Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL எழுத்தாளினி நிசப்தா - Tamil Novel

Status
Not open for further replies.
நிசப்தம் - 3

"சாரல் தங்கம்..." என்று அழைத்தார் அவளுடைய பாட்டி சாந்தலட்சுமி...

"என்ன அப்பத்தா..." என்று சொல்லி கொண்டே சமையல் அறைக்குள் நுழைந்தாள் சாரல்...

"இந்த டி வெங்காயத்தை புடி... எனக்கு உரிச்சு கொடு..." என்று அவர் சொல்ல...

அதை வாங்காமல்... "அய்யோ அப்பத்தா... வெங்காயமா... ம்ஹூம் இதுக்கும் எனக்கும் சண்டை... அதை நான் எடுத்தாலே என்னை ரொம்ப அழ வைக்குது... அதனால் நான் அதை என் கையில் தொட மாட்டேன்னு சத்தியம் செய்து இருக்கேன் அப்பத்தா..." என்று கூறி... பக்கத்தில் இருந்த கேரட்டை எடுத்து சாப்பிட்டால் திகழொளி..

சாந்தா வாய் மேல் வைத்து... "இது என்ன டி ஆத்தா புது புரளியாக இருக்கு..." என்று சொன்னார் அவர்...

அதற்கு சாரலோ ஈஈஈஈ ன்னு பல்லை காட்டி சிரித்தாள்...

"சரி... செத்த நேரம் இந்த அடுப்பில் கொதிக்கும் சோத்தை பாரு... வெந்ததும் வடிச்சி வை... நான் இப்ப வாரேன்..." என்றார் அவளின் பாட்டி...

"ம்ஹூம் அப்பத்தா... அது..." என்று சாரல் ஆரம்பிக்கும் முன்னரே...

"என்ன சாரல் அது வந்து உன் மேலே விழுந்து விட்டதா...‌ அதனால் நீ அதை பார்த்து... உன் கையால தொட மாட்டேன்னு சத்தியம் பண்ணி இருக்க... அதானே..." என்று சாந்தலட்சுமி சொல்ல... சாரலோ அவரை கண்டு அசடு வழிய நின்றாள்...

"எது எப்படி அப்பத்தா கரெக்ட்டா சொன்ன..." என்று கேட்டும் வைத்தாள் சாரல்...

"ம்ம்ம்... என் பேத்தியை பத்தி எனக்கு தெரியாதா..." என்று சொல்லி சிரித்தார் அவர்...

"என் செல்ல அப்பத்தா..." என்று சொல்லி அவரை அணைத்து கொண்டாள் சாரல்...

அவரோ ஒரு பெருமூச்சு விட்டவர்... "ஹ்ம்ம்... உன்னை அம்மா இல்லாத பொண்ணு என்று ரொம்ப செல்ல கொடுத்து சீராட்டி வளர்த்து வச்சி இருக்கேன்... நீ போற மாமியார் வீட்டிலும் இதே மாதிரி இருக்க முடியுமா ஆத்தா... அதனால் எல்லா வேலையும் கத்துக்க சாரலு...." என்று அவள் கன்னத்தை பிடித்துக் கொண்டு சொன்னார் சாந்தலட்சுமி...

"அட அப்பத்தா... அதுக்கு... அதான் என் கல்யாணத்துக்கு எல்லாம் இன்னும் பத்து வருஷம் ஆகும்... எனக்கு இப்ப தானே பதினான்கு வயசு ஆகுது... அதனால் அது எல்லாம் பொறுமையாக நிறுத்தி நிதானமாக சூப்பாராக கற்றுக் கொள்ளலாம் அப்பத்தா..." என்று சொல்லி விட்டு சிரித்தாள் திகழொளி சாரல்...

அவள் சிரிப்பதை பார்த்துக் கொண்டே... "ஆத்தா சாரலு நீ எப்பவும் இதே போல சிரிச்சு... சந்தோஷமாக இருக்கணும் டா... அது தான் நான் தினம் தினம் அந்த ஆண்டவன் கிட்ட வேண்டிட்டு இருக்கேன்..." என்று வாஞ்சையுடன் சொன்னார் அவளுடைய பாட்டி சாந்தலட்சுமி...

"ஆஆஆஆ..." என்று கத்தி வலியில் கால்களை உதறி கொண்டு இருந்தாள் திகழொளி... பிறகு அடுப்பை அணைத்து விட்டு... அதனை பார்த்தாள்...

அடுப்பில் இருந்த சாப்பாடு பொங்கி வழிந்து... அவளுடைய கால் மீது விழுந்து இருந்தது... அந்த எரிச்சலில் தான் அவள் சுயநினைவுக்கு வந்தாள் சாரல்...

"அச்சச்சோ... சாதம் எல்லாம் கேஸ் மேலே பொங்கி போய் இருக்கே... இதை வேற இப்ப க்ளீன் பண்ணனும் போல... சரி முதலில் சாப்பாடு வடிச்சிட்டு அப்பறம் அதை க்ளீன் பண்ணலாம்..." என்று சொல்லி விட்டு..

அடுப்பில் இருந்த சாப்பாடு பாத்திரத்தை பக்கத்தில் இருந்த கைப்பிடி துணியை கொண்டு அதை எடுத்து திரும்பியவள்... தரையில் சிந்தி இருந்த தண்ணீரில் காலை வைக்க அது‌ வழுக்கி விட்டு... அந்த பாத்திரம் அவளுடைய கை நழுவி... பட்டென்று கீழே போட்டு விட்டாள் சாரல்...

அவளுடைய கையை பிடித்து கொண்டு... "ஆஆஆஆஆ.... அய்யோ அம்மா எரியுதே.‌‌.. எரியுதே..." என்று எரிச்சல் தாங்க முடியாமல் கத்தினாள் திகழொளி...

அது விழுந்ததில் சாப்பாடு எல்லாம் கொட்டிப் போய் அலங்கோலமாக இருந்தது... அதில் அவளுடைய இடது கையிலும் பலமாக காயம் பட்டு விட்டது... அதில் சாரலின் கை ரொம்ப வலித்து... எரிச்சல் அதிகமாக இருந்தது... இன்னும் கொஞ்ச நேரத்தில் கொப்பளம் போடும் நிலையில் அவளுடைய கை இருந்தது...

இந்த சத்தத்தை கேட்டு... தூக்கத்தில் இருந்து பதறி எழுந்த உமாதேவி... நேராக சமையல் அறைக்கு சென்றார்...

அங்கே இருந்த கோலத்தை பார்த்து உள்ளே போனவர்.‌‌.. "ஏய் சாரல்... தரித்திரம் புடிச்ச குரங்கு... உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாதா டி... இப்படியா சட்டியை உடைத்து வைச்சி சாப்பாட்டை வீணாக்குவ பாவி பாவி... உன்னை உன் பாட்டிக்காரி எந்த இலட்சணத்தில் வளர்த்து இருக்கா.. பாரத்தீயா... ஒரு சோறு வடிக்க கூட தெரியாமல்... இப்படி கீழே போட்டு சாப்பாடை யாருக்கும் உதவாமல் பண்ணி இருக்கீயே... நீ எல்லாம் எங்க டி மாமியா வீட்டில் உருப்படியாக வேலை செய்து... நல்லா வாழுவ..." என்று வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி சாரலை திட்டிக் கொண்டு இருந்தார் உமாதேவி...

அதை எல்லாம் கேட்க முடியாமல்.‌‌.. "எதுக்காக இப்படி எல்லாம் பேசிட்டு இருக்கீங்க..." என்று அழுதுக் கொண்டே சொன்னாள் திகழொளி...

இப்போது அவளுக்கு நெருப்பால் கையில் பட்ட காயத்தின் வலியை விட... உமாவின் ஒவ்வொரு கடும் சொற்கள் எனும் நெருப்பில் அவளுடைய மனம் புண்பட்டு... பெரும் காயம் கொண்டு இருந்தது... அது தான் சாரலுக்கு மிகவும் வலியை கொடுத்தது...

"எதுக்கு இப்படி பேசிட்டு இருக்கேன் என்று கேள்வியா கேட்கிற... நீ பண்ணி வச்சு இருக்கும் காரியத்துக்கு மடியில் தூக்கி வச்சு கொஞ்சிட்டு கிடப்பாங்களா... உன்னை எல்லாம்..." என்று சொல்லி அவளை அடிக்க போனார் உமா.‌..

சாரலை அடிக்க போன அவருடைய கையை... இன்னொரு கை தடுத்து நிறுத்தியது... அது யாரென்று உமா திரும்பி பார்க்க அங்கே அவர் கணவர் செந்தில்நாதன் நின்று கொண்டு இருந்தார்...

அவரை பார்த்து எதுவும் சொல்ல முடியாமல்... கண்ணீரில் அழுது கரைந்து போனா‌ள் திகழொளி...

"என்னங்க இவ என்ன காரியத்தை பண்ணி வச்சி இருக்கா என்று பார்த்தீங்களா..." என்று அவரிடம் கோபத்துடன் சொன்னார் உமா...

"பார்த்தேன் தான்... அவளை அடிக்காத உமா... விடு..." என்று பொறுமையாக சொன்னார் செந்தில்நாதன்...

அவர் கையை உதறி விட்ட உமா... "ஏது விடுவதா... என்னங்க நீங்க... எல்லாம் நீங்க கொடுக்கும் இடம் தான்... உங்க பாசமும் செல்லமும் தான்... அவள் இப்படி பொறுப்பு இல்லாமல் தறிகெட்டு திரிந்து கிடக்கா... அதுக்கு முழுக்க முழுக்க நீங்களும் உங்க அம்மாவும் தான் காரணம்... பொட்ட புள்ளையை அடிச்சி வளர்த்து... நாளும் சொல்லிக் கொடுத்து வளர்த்து இருந்தால்... இவளை நான் ஏன் கொறை (குறை) சொல்ல போறேன்... நாளைக்கு இவ போற இடத்தில் கதை சொல்வாங்க தானே... அப்போ அதை கேட்டு உங்க முகத்தை எங்க கொண்டு போய் வைத்து கொள்வீங்க... இப்ப நான் எது சொன்னாலும் உங்களுக்கு தப்பா மட்டும் தான் எல்லாருக்கும் படும்... நல்லா வளர்த்தி வச்சி இருக்காங்க பொண்ணை... ச்சேய்..." என்று எரிச்சல் கலந்த கோபத்தில் கத்தி விட்டு அங்கிருந்து சென்று விட்டார் உமாதேவி...

சாரலின் அருகில் சென்ற செந்தில்... அவளுடைய கையை பிடித்து பார்த்தார்...

அவளுடைய இடது கையின் பாதி வரை சிவந்து அங்கங்கே கொப்பளம் போட்டு இருந்தது...

"அம்மாடி சாரல்..." என்று மென்மையாக கூப்பிட்டார் செந்தில்...

"அவங்க கிட்ட இருந்து என்னை காப்பாற்றியதற்கு ரொம்ப தேங்க்ஸ் அப்பா... எனக்காக நீங்க இரண்டு வார்த்தை பேசியதை கேட்டே... நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... இந்த காயம் இன்னைக்கு இல்லா விட்டாலும் நாளைக்கு ஆறி விடும் அப்பா... ஆனால்... மனதில் இருக்கும் காயம் என்னைக்கும் ஆறாது ப்பா..." என்று சொல்லி விட்டு அவள் கையை காட்டி...

"எனக்கு இது சத்தியமாக வலி தெரியலை அப்பா..." என்று சொல்லி அவளுடைய கண்களை துடைத்துக் கொண்டாள் சாரல்...

"சாரல் என் கூட கொஞ்சம் வா மா... நான் உனக்கு மருந்து போட்டு விடுறேன்..‌." என்று சொன்னார் செந்தில்நாதன்...

அவள் ஒரு விரக்தி புன்னகையை செய்து விட்டு... "எனக்கு எதுக்கும் மருந்து போட வேண்டாம் அப்பா... நான் ஏற்கனவே ரொம்ப நொந்து போய் இருக்கேன்... ஒரு காயம் பட்டு அதுக்கு மருந்தும் போட்டு விட்டால்... எல்லாம் சரியாக போய் விடுமா அப்பா..." என்று ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தமாகவும் நிதானமாகவும் சொன்னாள் திகழொளி...

