sowndharyacheliyan
New member
- Messages
- 2
- Reaction score
- 1
- Points
- 1
வணக்கம் நண்பர்களே,
இது என்னுடைய இரண்டாவது கதை
"என்ன மறந்தப் பொழுதும் நான் உன்ன மறக்கவில்லையே "
முழுக் கதையும் பதிந்து விட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள். ,
ஹலோ,ஹாய்,வந்தனம்,வணக்கம், நீங்கள் கேட்டுக்கொண்டு இருப்பது கொடைக்கானல் எப்.எம் 100.5 ல் நேயர்களின் விருப்பம் இது நம்ம ஊரு சேனல்,
இதோ அடுத்த ஒரு நேயரின் விருப்பப் பாடல் இத்தோடு நிகழ்ச்சி முடிவடைகிறது மீண்டும் நாளை உங்களை சந்திக்க வருகிறேன் உங்கள் ஆர்.ஜே நிஷா இப்பொழுது பாடலைக் கேட்டு மகிழவும்,
" என்ன மறந்தப் பொழுதும் நான் உன்ன மறக்கவில்லையே "
என்ற வரிகள் வானொலியில் ஒலித்த சமயம்,தன்னுடைய பேக்கில் பள்ளி செல்வதற்காக தேவையான பொருட்களை எடுத்துக் வைத்து கொண்டிருந்த இதயாவின் கைகள் அந்தரத்தில் நினறு விட்டன.
பாடலின் வரிகள் இவளது செவிகளை வந்தடைய ,கல்லென சமைந்து விட்டாள்.
எத்தனை உண்மையான வரிகள் அவள் மனதில் உள்ளவற்றையல்லவா இப்பாடல் உணர்த்துகிறது. அடுத்த அடுத்த வரிகள் வர வர கரங்கள் உணர்ச்சி வேகத்தில் நடுங்க ஆரம்பிக்க,நிற்க முடியாமல் தள்ளாடி தடுமாறி கட்டிலில் அமர்ந்தவள் தலைகளை இரு கைகளாலும் தாங்கிக் கொண்டாள்.
"கண்ணு உறங்கும் பொழுதும் உன் எண்ணம் உறங்கவில்லையே"
அவள் நிம்மதியாக உறங்கி தான் எத்தனை நாட்கள் ஆகின்றது,பகல் முழுவதும் தன்னை வேலையில் மூழ்கடித்துக் கொள்பவள் இரவில் கண் மூடி உறங்க முயற்ச்சித்தால் அவனது நினைவுகள் வந்து தூக்கத்தையல்லவா விரட்டு அடித்து விடுகிறது,
அவனின் நினைவுகளை மறக்க முடியாமல் கற்பனை உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேனே,கனவு நனவாகாதுு என்று தெரிந்தும் ஏன் என்னுள் இத்தனை போராட்டங்கள்.
இப்பொழுதே வீட்டினில் வரன்கள் பார்க்க ஆரம்பித்து விட்டார்களே,அவர்களிடம் சொல்ல முடியுமா?? நான் கற்பனையில் ஒருவனோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன் என்று தாங்குவார்களா????????இந்த சமுதாயம் தான் ஏற்றுக் கொள்ளுமா?????
"உன்மேல ஆசைவச்சு உள்ளுக்குள்ள பாசம்வச்சு ஆளான அன்னக்கிளி நான்"
"பூமால கோத்துவச்சு போட ஒரு வேள வச்சு போடாமா காத்திருக்கேன் நான்"
அவனிற்காகதானே காத்துக் கொண்டிருக்கிறேன்,பூமாலை என்ன என் உயிரையே அவனிடம் தருவதற்காக மாலையாக என் மனதில் கோர்த்து வைத்திருக்கின்றேனே,
"வேண்டாத சாமி இல்ல வேற வழி தோணவில்ல
ஏங்காம ஏங்கி நின்னேன் நான்"
தன் இஷ்ட தெய்வமான முருகனிடம் எத்தனை முறை வேண்டியிருப்பால் அவன் வர வேண்டும் என்று,இதோ இப்பொழுது கூட ஏங்கிக் கொண்டிருக்கிறேனே,என்னால் வேறு என்ன செய்ய முடியும் பெற்றவர்களை மீறி அவனை தேடிச் செல்ல முடியுமா??,இல்லை தன் மனதில் உள்ள காதலை தான் சொல்ல முடியாமா??இல்லையே!!!!!
"என் ராசாத்தி பக்கம் இருந்தால் இனி வேறெதும் தேவையில்லையே"
வருவானா??என்னைத் தேடி மீண்டும் வருவானா!!!வந்தவனை தான் என் வார்த்தைகளால் குத்தி கிழித்து விட்டேனே பின் எப்படி வருவான்.
தியா ரெடி ஆகிட்டியா ஸ்கூலுக்கு லேட் ஆகிடுச்சு தாயின் குரலில் நடப்புக்கு வந்தவள்,
தன் கண்ணீரை அவசரமாக துடைத்துக் கொண்டு "த்தோ வரேன் ம்மா" என குரல் கொடுத்தவள்,
கண்ணாடி முன் நின்று அழுத விழிகளை மறைப்பதற்காக கொஞ்சம் பவுடர் பூசிக் கொண்டவள் முகத்தை நார்மலாக வைத்துக் கொண்டாள்.
இல்லையென்றால் அவளது தாய் பத்மா கண்டுககொள்வாரோ!!
தியா என தாய் இருமுறை அழைக்க அவசரமாக அறையை விட்டு வந்தவள்,அவனின் நினைவுகளை ஒதுக்கி விட்டு சாப்பாட்டு மேஜை நோக்கி சென்றாள்.
சாப்பிட அமர்ந்தவளின் முன் சுட சுட அவளுக்கு பிடித்த நூடூல்ஸ்ஸூம்,பாஸ்தாவும் பரிமாற பட,
ம்மா என்னம்மா உனக்கு தான் இதுப் பிடிக்காதே சமைக்கவும் தெரியாதே பின்ன எப்புடி?????
உனக்குப் பிடிக்குமே அதான் பண்ணேண் யூ-டியூப் எதுக்கு இருக்கு அதுல பாத்து பண்ணேண் சரி நீ சாப்பிடு ஆறிடப் போகுது
ம்ம்ம் அம்மா,அப்பா எங்கம்மா
வந்துட்டேன் தியாம்மா பத்மா சீக்கிரம் எனக்கும் டிபன் எடுத்து வை மழை வர மாரி இருக்கு நான் தியாவ ஸ்கூல்ல விடுடு வரேன்,
ப்பா அதன் ஸ்கூட்டி இருக்குல
போற வழியில மழை வந்துருச்சுன்ன என பண்ணணுவ அப்பா கொண்டு வந்து விடுறேன்,
தந்தையின் பதிலில் ஜன்னல் வழியே வெளயே பார்க்க வானம் இருண்டிருந்தது மழை எந்நேரமும் பிடித்துக் கொள்ளும் என எண்ணியவள்,அமைதியாக சாப்பிட்டாள் ஆனாலும் அரை மணி நேர பயணத்தில் இருக்கும் பள்ளிக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா என எண்ணியவள் உதடுகளில் புன்னகை மலர்ந்தது.
விரைவாக சாப்பிட்டு முடித்தவள்,
ம்மா லன்ச் பேக் எங்கம்மா குடுங்க லேட் ஆகிடுச்சு
தியா நீ கிளம்பு அப்பா மதியம் கொண்டு வந்து தருவாரு
ஏன்ம்மா???
மதியம் பிரியாணி செஞ்சு சூடா கொடுத்துவிடுறேன் இப்ப கிளம்பு,
ஆனாலும்மா ஸ்கூல் இங்கன் இருக்கறதாலா நீயும் அப்பாவும் பண்ணுற அலும்பு தாங்கல
ஏன்ம்மா கஷ்டப்படுத்துகிறீங்க,அப்பா வேற அலையனும்,
போடி போக்கிரி இதுல என்ன கஷ்டம் உனக்கு புடிச்ச டிஸ்ஸூ சூடா இருந்த ஒரு வாய் அதிகமா சாப்பிடுவா,போ அப்பா வெயிட் பண்ணுறாரு
என்னம்மோ போங்க Lkg பிள்ள மாதிரி நடத்துறீங்க என்றவள் வெளியே வந்த செப்பலை தேட,
தியாம்மா இங்க இருக்குப் பாரு அப்பா எடுத்து வச்சிருக்கேன் என்று அவர் காட்டிய திசையில் காலணிகள் கழுவி வைக்கப்பட்டிருக்க,
ப்ப்ப்பபாாா.....,என சிணுங்கியவள் வண்டியில் அமர,பள்ளியை நோக்கி வண்டியை செலுத்தினார் வாசு.
