Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Regular-Update உயிர் துடிப்பாய் நீ! கதை திரி

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
431
Reaction score
661
Points
93
உயிர் துடிப்பாய் நீ!


அத்தியாயம் 32


மணியரசி வந்து உண்மையைச் சொல்லி சென்றபின் மிகன் மனதளவில் நொறுங்கிப் போய்விட்டான்..



அடுத்து என்ன செய்வதென்றும் தெரியாமல், தன் மனதோடும் போராட முடியாமல் கண்களை மூடி படுத்திருந்தான்.




திகழொளியை அவன் இத்தனை நாள் பேசிய பேச்சுக்கள் எல்லாம் அப்போது நியாபகம் வந்து, அவன் மனதை வாள் கொண்டு அறுத்தது. அந்த நொடி சொல்ல முடியாத மரணவேதனையை அனுபவித்தான்.


மரணத்தின் கடைசி நொடி கூட இப்படி வலிக்குமா என்று தெரியாது..ஆனால் அவன் அப்போது அப்படியொரு வலியை அனுபவித்தபடி படுத்து இருந்தான்.




உலகமாறனோ மருமகள் சென்ற பின் மகன் அறையை விட்டே வெளியில் வரவில்லையே? என்று நினைத்தபடி அவனைத் தேடிச் சென்றார்.



மகன் படுத்திருந்த கோலமே அவனின் வேதனையைச் அவருக்கு சொல்லாமல் சொல்லியது..



மெல்ல மகனின் அருகில் அமர்ந்தவர் அவனின் தலையை மென்மையாக வருடினார்..



தந்தையின் மென்மையான வருடலில் கண்விழித்தவன்.தந்தையை அருகில் கண்டுதும் தலையை குனிந்த படி எழுந்து அமர்ந்தான்.



தப்பு செய்த குழந்தையாய் மகன் அமர்ந்திருந்த விதமே அவருக்கு வருத்தத்தை கொடுத்தது.



சில நொடிகள் அமைதியாய் அமர்ந்திருந்தவர் மெல்ல பேச்சு எடுத்தார் " என்னப்பா பிரச்சினை..?ஏன் திகழி அவங்க அம்மா விட்டீற்கு தீடிர்ன்னு போனாள்..?என்றவரிடம் மகனோ பதில் எதுவும் சொல்லாமல் மெளனம் சாதித்தான்.



"ஏதாவது சொல்லுப் பா.. இப்படி பதில் பேசாமல் உட்கார்ந்திருந்தால் என்ன அர்த்தம்? உனக்குள்ளேயே அத்தனையும் போட்டு அழுத்திக்காதே..! இத்தனை வருடம் கழித்தும் திகழியைத் தான் கல்யாணம் செயதுக்குவேன்னு சொன்னே. நானும் நீ நல்லா இருந்தா போதும்ன்னு அவங்க வீட்லே பேசி கல்யாணமும் பண்ணி வச்சுட்டேன்..நீங்க தான் பா வாழனும்..! என்ன பிரச்சினையானாலும் பேசிதீர்த்துகனும்.."என்றார் வருத்ததுடன்.



அப்போதும் தந்தையின் பேச்சுக்கு பதில் பேசாமல் தலையை குனிந்த படியே அமர்ந்திருந்தான் மிகன்.



உலகமாறனோ நெடிய மூச்சுடன் " நீ இன்னும் நீரன் பிரச்சினையை மறக்கவில்லையா..? திகழி நல்ல பெண் பா..! அவளை தள்ளி இருந்து பார்த்த எனக்கே புரியுது! அவளை நேசித்த உனக்கு அவள் குணம் புரியவில்லையா..?"என்ற தந்தையை அடிப்பட்ட குழந்தையாய் நிமிர்ந்து பார்த்தான் மிகன்.



" தம்பி உன்னை நம்பி வந்தவளை நீ தான் பார்த்துக்கணும்.நீரன் குணம் மோசம்ன்னு எனக்கு எப்பவோ தெரியும். உன் அத்தைக்காக நான் அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன்.ஆனால், நான் இத்தனை நாள் பொறுத்திருந்தது தப்புன்னு இப்ப தோணுது . அவனால் என் மகனின் வாழ்க்கையே இப்ப கேள்விக் குறியாகிடுச்சே..?" என்று கலங்கிப் பேசிய வரை திகைத்துப் பார்த்தான் மகன்.



" தம்பி நீ தான்ப்பா என் உயிர் ! உனக்காக தான் நான் வாழ்வதே..! திகழியுடன் நீ சந்தோஷமா வாழனும் ..! அதை நான் பார்க்கனும்..! என் பேரன் பேத்தியை எல்லாம் நான் பார்த்ததுட்டு தான் உங்கம்மா கிட்ட போகனும்ன்னு நினைச்சேன். ஆனால் நீ என்னை இப்பவே போகவச்சுடாதே..!" என்றவரிடம்..மகனோ "அப்பா.." என்றான் குரல் தழுதழுக்க..



"தம்பி என்ன பிரச்சினை இருந்தாலும் ,முதல்லே நீ போய் திகழியை இங்கே கூட்டிட்டு வா..! நம் வீட்டிற்கு வாழ வந்த பொண்ணு ! கண் கலங்கிட்டு அவங்க வீட்டுக்கு போனா? அது நல்லதில்லை ..! அந்த பாவம் ஏழெழு ஜென்மம் எடுத்தாலும் தீராது .."என்றார் வருத்தத்துடன்..




மகனோ பதில் பேச முடியாமல் "அப்பா ..!"என்று குழந்தை போல் தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டான்..



அவரோ, ஆறுதலாக மகனை தட்டிக் கொடுத்தபடி "இங்க பாருப்பா உன் மனசை நீரன் ஏதோ சொல்லி கெடுத்து வச்சு இருக்கான். போனவனைப் பற்றி பேசி இனி பயனில்லை..நீங்க வாழவேண்டியவங்க ! திகழி தான் உனக்கு ஏத்த பொண்ணு.! .என்ன பிரச்சினை இருந்தாலும் அவ கிட்ட பேசி சமாதானப்படுத்திக் கூட்டிட்டு வா..!"என்றார் கட்டளையாக..



அத்தனை நேரம் அமைதியாக இருந்தவன்,அதற்கு மேல் தாங்க முடியாமல் தந்தையிடம் தன் மனதிலிருந்ததை எல்லாம் கொட்டித் தீர்த்தான். தன் அத்தை வந்து சொல்லிச் சென்ற உண்மைகளையும் சொன்னான்.



உலகமாறனோ, அதை கேட்டு ஒரு நொடி அதிர்ந்து தான் போனார்! தான் நினைத்ததை விட பிரச்சினை பெரிதாக இருக்கே..என்று நினைத்தார்.



தன் தங்கையை இங்கே அழைத்தே வந்து இருக்க கூடாதா ? என்று முதல் முறையாக எண்ணியவர் மகனிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல்..


" தம்பி நான் உன்னை புத்திசாலின்னு நினைச்சேனே ! ஆனால், நீ இப்படி ஒரு அடி முட்டாளாக இருந்திருக்கியே ! திகழி கேட்டதில் என்ன தப்பு? நீரன் சொன்னதை நம்புனீயே! ஒரு முறையாவது திகழியிடம் என்ன நடந்ததுன்னு கேட்டாயா? விசாரிச்சீயா? கட்டிய மனைவியை நம்பவில்லை!எவனோ சொன்னதை நம்பி உன் வாழ்க்கையில் நீயே மண்ணள்ளி போட்டுட்டீயே..!" என்றார் கோவமாக..



தந்தையின் கோபத்தைக் கண்டு "அப்பா.."என்றான் எழுப்பாத குரலில்..



அவரோ ,"நான் தான் தப்பு பண்ணிட்டேன்..உங்க அம்மா போனபின் நான் இன்னும் உன்னை சரியாக கவனித்து இருக்கனும். அம்மா பாசத்திற்கு நீ ஏங்க கூடாதுன்னு உங்க அத்தையை இங்கே கூட்டி வந்து தப்பு பண்ணிட்டேன்.நீரனைப் பற்றியும் எதுவுமே தெரியாமல் இருந்து விட்டேன். புத்திர பாசத்தில் உங்க அத்தையும் எல்லாத்தையும் மறைச்சுட்டா..இனி யாரை குறை சொல்லி என்ன செய்ய..உன் வாழ்க்கை உன் பொறுப்பு ! இனியாவது போய் உன் பொண்ட்டாட்டியை கூட்டிட்டு வந்து ஒழுங்கா குடும்ப நடுத்துற‌ வழியைப் பாரு !"'என்று மகனுக்கு புத்தி சொன்னார்.



அவனோ, தலை குனிந்த படியே அமர்ந்திருந்தான்.தந்தையின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க கூட அவனுக்கு தைரியம் வரவில்லை ..



மகன் அமைதியாகவே இருப்பதைக் கண்டு.. "நீயெல்லாம் என்னத்தே காதலிச்சையோ தெரியலே.."என்று சலித்துக் கொண்டே எழுந்தார்.



அவனோ "அப்பா.." என்றான் வேறு எதுவும் பேசாமல்..


"செய்யறதை எல்லாம் செய்துட்டு அப்பா..அப்பான்னா என்ன அர்த்தம்..எழுந்து போய் முதல்லே திகழியே கூட்டிட்டு வா.." என்று எரிச்சலுடன் பேசியவரிடம்..


"அப்பா நான் எந்த முகத்தை வைத்துட்டு போறது எனக்கு கஷ்டமா இருக்கு பா.."


" எந்த முகத்தை வச்சுட்டு போறதுன்னா ? இந்த முகத்தை வச்சுட்டுத் தான் போகனும்.. உப்பு திண்ணா தண்ணீ குடிச்சுத் தான் ஆகனும்.. போய் அவ கையிலே ! கால்லே ! விழுந்தாவது கூட்டிட்டு வா!" என்றார் சற்று கோபமாக..



மிகனோ, பதில் சொல்லாமல் சில நொடிகள் அமைதியாக இருந்தவன் இனியும் அமைதியாக இருந்தால் அப்பாவுக்கும் கோபம் வரும் என்று எண்ணியபடி "சரி போறேன்..! "என்றான் தந்தையிடம் சமாதானமாக..



"ம்..! "என்றவர் ஒரு நெடிய பெரூமூச்சுடன் அறையை விட்டுச் சென்றார்.



மிகனோ, அதன்பிறகு வேகமாக கிளம்பி தன் வண்டியை எடுத்துக் கொண்டு, மாமனார் வீடு நோக்கிப் பறந்தான்.



திகழொளி வீட்டிற்கு பெட்டியுடன் வந்தவுடன் பெற்றவர்களுக்கு புரிந்துவிட்டது..கணவன் மனைவிக்குள் ஏதோ சண்டை என்று..


தாய், தந்தையிடம் எதுவும் சொல்லாமல் தன் அறையில் தஞ்சம் புகுந்துந்தவள் ! தம்பியிடம் மட்டும் சுருக்கமாக நடந்ததைச் சொன்னாள்.



அமுதனோ, தமக்கை சொன்னதைக் கேட்டவுடன் வானுக்கும், பூமிக்கும் குதித்தான்.


"அந்த ஆளு திருந்தவே மாட்டாரா? அன்னைக்கே அந்த ஆளை நம்பாதேனேன்னு சொன்னேன் கேட்டீயா? இப்ப நீ தானே கஷ்டப்படறே.." என்று தமக்கையை கடிந்து கொண்டான்.



"அம்மு நானே நொந்து போய் வந்திருக்கேன்! நீயும் என்னைப் நோகடிக்காதே ! என்னால் தாங்க முடியாது.." என்று கண்கலங்கியவளிடம்..



" ஏதோ கோவத்தில் பேசிட்டேன்.. சாரிக்கா ! நீ கவலைப்படாதே எல்லாம் சரியாகும் ,,"என்று அப்போதைக்கு ஆறுதலாக பேசினான்.



திகழொளியோ, அதற்கு மேல் எதுவும் பேசாமல் அப்படியே படுத்து கண்களை மூடிக்கொணடாள்..



அமுதனும் அவளை தொந்தரவு செய்யாமல் அறையை விட்டு வெளியில் வந்தவன்‌, கவலையாக அமர்ந்திருந்த தாய், தந்தையிடம் "சின்ன சண்டை தான் சீக்கிரம் சரியாய்டும்.." என்று பொய்யுரைத்தான்.இப்போதைக்கு அவர்களையும் வேதனைப்படுத்த வேண்டாமென்று..



திகழொளியோ ,இருட்டும் வரை அப்படியே தான் படுத்திருந்தாள்..



அமுதனுக்கும் என்ன செய்வதென்று தெரியாமல், தலையில் கை வைத்தபடி வெளியில் மாடி படிக்கட்டில் அமர்ந்திருந்தான்.



அப்போது மிகன் வேகமாக வந்து வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான். வண்டிச் சத்தம் கேட்டு எழுந்த அமுதன் மிகனைப் பார்த்ததும் வேகமாக அவனிடம் சென்று "நில்லுங்க ! இப்ப எதுக்கு இங்கே வந்து இருக்கீங்க..?" என்றான் கோபமாக..


"அமுதா உங்கிட்ட இப்ப எதுவும் பேசற மனநிலையில் நான் இல்லை..நான் உடனே உங்க அக்காவே பார்த்துப் பேசனும்..!"


"எதுக்கு இன்னும் அவளை சாவடிக்கவா..?ஏன் இப்படி அவளை உயிரோடு கொல்றீங்க..? உங்களே காதலிச்சதை தவிர அவ வேறே என்ன தப்பு செய்தா..?"


"அமுதா நானே நொந்துபோய் வந்து இருக்கேன்! நீயும் என்னை நோகடிக்காதே..! ப்ளீஸ் வழி விடு! நான் திகழியை இப்ப பார்த்தே ஆகனும்! என்னை நம்பு! இனி உங்க அக்காவை நான் என் கண்ணுக்குள் வச்சு பார்த்துப்பேன்..!"என்றான் மிகன்..



அமுதனுக்கோ, மிகனின் கண்களில் தெரிந்த வலி மனதை ஏதோ செய்ய..எப்படியோ அக்கா நல்லா இருந்தா போதும்! என்று வழி விட்டவன்.. "அக்கா அவ ரூம்லே இருக்கா.." என்றான்.



அதை கேட்டு தலையை ஆட்டிவிட்டு வேகமாக உள்ளே செல்ல திரும்பிய மிகனை "ஒரு நிமிடம்!" என்று தடுத்து நிறுத்திய அமுதன்..


"நீங்க சொல்றது உண்மைன்னு இப்ப கூட நம்பி அக்காவை பார்க்க அனுப்புறேன். ஆனால், மறுபடியும் எங்க அக்கா கண்ணுலே தண்ணீயே பார்த்தேன்! நான் மனுசனா இருக்க மாட்டேன்.."என்று எச்சரித்தான்.



மிகனோ, ஒரு நொடி கண்களை இறுக மூடித்திறந்தவன் பதிலே பேசாமல் உள்ளே சென்றான்.



வரவேற்பறையிலிருந்த பொன்னியும், அறவாணனும் தங்கள் மாப்பிள்ளையை அந்த நேரத்தில் பார்த்து திகைத்தாளும்‌, எதையும் காட்டிக் கொள்ளாமல் இன் முகமாகவே வரவேற்றனர்.


அவர்களிடம் "திகழி எங்கே..?" என்று கேட்டான்..


அவர்களோ " அவ ரூமுலே இருக்கா தம்பி" என்றனர்.


"நான் திகழியை பார்த்துட்டு வரேன்‌!" என்று மாமனார் மாமியாரிடம் கூறியவன், அவர்களின் பதிலை எதிர்பார்க்காமல் மனைவியின் அறைக்குச் சென்றான்.


திகழொளியோ, வாடிய கொடியாய் சுருண்டு படுத்திருந்தாள்.அவள் கண்களில் நீர் மட்டும் அருவியாக வடிந்து கொண்டிருந்தது.



அறைக்குள் சென்ற மிகன்‌, மனைவி இருந்த நிலையை கண்டு தன்னையே நொந்து கொண்டு அவள் அருகில் சென்று அமர்ந்தான்.



மனைவியிடம் எந்த அசைவும் இல்லாததைக் கண்டு, அவள் கண்களில் வடிந்த கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டான்..



கணவனின் ஸ்பரிசம் பட்டவுடன் விழிகளை சட்டென்று திறந்தவள், கணவனை அந்த நேரத்தில் அங்கு கண்டவுடன் அடித்தபிடித்து எழுந்து அமர்ந்தாள்.



மிகனோ, "ஒளி.." என்று அழைத்தவனுக்கு, அதற்கு மேல் வார்த்தையே வரவில்லை..எங்கே ஆரம்பித்து எப்படி பேசுவது என்று அவனுக்கு எதுவுமே புரியவில்லை..



இது கனவா? நனவா? என்று புரியாமல் திகைத்து பார்த்த மனைவியை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன், "ஒளி சாரி டா..சாரி டா.." என்றான்..


அவளோ ,எந்த வித எதிர்வினையும் ஆறாறாமல் சிலையாக அமர்ந்திருந்தாள்..


தொடரும்..

Hi friends,

உயிர் துடிப்பாய் நீ ! அடுத்த அத்தியாயம் 32 போட்டாச்சு படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..
அடுத்த அத்தியாயம் புதன்கிழமை..

நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
 
Last edited:

Girija priya

Member
Messages
41
Reaction score
35
Points
18
Migan....Yentha mugatha vachikitu avala parka poradhu....
Mindvoice.... Mask pottu po😏
Ippadi azhudha udane mannichidanuma.....mudiyadhu ... mudiyadhu 😏Nice intresting ud sis ❤️
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
431
Reaction score
661
Points
93
Migan....Yentha mugatha vachikitu avala parka poradhu....
Mindvoice.... Mask pottu po😏
Ippadi azhudha udane mannichidanuma.....mudiyadhu ... mudiyadhu 😏Nice intresting ud sis ❤️
Thank you dear 😘
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
431
Reaction score
661
Points
93
உயிர் துடிப்பாய் நீ!


அத்தியாயம் 33


மிகனுக்கு மனைவியின் அமைதி மனதிற்குள் பெரும் பிரளயத்தையே கொடுத்தது.


செய்வதறியாமல் அவளின் தோள்களில் முகத்தை புதைத்துக் கொண்டு "ஒளி ரீயலி சாரிடா ..உங்கிட்ட மன்னிப்பு கேட்கும் அருகதை கூட எனக்கில்லை.."என்றான் தாளமுடியாத துக்கத்துடன்..



