Nirmala Krishnan
Saha Writer
- Messages
- 76
- Reaction score
- 13
- Points
- 6
அத்தியாயம் 10 :
அடுத்த நாள் அலுவலகத்திற்கு வந்த நித்திலாவை....வெறுமையான டேபிளே வரவேற்றது.
"குட் மார்னிங் நித்தி....!என்னப்பா இங்க வந்திருக்கிற...?இனி உன் இடம் அதுதான்...",என சுமித்ரா ஆதித்யனின் அறையைக் கை காட்ட,
"தெரியும்...!நீ வாய மூடிட்டு உன் வேலையைப் பாரு...",என எரிந்து விழுந்தாள் நித்திலா.
"ஹே...கூல் டா...!எதுக்கு இப்ப இவ்ளோ கோபப்படற....?"
"உனக்கென்ன....நீ ஜாலியா இங்க உட்கார்ந்துகிட்டு....எல்லார்கிட்டேயும் அரட்டை அடிச்சிக்கிட்டு வொர்க் பண்ணுவ...நான்தான் அங்க தனியா மொட்டு மொட்டுன்னு உட்கார்ந்திருக்கணும்....",
"டோன்ட் வொரி டி....!லன்ச் டைம் அண்ட் பிரேக் டைம்ல மீட் பண்ணிக்கலாம்....ஒகே வா...?",என சமாதானப்படுத்த முயல,
"வேற வழி....!சரி ஒகே....நான் கிளம்பறேன்...!",என்றவள் ஆதித்யனின் அறையை அடைந்து கதவை ஒரு விரலால் தட்டி அனுமதிக் கேட்க,
உள்ளிருந்து "கம் இன் நித்திலா....",என்ற ஆதித்யனின் குரல் கம்பீரமாக ஒலித்தது.கதவைத் திறந்து உள்ளே சென்றவள்,"குட் மார்னிங் சார்....!",என்று புன்னகைக்க,
"வெரி குட் மார்னிங் நித்திலா....!இனி நீ இங்கேதான வொர்க் பண்ணப் போற....ஸோ...ஒவ்வொரு முறையும் உள்ளே வர்ரதுக்கு என்கிட்டே பெர்மிஷன் கேட்க வேண்டாம்....ஃபீல் லைக் யுவர் கேபின்...",எனக் கூறி 'பளிச்' என்று புன்னகைக்க....அந்தப் புன்னகையில் அவளது கோபம் மறைந்து மாயமாய் போனது என்னவோ உண்மைதான்....!
"ஒகே நித்திலா....உன் டேபிள் ரெடி...!",என்றபடி அவனது டேபிளுக்கு அருகில் சற்றுத் தள்ளிப் போடப்பட்டிருந்த டேபிளைக் காட்டினான்.அவள் வேலை செய்வதற்கு ஏதுவாக அந்த டேபிள் வடிவமைக்கப்பட்டிருந்தது.அவளுக்குத் தேவையானப் பொருட்கள் அனைத்தும் நேர்த்தியுடன் அதில் அடுக்கப்பட்டிருந்தன.அவளுடைய வசதிக்காக ஒவ்வொன்றையும்...பார்த்துப் பார்த்து செய்திருந்தான்.
"வாவ்...!எல்லாத்தையும் யோசிச்சுப் பண்ணியிருப்பீங்க போல....இனி ஃபைல் எடுக்கறதுக்கு எழுந்திருக்க வேண்டியதில்ல....உட்கார்ந்த இடத்தில இருந்தே கை நீட்டி எடுக்கற மாதிரி கப்போர்ட் செட் பண்ணியிருக்கீங்க....சூப்பர் சார்...!",எனக் குதூகலமாய் கூறியவளைப் பார்த்தவன்,
"யெஸ் நித்திலா....!அப்புறம்....என் செக்ரெட்டரியுடைய வசதி எனக்கு ரொம்ப முக்கியம்ல.....",எனக் கூறிப் புன்னகைத்தான்.
எதுவும் கூறாமல் சிறு புன்னகையை மட்டும் சிந்தியவளைக் கண்டவன்,"வெல் நித்திலா....!உன் வொர்க்கை ஸ்டார்ட் பண்ணிடு...!ஃபர்ஸ்ட் முக்கியமான மெய்ல்ஸ்க்கு எல்லாம் ரிப்ளை பண்ணிடு...",என்க,அதன் பிறகு இருவரும் தத்தம் வேலைகளில் மூழ்கினர்.
ஊடும் பாடும் அவளைப் பார்த்துக் கொண்டு வேலை செய்வது ஆதித்யனுக்குப் பிடித்திருந்தது.அவளது விரல்கள் கம்ப்யூட்டர் கீ போர்டில் ஒரு வித லாவகத்துடன் விளையாடுவதையும்.....அவள் வேலை செய்யும் போது முன் நெற்றியில் வந்து விழும் கற்றைக் கூந்தலை....ஒரு விரலைக் கொண்டு ஒதுக்கி...அதைக் காதிற்குப் பின்னால் செருகிக் கொள்ளும் அழகையும்....அவளுக்குத் தெரியாமல் ரசித்துக் கொண்டிருந்தான்.
இருவரும் தங்களுடைய அலுவலில் ஆழ்ந்திருக்க நித்திலாவின் போன் அலறியது.சுமித்ராதான் மதிய உணவிற்காக அழைத்திருந்தாள்.தனது சிஸ்டமை ஆஃப் செய்து விட்டு எழுந்தவளைக் கண்டு ஆதித்யன் கேள்வியாக நோக்க,
"லன்ச் டைம் சார்...நான் போய் சாப்பிட்டுட்டு வரேன்....!",என்றவளுக்கு,
"அதுக்குள்ள லன்ச் டைம் வந்துடுச்சா...?நேரம் போனதே தெரியல....ஒகே நித்திலா...!யூ கோ...!",என அனுமதியளித்தான்.
இவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் பாலாவும் வந்து சேர்ந்து கொண்டான்.
சுமித்ராதான் முதலில் பேச்சை ஆரம்பித்தாள்."அப்புறம் நித்தி...!ஃபர்ஸ்ட் டே எப்படி இருந்துச்சு...?",எனக் கேள்வி எழுப்ப,
"என்ன பர்ஸ்ட் டே வா...?அவ வந்து ஜாயின் பண்ணி ஒரு மாசத்துக்கு மேலே இருக்குமே...?",என்றான் பாலா.
"நான் அதைக் கேட்கல....அவ ஆதித்யன் சார் கூட வொர்க் பண்றதுல இன்னைக்குத்தான் முதல் நாள்..அதைக் கேட்டேன்...!",
"என்னங்க சுமித்ரா சொல்றீங்க...?எனக்குப் புரியல...?",என பாலா விழிக்க,
"ப்ச்....பாலா...!ஆதி சார் இன்னையில இருந்து என்னை...அவரோட கேபினிலேயே வொர்க் பண்ண சொல்லிட்டாரு....அவ அதைத்தான் சொல்றா...",சாப்பாட்டை விழுங்கியபடி நித்திலா விளக்க,
""வாட்...?பட்...ஏன்...?",அவன் விடாமல் கேள்வி கேட்க....சற்று எரிச்சலடைந்த நித்திலா,
"அய்யோ...!அதெல்லாம் பழைய கதை....விட்டுத் தள்ளு....இப்போதைய மேட்டருக்கு வா....நீ என்ன சாப்பாடு...?",என்றபடி அவனது டிபன் பாக்ஸை தன் பக்கம் இழுத்தாள்.
அவள் கூறியதில் பாலாவின் முகம் யோசனைக்கு மாறியது.'ஆதி சார் அவரோட கேபின்க்கு ஒரு பொண்ணை அலோவ் பண்ராருன்னா....யோசனையா இருக்கே....!அவரு அப்படியெல்லாம் ஒரு பொண்ணு கூட க்ளோஸா பழகர ஆள் இல்லையே....?நித்திலா கூட மட்டும் பழகறார்னா....ஒரு வேளை....',அதற்கு மேல் யோசிக்கவே அவனுக்குப் பிடிக்கவில்லை.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ....அவ்வளவு சீக்கிரம் தன்னுடையக் காதலை நித்திலாவிடம் தெரியப்படுத்தி விட வேண்டும் என்ற உறுதியான முடிவு அவனுக்குள் எழுந்தது.
இவ்வாறாக இருவரும் தங்களது காதலை தன்னவளிடம் தெரியப்படுத்த வேண்டும் என்ற துடிப்புடன் காத்திருக்க....அந்தக் காதலுக்கு உரியவளோ....'காதல்' என்ற சொல்லையே தன்னிடம் நெருங்க விடாது நெருப்பாய் எரிந்துக் கொண்டிருந்தாள்.
............................................................................................
நாட்கள் இறக்கைக் கட்டிக் கொண்டு பறக்க...காவ்யாவின் திருமண நாளும் வந்தது.அதிகாலையிலேயே முகூர்த்தம் என்பதால்...முழு நாள் விடுமுறை எடுக்காமல்... இரண்டு மணி நேரம் மட்டும் பெர்மிஷன் கேட்டிருந்தாள் நித்திலா.அந்த இரண்டு மணி நேரம் பெர்மிஷன் வாங்குவதற்குள்ளேயே போதும் போதும் என்றாகிவிட்டது நித்திலாவிற்கு.
அவளைத் தினமும் பார்க்க வேண்டும் என்ற ஆசையில்...அவளுக்கு விடுமுறை அளிப்பதையே மறுத்தான் ஆதித்யன்.
ரமேஷின் வீட்டில் காவ்யாவை ஏற்றுக் கொண்டதால்....இரண்டு நாட்களுக்கு முன்பே வந்து அவளை அழைத்துச் சென்று விட்டனர்.தோழிகள் அனைவரும் பட்டுப் புடவைக் கட்டிக் கொண்டுத் தயாராகினர்.
நித்திலாவும் அழகிய இளம்பச்சை நிற பட்டுப்புடவையில்....அதற்குத் தோதாக முத்துக்கள் பதித்த நகை செட் அணிந்து கொண்டு....தளரப் பின்னியக் கூந்தலுடன்....தோளின் இருபுறமும் வழியுமாறு வைத்துக் கொண்ட மல்லிகைப் பூவுடனும்....அழகியத் தேவதையாக ஜொலித்துக் கொண்டிருந்தாள்.
நந்தினி கூட கிண்டல் செய்தாள்."வாவ்....!அழகா இருக்க நித்தி...!இப்ப மட்டும் எவனாவது உன்னைப் பார்த்தான்....அப்படியே தூக்கிட்டுப் போயிடுவான்...",என்க,
சிறு வெட்கப் புன்னைகையைப் பதிலாகத் தந்தவள்,"போகலாம் டி....நேரமாச்சு...!",என்றாள் நாணத்துடன்.
அனைவரும் ஒரு டாக்சி பிடித்துக் கோவிலுக்குச் சென்றனர்.கண்களில் கனவுகளுடனும்....செம்மைப் பூசியக் கன்னங்களுடனும்....ஒரு மணப்பெண்ணிற்குரிய சர்வ லட்சணங்களுடன் காணப்பட்டாள் காவ்யா,
இவர்களைப் பார்த்ததும் ஆவலுடன் வரவேற்றவளை....கட்டி அணைத்து வாழ்த்துச் சொல்லினர் தோழிகள்.நண்பர்களின் கேலியுடனும்...பெரியவர்களின் ஆசியோடும்....இனிதே நடந்தேறியது காவ்யா-ரமேஷின் திருமணம்.
திருமணம் முடிந்தவுடன் தம்பதிகளை ரமேஷின் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வதாக இருந்தது.எனவே....தோழிகள் அனைவரும் தாங்கள் வாங்கி வந்தப் பரிசை மணமக்களுக்குக் கொடுத்து விட்டு....சாப்பிட்டு விட்டுக் கிளம்பினர்.
நித்திலா அலுவலகத்தை அடைந்த போது மணி பதினொன்று ஆகியிருந்தது. லேசாகக் கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தவளை நிமிர்ந்து பார்த்தவன்.....கண்ணிமைக்கவும் மறந்து போனான்.இதுவரை சுடிதாரில் மட்டுமே அவளைப் பார்த்திருந்தவன்....முதன் முதலாக அவளைப் புடவையில் பார்க்கிறான்.
அதுவும் தழையத் தழையப் பட்டுப்புடவைக் கட்டி....அதற்குத் தோதான அணிகலன்கள் அணிந்து கொண்டு....அழகாக இருந்தவளைக் கண்டவனின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது.
குறு குறுவென்று தன்னையேப் பின்தொடர்ந்த ஆதித்யனின் பார்வையை உணர்ந்தவளுக்குப் படபடப்பாக வந்தது.
'என்ன இவர் இப்படி பார்க்கிறாரு....?',என்று மனதில் நினைத்தவள் அமைதியாகத் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.மறந்தும் அவன் பக்கம் அவள் பார்வையைத் திருப்பவில்லை.
சிறு ஏக்கப் பெருமூச்சுடன் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தவனுக்கு...தன் மனம் தன் வசம் இல்லை என்பது புரிந்தது.அடிக்கடி அவளைப் பார்வையிட்டவாறு வேலை செய்து கொண்டிருந்தவனை அவள் கண்டு கொண்டாள்.ஒருமுறை அவள் புறம் திரும்பிய....அவனது விழிகளை தனது விழிகளால் சிறையிட்டு நிறுத்தினாள் நித்திலா.
அங்கு....நான்கு விழிகளின் சங்கமம் நிகழ்ந்து...ஒரு புதுக் கவிதை மிக அழகாகப் பிறந்து கொண்டிருந்தது....!அவன் விழிகளுடன் கலந்த தன் விழிகளைப் பிரித்தெடுக்க முடியாமல்....தத்தளித்துக் கொண்டிருந்தாள் நித்திலா.'வேறு பக்கம் பார்வையைத் திருப்பு...!',என்று அவளது மூளை கட்டளையிட....அவளது மனமோ....மூளையின் கோரிக்கையை நிராகரித்துக் கொண்டிருந்தது.
தன் உள்ளத்துக் காதல் மொத்தத்தையும் தன் விழிகள் வழியாக....அவள் இதயத்துக்குள் பாய்ச்சி விட வேண்டும் என்ற வேகத்துடன்....தன் விழிகளை அவள் விழிகளோடுப் பிணைத்திருந்தான் ஆதித்யன்...!
எவ்வளவு நேரம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனரோ..... தெரியவில்லை...?நித்திலாதான் முதலில் சுய உணர்வை அடைந்து தன் விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள்.
"எ...என்ன சார்...?",அவள் தடுமாற,
தனக்குத் தானேப் புன்னைகைத்துக் கொண்டவன்,"இன்னைக்கு என்ன ஸ்பெஷல்...?புடவையெல்லாம் கட்டியிருக்க...?",அவள் தடுமாற்றத்தை ரசித்தபடி கேட்க,
"அதுதான் நேற்றே சொன்னேனே சார்....என் பிரெண்ட் மேரேஜ்ன்னு...அங்க போய்ட்டு அப்படியே வந்துட்டேன்...",
"ஓ...நைஸ்...!ரொம்ப அழகாயிருக்க...!",இடக்கையால் தன் முடியைக் கோதியவாறு சொன்னவன்....அவனுக்கேப் புதிதாகத் தெரிந்தான்.ஏதோ டீனேஜ் பையனைப் போன்று இந்த குறுகுறுப்பும்....மனதுக்குள் வரும் படபடப்பும் அவனுக்குப் புதிது.
ஏன் என்று தெரியாமலேயே கன்னம் சிவந்தவள்....அவனை ஏறிட்டும் பார்க்காமல்."தே...தேங்க் யூ...",என்று விட்டுத் தன் முகத்தை.... பார்த்துக் கொண்டிருந்த ஃபைலில் புதைத்துக் கொண்டாள்.
இதழோரங்கள் புன்னைகையில் விரிய...தலையைக் குலுக்கிக் கொண்டவன்...லேப்டாப்பின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினான்.
சிறிது நேரத்திற்குப் பிறகு....,"நித்திலா...!",என்று அவன் அழைக்க,"சார்...!",என்றபடி நோட்பேடும்...பேனாவுமாக அவன் முன் வந்து நின்றாள்.
"நமக்கு வந்திருக்கிற ஒரு கம்பெனியோட ப்ரொஜெக்ட்டுக்கு கொட்டேஷன் ரெடி பண்ண வேண்டி இருக்கு...நான் சொல்றதை நோட் பண்ணிக்க...!",என்றபடி மளமளவென்று விபரங்களைக் கூற ஆரம்பித்தான்.
அவன் வேகத்திற்கு ஈடு கொடுத்தபடி...அனைத்தையும் கவனமாகக் குறிப்பெடுத்துக் கொண்டாள் நித்திலா.
"இதைக் கொஞ்சம் ஃபார்மலா ரெடி பண்ணனும்...",என்றபடி நிமிர்ந்தவனின் பார்வையில்...அவளது புடவை மறைக்காத இடுப்பு பிரதேசம் விழுந்தது. வளவளவென்று....பளபளப்பாக இருந்த அந்தப் பகுதியிலிருந்து விழிகளைப் பிரித்தெடுக்க முடியாமல்....கண்களை ஓட விட்டவனின் பார்வையில்....அவள் இடையில் இருந்த கரு மச்சம் வந்து விழுந்தது.
'எங்க எல்லாம் மச்சத்தை வைச்சிருக்கறா பாரு....?',என்று எண்ணியவனின் இதழ்களில் ரகசியப் புன்னகை ஒன்று குடிவந்தது.
அவன் எதுவும் கூறாமல் இருக்கவும்...அவனைக் கேள்வியாக நிமிர்ந்து பார்த்தாள் நித்திலா.அவன் ஒரு மார்க்கமாக சிரித்துக் கொண்டிருக்கவும்,"என்னாச்சு சார்...?ஏன் சிரிக்கிறீங்க...?",என்றாள் அப்பாவியாக அவன் பார்வையை உணராது.
அவளது கேள்வியில் தன்னை சுதாரித்துக் கொண்டவன், "ஹ...ஒண்ணுமில்ல... நீ போய் கொட்டேஷன் ரெடி பண்ணு...!",என்றபடி திரும்பிக் கொண்டான்.
மதிய உணவின் போது அவளைப் பார்த்த பாலாவும் மெய் மறந்துதான் போனான்...!
"ஹேய்...என்னப்பா....இங்கே ஏதாவது பட்டுப்புடவை விளம்பரம் எடுக்கறாங்களா....?",என்றபடி சுற்றும் முற்றும் தேடுவதைப் போல் பாவனை செய்தவனின் கையில் 'நறுக்'கென்று கிள்ளியவள்,
"ஏய்...கிண்டல் பண்ணாதப்பா...",என்று சிணுங்கினாள்.
அவளது சிணுங்களில் தன்னைத் தொலைத்தவன்,"ச்ச்சும்மா டா...!பட்...ரியலி யூ ஆர் லுக்கிங் வெரி பியூட்டிஃபுல்...!",என்றவனின் விழிகள் இதமாக அவளை வருட....குரலும் குழைந்து இனிமையாக வந்தது.
ஆனால்....அவனிடம் நிகழ்ந்த எந்த மாற்றத்தையும் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை...!தனக்கு மிகவும் பிடித்த பனீர் பிரைட் ரைஸை உள்ளே தள்ளியபடி, "அதெல்லாம் எனக்கே தெரியும்....!நீ ஒண்ணும் சொல்ல வேண்டியதில்ல....",என்று பழிப்புக் காட்டினாள்.
பாலாவுடன் இருக்கும் போது...நித்திலாவின் அத்தனைக் குறும்புத் தனங்களும் வெளிவந்து விடும்...அவன் தோழமையுடன் பழகுவதாலோ...என்னவோ....அவனுடன் அவளால் இயல்பாக ஒன்ற முடிந்தது.ஆனால்...அந்த உணர்வில் நட்பு என்பதைத் தவிர வேறு எந்த உணர்வும் இல்லை என்பதுதான் உண்மை....!
அவள் கூறிய விதத்தை ரசித்துச் சிரித்தவன்...தன் உணவை சாப்பிட ஆரம்பித்தான்.
"ஏண்டி நித்தி...உன் பிரெண்ட் காவ்யா லவ் மேரேஜ்தான...?",என சுமித்ரா கேட்க,
"ம்ம்...ஆமாம்...",
"அப்ப நீயும் லவ் மேரேஜ்தான் பண்ணிக்க போறயா...?",சுமித்ரா ஆர்வத்துடன் கேட்க,
"செருப்பு பிஞ்சிடும்....",அவளைப் பார்த்து முறைத்தபடி கூறினாள் நித்திலா.
"ஏன் நித்தி...?காதலிச்சு கல்யாணம் பண்றதுல நம்பிக்கை இல்லையா...?",முகம் இருள கேட்டான் பாலா.
"நம்பிக்கை இல்லைன்னு இல்ல....பட்...பிடிக்காது...!",
"ஏன்...?",
"ஏன்னா....அந்தப் பொறுப்பை நான் என் அப்பா அம்மாகிட்ட கொடுத்துட்டேன்...!"
"ஹ்ம்ம்...வெரி நைஸ்...!",ரசித்துக் கூறினாள் சுமித்ரா.
அதைக் கேட்ட பாலாவிற்குத்தான் முகம் வாடிப் போனது.மூவரும் சாப்பிட்டு முடித்துக் கிளம்பும் வரை....அவன் முகம் குழப்பத்துடன்தான் இருந்தது.
மதியத்திற்கு மேல் ஆதித்யனை அலுவலகத்தில் பார்க்க முடியவில்லை.ஏதோ வேலையாக வெளியே சென்றிருப்பதாக...நித்திலாவிற்கு தகவல் மட்டும் வந்தது.அவன் இல்லாத அறையில் வேலை செய்வது...ஏனோ வெறுமையாக இருந்தது அவளுக்கு.
....................................................................................................................
சுமித்ராவிற்கு வேலையில் ஏதோ சந்தேகம் வரவும்....அதை கௌதமிடம் கேட்டுத் தீர்த்துக் கொள்வதற்காக....அவனுடைய அறைக்குச் சென்றாள்.இருமுறை கதவைத் தட்டியும் உள்ளிருந்து எந்தப் பதிலும் வரவில்லையாதலால்....அவளே கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
கௌதமின் அறையை ஒட்டி இன்னொரு சிறிய அறை இருக்கும்.முக்கியமான ஃபைல்கள் எல்லாம் அங்குதான் அடுக்கப்பட்டிருக்கும்.
அவன் அங்குதான் இருப்பான் என்ற எண்ணத்தில்...அந்த அறையின் கதவைத் தள்ள...மிகச் சரியாக அதே நேரத்தில்...உள்ளிருந்து கெளதம் வெளியே வருவதற்காக கதவை இழுக்க...அவன் இழுத்த வேகத்தில் இவள் தடுமாறினாள்.
கீழே விழப் போனவளைத் தாங்கிப் பிடித்தான் கெளதம்.அவனது ஒரு கரம் அவளது இடையை அழுந்தப் பற்றியிருக்க....இன்னொரு கரம் அவளது தோளைத் தழுவியிருந்தது. அவளும்...'எங்கே...கீழே விழுந்து விடுவோமோ....?',என்ற பயத்தில் அவனது சட்டைக் காலரை இறுகப் பற்றியபடி...விழிகளை அழுந்த மூடியிருந்தாள்.
துடிக்கும் இதழ்களுடன்....தன் மீது சாய்ந்திருந்தவளைப் பார்த்தவனுக்கு....காதல் போதை தலைக்கேற...அவள் அதரங்களை சிறை செய்யும் நோக்கத்துடன்....அவளது இதழ்களை நோக்கி மெல்ல குனிந்தான்.
அவனது சூடான மூச்சுக்காற்று தன் முகத்தின் மேல் படவும்....மெல்ல விழியுயர்த்திப் பார்த்தவளின் வெகு அருகில் தெரிந்தது அவன் முகம்....!அவன் முகத்தில்....இதுவரை அவள் பார்த்திராத உணர்வுகள் குடி கொண்டிருந்தன.
முத்தமிடும் நோக்கத்துடன்....அவள் இதழ்களை நெருங்கியவன்...அவள் விழி திறந்துப் பார்க்கவும்...சட்டென்று தன் உணர்வுக்கு வந்தான்.அதுவரை அவனைச் சுற்றியிருந்த மாயவலை அறுந்து விழுந்தது.
அவள் மீதிருந்த தன் கைகளை விலக்கியவன்....தன் சட்டையைப் பற்றியிருந்த அவளது கரங்களை முரட்டுத்தனமாகத் தள்ளி விட்டான்.அவன் தள்ளிய வேகத்தில் கீழே விழப் போனவள்...அருகிலிருந்த கதவைப் பிடித்து சமாளித்து நின்றாள்.
அனல் கக்கும் பார்வையை அவளை நோக்கி வீசியவன்,"பார்த்து வர தெரியாதா...?இப்படித்தான் மேலே வந்து மோதுவியா...?",என வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.
"இல்ல சார்...!நீங்க இந்த ரூம்லதான் இருப்பீங்கன்னு...நான் கதவைத் திறந்தேன்...அதுக்குள்ள...",
"வாயை மூடு...!முதல்ல இப்படி எதிர்த்து பேசறதை நிறுத்து....எதைக் கேட்டாலும்....ஒரு பதில் வைச்சிருப்பியே...?",அவன் அரட்டிய அரட்டலில் அவள் எதுவும் பேசாமல் தலைகுனிந்து நின்று கொண்டாள்.
"உள்ளே வர்றதுக்கு முன்னாடி கதவைத் தட்டிட்டு வரணும்ங்கிற பேசிக் மேனர்ஸ் கூட இல்லையா...?",அவன் பாட்டுக்கு அவளை வறுத்தெடுத்துக் கொண்டிருக்க...அவள் உடல் வெடுவெடுக்க நின்று கொண்டிருந்தாள்.
அவள் அமைதியைக் கண்டு அவனுக்கு இன்னும் கோபம்தான் வந்தது."வாயைத் திறந்து பேசு....இங்க ஒருத்தன் காட்டுக் கத்தல்லா கத்திக்கிட்டு இருக்கேன்...!நீ பாட்டுக்கு 'யாருக்கு வந்த விருந்தோ'ன்னு நின்னுக்கிட்டு இருக்க....?பேசிக்கிட்டு இருக்கற நான் என்ன பைத்தியமா....?",என்று எரிந்து விழ,
அவள் பேசினாலும்,'எதிர்த்து பேசறயா...?',என்று கத்தினான்....அதைக் கேட்டு அவள் அமைதியாய் இருந்தாலும்,'பேச மாட்டயா...?' என்று குதறினான்.மொத்தத்தில் தன் நிலைமை என்ன என்று தெரியாமல்...அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.
"சாரி சார்...!என் மேல தான் தப்பு....ரூம் கதவை நாக் பண்ணாம வந்தது...என் தப்புதான்...!ஸாரி...!",
அவள் இப்பொழுதெல்லாம் இப்படித்தான் மாறிவிட்டாள்.முதலில் தான் கெளதம் திட்டுவதற்கு பயந்து கொண்டு அழுது விடுவாள்.போகப் போக...அவன்...அவள் மீது எரிந்து விழுந்துக் கொண்டே இருந்ததாலோ...என்னவோ....அவள்...அவளது கோபத்திற்குப் பழகி விட்டாள்.தவறு அவள் மீது இல்லையென்றாலும் மன்னிப்புக் கேட்டு...விட்டுக் கொடுத்து விடுவாள்.
அவள் எதற்காக...அவனது கோபத்தைத் தாங்கிக் கொண்டு....பொறுத்துப் போகிறாள் என்று அவளும் எண்ணிப் பார்க்கவில்லை.அவன் எதற்காக...அவள் மீது உரிமையுடன் கோபித்துக் கொள்கிறான்...என்பதை அவனும் யோசிக்கவில்லை...!
அவள் மன்னிப்புக் கேட்கவும்...அவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.'ச்சே...இப்ப யார் மேலேயும் தப்பில்லை...!நான் எதுக்கு தேவையில்லாம ரியாக்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்....?',என்று எண்ணியவன்,"சரி....இப்போ எதுக்கு இங்க வந்த...?",என்று கேட்டபடி தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்தான்.
பிறகு அவள் தன் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு படுத்திக்கொண்டு ஒரு "நன்றி"யுடன் வெளியேறி விட்டாள்.அவள் சென்ற பிறகு யோசனையில் ஆழ்ந்தவனின் மனதில்,'இன்னும் கொஞ்ச நேரம்....அவ கண்ணைத் திறக்கலைன்னா...நான் அவளை கிஸ் பண்ணியிருப்பேன்...!கடவுளே...!என்ன காரியம் செய்ய இருந்தேன்...?', என்று எண்ணமிட்டவனின் முகத்தில் அவளை முத்தமிட முடியாத ஏமாற்றம் படிந்தது என்னவோ உண்மைதான்...!
அவளை முத்தமிட முடியாத ஏக்கத்தில்தான் அவன்...அவளைக் கண்டபடித் திட்டியது என்ற உண்மையை அவனது மனசாட்சி அவனுக்கு வெட்ட வெளிச்சமாக்க.... ஆனால்....அவனது மூளையோ அதை ஏற்றுக் கொள்ள மறுத்து சண்டித்தனம் செய்தது.
பார்ப்போம்....!காதலுக்கு முன் எந்த மனிதனின் மூளையும் வேலை செய்யாது....!காதல் தேவனின் முன்...காதல் கொண்ட மனது மண்டியிட்டுத்தான் ஆக வேண்டும்...என்பதை அவனது அறிவே அவனுக்கு உணர்த்தும் காலம் வரும்....!
அகம் தொட வருவான்...!!!
அடுத்த நாள் அலுவலகத்திற்கு வந்த நித்திலாவை....வெறுமையான டேபிளே வரவேற்றது.
"குட் மார்னிங் நித்தி....!என்னப்பா இங்க வந்திருக்கிற...?இனி உன் இடம் அதுதான்...",என சுமித்ரா ஆதித்யனின் அறையைக் கை காட்ட,
"தெரியும்...!நீ வாய மூடிட்டு உன் வேலையைப் பாரு...",என எரிந்து விழுந்தாள் நித்திலா.
"ஹே...கூல் டா...!எதுக்கு இப்ப இவ்ளோ கோபப்படற....?"