வாசு-பத்மா ஆகியோரின் செல்லப் புதல்வி இதயா.வாசு கவர்மென்ட் பணியில் இருந்து தற்போது ரிடையர்மென்ட்டில் இருப்பவர்,பத்மா இல்லத் தலைவி அளவான அன்பான அழகான குடும்பம்,
வாசுவின் உடன் பிறப்புகள் சென்னையில் இருக்க,இவர் மட்டும் வேலையின் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் செட்டில் ஆகி விட்டார்.
இதயாவின் விரும்பம் படி இங்கயே தங்கி விட்டனர்.
பயணம் செய்து கொண்டிருந்த இதயாவுக்கு சற்று முன் வீட்டில் நடந்தவை நினைவு வர உதடுகளில் தானாக முறுவல்,
இவையாவும் அவள் மேல் உள்ள அன்பில் வெளிப்படல்லா,தனக்காக மட்டுமே இருவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
தனக்கு காய்ச்ல் வந்தால் தன்னை விட இவரகள் அல்லவா துடித்துப் போய் விடுகின்றனர்.என்னோடு சேர்ந்து மூன்று நாட்கள்இவர்களும் உண்ணாமல் வெறும் கஞ்சி மட்டும் குடித்தார்களே,
ஏன்??என்று கேட்டதற்கு தவமிருந்து பெற்ற பிள்ளை காய்ச்சலில் படுத்திருக்கும் போது தாங்கள் எப்படி வாய்க்கு ருசியாக சாப்பிடுவது என கேட்டவர்கள் தானே இவர்கள்,
பெற்றவர்களை இழந்து வாழும் குழந்தைகளின் மத்தியில் எனக்கு கிடைத்திருப்பது பொக்கிஷம் அல்லவா??
அவர்கள் தன்னிடம் கேட்டது ஒன்றே ஒன்று தானே அவர்கள் மாப்பிள்ளை பார்த்து ஊர் மெச்ச கல்யாணம் செய்ய வேண்டும் என்பது தானே அதுதானே அனைத்து பெற்றவர்களின் ஆசையும் கூட,
பார்க்கும் மாப்பிள்ளை தனக்கு பிடித்தால் மட்டுமே மேற்கொண்டு எல்லாம் என சொல்லுபவர்களிடம் வேண்டாம் என்று சொல்லி வேதனைப்படுத்த முடியுமா???
காதலா??பாசாமா??? எனப் பார்க்கும் போது பாசத்தின் பக்கம் தானே மனது சாய்கிறது,எனவே சரி என்று விட்டாள்.
நினைவுகளில் இருந்தவளை கலைந்தது வாசுவின் குரல் அவரது கேள்விகளுக்கு பதில் அளித்தவள்,பள்ளி வந்தவிட,இறங்கினாள்.
சரிடா,போயிட்டு வா அப்பா மதியம் வரேன் என்றுவிட்டு கிளம்பினர்.
பள்ளி வளாகத்தில் நுழைந்தவளை மாணவர்கள் விஷ் செய்ய பதிலுக்கு விஷ் செய்தவள் ஸ்டாப் ரூம் சென்றாள்.
இதயா,உனக்க பஸ்ட்ட் ப்பீரியட்(first period)3rd கிளாஸ் A செக்ஷன் இருக்கு என்ற மயூரிய பார்த்து சிரித்தவள் தாங்க்ஸ் சொல்லிவிட்டு,
தேவையான புத்தகங்கள் எடுத்துக் கொண்டு தனது வகுப்பு நோக்கி நடந்தாள்.
இதயா இப்பள்ளியிள் வேலைக்கு சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப் போகிறது,சக ஆசிரியைகளிடம் நன்றாக பேசினாலும் இவள் வயதுடைய மயூரியுடன் கொஞ்சம் நெருக்கம் அதிகம்.
"டிரிங் டிரிங்" மத்திய உணவுக்கான பள்ளி மணி அடிக்க,தான் எடுத்துக் கொண்டிருந்த வகுப்பை முடித்தவள்,
ஓகே,ஸ்டூடன்ஸ் மீதிய மண்ட்(Monday)பாக்கலாம் டூ டேஸ் லீவ் நல்லா என்ஜாய் பண்ணுங்க ,
தாங்க் யூ மிஸ்,
தாஙக் யூ என்று விட்டு வெளியே வந்தவள் எதிர்ப்பபட்ட பிஃயூனை,அழைத்தாள்
கந்தச்சாமி அண்ணா,அப்பா லன்ஜ் கொண்டு வந்திருப்பாரு கொஞ்சம் வாங்கிட்டு வரீங்களா எனத் தயங்கி கேட்க,
அட எதுக்கு மிஸ் தயங்குறீங்க,நான் போய் வாங்கிட்டு வரேன் நீங்க போங்க,
தாங்க்ஸ் அண்ணா என்றுரைத்துவிட்டு நடந்தாள்.
அவளுக்குமே இஷ்டமில்லை அவரை வேலை வாங்க வேறு வழி இருக்கவில்லை,காலையிலிருந்து தொடர்ச்சியாக வகுப்புகளுக்கு சென்று கொண்டிருக்கிறாள்.
சக ஆசிரியை அவசர விடுப்பு என்பதால் இவளின் ப்பீரி ப்பீரியட்டும் கட்டாகியது இன்னும் மதியம் நான்கு வகுப்புகள் இருந்தன,நினைக்க நினைக்க மலைப்பாய் இருந்தது.
பிஃயூன் கொண்டு வந்த உணவை வாங்கிக் கொண்டவள் மயூரியுடன் சாப்பிட.அமர,
ம்ம்ம்ம கொடுத்து வச்சவதான் நீ மழைக்கு சூடா பிரியாணி என்ற மயூரி அதனை வாசம் பிடிக்க
உன்னோட பாக்ஸ்ஸ மூடி வை உனக்கும் சேர்த்து தான் அம்மா குடுத்துவிட்டுருக்காங்க,
அப்பச் சரி என்ற மயூரி பிரியாணி யை ஒரு பிடி பிடித்தாள்.பேச்சும் சிரிப்புமாக லன்ஜ் பிரேக் முடிந்து அடுத்தடுத்த வகுப்புகளுக்கு நிற்க நேரமின்றி சிட்டாக பறந்திருந்தினர்.
ஒரு வழியாக பள்ளி முடித்தும் மாணவர்கள் சந்தோஷமாக வெளியேற,அவர்களுக்கு குறையாத சந்தோஷத்துடன் மயூரியும்,இதயாவும் வந்தனர்.
தந்தை கண்ட இதயா மயூரியிடம் விடைப் பெற்றுக் கொண்டு வீட்டிற்கு பயணமானால்.
சற்றே இதமான மனநிலையுடன் சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தவளின் பட்டது அப்பெயர்ப் பலகை,
"ஜெகதீஸ்வரன் மோட்டார்ஸ்"
அதனை கண்டவளின் பார்வை நிலைகுத்த,அத்தனை நேரம் இருந்த இதமான மனநிலை மாறியது.
"ஜெகதீஸ்"என்று முணுமுணுத்தவளின் கண்கள் குபுக்கென கண்ணீரை பொழிய,தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவளின் மனம் முழுவதும் வேதனை நிரம்பியது.
குழப்பமான மனநிலையுடன் வீட்டிற்குள் நுழைந்தவளை கண்ட பத்மா,
என்னாச்சு டி ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்கா,அன்னையின் கேள்வியில் சுதாரித்துக் கொண்டவள்,
ஆங்ங்ங்ங்.......ஒன்னும் இல்லம்மா கால் வலிக்குது இன்னைக்கு புல்லா கிளாஸ் போனேன் மா அதான் வேற ஒன்னுமில்ல,
சரி நீ போய் பிரஸ் ஆகிட்டு வா
சரி ம்மா என்றவள் அறைக்குள் புகுந்துக் கொண்டு பிரஸ்ஸாகி வந்தவளிடம்,பத்மா டீ யை நீட்ட
அதனை வாங்கியவள் அங்கிருந்த ஷோபாவில் அமர்ந்து டீபாயில் காலை துக்கி வைத்தவள் ஒரு மிடறு பருக,
சற்று முன் பார்த்த பெயர்ப் பலகையும்,அதனை தொடர்ந்து அதன் நினைவுகளும் வர,அதற்கு மேல் டீயை குடிக்காமல் வைத்தவள்,
ஷோபாவில் தலை சாய அதற்காகவே காத்திருந்தது போல் அவளது கண்ணங்களில் கண்ணீர் வழிந்தோடியது,
ஏன் முருகா!எனக்கு இந்த சோதனை ஆசைப்பட்டத மறக்கவும் முடியல வெளிய சொல்லவும் முடியல உள்ளுக்குள்ளயே வச்சி மருகிறேனே,என புலம்பிக் கொண்டிருந்தவளின் பாதத்தில் ஏதோ படும் உணர்வு தோன்ற நிமிர்ந்து பார்த்தாள்,
வாசு தனது மகளின் பாதத்திற்கு ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தார்,மகள் கால் வலி என சொல்லியதை கேட்டவர் அவள் பிரஸ்ஸாகி வரும் வரை காத்திருந்து ஒத்தடன் கொடுக்கலானார்.
