Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிஜமது நேசம் கொண்டேன் கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
அனைத்து சோதனைகளையும் முடித்த மருத்துவர் குழந்தையை செவிலித்தாயிடம் கொடுக்க அவர் அவளை சுத்தம் செய்து, வெளியே ஆர்வத்துடன் நின்றிருந்தவர்களிடம் நீட்டி, "பெண் குழந்தை பிறந்திருக்கு" என்றார்.


குழந்தையை முதலில் தான் ஏந்திய நாச்சியம்மை, "அலமு" என தழுதழுத்த குரலில் அழைக்க, அவரின் அழைப்பில் கண்களை திறந்து பின், ஒளியால் இமை மூடிக்கொண்டது அந்த பிங்க் நிற பூச்செண்டு.


தன் வாழ்வே நிறைவு பெற்ற மகிழ்ச்சியில் இருந்தான் விக்ரமன்.


நாச்சியம்மையிடமிருந்து குழந்தையை தன் கைகளில் ஏந்தியவன், வெங்காய நிறத்தில் முழங்கை அளவில் இருந்த அந்த சிறிய ரோஜாமொட்டை கண் கொட்டாமல் பார்த்தான்.


பின், கலங்கிய கண்களுடன் தன் அம்முலுவின் நெற்றியில் முத்தம் பதித்தான். தன் தந்தையின் மீசைக் குத்தியதில் வலி தாங்காமல் வீறிட்டழுதாள் அம்முலு.


அனைவரும் குழந்தையைக் கைகளில் ஏந்திக் கொஞ்சியவுடன் குழந்தையை அதிதியிடம் தூக்கிச்சென்று அவளுக்கு பால் கொடுக்குமாறு அறிவுறுத்தினார் நாச்சியம்மை.


பால் கொடுக்கத் தெரியாமல் தடுமாறியவளுக்கு ராதா தாயாயிருந்து பல அறிவுரைகளை வழங்கினார்.


அனைத்து சோதனைகளையும் முடித்து இரண்டே நாளில் வீட்டிற்கு திரும்பினர் தாயும் சேயும். வீட்டிற்கு வந்தவளை தங்கத் தட்டில் வைத்து தாங்கினான் விக்ரமன்.


ஒரு நாளின் பத்தொன்பது மணி நேரமும் தூங்கிக் கொண்டிருந்த அம்முலுவை பார்த்துக் கொள்வதற்காகவே தன் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு அதிதியுடனேயே காவல் கிடந்தார் நாச்சியம்மை.


பால் கொடுக்க மட்டும் குழந்தையை அவளிடம் தருபவர் மற்ற நேரங்களில் எல்லாம் தன்னுடனே வைத்துக் கொண்டார்.


இப்படி இரண்டு மாத காலமும் கோழியானது குஞ்சை எப்படி அடை காக்குமோ அதுபோலவே அதிதியையும் அலமுவையும் பார்த்துக் கொண்டார்.


அது தன்னை ஆம்லெட் போடத்தான் என தெரியாத அதிதியும், இந்தக் குடும்பத்தில் தான் வாக்கப்பட்டது தன் பூர்வ ஜென்ம புண்ணியம் என எண்ணிக் கொண்டாள்.


குழந்தை பிறந்து இரண்டரை மாதம் ஓடிய நிலையில் அதிதியும் விக்ரமனும் இணைந்து குழந்தைக்கு 'ஆராதியா' என்றப் பெயரை தேர்ந்தெடுத்தனர்.


வீட்டில் இருந்தவர்களும் அதனை நல்ல பெயர் என ஆமோதிக்க, ஒருநாள் பெரிய விழாவாக எடுத்து குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டுமென விரும்பினார் நாச்சியம்மை.


அதன்படி ஏற்பாடு செய்யப்பட்ட விழாவிற்கு இரண்டு வாரங்களே இருந்த நிலையில் விக்ரமனை தன்னறைக்கு அழைத்தவர், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக அவனுடன் ஏதோ பேசினார்.


அவருடன் பேசி முடித்து வெளியே வந்தவன் நேராக தன்னறையின் பால்கனியை வந்தடைந்து, தலையை பிடித்துக்கொண்டு தொய்ந்தமர்ந்தான்.


பின், தீர யோசித்து தன் மனதில் எடுத்த முடிவுடன் அதிதியிடமிருந்து விலக ஆரம்பித்தான்.


