Copy right act 1957( பதிப்புரிமை சட்டம்)
பழைய காலங்களில் கலைஞர்களும், இசைவாணர்களும், ஆசிரியர்களும் தங்களது படைப்புகளை புகழுக்காகவும் மற்றவர்கள் தங்களை ஏற்றுக் கொள்வதற்காக உருவாக்கினர், படைப்புகளை தங்களது வாழ்க்கைத் தொழில் பிழைப்பிற்காக படைக்கவில்லை, அப்பொழுது பதிப்புரிமை என்ற வினா எழவில்லை, அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே பதிப்புரிமையின் முக்கியத்துவம் உணரப்பட்டது நூல்களில் மறு தயாரிப்புகளுக்கு பெருமளவில் இது வழிவகை செய்தது.
இந்திய பதிப்புரிமை குறித்து முதலாவது செய் சட்டம்(statutory law) 1847 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்டது.
பதிப்புரிமை அறிவுசார் சொத்துரிமையின் ஒரு வகையாகும், பதிப்புரிமை ஆனது மனித திறமை மற்றும் உழைப்பு அல்லது மனித மூளையின் விளைபொருள், ஆதலால் சட்டத்தினால் நுண் பொருளியல் ஆக (in corporal movable property) அசைவில் சொத்தாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் படி பதிப்புரிமை என்பது இலக்கிய, இசை அல்லது கலைத்திறன் படைப்பு பொருட்களை, மீண்டும் தயாரிக்க, வெளியிட மற்றும் விற்க ஒரு தனிப்பட்ட உரிமையாகும் என வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் பதிப்புரிமை என்பது ஆசிரியர் அல்லது இசையமைப்பாளர் போன்றவர்கள் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு தங்களது மூலப் படைப்பு நகல்களை அச்சிட, வெளியிட மற்றும் விற்க சட்டத்தினால் கிடைக்கும் ஒரு தனிப்பட்ட உரிமை எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது.
பதிப்புரிமையின் உடைமையாளர் நகல் எடுத்தல், பொதுமக்களுக்கு வழங்குதல், நிகழ்ச்சி நடத்துதல் நாடகம் ஆக்குதல், பொதுமக்களுக்கு காட்டுதல் மற்றும் படைப்பினை ஒளிபரப்புகள் ஆகியவற்றை செய்ய என அவருக்கு பல்நோக்கு உரிமைகள் உண்டு.
பதிப்புரிமையின் சிறப்பம்சம் யாதெனில் ஆசிரியர் தான் பொருள் குறித்து குறிப்பிட்ட சில செயல்களைச் செய்யவும் அல்லது ஒரு குறிப்பிட்ட நபருக்கு அதிகாரமளித்தல் ஆகும். அதாவது அவரது படைப்பினை உரிமை மாற்றம், மறு பதிப்பு, மறு வெளியீடு, திருத்தம் செய்தல் முதலிய செயல்களுக்கும் மற்றவருக்கு அதிகாரமளித்தல் இதில் அடங்கும்,
ஆசிரியரின் அனுமதியின்றி மேற்கூறிய செயல்களில் செயல்களை யாராவது ஒரு நபர் செய்திருந்தால் அவர் உரிமை மீறல் குற்றத்தை செய்தவர் ஆகிறார்.
பதிப்புரிமை என்பது ஒரு மதிப்புள்ள சொத்தாகும் இதனை பல்வேறு வகையில் பயன்படுத்தலாம் இதை முழுவதுமாக அல்லது பகுதியாக மாற்றம் (assign)செய்யலாம், இந்தப் உரிமை குறிப்பிட்ட கால எல்லை அளவிற்கு மட்டும் இருக்கலாம்.
பிரிவு 1:-
1957 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் நோக்கமானது மூலப் படைப்புக்களை உருவாக்க கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் மென்பொருள் செயல் முறையாளர்கள் போன்றவர்களை ஊக்குவிப்பதும் தூண்டுவது மற்றும் செயல்படுத்துவதும் ஆகும்.
பிரிவு 2 :
ஆசிரியர் என்ற சொல்லின் விளக்கம்:
1.இலக்கிய அல்லது நாடக படைப்புகளை உருவாக்கியவர் படைப்பின் ஆசிரியர்
2.இசை படைப்புகளை உருவாக்குபவர்கள் இசை அமைப்பாளர்
3.. கலைத்திறன் படைப்புகளை உருவாக்குபவர்கள்
4. திரைப்படம் மற்றும் ஒளிப்பதிவு ஒலிப்பதிவு குறித்த படைப்புகளை உருவாக்குபவர் தயாரிப்பாளர்
எழுத்தாளர்களிடம் நாவல் அல்லது நாடகத்திற்கான கரு குறித்து யோசனை தெரிவிப்பவர் அல்லது ஒரு கலைஞரிடம் படத்திற்கான கருப்பொருளை தெரிவிப்பவர்கள் அந்த நாவல் அல்லது புதினத்தின் அல்லது நாடகம் அல்லது படத்திற்கு ஆசிரியராக மாட்டர்கள்.
பிரிவு 3:-
இலக்கிய படைப்பு விளக்கம்:
இலக்கியப் படைப்பு என்பது ஒரு மொழியில் எழுத்து வடிவில் பொருளொன்றை வெளியிடுவது ஆகும், ஆனால் அது ஒருவரின் மூல கருத்தாகவோ அல்லது கற்பனை ஆகத் தான் இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை, பதிப்புரிமை பொருத்தவரை என்ன தேவை என்றால் ஒருவரது படைப்பானது மற்றவரிடம் இருந்து பெறப்பட்டதாக இருக்கக்கூடாது, அது அதன் ஆசிரியரிடம் இருந்து தோன்றியதாக இருக்க வேண்டும் என்பதுதான். இலக்கியப் படைப்பு என்பது ஆசிரியர் ஒருவர் தனது படைப்பியல் திறமை மற்றும் உழைப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துவதன் விளைவு ஆகும்.
வெளியிடுதல்(பப்ளிகேஷன்)விளக்கம்:
வெளியிடுதல் என்பதன் பொருள் பற்றி பிரிவு 3 விளக்குகிறது ,வெளியிடுதல் அல்லது பப்ளிகேஷன் செய்தல் என்பது ஒரு நாவல் அல்லது புதினத்தின் படைப்புகளை அல்லது நகல்களை பொதுமக்களுக்கு கிடைக்கும்படி செய்தல் அல்லது பொதுமக்களுக்கு தெரியும்படி செய்தலாகும்.
பதிப்புரிமையின் கருப்பொருள் (subject matter of copyright)பிரிவு 13:
1. ஒரு பதிப்புரிமையின் கருப்பொருள் என்பது
அதனை உருவாக்கிய ஆசிரியரிடம் இருந்து தோன்றியதாக இருத்தல் வேண்டும்,
குடியுரிமை:
பதிப்புரிமை பெறுவதற்கான தகுதியை குறித்து பிரிவு 13 (2)கூறுகிறது.
1. ஒரு படைப்பானது முதன் முதலில் இந்தியாவில் வெளியிடப்பட்டு இருந்தால் அதன் ஆசிரியர் எந்த நாட்டவர் ஆக இருந்தாலும் அதற்கு பதிப்புரிமை உண்டு ஆனால் முதல் முதலில் இந்தியாவிற்கு வெளியே அச்சிடப்பட்டு இருந்தால் அதன் ஆசிரியர் இந்திய குடிமகனாக இருந்தால் மட்டுமே அதற்கு பதிப்புரிமை பெற முடியும்,
இந்தியாவிற்கு வெளியே வெளிநாட்டு ஆசிரியர் படைப்பு வெளியிட்டிருந்தால் யுனிவர்சல் பதிப்புரிமை உடன்படிக்கையின் வாயிலாக பதிப்புரிமையை பெறலாம்
இந்திய பதிப்புரிமைச் சட்டமானது படைப்பு ஒன்று பாதுகாப்பு பெற அது கட்டயமாக பதிவு செய்ய வேண்டும் என கூறவில்லை இது ஒரு விருப்ப உரிமை மட்டுமே.
பிரிவு 14 பதிப்புரிமை என்ற சொல்லின் வரையறை:
பதிப்புரிமை என்பது ஒரு எதிர்மறை உரிமையாகும் . அது ஆசிரியரின் ஒப்புதலின்றி அவரது படைப்பை இன்னொருவர் சுரண்டுவதை தடுக்க அவருக்கு உரிமை அளிக்கிறது, இலக்கிய படைப்புகளின் படைப்பாளர்கள் சில செயல்களை செய்வதற்கும் அவர்களின் படைப்பு முயற்சிகளை மற்றவர்கள் நியாயமற்ற முறையில் ஆதாயம் தேடிக் கொள்வதை தடுப்பதற்காகவும் உள்ளது.