அவரது கரிசனத்தில் மனம் வெதும்ப,
ப்பா நீங்க ஏன்ப்பா இதெல்லாம் பண்ணுறீங்க,விடுங்க
காலை ஆட்டதடா கொஞ்சம் நேரம் வலி குறஞ்சிடுமும் என்றவர் அவளைப் பார்க்க,
அவளின் கண்ணீரை கண்டு பதறியவர்,என்னாச்சு டா ரொம்ப வலிக்குது,
ஆமாப்பா ரொம்ப வலிக்குது என அவள் மனதின் வலியைக் கூற,
பத்மா அந்த தைலத்த கொஞ்சம் சீக்கிரம் எடுத்துட்டு வாயேன் என சப்தமிட,
என்னாச்சு ஏன் இப்புடி சத்தம் போடுறீங்க கிச்சன்ல தான இருக்கேன் என்றவர்,மகளிற்கு கொடுத்த டீ அப்படியோ இருக்கவும்
ஏண்டி டீ குடிக்கல பாரு ஆறிப் போயிடுச்சு என்றவர் அவளது அழுத விழிகளை கண்டு விட்டு,
ஏண் தியா அழுகுற,என அவளது கண்ணீரை தன் புடவையால் துடைத்தப்படி கேட்க,
கால் வலி அதிகமாகிடுச்சுப் போல அந்த தைலத்த கொடு என வாங்கியவர் அவளது பாதம் முழுவதும் நன்றாக மசாஜ் செய்து விட கால் வலி மட்டுமல்ல மன வலியும் சற்றி குறைவதுப் போல் இருந்தது.
இப்புடி பார்த்து பார்த்து செய்பவர்களிடம் தன் காதலை சொல்லி வேதனைப்படுத்த முடியுமா??
அவளுக்கு தனிமை தேவைப்பட,
ப்பா நா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துகிறேன் ப்பா,
கொஞ்ச நேரம் இரேன் டி நைட்டு சாப்பிட்டு படுப்ப,
இல்லம்மா எனக்கு ஏதும் வேண்டாம்,
வெறும் வயித்தோட படுப்பிய,
பத்மா அவ தான் வேண்டாம்னு சொல்லுறால விடு,நீ போய் ரெஸ்ட் எடுடா அதுக்கு முன்னாடி ஒரு கிளாஸ் பால் குடிச்சிட்டு படு
சரிப்பா..........
பாலை அருந்திவிட்டு கட்டிலில் வந்து விழுந்தவளின் கண்கள் அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீரை கொட்டின,
மனதின் ஓரத்தில் காலையிலிருந்து வலுக்கட்டாயமாக மறைத்து வைத்திருந்த அவனது நினைவுகள் மெல்ல மேழெம்ப அதனை காண பிடிக்காத அவள் திரும்ப மனதின் ஆழத்தில் புதைக்கப் பார்க்க,உன் பேச்சை கேட்பேனா என மனம் அடம்பிடிக்க,
மனதுடன் போராடியவள் தாங்க முடியாத வேதனையில் விருட்டென்று கட்டிலில் இருந்து எழுந்து தன் அம்மா கேட்பதற்காக தனது செல்லில் பதிந்துவைத்திருந்த 80's,90's பாடல்களை ஒலிக்க விட்டவள் ஹெட் போனுடன் கட்டிலில் அமர்ந்து கண் மூட,
அடுத்தடுத்த கேட்ட பாடல்களில் மனம் சற்றே இளைப்பாறியது,இளையராஜா பாடல்கள் இரவின் தனிமையில் கேட்பது சுகமல்லவா!!!
பாடல்களைக் கேட்டுக் கொண்டே கண்யரப் போனவளின் தூக்கம் அடுத்த பாடலில் பறந்தோடிற்று,
"கான கருங் குயிலே காதல் ஓர் பாவமடி
காதல் களத்தினிலே கண்ணீர் தான் லாபமடி
ஆசை உண்டானது அதில் வீடு ரெண்டானது"................
எதிரேயிருந்த சுவற்றை வெறித்தவளின் மனம் கடந்த கால நினைவுகளை அசைப் போட்டது அவளின் அனுமதியின்றி.
அந்த இருபாலர் படிக்கும் பள்ளியின் முன் தந்நையுடன் இறங்கினாள் பதின் வயது இதயா,இன்று அவளிற்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, தேர்வு எழுதுவதற்காக இங்கே வந்திருந்தாள்.
இதுவரை பெண்கள் பள்ளியில் மட்டுமே படித்தவளுக்கு இங்க வந்திருப்பது சற்பே படபடப்பாக இருந்தது,மனம் பட்டாம்பூச்சியை அடித்துக் கொண்டது,அடுத்து தந்தை உறுதியாக சொல்லி விட்டார் மேற்படிப்புக்கு இஙகு தான் சேர வேண்டும் என்று, அவளின் கூச்ச சுபாவத்தை போக்குவதற்காக எடுத்த முடிவு இது.
தியாம்மா எக்ஸாம் நல்லப்படியா எழுதனும் ஆல் த பெஸ்ட் தந்நையின் வாழ்த்தில் மகிழ்ந்தவள்,
தாங்கஸ்ப்பா என்றுவிட்டு தனது தோழிகள் கூட்டத்தை நோக்கி சென்றவள் அவர்களுடன் ஐக்கியமாகி விட்டாள்.
அன்றைய தினத்தை தொடர்ந்து வந்த தேர்வை நன்றாக எழுத இதோ அதோ என்று கடைசி தேர்வும் வந்தது,
எப்போதும் போல் ஹாலில் சென்றமர்ந்தவளுக்கு தன்னை யாரோ உற்று நோக்குவது போல் இருக்க சட்டென்று பக்கவாட்டில் திரும்ப,
அதுவரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் இவள் திரும்பியதும் டக்கென திரும்பி கொண்டாள்,
என்னடா இது என்பது போல் புருவங்களை சுருக்கியவள் பின் சூப்பர்வைசர் வரவும் இதனை மறந்துவிட்டு தேர்வு எழுத ஆரம்பித்தாள்.
ஒரு வழி தேர்வை எழுதி முடித்து வெளியே வந்தவள் தன்னுடைய பொருட்களை சேகரித்துக் கொண்டு தன் தோழிகளை நோக்கி செல்ல,
மீண்டும் அதே துளைக்கும் உணர்வு,திரும்பி பார்த்தவள் திகைத்தாள், அங்கே சற்று முன் ஹாலில் கண்டவன் இவளைப் பார்த்துக் கொண்டிருக்க, அதனை அசட்டை செய்தவள் மேலும் அதைப் பற்றி சிந்திக்காது சென்றுவிட்டாள்.
பத்து நாட்கள் கழித்து ஊர் தி்ருவிழா வர வாசுவின் உடன் பிறப்புகள் ஊரிலிருந்து வந்திருந்தனர்,தன் அக்கா தங்கைகைகளுடன் நன்றாக ஊர் சுற்றியவள் அன்று இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தவள் எதேர்ச்சையாக திரும்ப,
மின்சாரம் தாக்கியது போல் அதிர்ந்தாள்,ஏனெனில் அங்கு ஒருவன் இவளையே பார்த்துக் கொண்டிருக்க யாரென்று தெரியாது புருவங்களை சுருக்கியவள் பின் டக்கென திரும்பிக் கொண்டாள்.
இவன் ஸ்கூல்ல பார்த்தவனாச்சே இங்க வந்திருக்கான் இந்த ஊரா,இவன் என்னைய தான் பாக்குறானா இல்ல வேற யாரையாச்சுமா என யோசித்தவள் சற்றே தன்னை மறைத்தவாறு அமர்ந்துக் கொண்டு அவனைப் பார்க்க அவன் பார்வையில் மாற்றமில்லை,
மனம் படபடக்க திரும்பி கொண்டவளுக்கு உறுதியாயிற்று அவன் தன்னைத்தான் பார்க்கிறான் என்று,
இதயம் படபடவென அடித்துக் கொள்ள இனம் புரியா உணர்வு ஒன்று ஏற்பட்டது.அவனை ஓரக்கண்ணால் பார்க்க விடாது இவளை பார்த்துக் கொண்டிருக்க,
இவள் கன்னங்கள் செம்மையை பூசிக் கொண்டன,தந்தையின் குரலில் நடப்பு உலகுக்கு வந்தவள் அதிர்ந்து விட்டாள்.