அதன் தொடக்கமாய் பெரும்பாலும் தன் அலுவலகத்திலேயே முடங்கிக் கொண்டான். வீட்டிற்கு வந்தாலும் குழந்தையை மட்டும் கொஞ்சிவிட்டு, சுருண்டுப் படுத்துக் கொண்டான். அதிதிக்கு ஒன்றும் விளங்கவில்லை.
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
அவனுக்கு தொழிலில் ஏதோ பிரச்சனை போல என நினைத்துக் கொண்டவள், அவனை தொந்தரவு செய்ய விரும்பாமல் விலகியே இருந்தாள். அது தான் தான் செய்த மிகப் பெரிய தவறு என்றும் பின்னால் உணர்ந்தாள்.


ஒருவேளை இப்போதே அவன் சட்டையைப் பிடித்து, தொழிலில் என்ன பிரச்சனை இருந்தால் என்ன? அதை வீட்டிற்கு வெளியே விட்டுவிட்டு வரவேண்டும். இங்கு என்னையும் அம்முலுவையும் பற்றி தான் யோசிக்கவேண்டும் என அவன் கண்ணை பார்த்து பேசியிருந்தாலோ, இல்லை தொழிலில் உங்களுக்கு என்ன தான் பிரச்சனை? என்று அவனை தன் மடியில் படுக்க வைத்து தலை கோதியிருந்தாலோ, உண்மையின் சிறு துரும்பையாவது கண்டுபிடித்திருக்கலாம்.


பின்னாளில் தனக்கு கிடைக்கவிருக்கும் பெரிய ஏமாற்றத்தையும் தடுத்திருக்கலாம். ஆனால், அதைச் செய்யாமல் ஏமாறத் தயாரானாள் அதிதி.


விக்ரமனைப் போலவே மற்றவர்களும் அவளைவிட்டு நைசாக விலக ஆரம்பித்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைச் சொல்லி அவளிடமிருந்து குழந்தையையும் தூக்கிச் சென்றனர்.


குழந்தையை குளிக்க வைக்க வேண்டும் என்று தன்னுடன் எடுத்துச் செல்லும் ராதா குழந்தை பசியால் அழுதால் மட்டுமே அதிதியிடம் தந்தார். அடிக்கடி குழந்தையைக் கேட்டு சங்கடப்படுத்த விரும்பாத அதிதியும் பொறுமையாக இருந்தாள்.


சிறிது நேரம் குழந்தையை வைத்திருக்கிறேன் என்று கீர்த்தியும், கிஷோர் பாப்பா கேட்டு அழுகிறான் என ஸ்ருதியும் நாச்சியம்மையின் ஆணைக்கேற்ப அம்முலுவை மாற்றி மாற்றி எடுத்துச் சென்றனர்.


முதலில் அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக் கொண்ட அதிதி, பிறகு தான் தன் தனிமையை உணர ஆரம்பித்தாள்.


தன் கணவன் தற்போது தன்னிடம் இயல்பாகக் கூட பேசுவதில்லை என்பதை உணர்ந்தவளுக்கு அழுகை பிரவாகமாய் ஊற்றெடுத்தது.


அருகில் நெருங்கலாம் என்றாலும் அவன் பார்க்கும், என்னை விட்டு எட்டி நில்! என்ற அன்னிய பார்வையிலேயே நொந்து திரும்பினாள்.


இவ்வாறான நிலையில் விழாவிற்கு நான்கு நாட்கள் முன்பு குழந்தையைத் தேடி நாச்சியம்மையின் அறைக்குச் சென்றாள் அதிதி.


அங்கு அவள் பால் கொடுக்க அம்முலுவைக் கேட்க, "நான் ஏற்கனவே அவளுக்கு புட்டி பால் கொடுத்துட்டேன். நீ கொடுக்க தேவையில்ல." என்றார் நாச்சியம்மை.


பால்கட்டி நின்ற அதிதி அணைகட்டிய கண்ணீரை எவ்வளவு முயன்றும் அடக்க முடியவில்லை.


தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
இந்தக்கதை பிடிச்சிருந்தா பேஸ்புக்கிலும் இங்கேயும் கமெண்ட் செய்ய மறக்க வேண்டும் லட்டூஸ்❤️
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
ஒரு சிறிய நினைவூட்டல்*

இந்தக்கதையின் தலைப்பு: நிஜமது நேசம் கொண்டேன்

எழுதியவர்: ஷிவானி செல்வம்🙂
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,039
Reaction score
1,132
Points
113
அத்தியாயம் 9


அதிதிக்கு எங்கிருந்து தான் அவ்வளவு தைரியமும் ஆவேசமும் வந்ததோ தெரியாது.


"நான் இருக்கும் போது ஏன் அத்த இதைப் போய் அவளுக்கு கொடுத்தீங்க? ஒரு வயசு வரை தாய்ப்பால் தான் கொடுக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்காங்கல்ல? அது தான் உடம்புக்கு நல்லதும் கூட. தயவு செஞ்சு இதையெல்லாம் இனிமே என் பொண்ணுக்கு கொடுக்காதீங்க." என வந்த கோபத்தில் கத்தியவள் அம்முலுவை தூக்கிக்கொண்டு தன்னறைக்குச் சென்று விட்டாள்.


‘இன்னும் நாலு நாள் தான் இருக்கு குட்டி. நீ போனதுக்கப்புறம் என் அலமு என்ன பண்ணுவா பாவம்? அதான் முன்னாடியிருந்தே அவளுக்கு இதைப் பழக்கினேன். அவளும் இதைக் குடிக்க ஆரம்பிச்சிட்டா. இனி உன் தலைவிதியை யாராலும் மாத்த முடியாது குட்டி.’ என குரூரமாக நினைத்தவர் அடுத்தக் காயை நகர்த்துவதற்கான திட்டத்தைத் தீட்டினார்.


மாலையில் விக்ரமனின் அறைக்கு வந்தவர் விக்ரமனின் கையில் இருந்த அம்முலுவைக் கண்டு, "அலமுமா" என அழைக்க, அவளும் அவரின் சத்தத்தில் தலையைத் திருப்பி திருப்பிப் பார்த்தாள்.


ஓரத்திலிருந்த அதிதியை சொடுக்கிட்டு அழைத்தவர், "ஹேய் குட்டி! உன் பிறந்த வீட்டுல இருக்கறவங்களை இந்த விழாவுக்கு கூப்பிடலாம்னு இருக்கேன்" என அறிவிப்பாகக் கூற,


ஏதோ கெட்டது நடக்கப் போகிறதோ? என கலங்கிப் போயிருந்தவளுக்கு தன் பிறந்த வீட்டினர் என்றதும் மனதிற்கு கொஞ்சம் லகுவாயிருந்தது.


இந்த விழா மூலம் இரு குடும்பமும் சேர்ந்துவிடும் என்று சந்தோசப்பட்டாள். தனக்கும் தன் கணவனுக்கும் இடையேயான இடைவெளி கூட குறைந்து விடும் என்று நம்பினாள்.


பொங்கி வந்த சந்தோஷத்துடன் அவரைப் பார்த்தவள், "உங்க விருப்பம் அத்த" என்று கலங்கிய கண்களுடன் கூற,


"இதுக்குப் போய் ஏன் குட்டி கண் கலங்குற? நாளைக்கே நாங்க போய் விழாவுக்கு அவங்களை அழைச்சிட்டு வர்றோம், சரியா?" என்று கூறி, மறுநாளே சங்கரப்பாண்டியனின் இல்லம் நோக்கிப் புறப்பட்டார்.


அன்று போல் இன்றும் தன் ஆடிக் காரில் போய், சங்கரப்பாண்டியனின் வீட்டின் முன்பு இறங்கினார்.


அறையில் தனது இதர வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த சங்கரப்பாண்டியன், நாச்சியம்மையின் வருகையை அறிந்ததும், தட புடவென்று வெளியே கிளம்பி வந்தார்.


நாச்சியம்மையை நோக்கி தன் கைகளையும் கூப்பினார். அவரைக் கண்டு உதட்டோர சிரிப்புடன் பதிலுக்கு கை கூப்பினார் நாச்சியம்மை.


"நல்ல விஷயமாத் தான் பேச வந்திருக்கோம்" எனவும் அவரை உள்ளே அழைத்துச் சென்றார் சங்கரப்பாண்டியன்.


வீட்டினுள் நுழையாமல் நிலைக்கதவின் அருகிலேயே நின்று கொண்டான் விக்ரமன்.
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom