Kani novels
Member
- Messages
- 45
- Reaction score
- 38
- Points
- 18
நிசப்தம் - 3
"சாரல் தங்கம்..." என்று அழைத்தார் அவளுடைய பாட்டி சாந்தலட்சுமி...
"என்ன அப்பத்தா..." என்று சொல்லி கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்தாள் சாரல்...
"இந்த டி வெங்காயத்தை புடி... எனக்கு உரிச்சு கொடு..." என்று அவர் சொல்ல...
அதை வாங்காமல்... "அய்யோ அப்பத்தா... வெங்காயமா... ம்ஹூம் இதுக்கும் எனக்கும் சண்டை... அதை நான் எடுத்தாலே என்னை ரொம்ப அழ வைக்குது... அதனால் நான் அதை என் கையில் தொட மாட்டேன்னு சத்தியம் செய்து இருக்கேன் அப்பத்தா..." என்று கூறி... பக்கத்தில் இருந்த கேரட்டை எடுத்து சாப்பிட்டால் திகழொளி..
சாந்தா வாய் மேல் வைத்து... "இது என்ன டி ஆத்தா புது புரளியாக இருக்கு..." என்று சொன்னார் அவர்...
அதற்கு சாரலோ ஈஈஈஈ ன்னு பல்லை காட்டி சிரித்தாள்...
"சரி... செத்த நேரம் இந்த அடுப்பில் கொதிக்கும் சோத்தை பாரு... வெந்ததும் வடிச்சி வை... நான் இப்ப வாரேன்..." என்றார் அவளின் பாட்டி...
"ம்ஹூம் அப்பத்தா... அது..." என்று சாரல் ஆரம்பிக்கும் முன்னரே...
"என்ன சாரல் அது வந்து உன் மேலே விழுந்து விட்டதா... அதனால் நீ அதை பார்த்து... உன் கையால தொட மாட்டேன்னு சத்தியம் பண்ணி இருக்க... அதானே..." என்று சாந்தலட்சுமி சொல்ல... சாரலோ அவரை கண்டு அசடு வழிய நின்றாள்...
"எது எப்படி அப்பத்தா கரெக்ட்டா சொன்ன..." என்று கேட்டும் வைத்தாள் சாரல்...
"ம்ம்ம்... என் பேத்தியை பத்தி எனக்கு தெரியாதா..." என்று சொல்லி சிரித்தார் அவர்...
"என் செல்ல அப்பத்தா..." என்று சொல்லி அவரை அணைத்து கொண்டாள் சாரல்...
அவரோ ஒரு பெருமூச்சு விட்டவர்... "ஹ்ம்ம்... உன்னை அம்மா இல்லாத பொண்ணு என்று ரொம்ப செல்ல கொடுத்து சீராட்டி வளர்த்து வச்சி இருக்கேன்... நீ போற மாமியார் வீட்டிலும் இதே மாதிரி இருக்க முடியுமா ஆத்தா... அதனால் எல்லா வேலையும் கத்துக்க சாரலு...." என்று அவள் கன்னத்தை பிடித்துக் கொண்டு சொன்னார் சாந்தலட்சுமி...
"அட அப்பத்தா... அதுக்கு... அதான் என் கல்யாணத்துக்கு எல்லாம் இன்னும் பத்து வருஷம் ஆகும்... எனக்கு இப்ப தானே பதினான்கு வயசு ஆகுது... அதனால் அது எல்லாம் பொறுமையாக நிறுத்தி நிதானமாக சூப்பாராக கற்றுக் கொள்ளலாம் அப்பத்தா..." என்று சொல்லி விட்டு சிரித்தாள் திகழொளி சாரல்...
அவள் சிரிப்பதை பார்த்துக் கொண்டே... "ஆத்தா சாரலு நீ எப்பவும் இதே போல சிரிச்சு... சந்தோஷமாக இருக்கணும் டா... அது தான் நான் தினம் தினம் அந்த ஆண்டவன் கிட்ட வேண்டிட்டு இருக்கேன்..." என்று வாஞ்சையுடன் சொன்னார் அவளுடைய பாட்டி சாந்தலட்சுமி...
"ஆஆஆஆ..." என்று கத்தி வலியில் கால்களை உதறி கொண்டு இருந்தாள் திகழொளி... பிறகு அடுப்பை அணைத்து விட்டு... அதனை பார்த்தாள்...
அடுப்பில் இருந்த சாப்பாடு பொங்கி வழிந்து... அவளுடைய கால் மீது விழுந்து இருந்தது... அந்த எரிச்சலில் தான் அவள் சுயநினைவுக்கு வந்தாள் சாரல்...
"அச்சச்சோ... சாதம் எல்லாம் கேஸ் மேலே பொங்கி போய் இருக்கே... இதை வேற இப்ப க்ளீன் பண்ணனும் போல... சரி முதலில் சாப்பாடு வடிச்சிட்டு அப்பறம் அதை க்ளீன் பண்ணலாம்..." என்று சொல்லி விட்டு..
அடுப்பில் இருந்த சாப்பாடு பாத்திரத்தை பக்கத்தில் இருந்த கைப்பிடி துணியை கொண்டு அதை எடுத்து திரும்பியவள்... தரையில் சிந்தி இருந்த தண்ணீரில் காலை வைக்க அது வழுக்கி விட்டு... அந்த பாத்திரம் அவளுடைய கை நழுவி... பட்டென்று கீழே போட்டு விட்டாள் சாரல்...
அவளுடைய கையை பிடித்து கொண்டு... "ஆஆஆஆஆ.... அய்யோ அம்மா எரியுதே... எரியுதே..." என்று எரிச்சல் தாங்க முடியாமல் கத்தினாள் திகழொளி...
அது விழுந்ததில் சாப்பாடு எல்லாம் கொட்டிப் போய் அலங்கோலமாக இருந்தது... அதில் அவளுடைய இடது கையிலும் பலமாக காயம் பட்டு விட்டது... அதில் சாரலின் கை ரொம்ப வலித்து... எரிச்சல் அதிகமாக இருந்தது... இன்னும் கொஞ்ச நேரத்தில் கொப்பளம் போடும் நிலையில் அவளுடைய கை இருந்தது...
இந்த சத்தத்தை கேட்டு... தூக்கத்தில் இருந்து பதறி எழுந்த உமாதேவி... நேராக சமையல் அறைக்கு சென்றார்...
அங்கே இருந்த கோலத்தை பார்த்து உள்ளே போனவர்... "ஏய் சாரல்... தரித்திரம் புடிச்ச குரங்கு... உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாதா டி... இப்படியா சட்டியை உடைத்து வைச்சி சாப்பாட்டை வீணாக்குவ பாவி பாவி... உன்னை உன் பாட்டிக்காரி எந்த இலட்சணத்தில் வளர்த்து இருக்கா.. பாரத்தீயா... ஒரு சோறு வடிக்க கூட தெரியாமல்... இப்படி கீழே போட்டு சாப்பாடை யாருக்கும் உதவாமல் பண்ணி இருக்கீயே... நீ எல்லாம் எங்க டி மாமியா வீட்டில் உருப்படியாக வேலை செய்து... நல்லா வாழுவ..." என்று வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி சாரலை திட்டிக் கொண்டு இருந்தார் உமாதேவி...
அதை எல்லாம் கேட்க முடியாமல்... "எதுக்காக இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கீங்க..." என்று அழுதுக் கொண்டே சொன்னாள் திகழொளி...
இப்போது அவளுக்கு நெருப்பால் கையில் பட்ட காயத்தின் வலியை விட... உமாவின் ஒவ்வொரு கடும் சொற்கள் எனும் நெருப்பில் அவளுடைய மனம் புண்பட்டு... பெரும் காயம் கொண்டு இருந்தது... அது தான் சாரலுக்கு மிகவும் வலியை கொடுத்தது...
"எதுக்கு இப்படி பேசிட்டு இருக்கேன் என்று கேள்வியா கேட்கிற... நீ பண்ணி வச்சு இருக்கும் காரியத்துக்கு மடியில் தூக்கி வச்சு கொஞ்சிட்டு கிடப்பாங்களா... உன்னை எல்லாம்..." என்று சொல்லி அவளை அடிக்க போனார் உமா...
சாரலை அடிக்க போன அவருடைய கையை... இன்னொரு கை தடுத்து நிறுத்தியது... அது யாரென்று உமா திரும்பி பார்க்க அங்கே அவர் கணவர் செந்தில்நாதன் நின்று கொண்டு இருந்தார்...
அவரை பார்த்து எதுவும் சொல்ல முடியாமல்... கண்ணீரில் அழுது கரைந்து போனாள் திகழொளி...
"என்னங்க இவ என்ன காரியத்தை பண்ணி வச்சி இருக்கா என்று பார்த்தீங்களா..." என்று அவரிடம் கோபத்துடன் சொன்னார் உமா...
"பார்த்தேன் தான்... அவளை அடிக்காத உமா... விடு..." என்று பொறுமையாக சொன்னார் செந்தில்நாதன்...
அவர் கையை உதறி விட்ட உமா... "ஏது விடுவதா... என்னங்க நீங்க... எல்லாம் நீங்க கொடுக்கும் இடம் தான்... உங்க பாசமும் செல்லமும் தான்... அவள் இப்படி பொறுப்பு இல்லாமல் தறிகெட்டு திரிந்து கிடக்கா... அதுக்கு முழுக்க முழுக்க நீங்களும் உங்க அம்மாவும் தான் காரணம்... பொட்ட புள்ளையை அடிச்சி வளர்த்து... நாளும் சொல்லிக் கொடுத்து வளர்த்து இருந்தால்... இவளை நான் ஏன் கொறை (குறை) சொல்ல போறேன்... நாளைக்கு இவ போற இடத்தில் கதை சொல்வாங்க தானே... அப்போ அதை கேட்டு உங்க முகத்தை எங்க கொண்டு போய் வைத்து கொள்வீங்க... இப்ப நான் எது சொன்னாலும் உங்களுக்கு தப்பா மட்டும் தான் எல்லாருக்கும் படும்... நல்லா வளர்த்தி வச்சி இருக்காங்க பொண்ணை... ச்சேய்..." என்று எரிச்சல் கலந்த கோபத்தில் கத்தி விட்டு அங்கிருந்து சென்று விட்டார் உமாதேவி...
சாரலின் அருகில் சென்ற செந்தில்... அவளுடைய கையை பிடித்து பார்த்தார்...
அவளுடைய இடது கையின் பாதி வரை சிவந்து அங்கங்கே கொப்பளம் போட்டு இருந்தது...
"அம்மாடி சாரல்..." என்று மென்மையாக கூப்பிட்டார் செந்தில்...
"அவங்க கிட்ட இருந்து என்னை காப்பாற்றியதற்கு ரொம்ப தேங்க்ஸ் அப்பா... எனக்காக நீங்க இரண்டு வார்த்தை பேசியதை கேட்டே... நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... இந்த காயம் இன்னைக்கு இல்லா விட்டாலும் நாளைக்கு ஆறி விடும் அப்பா... ஆனால்... மனதில் இருக்கும் காயம் என்னைக்கும் ஆறாது ப்பா..." என்று சொல்லி விட்டு அவள் கையை காட்டி...
"எனக்கு இது சத்தியமாக வலி தெரியலை அப்பா..." என்று சொல்லி அவளுடைய கண்களை துடைத்துக் கொண்டாள் சாரல்...
"சாரல் என் கூட கொஞ்சம் வா மா... நான் உனக்கு மருந்து போட்டு விடுறேன்..." என்று சொன்னார் செந்தில்நாதன்...
அவள் ஒரு விரக்தி புன்னகையை செய்து விட்டு... "எனக்கு எதுக்கும் மருந்து போட வேண்டாம் அப்பா... நான் ஏற்கனவே ரொம்ப நொந்து போய் இருக்கேன்... ஒரு காயம் பட்டு அதுக்கு மருந்தும் போட்டு விட்டால்... எல்லாம் சரியாக போய் விடுமா அப்பா..." என்று ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாகவும் நிதானமாகவும் சொன்னாள் திகழொளி...
அவள் சொன்னதை கேட்டு... பதில் ஏதும் சொல்ல முடியாமல் தடுமாறி நின்றார் செந்தில்நாதன்...
அங்கிருந்து எழுந்து கொண்டவள்... அப்பாவை பார்த்து... "நான் என் ரூமுக்கு போறேன்..." என்று சொல்லி விட்டு... அங்கே நிற்காமல் அவளுடைய அறைக்கு சென்று... கதவை தாழிட்டு கொண்டாள் சாரல்...