அவள் சொன்னதை கேட்டு... பதில் ஏதும் சொல்ல முடியாமல் தடுமாறி நின்றார் செந்தில்நாதன்...

அங்கிருந்து எழுந்து கொண்டவள்... அப்பாவை பார்த்து... "நான் என் ரூமுக்கு போறேன்..." என்று சொல்லி விட்டு... அங்கே நிற்காமல் அவளுடைய அறைக்கு சென்று... கதவை தாழிட்டு கொண்டாள் சாரல்.‌..

மனம் உடைந்து போகும் மகளை பார்த்த செந்தில்... 'ச்சே... நான் என் பொண்ணு சாரலை... வீட்டில் நடக்கும் எல்லாத்தையும் பார்த்து... எதுவும் பேசாமல் இருந்தே.. அவளை ரொம்ப காயப் படுத்தி இருக்கேன் போல... பொண்டாட்டியை மட்டும் நினைப்பில் வைத்து இப்படி பிள்ளையை தவிக்க விட்டுட்டேனே...' என்று மனதில் நினைத்து வருந்திக் கொண்டார் அவர்... பிறகு அவரும் வேலைக்கு கிளம்பி போய் விட்டார்...

சாரல் அறைக்கு வந்து... அவளுடைய அப்பத்தாவின் புகைப்படத்தை வலது கையில் எடுத்து கொண்டு... "அப்பத்தா... இங்க பார்த்தியா என் கையை... ரொம்ப வலிக்குது தெரியுமா... என்னால இந்த வீட்டில் இருக்க முடியலை அப்பத்தா... தினம் தினம் ஏதாவது ஒரு பிரச்சினை... நானும் ஒரு சின்ன பொண்ணு தானே... எதுக்கு எனக்கு மட்டும் இவ்வளவு கஷ்டம்... இதை எல்லாம் பார்த்துட்டு இருக்கும் அந்த கடவுளுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா... ரொம்ப எரியுது அப்பத்தா... என்னால சுத்தமாக வலி தாங்க முடியலை... என்னை நீ கூட்டிட்டு போயிடு அப்பத்தா... நான் உன் கூட வரேன்... என்னை கூட்டிட்டு போயிடு அப்பத்தா..." என்று அவள் புலம்பிக் கொண்டே... அந்த ஃபோட்டோவை வலது கையில் பிடித்தபடி... இடது கையின் வலியோடு அப்படியே உறங்கி விட்டாள் திகழொளி சாரல்...

அவள் மதியமும் எதுவும் சாப்பிடவில்லை... உமாவும் அவளை போய் எழுப்பி... சாப்பிடு என்று சொல்ல வில்லை... அவளை கண்டுக் கொள்ளாமல்... தான் உண்டு தன் வேலை உண்டு என்று தான் இருந்தார் உமாதேவி... அவள் வெளியேயும் வரவில்லை...

இரவு வீட்டுக்கு வந்த செந்தில்நாதன்...

"உமா சாரல் ஏதாவது சாப்பிட்டாலா..." என்று உமாவிடம் கேட்டார் அவர்...

"அந்த மகாராணிக்கு எதுவும் வேண்டாமாம்... கூப்பிட்டால் கூட வர முடியாது என்று மூஞ்சியில் அடித்த மாதிரி சொல்லிட்டா... ஹ்ம்ம் எனக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கு என்று உங்களுக்கு தெரியுமாங்க..." என்று வராத அழுகையுடன் மூக்கை உறிஞ்சி கொண்டே சொன்னார் உமாதேவி...

"சாரல் அப்படியா சொன்னா... ம்ம்... அவளுக்கு ரொம்ப தான் கொழுப்பு ஏறி போச்சு... கொஞ்சம் விட்டால் அதிகமாக பண்ணுவாள்... நீ விடு வேணும் என்றால் அவளே வந்து சாப்பிட்டு கொள்வாள்... நீ வா எனக்கு சாப்பாடு போடு..." என்று கோபத்துடன் சொன்னார் செந்தில்நாதன்...

"ம்ம்ம் சரிங்க... நான் நீங்க சொன்னது போல... அப்படியே செய்கிறேன்..." என்று சொல்லி கணவருக்கு உணவு பரிமாறி விட்டு... அவரும் சாப்பிட்டு இருவரும் ‌போய் படுத்துக் கொண்டார்கள்...

நள்ளிரவில் சாரலின் அண்ணன் தமிழ்நெஞ்சன் குடித்து விட்டு வந்து கதவை தட்ட... உமா சத்தம் இல்லாமல் திறந்து... அவனை உள்ளே இழுத்துக் கொண்டு போய் படுத்து வைத்து விட்டு... அவரும் போய் தூங்க சென்றார் உமாதேவி...

இதை எல்லாம் கண்டும் காணாமல்... அழுது கொண்டே அந்த வானில் உள்ள நிலவையும் நட்சத்திரங்களையும் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள் திகழொளி சாரல்....

***********

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்... 👇👇👇

எழுத்தாளினி நிசப்தா - Comments
 
நிசப்தம் - 4

அடுத்த நாள் காலை சூரியன் சுறுசுறுப்பாக புவியில் மலர்ந்து கொண்டு இருக்க... அந்த கதிர்கள் எல்லாம் சாரளத்தின் பக்கத்தில் அமர்ந்த படியே உறங்கிக் கொண்டு இருந்த சாரல் மீது பட்டது...

சூரியனின் கதிர்கள் அவள் மீது பட்டு... கொஞ்சம் கண்கள் கூசிட... துயில் கலைந்து கொஞ்சம் விலோசனங்களை விரித்து பார்த்தாள்...

சாரலின் கையில் இருந்த அப்பத்தாவின் புகைப்படத்தை... வலது கையால் சுவற்றில் மாட்டி விட்டு... இடது கையை பார்க்க... அதுவோ செக்க செவேள் என்று சிவந்து போய் காட்சி கொடுத்தது...

அவள் மணியை பார்க்க எழு என்று காட்டியது... எழுந்து சென்று அவளுடைய பள்ளி சீருடையை எடுத்துக் கொண்டு... பச்சை தண்ணீரில் குளிக்க சென்றாள் சாரல்...

சூடு பட்ட கரத்தின் மீது நீர் துளிகள் விழ விழ எரிச்சல் கொடுத்தது... அதை எல்லாம் தாங்கி கொண்டு குளித்து முடித்து... உடைகளை அணிந்துக் கொண்டாள்...

பின்னர்... அவளே கஷ்டப்பட்டு தலை சீவி... இரட்டை பின்னல் போட்டு கொண்டு... முகத்தில் அழுத தடம் தெரிய கூடாது என்று எண்ணி.. கொஞ்சம் பவுடரை பூசி... ஒரு மெரூன் கலர் ஸ்டிக்கர் பொட்டை வைத்தவள்... அவளுடைய ஸ்கூல் பேக்கை எடுத்துக் கொண்டு... வீட்டில் யாரிடமும் சொல்லி விட்டு செல்லாமல்... அப்படியே பள்ளிக்கு கிளம்பி விட்டாள் திகழொளி...

வீட்டில் உமாதேவியோ சாரல் இன்னும் வெளியே வராமல் இருப்பதால்... அவள் அறைக்கு சென்று பார்க்கலாம் என்று நினைத்து அங்கே போனார்... அங்கு சாரல் இல்லாமல் போக... அவளுடைய புத்தக பை இருக்கிறதா எனப் பார்க்க அதுவும் இல்லை... அதனை கண்டதும் உமாவுக்கு ஆத்திரம் தான் பொங்கி வந்தது...

அவரோ... "எவ்வளவு திமிரு இருந்தால்... என்னிடம் கூட சொல்லாமல்... உன் பள்ளிக்கூடத்திற்கு நேரத்துக்கு முன்னமே போய் இருப்ப... அவ்வளவு கொழுப்பு ஏறிப் போச்சா..." என்று குரலை செருமிய படி சொல்லிய உமா நேராக சென்றது என்னமோ செந்தில் நாதனிடம் தான்...

"உங்க மவளுக்கு இருக்கும் திமிரை‌ பார்த்தீங்களா... என்ன எகத்தாளம் இருந்தா... அவ சொல்லாம கொள்ளாம இங்கிருந்து பள்ளிக்கூடம் போய் இருப்பா... நாளை பின்ன இதே மாதிரி வீட்டை விட்டு ஓடிப் போனால்... என்ன பண்ணுவீங்க... இதோ பாருங்க நானும் சொல்லிட்டே தான் இருக்கேன்... பொட்டை கழுதைக்கு படிப்பு எதுக்கு... அவ படிச்சி கிழச்சது எல்லாம் போதும் சாமி... சட்டு புட்டுன்னு அவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சி... நம்ம கடமையை நாம மரியாதையுடன் முடிச்சிக்கலாம்... இதுக்கு நீங்க என்னங்க சொல்றீங்க..." என்று கத்தி... அவரிடம் எகிறிக் கொண்டு இருந்தார் உமாதேவி...

அவரை பார்த்து கொண்டு இருந்த செந்தில்நாதன்... "எனக்கு வேலைக்கு நேரம் ஆச்சு... நான் கிளம்புறேன்... எனக்கு சாப்பிட எதுவும் வேண்டாம்... நான் வெளியே பார்த்துக் கொள்கிறேன்..." என்று சொல்லி விட்டு... மனதில் உமா சொன்னதை யோசித்து கொண்டே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்...

அவர் சென்றதும்... "விவஸ்தை கெட்ட மனுஷர்... ஒரு விஷயத்தை சொன்னால்... அதை காது கொடுத்து என்னன்னு கேட்க மாட்டாரு... அப்போ தான் அம்மா முந்தானையை பிடிச்சு... நாய் குட்டியை போல சுத்திட்டு கிடந்தார்... இப்ப பொண்டாட்டி பேச்சை கேட்டு பூம்பூம் மாடு போல தலை ஆட்டினால் தான் என்ன... எல்லாம் நான் வாங்கி வந்த வரம் அப்படி... நைட்டு என்னிடம் தானே நீங்க வந்து... குழைந்து கிட்டு... உமா சுமா ன்னு நெருங்கி வருவார்... கச்சேரியை அப்ப வச்சிக்கிறேன்..." என்று உமா வசை பாடிக் கொண்டு இருக்க...

"சாரல்... சாரல்..." என்று அழைத்த கயலின் குரல் கேட்டது...

அதை கேட்டு வெளியே போனார் உமா...

அவரை கண்டதும்... "ஆன்டி... சாரலை கூப்பிடுங்க... ஸ்கூல் போக டைம் ஆச்சு..." என்று நக்கலாக சொன்னாள் கயல்...

உமாவிடம் இருந்து... "அந்த சீமாட்டி... இங்க இல்ல... வீட்டில் யாரிடமும் சொல்லாமல்... எங்க போய் தொலைந்தாலோ தெரியலை...." என்று வார்த்தைகள் எரிச்சலாக வந்து விழுந்தன...

"என்னது இல்லையா..." என்று சொல்லி சந்தேகமாக அவரை பார்த்தாள் கயல்...

"ஆமா இந்த மவராணி... காலையில் பையை மாட்டிட்டு என்னிடம் எதுவும் சொல்லாமல்... பள்ளிக்கூடம் போயிட்டா... அங்க தான் போனாலோ இல்லை... வேற எங்க ன்னா போனாலோ... யாருக்கும் தெரியும்..." என்று சொன்னார் உமா...

'நம்ம சாரல்.. இப்படி எல்லாம் பண்ண கூடிய ஆள் இல்லயே... ஏதோ பிரச்சினை ஒன்னு நடந்து இருக்கும் போல...' என்று மனதில் நினைத்து கொண்ட கயல்.‌.. உமாவிடம்... "ஆமா... அவள் சாப்பிட்டு போனாலா..." என்று கேட்க...

"ஆமா..... அவளுக்கு அது ஒன்னு தான் கொறை... திமிர் பிடித்தவள்... ஒருவேளை சாப்பிடலை என்றால் ஒன்னும் ஆகிடாது... அகப்பை குறைந்தால் இந்த கொழுப்பு எல்லாம் மொத்தமாக அடங்கி போவும்..." என்று மனசாட்சி இல்லாமல் பேசினார் உமாதேவி...

அவரை வெறுப்புடன் பார்த்த கயல்... "குட்டக் குட்டக் குனிகிறவனும் முட்டாள்... குனியக் குனியக் குட்டுகிறவனும் முட்டாள் தான்... இந்த மனசாட்சி இல்லாமல் பேசும் நீங்களும் முட்டாள் தான்... உங்க பேச்சை எல்லாம் கேட்டு... அதை மனசை கல்லாக்கி... எல்லா கஷ்டத்தையும் தாங்கிட்டு... பேசாமல் போறாளே... நீங்க பெத்து எடுத்த முத்து... அவளும் ஒரு முட்டாள் தான்..." என்று கோபத்துடன் கத்தினாள் கயல்...

"என்னடி என் கிட்டயே இப்படி எகிறிட்டு கிடக்க... மரியாதையாக போயிடு... இல்ல சண்டை ஆகிடும் பார்த்துக்க... அவள் கொழுப்பெடுத்த போனால்... நீ என்னிடம் தேவை இல்லாமல் பேசிட்டு இருப்பீயா..." என்று அவரும் கத்த...

"ச்சே... மொதல்ல வாயை மூடுங்க... சாரலை பற்றி பேச உங்களுக்கு கொஞ்சம் கூட அருகதையே கிடையாது... முதலில் நீங்க பெத்து வளர்த்த மகன்... நேற்று குடிச்சிட்டு ரோட்டில் விழுந்து கிடந்தான்... அந்த குடிகாரனை என் அண்ணன் தான் உங்க வீட்டு முன்னாடி விட்டுட்டு போனான்... உங்களுக்கு அப்படி இருப்பவனை திருத்த துப்பு இல்ல... அவனை மேலும் மேலும் தலையில் தூக்கி வைத்து ஆடி... இன்னும் கெடுத்து வச்சிட்டு இருக்கீங்க... நீங்க வந்து சாரலை திட்டி... பேசிட்டு இருக்கீங்க... முதலில் உங்க புள்ளையின் நடவடிக்கையை கவனிக்க பாருங்க..." என்று ஆத்திரத்தில் அனைத்தையும் சொல்லி விட்டு அவளுடைய பள்ளியை நோக்கி சென்று விட்டாள் கயல்...

உமாவும் அவள் போனதும் வீட்டின் கதவை சாற்றி விட்டு..‌. எதுவும் நடக்காதது போல உள்ளே சென்று விட்டார்...

அங்கே சாரலோ எட்டு மணிக்கு எல்லாம் பள்ளிக்கூடம் சென்று விட்டதால்... அங்கே மாணவிகள் யாரும் இல்லாமல் வெறிச்சோடி தான் இருந்தது...

அங்கிருந்த வாட்ச்மென் தாத்தா எழுந்து வந்து... "என்ன பாப்பா இவ்வளவு நேரமாகவே பள்ளிக்கூடம் வந்துட்டு இருக்க..." என்று கேட்டார் அவர்...

"அ.. அது வந்து தாத்தா... ஹான்... எனக்கு கொஞ்சம் எழுதும் வேலை இருக்கு... அதான் தாத்தா சீக்கிரமா வந்துட்டேன்..." என்று சொன்னாள் திகழொளி...

"சரி டா கண்ணு... நீ போய் உன் படிப்பை பாரு..." என்று சொல்லி விட்டு... வாட்ச்மென் தாத்தா சேரில் அமர்ந்து கொண்டார்...

அவரிடம் புன்னகையுடன் சரி என்று தலை அசைத்து விட்டு அவளுடைய வகுப்பறைக்கு சென்றாள்...

அங்கே போனதும் அவளுடைய இடத்துக்கு போய்... பையை கழட்டி விட்டு... அவள் வலது கையை தலைக்கு வைத்து சாய்ந்து கொண்டு... அப்படியே படுத்துக் கொண்டாள்...

திகழொளி நேற்று காலை மட்டும் தான் கொஞ்சமாக சாப்பிட்டது... அதன் பிறகு எதுவும் சாப்பிடவும் இல்லை... தண்ணீரை கூட குடிக்க வில்லை... அதனால்... அவளுக்கு உடல் எல்லாம் ரொம்ப சோர்ந்து போய்... தெம்பு இல்லாமல்... அசதியாக இருப்பது போல இருந்தது...

கொஞ்ச நேரத்தில் அந்த பக்கமாக சென்ற ஒருவர்... சாரலை பார்த்ததும் உள்ளே வந்தார்...

"சாரல்..." என்று அவர் அழைக்க...

அந்த குரலை கேட்டதும் தலை நிமிர்ந்து பார்த்தாள் சாரல்...

"பிரியா மிஸ்... நீங்களா..." என்று மென்னகையுடன் கேட்டாள் அவள்...

"ஆமா... என்ன நீ இவ்வளவு சீக்கிரமா ஸ்கூலுக்கு வந்துட்டு இருக்க..." என்று பிரியா மிஸ் கேட்க...

சாரலின் மனதில் இன்னொரு கதை தோன்ற... அதையே சொல்ல தயார் ஆகினாள்...

"அதுவா மிஸ்... வீட்டில் எல்லாரும் விடியற் காலையில் குலதெய்வம் கோவிலுக்கு போய்ட்டாங்க... நான் தலைக்கு ஊற்றிக் கொண்டேன்... அதனால் நான் போகலை... வீட்டில் நான் மட்டும் தனியாக இருந்தேன்... ரொம்ப போர் அடிச்சது... அதான் மிஸ்... நான் கிளம்பி ஸ்கூலுக்கு வந்துட்டேன்..." என்று புன்னகை மாறாமல் பொய்யை உண்மையை போல சொன்னாள் திகழொளி...

"சரி சரி..." என்று சொல்லிய பிரியா மிஸ் எதர்ச்சையாக சாரலின் சிவந்திருந்த கையை பார்த்து... பதறி கொண்டே... அவள் கையை மெதுவாக பிடித்து... " ஏய் சாரல்... கை என்னமா ஆச்சு... இப்படி சிவந்து போய் இருக்கு..." என்று கேட்டார் அவர்...

"அது... மிஸ்... வந்து..." என்று சாரல் வார்த்தை வராமல் தடுமாற...

"என்னமா சொல்லு... என்னாச்சு..." என்று சொல்லி அவளை பார்த்தார் பிரியா...

"காலையில் நான் குளிக்க சுடு தண்ணீர் வைத்தேன்... அதை நான் எடுத்துட்டு போகும் போது... பிடிக்க தெரியாமல் பிடிச்சு... கை தவறி... அது கீழே விழுந்து... அப்படியே என் கை மேலயும் கொட்டி விட்டது மிஸ்..." என்று பாவமாக சொன்னாள் சாரல்...

"அச்சோ... சாரல் அதை எல்லாம் பார்த்து பத்திரமாக பண்ண மாட்டீயா மா... பாரு எப்படி சிவந்து போய் இருக்குன்னு... நீ இங்கேயே இரு... நான் போய் இதுக்கு மருந்து எடுத்துட்டு வரேன்..." என்று சொன்னார் பிரியா...

"அது எல்லாம் வேணாம் மிஸ்... இது சீக்கிரமா சரியாக போயிடும்..." என்று சொல்லி மறுத்தாள் சாரல்...

"ஷ்ஷ்ஷ்... நீ சும்மா இரு சாரல்... நான் போய் கொண்டு வரேன்..." என்று சொல்லி விட்டு அங்கிருந்து ஆசிரியர் அறைக்கு சென்றார் பிரியா...

'ஹ்ம்ம்... மத்தவங்களுக்கு இருக்கும் அக்கறை கூட என்னை பெத்தவங்களுக்கு இல்லையே... இதுக்கு நான் யாரை தப்பு சொல்ல முடியும்...' என்று மனதில் நினைக்கும் போதே கண்ணில் நீர் சுரந்தது...

அதற்குள் பிரியா மிஸ் வந்து விட... அவருக்கு தெரியாமல் கண்களை துடைத்துக் கொண்டு... சிரித்தபடி அவரை பார்த்தாள் திகழொளி...

பிறகு... அவர் சாரலுக்கு மருந்து போட்டு விட்டார்...

"சாரல் கொஞ்சம் எரியும் தான்... பட் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ..." என்றார் பிரியா...

'இதை விட அதிகமாக மனசு தான் ரொம்ப வலி எடுக்குது... அதை கம்பேர் பண்ணும் போது... இந்த வலி பெருசா தெரியல...' என்று மனதில் நினைத்து கொண்டு... வெளியே அவரிடம் சரி என்று தலை அசைத்தாள் சாரல்...

"சரி மா... நான் வரேன்... பத்தாவது பிள்ளைகளுக்கு இன்னைக்கு ஸ்பெஷல் கிளாஸ்... நான் போய் அவங்களுக்கு டெஸ்ட் வைக்கனும்... நான் போய்ட்டு வரேன்..." என்று அன்பாக சொன்னார் பிரியா மிஸ்...

"சரி மிஸ்... நீங்க போங்க... நான் பார்த்துக் கொள்கிறேன்..." என்று சாரல் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே... கயல் கோபத்துடன் உள்ளே நுழைந்தாள்... அவள் பிரியாவை கண்டதும்... தன் கோபத்தை மறைத்து விட்டு உள்ளே போனாள்...

"குட் மார்னிங் பிரியா மிஸ்..." என்று சிரித்தபடி சொன்னாள் கயல்...

"குட் மார்னிங் கயல்... போ சாரல் தனியாக இருக்கா பாரு... கையில் வேற சுடு தண்ணீர் கொட்டி விட்டதாம்... நான் இப்ப தான் மருந்து போட்டு விட்டேன்... நீ போய் பாரு டா..‌ சாரி.. இப்ப எனக்கு நேரம் ஆகிடுச்சு..." என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டார் பிரியா மிஸ்...

அவர் சென்றதும் சாரலிடம் சென்ற கயல்... சாரலோ அவளை பார்க்காமல் கீழே குனிந்து கொண்டாள்...

கயல் அவளிடம் எதுவும் பேசாமல்... சாரலை கண்டு முறைத்து விட்டு... அவளுடைய பையில் இருந்து ஒரு டப்பாவை எடுத்தாள்... அதை திறந்து... அதில் இருந்த இட்லியை பிட்டு... அவளுடைய வாய் அருகே நீட்டினாள் கயல்... சாரல் கண்ணீருடன் அவளை பார்க்க...

"தயவு செய்து என்னை திட்ட வைக்காத சாரல்... செம கடுப்பில் இருக்கேன்... ஒழுங்கா மரியாதையாக... நான் கொடுக்கும் இதை சாப்பிடு... இல்லாட்டி சத்தியமா சொல்ற உன் கிட்ட எப்பவும் பேசவே மாட்டேன் டி..." என்று கயல் சினத்துடன் சொல்ல...

அவள் அழுது கொண்டே... கயல் தந்த இட்லி துண்டை வாங்கி... மெல்ல முடியாமல் மென்று விழுங்கிக் கொண்டாள்...

"இதை பாரு இப்ப மட்டும் கண்ணை கசக்கிட்டு இருந்த அறைந்து விடுவேன் சாரல்... நீ மொதல்ல அழாமல் கண்ணை துடை..." என்று கயல் அதட்டி சொல்ல... சாரலும் அவள் கண்களை துடைத்து கொண்டு... அவளுடைய தோழி ஊட்டிக் கொண்டு இருப்பதை சாப்பிட்டாள்...

கயல் வெளியே முறைத்துக் கொண்டே இருந்தாலும்... அவள் நிலையை எண்ணி... உள்ளுக்குள் கஷ்டமாக தான் இருந்தது...

அந்த டப்பாவில் இருந்த ஐந்து இட்லியை... சாரலுக்கு முழுமையாக ஊட்டி விட்டு... அவளுடைய கையை கழுவிக் கொண்டு... அவளுடைய பக்கத்தில் வந்து அமர்ந்தாள் கயல்...

