Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வியூகம் - கதை

Messages
77
Reaction score
57
Points
18
வணக்கம் தோழிகளே/ தோழர்களே ரொம்ப நாள் இடைவேளைக்குப் பிறகு ஒரு கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கேன். முகங்களுக்கு உங்களது ஆதரவில் திக்குமுக்காடிப் போனவள் நான் .... இதோ ஓர் புது களத்தில் நடை பெரும் கதையுடன் வந்திருக்கிறேன். இந்தக்களமும் எனக்கு பரிட்சயம் இல்லாத ஒன்று தான் ஆனால் எழுத முயற்சி செய்கிறேன். உங்களின் குறை நிறைக்களுக்காய் காத்திருப்பேன்
அன்புடன்
இந்திரா செல்வம்
 
Messages
77
Reaction score
57
Points
18
வியூகம் - 1
டிங் .....டாங்.... டிங் ...... டாங் .....தேனுபுரீஸ்வரர் கோயில் மணியின் சத்தம் கேட்டு தான் மூழ்கியிருந்த புத்தகத்திலிருந்து கவனத்தை பிரித்தெடுத்து மணி கட்டை பார்த்தான் அனாமதேயன் - அவனது அடையாள அட்டையில் இருக்கும் பெயர் இதுதான் ... ஆனால் இவன் அடையாளப் படுத்திக்கொண்ட பெயர் மகாவிஷ்ணு.....விஷ்ணு என்று தான் மற்றவர்களால் அழைக்கப்படுபவன் .

"பர்பெக்ட் டைமிங்" என்று நினைத்தபடி எழுந்தவன் "அர்ஜுன் ,பிரேக்பாஸ்ட் டைம்" என்று உள்நோக்கி குரல் கொடுத்தான்.

தலை துவட்டியபடியேஅவசரஅவசரமாக டைனிங் ரூமினுள் நுழைந்த அர்ஜுன் தூவாலையை அருகிலிருந்த சேரில் விசிறி எரிந்து விட்டு "குட் மார்னிங் கண்ணா" என்றபடி விஷ்ணுவை நிமிர்ந்து பார்க்க அவனோ தூக்கி எரியப்பட்டிருந்த ஈரத் தூவாலையை பார்த்துக் கொண்டிருந்தான். முறைத்தான் என்று கூட சொல்லி விட முடியாது ஆனால் அதுவே அர்ஜுனை சேரில் உட்கார விடாமல் தடுத்தது. அவன் பார்வைக்கு விளக்கம் வேண்டியிருக்கவில்லை நிமிடத்தில் அந்த தூவாலை அங்கிருந்து அகற்றப்பட்டு பால்கனியில் இருந்த கொடியில்.தஞ்சம் புகுந்தது

காலை உணவை முடித்துக் கொண்டு அர்ஜுன் தனது பைக்கில் மெடிக்கல் காலேஜ் சென்று விட்டான் .விஷ்ணு மீண்டும் பத்திரிக்கையில் மூழ்கினான்.அவனது கையினில் மூன்று நிற மார்க்கர்கள் இருந்தன சிகப்பு, பச்சை , மற்றும் ஃபிளோரசன்ட். அன்று வந்த செய்தித்தாள் வார இதழ் என்று எல்லாவற்றிலும் செய்திகளை ரகம் பிரித்து அதற்கேற்ற வண்ணத்தை தீட்டினான் .

மதிய உணவிற்கு பின் காரை எடுத்தவன் நேரே மாயாஜால் மல்டிப்ளெக்ஸ்சில் நிறுத்தினான். அது ஒரு தமிழ் படம் தான் ஆனால் கூட்டமில்லை ,ஒருவேளை வார நாள் என்பதால் கூட இருக்கலாம். கூட்டமில்லாத இடத்தில் சென்று அமர்ந்தவன் அந்த தியேட்டர் முழுவதும் பார்வையால் ஒரு முறை அலசினான் .

ஆங்காங்கே ஜோடி ஜோடியாய் சிலர் ,சில கல்லூரி படிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் .... பாவம் கல்லூரியில் படிக்கச் சொல்லி கொடுமை படுத்துகிறார்கள் போலும். கல்லூரியின் அருமை பிற்காலத்தில் இவர்களுக்கு நிச்சயம் புரியும் ..ஆனால் அப்போது எதையும் மாற்ற முடியாதே |

கடைசி ரோவில் ஓர் வயதான தம்பதி. அவர்களும் இவனை போலவே சுற்றுச்சூழலை ஆராய்ந்து கொண்டிருந்தனர்.விஷ்ணுவின் கண்கள் அவர்களை சந்திக்கவும் அவர்கள் இவனை பார்க்கவும் சரியாக இருந்தது.. அவர்களது இதழ்களில் நட்பாய் புன்னகை மலர,இவனும் புன்னகைத்தான். அதன் பின் தேசிய கீதம் போடப்பட எல்லோரும் ஒற்றுமையாய் எழுந்து நின்று நாட்டுக்கு மரியாதை செலுத்தினார்கள்.

படத்தின் சென்சார் சர்டிபிக்கேட்டிலிருந்து உன்னிப்பாய் பார்க்கலானான். அதற்குப்பின் அவனது கவனம் சிறிதும் சிதறவில்லை . அந்த இருட்டிலும் கையிலிருந்த நோட் புக்கில் ஏதோ குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான். இடைவேளையில் மீண்டும் அந்த திரையரங்கை அவனது கண்கள் வட்டமடித்தன.இப்போது ஓரிருவர் கூடியிருந்தனர். ஆனால் அவனது கண்கள் வலதுப்புற கடைசி ரோவில் அமர்ந்திருந்த பச்சை சட்டைக்காரனிடம் ஓர் வினாடி நின்று மீண்டது.

மீண்டும் படத்தில் சென்றது அவனது கவனம் ... படம் முடிந்து வெளியே வரும் பொழுது பக்கத்திலேயே நடந்து வந்த பச்சை சட்டை. "நாளை மாலை கோழிப்பண்ணை பஸ் ஸ்டாப்" போகிற போக்கில் சொல்லி விட்டு விஷ்ணுவை கடந்து வேகமாக சென்றும் விட்டான்.

காருக்கருகில் சென்றவனது கால்கள் நின்றன காரணம் அந்த வயதான தம்பதியினர் மிகவும் வருத்தத்துடன் பேசிக்கொண்டிருந்தார்கள்

"படத்துல ஒரே சண்டை, பாக்க முடியல, அடிபடரது கெட்டவன் தான் இல்லைங்கல ஆனா அவனுக்கும் வலிக்கும் தானே?ஹீரோ கத்தி எடுத்து சதக் சதக் னு குத்துவதை பாக்க முடியல." என்றாள் அந்த வயதான அம்மா.

"இந்த கருமத்தை எல்லாம் பாத்துட்டு தான் சின்ன சின்ன பிள்ளைகள் எல்லாம் வெட்டி கிட்டும், குத்தி கிட்டும் வாழ்க்கையை ஜெயில்ல கழிக்குதுங்க" என்றார் பெரியவர்.

“எவன் இந்த படத்துக்கு " U " சர்டிபிக்கேட் கொடுத்தது?" என்ற கேள்வி எழுப்பினாள் அந்த அம்மாள்

"காசு ,காசு கொடுத்தா நம் ஊர்ல எது வேணும்னாலும் கொடுப்பாங்க "

"என்னவோ போங்க இந்த நாடே கெட்டு போச்சு" என்ற பெருமூச்சுடன் அவர்களது இரு சக்கர வாகனத்தை நெருங்கினார்கள்.

அவர்களது வண்டிக்கு முன் இன்னொரு வண்டி நின்றிருந்தது. அதனை பார்த்ததும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொன்டனர். இவர்களை கவனித்துக் கொண்டிருந்த விஷ்ணு அந்த வண்டியை தள்ளி வைத்து விட்டு இவர்களது வண்டியை எடுக்க உதவி செய்தான்

"ரொம்ப நன்றி தம்பி " என்று வாழ்த்தி விட்டு சென்றனர். விஷ்ணுவின் கார் வீட்டை நோக்கி சென்றது.

வியூகம் தொடரும்.......
 
Messages
77
Reaction score
57
Points
18
வியூகம் - 2

ரேடியோவிலிருந்து பழங்காலத்து பாடல்கள் தவழ்ந்து வர , தலையசைத்து அதனை கேட்டபடியே செடிகளுக்கு தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தான் விஷ்ணு

"ப்ரோ .நேத்து என்னோட அனாடமி கிளாஸ் பிரபசர் கொடுக்கச் சொன்னார். மறந்தே போயிட்டேன்" என்றபடி அர்ஜுன் ஒரு காகிதத்தை நீட்டியது தான் தாமதம்

"பளார் ..." அவனது கன்னம் சிவந்து விட்டது

ஒரு வார்த்தை கூட பேசாமல் அவசரமாக அந்த காகிதத்தை பிரித்து படித்தவனின் முகத்தில் அரைநொடிக்கும் குறைவாக ஓர் ரெளத்திரம் தோன்றி மறைந்தது ..

"இது தான் கடைசி இனி எதிலாவது காலதாமதம் இருந்தால் .....'!!" என்று அர்ஜூனின் கண்களை ஊடுருவிய விஷ்ணுவின் பார்வையில் வெளிரியது அவனது முகம் ...

சார்ஜில் போடப்பட்டிருந்தது செல்போன் ஓயாமல் அடித்துக் கொண்டிருந்தது. குளியலறையிலிருந்து வெளியே வந்த விஷ்ணு செல்போனை கையிலெடுக்க அதில் தன்ஷிகா என்ற பெயர் மிளிர்ந்தது....

‘ இவள் ஏன் இப்போது அழைக்கிறாள்? இவளது அழைப்பு நேரம் இரவு தானே' என்ற சிந்தனை மனதில் ஓட தன்னிச்சையாய் விரல்கள் அழைப்பை ஏற்று போனை காதுக்கு கொடுத்தன ....

“ ஹலோ ... - " என்றவனது குரலுக்கு

"ஹாய் ஹனி என்ன பண்ற? என்னோட ஃபோன் எடுக்க ஏன் இவ்ளோ நேரம் ?" உரிமையாய் கேட்டவள் தன்ஷிகாதான்

"ஹேட் எ பாத் " என்றான் சுருக்கமாக

" ஓ ... அப்போ சார் ஃபிரெஷ்ஷா இருக்கீங்களா? அப்படியே கிளம்பி பீச் ஹவுஸ் வந்துடு"

"ஃபார் வாட்? நான் ஈவினிங் வரேன்"

"யூ நாட்டி... " என்று குழைந்தவள் " ஒரு பார்ட்டி மா .. .. நீ கண்டிப்பா வரணும்" என்றாள் ஏக்கமாய்

"நோ ஹனி... ஐஹேவ் அன் இம்பார்டன்ட் வொர்க்... ஐ வில் மீட்யூ இன் த ஈவினிங் அட் பாம்பே கிளப்" (எனக்கு முக்கிய வேலை இருக்கிறது அதனால் மாலை பாம்பே கிளப்பில் சந்திக்கலாம்)

அவனது மறுப்பால் உஷ்ணமானாள் தன்ஷிகா

"வாட் ! ! யூ ஆர் சேயிங் நோ டு தன்ஷிகா?" அவள் கத்திய கத்தலில் எரிச்சலடைந்து போனை காதைவிட்டு தூரமாக பிடித்தான் விஷ்ணு அப்போதும் சத்தமாகவே கேட்டது.

