Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Search results

  1. M

    Completed உள்ளத்தில் அவள் இல்லத்தில் நான் - இந்திரா செல்வம்

    13 குங்குமப்பூ போட்ட பாலுடன் உள்ளே நுழைந்த கிருபாகரனின் கண்கள் கட்டிலின்மேல் இருந்த பெட்டியை பார்க்கத் தவறவில்லை. இருப்பினும் அதை கண்டு கொள்ளாதவன் போல், “பால் ஆறிவிடுவதற்குள் குடித்து விட்டு படு மகி” என்று பாலை டிரெஸ்ஸிங் டேபிளின் மீது வைத்துவிட்டு வெளியேறுவதற்காகத் திரும்பினான். “ஒரு...
  2. M

    Completed உள்ளத்தில் அவள் இல்லத்தில் நான் - இந்திரா செல்வம்

    12 வீட்டினுள் நுழைந்த உடனேயே காயத்ரியும், லக்ஷ்மணனும் அவளின் கால்கள் தரையில் படாதவண்ணம் கவனிக்கலானார்கள். இத்தனை நாள் ஏன் அங்கே இருந்தாய்? தோழியின் திருமணம் என்று சொல்லிவிட்டுப் போனவள் ஆறு மாதம் கழித்து இப்போது ஏன் வந்தாள்? இப்படி எந்த கேள்வியும் இல்லை.இதைச் சாப்பிடு அதைச் சாப்பிடு டாக்டர் என்ன...
  3. M

    Completed உள்ளத்தில் அவள் இல்லத்தில் நான் - இந்திரா செல்வம்

    11 நேற்று டாக்டரம்மா பேசியதே தன் நினைவில் மறுபடி மறுபடி தோன்றி மறைந்தது. அவர் கொடுத்த அத்தனை மாத்திரைகளையும், டானிக்குகளையும் சரியான நேரத்தில் சாப்பிட்டு விடுவாள் தான். அம்மா கொடுக்கும் பழச்சாறுகள், சத்தான உணவு என்று அத்தனையும் மறுக்காமல் விழுங்குவாள். காரணம் குழந்தையின் நலனுக்காக என்று...
  4. M

    Completed உள்ளத்தில் அவள் இல்லத்தில் நான் - இந்திரா செல்வம்

    10 மகிமா மயக்கத்திலிருந்து எழுந்தவுடன் முதலில் பார்த்தது உமாவைத்தான். “அம்மா” என்ற விசும்பலுடன் அவரின் தோள்களில் தஞ்சமடைந்தாள். ஒரு தாய்க்கல்லவா தெரியும் தன் குழந்தையைப் பற்றி, அவளை தன்னோடு சேர்த்தணைத்து ஆறுதல்படுத்தினார். சில நொடிகளில் சட்டென விலகியவள். “அம்மா அவர்.. அவர்...” என்ற குரலில்...
  5. M

    Completed உள்ளத்தில் அவள் இல்லத்தில் நான் - இந்திரா செல்வம்

    9 மாமியார் மாமனார் வந்து போன மூன்றாம் நாள் மாடியில் காய்ந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்த மகிமாவிடம், கவிதா மூச்சிரைக்க வந்து நின்றாள். “என்ன கவிதா! இத்தனை அவசரமாக ஓடிவரும் அளவிற்கு அப்படியென்ன மிக முக்கியச் செய்தி?” என்று கேட்டவளிடம், “மா...மா.. மாமா வந்திருக்கிறார், அம்மா உன்னை கையோடு...
  6. M

    Completed உள்ளத்தில் அவள் இல்லத்தில் நான் - இந்திரா செல்வம்

    8 நேரமும் காலமும் யாருக்காகவும் நிற்பதில்லை. மகிமா தாய் வீடு வந்து இன்றோடு ஒரு மாதம் முடிவடைந்துவிட்டது. இந்த ஒரு மாதத்தில் தினமும் கிருபாகரன் தொலைபேசி மூலம் மாமானரிடமோ, மாமியாரிடமோ பேசி மகிமாவின் நலனைப் பற்றி தெரிந்து கொள்வான். “மகிமாவிடம் பேசுங்களேன் மாப்பிள்ளை” என்று இவர்கள் கேட்கும்...
  7. M

    Completed உள்ளத்தில் அவள் இல்லத்தில் நான் - இந்திரா செல்வம்

    7 எப்போதும் அப்பாவுடன் முன் சீட்டில் அமர, கவிதாவும் மகிமாவும் அடித்துக் கொள்வார்கள். ஆனால் இன்று பின் சீட்டில் ஏறி அமர்ந்த மகிமாவை வித்தியாசமாக பார்த்தார் சிவநேசன் வீட்டிற்குள் நுழைந்ததுமே சம்பந்தி அவர்கள். “என்றைக்கு சம்பந்தி திருமணம்” என்று கேட்டபோது கொஞ்சம் தடுமாறித்தான் போனார் ஆனால் பதில்...
  8. M

    Completed உள்ளத்தில் அவள் இல்லத்தில் நான் - இந்திரா செல்வம்

    6 கிருபாகரனுக்கு உணவு பரிமாறிக் கொண்டே பேசலானாள் மகிமா. “கிருபா ஒரு சின்ன ஹெல்ப்” “என்ன மகி” “வந்து.. தப்பா நினைக்கக் கூடாது. என்னடா இவள் நம் அலுவலக வேலையில் மூக்கை நுழைக்கிறாளே என்று” “ச்சேச்.. சே நிச்சயமாக இல்லை சொல்லு” “என் தோழி ரொம்பவும் நெருங்கிய தோழி பாவம் இந்த வயதிலேயே விதவையாகி...
  9. M

    Completed உள்ளத்தில் அவள் இல்லத்தில் நான் - இந்திரா செல்வம்

    5 நாட்கள் மெல்ல நகர்ந்தது,ஒவ்வொரு நாளும் பரிட்சை போல் உணர்ந்தாள் மகிமா. எல்லா பெண்களுக்கும் கணவனைத் தவிர மற்ற புகுந்த வீட்டு உறவுகள் அன்னியமாக தெரியும். ஆனால் மகிமாவுக்கோ கணவனே அன்னியமாகப் பட்டது தான் விதி. இந்த நிலையில் தான் கிருபாகரனின் தமக்கையின் குழந்தைக்கு முதல் பிறந்த நாள் வந்தது. ஒரு...
  10. M

    Completed உள்ளத்தில் அவள் இல்லத்தில் நான் - இந்திரா செல்வம்

    4 என்ன வாழ்க்கை இது... இன்பமே இல்லாமல் இத்தனை துன்பத்தை அனுபவிக்கத்தான் இந்த திருமணமா? தேவைதானா? பேசாமல் மூட்டை கட்டிக் கொண்டு வந்த வழியே வீட்டிற்கு சென்று விடலாமா? மனதினுள் எழுந்த அந்த கசப்பான முடிவை உடனே மாற்றிக் கொண்டாள் மகிமா. தங்கை கவிதாவின் வாழ்வும் கேள்விக்குறி ஆக வேண்டுமா? அவளுக்காகவே...
  11. M

    Completed உள்ளத்தில் அவள் இல்லத்தில் நான் - இந்திரா செல்வம்

    3 வாசலிலேயே நிற்க வைத்து கிருபாகரனுக்கும் மகிமாவிற்கும் ஆரத்தி எடுத்துக் கொண்டிருந்தாள் கவிதா, மகிமாவின் ஒரே தங்கை, கேலியும் கிண்டலுமாக ஆரத்தி எடுத்த கவிதாவைப் பார்க்க கோபம் கோபமாக வந்தது கிருபாவுக்கு. என்ன செய்ய முடியும். தனக்குள் ‘ஓம் ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை சொல்லிக் கொண்டு தன் கோபத்தை...
  12. M