"நேத்து நான் போனதுக்கு அப்பறம் அங்க என்னாச்சு ஆச்சு சாரல்... ஒழுங்கா மரியாதையாக உண்மையை மட்டும் சொல்லு டி... எப்படி உன் கை இப்படி சிவந்து போச்சு..." என்று அழுத்தமாக கேட்டாள் கயல்...

சாரலும் ‌நேற்று நடந்த ஒன்று விடாமல் அனைத்தையும் கயலிடம் சொல்லி முடித்தாள்...

"உங்க வீட்டில் இருக்கும் யாருக்கும் மனசாட்சியே இல்லையா டி... இப்படி கூடவா கல்லு மனசா இருக்க முடியும்... நீ நேத்து எல்லாம் சாப்பிடலையே... அதில் இரக்கம் கொண்டு... ஒரு வார்த்தைக்கு கூட சாப்பிடு என்று சொல்ல மாட்டீங்களா..." என்று ஆத்திரம் குறையாமல் பேசிக் கொண்டு இருந்தாள் கயல்...

அவளை கட்டிக் கொண்டு அழுத திகழொளி... "எனக்கு அப்படியே செத்து போலாம் போல இருக்கு கயல்..." என்று லூசு போல சொல்லி கொண்டே இருக்க...

அவள் கன்னத்தில் பட்டென்று அறை கொடுத்தாள் கயல்...

*******

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் 👇👇👇

எழுத்தாளினி நிசப்தா - Comments
 
நிசப்தம் - 5

கயலை இறுக கட்டிக் கொண்டு அழுத திகழொளி... "எனக்கு அப்படியே செத்து போலாம் போல இருக்கு கயல்..." என்று லூசு போல சொல்லி கொண்டே இருக்க...

இப்படி தன்னம்பிக்கை இல்லாமல் பேசும் தோல்வியைக் கண்டு மனதில் வருத்தம் தான் வந்தது...

"சாரல் எதுக்கு டி இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க முதல்ல நிறுத்து டி..." என்று கயல் தன்மையாக சொன்னாலும் கேட்க வில்லை...

"சாரல் போதும் இத்தோடு நிறுத்திக் கொள்..." என்று கோபத்துடன் சொன்னாலும் கேட்க வில்லை...

கயலின் பேச்சு அவள் அழுகையை நிறுத்தவில்லை என்று அடுத்தக் கட்டத்திற்குச் சென்று... அவள் கன்னத்தில் பட்டென்று அறைந்து இருந்தாள் அவள்...

அவளையே இயலாமையுடன் பார்த்துக் கொண்டு இருந்தால் திகழொளி...

"நீ என்ன மெண்டலா டி... இப்படி சொன்னதே சொல்லிட்டு இருக்க... செத்து போகனுமாமே செத்து போகனும்... இனி ஏதாவது அப்படி சொல்லி பார்... உன் வாயை இழுத்து வச்சு கத்தியில் வெட்டி போடுறேன்... உனக்கு இப்பதான் பதினேழு வயசு ஆகுது சாரல்... ஆனால்... உன் பேச்சு என்னமோ... நீ அப்படி எல்லாத்தையும் ஆசை தீர அனுபவித்து வாழ்ந்து... நல்ல வாழ்க்கையை வாழ்ந்து முடிச்சி பாட்டி ஆகிட்டது போல பேசிட்டு இருக்க டி சாரல்... இதை எல்லாம் கேட்கும் போது... எனக்கு வாயில நல்லா வருது... வேணாம் டி புள்ள... என்ன தேவை இல்லாமல் பேசி திட்ட வைக்காதே..." என்று ஆத்திரத்தில் சொல்லி கொண்டு இருக்கும் போதே... வகுப்பறைக்கு அங்கு கல்வி பயிலும் சக மாணவிகள் வந்து கொண்டு இருந்தனர்...

கயல் அதை கண்டதும் மெல்லிய குரலில்... "சாரல் இங்க பாரு டி... கிளாஸுக்கு எல்லாரும் வந்துட்டு இருக்காங்க... ப்ளீஸ் டா உன் அழுகையை நிறுத்து... முதலில் உன் கண்ணை துடைச்சு கொள்..." என்று சொல்லி அவளே சாரலின் கண்களை துடைத்து விட்டாள்...

அப்போது சாரலையும் கயலையும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டே... அந்த ஆறு பேர் கொண்ட நண்பிகள் குழு..‌ சிரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தனர்...

அவர்களை கண்டு இருவருக்குமே கோபம் தான் வந்தது...

"கயல்..."

"சொல்லு டி..."

"அவளுங்க எதுக்கு டி என்னை அப்படி பார்த்துட்டு போறாளுங்க... எனக்கு பிடிக்கலை டி..." என்று சீறினாள் திகழொளி...

"ஹ்ம்ம்... நீ கண்ணை கசக்கினாள் தான் அவளுகளுக்கு மனசுக்குள்ள குளு குளுன்னு இருக்குமே..." என்று எரிச்சலாக சொன்னாள் கயல்...

அவள் சொன்னதை கேட்டு... ஹ்ம்ம்... என்று ஒரு பெருமூச்சு விட்டாள் திகழொளி...

அவள் சிந்தனையோ எப்போதும் போல இரு வருடங்கள் பின் நோக்கி சென்றன...

அவர்களின் நட்பு வட்டார குழுவின் பெயர்... "எயிட் ஸ்டார் கேர்ள்ஸ்..." அதில் சாரல் கயலுடன் சேர்த்து மொத்தம் எட்டு நண்பிகள் இருந்தனர்...

தாகினி... பூவிழி... அஞ்சுப்பிரியா... மாயா... ரோகிணி... ஜோஷிகா... இவர்களை தான் அந்த ஆறு பேர்...

கயல் மட்டும் சிறு வயது முதலே தோழி... அதனால் அவளை தவிர்த்து இவர்கள் ஆறுவரும் ஆறாம் வகுப்பில் இருந்தே சாரலுடன் ஒன்றாக படித்து வருகின்றனர்...

அப்போது தான் சாரலின் அம்மா வீட்டுக்கு வந்து ஒரு நான்கு அல்லது ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் இருந்தது... அந்த சமயத்தில் வீட்டில் எப்போதுமே சண்டை மட்டும் தான் நடந்து கொண்டு இருக்கும்... அப்போது சாரலுக்கு அவளுடைய அப்பாவின் ஆதரவு கொஞ்சம் இருந்ததால்... உமாவின் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசுவாள் திகழொளி...

உமாதேவி இதை எல்லாம் அவளுடைய நெருங்கிய தோழிகளிடம் பற்றி தப்பு தப்பாக சொல்லி விட்டார்...

"என் பொண்ணு என்னை அம்மா ன்னு கூப்பிட மாட்டேங்குது... நான் அவளுக்கு புடிச்சதை எல்லாம் பண்ணி... பாசமாக பார்த்துக் கொண்டாலும் அவள் என்னை வெறுப்புடன் பார்த்து முகம் சுழிக்கிறாள்... நான் என்ன செய்தாலும் ஏதாவது ஒரு குறை சொல்லி கொண்டே இருக்கிறாள்... எனக்கு உடம்பு முடியலை... ஏதாவது ஒன்னே ரெண்டு வேலையாவது செய்து கொடு மா சாரல் என்று சொன்னால் அதுக்கும் திமிராக பேசி... அது எல்லாம் என்னால செய்ய முடியாது என்று சொல்லிட்டு அவள் டிவி பார்த்துட்டு இருக்கா.. இதை எல்லாம் பார்த்து அவங்க அப்பாவும் கண்டிக்க மாட்டேங்குறார்... நீங்க அந்த சாரலோட பிராண்டையோ பிரண்டையோ ஏதோ ஒன்னு... அப்படின்னு என் புள்ள சொன்னான்... அதான் உங்க கிட்ட சொல்லிட்டு போகலாம் என்று வந்தேன் கண்ணுங்களா... நீ தான் என் மகளிடம் எடுத்து சொல்லி புரிய வைக்கனும்..." என்று ஏதோதோ சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டார் உமாதேவி...

இதை எல்லாம் கேட்டு... சாரலின் தோழிகள் அனைவரும் நம்பி விட்டனர்... கயல் அப்போது தான் வயசுக்கு வந்த சமயம் என்பதால் அவள் பள்ளிக்கு வரவில்லை... அதை பயன்படுத்தி தான் உமா இங்க வந்து பேசியது...

அதனால் அவள் வந்ததும் எப்போதும் போல அனைவரிடமும் சிரித்து பேசிக் கொண்டு இருந்தாலும்... யாரும் அவளிடம் முகம் கொடுத்து பேசவில்லை... அவள் ஏனென்று கேட்டாலும் யாரும் எதுவும் சொல்ல வில்லை... எந்த ஒரு காரணமும் தெரியாமல் திகழொளியும் தவித்துக் கொண்டு இருந்தாள்...

இரண்டு நாட்கள் இப்படியே கழிந்து சென்றது... அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் சாரலே அவர்களிடம் பேச சென்றாள்...

"தாகினி எதுக்கு என்னிடம் யாரும் பேச மாட்றீங்க... அப்படி நான் என்ன தப்பு பண்ணேன்..." என்று அழுத்தமாக கேட்டாள் திகழொளி சாரல்...

"இதோ பாரு சாரல்... நீ பண்றது எல்லாம் எங்களுக்கு சுத்தமாக பிடிக்கல..." என்று சொன்னாள் ரோகிணி...

"ஆமா... அதான் நாங்க உன்னிடம் பேச விரும்பலை..." என்றாள் அஞ்சுப்பிரியா..

"அப்படி நான் என்ன டி பண்ணேன்... அதை பிடிக்கலை என்று சொல்லிட்டு இருக்கீங்க..." என்று கோபத்துடன் கேட்டாள் சாரல்...

"உன்னை இதுவரை நாங்க அப்பாவி என்று மட்டும் தான் நினைத்தோம்... ஆனால் நீ இப்படி இருப்ப ன்னு நாங்கள் கொஞ்ச கூட எதிர் பார்க்கலை..." என்று தாகினி...

"பெத்த அம்மா கிட்டயே யாராவது அப்படி நடந்து கொள்வார்களா... ஆனால் நீ அப்படி தான் நடந்து இருக்க..." என்று ஜோஷிகா சொன்னாள்...

"உங்க அம்மா பாவம் எவ்வளவு கஷ்டப் படுறாங்க தெரியுமா உனக்கு..." என்று மாயா சொல்ல...

"உன்னை பத்து மாசம் சுமந்த பெற்றெடுத்த அம்மா கிட்டயே உன்னால பாசம் காட்டி உண்மையாக இருக்க முடியலை... இதுல எங்க இருந்து இப்ப வந்த ஃப்ரண்ட்ஸ் மீது பாசமாக இருப்பாள்... எல்லாமே வெளி வேஷம் மட்டும் தான்..." என்று பூவிழி சொல்லிக் கொண்டு இருக்க...

அதை கேட்டு கொண்டு இருந்த சாரலின் பொறுமை காற்றில் பறந்து விட்டது...

"போதும் நிறுத்து டி... என்ன சொன்ன சொன்ன நான் உங்க மேல காட்டிய பாசம் வெளி வேஷமா... கண்டிப்பாக என் புத்தியை செருப்பால தான் அடிச்சிக்க வேண்டும் பூவிழி... உங்களை நான் நேசிச்சேன் டி... ஆனால்... என் மீது நம்பிக்கை இல்லாமல் போச்சு... அந்த நம்பிக்கை இருந்து இருந்தால்... என் கிட்ட இப்படி எல்லாம் பேசி இருக்க மாட்டீங்க டி... இந்த கேள்விகளை எல்லாம் என் காதில் கேட்கும் போது எவ்வளவு கஷ்டமாக இருக்கு தெரியுமா... நான் வீட்டில் அனுபவிக்கும் வேதனையை விட இது தான் பெருசாக இருக்கு..." என்று சொல்லும் போதே சாரலுக்கு கண்களில் இருந்து நீர் ஊற்று கிளப்பியது...

