Barani Usha
Saha Writer
- Messages
- 67
- Reaction score
- 37
- Points
- 18
தேவதை வருகை-29
அந்த நேரத்தில் சிவாவுக்கும் ஆறுதலும் அணைப்பும் தேவை பட்டது. கங்காவிற்கும் தன்னால் எதுவுமே செய்ய முடியவில்லையே என்ற பாரம் சிறிது நீங்கியது.
மேலும் தான் சிவா மனதில் இடம் பிடித்திருப்பதால் தான் தன்னிடம் அவ்வளவு உரிமை எடுத்துக் கொண்டார் என்று அவள் மனம் கோட்டை கட்டியது.
ச ! நான் என்ன அவ்வளவு சுநலமியா? இந்த நேரத்துல போய் இப்படி நினைக்கிறேன். ஏதாவது செய்யணும்.
சத்யா பழையபடி மாறனும். நா உனக்கு ,பொங்க வைக்கறேன் மாடசாமி ., என்று மனம் உருக வேண்டிக் கொண்டாள் .
அன்று முதல் சத்யா அவள் அன்னை தந்தையுடனே படுத்துக்க ஆரம்பித்தாள்.
யாராவது ஒருவர் சத்யாவுடனே இருக்கும்படி பார்த்துக் கொண்டனர். இருப்பினும் சத்யா கண்களில் சோகமும் கண்ணீரும் மாறவில்லை.
மறு நாள் காலை.,
சொன்னபடியே சிவா காலையில் எப்போதும் போல கிளம்பினான். வழி அனுப்ப சத்யா வர வில்லை. அதனால் கிளம்புமுன் சத்யா தலை கோதி நான் போயிட்டு வரேன்,சொல்லி விட்டு கிளம்பினான். இவளால் தாங்கவே முடிய வில்லை. அவன் தோள் சாய்ந்து அண்ணா! என்று கதறினாள்.அவனும் அவளுக்கு தெரியாமல் கண்ணீரை துடைத்துக் கொண்டான்.
சில நிமிடங்களிலேயே தன்னை சமாதானம் செய்து கொண்டவள்., சாமி அறையில் இருந்து விபூதி கொண்டு வந்து அன்னை இடம் நீட்டினாள்.
இந்தங்கம்மா., அண்ணா கிளம்பரச்சே நான் அழ ஆரம்பிச்சுட்டேன். அண்ணா நீ பத்திரமா போயிட்டு வா. என்ன நினைச்சு கவலை படாத.
ஆமாடா கண்ணா., நீ பத்திரமாய் போயிட்டு வா. போய் சேர்ந்ததும் கால் பண்ணு . அனைவரும் வலி அனுப்பி வைத்தனர்.
அடுத்த சிலமணி நேரத்தில் ரிஷியும் ரம்யாவும் வந்து சேர்ந்தனர்.
அப்போதைக்கு மனதை சமாதான படித்திக் கொண்டாலும் சத்யாவின் மன அலறல் அவளை துரத்தியது
அம்மா., நான் உங்க எல்லாருக்கும் ரொம்ப தொந்தரவாயிட்டேன் இல்ல?
என்னடி இது?
அவளை மார்புடன் கட்டிக்க கொண்டு கதறினாள் அன்னை .
அம்மா நீங்கதான் என்னோட அம்மாவா ?
இப்ப என்ன அதப்பத்தி ?
வேற யார் வீட்டிலையோ இருக்கற மாதிரி ,சாப்பாடு தொண்டைல இறங்க மாட்டேங்குது. அவங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் முள்ளா குத்துது. சொல்லுங்க. நீங்க யாரு? நான் யாரு? நமக்கு என்ன சொந்தம்?
இரு சத்யா. ஏன் அவளை துளைச்சு எடுக்கற. நான் சொல்லறேன். உங்க அம்மா அந்த கிராமத்துல வாழ்ந்த மல்லிகா. உங்க அப்பா என்னோட தம்பி. போதுமா?
இது ஒன்னும் வேற யார் வீடோ இல்ல. எப்பவுமே இது உன்னோட வீடுதான். நீ எங்களோட பொண்ணுதான். நீ மட்டும்தான் எங்களோட பொண்ணு.
என்னங்க நீங்க! அவளே நொந்து போயிருக்கா , இப்படி போட்டு ஒடைச்சுடீங்களே?
இல்ல சிவகாமி. எப்ப சொல்லறது எப்ப சொல்லறதுன்னு இதனை நாளா நாம தவிச்சது போதும்.அவளுக்கும் எல்லாம் தெரியணும்.
அனைவருக்கும் முகத்தில் அதிர்ச்சி. வாயடைத்துப் போயினர்.
மல்லிகா வாழ்ந்த கிராமத்திற்கு கிராம சேவைக்கு சென்றவர் தான் மஹாதேவன். மல்லிகாவும் உயிர் தோழிகள். முத்துவின் அன்னைக்கு படிப்பை நிறுத்தி திருமணம் செய்திருந்தாலும்., அவர்களின் நட்பு தொடர்ந்தது.
முத்து வயிற்றில் இருக்கும் போது இந்தாடி., நம்ம தோட்டத்து மாங்கா ., இந்தாடி, புளியங்கா உனக்கு`பிடிக்குமேன்னு கொண்டுவந்தேன். இந்தா ., நான் படிக்கிற டாக்டர் கிட்ட கேட்டு வாங்கி வந்த சத்து மருந்து., இப்படி ஏதாவது கொண்டு வந்து கொடுத்துக் கொண்டே இருந்தாள் . அப்போது தான் முத்துவின் சித்தப்பா இவள் மீது கண் வைத்தது. அண்ணி பிரசவம் முடித்து வந்ததும் அவனுக்கு மீண்டும் காதல் ஆசை நினைவுக்கு வந்தது. அண்ணி பிரசவத்திற்கு சென்றதும் மல்லியை காண ஆவல் இருந்தாலும் வாய்ப்பு கிட்டவில்லை. அதனால் வாய்ப்பு கிட்டியவர்களை அப்போதைக்கு உபயோகப் படுத்திக்க கொண்டான்.
இப்போது மறுபடியும் அவளை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசை வந்தது. முத்துவின் தந்தை எப்போதுமே வாய் பேசியதே இல்லை. அண்ணனுக்கும் சேர்த்து தம்பி ரவுடியாகிப் போனான். தன்னுடைய இந்த கோழைதனத்தினால் எத்தனை பேரின் வாழ்க்கை பாழாய் போகும் என்பதை தெரிந்தும் அவருக்கு வாய் திறக்க தைரியம் வரவில்லை. இன்று முத்து மற்றவர்களை பற்றி கவலை படாதவனாய் உறவுகளை பற்றி தெரியாதவனாய் வளர்ந்ததற்கு இதுவும் முக்கிய காரணம்.
முத்துவின் அன்னை சொன்னபடியே அந்த நாளும் வந்தது. அவர்கள் வீட்டில் இருந்து வந்து பெண் கேட்டனர்.
ஆனால் பாவம்., அது முத்துவின் அன்னைக்கும் தந்தைக்கும் அவர்கள் தெரிய படுத்தவே இல்லை.
மூத்தவன் மீது அலட்சியம். அவன் மனைவி மீது வெறுப்பு. ஒருவேளை முத்து பிறந்ததற்கு இவர்களின் எதிர்பார்ப்புக்கு சீர் செய்திருந்தால் இவளை வைத்தே மல்லியை மடக்கி இருப்பார்கள். அதுதான் இல்லையே.
மூத்த மருமகளை பார்த்து முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டு கிளம்பினார் மாமியார். மனம் சுருக்கென்றது.