    Completed உள்ளத்தில் அவள் இல்லத்தில் நான் - இந்திரா செல்வம்

    2 கண்கள் எரிவது போல் இருந்தது, இமை திறக்க முடியவில்லை. தலை அதிக பாரமாக இருந்தது. கண் விழிக்க முடியாமல் சில நொடி தவித்தவன், பிறகு மெல்ல அரை கண் திறந்து பார்த்தான் வெளிச்சமாக இருந்தது. ’அடடா ரொம்ப நேரம் தூங்கிவிட்டோமோ?’ என்று யோசித்தவன் அவசரமாக எழவும், “குட்மார்னிங் கிருபா” என்ற மகிமாவின் குரல்...
  13. M

    Completed உள்ளத்தில் அவள் இல்லத்தில் நான் - இந்திரா செல்வம்

    1 “என் விருப்பத்தை யாருமே பொருட்படுத்தவில்லை மகிமா, எல்லாம் அவர்களாகவே யோசித்து அவர்களாகவே நடத்தி முடித்து விட்டனர் என்னை மன்னிப்பாயா?” எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் சர்வசாதரணமாக பேசும் கிருபாகரனை விழிவிரிய பார்த்தாள் மகிமா ஒரு நொடி அங்கே நடப்பது எல்லாம் என்னவென்றே அவளுக்கு புரியவில்லை...
  14. M

    Completed காதல் உணர்வுப்பூர்வமானது- இந்திரா செல்வம்

    12 தருணின் போன் அவன் எண்ணம் போலவே அலறியது. அதன் அலறலை நிறுத்திக் காதுக்கு கொடுத்தான். “ஹலோ...” “சிவரஞ்சனி பேசுறேன்” “ம்.. சொல்லு” “உங்களை உடனே பார்க்கணும்” “நானுந்தான்” “சரி ஈவ்னிங் 4.00 மணிக்கு எங்க தெரு முனையில் இருக்கிற கோவிலுக்கு வந்துடுங்க. நான் தெப்பக் குளத்துல தான் இருப்பேன்”...
  15. M

    Completed காதல் உணர்வுப்பூர்வமானது- இந்திரா செல்வம்

    11 சங்கர் சென்ற ஒரு மணி நேரம் கழித்து அப்பாவின் அறையை அடைந்தான். “அப்பா” மெல்ல அழைத்தான். “என்ன?” என்பது போல் பார்த்தார். “ஏன் சித்தப்பாகிட்ட இப்படி நடந்துக்கிட்டீங்க?” “உனக்கு உலகம் தெரியலை தருண். அந்த தணிகாசலம் தான் சிவரஞ்சனியை உன் தலைல கட்ட, இந்தாளை அனுப்பி இருப்பார்.” “சரி, அப்படியே...
  16. M

    Completed காதல் உணர்வுப்பூர்வமானது- இந்திரா செல்வம்

    10 ராமச்சந்திரன் வீட்டு காலிங் பெல்லை அழுத்திவிட்டு வெளியே காத்திருந்தார் தணிகாசலம். காமாட்சி தான் திறந்தார். முகம் மலர “வாங்கண்ணா வாங்க” என் வரவேற்றார் அவரை சோபாவில் அமர வைத்து, கணவரை அழைத்து வந்தார். “வாங்க” என்ற ஒற்றை வார்த்தையோடு, எதிரிலிருந்த சோபாவில் அமர்ந்துக் கொண்டார். காமாட்சி தான்...
  17. M

    Completed காதல் உணர்வுப்பூர்வமானது- இந்திரா செல்வம்

    9 வைதேகி எழுந்து நடமாட ஆரம்பித்துவிட்டார். அவளை எந்த வேலையும் செய்யவிடாமல் எல்லா வேலைகளையும் தானே இழுத்துப் போட்டு கொண்டு செய்தாள்.வேலைக்கும் சென்று வந்தாள், நாட்கள் நகர்ந்தன. அம்மாதான் முதலில் கல்யாணப் பேச்சை எடுத்தார் “என்னங்க...?” பார்த்துக் கொண்டிருத்த டிவி சீரியலை நிறுத்தினார். “ம்...”...
Top Bottom