Erode Karthik
Active member
- Messages
- 315
- Reaction score
- 71
- Points
- 28
அத்தியாயம் 1
இன்ஸ்பெக்டர் சிங்கமுத்து பூட்டை திறந்து வீட்டின் உள்ளே நுழைந்தார். இருட்டாக இருந்த வீட்டை சுவிட்சை போட்டு வெளிச்சமாக்கியவர் கையில் இருந்த வி எஸ் ஓ பி கோட்டர் பாட்டிலை காலியாக இருந்த டீப்பாயில் வைத்தார். பூட்டையும் சாவியையும் டீப்பாயில் வைத்து விட்டு சாப்பாட்டு பார்சலை கிச்சனுக்கு கொண்டு போனார். குடித்துவிட்டு சாப்பிடலாமா இல்லை சாப்பிட்டு விட்டு குடிக்கலாமா என்ற யோசனையோடு திரும்ப ஹாலுக்கு வந்தவர் வண்டிபையில் எடுக்காமல் விட்டு விட்டு வந்த முட்டை பார்சலை எடுக்க திரும்ப வாசலை நோக்கி நடந்தார். அதே நேரம் அவரது இடுப்பில் இருந்த வாக்கி டாக்கி அலற ஆரம்பித்தது.
"பீட் நம்பர் 11. இங்கே ஓரு கார் செக்போஸ்டை உடைத்து விட்டு போகிறது. கார் நெம்பர் MD S5748. ப்ளூ கலர் அம்பாசிடர் .காரை எங்கே பார்த்தாலும் தடுத்து நிறுத்தவும்."வாக்கி டாக்கியில் போலீஸ் கண்ட்ரோல் ரூம் குரல் விடாது ஒலிக்க ஆரம்பித்தது.
இன்ஸ்பெக்டர் சிங்கமுத்துவின் மயிர் கால்கள் நிமிர்ந்து கொண்டன. காலையில் தான் மாணிக்கம்பாளையம் ஸ்டேசனில் இந்த கார் காணாமல் போனதாக ரிப்போர்ட் பைலாகியிருந்தது அவரது நினைவுக்கு வந்தது. இது நிச்சயமாக அவன் தான். அவன் தான் கார்களை திருடி விட்டு பிறகு பெண்களை கடத்தி கொலை செய்து நிர்வாண உடம்பில் எண்களை வரிசையாக கத்தியால் முதுகில் பொறிப்பவன். சிங்கமுத்துவிற்கு தெளிவாக தெரியும். அந்த காரில் முதுகில் 8 என்ற எண் எழுதப்பட்ட ஒரு பெண் பிணமாக பின் சீட்டிலோ டிக்கியிலோ இருக்க கூடுமென . இரண்டு வருடங்களாக சிங்கமுத்து அவனை தேடிக் கொண்டிருக்கிறார். இப்போது வாய்ப்பு வலிய வந்து சேர்ந்திருக்கிறது. தாறுமாறாக துடிக்க தொடங்கிய இதயத்தை பெருமூச்சு விட்டு சீராக்கி கொண்டவர் புயலென கிளம்பினார். வீட்டை பூட்டும் முன்பாக சுவரில் மாலையுடன் காட்சியளித்த மனைவி சாவித்திரியின் போட்டோவை ஒரு முறை பார்த்தவர் கண்களை துடைத்து கொண்டு கிளம்பினார்.
ஓரே உதையில் அவரது பைக் சீறிக் கொண்டு கிளம்பியது. இடுப்பின் பின் பக்கத்தில் ரிவால்வர் இருக்கிறதா என்று ஒரு முறை தொட்டு பார்த்து கொண்டார். அவர் மனம் தீவிரமாக கணக்கு போட்டது. பீட் நெம்பர் 11என்பது திண்டல் மேட்டை குறிப்பது. அவன் பெருந்துறை நோக்கித்தான் போய் கொண்டிருக்க வேண்டும். அவர் சட்டென்று ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் இருசப்பனுக்கு போன் போட்டார். எடுத்த இரு சப்பன்" சொல்லுங்க சார்" என்றான்.
"இரு சு! இப்போது நீ எங்கிருக்கிறாய்?"
"மேட்டு கடை பீட்சார் "
"கூட பசங்க இருக்கிறார்களா?"
