Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வரமான வாழ்க்கை

Suthi Suthi

Saha Writer
Team
Messages
3
Reaction score
1
Points
1
வரமானவாழ்க்கை -சுதிக்க்ஷா-

திருச்சி பேருந்து நிலையத்தில் பேருந்தில் இருந்து இறங்கினாள் நம் நாயகி மித்ரா.அழைத்து செல்ல வருகிறேன் என்றவன் வராமல் இருக்க அப்படியே அங்கிருக்கும் சேரில் அமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.அவள் வந்து அரை மணி நேரம் கடந்த பிறகே வந்தான் அவள் மணாளன்.


பஸ் ஸ்டாண்டிற்குள் அவன் நுழையும் போதே பார்த்துவிட்டாள் மித்ரா.காக்கி யூனிபார்மில் அனைவரையும் குள்ளமாக்கி கொண்டு கிரேக்க வீரனை போல் செதுக்கி வைத்த உடலுடனும்,இரவு பணிக்கு சென்றதால் கண்கள் சிவந்து இருந்த போதும் முகத்தில் இருக்கும் சிரிப்பு வாடாமல் வந்தவனை பார்த்தவள் அவனை பார்க்காதது போல திரும்பி கொண்டாள்.

பேருந்து நிலையத்தில் இருந்த மற்ற பெண்கள் அனைவரும் அவனை ஒரு முறை திரும்பி பார்த்துவிட்டு செல்ல இவள் அவனை பார்க்காதவாறு திரும்பி கொண்டாள். இது எதையும் கவனிக்காத நம் நாயகன் சித்தார்த் நேராக மனைவியிடம் வந்தவன் சின்ன புன்னகையுடன் போகலாமா,சாரி கொஞ்சம் ஒர்க்ல மாட்டிக்கிட்டேன். வந்து ரொம்ப நேரம் ஆகிவிட்டதா போன்ற எந்த கேள்விக்கும் மனைவியிடத்தில் பதில் இல்லாமல் போக திரும்பி பார்த்தவன் குழம்பி போனான் தன் மனைவியின் பயபார்வை கண்டு.



மித்ராவின் பயபார்வையை பார்த்து குழம்பினாலும் இப்போது எதுவும் கேட்க வேண்டாம் வீட்டிற்கு சென்று பேசி கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தவன் அவளை கோட்ரஸ்ஸிற்கு அழைத்து சென்றான்.வீட்டிற்குள் சென்றதும் மித்ரா அவனை பார்க்காது திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல் திருதிருவென்று விழித்து கொண்டு நிற்பதை பார்த்தவன் அவளிடம் பேச ஆரம்பித்தான்.

அம்மு எனக்கு மேரேஜ்லயே விருப்பம் இல்லாம இருந்துச்சு, அம்மா பிடிவாதத்துல மேரேஜ்க்கு ஒத்துகிட்டேன்.அந்த பையன் ஓடி போயிட்டானு சொன்னப்ப எனக்கு கோபம்தான் வந்துச்சு பையன்னோட அபிப்ராயத்த கேக்காம இப்புடிபண்ணிட்டாங்களேனு.அம்மா பிடிவாதம்தான் இந்த மேரேஜ்.இப்பவும் எனக்கு கொஞ்சம் டைம் வேணும் இந்த மேரேஜ்ஜ ஏத்துக்க சோ நீ எதபத்தியும் கவலைபடாம ஜாலியா உன்னோட வேலைய பாரு.அப்புறம் என்ன பாத்து பயப்படாத நான் எப்பவும் உன்னோட அத்தான்தான் சரியா என்று சிறு பிள்ளையிடம் சொல்வது போல் சொன்னான்.

சித்தார்த் சொல்வதை எல்லாம் கேட்டவள் ஒரு தலையாட்டலை மட்டுமே கொடுத்தாள்.

சரி நான் போய் ரெப்ரஸ் ஆகிட்டு ரெண்டு பேருக்கும் டிபன் வாங்கிட்டுவரேன் என்றவன் எழுந்து அங்கிருந்த அறைக்குள் நுழைந்து கொண்டான்.ஹாலில் இருந்த மித்ராவிற்கு கண்கள் கரித்து கொண்டு வந்தது.தங்கள் வீட்டை நினைத்து.


சித்தார்த் உணவு வாங்கி வருவதாக வெளியில் சென்றவுடன் இவளும் சென்று குளித்து வேறு உடை மாற்றி கொண்டு வந்தாள்.டிபன் வாங்கி கொண்டு உள்ளே வந்த சித்தார்த் சிலையாகிதான் போனான்.

நீல நிற சேலையில் தலையில் துண்டுடன் சாமி கும்பிட்ட அடையாலமாக நெற்றியில் திருநீரும்,வகிட்டில் குங்குமமும் வைத்து எந்த வித அலங்காரமும் இல்லாமல் தேவதையாக இருந்தவளை பார்த்தவனுக்கு மூச்செடுக்கவே சிரமமாக இருந்தது. எங்கு கண்ணை சிமிட்டினாள் காணாமல் போய்விடுவாளோ என்று பயந்தவன் போல் அவளையே இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.

மித்ராவை இப்போதுதான் நன்றாக கவனித்து பார்த்தான் பார்ப்பவர்களை திரும்பி பார்க்க வைக்கும் அழகு.இவள் திருமணத்திற்கு சென்று இவளையே திருமணம் செய்து கொண்டு வந்திருக்கிறான்.அந்த மாப்பிள்ளையின் உபயத்தால்.சிறு வயதில் இருந்து அவளை பார்த்து வளர்ந்தவனுக்கு மாப்பிள்ளை சென்றதே அதிர்ச்சி என்றால் அவனது அம்மா அவனை மணக்க சொன்னது அதைவிட அதிர்ச்சியாக இருந்தது.

மித்ரா மிகவும் அமைதி அதிகம் யாருடனும் பழகமாட்டாள். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவள். சித்தார்த் மாமன் மகன் என்ற போதும் அவர்கள் வீட்டுக்கு சென்றால் வரவேற்பாக வாங்க என்று சொல்வதோடு சரி அதன் பிறகு அவளது அறையில் சென்று புகுந்து கொள்வாள்.அவன் வேலைக்கு வந்த பிறகு அங்கு செல்வதும் இல்லை பேசுவதும் இல்லை.பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு மெடிக்கல் சேர்ந்ததாக அவன் அம்மா சொல்லி கேட்டதுதான்.இன்று மனைவியாக அவளை பார்க்கும் போது புதிதாக தெரிந்தாள்.

மித்ரா அவன் வரும் வரை தந்தையுடன் பேசலாம் என்று தந்தைக்கு அழைத்து பேசிவிட்டு தன் திருமண நிகழ்வை யோசிக்க ஆரம்பித்தாள்.

அம்மா....என்று இதோடு நூறுமுறையாவது அழைத்திருப்பாள் தன் தாயை ,தயக்கத்தோடு அழைத்தவள் தாய் தன்னை கவனிக்கிறார் என்று தெரிந்தவுடன்.எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்மா.

ஏன் வேண்டாம்.ஏற்கனவே மாப்பிள்ளை ஓடி போனதில் உங்க அப்பா வருத்தத்தில் இருக்காரு இப்ப அவர் சந்தோஷத்தை என்னை கெடுக்க சொல்கிறாயா.அவரோட தங்கச்சி பையனே தனக்கு மாப்பிள்ளையா வந்தத நெனச்சு அவரு சந்தேஷமா இருக்காரு உனக்கு வேணும்னா நீயே சொல்லிக்கோ.

அம்மா ப்ளீஸ்மா எனக்கு போலீஸ்னா பயம்னு உனக்கு தெரியும்ல அப்புறம் எப்புடிமா.


சும்மா சொன்னதே சொல்லாதா அம்மு.அவன் வேற யாரோ இல்ல உன்னோட அத்தை மகன் மற்ற போலீஸ்காரர்கள் போல் அவனை நினைக்காதே.அவன் நேர்மைக்கு கிடைத்த பரிசுதான் இந்த இளம் வயதில் அவனுக்கு கிடைத்திருக்கும் உயர் அதிகாரி போஸ்ட்டும் வருடத்திற்கு ஒரு முறை கிடைக்கும் டிரான்ஸ்பரும் என்ற தாயை இயலாமையுடன் பார்த்தாள் .

அம்மா என்று ஏதோ பேச வர அந்நேரம் பார்த்து அம்மு ரெடி ஆகிவிட்டாயா என்று கேட்டவாரு உள் நுழைந்தார் அவளின் தந்தை.இவரிடம் சொல் உன் காரணங்களை என்று மிதப்பாக பார்த்த தாயை பார்த்து பல்லை கடிக்க மட்டுமே முடிந்தது மித்ராவிற்கு.

