Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Regular-Update உயிர் துடிப்பாய் நீ! கதை திரி

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
413
Reaction score
659
Points
93
Migan unnudayadhu Yenna love 😈 ava mela yevvalavu nambikai 😈 gift items vachi avala thappa ninachiya 😈 neeran migan room ku poyi antha gift items ellam parthu athey pol gift items vangi irrukan...ippo neeran sucide drama panran...nice intresting ud sis ❤️
Thank you so much dear❤️
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
413
Reaction score
659
Points
93

உயிர் துடிப்பாய் நீ!

அத்தியாயம் 28

வாழ்க்கையில் நாம் கொஞ்சம் கூட எதார்பாரதது தான் பெரும்பாலும் நடக்கும்.


காலச் சூழ்நிலைகள் எப்படிவேண்டுமானும் மாறும்..

அப்படித் தான் இன்று மிகனுக்கும், திகழொளிக்கும் சூழ்நிலைகள் பெரிய துன்பத்தையும், மாற்றத்தையும் கொடுத்தது.


மிகன் ருத்ர தாண்டவம் ஆடிச் சென்ற பின் திகழொளியின் பெற்றவர்கள் அவளிடம் பேசுவதையே அறவே நிறுத்திவிட்டார்கள்.


அதுவும் அவள் மீது வைத்திருந்த நம்பிக்கை சில்லு, சில்லாக உடைந்து போனதை அவர்களால் சிறிதும் தாங்க முடியவில்லை..


பெற்றவர்களின் காதுபடவே அக்கம் பக்கத்து வீட்டினரும் திகழொளியைப் பேசினார்கள்..


"இந்த காலத்தில் யாரையும் நம்ப முடியவில்லை.. எந்த புத்திற்குள் எந்த பாம்பு இருக்குதுன்னு யாருக்கு தெரியும்.. ஒண்ணுமே தெரியாத மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு இந்த திகழொளி என்ன வேலை செய்திருக்கா பாரு .."என்று சும்மா இருந்த வாய்க்கு அவல் கிடைத்த மாதிரி பேசி தீர்த்தனர்..



பெற்றவர்கள் வெளியில் தலைகாட்ட முடியாதபடி பேச்சுக்கள் நாளுக்கு நாள் கூடியது..



ஒவ்வொருவரிடமும் சென்று விளக்கம் கொடுக்கவா முடியும். அதுவும் ஆயிரம் தான் இருந்தாலும் அவர்கள் பேசுவது அவர்களின் மகளை..


இதை எல்லாம் கேட்டு மகள் ஏதாவது தவறான முடிவு எடுத்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்தனர்.


ஏற்கனவே நொந்து போய் இருந்தவர்களுக்கு
அக்கம் பக்கத்தினர் கேலிப்பார்வையையும், பேச்சையும் எதிர் கொள்ள முடியாமல் தங்கள் சொந்த வீட்டை ஒரே வாரத்தில் காலி செய்துவிட்டு வேறு ஏரியாவிற்கு வாடகை வீட்டிற்கு குடி போனார்கள்.


தன் சொந்த உழைப்பில் பலநாள் கனவாக ஆசை ஆசையாக கட்டிய வீட்டை மகளுக்காக சில மாதங்களில் வந்த விலைக்கு விற்றார் அறவாணன்.


திகழொளியோ நடைபிணமாக இருந்தாள்..உயிராக நேசித்தவனும் நம்பவில்லை..பெற்றவர்களும் நம்பவில்லை..இதை விட வேதனை என்ன இருக்கும்..


தனக்குள்ளேயே அழுது ,அழுது உருகினாள்.அமுதன் மட்டும் இல்லை என்றால் அவள் என்ன ஆகி இருப்பாளோ..?


அமுதன் மட்டுமே அவளை நம்பினான்! அவளுக்கு ஆறுதலாக இருந்தான். அவளை பழைய படி தேற்றப் போராடினான்.


திகழொளியோ, மிகனை வெறுக்கவும் முடியாமல் , மறக்கவும் முடியாமல் தவியாய் தவித்தாள்.அவள் மனதுடனேயே போராடினாள்.


காதல் கொண்ட மனது அப்போதும் அவனின் செயல்களுக்கு காரணம் தேடியது.அவன் பக்கம் நியாயத்தை தேடியது. அவளே அப்போது தான் மிகனை தான் எவ்வளவு விரும்பி இருக்கிறோம் என்று உணர்ந்து கொண்டாள்.


திகழொளி தன் நிலமையை நினைத்து அனுதினமும் நொந்து கொண்டாள்..

தன் தமக்கையின் நிலையை காணச் சகிக்காமல் அமுதன் , "அக்கா ப்ளீஸ் இப்படி மனசுக்குள்ளேயே போட்டு அழுத்தி உன் உடம்பைக் கெடுத்துக்காதே..உன் நேசத்திற்கு ஒரு துளி கூட பொருத்தமில்லாத ஆளுக்காக நீ ‌ஏன் உன்னை இப்படி வருத்திக் கொள்கிறாய்.." என்று கடிந்து கொண்டான்.


"அம்மு என்னால் முடியலையே ! நான் செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிக்கிறேன்..அப்பா, அம்மாவும் எங்கூட பேசறது இல்லை..அவங்க நம்பிக்கையை நான் உடைத்துட்டேன்னு குற்ற உணர்வு என்னை கொள்ளாமல் கொள்ளுதுடா.." என்று கூறியபடி தம்பியின் தோள்களில் சாய்ந்து கதறியவளிடம்..


"அக்கா யார் நம்பினாளும் ! நம்பாட்டீயும்! நான் நம்பறேன்..என் அக்கா பத்தரை மாத்து தங்கம்.அவளால் கனவில் கூட அடுத்தவர்களுக்கு கஷ்டம் கொடுக்க முடியாது.. நான் இருக்கேன் உனக்கு.." என்று தமக்கைக்கு பெரியவனாக அவன் ஆறுதல் சொன்னான்..


அறவாணனால், மகளை மன்னிக்கவே முடியவில்லை ! எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், மகள் இப்படி ஒரு அவப்பெயரை சம்பாதித்து விட்டாளே..? என்று அனுதினமும் நினைத்து நினைத்து தன் உடல்நிலையையும் கெடுத்துக் கொண்டார்.


மனைவியின் சொல்லைக் கேட்டு அவசர அவசரமாக மகளுக்கு திருமணத்திற்கு வரன் பார்த்தார்.


பெண்ணின் பெயர் கெட்டுவிடக்கூடாது என்று பெற்றவராய் யோசித்து வரன் பார்க்க ஆரம்பித்தார்கள்..


ஆனால், திகழொளி அதற்கு சம்மதிக்கவே இல்லை..தாய் தந்தையின் எதிர்பார்ப்பை சமாளித்தபடி "அப்பா சத்தியமா என்னால் அவரைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது.." என்று திருமணத்தை மறுத்தாள்..


பொன்னியோ, மகள் சொன்னதைக் கேட்டு கோபத்தில் கண்முன் தெரியாமல் அடித்துக் கூட பார்த்தார்.. ஆனால், அத்தனை அடியையும் வாங்கிக் கொண்டு அவள் நிலையில் உறுதியாக இருந்தாள்.



"ம்மா அவர் எப்படியோ ..? ஆனால், நான் அவரை உண்மையாகத் தான் நேசித்தேன். என்னால் அவரைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்துக்க முடியாது. என்றாவது அவர் என்னைப் புரிந்து கொள்வார்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..!எனக்கு தெரியும் அவரும் என்னை உண்மையாகத் தான் நேசித்தார் ! ஆனால், சூழ்நிலை அவரை இன்று என்னை இப்படி பேச வைத்துவிட்டது ! என் நேசம் உண்மையா இருந்தால்? அவர் என்னை ஒரு நாள் புரிந்து கொண்டு வருவார்.. !அதுவரை நான் அவருக்காக காத்திருப்பேன்.." என்று அதே பிடியில் நின்ற மகள் மீது பெற்றவர்களுக்கு வெறுப்பு தான் மிஞ்சியது.



அமுதனோ, தமக்கையிடம் " அக்கா உனக்கு என்ன பைத்தியமா? அந்த ஆளை இன்னுமா நம்புறே..உன் காதலுக்கு ஒரு சதவீதம் கூட பொருத்தம் இல்லாதவர்.அவருக்காக உன் வாழ்க்கையை கெடுத்துப்பீயா.."என்று கோபமாக கேட்டவனிடம்..


"அம்மு இப்பவும் நான் சொல்றேன்.நான் அவரை உண்மையா உயிரா நேசித்தேன்.அவர் மனசரிந்து அப்படி என்னைப் பேசவில்லை..சூழ்நிலை அப்படி பேச வைத்திருக்கிறது..அந்த நீரன் என்ன சொன்னானோ..?"


"நீரன் என்ன சொன்னாலும் அந்த ஆளுக்கு உன் மீது கொஞ்சமாவது நம்பிக்கை இருந்திருக்க வேண்டும்.. காதலில் அடிப்படை நம்பிக்கை தான்.அதுவே இல்லை என்றால் எப்படி..?"


"அம்மு நான் சொல்வது உனக்கு புரியுமான்னு தெரியலே? அளவு கடந்த நம்பிக்கை அவர் என் மீது வைத்ததால் தான் நான் இப்படி செய்துட்டேனே என்ற கோபம் அவரை ஆத்திரப்பட வைத்து இருக்கிறது.நான் துரோகம் செய்துட்டேன்னு தவறாக நினைத்து விட்டார்ன்னு நினைக்கிறேன் .."என்று அப்போதும் சரியாக அவன் மனநிலையை ஊகித்தாள்.



"நீ என்ன சொன்னாலும், என்னால் ஏற்றுக் கொள்ள முடியலைக்கா.."


" அம்மு நாம் கோவமாக இருக்கும் போது அவர்கள் நமக்கு செய்த நல்லதை நினைத்துப் பார்..அப்போது தான் நான் சொல்வது புரியும்..ஒரு தப்புக்காக அவங்களே தப்புன்னு சொல்வது முட்டாள்தனம்..அவங்க இடத்தில் இருந்து நினைத்துப் பார்.."


"சரி நீ சொல்றபடி இருந்தால் கூட.. அவரும் அப்படி உன் நிலைமையை நினைத்து பார்த்திருக்கலாம் தானே..தீர விசாரிக்காமல் அவரே நீ தப்பானவன்னு முடிவு செய்துட்டாரே..".

"எல்லாருக்கும் அந்த பக்குவம் இருக்காது அம்மு.."


"ஓ..அப்போ உனக்கு மட்டும் அந்த பக்குவம் எப்படி வந்துச்சு.."


"தெரியலே..அவரோட பழகிய இத்தனை வருடத்தில் ஒரு முறை கூட நான் அவரிடம் தப்பைக் கண்டதே இல்லை..என்னிடம் பார்வையில் கூட எத்தனை கன்னியமாக நடந்து கொள்வார் தெரியுமா..! அதுமட்டுமா ? என் மீது காட்டும் அக்கறையில் நான் அவர் என் மீது வைத்திருந்த அளவு கடந்த அன்பை உணர்ந்திருக்கேன் டா.."


"அக்கா காதலுக்கு கண்ணு இல்லைன்னு இதை தான் சொல்லுவாங்க போல்.."என்றான் கடுப்பாக..

"அம்மு உனக்கு புரியலை..அவர் செய்த இந்த ஒரு தப்புக்காக ! அதுவும் அவரையும் அறியாமல் செய்த தப்புக்காக என்னால் எப்படி அவரை வெறுத்து ஒதுக்க முடியும்..அப்படி வெறுத்தால் நான் உண்மையாக நேசிக்கவில்லைன்னு ஆகாதா..? என் மனமே என்னைக் கொள்ளும்.. அவர் நினைப்பது போல் நான் துரோகம் செய்ததாக தான் தோன்றும்.."


"நிஜமாலுமே எனக்கு ஒண்ணும் புரியலே.. உனக்கு கொஞ்சமாவது சுயமரியாதை இருக்கா கா? உன்னை இந்தளவு அசிங்கப்படுத்திய ஆளுக்காக இவ்வளுவு யோசிக்கிறாய்..எனக்கே உன்னைப் பார்த்தால் கோவம் கோவமாக வருது.."


"அம்மு என்னைக்கு அவர் என் மனசுக்குள்ளே வந்தாரோ ! அப்போதே நான் அவரை என் கணவனாக நினைத்துக் கொண்டேன்..தப்பு செய்வது மனித இயல்பு அதையே நினைத்துக் கொண்டிருந்தால் எப்படி வாழ முடியும்..?"


"அம்மா அப்பாவை விட அந்த ஆளு உனக்கு பெரிசா போயிட்டாரா..? சொல்லுக்கா..அவன் இப்படி உன்னை அசிங்கப்படுத்திய பின் கூட அந்த ஆளுக்காக இப்படி சப்போர்ட் போடறீயே..? அதை தான் என்னால் தாங்க முடியலே.."


"அம்மு என்னால் அவர் மீது கோபப்பட முடியலை டா நான் என்ன செய்யட்டும். அம்மா அப்பாவும் என்னை ஒரு நாள் புரிந்து கொள்வாங்க..காலம் தான் எல்லாத்துக்கும் மருந்து..என்றவளிடம்..


"எனக்கு நீ சொல்ல வருவது ஒரு மண்ணும் புரியலே என்று கடுகடுத்தவனிடம்.."


"நாம் உயிராக ஒருவரை நேசித்தால்..எந்த சூழ்நிலையிலும் அவர்களை வெறுக்க முடியாது டா..என்னாலும் அவரை மறக்க முடியலை..இந்த பாலப் போன மனசு அவருக்காக தானே யோசிக்குது..நீயாவது என்னைப் புரிந்து கொள்ள அம்மு .." என்று அதுவரை தெளிவாய் பேசியவள் அதன் பிறகு தாங்க முடியாமல் தம்பியின் தோள்களில் சாய்ந்து கதறி அழுது தீர்த்தாள்.


மிகன் ஒரு நாள் தன்னை புரிந்து கொண்டு வருவான் என்று காத்திருந்தாள். நாள்கள் வருடங்களாக ஓடியது .ஆனால் அவன் வரவே இல்லை..


திகழொளியோ, தனக்குள்ளேயே மிகனுக்காவும் தனக்காவும் போராடி போராடி ஓய்ந்து போனாள்.


அறவாணணுக்கு மகளை நினைத்து.. நினைத்து, கவலைப்பட்டு அவரும் நோயை இழுத்துக் கொண்டார்..அவருக்கும் பக்கவாதம் வந்துவிட்டது.


தன் தந்தையின் உடல்நிலை தன்னால் தான் கெட்டது என்று திகழொளி அதை நினைத்தும் குற்றவுணர்வு கொண்டாள்..அது அவளின் உடல்நிலை, மனநிலை இரண்டையும் பாதித்தது.. அமுதனும் ,கமலியும் தான் அவளைத் தேற்ற அரும்பாடு பட்டனர்..


திகழொளி அங்கே நடைபிணமாக வாழ்ந்தால் என்றால் இங்கே மிகன் அதைவிட மோசமாக இருந்தான்.


நீரனின் சூழ்ச்சி தெரியாமல் அவன் விரித்த வலையில் சிக்கிக் கொண்டான்.

நீரன் என்று தன் தாய்யுடன் மாமா வீட்டிற்கு வந்தானோ? அன்றே மிகன் மீது அளவு கடந்த பொறாமை அவன் மனசுக்குள் குடி புகுந்தது.

அவனுடன் என்ன நெருக்கமாக பழகினாலும்..அவனை தன் பெற்றவர்களும் , தன் மாமாவும் தாங்குவதும், தன்னைவிட அவனை கவனிப்பதும் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..

தன்னைவிட தன் பெற்றவர்களுக்கும் மிகனை தான் அதிகம் பிடிக்கிறது ! என்ற எண்ணம் அவன் மனதில் ஆழமாக பதிந்தது.


மிகன் தன்னிடம் கூடப்பிறந்த தம்பியாக பழகினாலும்! நீரனுக்கு மிகன் மீது இருந்த பொறாமையால் அவ்வாறு பழக முடியவில்லை..


மிகன் அளவுக்கு நீரனுக்கு சரியாக படிப்பும் வரவில்லை.. அதுவும் பருவ வயது வரும்போது அவனின் பொறாமை இன்னும் கூடியது..

மிகன் தன்னைவிட அழகாக இருப்பது அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..அதுவும் அவனுடன் வெளியில் சென்றால் பெண்கள் எல்லாம் தன்னைவிட அவனைத் தான் விரும்பி பார்க்கிறார்கள் என்று அவனுக்குள்ளேயே ஒரு தாழ்வு மனப்பான்மை அதிகரித்தது..


இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அவனை மிருகமாக்கியது..மிகன் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தாலும் அவனால் பொறுக்க முடியாது..


இந்த நிலையில் இருவரும் வேறு வேறு கல்லூரி சேர்ந்து பயில சென்ற போது தான் நீரன் முழுதாக மாறினான்.


கல்லூரியில் தவறான நண்பர்கள் கூட நட்பு வைத்தான். மது, போதை என்று அத்தனை கெட்ட பழக்கத்தையும் கற்றுக் கொண்டான்.


மிகனை விட்டு மனதளவிலும், உடலளவிலும் விலகினான்.ஆனால், தன் படிப்பு உண்டு! தான் உண்டு! என்று இருந்த மிகனால் அவனை உணர்ந்து கொள்ள இயலவில்லை..


இதற்கிடையில் மிகன் புது வீட்டிற்கு வந்ததும்..அங்கே திகழொளியை கண்டதும், அவள் மீது வயதுக்கே உரிய ஈர்ப்பு ஏற்பட்டு அது காதலாக மாறியதும்.அவன் உலகமே வேறாக மாறிப்போனது.


மிகனும் நீரனை அதன் பிறகு அதிகம் கண்டுகொள்ளவில்லை..ஓரே வீட்டில் ! ஓரே அறையில் இருந்தாலும் கூட , நம் இயல்புக்கு ஒத்துவரவில்லை என்றால் விலகல் தானாகவே வந்து விடும்..


அதுபோல் தான் நீரனும், மிகனும் ஒரே அறையில் இருந்தாலும் கொஞ்சம் விலகியே இருந்தனர்.

நீரனுக்குத் தான் மிகன் மீது வெறுப்பும் பொறாமையும்..ஆனால் மிகன் விலகி இருந்தாலும், நீரனை எப்போதும் தன் உடன்பிறவா சகோதரனாகவே பார்த்தான்.


அவனை ஒரு நாளும் மிகன் பிரித்து பார்த்ததே இல்லை..அவன் மீது பாசமும் அப்படியே தான் இருந்தது.


இதற்கிடையே தான் மிகனின் காதல் நீரனுக்கு தெரியவந்தது.அவனால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..அவனுள் பொறாமை தீ பத்தி எரிந்தது.


அதுவும் திகழொளி ஒரு நாள் கூட தன்னை ஏறெடுத்துப் பார்க்காதவள் மிகனை கண்டாள் மட்டும் அவள் கண்களிலும் ,முகத்திலும் தெரிந்த மகிழ்ச்சி நீரனை வெறி கொள்ளச் செய்தது.

நீரன் பலமுறை திகழொளியிடம் பேச முயற்சி செய்து இருக்கான்.ஆனால், அவளோ இவனைக் கண்டாலே பேய்யைக் கண்டதைப் போல் ஓடுவாள்..

மிகன் சாளரத்தின் வழி அவளைப் பார்ப்பதும்..அவளும் அவர்கள் வீட்டு வராண்டாவில் அமர்ந்து கொண்டு தங்கள் அறை சாளரத்தை அடிக்கடி பார்ப்பதையும் நீரன் பலமுறை கண்டு இருக்கிறான்.


தன்னை கண்டால் அலறி அடித்து ஓடுபவள், மிகனைக் கண்டால் மட்டும் உருகுகிறாள் என்று நினைத்தவனுக்கு இவர்களை எப்படியாவது பிரித்தே தீர வேண்டும் என்ற வெறி கொண்டான்..

அதற்கு வசதியாக மிகனும் திகழொளியும் எழுதிக் கொண்ட கடிதங்கள் சிலது அவனுக்கு கிடைத்தது.

அதை வைத்து அவர்களின் மனதை படித்தவன் அவர்களுக்கு எதிராக திட்டம் தீட்டினான்.

திகழொளி கல்லூரிக்கு அவர்களுக்கு தெரியாமல் அடிக்கடிச் சென்றவன், அங்கே இவனுக்கு ஏற்ற மாதிரி கெட்ட பழக்கங்கள் இருக்கும் பசங்களை நண்பன் ஆக்கிக் கொண்டான்.


திகழொளியும் மிகனும் கல்லூரியில் சந்தித்து பேசுவது பரிசுப் பொருட்களை பறிமாறிக் கொண்டது எல்லா
மே அவனுக்கு அவர்கள் மூலம் தெரியவந்தது.


அதை வைத்து நீரன் ஒரு திட்டம் தீட்டினான்.அதில் திகழொளியும் மிகனும் பகடைக்காயாக சிக்கினார்கள்..

தொடரும்..
Hi friends,
உயிர் துடிப்பாய் நீ ! அடுத்த அத்தியாயம் 28 போட்டு விட்டேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..அடுத்த யூடி புதன்கிழமை..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்




 

Girija priya

Member
Messages
31
Reaction score
31
Points
18
Kuda irrukura neerana pathi Theriyala.... Appuram yeppadi thigala purijikuva😏ivangala pirika thaan intha sucide dramava🤔 thigal maturity level👍nice intresting ud sis ❤️
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
413
Reaction score
659
Points
93
Kuda irrukura neerana pathi Theriyala.... Appuram yeppadi thigala purijikuva😏ivangala pirika thaan intha sucide dramava🤔 thigal maturity level👍nice intresting ud sis ❤️
Thank you dear 😘 😘
 

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
413
Reaction score
659
Points
93
உயிர் துடிப்பாய் நீ !


அத்தியாயம் 29


உண்மை என்றாவது ஒரு நாள் வெற்றி கொள்ளும் என்ற நம்பிக்கையில் தான் பலருடை வாழ்க்கை சென்று கொண்டு இருக்கிறது.


அது போல் தான் திகழொளியும் இன்று வரை நம்பிக் கொண்டு இருக்கிறாள்..


நீரனின் உண்மை முகம் மினுக்கும் சரி திகழொளிக்கும் சரி அன்று வரை தெரியவே இல்லை..


கூடவே வளர்ந்த மிகனுக்கே தெரியாத பொழுது திகழொளிக்கு மட்டும் எப்படித் தெரியும்..


சிறுவயதில் இருந்தே மிகன் மீது நீரனுக்கு இருந்த பொறாமை வாலிப வயதில் இன்னும் அதிகமாகிவிட்டது.மிகன் தான் அதை கடைசிவரை அறியவில்லை..



தன்னை சிறிதும் கண்டுகொள்ளாத திகழொளி மிகனை மட்டும் விரும்புவது நீரனால் தாங்க முடியவில்லை..அது அவனுடைய தன்மானத்தை பாதித்தது.



நீரன் அவர்களை பிரிக்க தன்னால் என்ன.. என்ன? செய்ய முடியுமோ !அதை செய்வதற்கான அத்தனை திட்டமும் தீட்டினான்.



திகழொளியின் கல்லூரி மாணவர்கள் மூலம் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்தான்.



திகழொளியும் மிகனும் எழுதிக் கொண்ட கடிதத்தையும், பரிசுப் பொருட்களையும் மிகனுக்கு தெரியாமல் பார்த்தவன் அதே போல் இன்னொரு பரிசுப் பொருட்களை தேடி வாங்கி வைத்தான்.



அப்படி பரிசுப் பொருட்கள் வாங்கி வைப்பது அவனுக்கு கடினமாக தெரியவில்லை.. ஏனென்றால் மிகனும் திகழொளியும் பரிசுப் பொருட்கள் வாங்குகிற கடையை அறிந்து கொண்டு அவனும் அங்கேயே அதே போல் வாங்கினான்.



மிகனை நம்ப வைப்பதற்காக இத்தனை நாள் அவன் அறியாமல் குடித்து வந்த நீரன்..இப்போது அவனுக்கு நன்கு தெரியும் படி குடித்தான்.


நீரனுக்கு மிகனைப் பற்றி நன்கு தெரியும் எப்படியும் என்ன? ஏது ?என்று விசாரிப்பான் என்று தெரிந்தே அப்படி செய்தான்.



நீரன் நினைத்தது போலவே மிகன்‌ பதறிப்போய் "ஏன்டா இப்படி குடிக்கிறாய்..?எப்போது இந்த பழக்கத்தை பழகினாய்.." என்று பதறிப் போய் கேட்டான்.



நீரனோ.."மிகா என்னால் தாங்க முடியலை.அவளை நான் எப்படி எல்லாம் லவ் பண்ணுனேன் தெரியுமா? ஆனால், என்னுடன் உயிராக பழகிவிட்டு இப்போ வந்து அவளை மறந்துடச் சொல்றா ..என்னால் அவளை மறக்க முடியாது அதுதான் அந்த நினைவிலிருந்து தப்பித்துக் கொள்ள குடிக்கிறேன்.."



"என்னடா சொல்றே நீ லவ் பண்ணுனீயா..? யாரைடா லவ் செய்தே?

யார் அந்த பொண்ணு சொல்லு நான் பேசுறேன்.."என்று கோவமாக கேட்டவனிடம்..



"உன்னால் ஒன்னும் செய்ய முடியாது..அது உனக்கு தெரியவே வேண்டாம்..நீயாவது நல்லா இருடா.."



"நீரா நீ இப்ப சொல்லப் போறீயா இல்லையா ? யாருடா அது? சொல்லுடா.."



"நான் சொன்னா நீ தாங்க மாட்டே ..வேண்டாம் விடு.."


"நீரா புதிர் போடாமல் சொல்லுடா.."


"நான் சொன்னால் நீ நம்பவும் மாட்டே.."


"நீரா என் பொறுமையை சோதிக்காதே! யாருன்னு முதல்லே சொல்லு! "



"அதை நான் எப்படி சொல்லுவேன்..? சொன்னால் நீ உடைந்து போய்டுவே.."



"நீரா எதுக்கு சஸ்பென்ஸ் வைக்கிறே ப்ளீஸ் முதல்லே நீ சொல்லு ..!"



"இல்லே மிகா நீ தாங்க மாட்டே.." என்றான்.வேண்டுமென்றே மிகனின் ஆர்வத்தை தூண்டினான்.



மிகனோ , "நீரா இதற்கு மேல் நீ சுத்தி வளைச்சுப் பேசுனா எனக்கு பைத்தியமே பிடிச்சுடும்.எதுவாக இருந்தாலும் பரவாயில்லை சொல்லுடா .."என்றான்.



"மிகா இது உனக்கு பேரதிர்ச்சியா தான் இருக்கும். ஆனால், எனக்கு வேறு வழி தெரியவில்லை..நீ வற்புறுத்தி கேட்பதால் சொல்றேன்.."


"முதலில் சொல்லடா ..!"


"மிகா நான் உயிருக்கு உயிராக நேசித்தது எதிர்வீட்டு திகழொளி டா.."


"என்னடா சொல்றே..?"


"ஆமாம் டா ! அவளும் என்னை விரும்பினாள்.என்கூட வெளியில் எல்லாம் வந்து இருக்கா..நிறைய கிஃப்ட் எல்லாம் வாங்கி கொடுத்து இருக்கா.."என்று அவன் கூறும் போதே..



மிகன் தலையை பிடித்துக் கொண்டு அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.



நீரனோ, அவனது அதிர்ச்சியை உள்வாங்கிய படி.."மிகா இந்த விஷயம் உன்னை எவ்வளவு பாதிக்கும் என்று எனக்கு தெரியும். அதனால் தான் உங்கிட்ட சொல்லமாட்டேன்னு சொன்னேன்.."என்றான் அப்பாவியாக..



மிகனோ, இடியே தலையில் விழுந்ததைப் போல் அமர்ந்திருந்தான்.அவன் மனமோ துடியாய் துடித்துக் கொண்டு இருந்தது.



நீரனோ ,அதைக் கண்டு மனதிற்குள் மகிழ்ந்த படி "மிகா நீயும் அவளும் இப்போது லவ் பண்றீங்க்னனு எனக்கு தெரியும் .."என்னவனை மிகன் திகைப்புடன் பார்த்தான்.



நீரனோ , அவன் பார்வையை தாங்கியபடி "திகழொளி தான் சொன்னாள்..

உன்னை விட மிகன் நல்லா படித்து இருக்கான்..நல்ல வேலையில் இருக்கான்.. அதனால் நான் அவரை விரும்புகிறேன் .நீங்க என்னை மறந்துவிடுங்கன்னு சொன்னாள்.என்னால் அதை தாங்க முடியலை டா.."என்று பொய்யுரைத்தவனிடம்..



"நீரா நீ

..நீ..சொல்வது உண்மையா ..? என்று வார்த்தைகள் தடுமாற கேட்டான்..


"சத்தியமாய் உண்மை டா.நான் ஏன் பொய் சொல்லவேண்டும்..வேணா நீ நம்புலைன்னா இதோ அவள் எனக்கு கொடுத்த கிஃப்ட் எல்லாம் பாரு.." என்று தன் அலமாரியில் வைத்திருந்த பொருட்கள் நிறைந்த பையை மிகன் முன் தலைகீழாக கொட்டினான்.



மிகனோ அதைப்பார்த்துதம் அப்படியே உறைந்து போனான். தனக்கு வாங்கி


கொடுத்த கிஃப்ட் போலேவே அத்தனையும் இருந்தது.


தான் பத்தரை மாத்து தங்கம் என்று எண்ணியவள் இவ்வளவு கேவலமாக இருந்து இருக்கிறாளா? என்று எண்ணியவன் அவள் தன்னை இத்தனை நாளாக எப்படி ஏமாற்றி இருக்கிறாள் என்று நினைத்து குனிக் கூறுகி போனான்.




நீரனோ மிகனின் நிலையைக் கண்டு மனதிற்குள் மகிழ்ந்தான். தான் நினைத்தது நடந்து விட்டது என்று ஆனந்தம் கொண்டான்.



மிகனோ, அதிர்ச்சியிலும் மனதின் வலியிலும் இறுகிப் போனான். தன் நிலமையை வெளியில் சொல்லவும் முடியாமல் மனதிற்குள் துடித்தான்.




ஆனால் நீரன் அப்பொழுது கூட திருப்த்தி அடையாமல் திகழொளியின் கல்லூரியில் பயிலும் தன் நண்பர்களை அலைபேசியில் அழைத்து மிகனிடம் பேச வைத்தான்.



அவர்களும் நீரன் சொல்லிக் கொடுத்த மாதிரி அச்சு பிசகாமல் அப்படியே திகழொளியைப் பற்றி தப்பும் தவறுமாக ஒப்புவித்தார்கள்.



திகழொளி நீரனை கல்லூரிக்கு வரச்சொல்லி கடிதம் எழுதி தன் தம்பியிடம் கொடுத்து விடுவாள். நீரனும் கல்லூரிக்கு அடிக்கடி வருவான்.திகழொளியும் கல்லூரிக்கு வருவது போல் அவளின் தந்தையுடன் வருவாள்.தந்தை சென்ற சிறிது நேரத்தில் கல்லூரி வகுப்புகளை கட் செய்துவிட்டு நீரனுடன் வெளியில் சுத்தப் போவாள் என்று பொய்யுரைத்தனர்.



மிகனோ அதை எல்லாம் கேட்டு திகழொளியா இப்பிடி செய்து இருக்கிறாள்? என்று இடிந்து போனான்.அவனால் நம்பவும் முடியவில்லை ..நம்பாமல் இருக்கவும் முடியவில்லை..




பொய் சரியாக சொல்லும் போது உண்மை அங்கே மறைந்து காணாமல் போனது.



நீரனோ மிகனிடம் "மிகா இது எல்லாம் ஏன் உன்னிடம் சொல்கிறேன் என்றால் நீயும் என்னைப்ப போல் ஏமாந்து போகக்கூடாது டா..இந்த வலி உனக்கு வேண்டாம் டா..எனக்கு செத்து போய்ட்டலாம் போல் இருக்கு .."என்று பொய் அழுகை அழுதான்.



மிகனோ, நீரனின் சொல்வதைக் கேட்டு சுக்கு நூறாக உடைந்து போனான்.தாங்க முடியாத மனவலியால் துடித்தான்.



நீரனின் நடிப்பை முழுதாக நம்பிய மிகன் அங்கே இருக்க முடியாமல் அடுத்த நாளே வேலை விஷயமாக வெளியூர் போறேன் என்று வீட்டாரிடம் சொல்லிவிட்டு ஒரு வாரம் யாரும் இல்லாத தனிமையை தேடிச் சென்றான்.




எங்கே அங்கேயே இருந்தால் திகழொளியை பார்க்க வேண்டி வருமோ? அப்படி பார்த்தால் தனக்கு அவள் மீது இருக்கும் கோபத்தில் ஏதாவது செய்து விடுவோமோ ?என்று பயந்தான்.


இது எதுவும் தெரியாமல் திகழொளியோ மிகனைக் காணாமல் தவித்துப் போனாள்.


இப்படி பத்து நாட்களுக்கு மேல் சென்ற பின் வெளியூரில் இருந்த மிகனை ஒரு நாள் அலைபேசியில் நீரன் அழைத்தான்.



"மிகா உடனே வீட்டிற்கு வா உன்னிடம் பேசி ஆகவேண்டும்.." என்று நீரன் மிகனை பதற்றமாக அழைத்தான்.



மிகனும் மறுக்க முடியாமல் உடனே கிளம்பி தங்கள் வீட்டிற்கு வந்தான்.


பத்து நாள் கழித்து ஓய்ந்து போய் வீடு வந்த மிகனிடம் "மிகா உன்னிடம் ஒரு விஷயம் சொல்லனும்! அதற்குத் தான் உன்னை அவசரமா வரச் சொன்னேன்.."என்றவன்..



என்னவென்று கேட்ட மிகனிடம் "மிகா என்னால் அவளை மறக்க முடியவில்லை..! இப்படி நரக வாழ்க்கை நான் வாழ்வதை விட செத்தே போய்டலாம் டா.. நீ அம்மா ,அப்பாவை பார்த்துக்கோ ! நான் இனி வாழ விரும்பலே.." என்று சொல்லியபடியே முன்னரே தயாராக மேஜை மீது எடுத்து வைத்திருந்த விஷமருந்தை எடுத்து மிகன் கண் முன்னே குடித்து விட்டான்.



மிகனோ, அதை பார்த்து அதிர்ந்து போய் அவன் அருகில் ஓடி அந்த பாட்டிலைப் பிடுங்க முயற்சி செய்தான்.



ஆனால், நீரனோ பாட்டில் மருந்தை முழுவதுமாக காலி செய்திருந்தான்.




மிகனோ "நீரா என்னடா இப்படி அவசரப்பட்டுட்டே..! அய்யோ! நான் என்ன செய்வேன் ?வாடா சீக்கிரம் டாக்டர் கிட்ட போலாம்.." என்று கெஞ்சினான்.




நீரனோ ,அவன் துடிப்பதை பார்த்து அந்த நிலமையிலும் ரசித்தபடியே "மிகா நான் வரலே..நான் சாகத்தான் வேண்டும். அப்போது தான் மனசுலே இருக்கிற இந்த வலி தீரும்.. நீயாவது திகழொளியை கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமாக இருடா.."என்றான் அப்போதும் வஞ்சத்துடன்..



மிகனோ, அச்சோ! என்னடா இப்படி எல்லாம் பேசறே. முதல்லே நீ வா டாக்டர்கிட்ட போலாம்.." என்று அவசரமாக தன் இருசக்கர வாகனத்தில் அவனை அழைத்துக் கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தான்.




வீட்டில் கூட யாரிடமும் சொல்லவில்லை அவனை மருத்துவமனையில் சேர்த்தபின் தான் வீட்டினருக்கே சொன்னான்.



பெற்றவர்களும், உலகமாறனும் அடித்து பிடித்து மருத்துவ மனைக்கு ஓடிவந்தனர்..



நீரன் வீரியம் குறைவான விஷத்தை தான் குடித்து இருந்தான். அவனுக்கு தெரியும் எப்படியும் மிகன் தன்னை காப்பாற்றி விடுவான்‌ என்று..அதனால் தான் திட்டமிட்ட வீரியம் குறைந்த மருந்தை அவன் முன் குடித்தான்.



ஆனால், நீரன்நினைத்தபடி நடக்கவில்லை ..மருந்து வீரீயம் குறைந்திருந்தாலும் அவன் போதைப் பழக்கம் மதுப்பழக்கத்தால் உடல்நிலையை கெடுத்து வைத்திருந்தான்.அதனால் மருத்துவமனைக்கு போவதற்குள் விஷம் அவன் குருதியில் விரைவாக கலந்து விட்டது..



அதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வைத்தியம் பார்த்தார்கள்.


மிகனோ, எந்த நிலையில் இருந்தான் என்றே விவரிக்க முடியாத நிலையில் இருந்தான்.



குடும்பத்தினர் அனைவரும் அவனிடம் "என்னாச்சு ? நீரன் ஏன் இப்படி செய்தான்?" என்று கேட்டுத் துளைத்தார்கள்.



மிகன் என்னவென்று சொல்வான்.அவனே கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருந்தான்.


நீரன் சொன்னதைப்பற்றி யாரிடமும் கூறவும் அவனுக்கு விருப்பமில்லை..



எனக்கும் எதுவும் தெரியாது என்று அப்போது சொல்லி சமாளித்தவன் ,மதியம் வரை மருத்துவமனையில் இருந்தான்.


அதற்கு மேல் பொறுக்க முடியாமல், திகழொளியை கொன்று போடும் ஆத்திரத்துடன் அவள் வீட்டிற்குச் சென்றான்.


அவனால் அவளை மன்னிக்கவே முடியவில்லை..எப்படி நீரனையும் தன்னையும் ஏமாற்ற அவளுக்கு மனசு வந்தது என்று அவன் மனம் துடியாய் துடித்தது.




நீரன் உயிரை விடுமளவு துணிந்து இருக்கிறான் என்றால் இவள் தான் அவனை காதலித்து நம்பவைத்து ஏமாற்றி இருப்பாள் என்ற ஆத்திரம் அவள் மீது கட்டுக்கடங்காமல் வந்தது.‌



எதையும் தீரவிசாரிக்காமல் அவனே ஒரு முடிவுக்கு வந்தவன், அவளுக்கு தண்டனை கொடுக்கவும் தயாராகி விட்டான்.




நீரன் சொன்ன போது கூட அவனுக்கு வலி தான்‌ இருந்தது..ஆனால், இன்று அவளை கொன்று விடும் அளவு ஆத்திரம் வந்தது.



பொய்யானவனை நம்பி சூழ்நிலை கைதியாக மாறிப் போனான் மிகன்..




அதே கோபத்துடன் திகழொளி வீட்டில் ருத்ர தாண்டவம் ஆடி விட்டு தன் வீட்டிற்கு வந்தவன் மனதிற்குள் அழுது கரைந்தான்.



வீட்டுப் பெரியவர்கள் மருத்துவமனையில் இருந்ததால் இங்கே நடந்தது எதுவுமே அவர்களுக்கு அப்போது தெரியாமல் போனது.


அவர்களுக்கு தெரியும் போது எல்லாமே கை மீறிப் போய் இருந்தது.


தொடரும்..


Hi friends,
உயிர் துடிப்பாய் நீ!
அடுத்த அத்தியாயம் 29 போட்டுவிட்டேன் படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..அடுத்த யூடி சனிக்கிழமை..
நன்றி
அன்புடன்‌
இனிதா மோகன்
 
Last edited:

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
413
Reaction score
659
Points
93
உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 30

சில நிகழ்வுகள் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடும் ! அப்படித் தான் திகழொளி ,மிகன் வாழ்க்கையும் தலைகீழாக மாறியது.


மிகன், திகழொளி வாழ்க்கையை துரோகத்தால் தன்னால் முடிந்தளவு கெடுத்த நீரனுக்கு உடல் நலம் சீராக பத்து நாள் ஆனது.



ஒருவழியாக நீரன் மருத்தவமனையிலிருந்து வீடு திருமபினான்.வீடு வரும் வரை மிகன் ,திகழொளிப் பற்றி எதுவும் நினைக்கவில்லை..


நாம் பிழைப்போமா? என்ற பெரும் பயமே அவனை சூழ்ந்திருந்தது. அதனால், எதைப்பற்றியும் அவன் சிந்திக்கவில்லை..


ஆனால் ,வீட்டிற்கு வந்த அன்றே வெறிச்சோடிக் கிடந்த திகழொளியின் வீடு அவனின் கவனத்தை ஈர்த்தது.


மிகனுடன் எப்போது தனிமை கிடைக்கும் என்று எதிர்பார்த்தவன் ,அது கிடைத்தவுடன் திகழொளிப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டான்.

நீரன் மனதிற்குள் தான் நினைத்தது நடந்து விட்டது என்று மகிழ்ந்தான்


வீட்டுப் பெரியவர்களும் விஷயம் கேள்விப் பட்டதும் நொந்து போனார்கள்.மிகனிடம் தனித்தனியாக விசாரித்தவர்களால் அவனை கடிந்து கொள்ளத் தான் முடிந்தது.


உலகமாறனுக்கு அன்று தான் மகனின் நேசமே தெரியவந்தது.மகனின் நிலையை நினைத்து சொல்லிடங்கா துக்கத்தை மனதிற்குளேயே வைத்து குமறினார்.


உண்மை தெரிந்த மணியரசியோ எதையும் காட்டிக் கொள்ளாமல் தவித்தார்.புத்திர பாசம் அவரின் வாயை அடைத்தது.


மிகனோ, நடைபிணமாக இருந்தான்.அவனால், அங்கே இருக்க முடியாமல் வேலைக்கு மாற்றால் வாங்கிக் கொண்டு புனே சென்றான்.


ஒருவனின் சூழ்ச்சியால் இருவரின் வாழ்க்கையும் நரகமானது.