திகழொளியோ, கணவன் பேசியதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை..சில நிமிடம் அப்படியே அமைதியாகவே இருந்தாள்..



மிகனோ, சிறிது நேரம் அவளை அணைத்தபடியே இருந்தான். அவனுக்கு அந்த அணைப்பு மிகவும் தேவைபட்டது.திகழொளியோ சில நிமிடங்கள் கழித்து மெல்ல அவனிடமிருந்து விலகினாள்.



மிகனுக்கு மனைவியின் விலகலும், அமைதியும் பெரும் வலியை கொடுத்தது. இருந்தும் மனைவியிடம் என்ன சொல்லி அவளை சமாதானப்படுத்துவது என்று நினைத்து ஒரு நெடிய மூச்சுடன் பேச ஆரம்பித்தான்.



"திகழி யார் என்ன சொன்னாலும், நான் உன்னை நம்பியிருக்கனும்!ஆனால், நான் நம்பாமல் பெரிய தப்பு செய்துட்டேன்.. அதற்காக உங்கிட்ட மனசார மன்னிப்பு கேட்கிறேன்.. ப்ளீஸ் டா என்னை மன்னிச்சுடு.. "என்றான்.



திகழொளியோ, இறுகிப் போய் அமர்ந்திருந்தாள்.



"ப்ளீஸ் திகழி ஏதாவது பேசு டா..இப்படி அமைதியா இருந்தா எனக்கு பயமா இருக்கு.. என் கூட சண்டையாவது போடு ! இல்லே நாலு அடி கூட அடி ! ஆனால், அமைதியா மட்டும் இருக்காதே என்னால் தாங்க முடியலே டா.."என்றான் அவளின் கைகளைப் பற்றிய படி..




அப்போதும் திகழொளி மெளனமாகவே இருந்தாள்.



மிகனோ , " ஒளி என் தப்பை நான் இப்போது தான் உணர்ந்தேன் டா.. என்றவனிடம் அதுவரை அமைதியாக இருந்தவள், அவனை ஏறெடுத்துப் பார்த்தபடி "என்ன திடீர் ஞானோதயம்.." என்றாள்..



"அத்தை தான் எல்லா உண்மைகளும் சொன்னாங்க..இது எதுவும் தெரியாமல் இத்தனை நாளாக நான் தான் பெரிய முட்டாளாக இருந்து இருக்கேன்.." என்றவனிடம்..



அவளோ சலனமே இல்லாமல் "ஓ ..! அப்போ இப்பவும் என்னை நம்ப உங்க அத்தை தான் காரணம். அவங்க சொன்னதால் தான் என்னை நம்பியிருக்கீங்க..இன்னும் என்னை நம்ப இன்னொருவருடைய வார்த்தை தான் உங்களுக்கு தேவைப்படுது.."



"அச்சோ !ஒளி அப்படி இல்லை.. அத்தை சொல்லும் போது தான் எனக்கே நிறைய உண்மை புரிஞ்சுச்சு.."



"போதும் மிகன் ! இதுக்கு மேலேயும் என்னை கொல்லாதீங்க.. கட்டுன பொண்டாட்டியை நம்ப மத்தவங்க வார்த்தை தேவைப்படுது.. இதை கேட்டு என் மனசு எப்படி குளிந்து போச்சு தெரியுமா..?"



"திகழி ப்ளீஸ் புரிஞ்சுக்கோ டா.."


"எனக்கு இப்ப தான் நல்லா புரியுது..உங்க அத்தை சொல்லலேன்னா காலத்துக்கும் என் மீது நம்பிக்கை வந்து இருக்காது அப்படித் தானே..?"



" அப்படி இல்லை டா..உன்னே என் உயிரா நினைச்சு இருந்தேன்..நீ எனக்கு மட்டுமே சொந்தம்ன்னு நினைத்து இருக்கும் போது.. நீரன் வந்து நீயும் அவனை விரும்பி ஏமாத்திட்டேன்னு சொல்லி அழுததை பார்த்து என்னால் தாங்க முடியலே டா..அதுவும் ஆதாரத்தோடு அவன் சொல்லும் போது என்னால் நம்பாமல் இருக்க முடியலை.." என்றவன் நீரன் செய்ததை ஒண்ணு விடாமல் சொன்னான்..



திகழொளியோ, அவன் சொன்னதை எல்லாம் பொறுமையாக கேட்டவள்."ஏன் மிகன் நீங்க நேசிச்ச பொண்ணை வேறொருத்தன் என்ன சொன்னாலும் நம்பிடுவீங்களா.?ஆதாரம் உண்மை தானா என்று யோசிக்க மாட்டீங்களா? ஏன் ஒரு முறையாவது என்னை கேட்டீங்களா? இல்லை உண்மை என்னன்னு விசாரிச்சீங்களா? சொல்லுங்க.." என்றாள் தாங்க முடியாத ஆதங்கத்துடன்..



"திகழி நீ கேட்கிறது எல்லாம் கரெக்ட் தான்..ஆனால், நான் தான் அறிவில்லாமல் கேட்பார் பேச்சு கேட்டு முட்டாள் தனமா நடந்து கொண்டேன்..என்னை மன்னிச்சுடு டா இனி எப்போதும் நான் அப்படி நடந்துக்க மாட்டேன்.."



"எப்படி நம்பறது மிகன்.உங்க அத்தை வந்து சொல்லலேன்னா இன்னும் நம்பியிருக்க மாட்டீங்க..காதல்லே நம்பிக்கை தான் முக்கியம்..அந்த நம்பிக்கை என்மீது உங்களுக்கு ஒரு சதவீதம் கூட இல்லை..உங்க மனசை தொட்டு சொல்லுங்க ஒரு முறையாவது நான் நீரன் கூட பேசியதை நீங்க பார்த்து இருக்கீங்களா..பதில் சொல்லுங்க.." என்றவளிடம் மிகனோ தலையை குனிந்த படி அமர்ந்திருந்தான்.



"மிகன் நீங்க அத்தனை தூரம் என்னை அசிங்கபடுத்திய பிறகு கூட உங்கள் மீது எனக்கு வருத்தம் வந்ததே தவிர கடுகளவும் வெறுப்பு வரலே..என்றாவது என் மிகன் என்னை புரிஞ்சுப்பார்! நம்புவார் ! என்று காத்திருந்தேன்..ஆனால் கடைசி வரை நீங்க என்னை நம்பலே.."



"இல்லை டா உன்னை அளவு மீறி நம்பினேன்.. நீ எனக்கு துரோகம் செய்திட்டே!என் நம்பிக்கை பொய்த்து போய் விட்டதே! என்று தான் எனக்கு கோபம் வந்தது.."



"நம்புனீங்களா? ஜோக் அடிக்காதீங்க..நம்பிக்கைன்னா என்னன்னு தெரியுமா? உலகமே என்னை குறைசொன்னாலும் அவள் அப்படி செய்திருக்க மாட்டான்னு நம்பி சொல்லனும்! உங்களே யாராவது ஏதாவது சொன்னா நான் நம்புவேனா? என் மிகன் அப்படி செய்ய மாட்டார்ன்னு உறுதியாக நம்புவேன் .."என்றவளுக்கு கண்ணீர் தான் வந்தது.



"திகழி தப்பு தான்! நான் செய்தது மிகப் பெரிய தப்பு தான்! இனி ஒரு போதும் இப்படி நடந்துக்க மாட்டேன் டா.."



" எப்படி உங்களை நம்பறது மிகன் !நாளைக்கு வேலை செய்யற இடத்துலே எவனாவது ஏதாவது சொன்னா அப்பவும் இப்படிதான் நம்புவீங்க! குற்றவாளின்னு நீங்களே தீர்மானீச்சு தண்டனையும் தருவீங்க..!"



"ஏய் திகழி இப்படி எல்லாம் சொல்லாதே என்னால் தாங்க முடியலே டா.."


"ஒரு வார்த்தை நான் சொன்னதே தாங்க முடியலேன்னா? இத்தனை வருசம் என்னை எத்தனை பேசி இருப்பீங்க..அத்தனையும் தாங்கிட்டு இன்னும் உங்களே நேசிச்சுட்டுத் தானே இருந்தேன்..! என் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் அன்றே உங்களை வெறுத்திருப்பாங்க..ஆனால் நான் ஒரு நாள் கூட உங்களை வெறுக்கவும் இல்லை..மறக்கவும் இல்லை..உங்களை அவ்வளவு நேசித்தேன்.ஆனால், என் நேசத்திற்கு நீங்க கொஞ்சம் கூட தகுதியே இல்லைன்னு நிருபீச்சுட்டீங்க.."


"திகழி ! ப்ளீஸ் டா அப்படி எல்லாம் பேசாதே .. நானும் உன்னை என் உயிர்க்கு மேல் நேசிக்கிறேன்.. இத்தனை வருடத்தில் உன்னை ஒரு நாள் கூட நினைக்காமல் இருந்தது இல்லை..உன்னை மீண்டும் பார்த்த பொழுது என் உயிரே எனக்கு திரும்பி கிடைச்சது போல் இருந்துச்சு..இதுக்கு மேலும் உன்னை பிரிந்து இருக்க முடியாதுன்னு தான் அவசரப்படுத்தி மிரட்டி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்தேன்..எனக்கு நீ வேணும் டீ..காலம் பூரா உங்கூட சந்தோஷமா நான் வாழனும்.."என்றவனிடம்..


"எந்த நம்பிக்கையில் உங்க கூட வாழ முடியும்..? போதும் மிகன்..என்னால் இதுக்கு மேல் தாங்க சக்தி இல்லை..நாம் பிரிஞ்சுடலாம் அது தான் நம்ம இரண்டு பேருக்கும் நல்லது.."


"அப்படி சொல்லாதே! நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது ..என் அவசர புத்தியால் எல்லாமே தப்பா போச்சு..இனி அப்படி எப்போதும் நடக்காதுன்னு நான் உனக்கு உறுதி கொடுக்கிறேன்..ப்ளீஸ் டா என்னை நம்பி வா! நம் வீட்டுக்கு போகலாம்.."


"மிகன் என்னால் முடியாது..நான் எங்கேயும் வரலே..போதும் நான் பட்டது எல்லாம். எங்க வீட்லே கூட உங்களை வேண்டாம்ன்னு சொன்ன போது ! நீங்க தான் வேணும்ன்னு நான் என் பெற்றவர்களை எதிர்த்து நின்றேன்.. ஆனால் நீங்க? வேண்டாம் மிகன்! இனி திருப்பி திருப்பி அதையே பேச எனக்கு விருப்பம் இல்லை..போதும் என்ன‌ விட்டுடுங்க..நான் இப்படியே இருந்துக்கிறேன்.."



"திகழி ப்ளீஸ் டா எனக்கு ஒரு வாய்ப்பு கொடு டா."


"நான் எத்தனை முறை கேட்டேன் நீங்க எனக்கு அந்த வாய்ப்பை கொடுத்தீங்களா..?"


"திகழி வார்த்தையால் என்னை கொல்லாதே! நான் தான் ஒத்துக்கிறேனே நான் செய்தது மிகப்பெரிய தப்புன்னு என்னை மன்னிக்க மாட்டீயா?"



"மிகன் உங்களை மன்னிக்க நான் யார்?எனக்கு என் மீதே வெறுப்பா இருக்கு..மனசு விட்டுப் போச்சு ..போதும் எனக்கு இப்ப நிம்மதி தான் வேண்டும்.என்னை விட்டுடுங்க ப்ளீஸ்..!" என்றவளை..பார்த்தவனுக்கு உயிரே போய்விட்டது.அவள் தன்னை இந்தளவு வெறுத்து விட்டாளோ? என்று நினைத்தவனுக்கு மனம் வலியில் துடித்தது..



ஒரு நிமிடம் கண்களை இறுக முடித் திறந்தவன் அவளை இழுத்து இறுக அணைத்துக் கொண்டு ." என்னால் இனி உன்னை பிரிந்து வாழவே முடியாது ..ஆனால் உன் நியாமான கேள்விக்கு எங்கிட்ட எந்த பதிலும் இல்லை..நீ என்னை மன்னிச்சு ஏற்கும் வரை நான் காத்திருப்பேன்..இத்தனை நாள் உன்னை கஷ்டபடுத்தியதே போதும்..இனி எனக்கு உன் நிம்மதி தான் முக்கியம்..ஆனால், ஒண்ணு மட்டும் சொல்றேன்! இனி எந்த சூழ்நிலையிலும் உன்னை நான் நம்புவேன் இது உறுதி..!"என்றவன் அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டவன்..அவள் முகத்தை கைகளில் ஏந்தி "நீ என்னை மன்னித்து ஏற்கும் வரை நான் எத்தனை நாள் ஆனாலும் காத்திருப்பேன்.." என்றவன் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் அவளை விட்டுக் கிளம்பினான்..


அவனின் கண்களில் உயிரே இல்லை..வெறுமை தான் தெரிந்தது.. கையில் கிடைத்த சொர்க்கத்தை இழந்து விட்டோமே !என்று அவன் மனம் ஊமையாக அழுதது.



ஆனாலும், அவளின் நிம்மதி தான் முக்கியம் என்று புரிந்தது..ஆழமான நேசத்தில் விட்டுக் கொடுப்பதும் அன்பு தானே! அவளுக்காக அவளை விட்டுக் கொடுத்தான்..நமக்கு அதிகம் பிடித்தவர்களின் மகிழ்ச்சிக்காக..நிம்மதிக்காக நாம் விலகி இருப்பது கூட சில சமயம் நல்லது தான்..சில நேரங்களில் தேவையான இடைவெளி

கூட அன்பையும், புரிதலையும் அதிகரிக்கச் செய்யும்..


அவளை வற்புறுத்தினால் இன்னும் அவளுக்கு தன் மீது வெறுப்பு தான் வரும்..என்று நினைத்து அமைதியாக சென்றான்.




இருவரும் ஒருவர் மீது ஒருவர் உயிரையே வைத்து இருக்கிறார்கள்.அந்த அன்பே அவர்களை சேர்த்து வைக்கும் என்று நம்பினான்..அவள் மனம் மாற காத்திருப்போம் என்று நினைத்துக் கிளம்பினான்..



திகழொளியோ, கணவன் சென்றபின் தேற்றுவாறற்று அழுது கரைந்தாள்.



பெற்றவர்களுக்கும், அமுதனுக்கும் புரிந்து விட்டது இந்த சண்டை இப்போது முடியாதென்று..



ஓய்ந்து போய் வீடு வந்த மகனின் முகத்தைக் கண்டதுமே தெரிந்துவிட்டது உலகமாறனுக்கு மருமகள் என்ன சொல்லி இருப்பாளேன்று..!



தந்தையைக் கண்டதும் மிகன் அவரை அணைத்துக் கொண்டு சில நிமிடங்கள் மெளனமாக நின்றான்.அவன் மனதில் சொல்ல முடியாத வலி!



மகனின் நிலை புரிந்து தட்டிக் கொடுத்தவர்.. "எல்லாம் சீக்கிரம் சரியாகும் மனம் தளராதே தம்பி.."என்று மட்டும் சொன்னார்.



மிகனோ தந்தையிடம் தலையாட்டிவிட்டு தன் அறைக்குச் சென்று படுத்தவனுக்கு வாழ்க்கை பூதாகரமாக தெரிந்தது.



அடுத்தது என்ன செய்யப் போறோம்ன்னு தெரியாமல் அவன் மனம் முழுவதும் வெறுமையே நிறைந்திருந்தது..



திகழொளி கேட்ட கேள்வி எல்லாம் அவனை வாள் கொண்டு அறுத்தது.

முன் புரியாத உண்மையும்..அவள்‌பக்க நியாயமும் அவனைச் சுட்டது.



உலகமாறனோ, மகனின் நிலை கண்டு மனம் தாள முடியாமல் மனைவியின் நிழற்படம் முன் நின்று கண்ணீர் சிந்தினார்..



'நான் எங்கேயோ ஏதோ தப்பு செய்துட்டேன் மா.. இனியாவது அவன் வாழ்க்கை சரியாக ஏதாவது வழி காட்டுமா !'என்று மனதார வேண்டி நின்றார்.

.


மகன் மாமானார் வீடு சென்றதும் தன் தங்கையை அழைத்து அவர் மனதில் தோன்றிய கேள்விகளைத் தாள முடியாமல் கேட்டே விட்டார்.



மணியரசியோ ,அண்ணன் கேட்டதும் உடைந்து போய் அழுது கொண்டே தன் தவறை ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்டார்.



ஆனால் உலகமாறனோ, அதன் பிறகு பதில் பேசவே இல்லை..இனி பேசி என்ன பயன் என்று நினைத்தார்..



ஆனால் மணியரசியோ அண்ணனின் முகத்தை பார்க்கவே கூசிப்போனார்..தன் தவறின் வீரியத்தை அப்போது தான் அவரே உணர்ந்தார்..


தொடரும்..

Hi friends,
உயிர் துடிப்பாய் நீ!
அடுத்த அத்தியாயம் சனிக்கிழமை.. இன்றைய அத்தியாயத்தை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
 
Last edited:

Girija priya

Member
Messages
41
Reaction score
35
Points
18
Oli avan kuda pogala... good👍yeppadi thirumbavum sera poranga 🤔 nice intresting ud sis ❤️
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
431
Reaction score
661
Points
93

உயிர் துடிப்பாய் நீ!


அத்தியாயம் 34


திகழொளி தன் தாய் வீட்டிற்கு வந்து ஒரு மாதம் முடிவடைந்து விட்டது.ஆனாலும், அவள் மனதில் எந்த மாற்றமும் நிகழவில்லை..



அமுதனுடன் பணிக்குச் சென்று வந்தாள்.அங்கே கணவனை கண்டாலும், வேலை விஷயத்திற்காக மட்டுமே அவசியம் என்றால் இருவரும் பேசிக் கொண்டார்கள்..



மிகனோ தன் மனைவி தன்னை மன்னிக்க மாட்டாளா ? என்று தவம் கிடந்தான்.ஆனாலும், அவளை வற்புறுத்தவில்லை..அவளாக மனதார மன்னிகனும் என்று காத்திருந்தான்.



ஒரு மாதம் கடந்த நிலையிலும் மனைவியிடம் எந்த மாற்றமும் நிகழவில்லை என்ற போது தான் அவனுள் பயம் தொற்றிக் கொண்டது.



எங்கே அவள் இனி மன்னிக்கவே மாட்டாளோ? என்று அவன் மனம் தவித்தது..அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதற்கு ஏற்ப அவனின் முகத்திலும், கண்களிலும் ஒளியே இல்லாமல் வெறுமையே நிரம்பி இருந்தது.



உலகமாறனோ, மகனின் நிலையைக் கண்டு மனத்திற்குள் கலங்கித் தவித்தார்.நாளுக்கு நாள் மகன் யாருடனும் பேசாமல் இறுகிப் போவதைக் கண்டு என்ன செய்வதென்று தெரியாமல் வருந்தி தவித்தார்..



மகிழினி கூட மட்டுமே கொஞ்சம் இயல்பாக இருந்தான். மணியரசியோ தன் அண்ணனும், அண்ணன் மகனும் தவிப்பதை தாங்க முடியாமல், எப்படியாவது தப்பை சரி செய்ய நினைத்து திகழொளியைக் காணச் சென்றார்.



திகழொளியோ, அவரை இன்முகமாகவே வரவேற்றாள்..மகிழினியையும் அழைத்துச் சென்றார்.



மகிழினியோ, திகழொளியைக் கண்டதும் தாவி அணைத்துக் கொண்டவள் அவளிடமே பசை போல் ஓட்டிக் கொண்டாள்.



குழந்தையிடம் திகழொளி விளையாடுவதை சிறிது நேரம் வேடிக்கை பார்த்த மணியரசி "திகழி நான் உங்கிட்ட கொஞ்சம் பேசணும் மா.. நடந்த அத்தனை தவறுக்கும் என் பையன் தான் காரணம்.

ஆனால், எல்லாம் தெரிந்திருந்தும் நானும் அமைதி காத்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்ன்னு இப்ப தான் மா புரியுது! " என்றவரை முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகவே பார்த்தாள் திகழொளி.



மணியரசியோ, தொடர்ந்து "திகழி மிகன் பாவம் மா..! நாங்க செய்த தப்புக்கு மிகனுக்கு தண்டனை கொடுக்காதே ! அவனை இந்த ஒரு மாதமாக கண்களில் பார்க்க சகிக்கவில்லை..அவன் முகத்தில் சிரிப்பே இல்லை.. கிட்டத்தட்ட நடைபிணமாக வாழ்றான் என்றவர் தாங்க முடியாமல் கண்ணீர் சிந்திய படி "தப்பே செய்யாமல் தண்டனை அனுபவிக்கிறான் என்னால் அவனை அப்படி பார்க்க முடியலை டா.." என்று முகத்தை மூடிக்கொண்டு கண்ணீர் சிந்தினார்.



திகழொளியோ, அப்போதும் தலைகுனிந்தபடி அமைதியாகவே இருந்தாள்.


அவரோ ஒருவாறு தன்னை நிதானப்படுத்திக் கொண்டு .." ஒரு பையனைத் தான் ஒழுங்கா வளர்காமல் வாழ்க்கையை வீணடித்தேன்..ஆனால், ஒரு பாவமும் அறியாத மிகன் வாழ்க்கை! என் கண் முன்னே வீணாவதை என்னால் பார்க்க முடியலே..திகழி மிகனைப் பற்றி நான் உனக்கு சொல்ல வேண்டியதில்லை.. எத்தனை அருமையான பையன் என்று உனக்கே தெரியும்.. பாசமும், சூழ்நிலையும் அவனை அப்படி நடந்து கொள்ள வைத்துவிட்டது மா..அவனை மன்னித்து அவனுடன் வாழ வாம்மா.."என்றவரிடம்..




சில நொடிகள் எதுவும் பேசாமல் இருந்தவள், "எனக்கு கொஞ்ச நாள் தனிமை வேண்டும் மா என்னை கட்டாயப்படுத்தாதீங்க !"என்றால் வேறு எதுவும் சொல்லாமல்..



"திகழி நீ இங்கு வந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறதும்மா..இனியும் பிரிந்து இருப்பது நியாமே இல்லை..அவன் உயிரே நீ தான் மா..அதிக பாசம், அதிக நம்பிக்கை இது எல்லாமே என்றுமே நல்லதில்லை..கண்டிப்பா அவன் செய்தது சரின்னு நான் சொல்லலே..ஆனால் அவன் அதை தப்புன்னு உணர்ந்த பின் அவனை மன்னிக்கலாம் தானே.."என்றவரிடம்..




"ம்மா எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும் .."



"திகழி நீ புத்திசாலிப் பெண்! உனக்கு நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை..தப்பு செய்தவங்க அதை உணர்ந்து வரும் போது மன்னிப்பது தானே மனிதத்தன்மை..இத்தனைக்கும் காரணம் நான் தான் ..அப்போ நீ எனக்குத் தான் முதல் தண்டனை கொடுக்கனும்.." என்று வருந்தியவரை..


"மணியம்மா..!" என்று அதிர்ச்சியாக அழைத்தாள்.


அவரோ" "மிகன் மாதிரி ஒரு பையன் என் வயித்துலே பிறக்கலையேன்னு நான் வருந்ததாத நாள் இல்லை..பெற்றால் தான் பிள்ளையா? அவனும் என் பிள்ளைதான்! என் பிள்ளை வாழ்க்கை நல்லா இருக்க நான் என்ன வேணும்னாலும் செய்வேன்! உங்கிட்ட கை எடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்கிறேன் . நான் பெறாத என் பிள்ளையின் வாழ்க்கை இப்போது உன் கையில் தான் இருக்குமா..!"என்று கை எடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டவரின் கைகளை பதறிப் போய் பற்றியவள்..


"மணியம்மா என்ன காரியம் செய்யறீங்க.. இப்பிடி எல்லாம் செய்து என்னை சங்கடப்படுத்தாதீங்க.." என்றாள் கலக்கத்துடன்..


"எனக்கு வேறு வழி தெரியவில்லை திகழி..தயவுசெய்து என் மகனோடு சேர்ந்து வாழும்மா நீங்க சந்தோஷமா வாழ்ந்தால் நான் நிம்மதியாக இருக்க முடியும்..இல்லை என்றால் என் மனசாட்சியே என்னை கொன்று விடும்.. சீக்கிரம் ஒரு நல்ல முடிவு எடும்மா!" என்றவர் மகிழினியை அழைத்துக் கொண்டு திரும்பிச் சென்றார்..



அவர் சென்ற பின் திகழொளி அப்படியே அமர்ந்து இருந்தாள்..கணவனைப் பிரிந்து அவளும் மகிழ்ச்சியாக இல்லை தான்.



இந்த ஒரு மாதமாக மனதிற்குள் அவளும் அழாத நாளில்லை..ஆனாலும் ஏதோ ஒரு அச்சம் அவளை எந்த முடிவும் எடுக்க முடியாமல் தடுத்தது..குழப்பம், பயம் எல்லாம் அவளை தன்னுள்ளேயே மருக வைத்தது.



தன் தமக்கையின் நிலையை காணமுடியாமல் அமுதன் மிகனிடம் சென்று பேசினான்.."மாமா இப்படியே ஆளுக்கொரு பக்கம் வாழவ கல்யாணம் செய்தீங்க..எப்படியாவது அக்காவை சமாதானப்படுத்திக் கூட்டிட்டு போகமல் அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?" என்று வருத்ததுடன் கேட்டவனிடம்..



"அமுதா நான் செய்த தப்புக்கு எப்படி உங்கக்காவை சமாதனப்படுத்துவது என்றே தெரியவில்லை..அவள் கோபத்தில் நியாயம் இருக்கு ..அது தான் அவள் கோபம் தீரட்டும் என்று அமைதியாக இருக்கேன்.."என்றவனிடம்..


"உங்கள் நிலையை புரிய வைத்து ! எப்படியோ சமாதானப்படுத்தினால் தானே கோபம் தீரும் ! இப்படி தள்ளி நின்றால் எப்படி தீரும்..?"


"அமுதா நமக்கு புடிச்சவங்க நிம்மதிக்கும், சந்தோஷத்திற்கும் நாம விலகி இருப்பது தப்பில்லை..அவ மனசு மாறும் வரை நான் காத்திருப்பேன்.."என்றான்.



"நீங்க இரண்டு பேரும் பிரிஞ்சு சந்தோஷமாவ இருக்கீங்க.."



"இல்லை..தான்.. ஆனால் என் அன்பை எப்படி உங்க அக்காக்கு நிரூபிப்பதுன்னே தெரியலே..அவளோட ஒவ்வொரு கேள்வியும் நியாயமானது..என் மனசாட்சி என்னை கொல்லுது அமுதா.."



"மாமா உங்க தப்பை நீங்க எப்ப உணர்ந்தீங்களோ அப்பவே நீங்க மன்னிக்கப்பட வேண்டிய ஆள்..அக்கா உங்களை ஏத்துக்கனும்.நான் அக்கா கிட்ட பேசறேன் மாமா.."



"வேண்டாம் அமுதா திகழியை கட்டாயப்படுத்த வேண்டாம்.அவ என்னை மனதார உணர்ந்து மன்னிக்கனும்.அந்த நாளுக்காக நான் காத்திருப்பேன்.."என்று அமுதனிடம் கூறினான்.



அமுதனோ, இரண்டு பேரையும் என்ன செய்வது? எப்படி சேர்த்து வைப்பதென்றே புரியாமல் தவித்தான்.இருவருமே ஒருவர் மீது ஒருவர் வைத்த அளவு மீறிய அன்பு தான் இதற்கு காரணம் ..அளவு மீறிய அன்பு கூட பிரச்சினை தான் போல என்று நினைத்தான்.