அதனை துடைத்து கொண்ட திகழொளி... "ஹ்ம்ம்... உங்களை எல்லாம் நான் ஃப்ரண்ட்டா நினைத்து பாருங்க... அது தான் நான் செய்த மிக பெரிய தப்பு... நீங்க லைனா சொல்லிட்டு இருந்தீங்களே என் மேல மன்னிக்க முடியாத குற்றச்சாட்டு... அதில் எல்லாம் என் மேல தப்பே கிடையாது... என் மேல தப்பு இருந்தால் மட்டும் தான் நான் மனம் உடைந்து போய் அழுதுட்டு இருக்கணும்... இந்த இரண்டு நாளாக நான் ஏன் பேசலை எதுக்கு பேசலை என்று காரணம் தெரியாமல் கஷ்டப் பட்டுட்டு இருந்தேன்... பட்... இப்ப சொல்றேன்... நீங்க என்ன என்னை ஒதுங்கி வைப்பது... நான் சொல்றேன்... இனி நீங்க யாரோ‌ நான் யாரோ... உங்களை மனதார தோழியா நினைத்ததற்கு ரொம்ப பெரிய கைமாறு செய்து விட்டீர்கள்... இனி நீங்களா பேச வந்தாலும்... இந்த சாரல் உங்க யாரிடமும் பேச‌ மாட்டாள்..." என்று பொறுமையாக சொல்லி விட்டு... அவளுடைய புத்தக பையை எடுத்து கொண்டு... முன்னாடி சென்று உட்கார்ந்து விட்டாள் திகழொளி சாரல்...

பிறகு... அவர்களும் சாரலிடம் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை... அப்படியே இரு நாட்கள் சென்றது...

அன்று தான் கயல் பள்ளிக்கு வந்தால்... வகுப்புக்கு சென்றதும் அன்று நடந்த சண்டை கேட்டு கோபம் வந்து... அவர்களிடம் சண்டைக்கு போய் நறுக்கென்று நானூறு வார்த்தைகளை கேட்டு விட்டு வந்தாள்...

அதன் பிறகு இருவரும் அவர்களுடன் பேசுவது கிடையாது... அவர்களே பேச வந்தாலும் சாரல் விலகி சென்று விடுவாள்... இது தான் இவ்வளவு நாளாக நடந்து வருகிறது...

பள்ளியின் கடைசி மணி ஒலி கேட்டு... சுயநினைவுக்கு வந்தாள் திகழொளி சாரல்...

"உன் மனசு அப்படியே இரண்டு வருஷம் பின்னாடி போய் நினைச்சு பார்த்துட்டு வந்ததா..." என்று எரிச்சல் குரலில் சொன்னாள் கயல்...

"ப்ச்ச்... என்னை செய்தாலும் அந்த கசப்பான நினைப்பு எல்லாம் மனசை விட்டு போக மாட்டேங்குது கயல்..." என்று வருத்தம் நிறைந்த குரலில் சொன்னாள் சாரல்...

"அதுக்கு தான் யாரையும் முழுசா நம்பி கூடாது என்று பெரியவங்க சொல்லி இருக்காங்க... அந்த மாதிரி அதி புத்திசாலிகள் எல்லாம் உண்மையான பாசம் இருப்பவர்களை ஒரு கறிவேப்பிலை மாதிரி தான்... தேவை வரும் போது யூஸ் பண்ணிட்டு... பிறவு... தூக்கி குட்டி தொட்டியில் போட்டு விடுவார்கள்..." என்று கடுப்புடன் சொன்னாள் கயல்...

"சரி விடு டி கயலு... இதை பற்றி எல்லாம் பேசினால் டென்ஷன் தான் ஆகும்..." என்று சாரல் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே... அந்த நேரத்தின் ஆசிரியர் உள்ளே நுழைய... இவர்களின் பேச்சை எல்லாம் நிறுத்தி விட்டு... அவர்கள் எடுக்கும் பாடங்களை கவனிக்க தொடங்கினர்...

அன்று மதியமும் ‌கயல் எடுத்து வந்த சாப்பாட்டையே இருவரும் பகிர்ந்து உண்டார்கள்...

அதன் பிறகு... பள்ளி முடிந்து இருவரும் வீட்டுக்கு கிளம்பினார்கள்... போகும் வழியில் கயல் சாரலுக்கு கண்டிப்புடன் ஆறுதல் கொண்டே போக... சாரலும் அவளுடைய பேச்சுக்கு உம் கொட்டி கொண்டே போனாள்...

"ஹ்ம்ம்... செவி காதில் வொய்ய்ய்யய் ன்னு சங்கு ஊதும் கதை தான் இங்கேயும் நடக்குது..." என்று சலிப்புடன் சொன்னாள் கயல்...

"என்ன டி கயலு இப்படி சொல்ற... நீ காதில் வாங்கி உம் சொல்லிட்டு தானே வரேன்..." என்று பாவமாக சொன்னாள் சாரல்...

"அடிங்க... காதில் வாங்கி என்ன பிரயோஜனம்... உன் கேணை தேவி கிட்ட பதிலுக்கு பேசி தொலை என்றால் பேசாமல்... அமுக்கினு மாதிரியே இரு... உன் லைஃப் நல்லா விளங்கிடும்..." என்று கயல் சொல்ல....

"பேசி மட்டும் என்ன ஆகிட போகுது கயல்..." என்று பழைய பஞ்சாங்கத்தில் உள்ளதை சொன்னாள் திகழொளி....

அதற்கு இடையில் புகுந்த கயல்... அவளை பார்த்து கையெடுத்து கும்பிட்டு... "மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காத தாயே... என் ரெண்டு காது... அமேசான் காட்டுக்கு உள்ளே போய் தலை மறைவு ஆகிடும்..." என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் கயல்...

"கயல்... எனக்கு என் படிப்பு இருக்கு டி... அதுவே எனக்கு போதும்... எத்தனை நாள் இவங்க திட்டிட்டு இருக்க போறாங்க... நான் படித்து அதில் ஒரு வேலை கிடைத்தால்... என் வாழ்க்கை மாறிடும் கயல்... அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு... அதை மட்டும் தான் நான் நம்பிட்டு இருக்கேன்..." என்று தைரியமாக சொன்னாள் திகழொளி சாரல்..

அதற்கும் ஒரு முடிவு வர போகிறது என்பதை அறியாமல்... அவளுடைய ஆசை விருட்சமாக வளராது என்று அறியாமல்... மனதில் கொஞ்சம் தைரியத்தை விதைத்து கொண்டு இருந்தாள்...

"ஹ்ம்ம்... சரி... இதே நம்பிக்கையுடன் இரு‌ சாரல்... ஒரு நாள் கண்டிப்பாக நீ நினைத்தது எல்லாம் நடக்கும்..." என்று சொன்னவள்... சாரலின் கையை பிடித்து பார்த்து... "ஆமா இப்ப உன் கை எப்படி இருக்கு... பரவாயில்லை தானே புள்ள..." என்று கயல் கேட்க...

"ஹ்ம்ம்... இப்ப எரிச்சல் எல்லாம் இல்லை கயல்... நல்லா தான் இருக்கு..." என்று மென்னகையுடன் சொன்னாள் அவள்...

"சரி டி... உன் வீடு வந்துருச்சு... பார்த்து பத்திரமாக இருந்து கொள்..." என்று பலமுறை சொல்லி விட்டு... பின்னரே அங்கிருந்து சென்றாள் சாரலின் ஆருயிர் தோழி கயல்...

அவள் வீட்டுக்குள் நுழைந்ததுமே... உமாதேவி வசை பாட்டை ஆரம்பித்து விட்டார்... அதை எல்லாம் கேட்டும் கேட்காமல்... அவளுடைய வீட்டு வேலைகளை செவ்வனே செய்து கொண்டு இருந்தாள் திகழொளி சாரல்...

இரவு செந்தில்நாதன் வீட்டுக்கு வந்ததும் ஒரு பெரிய கச்சேரியே நடந்து முடிந்து இருந்தது...

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் 👇👇

எழுத்தாளினி நிசப்தா - Comments
 
Last edited:
நிசப்தம் - 6

கயலிடம் பேசி விட்டு... அவள் வீட்டுக்குள் நுழைந்ததுமே... உமாதேவி எப்போதும் பாடும் தன்னுடைய வசை பாட்டை ஆரம்பித்து விட்டார்... மலையை கண்டு நாய் குரைக்கிறது என்று மனதில் நினைத்து கொண்டு... அதை எல்லாம் கேட்டும் கேட்காமல்... அவளுடைய வீட்டு வேலைகளை செவ்வனே செய்து கொண்டு இருந்தாள் திகழொளி சாரல்...

இரவு நேரத்தில் வேலையை முடித்து... செந்தில்நாதன் வீட்டுக்கு வந்ததும் ஒரு பெரிய கச்சேரியே நடந்து முடிந்து இருந்தது...

அதை எல்லாம் செவி வழியே மனதின் உள்ளே இழுத்தவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தாலும்... வெளியே எதுவும் பதில் பேசாமல்... அனைத்தையும் அமைதியாக கேட்டு கொண்டு இருந்தாள் சாரல்...

அது எல்லாம் முடிந்து... இரவு உணவுக்கு இரண்டு இட்லிகளை மட்டும் சாப்பிட முடியாமல் உண்டு விட்டு... அவளுடைய படுக்கை அறைக்கு சென்று விட்டாள் திகழொளி...

அவளுடைய மெத்தையில் படுத்துக் கொண்டு... தலையணையை கட்டிய படி... அந்த வானில் ஜொலிக்கும் நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டே... "நான் செய்த தப்புக்கு திட்டினால் கூட பரவாயில்லை... நான் பண்ணிய தப்புக்கு தான் என்னை திட்டிட்டு இருக்காங்க என்று நினைத்து மனதை தேற்றி கொள்ளலாம்... ஆனால்... தப்பு செய்யாமல் இப்படி திட்டு வாங்கிட்டு இருப்பது... என்னால கொஞ்சம் கூட தாங்கிக்க முடியலை... இது எவ்வளவு பெரிய கொடுமை... அது மட்டும் இல்லாமல்... அதுவும் அவர்களிடம் என் மனதின் ஆதங்கத்தை சொல்லி... அவங்களை எதிர்த்து பேச முடியாமல் வாயை மூடிக் கொண்டு நிற்பது... எனக்கு எவ்வளவு வலியை தருது... எதுக்கு பெருமாளே எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை... இந்த வீட்டில் நான் ஒவ்வொரு நாளும் கடக்கும் போதும் செத்து செத்து பொழைக்கிற மாதிரி எனக்கு தோணுது... இதை பற்றி யாரு கிட்டயும் சொல்லவும் முடியலை... ஏன் நிலைமை யாருக்குமே வர கூடாது...

நான் சின்ன வயசுல அம்மா இல்லன்னு ரொம்ப ஏங்கி போய் இருக்கேன்... அது உனக்கும் தெரியும் பெருமாளே... என் அப்பத்தா எனக்கு பாசத்தை அள்ளி அள்ளி கொடுத்தாலும்... மத்த பிள்ளைங்க அம்மா கிட்ட கொஞ்சி பேசிட்டு இருக்கும் போது... அதை நான் பார்க்கும் சமயம் எல்லாம் ரொம்ப கஷ்டமாக இருக்கும்... ஏன் டிவியில் ஏதாவது அப்படி வந்தாலே... அதுக்கு தனியாக உட்கார்ந்து அழுவேன்... அப்போ எல்லாம் நினைப்பேன்... எனக்கு மட்டும் ஏன் அம்மா இல்ல... அவங்க என் கூட இருந்தால் எவ்வளவு ஜாலியாக இருக்கும்... எதுக்கு அவங்க என்னை விட்டு போனாங்க என்று எல்லாம் நினைத்து... உன் கிட்ட கூட பேசி அழுது இருக்கேன் பெருமாளே... சில நேரங்களில்... நான் அப்பத்தா கிட்ட இதை பற்றி பேசி சண்டை கூட போட்டு இருக்கேன்...