" இருக்கிறார்கள் சார். "
"பேரி கார்ட் இல்லை கல்லை வைச்சு ரோட்டை மறித்து போக்குவரத்தை நிறுத்து. வாக்கி டாக்கி நியூசை கேட்டாய் தானே?"
" கேட்டேன் சார். நீங்க சொல்வது போலவே செய்கிறோம் சார்"
"கவனமாக கேள் இரு சு!நீ டிராபிக்கை நிறுத்தியதும் அவன் வேறு வழியில்லாமல் காரை திருப்பி கொண்டு திரும்ப வந்த வழியாகவே வருவான். கண்டிப்பாக சார்ட் கட்ல தான் அவன் வந்தாக வேண்டும். நான் அவனை தேடி கிளம்பி விட்டேன். எனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நாங்கள் நேருக்கு நேர் சந்தித்து கொள்வோம் Vஅப்போது அவன் கண்டிப்பாக என்னிடம் மாட்டுவான்."
"புரியுது சார். ஜாக்கிரதையாக இருங்கள் சார். "
செல்போனை அணைத்த சிங்கமுத்து ஆக்சிலேட்டரை முழு வேகத்தில் முறுக்கினார்.
சிங்கமுத்து யூனிபார்ம் அணியாத க்ரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் .தவிர்க்க முடியாத தருணங்களில் மட்டுமே சீருடை அணிவது அவரது வழக்கம். மனைவியை இழந்து விட்டு தனிமரமாக இருக்கும் அவரைடிப்பார்ட்மெண்ட் கூப்பிடும் செல்ல பெயர் சிங் .பல கேஸ்களை அனாயசமாக தீர்த்து வைத்திருக்கும் சிங்கிற்கு இருக்கும் ஒரே பலவீனம் அவரது இதய பிரச்சனை தான்.முதல் அட்டாக் வந்து மயங்கி விழுந்த சிங்கை பரிசோதித்த டாக்டர் இரண்டாம் மூன்றாவது அட்டாக்கில் சிங் தப்பி பிழைப்பது கடினம் என்றும் அவரது இதயத்தின் வெண் டிரிக்கிள் பகுதி மிகுந்த சேதம் அடைந்திருப்பதால் அவரது இதயத்தை மாற்றி வேறு இதயத்தை பொருத்த வேண்டும் என்று கண்டிப்பாக கூறியிருந்தார்.
சிங்கிற்கு மாற்று இதயம் பொருத்துவதிலும் ஒரு பெரிய சிக்கல் இருந்தது. அவரது ரத்த வகை மிகஅரிதான பாம்பே பிளட் வகை. இந்தியாவில் அவர்களுக்கென்று தனியாக சங்கம் கூட இருந்தது. சிங் அந்த சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்தார். மாற்று இருதயம் பொருத்துவதற்குள் இந்த நெம்பர் கொலைகாரனை பிடித்து விட வேண்டும் என்று சிங் முயன்று கொண்டிருந்தார். கொலைகாரனோ சிங்கிற்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தான்.
சிங் வில்ல ரசம்பட்டி வழியாக நுழைந்து காரப் பாறை ரோட்டில் வண்டியை திருப்பினார். அவன் டிராபிக் கால் தடுத்து நிறுத்தப்பட்டால் இந்த வழியாகத்தான் வந்தாக வேண்டும் என்று சிங் அனுமானித்தார். வேறு சில குறுக்குவழிகள் இருந்தாலும் கொலைகாரன் இந்த வழியாகத்தான் வந்தாக வேண்டும் என்று சிங்கின் உ ள்ளுணர்வு கூறியது.
சிங்கிற்கு அதிர்ஷ்டம் நிறையவே இருந்தது. அவரது அனுமானம் உண்மையாகியிருந்தது. 50 அடி தூரத்தில் அந்த கார் ஹேட்லைட் வெளிச்சத்தோடு வந்து கொண்டிருந்தது. சிங் பைக்கின் வேகத்தை குறைத்தார். வண்டிபையினுள் கையை விட்ட போது கேரி பேக் முடிச்சு அவிழ்ந்து முட்டைகள் ஆடிக்கொண்டிருந்தன. இதிலும் சிங்கிற்கு அதிர்ஷ்டம் உதவியது.அதில் இரண்டு முட்டைகளை எடுத்தவர் கார் கண்ணாடியை நோக்கி விட்டெறிந்தார். "ங் கோத்தா " என்ற வார்த்தையோடு கார் சற்று தொலைவில் போய் நின்றது.கார் கதவை திறந்து கொண்டு அவன் இறங்கினான். அவன்மங்கி குல்லா அணிந்து முகத்தை மறைத்திருந்தான். ஜெர்கினும், ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்து கால்களில் ஸ்போர்ட்ஸ் ஷூவை மாட்டியிருந்தான்.