மணியரசியோ, அதன்‌பிறகு தான் வெகு தீவிரமாக மகனின் நடவடிக்கைகளை கண்காணித்தார்.
கணவருடன் கலந்தாலோசித்து மகனின் கெட்ட பழக்கங்களை நீக்க‌ மறுவாழ்வு மையத்திற்கு அழைத்துச் சென்றார்.

உலகமாறனுக்கும், மிகனுக்கும் இது எதுவும் தெரியாது. அவர் மகன் வெளியூர் சென்ற பின் தன் அலுவலக வேலை உண்டு தான் உண்டு என்று தன் வட்டத்தை மிகவும் சுருக்கிக் கொண்டார்.


மிகனோ, தந்தையிடம் தினமும் பேசுவான்..தன் அத்தை வீட்டாரிடம் வாரம் ஒரு முறை பேசுவான்.

மிகன் அடிக்கடி ஊரூக்கு வராவிட்டாலும், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வந்து இரண்டு நாள் மட்டும் தங்கி தந்தையை பார்த்துச் செல்வான்.


நாள்கள் இப்படியே நகர்ந்து கொண்டிருந்தது. மணியரசியோ, மகனின் மனநிலை கொஞ்சம் சீரானதும், மகனுக்கு திருமணம் செய்து வைக்கனும் என்று முடிவு செய்து கணவனுடைய தூரத்து சொந்தத்தில் பெண்ணும் பார்த்தார்.


தங்களைவிட வசதி குறைவாக இருந்தாலும், மணியரசிக்கு கயல்விழியை ரொம்ப பிடித்திருந்தது.


நீரனும் திருமணத்திற்கு சம்மதம் சொல்லவும், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக திருமணத்தை மிக எளிமையாக முடித்தார்.


மிகனும், திருமணத்திற்கு வந்து கலந்து கொண்டான்.அவன் மனமோ எப்படியோ நீரன் பழையதை மறந்து நிம்மதியாக வாழ்ந்தால் போதும் என்று நினைத்தது.

நீரனுக்கு திருமணம் முடிந்த பின் உலகமாறன் மெதுவாக மகனிடம் திருமணத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார்.


மிகன் தன் மனதை எதையும் பெரியவர்களிடம் காட்டிக் கொண்டதே இல்லை..அதனால் அவன் திகழொளியை மறந்து விட்டான் என்று பெரியவர்களும் நினைத்திருந்தனர்.


ஆனால், அவன் தான் மறக்கவே இல்லையே.. அவனுள் ஓர் உயிராக கலந்துவிட்டவளை எப்படி மறப்பான்.


தந்தை திருமணத்தை பற்றி கேட்டாலே மிகன் ஏதாவது ஒரு காரணம் சொல்லி மறுத்து வந்தான்.

இப்படியே நாள்கள் நகர கயல்விழி கருவுற்றாள். நீண்ட நாள்கள் கழித்து குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

நீரனோ தன்னால் இருவரின் வாழ்வு போனதே என்று சிறிதும் குற்றயுணர்வு இல்லாமல் நிம்மதியாக அவன் வாழ்வை வாழ்ந்தான்.


கயல்விழிக்கு ஏழு மாதம் ஆனாதும், சீரும் சிறப்புமாக வளைகாப்பு நடத்தினார்கள்.


எல்லாமே நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது.
ஆனால் விதி வழியது என்பது பொய்யல்ல.. நன்றாக சென்று கொண்டிருந்த நீரனின் வாழ்க்கையும் தலைகீழாக மாறியது.

கயல்விழிக்கு சரியான நேரத்தில் பிரசவ வலி வரவும் அவளை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த கயல்விழிக்கு பிரசவகால ஜன்னி கண்டது.அது அவளின் உயிரையே பறித்து விட்டது.

ஒரே நாளில் மணியரசியின் குடும்பத்தை அந்த நிகழ்வு புரட்டிப் போட்டது.பச்சை குழந்தையை வைத்துக் கொண்டு செய்வதிறியாமல் அழுது கரைந்தார்.

நீரனும் உடைந்து போனான்.விஷயம் கேள்விப்பட்டு உடனே விமானம் பிடித்து ஊரூக்கு வந்த மிகன் தான் எல்லாருக்கும் முடிந்தளவு ஆறுதலாக இருந்தான்.

மணியரசியோ, கயல்விழியின் குடும்பத்தாரிடம் குழந்தையை தராமல் தானே வளர்ப்பதாக சொல்லிவிட்டார்.

ஏற்கனவே கஷ்டத்தில்ருக்கும் அவர்களை மேலும் கஷ்டத்தில் தள்ள அவர் விரும்ப வில்லை..

குழந்தையை கவனிக்க வேண்டிய சூழ்நிலையில் தன் கவலைகளை மனதிற்குள் அடக்கிக் கொண்டு வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக் கொண்டார்.

நீரனோ, மறுபடியும் தன் பழைய வாழ்க்கையை தேர்ந்தெடுத்தான்.பழைய படி குடி ,போதைப் பழக்கம் என்று தன் உலகில் மூழ்கினான்.


தன் குழந்தையைக் கூட கண்டுகொள்ளவில்லை..மிகன் தான் நேரம் கிடைக்கும் போது எல்லாம் ஊரூக்கு வந்துவிடுவான்..

தன் அத்தை குடும்பத்துக்கும், குழந்தைக்கும் பெறும் துணையாக இருந்தான். அவன் தான் குழந்தைக்கு மகிழினி என்று பெயர் சூட்டினான்.

மிகனோ ஒரு நாள் நீரன் கெட்டு சீரழிந்து போவதை காண முடியாமல் அவனைக் கண்டித்தான்.

ஆனால் ,அவனோ" மிகா என்னால் எதையும் மறக்க முடியலைடா ..கிடைத்த வாழ்வை எப்படியோ வாழ்ந்தேன். ஆனால் எனக்கு அதுவும் நிலைக்கவில்லை..எல்லாத்தையும் மறக்கத் தான் நான் குடிக்கிறேன்.." என்று வியாக்கியானம் பேசினான்.


"டேய் மனசை தேத்திக்கோடா.. உனக்கு ஒரு குழந்தை இருக்கு..அதுக்காகவாவது நீ நல்லா இருக்கனும் டா..அதை நல்லபடியா வளர்க்கும் பொறுப்பு உனக்கு இருக்குடா.." என்ற மிகனிடம்..

"புத்திக்கு அது புரியுது! ஆனால் ,மனதிற்கு புரியவில்லையே நான் ஆசைப்பட்டவளை கல்யாணம் செய்ய முடியலே .. சரி இது தான் தலை எழுத்து என்று கயலுடன் வாழ்ந்தால் அந்த வாழ்வும் நிலைக்கலே.."என்று தன் தப்புக்கு நியாயம் சொன்னான்.


மிகனோ, என்ன சொல்வதென்றே தெரியாமல் மெளனமாக நின்றான்.

நீரனோ, தொடர்ந்து, "ஒருவேளை நான் திகழொளியை கல்யாணம் செய்திருந்தால், நல்லா இருந்திருப்பேன் தானே மிகா..ஏன்டா அவளுக்கு என்னைப்பிடிக்காமல் போச்சு.." என்று நாடகமாடினான்.


திகழொளியின் பேரை எடுத்தால் தான் மிகன் எதைப்பற்றியும் பேசமாட்டான் என்று அவனை நன்கு புரிந்து வைத்திருந்த நீரன்.

அப்போதும் தன் கொடூர புத்தியைக் காட்டினான்.


நீரன் நினைத்தது போல் திகழொளி பெயரை கேட்டபின் மிகன் நீரனிடம் பேசுவதையே குறைத்துக் கொண்டான்.


ஆனால் மகழினியின் மீது உயிராக இருந்தான்.தாயும் இல்லை..தந்தையும் ஒழுங்கில்லை என்றான‌ பின் குழந்தை மீது அளவுகடந்த பாசத்தைப் பொழிந்தான்.


எல்லா கெட்டதும் முடிவுக்கு வர ஒரு நேரம் வரும் என்பது போல நீரனுக்கும் நேரம் வந்தது.


அந்த நேரம் அவனுடைய உயிரைப் பறித்தது.
ஒரு நாள் இரவு அளவுக்கதிகமான குடி போதையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த நீரன்! போதை மயக்கத்தில் எதிரில் வந்த லாரியில் மோதியவன் சம்பவ இடத்திலேயே தன் உயிரை விட்டான்.



விஷயம் கேள்விப்பட்டு மிகன் ஓடோடி வந்தான்.இடிந்து போய் உட்கார்ந்து இருந்த மணியரசிக்கும், காஞ்சித்துரைக்கும் மகனாக முன் நின்று அனைத்தும் செய்தான்.

தன் தங்கையின் நிலையை காணமுடியாமல் உலகமாறனும் நொறுங்கி போனார்.

சோகத்தில் புத்திர சோகம் தான் பெரியது.அதிலிருந்து மீண்டுவருவது என்பது பெரிய சவால் தான்.


மணியரசியோ, கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்தார் . அதற்கு காரணம் மிகனும், மகிழினியும் ஒரு புறம் என்றால் மிகப்பெரிய காரணம் நீரன் தான்.


அவனின் மோசமான குணமும், நடவடிக்கையுமே ஒரு கட்டத்தில் அவன் போய் சேர்ந்ததே பராவாயில்லை என்று நினைக்கும் அளவு அவர் மனம் வெறுத்துப் போய் இருந்தது.

மகனின் வாழ்க்கையை சீர்படுத்த அவரும் என்னென்னவோ செய்தார்.ஆனாலும் எதுவும் நிலைக்கவில்லை..

தன் அண்ணன் மகனின் வாழ்க்கையை கெடுத்ததை கூட தெரிந்திருந்தும், புத்திர பாசத்தில் மிகனிடம் எதையும் சொல்லாமல் மகனுக்காவே அமைதியாக இருந்தார்.


எப்படியாவது அவனை சீர்படுத்த மறுவாழ்வு மையம் வரை அழைத்துச் சென்று அவன் வாழ்வை மாற்ற போராடினார்.

ஆனால், அவனோ கடைசிவரை திருந்தவே இல்லை..கயல் இறந்ததும் இது தான் சாக்கு என்று மறுபடியும் கெட்டு அழிந்தான்.


அது மட்டுமா? அவனை தட்டிக்கேட்ட தன் அண்ணன் மகனிடம் வேண்டுமென்றே திகழொளியை மீண்டும் இழுத்து வச்சு பேசி அவன் வாயை அடைத்ததை கேட்டவருக்கு மனசு சுத்தமாக வெறுத்து விட்டது.

எதர்ச்சியாக மகனை காணச் சென்றவருக்கு மிகனிடம் மகன் பேசியதை கேட்கும் சூழ்நிலை அமைந்தது.


மனதார விரும்பிய இருவரை பிரித்தது பத்தாதென்று இப்போதும் மகன் எப்படி நடகமாடுகிறானே என்று நினைத்தவருக்கு எல்லாமே வெறுத்து விட்டது..


இன்றுவரை பெற்ற மகனாக தங்களுக்கு எதுவுமே செய்ததில்லை.ஆனால் தான் பெறாத அண்ணன் மகன் தான் தங்களை இன்றும் பார்த்துக் கொள்கிறான் என்று நினைத்தவருக்கு மனசாட்சியே அவரை கொல்லாமல் கொன்றது.

அதனால் தான் வேகமாக அவர் மகனின் இழப்பில் இருந்து மீண்டார்.இனி மகிழினிக்காகவும், மிகனுக்காவும் வாழ வேண்டும். என்று முடிவெடுத்தார்.



காஞ்சித்துரையுமே, கொஞ்சம் கொஞ்சமாக மீண்டார்.


என்ன தான் மகன் மீது வெறுப்பு வந்த போதும் சில சமயம் மணியரசி மகனை நினைத்து உடைந்து தான் போவார்.ஆனால் ,அப்பொழுது எல்லாம் மகிழினி தான் அவருக்கு ஆறுதலாக இருந்தாள்.


காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு தானே.. மனம் ஒரு முறை இல்லாவிட்டாலும் ஒரு முறை ஏங்கித் தான் தவிக்கும்.

எப்படியோ மனதிற்குள் அனைத்து துக்கத்தையும் அடக்கிக் கொண்டு பேத்திக்காக வாழ்ந்தனர்.

மிகனையும், நீரனின் இறப்பு புரட்டிப் போட்டது. அவன் வாழ்வு இப்படி ஆகிவிட்டதே என்று கலங்கித் தவித்தான்.

திகழொளியைப் பற்றி நீரன் சொன்னது அவனுடைய செவிகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
ஒருவேளை திகழொளியை திருமணம் செய்திருந்தால் நீரன் நல்லா வாழ்ந்திருப்பானோ! என்று அவன் மனம் சந்தேகப்பட்டது.


நீரன் வாழ்க்கை இந்த திகழொளியால் தான் வீணானது என்று வழக்கம் போல் அவளையே தவறாக நினைத்தான்.


அவன் மனதில் அந்த கோவத்தின் தீ இன்று வரையில் குறையவே இல்லை..

உண்மை தெரியும் போது தான் அவனின் நிலை என்னாகுமோ..?

ஆனாலும் ,அவனால் திகழொளியைத் தவிர வேறு எந்த பெண்ணையும் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை..

புனேவில் இருந்து மும்பை மாறிய போதும் அவனிடம் எத்தனையோ பெண்கள் தங்கள் காதலை சொன்னார்கள்.

ஆனால் அவனுள் சரிபாதியாக மாறியவளைத் தவிர வேறு யாரையும் அவனால் நினைத்து பார்க்க முடியவில்லை..


அவனோ ,திகழொளியை நினைக்காத நாள் இல்லை .ஒவ்வொரு நாளும் தன் மனதுடனேயே போராடி களைத்துப் போனான்.

இப்பிடியே அவன் வாழ்வும் ஓடிக்கொண்டிருந்த சமயத்தில் தான் அவன் மாற்றலாகி மீண்டும் தன் ஊரூக்கே வந்தான்.

அங்கே எதிர்பாராமல் தன்னவளை சந்தித்தான்..அவளைப் பார்க்கும் பொழுது எல்லாம் அவளை கடித்து குதறியவன், அவளை ஏற்கவும் முடியாமல் ஒதுக்கவும் முடியாமல் அனுதினமும் தனக்குள்ளேயே போராடினான்.

காதல் கொண்ட மனசு அவளைத் தான் திருமணம் செய்யவேண்டும் என்று எண்ணியது.ஆனால் அவள் துரோகம் செய்து விட்டாள் என்ற நினைவு வரும் போது அவளை பழிவாங்கத் துடித்தது.

இரண்டு மனதுடன் போராடியவன்.தீர்வாக அவளை திருமணம் புரிந்து அவள் தப்புக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.

அவனால் அவளை வேறு ஒருவருடன் திருமணகோலத்தில் பார்க்க முடியாது..

அவள் தனக்கு மட்டுமே என்ற எண்ணமே அவளை எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என்று அவளையே திருமணம் செய்ய வைத்தது.


ஆனால் அது அவனுக்கே இப்போது தண்டனையாக மாறியது.

மனதாக விரும்பியவளை ஏற்கவும் முடியாமல் ,தள்ளி வைக்கவும் முடியாமல் துடியாய் துடித்துக் கொண்டு இருக்கிறான்.


திகழொளியோ, தான்‌ மனதார விரும்பியவன்னுடனேயே தன் வாழ்வு இணைத்து விட்டது என்று நிம்மதி அடைய முடியாமல் ,காரணமே இல்லாமல் அனு தினமும் அவனுடைய கோபத்தில் பொசுங்கிக் கொண்டு இருக்கிறாள்.


விடியும் வரை தூங்காமல் மிகனும்,திகழொளியும்
பழைய நிகழ்வுகளை அசை போட்டபடியே படுத்திருந்தனர்..


இருவருக்கும் பழைய நினைவுகளின் ஞாபகங்கள் பச்சைப் புண்ணாக வலித்தது.

உறங்காத இரவுகளின் மிச்சம் காலையில் அவர்களின் விழிகளில் சிவப்பாக மிளிர்ந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்காலத்தில் மனைவியுடன் பொருந்திக் கொண்டிருந்தவன் பழைய நினைவுக
ளின் வலிகளால் மீண்டும் மனைவியிடம் கோபத்தை காட்டத் தொடங்கினான்.


ஆனால் எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடிவு வந்து தானே தீரும்..அவர்கள் பிரச்சினையும் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

தொடரும்..

Hi friends,
உயிர் துடிப்பாய் நீ! அடுத்த அத்தியாயம் 30 பதிந்து விட்டேன் படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..அடுத்த யூடி புதன்கிழமை..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
 
Last edited:

Initha Mohan

Well-known member
Saha Writer
Messages
413
Reaction score
659
Points
93
உயிர் துடிப்பாய் நீ !


அத்தியாயம் 31


மிகனுக்கும், திகழொளிக்கும் பழைய நினைவுகள் மீண்டும் ஒரு இறுக்கத்தைக் கொடுத்தது.



மிகனோ, திகழொளியை நேரம் கிடைக்கும் போது எல்லாம் தேளாய் கொட்டித் தீர்த்தான்.




அவன் என்ன பேசினாலும் திகழொளி அமைதியாகவே இருந்தாள். ஒரு கட்டத்திற்கு மேல் அவளின் அமைதியைக் கண்டு மிகனே பேசுவதை நிறுத்தினான்.



அதன் பின் இருவருக்குள்ளும் பேச்சுக்கள் குறைந்தது. தேவைக்கு மட்டும் அதுவும் பெரியவர்கள் முன்னர் மட்டும் ,இயல்பாக பேசுவது போல் நடித்தார்கள்.



மகிழினிக்கு காலின் காயம் சரியானதும் மீண்டும் திகழொளி வேலைக்குச் சென்றாள். மிகனுடன் சென்றாலும் இருவரும் வேலை விஷயம் தவிர எதுவும் அங்கும் பேசிக் கொள்ளாமல் தான் நாள்களை கடத்திக் கொண்டு இருந்தார்கள்.



இப்படியே நாள்கள் கழிந்த நிலையில் நீரனின் இறந்த நாள் வந்தது.. . அதுவும் அன்று ஞாயிற்றுக்கிழமை! வீட்டில் நீரனுக்கு படையல் போட்டு சாமி கும்பிட்டார்கள்.



திகழொளி மணியரசிக்கு சமையலில் உதவி செய்தாலும், சாமி கும்பிடும் நிகழ்வில் தள்ளியே இருந்தாள்.



அவளால் மனமொத்து அதில் கலந்து கொள்ள முடியவில்லை..என்னதான் வெறுப்பு இருந்தாலும் ,அதை இறந்தவர்கள் மீது காட்டுவது சரியில்லை என்று அவள் மூளை சொன்னாலும், மனது அதை ஒப்பவில்லை..அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை..



திகழொளியோ, ஒட்டாத மனநிலையுடன் இருந்தால் என்றால், மிகனோ அதைவிட குற்றயுணர்வில் தவித்தான்.



தன் சகோதரன் போல் எண்ணியவன் விரும்பிய பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டோமே! அதுவும் அவன் வாழ்வை அழித்தவளை மணந்திருக்கிறேனே! என்று அவனுள் திகழொளி மீது வெறுப்பும் ,கோபமும் அதிகரித்தது.




அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை..மனம் அலைபாய்ந்தது. சாமி கும்பிட்ட பின் பேருக்கு சாப்பிடுகிறேன் என்று கொரித்து விட்டு, தங்கள் அறைக்குச் சென்று அடைந்து கொண்டான்.



திகழொளியோ, அனைவரும் சாப்பிட்டு முடித்த பின்னர் பாத்திரங்களை ஒதுக்கி, கழுவி வைத்தாள்.



காலையிலிருந்தே கணவனின் முகமே சரியில்லை என்று நினைத்தவள் ! தங்கள் அறைக்குச் செல்வதை முடிந்தளவு தள்ளிப்போடுவதற்கு என்ன.. என்ன, செய்ய முடியுமோ! அது அத்தனையும் செய்தாள்.



மிகனோ, அறையில் கூண்டுப் புலியாக நடந்து கொண்டிருந்தான்.அவன் மனம் எரிமலையாய் குமறிக் கொண்டிருந்தது. மனைவியை எதிர் நோக்கி காத்திருந்தான்.



ஒருவழியாக திகழொளி வேலை எல்லாம் முடித்து விட்டு இனி செய்வதற்கு எதுவுமில்லை என்று ஆனபின் ! வேறு வழியில்லாமல் தங்கள் அறைக்குத் தயங்கி தயங்கிச் சென்றாள்.



அவளுக்கு தலைவலி வேறு உயிர் போனது..என்ன தான் வேலை செய்தாலும் ,மனது கண்டதையும் நினைத்து கலங்கித் தவித்ததின் விளைவாக தலைவலி வந்து விட்டது.



கொஞ்ச நேரம் தூங்கினால் நன்றாக இருக்கும் எனறு எண்ணியபடி தயக்கத்துடன் அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.



