- Messages
- 1,039
- Reaction score
- 1,132
- Points
- 113
அனைத்து சோதனைகளையும் முடித்த மருத்துவர் குழந்தையை செவிலித்தாயிடம் கொடுக்க அவர் அவளை சுத்தம் செய்து, வெளியே ஆர்வத்துடன் நின்றிருந்தவர்களிடம் நீட்டி, "பெண் குழந்தை பிறந்திருக்கு" என்றார்.
குழந்தையை முதலில் தான் ஏந்திய நாச்சியம்மை, "அலமு" என தழுதழுத்த குரலில் அழைக்க, அவரின் அழைப்பில் கண்களை திறந்து பின், ஒளியால் இமை மூடிக்கொண்டது அந்த பிங்க் நிற பூச்செண்டு.
தன் வாழ்வே நிறைவு பெற்ற மகிழ்ச்சியில் இருந்தான் விக்ரமன்.
நாச்சியம்மையிடமிருந்து குழந்தையை தன் கைகளில் ஏந்தியவன், வெங்காய நிறத்தில் முழங்கை அளவில் இருந்த அந்த சிறிய ரோஜாமொட்டை கண் கொட்டாமல் பார்த்தான்.
பின், கலங்கிய கண்களுடன் தன் அம்முலுவின் நெற்றியில் முத்தம் பதித்தான். தன் தந்தையின் மீசைக் குத்தியதில் வலி தாங்காமல் வீறிட்டழுதாள் அம்முலு.
அனைவரும் குழந்தையைக் கைகளில் ஏந்திக் கொஞ்சியவுடன் குழந்தையை அதிதியிடம் தூக்கிச்சென்று அவளுக்கு பால் கொடுக்குமாறு அறிவுறுத்தினார் நாச்சியம்மை.
பால் கொடுக்கத் தெரியாமல் தடுமாறியவளுக்கு ராதா தாயாயிருந்து பல அறிவுரைகளை வழங்கினார்.
அனைத்து சோதனைகளையும் முடித்து இரண்டே நாளில் வீட்டிற்கு திரும்பினர் தாயும் சேயும். வீட்டிற்கு வந்தவளை தங்கத் தட்டில் வைத்து தாங்கினான் விக்ரமன்.
ஒரு நாளின் பத்தொன்பது மணி நேரமும் தூங்கிக் கொண்டிருந்த அம்முலுவை பார்த்துக் கொள்வதற்காகவே தன் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு அதிதியுடனேயே காவல் கிடந்தார் நாச்சியம்மை.
பால் கொடுக்க மட்டும் குழந்தையை அவளிடம் தருபவர் மற்ற நேரங்களில் எல்லாம் தன்னுடனே வைத்துக் கொண்டார்.
இப்படி இரண்டு மாத காலமும் கோழியானது குஞ்சை எப்படி அடை காக்குமோ அதுபோலவே அதிதியையும் அலமுவையும் பார்த்துக் கொண்டார்.
அது தன்னை ஆம்லெட் போடத்தான் என தெரியாத அதிதியும், இந்தக் குடும்பத்தில் தான் வாக்கப்பட்டது தன் பூர்வ ஜென்ம புண்ணியம் என எண்ணிக் கொண்டாள்.
குழந்தை பிறந்து இரண்டரை மாதம் ஓடிய நிலையில் அதிதியும் விக்ரமனும் இணைந்து குழந்தைக்கு 'ஆராதியா' என்றப் பெயரை தேர்ந்தெடுத்தனர்.
வீட்டில் இருந்தவர்களும் அதனை நல்ல பெயர் என ஆமோதிக்க, ஒருநாள் பெரிய விழாவாக எடுத்து குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டுமென விரும்பினார் நாச்சியம்மை.
அதன்படி ஏற்பாடு செய்யப்பட்ட விழாவிற்கு இரண்டு வாரங்களே இருந்த நிலையில் விக்ரமனை தன்னறைக்கு அழைத்தவர், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக அவனுடன் ஏதோ பேசினார்.
அவருடன் பேசி முடித்து வெளியே வந்தவன் நேராக தன்னறையின் பால்கனியை வந்தடைந்து, தலையை பிடித்துக்கொண்டு தொய்ந்தமர்ந்தான்.
பின், தீர யோசித்து தன் மனதில் எடுத்த முடிவுடன் அதிதியிடமிருந்து விலக ஆரம்பித்தான்.