சைடு ஸ்டேண்ட் போட்டு பைக்கை நிறுத்திய சிங் இடுப்பில் இருந்த துப்பாக்கியை உருவினார். உருவிய துப்பாக்கியை அவனை நோக்கி நீட்டிய சிங் "ஹோண்ட்ஸ் அப்" என்றார்.
அவன் ஒரு கணம் திடுக்கிட்டு நின்றவன். அடுத்தகணம் மெல்ல சிரித்தவன்" யாரு? சிங்கா?" என்றான்.
சிங் டிப்பார்ட்ன்மெண்டில் அழைக்கும் தன் செல்ல பெயர் இவனுக்கு எப்படி தெரிந்தது என்று அயர்ந்து நின்றார். அதே நேரம் அவனை பற்றி ஒரு விசயம் கூட தனக்கு தெரியவில்லையே என்று அவர் மேல் அவருக்கே ேகாபம் வந்தது.
சிங் அயர்ந்து நின்ற அந்த ஒரு நொடி அவனுக்கு போதுமானதாக இருந்தது. காருக்கு முன்பாக நீண்ட சாலையில் புயலாக ஓட ஆரம்பித்தான் அவன்.சிங் அவனை துரத்த ஆரம்பித்தார். அவன் புலிக்கு பந்த புள்ளிமானாக குதித்து ஓடிக் கொண்டிருள்தான்.சிங் தனது கனத்த சரீரத்தை தூக்கி கொண்டு ஓடிக் கொண்டிருந்தார். இருட்டு அவனுக்கு சாதகமாக இருந்தது.. துப்பாக்கியை நீட்டி பிடித்தபடி அவன் பின்னால் குத்துமதிப்பாக வந்து கொண்டிருந்தார் சிங் .
இப்போதும் சிங்கின் பக்கம் அதிர்ஷ்டம் இருந்தது. கம்பி வலையால் அடைக்கப்பட்டிருந்த ஒரு முட்டுச் சந்தில் வழியில்லாமல் அவன் தடுமாறி நின்று கொண்டிருப்பதை தெருவிளக்கின் வெளிச்சத்தில் சிங் பார்த்தார். "ஓடாதே! நில். இல்லையென்றால் சுட்டு விடுவேன்" என்று கத்தினார் சிங் .அவரது பேச்சை அலட்சியம் செய்தபடி கம்பி வலைமீது ஏற ஆரம்பித்தான் அவன்.
ஓடி வந்த சிங் நின்றார். அவரது இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது. நெஞ்சின் மத்தியில் ஒரு குண்டுசியால் குத்திய வலிபர வ ஆரம்பித்தது. அவரது உடல் முழுவது ஜில்லிட ஆரம்பித்து வேர்க்க துவங்கியது. சிங் மூச்சு விடுவதை சிரமமாக உணர தொடங்கினார். இருள துவங்கிய கண்களில் வெளிச்சத்தை மீட்டு கொண்ட சிங்கம் பி வலையில் ஏறி மறுபக்கம் குதித்தவனை குறி பார்த்து சுட்டார். சிங்கின் துப்பாக்கியிலிருந்து கிளம்பியதோட்டா கம்பி ஓட்டை வழியாக புகுந்து ஓட துவங்கியவனின் வலது புறதோளில் பாய்ந்தது. "அய்யோ " என்ற அலறலுடன் கிழே விழுந்தவன் தட்டுதடுமாறி மெல்ல எழுந்து இருளில் மறைந்தான்.
சிங்கின் கண்கள் இருளத் துவங்கின. அவரது கையிலிருந்த ரிவால்வர் நழுவி தரையில் விழுந்தது. தரையில் அப்படியே நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார் சிங் .கனத்த இருள் அவரை மூடியது.