அமுதன் வந்து பேசி சென்ற பின் அழகாக வாழ வேண்டிய தன் வாழ்க்கையை ! தானே கெடுத்துக் கொண்டோமே? என்று நினைத்து நினைத்து.. மிகன் குற்றயுணர்வில் நொந்து போனான்.


தினமும் மனைவியை அலுவலகத்தில் பார்த்தும் யாரோ போல் நடக்க வேண்டி இருப்பதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. இப்படியே சென்றால் தனக்கு பைத்தியம் பிடித்துவிடும் என்று அஞ்சினான்.இதற்கு ஏதோ ஒரு முடிவு எடுத்தாக வேண்டும் என்று நினைத்தவன் இத்தனை நாள் அவளைக் கஷ்டடுத்தியது போதும் ! இனியாவது அவள் நிம்மதியாக இருக்கட்டும் என்று எண்ணினான்.



இப்படி தள்ளி நின்று அவளை கண்டு மனம் துடிப்பதை விட அவள் கண்ணிலேயே படாமல் எங்காவது போய் விடலாம்..அவளாவது நிம்மதியாக இருக்கட்டும் என்று யோசித்தவனுக்கு அதற்கான வாய்ப்பும் வந்தது.



மிகனுக்கு மீண்டும் புனே

செல்ல ஒரு வாய்ப்பு வந்தது.சரியாக தன் பிரச்சினைக்கு அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்தான்.



தன் தந்தையிடம் சென்று "நான் மீண்டும் புனேவே செல்கிறேன் ப்பா.." என்றவனை பார்த்து உலகமாறன் செய்வதறியாது கலங்கி போனார்..



மகனின் மனக்கவலையே இப்படி ஒரு முடிவு எடுக்க தூண்டி உள்ளது! என்பதை புரிந்து கலக்கியவர், ஒரு முடிவுடன் மருமகளைக் காணச் சென்றார்..



திகழியோ, மாமனாரைக் கண்டதும் சிறிது அதிர்ந்தாளும் அதைக் காட்டிக் கொள்ளாமல் இன் முகமாகவே வரவேற்றாள்.



உலகமாறனோ, சுற்றி வளைத்து பேசாமல் மகன் எடுத்த முடிவை போட்டு உடைத்தார்.



திகழியோ, கணவனின் முடிவைக் கேட்டு சிலையாக அமர்ந்திருந்தாள்.அவள் இப்படி ஒரு திருப்பத்தை எதிர் பார்க்கவில்லை! அவளுக்கே இது புது செய்தி!மிகன் அலுவலகத்தில் இதைப்பற்றி எல்லாம் எதையும் அவளிடம் காட்டிக் கொள்ளவில்லை..



மாமனாருக்கோ விஷயம் மருமகளுக்கும் தெரியவில்லை என்று அவள் அதிர்ந்த முகத்தை கண்டே தெரிந்து கொண்டவர்.."திகழி நான் உங்கிட்ட என் மகனுக்காக தான் வந்து இருக்கேன் மா.. இத்தனை நாள் நீங்களே உங்கள் பிரச்சினையை தீர்த்துக் கொள்வீர்கள் என்று எண்ணினேன்..ஆனால், நான் தலையீடாமல் அது நடக்காது போல்.."என்றவர் ஒரு நெடிய பெருமூச்சுடன் பேசத் தொடங்கினார்.



"அம்மா என் மகன் செய்தது சரி என்று நான் சொல்லவில்லை. அவன் செய்தது தப்புதான்.அதற்கான தண்டனையை உன்னை பிரிந்த இந்த ஒன்றரை மாதத்தில் நல்லாவே அனுபவித்து விட்டான்.இனியும் அவனை நீ விட்டு பிரிந்து இருந்தால் நான் என் பையனை முழுதாக இழுந்து விடுவேன் .."என்று குரல் தழுதழுக்க சொன்னவர்..



"நான் வாழ்வதே அவனுக்காகத் தான்.நீங்க இரண்டு பேரும் சந்தோஷமா வாழ்வதை இனி பார்ப்பேனா? என்று எனக்கு பயம் வந்து விட்டது.உங்கிட்ட கெஞ்சிக் கேட்கிறேன் நீ தான் அவன் உயிர் ! நீ தான் என் பையனை எனக்கு திருப்பி தரனும்..உனக்கு என்ன கோவம் இருந்தாலும் நம் வீட்டுக்கு வந்துடுமா !அங்கே வந்து அவன் மீது நீ காட்டு..இல்லை என்றால் அவன் ஊரைவிட்டே போய்விடுவான்.."என்றவரை மிகுந்த அதிர்ச்சியுடன் பார்த்தாள்.



மிகன் இப்படி ஒரு முடிவை எடுப்பான் என்று கொஞ்சம் கூட அவள் எதிர்பார்க்கவில்லை.



உலகமாறனோ, "எனக்காக நம் வீட்டிற்கு வாம்மா! தப்பு செய்தவர்களை மன்னித்து ஏற்பது தான் மனிதாபிமானம் ..இப்படி பிரிந்து இருந்தால் இருவருக்குள் மேலும் மேலும் விரிசல் தான் பெரிசாகும் .."என்று கலங்கிய படி கூறிச் சென்றார்.



திகழொளியோ, மாமனார் சொல்லி சென்ற செய்தியை நினைத்து முடிவெடுக்க முடியாமல் தவித்தாள்..


தொடரும்..

அடுத்த அத்தியாயம் முடிந்தவரை விரைவில் போடுகிறேன்..இன்றைய அத்தியாயத்தை படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..

நன்றி
அன்புடன்
இனிதா மோகன்

















 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
431
Reaction score
661
Points
93

உயிர் துடிப்பாய் நீ !


அத்தியாயம் 35


திகழொளி மாமனார் வந்து சென்ற பின் நிலையில்லாமல் தவித்தாள். தன்னால் தன் கணவன் ஊரைவிட்டு போகுமளவு துணிந்து விட்டானே! என்று கலங்கினாள்.



வீட்டில் வயதான மூன்று பெரியவர்கள் இவனை நம்பி இருக்கும் பொழுது இப்படி ஒரு முடிவெடுத்து இருக்கிறானே! இவன்‌ புனே சென்றுவிட்டால் அவர்களுக்கு அவசர உதவிக் கூட வீட்டில் ஆள் இல்லையே! என்று வருந்தினாள்.



எப்போதும் எந்த பிரச்சனையையும் நேருக்கு நேர் சந்திப்பதே இல்லை.. அதிலிருந்து தப்பிக்க என்ன வழியோ ? அதையே தான் செய்வான் என்று கணவனை மனதிற்குள் வருதெடுத்துக் கொண்டிருந்தாள்.



அமுதனோ, முடிவெடுக்க முடியாமல் குழப்பத்துடன் வலம் வந்த தமக்கையிடம் பேசினான்.


"அக்கா எனக்கு என்னவோ நீ அங்கே போவது தான் சரின்னு தோணுது.." என்றவனை முறைத்த திகழொளி..


"ஏன் டா நான் இங்கே இருப்பது உனக்கு பாரமா இருக்கா..?" என்றால் சற்றே கோபத்துடன்..


"ச்சே ! ஏன்க்கா இப்படி லூசு மாதிரி உளறுறே? நீ இங்கே இருப்பதில் எனக்கு என்ன பாரம்! எனக்கு சந்தோஷம் தான்.ஆனால், இப்படி ஆளுக்கொரு பக்கம் வாழவா? இத்தனை நாள் வெய்ட் பண்ணி படாத கஷ்டப்பட்டு அவரை கல்யாணம் செய்தே?"



"அமுதா நான் அவர் மாறுவார்..ஒரு நாள் என்னை புரிந்து கொள்ளுவார்ன்னு நம்புனேன் டா..ஆனால், அவர் கடைசி வரை என்னை நம்பவே இல்லையே! அவரை நம்பி இனி நான் எப்படி காலம் பூராவும் வாழமுடியும்.."



"அக்கா நீ சொல்வது சரிதான்.ஆனால், மாமா இப்பத்தான் அவருடைய தப்பை உணர்ந்து இருக்கார் கா ..அவர் உன்னை ரொம்ப நேசிக்கிறார் தெரியுமா..?"என்றவனைப் பார்த்து விரக்தியுடன் சிரித்தாள்..



" ஏன்க்கா சிரிக்கீறே? நான் சொல்றது உண்மை தான்! உன் மீது இருக்கும் அளவு கடந்த அன்பு தான் இப்ப கூட உன்னிடம் இருந்து மாமாவை விலக்கி வைத்திருக்கிறது.."என்றவனிடம் பதில் ஏதும் சொல்லாமல் பார்த்தாள்.



மெளனமாக இருந்த தமக்கையிடம் "அக்கா என்னைப் பொருத்தவரை அவர் உண்மை தெரிந்த உடன் ஓடி வந்து உன்னிடம் மன்னிப்பு கேட்டார்.அது மனதாரக் கேட்ட மன்னிப்பு.உன்னை இனியும் எந்த விதத்திலும் காயப்படுத்தக் கூடாது என்று தான் விலகி இருக்கார்.நீ மன்னிக்க மாட்டாயோன்னு? தவம் கிடக்கிறார்."


"அப்புறம் ஏன்டா ஊரை விட்டு போறார்..?"


"அப்புறம் என்னக்கா செய்வார் ? நீயோ அவரை திரும்பிக் கூட பார்ப்பது இல்லை..பக்கத்திலேயே இருந்து கொண்டு உன் விலகலை அவரால் தாங்கிக் கொள்ள முடியலே..தான் செய்த தப்பும் அவரை குற்றயுணர்வில் கொள்ளுது.."



"அதுக்காக இப்படி ஊரை விட்டு போனால் எல்லாம் சரியாய்டுமா? கொஞ்சமாவது பிரச்சினைகளை பேஸ் பண்ணும் தைரியம் வேண்டும் டா..இப்படியா கோழை மாதிரி ஊரை விட்டு ஓடறது.."



"நீ சொல்வது சரிதான்.ஆனால் இதுவும் கூட உனக்காகத் தான்.. விலகி இருந்தால் அவரை மன்னித்து ஏற்றுக் கொள்வாயோன்னு ஒரு நம்பிக்கை தான்..!"



"அதெப்படி ஏற்றுப் பேன்..எனக்கு வர கோபத்துக்கு உங்க மாமாவே நாலு மொத்து மொத்தனும்ன்னு வெறி வருது.."



"கரெக்ட் முதல்லே அங்கே போய் அதை செய்! தள்ளி இருப்பதை விட கூடவே இருந்து அவர் தப்பை உணர வை! "



"எனக்கு இன்னும் குழப்பமாகவே இருக்கு அம்மு.."என்ற தமக்கையின் கைகளை மென்மையாக அழுத்தியபடி அருகில் அமர்ந்து "அக்கா மனதார மன்னிப்பு கேட்பவர்களை மன்னிப்பது தானே மனிதாபிமானம்..நீங்க இப்படி பிரிஞ்சு வாழவா அவரே வேணும்ன்னு கல்யாணம் செய்தே!"


"நான் விரும்பிய மிகன் இப்போ இல்லையே டா.."



"அப்படி எல்லாம் இல்லை கா..உன் மேல் இருக்கும் அன்பு இன்னும் மாமாவுக்கு அதிகமாகி இருக்குக்கா.."


"அப்படியா? அன்று வந்தவர் அதன் பிறகு ஏதாவது இன்று வரை பேசுனாரா? இல்லை என்னை திரும்ப வீட்டிற்கு கூப்பிட்டாரா ?"


"அக்கா! அவரே குற்ற உணர்வில் தவிக்கும் போது உன்னை எப்படி மீண்டும் வீட்டிற்கு வான்னு சொல்லுவார்.. ?"



"அம்மு எனக்கு ஒரு சந்தேகம்! நீயும் ஆணுங்கிறதால்‌ அவருக்கே சப்போர்ட் போடறீயா..?"



"அக்கா இது சப்போர்ட் இல்லை..உண்மையை தான் சொல்றேன்..தப்பு செய்தவர்கள் அதற்காக வருந்தும் போது மேலும் அவர்களை நோகடிக்க கூடாது.எனக்கு முதல்லே அவரை பிடிக்காது தான்..ஆனாலும் அவர்‌ இப்ப மனம் வருந்துவதை பார்க்க கஷ்டமா இருக்கு கா.."



"அம்மு நீ சொல்வது உண்மையாக கூட இருக்கட்டும்.ஆனால்., எங்கிட்ட இன்னுமே அவர் ஈகோ பார்க்கிறார்.."


" அது ஈகோ இல்லைக்கா..குற்றவுணர்வு! உன் பக்க நியாயம் அவரை தள்ளி வைத்து இருக்கு..அவர் செய்வது சரியென்று நான் சொல்லவில்லை..ஆனால், அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுன்னு தான் சொல்றேன்.."



"எத்தனையோ வாய்ப்பு கொடுத்துட்டேன்..இனியும் அவரை நம்ப எனக்கு பயமா இருக்கு..நான் இப்படியே இருந்துட்டு போறேன்.."



"என்னக்கா பேசறே ? நீ இப்படி வாழாமல் இருக்கவா இத்தனை நாள் போராடி அவரை கல்யாணம் செய்தே..? உன் மனசை தொட்டு சொல்லு நீ அவரை பிரிந்து நிம்மதியா இருக்கேன்னு.."



"இல்லை தான்‌ என்‌ உயிருக்கு மேலாக நான்‌ அவரை நேசிச்சேன்..இப்ப கூட அவர் மேல் என்னை நம்ப வில்லையே! என்ற கோவம் தானே தவிர, வெறுப்பு இல்லை.."



"அது எனக்கு நல்லாத் தெரியும் . அது தான் சொல்றேன். நீ அங்க போக்கா..!அவர் பக்கத்தில் இருந்து உன்‌ கோவத்தைக் காட்டு..இப்படி பிரிஞ்சு இருந்து இரண்டு பேரும் என்ன சாதிக்கப் போறீங்க..? இரண்டு பேரும் நடைபிணமாக தான் வாழ்றீங்க.."



"அம்மு எனக்கு யோசிக்க கொஞ்சம் டைம் வேணும்.."



"இப்பவே நீ அவரை பிரிந்து வந்து ஒன்றரை மாசம் ஆகப்போகுது..இன்னும் எத்தனை நாள் டைம் எடுப்பே..?"


"நீ என்ன அவருக்கு தூதா..?ஏன் அவருக்கு எங்கூட வாழனும்ன்னு ஆசை இல்லையா..?அவர் வந்து கூப்பிட மாட்டாரா?"



"கண்டிப்பா கூப்பிட மாட்டார்! நான்‌ அவரிடம் பேசினேன்க்கா .. உன் நிம்மதி தான் முக்கியம் என்கிறார்.இத்தனை நாள் உன்னை கஷ்டப்பட்டுத்தியது போதும் என்று நினைக்கிறார்.."


"என்னடா சொல்றே?


"ஆமாம் க்கா ..பிடிச்சவங்களுக்காக! அவங்க நிம்மதிக்காக! விலகி இருப்பது கூட காதல் தான்னு சொல்றார் கா..நீ போகாமல் அவர் மாறமாட்டார்..கண்டிப்பா அவர் புனே போய்டுவார்..அங்கிள் சொன்னது போல் உன் கையில் தான் எல்லாமே இருக்கு.."



"ஏன்டா அவர் லூசா? வயசானவங்களை விட்டுவிட்டு ஊரை விட்டு போறாது எந்த விதத்தில் சரி..?"



"அந்தளவுக்கு நீ தான் முக்கியம்ன்னு நினைக்கிறார் .."



"என்னடா உளறுறே.?"

என்னிடம் வந்து சமாதானமும் பேசமாட்டாறாம்.ஆனால், எனக்காக ஊரை விட்டு போவராம்..உங்க மாமா மெண்டல் ஆகிட்டாரா? என்னடா லாஜிக் இது! "



"அது தான் அளவுகடந்த அன்பு. நீயா அவரை மன்னித்து ஏற்கும் வரை காத்திருப்பாராம்.."



"மண்ணாங்கட்டி..எனக்கு வர ஆத்திரத்துக்கு அந்த ஆளை மண்டை மண்டையா நாலு சாத்து சாத்தலாம்ன்னு இருக்கு.."



"வெரிகுட் முதல்லே அங்கே போய் அதை செய்..! உன்னால் மட்டும் தான் அவரை ஹேண்டில் பண்ண முடியும்! "



"அவருக்காக இல்லாட்டியும், மாமாவுக்காக போறேன் அம்மு..அவர் வந்து பேசியதிலிருந்து மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்துச்சு..இப்ப உங்கூட பேசியதும் போகலாம்ன்னு தோணுது.ஆனால் அப்பா அம்மா இது வரை எதுவுமே சொல்லலேயே டா.."



"அப்பாவுக்கு மாமா மீது கோபம் கா..உன்னை ரொம்ப கஷ்டபடுத்தறார்ன்னு..அம்மா தான் புலம்பிட்டு இருக்காங்க..நேத்து கூட அப்பாகிட்ட உங்கிட்ட பேசச் சொல்லி அம்மா கேட்டுட்டு இருந்தாங்க.."


"ஓ..!"


"ஆனால், அப்பா அம்மாகிட்ட எம் பொண்ணு அவங்கிட்டப் போய் கஷ்டப்பட இங்கேயே நிம்மதியா இருக்கட்டும்ன்னு சொல்லிட்டு இருந்தார்.மாமா மீது அப்பாவுக்கு அளவுகடந்த கோவம் கா.."


"ம்..!" என்றவளிடம்..


"அக்கா எல்லாத்தையும் மாற்ற உன்னால் மட்டுமே முடியும்.நீ போய் மாமா கூட சேர்ந்து சந்தோஷமா வாழ்ந்தால் தான் அப்பா மாமாவை மன்னிப்பார்! அவர் மீது இருக்கும் தப்பான எண்ணம் மாறும்!"



"நான் எப்படி அப்பாகிட்ட அங்கே போறேன்னு சொல்றது?சொன்னா என்னைப் பற்றி என்ன நினைப்பாங்க.?"


"அதெல்லாம் ஒண்ணும் நினைக்க மாட்டார். நீ என்ன முடிவு எடுத்தாலும் அப்பா உனக்கு சப்போட்டா தான் இருப்பார்.."