அதன் தொடக்கமாய் பெரும்பாலும் தன் அலுவலகத்திலேயே முடங்கிக் கொண்டான். வீட்டிற்கு வந்தாலும் குழந்தையை மட்டும் கொஞ்சிவிட்டு, சுருண்டுப் படுத்துக் கொண்டான். அதிதிக்கு ஒன்றும் விளங்கவில்லை.
குழந்தையை முதலில் தான் ஏந்திய நாச்சியம்மை, "அலமு" என தழுதழுத்த குரலில் அழைக்க, அவரின் அழைப்பில் கண்களை திறந்து பின், ஒளியால் இமை மூடிக்கொண்டது அந்த பிங்க் நிற பூச்செண்டு.
தன் வாழ்வே நிறைவு பெற்ற மகிழ்ச்சியில் இருந்தான் விக்ரமன்.
நாச்சியம்மையிடமிருந்து குழந்தையை தன் கைகளில் ஏந்தியவன், வெங்காய நிறத்தில் முழங்கை அளவில் இருந்த அந்த சிறிய ரோஜாமொட்டை கண் கொட்டாமல் பார்த்தான்.
பின், கலங்கிய கண்களுடன் தன் அம்முலுவின் நெற்றியில் முத்தம் பதித்தான். தன் தந்தையின் மீசைக் குத்தியதில் வலி தாங்காமல் வீறிட்டழுதாள் அம்முலு.
அனைவரும் குழந்தையைக் கைகளில் ஏந்திக் கொஞ்சியவுடன் குழந்தையை அதிதியிடம் தூக்கிச்சென்று அவளுக்கு பால் கொடுக்குமாறு அறிவுறுத்தினார் நாச்சியம்மை.
பால் கொடுக்கத் தெரியாமல் தடுமாறியவளுக்கு ராதா தாயாயிருந்து பல அறிவுரைகளை வழங்கினார்.
அனைத்து சோதனைகளையும் முடித்து இரண்டே நாளில் வீட்டிற்கு திரும்பினர் தாயும் சேயும். வீட்டிற்கு வந்தவளை தங்கத் தட்டில் வைத்து தாங்கினான் விக்ரமன்.
ஒரு நாளின் பத்தொன்பது மணி நேரமும் தூங்கிக் கொண்டிருந்த அம்முலுவை பார்த்துக் கொள்வதற்காகவே தன் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு அதிதியுடனேயே காவல் கிடந்தார் நாச்சியம்மை.
பால் கொடுக்க மட்டும் குழந்தையை அவளிடம் தருபவர் மற்ற நேரங்களில் எல்லாம் தன்னுடனே வைத்துக் கொண்டார்.
இப்படி இரண்டு மாத காலமும் கோழியானது குஞ்சை எப்படி அடை காக்குமோ அதுபோலவே அதிதியையும் அலமுவையும் பார்த்துக் கொண்டார்.
அது தன்னை ஆம்லெட் போடத்தான் என தெரியாத அதிதியும், இந்தக் குடும்பத்தில் தான் வாக்கப்பட்டது தன் பூர்வ ஜென்ம புண்ணியம் என எண்ணிக் கொண்டாள்.
குழந்தை பிறந்து இரண்டரை மாதம் ஓடிய நிலையில் அதிதியும் விக்ரமனும் இணைந்து குழந்தைக்கு 'ஆராதியா' என்றப் பெயரை தேர்ந்தெடுத்தனர்.
வீட்டில் இருந்தவர்களும் அதனை நல்ல பெயர் என ஆமோதிக்க, ஒருநாள் பெரிய விழாவாக எடுத்து குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டுமென விரும்பினார் நாச்சியம்மை.
அதன்படி ஏற்பாடு செய்யப்பட்ட விழாவிற்கு இரண்டு வாரங்களே இருந்த நிலையில் விக்ரமனை தன்னறைக்கு அழைத்தவர், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக அவனுடன் ஏதோ பேசினார்.
அவருடன் பேசி முடித்து வெளியே வந்தவன் நேராக தன்னறையின் பால்கனியை வந்தடைந்து, தலையை பிடித்துக்கொண்டு தொய்ந்தமர்ந்தான்.
பின், தீர யோசித்து தன் மனதில் எடுத்த முடிவுடன் அதிதியிடமிருந்து விலக ஆரம்பித்தான்.
அதன் தொடக்கமாய் பெரும்பாலும் தன் அலுவலகத்திலேயே முடங்கிக் கொண்டான். வீட்டிற்கு வந்தாலும் குழந்தையை மட்டும் கொஞ்சிவிட்டு, சுருண்டுப் படுத்துக் கொண்டான். அதிதிக்கு ஒன்றும் விளங்கவில்லை.