இன்ஸ்பெக்டர் சிங்கமுத்து பூட்டை திறந்து வீட்டின் உள்ளே நுழைந்தார். இருட்டாக இருந்த வீட்டை சுவிட்சை போட்டு வெளிச்சமாக்கியவர் கையில் இருந்த வி எஸ் ஓ பி கோட்டர் பாட்டிலை காலியாக இருந்த டீப்பாயில் வைத்தார். பூட்டையும் சாவியையும் டீப்பாயில் வைத்து விட்டு சாப்பாட்டு பார்சலை கிச்சனுக்கு கொண்டு போனார். குடித்துவிட்டு சாப்பிடலாமா இல்லை சாப்பிட்டு விட்டு குடிக்கலாமா என்ற யோசனையோடு திரும்ப ஹாலுக்கு வந்தவர் வண்டிபையில் எடுக்காமல் விட்டு விட்டு வந்த முட்டை பார்சலை எடுக்க திரும்ப வாசலை நோக்கி நடந்தார். அதே நேரம் அவரது இடுப்பில் இருந்த வாக்கி டாக்கி அலற ஆரம்பித்தது.
"பீட் நம்பர் 11. இங்கே ஓரு கார் செக்போஸ்டை உடைத்து விட்டு போகிறது. கார் நெம்பர் MD S5748. ப்ளூ கலர் அம்பாசிடர் .காரை எங்கே பார்த்தாலும் தடுத்து நிறுத்தவும்."வாக்கி டாக்கியில் போலீஸ் கண்ட்ரோல் ரூம் குரல் விடாது ஒலிக்க ஆரம்பித்தது.
இன்ஸ்பெக்டர் சிங்கமுத்துவின் மயிர் கால்கள் நிமிர்ந்து கொண்டன. காலையில் தான் மாணிக்கம்பாளையம் ஸ்டேசனில் இந்த கார் காணாமல் போனதாக ரிப்போர்ட் பைலாகியிருந்தது அவரது நினைவுக்கு வந்தது. இது நிச்சயமாக அவன் தான். அவன் தான் கார்களை திருடி விட்டு பிறகு பெண்களை கடத்தி கொலை செய்து நிர்வாண உடம்பில் எண்களை வரிசையாக கத்தியால் முதுகில் பொறிப்பவன். சிங்கமுத்துவிற்கு தெளிவாக தெரியும். அந்த காரில் முதுகில் 8 என்ற எண் எழுதப்பட்ட ஒரு பெண் பிணமாக பின் சீட்டிலோ டிக்கியிலோ இருக்க கூடுமென . இரண்டு வருடங்களாக சிங்கமுத்து அவனை தேடிக் கொண்டிருக்கிறார். இப்போது வாய்ப்பு வலிய வந்து சேர்ந்திருக்கிறது. தாறுமாறாக துடிக்க தொடங்கிய இதயத்தை பெருமூச்சு விட்டு சீராக்கி கொண்டவர் புயலென கிளம்பினார். வீட்டை பூட்டும் முன்பாக சுவரில் மாலையுடன் காட்சியளித்த மனைவி சாவித்திரியின் போட்டோவை ஒரு முறை பார்த்தவர் கண்களை துடைத்து கொண்டு கிளம்பினார்.
ஓரே உதையில் அவரது பைக் சீறிக் கொண்டு கிளம்பியது. இடுப்பின் பின் பக்கத்தில் ரிவால்வர் இருக்கிறதா என்று ஒரு முறை தொட்டு பார்த்து கொண்டார். அவர் மனம் தீவிரமாக கணக்கு போட்டது. பீட் நெம்பர் 11என்பது திண்டல் மேட்டை குறிப்பது. அவன் பெருந்துறை நோக்கித்தான் போய் கொண்டிருக்க வேண்டும். அவர் சட்டென்று ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் இருசப்பனுக்கு போன் போட்டார். எடுத்த இரு சப்பன்" சொல்லுங்க சார்" என்றான்.
"இரு சு! இப்போது நீ எங்கிருக்கிறாய்?"
"மேட்டு கடை பீட்சார் "
"கூட பசங்க இருக்கிறார்களா?"
" இருக்கிறார்கள் சார். "
"பேரி கார்ட் இல்லை கல்லை வைச்சு ரோட்டை மறித்து போக்குவரத்தை நிறுத்து. வாக்கி டாக்கி நியூசை கேட்டாய் தானே?"