இப்போ என்னோட அம்மா என் கூட தான் இருக்காங்க... ஆனால்... என்னால மனதார சந்தோஷமாக இருக்க முடியலையே... ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஒரு அந்நியர் வீட்டில் இருப்பது போல தானே நினைச்சிட்டு இருக்கேன்... அப்படி நான் என்ன தப்பு பண்ணேன்... எதுக்கு என்னை இப்படி வார்த்தையால் வதைச்சிட்டு இருக்காங்க..." என்று மனதில் இருப்பதை மெல்லிய குரலில் வாய் விட்டே புலம்பிய படி... கண்களில் நீர் வழிய... அப்படியே தலையைணையை அணைத்த படியே உறங்கி விட்டாள் திகழொளி...

இரவு உணவு முடிந்ததும்... அறையில் செந்தில்நாதனின் அணைப்பில் இருந்த உமாதேவி... "என்னங்க..." என்று மெல்லிய குரலில் சொல்ல...

"சொல்லு உமா..." என்று சொல்லி விட்டு அவருடைய வேலையை தொடர்ந்தார் செந்தில்...

"அதாங்க உங்க கிட்ட காலையில் சொன்னேனே..." என்று எரிச்சலாக சொன்னார் உமா...

"ப்ச்ச்... என்ன சொன்ன..." என்று அவர் கேட்க...

"அதாங்க... நம்ம பொண்ணோட கல்யாணத்தை பற்றி தான் காலையில் உங்களிடம் பேசினேனே... நீங்க கூட அதை பற்றி அப்புறம் பேசலாம் என்று சொன்னீங்களே... அதான் மாமா அந்த முக்கியமான விஷயத்தை இப்ப பேசினேன்..." என்று குழைந்து கொண்டே சொன்னார் உமாதேவி...

இதைக் கேட்டு அவரிடம் இருந்து விலகிய செந்தில்... "ஹ்ம்ம்... நானும் அதைப் பற்றி யோசித்துப் பார்த்தேன் தான் உமா... எனக்கும் நீ சொன்னது ஒருவகையில் சரிதான் பட்டது... ஆனால்..." என்று இழுத்துச் சொன்னார் அவர்...

"ஆனால்ல்ல்... என்ன..." என்று உமா கேட்க...

"நம்ம சாரலுக்கு இப்போ பதினேழு வயசு தானே நடந்துட்டு இருக்கு... அந்த வயசு தான் கொஞ்சம் இடிக்குது..." என்று யோசனையுடன் சொன்னார் செந்தில்நாதன்...

"அட... என்னங்க நீங்க... நம்ம சாரல் பார்க்க என்ன பதினேழு வயசு பொண்ணு மாதிரியே இருக்கா... அவளை புதுசா பார்க்கிறா எல்லாரும் உங்க பொண்ணுக்கு இருபது வயசா இருபத்தியொரு வயசா... இன்னும் கூட கல்யாணம் பண்ணாம வீட்டில் வைத்து கொண்டு இருக்கீங்களே அப்படின்னு தான் கேட்டுட்டு இருக்காங்க..." என்று சலிப்புடன் சொன்னார் உமா...

செந்தில் முகத்தில் எப்போதும் ஒரு தெளிவு இல்லாமல் இருக்க... "ஏங்க... உங்க அம்மாவுக்கு கல்யாணம் பண்ணும் போது எத்தனை வயசு பதிமூன்று வயது தானே இருந்தது... அவங்க கல்யாணம் பண்ணிட்டு குடும்பம் நடத்தி புள்ளை பெத்துகலையா என்ன... ஏன்... நீங்க என்ன கல்யாணம் பண்ணிக்கும் போது எனக்கு என்ன வயசு நடந்துட்டு இருந்தது... பதினாறு வயசு தானே... நான் உங்களை கல்யாணம் பண்ணிட்டு... குடும்பம் நடத்தி வாழலையா.... இல்ல ரெண்டு பிள்ளைகளை தான் பெற்றுக் கொள்ள வில்லையா... காலம் போக போக எல்லாமே சரியாப் போயிடும்..." என்று கணவரின் முகத்தை பார்த்து கொண்டே சொன்ன உமா...

மேலும்... "என்னங்க... நம்ம சாரலுக்கு கூட இன்னும் அஞ்சு இல்ல ஆறு மாசத்துல பதினெட்டு வயசு வந்து விடுமுங்க... அதனால் நீங்க ஒன்னும் மனசை போட்டு குழப்பிக் கிட்டு இருக்காதீங்க... நாம ஆகற காரியத்தை சட்டு புட்டுன்னு பண்ணி... நம்ம கடமையை நல்ல படியாக முடிச்சிடுவோம்... என்னங்க சொல்றீங்க..." என்று அழுத்தமாக சொல்லி விட்டு... ஆர்வத்துடன் அவர் முகத்தை நோக்கினார் உமாதேவி...

இப்போது முகம் கொஞ்சம் தெளிவாக இருக்க... "சரி சரி... நீ என்ன பண்றியோ அதை பண்ணிட்டு என்னிடம் வந்து சொல்லு உமா... நமக்கு நல்ல இடமாக பட்டால்... அதை பற்றி மேல பேசிக் கொள்ளலாம்..." என்று அரை மனதுடன் சொல்லி விட்டு... அவரின் உடல் தேவையை பூர்த்தி செய்து கொண்டார் செந்தில்நாதன்...

அவர் வாயில் இருந்து இதை கேட்டதும் தான் நிம்மதியாக பெருமூச்சு விட்டு... கணவரோடு ஐக்கியம் ஆனார் உமாதேவி...

அடுத்த ஒரு வாரம் அப்படியே எப்போதும் போல தான் சென்றுக் கொண்டு இருந்தது... மகளை உமா ஏதாவது சொல்வதும்... அதற்கு சாரலும் எதிர்த்துப் பேசாமல்... தன் வேலைகளை எல்லாம் அவளே பார்த்துக் கொள்வதுமாக மட்டும் தான் நாட்கள் கடந்து சென்றது... கயல் தான் தோழி துயரப் படுவதை பொறுக்க முடியாமல்... அப்போ அப்போ வந்து உமாவிடம் சண்டையிட்டு போவாள்...

பிறகு ஓர் நாள்... விடியற் காலையில் ஒரு காபி டம்ளரை எடுத்துக் கொண்டு... திகழொளியின் அறைக்கு சென்றார்... அவளின் பாசமிகு அன்னையான உமாதேவி...

"அம்மாடி சாரல்... எந்திரி மா..." என்று சொல்லி அவளை மெதுவாக தட்டி எழுப்பினார் உமா...

சாரலோ அவளின் குரலைக் கேட்டு... பயந்து... உடலை உலுக்கி... பதறி அடித்து கொண்டு எழுந்து அமர்ந்தாள்...

அவளின் செய்கையை பார்த்து... "சாரல்... சாரல்... என்னம்மா ஆச்சு... எதுக்கு இப்படி பயம்.. உன்னை நான் தானே கூப்பிட்டேன்..." என்று நிதானமாக சொன்னார் அவர்...

அவர் மனதிலோ... 'அதை கேட்டு தானே பயமே வந்தது...' என்று நினைத்து கொண்டு... அவரையே விசித்திரமாக பார்த்து இருந்த திகழொளி... "ஒன்னுமில்லை..." என்று பதில் கொடுத்தாள்...

"இந்தா இந்த காபி தண்ணியை குடிச்சிட்டு... உனக்கு ஏதாவது படிக்கணும் என்றால் படிச்சிக்கோ... இனி வேலை எல்லாம் நானே பார்த்துக் கொள்கிறேன்..." என்று சிரித்தபடி சொன்னார் உமாதேவி...

இதை கேட்டு சாரலுக்கு பெயருக்கு கூட புன்னகை வரவில்லை... அதற்கு மாறாக ஏதோ ஒரு பயம் தான் வந்து ஒட்டிக் கொண்டது...

"இல்ல பரவாயில்லை... எப்போதும் போல நானே எல்லா வேலையும் பார்த்துக் கொள்கிறேன்..." என்று பட்டும் படாமல் சொன்னாள் சாரல்...

அவரோ புன்னகை முகம் மாறாமல்... "அட என்னம்மா நீ... இன்னும் ஒரு மாசத்துல பெரிய பரிச்சையை வச்சிட்டு இப்படி பேசிட்டு இருக்க... எல்லா வேலையும் நீ செய்துட்டு இருந்தால் நல்லாவா இருக்கும்... அது எல்லாம் எதுவும் வேணாம்... உன் அம்மா நானே எல்லா வேலையும் பார்த்துக்கிற... நீ போய் உன் படிப்பை மட்டும் கவனி... இந்த அம்மா எதை சொன்னாலும் உன் நல்லதுக்கு மட்டும் தான் சொல்லுவேன் சாரல்..." என்று பீடிகையுடன் சொல்லி விட்டு... அந்த காபி குவளையை அவளுடைய கையில் திணித்து விட்டு... அங்கிருந்து சென்று விட்டார் உமாதேவி...

அவர் வெளியே சென்றதை பார்த்த திகழொளி சாரல்... அந்த காபி டம்ளரை கீழே வைத்து விட்டு... அவளுடைய கைகளை கிள்ளி பார்த்து கொள்ள... ஆஆ என்று வலியில் கத்தி... அந்த சிவந்த இடத்தில் தேய்த்து கொண்டாள்...

"அப்போ நான் இப்ப கண்டது எல்லாம் கனவு கிடையாது... நிஜம் தானா... ஆனால்... எப்படி... இது எல்லாம் நடக்க தான் கொஞ்சம் கூட சான்ஸே இல்லயே... இவங்க இப்படி தீடீரென மாறும் ஆள்‌ எல்லாம் இல்லயே... இதுக்கு பின்னாடி ஏதாவது ஒரு காரணம் இருக்குமோ..." என்று வாய் விட்டே சொல்லி புலம்பிய சாரல்... இதை பற்றி நினைத்தே நேரத்தை கடத்தி கொண்டு இருக்க... கடிகாரம் கத்தும் ஓசையை கேட்டு... நடப்புக்கு வந்து... பள்ளிக்கு செல்ல தயார் ஆனாள் பெண்ணவள்...

அவள் குளித்து முடித்து... ஆயத்தம் ஆகி... ஹாலுக்கு வந்தாள்... அவளுக்கு முன்னால் பூரியும் கிழக்கும் பல்லை இளித்துக் கொண்டு இருந்தது... அதற்கு பக்கத்தில் உமாதேவி அமர்ந்து இருந்தார்...

"சாரல் வா சாப்பிடு..." என்று முகம் மலர புன்னகையுடன் சொன்னார் உமா...

அவரை பார்த்த படியே வந்து அமர்ந்து கொண்டாள் திகழொளி... ஒரு தட்டை எடுத்து... அதில்... இரண்டு பூரியை மட்டும் வைத்துக் கொண்டு... சாப்பிட ஆரம்பித்தாள் அவள்...

அதை உண்டு முடித்ததும் எழ போனவளை... தடுத்து நிறுத்தினார் உமா...

"சாரல் ஏன் இரண்டு பூரி மட்டும் சாப்பிட்டு... அதுக்குள்ள எந்திரிச்சிட்ட... வளரும் பிள்ளை வயிறு நிறைய நல்லா சாப்பிடனும் தானே... இந்தா இன்னும் இரண்டு பூரியை வச்சிக்கோ மா..." என்று பாசமுடன் சொன்ன அன்னையை... ஒருகணம் உறுத்து விழித்தவள்... "இல்ல... எனக்கு இதுவே போதும்... பழகிப் போச்சு..." என்று சாதாரணமாக சொல்லி விட்டு எழுந்து கொண்டாள் திகழொளி சாரல்...

"வேண்டாம் என்றால் போடி... சரி தான்..." என்று மனதில் நினைத்து கொண்டார் பாசமிகு அன்னை உமா...

இன்று வித்தியாசமாக நடந்துக் கொண்டு இருந்த அன்னையை பற்றியே... மனதில் நினைத்து கொண்டு இருந்தான் சாரல்...

அந்த நினைப்பில்... வெளியே கயல் அழைத்துக் கொண்டு இருந்ததை கூட அவளுக்கு கேட்கவில்லை...