அம்மாவை முறைத்து கொண்டே இதோ அப்பா கிளம்பிவிட்டேன் என்ற மகளை வாஞ்சையாக பார்த்தார் மித்ராவின் அப்பா அகிலன்.உனக்கு இந்த திருமணத்தில் விருப்பம்தானேமா வருத்தம் எதுவும் இல்லையே என்று கேட்ட தந்தையை பார்த்தவளுக்கு மகளின் விருப்பம் அறியாமல் அவசரப்பட்டுவிட்டோமோ என்ற கவலை அவரது முகத்தில் இருப்பது நன்றாக தெரிந்தது.

எனக்கு எந்த கவலையும் இல்ல அப்பா உங்களுக்கு ஏதும் கவலை இருந்தால் சொல்லுங்கள்.கவலைக்கான காரணத்தை கண்டுபிடித்து தர சொல்லி உங்கள் மாப்பிள்ளையிடமே கம்ப்ளைண்ட் கொடுத்துவிடுவோம். தந்தையின் கவலையை போக்க விளையாட்டாக பேசி தந்தையின் கவனத்தை திசை திருப்பினாள்.அவள் நினைத்தது போல அவரது முகம் புன்னகையில் விரிய சரியான போக்கிரி என்று அவள் தலையில் வலிக்காமல் குட்டினார்.

சரி வாமா போகலாம் அனைவரும் உனக்காகதான் காத்து கொண்டு இருக்கிறார்கள் என்றவர் கோதை அம்முவை அழைத்து வா என்று முன்னே சென்றார்.கணவர் சென்றவுடன் மகளை கோதை முறைக்க விடுமா விடுமா அப்பா ரொம்ப வருத்தப்பட்டார் அதுதான் என்ற மகளை கொலைவெறியுடன் பார்த்தார் தாய்.

ஏன்டி இவ்ளோ நேரம் நான் கழுதையா கத்துனேன் அது உன் காதுல விழுகல உன் அப்பா வந்து சொன்னவுடனே உனக்கு போலிஸ் புடிச்சிருச்சா என்ன அநியாயம்டி இது என்று பொறும ஆரம்பித்தார்.



ஸ்.........கத்தாதமா நீயே சொல்ற கழுதையா கத்துனேன்னு அப்புறம் எனக்கு எப்புடி புரியும் எனக்கு கழுத லாங்வேஜ் தெரியாது என்று அப்பாவியாக பதில் சொன்ன மகளை பார்த்தவர் எப்புடியோ போ இந்த நேரத்திலும் என்ன டேமேஜ் பண்ணுலனா உனக்கு தூக்கம் வராதே வா போலாம் உன் அப்பா மறுபடியும் வந்தற போறாரு உங்க பாச படத்த பாக்க எனக்கு பொருமை இல்லை என்று இவரும் மகளின் மனதை வேறு திசையில் மாற்ற கிண்டல் அடித்துவிட்டு நகர்ந்தார்.



மித்ரா வெளியில் சிரித்து கொண்டாலும் மனதில் பயத்துடன் மணமேடையில் அமர்ந்தாள்.ஓரகண்ணால் தன் பக்கத்தில் அமர்ந்திருந்தவனை பார்த்தவளுக்கு மூச்சு நின்றது போல் ஓர் உணர்வு.மாநிறத்தில் கண்களில் கூர்மையுடன் அவனும் அவளைதான் பார்த்து கொண்டு இருந்தான். அவனின் கண்கள் கூர்மையாக தன்னை துளைப்பதை உணர்ந்தவள் படபடப்பாக உணர உடனே குனிந்து கொண்டாள்.அதன் பிறகு நிமிறவே இல்லை.



ஐயர் மந்திரங்கள் ஓத இருவரும் உறவினர் என்பதால் அனைத்து சொந்தங்களும் வந்திருந்தனர்.அனைவரின் ஆசிர்வாதத்தோடு மித்ராவின் கழுத்தில் மாங்கல்யத்தை கட்டி அவளை செல்வி என்ற பதவியில் இருந்து திருமதி ஆக்கினான் சித்தார்த் வர்மன்.



சித்தார்த் வர்மன் டி.எஸ்.பியாக இருக்கிறான் சொந்த ஊர் மதுரை.இப்போது பணி புரியும் இடம் திருச்சி.ஆறடி ஆண்மகன் போலிஸ்க்கு ஏற்ற உயரமும்,உடற்கட்டும் கொண்டவன் அவனின் உருவமே பார்ப்பவர்க்கு படம் பிடித்துகாட்டிவிடும் அவன் ஒரு போலிஸ் என்று யாருக்கும் பயப்படமால் தன் வேலையை செம்மையாக செய்பவன்.



திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்தவன்,மாமன் மகளின் திருமணத்திற்கு வந்து மாப்பிள்ளை செய்த குளறுபடியால் தாயின் கெஞ்சல்,கொஞ்சல் எதற்கும் அசையாமல் கடைசியில் கண்ணீரில் கரைந்து தானே இப்போது மாப்பிள்ளையாக அமர்ந்து இருக்கிறான்.

ஒரு வழியாக அனைத்து சடங்குகளும் முடிந்து அம்முவின் அத்தை வீட்டிற்கு சென்றனர்.சென்றவுடனே சித்தார்த் எனக்கு அவசரமான வேலை இருக்கிறது.முதலிலேயே பிளான் செய்ததுதான்.என்னால் இந்த சமயத்தில் லீவ் எடுக்க முடியாது.நான் காலையே கிளம்பவேண்டும் என்றவன் ஒரு நிமிட அமைதிக்கு பிறகு மித்ரா படிப்பு முடியும் வரை இங்கு இருக்கட்டும் என்று கூறிவிட்டு அவ்வளவுதன் என்பது போல் சென்றுவிட்டான்.



சித்தார்த்தின் பேச்சை கேட்ட அவனின் தாய் மோகனா அவனைபற்றிதான் தெரியுமே விடுங்கள் நாம் அடுத்து நடக்க வேண்டியதை பார்ப்போம் என்றவர்.அம்மு உன்னுடைய துணிகள் அனைத்தையும் எடுத்து வர கோதை சென்றிருக்கிறாள்.நீ அது வரை என்னுடைய அறையில் ஓய்வு எடு.நான் மற்ற வேலைகளை பார்க்கிறேன் என்று மென்மையாக அவளது தலையை வருடி கூறியவரை பார்த்தவள் சரி அத்தை என்று கூறி சென்றுவிட்டாள்.



மாலை மங்கி இரவு நேரம் நெருங்க நெருங்க அம்முவிற்கு பயத்தில் மயக்கம் வரும் போல் இருந்தது.ஹையோ இப்ப என்னபண்றது ஓடவும் முடியாது,ஒழியவும் முடியாது என்று தனக்குள் கூறி கொண்டவளுக்கு பயத்தில் வேர்க்க துவங்கியது.



இரவு உணவை அனைவருடனும் முடித்து கொண்டவள் முகம் பயத்தில் வெளுத்து இருந்தது.ஹையோ அவன நார்மலா பாக்கவே எனக்கு பயமா இருக்கும் இப்ப தனியா போகணுமா என்று பயந்து கொண்டு இருந்ததுக்கு ஏற்ப அவளது அத்தை வந்து அவளை சித்தார்த் அறைக்கு செல்ல சொன்னார்.



புலி வருது புலி வருதுனு கடைசில வந்துருச்சு என்று நினைத்தவள்.அத்தையை தயக்கமாக பார்த்தாள்.



போடா மா பயப்படாத என் பையன் ஒண்ணும் சிங்கம் புலி இல்ல என்று புன்னகையுடன் சொன்னவர் சென்றுவிட்டார்.



புலி சிங்கத்துக்கூட கூட இருந்தரலாம் ஆன உங்க பையன் போலீஸ் அதன் எனக்கு பயம் என்று மனதில் நினைத்து கொண்டே சித்தார்த்தின் அறைக்கு அருகில் வந்து மூச்சை நன்றாக இழுத்துபிடித்து கொண்டு கதவை திறந்து கொண்டு சென்றாள்.



அறை காலியாக இருக்க அம்முவிற்கு அப்போதுதான் மூச்சு வந்தது.அப்பாடா என்று அவள் நினைப்பதற்கு முன்பே பால்கனியில் அவன் சத்தம் கேட்டது.கோபமாக யாருடனோ பேசி கொண்டு இருந்தான்.



என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க இது எவ்ளோ இம்பார்டண்ட் தெரியும்ல,அப்புறமும் ஏன் இவ்ளோ கேர்லஸா இருந்தீங்க.சரி மறுபடியும் நல்லா தேடுங்க அங்கதான் எங்கையாவது இருப்பான்.நல்லா வாட்ச்பண்ணுங்க நம்ம பிளான்பண்ணபடி அவனுக்கு போட்ட ஸ்கெட்ச் போட்டதுதான் என்று பேசி கொண்டு இருந்தவன் மேலும் சற்று நேரம் பேசி முடித்து போனை வைத்தான்.



அறைக்குள் செல்ல திரும்பியவன் கண்ணில்பட்டாள் மித்ரா.முகம் வெளுத்து கண்ணில் நீர் தளும்ப நின்றவளை பார்த்தவன் வேகமாக அவள் அருகில் சென்றான்.

அம்மு என்ன ஆச்சுடா என்று கேட்க அவனை பாக்கத்தில் பார்த்தவள் சற்று முன் அவன் பேசியது நினைவில் வர பயத்தில் மயங்கி அவன் மேலேயே சரிந்தாள்.



ஹேய் அம்மு என்ன ஆச்சு? என்று பதறியவன் அவளைதூக்கி கட்டிலில் படுக்க வைத்தான்.பக்கத்தில் டேபிளில் இருந்த வாட்டர் கேன்தண்ணீரை அவள் மீது தெளித்தான்.நீர் முகத்தில் படவும் முகத்தை சுருக்கி கொண்டு கண்ணை திறந்தவளுக்கு தன் முகத்துக்கு மிக அருகில் இருந்த சித்தார்த்தின் முகம் தெரிந்தது. சித்தார்த்தை அவ்வளவு அருகில் எதிர் பார்க்காதவள் அடித்து பிடித்து எழுந்து உட்கார்ந்தாள்.



ஹேய். ஈசி. எதுக்கு இப்புடி பாக்கற.



ஒ....ஒண்ணும் இல்ல.எ.....எனக்கு தூக்கம் வருது தூங்கவா என்றாள் கண்ணில் திண்ட நீருடன்.அவளையே ஆராய்ச்சியாக பார்த்தவன் எதுவும் சொல்லாமல் தலை அசைக்க விட்டாள் போதும் என்று படுத்து போர்வையை தலை வரை போர்த்தி கொண்டாள்.

சித்தார்த் மித்ராவையே சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்தவன் அவனது கண்களும் தூக்கத்துக்கு கெஞ்ச சென்றுபடுத்துவிட்டான்.



அடுத்த நாள் அவன் வேலையை காரணம் காட்டி திருச்சிக்கு சென்றுவிட,அதன் பிறகுதான் மித்ராவிற்கு அந்த வீட்டில் நிம்மதியாக மூச்சே விட முடிந்தது.அவள் அத்தையுடன் பேசி கொண்டும் மாமனாருடன் வம்பலந்து கொண்டும் அவள் பொழுது சிறப்பாகவே சென்றது.



மித்ராவிற்கு நாட்கள் அத்தை,காலேஜ் என்று சென்றது. சனி ஞாயிறுகளில் அப்பாவை பார்க்க இவள் சென்றுவிடுவாள். அல்லது அவர்களை வரவழைத்துவிடுவாள்.இதற்கிடையே கணவனுடன் பேச பயந்தவள் ஒரு முன்னேற்றமாக அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க ஆரம்பித்து இருந்தாள்.



மித்ராவின் கல்லூரி முடிந்து அடுத்து ஹவுஸ் சர்ஜன் பிராக்டிஸ்காக அனைவரும் அவளை திருச்சியில் இருக்கும் ஹாஸ்பிட்டலுக்கு வாங்கி கொள்ள சொன்னார்கள்.ஆனால் அவனுடன் தனியாக இருக்க பயந்தே அவள் மறுக்க, கோதை வந்து மந்திரித்ததில் அரை மனதாக ஒப்பு கொண்டு இதோ திருச்சியில் வந்து இறங்கிவிட்டாள்.இதையே யோசித்து கொண்டு இருந்தவள் சித்தார்த் வந்ததை உணர்ந்து தன்னிலைக்கு வந்து எழுந்து நின்று கொண்டாள்.



சித்தார்த் ஏதோ யோசனையில் இருப்பதை பார்த்தவள் அவனை எப்படி அழைப்பது என்று ஒரு நிமிடம் யோசித்து மாமா என்று அழைக்க அது அவன் காதில் விழுந்தது போல் தெரியவில்லை.மீண்டும் சத்தமாக மாமா என்று அழைக்க சுய நினைவு வந்தவன் தன் தலையை தானே தட்டி கொண்டு அவளை பார்த்து மென்மையாக சிரித்தவன் வா சாப்பிடலாம் என்று அழைத்து சென்றான்.



இருவரும் அமைதியாக சாப்பிட பேச்சிற்கு இடம் இல்லாமல் போனது.மித்ராவும் இரவு முழுதும் பயணம் செய்ததால் களைப்பாக இருக்க இவனது தடுமாற்றத்தை கண்டு கொள்ளவில்லை.



சித்தார்த்,மித்ரா இவர்களின் வாழ்க்கை திருச்சியில் ஆரம்பமானது.மித்ரா எப்போதும் போல அமைதியாகவே இருக்க, அவன்தான் ஏதாவது பேசுவான்.அவன் கேட்கும் ஒன்று இரண்டு வார்த்தைகளுக்கு பதில் அளிப்பாள் அவ்வளவே.இவனும் பேசி பேசி பார்த்து காரணம் புரியாமல் குழம்பிதான் போனான்.



அடுத்து வந்த நாட்களில் மித்ரா ஹவுஸ் சர்ஜன் பிராக்டிஸ்க்கும் சித்தார்த் பிள்ளைகளை கடத்தும் கும்பலை கண்டு பிடிக்கும் வேலையிலும் பிசியாக இருந்தனர்.



மித்ரா காலையில் எழுந்து காலை டிபன் மதியம் சாப்பாடு அனைத்தும் ரெடி செய்துவிட்டே கிளம்புவாள்.அவள் எழுந்து கிச்சனில் வேலை செய்ய இவன் எழுந்து ஜாகிங் சென்றுவிட்டு வந்து பேப்பரும் கையுமாக அமர்ந்து விடுவான்.வேற எதுக்கு பொண்டாட்டிய சைட் அடிக்கதான் கல்யாணத்துல விருப்பம் இல்லைனு சொல்லிட்டு அந்த புள்ளைய விடாம சைட் அடிக்கறடா என்றது அவன் மனசாட்சி அதையெல்லாம்கண்டு கொள்ளாமல் தன் வேலையை சிறப்பாக செய்து கொண்டு இருந்தான். அதாங்க சைட் அடிக்கற வேலை.



சித்தார்த் பேப்பரை கையில் எடுக்கும் போது ஒரு வலை கரம் அவனுக்கு காபியை நீட்டும் முகத்தில் புன்னகையுடன் வாங்கி கொண்டு காபியை ரசித்து பருகுவான்.அந்த காலை வேலையில் குளித்து அவசர அவசரமாக வேலை செய்யும் மனைவியின் மேல் ஓர் பார்வை வைத்து கொண்டே இருப்பான்.



மித்ராவோ அவன் முகம் பார்த்தே பேசமாட்டாள். ஆமாம், இல்லை என்ற இரு வார்த்தை அதுவும் சுவற்றை பார்த்து பேசுவாள் அதனால் அவனுக்கும் ஈகோ வந்து அவளை கண்டு கொள்ளாமல் இருக்க முயற்ச்சித்தான், முயற்ச்சியாகவேதான் இருந்தது.ஏன் இப்படி இருக்கிறாள் என்ற எண்ணம் அவனை குடைந்து கொண்டேதான் இருக்கும்.



அம்முவின் அமைதி அவனுக்கு என்னவோ போல் இருந்தது. இருப்பது இரண்டு பேர் அதுவும் பேசாமல் இருப்பது கடுப்பாக இருந்தது.திருமணம் முடிந்த பிறகு அவனின் மாமனார் மித்துவிற்கு போலீஸ் என்றால் ரொம்ப பயம் கொஞ்சம் பார்த்து கொள்ளுங்கள் என்று சொன்னது நினைவு வர சிரித்து கொண்டே தப்பு செய்பவர்களும், திருடர்கள்தான் பயப்படனும் இவ எதுக்கு பயப்படறா என்று நினைத்தாலும் அவளின் பயத்திற்க்கு மதிப்பு கொடுத்து அமைதியாக இருந்தான்.



மாமன் மகள் என்ற உறவே அவளிடம் ஒதுங்கி இருக்காமல் ஓரளவு அவளுடன் பேச வைத்தது.புது மனைவி அவள் குளித்து புடவை அணிந்து அதை ஏற்றி சொருகி கொண்டு வேலை செய்யும் போது வெளிப்படும் அவளின் இளமை அழகு அவனை தடு மாற செய்யும்.இப்படியே விட்டாள் வேலைக்கு ஆகாது நாம்தான் அதிரடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தவன் அவளிடம் வேண்டுமென்றே பேச்சு கொடுத்து கொண்டே இருப்பான்.



விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு ஏற்ப. இப்போது எல்லாம் சின்ன சிரிப்புடன் பேச ஆரம்பித்து விட்டாள்.அதுவும் அவனிடம் மட்டும்தான். மற்ற போலீஸை பார்த்தால் பயப்படும் குணம் போகவில்லை. சரி கொஞ்சம் கொஞ்சமாகதான் மாற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவன் அவளை வெளியே அழைத்து செல்லவென்றே அன்று விரைவாக வீட்டிற்கு வந்தான்.



மித்துமா கிளம்பு வெளியில் போய்விட்டு வரலாம். சித்து.



இப்பவா நைட் டின்னர் ரெடிபண்ணனும் மாமா. மித்து.



வெளியவே சாப்பிட்டுக்கொள்ளலாம் நீ வா. சித்து.

இல்ல மாமா அது வந்து................

நீ வந்ததில் இருந்து உன்னை எங்கும் அழைத்து செல்லவில்லை.அம்மா போன்பண்றப்ப எல்லாம் இதேதான் சொல்லி திட்டறாங்க. வா போய்விட்டு வரலாம் என்று அழைத்தான்.இவளும் ஆவலாக கிளம்பி அவனுடன் சென்றாள்.இருவரும் பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்றுவிட்டு,படத்திற்க்கு போய்விட்டு,அப்படியே இரவு உணவை முடித்து கொண்டு வந்தனர்.வரும் போது இரவு போலீஸ் பணியில் இருப்பவர்களை பார்த்தவள் அவனை ஒட்டி அமர்ந்தாள்.திடீர் என்று மனைவி அப்படி அமரவும் புரியாது அவளை திரும்பி பார்த்தவன் அவள் அங்கு இருக்கும் போலீஸையே கண்ணில் கலவரத்துடன் பார்த்து கொண்டு இருப்பதை பார்த்து அவனுக்கு கோபம்தான் வந்தது.



மக்களின் பாதுகாப்புக்கு இருப்பவர்களை பார்த்து பயப்பட என்ன இருக்கு என்று நினைத்தவன்.தன் மனைவி இப்படி பயந்தவளாக இருக்க கூடாது என்று முடிவெடுத்தான். அவளிடம் இதைபற்றி பேசவேண்டும் என்று தனக்குள் சொல்லி கொண்டான்.

வீட்டிற்கு வந்ததும் அவளிடம் பேசலாம் என்று நினைக்க அவளது சோர்ந்த முகம் அவளிடம் பேச தடைவிதிக்க இருவரும் சென்றுபடுத்துவிட்டனர்.ஒரு படுக்கை அறை கொண்ட வீடு என்பதால் இருவரும் ஒரே அறையையே பயன்படுத்தினர்.பெட்டிலும் இவள் ஒரு ஓரம் அவன் ஒரு ஓரம் படுத்து கொண்டனர்.



மித்ரா ஹாஸ்பிடல் போய்விட்டு வந்த பிறகு வீட்டில் ஏதாவது மாற்றம் செய்து அலங்கரித்து கொண்டும் புதிதாக ஏதாவது சமைத்து சித்தை எலியாக மாற்றி பரி சோதனை செய்து கொண்டு இருந்தாலும் இருவரும் தாமரை இலை தண்ணீர் போல்தான் வாழ்ந்துனர்.



மித்ராவின் ஒவ்வொரு செயலும் அவள் அறியாமலேயே சித்தார்த்தை அவளை நோக்கி இழுத்து கொண்டு இருந்தது.அவளின் சின்ன சின்ன வேலைகளை கூட ரசித்து செய்வது,அவனுக்காக புதிது புதிதாக சமைப்பது, சமைத்ததை அவன் சாப்பிடும் போது அவள் முகத்தில் இருக்கும் எதிர்பார்ப்பு,அவன் சூப்பர் என்று சொன்னவுடன் அவள் கண்களில் தோன்றும் மின்னல் என்று ஒவ்வொன்றையும் அவனை ரசிக்க வைத்தது. மித்ராவோ இது எதையும் அறியாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்தாள்.



மித்ராவிடம் பேசவேண்டும் என்று நினைத்த சித்தார்த்தும் கேஸில் பிஸியாகிவிட அவளிடம் பேசும் சந்தர்ப்பம் அமையாமல் போனது.

குழந்தைகளை கடத்துபவர்களைபற்றி அறிய அன்று சித்தார்த் வெயிலில் அலைந்ததில் தலைவலியுடன் வீட்டிற்கு வந்தான்.

மித்ரா அப்போது அருகில் உள்ள கோவிலுக்கு செல்லலாம் என்று புடவை அணிந்து.பூ வைத்து கிளம்பி தயாராக வெளியில் வந்தவள்.அங்கு கணவன் தலையை பிடித்து கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்து பதட்டமாக அருகில் வந்தாள்.

என்ன ஆச்சு மாமா. மித்து.

சித்தார்த் அது வரை இருந்த டென்சன் நீங்க மனைவியை பார்த்த உடன் சைட் அடிக்க ஆரம்பித்துவிட்டான்.

மாமா.......மாமா நான் கேட்டுட்டே இருக்கேன் நீங்க என்ன யோசிக்கிறீங்க. மித்து.

ஹம்..ரொம்ப தலை வலியா இருக்குமா.டேப்லட் போட்டா சரியா போய்விடும்.நீ எங்கையோ கிளம்பிட்ட போல இருக்கு நீ கிளம்பு நான் பார்த்துக்கிறேன் என்றான் சோர்வாக.
 

Suthi Suthi

Saha Writer
Team
Messages
3
Reaction score
1
Points
1
இல்ல மாமா சும்மா போர் அடிச்சது அதான் பக்கத்துல இருக்க கோவிலுக்கு போய்ட்டு வரலாம்னு பார்த்தேன்.வேற ஒண்ணும் இல்ல.ரொம்ப தலை வலிக்குதா மாமா.

ஏன்?

இல்ல மாமா அடிகடி மாத்திரை சாப்பிட கூடாது நான் வேனா தைலம் தேய்ச்சிவிடறேன்.இஞ்சி காபி கொண்டு வரேன் குடிச்சுட்டு ரெஸ்ட் எடுங்க சரிய போய்விடும் என்று தயங்கி தயங்கி சொன்னாள்.

அவள் தயக்கத்தை கண்டு கொள்ளாதவன்.சரி நான் போய் ரெப்ரஸ் ஆகி வருகிறேன் அதற்குள் காபி போட்டு எடுத்து வா என்றவன் தங்கள் அறைக்கு சென்றுவிட்டான்.

கணவனின் வார்த்தையில் சந்தோஷம் கொண்டவள் இஞ்சி காபி போட்டு எடுத்து கொண்டு சென்றாள்.அதற்குள் அவன் பெட்டில் அமர்ந்து இருக்க அவனிடம் காபியை கொடுத்தவள் தைலம் தேய்க்க ஆரம்பித்தாள்.



காபி குடிக்கும் வரை தெரியாத அவளின் அருகாமை கப்பை வைக்கும் போதுதான் உறைத்தது.நெருங்கி நின்று கொண்டு அவள் கடமையே கண்ணாக தைலம் தேய்க்க, அவனுக்குத்தான் இன்ப அவஸ்தையாக இருந்தது.



புடவையில் அவன் தூரத்தில் நின்று ரசித்த அழகு கண் எதிரில் அதுவும் கை எட்டும் தூரத்தில்.அவள் வைத்திருக்கும் பூவின் மணமும்,அவளுக்கே உரித்தான் பிரத்யேக மணமும் அவனை மயக்க அவன் காதல் மனம் விழித்து கொண்டது.



மேலும் அவன் எதிரில் நின்று கொண்டு தலையில் எண்ணெய் தேய்க்கறேன் மாமா சூடு இருந்தால் கூட தலைவலி வரும் என்று பேசி கொண்டு எண்ணெய் தேய்த்தவள் எங்கு அறிய போகிறாள் அவனின் நிலையை.தன் எதிரில் இருக்கும் எலுமிச்சை நிற இடையை பார்த்தவனுக்கு அதை தொடுவதற்கான ஆவல் எழ இதற்கு மேல் முடியாது என்று நினைத்தவன் டக்கென எழுந்து கொண்டான்.



என்னாச்சு மாமா.உட்காருங்க எண்ணெய் நல்லா சூடு பறக்க தேய்ச்சா கொஞ்சம் நல்லா இருக்கும்.



வேண்டாம் போதும் நீ கோவிலுக்கு போறேன்னு சொன்னியே போ.

இல்ல மாமா நா போகல.

ஏன் போகல.

நீங்க தனியா இருப்பீங்கல்ல.

ஹையோ இப்ப நான் தனியா இருக்கறதுதாண்டி உனக்கும் சேப் எனக்கும் சேப் இன்னும் கொஞ்ச நேரம் நீ இங்க இருந்த அவ்ளோதான் நான் இவ்ளோ நாள் கட்டி காப்பாத்தி வந்த என்னோட கற்பு என்ன கேக்காமையே போய்டும் என்று மனதுக்குள் புலம்பி கொண்டவன்.நான் என்ன குழந்தையா. கோவிலுக்கு கிளம்பிட்டு போகாம இருக்க கூடாது நீ போ. நான் கொஞ்ச நேரம் தூங்கறேன் என்றவன் படுத்துவிட்டான்.