" கேட்டேன் சார். நீங்க சொல்வது போலவே செய்கிறோம் சார்"
"கவனமாக கேள் இரு சு!நீ டிராபிக்கை நிறுத்தியதும் அவன் வேறு வழியில்லாமல் காரை திருப்பி கொண்டு திரும்ப வந்த வழியாகவே வருவான். கண்டிப்பாக சார்ட் கட்ல தான் அவன் வந்தாக வேண்டும். நான் அவனை தேடி கிளம்பி விட்டேன். எனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நாங்கள் நேருக்கு நேர் சந்தித்து கொள்வோம் Vஅப்போது அவன் கண்டிப்பாக என்னிடம் மாட்டுவான்."
"புரியுது சார். ஜாக்கிரதையாக இருங்கள் சார். "
செல்போனை அணைத்த சிங்கமுத்து ஆக்சிலேட்டரை முழு வேகத்தில் முறுக்கினார்.
சிங்கமுத்து யூனிபார்ம் அணியாத க்ரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் .தவிர்க்க முடியாத தருணங்களில் மட்டுமே சீருடை அணிவது அவரது வழக்கம். மனைவியை இழந்து விட்டு தனிமரமாக இருக்கும் அவரைடிப்பார்ட்மெண்ட் கூப்பிடும் செல்ல பெயர் சிங் .பல கேஸ்களை அனாயசமாக தீர்த்து வைத்திருக்கும் சிங்கிற்கு இருக்கும் ஒரே பலவீனம் அவரது இதய பிரச்சனை தான்.முதல் அட்டாக் வந்து மயங்கி விழுந்த சிங்கை பரிசோதித்த டாக்டர் இரண்டாம் மூன்றாவது அட்டாக்கில் சிங் தப்பி பிழைப்பது கடினம் என்றும் அவரது இதயத்தின் வெண் டிரிக்கிள் பகுதி மிகுந்த சேதம் அடைந்திருப்பதால் அவரது இதயத்தை மாற்றி வேறு இதயத்தை பொருத்த வேண்டும் என்று கண்டிப்பாக கூறியிருந்தார்.
சிங்கிற்கு மாற்று இதயம் பொருத்துவதிலும் ஒரு பெரிய சிக்கல் இருந்தது. அவரது ரத்த வகை மிகஅரிதான பாம்பே பிளட் வகை. இந்தியாவில் அவர்களுக்கென்று தனியாக சங்கம் கூட இருந்தது. சிங் அந்த சங்கத்தில் உறுப்பினராகவும் இருந்தார். மாற்று இருதயம் பொருத்துவதற்குள் இந்த நெம்பர் கொலைகாரனை பிடித்து விட வேண்டும் என்று சிங் முயன்று கொண்டிருந்தார். கொலைகாரனோ சிங்கிற்கு தண்ணீர் காட்டிக் கொண்டிருந்தான்.
சிங் வில்ல ரசம்பட்டி வழியாக நுழைந்து காரப் பாறை ரோட்டில் வண்டியை திருப்பினார். அவன் டிராபிக் கால் தடுத்து நிறுத்தப்பட்டால் இந்த வழியாகத்தான் வந்தாக வேண்டும் என்று சிங் அனுமானித்தார். வேறு சில குறுக்குவழிகள் இருந்தாலும் கொலைகாரன் இந்த வழியாகத்தான் வந்தாக வேண்டும் என்று சிங்கின் உ ள்ளுணர்வு கூறியது.
சிங்கிற்கு அதிர்ஷ்டம் நிறையவே இருந்தது. அவரது அனுமானம் உண்மையாகியிருந்தது. 50 அடி தூரத்தில் அந்த கார் ஹேட்லைட் வெளிச்சத்தோடு வந்து கொண்டிருந்தது. சிங் பைக்கின் வேகத்தை குறைத்தார். வண்டிபையினுள் கையை விட்ட போது கேரி பேக் முடிச்சு அவிழ்ந்து முட்டைகள் ஆடிக்கொண்டிருந்தன. இதிலும் சிங்கிற்கு அதிர்ஷ்டம் உதவியது.அதில் இரண்டு முட்டைகளை எடுத்தவர் கார் கண்ணாடியை நோக்கி விட்டெறிந்தார். "ங் கோத்தா " என்ற வார்த்தையோடு கார் சற்று தொலைவில் போய் நின்றது.கார் கதவை திறந்து கொண்டு அவன் இறங்கினான். அவன்மங்கி குல்லா அணிந்து முகத்தை மறைத்திருந்தான். ஜெர்கினும், ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்து கால்களில் ஸ்போர்ட்ஸ் ஷூவை மாட்டியிருந்தான்.