"எனக்கு குழப்பமாகவே இருக்கு அம்மு..ஒருபக்கம் அங்கே போலாம்ன்னு இருக்கு! இன்னொரு பக்கம் அவரை நம்பி போக பயமா இருக்கு.."


"அக்கா உனக்காக இல்லாட்டியும் அம்மா அப்பாவுக்காக மாமாவை மன்னிச்சுடுக்கா ..நீ சந்தோஷம் வாழறதை பார்க்க அவங்க எத்தனை வருடமாக தவம் இருக்கிறாங்க..உன் சந்தோஷம் தான் அவங்க நிம்மதி! வெளியில் காட்டிக் கொள்ளாட்டியும் அப்பாவுக்கு உன் கவலை தான் பெரும் கவலை!"



"அம்மு என்னால் எல்லாருக்குமே கஷ்டம்..நான் பிறந்தே இருக்க கூடாது!" என்று கண்கலங்கியவளிடம்..


"லூசு மாதிரி உளறாதேக்கா! எங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை..நீ நல்லா வாழ்ந்த அது போதும்.ப்ளீஸ் கா நல்ல முடிவா சொல்லு..!"


"அம்மு நீ சொல்றது எல்லாம் சரி தான்..ஆனால் அவர் கொஞ்சம் கூட இறங்கி வர மாட்டீங்கராரே..ஆம்பளைங்கிற திமிர்! எப்போதும்‌ பெண்கள் மட்டும் தான் விட்டுக் கொடுத்து போகனும்! இறங்கிப் போகனும்! தப்பு செய்த அவர் இறங்கி வரமாட்டார்! நான் மட்டும் இறங்கி போகனுமா..?"



"அக்கா மறுபடியும் முதல்லே இருந்து ஆரம்பிக்காதே ..! இது திமிர் இல்லை..அளவுகடந்த அன்பு! உன்னை காயப்படுத்தக் கூடாதுன்னு அவர் நினைக்கிறார்..! இரண்டு பேரும் ஒருத்தர் மேல் ஒருத்தர் வச்சு இருக்கிற அளவுகடந்த அன்பு தான் இந்த பிரிவுக்கே காரணம். நீ அங்கே போனால் தான் எல்லாம் சரியாகும்.நீ எப்பவும் சொல்லுவீயே! அதை நான் திருப்பி சொல்றேன்! காதலில் ஈகோ பார்க்க கூடாது.உன் கோபத்தை எல்லாம் அங்கே போய் காட்டு..!"



" நீ என்ன சொன்னாலும் எனக்கு மனசு ஒப்பவில்லை..உங்க மாமா மேலே அவ்வளவு ஆத்திரம் வருது..செய்யறதெல்லாம் செய்துட்டு இப்ப தியாகி மாதிரி நாடகமாடுறார்.எல்லாரும் அவரை பாவம்ன்னு சொல்றீங்க..இப்ப பார்த்தா ! நான் தான்‌ கொடுமைக்காரி மாதிரி தெரியுறேன்‌‌.." என்ற தமக்கையை பார்த்து மென் புன்னகை புரிந்தபடி..



" அக்கா நீ இப்ப தான் பாயிண்டே கரெக்ட்டா பிடிச்சு இருக்கே..நீ அங்கே போய் நீ நல்லவன்னு‌ நிரூபி.."



"டேய் அம்மு நீயும் இங்கே சுத்தி அங்கே சுத்தி அதிலியே வந்து நிற்கறே!"


"அக்கா உனக்கு அவர் உன்னை நம்பலைன்னு கோபம் ! அவரோ முதலில் நீ துரோகம் செய்துட்டேன்னு நினைச்சு கோபப்பட்டார்.ஆனால், உன் மீது தப்பில்லைன்னு தெரிந்த பின்..அவர் தப்பு செய்துட்டோம்ன்னு குற்றயுணர்வில் இப்ப தவிக்கிறார்..அது தான் இந்த பிரிவுக்கு காரணம்.."



"நீ என்ன என்னமோ சொல்லி என்ன குழப்புறே.."


"ஒரு குழப்பமும் இல்லை..இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்த அளவுகடந்த அன்பும், நம்பிக்கையும் தான் எல்லாத்துக்கும் காரணம்.."


" இப்ப நான் என்ன தான் செய்யனும்ங்கிறே! நான் என் கோவத்தை மறந்து‌ அவர்கிட்ட போகனுமா?"



ஆமாம்! எங்கக்கா நல்லா வாழந்தா தானே! எனக்கு சந்தோஷம்! அப்புறம் அது மட்டுமில்லை என்ன தான் இருந்தாலும் என் மனசுலே உங்கூட்டுக்காரர் மீது கொஞ்சம் வன்மம் இன்னும் இருக்காத் தான்‌ செய்யுது! நீ அங்கே போய் அவரை படுத்துற பாட்டை பார்த்து நான் கொஞ்சம் குளிர் காய்வேன்.."


"அடப்பாவி இப்படி ஒரு பேராசையா ..?"



"ஆமாம்! பின்னே இருக்காதா ..? எங்கக்காவை அவர் படுத்திய பாட்டுக்கு பதிலடி வேண்டாமா? என்று கண் சிமிட்டி சிரித்த தம்பியின் கன்னம் பிடித்து "வாலு.. வாலு.." என்று செல்லம் கொஞ்சினாள்.



எப்படியோ அமுதன் தன் அக்காவைப் பேசி பேசியே தன் வழிக்கு கொண்டு வந்தவன்.பெற்றவர்களையும் சமாதானப்படுத்தி விட்டு, தானே தன் தமக்கையை புகுந்த வீட்டிற்கு அழைத்து சென்று விட்டு வந்தான்.



திகழொளி வந்ததும்,

மருமகளை இன்முகத்துடன் வரவேற்ற உலகமாறனுக்கு அப்போது தான் போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது. மணியரசி கூட நிம்மதி பெருமூச்சு விட்டார்.



அவள் வரும் போது அவளின் நாயகன் மட்டும் வீட்டில் இல்லை..



திகழொளியோ தங்கள் அறைக்கு சென்று தன் உடமைகளை வைத்தாள்..அறையை பார்ததுமே அவளுக்கு கணவனின் மனநிலை புரிந்தது.



எப்போதும் நேர்த்தியாக இருக்கும் அறை குப்பைமேடு போல் கிடந்தது..படுக்கையில் அவள் விட்டுச் சென்ற அவளின் புடவை ஒரு புறமும் ,அவர்கள் திருமணத்தின் போது இருவரும் தனியாக எடுத்த பிரேம் போட்டு வைத்திருந்த நிழற்படம் ஒருபுறமும் கிடந்தது.



அறை முழுவதும் அவள் விட்டுச் சென்ற உடமைகளே நிரம்பி வழிந்தது. எதுக்கு இதை எல்லாம் இப்படி எடுத்து போட்டு இருக்கான் என்று நினைத்தவாறே அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்..



மாலை ஒய்ந்து போய் வீடு வந்த மகனை கண்ட உலகமாறனோ ! மருமகள் வந்ததை மகனிடம் கூறவில்லை! அவனே பார்த்து தெரிந்து கொள்ளட்டும் என்று அமைதியாக இருந்தார்.




மணியரசியோ, இரவு உணவை தயார் செய்து கொண்டிருந்தார்.அவரும் மிகன் வந்ததை கவனிக்கவில்லை..



மகிழினியை தூக்கிக் கொண்டு காஞ்சித்துரையும் வெளியில் சென்றிருந்தார் . அதனால்

வீடே அமைதியாக இருந்தது.


மிகனும் அதை பெரிதாக நினைக்கவில்லை. அவன் தான் கொஞ்ச நாள்களாக யாருடனும் சரியாக பேசுவதே இல்லையே..



அத்திப்பூத்தாப் போல் எப்பவாவது தந்தையிடம் பேசி வந்தவன் புனே செல்கிறேன் என்று சொன்னதும் தந்தையும் அவனிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்.



மனம் ஓய்ந்து தன்னையே சுமக்க முடியாத தளர்ந்த நடையுடன் தங்கள் அறைக்குச் சென்றவனின் கண்களில் விருந்தாக மனைவியை கண்டவனுக்கு ஒரு நிமிடம் உலகமே தட்டாமலையாக சுற்றியது.




எல்லையில்லா மகிழ்ச்சியில் மூச்சு விடுவதை கூட மறந்து சிலையாக நின்றான்.



திகழொளியோ, கணவன் வந்ததை கூட அறியாமல் மும்மரமாக அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.



மிகனுக்கு இன்ப அதிர்ச்சியில் இருந்து வெளியே வர சில நிமிடங்கள் ஆனது.அவன் மனமோ சொல்ல முடியாத ஆனந்தத்தில் மிதந்தது.



தன்னவள் தன்னை மன்னித்துவிட்டாளா ?என்று நினைத்தவனுக்கு அதற்கு மேல் நிற்க முடியாமல் அவளிடம் சென்றவன் "ஒளி" என்று அடி நெஞ்சிலிருந்து அழைத்தபடி அவளை பின்னிருந்து இறுக்கி அணைத்தவன் அவளின் தோள்களில் தன் முகத்தை புதைத்துக் கொண்டான்.



தொடரும்..

Hi friends,


உயிர் துடிப்பாய் நீ!
அடுத்த யூடி திங்கள் கிழமை ..படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்

















 

Latest posts

New Threads

Top Bottom