16
வீட்டு வாசலில் அதிகமான கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. வாசலில் பெரிய சாமியானா போடப்பட்டிருந்தது. நடுவில் ஒரு கருப்பு நிற கண்ணாடி பெட்டி போடப்பட்டிருந்தது. ஓவியாவின் கால்கள் பின்னிக் கொண்டான். ஒரு வகையான பயம் அவளைக் கவ்விக் கொண்டது. தனியாக வந்தது தவறோ என்று யோசித்தாள். திரும்பிச் சென்றுவிடலாமா...
15
கோவை ரயில் நிலையம். மதியம் 12 மணி
சென்னை ரயில் தயாராக இருந்தது. பெட்டிகளை ஏற்ற உதவிய சங்கர், ஓவியாவிடம் வந்தான்.
‘உங்க நண்பனா உங்ககிட்ட ஒண்ணே ஒண்ணு சொல்லனும்னு விருப்பப்படறேன். செல்வா ரொம்ப நல்லவர். தயவு செய்து அவரை இழந்துடாதீங்க. உயிருக்கு மேலா உங்களை வெச்சுப் பார்த்துப்பாரு பக்கா...
13
தன் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான் செல்வா. நாளை விடிவது கடவுள் கையில். எது எப்படியோ இப்போ வெளியேறியதே நல்லது. வாக்குவாதம் புரியும் நிலையில் ஓவியாவின் உடல் இல்லை. அவளுக்கு ஒய்வு தேவை. டாக்டரிடம் கேட்டு ஒரு தூக்க மாத்திரை பெற்றுக் கொண்டது நல்லதாகப் போய்விட்டது. அதையும்...
12
அறைக்கு வந்ததும் தன்னிச்சையாக மின் விசிறியை இயக்கிவிட்டு, மெத்தையில் சரிந்தாள்.
உள்ளத்தில் பலவகை உணர்வுகள் உழன்று கொண்டிருந்தது. மகிழ்ச்சி.. செல்வா தன்னை எந்தளவுக்கு நேசிக்கிறன் என்பதை அறிந்த மனம் துள்ளிக் குதித்தது. தனக்காக உருகி, கவிதை சொல்லி, பாட்டுப்பாடி, தன்னையே சுற்றி வரும் அவனது மனதை...
11
கண்ணுக்கெட்டிய தூரம் வரை பறந்து விரிந்த நிலம், 50 ஏக்கர் நிலம் என்றால் வேறு எப்படியிருக்கும். ஆங்காங்கே தென்னை, பனை, மா என்று மரங்களும் இருந்தன. மேடும் பள்ளமுமாகத்தான் இருந்தது நிலம். வழிகாட்டியாக இருந்தவர் பேசிக்கொண்டே வந்தார்
‘இங்கே நிலத்தடி நீர் ரொம்ப அதிகம். ரொம்ப டேஸ்ட்டாகவும்...
9
கோவை.. அழகான ஊர். சென்னைக்கும், கோவைக்கும் அதிக வேறுபாடு இல்லை. முன் பின் தெரியாதவர்களையும் அன்பாக ‘கண்ணு’ என்று அழைக்கும் பெரியவர்கள். வார்த்தைக்கு வார்த்தை ‘ங்க’ போட்டு பேசும் மரியாதை. அதிகமான கூட்டத்துடன் சென்றாலும் ஆண் பெண் பேருந்தின் சரிபாதியை எடுத்துக் கொண்டனர். முன்பாதியில் பெண்களும்...
7
‘ஏய் பிரியா என்னடி பண்ற?’ அடுக்களையிலிருந்து குரல் கொடுத்தார் கற்பகம்.
‘என்னம்மா... பரீட்சைக்கு படிக்கிறேன்ல. என் இப்படி கத்தற’
‘கொஞ்சம் இங்க வர்றியா?
‘இரு வரேன்’ சலிப்போடு எழுந்தாள்.
‘நீ படி பிரியா நான் பார்க்கிறேன்’ குரல் கொடுத்த ஓவியா அடுக்களையை நோக்கி நடந்தாள்.
‘என்னம்மா ஏன் படிக்கிற...
6
சான்ட்ரோ சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. ஆனால் செல்வாவின் மனம் சீராக இல்லை. எண்ணங்கள் சூழ்ந்து புகைந்து கொண்டிருந்தது. ‘ஏன் குருகிட்ட மறைக்கணும்’ செல்வாவின் உள்மனது கேட்டது’
‘எப்படி அப்பாவைப் பத்தி தப்பா சொல்ல முடியும். அதான் பழியை நான் ஏத்துகிட்டேன்’ வெளிமனம் சமாதனப்படுத்த முயன்றது...
5
திருச்சி உச்சி பிள்ளையார் கோவில் மிகவும் அழகாக இருந்தது. கூட்ட நெரிசல் இல்லாத காலை வேளை. கோவில் கடிகாரம் மணி ஏழைக் காட்டியது.
தேங்காய் மூடியை தறியில் வைத்து தன் உள்ளங்ககைகளால் அதை ஓங்கி அடித்தார் சுந்தரேசன். உடைந்த துகள்கள் சிதறியது.
‘இந்தாங்கம்மா உங்களுக்கு’ என்று இரண்டு துண்டுகளை...
4
பிரியா தன் தோழிகளுடன் பேசி சிரித்துக் கொண்டு பஸ்சிலிருந்து இறங்கினாள். இறங்கியவளின் முகம் மாறியது காரணம் பஸ்ஸ்டாப்பில் நின்ற வாலிபன்.
‘ச்சே இவன் தொல்லை பெரிய தொல்லையாய் இருக்கு. எத்தனை தடவ சொன்னாலும் புரிய மாட்டேங்குதே’ என்று நினைத்தவள், அவனைக் கண்டு கொள்ளாமல் காலேஜை நோக்கி நடந்தாள்...
3
பொங்கல் திருநாள். பொலிவுடன் விடிந்தது (கற்பகம் 7.30-க்கெல்லாம் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு படைத்துவிட்டார்)
காலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு புத்தாடை அணிந்து, அம்மாவுக்கு உதவிய பிறகு சிறு தட்டில் நெய்வேத்தியம் செய்த சர்க்கரைப் பொங்கலுடன் டிவி முன் அமர்ந்தாள் பிரியா...
2
‘அம்மா.. டீ கொடும்மா தலை வலிக்குது’ என்றபடி வீட்டினுள் குரல் கொடுத்தாள்
‘இதோ தரேன்டி, முகம் கழுவிட்டு வா’ அடுக்களையினுள்ளிருந்து குரல் வந்தது.
முகம் கழுவி சோபாவில் அமர்ந்து டிவியை இயக்கினாள் எப்பவும் போல் விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது. டீ கொண்டு வந்த தாயின் முகத்தைப் பார்த்ததும் அழுகை...
1
தை திருநாள், ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’, ‘பழையன கழிதலும் புதியன புகுதலுமாக’ விளங்கும் பொங்கல் திருநாளை வரவேற்க உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஒரு நாளும் மறப்பதில்லை. என்ன! சில வேறுபாடுகளுடன். ஆனால் கொண்டாட்டத்திற்கு குறைவில்லாமல். மண்பானையில் வைக்கும் பொங்கலுக்கும் எவர் சில்வர்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.