என்ன காரியம் செய்துக் கொண்டிருக்கிறேன் நான்,இன்னும் நான் வாழ்க்கையில் சாதிக்க வேண்டியவை எவ்வளோ இருக்க அதற்குள் இத்தகைய உணர்ச்சிகளுக்கு நான் அடிபணியலாமா என தன்னைத் தானே திட்டிக் கொண்டவள் சடுதியில் அந்த உணர்வுகளஇல் இருன்து வெளிவந்தவள் அதற்கு பிறகு அவன் இருக்கும் திசைபக்கம் திரும்பவில்லை,
தேர்வு முடிவுகள் வெளியாகி இதயா அப்பள்ளியில் பையாலஜி குரூப் எடுத்து சேர்ந்து விட்டாள்,முதல் நாள் பள்ளியில் மாணவர்களை அவரவர் குரூப் வாரியாக பிரிக்க அப்பொழுது அறிந்துக் கொண்டாள்,
அவனின் பெயர் "ஜெகதீஸ்வரன்" கம்பூயூட்டர் சைன்ஸ் குரூப் எடுத்திருக்கான் என்று,
அதன் பின் வாழ்க்கை பள்ளி வீடு என சென்றது,இதற்கிடையில் அவனின் காதல் பார்வைகளும் தொடர அதனை அசட்டை செய்து விட்டாள்.
பள்ளி இறுதி ஆண்டில் இருக்கும் பொழுது அவனது நண்பர்கள் அவனின் காதலுக்கு தூது வர,
அவர்களிடம் தனக்கு இதில் விருப்பம் இல்லை தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என அடித்துக் கூறிவிட்டாள்,அதன் பின்னும் அவனது காதல் பார்வைகள் தொடர அலட்சியம் செய்தவள் தன் படிப்பில் கவனம் செலுத்தினாள்.
முகத்தில் பட்ட வெளிச்சத்தில் பண் விழித்த இதயா மணி பார்க்க எட்டு,விடுமுறை தினம் என்பதால் சற்று தாமதமாகவே எழுந்து சோம்பல் முறிந்தவள்,மொபைலை பார்க்க அது தன் உயிரை விட்டிருந்தது,
அப்பொழுது தான் நேற்று இரவு பாடலை கேட்டுக் கொண்டு நினைவுகளினஎ தாக்கத்தில் உறங்கியது புரிந்தது,
புத்துணர்ச்சியுடன் விடியலை எதிர்க் கொண்டவள் மொபைலை ஜார்ஜ் போட்டுவிட்டு குளிக்கச் சென்றாள்.
குளித்து முடித்து வெளியே வந்தவளை எதிர்க் கொண்ட வாசு,
இப்ப எப்படி இருக்குமா கால்வலி,
ம்ம்ம்ம் பரவாயில்லப்பா
சமையலையிருந்து வெளிப்பட்ட பத்மா இவளிடம் டீயை கொடுத்துவிட்டு மீண்டும் சமையலறைக்குள் நுழைந்துக் கொண்டார்.
தந்தையிடமிருந்து ரிமோட்டைக் கைப்பற்றியவள் பாட்டுத் சேனலுக்கு தாவ,
சிறு சிரிப்புடன் அவளிடம் ரிமோட்டை விட்டுக்கொடுத்தவர் அன்றைய தினசரியில் மூழ்கி விட்டார்.
கல்லூரி பாடல்கள் என ஒரு பாட்டு சேனல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருந்தது.அந்நிகழ்ச்சியில் நேயர்கள் தங்களது கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர்.
அதைக் கேட்டவளின் மும் மென்னையுற தனது கல்லூரி காலத்தை அசைப்போட்டாள் அங்குதானே அவனை இரண்டாவது முறையாக சந்தித்தாள்.
மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் B.A(English)ஆங்கிலம் தேர்வு செய்திருந்தாள்.
புதுத் தோழிகளின் நட்சு கல்லூரி காலட்டாக்கள் என இனிமையாக நாட்கள் நகர்ந்துக் கொண்டிருந்தன,
கல்லூரி 2 ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தசமயம்,இவர்களது துறை சார்பில் கல்ச்சரல் இவன்ட் நடத்தப்பட்டது,
அனைத்து கல்லூரி மாணவர்களும் வந்து கலந்து கொண்டனர்,
நிகழ்ச்சி அன்று தோழிகள் கூட்டம் ஓரே மாதிரியான புடவை உடுத்தி வந்திருக்க,
இவளுக்கு பெயர்களை ரிஜிஸ்டர் செய்யும் கமிட்டியில் வேலை,வரிசையில் நின்ற மாணவர்களின் பெயர் மற்றும் அவர்களின் கல்லூரி பெயர்களை குறித்துக் கொண்டிருந்தாள், எழுதுவதற்கு தோதாக சற்று குனிந்து அமர்ந்திருந்தவள்,
அடுத்து வரிசையில் நின்ற மாணவனிடம்,
உங்க நேம் சொல்லுங்க, என்க
"ஜெகதீஸ்வரன் பிஃரம் ஜே.கே காலேஜ்"
என்ற பெயரை கேட்ட நொடி உடல் தூக்கி வரி போட, இது இது அவனுடைய பெயராச்சே வந்துருக்குறது அவனா???என அதிர்ந்தவள்,
நிமிர்ந்து பாரக்க,தன் இரு கைகளையும் போன்ட் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு இவளை விழிகளில் கூர்மையுடன் ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
பார்த்த நொடி நெஞ்சம் படபடக்க,தலையை குனிந்துக் கொண்டவள் நடுங்கும் விரல்களை கட்டுக்குள் கொண்டு வந்து அவனின் பெயரை எழுதி முடித்தவள்,அதனை அவனிடம் நீட்ட,
அதனை பெற்றுக் கொள்ள முயன்றப் போது இருவரது விரல்களும் ஒரு நொடி உரச,மின்சாரம் தாக்கியது போல் தன் கைகளை விருட்டென்று உருவிக் கொண்டாள்,
அவளை உறுத்து விழித்தவன்,தன் நண்பர்களுடன் அவ்விடத்தை விட்டு நீங்கினான்.
நிகழ்ச்சியை இவள் தொகுத்து வழங்க விழா இனிதே ஆரம்பித்தது.இவளர செல்லும் இடமெல்லாம் அவன் பார்வைகள் தொடர,ஒருகட்டத்தில் தாங்க முடியாதவள் அவன் கண்களில் படாமல் மறைந்துக் கொள்ள,
அதுவரை இவளை பார்த்துக் கொண்டிருந்தவன் இவளின் கண்ணாமூச்சி ஆட்டத்தில் சுவரசியமாகி அவளை கண்களால் தேட ஆரம்பித்தான்.
அவனது தேடலை கண்டு கொண்டவளுக்கு வெட்கம் மேலிட உதடுகளில் வெட்கப் புன்னகை .
நிகழ்ச்சியில் இடையில் மாணவர்களுக்கு பிரேக் கொடுக்கப்பட,அவனின் கண்களில் சிக்காமல் நழுவி தனது தோழிகளுடன் ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டாள்.தன்னை பிரஸ் செய்து விட்டு வெளஇயே வந்தவள் தோழிகளுக்காக காத்திருந்த சமயம்,
ஹேய், மது என்ன டி ஜெகதீஸ் உன்ன இப்புடி விழுந்து விழுந்து கவனிக்கிறான்,என்ன ரெண்டுப் பேரும் லவ்வ செல்லிக்கிட்டிங்களா,
ம்ப்ச் நீ வேற ஏண்டி அவன் இன்னும் ஏன்ட சொல்லவேயில்ல ஆனா பாத்து பாத்து கவனிக்கிறான்,
அவன் சொல்லலனா என்ன நீ சொல்ல வேண்டியது தான,
சொல்லலாம் தான் பட் அவன் ஏற்கனவே ஸ்கூல்ல ஒன்சைட் லவ் இருந்துச்சுன்னு சொன்னான்ல நான் சொல்லி அவன் வேண்டாம் னு சொல்லிட்டான என்னால தாண்க முடியுமா???