சாரலிடம் இருந்து பதில் எதுவும் வராததால் கடுப்பாகி... "இந்த சாரல் உள்ளே என்ன வேலையை தான் செஞ்சிட்டு இருக்காளோ... இவளை அந்த கேணை தேவி என்ன வேலையை தான் வாங்கிட்டு இருக்கோ தெரியலை..." என்று மனதில் நினைத்த படி... உள்ளேயே சென்று விட்டாள் கயல்...

***********

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் 👇👇👇

எழுத்தாளினி நிசப்தா - Comments
 
நிசப்தா - 7

திகழொளி...‌ உமாதேவி இந்த தீடீர் பாசம் அளித்துக் கொண்டு இருப்பதை பற்றிய நினைப்பில்... வெளியே கயல் அழைத்துக் கொண்டு இருந்தது கூட அவளுடைய காதுக்கு கேட்கவில்லை...

சாரலிடம் இருந்து பதில் எதுவும் வராததால் கடுப்பாகி... "இந்த சாரல் உள்ளே என்ன வேலையை தான் செஞ்சிட்டு இருக்காளோ... இவளை அந்த கேணை தேவி என்ன வேலையை தான் வாங்கிட்டு இருக்கோ தெரியலை..." என்று மனதில் நினைத்த படி... உள்ளேயே சென்று விட்டாள் கயல்...

அப்போது அவள் எதிரே வந்தார் உமா...

'ஹ்ம்ம்... இது என்னத்த பேச போகுதோ தெரியலையே...' என்று மனதில் சலித்துக் கொண்டாள் கயல்...

ஆனால்... உமாவோ... "வா வா கயல்... சாப்டீயா..." என்று கேட்க...

"இல்லன்னு சொன்னால்... விருந்து கிருந்து வைச்சு என்னை கிறங்கடிக்க போறிங்களா ஆண்டி..." என்று பட்டென்று சொன்னாள் கயல்...

"சும்மா கேட்டேன் மா..." என்றார் அவர்...

"ஓஹோ..." என்று வாய் குவித்து சொன்னாள் அவள்...

'என்ன இது இந்த தந்திரக்கார நரி... இப்படி பாச மழையை அளவில்லாமல் கொட்டுது... ம்ஹூம்... இதுக்கு பின்னாடி ஏதோ ஒரு‌ சங்கதி நிச்சயமாக இருக்கும் போல...' என்று மனதில் நினைத்து கொண்டாள் கயல்...

"கயல் புள்ள... என்னம்மா பள்ளிக்கூடத்துக்கு நேரம் ஆகிடுச்சா என்ன... இன்னும் இந்த சாரல் உள்ள என்ன பண்ணிட்டு இருக்கா தெரியலையே..." என்று அந்தர் பல்டி அடித்தது போல் இப்படி சொல்லி கொண்டு இருக்க... கயல் அவரை ஒரு மார்க்கமாக பார்த்து கொண்டு இருந்தாள்...

"ஏன் ஆண்டி... உங்களுக்கு காத்து கறுப்பு இல்லாட்டி... ஏதாவது ஒரு அனபெல்லா பேய் வந்து அடிச்சிட்டு போயிடுச்சா என்ன..." என்று கேட்டார் அவள்...

"என்ன டி இப்படி சோக்க்க் (ஜோக்) அடிச்சிட்டு கிடக்க...." என்று இழுத்து சொன்னார் உமா...

"இல்லங்க ஆண்டி... நேத்து வரை யாரோ ஒருத்தர் வசை கச்சேரியில் பி. எச். டி. முடிச்ச மாதிரி பொங்கிட்டு கிடப்பாங்க... அதான் அவங்களை காணலை என்று இப்படி சொன்னேன்... என்ன நான் சொல்வது சரி தானே ஆண்டிடிடி..." என்று கயலும் இழுத்து இழுத்து அவரிடம் சொன்னாள்...

"அடி பைத்தியக்காரி... ஒரு பெத்த மகளை அம்மா வையாம... ஊரில் போற வர சிறுக்கிகளையா திட்ட விடுவது... ஆத்திரத்தில் ஏதோ ஒரு பேச்சு வாக்கில் நாலு வார்த்தை நறுக்குன்னு நான் கேட்டு விட்டால்... சாரல் என் மக இல்லன்னு ஆகிடுமா... போ... சீக்கிரம் போய்... உன் படிப்பை பார்க்கும் வேலையை பாரு..." என்று சொல்லி விட்டு... அதற்கு மேலும் அங்கே நிற்காமல்... தப்பித்தோம் பிழைத்தோம் என்று நினைத்து உள்ளே சென்று விட்டார் உமாதேவி...

அவரரே ஒரு வெறுப்புடன் கண்டவள்... 'என்ன ஆச்சன்னு தெரியலையே...' என்று மனதில் எண்ணிக் கொண்டே சாரலின் அறைக்குள் நுழைந்தாள் கயல்...

சாரலோ அங்கு சுவற்றில் மாட்டி இருந்த அவளுடைய பாட்டியின் படத்தையே... கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள்...

"இந்த லூசுக்கு என்ன ஆச்சு..." என்று வாய் விட்டே சொல்லி... அவளிடம் சென்று அவள் தோள்களை தொட்டாள் கயல்...

அப்போது தான் அவள் நடப்பிற்கு வந்து...‌ "கயல் நீயா..." என்று சொன்னாள் திகழொளி...

"இல்ல செத்து போன உன் அப்பத்தா வந்து இருக்கேன் மகளே..." என்று முறைத்துக் கொண்டே சொன்னாள் கயல்...

"இந்த எகத்தாளம் தானே வேணாங்குறது..."

"பின்ன என்ன‌ டி.. ஆமா எதுக்கு இப்படி பித்து பிடிச்ச பேயாட்டம் உட்காந்து இருக்க..." என்று கயல் பொரிந்து தள்ள...

சாரலும்... "அதுவா கயல்..." என்று ஆரம்பித்து... காலையில் இருந்து நடந்த அனைத்து கூத்லையும் ஒன்று விடாமல் நண்பியிடம் சொன்னாள்...

அதை எல்லாம் யோசனையாக கேட்டுக் கொண்டு இருந்தாள் கயல்...

"எனக்கு பயமா இருக்கு கயல்... அவங்க இப்படி எல்லாம் பிகேவ் பண்ற ஆளே கிடையாது டி... எனக்கு தெரியாமல் இந்த வீட்டில் ஏதோ நடக்குதுன்னு என் உள் மனசு சொல்லுது..." என்று வருத்தம் நிறைந்த குரலில் கூறினாள் திகழொளி...

"ஹ்ம்ம்... எனக்கும் இது சரி என்று படலை ‌சாரல்... இதில் ஏதோ உள் குத்து இருக்கும்னு தோணுது... எதுக்கும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு சாரல்..." என்று சொன்னாள் கயல்...

"ஹ்ம்ம்... சரி..."

கயலோ ‌அவள் கையில் கட்டி இருக்கும் கடிகாரத்தில் நேரத்தை பார்க்க... "அய்யய்யோ..." என்று அலறினாள்...

"ஆஆ... என்ன டி..." என்றாள் சாரல்...

"சாரலு ‌ஸ்கூல் போக நேரம் ஆகிடுச்சு டி... வா நாம ரெண்டு பேரும் சீக்கிரம் போகலாம்..." என்று வேகமாக சொன்னாள் கயல்...

சாரலும் அவளுடைய புத்தக பையை மாட்டி கொண்டு... "வா வா‌ சீக்கிரமா ஓடலாம்..." என்று சொல்ல... இருவரும் அரக்க பறக்க பள்ளிக்கு ஓடிச் சென்றனர்...

பிறகு... இருவரும் சரியாக கடைசி மணி அடிக்கும் நேரத்தில் பள்ளியின் உள்ளே சென்று விட்டனர்... நேரம் கடந்து போய் சென்றிருந்தால் அவர்களுடைய விளையாட்டு மைதானத்தை சுற்றி மூன்று சுற்று ஓடி இருக்க வேண்டும்...

வகுப்பறைக்கு வந்து அவர்களுடைய இடத்தில் அமர்ந்து கொண்டனர்...

"நல்லா வேளை கரெக்ட் டைமுக்கு வந்துட்டோம்..." என்று மூச்சு வாங்கிக் கொண்டே கூறினாள் சாரல்...

"அய்யோ சாரலு... எனக்கு கொஞ்சம் குடிக்க தண்ணி கொடு‌ டி... இல்லாட்டி... நான் இப்பவே நெஞ்சு வெடிச்சு செத்துருவேன் போல..." என்று சொல்லி... பெஞ்ச்சில் தொப்பென்று சரிந்தாள் கயல்...

"எருமை இப்படி எல்லாம் சொல்லாத... வாயிலே போடுவேன்..." என்று திகழொளி கண்டிப்புடன் சொல்ல...

"அடியேய்... நீ வாயில போடுவத்றகுள்... நான் பொட்டுன்னு போய்டுவேன் டி... சாரலு... சாரலு ன்னு பேர் வச்சி ஒரு பச்ச தண்ணியை கண்ணில் காட்ட மாட்டீயா... இப்படி நொய் நொய்யின்னு தான் பேசிட்டு இருப்பீயோ..." என்று சொன்னாள் கயல்...

"அடிங்க... இந்தா இதை குடி..." என்று சிரித்துக் கொண்டே சொல்லி தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தாள் திகழொளி சாரல்...

அவளை முறைத்துக் கொண்டே குடித்து முடித்தாள் கயல்...

கயல் எதையோ பேசலாம் என்று வாய் திறக்க... அதற்குள் வகுப்பிற்கு பாடம் நடத்தும் டீச்சரும் வந்து விட்டார்... அதனால் அவளுடைய திருவாயை திறக்காமல் போனால் போகட்டும் என்று நினைத்து மூடிக் கொண்டாள்...

வகுப்புகள் எப்போதும் போல சுமாராக தான் போய் கொண்டு இருந்தது... பிறகு அனைத்து வகுப்புகளும் முடிந்து... கயலும் சாரலும் கதை பேசிக் கொண்டே அவரவர் வீடு போய் சேர்ந்தனர்...

சாரல் வீட்டுக்கு வந்ததும்... அவள் அறைக்கு சென்று... சீருடையை மாற்றி விட்டு... வீட்டில் அணிந்து கொள்ளும் துணியை போட்டுக் கொண்டு... சமையல் அறைக்கு சென்றாள்...

அப்போது அவளை பார்த்த உமாதேவி... முகம் முழுக்க சிரிப்புடன்... அவளை பார்த்தார்... அதை கண்ட திகழொளியும்... மனதில் உவப்பாக இல்லாவிட்டாலும்... வெளியே லேசாக புன்முறுவல் செய்தாள்...

"வா சாரல்... பள்ளிக்கூடம் எப்படி போச்சு..." என்றார் அவர்...

"ம்ம்... நல்லா போச்சு..." என்று மெல்லிய குரலில் சொன்னாள் சாரல்...

"சரி சரி... என்னம்மா சாப்பிடுற..." என்று உமா கேட்க...

"எதும் வேணாம்..." என்று சொல்லி அங்கிருந்து வெளியே சென்று விட்டாள் அவள்....

'ச்சே... என்ன வாழ்க்கை இது... எதுக்காக எந்த காரணத்துக்காக இவங்க இப்படி தேவை இல்லாமல் என் கிட்ட நடிக்கணும்... இதுக்கு முன்னாடி எல்லாம்... என்னை ஏசிட்டு இருந்த அப்போ கூட மனசுல வலியும் வேதனையும் மட்டும் தான் இருக்கும்... ஆனால்... இப்போ அது கூட பயமும் சேர்ந்து... என்ன பிரச்சினை எப்போ வரும் என்று தெரியாமல் இப்படி எனக்குள்ளேயே தவிச்சிட்டு இருக்கும் நிலையில் வந்து இருக்கேனே பெருமாளே...' என்று மனதில் நினைத்து வெதும்பி கொண்டு இருந்தாள் திகழொளி...

அப்போது... "சாரலு... இந்த டிகிரி காஃபியை குடி... நல்லா திக்கா... சூப்பரா... உனக்கு பிடிச்ச மாதிரி போட்டு இருக்கேன்..." என்று சொல்லி... அவளிடம் காஃபி டம்ளரை கொடுத்தார் உமா...