"கோ .... டூ ஹெல் " என்ற அலரலோடு ஃபோன் துண்டிக்கப்பட்டது.

அந்த குரலுக்கோ பேசியவளுக்காகவோ எந்தவித உணர்வும் அவனது முகத்தில் தோன்றவில்லை போனை மறுபடியும் சார்ஜில் போட்டு விட்டு சமையலறையை நோக்கி நடந்தான்.

கம்பங்கூழ் ஓர் டம்ளரிலும் சின்னவெங்காயம் பச்சமிளகாய் - ஓர் தட்டிலும் டைனிங் டேபிள் மீதிருக்க முகம் சுளித்தான் அர்ஜுன் "ப்ரோ! மீ பாவம் ப்ரோ ! தினமும் சிறுதானியம் தான் பிரேக்பாஸ்ட்டா ?" அவனது குமுறலை விஷ்ணு காதில் வாங்கியது போல் கூட தெரியவில்லை அவனது உணவில் கவனமாக இருந்தான் - 'சாப்பிடும் பொழுது பேச கூடாது' இதுவும் இந்த வீட்டில் ஓர் எழுதப்படாத விதி ... .. ஓர் பெருமூச்சுடன் சேரை இழுத்து போட்டு அமர்ந்தவன் வேண்டா வெறுப்பாக டம்ளரை வாயில் வைத்தான்.

அதற்குள் தன் உணவை முடித்துவிட்ட விஷ்ணு "சாப்பாட்டை இஷ்டப்பட்டு சாப்பிடு இது கூட கிடைக்காதவர்கள் நாளுக்கு நாள் இங்கே அதிகமாகிக் கொண்டே போகிறார்கள், அது மட்டுமில்லாமல் வயிறு நிரம்ப சாப்பிடு காலை உணவு ராஜா மாதிரி சாப்பிடனும்" என்று தன்னுடைய உரையை முடித்துக் கொண்டு அங்கிருந்து அகன்றான் விஷ்ணு

'ம்க்கும்........ராஜாக்கள் கம்பங்கூழ்தான் குடிச்சாங்களாக்கும் 'உள்ளுக்குள் குமைந்தான் அர்ஜுன் ஆனால் எதுவும் பேசி விட முடியாது ஏனெனில் அவன் இன்னமும் சாப்பிட்டு முடிக்கவில்லையே!

மாலை நான்கு மணி - கோழிப் பண்ணை பஸ் ஸ்டாப் - பச்சை சட்டையை பார்த்து விட்டான் விஷ்ணு ,தியேட்டரில் பார்த்த ஆள் இல்லை ஆனால் சட்டை பச்சை தான்.

அருகில் சென்றவன் "பஸ் ஏன் லேட்?" என்று கேட்டான்

"தெரியலையே சார்" என்றான் பச்சை சட்டை

"ஓ.கே சார் தாங்க் யூ" என்றவன் மீண்டும் அந்த பஸ் ஸ்டாப்பை அலசினான் அங்கே வேறு பச்சை சட்டையே இல்லை

பஸ் ஸ்டாப்பில் இருந்த சிமெண்ட் திட்டில் அமர்ந்து, ஓர் பழைய பாடலை முணுமுணுத்தபடி காத்திருந்தான். விட்டேர்த்தியாய் பார்ப்பது போல் இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களில் தூரத்தில் பஸ் ஸ்டாப்பை நோக்கி வந்து கொண்டிருந்த இன்னொறு பச்சை சட்டை பட்டுவிட்டது. அவனது கண்கள் பஸ் ஸ்டாப்பை அலசுவது தெரிந்தது. பஸ் ஸ்டாப்பிற்குள் வரட்டும் என்று காத்திருந்தான்.

நல்ல வேளையாக வந்தவன் பஸ் ஸ்டாப் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தான். விஷ்ணு பேசினால் கேட்கும் தூரத்தில் அமர்ந்திருந்தான். சரியாக உட்காருவது போல் பச்சை சட்டை அருகில் நகர்ந்தவன்,” பஸ் ஏன் லேட்" என்று கேட்டான்

"பஸ்ல ஸ்டாட்டிங் டிரபுள் சார், அதை எடுத்துட்டு போய் மார்டன் ஹாஸ்பிடல்ல தான் சேக்கனும் " என்று பதிலளித்தான் அந்த பச்சை சட்டை

“குட் ஜோக் “என்று முடித்துக் கொண்டவன் தன் கையில் மடித்து வைத்திருந்த நாளிதழை பிரித்துப் படிக்கலானான்.

சரியாக ஓர் நிமிடம் கடந்திருக்கும் "சார் விளையாட்டு செய்தி பேப்பர் தரீங்களா?" என்று கேட்டான் அந்த பச்சை சட்டை மறுக்காமல் இரண்டு பேப்பரை தன் பேப்பரிலிருந்து பிரித்துக் கொடுத்தான் விஷ்ணு. இருவரும் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே பஸ் வந்து விட்டது. இருவரும் பஸ்சில் ஏறினார்கள், மூன்று ஸ்டாப்பிங் கழிந்து ராஜகீழ்பாக்கம் பஸ் ஸ்டாப்பில் இறங்கிக் கொண்டான் விஷ்ணு பச்சை சட்டைகாரனிடமிருந்து பேப்பரை வாங்காமலே .

பைக் ஸ்டாண்டில் விட்டிருந்து தனது பைக்கை எடுத்துக் கொண்டு மும்பை பார் நோக்கி விரைந்தான்.

வியூகம் தொடரும்.....
 
Messages
77
Reaction score
57
Points
18
வியூகம் - 3

மும்பை பார் - பார்க்கிங்லாட்டில்வண்டியைநிருத்தி விட்டு சாவியை சுழற்றியபடியேஉள்ளே சென்றான் விஷ்ணு. அவன்அங்கு பரிட்சயமானவன் என்பது அங்கிருந்தசிலரின் முகமலர்ச்சியில் தெளிவாக தெரிந்தது. போனில் சில எண்களை தட்டி காதுக்குகொடுத்தான். மறுமுனையில் எடுக்கப்படாமலேரிங் நின்றுவிட்டது .

அந்த இருட்டு அரையில் எப்போதும்தன்ஷிகாவுடன் அமரும் டே பிளில் சென்றுஅமர்ந்தான் .... ஆங்காங்கே ஆணும்பெண்ணும் குடித்து விட்டு ஆடிக்கொண்டிருந்தார்கள். கை முஷ்ட்டி இருகமீண்டும் நம்பரைஅழுத்தி காதுக்குகொடுத்தான்.எதிர் முனைஎடுக்கும் வரைஓயாமல் மீண்டும் மீண்டும் முயற்ச்சித்துக்கொண்டிருந்தான். ஒரு வழியாகபதிமூன்றாவது முறைஅழைப்பு ஏற்கப்பட்டது

"ஹலோ. ஹூ ஆர் யூ?" கோபம் கொப்பளித்ததுஅவளது கேள்வியில் .

"ஹனி டிரை டு அன்டர்ஸ்டான்ட் மீ" என்னைபுரிந்து கொள்ள முயற்சி செய் "எனக்கு ஒருமுக்கிய வேலை இருந்த தும்மா , இப்போ நான்பார்ல தான் இருக்கேன் உனக்காக வெயிட்பன்றேன் நீ வர்ரவரைக்கும் இங்க தான்இருப்பேன்," திடமான குரலில் பேசியவன்மறுமுனையிலிருந்து பதில் வரும் முன்தொடர்பை துண்டித்தான். அவனுக்கு நிச்சயம்தெரியும் அவளால் அவனை நிராகரிக்கமுடியாது என்று.


தன்ஷிகாவும் வந்தாள் ஆனால் இரவு 11.00 மணிக்கு மேல். அவன் அவளைநிராகரித்ததற்காய் அவனை காக்க வைத்துபழிவாங்கினாள் .இந்தியாவின் பணக்காரர்பட்டியலில் எப்போதும் பத்துக்குள் இருப்பவரின்பெண்ணாயிற்றே இந்த திமிர் கூடஇல்லையென்றால் எப்படி?


விஷ்ணுவிற்கோ அவனதுகண்களைஅவனாலேயே நம்ப முடியவில்லைஇத்தனை சீக்கிறம் வருவாள்என்று அவன்எதிர்பாரிக்கவில்லை நிச்சயம் நடுஇரவைதாண்டித்தான் வருவாள் என்றுநினைத்திருந்தான். பரவாயில்லை காதல் போதை நன்றாகத்தான் ஏறியிருக்கிறது.

"ஹாய் ஹனி " என்றுஇருகைகளை விரித்துஅவளைஅனைக்க விழைந்தவனைபுரக்கனித்து எதிரிலிருந்த இருக்கையில்அமர்ந்தாள்.

"மேடம்க்கு செம கோபம் போல ?" அவளதுசிவந்திருந்த கண்ணத்தை ரசனையுடன் உற்றுபார்த்து அவன் கேட்க

"யூ ஜஸ்ட் ஷட் அப் " என்றவள் அவன் யாரோஇவள் யாரோ என்பது போல் மொபைல்போனை பார்த்துக் கொண்டிருந்தாள். அதற்குமேல் அவன் எதுவும் பேசவில்லை அவளையேஉற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.

பார் டென்டரை (மதுபானத்தை வினியோகம்செய்பவர்.)கூப்பிட்ட விஷ்ணு , அவனதுமெம்பர்ஷிப் கார்டைநீட்டி " ரெண்டு வோட்கா" என்றான் . ஓரக்கண்ணால் தன்ஷிகா அவனை முறைப்பதை அவனால் உணர முடிந்தது. இதழோரம் ஓர் இளநகையுடன் மீண்டும்அவளையே பார்த்தபடி குஷனில் சாவதானமாகசாய்ந்தமர்ந்து கொண்டான்.

அவனது பார்வையின் வீரியம் அவளைஎன்னவோ செய்தது.

படிப்படியாக அவளது கோபமும் குறைந்தது.

வோட்காவை அவள் புறம் நகர்த்தி வைத்தவன்" யுவர் ஃபேவரைட் " என்றான்

"நோ ...ஐ ஆம் நாட் இன் எ மூட் டு டிரிங்க " 'வேண்டாம் குடிக்கும் மனநிலையில் நான்இல்லை 'என்றாள் வீம்புடன்.

“நோ திஸ் இஸ் இன்ஜஸ்டிஸ் ( இதுநியாயமில்லை) போன வாரம் நான் கோபமாஇருந்த போது நீ எனக்கு பிடிச்ச பிராண்ட்ஆஃபர்பன்னியே , அப்போ நான் ஒரு ஜென்டில்மேனா அதைஅக்சப்ட் பன்னி கிட்டேன்.பட் யூ ஆர்நாட்டூயிங் தட்" என்றான் செல்லக் கோபத்துடன்


இப்போது அவளது இதழில் புன்னகைமலர்ந்தது அதனை மறைக்க அவள் பெரும்பாடுபடுவதுதெரிந்து உதவிக்கு வந்தான்விஷ்ணு. " ஓ.கே... நமக்குள்ளஎன்னகோவமானாலும் அதை இந்தஓட்கா மேலகாமிக்க கூடாதுமா .... சீ... இட் இஸ் வெயிட்டிங்ஃபார் அஸ்" என்றான் அந்த வோட்காகோப்பையை பரிதாபமாக பார்த்தபடி

இப்போது சத்தமாகவே சிரித்து விட்டாள்தன்ஷிகா.

"யூ ஆர்வெரி நாட்டி" என்றவள்கோப்பையைகையிலெடுத்தாள்

"தேங்க் காட்" என்று மேலே பார்த்து தனக்குள்சத்தமாக பேசிக் கொண்டவன்.அவசரமாகதனது கோப்பையை எடுத்து அவளது கோப்பையோடு இடித்து 'சியர்ஸ்' சொன்னான்


அவள் ஒன்று ரெண்டு மூன்று என்று உள்ளேஇரக்கிக் கொண்டேயிருந்தாள்..விஷ்ணுவோஅந்த ஒற்றை கோப்பையை மட்டுமேகையில்வைத்திருந்தான். போதை ஏற ஏறஎதிரிலிருந்தவள் அவரைகில் வந்தமர்ந்தாள்.அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள்அவனும் மறுக்கவில்லை . அவளதுஉளரல்ஆரம்பமானது "ஐ லைக்யூ டார்லிங் " லவ்யூசோ..... மச்சு.."

அவளை அனைத்தவாறு தன்னுடன் சேர்த்துப்பிடித்தவன் " ஐ நோ தட் ஹனி " என்றான்அவளது காது மடலில் இதழ் பதித்து.

" உன்கிட்டகேபப்பட கூட முடியலடா" என்றவள்அவனது இதழ்களை நோக்கி முன்னேர

"ஒன் மினிட் ஹனி " என்று எழுந்தவன்கோப்பையில் இருந்த வோட்காவை ஒரே மிடரில் வாயில் ஊற்றிக் கொண்டு வாஷ்ரூமைநோக்கி நடந்தான்.

வாஷ் பேசினில் வாயிலிருந்த வோட்காவை துப்பியவன் தண்ணீர் கொண்டு வாயை நன்குகொப்பளித்தான் . 'பீ எ ரோம் வென் யூ ஆர் இன்ரோம்'. ரோம் நாட்டில் இருக்கும்போதுரோமானியர்களைபோல் இரு’. இதுபழமொழி . விஷ்ணு அதற்கு இன்னொருஅர்த்தம் கொடுத்தான் "அப்படி முடியவில்லைஎன்றால் ரோமானியர்களைபோல்நடிக்கவாவது தெரிய வேண்டும்" என்பதுதான்.
 
Messages
77
Reaction score
57
Points
18
வியூகம் - 4
விஷ்ணுவின் தோளில் சாய்ந்தபடி தன்ஷிகா மதி மயங்கி கிடக்க அவளது கன்னங்களை வருடியபடியே "ஒரு விஷயம் கேட்க மறந்துட்டேன் ஹனி " என்றான்

"என்ன டா?" என்றாள் குளரலாக
“இன்னைக்கு எதுக்குமா டிரீட் ?"
" ஓ.. அதுவா... ஐ காட் எ நியூ பென்ஸ்" என்றாள் சர்வ சாதாரணமாக ஒரு தனி மனிதனுக்கு ஒரு கார் போதுமானது ஆனால் இவர்கள் ஆளுக்கு பத்து கார் வைத்திருக்கிறார்கள். எதற்கு வாங்கினோம் என்று அவர்களுக்கும் தெரியாது. எதற்காக இப்படி கார் ஷெட்டில் அடைந்து கிடக்கிறோம் என்று பாவம் அந்த கார்களுக்கும் தெரியாது.
தனது சிந்தனை ஓட்டத்தை தடுத்து "எனிதிங் ஸ்பெஷல் " என்று கேட்டான்

"ம்...எஸ்... மை டேடி ஹேஸ் காட் எ பிக் மல்ட்டி நேஷனல் பிராஜக்ட்.. யூ..... யூ..... நோ......”. குளரலாய் உளரியவளை உற்று நோக்கினான்.

" வாவ் ....கிரேட் நியூஸ், கங்கிராட்ஸ் " வாழ்த்தியவன்

"என்ன கான்ட்ராக்ட் ஹனி ?" பேச்சை நீடித்தான்.
“ ஏதோ மெடிக்கல் மெஷினரி கான்ட்ராக்ட் ,ஐ ஆம் நாட் ஷீயர் ." முடித்தவள் அதற்கு மேல் ஒரு வார்த்தை கூட பேசவில்லை காரணம் பேசும் நிலையில் அவள் இல்லை முழுதாக மட்டை.
அங்கே இருந்த பார் மேனேஜரை பார்த்து அவளது கார் டிரைவர் நம்பர் கொடுத்து தொடர்பு கொண்டு அவளை ஒப்படைக்குமாறு கூறியவன் பார்க்கிங்கை நோக்கி நடக்கலானான். போகிற போக்கில் அங்கிருந்த ஓரு பார்மேனை பார்த்து கண்களால் சைகை காட்டி விட்டு சென்றான்.
இரவு இரண்டு மணி ,அரையில் மிக மிக மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தான் விஷ்ணு "சகா... நான் கேட்ட ஆள் ரெடியா? "

"ஓகே... டூ வீக்ஸ் தான் நமக்கு டைம் அதுக்குள்ள நம்ம ஆளை உள்ள இறக்கியாகனும் , புரிஞ்சிதா?"

"அர்ஜுன் இன்னும் விளையாட்டு பிள்ளையாத்தான் இருக்கான்."

"இல்லை அவனுக்கு தெரியாது "
"சொல்லனும்... சரியான டைம்காக வெயிட்டிங்."
"எஸ் அடுத்த வாரம் தான் ஆக்ஷன் ,எல்லா குறிப்புகளும் அதைத்தான் சொல்லுது. “
“ ஜஸ்ட் வாட்ச் ,நாட் மோர் தேன் தட்"
“எஸ் ஹெவி லாஸ் ஆப் லைப் இருக்கும் “
“அதற்கான பிளான் தான் உன் கைல இருக்கு. ஃபீல்ட் ஆபீசர்கிட்ட எக்ஸ்பிளெயின் பண்ணிடு .
ஏதாவது டவுட் இருந்தா என்னை கான்டாக்ட் பண்ண சொல்லு என்னோடசெல்போன் சிக்னல் ரெக்கார்ட் பிளாக்கிங் டைம் தான் உனக்கு தெரியுமே ?
"நானா? நோ நோ .... வேற யாரையாவது அனுப்புங்க” |

" எனக்கு இங்க கிரவுண்ட் வொர்க்கொஞ்சம் இருக்கு, நெக்ஸ் டைம் ஐ வில்கோஃபார் ஷுயர் "
“ஓ கே சகா ,எனி அதர் இன்பர்மேஷன் ?”
“ஓ கே....”. தொடர்பை துண்டித்தான்
விஷ்ணுவிற்கு மிகவும் பிடித்த இடம் அவனது வீடு தான். இரண்டு கிரவுண்ட்டில் இடம் இருந்தது, அதில் ஒரு கிரவுண்ட் மட்டும் தான் வீடுஇன்னொறு கிரவுண்ட் முழுவதும் தோட்டம் .தென்னை, மா, பலா, வாழை, முருங்கை, கருவேப்பில்லை , வேம்பு, சப்போட்டா,கொய்யா, வெண்டை, மணத்தக்காளி கீரை, பூசணிக்காய், புடலங்காய் என்று ஒவ்வொரு செடியும் மரமும் சரியான இடைவேளையிட்டு அழகாய் பாத்திகட்டி வளர்க்கப்பட்டன.

வீட்டிற்குள் நுழைந்ததுமே கேட் அருகில் விஷ்ணுவின் நாய் பிளாக்கி அமர்ந்திருக்கும் அல்லது படுத்துக் கொண்டிருக்கும். உள்ளேபோர்டிகோவில் நிறைய லவ் பேர்ட்ஸ் கீச் கீச் என்று கத்திக் கொண்டிருக்கும் வீட்டிற்குள் இரண்டு கிளி கூண்டில் அடைக்கப்படாமல் மூன்று படுக்கையறை ,ஓர் சமையலறை ,கூடம் என்று சுதந்திரமாய் சுற்றிக் கொண்டிருக்கும். குறைந்தது ஐந்து பூனைவீட்டை சுற்றிவரும் . இரண்டு கோழியும் சில குஞ்சிகளும் கூட தோட்டத்தில் ஆங்காங்கே சுற்றிக் கொண்டிருக்கும். இதில் மிகப் பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் பூனையும் நாயும் கோழிக்குஞ்சுகளுடன் விளையாடுமே தவிர உணவாக எண்ணியது போல் தெரியவில்லை .
மாடியில் அமைத்திருந்த ஆர்கானிக் தோட்டத்தில் நாட்டு தக்காளியை அறுவடை செய்து கொண்டிருந்தான் விஷ்ணு மொத்தம் இரண்டே செடி தான் ஆனால் இரண்டு கிலோ தக்காளி உற்பத்தியாகி விட்டது. இனி இரண்டு வாரத்திற்கு கவலையில்லை . அதற்குள் அடுத்த தக்காளி செடியில் காய் பழுத்து விடும்.ஓரத்தில் அவரைக் கொடியும் பாகற்கொடியும் படர்ந்திருந்தது. கத்தரிக்காய் ,மிளகாய் ,சிறுகீரை, புதினா இப்படி சிறுவேர் விடும் செடிகள் அந்த மாடியை அலங்கரித்திருந்தது. மாட்டு சானம் மற்றும் அழுகிய காய்கறிகளின் வாசத்தோடு ஈர மண்வாசனையும் சேர்ந்து வீசி ஒரு வித நெகிழ்ச்சியை உண்டு பண்ணியது. அந்த மண்ணில் மண்புழுக்கள் விளையாடுவதை பார்க்கையில்இயற்கை சார்ந்த விவசாயத்தை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாதுடா என்று மார்தட்டிக் கொள்ள தோன்றும்.

அதிக மழைபொழிந்தால் செடிகளை காக்க ஓர் பெரும் ஷீட் ஒன்று தயார் நிலையில் இருந்தது. மாடி முழுவதும் ஆங்காங்கே இருக்கும் கம்புகளில் ஷூட்டை விரித்து விட்டால் போதும் அதில் பட்டு விழும் தண்ணீர் மாடியில் இருக்கும் ஓட்டை வழியாக மழைநீர் சேகரிப்புத் தொட்டியை சென்றடையும்.
எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் விஷ்ணுவையும் அர்ஜுனையும் ராஜகீழ்பாக்கம் ஏரியிலும் மாடம்பாக்கம் ஏரியிலும் பார்க்கலாம். மாட்டுசாணத்தை சேகரித்து எடுத்து வருவதில் ஞாயிறு முழுவதையும் செலவிடுவார்கள். முதலில் முகம் சுளித்த அர்ஜுன் இப்போது வழக்கமாக்கிக் கொண்டான். தினமும் வீட்டு வாசலில் மீதமான கஞ்சி, கூழ், பழம் என்று கலவையாய் இவன் வைக்கும் உணவிற்கு மாடுகள் சில அடிமையாகி விட்டன.வாசலில் வந்து "மா..மா..." என்று கூப்பிட்டு தங்களுக்கானதை உரிமையோடு பெற்றுக் கொள்ளும் அளவிற்கு விஷ்ணுவுடன் ஒன்றி விட்டன.இப்படி விஷ்ணுவின் வீடே ஒரு இயற்கை களஞ்சியமாக இருந்தது.
இப்படி ஒரு வீட்டில் யாருக்கு தான் வாழப் பிடிக்காது.?
இப்படித்தான் ஒரு காலத்தில் நம்.தமிழ்நாடும் இருந்தது, ஆனால் இப்போது?
 
Messages
77
Reaction score
57
Points
18
வியூகம் - 5

அன்று ஏனோ படம் பார்க்கும் மனநிலையில் விஷ்ணு இருக்கவில்லை. ஒரு வித இறுக்கம் அவன் மனதை சூழ்ந்திருந்தது. காரணம்

அன்று செய்தித்தாளில் வந்த கட்டுரை ‘இன்றிலிருந்து சுமார் எழுநூறு வருடங்களுக்கு முன்பு -ஓர் பழங்குடி இன மக்கள் பசிபிக் கடலின் ஓர் தீவிலிருந்து அகற்றப்பட்னர் ,அவர்களது ஊரை விட்டு வெளியே துரத்தியடிக்கப் பட்டனர். வளமான நிலத்தையும் காடுகளையும் சூறையாடிக் கொண்டு அவர்களை ஒரு பாலைவன தீவில் தள்ளி விட்டது வேறு யாரும் இல்லை அவர்களது அரசாங்கம் தான். இவர்களது இனம் கொத்து கொத்தாக வரட்சியிலும் உணவு பற்றாக்குறையாலும் செத்து மடிந்தன. எங்கே அவர்களது இனமே அழிந்து விடுமோ என்று அஞ்சிய ஓர் பெரியவர் தன்னுடன் சிலரை கூட்டிக்கொண்டு ஓர் படகில் பயணித்து வேறு ஓர் ஊரில் கரை சேர்ந்தனர்.அங்கே இவர்களது அடையாளத்தை மறைத்து வாழ்க்கையை தொடர உதவியிருக்கிறார் .இப்போதும் இந்த இன மக்கள் மொத்தம் இருநூறு தான். ஒன்றாக இருக்க முடியாமல் உலகில் பல்வேறு இடங்களில் சிதறி கிடக்கிறார்கள் இந்த இனமக்கள்’ என்று பரிதாபமாக முடிந்திருந்தது அந்த கட்டுரை. அந்த கட்டுரையின் எழுத்துக்கள் இப்போதும் அவனது கண்களுக்கு முன் நின்றது.உலகம் முழுவதும் அநீதி விரிந்து கிடக்கிறது .உடல் இறுகிய நிலையில் இருக்க,சுவாசம் ஏனோ சீராக இல்லை .

இந்த தாக்கத்திலிருந்து வெளிவர அவனது மனம் போராடியது. அவன் எடுத்து கொண்டிருக்கும் வேலைக்கு கவனம் முக்கியம்.அவனது மனநிலையை மாற்ற அந்த திரையரங்கை நோட்டமிட்டான் .எப்பொழுதும் போல் ஒரு முறை அந்த அரங்கை சுற்றி வந்தது அவனது பார்வை.



முந்தைய படம் போல் இல்லாமல் இந்த படத்திற்கு சன்னமான கூட்டம் இருந்தது. படம் இன்று தான் ரிலீஸ் ஆனால் வியாழக்கிழமை என்பதாலும் இந்த திரையரங்கு பிரபலமாகாதது என்பதாலும் ஹவுஸ்ஃபுல் ஆகவில்லை அதே நேரம் காலியாகவும் இல்லை. இளைஞர் கூட்டம் தான் அதிகமாக இருந்தது. கல்லூரி மாணவர்களை நம்பித்தான் ஒவ்வொரு பிரொடியூசரும் படம் எடுக்கிறார்கள் போலும். ஓர் பெருமூச்சுடன் திரும்புகையில் எதிர் சீட்டில் அவனது பார்வை படிந்தது

தனியாக அமர்ந்திருந்த அந்தப் பெண்னை பார்க்கையில் ஏதோ முரணாக தெரிந்தது .ஆண்கள் தனியாக படம் பார்ப்பதை பார்த்திருக்கிறான். ஒரு பெண் தனியாக படத்திற்கு வந்து அவன் பார்த்ததில்லை . இதுவே அந்த பெண்ணிடம் தனி கவனம் செலுத்த அவனை உந்தியது . அவள் குனிந்த தலை நிமிராமல் இருந்தாள், காரணம் கையினில் மொபைல். கொஞ்சம் நிமிர்ந்த நம் நாட்டு பெண்களின் தலையை மீண்டும் கவிழ வைத்து விட்டதே இந்த போன். இப்படி மனதில் சிந்தனை எழ இன்னமும் அவளை கூர்ந்து நோக்கினான். அவளது கையில் விலையுயர்ந்த 'பேட்" இருந்தது அதில் எழுத பென்சில் போன்ற ஓர் குச்சியிருந்தது.

அதில் அவள் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தாள். விஷ்ணுவின் ஆர்வம் அதிகரித்தது, சீட்டின் நுனியில் அமர்ந்து அவளை கவனிக்காதது போல் கவனித்தான். அதற்குள் விளக்குகள் அணைக்கப்பட்டன. திரையில் சென்சார் சர்ட்டிபிக்கேட் மிளிர்ந்தது.

அவனது கவனத்தை படத்தில் நிலைநிறுத்த முயற்சித்தான். அதில் ஓரளவு வெற்றியும் கண்டான்.ஆனால் விஷ்ணுவின் நூறு சதவிகிதம் கவனம் என்று சொல்லிவிட முடியாது. எதிரிலிருந்தவளால் அவனது கவனம் சிதறியது காரணம் அவனைப் போலவே அவளும் படத்தை பார்த்து பார்த்து ஏதோ குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள் .அவள் என்ன எழுதுகிறாள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவனுள் எழுந்தது..
படம் மிக மிக சுமாராகத்தான் இருந்தது. ஆனால் உள்ளே இலைமறை காய்மறையாக பல குறிப்புகள் இருந்தன. அந்த படத்தின் சாராம்சம் இதுதான் ஓர் உயிர் கொல்லி நோய் , அதிவேகமாக பரவுகிறது, அதனை தடுக்கத் துடிக்கும் ஹீரோ பல முயற்சிகளை எடுக்கிறான் , அதற்குள் இடைவேளை வந்துவிட்டது. விளக்குகள் மிளிர்ந்தன

ஏனோ அவளது முகத்தை பார்க்கும் ஆவல் அவனுள் எழுந்தது அவன் நினைப்பதற்கும் அவள் எழுவதற்கும் சரியாக இருந்தது அவளது கைப்பையை எடுக்க திரும்பியவளின் விழி வட்டத்திற்குள் விஷ்ணு பட்டு விட்டான். விஷ்ணு என்று சொல்வதை விட அவன் தொடையில் இருந்த டைரியும் கையிலிருந்த பேனாவும் அவளின் கவனத்தை ஈர்த்தது. அவனது முகத்தை சில வினாடி உற்றுப் பார்த்தாள் , தன்னுள் ஏதோ தீவிரமாக சிந்தித்தாள்

அவனை உற்று பார்ப்பதும் தீவிரமாக அவள் சிந்திப்பதும் புகைப்படம் எடுத்தது போல் அவளது பளிங்கு முகத்தில் தெரிந்து விட்டது. அவளது அழகான முக மாற்றம் அவனது இதழோரம் இள நகையை வரவழைத்தது. மீண்டும் அவள் அவனை உற்று பார்க்க விஷ்ணுவே உதவிக்கரம் நீட்டினான்." எனி பிராப்ளம்?" புருவம் உயர்த்தி அவளது தாமரை கண்களை ஊடுருவினான். பெரிதாக தயக்கமெல்லாம் காட்டாமல் "நீங்க யூடியூபரா ?" என்றவளது முக உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
 
Messages
77
Reaction score
57
Points
18
வியூகம் - 6
"நீங்க யூடியூபரா ?" என்று ஏதோ ஓர் எதிர்பார்ப்பை கண்களில் தேக்கி வைத்து கேட்பவளிடம் என்ன சொல்ல வேண்டும் என்பதை விஷ்ணுவின் அதிவேக செயல்பாடு கொண்ட மூளை முடிவெடுத்து விட்டது. அவளது கேள்விக்கு சிறிதும் தயங்காமல் "எஸ், பட்... சின்ன கரெக்ஷன் யூடியூபரா ஆக முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்."

இதனை கேட்டதும் விரிந்திருந்த அவளது தாமரை கண்கள் இன்னும் அகல விரிந்தன. "வாவ் ... சூப்பர். நானும் ஒரு யூடியூபர் தான், பட் சேனல் ஸ்டார்ட் பண்ணிட்டேன் .சேனல் நேம் "பீயிங் கோளாறு " (being kolaru ) உங்களை சந்திச்துல ரொம்ப சந்தோஷம்" என்று நட்பாய் கரத்தினை நீட்டி "ஐஸ்வர்யா" என்றாள் அவனும் அவளது நட்பை ஏற்று நீட்டிய அவளது கரத்தோடு தன் வலிய கரத்தினை கோர்த்து குலுக்கியபடி "விஷ்ணு "என்று கூறவும்
அவளது ஹேண்ட் பேகிலிருந்த கைபேசி சத்தமிடவும் சரியாக இருந்தது " ஒன் மினிட் " அவன் கைகளிலிருந்து தனது கையை பிரித்தெடுத்து தோள் பையினுலிருந்த தனது செல்போனை எடுத்து காதுக்கு கொடுத்தவள் 'வெளியே செல்கிறேன்"என்பது போல் அவனுக்குசைகைக்காட்டி தலையசைத்து எக்சிட் என்று எழுத்துக்கள் பொரித்த திசை நோக்கி நடக்கலானாள் .அவள் வெளியே சென்று மறையும் வரைபார்த்திருந்த விஷ்ணு தன் செல்போனை எடுத்து ஓர் எஸ்எம் எஸ்ஐ அனுப்பிவிட்டு காத்திருந்தான். சில நிமிடங்களில் அவனுக்கு பதில் வந்துவிட்டது விஷ்ணுவின் கண்கள் கூர்மை பெற்று முகம் இறுகியது விழி வட்டத்திற்குள் ஐஷ்வர்யா வந்து விட அவனது இறுக்கம் நொடிப்பொழுதில் காணாமல் போனது.அவள் இவனை நட்புடன் பார்த்து புன்னகைத்து தன் இருக்கையில் அமர, இவனாலும் புன்னகைக்க முடிந்தது . அவள் அமர்த்ததும் ஒரு வித வெற்றிப் புன்னகை அவன் இதழ்கடையில் தோன்றி மறைந்தது.
அதன் பிறகு படம் முடியும் வரை .இருவரும் அவரவர் வேலையில் மூழ்கியிருந்தனர்.படம் முடிந்ததும் அதே நட்பு புன்னகையுடன் ஓர் தலையசைப்பில் விடைபெற்று பார்க்கிங் நோக்கி நடந்த ஐஸ்வர்யாவின் பின்னோடு நடந்தான் விஷ்ணு.

தன் ஸ்கூட்டியின் சாவியை வண்டியில் பொருத்திவிட்டு டோக்கனை வாயில் கவ்விக் கொண்டு பைக்கில் அமர்ந்தவளால் வண்டியை பின்நோக்கி தள்ள முடியவில்லை 'என்னடா இது...' மனதில் எரிச்சல் மூள திரும்பிப் பார்த்தவளின் வாயிலிந்த டோக்கன் தானே கீழே விழுந்தது. பின்னே அவளது வண்டி நகர முடியாதபடி அதனை அழுந்தப் பற்றியிருந்தான் விஷ்ணு .
சிறு பயம் எட்டிப் பார்க்க அதனை உள்ளே அழுத்தி மறைத்தபடி சிறு எரிச்சலை காட்டி ஓற்றை வார்த்தையில். "என்ன ". என்று கேட்டாள்
பெண்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அம்மா சொல்லுவாள். இவனிடம் வலிய சென்று பேசியதை தவறாக புரிந்து கொண்டானா ? இவளை போலவே அவனும் படத்தை பார்த்து குறிப்பு சேகரிப்பதை பார்த்ததும் ஏதோ ஓர் ஆர்வத்தில் கேட்டுவிட்டாள் தான், அதற்காக இப்படியா பின்னாலேயே வருவான்? கை வேறு கொடுத்திருக்கிறாய் என்று உள்மனம் தன் பங்கிற்கு எடுத்துக்கொடுக்க ஆள் டீசன்டா இருந்தான்னு கொடுத்தேன். இப்படின்னு யாருக்கு தெரியும். தனியா படத்துக்கு போகாதேன்னு அம்மா சொன்னப்ப கேட்டேனா? கேக்கலையே , அந்த வீணா போன வினோத்தையாவது கூட்டி வந்திருக்கலாம். நூத்தி அம்பது ரூபாய் மிச்சம் பண்ணலாம்னு நினைச்சது பெரிய தப்போ? சரி சரி இப்போ என்ன! இவ்வளவு பேர் இருக்கிற இடத்துல என்ன செஞ்சுட போறான் அதையும் தான் பாக்கலாம். பயம் நீங்கி தைரியம் பிறந்து அவன் முகத்தை ஏறிட்டாள் .
அவளது " என்ன ?"விற்கு அவன் பதில் பேச துவங்கும் முன் அவளது மனம் இத்தனையையும் சிந்தித்து முடித்திருந்தது. அது தானே மனிதமனம்.

அவளது எரிச்சலை புறக்கணித்து விஷ்ணு பேசினான் " நீங்க யூடியூபில் என்னைவிட சீனியர்.நான் இப்போ தான் ஸ்டார்ட் பண்ண போறேன். இந்த படத்தோட ரெவ்யூ வைத்தான் ( விமர்சனத்தை) நான் முதன் முதலா போட போறேன்.சோ.... உங்களோட இன்புட்ஸ் வேண்டும் இன்டர்வெல்ல உங்களோட சேனல் பாத்தேன் சப்ஸ்கிரைப் கூட பண்ணிட்டேன் நீங்க நல்லா பண்றீங்க . சூப்பர்" என்றவனை ஒரு வித பாவமான கண்ணோட்டத்தில் பார்த்தாள் ஐஸ்வர்யா.
எரிச்சலும் கோபமும் சிறு பயமும் சேர்ந்த கலவையாய் இருந்த ஐஸ்வர்யா விஷ்ணுவின் பேச்சை கேட்ட உடன் முற்றிலுமாக வேறு மனநிலைக்கு மாறி விட்டாள். "சேனலுக்கு ஹெல்ப் பண்ணணுமா?"

அவள் பேச எத்தனிக்கும் முன் வண்டிகளின் கூட்டு ஹாரன் சத்தம் அவர்களது காதை பிளந்தது. விஷ்ணு வழியில் நிற்க மற்ற வண்டிகள் போக முடியாமல் தவித்துக் கொண்டிருந்தன. "ஓ.கே விஷ்ணு நான் வெளில வெயிட் பண்றேன் நீங்க உங்க வண்டியை எடுத்துட்டு வாங்க" அங்கே ஹாரன் அடித்துக் கொண்டிருந்த வண்டிகளை பார்த்தபடி பேசினாள். அதற்கு மேல் விஷ்ணுவும் அங்கே நிற்கவில்லை .
வெளியே விஷ்ணுவிற்காக நின்றிருந்தாள் ஐஸ்வர்யா. இந்த உலகம் அவளையும் ஓர் யூடியூப்பராக ஏற்றுக் கொண்டு உதவி கேட்கிறதே என்று அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது ஓர் பத்து நிமிட காத்திருப்பிற்கு பின் வந்த விஷ்ணுவிடம் தன் வண்டியில் அமர்ந்த படியே "நீங்க தாராளமா யூடியூப் ஸ்டார்ட் பண்ணலாம்.பட் நேம் வைக்கும் போது மட்டும் டிப்ரண்டா யோசிச்சு வைக்கனும் நான் பீயிங் கோளாறுன்னு வச்சிருக்கேன் அதுல சினிமா கோளாறுன்னு படத்தோட விமர்சனம் போடறேன். பட் ப்யூச்சர்ல சமையல் கோளாறு , அரசியல் கோளாறு புத்தக கோளாறு ,சீரியல் கோளாரு,வரலாறில் என்ன கோளாருன்னு சேர்த்துக்கிட்டே போகலாம் . எல்லா டாப்பிக்கும் டச் பண்ணி வீடியோ போட்டுகிட்டே இருக்கலாம் " அவள் பேச பேச அவளை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தவனது கண்கள் சிரித்தன. தனது உரையை நிறுத்தி விட்டு என்ன என்பது போல் அவன் முகத்தை உற்றுப் பார்த்தாள்.
அவளது விழிகள் தொடுத்த கேள்வி விஷ்ணுவை சென்றடைந்து விட" இப்படி நடு ரோட்டில் பேசனுமா ?, பக்கத்துல காஃபி ஷாப் இருக்கே'' என்று கேட்க
“சாரி விஷ்ணு நான் அவசரமா போகனும் நீங்க ஹெல்ப்னு கேட்டதால்தான் சொல்றேன்,பர்ஸ்ட் சேனல் நேம் வைங்க முதல் ரெவ்யூ போடுங்க அப்போ தான் அதுலிருந்து கரெக்ஷன் சொல்ல முடியும் அப்படியே பர்பெக்ஷன் கொண்டு வந்துடலாம் டோண்ட் வொர்ரி.. .என்னோட சேனல் ஃபேஸ்புக் ஐடில என் கூட நீங்க பேசலாம். உங்க டவுட்ஸ் கிளாரிபை பண்ணிக்கலாம் “ஆல் தி பெஸ்ட்" என்று முடித்தவள் ஸ்டார்ட் பட்டனை அழுத்தி வண்டியை உயிர்ப்பித்தாள்.
"பாக்கலாம் விஷ்ணு எப்படியும் தியேட்டர் தியேட்டரா சுத்த தானே போறோம் கண்டிப்பா மீட் பண்ணுவோம் | பை ".ஓர் தலையசைவுடன்ஹெல் மெட்டை அணிந்து கொண்டவள் சாலையின் வாகன நெரிசலில் கலந்து மறைந்தாள் .

அவள் மறைவதையே பார்த்துக்கொண்டிருந்த விஷ்ணு" இன்டரஸ்டிங் கேர்ள்" என்று முணுமுணுத்தபடியே செல்போனை தட்டி காதுக்கு கொடுத்தான். "சேனல் நேம் பீயிங் கோளாறு இன்றைக்கு ராத்திரிக்கு உள்ள இருநூற்றி ஐம்பது சப்ஸ்கிரைபர்ஸ் இன்கிரீஸ் (அதிகம்) பண்ணிவிடு ஓகே..." சுருக்கமாக முடித்துக்கொண்டான்
 
Messages
77
Reaction score
57
Points
18
வியூகம் - 7

நான் முதல் நீ முதல் என்று போட்டி போட்டுக் கொண்டு ஒரே அன்னகூடையில் முகத்தை நுழைத்தன மூன்று மாடுகள்.ஒரு வழியாக அதிலிருந்த கஞ்சியை குடித்துவிட்டு அடியிலிருந்த கஞ்சியை போட்டி போட்டு கீழே தள்ள அன்னகூடை ரோட்டிற்கு உருண்டோடியது.

" இன்னைக்கும் உருட்டிட்டீங்களா?, சண்டபோடாம குடிச்சிருந்தா முழுசா குடிச்சிருக்கலாம்ல" புலம்பியபடியே அன்ன கூடையை பின் தொடர்ந்து ஓடி அதனை மீட்டெடுத்து வந்தான் அர்ஜுன்.

கேட்டருகில் மதில் கவரின் மீது சாய்ந்தபடி இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுவின் இதழில் ஓர் ஏளன புன்னகை மலர்ந்தது. "இப்படித்தானே மனிதர்களும்?"

அவனது சிந்தனையை கலைக்கும் விதமாக அர்ஜுனின் குரல் "இன்னையோட என்னோட ஷிப்ட் ஓவர், நாளையிலிருந்து இது உங்க டியூட்டி புரோ". பேசிக்கொண்டே அன்னகூடையை நன்றாக கழுவி அதனிடத்தில் வைத்தான்.

அவனது பேச்சை காதில் வாங்கியபடி அருகிலிருந்த வேப்பமரத்து சிறு கிளையை ஒடித்து அதன் ஒரு முனையை நன்கு கடித்து பல் துலக்க துவங்கியவனின் காதுகளில் அந்த செய்தி வந்து விழுந்தது, பக்கத்துவீட்டு டிவியில் நியூஸ் ஓடிக்கொண்டிருந்தது "சற்றுமுன் கிடைத்த தகவல், ஒரு நாட்டு ராணுவம் இன்னொறு நாட்டு ஆளில்லா விமானத்தை (அதாவது உளவு பார்க்கும் விமானம்) சுட்டு வீழ்த்தியது. இதனால் ஆத்திரமடைந்த விமானத்தை சொந்தமாக கொண்ட நாடு எதிர் நாட்டு ராணுவத்தை எச்சரித்திருக்கிறது. இதனால் இரு நாடுகளிடையே போர் மூள வாய்ப்பிருக்கிறது" விஷ்ணுவின் காதுகள் கூர்மை பெற்றன,
அர்ஜுனோ "சுட்டுட்டாங்களா? இந்த ரெண்டு நாட்டுக்கும் வேற வேலையே இல்லையா? எப்ப பாத்தாலும் ஒருத்தன ஒருத்தன் கொடாஞ்சிகிட்டே இருக்கானுகளே. சீக்கிரம் மூன்றாவது உலகப்போர் வரப்போகுது ப்ரோ. முக்கியமான ஆசையிருந்தா சொல்லுங்க நிறைவேத்திடலாம்" பயத்துடன் தொடங்குவது போல் தொடங்கி கிண்டலில் முடித்தான்
ஆனால் விஷ்ணுவின் கவனம் அந்த கிண்டலில் லயிக்கவில்லை மாறாக தீவிரமாக உள்ளே ஏதோ ஓடிக்கொண்டிருந்தது. கையிலிருந்த குச்சியை செடிகளிடையே வீசி விட்டு வேகமாக வீட்டினுள் நுழைந்தவன் டிவியை ஒரு புறமும் கம்ப்யூட்டரை ஒரு புறமும் இயக்கினான். இரண்டிலும் அன்றைய விமான தாக்குதல் பேசப்பட்டுக்கொண்டிருந்தது.
விஷ்ணுவை தொடர்ந்து உள்ளே வந்த அர்ஜுன் டிவியையும் கம்ப்யூட்டரையும் மாறி மாறி பார்த்தான். ஓர் பெருமூச்சுடன் சமையலறைக்குள் நுழைந்துவிட்டான். இது போல் நடப்பது ஒன்றும் புதிதல்ல. அவ்வப்போது விஷ்ணு இப்படி விசித்திரமாக ஏதாவது செய்து கொண்டிருப்பான் – ஆனால் இப்போது அர்ஜுனிற்கு கோபம் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. சமையல் மேடையில் இருந்த பொருட்கள் அப்படிப்பட்டவை, முருங்கைக்கீரை, கேழ்வரகு மாவு மற்றும் வெங்காயம். அப்படியென்றால் இன்றைக்கு கேழ்விரகு அடை கடவுளே இந்த அநியாயத்தை கேக்க ஆளே இல்லையா? " கடவுளிடம் மட்டுமே அவனால் கேட்க முடிந்தது.
அர்ஜுன் குளித்து விட்டு வரும் வரையிலும் அதே செய்தியைத்தான் விஷ்ணு பார்த்துக் கொண்டிருந்தான். வேறு வேறு நியூஸ் சேனலாக ரிமோட்டின் துணைக்கொண்டு மாற்றிக் கொண்டிருந்தான்.. "ப்ரோ.... .இவனுங்களுக்கு வேற என்ன வேலை ப்ரோ இப்படி அடிச்சிகிட்டாத்தான் மார்கெட், நீ கெத்தா நா கெத்தான்னு போட்டி, சும்மா இல்லாம இப்போ யாரு இவனுங்கள விமானத்தை தகர்க்க சொன்னது? சனியன தூக்கி பனியனுல விட்டு கிட்டு" டிவியை பார்த்து அர்ஜுன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அவனது முகத்தில் ஒரு நாளிதழ் வேகமாக வந்துவிழுந்தது.அனிச்சை செயலாக அர்ஜுனின் கைகள் அந்த பேப்பர் கீழே விழுந்துவிடாமல் தடுத்து நிறுத்தியது.
இப்படி தன் முகத்தில் ஆக்ரோஷமாக பேப்பரை தூக்கி எரிந்த விஷ்ணுவை ஒரு வித பயத்துடன் பார்க்கையில், "பேஜ் நம்பர் செவன்டீன்" குரலில் கோபம் சுத்தமாக இல்லை ஆனால் இந்தக் குரல் ஆபத்தானது என்று அர்ஜுனிற்கு தெரியும். 'நல்லா வசமா மாட்டுனோம், மனதினுள் புலம்பியபடி பிரபலமாகாத அந்த நாளிதழை புரட்டினான் அர்ஜுன். தினமும் பேப்பர் படிக்க மூன்று மணி நேரம் ஒதுக்க வேண்டும் என்பது அர்ஜுனுக்கு விதிக்கப்பட்ட விதிகளில் ஒன்று. மூன்று மாதத்திற்கு முன்பு வந்த இந்த பேப்பரை அவன் படிக்கவில்லை. பதினேழாவது பக்கம் படிக்க படிக்க அவளது கண்கள் அகல விரிந்தன. "அடப்பாவிகளா மூனு மாசத்துக்கு முன்னாடி இவங்களோட கப்பலை அவங்க சிறை பிடிச்சிட்டாங்களா? அப்படின்னா, அதற்கான பழிவாங்கும் படலமா இது? மை காட்!" "அப்போ இந்த நீயூஸ் டிவில வரலையே ப்ரோ, ஏன் .... பிரபல நாளிதழ் எதுலயும் கூட வரலையே?
பதிலை எதிர்பார்த்து அவன் விஷ்ணுவை பார்க்க. " இதுதான் உலக அரசியல் , நம்ம எந்த நியூஸ் பாக்கனும், நமக்கு எது தெரிஞ்சா போதும்னு முடிவு பண்றதுக்கு ஒரு பெரிய கும்பலே இருக்கு, அவங்களை மீறி எந்த உண்மையும் நம்மளை வந்தடையறது ரொம்ப கஷ்டம். உன் கையில் இருப்பது தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தும் நாளிதழ் ஆனால் இதனை படிப்பது வெறும் ஐந்து சதவிகித மக்கள்தான் மீதம் தொண்ணுற்றுஞ்சு சதவிகிதம் மக்கள் நம்புவது இதைத்தான் " என்று டிவியை காண்பித்தான். ‘இது உலக மகா தில்லாலங்கடியா இருக்கே? முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கிறது இதுதானா?நல்ல வேளை இந்த டென்ஷன்ல ஏன்டா இந்த பேப்பரை படிக்கலைன்னு கேட்டு கழுத்தை பிடிக்காம விட்டுட்டாரே, தப்பிச்சோம், மனதினுள் நிம்மதி பரவ தன் அறையை நோக்கி நகர்ந்தான்.
"பேப்பர் படிக்கும் மூன்று மணிநேரம் வீண்" என்ற விஷ்ணுவின் ஏளனக்குரலில் கொக்கி போட்டு இழுபட்டவன் போல நின்றான் அர்ஜுன்.
‘இதற்கு என்ன பதில் சொல்வது? சொல்லாமல் போனால்? அய்யோ அது ரொம்ப டேன்ஜர்....என்ன சொல்லி சமாளிக்கறது?, "வ....வ.....வந்து உள்ளுர் செய்தி ஒன்னு விடாம படிச்சிடுவேன் ப்ரோ”
டிவியிலிருந்து கண்களை விலக்கி விஷ்ணு பார்த்த பார்வையில் அர்ஜுனுள் குளிர் பரவியது. தலை கவிழ்ந்து நின்ற அர்ஜுனை பார்த்து என்ன தோன்றியதோ
"இனி கவனம், நமக்கெதற்கு உலக செய்தினு இருக்கக் கூடாது" கண்ட்டிப்புடன் கூறியவன் மீண்டும் தன் கவனத்தை டிவி திரையில் பதித்தான். அங்கிருந்த அர்ஜுன் ஜுட்.....

கருத்துக்களை மறக்காமல் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன்.

அன்புடன்
இந்திரா செல்வம்
 
Messages
77
Reaction score
57
Points
18
வியூகம் - 8
"டிங்ங்......." செல்போனில் வாட்ஸ் அப் மெசேஜ் சத்தம் கேட்டதும் ஒரு ஆங்கில நாவலில் மூழ்கியிருந்த விஷ்ணுவின் கவனம் கலைந்தது. போனை எடுத்து பார்த்தவன் புருவம் சுருக்கினான்.அது ஒரு மீம்ஸ். காமெடி நடிகர் வடிவேலும் ஒரு சின்ன பையனும் அதிலிருந்தனர். "டேய் நாளைக்கு சத்யம் தியேட்டர் போயிடனும் டா" - வடிவேலு “ஏன் தலைவரே?” பையன். "ரொம்ப வெயிலா இருக்குல்ல போய் ஏசில உக்காந்து ஒரு ஐஸ் சாப்பிட்டுட்டு குட்டி தூக்கம் போட்டு வருவோம்" இந்த வாக்கியத்துடன் கீழே முந்தைய நாள் ரிலிசான படத்தின் ஹீரோ அழுவது போல் ஒரு படமும் இருந்தது. சாதாரணமாக பார்த்தால் ஒரு படத்தை கலாய்க்கும் மீம்ஸ் போலத்தான் தெரியும். ஆனால் அதில் புதைந்திருந்த தகவலை கிரகித்தான் விஷ்ணு. இந்த மெசேஜ் வந்தது மதியம் மூன்று மணிக்கு அப்படியானால் மேட்னி ஷோ. நாளை, சத்யம் தியேட்டர்,ஐஸ்-ஐஸ்வர்யா, கீழே போடப்பட்ட ஹீரோவின் படத்திற்கு வருகிறாள்" சுருங்கியிருந்த அவனது புருவம் விரிவடைந்தது. மனதிற்குள் 'தேங்க்யூ பாலு' என்றான். எப்போதும் போல் இந்த மீம்சையும் அவனது காண்டாக்ட்சில் உள்ள சில பேருக்கு அனுப்பி விட்டு.மீண்டும் அவனது புத்தகத்தினுள் மூழ்கினான். அருகில் ஒரு நோட்பேட் மற்றும் பென்.

**************

மத்திய சென்னை-வாகன நெரிசல் அதிகமான அந்த சாலையின் கிளை சாலை, முற்றிலும் முரணாக வாகனங்கள் அற்றதாக இருந்தது. அந்த சாலையின் தொடக்கத்திலேயே போலீஸ் காவலும் ,பெரிய கேட்டும் போடப்பட்டிருந்தது. யாராகயிருந்தாலும் மிகுந்த சோதனைகளும், விசாரிப்புகளும் முடிந்த பிறகே உள்ளே அனுமதிக்கபடுவார்கள்.

இது அந்த கிளை சாலைக்குள் நுழைய மட்டுமே. அதனை கடந்துவந்தால் கிட்டத்தட்ட அந்த தெரு முழுவதற்குமே ஒரே மதில் சுவர் தான் , சுவரின் முடிவில் சாலை முடிகிறது ,இப்புறம் போலவே அப்புறமும் போலீஸ் காவல் இருந்தது. இந்த மாபெரும் சுவரின் நடுவில் நீண்டு அகண்ட நுழைவாயில் இருந்தது.

நவீன உபகரணங்களை உபயோகித்து அங்கேயும் சோதனைகள் நடந்தது. ஆனால் இங்கே சோதிப்பது காவல் துறை அல்ல. உள்ளிருக்கும் மனிதரின் சொந்த பாதுகாப்புப்படை. அந்த நுழைவு வாயில்,ஒரே சமயத்தில் நான்கு கார் உள்ளே செல்லுமளவு அகலமும்,பன்னிரண்டி உயரம் என்று உள்ளே இருக்கும் மனிதரின் செல்வ வளத்தையும், மதிப்பையும், பாதுகாப்பையும், அதே சமயம் அவருக்கு இருக்கும் ஆபத்தையும் தெள்ளத் தெளிவாக விளக்கியது.

சரி எதிரில் ஏதேனும் வீடு இருக்க வேண்டும் தானே.! ஆனால் எதிர்புறமும் மாபெரும் மதில் சுவர் தான் இருந்தது. அதற்குள் இருந்த வீடுகளின் வாயில் புறம் அடுத்த ரோட்டில் இருந்தது. இது ஏதேர்ச்சையாக நடந்ததா அல்லது ஒரு சிலருக்கு பயந்து இப்படி பட்ட கட்டமைப்பு அமைந்ததா என்பது புரியாத புதிர்தான்.

இந்த நுழைவு வாயிலை கடந்து உள்ளே சென்றால் கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் நீண்டிருந்தது காரோடும் சாலை, அதன் இருபுறமும் பசுமையாய் நிறைய மரம் செடிகொடிகள். இடையில் சில செயற்கை நீரூற்றுகளும் இருந்தன. அந்த காரோடுசாலையின் முடிவில் காண்போரை பிரமிக்க வைக்கும் பிரம்மாண்டமான மாளிகை . வெறும் மாளிகை என்று கூடசொல்லிவிட முடியாது. கோடிகோடியாய் கொட்டி விலையுயர்ந்த கண்ணாடிகளால் ஆன மாபெரும் சமஸ்தானம் என்றுதான் சொல்லவேண்டும். அங்கே பல இடங்களில் அடர்நீல சீருடையில் துப்பாக்கியுடன் பாதுகாப்புப்படை வீரர்கள் காணப்பட்டனர். இன்னும் ஒரு முக்கிய தகவல்மிக ரகசியமான தகவல் என்னவென்றால்.

இந்த கட்டிடத்தின் மேல் எந்த விமானமும் செல்லக் கூடாது என்பது எழுதப்படாத சட்டம். வேறு வழியின்றி சில விமானங்கள் பாதை மாற்றப்பட்டு வருமாயின் அதற்கான அதிகாரப்பூர்வமற்ற தகவல் விமான நிலையத்திலிருந்து முன்கூட்டியே இவர்களுக்கு வந்து விடும். இவர்கள் விமானங்களை தீவிரமாக கண்கானிப்பதோ , அல்லது இந்த மாளிகையின் மீது விமானம் பறக்கக் கூடாது என்பதோ சில முக்கிய நபர்களை தவிர வெளியே வேறு யாருக்கும் தெரியாத ரகசியம்.

இத்தனை கெடுபிடிகளுடன் கம்பீரமாக நின்றிருப்பது இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் மிக முக்கியமான இடத்திலிருக்கும் வீரபத்ர வினாயகத்தின் இல்லம் தான். மருந்துவதுறையின் மிக முக்கிய புள்ளி, இவரது பெயரிலும், பினாமி பெயரிலும் பல ஃபார்மசூட்டிகல்ஸ் கம்பனிக்கள் நடத்தப்படுகிறது. அவை இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் பறந்து விரிந்து வேரூன்றி இருக்கின்றன.

மூன்று கட்ட பரிசோதனைக்குப் பிறகு அந்த கண்ணாடி மளிகையினுள் பிரவேசித்த “நிவாரணம்” மருத்துவமனை மற்றும் கல்லூரியின் உரிமையாளருக்கு அந்த ஏசி அறையிலும் வியர்த்தது. வீரபத்ரரின் கீழ் வேலை செய்த இந்த நாற்பதாண்டுகாலத்தில் ஒரு நாள் கூட அவரை நேரில் பார்த்ததில்லை. ஆனால் இன்று ஏன் அழைத்திருக்கிறார் என்பது தெரியாமல் ஒரு வித பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தார். அவரை முகத்தில் ஓர் அடி பெளடரும் உதட்டில் ஓர் அடி லிப்ஸ்டிக்கும் அடித்த ஏர் ஹோஸ்ட்ஸ் போன்று உடையில் இருந்த பெண் கண்களை எட்டாத ஓர் தாராள புன்னகையோடு அழைத்துச் சென்று ஓர் பிரம்மாண்ட கான்பரன்ஸ் ஹாலின் வாயிலில் நிருத்தி விட்டு கதவுகளை திறந்து அவரை உள்ளே போகுமாறு பணித்தாள். உள்ளே நுழைந்தவரின் இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது.

அன்புடன்
இந்திரா செல்வம்
 
Messages
77
Reaction score
57
Points
18
வியூகம் - 9


வியர்த்த முன் நெற்றியை கைகுட்டையால் துடைத்தபடி அந்த கான்பிரன்ஸ் ஹாலுக்குள் நுழைந்த சிவபிரகாசம் அதிர்ச்சியில் உறைந்தார். உள்ளே அன்னிய நாட்டவர்கள் நான்கு பேர் அமர்ந்திருக்க அத்தனை பேருடைய கைகளிலும் கருப்பு நிற ஃபைல். இவரை பார்த்ததும் அதிலொருவர் முன்வந்து "ஹாய் மிஸ்டர் சிவபிரகாசம், ஹவ் ஆர் யூ டூயிங். சிவபிரகாசத்தின் கைகளை பிடித்து பலவந்தமாக குலுக்கினார் . “கமான்!" இயல்பாய் அவர் தோள் மீது கை போட்டு மெல்ல நடத்தி வந்து இருக்கையில் அமரவும்வைத்தார். ஏசி அரையிலும் அவரது வெள்ளை சட்டை தொப்பலாக நனைந்திருந்தது. ஆங்கிலம் பேச வராதது மட்டும்தான் அவரது பதட்டத்திற்கு காரணமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும் இதற்கு முன்னும் இதேபோல் ஓர் சம்பவம் நடந்திருக்கிறது ..... அவரது மருத்துவமனையில்.


நிவாரணம் மருத்துவக் கல்லூரியின் ஏகாதிபத்திய உரிமையாளர் சிவப்பிரகாசம் . தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய புள்ளிகளில் இவரும் ஒருவர். சிவப்பிரகாசத்தின் தந்தை தொடங்கியது இந்த நிவாரணம் மருத்துவமனை. அவருக்கு பிறகு நிவாரணம் சிவப்பிரகாசத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. தந்தை வழியில் சிவப்பிரகாசத்தால் மருத்துவமனையை வெற்றிகரமாக நடத்த முடியவில்லை. அருகருகில் நிறைய புதுப்புது மருத்துவமனைகள் வந்து விட அவரும் வேறு வழியின்றி மருத்துவமனையின் பங்குகளை விற்று அதனை நிலை நிருத்த முயன்றார். அதில் ஓரளவு வெற்றியும் கண்டார். அப்படி முதன்முதலில் நிவாரணம் மருத்துவமனையின் நாற்பது சதவிகித பங்குகளை பெற்றுக் கொண்டவர் வீரபத்திரரே. ஆனால் இப்போது இரண்டு வருடத்திற்கு முன் மீண்டும் ஓர் நெருக்கடி வர . மேலும் ஓர் இருவது சதவிகித பங்குகளை வேறு சில நபர்களுக்கு பிரித்து விற்றிருந்தார் சிவப்பிரகாசம்.



இப்போது மீண்டும் கடன் அதிகமாகிக் கொண்டே போனது..அந்தக் கடனை அடைக்க முடியாமல் அவர் தத்தளிக்கும் நிலையில் தான் அவர் இங்கே வரவழைக்கப்பட்டிருக்கிறார்.



ஆனால் இப்போது உலக சந்தையில் அவருக்கு அனுபவம் கிடைத்திருக்கிறது. அந்த அனுபவத்தினால் வந்த பயம் தான் அவரை வியர்க்க விருவிருக்க செய்தது.



பங்குச் சந்தை - ஓர் புதைகுழி, உள்ளே குதிக்கு முன் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க மறந்து விடக்கூடாது. அதிலிருந்து மீண்டு வருபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் உள்ளே மூழ்கி அழிபவர்கள் ஏராளம்.



தூண்டிலில் சிக்கப்போகும் மீனுக்கு தெரிவதெல்லாம் சின்னஞ்சிறிய புழுமட்டுமே! உள்ளேயிருக்கும் உயிர்கொல்லியான ஊசி தெரிவதில்லை.