அடியே மது அது சும்மா அட்ராக்சன் டி அவள எல்லாம் அவன் லவ் பண்ணியிருக்க மாட்டான் இப்ப அவன் மைன்ட்ல அவள் இருக்க மாட்டாள்,
நீ தான் அவனுக்கு ஏத்த ஜோடி முத உன் லவ்வ சொல்லு அக்சப்ட் பண்ணாம இருந்த நாங்க விட்டுடுவோமா அவன் உன்ன கேர் பண்றதுலயே தெரியலையே அவனுக்கம் உன் மேல் லவ் இருக்கான்னு,நீ கட்டதயும் பத்தி யோசிக்காமா வாப் போகலாம் என அவரகள் இதயாவை தாண்டிச் செல்ல,
இது என்னுடைய இரண்டாவது கதை
"என்ன மறந்தப் பொழுதும் நான் உன்ன மறக்கவில்லையே "
முழுக் கதையும் பதிந்து விட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள். ,
ஹலோ,ஹாய்,வந்தனம்,வணக்கம், நீங்கள் கேட்டுக்கொண்டு இருப்பது கொடைக்கானல் எப்.எம் 100.5 ல் நேயர்களின் விருப்பம் இது நம்ம ஊரு சேனல்,
இதோ அடுத்த ஒரு நேயரின் விருப்பப் பாடல் இத்தோடு நிகழ்ச்சி முடிவடைகிறது மீண்டும் நாளை உங்களை சந்திக்க வருகிறேன் உங்கள் ஆர்.ஜே நிஷா இப்பொழுது பாடலைக் கேட்டு மகிழவும்,
" என்ன மறந்தப் பொழுதும் நான் உன்ன மறக்கவில்லையே "
என்ற வரிகள் வானொலியில் ஒலித்த சமயம்,தன்னுடைய பேக்கில் பள்ளி செல்வதற்காக தேவையான பொருட்களை எடுத்துக் வைத்து கொண்டிருந்த இதயாவின் கைகள் அந்தரத்தில் நினறு விட்டன.
பாடலின் வரிகள் இவளது செவிகளை வந்தடைய ,கல்லென சமைந்து விட்டாள்.
எத்தனை உண்மையான வரிகள் அவள் மனதில் உள்ளவற்றையல்லவா இப்பாடல் உணர்த்துகிறது. அடுத்த அடுத்த வரிகள் வர வர கரங்கள் உணர்ச்சி வேகத்தில் நடுங்க ஆரம்பிக்க,நிற்க முடியாமல் தள்ளாடி தடுமாறி கட்டிலில் அமர்ந்தவள் தலைகளை இரு கைகளாலும் தாங்கிக் கொண்டாள்.
"கண்ணு உறங்கும் பொழுதும் உன் எண்ணம் உறங்கவில்லையே"
அவள் நிம்மதியாக உறங்கி தான் எத்தனை நாட்கள் ஆகின்றது,பகல் முழுவதும் தன்னை வேலையில் மூழ்கடித்துக் கொள்பவள் இரவில் கண் மூடி உறங்க முயற்ச்சித்தால் அவனது நினைவுகள் வந்து தூக்கத்தையல்லவா விரட்டு அடித்து விடுகிறது,
அவனின் நினைவுகளை மறக்க முடியாமல் கற்பனை உலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேனே,கனவு நனவாகாதுு என்று தெரிந்தும் ஏன் என்னுள் இத்தனை போராட்டங்கள்.
இப்பொழுதே வீட்டினில் வரன்கள் பார்க்க ஆரம்பித்து விட்டார்களே,அவர்களிடம் சொல்ல முடியுமா?? நான் கற்பனையில் ஒருவனோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன் என்று தாங்குவார்களா????????இந்த சமுதாயம் தான் ஏற்றுக் கொள்ளுமா?????
"உன்மேல ஆசைவச்சு உள்ளுக்குள்ள பாசம்வச்சு ஆளான அன்னக்கிளி நான்"
"பூமால கோத்துவச்சு போட ஒரு வேள வச்சு போடாமா காத்திருக்கேன் நான்"
அவனிற்காகதானே காத்துக் கொண்டிருக்கிறேன்,பூமாலை என்ன என் உயிரையே அவனிடம் தருவதற்காக மாலையாக என் மனதில் கோர்த்து வைத்திருக்கின்றேனே,
"வேண்டாத சாமி இல்ல வேற வழி தோணவில்ல
ஏங்காம ஏங்கி நின்னேன் நான்"
தன் இஷ்ட தெய்வமான முருகனிடம் எத்தனை முறை வேண்டியிருப்பால் அவன் வர வேண்டும் என்று,இதோ இப்பொழுது கூட ஏங்கிக் கொண்டிருக்கிறேனே,என்னால் வேறு என்ன செய்ய முடியும் பெற்றவர்களை மீறி அவனை தேடிச் செல்ல முடியுமா??,இல்லை தன் மனதில் உள்ள காதலை தான் சொல்ல முடியாமா??இல்லையே!!!!!
"என் ராசாத்தி பக்கம் இருந்தால் இனி வேறெதும் தேவையில்லையே"
வருவானா??என்னைத் தேடி மீண்டும் வருவானா!!!வந்தவனை தான் என் வார்த்தைகளால் குத்தி கிழித்து விட்டேனே பின் எப்படி வருவான்.
தியா ரெடி ஆகிட்டியா ஸ்கூலுக்கு லேட் ஆகிடுச்சு தாயின் குரலில் நடப்புக்கு வந்தவள்,
தன் கண்ணீரை அவசரமாக துடைத்துக் கொண்டு "த்தோ வரேன் ம்மா" என குரல் கொடுத்தவள்,
கண்ணாடி முன் நின்று அழுத விழிகளை மறைப்பதற்காக கொஞ்சம் பவுடர் பூசிக் கொண்டவள் முகத்தை நார்மலாக வைத்துக் கொண்டாள்.
இல்லையென்றால் அவளது தாய் பத்மா கண்டுககொள்வாரோ!!
தியா என தாய் இருமுறை அழைக்க அவசரமாக அறையை விட்டு வந்தவள்,அவனின் நினைவுகளை ஒதுக்கி விட்டு சாப்பாட்டு மேஜை நோக்கி சென்றாள்.
சாப்பிட அமர்ந்தவளின் முன் சுட சுட அவளுக்கு பிடித்த நூடூல்ஸ்ஸூம்,பாஸ்தாவும் பரிமாற பட,
ம்மா என்னம்மா உனக்கு தான் இதுப் பிடிக்காதே சமைக்கவும் தெரியாதே பின்ன எப்புடி?????
உனக்குப் பிடிக்குமே அதான் பண்ணேண் யூ-டியூப் எதுக்கு இருக்கு அதுல பாத்து பண்ணேண் சரி நீ சாப்பிடு ஆறிடப் போகுது
ம்ம்ம் அம்மா,அப்பா எங்கம்மா
வந்துட்டேன் தியாம்மா பத்மா சீக்கிரம் எனக்கும் டிபன் எடுத்து வை மழை வர மாரி இருக்கு நான் தியாவ ஸ்கூல்ல விடுடு வரேன்,
ப்பா அதன் ஸ்கூட்டி இருக்குல
போற வழியில மழை வந்துருச்சுன்ன என பண்ணணுவ அப்பா கொண்டு வந்து விடுறேன்,
தந்தையின் பதிலில் ஜன்னல் வழியே வெளயே பார்க்க வானம் இருண்டிருந்தது மழை எந்நேரமும் பிடித்துக் கொள்ளும் என எண்ணியவள்,அமைதியாக சாப்பிட்டாள் ஆனாலும் அரை மணி நேர பயணத்தில் இருக்கும் பள்ளிக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா என எண்ணியவள் உதடுகளில் புன்னகை மலர்ந்தது.
விரைவாக சாப்பிட்டு முடித்தவள்,
ம்மா லன்ச் பேக் எங்கம்மா குடுங்க லேட் ஆகிடுச்சு
தியா நீ கிளம்பு அப்பா மதியம் கொண்டு வந்து தருவாரு
ஏன்ம்மா???
மதியம் பிரியாணி செஞ்சு சூடா கொடுத்துவிடுறேன் இப்ப கிளம்பு,
ஆனாலும்மா ஸ்கூல் இங்கன் இருக்கறதாலா நீயும் அப்பாவும் பண்ணுற அலும்பு தாங்கல
ஏன்ம்மா கஷ்டப்படுத்துகிறீங்க,அப்பா வேற அலையனும்,
போடி போக்கிரி இதுல என்ன கஷ்டம் உனக்கு புடிச்ச டிஸ்ஸூ சூடா இருந்த ஒரு வாய் அதிகமா சாப்பிடுவா,போ அப்பா வெயிட் பண்ணுறாரு
என்னம்மோ போங்க Lkg பிள்ள மாதிரி நடத்துறீங்க என்றவள் வெளியே வந்த செப்பலை தேட,
தியாம்மா இங்க இருக்குப் பாரு அப்பா எடுத்து வச்சிருக்கேன் என்று அவர் காட்டிய திசையில் காலணிகள் கழுவி வைக்கப்பட்டிருக்க,
ப்ப்ப்பபாாா.....,என சிணுங்கியவள் வண்டியில் அமர,பள்ளியை நோக்கி வண்டியை செலுத்தினார் வாசு.
வாசு-பத்மா ஆகியோரின் செல்லப் புதல்வி இதயா.வாசு கவர்மென்ட் பணியில் இருந்து தற்போது ரிடையர்மென்ட்டில் இருப்பவர்,பத்மா இல்லத் தலைவி அளவான அன்பான அழகான குடும்பம்,
வாசுவின் உடன் பிறப்புகள் சென்னையில் இருக்க,இவர் மட்டும் வேலையின் காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் செட்டில் ஆகி விட்டார்.
இதயாவின் விரும்பம் படி இங்கயே தங்கி விட்டனர்.
பயணம் செய்து கொண்டிருந்த இதயாவுக்கு சற்று முன் வீட்டில் நடந்தவை நினைவு வர உதடுகளில் தானாக முறுவல்,
இவையாவும் அவள் மேல் உள்ள அன்பில் வெளிப்படல்லா,தனக்காக மட்டுமே இருவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
தனக்கு காய்ச்ல் வந்தால் தன்னை விட இவரகள் அல்லவா துடித்துப் போய் விடுகின்றனர்.என்னோடு சேர்ந்து மூன்று நாட்கள்இவர்களும் உண்ணாமல் வெறும் கஞ்சி மட்டும் குடித்தார்களே,
ஏன்??என்று கேட்டதற்கு தவமிருந்து பெற்ற பிள்ளை காய்ச்சலில் படுத்திருக்கும் போது தாங்கள் எப்படி வாய்க்கு ருசியாக சாப்பிடுவது என கேட்டவர்கள் தானே இவர்கள்,
பெற்றவர்களை இழந்து வாழும் குழந்தைகளின் மத்தியில் எனக்கு கிடைத்திருப்பது பொக்கிஷம் அல்லவா??
அவர்கள் தன்னிடம் கேட்டது ஒன்றே ஒன்று தானே அவர்கள் மாப்பிள்ளை பார்த்து ஊர் மெச்ச கல்யாணம் செய்ய வேண்டும் என்பது தானே அதுதானே அனைத்து பெற்றவர்களின் ஆசையும் கூட,
பார்க்கும் மாப்பிள்ளை தனக்கு பிடித்தால் மட்டுமே மேற்கொண்டு எல்லாம் என சொல்லுபவர்களிடம் வேண்டாம் என்று சொல்லி வேதனைப்படுத்த முடியுமா???
காதலா??பாசாமா??? எனப் பார்க்கும் போது பாசத்தின் பக்கம் தானே மனது சாய்கிறது,எனவே சரி என்று விட்டாள்.
நினைவுகளில் இருந்தவளை கலைந்தது வாசுவின் குரல் அவரது கேள்விகளுக்கு பதில் அளித்தவள்,பள்ளி வந்தவிட,இறங்கினாள்.
சரிடா,போயிட்டு வா அப்பா மதியம் வரேன் என்றுவிட்டு கிளம்பினர்.
பள்ளி வளாகத்தில் நுழைந்தவளை மாணவர்கள் விஷ் செய்ய பதிலுக்கு விஷ் செய்தவள் ஸ்டாப் ரூம் சென்றாள்.
இதயா,உனக்க பஸ்ட்ட் ப்பீரியட்(first period)3rd கிளாஸ் A செக்ஷன் இருக்கு என்ற மயூரிய பார்த்து சிரித்தவள் தாங்க்ஸ் சொல்லிவிட்டு,
தேவையான புத்தகங்கள் எடுத்துக் கொண்டு தனது வகுப்பு நோக்கி நடந்தாள்.
இதயா இப்பள்ளியிள் வேலைக்கு சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப் போகிறது,சக ஆசிரியைகளிடம் நன்றாக பேசினாலும் இவள் வயதுடைய மயூரியுடன் கொஞ்சம் நெருக்கம் அதிகம்.
"டிரிங் டிரிங்" மத்திய உணவுக்கான பள்ளி மணி அடிக்க,தான் எடுத்துக் கொண்டிருந்த வகுப்பை முடித்தவள்,
ஓகே,ஸ்டூடன்ஸ் மீதிய மண்ட்(Monday)பாக்கலாம் டூ டேஸ் லீவ் நல்லா என்ஜாய் பண்ணுங்க ,
தாங்க் யூ மிஸ்,
தாஙக் யூ என்று விட்டு வெளியே வந்தவள் எதிர்ப்பபட்ட பிஃயூனை,அழைத்தாள்
கந்தச்சாமி அண்ணா,அப்பா லன்ஜ் கொண்டு வந்திருப்பாரு கொஞ்சம் வாங்கிட்டு வரீங்களா எனத் தயங்கி கேட்க,
அட எதுக்கு மிஸ் தயங்குறீங்க,நான் போய் வாங்கிட்டு வரேன் நீங்க போங்க,
தாங்க்ஸ் அண்ணா என்றுரைத்துவிட்டு நடந்தாள்.
அவளுக்குமே இஷ்டமில்லை அவரை வேலை வாங்க வேறு வழி இருக்கவில்லை,காலையிலிருந்து தொடர்ச்சியாக வகுப்புகளுக்கு சென்று கொண்டிருக்கிறாள்.
சக ஆசிரியை அவசர விடுப்பு என்பதால் இவளின் ப்பீரி ப்பீரியட்டும் கட்டாகியது இன்னும் மதியம் நான்கு வகுப்புகள் இருந்தன,நினைக்க நினைக்க மலைப்பாய் இருந்தது.
பிஃயூன் கொண்டு வந்த உணவை வாங்கிக் கொண்டவள் மயூரியுடன் சாப்பிட.அமர,
ம்ம்ம்ம கொடுத்து வச்சவதான் நீ மழைக்கு சூடா பிரியாணி என்ற மயூரி அதனை வாசம் பிடிக்க
உன்னோட பாக்ஸ்ஸ மூடி வை உனக்கும் சேர்த்து தான் அம்மா குடுத்துவிட்டுருக்காங்க,
அப்பச் சரி என்ற மயூரி பிரியாணி யை ஒரு பிடி பிடித்தாள்.பேச்சும் சிரிப்புமாக லன்ஜ் பிரேக் முடிந்து அடுத்தடுத்த வகுப்புகளுக்கு நிற்க நேரமின்றி சிட்டாக பறந்திருந்தினர்.
ஒரு வழியாக பள்ளி முடித்தும் மாணவர்கள் சந்தோஷமாக வெளியேற,அவர்களுக்கு குறையாத சந்தோஷத்துடன் மயூரியும்,இதயாவும் வந்தனர்.
தந்தை கண்ட இதயா மயூரியிடம் விடைப் பெற்றுக் கொண்டு வீட்டிற்கு பயணமானால்.
சற்றே இதமான மனநிலையுடன் சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தவளின் பட்டது அப்பெயர்ப் பலகை,
"ஜெகதீஸ்வரன் மோட்டார்ஸ்"
அதனை கண்டவளின் பார்வை நிலைகுத்த,அத்தனை நேரம் இருந்த இதமான மனநிலை மாறியது.
"ஜெகதீஸ்"என்று முணுமுணுத்தவளின் கண்கள் குபுக்கென கண்ணீரை பொழிய,தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவளின் மனம் முழுவதும் வேதனை நிரம்பியது.
குழப்பமான மனநிலையுடன் வீட்டிற்குள் நுழைந்தவளை கண்ட பத்மா,
என்னாச்சு டி ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்கா,அன்னையின் கேள்வியில் சுதாரித்துக் கொண்டவள்,
ஆங்ங்ங்ங்.......ஒன்னும் இல்லம்மா கால் வலிக்குது இன்னைக்கு புல்லா கிளாஸ் போனேன் மா அதான் வேற ஒன்னுமில்ல,
சரி நீ போய் பிரஸ் ஆகிட்டு வா
சரி ம்மா என்றவள் அறைக்குள் புகுந்துக் கொண்டு பிரஸ்ஸாகி வந்தவளிடம்,பத்மா டீ யை நீட்ட
அதனை வாங்கியவள் அங்கிருந்த ஷோபாவில் அமர்ந்து டீபாயில் காலை துக்கி வைத்தவள் ஒரு மிடறு பருக,
சற்று முன் பார்த்த பெயர்ப் பலகையும்,அதனை தொடர்ந்து அதன் நினைவுகளும் வர,அதற்கு மேல் டீயை குடிக்காமல் வைத்தவள்,
ஷோபாவில் தலை சாய அதற்காகவே காத்திருந்தது போல் அவளது கண்ணங்களில் கண்ணீர் வழிந்தோடியது,
ஏன் முருகா!எனக்கு இந்த சோதனை ஆசைப்பட்டத மறக்கவும் முடியல வெளிய சொல்லவும் முடியல உள்ளுக்குள்ளயே வச்சி மருகிறேனே,என புலம்பிக் கொண்டிருந்தவளின் பாதத்தில் ஏதோ படும் உணர்வு தோன்ற நிமிர்ந்து பார்த்தாள்,
வாசு தனது மகளின் பாதத்திற்கு ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தார்,மகள் கால் வலி என சொல்லியதை கேட்டவர் அவள் பிரஸ்ஸாகி வரும் வரை காத்திருந்து ஒத்தடன் கொடுக்கலானார்.
அவரது கரிசனத்தில் மனம் வெதும்ப,
ப்பா நீங்க ஏன்ப்பா இதெல்லாம் பண்ணுறீங்க,விடுங்க
காலை ஆட்டதடா கொஞ்சம் நேரம் வலி குறஞ்சிடுமும் என்றவர் அவளைப் பார்க்க,
அவளின் கண்ணீரை கண்டு பதறியவர்,என்னாச்சு டா ரொம்ப வலிக்குது,
ஆமாப்பா ரொம்ப வலிக்குது என அவள் மனதின் வலியைக் கூற,
பத்மா அந்த தைலத்த கொஞ்சம் சீக்கிரம் எடுத்துட்டு வாயேன் என சப்தமிட,
என்னாச்சு ஏன் இப்புடி சத்தம் போடுறீங்க கிச்சன்ல தான இருக்கேன் என்றவர்,மகளிற்கு கொடுத்த டீ அப்படியோ இருக்கவும்
ஏண்டி டீ குடிக்கல பாரு ஆறிப் போயிடுச்சு என்றவர் அவளது அழுத விழிகளை கண்டு விட்டு,
ஏண் தியா அழுகுற,என அவளது கண்ணீரை தன் புடவையால் துடைத்தப்படி கேட்க,
கால் வலி அதிகமாகிடுச்சுப் போல அந்த தைலத்த கொடு என வாங்கியவர் அவளது பாதம் முழுவதும் நன்றாக மசாஜ் செய்து விட கால் வலி மட்டுமல்ல மன வலியும் சற்றி குறைவதுப் போல் இருந்தது.
இப்புடி பார்த்து பார்த்து செய்பவர்களிடம் தன் காதலை சொல்லி வேதனைப்படுத்த முடியுமா??
அவளுக்கு தனிமை தேவைப்பட,
ப்பா நா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துகிறேன் ப்பா,
கொஞ்ச நேரம் இரேன் டி நைட்டு சாப்பிட்டு படுப்ப,
இல்லம்மா எனக்கு ஏதும் வேண்டாம்,
வெறும் வயித்தோட படுப்பிய,
பத்மா அவ தான் வேண்டாம்னு சொல்லுறால விடு,நீ போய் ரெஸ்ட் எடுடா அதுக்கு முன்னாடி ஒரு கிளாஸ் பால் குடிச்சிட்டு படு
சரிப்பா..........
பாலை அருந்திவிட்டு கட்டிலில் வந்து விழுந்தவளின் கண்கள் அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீரை கொட்டின,
மனதின் ஓரத்தில் காலையிலிருந்து வலுக்கட்டாயமாக மறைத்து வைத்திருந்த அவனது நினைவுகள் மெல்ல மேழெம்ப அதனை காண பிடிக்காத அவள் திரும்ப மனதின் ஆழத்தில் புதைக்கப் பார்க்க,உன் பேச்சை கேட்பேனா என மனம் அடம்பிடிக்க,
மனதுடன் போராடியவள் தாங்க முடியாத வேதனையில் விருட்டென்று கட்டிலில் இருந்து எழுந்து தன் அம்மா கேட்பதற்காக தனது செல்லில் பதிந்துவைத்திருந்த 80's,90's பாடல்களை ஒலிக்க விட்டவள் ஹெட் போனுடன் கட்டிலில் அமர்ந்து கண் மூட,
அடுத்தடுத்த கேட்ட பாடல்களில் மனம் சற்றே இளைப்பாறியது,இளையராஜா பாடல்கள் இரவின் தனிமையில் கேட்பது சுகமல்லவா!!!
பாடல்களைக் கேட்டுக் கொண்டே கண்யரப் போனவளின் தூக்கம் அடுத்த பாடலில் பறந்தோடிற்று,
"கான கருங் குயிலே காதல் ஓர் பாவமடி
காதல் களத்தினிலே கண்ணீர் தான் லாபமடி
ஆசை உண்டானது அதில் வீடு ரெண்டானது"................
எதிரேயிருந்த சுவற்றை வெறித்தவளின் மனம் கடந்த கால நினைவுகளை அசைப் போட்டது அவளின் அனுமதியின்றி.
அந்த இருபாலர் படிக்கும் பள்ளியின் முன் தந்நையுடன் இறங்கினாள் பதின் வயது இதயா,இன்று அவளிற்கு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, தேர்வு எழுதுவதற்காக இங்கே வந்திருந்தாள்.
இதுவரை பெண்கள் பள்ளியில் மட்டுமே படித்தவளுக்கு இங்க வந்திருப்பது சற்பே படபடப்பாக இருந்தது,மனம் பட்டாம்பூச்சியை அடித்துக் கொண்டது,அடுத்து தந்தை உறுதியாக சொல்லி விட்டார் மேற்படிப்புக்கு இஙகு தான் சேர வேண்டும் என்று, அவளின் கூச்ச சுபாவத்தை போக்குவதற்காக எடுத்த முடிவு இது.
தியாம்மா எக்ஸாம் நல்லப்படியா எழுதனும் ஆல் த பெஸ்ட் தந்நையின் வாழ்த்தில் மகிழ்ந்தவள்,
தாங்கஸ்ப்பா என்றுவிட்டு தனது தோழிகள் கூட்டத்தை நோக்கி சென்றவள் அவர்களுடன் ஐக்கியமாகி விட்டாள்.
அன்றைய தினத்தை தொடர்ந்து வந்த தேர்வை நன்றாக எழுத இதோ அதோ என்று கடைசி தேர்வும் வந்தது,
எப்போதும் போல் ஹாலில் சென்றமர்ந்தவளுக்கு தன்னை யாரோ உற்று நோக்குவது போல் இருக்க சட்டென்று பக்கவாட்டில் திரும்ப,
அதுவரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் இவள் திரும்பியதும் டக்கென திரும்பி கொண்டாள்,
என்னடா இது என்பது போல் புருவங்களை சுருக்கியவள் பின் சூப்பர்வைசர் வரவும் இதனை மறந்துவிட்டு தேர்வு எழுத ஆரம்பித்தாள்.
ஒரு வழி தேர்வை எழுதி முடித்து வெளியே வந்தவள் தன்னுடைய பொருட்களை சேகரித்துக் கொண்டு தன் தோழிகளை நோக்கி செல்ல,
மீண்டும் அதே துளைக்கும் உணர்வு,திரும்பி பார்த்தவள் திகைத்தாள், அங்கே சற்று முன் ஹாலில் கண்டவன் இவளைப் பார்த்துக் கொண்டிருக்க, அதனை அசட்டை செய்தவள் மேலும் அதைப் பற்றி சிந்திக்காது சென்றுவிட்டாள்.
பத்து நாட்கள் கழித்து ஊர் தி்ருவிழா வர வாசுவின் உடன் பிறப்புகள் ஊரிலிருந்து வந்திருந்தனர்,தன் அக்கா தங்கைகைகளுடன் நன்றாக ஊர் சுற்றியவள் அன்று இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தவள் எதேர்ச்சையாக திரும்ப,
மின்சாரம் தாக்கியது போல் அதிர்ந்தாள்,ஏனெனில் அங்கு ஒருவன் இவளையே பார்த்துக் கொண்டிருக்க யாரென்று தெரியாது புருவங்களை சுருக்கியவள் பின் டக்கென திரும்பிக் கொண்டாள்.
இவன் ஸ்கூல்ல பார்த்தவனாச்சே இங்க வந்திருக்கான் இந்த ஊரா,இவன் என்னைய தான் பாக்குறானா இல்ல வேற யாரையாச்சுமா என யோசித்தவள் சற்றே தன்னை மறைத்தவாறு அமர்ந்துக் கொண்டு அவனைப் பார்க்க அவன் பார்வையில் மாற்றமில்லை,
மனம் படபடக்க திரும்பி கொண்டவளுக்கு உறுதியாயிற்று அவன் தன்னைத்தான் பார்க்கிறான் என்று,
இதயம் படபடவென அடித்துக் கொள்ள இனம் புரியா உணர்வு ஒன்று ஏற்பட்டது.அவனை ஓரக்கண்ணால் பார்க்க விடாது இவளை பார்த்துக் கொண்டிருக்க,
இவள் கன்னங்கள் செம்மையை பூசிக் கொண்டன,தந்தையின் குரலில் நடப்பு உலகுக்கு வந்தவள் அதிர்ந்து விட்டாள்.
என்ன காரியம் செய்துக் கொண்டிருக்கிறேன் நான்,இன்னும் நான் வாழ்க்கையில் சாதிக்க வேண்டியவை எவ்வளோ இருக்க அதற்குள் இத்தகைய உணர்ச்சிகளுக்கு நான் அடிபணியலாமா என தன்னைத் தானே திட்டிக் கொண்டவள் சடுதியில் அந்த உணர்வுகளஇல் இருன்து வெளிவந்தவள் அதற்கு பிறகு அவன் இருக்கும் திசைபக்கம் திரும்பவில்லை,
தேர்வு முடிவுகள் வெளியாகி இதயா அப்பள்ளியில் பையாலஜி குரூப் எடுத்து சேர்ந்து விட்டாள்,முதல் நாள் பள்ளியில் மாணவர்களை அவரவர் குரூப் வாரியாக பிரிக்க அப்பொழுது அறிந்துக் கொண்டாள்,
அவனின் பெயர் "ஜெகதீஸ்வரன்" கம்பூயூட்டர் சைன்ஸ் குரூப் எடுத்திருக்கான் என்று,
அதன் பின் வாழ்க்கை பள்ளி வீடு என சென்றது,இதற்கிடையில் அவனின் காதல் பார்வைகளும் தொடர அதனை அசட்டை செய்து விட்டாள்.
பள்ளி இறுதி ஆண்டில் இருக்கும் பொழுது அவனது நண்பர்கள் அவனின் காதலுக்கு தூது வர,
அவர்களிடம் தனக்கு இதில் விருப்பம் இல்லை தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என அடித்துக் கூறிவிட்டாள்,அதன் பின்னும் அவனது காதல் பார்வைகள் தொடர அலட்சியம் செய்தவள் தன் படிப்பில் கவனம் செலுத்தினாள்.
முகத்தில் பட்ட வெளிச்சத்தில் பண் விழித்த இதயா மணி பார்க்க எட்டு,விடுமுறை தினம் என்பதால் சற்று தாமதமாகவே எழுந்து சோம்பல் முறிந்தவள்,மொபைலை பார்க்க அது தன் உயிரை விட்டிருந்தது,
அப்பொழுது தான் நேற்று இரவு பாடலை கேட்டுக் கொண்டு நினைவுகளினஎ தாக்கத்தில் உறங்கியது புரிந்தது,
புத்துணர்ச்சியுடன் விடியலை எதிர்க் கொண்டவள் மொபைலை ஜார்ஜ் போட்டுவிட்டு குளிக்கச் சென்றாள்.
குளித்து முடித்து வெளியே வந்தவளை எதிர்க் கொண்ட வாசு,
இப்ப எப்படி இருக்குமா கால்வலி,
ம்ம்ம்ம் பரவாயில்லப்பா
சமையலையிருந்து வெளிப்பட்ட பத்மா இவளிடம் டீயை கொடுத்துவிட்டு மீண்டும் சமையலறைக்குள் நுழைந்துக் கொண்டார்.
தந்தையிடமிருந்து ரிமோட்டைக் கைப்பற்றியவள் பாட்டுத் சேனலுக்கு தாவ,
சிறு சிரிப்புடன் அவளிடம் ரிமோட்டை விட்டுக்கொடுத்தவர் அன்றைய தினசரியில் மூழ்கி விட்டார்.
கல்லூரி பாடல்கள் என ஒரு பாட்டு சேனல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருந்தது.அந்நிகழ்ச்சியில் நேயர்கள் தங்களது கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்துக் கொண்டனர்.
அதைக் கேட்டவளின் மும் மென்னையுற தனது கல்லூரி காலத்தை அசைப்போட்டாள் அங்குதானே அவனை இரண்டாவது முறையாக சந்தித்தாள்.
மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் B.A(English)ஆங்கிலம் தேர்வு செய்திருந்தாள்.
புதுத் தோழிகளின் நட்சு கல்லூரி காலட்டாக்கள் என இனிமையாக நாட்கள் நகர்ந்துக் கொண்டிருந்தன,
கல்லூரி 2 ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தசமயம்,இவர்களது துறை சார்பில் கல்ச்சரல் இவன்ட் நடத்தப்பட்டது,
அனைத்து கல்லூரி மாணவர்களும் வந்து கலந்து கொண்டனர்,
நிகழ்ச்சி அன்று தோழிகள் கூட்டம் ஓரே மாதிரியான புடவை உடுத்தி வந்திருக்க,
இவளுக்கு பெயர்களை ரிஜிஸ்டர் செய்யும் கமிட்டியில் வேலை,வரிசையில் நின்ற மாணவர்களின் பெயர் மற்றும் அவர்களின் கல்லூரி பெயர்களை குறித்துக் கொண்டிருந்தாள், எழுதுவதற்கு தோதாக சற்று குனிந்து அமர்ந்திருந்தவள்,
அடுத்து வரிசையில் நின்ற மாணவனிடம்,
உங்க நேம் சொல்லுங்க, என்க
"ஜெகதீஸ்வரன் பிஃரம் ஜே.கே காலேஜ்"
என்ற பெயரை கேட்ட நொடி உடல் தூக்கி வரி போட, இது இது அவனுடைய பெயராச்சே வந்துருக்குறது அவனா???என அதிர்ந்தவள்,
நிமிர்ந்து பாரக்க,தன் இரு கைகளையும் போன்ட் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு இவளை விழிகளில் கூர்மையுடன் ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
பார்த்த நொடி நெஞ்சம் படபடக்க,தலையை குனிந்துக் கொண்டவள் நடுங்கும் விரல்களை கட்டுக்குள் கொண்டு வந்து அவனின் பெயரை எழுதி முடித்தவள்,அதனை அவனிடம் நீட்ட,
அதனை பெற்றுக் கொள்ள முயன்றப் போது இருவரது விரல்களும் ஒரு நொடி உரச,மின்சாரம் தாக்கியது போல் தன் கைகளை விருட்டென்று உருவிக் கொண்டாள்,
அவளை உறுத்து விழித்தவன்,தன் நண்பர்களுடன் அவ்விடத்தை விட்டு நீங்கினான்.
நிகழ்ச்சியை இவள் தொகுத்து வழங்க விழா இனிதே ஆரம்பித்தது.இவளர செல்லும் இடமெல்லாம் அவன் பார்வைகள் தொடர,ஒருகட்டத்தில் தாங்க முடியாதவள் அவன் கண்களில் படாமல் மறைந்துக் கொள்ள,
அதுவரை இவளை பார்த்துக் கொண்டிருந்தவன் இவளின் கண்ணாமூச்சி ஆட்டத்தில் சுவரசியமாகி அவளை கண்களால் தேட ஆரம்பித்தான்.
அவனது தேடலை கண்டு கொண்டவளுக்கு வெட்கம் மேலிட உதடுகளில் வெட்கப் புன்னகை .
நிகழ்ச்சியில் இடையில் மாணவர்களுக்கு பிரேக் கொடுக்கப்பட,அவனின் கண்களில் சிக்காமல் நழுவி தனது தோழிகளுடன் ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டாள்.தன்னை பிரஸ் செய்து விட்டு வெளஇயே வந்தவள் தோழிகளுக்காக காத்திருந்த சமயம்,
ஹேய், மது என்ன டி ஜெகதீஸ் உன்ன இப்புடி விழுந்து விழுந்து கவனிக்கிறான்,என்ன ரெண்டுப் பேரும் லவ்வ செல்லிக்கிட்டிங்களா,
ம்ப்ச் நீ வேற ஏண்டி அவன் இன்னும் ஏன்ட சொல்லவேயில்ல ஆனா பாத்து பாத்து கவனிக்கிறான்,
அவன் சொல்லலனா என்ன நீ சொல்ல வேண்டியது தான,
சொல்லலாம் தான் பட் அவன் ஏற்கனவே ஸ்கூல்ல ஒன்சைட் லவ் இருந்துச்சுன்னு சொன்னான்ல நான் சொல்லி அவன் வேண்டாம் னு சொல்லிட்டான என்னால தாண்க முடியுமா???
அடியே மது அது சும்மா அட்ராக்சன் டி அவள எல்லாம் அவன் லவ் பண்ணியிருக்க மாட்டான் இப்ப அவன் மைன்ட்ல அவள் இருக்க மாட்டாள்,
நீ தான் அவனுக்கு ஏத்த ஜோடி முத உன் லவ்வ சொல்லு அக்சப்ட் பண்ணாம இருந்த நாங்க விட்டுடுவோமா அவன் உன்ன கேர் பண்றதுலயே தெரியலையே அவனுக்கம் உன் மேல் லவ் இருக்கான்னு,நீ கட்டதயும் பத்தி யோசிக்காமா வாப் போகலாம் என அவரகள் இதயாவை தாண்டிச் செல்ல,