மனம் உடைந்து போகும் மகளை பார்த்த செந்தில்... 'ச்சே... நான் என் பொண்ணு சாரலை... வீட்டில் நடக்கும் எல்லாத்தையும் பார்த்து... எதுவும் பேசாமல் இருந்தே.. அவளை ரொம்ப காயப் படுத்தி இருக்கேன் போல... பொண்டாட்டியை மட்டும் நினைப்பில் வைத்து இப்படி பிள்ளையை தவிக்க விட்டுட்டேனே...' என்று மனதில் நினைத்து வருந்திக் கொண்டார் அவர்... பிறகு அவரும் வேலைக்கு கிளம்பி போய் விட்டார்...
சாரல் அறைக்கு வந்து... அவளுடைய அப்பத்தாவின் புகைப்படத்தை வலது கையில் எடுத்து கொண்டு... "அப்பத்தா... இங்க பார்த்தியா என் கையை... ரொம்ப வலிக்குது தெரியுமா... என்னால இந்த வீட்டில் இருக்க முடியலை அப்பத்தா... தினம் தினம் ஏதாவது ஒரு பிரச்சினை... நானும் ஒரு சின்ன பொண்ணு தானே... எதுக்கு எனக்கு மட்டும் இவ்வளவு கஷ்டம்... இதை எல்லாம் பார்த்துட்டு இருக்கும் அந்த கடவுளுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா... ரொம்ப எரியுது அப்பத்தா... என்னால சுத்தமாக வலி தாங்க முடியலை... என்னை நீ கூட்டிட்டு போயிடு அப்பத்தா... நான் உன் கூட வரேன்... என்னை கூட்டிட்டு போயிடு அப்பத்தா..." என்று அவள் புலம்பிக் கொண்டே... அந்த ஃபோட்டோவை வலது கையில் பிடித்தபடி... இடது கையின் வலியோடு அப்படியே உறங்கி விட்டாள் திகழொளி சாரல்...
அவள் மதியமும் எதுவும் சாப்பிடவில்லை... உமாவும் அவளை போய் எழுப்பி... சாப்பிடு என்று சொல்ல வில்லை... அவளை கண்டுக் கொள்ளாமல்... தான் உண்டு தன் வேலை உண்டு என்று தான் இருந்தார் உமாதேவி... அவள் வெளியேயும் வரவில்லை...
இரவு வீட்டுக்கு வந்த செந்தில்நாதன்...
"உமா சாரல் ஏதாவது சாப்பிட்டாலா..." என்று உமாவிடம் கேட்டார் அவர்...
"அந்த மகாராணிக்கு எதுவும் வேண்டாமாம்... கூப்பிட்டால் கூட வர முடியாது என்று மூஞ்சியில் அடித்த மாதிரி சொல்லிட்டா... ஹ்ம்ம் எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கு என்று உங்களுக்கு தெரியுமாங்க..." என்று வராத அழுகையுடன் மூக்கை உறிஞ்சி கொண்டே சொன்னார் உமாதேவி...
"சாரல் அப்படியா சொன்னா... ம்ம்... அவளுக்கு ரொம்ப தான் கொழுப்பு ஏறி போச்சு... கொஞ்சம் விட்டால் அதிகமாக பண்ணுவாள்... நீ விடு வேணும் என்றால் அவளே வந்து சாப்பிட்டு கொள்வாள்... நீ வா எனக்கு சாப்பாடு போடு..." என்று கோபத்துடன் சொன்னார் செந்தில்நாதன்...
"ம்ம்ம் சரிங்க... நான் நீங்க சொன்னது போல... அப்படியே செய்கிறேன்..." என்று சொல்லி கணவருக்கு உணவு பரிமாறி விட்டு... அவரும் சாப்பிட்டு இருவரும் போய் படுத்துக் கொண்டார்கள்...
நள்ளிரவில் சாரலின் அண்ணன் தமிழ்நெஞ்சன் குடித்து விட்டு வந்து கதவை தட்ட... உமா சத்தம் இல்லாமல் திறந்து... அவனை உள்ளே இழுத்துக் கொண்டு போய் படுத்து வைத்து விட்டு... அவரும் போய் தூங்க சென்றார் உமாதேவி...
இதை எல்லாம் கண்டும் காணாமல்... அழுது கொண்டே அந்த வானில் உள்ள நிலவையும் நட்சத்திரங்களையும் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள் திகழொளி சாரல்....
***********
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்... 👇👇👇
எழுத்தாளினி நிசப்தா - Comments
"சாரல் தங்கம்..." என்று அழைத்தார் அவளுடைய பாட்டி சாந்தலட்சுமி...
"என்ன அப்பத்தா..." என்று சொல்லி கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்தாள் சாரல்...
"இந்த டி வெங்காயத்தை புடி... எனக்கு உரிச்சு கொடு..." என்று அவர் சொல்ல...
அதை வாங்காமல்... "அய்யோ அப்பத்தா... வெங்காயமா... ம்ஹூம் இதுக்கும் எனக்கும் சண்டை... அதை நான் எடுத்தாலே என்னை ரொம்ப அழ வைக்குது... அதனால் நான் அதை என் கையில் தொட மாட்டேன்னு சத்தியம் செய்து இருக்கேன் அப்பத்தா..." என்று கூறி... பக்கத்தில் இருந்த கேரட்டை எடுத்து சாப்பிட்டால் திகழொளி..
சாந்தா வாய் மேல் வைத்து... "இது என்ன டி ஆத்தா புது புரளியாக இருக்கு..." என்று சொன்னார் அவர்...
அதற்கு சாரலோ ஈஈஈஈ ன்னு பல்லை காட்டி சிரித்தாள்...
"சரி... செத்த நேரம் இந்த அடுப்பில் கொதிக்கும் சோத்தை பாரு... வெந்ததும் வடிச்சி வை... நான் இப்ப வாரேன்..." என்றார் அவளின் பாட்டி...
"ம்ஹூம் அப்பத்தா... அது..." என்று சாரல் ஆரம்பிக்கும் முன்னரே...
"என்ன சாரல் அது வந்து உன் மேலே விழுந்து விட்டதா... அதனால் நீ அதை பார்த்து... உன் கையால தொட மாட்டேன்னு சத்தியம் பண்ணி இருக்க... அதானே..." என்று சாந்தலட்சுமி சொல்ல... சாரலோ அவரை கண்டு அசடு வழிய நின்றாள்...
"எது எப்படி அப்பத்தா கரெக்ட்டா சொன்ன..." என்று கேட்டும் வைத்தாள் சாரல்...
"ம்ம்ம்... என் பேத்தியை பத்தி எனக்கு தெரியாதா..." என்று சொல்லி சிரித்தார் அவர்...
"என் செல்ல அப்பத்தா..." என்று சொல்லி அவரை அணைத்து கொண்டாள் சாரல்...
அவரோ ஒரு பெருமூச்சு விட்டவர்... "ஹ்ம்ம்... உன்னை அம்மா இல்லாத பொண்ணு என்று ரொம்ப செல்ல கொடுத்து சீராட்டி வளர்த்து வச்சி இருக்கேன்... நீ போற மாமியார் வீட்டிலும் இதே மாதிரி இருக்க முடியுமா ஆத்தா... அதனால் எல்லா வேலையும் கத்துக்க சாரலு...." என்று அவள் கன்னத்தை பிடித்துக் கொண்டு சொன்னார் சாந்தலட்சுமி...
"அட அப்பத்தா... அதுக்கு... அதான் என் கல்யாணத்துக்கு எல்லாம் இன்னும் பத்து வருஷம் ஆகும்... எனக்கு இப்ப தானே பதினான்கு வயசு ஆகுது... அதனால் அது எல்லாம் பொறுமையாக நிறுத்தி நிதானமாக சூப்பாராக கற்றுக் கொள்ளலாம் அப்பத்தா..." என்று சொல்லி விட்டு சிரித்தாள் திகழொளி சாரல்...
அவள் சிரிப்பதை பார்த்துக் கொண்டே... "ஆத்தா சாரலு நீ எப்பவும் இதே போல சிரிச்சு... சந்தோஷமாக இருக்கணும் டா... அது தான் நான் தினம் தினம் அந்த ஆண்டவன் கிட்ட வேண்டிட்டு இருக்கேன்..." என்று வாஞ்சையுடன் சொன்னார் அவளுடைய பாட்டி சாந்தலட்சுமி...
"ஆஆஆஆ..." என்று கத்தி வலியில் கால்களை உதறி கொண்டு இருந்தாள் திகழொளி... பிறகு அடுப்பை அணைத்து விட்டு... அதனை பார்த்தாள்...