உள்ளே வந்தவளை பார்ததவுடன் மிகனோ, வெறியுடன் அவளின் தோளைப்பற்றியவன் "இப்ப உனக்கு சந்தோஷமா இருக்கா டீ..?எப்படியோ அவன் வாழ்க்கையும் அழித்துவிட்டு என் வாழ்க்கையையும் அழிக்க வந்திருக்கே..! ஒவ்வொரு நொடியும் உன்னால் நான் நிம்மதி இல்லாமல் சாவறேன்.ஆனால், நீ நிம்மதியா இருக்கே..நல்லா வாழ்ந்திருக்க வேண்டியவனுக்கு உன்னால் இன்று நினைவுதினம் கும்பிடறோம் .."என்று அளவில்லாத கோபத்துடன் சீறினான்.


அவளோ அவனை உயிர்ப்பே இல்லாமல் பார்த்தாள்..


அவனோ ஆவேசம் தீராமல், "உன் முகத்தை பார்க்கவே பிடிக்கலே..எப்படித் தான் எல்லாத்தையும் செஞ்சுட்டு ஒண்ணும் தெரியாதவள் போல் அப்பாவியா முகத்தை வச்சுக்கிறீயோ தெரியலே..!

உன்னை பார்க்கவே வெறுப்பா இருக்கு.." என்றவனை..



சொல்ல முடியா வலியுடன் "போதும் நிறுத்துங்கள் ! நான் என்ன சொன்னாலும் ! எத்தனை முறை சொன்னாலும்! என்னை நம்ப மாட்டீங்க..! உங்களால் என்ன செய்ய முடியுமோ? செய்யுங்க.. !முடிந்தால் என்னை கொன்னு போட்டுடுங்க அப்பவாவது நிம்மதியா இருப்பீங்க..! "என்றாள் மனம் ஒடிந்து..



அவனோ அப்போதும் கோபம் தீராமல்.."உன்னை கொன்னால் மட்டும் எல்லாம் சரியாகுமா..?என் மனதில் புழுவா அரிக்கும் வலிக்கு என்றுமே மருந்தில்லை.உன்னை என்று சந்தித்தேனோ அன்றே என் வாழ்வு முடிந்துவிட்டது.." என்றான் கட்டுக்கடங்காத கோபத்துடன்..



அவளோ "இன்னும் என்னென்ன பழி என்மேல் போட முடியுமோ..? போடுங்கள்.." என்றவளுக்கு மனம் தாளவே இல்லை..ஒரு முறை கூட தன்னிடம் இதுவரை என்ன நடந்தது என்று கேட்டதும் இல்லை.. நம்பவும் இல்லை ! இவன் மெய்யாலுமே தன்னை நேசித்தானா? என்ற சந்தேகம் அவளுக்கு முதல் முறை தோன்றியது..



"எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் மிகன்! உண்மையாளும் நீங்கள் என்னை நேசித்தீர்களா?என்று கேட்டவளை திகைப்புடன் பார்த்தான்.




அவள் கேட்டதற்கு பதில் சொல்லாமல் மிகன் சில நொடிகள் அசையாமல் அப்படியே சிலையாக நின்றான்.



அவன் எதுவும் பேசாது நிற்பதைக் கண்டு " இத்தனை நாளும் நீங்களும் என்னை உண்மையா நேசித்து இருக்கீங்கன்னு நினைத்தேன்! ஆனால் , இப்போது தான் தெரியுது ! நீங்க என்னை நேசிக்கவே இல்லை.பழிவாங்க தான்‌ கல்யாணம் செஞ்சு இருக்கீங்கன்னு .."என்றவளுக்கு தாள மாட்டாமல் அழுகை பொங்கியது..



மிகனோ, பேச்சற்ற சிலையாக நின்றான்.அவள் கேட்டதிலிருந்த உண்மை அவனைச் சுட்டது.



திகழொளி பொங்கி வந்த கண்ணீரை அடக்கிய படி "போதும் மிகன் ..! இதற்கு மேல் என்னால் உங்களோடு வாழ முடியாது.. தினம் தினம் உங்க சூடு சொல்லை தாங்க எனக்கு தெம்பும் இல்லை..நான் நேசித்த மிகன் நீங்க இல்லை! " என்றவள் அதற்கு மேல் தாங்க முடியாமல் அவன் நெஞ்சிலேயே சாய்ந்து கதறினாள்.



மிகனோ அப்போதும் அமைதியாகவே நின்றான்.அவன் மனம் முதல் முறையாக அவள் மீது தப்பு இல்லையோ! என்று எண்ணியது..



திகழொளியோ, ஒருவாறு அழுது முடித்து விட்டு அவனிடமிருந்து நகர்ந்து தன் கண்களை துடைத்தபடியே.. "இதற்கு மேல் என்னால் முடியாது..நாம் பிரிந்திடலாம்..நான் எங்க வீட்டுக்கே போறேன்.. என் மேல் இத்தனை வெறுப்புடன் இருக்கும் உங்களுடன் எப்படி சேர்ந்து வாழ்வது ..இரண்டு பேருக்கும் வாழ்க்கை நரகமாயிடும்..நீங்களாவது நிம்மதியா இருங்க.." என்றவள் அவன் பதிலை எதிர்பார்க்காமல் தன் அலைபேசியை எடுத்து தன் தம்பியை அழைத்து வரச் சொன்னாள்.




அவள் சொன்னதைக் கேட்டு மிகன் பித்து பிடித்தது போல் நின்றான்.அவன் மனமோ அவளை தடுப்பதற்கு துடித்தது!ஆனாலும், அவள் தன் உடமைகளை எடுத்துவைப்பதை சலனமே இல்லாமல் பார்த்தபடி அப்படியே சிலையாக நின்றான்.



மிகன் சரியாக உண்ணவில்லையே என்று டம்ளரில் பாயாசம் எடுத்து வந்த மணியரிசி! கணவன், மனைவியின் உரையாடலை அறைக்கு வெளியிலிருந்து கேட்டவர் அப்படியே சிலையாக நின்றார்.



தன் மகனால் தவறே செய்யாத இருவரின் வாழ்க்கையும் வீணாகிக் கொண்டிருக்கிறேதே !என்று அவர் உள்ளம் அழுதது.என்ன செய்வதென்று‌ அறியாமல் தான் வந்த சுவடு தெரியாமல் அங்கிருந்து நகர்ந்தார்.



அமுதன் தன் தமக்கை அழைத்த அரை மணி நேரத்தில் என்னவோ? ஏதோ? என்று அடித்து பிடித்து வந்துவிட்டான்.



திகழொளியோ , அமுதனைக் கண்டதும் தன்‌ துக்கத்தை அடக்கிக் கொண்டு "அமுதா நான் கொஞ்ச நாள் நம்ம வீட்லே வந்து இருக்கலாம்ன்னு இருக்கேன் என்னை கூட்டிட்டு போடா.." என்றாள் வேறு எதுவும் சொல்லாமல்..



அமுதனோ ,புரியாமல் மிகனைப் பார்த்தான்.மிகனோ இறுகிப் போய் நின்று இருந்தான்.



போகும் போது பெரியவர்களிடம் "அம்மா வீட்டில் கொஞ்ச நாள் இருந்துட்டு வரேன்.." என்று மட்டும் சொன்னாள்.



உலகமாறனுக்கோ, இது கண்டிப்பா மகனின் திருவிளையாடல் தான் என்று தெரிந்தது. ஏதோ இருவருக்குள்ளும் சண்டை என்று மட்டும் அவருக்கு புரிந்தது! ஆனால் , மருமகளை எப்படி சமாதானப்படுத்துவது என்று அவருக்கும் புரியவில்லை..



மணியரசியோ ,செய்வதறியாமல் மெளனமாக நின்றார். அவர் மனமோ அவரைக் கொல்லாமல் கொன்றது.




இருவருக்கும் சண்டை என்று அமுதனுக்கும் புரிந்தது.வீட்டிற்கு சென்று அக்காவிடம் கேட்டுக்கலாம் என்று நினைத்தான்.



பெரியவரிகளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்றவுடன் திகழொளி "போயிட்டு வரேன் .."என்று பொதுவாக சொல்லிவிட்டு தம்பியுடன் கிளம்பி விட்டாள். கணவனிடம் பேச்சுக்கு கூட சொல்லவும் இல்லை..அவனை ஏறெடுத்தும் பார்க்கவும் இல்லை.. அவளுள் ஏதோ ஒன்று செத்துக் கொண்டிருந்தது..



கண்களில் கண்ணீர் இப்பவோ? அப்பவோ? என்று தத்தளித்துக் கொண்டிருந்தது.



திகழொளி சென்றதும் மிகனோ உலகமே அழிந்தது போல் துடித்தான்.சொல்ல முடியாத வலியுடன் படுக்கையில் தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தான்.



மணியரசியோ, அதற்கு மேல் பொறுக்க முடியாமல் மிகனைக் காணவந்தவர் , இடிந்து போய் அமர்ந்திருந்த அண்ணன் மகனிடம் "மிகா உண்மை தெரியாமல் தப்பு செய்துட்டீயே! ஒரு தப்பும் செய்யாமல் திகழொளியை குற்றவாளி ஆகிட்டீயே! நானும் எல்லாம் சரியாகும் என்று இத்தனை நாள் பொறுமையா இருந்தேனே..நடந்தது தெரியாமல் அவசரப்பட்டு பேசிட்டீயே .."என்றவர் அழுதபடி அத்தனையையும் சொன்னார்.




அவர் சொன்னதைக் கேட்டு மிகன் அதிர்ச்சியின் விழிம்பிற்கே சென்றான். அவனால் இயல்பாக மூச்சுக் கூட விட முடியவில்லை..நெஞ்சை சம்மிட்டியால் அடித்தது போல் தாள முடியாத வலியை அனுபவித்துக் கொண்டிருந்தான்.



"மிகா தப்பு எல்லாம் நீரன் மீது தான்! திகழொளி ரொம்ப நல்ல பொண்ணுப்பா..என் மகனை திகழொளி ஒரு நாளும் விரும்பவில்லை ..அவள் உன்னைத் தான் விரும்பினாள்.." என்றவர் ஒரு நெடிய பெருமூச்சுடன்.



"நீரன் உன் மீது இருந்த பொறாமையில் திகழொளியை உன்னிடமிருந்து பிரிக்க பொய் சொல்லி இருக்கான்..போதைப் பழக்கம் அவனை மிருகமா மாத்திடுச்சு..அவனைத் தவிர யாரும் சந்தோஷமா இருக்க கூடாது என்று நினைத்தான். அது தான் உங்க வாழ்க்கையில் விளையாடிட்டான்.."என்றவருக்கு அதற்கு மேல் துக்கம் தாங்க முடியாமல் கதறினார்.




என்ன சொல்வது என்று தெரியாமல் தன் அத்தையையும் சமாதானப்படுத்தவும் முடியாமல் மிகன் தவித்தான்.