"ம்ம்..." என்று மட்டும் சொல்லி... மறுப்பேதும் சொல்லாமல் அதனை வாங்கி கொண்டாள் சாரல்...

அந்த காஃபியை எடுத்து ஒரு மிடறு உறுஞ்சி... பிறகு... உமாவை கண்டாள் அவள்...

"எப்படி இருக்கு சாரல்..." என்று இளித்துக் கொண்டே கேட்டார் அவர்...

"ஓஓ... நல்லா இருக்கு..." என்று சாரல் உமாவிடம் கூற...

"ம்ம் சரி... நீ குடி... நான் உள்ளே போறேன்..." என்று சொல்லி விட்டு உள்ளே போய் விட்டார் உமாதேவி...

அவர் அங்கிருந்து சென்றதும்... சாரல் அந்த காஃபி டம்ளரோடு அவள் அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டாள்...

அவளுக்கு கண்களில் பொங்கி வழியும் கண்ணீரை கொஞ்சம் கூட கட்டுப் படுத்த முடியவில்லை...

சாரலோ அந்த காஃபி டம்ளரையே இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தாள்...

அவளின்‌ மனத்திரையில் காட்சிகளாக... அவள் அனுபவித்த சில வேதனைகள் ஓடிக் கொண்டு இருந்தது...

உமாதேவி அவள் வீட்டுக்கு வந்து கொஞ்ச நாட்களில் நடந்த சம்பவம் அது...

ஒரு நாள் சாரல் அவளுக்கு குடிக்க டீ வைத்து கொண்டு இருக்க... அப்போது உமா உள்ளே வந்து பார்த்தார்...

"என்ன பண்ணிட்டு இருக்க..." என்று அதிகாரமாக கேட்டார் அவர்...

"ஹ்ம்ம்... நான் எனக்கு டீ வச்சிட்டு இருக்க..." என்று காட்டமாக பதில் கொடுத்தாள் திகழொளி...

அவரோ குளிர்சாதன பெட்டியை திறந்து பார்க்க... அதில் கால் லிட்டர் பால் பாக்கெட் இல்லாமல் இருந்தது...

அதனை கண்டதும்... "எவ்வளவு பால் எடுத்த..." என்று உமா குரல் உயர்த்தி கேட்க...

"அதான் ஃப்ரிட்ஜை திறந்து பார்த்தீங்க தானே... அப்போ தெரிந்து இருக்கும் தானே... ஹ்ம்ம்... நான் கால் லிட்டர் மில்க் எடுத்தேன்... இதோ மீதி பால் இந்த டம்ளரில் ஊற்றி வச்சி இருக்கேன்... இப்ப என்ன அதுக்கு..." என்று தெளிவாக கேட்டாள் சாரல்...

"என்ன டி கொழுப்போ..." என்று சீறினாள் உமா...

"எனக்கு அப்படி எதுவும் ஃபீல் ஆகலையே... ஏன் என்னை பார்த்தால் வெயிட் ஏறிய மாதிரி இருக்கா என்ன..." என்று சொல்லி விட்டு... சாரல் உமாவை மேலிருந்து கீழ் வரை பார்க்க... "உங்களுக்கு பார்த்தால் தான்... கொஞ்சமே கொஞ்சம் கொழுப்பு கூடி போய் இருக்கும் போல தெரியுதே..." என்று சொல்லி... மெலிதாக சிரித்தாள் சாரல்...

"கால் லிட்டர் பாலை நீ ஒருத்தி மட்டுமே குடிப்பியோ..." என்று உமா கோபத்துடன் கேட்க...

"பின்ன... பதினோரு பேருக்கு ஊத்தி கொடுத்தா குடிக்க முடியும்..." என்று நேருக்கு நேராக கூறினாள் அவள்...

"ஹ்ம்ம்... அந்த பாலை வச்சி நான் நம்ம நாலு பேருக்கும் காஃபி போட்டு இருப்பேன்... விலைவாசி என்ன கம்மியாவா இருக்கு... ஒவ்வொரு பொருளும் யானை விலை விக்குது..." என்று உமா கத்தி கொண்டு இருக்க...

"இங்க பாருங்க... எனக்கு டீயோ காஃபியோ அது ஸ்ட்ராங்கா இருந்தால் மட்டும் தான் பிடிக்கும்... உங்களை மாதிரி 200 பாலில் 400 தண்ணி ஊற்றி... கழனி தண்ணி போல குடிச்சா... எனக்கு வாந்தி தான் வரும்... இதை பற்றி என் அப்பாவுக்கும் தெரியும்... அவரே இதை பற்றி எதுவும் சொல்லாத போது... நீங்க எதுக்கு என் கூட வீண் சண்டைக்கு வரிங்க... ஏன் உங்களுக்கு வேற வேலை இல்லயா... ஹ்ம்ம் பக்கத்தில் வீட்டுக்கு போய் வெட்டி கதை பேசி பொழுதை போக்கலாமே... ஏன் அவங்க எங்காவது ஊருக்கு போய் இருக்காங்களா என்ன..." என்று உமாவை எதிர்த்து பேசிக் கொண்டு இருக்க...

உமாவோ அடுப்பில் கொதித்து கொண்டு இருந்த டீயை எடுத்து போய்... பாத்ரூமில் கொட்டி விட்டார்... அதனை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டு இருந்தாள் திகழொளி...

"என் கிட்ட அதிகமாக வாய்க்கு வாய் பேசிட்டு இரு... இப்படி தான் நான் பண்ணுவேன்... அம்மா என்று ஒரு மதிப்பும் மரியாதையும் கொஞ்சமாவது இருக்கா... எதிர்த்து எதிர்த்து பேசிட்டு இருக்க... இனிமே நான் எப்படி டீ போடுறேனோ அதை தான் நீ குடிக்கணும்... நான் உன்னை குடிக்க வைப்பேன்..." என்று அனல் தெறிக்கும் குரலில் பேசினார் உமாதேவி...

சாரலோ அவர் செய்த காரியத்தை கண்டு... ஜீரணிக்க முடியாமல் நின்று கொண்டு இருந்தாள்...

பிறகு... எதுவும் நடக்காதது போல... அந்த பாத்திரத்தை பின் பக்கம் போட்டு விட்டு... பக்கத்து வீட்டுக்கு கதை பேச சென்று விட்டார் உமா...

அவள் அம்மா பேசிய வார்த்தைகள் எல்லாம் அவளுக்கு உயிர் போகும் வலியை கொடுத்து... அவளை அணு அணுவாக காயப் படுத்தியது...

சாரலின் அப்பா செந்தில்நாதன் இரவு வீட்டுக்கு வந்ததும் வராததுமாக... மகளுக்கு முன்பாக உமாவே... "ஏங்க... இங்க பாருங்க உங்க மக பண்ணுவது கொஞ்சம் கூட சரியே இல்ல..." என்று சொன்னார்...

"என்ன உமா உள்ள நுழைந்ததும் புரியாமல் பேசிட்டு இருக்க..." என்று எரிச்சலாக சொன்னார் செந்தில்...

"சாயங்காலம் சாரல் டீ வச்சிட்டு இருந்தால்... அப்போ எனக்கும் டீ வச்சி கொடு மா... எனக்கு ரொம்ப தலை வலிக்குது என்று சொன்னால்... உங்க பொண்ணு அதெல்லாம் என்னால முடியாது... அது இது என்னை என்ன என்னமோ பேசிட்டா தெரியுமா‌... அய்யோ... என்னால தாங்க முடியலங்க... நான் இந்த வீட்டில் இருப்பது சாரலுக்கும் உங்களுக்கும் பிடிக்கலை என்றால் வாயை திறந்து சொல்லிடுங்க... நானும் என் பையனும் இந்த வீட்டை விட்டே போயிடறோம்... கட்டிய புருஷனும் பெத்த மகளும் வேணும் என்று நினைத்து... நான் இங்க வந்து இருக்கவே கூடாதுங்க... எப்பவும் நாங்க ரெண்டு பேரும் தனி மரமாகவே தான் இருந்து இருக்கணும்..." என்று சொல்லி கதறி கதறி அழுதார் உமாதேவி...

அதனை எல்லாம் கண்டும் கேட்டும்... "உமா... ப்ச்ச்... உமா இப்படி எல்லாம் அழாதே மா... இரு நான் இப்பவே சாரலை கூப்பிட்டு கண்டிச்சி வைக்கிறேன்..." எனக்கு சொன்னார் செந்தில் நாதன்...

"அய்யோ... வேணாங்க... என்னால நீங்க அவளை எல்லாம் திட்ட வேணாம்... என் கஷ்டம் என்னோட போகட்டும்... எத்தனை கஷ்டத்தை அனுபவிச்சி இருப்பேன்... அதோடு சேர்த்து இதுவும் போயிடும்..." என்று அழுகையை குறைத்து சொன்னார் உமா...

"நீ கொஞ்சம் சும்மா இரு..." என்று சொல்லி விட்டு... "சாரல்... சாரல்..." என்று கத்தி அழைத்தார் செந்தில்...

"என்ன ப்பா..." என்று கேட்டு கொண்டே வெளியே வந்தால் திகழொளி சாரல்...

"என்ன நினைச்சிட்டு இருக்க சாரல்.. உனக்கு நானும் என் அம்மாவும் செல்லம் கொடுத்து வளர்த்தது தப்பா போச்சு சாரல்... வீட்டுக்கு அடங்கி... உன் அம்மாவுக்கு அடங்கி இருக்க பாரு‌... இப்ப நீ ஒன்னும் சின்ன பொண்ணு கிடையாது... பெரிய பொண்ணு மாதிரி நடந்துக்கோ..." என்று கண்டிப்புடன் கூறினார் அவளின் அப்பா...

"அப்பா நான் எந்த தப்பும் பண்ணலை... ப்ளீஸ்... நான் என்ன சொல்ல வரேன்னு கேளுங்க..." என்று கண்கள் கலங்க சொன்னாள் திகழொளி...

"நீ ஒன்னும் சொல்ல தேவை இல்லை... ஒழுங்கா உன் ரூமுக்கு போ..." என்று குரல் உயர்த்தி சொன்னார்...

"அ..." என்று சாரல் பேச வர... அதற்கு முன்னர்... "உன்னை எதுவும் பேசாமல் உள்ள போன்னு சொன்னேன்..." என்று வீடே அதிரும் படி சொன்னார் செந்தில் நாதன்...

திகழொளியோ அதற்கு மேல் அங்க நிற்க முடியாமல்... அழுதுக் கொண்டே அவள் அறைக்கு சென்று... அவளின் வலியையும் வேதனையையும் கண்ணில் வழியாக கரைத்துக் கொண்டு இருந்தாள்...

அதற்கு பின்னர் அவள் டீ காஃபி என்று குடிப்பதையே அறவே நிறுத்தி விட்டாள் திகழொளி...

கொஞ்ச நாட்களில் அவள் எதையும் குடிக்காமல் இருப்பதற்கும் சேர்த்து செந்திலிடம் சொல்லி சண்டை பிடித்தார் உமாதேவி... அந்த கண்ணாடி போரிலும் மகளை தோற்கடித்து அன்னையே வெற்றி பெற்றார்...

உமாதேவி போடும் டீயோ அல்லது காஃபியோ இரண்டுமே சாரலால் வாய் வைத்து குடிக்கவே முடியாது... அப்படி குடித்து பழக்கம் இல்லை என்பதால்... அவள் அதனை முகர்ந்து பார்த்தாலே அவளுக்கு குமட்டிக் கொண்டு தான் வரும்... குடித்து விட்டு ஒவ்வொரு முறையும் வாந்தி எடுத்து விடுவாள்.... பிறகு நாட்கள் செல்ல செல்ல... அதையே குடிக்க பழகிக் கொண்டாள் திகழொளி சாரல்...

அந்த நாட்களின் வலிகளும்.. துக்கங்களும்.. துயரங்களும்.. இன்று இந்த நறுமணம் பொங்கும் காஃபியை காணுகையில்... கண் முன்னே தோன்றி நர்த்தனம் ஆடி... சாரலை கண்ணீர் கடலில் மூழ்கச் செய்தது...

**********

உங்கள் பொன்னான கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்...

👇👇👇👇
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom