Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Nee en devadhai

Barani Usha

Saha Writer
Messages
67
Reaction score
37
Points
18
தேவதை வருகை-29
அந்த நேரத்தில் சிவாவுக்கும் ஆறுதலும் அணைப்பும் தேவை பட்டது. கங்காவிற்கும் தன்னால் எதுவுமே செய்ய முடியவில்லையே என்ற பாரம் சிறிது நீங்கியது.
மேலும் தான் சிவா மனதில் இடம் பிடித்திருப்பதால் தான் தன்னிடம் அவ்வளவு உரிமை எடுத்துக் கொண்டார் என்று அவள் மனம் கோட்டை கட்டியது.

ச ! நான் என்ன அவ்வளவு சுநலமியா? இந்த நேரத்துல போய் இப்படி நினைக்கிறேன். ஏதாவது செய்யணும்.
சத்யா பழையபடி மாறனும். நா உனக்கு ,பொங்க வைக்கறேன் மாடசாமி ., என்று மனம் உருக வேண்டிக் கொண்டாள் .

அன்று முதல் சத்யா அவள் அன்னை தந்தையுடனே படுத்துக்க ஆரம்பித்தாள்.
யாராவது ஒருவர் சத்யாவுடனே இருக்கும்படி பார்த்துக் கொண்டனர். இருப்பினும் சத்யா கண்களில் சோகமும் கண்ணீரும் மாறவில்லை.
மறு நாள் காலை.,
சொன்னபடியே சிவா காலையில் எப்போதும் போல கிளம்பினான். வழி அனுப்ப சத்யா வர வில்லை. அதனால் கிளம்புமுன் சத்யா தலை கோதி நான் போயிட்டு வரேன்,சொல்லி விட்டு கிளம்பினான். இவளால் தாங்கவே முடிய வில்லை. அவன் தோள் சாய்ந்து அண்ணா! என்று கதறினாள்.அவனும் அவளுக்கு தெரியாமல் கண்ணீரை துடைத்துக் கொண்டான்.
சில நிமிடங்களிலேயே தன்னை சமாதானம் செய்து கொண்டவள்., சாமி அறையில் இருந்து விபூதி கொண்டு வந்து அன்னை இடம் நீட்டினாள்.
இந்தங்கம்மா., அண்ணா கிளம்பரச்சே நான் அழ ஆரம்பிச்சுட்டேன். அண்ணா நீ பத்திரமா போயிட்டு வா. என்ன நினைச்சு கவலை படாத.
ஆமாடா கண்ணா., நீ பத்திரமாய் போயிட்டு வா. போய் சேர்ந்ததும் கால் பண்ணு . அனைவரும் வலி அனுப்பி வைத்தனர்.
அடுத்த சிலமணி நேரத்தில் ரிஷியும் ரம்யாவும் வந்து சேர்ந்தனர்.
அப்போதைக்கு மனதை சமாதான படித்திக் கொண்டாலும் சத்யாவின் மன அலறல் அவளை துரத்தியது
அம்மா., நான் உங்க எல்லாருக்கும் ரொம்ப தொந்தரவாயிட்டேன் இல்ல?
என்னடி இது?
அவளை மார்புடன் கட்டிக்க கொண்டு கதறினாள் அன்னை .
அம்மா நீங்கதான் என்னோட அம்மாவா ?
இப்ப என்ன அதப்பத்தி ?
வேற யார் வீட்டிலையோ இருக்கற மாதிரி ,சாப்பாடு தொண்டைல இறங்க மாட்டேங்குது. அவங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் முள்ளா குத்துது. சொல்லுங்க. நீங்க யாரு? நான் யாரு? நமக்கு என்ன சொந்தம்?
இரு சத்யா. ஏன் அவளை துளைச்சு எடுக்கற. நான் சொல்லறேன். உங்க அம்மா அந்த கிராமத்துல வாழ்ந்த மல்லிகா. உங்க அப்பா என்னோட தம்பி. போதுமா?
இது ஒன்னும் வேற யார் வீடோ இல்ல. எப்பவுமே இது உன்னோட வீடுதான். நீ எங்களோட பொண்ணுதான். நீ மட்டும்தான் எங்களோட பொண்ணு.
என்னங்க நீங்க! அவளே நொந்து போயிருக்கா , இப்படி போட்டு ஒடைச்சுடீங்களே?
இல்ல சிவகாமி. எப்ப சொல்லறது எப்ப சொல்லறதுன்னு இதனை நாளா நாம தவிச்சது போதும்.அவளுக்கும் எல்லாம் தெரியணும்.
அனைவருக்கும் முகத்தில் அதிர்ச்சி. வாயடைத்துப் போயினர்.
மல்லிகா வாழ்ந்த கிராமத்திற்கு கிராம சேவைக்கு சென்றவர் தான் மஹாதேவன். மல்லிகாவும் உயிர் தோழிகள். முத்துவின் அன்னைக்கு படிப்பை நிறுத்தி திருமணம் செய்திருந்தாலும்., அவர்களின் நட்பு தொடர்ந்தது.
முத்து வயிற்றில் இருக்கும் போது இந்தாடி., நம்ம தோட்டத்து மாங்கா ., இந்தாடி, புளியங்கா உனக்கு`பிடிக்குமேன்னு கொண்டுவந்தேன். இந்தா ., நான் படிக்கிற டாக்டர் கிட்ட கேட்டு வாங்கி வந்த சத்து மருந்து., இப்படி ஏதாவது கொண்டு வந்து கொடுத்துக் கொண்டே இருந்தாள் . அப்போது தான் முத்துவின் சித்தப்பா இவள் மீது கண் வைத்தது. அண்ணி பிரசவம் முடித்து வந்ததும் அவனுக்கு மீண்டும் காதல் ஆசை நினைவுக்கு வந்தது. அண்ணி பிரசவத்திற்கு சென்றதும் மல்லியை காண ஆவல் இருந்தாலும் வாய்ப்பு கிட்டவில்லை. அதனால் வாய்ப்பு கிட்டியவர்களை அப்போதைக்கு உபயோகப் படுத்திக்க கொண்டான்.
இப்போது மறுபடியும் அவளை அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசை வந்தது. முத்துவின் தந்தை எப்போதுமே வாய் பேசியதே இல்லை. அண்ணனுக்கும் சேர்த்து தம்பி ரவுடியாகிப் போனான். தன்னுடைய இந்த கோழைதனத்தினால் எத்தனை பேரின் வாழ்க்கை பாழாய் போகும் என்பதை தெரிந்தும் அவருக்கு வாய் திறக்க தைரியம் வரவில்லை. இன்று முத்து மற்றவர்களை பற்றி கவலை படாதவனாய் உறவுகளை பற்றி தெரியாதவனாய் வளர்ந்ததற்கு இதுவும் முக்கிய காரணம்.
முத்துவின் அன்னை சொன்னபடியே அந்த நாளும் வந்தது. அவர்கள் வீட்டில் இருந்து வந்து பெண் கேட்டனர்.
ஆனால் பாவம்., அது முத்துவின் அன்னைக்கும் தந்தைக்கும் அவர்கள் தெரிய படுத்தவே இல்லை.
மூத்தவன் மீது அலட்சியம். அவன் மனைவி மீது வெறுப்பு. ஒருவேளை முத்து பிறந்ததற்கு இவர்களின் எதிர்பார்ப்புக்கு சீர் செய்திருந்தால் இவளை வைத்தே மல்லியை மடக்கி இருப்பார்கள். அதுதான் இல்லையே.
மூத்த மருமகளை பார்த்து முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டு கிளம்பினார் மாமியார். மனம் சுருக்கென்றது.
மல்லி வீட்டில்,
இல்ல., தப்பா எடுத்துக்காதீங்க. அவ இப்பதான் படிச்சிட்டு இருக்கா . படிப்பு முடியனும். அவளுக்கு நர்ஸாகனும்னு ஆசை. இப்போதைக்கு நாங்க கல்யாணத்த பத்தி யோசிக்கல.
ஆகட்டும். கல்யாணம் முடிஞ்சு படிக்கட்டும். டாக்டரா கூட ஆகட்டும்! யாரு வேண்டான்னு சொன்னது?
அது சரிதாங்க. இருந்தாலும் ரெண்டு பேருக்கும் வயசு வித்தியாசம் ரொம்ப இருக்குதுங்க.
என்னங்க நீங்க. இதெல்லாம் ஒரு விஷயமா? மனசுக்கு புடிச்சா வயசபத்தி என்ன?
இல்லங்க.,...........
இந்த ஊருல என்னோட வசதிக்கு ஏத்த ஆளு நீங்க தான். அதுனாலதான் வேற சாதியா இருந்தாலும் பரவால்லன்னு வந்து இப்பிடி நின்னு பேசறேன். அதுவும் என் பையன் ஆசை பட்டுட்டானேன்னுதான். நீங்க சம்மதிச்சுதான் ஆகணும். இல்லாட்டி விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்.
இல்லங்க., இது சரி பட்டு வராது. மன்னிச்சுடுங்க.
மல்லியின் தந்தை எழுந்து கை எடுத்து கும்பிட்டார். அவர்கள் கிளம்பலாம் என்பதை சூசகமாக தெரிவித்தார்.
அவர்களின் மறுப்பை இவர்கள் அவமானமாகவே நினைத்தனர்.
அவர்களின் அந்த நாள் மனதில் பழியை கிளப்பியது. வெறுப்பு நெருப்பாக மாறியது.
ஆம்., அந்த நெருப்பு மல்லியின் பெற்றோரின் உயிரை பலி வாங்கியது.
அதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தனர்.
அதன்படியே., அந்த ஊர் திருவிழா வந்தது.

மீண்டும் வருவாள் தேவதை...................
BaraniUsha
 

Barani Usha

Saha Writer
Messages
67
Reaction score
37
Points
18
காதலர் தினத்திற்காக உங்களுக்கு சின்ன இனிப்பான யூ டீ இதோ,

பேருந்து நிறுத்தத்தில் அந்த உயர்ரக மகிழுந்து வந்து நின்றது, அதிலிருந்து அந்த கந்தர்வன் ச! ச! நம்ம கௌசிக் வந்து
ஹாய் , மிஸ் ... கயல்விழி, வாங்களேன் நானே உங்களை டிராப் பண்ணறேன். சுற்றி இருந்தவர்கள் ஒரு மாதிரி பார்த்தனர். இவளுக்கு கூச்சமாக இருந்தது.அவனிடம் பேச விருப்பம் இல்லாதவளாக முகத்தை திருப்பி கொண்டாள் .
அவளை நெருங்கி அவளில் காதோரமாக இப்ப எங்கூட கார்ல ஏறு, நான் உன்கிட்ட அப்புறமா விஷயத்தை சொல்லறேன் என்றான், இவளுக்கு விருப்பம் இல்லை என்றாலும் அவன் மீது நம்பிக்கை வைத்து அவனின் ஊர்தியில் ஏறியது அவளுக்கே வியப்புதான் என்று அவளுக்கும், யாரோ முன் பின் தெரியாத அதுவும் இன்று காலையில்தான் முதல் முறையாக பார்த்த பெண்ணிடம் இத்தனை இறங்கி பேசுபவனா இந்த கௌசிக் என்ற வியப்பு அவனுக்கும் இருந்தது.
சிறிது தூரம் சென்றதும், ஹலோ மிஸ்டர் கார நிறுத்துங்க. எதுக்கு என்ன கார்ல ஏற சொன்னீங்க?(எம்மா நீங்கல்லாம் இப்படித்தான் யாரவது பெரிய காருல வந்து கூப்புட்டா போயிருவீங்களா?)
வெயிட் வெயிட் காயல்(கயலதான் நம்ம ஆளு அப்படி சொல்லறான் ) எதுக்கு இந்த அவசரம்?
உங்களுக்கு எப்படி என்னோட பேர் தெரியும்?
நீயே யோசி,

சரி அதெல்லாம் இருக்கட்டும் முதல்ல விஷயத்தை சொல்லுங்க. என்னோட பஸ் வந்துடும்.
அதான் சொன்னேனே நானே உங்களை டிராப் பண்ணறேன்னு? அவன் தமிழ் பேசுவது ஹிந்திடப்பிங் சீரியல்பார்ப்பது போல இருந்தது. மற்றதை நினைக்காமல்,
சாரி! நான் உங்களை கார நிறுத்த சொன்னேன். சொல்லுங்க எதுக்கு என்ன கார்ல ஏத்துனீங்க ?
உனக்கு என்ன பார்த்தா தப்பா தெரியுதா?
நான் உங்களோட பதிலுக்கு காத்திருக்கேன்
நீ ஒரு பொண்ணுதானே ?
யே ! இது என்ன கேள்வி ?
ம்ம்., ஒரு எடதுல நிக்கும்போது யாரூ எப்படி பாக்ராங்கோன்னு ஒனக்கு தெரியாதா?
மௌனமே பதிலாக இருந்தது.
சரி, நான் உன்ன மறுபடியும் அங்கையே விடறேன். அந்த எல்லோ டீ ஷர்ட் உன்ன எப்படி பாக்கறானு சொல்லு.
வேண்டாம், நீங்களே என்ன அடுத்த பஸ் ஸ்டாப்புல விட்டுடுங்க.
நோ ப்ராப்ளம், நீ உன்னோட டவுட் கிளீயர் பண்ணிட்டு வா,
பரவால்ல. நான்.. என்ன அடுத்த பஸ் ஸ்டாப்புலையே விட்டுடுங்க.
சரி. சாரி.
சரியா? சாரியா? ஒழுங்கா சொல்லு.
சாரி உங்கள தப்பா நினச்சு திட்டினதுக்கு. முதல்ல நீங்க சொன்னதுக்கு சரி.
ஒகே! ஆனா நீ பஸ்சுல ஏறினதுக்கப்புறம்தான் நான் போவேன்.
ஒரே ஒரு சந்தேகம். அவன் என்ன எப்படி பார்த்தான்?
இவன் ஒரு மாதிரியாக பார்த்தான்.
இல்ல நான் போட்டுருக்கறது எல்லாமே சும்மா நகைத்தான். அதான்.
இப்படி லட்டு மாதிரி நீ இருக்கும்போது எவனாவது நகைய பாப்பானாடி லூசு. மனதில் நினைத்ததை நல்ல வேளை சொல்லவில்லை .
ப்ளீஸ் சொல்லுங்க .
நீ உன்னோட மூஞ்சிய கண்ணாடில பாக்கறதே இல்லையா ? வீட்டுக்கு போனதும் கண்ணாடியை பாரு . அவன் எப்படி பார்த்தான்னு உனக்கு புரியும். உன்னோட பஸ் ஸ்டாப் .
வீட்டில்,
ஏண்டி! இந்த மாதிரி கலரு போடாத உன்னோட கலருக்கு திருஷ்டி படுதுன்னு எத்தனை தடவ சொல்லறது. போறவன் வரவனெல்லாம் உன்னையே பாக்காரனுங்க . போ போய் கைய கால கழுவிட்டு வா சாப்பாடு எடுத்து வைக்கறேன் . முகம் கழுவிக் கொண்டவளுக்கு, கார் அழகனின் குரலும் காதில் வந்தது. ஓடி சென்று கண்ணாடி பார்த்தாள் . பெரியதாக ஒன்றும் தெரியவில்லை.
அடுத்த நாள், மறுபடியும், இவர்களின் சந்திப்பு, வேறு ஒரு பேருந்து நிலையத்தில் .
இருவருக்குமே ஆச்சர்யம்.
வாங்க இப்போ எங்க போகணும் ?
ஹே நீங்க என்ன பாலோவ் பண்ணறீங்களா .
காருல ஏறுங்க பதில் சொல்லறேன்.
பதில் கேட்பதற்காக ஏறி கொண்டாள் . எங்க போகணும்.
ம்ம் பம்பாய் போகணும்.
இப்போ இல்ல வேண்ணா நாளைக்கு போகலாம்.
மிஸ்டர். முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க.
ஏன் நீ என்ன பாலோவ் பண்ண கூடாதா ?
நான் நான் ஏன் பண்ணனும் ? நான் எதுக்கு உங்க பின்னாடி வரணும்.
நான்னா சின்ன பொண்ணு. பாக்க கொஞ்சம் அழகாவும் இருக்கேன். அதான். குரலில் பெருமிதம் தெரிந்தது. அதோட எப்பையும் பசங்கதான பொண்ணுங்கள பாலோவ் பண்ணுவாங்க.
அவள் கண்களை குறுகுறு வென பார்த்து, நேத்து கண்ணிடிய பார்த்தியா?
பதில் வரவில்லை. அவளின் கன்ன சிகப்பையே பதிலாக எடுத்துக் கொண்டான். ஏனோ அவளிடம் வாயாட வேண்டும் என்று தோன்றியது.
உன்ன விட நிறைய காரணங்கள் எனக்கு இருக்கு . ஸ்ட்ரைட்டா? லெப்டா?
நேரா போங்க. அவனிடம் பேசிக் கொண்டே வீட்டிற்கு வழி சொல்லிக் கொண்டிருந்தாள்.
நானும்தான் பணக்கார பையன், அழகா கம்பீரமா இருக்கேன்.
😎
😎
😍
எந்த பெண்ணும் என் பின்னாடியே வருவா நல்ல படிச்சிருக்கேன் நல்ல பிசினெஸ் பண்ணறேன், சம்பாதிக்கறேன். அதனால நீயும் என்ன பாலோவ் பண்ணலாமில்ல ? ம்ம் உதடு சுழித்து புருவங்களை ஏற்றி இறக்கி கூறினான். எங்க நீங்க அழகா இருக்கீங்க? எல்லா பொண்ணுங்களும் உங்க கூடவே வந்துடுவாங்க கொஞ்சம் ஓவரா இல்ல? நீங்களும் இன்னிக்கு உங்க மூஞ்சிய கண்ணாடில பாருங்க சார். குழந்தை போல சொன்ன அவள் பாவனையை அவன் ரசித்தான்.
😁

அப்போது அவள் வீடே வந்து விட்டது.
சார் சார் இங்கையே நிறுத்துங்க. உள்ள சந்துக்குள்ள உங்க கார் வராது. நான் இறங்கி நடந்து போய்க்கறேன் .
ரொம்ப தாங்க்ஸ் சார். சொல்லி விட்டு அவள் வேகமாக நடந்து சென்றாள். அவளை விட்டு செல்ல மனம் இல்லாதவனாக இவன் அவள் உருவம் மறையும் வரையில் இருந்து விட்டு சென்றான்.
இன்று கண்ணாடி பார்ப்பது இவன் முறையானது.
வீட்டிற்கு சென்றவளுக்கு ஏனோ மனம் காற்றில் பறந்தது,
இவனுக்கும்தான், பக்கத்துக்கு வீட்டு ரேடியோவில்,
எகிறி குதித்தேன் வானம் இடித்தது,
பாதங்கள் இரண்டும் பறவையானது
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது,
புருவங்கள் இறங்கி மீசையானது .......

பாடல் வரிகள் சரியாக அர்த்தம் புரியவில்லை என்றாலும், அந்த பாடல் அப்போது அவனுக்கான சிடுயேசன் சாங்கத்தாம்பா.

இதனால் மக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால்..........


ஒன்றுமில்லை

ஒன்றுமில்லை


யப்பா மீண்டும் வருவாள் தேவதையே காணோமே..............
😁
😁
😉



BaraniUsha
 

Barani Usha

Saha Writer
Messages
67
Reaction score
37
Points
18
நீ என் தேவதை பார்ட் 1 ஒரு முன்னோட்டம்.



சிவா சத்யா ரெண்டு பேரும் தியாகு சிவகாமியோட பசங்க. ஆனா இதுல சத்யா தியாகுவோட தம்பி பொண்ணு. தம்பி கிராமத்துல மல்லிய முத்துவோட சித்தப்பா குமார்கிட்டேர்ந்து காப்பாத்தி கல்யாணம் பண்ணிக்கறார். குமார் கெட்ட பழக்கங்களின் மொத்த உருவம், குமாரின் அம்மா அதற்கு தூபம் போடுபவள். (நம்ம அருந்ததி படத்துல வர்ற மாதிரியா ஆமா அதேதான்)குமாரோட சித்தப்பாகிட்டேர்ந்து மல்லியை முத்துவோட அம்மா ரெங்கம்மா காப்பாத்த உதவி பண்னும்போது இறந்து போயிடறாங்க. ரெங்கம்மாவும் மல்லியும் பள்ளிகூடத்து தோழிகள் . தன்னோட தோழிக்காகவே உயிரை விடறாங்க ரெங்கம்மா. இதுபத்தியெல்லாம் எதுவுமே தெரியாம வளர்ரா நம்ம சத்யா, பட்டணத்தில். முத்து வளர்ந்தான் கிராமத்தில். இதுக்கு நடுவுல மல்லி பெயர் தெரியாத காய்ச்சல்ல இறந்து போயிடறாங்க. குழந்தையை தியாகு வளக்கறாரு. மகாதேவன் பம்பாய்ல வேலைக்கு போகிறார் அண்ணனோட உத்தரவுல. அங்க இவருக்கு ஒரு மருத்துவமனையில வேலை கிடைக்குது. நல்ல வேலை பார்த்து முதலாளிக்கு மனசுக்கு புடிச்சவரா மாறார். முதலாளியோட பொண்ண கல்யாணம் பண்ணி வைக்கறார் அதுக்கு காரணம், மஹாதேவன் மேல இருந்த நம்பிக்கை . அவர் பொண்ணு மேல இருந்த அவநம்பிக்கை. முதல விட இரண்டாவதுதான் முக்கியம். தான் ரொம்ப கஷ்ட்டப்பட்டு சம்பாதிச்சு கட்டி இருக்கற, நல்ல பெயர் வாங்கி வச்சுருக்கும் மருத்துவமனையை சொத்துக்களை பொண்ணால சரிவர பார்த்துக்க முடியாதுங்கறத அவர் புரிஞ்சுக்கிட்டார். ஆனால் மற்றதை காப்பாத்தின அவரால மஹாதேவனோட வாழ்க்கையை காப்பாத்த முடியல.

அவர் நினச்ச மாதிரியே மஹாதேவன் நம்பிக்கைக்கு ஏத்தவரா இருந்தார் . வசந்தி கல்யாணதுக்கு முன்னாடியே கர்ப்பம் ஆனாள் . அவளின் அதிகமான ஆண் நண்பர்களில் குழந்தைக்கு தந்தை என்று அவள் யாரை சொல்லுவாள்? திருமணத்திற்கு பின்னர், கர்ப்பமான்ற சந்தேகத்துல விஷயம் தெரிஞ்ச உடனே வஸந்தியோட அப்பா கண்டுபிடிக்கிறார். அதுலேர்ந்து மஹாதேவன்கிட்ட அந்த அசிங்கத்தை சொல்ல முடியாம தவிச்சு போய் , வெகு விரைவிலேயே (அடுத்த சில மாதங்களில் ) இறந்தும் போகிறார். (ஆனால் விஷயத்தை சொல்லி மன்னிப்பும் கேட்கிறார்). நிறை மாதமாக இருக்கும் மனைவியும் பல நோயாளிகளை கொண்ட மருத்துவமனையும் அவரை அங்கிருந்து நகர முடியாமல் செய்தது. மனைவி எத்தனை கொடுஞ்சொல் சொன்னாலும், அந்த குழந்தையின் முகத்தை பார்த்து மனதை மாற்றி கொள்வார். பின்னாளில் அந்த மகனும் இவரிடமிருந்து ஒதுங்க ஆரம்பித்தான். ஏனோ மகாதேவன் தன்னுடைய சோகங்களை தன்னுளேயே மறைத்துக் கொண்டார். மகளிடம் அதிகமான அன்பு செலுத்தினாலும், அவளை தன் மகள் என்று கூறினால் அது மகளுக்கும், அண்ணனுக்கும் இடையே இருக்கும் அன்பை கெடுக்கும் என்று நினைத்தார். அண்ணனும் அண்ணியும் சத்யாவின் மேல் உயிரையே வைத்திருந்தனர். அது மகாதேவனுக்கு நன்றாகவே தெரியும். சிவாவும் அவளை உயிராகவே நினைத்தான். பல ஆண்டுகள் அவளை தள்ளியே வைத்திருந்தவர் தான் இறப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு அவளை தனது மருத்துவமனையில் வேலைக்கு சேர்த்துக் கொண்டார். மல்லியுடன் இருந்த காலத்திற்கு பின் அவரின் வாழ்க்கையில் வந்த வசந்த காலம் அது மட்டுமே. தன்னுடைய பொறுமையினாலும், பண்பாலும் , சிறந்த மனிதனாகவும், சிறந்த ஆளுமை உடையவராகவும் இருந்தாலும், அவர் தனது சொந்த வாழ்க்கையில் எதையுமே சாதிக்க முடியாதவராக தோல்வி அடைந்தவராகத்தான் இ(ற)ருந்தார்.



அங்கே பம்பாயில் ரிஷிக்கும் சத்யாவுக்கு நட்பு ஏற்படுகிறது. அதுவே பின்னாளில் அவர்கள் இருவரும் அக்கா தம்பி என்று தெரியவருகிறது. சிவகாமியும் அபிராமி ரிஷியின் அம்மாவும் கூட பிறந்தவர்கள். திருமணத்தில் பிணக்கு ஏற்பட்டு அபிராமி தனது குடும்பத்தை விட்டு பிரிக்கிறார்.

தங்கையை குழந்தையாக வளர்த்த ராஜா அவளின் பிரிவு தாங்காது மிகவும் துன்பமடைந்தார் . சத்யாவின் மூலம் ரிஷிக்கும், ராஜாவின் மகள் ரம்யாவுக்கு திருமணம் நடக்கிறது. ரம்யாவுக்கு ரிஷியை பிடித்திருந்தாலும், முதலிரவில் அவனை திட்டி அசிங்கமாக பேசி விடுகிறாள். பின்னர் சத்யாவின் அறிவுரைப்படி அவளை ஒரு நல்ல மனோதத்துவ நிபுணரிடம் ரிஷி அழைத்து செல்கிறான். அதன் மூலம் அவள் மிக சிறு வயதிலேயே பாலியல் தொல்லைக்கு உட்பட்டது அவனுக்கு தெரிகிறது. இருப்பினும் அதை பற்றி வீட்டிலும் ரம்யாவுக்கும் தெரியப்படுத்தாமல், அவளை இன்னும் அதிகமாக பார்த்துக் கொள்கிறான். இருப்பினும் அவளை எப்படி வழிக்கு கொண்டுவருவது என தெரியாமல் தவிக்கும்போது அவனுக்கு கங்கா உதவுகிறாள் .

எல்லாத்துக்குமே பயந்த ரம்யா கங்காவோட உதவியினால கொஞ்சம் கொஞ்சமா வெளில பழக ஆரம்பிக்கறா அதுவே பின்னாளில் அவளை தொல்லை படுத்தினவன ரிஷியோட செருப்பால அடிக்கற அளவுக்கு தைரியத்தை கொடுக்குது. அதே நாள்ல ரிஷிக்கும் ரம்யாவுக்கும் உடல் சங்கமிக்குது, நம்பிக்கையை ஆதாரமா வச்சு ஆரம்பிக்கற அவங்களோட வாழ்க்கை என்னிக்குமே நல்லா இருக்கும்.



கங்கா சிவா கிராமத்தில் வேலை பார்க்கும்போது அவனுக்கு வீட் டு வேலை செய்து வந்த சிறு பெண். பள்ளி படிப்பை முடித்தவளுக்கு மேற்கொண்டு படிப்பதில் விருப்பம் இருந்தாலும், அவள் தந்தை அதை அனுமதிக்கவில்லை. மிகவும் தைரியமும், பொறுமையும், தன்னம்பிக்கையும் உடைய அறிவான சாமர்த்தியமான பெண் . கடன் தொல்லையினால் அவள் தந்தை தற்கொலை செய்து கொண்டார். அவளை மீட்டு தன் வீட்டுக்கு அவளை அனுப்பி வைக்கிறான் சிவா. முதலில் பாவம் என்று அவன் நினைத்தது இல்லை அது காதல் என்று காலம் புரிய வைக்கிறது. இருப்பினும் தன்னை விட 13 வயது சிறிய பெண் என்பதால் அவனுக்கு தயக்கம் ஏற்படுகிறது. ஆனால் கங்காவுக்கு காதலையும் தாண்டி சிவாவை தந்து தந்தையாக அண்ணனாக கணவனாக என்று எல்லாம் அவனே என்று நினைக்க ஆரம்பித்திருந்தாள். தன்னை சுற்றி இருந்த ஆண்கள் ஏதோ ஒரு விதத்தில் சுயநலமிக்கவர்களாக இருந்த போது யாரோ ஒருவள் தனக்காக சிவா அத்தனை நல்லது செய்ததே காரணம். அவள் மேல் அக்கறை கொள்பவர்கள் யாருமே இல்லாதபோதும், ஏன் தன்னை பற்றி கவலை படாமல் தந்தையே தற்கொலை செய்து கொண்டபோதும், உனக்காக நான் இருக்கிறேன் என்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நடந்து கொண்டதே அவள் சிவாவை விரும்ப காரணம். ஒரு பெண்ணின் மனதை வெல்ல இதை விட வேறு என்ன வேண்டும்.?அவன் சொல்லை இவள் கேட்க அவன் வாயால் சொல்லவேண்டாம், மனதில் நினைத்தாலே போதும் என்னும் அளவிற்கு அவள் மாறி போனாள் . இருப்பினும் இருவரும் தங்கள் அக்கறையை மட்டுமே காட்டிக் கொண்டனர். அன்பையும் காதலையும் வெளிபடுத்தவே இல்லை.

அவள் தனது படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதையே சிவா விரும்பினான். அவன் விருப்பத்தையே அவளும் விரும்பினாள் . சிவாவும் கங்காவும் இணைவது சாத்தியமாகுமா ? பார்க்கலாம். ஏனோ எனக்கு அந்த நம்பிக்கை இல்லை.






சத்யா அப்பா மாதிரியே கிராம சேவைக்கு போறா. அங்க முத்துவ பாக்கறா . தேவதைக்கு முத்து மேல ஏதோ ஒரு ஈர்ப்பு உண்டாகுது. ஆனா அது காதலா மாறறதுக்கு டைம் குடுக்காம நம்ம ஆளு தேவதைக்கு கோயில்ல தாலி கட்டிடறாரு. அதிர்ச்சியிலிருந்து சத்யாவால் வெளில வரவே முடியல. அதுக்குள்ள முத்துவுக்கு, கிராமத்துல நடந்த சண்டையில முதுகுல அரிவாள் பட்டுடுது. உயிருக்கு போராடற நேரத்துல சத்யா வந்து பாத்துக்கறாங்க. அதுக்குள்ள ஊருக்கு போயிருந்த ஆச்சி வீட்டுக்கு வராங்க., அவங்க சத்யாவை தன்னோட சொந்த பேத்தியை போலவே பாத்துக்கறாங்க. முத்துவுக்கு ஓரளவு சரியானதும், கிளம்பணுன்னு நினைச்ச சத்யவால முத்துவை விட்டு நகர முடியல. ஆமா அதேதான் மேடத்துக்கு காதல் வந்துருச்சு முத்துவுக்கு வரலையேவழக்கம்போல சாருக்கு மூக்கு மேல கோபம்தான் வந்தது. மேடத்தை அடிச்சு விரட்டறது மட்டும்தான் இல்ல. அதுக்குள்ள அவங்களே மரியாதையா சொந்த வீட்டுக்கு வந்துட்டாங்க....



நம்ம கௌசிக்கு தன்னோட அப்பா மஹாதேவன் இல்லங்கறது தெரியறது.. அம்மாகிட்ட போய் கேட்கறான் . அம்மாவுக்கும் புள்ளைக்கும் சண்டை. ஏற்கனவே ரிஷியை மும்பையில பார்த்தவன் அவன்கிட்டேர்ந்து நம்பரை வாங்கி சத்யாவோட பேசறான். சத்யாவுக்காக அவங்க அப்பா உயில் எழுதியிருக்கற விஷயத்தையும் சொல்லறான் . மனம் உடைந்து போயிருக்கும் அவன் இப்போ சத்யா வீட்டு வாசல்ல நிக்கறான் .



வாங்க சத்யாவோட போய் நாமளும் என்ன நடக்குதுன்னு பாக்கலாம்.



எல்லா துன்பங்களையும் கடந்து வெற்றியுடன் மீண்டும் வருவாள் தேவதை ..........
 

Barani Usha

Saha Writer
Messages
67
Reaction score
37
Points
18
NYD-62
சத்யாவை பார்ப்பதற்காக அவள் வீட்டை அடைந்தவனை பார்த்த சத்யாவுக்கு பெரும் அதிர்ச்சி. காந்த கண்களும் கூறிய பார்வை, செதுக்கிய முகம் எங்கே? அவள் பார்த்தது சிவந்த விழிகளும், தாடி வைத்த முகமும் தான்.
வாங்க கௌசிக்!!
வாங்க... ம்ம்.. மனதில் சிரித்துக் கொண்டான்.
வாழ்க்கையில் பணமும் திமிரும் இருந்த கௌசிக் இவன் அல்லவே!
அப்போது இவன் மற்றவரை அந்நியமாக்கி இருந்தான். இப்போது வார்த்தையில் கூட அந்த அன்னியத்தை அவனால் ஏற்க முடியவில்லை. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் துன்பமும் அனுபவங்களும் நமக்கு சிறந்த ஆசான். அவை தரும் பாடம் மிகவும் கடுமையாகத்தான் இருக்கும். கௌசிக்கின் வாழ்க்கையில் அது தந்த பாடம் மிக கொடியது. கடுமையானது. மிகவும் திமிராக ஆல மரம் போல இருந்தவன் இப்போது வேர் அறுந்து கிடக்கிறான். அவனை மாற்ற ஒரு துணை தேவை. ஆனால் பாவம் அதுவும் அவனுக்கு சரியாக அமையப் போவதில்லை. அவனுக்கு தன் வாழ்க்கையில் தாயும் சரி தாரமும் சரி சரியாக இல்லை என்பதை அவன் எப்படி தாங்கி கொள்வான்?


அவன் எதிர்காலத்தை அவன் மாற்றி அமைக்கும் வேளையில் அவனுக்கே தெரி(ந்தும்)யாமல் சத்யாவின் வாழ்க்கையையும் சரி படுத்துவான்.

இப்போது நாம் இவர்களின் சந்திப்புக்கு வரலாம்.
வாங்க கௌசிக்,
சித்தி சௌக்கியமா? கையிலிருந்த பெட்டியை வாங்கியபடி கேட்டுக் கொண்டிருந்தாள்.
குட்.
காப்பியா டீயா என்ன குடிக்கறீங்க?
சத்யா ப்ளீஸ், நீங்க வாங்கலாம் வேணாமே? இங்க வந்துருக்கறது உன்னோட தம்பியா தான். ப்ளீஸ் என்ன புரிஞ்சுக்கோ..
அவள் கண்களை நேராக பார்த்தான்.
இவளுக்குத்தான் சங்கடமாக இருந்தது. என்னதான் இருந்தாலும் எல்லாமே ஒரே நாளில் சரியாகிவிடுமா என்ன?
மனதின் கேள்விகளை உள்ளடக்கினாள் .
ஐ வில் ட்ரை . பட் ஒரு கண்டிஷன் ?
என்ன என்பதுபோல் அவன் பார்வை .
நீங் நீ முதல்ல ஷேவ் செஞ்சுக்கணும்.
டீகே.
முதல்ல காபி குடிக்கணும். சூடா கொஞ்சம் நிறையா .கண்களை சுருக்கி,கை சைகையில் கேட்டான்.
அதற்குள் அங்க கங்கா வந்தாள் . சத்யா நீங்க இருங்க.நான் கொண்டு வரேன். அவளே சிவகாமிக்கு விஷயத்தையும் சொன்னாள் . அண்ணன் மகனை பார்க்க தியாகுவும் சிவகாமியும் வேகமாக வந்தனர்.
அவழ்ந்திருந்த தலையை முடியிட்டுக் கொண்டே வாப்பா கௌசிக், வா வா உன்ன பார்த்ததுல ரொம்ப சந்தோஷம். வசந்தி எப்படி இருக்கா ? இருவரும் மாற்றி மாற்றி கேள்வி கேட்டனர். அவர்களின் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொன்னான். காபி சாப்பிடறியா ?
அம்மா கங்கா போயிருக்கா.
இருக்கட்டும் முதல் தடவையா வீட்டுக்கு வந்துருக்கான் . நானே போய் கொண்டு வரேன்.
ஏனோ அந்த சிறு பரிவும் அவனுக்கு மனதாங்கலாக இருந்தது. காப்பியை ரசித்துக் குடித்தான். சிவகாமிக்கும் அவனை ஏனோ வேற்று வீட்டு பிள்ளையாக நினைக்க மனம் வரவில்லை. சிவாவை போலவே பார்த்தாள் . அவன் காபியை குடித்து முடித்ததும், அங்கே ஒரு நீண்ட மௌனம் நிலவியது. அவனிடம் என்ன பேச வேண்டும் என்று யாருக்குமே தெரியவில்லை. ஆனால் அந்த நேரத்தில் என்ன பேச வேண்டும் என்று கௌசிக் யோசித்துக் கொண்டிருந்தான். அவனே வாயை திறக்கட்டும் என்று மூவரும் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
நீண்ட மௌனம் கலைத்தான்......
வெல் நான் இப்ப, இங்கே எதுக்கு வந்துருக்கேன். உங்களுக்கு தெரியனுமில்ல... சொல்லறேன். ஒரு நீண்ட மூச்சு இழுத்து விட்டான்..
சத்யாவுக்கு எங்கப்பா சாரி அவங்கப்பா சொத்து எழுதி வச்சிருக்கார். அதை பத்தி பேசணும். அத ஒப்படைக்கணும் . அதுக்குதான்.
ஏனோ ரிஷி மூலம் இந்தச் செய்தி தெரியும் என்றாலும், அவன் வாயால் கேட்கும்போது ஏனோ ஒரு ஒட்டுதல் இல்லை. அதிலும், அந்த அவங்கப்பா என்ற சொல் அனைவரையுமே தாக்கியது. அவர்களை தாக்கவே அந்த சொல் பிரயோகிக்கப்பட்டதோ ?
இருப்பினும், யாரும் அதை பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் சத்யா மட்டும் அதை பற்றி பேச வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டாள் .
நீ என்ன சொல்லற சத்யா? நீ அதை என்ன பண்ணணுன்னு சொல்லறியோ அப்படியே பண்ணிடலாம்.
அங்கே சிறு நிசப்தம் .எச்சில் முழுங்கி கொண்டவள் .எனக்கு அவரு அப்பவாவே இல்ல. ஆனா பேச ஆர்மபித்தாள்.
எனக்கு அந்த பணம் வேண்டாம் கௌசிக். அவரு எனக்கு இப்படி ஒரு நல்ல குடும்பத்தை குடுத்துருக்கார். அதோட அவரை நான் அப்பானு சொல்லனுமா இல்ல சித்தப்பான்னு சொல்லனுமா? ம்! தெரியல.
மஹாதேவனின் கையை பிடித்துக் கொண்டாள் . அவளுக்கு அப்போது தந்தையின் கை பிடி தேவையாக இருந்தது. அதை புரிந்து கொண்டவர் மகளின் கையை அழுத்தி பிடித்துக் கொண்டார். அவளின் கண்ணீர் பளபளப்பை கண்டவனுக்கும் மனம் கனத்தது . தன் நிலை பற்றிய வார்த்தைகள் வெளி வராமல் முழுங்கி கொண்டான். அவனுக்கு அதை பற்றி சத்யாவிடம் தெரிவிக்க வேண்டும்தான். ஆனால் அதை மற்றவர் முன்னிலையில் பேச மனம் தடுத்தது. சத்யாவிடம் பேசுமுன்னும் அவன் நிறைய யோசிக்க வேண்டும். அதனால் கவனமாக வாயை மூடிக் கொண்டான். அது அவனது இயல்பினால் கடினமாக இருக்கவில்லை .
ஏதாவது சாரிட்டி பேர்ல குடுத்துடு .
அது எவ்ளோன்னு தெரியுமா ?
ஸம் கிரோர்ஸ் !
100C !
ஓ! பெரிய தொகைதான்.
எஸ்! இது ரொம்ப பெரிய வாலியூதான் !
அதற்குள் தியாகு , நீ அத சாரிட்டிக்கு கொடுக்கறது சரிதான். ரொம்ப அவசரமா முடிவெடுக்கணுமா?ஒரு ரெண்டு நாள் யோசிச்சு முடிவெடுக்கலாம். அதுக்கப்புறம் உன்னோட விருப்பம்.
எனக்கும் அதுதான் சரின்னு தோணுது. அதுக்கப்புறம் நீங என்ன முடிவெடுக்கறியோ அது உன்னோட இஷ்டம்.இது அன்னை .
ஐ திங்க் தே ஆர் ரைட். இது கௌசிக்.
ஓகே . ரெண்டு நாள் கழிச்சு பாப்போம்.
அடுத்து வேற என்ன கௌசிக்.
பெரிசா வேற சொல்ல ஒன்னும் இல்ல.
ஒகே நீ போய் ரெஸ்ட் எடு . நாம அப்புறம் பேசிக்கலாம்.
சரிப்பா நானும் அடுப்படிக்கு போறேன்.நீ இங்கையேதான் இருக்கணும். இது உன் வீடு என்றபடி பெரியவர்கள் இருவருமே நகர்ந்து விட்டனர். அவர்களுக்கு பதில் ஏதும் கூறாத கௌசிக்
சத்யா இன்னொரு விஷயம் ,
புருவம் சுருக்கி என்ன என்பது போல பார்த்தாள் .
நான் வேற எங்கையாவது ஹோட்டல் பார்த்துக்கறேன்.
ஏன் அவங்க சொன்னது காதுல விழலையா ?
நோ சத்யா. எனக்கு நான் இங்க கம்பர்ட்டபிளா இல்ல. ப்ளீஸ்.
சரி நான் அப்பா அம்மா கிட்ட சொல்லறேன். இப்ப நீ குளிச்சுட்டு சாப்பிடு. எதுவா இருந்தாலும் நாளைக்கு பார்த்துக்கலாம்.சொல்லி விட்டு தலை குனிந்தபடி சென்று விட்டாள்.
ஏனோ அவனுக்கு அந்த சமயத்தில் தனக்கு வர போகும் துணை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது . நம் எண்ணப்படி எதுவும் நடப்பதில்லையே???
சத்யாவின் சொற்படியே சமத்தாக சாப்பிட்டு உறங்கினான்.


முத்துதான் நிலை கொள்ளாமல் தவித்தான். அவனுக்கு சத்யா வேண்டும். ஆனால் தன்னுடைய தாழ்வு மனப்பான்மையினால் அவளை சூடு சொல் சொல்லி அனுப்பி விட்டான். அதிலும் இரவில் தான் மிகவும் தவித்து போனான். அணைப்புக்கும் , ஆறுதலுக்கும் அவள் தேவைப்பட்டாள் . அது மட்டுமில்லாமல் வளர்ந்த அந்த ஆண் மகனுக்கு தனிமையும் தாங்க முடியவில்லை . இது தாயின் தேடலா இல்லை தாரத்தின் தேடலா ? அவனுக்கு புரியவில்லை. விட்டத்தை பார்த்து படுத்துக் கொண்டவனை பார்த்து நிலா கிண்டல் செய்தது. ஆம் நிலவில் அவன் மனைவி தான் தெரிந்தாள்.
பேரனை பார்த்த ஆச்சிக்கும் அவன் நிலை புரிந்தது. மறு நாளே சத்யாவிடம் பேச வேண்டும் என்று மனதில் குறித்துக் கொண்டாள் .
இங்கே சத்யாவுக்கு நிலவில் அவள் கணவன் தெரிந்தான். ஏன் முத்து என்ன ஏன் வெரட்டினீங்க ? எனக்கு உங்கள பாக்கனும்போல இருக்கு. வாங்களேன் ப்ளீஸ். மனம் அரற்றியது.
நிலவையே பார்த்துக் கொண்டிருந்தவள், அன்னையின் சமாதானத்தில் அவள் மடியிலேயே படுத்துக் கொண்டாள் .
அம்மா அவர் பாவம் இல்ல., அந்த சின்ன குழந்தை அம்மா இல்லாம எப்படி தவிச்சுருக்கும் . அவரு ரொம்ப பாவம்மா .
சரிடா கண்ணா. எதை எதையோ நினைச்சு மனச குழப்பிக்காத. தூங்கு. அம்மா உன் கூடவே இருக்கேன்.
இதை எல்லாம் கௌசிக்கும் பார்த்துக் கொண்டிருந்தான், தன் அறையில் இருந்து. ஏனோ அவன் மனதும் அன்னைக்காக உண்மையான அன்புக்காக ஏங்கியது.
நிலாவை பார்த்த முத்து அப்படியே தன்னை அறியாமலே கண் அயர்ந்தான். அவனுக்காக ஏங்கிய சத்யாவின் மனமோ இங்கே வந்து அவன் தலை கோதியது . அதை அவன் ரசித்தான்.அனுபவித்தான் .உதட்டின் ஓரத்தில் புன்னகை வந்தது.
தன்னால் சத்யா இல்லாமல் இருக்க முடியாது என்பதை அவன் புரிந்து கொண்டான். எப்பாடு பட்டாவது அவளை பார்த்து விட வேண்டும் என்று முடிவெடுத்தான். அதற்க்கு விதியும் சந்தர்ப்பங்களை அமைத்துக் கொடுத்தது.


மகிழ்ச்சியுடன் மீண்டும் வருவாள் தேவதை.........
BaraniUsha
 

Barani Usha

Saha Writer
Messages
67
Reaction score
37
Points
18
இதோ இந்த வாரத்திற்கான சின்ன ud .,
நீ என் தேவதை
அம்மாடி எம்புட்டு அழகு? அதான் அந்த கருவாயன் யாருகிட்டயும் சொல்லாம கொள்ளாம உன்ன கட்டிகிட்டானா ? உங்கள பார்த்தா எங்களுக்கே ஆச வருது ! முத்துவுக்கு ஆச வராம இருக்குமா என்ன ? அனைவரின் புகழ்ச்சியையும் காதில் வாங்கி கொண்டவளுக்கு முகம் சிவந்துக் கிடந்தது. அதையும் அவர்கள் புகழ்ந்தார்கள். உன்ன பார்த்தா பார்த்துகிட்டே இருக்கனும் போலவே இருக்கு. வேலை கிடக்கு என்று அவரவர் மெதுவாக நகர்ந்தனர். அவர்கள் அனைவரும் சென்ற பின்,
செல்வி , அக்கா பாத்தீங்களா நான்தான் உங்க பின்னாடியே சுத்தரேனு சொன்னேங்களே இப்ப இவங்களுக்கு என்ன சொல்லுவீங்க ?
ப்ச் செல்வி, ரொம்பதான் பண்ணறே! செல்லமாக சிணுங்கி, காற்றில் கையை வீசினாள். நீ என்ன எத்தனைதான் சொன்னாலும், நீதான் இந்த உலகத்துலயே 3வது அழகு.
ஆத்தி மத ரெண்டுபேரும் ஆரு ? அதிர்ச்சியானவள், முகத்தாடையில் கை வைத்து ஆச்சர்யப்பட்டாள் .
1ஸ்ட் எங்க அம்மா, செகண்ட் ஆச்சி, 3வது நீ ஓகேவா ?
அப்ப சரி.
இவர்களை வேறு ஒரு ஜோடி கண்களும், கூர்மையாக வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தன. தூரத்தில் இருந்து இன்னும் சரவணனும் பார்த்துக் கொண்டிருந்தான்.
இவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டே வந்தான். செல்வியை முழுங்குபவன் போல ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
சரவணன் கொஞ்சம் பொறுங்க, நான் போயிடறேன். நீங்களாச்சு உங்க பொண்டாட்டி ஆச்சு.
ஒரு பெண்ணை, மற்றவர்கள் எத்தனைதான் புகழ்ந்தாலும், கணவனின் பார்வைக்கும், மெச்சுதலுக்கும் தான் ஏங்கி கிடப்பார்கள் போலும். செல்வியும், அவள் கணவனின் மெச்சுதலுக்கு ஏங்கியபடி கணவனை பார்த்தாள். தள்ளி நின்றிருந்த முத்துவை சத்யாவும் ஏக்கமாக பார்த்தாள். பாராட்டு இல்லையென்றாலும், பார்வையாவது கிடைக்குமா ....

BaraniUsha
 

Barani Usha

Saha Writer
Messages
67
Reaction score
37
Points
18
NYD-63
அடுத்த இரண்டு நாட்களில் அந்த உயில் பணத்திற்கு என்ன பதில் சொல்லுவது என்று அனைவருமே யோசித்து கொண்டிருந்தனர். இதை பற்றி சிவாவிடம் கூறிய போது அவனும் முதலில் வேண்டாம் என்றே கூறினான். இதனால் அனைவருக்குமே குழப்பமாகவே இருந்தது.
அதனால் இன்னும் சிறிது காலம் யோசிக்கலாம் என்று நினைத்தனர். ஆனால் கௌசிக் எத்தனை நாள் இங்கு காத்திருக்க முடியும்? அதுவும் இல்லாமல் அங்கே மருத்துவமனையை , சித்தியை பார்த்தாகவேண்டுமே ?
சத்யா கௌசிக்கிடம் , அவனுக்கும் இவளுக்கும் மாலை தேநீர் கொண்டுவந்தபோது பேசினாள் .
கௌசிக்,
எஸ் சத்யா , டீ குடிக்கிறியா ?
ம்ம்.,
நல்லாருக்கியா .
அதான் பாக்கறியே ? என்ன திடீர்னு?
திடீர்னு இல்ல கௌசிக் , நீ இங்க வந்ததுலேர்ந்து, எங்களுக்கு எல்லாருக்குமே இந்த கேள்வி இருக்கு. அதுவும் அப்பாக்கு. தம்பி பையனை பத்தி ரொம்ப கவலை. நேத்து ராத்திரியெல்லாம் தூங்கவே இல்ல.
அங்க என்னப்பா பிரச்னை? எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லு. யாராவது ஒருத்தர்கிட்ட நம்மளோட கவலைய ஷேர் செஞ்சுக்கணும். அதுக்குதானே நாம எல்லாரும் குடும்பமா இருக்கறது. நாங்களும் உன்னோட குடும்பம்தான் கௌசிக். என்னால எந்த அளவுக்கு உனக்கு உதவ முடியும்ன்னு தெரியல. ஆனா என்னால முடிஞ்சதை நான் செய்வேன்.
சத்யா இப்படி நேரடியாகவே கேட்பாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அதற்கான பதிலுக்கு அவன் தன்னை தயார்படுத்திக்கொள்ளவும் இல்லை .
அங்கே ஒரு சிறு மௌனம் நிலவியது.
ஓகே! கௌசிக், நீ எதுவும் இப்போ சொல்ல வேண்டாம். உனக்கு எப்போ எங்க மேல நம்பிக்கை வருதோ அப்போ சொல்லு. ஆனா நீ சித்திய இப்படி தனியா விட்டுட்டு வந்துருக்கே. நீ இங்க வந்தது அவங்களுக்கு தெரியுமா ?
பதில் சொல்லாமல் வெளியில் வெறித்தான் .
சரி, அங்க ஆஸ்பத்திரியை அவங்களால தனியா பார்த்துக்க முடியுமா ?
அதுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டுதான் வந்துருக்கேன்.
சரி,டீ குடி .
மெதுவாக மிடறு விழுங்கினான். அவனுக்கும் தனது மன பாரங்களை இறக்கி வைக்க வேண்டும் என்று தோன்றியது. இவளும் மெதுவாக தேனீரை சுவைத்தாள் .
அவனுக்கு அந்த சுவையும் சூடும் மனதிற்கு தெம்பை தந்தது. தொண்டையை சரிபடுத்திக் கொண்டான்.
மெதுவாக அங்கே நடந்த விஷயங்களை அவளுக்கு விளக்கினான். இந்த விஷயம் சத்யாவுக்குமே பேரதிர்ச்சிதான். இருப்பினும் இது அவர்கள் இருவருக்குமான சொந்த விஷயம். இதில் மற்றவர் யாரும் தலையிட முடியாது என்று அவளுக்கு தோன்றியது. அதே சமயம் இத்தகைய பேரிடி இவனுக்கு வந்திருக்க வேண்டாம் என்றும் தோன்றியது. பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.
இது ரொம்ப சிக்கலான விஷயம்தான் கௌசிக். உனக்கு இவ்ளோ பெரிய விஷயம் நடந்திருக்க வேண்டாம். ஆனா ஒரு விஷயம்., சித்தப்பா உன்ன எப்பையுமே வேற ஆளா பார்த்ததே இல்ல. சித்தி என்னதான் சூடு சொல் சொன்னாலும், அவருக்கு நீதான் உலகம். அவர் தன்னோட பொறுப்புலேர்ந்து என்னிக்குமே விலகினதே இல்ல.
தெரியும் சத்யா. எனக்கு அம்மாமேலே அடங்காத கோபம் வந்ததுக்கு அதுவும் ஒரு காரணம். என்னென்ன வார்த்தைகள் சொன்னாங்க தெரியுமா? ஏதோ ஒரு இனிஷியல் , அதுக்கென்னன்னு கேட்டாங்க ? நான் என்ன அவ்ளோ ... சொல்லமுடியாமல் கண்களில் குளம் கட்டியது .
அவன் கையை பிடித்து கொண்டாள் , முதுகை நீவினாள். அவனுக்கு அப்போது அந்த அருகாமையும் ஆறுதலும் தேவைப்பட்டது.