கோவிலில் இருந்து திரும்பி வந்தவள் இரவு டின்னர் ரெடி செய்துவிட்டு அவனை எழுப்ப இருவரும் சேர்ந்து சாப்பிட்டு அன்றைய இரவை கரைத்தனர்.

இப்படியே நாட்கள் செல்ல இருவருக்கும் திருமணம் முடிந்து நான்கு மாதங்கள் கடந்திருந்தது.இடையில் சித்துவிற்கு லீவ் கிடைக்கும் போது எல்லாம் இருவரும் மதுரைக்கு சென்று வந்தனர்.

திருச்சி திரும்பும் போது இருவருக்கும் பெரியவர்களின் அறிவுரையில் மூச்சு திணறிதான் போகும்.ஊருக்கு வந்தவுடன் இருவருக்கும் அவர்களது வேலை இழுத்து கொண்டது.அன்று மித்ரா ஹாஸ்பிட்டலில் இருந்து வரும் போது போலீஸார் அதிகம் பேர் அணி வகுத்து நின்றனர். என்னவென்று விசாரிக்க அமைச்சர் வருவதற்காக அனைவரையும் நிறுத்தி வைத்திருப்பதாக சொன்னார்கள்.



ச்ச..........இவங்களுக்கு வேற வேலை இல்ல.பயங்கரமா பசிக்கிது.எப்ப வீட்ல போயி எப்ப சமைச்சி எப்ப சாப்பட்றது.இதுவே அம்மா வீட்ல இருந்திருந்தா வீட்டுக்குள்ள நுழையும் போதே டி ரெடியா இருக்கும் என்று சுயபச்சாதாபத்தில் கரைந்து கொண்டு இருக்க அப்போது அபஸ்வரமாக கேட்டது ஒரு பெண்ணின் அழு குரல்.

ஐயோ என்னோட பையன்.ஐயா கொஞ்சம் வழி விடுங்க ஐயா என்னோட பையனுக்கு அடிபட்டுடுச்சு.இப்படி போனா ஹாஸ்பிட்டல்பக்கம் என் பையன் உயிர காப்பாத்துங்க ஐயா என்று அந்த பெண் அழ.



அட கம்முனு இருமா.மினிஸ்டர் வர்ர நேரம் எப்ப வேணா அவர் வரலாம் உங்கள உள்ள விட்டா என்னோட வேலையே போயிடும் பேசாம வேற பக்கம் போங்க .



அய்யோ அய்யா அப்படி சொல்லாதீங்க என் பையன் உசுர காப்பாத்துங்க ஐயா என்று அழ ஆரம்பித்தார் அந்த பெண். அவர்களை பார்த்த மித்ரா வண்டியை ஓரமாக நிப்பாட்டிவிட்டு வந்து அந்த பையனை பார்க்க இரத்தம் அதிகமாக போய் கொண்டு இருந்தது.உடனடியாக அந்த பையனை மருத்துவமனை அழைத்து செல்லவில்லை என்றால் அந்த பையனை காப்பாற்றுவது கடினம் என்பதை தெரிந்து கொண்டவள் தானே அந்த போலீஸிடம் தன் பயம் மறந்து சென்று நிலமையை எடுத்து சொல்லி வழிவிடுமாறு கேட்க அந்த போலீஸ் நிர்தாட்சண்யமாக மறுத்துவிட வேறு வழியில் அவள் பணி புரியும் ஹாஸ்பிட்டலுக்கே அழைத்து செல்ல அங்கு சென்றும் இரத்தம் அதிகம் போனதால் அந்த பையனை காப்பாற்ற முடியாமல் போனது.

இறந்த பையனின் முகத்தை பார்க்க பார்க்க அவளுக்கு வேறு ஒரு முகமும் நினைவுக்கு வர துடித்து போனாள். அலட்சியம் அதை மட்டுமே இந்த நாடு அதிகம் தத்து எடுத்து கொண்டதோ அமைச்சர் மக்களின் பிரதிநிதி. அவருக்கு மக்களுடன் செல்வதில் என்ன பிரச்சனை. அவர்களால் இன்று ஒரு உயிர் போய்விட்டதே. ஒரு உயிர்தானா? என்ற அவளின் மனசாட்சியின் கேள்விக்கு விடைதான் தெரியவில்லை.



காவலர்கள் என்ற பெயர் பணகாரர்களுக்கும்,ஆட்சியில் இருப்பவர்களுக்கு மட்டும்தானோ,சாதாரண ஏழை மக்களுக்கு அவர்கள் காவலர்கள் இல்லையோ, கொலைகாரர்களோ என்று எண்ணமிட்டபடியே வீட்டிற்கு வந்தவள் அப்படியே சோபாவில் அமர்ந்துவிட்டாள்.



சித்தார்த்தும் வேலை முடித்து வீட்டுக்கு வந்தவன் தலையை பிடித்து கொண்டு அமர்ந்துவிட்டான். குழந்தைகளை கடத்தும் கும்பலை நெருங்கிவிட்டோம் என்று நினைத்த சமயம் கடைசி நேரத்தில் அவர்கள் தலைமறைவானது அவனுக்கு மிக பெரிய ஏமாற்றமாக இருந்தது.நிச்சயம் ஸ்டேசனில் இருக்கும்யாரோ ஒருவர்தான் அந்த கும்பலுக்கு தகவல் அளித்திருக்க வேண்டும் நாளை மீட்டிங்கில் எப்படி மற்றவருக்கு பதில் சொல்வது என்ற யோசனையில் அப்படியே இருந்தான்.



சித்தார்த்திற்க்கு இருக்கும் டென்சனில் மனைவியை கவனிக்க மறந்தான்.திக்பிரமை பிடித்தது போல் அமர்ந்து இருந்தவளை கவனிக்காமல் தன் போக்கில் அறைக்கு சென்றவன் உடை மாற்ற ஆரம்பித்தான்.அவனுக்கு இருந்த டென்சனில் தலைவலி வேற வந்துவிட மாத்திரை போட்டாதான் சரியாகும் இந்த லூசு மாத்திரை போடக்கூடாதுனு சொல்லுது என்று நினைத்தவன். இதுக்குதான் டாக்டர கல்யாணம்பண்ணக்கூடாது என்று நினைத்தவாரே இருக்க அப்போது பார்த்து போன் வர அதை அட்டன் செய்து பேசி கொண்டு இருந்தவனுக்கு கோபம் வர ஆரம்பித்தது. அவனும் கோபமாக பேசிவிட்டு போனை வைத்தவன் விறுவிறுவென்று உள்ளே சென்று கேஸ்பைலை எடுத்து மற்றொருமுறை படிக்க ஆரம்பித்தான்.



எதுவும் படிக்க முடியாமல் தலைவலி விண்ணென்று தெரிக்க அது அவனது கோபத்தை இன்னும் அதிகபடுத்தியது. மாத்திரையை தேடி எடுத்தவன் தண்ணீர் எடுக்க அறையில் இருந்து வெளியில் வந்தான்.அங்கு அமர்ந்திருந்த மித்ராவை பார்த்தவன் அம்மு கொஞ்சம் சூடா காபி போட்டு கொடு மாத்திரை போடணும்.இரவு எனக்கு சாப்பாடு வேண்டாம் முக்கியமான வேலை இருக்கு நீ சாப்பிட்டு படு.என்னை டிஸ்டர்ப்பண்ணாத வேலை நேரத்தில் என்னை டிஸ்டர்ப்பண்ண எனக்கு பிடிக்காது சோ நீ சாப்பிட்டு படு.

சித்தார்த்தின் எந்த பேச்சிற்க்கும் பதில் அளிக்காமல் சுவற்றையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போக சித்தார்த்தின் கோபம் அவள் புறம் திரும்பியது.

மித்ரா................. கோபமாக அவன் கத்தினான். அப்போதுதான் சுய நினைவிற்கு வந்தவள் அவனை பார்த்தாள்.என்ன இப்புடியே பார்த்துக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம் எவ்வளவு நேரம் கத்திக்கொண்டு இருக்கிறேன்.நீ என்னதான் நினைத்து கொண்டு இருக்கிறாய் என்று அதிகாரமாக கேட்டான்.தலைவலியும் பணியின் அழுத்தமும் அவனை தன்னிலை இழக்க செய்து கோபத்தை கொட்ட ஆரம்பித்தான்.



மித்ராவும் அன்று ஏற்பட்ட அனுபவத்தால் அவனிடம் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள்.



ச்ச............ என்ன வாழ்க்கை இது நீ என்ன சொல்றது நான் என்ன கேட்பதுனு உட்கார்ந்து இருக்கா.இதுதான் படித்த திமிர் என்று சொல்ல,அவ்வளவுதான் பொங்கிவிட்டாள் மித்ரா.



யாரு எனக்கு படித்த திமிர,போலீஸ்னா இப்படிதான் இருப்பீங்களா,யாரு என்ன சொன்னா எனக்கு என்ன நா நினைக்கறதாபண்ணுவேன், செய்யுவேன்னு.சரியான சுயநலவாதிங்க யாருனா போலீஸ்தான்.ச்ச........ யாரு எப்புடி போனா உங்களுக்கு என்ன நீங்க உங்க வேலை,உங்க லஞ்சம் அப்புடிதானே இருப்பீங்க, உங்களுக்கு பெயர் காவலர்கள்,யாருக்கு காவலர்கள் பணக்காரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இல்லாதவர்களுக்கு எப்போதும் நீங்கள் அரக்கர்கள் அதுவும் மனித உயிரையே எடுக்கும் ராட்சசர்கள் என்று பேசி கொண்டே போக ஓங்கி ஒரு அறை வைத்தவன் கையை நீட்டி எச்சரித்து என்னடி என்ன ஓவர பேசற போலீஸபத்தி உனக்கு என்ன தெரியும்.

யாரோ யாரோட கட்சிக்கும்,ஜாதிக்கும் மீட்டிங் நடத்துனா நாங்க போகணும் அங்க சண்டை வந்தா நாங்க எங்க உயிர குடுத்து காப்பத்தணும்.ஆனா எங்களுக்கு கிடைக்கற பேர் போலீஸ் சுயநலவாதி என்றவன் அவளை வேகமாக தங்களது அறைக்கு இழுத்து சென்றான்.

மித்ராவின் முன் அவன் பார்த்து கொண்டு இருந்த பைலை எடுத்து போட்டவன் இது வரை இருபது குழந்தைகளை கடத்தி இருக்கிறார்கள் அவர்களை தேட மாத கணக்கில் அலைந்து கொண்டு இருக்கிறேன்.இவர்கள் எல்லாம் எனக்கு என்ன உறவு நான் ஏன் இவர்களை கண்டுபிடிக்க வேண்டும். நான் ஏன் இவர்களை கண்டுபிடிக்க வேண்டும்.இவர்கள் நமக்கு சொந்தமா சொல்லு என்று அவளை உலுக்கியவன்,நான் நினைத்து இருந்தாள் இன்னும் எத்தனை குழந்தைகளை நாம் இழக்க வேண்டி இருக்கும் தெரியுமா? ஒன்று இரண்டு போலீஸை வைத்து மொத்த பேரையும் குறை சொல்லக்கூடாது மித்ரா.குறை சொல்பவன் யாரும் அந்த குறையை கலைக்க முன் வருவது இல்லை.

போலீஸில் நேர்மையாக வேலை செய்பவர்களும் இருக்கிறார்கள் தேவையில்லாமல் பேசாதே.எங்களைபற்றி குறை கூறுபவர்கள் யாரும் மொட்டை வெயிலில் நடு ரோட்டில் டிராபிக் சரி செய்வது இல்லை.போராட்டத்தை தடுக்க சென்று அவர்கள் அடிவாங்கி உயிர் இழப்பதும் இல்லை அப்படிப்பட்ட நாங்கள் ராட்சசர்கள்,அரக்கர்கள் அப்படிதானே என்றவன்,ஆமாம் மக்களின் காவலர்களான நாங்கள் மனித உயிரை எடுக்கும் ராட்சஷர்கள் என்றால். மக்கள் கடவுளாக பார்க்கும் மருத்துவர்களான நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் மனித உயிரை கொண்டு அவர்களின் உறுப்புகளை எடுத்து வியாபாரம் செய்கிறீர்கள்.கடவுளான நீங்கள் வியாபாரிகளாக மாறிவிட்டீர்கள்.இதோ இந்த பைல் இது என்ன தெரியுமா? மனித உறுப்புக்காக இதுவரை பத்து பேரை கொன்ற டாக்டருடைய பைல் இதற்கான உன்னுடைய பதில் என்ன என்று ஆவேசமாக கேட்டவன் வீட்டைவிட்டு வெளியேறினான்.

சித்தார்த்தின் பேச்சில் வாய் அடைத்துதான் போனாள் மித்ரா.இவன் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்வது எல்லாம் உண்மைதானே.இப்போது இருக்கும் காலகட்டத்தில் எந்த வேலையும் புனிதம் என்ற சொல்ல முடியாத நிலை வந்துவிடுமோ என்று யோசித்தவள் எதுவும் செய்ய தோன்றாமல் அப்படியே அமர்ந்துவிட்டாள். அவளுக்கு இருந்த பசிக்கூட மறுத்து போனது.கீழே அமர்ந்தவள் சுவற்றில் சாய்ந்து கொண்டு அப்படியேதூங்கி போனாள்.

காலை பொழுது அழகாக புலர இருவருக்கும் எப்போதையும் விட மோசமான பொழுதாக இருந்தது அந்த நாள்.சித்தார்த் வேகமாக கிளம்பியவன் அவளிடம் எதுவும் பேசாமல் சென்றுவிட்டான்.சித்தார்த் மிகவும் விரும்பி சேர்ந்த வேலை இது சிறு வயதில் இருந்து போலீஸ் வேலையின் மீது ஏற்பட்ட தீராத மோகத்தில் சேர்ந்தான். அப்படிப்பட்ட வேலையைப்பற்றி மித்ரா கூறியது அவனுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது.

மித்ராவிற்கு அவன் இப்படி சென்றது வருத்தமாக இருந்தாலும் எதுவும் பேசாமல் அவளும் கிளம்பி மருத்துவமனை சென்றாள்.

மருத்துவமனையில் அனைவரையும் அழைத்து மீட்டிங் என்று சொல்ல சென்றவள் அங்கு சொன்ன விஷயத்தில், காலையில் இருந்து மனதில் இருந்த பாரம் ஓரளவு விலகியது போல் இருந்தது.அதற்குள் அவள் அருகில் வந்த சக மருத்துவரில் ஒருவரான ரீனா.

ச்ச..............இந்த மாதிரி கேம்ப் எல்லாம் யாருதான் கண்டு பிடிச்சாங்களோ.ஒரு வாரம் அங்க எப்புடி இருக்கறது.எந்த வசதியும் இருக்காது என்று புலம்பி கொண்டு இருந்தவள், முகம் மின்ன நின்று கொண்டு இருந்த மித்ராவை பார்த்தாள்.

நீ என்னமா இவ்ளோ ஆர்வமா இருக்க. ரீனா.

அதுவா டாக்டர் இது மாதிரி வசதி இல்லாத இடங்களுக்கு சென்று அவர்களுக்கு மருத்துவம் பார்கணும்ங்கறதுதான் என்னோட ஆசை.அதனாலதான் உடனே ஓ.கே சொல்லிட்டேன்.

ஹா...ஹா.... என்ன ஆசையா அங்க போய் முழுசா ஒரு வாரத்துக்கு மேல இருந்து பாரு அப்ப தெரியும், ஆசையாம், ஆசை என்று அவளை கிண்டல் செய்துவிட்டு நகர்ந்தாள்.

ரீனாவின் பேச்சு இதற்கு முன் இதே வார்த்தை சொன்னவளை நினைவுபடுத்தியது. கண்கள் கலங்க நீ சொன்னது உண்மைதான் என்று தனக்குள் சொல்லி கொண்டவள் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

வீட்டிற்கு வந்தவள் சித்தார்த்திடம் பேச வேண்டும் என்று அவனுக்காக காத்திருந்தாள்.

சித்தார்த் எப்போதையும்விட லேட்டாக வந்தவன் அவளை கண்டு கொள்ளாமல் தன்னறைக்கு சென்றுவிட்டான்.அவன் உடைமாற்றட்டும் என்று சற்று நேரம் கடந்து அவர்களது படுக்கை அறைக்குள் நுழைந்தவள்.அவனை பார்க்க அவன் ஸ்டேசனில் இருந்து கொண்டு வந்த பைலில் மூழ்கி இருந்தான். இவள்தான் கைகளை பிணைந்து கொண்டு நின்றாள்.

ஒருக்கட்டத்துக்குள் மேல் பொறுமை இல்லாமல் பேச ஆரம்பித்தாள்.

மாமா........ என்று அழைக்க அவனிடம் எந்த மாற்றமும் இல்லை.மீண்டும் மாமா என்று அழைக்க நிமிர்ந்து அவளை ஒரு பார்வை பார்த்தவன் தன் வேலையை தொடர ஆரம்பித்தான்.

ம்கூம்..........இவரு பார்த்தா கேக்கறேன் சொல்லுனு அர்த்தமா.இவன வச்சிக்கிடு என்று மனதில் நினைத்தாலும் ஹாஸ்பிட்டல்ல கேம்ப் போட்டு இருக்காங்க அதுவும் பச்சை மலை ஒரு வாரம் நான் அங்க போறேன்.இரண்டு நாள்ள கிளம்பறோம்.

மித்ராவின் பேச்சை கேட்டவன் மேடம் இப்ப பர்மிஷன் கேக்கிறீங்களா இல்ல இன்பர்மேஷன் குடிக்குறீங்களா?, வெல் எதுவா இருந்தாலும் எனக்கு பிரச்சனை இல்ல. என்கிட்ட சொல்ல வேண்டிய அவசியமும் உனக்கு இல்லனு எனக்கு நல்லவே தெரியும் சோ தேவையில்லாம எதுவும்பண்ணாத என்றவன் தன் வேலையில் மூழ்கினான்.

சித்தார்த்தின் பேச்சில் மித்ராதான் மிகவும் அடிவாங்கி போனாள்.அவன் நேற்று பேசிய பேச்சில் தன் பயம் அர்த்தமற்றதோ என்று தோன்றியதுதான் ஆனால் அந்த காரணத்தினால்தானே பயமும் வந்தது என்று பெரு மூச்சுவிட்டவள்.வெளியே சென்றுவிட்டாள்.

மித்ரா அறையைவிட்டு வெளியேறியதும் நிமிர்ந்து பார்த்த சித்துவிற்கு மனது கஷ்டமாகதான் இருந்தது.மித்ராவின் பேச்சு அவனை காயபடுத்தியது என்னவோ உண்மைதான் ஆனால் ஏன் நேற்று அப்படி நடந்து கொண்டாள் என்று புரியாமல் அவள் பேச்சு ஏற்படுத்திய காயத்தில் அவளிடம் பேசாமல் இருந்தான்.

மித்ராவிற்கோ தான் பேசாமல் இருந்தாலும் தானாக வந்து பேசுபவர் இன்று பட்டு கத்தரித்தார் போன்று பேசியது மனதை வறுத்தியது அழுது கொண்டே அவள் சாப்பிடாமல் ஹாலில் இருந்த சோபாவில்படுத்துவிட்டாள்.சற்று நேரம் கடந்து வெளியில் வந்த சித்து மித்ரா படுத்திருப்பதை பார்த்து அவளை திட்டியதற்கு தன்னையே திட்டிக்கொண்டு தூக்கி கட்டிலில் படுக்க வைத்தான்.

அடுத்த நாளும் காலை எழுந்த மித்ரா தான் எப்படி இங்கு வந்தேம் என்று யோசித்தவள்.அவர் தூக்கிட்டு வந்திருப்பாரோ என்று யோசித்து கொண்டே வெளியில் வர சித்து அவளை கண்டு கொள்ளாமல் தன் போக்கில் வேலைகளை செய்து கொண்டு இருந்தான்.

ஆத்தி....... இன்னும் இவனுக்கு கோபம் போகலை போல இருக்கே என்று நினைத்து மனம் வருந்தினாள்.

மருத்துவமனை கிளம்பி அவள் சென்றுவிட,கிளம்பும் போது இருந்த வாடிய முகத்தை சித்து பார்த்தாலும் அவன் உயிராக நேசிக்கும் வேலையை கேவலமாக பேசியது அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை அதனால் அவளிடம் பேசாமல் பார முகமாகவே இவனும் கிளம்பி சென்றான்.அடுத்த நாள் மித்ரா கேம்ப்க்கு கிளம்ப அப்போதும் சித்து எதுவும் பேசவில்லை.

மித்ரா கேம்ப் போன மூன்றாவது நாள் வீட்டிற்க்கு வந்த சித்தார்த் வீடு வெறுமையாக இருப்பதை உணர்ந்தான். மனது கஷ்டமாக இருந்தது.மனையாள் இல்லாமல் வீடு ஏதோ போல் இருக்க அப்படியே சோபாவில் அமர்ந்தான். அப்போது போன் வர அவன் ஆபிஸில் இருந்து ஒரு பைலை கேட்டு இருந்தனர்.அதை தேட அவளது அலமாரியில் கலைத்து வீட்டையே புரட்டி போட்டு கடைசியில் இரண்டு பொருள் கையில் கிடைத்தது.

ஒன்று அவன் மனையாளின் டைரி மற்றொன்று அவன் தேடிய பைல்.டைரியை எடுத்தவன் அதை டேபிள் மேல் வைத்துவிட்டு பைலை எடுத்து கொண்டு சென்று வேலையை முடித்துவிட்டு வந்தான்.வீட்டிற்கு வந்து ரெப்ரெஷ் செய்து கொண்டவன் அந்த டைரியை படிக்க ஆரம்பித்தான்.

மித்ரா தனது வாழ்வில் நடந்த மறக்க முடியாத நிகழ்வுகளை எழுதி இருந்தாள்.அதை படித்தவனுக்கு கண்கள் கோபத்தில் சிவந்துதான் போனது.கைகளை இறுக்கி தனது கோபத்தை கட்டுப்படுத்தியவன்.ச்சே....... இதனாலதான் இவ போலீஸ்னா இப்புடி பயப்பட்டாளா. நான் வேற அதையும் இதையும் பேசி அவளை ரொம்ப அழ வச்சுட்டேன் என்று எண்ணியவன்.மனையாள் வீட்டிற்கு வரும் நாளுக்காக காத்திருந்தான்.

கேம்ப் முடிந்து வீட்டிற்கு வந்த மித்ராவிற்கு மனம் கணத்து போனது தோழியின் நினைவில்.இந்த பதினைந்து வருடங்களிலும் எந்த மாற்றமும் இல்லாமல்,வசதி வாய்ப்புகள் குறைவாக இருந்த மலைவாச ஸ்தலத்தை நினைத்தும் அங்கு வாழும் மக்களின் நிலையை நினைத்தும்.சித்தார்த் வீட்டிற்கு வந்தவன் மித்ரா சோகமாக அமர்ந்து இருப்பதை பார்த்து அவள் அருகில் சென்று தலையை கோதி கொடுத்தான்.கண் விழித்து அவனை பார்த்தவள் அவன் மடியில்படுத்து கொண்டாள்.கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது.

மித்து என்ன ஆச்சு?எதுக்கு இந்த அழுகை?

மாமா......மாமா அங்கு போனதில் இருந்து என்னோட தோழி நியாபகமாகவே இருந்தது.

சரி எனக்கு தெரியும்.அழாத முடிந்தத பத்தி பேசி என்ன ஆக போகுது அழதமா இனி நீ உன் பிரண்டு மாதிரி இருக்கற பலபேருக்கு உதவலாம்.

ம்..... ஆமா மாமா பாவம் மாமா அவ எவ்ளோ ஆசை எவ்ளோ கனவு அந்த சின்ன வயசுலயே தெளிவா பேசுவா அவனாளதான் நான் டாக்டர்க்கு படிச்சேன்.மலைவாழ் மக்களோட கஷ்டத்தபத்தி எனக்கு சொன்னதே அவதான் மாமா.

அப்பாக்கு உடம்பு முடியாம போனப்ப மூலிகை காத்து சுவாசிகட்டும்னு போனோம்.அப்பதான் அவள சந்திச்சு பிரண்ட் ஆனேன்.நான் அவக்கிட்ட சொன்னேன் இங்க ரொம்ப ஜாலியா இருக்கு நீ இங்கையே இருக்கறதுனால ரொம்ப லக்கினு.அப்ப அவளுக்கு எப்புடியும் ஏழு இல்ல எட்டு வயசுதான் இருக்கும் அவங்க கஷ்டத்தபத்தி சொன்ன பாருங்க மாமா எனக்கு என்ன சொல்றதுனே தெரியல.

அப்புடி என்ன சொன்னா உன் பிரண்டு. சித்து.

ம்ம்.......அவங்க கஷ்டத்த சொன்னா என்றவளின் கண்ணின் முன் அன்று தோழி தன்னிடம் கூறிய வார்த்தைகள் படமாக ஓடியது.பாக்கதான் இங்க ரொம்ப நல்லா இருக்கும் அழகு இருக்கற இடத்துலதான் ஆபத்தும் இருக்கும்.மிஞ்சி போனா இங்க ஒரு மாசம்தான் உங்களால இருக்க முடியும் அதுக்கு மேல உங்களால இங்க இருக்க முடியாது ஏனென்றால் இங்க இருக்க வசதி அப்படி. இங்க அவசரத்துக்கு பார்க்க டாக்டர் இல்ல,முக்கியமான பொருள் வாங்கணுனாகூட கீழ இருக்க நகரத்துக்குதான் போகணும், நவீன வசதிகள் எதுவும் இங்க இல்ல,பேருந்தும் எப்பவாவது குறிப்பிட்ட நேரத்துக்குதான் இருக்கும்,முக்கியமான கவலை என்னன பள்ளிக்கூடம் இங்க இல்ல.இங்க இருக்க குழந்தைங்க ஸ்கூல் போக கீழ இருக்க ஏதாவது ஒரு ஊருக்குதான் போகணும் அங்கையே ஹாஸ்டல்ல தங்கி படிக்கணும்.இதனாலேயே நிறைய பேர் குழந்தைகள படிக்க வைக்க பயப்படறாங்க.

