Kani novels
Member
- Messages
- 45
- Reaction score
- 38
- Points
- 18
நிசப்தா - 8
ஒரு மாதம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் திகழொளி சாரலின் வாழ்க்கை தெளிந்த நீரோடை போல சுமுகமாக அமைதியாக சென்றது...
அப்போது ஓர் நாள் மாலையில் எப்போதும் போல வெள்ளி கிழமை அன்று வழமையாக வரும் பெருமாள் கோவிலுக்கு வந்து இருந்தாள் சாரல்... அவளோடு சேர்ந்து கயலும் கோவிலுக்கு வந்திருந்தாள் கயல்...
இருவரும் பெருமாளை சேவித்து விட்டு... கோவில் பிரகாரத்தை சுற்றிக் கொண்டு இருந்தனர்...
அப்போது... "சாரலு சாரலு..." என்று கத்திக் கொண்டு இருந்தாள் கயல்...
அவளும் கோவிலை சுற்றி கொண்டே... "ம்ம்... என்ன டி..." என்றாள் சாரல்...
"அடியே கால் வலிக்குது டி... உனக்கு இவ்வளவு பெரிய கோவிலை ஒரு சுற்று சுற்றினால் போதாதா... மூணு சுற்றா சுற்றனும்... அவ்வ்... முடியலை டா சாமி..." என்று சொல்லி பெருமூச்சு விட்டாள் கயல்...
"ஷ்ஷ்ஷ்... வாயை மூடு... இன்னும் ஒரு சுற்று தான்... அப்பறம்..." என்று சாரல் சொல்லி முடிக்கும் முன்னரே...
"அப்பறம்... சுட சுட வெண் பொங்கல் இல்லாட்டி சக்கரை பொங்கல் பிரசாதமாக கொடுப்பாங்க... செமயா இருக்கும்... அதை வாங்கி வாயிறு நிறையாட்டியும்... வாய்க்கு ருசியாக கொஞ்சமாக சாப்பிடலாம் சாரல்..." என்று வாயெல்லாம் பல்லாக சொன்னாள் கயல்...
"அப்போ நீ இதுக்கு தான் கோவிலுக்கு வரேன்னு ஆர்வமா வந்தீயா..." என்று சிரித்துக் கொண்டே... சந்தேகமாக கேட்டாள் சாரல்...
"அதே அதே... என் அய்மாவை ஏதாவது செய்து தர சொன்னேன்... ஆனால்... இந்த அம்மா என்னை பார்த்து... உனக்கு எப்ப பார்த்தாலும் திங்கறது மட்டும் தான் பொழப்பா அப்படின்னு கேட்டு... கேவலமாக ஒரு லுக்கு விட்டாங்க... அதில் என் பிஞ்சு மனசு அப்படியே புண்ணாக்கு... ச்சீ... புண்ணா போச்சு சாரலு... அதான் உன்னை தேடி இங்க வந்து... நம்ம ஐயர் தாத்தா கிட்ட இன்னைக்கு என்ன மெனு என்று கேட்டா... அவரும் அதே லுக் விட்டார்... அதனால்... நீ தான் எனக்கு சிபாரிசு பண்ணி பிரசாத்தை வாங்கி தரணும்..." என்று வராத கண்ணீரை துடைத்து கொண்டே சொன்னாள் கயல்...
சாரலுக்கு அவள் சொன்னது சிரிப்பு வர... "ஏய் போதும் டி... சிரிப்பு அடக்க முடியலை... நான் கொஞ்சம் சிரிச்சிக்கிறேன்... திட்டாதே கயலு..." என்று சொல்லி சிரித்தாள்...
"ஹ்ம்ம்... சிரி சிரி... யூ நோ... எப்ப பொழப்பை பார்த்தியா... எப்படி சிரிப்பா சிரிக்குது..." என்று சொல்லி கயலும் சாரலுடன் சேர்ந்து சிரித்தாள்...
"விடு டி செல்லம்... நான் உனக்கு இன்னொரு தொன்னை பிரசாதத்தை எக்ஸ்ட்ரா வாங்கி தரேன்..." என்று சாரல் சொல்ல...
"இது தான் உயிர் தோழிக்கு அழகு..." என்றாள் கயல்...
பிறகு... இருவரும் பிரகாரத்தை சுற்றி விட்டு... இன்றைய ஸ்பெஷல் வெண் பொங்கலை பிரசாதமாக வாங்கிக் கொண்டு ஓர் இடத்தில் சென்று இருவரும் அமர்ந்தனர்... ஹாஹா... சாரல் சொன்னது போலவே கயலுக்கு இன்னொன்று கூட வாங்கி கொடுத்தாள்...
கயல் பிரசாதத்தை சாப்பிட்டு முடித்து... ஒவ்வ் என்று ஏப்பம் விட்டாள்...
"ஹிஹி செம சூப்பரா இருந்தது..." என்று இளித்துக் கொண்டே சொன்னாள் கயல்... சாரல் அதற்கு பதில் சொல்லாமல் மென்னகை புரிந்தாள்...
பிறகு... "ஏண்டி சாரலு... இன்னுமா அந்த கேணை தேவி நடிப்பை கண்டியூ பண்ணுது..." என்றாள் அவள்...
சாரலோ ம்ம் என்று தலை அசைத்தாள்...
"இவ்வளவு நாளாக ஒரு வசை பாட்டையும் பாடாமல்... அமுக்குனி மாதிரி அமைதியாக இருக்குது என்றால்... அதற்குப் பின்னால் ஏதோ ஒரு பெரிய ஆப்பு கண்டிப்பா இருக்கும்... அது என்னன்னு ஏதாவது க்ளு (clue) கிடைச்சதா..." என்று கேட்டாள் கயல்...
"இல்லை..." என்று ஒற்றை பதிலையே கதறினாள் சாரல்...
"ஆமா... நம்ம ஸ்கூலில் ஒரு நாள் டூர் கூட்டிட்டு போறாங்களே... நீ வர தானே..." என்று கயல் கேட்க...
சாரலோ... "ம்ஹூம்... அனுப்பி வைக்க மாட்டாங்க கயல்..." என்றாள்...
"அனுப்பி வைப்பாங்க சாரலு..."
"இல்ல டி..."
"கண்டிப்பா அனுப்பி வைப்பாங்க..."
"எப்படி கயல்... நீ இவ்வளவு உறுதியாக சொல்ற..."
"உன் அம்மாவோட நடிப்பு அப்படி... அந்த நம்பிக்கையில் தான் நான் இவ்வளவு உறுதியாக சொல்றேன்..." என்று சொல்லி கண் அடித்தாள் கயல்...
"அப்படியா சொல்ற..." என்று சந்தேகமாக கேட்டாள் சாரல்...
"ஹ்ம்ம்... அப்படி தான்..." என்று சொன்னாள் கயல்...
"என்ன விட என் அம்மாவை பற்றி நல்லா தெரிந்து வச்சு இருக்க கயல்..." என்று சலிப்புடன் சொல்ல...
"அது எல்லாம் அப்படி தான்..." என்று சொல்லி நகைத்தாள் கயல்...
அந்த சிரிப்பில் கலந்து கொள்ள முடியாமல்... ஏதோ ஒரு யோசனையாகவே இருந்தாள் திகழொளி...
அவள் முகத்தை பார்த்த கயல்... 'ச்சேய்... இந்த புள்ள எதுக்கும் சரிப்பட்டு வராது... எப்படி தான் இவ அந்த கேணை தேவியை எதிர்த்து வாழப் போறாளோ...' என்று மனதில் எண்ணி கவலை கொண்டாள் சாரலின் நண்பி...
கயல் எழுந்துக் கொண்டு... சாரலின் கரம் பற்றி இழுத்தாள்...
"என்ன டி..." என்று சினுங்கினாள் சாரல்...
"வா வா... நல்ல விஷயத்தை எல்லாம் சீக்கிரம் பண்ணணும் சாரல்..." என்று சொல்லி அவளை இழுத்துக் கொண்டு சென்றாள் கயல்...
"கயல் எங்க போறோம் இப்ப..." என்று கேட்க
"ஹ்ம்ம்... உன் வீட்டுக்கு தான் சாரல்..." என்று சொல்லி சாரலின் வீட்டுக்கு அழைத்து போனாள் கயல்...
"ஆன்டி... ஆன்டி..." என்று கத்திக் கொண்டே உள்ளே சென்றாள் கயல்...
"அடியே பிரச்சனை பண்ணாமல் இரேன் டி..." என்று மெல்லிய குரலில் சொன்னாள் திகழொளி...
ஆனால் கயலோ அதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் இருக்க... உமாதேவி ஹாலுக்கு வந்தார்...
'இதுக்கு எப்பவும் கொழுப்பு மட்டும் குறையாது...' என்று மனதில் நினைத்து கொண்டார் உமா...
"என்ன கயல்..." என்று சிரித்துக் கொண்டே கேட்டார் உமா...
"ஆன்டிடிடிடி..." என்று இழுத்து சொன்னாள் கயல்...
அவளை முறைத்து பார்த்த உமாதேவி... "அடடா... கயலு... இந்த இங்கிலி பிசாசு எல்லாம் விட்டுட்டு... வாய் நிறைய சித்தின்னு கூப்பிடு மா..." என்று சொன்னார்...
அதை கேட்டு சாரலும் கயலும் முகத்தை அஷ்ட கோணல் ஆக்கினர்...
"ஏது இங்கிலி பிசாசா... எங்களுக்கு தெரியாமல் என்னது அது புதுசா... அப்படி ஒரு பிசாசை நாங்க இந்த ஊரில் கேள்வி பட்டதே இல்லயே..." என்று கூறினாள் கயல்...
"லூசு கயல்... அவங்க இங்கிலிஷை தான் அப்படி சொன்னாங்க..." என்று கயலின் காதில் மெதுவாக சொன்னாள் சாரல்...
அவர்களின் பேச்சை கவனிக்காமல்... "ஹாஹா..." என்று வாயெல்லாம் பல்லாக சிரித்த உமா... "அதான் ஏதோ படிக்கிறேன் படிக்கிறேன்னு சொல்வீங்களே அந்த இங்கிலி பிசாசு தான்..." என்று சொல்ல...
"ஓஹோ... இங்கிலிஷ் ஆஆஆ..." என்று கயல் கேட்க... உமாவும் டிங்கு டிங்குனு மண்டையை ஆட்டினார்... அதை பார்க்க சகிக்காமல் மானசீகமாக தலையில் அடித்து கொண்டாள் கயல்...
"சரி சரி ஆன்...." என்று ஆரம்பிக்கும் போதே... "சித்தி..." என்று அழுத்தமாக சொன்னார் உமா...
"ஹ்ம்ம்... சித்தி சித்தி... உன் கிட்ட ஒன்னு கேட்கணும் சித்தி... அதை நான் கேட்கவா சித்தி..." என்றாள் கயல்...
'என்ன வில்லங்கம் செய்ய போகுதோ...' என்று நினைத்தவர்... "கேளு மா..." என்றார்...
"நாளை மறுநாள் எங்க ஸ்கூலில் பன்னிரண்டாம் வகுப்பு பிள்ளைகளை மட்டும் டூர் கூட்டிட்டு போறாங்க..." என்று சொல்லி நிறுத்தியதும்...
"அதுக்கு..." என்று இழுத்தார் உமா...
"அதுக்கு போக ஐநூறு ரூபாய் வேணும்... அப்ப தான் கூட்டிட்டு போகணும்... நீங்க தானே என் சாரலோட பாசக்கார செல்ல அம்மா... அதான் நான் உன் கிட்ட கூட்டி வந்தேன்... ஆனால் பாருங்க சித்தி... உங்க அன்பு மக சாரலு... உங்களிடம் இதை சொல்ல ரொம்ப சங்கட படறா... சரின்னு தான் நான் கேட்கிறேன்... நீ வாடி ன்னு அழைச்சிட்டு வந்தேன்... நீங்க தான் அவளுக்கு காசு கொடுக்கணும்..." என்று உமாதேவியின் முக மாற்றத்தை பார்த்துக் கொண்டே சொல்லி முடித்தாள் கயல்...
'ம்ஹூம்... உமா எந்த கோபத்தையும் இப்ப வெளியே காட்டாதே... இவளுங்க போற போக்கிலே போ... அப்ப தான் எல்லாம் நல்லதா நடக்கும்... இவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிட்டா நான் நிம்மதியாக இருப்பேன்..' என்று மனதில் எண்ணி கொண்டார் உமா...
"அதுக்கு என்னமா கயல்... படிக்கும் பிள்ளைங்க... இது தானே கடைசி வருஷம்... நான் காசு கொடுக்கிறேன்... சாரல் டூருக்கு போய்ட்டு வரட்டும்... நீயும் அவளும் பார்த்து சூதானமா போய்ட்டு வாங்க... நான் உள்ளே போய் காசு எடுத்துட்டு வரேன் இருங்க..." என்று புன்னகையுடன் ஏற்றி இறக்கி சொன்ன உமாதேவி உள்ளே சென்றார்...
கயலோ... "பார்த்தியா... நான் கோடு போட்டால்... அவங்க டைல்ஸ் ரோடே போட்டு விடுறாங்க..." என்று சொல்ல... சாரல் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்...
அதன் பிறகு உமா காசை எடுத்து வந்து சாரலிடம் கொடுத்து விட்டு சென்றார்...
"இங்க பாரு பிரச்சனை வரும் போது வரட்டும்... அதை அப்ப பார்த்துக்கலாம் சரியா... இப்ப நடப்பில் கிடைப்பதை வச்சு... சந்தோஷம் இரு... மனசை போட்டு குழப்பிட்டு இருக்காதே டி... நீ தெம்பாக இருந்தால் தான் கேணை தேவியை எதிர்த்து போராட முடியும்... எப்பவும் முகத்தை சிரிப்போடு வச்சிக்கோ சாரலு... அப்படி உன்னை பார்த்தால் உனக்கே தைரியம் வரும் டி..." என்று நண்பிக்கு ஆறுதல் சொன்னார் கயல்...
அதை கேட்டு சிரித்த திகழொளி... "சரி டி பாட்டி... எனக்கு அறிவுரை சொன்னது எல்லாம் போதும்... வா நம்ம டூர் போக என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்..." என்று உற்சாகத்துடன் சொன்னாள்...
அதன் பிறகு இருவரும் சேர்ந்து கதை பேசிக் கொண்டு இருந்தனர்....
அவர்கள் பள்ளியில் சுற்றுலா செல்லும் நாளும் வர... அந்த இடத்தை எல்லாம் சந்தோஷமாக கண்டு களித்தனர்...
பின்னர்... பன்னிரண்டாம் வகுப்பின் பொது தேர்வு நாட்களும் நெருங்கி வர... கவனத்தை முழுவதுமாக அதில் திருப்பினாள் திகழொளி சாரல்...
அதனால் உமாவை நினைத்து பயம் கொள்வதை பற்றி எல்லாம் மறந்தே போனாள்... உமாவும் அவளை தொந்தரவு செய்யாமல் அவளுக்கு வேண்டியதை எல்லாம் செய்ய ஆரம்பித்தார்...
ஆகையால் நாட்கள் சுமுகமாக தான் நகர்ந்து சென்றது...
சாரலுக்கு செய்முறை தேர்வுகள் எல்லாம் முடிந்து... மாணவ மாணவிகள் தேர்வுக்கு படிக்க பள்ளியில் விடுமுறையும் விட்டனர்... நடுவே நடுவே ஏதாவது சிறப்பு வகுப்புகள் என்றால் மட்டுமே சென்று வருவாள்...
கொஞ்ச நாட்களில் பொது தேர்வுகளும் நடைபெற... அனைத்து பாடங்களையும் நன்கு படித்து... தேர்வுகளையும் சிறப்பாக எழுதி... எல்லா பரிட்சைகளையும் முடித்து விட்டாள் சாரல்...
அதன் பிறகான சில நாட்கள் அழகான விடுமுறையாக கழிந்து சென்றன... அவளுக்கு வரும் இன்னல்களை அறியாமல்... திகழொளி சாரலும் வீடு... கோவில்... கயல் என்று அந்த தினங்களை சுகமுடன் போக்கினாள்...
**************
உங்கள் பொன்னான கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்
👇👇👇👇
ஒரு மாதம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் திகழொளி சாரலின் வாழ்க்கை தெளிந்த நீரோடை போல சுமுகமாக அமைதியாக சென்றது...
அப்போது ஓர் நாள் மாலையில் எப்போதும் போல வெள்ளி கிழமை அன்று வழமையாக வரும் பெருமாள் கோவிலுக்கு வந்து இருந்தாள் சாரல்... அவளோடு சேர்ந்து கயலும் கோவிலுக்கு வந்திருந்தாள் கயல்...
இருவரும் பெருமாளை சேவித்து விட்டு... கோவில் பிரகாரத்தை சுற்றிக் கொண்டு இருந்தனர்...
அப்போது... "சாரலு சாரலு..." என்று கத்திக் கொண்டு இருந்தாள் கயல்...
அவளும் கோவிலை சுற்றி கொண்டே... "ம்ம்... என்ன டி..." என்றாள் சாரல்...
"அடியே கால் வலிக்குது டி... உனக்கு இவ்வளவு பெரிய கோவிலை ஒரு சுற்று சுற்றினால் போதாதா... மூணு சுற்றா சுற்றனும்... அவ்வ்... முடியலை டா சாமி..." என்று சொல்லி பெருமூச்சு விட்டாள் கயல்...
"ஷ்ஷ்ஷ்... வாயை மூடு... இன்னும் ஒரு சுற்று தான்... அப்பறம்..." என்று சாரல் சொல்லி முடிக்கும் முன்னரே...
"அப்பறம்... சுட சுட வெண் பொங்கல் இல்லாட்டி சக்கரை பொங்கல் பிரசாதமாக கொடுப்பாங்க... செமயா இருக்கும்... அதை வாங்கி வாயிறு நிறையாட்டியும்... வாய்க்கு ருசியாக கொஞ்சமாக சாப்பிடலாம் சாரல்..." என்று வாயெல்லாம் பல்லாக சொன்னாள் கயல்...
"அப்போ நீ இதுக்கு தான் கோவிலுக்கு வரேன்னு ஆர்வமா வந்தீயா..." என்று சிரித்துக் கொண்டே... சந்தேகமாக கேட்டாள் சாரல்...
"அதே அதே... என் அய்மாவை ஏதாவது செய்து தர சொன்னேன்... ஆனால்... இந்த அம்மா என்னை பார்த்து... உனக்கு எப்ப பார்த்தாலும் திங்கறது மட்டும் தான் பொழப்பா அப்படின்னு கேட்டு... கேவலமாக ஒரு லுக்கு விட்டாங்க... அதில் என் பிஞ்சு மனசு அப்படியே புண்ணாக்கு... ச்சீ... புண்ணா போச்சு சாரலு... அதான் உன்னை தேடி இங்க வந்து... நம்ம ஐயர் தாத்தா கிட்ட இன்னைக்கு என்ன மெனு என்று கேட்டா... அவரும் அதே லுக் விட்டார்... அதனால்... நீ தான் எனக்கு சிபாரிசு பண்ணி பிரசாத்தை வாங்கி தரணும்..." என்று வராத கண்ணீரை துடைத்து கொண்டே சொன்னாள் கயல்...
சாரலுக்கு அவள் சொன்னது சிரிப்பு வர... "ஏய் போதும் டி... சிரிப்பு அடக்க முடியலை... நான் கொஞ்சம் சிரிச்சிக்கிறேன்... திட்டாதே கயலு..." என்று சொல்லி சிரித்தாள்...
"ஹ்ம்ம்... சிரி சிரி... யூ நோ... எப்ப பொழப்பை பார்த்தியா... எப்படி சிரிப்பா சிரிக்குது..." என்று சொல்லி கயலும் சாரலுடன் சேர்ந்து சிரித்தாள்...
"விடு டி செல்லம்... நான் உனக்கு இன்னொரு தொன்னை பிரசாதத்தை எக்ஸ்ட்ரா வாங்கி தரேன்..." என்று சாரல் சொல்ல...
"இது தான் உயிர் தோழிக்கு அழகு..." என்றாள் கயல்...
பிறகு... இருவரும் பிரகாரத்தை சுற்றி விட்டு... இன்றைய ஸ்பெஷல் வெண் பொங்கலை பிரசாதமாக வாங்கிக் கொண்டு ஓர் இடத்தில் சென்று இருவரும் அமர்ந்தனர்... ஹாஹா... சாரல் சொன்னது போலவே கயலுக்கு இன்னொன்று கூட வாங்கி கொடுத்தாள்...
கயல் பிரசாதத்தை சாப்பிட்டு முடித்து... ஒவ்வ் என்று ஏப்பம் விட்டாள்...
"ஹிஹி செம சூப்பரா இருந்தது..." என்று இளித்துக் கொண்டே சொன்னாள் கயல்... சாரல் அதற்கு பதில் சொல்லாமல் மென்னகை புரிந்தாள்...
பிறகு... "ஏண்டி சாரலு... இன்னுமா அந்த கேணை தேவி நடிப்பை கண்டியூ பண்ணுது..." என்றாள் அவள்...
சாரலோ ம்ம் என்று தலை அசைத்தாள்...
"இவ்வளவு நாளாக ஒரு வசை பாட்டையும் பாடாமல்... அமுக்குனி மாதிரி அமைதியாக இருக்குது என்றால்... அதற்குப் பின்னால் ஏதோ ஒரு பெரிய ஆப்பு கண்டிப்பா இருக்கும்... அது என்னன்னு ஏதாவது க்ளு (clue) கிடைச்சதா..." என்று கேட்டாள் கயல்...
"இல்லை..." என்று ஒற்றை பதிலையே கதறினாள் சாரல்...
"ஆமா... நம்ம ஸ்கூலில் ஒரு நாள் டூர் கூட்டிட்டு போறாங்களே... நீ வர தானே..." என்று கயல் கேட்க...
சாரலோ... "ம்ஹூம்... அனுப்பி வைக்க மாட்டாங்க கயல்..." என்றாள்...
"அனுப்பி வைப்பாங்க சாரலு..."
"இல்ல டி..."
"கண்டிப்பா அனுப்பி வைப்பாங்க..."
"எப்படி கயல்... நீ இவ்வளவு உறுதியாக சொல்ற..."
"உன் அம்மாவோட நடிப்பு அப்படி... அந்த நம்பிக்கையில் தான் நான் இவ்வளவு உறுதியாக சொல்றேன்..." என்று சொல்லி கண் அடித்தாள் கயல்...
"அப்படியா சொல்ற..." என்று சந்தேகமாக கேட்டாள் சாரல்...
"ஹ்ம்ம்... அப்படி தான்..." என்று சொன்னாள் கயல்...
"என்ன விட என் அம்மாவை பற்றி நல்லா தெரிந்து வச்சு இருக்க கயல்..." என்று சலிப்புடன் சொல்ல...
"அது எல்லாம் அப்படி தான்..." என்று சொல்லி நகைத்தாள் கயல்...
அந்த சிரிப்பில் கலந்து கொள்ள முடியாமல்... ஏதோ ஒரு யோசனையாகவே இருந்தாள் திகழொளி...
அவள் முகத்தை பார்த்த கயல்... 'ச்சேய்... இந்த புள்ள எதுக்கும் சரிப்பட்டு வராது... எப்படி தான் இவ அந்த கேணை தேவியை எதிர்த்து வாழப் போறாளோ...' என்று மனதில் எண்ணி கவலை கொண்டாள் சாரலின் நண்பி...
கயல் எழுந்துக் கொண்டு... சாரலின் கரம் பற்றி இழுத்தாள்...
"என்ன டி..." என்று சினுங்கினாள் சாரல்...
"வா வா... நல்ல விஷயத்தை எல்லாம் சீக்கிரம் பண்ணணும் சாரல்..." என்று சொல்லி அவளை இழுத்துக் கொண்டு சென்றாள் கயல்...
"கயல் எங்க போறோம் இப்ப..." என்று கேட்க
"ஹ்ம்ம்... உன் வீட்டுக்கு தான் சாரல்..." என்று சொல்லி சாரலின் வீட்டுக்கு அழைத்து போனாள் கயல்...
"ஆன்டி... ஆன்டி..." என்று கத்திக் கொண்டே உள்ளே சென்றாள் கயல்...
"அடியே பிரச்சனை பண்ணாமல் இரேன் டி..." என்று மெல்லிய குரலில் சொன்னாள் திகழொளி...
ஆனால் கயலோ அதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் இருக்க... உமாதேவி ஹாலுக்கு வந்தார்...
'இதுக்கு எப்பவும் கொழுப்பு மட்டும் குறையாது...' என்று மனதில் நினைத்து கொண்டார் உமா...
"என்ன கயல்..." என்று சிரித்துக் கொண்டே கேட்டார் உமா...
"ஆன்டிடிடிடி..." என்று இழுத்து சொன்னாள் கயல்...
அவளை முறைத்து பார்த்த உமாதேவி... "அடடா... கயலு... இந்த இங்கிலி பிசாசு எல்லாம் விட்டுட்டு... வாய் நிறைய சித்தின்னு கூப்பிடு மா..." என்று சொன்னார்...
அதை கேட்டு சாரலும் கயலும் முகத்தை அஷ்ட கோணல் ஆக்கினர்...
"ஏது இங்கிலி பிசாசா... எங்களுக்கு தெரியாமல் என்னது அது புதுசா... அப்படி ஒரு பிசாசை நாங்க இந்த ஊரில் கேள்வி பட்டதே இல்லயே..." என்று கூறினாள் கயல்...
"லூசு கயல்... அவங்க இங்கிலிஷை தான் அப்படி சொன்னாங்க..." என்று கயலின் காதில் மெதுவாக சொன்னாள் சாரல்...
அவர்களின் பேச்சை கவனிக்காமல்... "ஹாஹா..." என்று வாயெல்லாம் பல்லாக சிரித்த உமா... "அதான் ஏதோ படிக்கிறேன் படிக்கிறேன்னு சொல்வீங்களே அந்த இங்கிலி பிசாசு தான்..." என்று சொல்ல...
"ஓஹோ... இங்கிலிஷ் ஆஆஆ..." என்று கயல் கேட்க... உமாவும் டிங்கு டிங்குனு மண்டையை ஆட்டினார்... அதை பார்க்க சகிக்காமல் மானசீகமாக தலையில் அடித்து கொண்டாள் கயல்...
"சரி சரி ஆன்...." என்று ஆரம்பிக்கும் போதே... "சித்தி..." என்று அழுத்தமாக சொன்னார் உமா...
"ஹ்ம்ம்... சித்தி சித்தி... உன் கிட்ட ஒன்னு கேட்கணும் சித்தி... அதை நான் கேட்கவா சித்தி..." என்றாள் கயல்...
'என்ன வில்லங்கம் செய்ய போகுதோ...' என்று நினைத்தவர்... "கேளு மா..." என்றார்...
"நாளை மறுநாள் எங்க ஸ்கூலில் பன்னிரண்டாம் வகுப்பு பிள்ளைகளை மட்டும் டூர் கூட்டிட்டு போறாங்க..." என்று சொல்லி நிறுத்தியதும்...
"அதுக்கு..." என்று இழுத்தார் உமா...
"அதுக்கு போக ஐநூறு ரூபாய் வேணும்... அப்ப தான் கூட்டிட்டு போகணும்... நீங்க தானே என் சாரலோட பாசக்கார செல்ல அம்மா... அதான் நான் உன் கிட்ட கூட்டி வந்தேன்... ஆனால் பாருங்க சித்தி... உங்க அன்பு மக சாரலு... உங்களிடம் இதை சொல்ல ரொம்ப சங்கட படறா... சரின்னு தான் நான் கேட்கிறேன்... நீ வாடி ன்னு அழைச்சிட்டு வந்தேன்... நீங்க தான் அவளுக்கு காசு கொடுக்கணும்..." என்று உமாதேவியின் முக மாற்றத்தை பார்த்துக் கொண்டே சொல்லி முடித்தாள் கயல்...
'ம்ஹூம்... உமா எந்த கோபத்தையும் இப்ப வெளியே காட்டாதே... இவளுங்க போற போக்கிலே போ... அப்ப தான் எல்லாம் நல்லதா நடக்கும்... இவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிட்டா நான் நிம்மதியாக இருப்பேன்..' என்று மனதில் எண்ணி கொண்டார் உமா...
"அதுக்கு என்னமா கயல்... படிக்கும் பிள்ளைங்க... இது தானே கடைசி வருஷம்... நான் காசு கொடுக்கிறேன்... சாரல் டூருக்கு போய்ட்டு வரட்டும்... நீயும் அவளும் பார்த்து சூதானமா போய்ட்டு வாங்க... நான் உள்ளே போய் காசு எடுத்துட்டு வரேன் இருங்க..." என்று புன்னகையுடன் ஏற்றி இறக்கி சொன்ன உமாதேவி உள்ளே சென்றார்...
கயலோ... "பார்த்தியா... நான் கோடு போட்டால்... அவங்க டைல்ஸ் ரோடே போட்டு விடுறாங்க..." என்று சொல்ல... சாரல் கலக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்...
அதன் பிறகு உமா காசை எடுத்து வந்து சாரலிடம் கொடுத்து விட்டு சென்றார்...
"இங்க பாரு பிரச்சனை வரும் போது வரட்டும்... அதை அப்ப பார்த்துக்கலாம் சரியா... இப்ப நடப்பில் கிடைப்பதை வச்சு... சந்தோஷம் இரு... மனசை போட்டு குழப்பிட்டு இருக்காதே டி... நீ தெம்பாக இருந்தால் தான் கேணை தேவியை எதிர்த்து போராட முடியும்... எப்பவும் முகத்தை சிரிப்போடு வச்சிக்கோ சாரலு... அப்படி உன்னை பார்த்தால் உனக்கே தைரியம் வரும் டி..." என்று நண்பிக்கு ஆறுதல் சொன்னார் கயல்...
அதை கேட்டு சிரித்த திகழொளி... "சரி டி பாட்டி... எனக்கு அறிவுரை சொன்னது எல்லாம் போதும்... வா நம்ம டூர் போக என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்..." என்று உற்சாகத்துடன் சொன்னாள்...
அதன் பிறகு இருவரும் சேர்ந்து கதை பேசிக் கொண்டு இருந்தனர்....
அவர்கள் பள்ளியில் சுற்றுலா செல்லும் நாளும் வர... அந்த இடத்தை எல்லாம் சந்தோஷமாக கண்டு களித்தனர்...
பின்னர்... பன்னிரண்டாம் வகுப்பின் பொது தேர்வு நாட்களும் நெருங்கி வர... கவனத்தை முழுவதுமாக அதில் திருப்பினாள் திகழொளி சாரல்...
அதனால் உமாவை நினைத்து பயம் கொள்வதை பற்றி எல்லாம் மறந்தே போனாள்... உமாவும் அவளை தொந்தரவு செய்யாமல் அவளுக்கு வேண்டியதை எல்லாம் செய்ய ஆரம்பித்தார்...
ஆகையால் நாட்கள் சுமுகமாக தான் நகர்ந்து சென்றது...
சாரலுக்கு செய்முறை தேர்வுகள் எல்லாம் முடிந்து... மாணவ மாணவிகள் தேர்வுக்கு படிக்க பள்ளியில் விடுமுறையும் விட்டனர்... நடுவே நடுவே ஏதாவது சிறப்பு வகுப்புகள் என்றால் மட்டுமே சென்று வருவாள்...
கொஞ்ச நாட்களில் பொது தேர்வுகளும் நடைபெற... அனைத்து பாடங்களையும் நன்கு படித்து... தேர்வுகளையும் சிறப்பாக எழுதி... எல்லா பரிட்சைகளையும் முடித்து விட்டாள் சாரல்...
அதன் பிறகான சில நாட்கள் அழகான விடுமுறையாக கழிந்து சென்றன... அவளுக்கு வரும் இன்னல்களை அறியாமல்... திகழொளி சாரலும் வீடு... கோவில்... கயல் என்று அந்த தினங்களை சுகமுடன் போக்கினாள்...
**************
உங்கள் பொன்னான கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்
👇👇👇👇