சைடு ஸ்டேண்ட் போட்டு பைக்கை நிறுத்திய சிங் இடுப்பில் இருந்த துப்பாக்கியை உருவினார். உருவிய துப்பாக்கியை அவனை நோக்கி நீட்டிய சிங் "ஹோண்ட்ஸ் அப்" என்றார்.
அவன் ஒரு கணம் திடுக்கிட்டு நின்றவன். அடுத்தகணம் மெல்ல சிரித்தவன்" யாரு? சிங்கா?" என்றான்.
சிங் டிப்பார்ட்ன்மெண்டில் அழைக்கும் தன் செல்ல பெயர் இவனுக்கு எப்படி தெரிந்தது என்று அயர்ந்து நின்றார். அதே நேரம் அவனை பற்றி ஒரு விசயம் கூட தனக்கு தெரியவில்லையே என்று அவர் மேல் அவருக்கே ேகாபம் வந்தது.
சிங் அயர்ந்து நின்ற அந்த ஒரு நொடி அவனுக்கு போதுமானதாக இருந்தது. காருக்கு முன்பாக நீண்ட சாலையில் புயலாக ஓட ஆரம்பித்தான் அவன்.சிங் அவனை துரத்த ஆரம்பித்தார். அவன் புலிக்கு பந்த புள்ளிமானாக குதித்து ஓடிக் கொண்டிருள்தான்.சிங் தனது கனத்த சரீரத்தை தூக்கி கொண்டு ஓடிக் கொண்டிருந்தார். இருட்டு அவனுக்கு சாதகமாக இருந்தது.. துப்பாக்கியை நீட்டி பிடித்தபடி அவன் பின்னால் குத்துமதிப்பாக வந்து கொண்டிருந்தார் சிங் .
இப்போதும் சிங்கின் பக்கம் அதிர்ஷ்டம் இருந்தது. கம்பி வலையால் அடைக்கப்பட்டிருந்த ஒரு முட்டுச் சந்தில் வழியில்லாமல் அவன் தடுமாறி நின்று கொண்டிருப்பதை தெருவிளக்கின் வெளிச்சத்தில் சிங் பார்த்தார். "ஓடாதே! நில். இல்லையென்றால் சுட்டு விடுவேன்" என்று கத்தினார் சிங் .அவரது பேச்சை அலட்சியம் செய்தபடி கம்பி வலைமீது ஏற ஆரம்பித்தான் அவன்.
ஓடி வந்த சிங் நின்றார். அவரது இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது. நெஞ்சின் மத்தியில் ஒரு குண்டுசியால் குத்திய வலிபர வ ஆரம்பித்தது. அவரது உடல் முழுவது ஜில்லிட ஆரம்பித்து வேர்க்க துவங்கியது. சிங் மூச்சு விடுவதை சிரமமாக உணர தொடங்கினார். இருள துவங்கிய கண்களில் வெளிச்சத்தை மீட்டு கொண்ட சிங்கம் பி வலையில் ஏறி மறுபக்கம் குதித்தவனை குறி பார்த்து சுட்டார். சிங்கின் துப்பாக்கியிலிருந்து கிளம்பியதோட்டா கம்பி ஓட்டை வழியாக புகுந்து ஓட துவங்கியவனின் வலது புறதோளில் பாய்ந்தது. "அய்யோ " என்ற அலறலுடன் கிழே விழுந்தவன் தட்டுதடுமாறி மெல்ல எழுந்து இருளில் மறைந்தான்.
சிங்கின் கண்கள் இருளத் துவங்கின. அவரது கையிலிருந்த ரிவால்வர் நழுவி தரையில் விழுந்தது. தரையில் அப்படியே நெடுஞ்சாண் கிடையாக விழுந்தார் சிங் .கனத்த இருள் அவரை மூடியது.