NYD-68
ஆமா , காலைல ஏதோ புரியாதுன்னு சொன்னீயே ? அது என்ன? கண்ணை சுருக்கிக் கேட்டான்.
அதுவா, அதெல்லாம் உங்களுக்கு புரியாது.
எனக்கு……….புரியாது ?
ஆமா .,
அப்டி என்ன விஷயம்னுசொல்லு. புரியுதா புரியலையானு பார்ப்போம் !
அதெல்லாம் எங்களை மாதிரி தினம் தினம் பஸ்ஸுல போகறவங்களுக்குத்தான் புரியும். காலைல எழுந்து கிளம்பி ஒன்னு பிரண்டுசுங்களோட சிரிச்சு பேசிட்டு வரணும். இல்லையா, ஒரு ஜென்னலோர சீட்டு புடிச்சு, ஏறி உட்கார்ந்தா வரும் பாருங்க ஒரு தூக்கம். அப்ப்பா அந்த சுகம் சுகமேதான். அவ்ளோ சொகமா இருந்தாலும் நம்ம இடம் வரும்போது, பிரைனு(மூளை) குடுக்கும்பாருங்க ஒரு அலாரம். டபக்குனு முழிப்பும்வரும், அதுக்கப்புறம், மூளை நரம்பெல்லாம் சும்மா தாறுமாறா ஓடும் . அவள் கையை ஆட்டி சொல்லும் விதம் அவனுக்கு சிரிப்பாக இருந்தது.அதெல்லாம் ரசிக்க ஒரு வயசு வேணும் சார்.
அப்போ எனக்கு வயசாயிடுச்சா ? அவன் குரலில் ஏதோ மாற்றம்.
இவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
இல்ல அப்படியில்ல . அவள் பதில் சொல்ல திணறினாள்.
அப்படின்னா இந்த மாதிரி ஒரு வயசானவன நீ கல்யாணம் பண்ணிக்குவியா ?
நீங்கன்னா பண்ணிக்குவேன். அவள் குரலில் பார்வையில் எந்த தயக்கமும் இல்லை .நீங்க இந்த வார்த்தையை சொல்ல மாட்டிங்களான்னு நான் இத்தனை நாளா காத்துக்கிட்டுருக்கேன் தெரியுமா ? நீங்க தான் லேட் .
சாரி சாரி கங்கா . எதுக்கு ?
எல்லாத்துக்குமேதான், லேட்டா சொன்னதுக்கு, லேட்டா புரிஞ்சுக்கிட்டதுக்கு, உன்ன விட்டுட்டு, சுவேதாவை கல்யாணம் பண்ண நினைச்சது எல்லாத்துக்குமேதான்.
பரவால்ல சார். ஆனா நீங்க சுவேதா இல்லன்னா வேற யாரை வேண்ணாலும் கல்யாணம் பண்ணிக்கலாம். நான் யாரு?
கண்களில் குளம் கட்டிய நீரை குனிந்து விரலால் தள்ளினாள் .
புரியுது. நீ ஏன் என்ன விட்டுட்டு சுவேதாவ கல்யாணம் பண்ண நினைச்ச ? அதைத்தானே இப்படி கேட்கற?எனக்கு எப்பையுமே உன்ன ரொம்ப புடிக்கும்.ஆனா எனக்கு இருந்த பெரிய தடை நமக்கான வயசுதான். இன்னமும் எனக்கு அந்த பயம் இருக்கு. சும்மா அதெல்லாம் ஒன்னும் இல்லைனு சொல்லறது மட்டும் இல்ல. எல்லா விதங்களிலேயும் நான் உன்ன திருப்தி படுத்தனும். ஏதாவது ஒரு நாள் ஒரே ஒரு சந்தர்ப்பத்துல கூட நான் உன்ன ஏமாத்தின மாதிரியோ இல்ல நீ ஏமாந்த மாதிரியோ வாழ்க்கைல நமக்கு எண்ணம் வந்துட கூடாது. என்னிக்காவது, ச! இன்னும் கொஞ்சம் நம்மமொட வயசுக்கு ஏத்த ஆளா பார்த்திருக்கலாமோன்னு உனக்கு தோணிட கூடாது. எனக்கு பல தேவைகள் இருக்கும். அதுக்காக உன்ன விட பதிமூணு வயசு பெரிய ஆள நீ தேர்ந்தெடுக்கனுன்னு அவசியமே இல்ல. நீ நல்ல யோசிச்சு உன்னோட முடிவை சொல்லு.
அவன் குரலில் இருந்த தீவிரத்தை அவள் மாற்ற முயன்றாள். அவனுக்கு குற்ற உணர்வும் வந்து விட கூடாது என்றும் நினைத்தாள் . அவளுக்கு சொல்ல பல வார்த்தைகள் இருந்தது. ஆனால் அதை எல்லாம் திருமணத்திற்கு பின்னாளில் சொல்ல மனதினுள் பூட்டி வைத்தாள் . எல்லாவற்றையும் இப்போதே சொல்லி விட்டால், வாழ்க்கையில் ருசி இல்லாமலே போய் விட்டால்? அடுத்தடுத்த சந்தற்பங்களுக்காகவும் வார்த்தைகளை சேமித்தாள் . அவன் மனதை மாற்ற ஏதோ உளறினாள் . ஆனால் அவன் ரசிக்கும்படி உளறினாள் . இறுதியில் அவன்தான் அவளை மூச்சு முட்ட வைத்தான்.
நீங்க என்ன வேண்ணா நெனைச்சுக்கோங்க. இன்னும் கொஞ்சம் பெரிய பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி இருக்கலாமோன்னு உங்கள நான் நினைக்க வைப்பேன். என்ன அப்படி பாக்கறீங்க? தெனம் தெனம், என்ன தூக்கிக்கணும், நிறைய முத்தம் தரணும். நிறைய கொஞ்சனும். நிறைய பொம்மை வாங்கி தரணும். அப்புறம் செயினு, கம்மல் புது துணி வாங்கி தரணும். வெளில கூட்டிட்டு போகணும், இன்னும் நிறைய ஆசை இருக்கு. கல்யாணத்துக்கு அப்புறம் அப்பப்போ சொல்லறேன். கண்களை விரித்து அவள் சொல்லிய விதத்தில் அவன் வேறு ஒரு புது கங்காவை பார்த்தான். அதில் அவனுக்கு, ஏதோ புரிந்தது. தாயும், இல்லாதவள், தந்தையின் அன்பையும் பெரிதாக அனுபவிக்காதவள் தன்னிடம் மட்டுமே அவளால் உரிமையாக கேட்க முடியும். மனதில் சிரித்துக் கொண்டான்.
எது நடக்குமோ நடக்குதோ தெரியாது , ஆனா கொஞ்சற வேலைய ராத்திரில கரெக்ட்டா செய்துடுவேன் , ஹஸ்கி வாயிசில் அவளை மயக்கினான்.
அவளுக்கு மூச்சடைத்தது .......
வீட்டில் நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல், இருவரும் தங்களின் நேரத்தையும், மனதையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். .... அவர்கள் அதே மன நிலைமையுடன் வீட்டுக்கு கிளம்புகிறார்கள். ......
அங்கே வீட்டில்,
சத்யா கோபத்துடன் தனது 2 சக்கர வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள் . எப்போதுமே தன்னிடம் சொல்லி விட்டு குதூகலமாக செல்லும் மகள் இன்று, வெறும் “பை” மாட்டும் சொல்லி விட்டு செல்லுகிறாளே என்ற யோசனையில் ஆழ்ந்தாள் சிமி., தியாகுவுக்கும் அதே யோசனைதான். அதே சமயம் அவர் மருமகனையும் கவனிக்க தவறவில்லை.
மருமகன் தான் மகளை கடிந்து கொண்டான் என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்தது. இருப்பினும் அவர் எதையுமே கண்டுக் கொள்ளவில்லை .
அவள் சென்ற உடனேயே அவனும் தனது துணிகளை எடுத்துக் கொண்டு அடுத்த ஒரு சில நிமிடங்களிலேயே அவர்களிடம் சொல்லி விட்டு, உடனேயே கிளம்பி விட்டான். மனம் முழுவதும் காரணம் இல்லாமலே கோபம் கொப்பளித்தது. அப்போதும் அவனுக்கு அவன் தப்பு தெரியவில்லை. அவள் தன்னை மட்டம் தட்டுவதாகவே எண்ணி மருகினான்.
ஒரே ஒரு நாள் ராத்திரி அவ வீட்டுல தங்கினதுக்கு புத்திய காமிச்சுட்டா இல்ல? நான் என்ன சோத்துக்கு போயி நின்ன மாதிரி, என்ன பாத்து என்ன சொன்னா ? நொண்டின்னு சொல்லறா? இவ யாரு என்ன சொல்ல ? இவளல்லாம் வைக்கற எடத்துல வைக்கணும். அப்போதும் அவள்தான் தனது மனைவி என்பதும் அவளை விருப்பம் இல்லாமலே தான் தான் கட்டாய தாலி கட்டியதும் அவனுக்கு வசதியாக மறந்து விட்டது. எப்படியோ பத்திரமாக வீடு வந்து சேர்ந்தான்.
எப்போது அவன் சத்யாவை வீட்டை விட்டு வெளியில் அனுப்பினானோ அப்போதே ஆச்சி அவனிடம் பேச்சு வார்த்தையை நிறுத்தி விட்டார். என்னன்னா என்ன அவ்வளவுதான்.
கௌசிக்கும் வசந்தியும் கூட அப்படிதான். இதோ இங்கே வந்து ஒருவாரத்திற்கு மேல் ஆகி விட்டது. வெளியில் தன்னை சாதாரணமாக காட்டிக் கொண்டாலும், உள்ளே மனதில் அவன் அன்னை பற்றிய நினைவே வந்து கொண்டிருந்தது. அவனால் வெளிக் காட்டிக் கொள்ள முடியாத இன்னொரு உணர்வு, அன்னை என்னதான் தவறு செய்திருந்தாலும், தந்தை இறந்து விட்டார். அவர் தன்னை பெற்றவராக இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, அவர்தான் தன் தந்தை. வேறு யாரோ ஒருவரை அன்னை காட்டினாலும், தந்தையாக ஏற்றுக் கொள்ள போவதில்லை. அது முடியவும் முடியாதது. மகாதேவனை போல தன் மீது யாராலும் பாசம் கட்ட முடியாது. அவர் உயிருடன் இருந்தபோது அளவுக்கு அதிகமாகவே அவரை துன்பப்படுத்திவிட்டோம். அஹா பத்தி பேசினது ரொம்ப தப்பு. அவங்க பாவம் என்றே மனம் அரற்றியது. அ தையேதான் இப்போது அன்னையினடத்திலும் செய்துக் கொண்டிருக்கிறேன். நான் அம்மா கிட்ட இந்த பேசியிருக்க கூடாது. ஏன் மேலதான் தப்பு என்று மனம் அவனை குற்றம் சாட்டியது.
அவன் தன் அன்னைக்கு, போன் செய்து பார்க்கலாமா என்று யோசித்தான். அவன் யோசித்தால் தடை எது? உடனே அன்னைக்கு அழைத்தான்.
அவன் அன்னை அவனை எப்படி எதிர்கொள்வாள்??
அவனுக்கு அவன் அன்னையை எதிர்கொள்வது சிரமமாகவே இருக்கும் என்று எண்ணினான். ஆனால் திட்டிக் கொண்டிருந்தாலும், திட்டு வாங்குவதற்க்காகவேனும் ஒரு ஜீவன் இருந்தது. மகாதேவனும் இல்லாமல், மகனையும் இழந்தவளிடம் நிறையவே மாற்றங்கள் வந்தது.
அவளின் மாற்றங்கள் அவனுக்கு வாழ்க்கையில் அடுத்தடுத்த முன்னேற்றங்களை தரப் போவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.
அவனும், அவன் அன்னைக்கு தொடர்ந்து முயற்சித்தான் . இரவு உணவை முழுங்கினோம் என்று பெயர் பண்ணிவிட்டு, படுக்குமுன், தனது கைபேசியை பார்த்தவள், மகனிடமிருந்து வந்த போன் கால்களை பார்த்தாள் . மனதில் மகிழ்ச்சி பொங்கினாலும், மனதில் வந்த பயத்தையும் தடுக்க முடியவில்லை .மகன் சொல்லவில்லை என்றாலும், தியாகுவும், சிமியும் அவளுக்கு போன் செய்து, சொல்லி விட்டனர். அதனால் மகன் நன்றாகவே இருப்பான் என்று மனதில் தைரியம் சொல்லிக் கொண்டாள் .
தயக்கத்துடனே, மகனுக்கு டயல் செய்தாள்.
ஹலோ !
எப்போதும், மாதாஜி என்பவன், இன்று ஏனோ அம்மா என்றவுடன், முதன் முதலில் மருத்துவமனையில் அவன் வீறிட்டு அழுதது நினைவு வந்தது.
நல்லாருக்கியாப்பா ?
ம்ம்., ஏதோ. நீங்க ?
இன்னும் உயிரோடுதான் இருக்கேன். எல்லாம் போனதுக்கு அப்புறமும். ஏளன சிரிப்புடன் பதில் வந்தது.
கண்ணீரை புருவ முடிச்சுடன் சேர்த்து துடைத்துக் கொண்டான். சாரிமா, சாரி, உங்கள..... வாயில் வார்த்தை வெளி வரவில்லை. எனக்கும் எதுவும் தெரிய வேணாம். நீங்க நீங்க மட்டும் போதும் . குலுங்கி குலுங்கி அழுதான்.
அழாதடா, நானும் உன்ன ரொம்ப நோகடிச்சுட்டேன். எந்த குழந்தைக்கும் வர கூடாத கஷ்டத்தை ஒனக்கு நான் தந்திட்டேன். இப்பவும் நீ கேட்ட கேள்விக்கு என்கிட்ட பதில் இல்ல கௌசிக். மன்னிப்பு கூட என்ன கேட்க முடியாது. எனக்கு எந்த தகுதியும் இல்ல . கண்ணீரை உறிஞ்சியவள் தெளிவாக பேசினாள் . எனக்கு உன்ன பாக்கணும் கண்ணா .
நாளைக்கே வரேன்மா.நீங்க மாத்திரை போட்டீங்களா ?
இதோ.
அம்மா எதை பத்தியும் நீங்க கவலை படாதீங்க. நான் நாளைக்கே அங்க வரேன்.
கௌசிக், நீ இங்க வர வேணாம். இங்க கொஞ்சம் முக்கியமான வேலைகல்லாம் இருக்கு.நாலஞ்சு நாள் கழிச்சு நானே அங்க வர்றேன்.
ஏம்மா ?
அங்க போனீயே ? என்ன பத்தி ஒனக்கு கொஞ்சமாவது கவலை இருந்ததா ?அண்ணனும் அண்ணியும்தான் போன் பண்ணி உன்ன பத்தி சொன்னாங்க. இல்லாட்டி நீயும் இல்லாம நான் எப்பயோ ஏதாவது மாத்திரையை போட்டுட்டு போய் சேர்ந்திருப்பேன். அவங்கள பார்த்து கொஞ்சம் பேசணும். நன்றி சொல்லணும். இல்லனா நல்லாருக்காது .அவங்களையும் நான் எத்தனையோ பழிச்சு பேசி இருக்கேன். பாவம் எதையுமே அவங்க மனசுல வச்சுக்கலை ...
அம்மா அழாதீங்கம்மா.,
மகனின் கவலையை மற்றும் விதமாக ., மாதாஜி மதராசுல அம்மாவாயிட்டேனாடா ?
மாதாஜி மாதாஜி.....போதுமா ?
போதுண்டா. சாப்பிட்டியா ?
ம்ம்.,
குட் நைட் ... தினம் போன் பண்ணுடா.......
ஒகே டார்லிங் .....
இனிமே என்ன டார்லிங் டார்லிங்ன்னு சொல்லாதடா., ஒனக்கு ஒரு டார்லிங்க தேடற வழிய பாரு.
மாதாஜி...
அவள் வருவாளா.....
அன்னையும் வருவாள் ., அவனின்.......
தேவதை வருவாள் .....................