய்!!!
"உதய்... வந்துட்டியா... எவ்வளவு நேரமா வெயிட் பண்றேன் தெரியுமா... வா வந்து சாப்புடு முதல்ல..." அவனை விட சற்றே உயரம் குறைவாக இருந்தாலும் அவர் முகத்திலிருக்கும் தெளிவே அவரை உயர்த்துவதாய்...
ராஜி!!!
"அம்மா எத்தன தடவ சொல்லி இருக்கேன் எனக்காக வெயிட் பண்ணாம நீங்க சாப்புடுங்கன்னு... என்னம்மா இது... வாங்க நீங்களும்... " தாயின் தோளை பிடித்து தள்ளியவாறே கூட்டிச் சென்று அமர வைத்தவன் தானும் அமர்ந்து அவருக்கு தட்டை எடுத்து வைக்க மகனை வாஞ்சையாய் பார்த்தார் ராஜி.
"என்னை எவ்வளவு நேரம் தான் மா சைட் அடிச்சுகிட்டே இருப்பீங்க... சாப்புடுங்க" சிரித்துக் கொண்டே அவன் சாப்பிட ஆரம்பிக்க
"வாலு" தானும் சாப்பிட ஆரம்பித்தார் தாய்...
"எங்கே போன உதய்... மழை வேற பெய்யுது... இந்த நேரத்துல எதுக்கு வெளியில போற?"
"நான் என்ன சின்ன பையனாமா... எதுக்கு இவ்வளவு பதட்டப்பட்றீங்க... சும்மா தான் வெளியில போனேன்... அது ஒரு குத்தமா?"
"அப்பிடி இல்ல கண்ணா... எனக்குன்னு இருக்கறது நீ மட்டும் தானே... அம்மாக்கு பிள்ளையோட பாதுகாப்ப தவிர வேறு என்ன யோசனை இருக்க போகுது? "
"காட்.... அம்மாஆஆஆ.... அதான் நான் வந்துட்டேன்ல.... இனி சாயங்காலம் ஐஞ்சு மணி தாண்டுனா வீட்ல டான்னு நிப்பேன் சரியா... இப்போ சிரி மா" அவனை போலியாய் முறைத்தவர் முடியாமல் சிரித்து விட சாப்பிட்டு விட்டு எழுந்து கொண்டான் மகன்.
"செம தூக்கம் டாக்டர் மேடம்... நீங்களும் எதுவும் யோசிக்காம தூங்குங்க குட் நைட்" தாயை அணைத்து விடுவித்தவன் அவர் கண்ணத்தில் முத்தமிட்டு விட்டு தனதறைக்குள் நுழைய தாயின் முகம் பூரிப்பில் மலர்ந்திருந்தது.
.......
காலை...
"டேய் நாம நெருங்கிட்டோம்...." கொட்டாவி விட்டவாறே வெளியே பார்த்தான் விஷ்ணு.
பின்னிருக்கையில் அவள் இன்னுமே தூங்கிக் கொண்டிருக்க வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவன் ஓர் முறை திரும்பிப் பார்த்து விட்டு மீண்டும் திரும்பி விட்டான்.
"டேய் நைட் கொஞ்ச நேரம் தூங்கலாம்னு தூங்குனோம்லடா.... எப்போ வண்டி ஓட்ட ஆரம்பிச்ச?"
"ம்... ஒரு பேயி வந்து என்ன எழுப்பி விட்டுடுச்சு... அதான் முழிச்சுகிட்டேன்" என்றான் கடுப்புடன்...
"மித்ரா நீ ரொம்ப டயர்டா இருக்க... வண்டிய நிறுத்துடா நான் ஓட்றேன்"
"இட்ஸ் ஓகே மச்சி... இன்னும் கொஞ்ச தூரம் தான் இருக்கு... போய்டலாம்" சமாதானப்படுத்தியவாறே அங்கிருந்த கிளைச்சாளைக்குள் வண்டியை விட்டவனுக்கு உடல் திடீரென தூக்கிப் போட்டது!!!
தொடரும்......
09-07-2021.
கதையை தொடர்ந்து கொடுக்காமல் போனதற்கு மன்னிச்சு...
இனி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை டான்னு யூடி போட்டுடுவேன் நண்பா
கீழே உள்ள திரியில் கதை எப்பிடி இருக்குன்னு ஒரு தடவை சொல்லிட்டு போயிடுங்க நண்பா
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏, வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...
www.sahaptham.com