பதிப்புரிமை பெற்ற ஆசிரியரின் உரிமைகள் :
1. தங்களது படைப்புகளை மீண்டும் வெளியிட
2.அதன் நகல்களை வழங்க அல்லது திருத்தம் செய்ய
3. பொது இடத்தில் நிகழ்ச்சியாக நடத்த,திரைப்படமாக எடுக்க,மொழிபெயர்க்க, ஒளிப்பதிவு அல்லது ஒலிப்பதிவு செய்ய,
4.பதிப்புரிமையின் ஆசிரியர் தமக்குள்ள படைப்புகளில் தமக்கு ஆதாயம் நல்கும் எவ்வகையிலும் பயன்படுத்த உரிமை உண்டு, அதனால் பொருளாதார அனுகூலமும் பெறலாம், அதாவது தமக்குள்ள முழுமையை மற்றவருக்கு மறுபயன் பெற்று மாற்றக்கம் செய்யலாம்.இதனால் அவருக்கு படைப்பின் முழு பயனை பெற உரிமை உண்டு, ஆனால் அதே சமயத்தில் தனது உரிமையை பொது நலத்திற்கு எதிராகவும் பயன்படுத்த கூதாது என்ற கட்டுப்பாடும் உள்ளது.
நூலின் ஆசிரியர் பெற்றுள்ள அறநெறி உரிமை(authors special rights) :
1.ஒரு படைப்பின் ஆசிரியர் அல்லது திரைப்படம் திரைப்படம் ஒன்றின் இயக்குனர் என கண்டறியும் உரிமை(paternity right)
2.ஒரு படைப்பினை அல்லது திரைப்படத்தினை கேவலமாக முறையில் நடத்தப்படுவதை எதிர்க்கும் ஆசிரியர் ஒருவரின் உரிமை அல்லது இயக்குனரின் உரிமை(integrity right)
3.ஒரு படைப்பு பற்றி பொய்யாகக் கூறினால் அதை எதிர்க்கும் உரிமை(general right).
பிரிவு 17:
ஒரு படைப்பின் ஆசிரியரே பதிப்புரிமையின் முதல் உடமை உரிமையாளர் ( the author of a work shall be the first owner of the copyright therein)ஆவார். எனவே ஒரு பதிப்புரிமைகான உடைமை உரிமையானது கீழ்க்காணும் சூழ்நிலைகளையும் காரணிகளையும் பொருத்தது.
ஓரு பதிப்புரிமைக்கான உடைமையானது பல்வேறு காரணிகள் அல்லது சூழ்நிலைகளின் அடிப்படையில் எழுவது ஆகும்,
1. அதை படைப்பின் ஆசிரியர் தனிப்பட்ட முறையில் படைத்துள்ளாரா?
2. படைப்பிற்கான மறுபயன் பெறப்பட்டுள்ளதா?
3. படைப்பானது அரசுக்காக ஆக்கப்பட்டதா?
4. படைப்பானது அதே பொழுது நிறுவனத்தின் கட்டளை அல்லது கட்டுப்பாட்டின் அடிப்படையில் ஆக்கப்பட்டுள்ளதா ?
5. படைப்பானது பணிக்கான ஒப்பந்தம் (contract for service) அல்லது தொழில் பயிற்சியின்(apprenticement) கீழ் ஆக்ககப்பட்டதா?
பதிப்புரிமை ஒரு சொத்துரிமை ஆகும், அதன் உரிமையாளர் அதனை தன் விருப்பம் போல கையால உரிமை உண்டு, தனது உரிமையை அவர் உரிமை மாற்றம் செய்யலாம் அல்லது அதனை மறுபதிப்பு செய்ய உரிமம் வழங்கலாம்.
பிரிவு 18 (a)
மாற்றக்கம் என்பதின் பொருள்(transmission of copyright):
தனது பதிப்புரிமை களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பொதுவாக அல்லது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பதிப்புரிமை முழு கால அளவிற்கு அல்லது பகுதி அளவிற்கு மாற்றம் செய்யலாம்.
மாற்றக்கம் செய்யப்படும் முறைகள் :
பிரிவு 19:
1. மாற்றக்கம் எழுதப்பட்டிருக்க வேண்டும், அதில் மாற்றம் செய்பவரோ அல்லது அவரது அதிகாரம் பெற்ற முகவரோ கையெழுத்திட்டு இருக்க வேண்டும்.