அடுப்பில் இருந்த சாப்பாடு பொங்கி வழிந்து... அவளுடைய கால் மீது விழுந்து இருந்தது... அந்த எரிச்சலில் தான் அவள் சுயநினைவுக்கு வந்தாள் சாரல்...
"அச்சச்சோ... சாதம் எல்லாம் கேஸ் மேலே பொங்கி போய் இருக்கே... இதை வேற இப்ப க்ளீன் பண்ணனும் போல... சரி முதலில் சாப்பாடு வடிச்சிட்டு அப்பறம் அதை க்ளீன் பண்ணலாம்..." என்று சொல்லி விட்டு..
அடுப்பில் இருந்த சாப்பாடு பாத்திரத்தை பக்கத்தில் இருந்த கைப்பிடி துணியை கொண்டு அதை எடுத்து திரும்பியவள்... தரையில் சிந்தி இருந்த தண்ணீரில் காலை வைக்க அது வழுக்கி விட்டு... அந்த பாத்திரம் அவளுடைய கை நழுவி... பட்டென்று கீழே போட்டு விட்டாள் சாரல்...
அவளுடைய கையை பிடித்து கொண்டு... "ஆஆஆஆஆ.... அய்யோ அம்மா எரியுதே... எரியுதே..." என்று எரிச்சல் தாங்க முடியாமல் கத்தினாள் திகழொளி...
அது விழுந்ததில் சாப்பாடு எல்லாம் கொட்டிப் போய் அலங்கோலமாக இருந்தது... அதில் அவளுடைய இடது கையிலும் பலமாக காயம் பட்டு விட்டது... அதில் சாரலின் கை ரொம்ப வலித்து... எரிச்சல் அதிகமாக இருந்தது... இன்னும் கொஞ்ச நேரத்தில் கொப்பளம் போடும் நிலையில் அவளுடைய கை இருந்தது...
இந்த சத்தத்தை கேட்டு... தூக்கத்தில் இருந்து பதறி எழுந்த உமாதேவி... நேராக சமையல் அறைக்கு சென்றார்...
அங்கே இருந்த கோலத்தை பார்த்து உள்ளே போனவர்... "ஏய் சாரல்... தரித்திரம் புடிச்ச குரங்கு... உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாதா டி... இப்படியா சட்டியை உடைத்து வைச்சி சாப்பாட்டை வீணாக்குவ பாவி பாவி... உன்னை உன் பாட்டிக்காரி எந்த இலட்சணத்தில் வளர்த்து இருக்கா.. பாரத்தீயா... ஒரு சோறு வடிக்க கூட தெரியாமல்... இப்படி கீழே போட்டு சாப்பாடை யாருக்கும் உதவாமல் பண்ணி இருக்கீயே... நீ எல்லாம் எங்க டி மாமியா வீட்டில் உருப்படியாக வேலை செய்து... நல்லா வாழுவ..." என்று வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி சாரலை திட்டிக் கொண்டு இருந்தார் உமாதேவி...
அதை எல்லாம் கேட்க முடியாமல்... "எதுக்காக இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கீங்க..." என்று அழுதுக் கொண்டே சொன்னாள் திகழொளி...
இப்போது அவளுக்கு நெருப்பால் கையில் பட்ட காயத்தின் வலியை விட... உமாவின் ஒவ்வொரு கடும் சொற்கள் எனும் நெருப்பில் அவளுடைய மனம் புண்பட்டு... பெரும் காயம் கொண்டு இருந்தது... அது தான் சாரலுக்கு மிகவும் வலியை கொடுத்தது...
"எதுக்கு இப்படி பேசிட்டு இருக்கேன் என்று கேள்வியா கேட்கிற... நீ பண்ணி வச்சு இருக்கும் காரியத்துக்கு மடியில் தூக்கி வச்சு கொஞ்சிட்டு கிடப்பாங்களா... உன்னை எல்லாம்..." என்று சொல்லி அவளை அடிக்க போனார் உமா...
சாரலை அடிக்க போன அவருடைய கையை... இன்னொரு கை தடுத்து நிறுத்தியது... அது யாரென்று உமா திரும்பி பார்க்க அங்கே அவர் கணவர் செந்தில்நாதன் நின்று கொண்டு இருந்தார்...
அவரை பார்த்து எதுவும் சொல்ல முடியாமல்... கண்ணீரில் அழுது கரைந்து போனாள் திகழொளி...
"என்னங்க இவ என்ன காரியத்தை பண்ணி வச்சி இருக்கா என்று பார்த்தீங்களா..." என்று அவரிடம் கோபத்துடன் சொன்னார் உமா...
"பார்த்தேன் தான்... அவளை அடிக்காத உமா... விடு..." என்று பொறுமையாக சொன்னார் செந்தில்நாதன்...
அவர் கையை உதறி விட்ட உமா... "ஏது விடுவதா... என்னங்க நீங்க... எல்லாம் நீங்க கொடுக்கும் இடம் தான்... உங்க பாசமும் செல்லமும் தான்... அவள் இப்படி பொறுப்பு இல்லாமல் தறிகெட்டு திரிந்து கிடக்கா... அதுக்கு முழுக்க முழுக்க நீங்களும் உங்க அம்மாவும் தான் காரணம்... பொட்ட புள்ளையை அடிச்சி வளர்த்து... நாளும் சொல்லிக் கொடுத்து வளர்த்து இருந்தால்... இவளை நான் ஏன் கொறை (குறை) சொல்ல போறேன்... நாளைக்கு இவ போற இடத்தில் கதை சொல்வாங்க தானே... அப்போ அதை கேட்டு உங்க முகத்தை எங்க கொண்டு போய் வைத்து கொள்வீங்க... இப்ப நான் எது சொன்னாலும் உங்களுக்கு தப்பா மட்டும் தான் எல்லாருக்கும் படும்... நல்லா வளர்த்தி வச்சி இருக்காங்க பொண்ணை... ச்சேய்..." என்று எரிச்சல் கலந்த கோபத்தில் கத்தி விட்டு அங்கிருந்து சென்று விட்டார் உமாதேவி...
சாரலின் அருகில் சென்ற செந்தில்... அவளுடைய கையை பிடித்து பார்த்தார்...
அவளுடைய இடது கையின் பாதி வரை சிவந்து அங்கங்கே கொப்பளம் போட்டு இருந்தது...
"அம்மாடி சாரல்..." என்று மென்மையாக கூப்பிட்டார் செந்தில்...
"அவங்க கிட்ட இருந்து என்னை காப்பாற்றியதற்கு ரொம்ப தேங்க்ஸ் அப்பா... எனக்காக நீங்க இரண்டு வார்த்தை பேசியதை கேட்டே... நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... இந்த காயம் இன்னைக்கு இல்லா விட்டாலும் நாளைக்கு ஆறி விடும் அப்பா... ஆனால்... மனதில் இருக்கும் காயம் என்னைக்கும் ஆறாது ப்பா..." என்று சொல்லி விட்டு அவள் கையை காட்டி...
"எனக்கு இது சத்தியமாக வலி தெரியலை அப்பா..." என்று சொல்லி அவளுடைய கண்களை துடைத்துக் கொண்டாள் சாரல்...
"சாரல் என் கூட கொஞ்சம் வா மா... நான் உனக்கு மருந்து போட்டு விடுறேன்..." என்று சொன்னார் செந்தில்நாதன்...
அவள் ஒரு விரக்தி புன்னகையை செய்து விட்டு... "எனக்கு எதுக்கும் மருந்து போட வேண்டாம் அப்பா... நான் ஏற்கனவே ரொம்ப நொந்து போய் இருக்கேன்... ஒரு காயம் பட்டு அதுக்கு மருந்தும் போட்டு விட்டால்... எல்லாம் சரியாக போய் விடுமா அப்பா..." என்று ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாகவும் நிதானமாகவும் சொன்னாள் திகழொளி...
அவள் சொன்னதை கேட்டு... பதில் ஏதும் சொல்ல முடியாமல் தடுமாறி நின்றார் செந்தில்நாதன்...
அங்கிருந்து எழுந்து கொண்டவள்... அப்பாவை பார்த்து... "நான் என் ரூமுக்கு போறேன்..." என்று சொல்லி விட்டு... அங்கே நிற்காமல் அவளுடைய அறைக்கு சென்று... கதவை தாழிட்டு கொண்டாள் சாரல்...
மனம் உடைந்து போகும் மகளை பார்த்த செந்தில்... 'ச்சே... நான் என் பொண்ணு சாரலை... வீட்டில் நடக்கும் எல்லாத்தையும் பார்த்து... எதுவும் பேசாமல் இருந்தே.. அவளை ரொம்ப காயப் படுத்தி இருக்கேன் போல... பொண்டாட்டியை மட்டும் நினைப்பில் வைத்து இப்படி பிள்ளையை தவிக்க விட்டுட்டேனே...' என்று மனதில் நினைத்து வருந்திக் கொண்டார் அவர்... பிறகு அவரும் வேலைக்கு கிளம்பி போய் விட்டார்...
சாரல் அறைக்கு வந்து... அவளுடைய அப்பத்தாவின் புகைப்படத்தை வலது கையில் எடுத்து கொண்டு... "அப்பத்தா... இங்க பார்த்தியா என் கையை... ரொம்ப வலிக்குது தெரியுமா... என்னால இந்த வீட்டில் இருக்க முடியலை அப்பத்தா... தினம் தினம் ஏதாவது ஒரு பிரச்சினை... நானும் ஒரு சின்ன பொண்ணு தானே... எதுக்கு எனக்கு மட்டும் இவ்வளவு கஷ்டம்... இதை எல்லாம் பார்த்துட்டு இருக்கும் அந்த கடவுளுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா... ரொம்ப எரியுது அப்பத்தா... என்னால சுத்தமாக வலி தாங்க முடியலை... என்னை நீ கூட்டிட்டு போயிடு அப்பத்தா... நான் உன் கூட வரேன்... என்னை கூட்டிட்டு போயிடு அப்பத்தா..." என்று அவள் புலம்பிக் கொண்டே... அந்த ஃபோட்டோவை வலது கையில் பிடித்தபடி... இடது கையின் வலியோடு அப்படியே உறங்கி விட்டாள் திகழொளி சாரல்...
அவள் மதியமும் எதுவும் சாப்பிடவில்லை... உமாவும் அவளை போய் எழுப்பி... சாப்பிடு என்று சொல்ல வில்லை... அவளை கண்டுக் கொள்ளாமல்... தான் உண்டு தன் வேலை உண்டு என்று தான் இருந்தார் உமாதேவி... அவள் வெளியேயும் வரவில்லை...
இரவு வீட்டுக்கு வந்த செந்தில்நாதன்...
"உமா சாரல் ஏதாவது சாப்பிட்டாலா..." என்று உமாவிடம் கேட்டார் அவர்...
"அந்த மகாராணிக்கு எதுவும் வேண்டாமாம்... கூப்பிட்டால் கூட வர முடியாது என்று மூஞ்சியில் அடித்த மாதிரி சொல்லிட்டா... ஹ்ம்ம் எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கு என்று உங்களுக்கு தெரியுமாங்க..." என்று வராத அழுகையுடன் மூக்கை உறிஞ்சி கொண்டே சொன்னார் உமாதேவி...
"சாரல் அப்படியா சொன்னா... ம்ம்... அவளுக்கு ரொம்ப தான் கொழுப்பு ஏறி போச்சு... கொஞ்சம் விட்டால் அதிகமாக பண்ணுவாள்... நீ விடு வேணும் என்றால் அவளே வந்து சாப்பிட்டு கொள்வாள்... நீ வா எனக்கு சாப்பாடு போடு..." என்று கோபத்துடன் சொன்னார் செந்தில்நாதன்...
"ம்ம்ம் சரிங்க... நான் நீங்க சொன்னது போல... அப்படியே செய்கிறேன்..." என்று சொல்லி கணவருக்கு உணவு பரிமாறி விட்டு... அவரும் சாப்பிட்டு இருவரும் போய் படுத்துக் கொண்டார்கள்...
நள்ளிரவில் சாரலின் அண்ணன் தமிழ்நெஞ்சன் குடித்து விட்டு வந்து கதவை தட்ட... உமா சத்தம் இல்லாமல் திறந்து... அவனை உள்ளே இழுத்துக் கொண்டு போய் படுத்து வைத்து விட்டு... அவரும் போய் தூங்க சென்றார் உமாதேவி...
இதை எல்லாம் கண்டும் காணாமல்... அழுது கொண்டே அந்த வானில் உள்ள நிலவையும் நட்சத்திரங்களையும் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள் திகழொளி சாரல்....
***********
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்... 👇👇👇
எழுத்தாளினி நிசப்தா - Comments