தேங்க்ஸ் சத்யா, அன்னிக்கு இந்த மாதிரி யாருமே கைய புடிக்க கூட ஆளில்லாமல் ரொம்ப தவிச்சு போய்ட்டேன். ஏன், எதுக்கு, எப்படி, மதராஸ் வந்தேன், எனக்கே தெரியல.
ஆபிசுக்கு என்ன பண்ண ?
அது எல்லாத்தையும் கொஞ்ச நாளைக்கு இல்ல மாசத்துக்கு பாத்துக்கறதுக்கு ஆள் இருக்கு. நான் இல்லனாலும் மத்தவங்க பார்த்துப்பாங்க. அத பத்தி கவலை படவேண்டாம்.
ஒகே , யோசனையுடன் தலை ஆட்டினாள் .
என்னதான் இருந்தாலும் இந்த நிலமைல நீ சித்திய தனியா விட்டுட்டு வந்தது தப்புடா.
எனக்கும் அது மனஸ உறுத்திட்டே இருக்கு. அதுக்கும் நா ஏதாவது வழி பண்ணறேன்.
ம்ம்! யூ ஷுட் ...
எஸ்.
சத்யா உனக்கு ஏதாவது வேல இருக்கா ?
பரவால்ல சொல்லு.
எனக்கு ஒரு ஆசை.
ம்ம் சொல்லு.
நான் கொஞ்ச நேரம் உன் மடில படுத்துக்கவா ?
சீ. இதென்னடா.
ப்ளீஸ்
வா வந்து படு.
இது என்னடா புது ஆச ?
அது ரிஷி நம்ம ஆஸ்பிடல்லே அட்மிட் ஆகி இருந்தான் இல்ல. அப்போ நீ அவன்கிட்ட ரொம்ப ஓவரா அட்வாண்டேஜ் எடுத்துக்கிட்ட மாதிரி இருந்தது. அப்போ நீங்க லவர்ஸ்னு நினைச்சேன் . சாரி, சாரி அவளின் முறைப்பில் பல முறை சாரி சொன்னான். ஆனா அதுக்கப்புறம்தான் நீங்க கசின்ஸ்னு தெரிஞ்சது. அப்பவே எனக்கு ஒரு சிஸ்டரா உன்கிட்ட பழகனுன்னு ஆச இருந்தது. ஆனா ஏனோ எனக்கு அந்த சூழ்நிலையா இல்ல என்னோட ஈகோவா தெரியல., உன்கிட்ட வரவிடாம தடுத்துடுச்சு.
அம்மா, என்ன ஆசையாதான் பார்த்துக்கிட்டாங்க. பட் ஏனோ என்ன சுத்தி நல்ல நட்புகளும் அமையல, சொந்தங்களும் அமையல. ஹாஸ்பிடல், வீடு. அப்பாவையும் ரொம்ப மிஸ் பண்ணறேன். நிறைய தப்பு பண்ணிருக்கேன். அதுக்கு மன்னிப்பே இல்லை.அவன் சொல்ல சொல்ல இவள் மெதுவாக அவன் தலை கோதிக் கொண்டிருந்தாள். பேசினான். நிறைய பேசினான். அவன் பேசியதில் நிறைய அர்த்தமில்லாததாக இருந்தது. தனக்கு(ம்) புது அல்லது பழைய உறவு கிடைத்ததில் தன்னையும் அறியாமல் நீண்ட நாட்களுக்கு பிறகு உறங்கிப்போனான் அந்த பெரிய சிறுவன்.
சத்யாவின் நினைப்பிலேயே இருந்தவனுக்கு தன் ஆச்சி தன்னை கவனித்து கொண்டிருந்ததை கவனிக்க தவறினான்.
மறுநாள், சரவணனின் தங்கை மதராஸில் வாழ்பவள், அவளின் நாத்தனார் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க அவர்கள் எல்லாரும் சரவணனை பார்க்க வந்தனர். அவர்களுக்கு முத்துவும் சரவணனும் நெருங்கிய நண்பர்கள் என்று நன்றாகவே தெரியும்.அதுவும் இல்லாது சரவணனை எப்படி அவன் தங்கை அண்ணா என்று அழைப்பாளோ அதே போலத்தான் முத்துவும் . அவனும் அண்ணனாகவே இருந்தான். அதனால் அவனுக்கும் பத்திரிக்கை வைத்து விட்டு,
இங்க பாருங்கண்ணா நீங்க எங்களுக்கு அண்ணிய காட்டவே இல்ல. நிச்சயமா கல்யாணத்துக்கு அவங்கள கூட்டிட்டுதான் வரணும். இந்தாங்க இது அண்ணிக்கு புடவை. அவன் கையை பிடித்து புடவையை காலையில் வைத்து அழுத்தினாள் . ஏற்கனவே குழப்பத்தில் இருந்தவனுக்கு இந்த திருமணம் இன்னும் தன் மனையாளை பார்க்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியது.
அவளை பார்க்க ஏதோ ஒரு சாக்கு தேடியவனுக்கு, இது ஒரு காரணமாக போனது. அவன் தோட்டத்தில் நிறைய விளைச்சல் வந்த விஷயத்தையும் அவளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமாக இருந்தது.
தோட்டத்தில் இருந்த சில காய் கறியையும் , விளைந்திருந்த மாம்பழங்களையும் கூடையில் அள்ளி போட்டுக் கொண்டவன் கிளம்புவதற்கே அன்று மாலை ஆகி விட்டது.
தேநீர் எடுத்துக் கொண்டு போனவள் இன்னும் காணவில்லையே என்று அவள் அன்னை வந்து பார்த்த போது அவள் மடியில் கொண்டிருந்தான் கௌசிக். அவனை எடுத்து ஒரு தலையணை முண்டுகொடுத்து விட்டு சத்யாவை எழுப்பி விட்டாள் அன்னை. சத்யாவுக்கு காலெல்லாம் மறத்து போனது.
என்னடி இது? மெதுவா கைபுடிச்சுக்கிட்டு வா.
பாவம்மா அவன். இத்தனை வருசமா தனியாவே இருந்துட்டான் இல்ல அதான் பாசத்துக்கு ரொம்ப ஏங்கி கிடக்கறான்.
அதுக்கு நாம என்ன பண்ண முடியும். அவன் அம்மாதான் யாரோடையும் சேர விடாம பண்ணிட்டா . ஏதோ இப்பவாவது நம்மளோட சேர ஒத்துக்கிட்டாளே ? அதுவே ஆச்சர்யம்தான் ,
இல்லமா அவன் அம்மா சம்மதத்தோட இங்க வரல. சண்டைலேதான் வந்துருக்கான்.
அதிர்ச்சியில் உறைந்தாள் சிமி.....
முத்து சத்யாவை நோக்கி வைத்துக் கொண்டிருக்கிறான்.
மீண்டும் வருவாள் தேவதை.....

BaraniUsha
 

Barani Usha

Saha Writer
Messages
67
Reaction score
37
Points
18
NYD-64

கிளம்பும்போது மனதில் ஏதோ தோன்ற அவளுக்கு பிடித்த இன்னொரு பொருளையும் அவன் தனியாக எடுத்து வைத்துக் கொண்டான். அது என்னனு யோசிச்சுகிட்டே இருங்க. நான் மதராசுக்கு போயிட்டு வந்துடறேன்.

....................................................................................



என்னம்மா சொல்லற?

ஆமாம்! அவனுக்கும் சித்திக்கும் கொஞ்சம் மனத்தாங்கல். என்ன விஷயம்?

பதிலேதும் வரவில்லை.

பதிலாக சத்யா தலையை குனிந்து கொண்டாள் .

சரி விடு, அவனுக்கு எத்தனை நாள் இங்க இருக்கணுமோ இருக்கட்டும்.

அம்மா ,

உன்கிட்ட ஒன்னு கேட்கணும்.

சொல்லு சத்யா

அம்மா தயவுசெஞ்சு இவனையும் ரிஷி மாதிரியே நடத்தணும். அவனுக்கு எந்த குறையும் இல்லாம நீங்கதான் பார்த்துக்கணும்.

என்ன சத்யா இதெல்லாம் நீ சொல்லணுமா?.

சாரி மா நீங்க நல்லாவே பார்த்துப்பீங்கனு இருந்தாலும் ... ஏதோ சாரி சாரிமா...

சொல்லி விட்டு வேகமாக நகர்ந்ததில் இருந்து அவள் ஏதோ குழப்பத்தில் இருக்கிறாள் அல்லது ஏதோ கவலையில் இருக்கிறாள் என்பதை அன்னை புரிந்து கொண்டாள் .

எல்லாருக்கும் பாக்கறா , இவளோட பிரச்சனை எப்பதான் தீருமோ, நினைத்த மாத்திரத்தில் சரவணனிடமிருந்து போன் வந்தது.

முதலில் சரவணன்தான் பேசினான்.

இது டாக்டர் சத்யா அவங்க நம்பர் தானே?

ஆமாப்பா , இது அவங்க நம்பர்தான். அவங்க அம்மா பேசறேன் .

அம்மா நான் இங்க காஞ்சிபுரத்துலேர்ந்து சரவணன் பேசறேன். சும்மாதான் அவங்க எப்படி இருக்காங்கன்னு கேட்கலானு,

நல்லா இருக்காப்பா …

கொஞ்சம் இரு அவள கூப்புடுறேன்.

அம்மா, அவங்க வேணாம், ஆச்சிதான் உங்ககிட்ட பேசணுமாம்.

ஓ! அப்படியா…குடுப்பா…

வணக்கம் ஆச்சி, நல்லா இருக்கீங்களா ?

எனக்கென்னமா வீடு போ போங்குது காடு வா வாங்குது. இந்த பயல வச்சுக்கிட்டு என்னாலதான் போய் சேர முடியல.

ஏங்க இப்படியெல்லாம் பேசறீங்க. நீங்கதானே எங்களுக்கு எல்லாம். வீட்டுல பெரியவங்க. நீங்க இருந்தாத்தானே எங்களுக்கு மனசுக்கு தெம்பு?

அதுசரி ,எல்லாம் நல்லாத்தான் பேசறீங்க? .கெழவி எப்படி இருக்கான்னு உங்க பொண்ணுகூட கவலை படலியே …இங்க இருக்கும்போது உசுராத்தான் இருந்தா…ஆனா பொறவு… போனவ போனவதான் ., இந்த பக்கம் திரும்பிக்கூட பாக்கலியே ?

உங்க மனவருத்தம் எனக்கும் புரியுது ஆச்சி. ஆனா உங்ககிட்டகூட சொல்ல முடியாம ஒரு திருடி மாதிரி ஓடி வந்துட்டோமே, எப்படி அவங்ககிட்ட பேசறதுன்னு அவளுக்கு ரொம்பவே தயக்கமா இருக்கு .

அது சரி சம்மந்தி , அவங்களுக்குள்ள சண்டையினா நாம் பெரியவங்க அப்படியே விட்டுட முடியுமா? உங்க பொண்ணுக்கு இங்க வர எண்ணம் இருக்க இல்லையா ?

அவரின் வார்த்தைகள் ஊசியாக பாய்ந்தது.

இருக்குங்க ஆச்சி...

சரி , அப்ப நீங்க வீட்டு பெரியவங்கதான் நல்ல விதமா பேசி அவளை இங்க கொண்டாந்து விடணும் ?

அது எப்படிங்க ? உங்க வீட்டு பையன்தான் எங்க பொண்ண வேண்டான்னது . என்னவோ எங்கமேல தப்பு மாதிரி பேசறீங்களே?

என்ன ஆத்தா! நான் தப்பா ஏதும் சொல்லல. கண்டிக்கறதுக்கு பெத்தவங்க இல்ல. இந்த கெழவி சொல்லும் அம்பலமேற மாட்டேங்குது… . நீங்கதானே வந்து நல்ல விதமா எடுத்து சொல்லோணும்?

இல்லம்மா ., இந்த விஷயத்துல அவருதான் வந்து எங்க பொண்ண கூட்டிட்டு போகணும்.

உங்க பொண்ணு அவனை விரும்பறாளா ?

மௌனம்.,

வந்து வாழுவாளா ?

மௌனம்.,

சரி நீங்க ஒன்னும் சொல்ல வேணாம். சத்யா இருக்கறாளா .

நான் அவகிட்ட தரேன். ஆனா நீங்க அவகிட்ட பொறுமையாதான் பேசணும்.

சரி.,

முதலில் படபடப்பாக பேசியவர் சத்யாவின் ஆச்சி என்ற வார்த்தையில் உருகினார்.

அதற்குள் போனை தேடி சத்யாவே வந்து அன்னையிடமிருந்து

ஹலோ , ஆச்சி , என்ன மறந்துடீங்களா ?

அந்த குரலில் இருந்தது குற்றமா சலுகையா இரண்டையுமே அவர் ரசித்தார்.

தன் மகளை அவர் எப்படியெல்லாம் வாயால் குத்த போகிறாரோ என்று சிமி பயந்துகொண்டே இருந்தார். போக போக அவர்கள் இருவரும் காதலர்கள் செல்ல சண்டையிடுவது போல பேசிக் கொள்ளவும் சிரித்துக் கொண்டே இரவு உணவை பார்க்க போனார்.

இங்க பாரு சத்யா, அவனுக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு. இல்லாட்டி அவன் ஒரு நாள் கூட உன்ன வீட்டுல வச்சுருக்க மாட்டான். அவன் மனசுல வேற எதையோ வச்சிருக்கான். அதுதான் என்னனு என்னால கண்டுபுடிக்க முடியல.

அவர் மனசுல அந்த ருக்குதான் இருக்க ஆச்சி., அதனாலதான் அவரு என்ன வீட்டை விட்டு வெளில போக சொல்லிட்டாரு.

அந்த ருக்கு இன்னிக்கு நேத்து அவன் பின்னாடி சுத்தலை. அவளை புடிக்குன்னா எதுக்கு உனக்கு தாலி கட்டினான்?

அவங்க., அந்த ஆச்சி சொன்னதுனாலதான்…

அட சீ அப்படியெல்லாம் மத்தவங்க சொன்னதுக்கெல்லாம் அவன் எதையுமே செய்ய மாட்டான்.

ஆச்சி சொன்னதை காது கேட்டுக் கொண்டது., ஆனால் மூளையும் மனதும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவள் எந்த நிலையில் விரட்டப்பட்டாள் என்பது அவளுக்குத்தான் நன்றாகவே தெரியுமே. இருப்பினும், ஆச்சியிடம் எதுவும் சொல்லாமல் வாய் மூடி இருந்தாள். ஆனால் ஆச்சி விடவில்லை.

என்ன நான் சொன்னத உன்னால நம்ப முடியலீல்ல? சரி., இப்ப அவன் ஏதோ அவன் பிரண்ட பாக்க மதராசுக்கு வந்துருக்கான். அவன் உன்னையும் பாக்க வருவான் பாரு.

இருக்குமோ? கேட்ட போதே மனதில் பூ மலர்ந்தது. அந்த மணம் அவளுக்கே நாசியை துளைப்பது போல இருந்தது.

இந்த கட்ட வேகறதுக்குள்ள உங்களோட குழந்தையை நான் கொஞ்சணும்.

ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க? இப்படியெல்லாம் பேசினீங்கன்னா நான் இனிமே எப்பையுமே பேசமாட்டேன் , அதிகாரமாக மிரட்டினாள் .

சரி, சரி, நான் உங்கிட்ட பொறவு பேசறேன்.

ஆச்சி ., உங்களுக்கு ஏன் மேல கோபம் எதுவுமில்லையே ?

எதுக்கு ?

அன்னிக்கு நான் உங்ககிட்ட சொல்ல கூட இல்ல. எனக்கு மனசெல்லாம் வேதனை.என் மேல கோவிச்சுக்காதீங்க ? ப்ளீஸ் !

அட தங்கமே! எனக்கு அவன்கிட்ட கூட கோபம் வரும். உன்கிட்ட வராதுடி . நீ என்னோட பேரம் பொண்டாட்டி இல்ல. என்னோட பொண்ணு. இல்லனா அவனை அம்மா மாதிரி நீ கவனிச்சுக்குவியா ?

அது என்னோட கடமை ஆச்சி,

சரிடா ,பொறவு பேசுவோம் …

சரிங்க ஆச்சி,நீங்க உடம்ப பார்த்துக்கோங்க.

சரிடி, என் ராசாத்தி.

அவரிடம் பேசியது மனதிற்கு இதமாக இருந்தது . அதற்குள் கௌசிக் மாடியில் இருந்து இறங்கி வந்தான்.

ஹாய் கௌசிக், நல்ல தூக்கமா? எஸ் சத்யா, தேங்க்ஸ் .

சொல்லிக்கொண்டே சோபாவில் அமர்ந்திருந்தவளில் மடியில் வந்து மீண்டும் படுத்துக் கொண்டான்.

இப்ப இல்ல எழுந்துரு . போய் பேஸ் வாஷ் பஞ்சிட்டு டிபன் சாப்பிடு. இல்லாட்டி நீ மறுபடியும் தூங்கிடுவ. அவனை கட்டாயமாக எழுப்பி அனுப்பினாள் .

என்னங்க மேடம், என்னோட சலுகையெல்லம் புது தம்பிக்கு போய்டுச்சா? இதெல்லாம் நல்லாவே இல்ல.

நான்தான் பழைய தம்பி நீதான் புதுசு சொல்லிக்கொண்டே வந்தான் கௌசிக்.

என்ன இது எதுக்கு ரெண்டு பேருக்கும் சண்டை ?

நீ ஒருபக்கம் படுத்துக்கோ அவன் இன்னொரு பக்கம்?

அது சரி, உங்க வீட்டுக்காரர் வந்து என்ன அடிக்கவா ? டக்கென்று உதட்டை கடித்துக் கொண்டான் ரிஷி.

நீ எங்க அவரை பார்த்த? அவரு இங்கையா இருக்கறார்?

இவ வேற பயங்கர ஷார்ப்பா இருக்காளே ! சமாளி ரிஷி சமாளி, சீக்கிரம் ஏதாவது யோசி. இல்ல ....அவர் பார்த்தா ரெண்டுபேரையும் வெளுத்துருவாரு ன்னு சொன்னேன்.

சரிடா ரம்யா எங்க ?

அவ வரல,பேசிக் கொண்டே அனைவரும் சேர்ந்து உண்டனர்.

சிவா எப்ப வரான்? .

இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான்.

பெரிப்பா எங்க ?

அவரோட பிரண்டு வீட்டுக்கு போயிருக்கார்.

ரிஷியும் கிளம்பி விட்டான். கௌசிக்கும் ரூமுக்கு சென்று விட்டான்.

சத்யா கங்காவுக்கும், சிமிக்கும் உணவு பரிமாறினாள்.

ஆச்சி சொன்னது மனதில் முணுமுணுவென்று அரிக்க ஆரம்பித்தது.

அவர் வருவாரா ? இங்க சென்னைக்கு வந்துருக்காரா ? இங்க வந்தாலும் எதுக்கு என்ன பாக்க வரணும்?

ஒவ்வொரு கேள்வியாக மனதில் தோன்ற ஆரம்பித்தது . அவள் தன்னை வெளிக்காட்டாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டாள். சிறிது நேரத்தில் அவளுக்கே மூச்சு முட்ட ஆரம்பித்தது.

நீ வேணா போய் படும்மா ,அப்பா, சிவாவை நான் பாத்துக்கறேன்.

சரிம்மா .

வழக்கம்போல இரவு குளித்துவிட்டு, அடர் நீலத்தில் இருந்த இரவு உடையை மாட்டிக் கொண்டாள். அவனை பற்றியே நினைத்து கொண்டிருந்தவளுக்கு கன்னத்தில் செம்மை பூத்தது... அவளின் வெட்க சிவப்பை அவளே கண்ணாடியில் பார்த்து பூரித்து போனாள், தன்னை வெறுப்பவன் மீது தனக்கு ஏன் இத்தனை காதல்? அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது

காலிங் பெல் சத்தம் கேட்டதும் மனம் பரபரத்தது.

காதலனாக மாறிய கணவனுக்காய் ஏங்கி கிடக்கும் தேவதை


மீண்டும் வருவாள்............
 
Last edited by a moderator:

R.Nivetha

Member
Messages
35
Reaction score
23
Points
18
NYD-64

கிளம்பும்போது மனதில் ஏதோ தோன்ற அவளுக்கு பிடித்த இன்னொரு பொருளையும் அவன் தனியாக எடுத்து வைத்துக் கொண்டான். அது என்னனு யோசிச்சுகிட்டே இருங்க. நான் மதராசுக்கு போயிட்டு வந்துடறேன்.

....................................................................................



என்னம்மா சொல்லற?

ஆமாம்! அவனுக்கும் சித்திக்கும் கொஞ்சம் மனத்தாங்கல். என்ன விஷயம்?

பதிலேதும் வரவில்லை.

பதிலாக சத்யா தலையை குனிந்து கொண்டாள் .

சரி விடு, அவனுக்கு எத்தனை நாள் இங்க இருக்கணுமோ இருக்கட்டும்.

அம்மா ,

உன்கிட்ட ஒன்னு கேட்கணும்.

சொல்லு சத்யா

அம்மா தயவுசெஞ்சு இவனையும் ரிஷி மாதிரியே நடத்தணும். அவனுக்கு எந்த குறையும் இல்லாம நீங்கதான் பார்த்துக்கணும்.

என்ன சத்யா இதெல்லாம் நீ சொல்லணுமா?.

சாரி மா நீங்க நல்லாவே பார்த்துப்பீங்கனு இருந்தாலும் ... ஏதோ சாரி சாரிமா...

சொல்லி விட்டு வேகமாக நகர்ந்ததில் இருந்து அவள் ஏதோ குழப்பத்தில் இருக்கிறாள் அல்லது ஏதோ கவலையில் இருக்கிறாள் என்பதை அன்னை புரிந்து கொண்டாள் .

எல்லாருக்கும் பாக்கறா , இவளோட பிரச்சனை எப்பதான் தீருமோ, நினைத்த மாத்திரத்தில் சரவணனிடமிருந்து போன் வந்தது.

முதலில் சரவணன்தான் பேசினான்.

இது டாக்டர் சத்யா அவங்க நம்பர் தானே?

ஆமாப்பா , இது அவங்க நம்பர்தான். அவங்க அம்மா பேசறேன் .

அம்மா நான் இங்க காஞ்சிபுரத்துலேர்ந்து சரவணன் பேசறேன். சும்மாதான் அவங்க எப்படி இருக்காங்கன்னு கேட்கலானு,

நல்லா இருக்காப்பா …

கொஞ்சம் இரு அவள கூப்புடுறேன்.

அம்மா, அவங்க வேணாம், ஆச்சிதான் உங்ககிட்ட பேசணுமாம்.

ஓ! அப்படியா…குடுப்பா…

வணக்கம் ஆச்சி, நல்லா இருக்கீங்களா ?

எனக்கென்னமா வீடு போ போங்குது காடு வா வாங்குது. இந்த பயல வச்சுக்கிட்டு என்னாலதான் போய் சேர முடியல.

ஏங்க இப்படியெல்லாம் பேசறீங்க. நீங்கதானே எங்களுக்கு எல்லாம். வீட்டுல பெரியவங்க. நீங்க இருந்தாத்தானே எங்களுக்கு மனசுக்கு தெம்பு?

அதுசரி ,எல்லாம் நல்லாத்தான் பேசறீங்க? .கெழவி எப்படி இருக்கான்னு உங்க பொண்ணுகூட கவலை படலியே …இங்க இருக்கும்போது உசுராத்தான் இருந்தா…ஆனா பொறவு… போனவ போனவதான் ., இந்த பக்கம் திரும்பிக்கூட பாக்கலியே ?

உங்க மனவருத்தம் எனக்கும் புரியுது ஆச்சி. ஆனா உங்ககிட்டகூட சொல்ல முடியாம ஒரு திருடி மாதிரி ஓடி வந்துட்டோமே, எப்படி அவங்ககிட்ட பேசறதுன்னு அவளுக்கு ரொம்பவே தயக்கமா இருக்கு .

அது சரி சம்மந்தி , அவங்களுக்குள்ள சண்டையினா நாம் பெரியவங்க அப்படியே விட்டுட முடியுமா? உங்க பொண்ணுக்கு இங்க வர எண்ணம் இருக்க இல்லையா ?

அவரின் வார்த்தைகள் ஊசியாக பாய்ந்தது.

இருக்குங்க ஆச்சி...

சரி , அப்ப நீங்க வீட்டு பெரியவங்கதான் நல்ல விதமா பேசி அவளை இங்க கொண்டாந்து விடணும் ?

அது எப்படிங்க ? உங்க வீட்டு பையன்தான் எங்க பொண்ண வேண்டான்னது . என்னவோ எங்கமேல தப்பு மாதிரி பேசறீங்களே?

என்ன ஆத்தா! நான் தப்பா ஏதும் சொல்லல. கண்டிக்கறதுக்கு பெத்தவங்க இல்ல. இந்த கெழவி சொல்லும் அம்பலமேற மாட்டேங்குது… . நீங்கதானே வந்து நல்ல விதமா எடுத்து சொல்லோணும்?

இல்லம்மா ., இந்த விஷயத்துல அவருதான் வந்து எங்க பொண்ண கூட்டிட்டு போகணும்.

உங்க பொண்ணு அவனை விரும்பறாளா ?

மௌனம்.,

வந்து வாழுவாளா ?

மௌனம்.,

சரி நீங்க ஒன்னும் சொல்ல வேணாம். சத்யா இருக்கறாளா .

நான் அவகிட்ட தரேன். ஆனா நீங்க அவகிட்ட பொறுமையாதான் பேசணும்.

சரி.,

முதலில் படபடப்பாக பேசியவர் சத்யாவின் ஆச்சி என்ற வார்த்தையில் உருகினார்.

அதற்குள் போனை தேடி சத்யாவே வந்து அன்னையிடமிருந்து

ஹலோ , ஆச்சி , என்ன மறந்துடீங்களா ?

அந்த குரலில் இருந்தது குற்றமா சலுகையா இரண்டையுமே அவர் ரசித்தார்.

தன் மகளை அவர் எப்படியெல்லாம் வாயால் குத்த போகிறாரோ என்று சிமி பயந்துகொண்டே இருந்தார். போக போக அவர்கள் இருவரும் காதலர்கள் செல்ல சண்டையிடுவது போல பேசிக் கொள்ளவும் சிரித்துக் கொண்டே இரவு உணவை பார்க்க போனார்.

இங்க பாரு சத்யா, அவனுக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு. இல்லாட்டி அவன் ஒரு நாள் கூட உன்ன வீட்டுல வச்சுருக்க மாட்டான். அவன் மனசுல வேற எதையோ வச்சிருக்கான். அதுதான் என்னனு என்னால கண்டுபுடிக்க முடியல.

அவர் மனசுல அந்த ருக்குதான் இருக்க ஆச்சி., அதனாலதான் அவரு என்ன வீட்டை விட்டு வெளில போக சொல்லிட்டாரு.

அந்த ருக்கு இன்னிக்கு நேத்து அவன் பின்னாடி சுத்தலை. அவளை புடிக்குன்னா எதுக்கு உனக்கு தாலி கட்டினான்?

அவங்க., அந்த ஆச்சி சொன்னதுனாலதான்…

அட சீ அப்படியெல்லாம் மத்தவங்க சொன்னதுக்கெல்லாம் அவன் எதையுமே செய்ய மாட்டான்.

ஆச்சி சொன்னதை காது கேட்டுக் கொண்டது., ஆனால் மூளையும் மனதும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவள் எந்த நிலையில் விரட்டப்பட்டாள் என்பது அவளுக்குத்தான் நன்றாகவே தெரியுமே. இருப்பினும், ஆச்சியிடம் எதுவும் சொல்லாமல் வாய் மூடி இருந்தாள். ஆனால் ஆச்சி விடவில்லை.

என்ன நான் சொன்னத உன்னால நம்ப முடியலீல்ல? சரி., இப்ப அவன் ஏதோ அவன் பிரண்ட பாக்க மதராசுக்கு வந்துருக்கான். அவன் உன்னையும் பாக்க வருவான் பாரு.

இருக்குமோ? கேட்ட போதே மனதில் பூ மலர்ந்தது. அந்த மணம் அவளுக்கே நாசியை துளைப்பது போல இருந்தது.

இந்த கட்ட வேகறதுக்குள்ள உங்களோட குழந்தையை நான் கொஞ்சணும்.

ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க? இப்படியெல்லாம் பேசினீங்கன்னா நான் இனிமே எப்பையுமே பேசமாட்டேன் , அதிகாரமாக மிரட்டினாள் .

சரி, சரி, நான் உங்கிட்ட பொறவு பேசறேன்.

ஆச்சி ., உங்களுக்கு ஏன் மேல கோபம் எதுவுமில்லையே ?

எதுக்கு ?

அன்னிக்கு நான் உங்ககிட்ட சொல்ல கூட இல்ல. எனக்கு மனசெல்லாம் வேதனை.என் மேல கோவிச்சுக்காதீங்க ? ப்ளீஸ் !

அட தங்கமே! எனக்கு அவன்கிட்ட கூட கோபம் வரும். உன்கிட்ட வராதுடி . நீ என்னோட பேரம் பொண்டாட்டி இல்ல. என்னோட பொண்ணு. இல்லனா அவனை அம்மா மாதிரி நீ கவனிச்சுக்குவியா ?

அது என்னோட கடமை ஆச்சி,

சரிடா ,பொறவு பேசுவோம் …

சரிங்க ஆச்சி,நீங்க உடம்ப பார்த்துக்கோங்க.

சரிடி, என் ராசாத்தி.

அவரிடம் பேசியது மனதிற்கு இதமாக இருந்தது . அதற்குள் கௌசிக் மாடியில் இருந்து இறங்கி வந்தான்.

ஹாய் கௌசிக், நல்ல தூக்கமா? எஸ் சத்யா, தேங்க்ஸ் .

சொல்லிக்கொண்டே சோபாவில் அமர்ந்திருந்தவளில் மடியில் வந்து மீண்டும் படுத்துக் கொண்டான்.

இப்ப இல்ல எழுந்துரு . போய் பேஸ் வாஷ் பஞ்சிட்டு டிபன் சாப்பிடு. இல்லாட்டி நீ மறுபடியும் தூங்கிடுவ. அவனை கட்டாயமாக எழுப்பி அனுப்பினாள் .

என்னங்க மேடம், என்னோட சலுகையெல்லம் புது தம்பிக்கு போய்டுச்சா? இதெல்லாம் நல்லாவே இல்ல.

நான்தான் பழைய தம்பி நீதான் புதுசு சொல்லிக்கொண்டே வந்தான் கௌசிக்.

என்ன இது எதுக்கு ரெண்டு பேருக்கும் சண்டை ?

நீ ஒருபக்கம் படுத்துக்கோ அவன் இன்னொரு பக்கம்?

அது சரி, உங்க வீட்டுக்காரர் வந்து என்ன அடிக்கவா ? டக்கென்று உதட்டை கடித்துக் கொண்டான் ரிஷி.

நீ எங்க அவரை பார்த்த? அவரு இங்கையா இருக்கறார்?

இவ வேற பயங்கர ஷார்ப்பா இருக்காளே ! சமாளி ரிஷி சமாளி, சீக்கிரம் ஏதாவது யோசி. இல்ல ....அவர் பார்த்தா ரெண்டுபேரையும் வெளுத்துருவாரு ன்னு சொன்னேன்.

சரிடா ரம்யா எங்க ?

அவ வரல,பேசிக் கொண்டே அனைவரும் சேர்ந்து உண்டனர்.

சிவா எப்ப வரான்? .

இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான்.

பெரிப்பா எங்க ?

அவரோட பிரண்டு வீட்டுக்கு போயிருக்கார்.

ரிஷியும் கிளம்பி விட்டான். கௌசிக்கும் ரூமுக்கு சென்று விட்டான்.

சத்யா கங்காவுக்கும், சிமிக்கும் உணவு பரிமாறினாள்.

ஆச்சி சொன்னது மனதில் முணுமுணுவென்று அரிக்க ஆரம்பித்தது.

அவர் வருவாரா ? இங்க சென்னைக்கு வந்துருக்காரா ? இங்க வந்தாலும் எதுக்கு என்ன பாக்க வரணும்?

ஒவ்வொரு கேள்வியாக மனதில் தோன்ற ஆரம்பித்தது . அவள் தன்னை வெளிக்காட்டாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டாள். சிறிது நேரத்தில் அவளுக்கே மூச்சு முட்ட ஆரம்பித்தது.

நீ வேணா போய் படும்மா ,அப்பா, சிவாவை நான் பாத்துக்கறேன்.

சரிம்மா .

வழக்கம்போல இரவு குளித்துவிட்டு, அடர் நீலத்தில் இருந்த இரவு உடையை மாட்டிக் கொண்டாள். அவனை பற்றியே நினைத்து கொண்டிருந்தவளுக்கு கன்னத்தில் செம்மை பூத்தது... அவளின் வெட்க சிவப்பை அவளே கண்ணாடியில் பார்த்து பூரித்து போனாள், தன்னை வெறுப்பவன் மீது தனக்கு ஏன் இத்தனை காதல்? அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது

காலிங் பெல் சத்தம் கேட்டதும் மனம் பரபரத்தது.

காதலனாக மாறிய கணவனுக்காய் ஏங்கி கிடக்கும் தேவதை


மீண்டும் வருவாள்............
Waiting for your next ud sis.come soon sis
 

Latest posts

New Threads

Top Bottom