மல்லி வீட்டில்,
இல்ல., தப்பா எடுத்துக்காதீங்க. அவ இப்பதான் படிச்சிட்டு இருக்கா . படிப்பு முடியனும். அவளுக்கு நர்ஸாகனும்னு ஆசை. இப்போதைக்கு நாங்க கல்யாணத்த பத்தி யோசிக்கல.
ஆகட்டும். கல்யாணம் முடிஞ்சு படிக்கட்டும். டாக்டரா கூட ஆகட்டும்! யாரு வேண்டான்னு சொன்னது?
அது சரிதாங்க. இருந்தாலும் ரெண்டு பேருக்கும் வயசு வித்தியாசம் ரொம்ப இருக்குதுங்க.
என்னங்க நீங்க. இதெல்லாம் ஒரு விஷயமா? மனசுக்கு புடிச்சா வயசபத்தி என்ன?
இல்லங்க.,...........
இந்த ஊருல என்னோட வசதிக்கு ஏத்த ஆளு நீங்க தான். அதுனாலதான் வேற சாதியா இருந்தாலும் பரவால்லன்னு வந்து இப்பிடி நின்னு பேசறேன். அதுவும் என் பையன் ஆசை பட்டுட்டானேன்னுதான். நீங்க சம்மதிச்சுதான் ஆகணும். இல்லாட்டி விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்.
இல்லங்க., இது சரி பட்டு வராது. மன்னிச்சுடுங்க.
மல்லியின் தந்தை எழுந்து கை எடுத்து கும்பிட்டார். அவர்கள் கிளம்பலாம் என்பதை சூசகமாக தெரிவித்தார்.
அவர்களின் மறுப்பை இவர்கள் அவமானமாகவே நினைத்தனர்.
அவர்களின் அந்த நாள் மனதில் பழியை கிளப்பியது. வெறுப்பு நெருப்பாக மாறியது.
ஆம்., அந்த நெருப்பு மல்லியின் பெற்றோரின் உயிரை பலி வாங்கியது.
அதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தனர்.
அதன்படியே., அந்த ஊர் திருவிழா வந்தது.
மீண்டும் வருவாள் தேவதை...................
BaraniUsha
அந்த நேரத்தில் சிவாவுக்கும் ஆறுதலும் அணைப்பும் தேவை பட்டது. கங்காவிற்கும் தன்னால் எதுவுமே செய்ய முடியவில்லையே என்ற பாரம் சிறிது நீங்கியது.
மேலும் தான் சிவா மனதில் இடம் பிடித்திருப்பதால் தான் தன்னிடம் அவ்வளவு உரிமை எடுத்துக் கொண்டார் என்று அவள் மனம் கோட்டை கட்டியது.
ச ! நான் என்ன அவ்வளவு சுநலமியா? இந்த நேரத்துல போய் இப்படி நினைக்கிறேன். ஏதாவது செய்யணும்.
சத்யா பழையபடி மாறனும். நா உனக்கு ,பொங்க வைக்கறேன் மாடசாமி ., என்று மனம் உருக வேண்டிக் கொண்டாள் .
அன்று முதல் சத்யா அவள் அன்னை தந்தையுடனே படுத்துக்க ஆரம்பித்தாள்.
யாராவது ஒருவர் சத்யாவுடனே இருக்கும்படி பார்த்துக் கொண்டனர். இருப்பினும் சத்யா கண்களில் சோகமும் கண்ணீரும் மாறவில்லை.
மறு நாள் காலை.,
சொன்னபடியே சிவா காலையில் எப்போதும் போல கிளம்பினான். வழி அனுப்ப சத்யா வர வில்லை. அதனால் கிளம்புமுன் சத்யா தலை கோதி நான் போயிட்டு வரேன்,சொல்லி விட்டு கிளம்பினான். இவளால் தாங்கவே முடிய வில்லை. அவன் தோள் சாய்ந்து அண்ணா! என்று கதறினாள்.அவனும் அவளுக்கு தெரியாமல் கண்ணீரை துடைத்துக் கொண்டான்.
சில நிமிடங்களிலேயே தன்னை சமாதானம் செய்து கொண்டவள்., சாமி அறையில் இருந்து விபூதி கொண்டு வந்து அன்னை இடம் நீட்டினாள்.
இந்தங்கம்மா., அண்ணா கிளம்பரச்சே நான் அழ ஆரம்பிச்சுட்டேன். அண்ணா நீ பத்திரமா போயிட்டு வா. என்ன நினைச்சு கவலை படாத.
ஆமாடா கண்ணா., நீ பத்திரமாய் போயிட்டு வா. போய் சேர்ந்ததும் கால் பண்ணு . அனைவரும் வலி அனுப்பி வைத்தனர்.
அடுத்த சிலமணி நேரத்தில் ரிஷியும் ரம்யாவும் வந்து சேர்ந்தனர்.
அப்போதைக்கு மனதை சமாதான படித்திக் கொண்டாலும் சத்யாவின் மன அலறல் அவளை துரத்தியது
அம்மா., நான் உங்க எல்லாருக்கும் ரொம்ப தொந்தரவாயிட்டேன் இல்ல?
என்னடி இது?
அவளை மார்புடன் கட்டிக்க கொண்டு கதறினாள் அன்னை .
அம்மா நீங்கதான் என்னோட அம்மாவா ?
இப்ப என்ன அதப்பத்தி ?
வேற யார் வீட்டிலையோ இருக்கற மாதிரி ,சாப்பாடு தொண்டைல இறங்க மாட்டேங்குது. அவங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் முள்ளா குத்துது. சொல்லுங்க. நீங்க யாரு? நான் யாரு? நமக்கு என்ன சொந்தம்?
இரு சத்யா. ஏன் அவளை துளைச்சு எடுக்கற. நான் சொல்லறேன். உங்க அம்மா அந்த கிராமத்துல வாழ்ந்த மல்லிகா. உங்க அப்பா என்னோட தம்பி. போதுமா?
இது ஒன்னும் வேற யார் வீடோ இல்ல. எப்பவுமே இது உன்னோட வீடுதான். நீ எங்களோட பொண்ணுதான். நீ மட்டும்தான் எங்களோட பொண்ணு.
என்னங்க நீங்க! அவளே நொந்து போயிருக்கா , இப்படி போட்டு ஒடைச்சுடீங்களே?
இல்ல சிவகாமி. எப்ப சொல்லறது எப்ப சொல்லறதுன்னு இதனை நாளா நாம தவிச்சது போதும்.அவளுக்கும் எல்லாம் தெரியணும்.
அனைவருக்கும் முகத்தில் அதிர்ச்சி. வாயடைத்துப் போயினர்.
மல்லிகா வாழ்ந்த கிராமத்திற்கு கிராம சேவைக்கு சென்றவர் தான் மஹாதேவன். மல்லிகாவும் உயிர் தோழிகள். முத்துவின் அன்னைக்கு படிப்பை நிறுத்தி திருமணம் செய்திருந்தாலும்., அவர்களின் நட்பு தொடர்ந்தது.
முத்து வயிற்றில் இருக்கும் போது இந்தாடி., நம்ம தோட்டத்து மாங்கா ., இந்தாடி, புளியங்கா உனக்கு`பிடிக்குமேன்னு கொண்டுவந்தேன். இந்தா ., நான் படிக்கிற டாக்டர் கிட்ட கேட்டு வாங்கி வந்த சத்து மருந்து., இப்படி ஏதாவது கொண்டு வந்து கொடுத்துக் கொண்டே இருந்தாள் . அப்போது தான் முத்துவின் சித்தப்பா இவள் மீது கண் வைத்தது. அண்ணி பிரசவம் முடித்து வந்ததும் அவனுக்கு மீண்டும் காதல் ஆசை நினைவுக்கு வந்தது. அண்ணி பிரசவத்திற்கு சென்றதும் மல்லியை காண ஆவல் இருந்தாலும் வாய்ப்பு கிட்டவில்லை. அதனால் வாய்ப்பு கிட்டியவர்களை அப்போதைக்கு உபயோகப் படுத்திக்க கொண்டான்.
இப்போது மறுபடியும் அவளை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசை வந்தது. முத்துவின் தந்தை எப்போதுமே வாய் பேசியதே இல்லை. அண்ணனுக்கும் சேர்த்து தம்பி ரவுடியாகிப் போனான். தன்னுடைய இந்த கோழைதனத்தினால் எத்தனை பேரின் வாழ்க்கை பாழாய் போகும் என்பதை தெரிந்தும் அவருக்கு வாய் திறக்க தைரியம் வரவில்லை. இன்று முத்து மற்றவர்களை பற்றி கவலை படாதவனாய் உறவுகளை பற்றி தெரியாதவனாய் வளர்ந்ததற்கு இதுவும் முக்கிய காரணம்.
முத்துவின் அன்னை சொன்னபடியே அந்த நாளும் வந்தது. அவர்கள் வீட்டில் இருந்து வந்து பெண் கேட்டனர்.
ஆனால் பாவம்., அது முத்துவின் அன்னைக்கும் தந்தைக்கும் அவர்கள் தெரிய படுத்தவே இல்லை.
மூத்தவன் மீது அலட்சியம். அவன் மனைவி மீது வெறுப்பு. ஒருவேளை முத்து பிறந்ததற்கு இவர்களின் எதிர்பார்ப்புக்கு சீர் செய்திருந்தால் இவளை வைத்தே மல்லியை மடக்கி இருப்பார்கள். அதுதான் இல்லையே.
மூத்த மருமகளை பார்த்து முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டு கிளம்பினார் மாமியார். மனம் சுருக்கென்றது.
மல்லி வீட்டில்,
இல்ல., தப்பா எடுத்துக்காதீங்க. அவ இப்பதான் படிச்சிட்டு இருக்கா . படிப்பு முடியனும். அவளுக்கு நர்ஸாகனும்னு ஆசை. இப்போதைக்கு நாங்க கல்யாணத்த பத்தி யோசிக்கல.
ஆகட்டும். கல்யாணம் முடிஞ்சு படிக்கட்டும். டாக்டரா கூட ஆகட்டும்! யாரு வேண்டான்னு சொன்னது?
அது சரிதாங்க. இருந்தாலும் ரெண்டு பேருக்கும் வயசு வித்தியாசம் ரொம்ப இருக்குதுங்க.
என்னங்க நீங்க. இதெல்லாம் ஒரு விஷயமா? மனசுக்கு புடிச்சா வயசபத்தி என்ன?
இல்லங்க.,...........
இந்த ஊருல என்னோட வசதிக்கு ஏத்த ஆளு நீங்க தான். அதுனாலதான் வேற சாதியா இருந்தாலும் பரவால்லன்னு வந்து இப்பிடி நின்னு பேசறேன். அதுவும் என் பையன் ஆசை பட்டுட்டானேன்னுதான். நீங்க சம்மதிச்சுதான் ஆகணும். இல்லாட்டி விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்.
இல்லங்க., இது சரி பட்டு வராது. மன்னிச்சுடுங்க.
மல்லியின் தந்தை எழுந்து கை எடுத்து கும்பிட்டார். அவர்கள் கிளம்பலாம் என்பதை சூசகமாக தெரிவித்தார்.
அவர்களின் மறுப்பை இவர்கள் அவமானமாகவே நினைத்தனர்.
அவர்களின் அந்த நாள் மனதில் பழியை கிளப்பியது. வெறுப்பு நெருப்பாக மாறியது.
ஆம்., அந்த நெருப்பு மல்லியின் பெற்றோரின் உயிரை பலி வாங்கியது.
அதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தனர்.
அதன்படியே., அந்த ஊர் திருவிழா வந்தது.
மீண்டும் வருவாள் தேவதை...................
BaraniUsha