ஒரு வழியாக அவரே தன் கண்ணீரை அடக்கிக் கொண்டு "நீரன் என்னிடம் திகழொளியை விரும்புவதாக சொன்னவுடன், நான் திகழொளியை அழைத்துக் கேட்டேன். ஆனால், அவள் அப்போதே உன்னைத் தான் விரும்புவதாகவும், நீரனிடம் தான் பேசியது கூட இல்லை என்று சொல்லிவிட்டாள்.உடனே நான் நீரனிடம் இதை சொன்னேன்.அன்றிலிருந்து வந்தது தான் வினை!" என்று ஒரு நொடி தன் கண்களை மூடித் திறந்தவர் ..



"நீரனுக்கு தன்னை வேண்டாம் என்று திகழொளி சொல்லிவிட்டு, உன்னை காதலிக்கிறாளே! என்ற ஆத்திரம் தான் உங்களை பிரித்தே தீரவேண்டும் என்று அவன் இத்தனை வேலை செய்திருக்கிறான்.பிள்ளை மனம் கல்லு பெத்த மனம் பித்து என்று சொல்லுவார்களே! அது போல் ஒரு நாள் அவன் மாறுவான் என்று நினைத்து தான் உன்னிடம் நான் எதையும் சொல்லாமல் நானே அவனை திருத்த படாதபாடு பட்டேன்.." என்றவரை பார்ததபடி அவரே பேசட்டும் என்று அமைதியாக இருந்தான் மிகன்.





அவனால் என்ன பேசமுடியும்..தன் அத்தை அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் பொழுது!



மெளனமாக இருந்தவனிடம் "அவன் போதை பழக்கத்தை மறக்கடிக்க மறுவாழ்வு சீர்திருத்த மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று மருத்துவமும் பார்த்தோம்..ஓரளவு திருந்தி வந்த பின் தான், உடனே கயல்விழியை பார்த்து திருமணம் செய்து வைத்தோம் . ஆனால், அந்த வாழ்வும் இவனுக்கு நிலைக்க வில்லை.." என்று கலங்கியவர் கண்ணீருடன் மீண்டும் பேசினார்.



"விஷம் குடிப்பது போல் நடித்து! உன் மனதை கெடுத்து! உங்களை பிரிச்சவன் அத்துடன் நிம்மதியடையாமல் , அவன் கெட்டு சீரழிவதைப் பொறுக்க முடியாமல் நீ அவனிடம் 'ஏன்டா இப்படி குடிக்கிறேன்னு கேட்டதற்கு' அப்போதும் திகழியை பற்றி உன்னிடம் தப்பாக சொன்னதை நான் கேட்டேன் பா! அப்பவே என் மனம் விட்டுப் போச்சு! இனி இவன் திருந்தவே மாட்டான்னு முடிவுக்கு வந்துட்டேன்.."என்றவரை திகைப்பாக பார்த்தான் மிகன்.



இத்தனையும் இவருக்கு தெரிந்திருந்தும் தன்னிடம் ஒன்றுமே சொல்லவில்லையே என்று நினைத்தான்.



அவரோ ,அவன் மனதை சரியாக கணித்தவர் "இத்தைனை தெரிந்திருந்தும் அத்தை ஒன்னுமே சொல்லலையேன்னு நினைக்கிறாயாப்பா .? என்ன தான் இருந்தாலும் நான் அவனை பெற்றவளா போய்ட்டேனே..உனக்கு தெரியாமலேயே அவனை சரிபண்ணிடலாம்ன்னு நினைத்தேன்.ஆனால் எல்லாம் போச்சு..இனியும் நான் வாயை மூடிட்டு இருந்தால் உன் வாழ்க்கை வீணா போய்டும் ..திகழொளி நல்ல பெண்பா ..அவள் உன்னை மட்டும் தான் விரும்பினாள்.நீரன் சொன்னது அத்தனையும் பொய்.. நீரனின் சாவுக்கு அவள் எந்த வித்த்திலும் பொறுப்பு இல்லை..அவன் விதியை அவனே தான் முடித்துக் கொண்டான்.." என்றவர் விழியில் தேங்கிய நீரை உள்ளிழுத்த படி ..



"இனியாவது எல்லாத்தையும் மறந்துட்டு அவளுடன் நிம்மதியா சந்தோஷமா வாழுப்பா..நீயும் நான் பெறாத என் மகன் தான்! உன் முகம் வாடினால் என்னால் தாங்க முடியாது.தானாக சரியாகும்ன்னு இத்தனை நாள் உங்கிட்ட உண்மையை மறைத்த இந்த அத்தையை மன்னித்து விடுப்பா.." என்றவர் தாள முடியாமல் அவன் கைகளைப் பற்றிக் கொண்டு அழுது கரைந்தார்.


மிகனோ ,தன் துக்கத்தையும் ,அதிர்ச்சியையும் விழுங்கிக் கொண்டு மணியரசியை சமாதானப்படுத்தினான்.



தன் துக்கத்தை எல்லாம் அண்ணன் மகனிடம் சொல்லி அழுது தீர்த்துக் கொண்ட மணியரிசி.. " இத்தனனை வருடங்கள் கழித்து இன்னைக்கு தான் குற்றயுணர்வு இல்லாமல் நிம்மதியாக நான் தூங்கப் போறேன்.இன்றும் நான் உண்மையை சொல்லவில்லை என்றால் என் மனசாட்சியே என்னை கொன்று விடும் பெற்ற தந்தைக்கு மேல் நீ மகிழினியைக் கூட நல்லா பார்த்துட்டு இருக்கே..உன் வாழ்வு கெட்டுப்போக நான் விடமாட்டேன் பா..இத்தனை நாள் அத்தை உங்கிட்ட சொல்லாமல் இருந்தது பெரிய தவறு தான் அதுக்காக என்னை வெறுத்து விடாதே !உன்னை விட்டா எங்களுக்கு வேறு நாதி இல்லை.." என்று நா தழு தழுக்க சொன்னவரிடம்..




" அத்தை எனக்கு எப்போதும் உங்களை வெறுக்க முடியாது.. என்னை பெற்ற தாயாக இத்தனை நாள் பார்த்துக் கொண்ட உங்களை நான் வெறுப்பேனா?" என்ற அண்ணன் மகனின் தலையை வருடியபடி" நீ என் வயித்துலே வந்து பிறந்திருக்க கூடாதா என் தங்கமே? என்றவர் துக்கம் தாங்க முடியாமல் கண்ணீர் சிந்தினார்.



"அத்தை பெற்றால் தான் பிள்ளையா! நான் எப்போதும் உங்க பிள்ளை தான்.."என்றவனிடம்..



" மிகா முதல்லே போய் திகழொளியை கூட்டிட்டு வாப்பா ..நீ அவ கூட சந்தோஷமா வாழ்றதை பார்த்தால் தான் என் மனம் நிம்மதி அடையும்.."என்றவர் "அத்தையை மன்னிசுடுப்பா..!" என்று கையெடுத்துக் கும்பிட்டார்.



அவனோ பதறிப்போய் அவரின் கைகளைப் பற்றி " என்ன அத்தை இது! என்ன காரியம் செய்யறீங்க ..!இனி இப்படி எல்லாம் செய்யாதீங்க! எனக்கு கஷ்டமா இருக்கு அத்தை..!" என்றவனை வாஞ்சையாக பார்த்தபடி எதுவும் சொல்லாமல் எழுந்து சென்றார்.



இத்தனை நாள் இருந்த அவரின் மனப்பாரம் எல்லாம் குறைந்து மனம் லேசானது. வெகு நாளாக மனதில் சுமந்த சுமையை இறக்கி வைத்த நிம்மதி மணியரசிக்கு கிடைத்தது.



அவர் சென்ற பின் மிகனோ விவரிக்க முடியாத மனநிலையில் இருந்தான். திகழொளி தன்னை மட்டும் தான் விரும்பி இருக்கிறாள் என்று செய்தி ஒரு புறம் அவனுள் பெரும் இன்பத்தை கொடுத்தாளும், மறுபுறம் அவளை நம்பாமல் தான் பேசிய பேச்சை நினைத்து வெட்கப்பட்டான்.



இனி எப்படி அவள் முகத்தில் விழிப்பான்.அவள் சொன்னது போல் ஒரு முறையாவது என்ன நடந்தது என்று அவளை கேட்காமல் போனோமே! இனி அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று தவித்தான்.



சொல்ல முடியாத வார்த்தைகளால் அவளை நோகடித்து வதைத்தோமே..வேறு ஒரு பெண்ணாக இருந்தால் 'போடா' என்று போய் இருப்பாள்.



ஆனால் ,என் ஒளி அத்தனையும் எனக்காக பொறுத்துக் கொண்டு நான் நம்புவேன்! மாறுவேன் ! என்று காத்திருந்தாளே! அவளை இப்படி காயப்படுத்தி அனுப்பிவிட்டேனே என்று நினைத்தவனுக்கு இதயமே வெடித்து விடும் போல் வலித்தது.



எந்த முகத்தை வைத்துக் கொண்டு போய் அவளை பார்ப்பது என்று நினைத்தவனுக்கு பைத்தியம் பிடித்து விடும் போல் இருந்தது.அவன் மனமோ அவனை கொல்லாமல் கொன்றது..




அவளை குற்றவாளியாக பார்த்த போது இருந்த மனவலியை விட. அவள் குற்றமற்றவள் என்று தெரிந்த பின் வந்த மனவலியை அவனால் தாங்க முடியவில்லை..



அமிலத்தை குடித்தது போல் அவன் மனம் சொல்ல முடியாத பெரும் வலியை அனுபவித்தது.



அவளைப்பற்றி புரிந்து கொள்ளாமல் வார்த்தையால் அவள் மனதை கொன்றோமே? நமக்கு மன்னிப்பே இல்லை என்று ஊமையாக அழுதான்.





என்ன செய்வது என்று அறியாமல் துடியாய் துடித்தான்..



தீயவனின் பேச்சை நம்பி தன் வாழ்வை கேள்விக் குறியாக்கிவிட்டோமே! என்று நினைத்து தவித்தவனுக்கு அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை..


தொடரும்..

Hi friends,
உயிர் துடிப்பாய் நீ! அடுத்த அத்தியாயம் 31 போட்டு விட்டேன்..படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..
அடுத்த யூடி சனிக்கிழமை
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
 

Girija priya

Member
Messages
31
Reaction score
31
Points
18
Unmai therinjidichi....ippo poyi mannipu kettu kuttitu vandha ....pichidiven pichi...
Konjam naal kashtapadu.... Oli avan kupitan nu vandhudatha....nice intresting ud sis ❤️
 

New Threads

Top Bottom