Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Talk Box - Something To Share

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
662
Reaction score
844
Points
93
வணக்கம்,
கனியமுதே கிண்டிலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி வாசிக்கலாம்.

- நன்றி
நித்யா கார்த்திகன்.

https://www.amazon.in/கனியமுதே-KANI...HIGAN-ebook/dp/B0DK7Y1BYG?ref_=ast_author_mpb
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
438
Reaction score
663
Points
93

உயிர் துடிப்பாய் நீ!
சின்ன முன்னோட்டம்
அரை மணி நேரமாக அவளை நிற்க வைத்துவிட்டு கணினியில் பார்வையை பதித்திருந்த மிகனை மனதிற்குள் வருத்தெடுத்துக் கொண்டிருந்தாள் திகழொளி.

'மூஞ்சியப்பாரு இஞ்சி தின்ன குரங்கு மாதிரியே எப்ப பாரு வச்சுட்டு இருக்கு..அப்படியே சிலுப்பீட்டு இருக்கிற அந்த முடியை பிடித்து இழுத்து நாலு கொட்டு மண்டையில் நறுக்குன்னு வைக்கனும்..'என்று மனதிற்குள் குமுறிக் கொண்டு இருந்தவளின் எண்ண அலைகள் புரிந்தது போல் கணினியில் இருந்த பார்வையை அவள் புறம் திருப்பினான் மிகன்..

திகழொளியோ ,அவன் பார்வையைக் கண்டதும் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டாள்.

அவனோ, "என்னடி இத்தனை நேரம் என்னை தின்னுடற மாதிரி பார்த்தே..இப்ப நான் பார்த்ததும் நல்ல பிள்ளையாட்டா பார்வையை மாத்திட்டே.."

"நான் நார்மலா தான் பார்த்தேன்.."

"நீ நார்மலா பார்த்ததை நானும் பார்த்தேன்.கேமராவில் .." என்று அவன் சொன்னதும் அவளுக்கு பக்குன்னு மனசு பதறியது.

'தான் இப்போது அவனைப் பற்றி நினைத்து மட்டும் தெரிந்தால் அவ்வளவு தான் இன்னைக்கு என்னை பிரியாணி ஆக்கிடுவான்' என்று அவள் மனதிற்குள் எண்ணும் போதே..

நாற்காலியில் இருந்து சட்டென்று எழுந்து அவள் அருகில் வந்தவன், அவளின் முகத்தில் தன் ஒற்றை விரலால் கோடு வரைந்த படியே.."நீ என்ன செய்தாலும், என்ன நினைத்தாலும் உன் முகமே காட்டிக் கொடுத்துவிடும்..இப்ப என்னை மனசுக்குள் திட்டிட்டு தானே இருந்தே.."என்றவனை தன் அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லாமல் சொல்லியது அவள் வதனம்.

அவனோ, அவளின் முகமாறுதலைக் கண்டு தன் வெண் பற்கள் ஒளிர மென் புன்னகை சிந்திய படியே அவளின் இடையில் கை வைத்து தன் புறம் இழுத்து, "மனதில் நினைப்பதை முகத்தில் காட்டாமல் இருக்க முதலில் பழகிக் கொள் .."என்றான் குரலை உயர்த்தாமல் மென்மையாக.

திகழொளியோ, அவனின் நெருக்கத்தில் விதிர்விதித்து போனாள்.அவனின் பார்வையில் தெரிந்த மாற்றமும்,கிறங்கிய குரலும் ,அவனின் தொடுகையும் நேசம் கொண்ட அவள் மனதை அவன் பால் ஈர்த்தது.

கொஞ்சம் முன்பு அவனை மனதிற்குள் கடிந்து கொண்டவள், இப்போது அதை எல்லாம் மறந்து அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ளச் சொன்ன தன் மனதுடனேயே போராடிக் கொண்டிருந்தாள்.

அவனோ, அவளின் அவஸ்தையை ரசித்துக் கொண்டு இருந்தான்.
விரைவில் யூடி உடன் வருகிறேன்..
நன்றி

இனிதா மோகன்
 

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
662
Reaction score
844
Points
93
உயிர் துடிப்பாய் நீ!
சின்ன முன்னோட்டம்
அரை மணி நேரமாக அவளை நிற்க வைத்துவிட்டு கணினியில் பார்வையை பதித்திருந்த மிகனை மனதிற்குள் வருத்தெடுத்துக் கொண்டிருந்தாள் திகழொளி.

.
.
.
அவனோ, அவளின் அவஸ்தையை ரசித்துக் கொண்டு இருந்தான்.
விரைவில் யூடி உடன் வருகிறேன்..
நன்றி

இனிதா மோகன்

Welcome back Initha... Happy to see you here again.
குட்டி முண்ணணோட்டம் தான். ஆனா சூப்பர். :love::love::love:
சீக்கிரம் கதையோடு வாங்க... :):)
 

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
662
Reaction score
844
Points
93
ஹாய்,
Broken links எல்லாம் இப்போ active-வா இருக்கு. யாருக்காவது கதைகளை ஓபன் செய்வதில் பிரச்சனை இருந்தால் கமெண்ட்டில் சொல்லுங்கள். சரி செய்ய உதவியாக இருக்கும்.

நன்றி.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
662
Reaction score
844
Points
93
வணக்கம் மக்களே,
மகளிர் தின வாழ்த்துகள்.
"கர்வம் அழிந்ததடி" (நிழல் நிலவு - 2) சகாப்தம் தளத்தில் பதிவேற்றம் செய்ய துவங்கி இருக்கிறன். விருப்பம் உள்ளவர்கள் வாசித்துப் பாருங்கள்.

மேலும் தளத்தில் இன்னும் இரண்டு கதைகளும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

மேகலா பழனியப்பன் எழுதும் மதுரதுளசி.

இனிதா மோகன் எழுதும் உயிர் துடிப்பாய் நீ!

மூன்று கதைகளுக்குமான இணைப்பு உள்ளது.

கர்வம் அழிந்ததடி அடுத்த அத்தியாயம் அடுத்த வெள்ளிக்கிழமை பதிவிடுவேன்.



நன்றி,
நித்யா
 
Last edited:

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
662
Reaction score
844
Points
93
Test
 

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
662
Reaction score
844
Points
93
இனிதா மோகன் எழுதும் "உயிர் துடிப்பாய் நீ" அத்தியாயம் 22 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.. இணைப்பு கீழே...

நன்றி

 

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
662
Reaction score
844
Points
93
Hello Everyone...
Can I read Ramani Chandran novels here?
Sila RC stories oda summary irukku pa. full story inga irukadhu. You can find other writers' novels here, such as Initha, Megala, Shivani, Indira, and many others. ennoda Novels kooda irukku... try panni parunga...
Thanks
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
438
Reaction score
663
Points
93
Hi friends,
நான் இனிதா மோகன்,
உயிர் துடிப்பாய் நீ! கதை ஆசிரியர்..
இதுவரை நான் 9கதை எழுதி இருக்கேன்..அதில் 5 நாவல்கள் புத்தகமாக வெளிவந்துள்ளது..இப்போது ஆன்லைன்லே
உயிர் துடிப்பாய் நீ! கதையை எழுதிட்டு இருக்கேன்..கதை இன்னும் சில அத்தியாயங்களில் முடிந்து விடும்..முடிந்த பின் படிக்கலாம் என்று நினைப்பவர்கள் படிக்க தொடங்கலாம்...கதையை எத்தனை பேர் படிக்கிறீங்க?
படிக்கிறவங்க கதை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளலாம்..வாசகர்களின் கருத்துக்கள் தான் எழுத்தாளர்களுக்கு மிகப் பெரிய ஊக்கம்..தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்..
தினமும் பேசுவோம்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
 

Latest posts

New Threads

Top Bottom