2. படைப்பு எது என்று அதில் குறிப்பிட வேண்டும், மாற்றக்கம் செய்யப்பட்ட உரிமைகள் அதற்கான கால அளவுகள் மற்றும் மாற்றக்கதின் நிலப்பகுதி(territorial extent) அளவு ஆகியவை குறிப்பிட வேண்டும்.
3. உரிமை ஊதியத் தொகை(royality value) குறிப்பிடவேண்டும்.
மாற்றக்கம் பெற்றவர், மாற்றக்கம் பெற்ற நாளில் இருந்து ஓராண்டு காலத்திற்குள் தனக்கு அளிக்கப்பட்ட உரிமையை செலுத்தவேண்டும் என எதிர் பார்க்கப்படுகிறார், அவ்வாறு இல்லையெனில் அந்த கால வரையறை முடிவுற்ற பின்னர் உரிமை மாற்றம் முடிவுக்கு வந்துவிடும் . மாற்றக்கம் கால அளவு(duration) எதுவும் குறிப்பிடப்படவில்லை எனில் மாற்றக்கம் 5 ஆண்டுகளுக்கு உரியது.
பதிப்புரிமை மாற்றக்கமானது உரிமை மாற்றம் செய்பவரால் எழுதப்பட்ட வடிவில் இருக்க வேண்டும், அவ்வாறு எழுதப்பட்ட உடன் உரிமை மாற்றம் பெற்றவர், உரிமை மாற்றம் செய்தவரின் அனைத்து உரிமைகளையும் பெறுவார், எனினும் பதிப்புரிமை தொடர்பு பத்தியமாக(actionable claim) இருத்தல் வேண்டும், வாய்மொழியான மாற்றம் அனுமதிக்க தக்கதல்ல.
ஸ்ரீமகள் அண்ட் கோ எதிர் துவாரகா பிரசாத் எனும் வழக்கில், பதிப்புரிமைகான மாற்றக்கம் ஆவணம் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டியதில்லை என குறிப்பிட்டுள்ளது, மாற்றக்கம் பெற்றவர் மூன்றாமவர் வெளியிட அதிகாரம் அளிக்கலாம்.
பழைய காலங்களில் கலைஞர்களும், இசைவாணர்களும், ஆசிரியர்களும் தங்களது படைப்புகளை புகழுக்காகவும் மற்றவர்கள் தங்களை ஏற்றுக் கொள்வதற்காக உருவாக்கினர், படைப்புகளை தங்களது வாழ்க்கைத் தொழில் பிழைப்பிற்காக படைக்கவில்லை, அப்பொழுது பதிப்புரிமை என்ற வினா எழவில்லை, அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே பதிப்புரிமையின் முக்கியத்துவம் உணரப்பட்டது நூல்களில் மறு தயாரிப்புகளுக்கு பெருமளவில் இது வழிவகை செய்தது.
இந்திய பதிப்புரிமை குறித்து முதலாவது செய் சட்டம்(statutory law) 1847 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்டது.
பதிப்புரிமை அறிவுசார் சொத்துரிமையின் ஒரு வகையாகும், பதிப்புரிமை ஆனது மனித திறமை மற்றும் உழைப்பு அல்லது மனித மூளையின் விளைபொருள், ஆதலால் சட்டத்தினால் நுண் பொருளியல் ஆக (in corporal movable property) அசைவில் சொத்தாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் படி பதிப்புரிமை என்பது இலக்கிய, இசை அல்லது கலைத்திறன் படைப்பு பொருட்களை, மீண்டும் தயாரிக்க, வெளியிட மற்றும் விற்க ஒரு தனிப்பட்ட உரிமையாகும் என வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும் பதிப்புரிமை என்பது ஆசிரியர் அல்லது இசையமைப்பாளர் போன்றவர்கள் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு தங்களது மூலப் படைப்பு நகல்களை அச்சிட, வெளியிட மற்றும் விற்க சட்டத்தினால் கிடைக்கும் ஒரு தனிப்பட்ட உரிமை எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது.
பதிப்புரிமையின் உடைமையாளர் நகல் எடுத்தல், பொதுமக்களுக்கு வழங்குதல், நிகழ்ச்சி நடத்துதல் நாடகம் ஆக்குதல், பொதுமக்களுக்கு காட்டுதல் மற்றும் படைப்பினை ஒளிபரப்புகள் ஆகியவற்றை செய்ய என அவருக்கு பல்நோக்கு உரிமைகள் உண்டு.
பதிப்புரிமையின் சிறப்பம்சம் யாதெனில் ஆசிரியர் தான் பொருள் குறித்து குறிப்பிட்ட சில செயல்களைச் செய்யவும் அல்லது ஒரு குறிப்பிட்ட நபருக்கு அதிகாரமளித்தல் ஆகும். அதாவது அவரது படைப்பினை உரிமை மாற்றம், மறு பதிப்பு, மறு வெளியீடு, திருத்தம் செய்தல் முதலிய செயல்களுக்கும் மற்றவருக்கு அதிகாரமளித்தல் இதில் அடங்கும்,
ஆசிரியரின் அனுமதியின்றி மேற்கூறிய செயல்களில் செயல்களை யாராவது ஒரு நபர் செய்திருந்தால் அவர் உரிமை மீறல் குற்றத்தை செய்தவர் ஆகிறார்.
பதிப்புரிமை என்பது ஒரு மதிப்புள்ள சொத்தாகும் இதனை பல்வேறு வகையில் பயன்படுத்தலாம் இதை முழுவதுமாக அல்லது பகுதியாக மாற்றம் (assign)செய்யலாம், இந்தப் உரிமை குறிப்பிட்ட கால எல்லை அளவிற்கு மட்டும் இருக்கலாம்.
பிரிவு 1:-
1957 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் நோக்கமானது மூலப் படைப்புக்களை உருவாக்க கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் மென்பொருள் செயல் முறையாளர்கள் போன்றவர்களை ஊக்குவிப்பதும் தூண்டுவது மற்றும் செயல்படுத்துவதும் ஆகும்.
பிரிவு 2 :
ஆசிரியர் என்ற சொல்லின் விளக்கம்:
1.இலக்கிய அல்லது நாடக படைப்புகளை உருவாக்கியவர் படைப்பின் ஆசிரியர்
2.இசை படைப்புகளை உருவாக்குபவர்கள் இசை அமைப்பாளர்
3.. கலைத்திறன் படைப்புகளை உருவாக்குபவர்கள்
4. திரைப்படம் மற்றும் ஒளிப்பதிவு ஒலிப்பதிவு குறித்த படைப்புகளை உருவாக்குபவர் தயாரிப்பாளர்
எழுத்தாளர்களிடம் நாவல் அல்லது நாடகத்திற்கான கரு குறித்து யோசனை தெரிவிப்பவர் அல்லது ஒரு கலைஞரிடம் படத்திற்கான கருப்பொருளை தெரிவிப்பவர்கள் அந்த நாவல் அல்லது புதினத்தின் அல்லது நாடகம் அல்லது படத்திற்கு ஆசிரியராக மாட்டர்கள்.
பிரிவு 3:-
இலக்கிய படைப்பு விளக்கம்:
இலக்கியப் படைப்பு என்பது ஒரு மொழியில் எழுத்து வடிவில் பொருளொன்றை வெளியிடுவது ஆகும், ஆனால் அது ஒருவரின் மூல கருத்தாகவோ அல்லது கற்பனை ஆகத் தான் இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை, பதிப்புரிமை பொருத்தவரை என்ன தேவை என்றால் ஒருவரது படைப்பானது மற்றவரிடம் இருந்து பெறப்பட்டதாக இருக்கக்கூடாது, அது அதன் ஆசிரியரிடம் இருந்து தோன்றியதாக இருக்க வேண்டும் என்பதுதான். இலக்கியப் படைப்பு என்பது ஆசிரியர் ஒருவர் தனது படைப்பியல் திறமை மற்றும் உழைப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துவதன் விளைவு ஆகும்.
வெளியிடுதல்(பப்ளிகேஷன்)விளக்கம்:
வெளியிடுதல் என்பதன் பொருள் பற்றி பிரிவு 3 விளக்குகிறது ,வெளியிடுதல் அல்லது பப்ளிகேஷன் செய்தல் என்பது ஒரு நாவல் அல்லது புதினத்தின் படைப்புகளை அல்லது நகல்களை பொதுமக்களுக்கு கிடைக்கும்படி செய்தல் அல்லது பொதுமக்களுக்கு தெரியும்படி செய்தலாகும்.
பதிப்புரிமையின் கருப்பொருள் (subject matter of copyright)பிரிவு 13:
1. ஒரு பதிப்புரிமையின் கருப்பொருள் என்பது
அதனை உருவாக்கிய ஆசிரியரிடம் இருந்து தோன்றியதாக இருத்தல் வேண்டும்,
குடியுரிமை:
பதிப்புரிமை பெறுவதற்கான தகுதியை குறித்து பிரிவு 13 (2)கூறுகிறது.
1. ஒரு படைப்பானது முதன் முதலில் இந்தியாவில் வெளியிடப்பட்டு இருந்தால் அதன் ஆசிரியர் எந்த நாட்டவர் ஆக இருந்தாலும் அதற்கு பதிப்புரிமை உண்டு ஆனால் முதல் முதலில் இந்தியாவிற்கு வெளியே அச்சிடப்பட்டு இருந்தால் அதன் ஆசிரியர் இந்திய குடிமகனாக இருந்தால் மட்டுமே அதற்கு பதிப்புரிமை பெற முடியும்,
இந்தியாவிற்கு வெளியே வெளிநாட்டு ஆசிரியர் படைப்பு வெளியிட்டிருந்தால் யுனிவர்சல் பதிப்புரிமை உடன்படிக்கையின் வாயிலாக பதிப்புரிமையை பெறலாம்
இந்திய பதிப்புரிமைச் சட்டமானது படைப்பு ஒன்று பாதுகாப்பு பெற அது கட்டயமாக பதிவு செய்ய வேண்டும் என கூறவில்லை இது ஒரு விருப்ப உரிமை மட்டுமே.
பிரிவு 14 பதிப்புரிமை என்ற சொல்லின் வரையறை:
பதிப்புரிமை என்பது ஒரு எதிர்மறை உரிமையாகும் . அது ஆசிரியரின் ஒப்புதலின்றி அவரது படைப்பை இன்னொருவர் சுரண்டுவதை தடுக்க அவருக்கு உரிமை அளிக்கிறது, இலக்கிய படைப்புகளின் படைப்பாளர்கள் சில செயல்களை செய்வதற்கும் அவர்களின் படைப்பு முயற்சிகளை மற்றவர்கள் நியாயமற்ற முறையில் ஆதாயம் தேடிக் கொள்வதை தடுப்பதற்காகவும் உள்ளது.
பதிப்புரிமை பெற்ற ஆசிரியரின் உரிமைகள் :
1. தங்களது படைப்புகளை மீண்டும் வெளியிட
2.அதன் நகல்களை வழங்க அல்லது திருத்தம் செய்ய
3. பொது இடத்தில் நிகழ்ச்சியாக நடத்த,திரைப்படமாக எடுக்க,மொழிபெயர்க்க, ஒளிப்பதிவு அல்லது ஒலிப்பதிவு செய்ய,
4.பதிப்புரிமையின் ஆசிரியர் தமக்குள்ள படைப்புகளில் தமக்கு ஆதாயம் நல்கும் எவ்வகையிலும் பயன்படுத்த உரிமை உண்டு, அதனால் பொருளாதார அனுகூலமும் பெறலாம், அதாவது தமக்குள்ள முழுமையை மற்றவருக்கு மறுபயன் பெற்று மாற்றக்கம் செய்யலாம்.இதனால் அவருக்கு படைப்பின் முழு பயனை பெற உரிமை உண்டு, ஆனால் அதே சமயத்தில் தனது உரிமையை பொது நலத்திற்கு எதிராகவும் பயன்படுத்த கூதாது என்ற கட்டுப்பாடும் உள்ளது.
நூலின் ஆசிரியர் பெற்றுள்ள அறநெறி உரிமை(authors special rights) :
1.ஒரு படைப்பின் ஆசிரியர் அல்லது திரைப்படம் திரைப்படம் ஒன்றின் இயக்குனர் என கண்டறியும் உரிமை(paternity right)
2.ஒரு படைப்பினை அல்லது திரைப்படத்தினை கேவலமாக முறையில் நடத்தப்படுவதை எதிர்க்கும் ஆசிரியர் ஒருவரின் உரிமை அல்லது இயக்குனரின் உரிமை(integrity right)
3.ஒரு படைப்பு பற்றி பொய்யாகக் கூறினால் அதை எதிர்க்கும் உரிமை(general right).
பிரிவு 17:
ஒரு படைப்பின் ஆசிரியரே பதிப்புரிமையின் முதல் உடமை உரிமையாளர் ( the author of a work shall be the first owner of the copyright therein)ஆவார். எனவே ஒரு பதிப்புரிமைகான உடைமை உரிமையானது கீழ்க்காணும் சூழ்நிலைகளையும் காரணிகளையும் பொருத்தது.
ஓரு பதிப்புரிமைக்கான உடைமையானது பல்வேறு காரணிகள் அல்லது சூழ்நிலைகளின் அடிப்படையில் எழுவது ஆகும்,
1. அதை படைப்பின் ஆசிரியர் தனிப்பட்ட முறையில் படைத்துள்ளாரா?
2. படைப்பிற்கான மறுபயன் பெறப்பட்டுள்ளதா?
3. படைப்பானது அரசுக்காக ஆக்கப்பட்டதா?
4. படைப்பானது அதே பொழுது நிறுவனத்தின் கட்டளை அல்லது கட்டுப்பாட்டின் அடிப்படையில் ஆக்கப்பட்டுள்ளதா ?
5. படைப்பானது பணிக்கான ஒப்பந்தம் (contract for service) அல்லது தொழில் பயிற்சியின்(apprenticement) கீழ் ஆக்ககப்பட்டதா?
பதிப்புரிமை ஒரு சொத்துரிமை ஆகும், அதன் உரிமையாளர் அதனை தன் விருப்பம் போல கையால உரிமை உண்டு, தனது உரிமையை அவர் உரிமை மாற்றம் செய்யலாம் அல்லது அதனை மறுபதிப்பு செய்ய உரிமம் வழங்கலாம்.
பிரிவு 18 (a)
மாற்றக்கம் என்பதின் பொருள்(transmission of copyright):
தனது பதிப்புரிமை களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பொதுவாக அல்லது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பதிப்புரிமை முழு கால அளவிற்கு அல்லது பகுதி அளவிற்கு மாற்றம் செய்யலாம்.
மாற்றக்கம் செய்யப்படும் முறைகள் :
பிரிவு 19:
1. மாற்றக்கம் எழுதப்பட்டிருக்க வேண்டும், அதில் மாற்றம் செய்பவரோ அல்லது அவரது அதிகாரம் பெற்ற முகவரோ கையெழுத்திட்டு இருக்க வேண்டும்.
2. படைப்பு எது என்று அதில் குறிப்பிட வேண்டும், மாற்றக்கம் செய்யப்பட்ட உரிமைகள் அதற்கான கால அளவுகள் மற்றும் மாற்றக்கதின் நிலப்பகுதி(territorial extent) அளவு ஆகியவை குறிப்பிட வேண்டும்.
3. உரிமை ஊதியத் தொகை(royality value) குறிப்பிடவேண்டும்.
மாற்றக்கம் பெற்றவர், மாற்றக்கம் பெற்ற நாளில் இருந்து ஓராண்டு காலத்திற்குள் தனக்கு அளிக்கப்பட்ட உரிமையை செலுத்தவேண்டும் என எதிர் பார்க்கப்படுகிறார், அவ்வாறு இல்லையெனில் அந்த கால வரையறை முடிவுற்ற பின்னர் உரிமை மாற்றம் முடிவுக்கு வந்துவிடும் . மாற்றக்கம் கால அளவு(duration) எதுவும் குறிப்பிடப்படவில்லை எனில் மாற்றக்கம் 5 ஆண்டுகளுக்கு உரியது.
பதிப்புரிமை மாற்றக்கமானது உரிமை மாற்றம் செய்பவரால் எழுதப்பட்ட வடிவில் இருக்க வேண்டும், அவ்வாறு எழுதப்பட்ட உடன் உரிமை மாற்றம் பெற்றவர், உரிமை மாற்றம் செய்தவரின் அனைத்து உரிமைகளையும் பெறுவார், எனினும் பதிப்புரிமை தொடர்பு பத்தியமாக(actionable claim) இருத்தல் வேண்டும், வாய்மொழியான மாற்றம் அனுமதிக்க தக்கதல்ல.
ஸ்ரீமகள் அண்ட் கோ எதிர் துவாரகா பிரசாத் எனும் வழக்கில், பதிப்புரிமைகான மாற்றக்கம் ஆவணம் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டியதில்லை என குறிப்பிட்டுள்ளது, மாற்றக்கம் பெற்றவர் மூன்றாமவர் வெளியிட அதிகாரம் அளிக்கலாம்.