இந்தப்பங்குச்சந்தை முதலைகள் ,முதலில் சில பங்குகளை விற்று தொழிலை மேம்படுத்துங்கள் என்று தான் வருகிறார்கள். பிறகு மெல்லமெல்ல கடனாளியாக்கி கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படியான பங்குகளை விற்கவைத்து. கடைசியில் அந்த தொழில் அவருடையதே இல்லை என்றாக்கிவிடுகிறார்கள்.



இதில் கொடுமை என்னவென்றால். இந்த அயல்நாட்டு கம்பெனிக்களிடம் நமது பங்குகள் விற்கப்படுவதுதான்.



நம் நாடு நாம் உற்பத்தி செய்யும் பொருள் நம் வளர்ச்சி (be Indian buy Indian ) என்கின்ற விழிப்புணர்வு மக்களிடையேவந்த பிறகுதான் இப்படி ஒரு குறுக்குவழியை அரங்கேற்ற ஆரம்பித்து விட்டார்கள் .

நம்மை வெறும் கண்துடைப்பிற்காக வைத்துக்கொண்டு நம்மையே ஆட்சி செய்வார்கள். நம் உழைப்பையும் பணத்தையும் நம் வளத்தையும் சுரண்டிக்கொண்டு அதனை அவர்களது நாட்டிற்கு எடுத்துச்சென்று விடுவார்கள்.


அவர்கள் கீ கொடுத்தால் வேலை செய்யும் பொம்மை நாம் அவ்வளவே!!!!

இத்தனையும் தெரிந்துவைத்திருந்தும் வேறு வழியின்றி சிவபிரகாசம் அவர்கள் காண்பித்த காகிதத்தில் கையெழுத்திட்டு தானும் ஓர் பொம்மை யாக மாரிப்போனார்.


**********


அதே மாபெரும் கட்டிடத்தினுள் வேறொரு கான்பரன்ஸ் ஹாலில் தமிழ்நாட்டிலுள்ள அத்தனை மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் சி.இ.ஓக்கள் மற்றும் டீன்கள் குழுமியிருந்தார்கள். எல்லோரது இருக்கைக்கு முன்பும் ஓர் புத்தகம் இருந்தது. அதில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு மார்கெட்டில் வந்திருக்கும் அதிநவீன ஸ்கேனரின் செய்முறை விளக்கம் மற்றும் நன்மைகள் தெள்ளத் தெளிவாக எழுதப்பட்டிருந்தது. அதனை சிலர் புரட்டிப்பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிலர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யாரும் யாருடனும் பேசவில்லை. அதற்குக் காரணம் அந்த அறையிலிருக்கும் கேமிராக்களும் வாய்ஸ் ரெக்கார்டர்களுமாகக் கூட இருக்கலாம். கையில் எப்போதுமிருக்கும் ஆறாம் விரலான செல்போனும் அவர்களிடமிருந்து பரிக்கப்பட்டுவிட்டது .


நல்லவேளையாக அவர்களின் பொறுமையை அதிகம் சோதிக்காமல் விலையுயர்ந்த வெளிநாட்டு பூட்சின் சத்தம் எதிரொலிக்க அந்த கான்பரன்ஸ் ஹாலினுள் பிரவேசித்தார் வீரபத்திர விநாயகன். உடனே அங்கிருந்த அனைவரின் கால்களுக்கு் கீழ் ஸ்பிரிங் புதைந்திருந்ததோ என்று சந்தேகம் எழும்பும்விதமாக அத்தனை பேரும் விருட்டென விரைப்புடன் எழுந்துநின்றனர்.


கஞ்சியிட்டு விரைத்திருந்த சட்டை சரசரக்க .நேர் கொண்ட பார்வையுடன். தன் நீளமான கால்களை எட்டிப் போட்டு நடந்தவரின் பார்வை அங்கே நின்றவர்களிடம் பட்டும் படாமலும் பட்டுத் திரும்பியது. லேசான தலையசைப்பிலேயே எல்லோரையும் கடந்து முன்னால் வந்து தனக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டார்.


அவரை தொடர்ந்து எல்லோரும் அமர்ந்து விட ஒருவர் மட்டும் முன்வந்து அவர்களின் புதிய தொழில் நுட்ப உபகரணத்தை பற்றிய விளக்க உரையை தக்க புகைப்படங்களுடன் தெளிவாக விளக்கினார். அவர் முடித்துக்கொண்டு அமரவும்.வீரபத்திரரின் பின்னால் நின்றுகொண்டிருந்த குரு முன் வந்து "நாளை உங்கள் மருத்துவமனைக்கு உபகரணங்கள் வந்து விடும் அதற்கான ஒப்புதல் படிவம் உங்கள் முன் இருக்கிறது கை எழுத்திட்டுவிடுங்கள்” என்றார்....


எல்லோரும் ஒரு வித அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். ஆனால் யாரும் எதுவும் பேசவில்லை. கையில் பேனாவை வைத்துக்கொண்டு கையெழுத்தை மறந்தவர்களாய் விழித்துக்கொண்டிருக்க. இது அத்தனையும் கவனித்துக்கொண்டிருந்த வீரபத்திரரின் கண்ணசைவில் , " ஐயாவுக்கு நல்ல நேரத்தில் நம்பிக்கையுண்டு அதனால் நல்ல நேரம் முடிவதற்குள் சீக்கிரம் கையெழுத்து போடுங்க." என்றான் குரு "எங்களுக்கெல்லாம் நல்ல நேரம் முடியப்போகிறது தான்" என்று அங்கிருந்து ஒவ்வொருவரின் அவலக்குரலும் கடவுளுக்கு கேட்டிருக்குமோ என்னவோ வீரபத்திரனுக்கு தெளிவாக கேட்டது. ஓர் பெருமூச்சுடன் அவர் மணிக்கட்டை திருப்பிப்பார்க்க , ஏதோ பச்சை சிக்னலை பார்த்ததும் அவசரமாய் கியரை அழுத்தும் கால்களை போல,அத்தனைபேரும் கையெழுத்திட பேனாவை பேப்பரில் வைத்துவிட்டார்கள் . ஒரே ஒருவனை தவிர விஜயன் - டீன் ஆப் விவேக் குரூப் ஆப் ஹாஸ்பிடல். மேஜையில் வைக்கப்பட்டிருந்த கை எழுத்திடவேண்டிய காகிதத்தின் மேல் தன் உள்ளங்கையால் ஓங்கியடித்து "ஐ டோண்ட் வான்ட் டு டூ திஸ் " ஆவேசத்துடன் எழுந்து நின்றான்.


“இப்போ இந்த ஸ்கேனர்கான அவசியமென்ன?" கோபத்துடனே வெளிவந்தன வார்த்தைகள்.

"அக்யூரசி, துள்ளியம் “ ஒற்றை வார்த்தையில் முடித்த குரு வின் பார்வையில் எள்ளல் இருந்தது.


சிரு சருக்கல்தான் ,இருப்பினும் அதனை பின்தள்ளி

“ஒ.கே. அது ஏன் எல்லா ஹாஸ்பிடல்லயும் இருக்கனும்.? இஷ்டப்படறவங்க வாங்கிக்கட்டும் மத்தவங்க எல்லோரும் பேஷண்ட்சை அவங்ககிட்ட அனுப்புறோம் “ கையெழுத்திட முடியாது என்பதை சொல்லாமல் சொன்னான்.


"உங்க மார்க்கெட் போயிடும் அஜய், இது இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் உலகம் அங்க இங்கன்னு அலைகழிக்க வைக்ககூடாது" பொறுமையாகவே விளக்கினார் அவர்.


"ஐ டோன்ட் வாண்ட் சச் எ மார்கெட் , அண்ட் ஆல்சோ நம்ம ஊர்ல நோய்களுக்கும் பஞ்சமில்லையே,இதுக்கு முன்னாடி இன்ஸ்டால் பண்ண மெஷினரீஸ் லோன் இன்னும் நிலுவைலதான் இருக்கு. இப்போ இந்த ஸ்கேனரின் அவசியமென்ன? எல்லா பிரச்சனைகளையும் ஒரே நேரத்தில் கண்டுபிடிக்கலாம்தான். பட் அத்தியாவசியமில்லை. "வீரபத்திர.ரின் கண்களை பார்த்து பேசியவன்.

அங்கிருந்தவர்களை பார்வையால் ஓர் முறை அலசி ""இவருக்கு ஏன் பயப்படறீங்க'வீ ஆர் டாக்டர்ஸ் !! அண்ட் அல்டிமேட்லி வீஆர் காட்ஸ்" கொக்கரிப்புடன் அவன் முடிப்பதற்குள் டங்ங்......என்ற சத்தத்துடன் ஆக்ரோஷமாக எழுந்துநின்றார் வீரபத்திரர். அவர் அமர்ந்திருந்த இருக்கை அவருக்கு பின்னால் உருண்டு கொண்டிருந்தது. "வாட் டிட்யூசே? (நீ என்ன சொன்ன?) கடவுளா? ஓங்கி மேஜையை ஓர் அடி அடித்தவர் "அது என் கட்டுப்பாட்டில் இருக்கும்வரைதான், என்னை எதிர்த்தா?" கையை சொடக்கிட்டு வாயால் உப்ப்......என்று ஊதினார். பின் விரிவுரையாளரிடம் திரும்பி "இன்னும் டென்மினிட்ஸ் தான் டைம். ஆல்பேப்பர்ஸ் இன்மை டேபிள் "முடித்து விட்டு வெளியேறியவரின் குரோதப் பார்வை விஜயனை தழுவி பின் கதவின் வாயிலில் துப்பாக்கியுடன் நின்றவனிடம் சில நொடி நிலைத்து மீண்டது.

காலை பேப்பரை புரட்டிக்கொண்டிருந்த விஷ்ணுவின் புருவம் மேலேரியது" பிரபல விவேக்ஸ் குருப்ஆப் ஹாஸ்பிடல் சின் சிஇவோ விஜயன் கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை. கடன் அதிகமானதால் மன உளைச்சலினால் தற்கொலை செய்திருக்கலாம் என்று வேண்டப்பட்ட வட்டாரம் தெரிவிக்க போலீஸ் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். "ப்...ச்... லெட் ஹிஸ்சோல் ரெஸ்ட் இன் பீஸ்" உள்ளுக்குள் வேண்டிக்கொண்டவன் தன் நோட்பேட் எடுத்தான். முன்னால் சில பக்கங்களை புரட்டினான்.அதில் அஜய் என்று ஏற்கனவே எழுதப்பட்டிருந்தது அதற்கு நேரே அவன் இறந்த தேதியை குறித்துக்கொண்டான் விஷ்ணு
 

New Threads

Top Bottom