பயங்கரமான கொடுமை என்ன தெரியுமா எங்கள மனுசங்களாக்கூட மதிக்கமாட்டாங்க என்னமோ நாங்க வேற்று கிரவாசிமாதிரி பார்ப்பாங்க.இது எல்லாம் மாறனும்.நான் எங்க மக்களுக்கு உதவணும் நான் பெரிய டாக்டர் ஆகி எங்க மக்களுக்கு சேவை செய்வேன் கண்கள் மின்ன அன்று தன்னிடம் தன் தோழி பகர்ந்ததை கூறிவளின் கண்களில் நீர் கசிந்தது.

ஆனா............. பாவம் மாமா அன்னைக்கு பாறை உருண்டு அவமேல விழுந்துருச்சு.நான் அப்பதான் அவள பாக்கலாம்னு போனேன் கைல அவள தூக்கிட்டு அவங்க அப்பா பக்கத்துல இருக்க எல்லாம் அலறி அடிச்சுட்டு ஓடுனாங்க அப்ப............அப்ப........... ஒரு போலீஸ் வந்தாரு மாமா அவங்கள பாத்துட்டு என்னன கேட்டாரு தெரியுமா அதுக்கு என்ன அர்த்தம்னு அப்ப எனக்கு புரியல புரிஞ்ச பிறகு அவங்க மேல வெறுப்புதான் வந்துச்சு.

மலைல வாழ்ந்தாலும் அவங்களும் மனுசங்கதான் அவங்களுக்கு சின்ன குழந்தைக்கும் குமரிக்கும் வித்தியாசம் தெரியாதா என்ன.அவ அப்பாவ பாத்தே என்ன எல்லாரும் சேர்ந்து.......... என்று விக்கி விக்கி அழுது கொண்டே சொல்ல வந்தவளின் இதழை தன் கரம் கொண்டு மூடியவன் விடுமா இன்னும் சில மனித மிருகங்கள் இப்படி இருக்கதான் சொய்கிறார்கள் இவர்களால்தான் உண்மைய இருக்க மற்ற போலீஸ்களுக்கும் தப்பான பேர் வருது.

சரி விடு அழாத உன் பிரண்டு சொன்ன மாதிரி நீ மலைவாழ் மக்களுக்கு உதவலாம்.

எப்படி.

தன் கையில் இருந்த கவரை அவளிடம் நீட்டினான்.

என்ன மாமா இது.

பிரிச்சு படிச்சு பாரு.

என்ன மாமா டிரான்ஸ்பர் கொடுத்திருக்கிறார்கள்.

ஆமாம்.குழந்தைகளை கடத்தும் கும்பலை கண்டுபிடித்து விட்டேன்.அதில் தொலைந்து போன இருபது குழந்தைகளில் ஐந்து குழந்தைகளைதான் மீட்க முடிந்தது.மற்றவர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது.அடுத்து என் பணி அந்த ஊருக்கு தேவை சோ நாம் அங்கு செல்ல வேண்டும் அது மட்டும் இல்லாமல் அங்கு இருந்து மலைவாழ் மக்களுக்கும் நீ உதவலாம்.

கணவன் சொன்ன தகவலில் துடித்து போனாள் பெண்.என மாமா சொல்றீங்க அப்ப மத்த குழந்தைங்க எல்லாம்.....

பெரு மூச்சுவிட்ட சித்தார்த் மும்பைனு அரெஸ்ட்பண்ணுனவன் சொல்லி இருக்கான் அங்க போய் தேடுனாத்தான் தெரியும்.

ச்ச.........இப்படியும் மனித மிருகங்கள் எதற்குதான் வாழ்கிறார்கள் அவர்கள் வீடுகளில் இருக்கும் குழந்தைகளை எடுத்து சொல்ல வேண்டியதுதானே என்று பொருமியவள்,இப்ப டிரான்ஸ்பர் கிடைத்த இடத்தில் என்ன பிரச்சனை.

மலைவாழ் பெண்களில் இதுவரை நான்கு பேரின் மரணம் மர்மமாக நடந்து இருக்கிறது அதற்கு காரணம் யார் என்பதை கண்டறிய வேண்டும்.சரி அதவிடு அவங்கள கண்டுபிடிச்சிடலாம்.மேடம்க்கு இப்ப போலீஸ் பயம் போயிடுச்சா இல்லையா என்று கிண்டலாக கேட்டான்.

முழுசா போகல.ஆனா நல்ல போலீஸ பாக்க பாக்க முழுசா போயிடும் என்று அவளும் கிண்டலாகவே பதில் அளித்து கணவனையே இமைக்காமல் பார்த்தாள்.

தன் மன குழப்பத்தை நீக்கி லட்சியத்திற்கு உதவும் கணவன் எத்தனை பேர்க்கு அமையும் என்று அவனை பார்த்து முதல் முறை காதல் பொங்க ஐ லவ் யூ மாமா என்றாள் உள்ளார்ந்த சிரிப்புடன்.

மனைவியின் காதலில் முதலில் திகைத்தவன் அப்பாடா இப்பவாவது சொல்ல தோணுச்சே என்று கூறி அணைத்து கொண்டான்.

டிரான்ஸ்பர் கிடைத்த இடத்திற்கு இருவரும் சென்று தங்கள் தொழில் மூலம் மக்களுக்கு அவர்களால் ஆன உதவிகளை செய்து தங்கள் வாழ்க்கையை வரமாக மாற்றி கொண்டனர்.

ஆறு வருடங்களுக்கு பிறகு.

டேய் சொன்னதை கேட்க போகிறாயா இல்லையா நில்லடா...................

முடியாது நின்றாள் என்னை அதிப்பீங்க என்று சொல்லி ஓடி கொண்டு இருந்தான் மித்ரா,சித்தார்த்தின் செல்வ மகன் மகதீஷ்.

என்ன மித்து எதுக்கு இப்ப அவன துறத்திக்கிட்டு இருக்க என்று கேட்டான் அப்போதுதான் வேலை முடித்து வீட்டிற்குள் நுழைந்த சித்தார்த்.

ம்ம்............செடி வளர்க்கறேன்னு தேட்டத்துல சின்ன சின்னதா குழி பறிச்சு அப்படியே விட்டுட்டான். தோட்டக்கார தாத்தா அதுல தடுக்கி விழுந்துட்டாரு ஏன்டா இப்புடி பண்ணுன்னு கேட்ட அதுக்கு பதில் சொல்லாம சம்பந்தமே இல்லம எனக்கு பாக்கெட் மணி நிறைய குடுங்கனு சொல்றான்.

என்ன கண்ணா,ஏன் இப்புடி பண்ணுனீங்க தாத்தா கீழ விழுந்துட்டா அப்புறம் யாரு உனக்கு டெய்லி பட்டாம்பூச்சி பிடித்து கொடுப்பார்கள்.அம்மா கேட்டதுக்கு பதில் சொல்லாமல் நீ வேறு பேசுகிறாய்.அம்மாவுக்கு மரியாதை தருவதில்லையா.

அம்மா கேட்டதுக்குதான் நான் பதில் சொன்னேன் டாட். மஹி.

என்ன பதில். சித்து,மித்து.{என்னடா ரெண்டு பேரும் போட்டு இருக்குனு பாக்குறீங்களா ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் இந்த கேள்வி கேட்டாங்க அதுதான்.}

அது அப்பா போன மாதம் அம்மா டிவி பார்த்து அழுது கொண்டு இருந்தார்கள் ஏன் என்று கேட்டேன் குட்டி பையன் குழில விழுந்துட்டான்னு சொன்னாங்க.யாரு குழி பறிச்சு வச்சாங்கனு கேட்டேன் அந்த பையன்னோட அப்பானு சொன்னாங்க.ஆனா அந்த குழிய அவரு மூடி இருந்தா அந்த பையன் விழுந்து இருக்கமாட்டான்ல.அது மட்டும் இல்லாம நிறைய சாக்கி வாங்கற அளவுக்கு அவங்களுக்கு பணம் குடுத்தாங்கனு சொன்னாங்க.சோ நானும் குழி பறிச்சுட்டேன் தாத்து விழுந்துட்டாரு,எனக்கும் பணம் குடுங்கனா அடிக்க வற்றாங்க.சின்ன புள்ளைங்க பண்ணுனா தப்பு,பெரியவங்கபண்ணுனா தப்பு இல்ல என்ன கொடுமை இது.அம்மா பேட் அம்மா என்றவன் ஓடி விட்டான் வெளியே.

மஹியின் கேள்வியில் அவனின் அம்மா,அப்பா இருவரும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் வாயடைத்து போய்விட்டனர்.

உங்களுக்கு பதில் தெரிஞ்ச இந்த பையனுக்கு சொல்லுங்கப்பா..
 
Top Bottom