"உனக்கென்ன....நீ ஜாலியா இங்க உட்கார்ந்துகிட்டு....எல்லார்கிட்டேயும் அரட்டை அடிச்சிக்கிட்டு வொர்க் பண்ணுவ...நான்தான் அங்க தனியா மொட்டு மொட்டுன்னு உட்கார்ந்திருக்கணும்....",
"டோன்ட் வொரி டி....!லன்ச் டைம் அண்ட் பிரேக் டைம்ல மீட் பண்ணிக்கலாம்....ஒகே வா...?",என சமாதானப்படுத்த முயல,
"வேற வழி....!சரி ஒகே....நான் கிளம்பறேன்...!",என்றவள் ஆதித்யனின் அறையை அடைந்து கதவை ஒரு விரலால் தட்டி அனுமதிக் கேட்க,
உள்ளிருந்து "கம் இன் நித்திலா....",என்ற ஆதித்யனின் குரல் கம்பீரமாக ஒலித்தது.கதவைத் திறந்து உள்ளே சென்றவள்,"குட் மார்னிங் சார்....!",என்று புன்னகைக்க,
"வெரி குட் மார்னிங் நித்திலா....!இனி நீ இங்கேதான வொர்க் பண்ணப் போற....ஸோ...ஒவ்வொரு முறையும் உள்ளே வர்ரதுக்கு என்கிட்டே பெர்மிஷன் கேட்க வேண்டாம்....ஃபீல் லைக் யுவர் கேபின்...",எனக் கூறி 'பளிச்' என்று புன்னகைக்க....அந்தப் புன்னகையில் அவளது கோபம் மறைந்து மாயமாய் போனது என்னவோ உண்மைதான்....!
"ஒகே நித்திலா....உன் டேபிள் ரெடி...!",என்றபடி அவனது டேபிளுக்கு அருகில் சற்றுத் தள்ளிப் போடப்பட்டிருந்த டேபிளைக் காட்டினான்.அவள் வேலை செய்வதற்கு ஏதுவாக அந்த டேபிள் வடிவமைக்கப்பட்டிருந்தது.அவளுக்குத் தேவையானப் பொருட்கள் அனைத்தும் நேர்த்தியுடன் அதில் அடுக்கப்பட்டிருந்தன.அவளுடைய வசதிக்காக ஒவ்வொன்றையும்...பார்த்துப் பார்த்து செய்திருந்தான்.
"வாவ்...!எல்லாத்தையும் யோசிச்சுப் பண்ணியிருப்பீங்க போல....இனி ஃபைல் எடுக்கறதுக்கு எழுந்திருக்க வேண்டியதில்ல....உட்கார்ந்த இடத்தில இருந்தே கை நீட்டி எடுக்கற மாதிரி கப்போர்ட் செட் பண்ணியிருக்கீங்க....சூப்பர் சார்...!",எனக் குதூகலமாய் கூறியவளைப் பார்த்தவன்,
"யெஸ் நித்திலா....!அப்புறம்....என் செக்ரெட்டரியுடைய வசதி எனக்கு ரொம்ப முக்கியம்ல.....",எனக் கூறிப் புன்னகைத்தான்.
எதுவும் கூறாமல் சிறு புன்னகையை மட்டும் சிந்தியவளைக் கண்டவன்,"வெல் நித்திலா....!உன் வொர்க்கை ஸ்டார்ட் பண்ணிடு...!ஃபர்ஸ்ட் முக்கியமான மெய்ல்ஸ்க்கு எல்லாம் ரிப்ளை பண்ணிடு...",என்க,அதன் பிறகு இருவரும் தத்தம் வேலைகளில் மூழ்கினர்.
ஊடும் பாடும் அவளைப் பார்த்துக் கொண்டு வேலை செய்வது ஆதித்யனுக்குப் பிடித்திருந்தது.அவளது விரல்கள் கம்ப்யூட்டர் கீ போர்டில் ஒரு வித லாவகத்துடன் விளையாடுவதையும்.....அவள் வேலை செய்யும் போது முன் நெற்றியில் வந்து விழும் கற்றைக் கூந்தலை....ஒரு விரலைக் கொண்டு ஒதுக்கி...அதைக் காதிற்குப் பின்னால் செருகிக் கொள்ளும் அழகையும்....அவளுக்குத் தெரியாமல் ரசித்துக் கொண்டிருந்தான்.
இருவரும் தங்களுடைய அலுவலில் ஆழ்ந்திருக்க நித்திலாவின் போன் அலறியது.சுமித்ராதான் மதிய உணவிற்காக அழைத்திருந்தாள்.தனது சிஸ்டமை ஆஃப் செய்து விட்டு எழுந்தவளைக் கண்டு ஆதித்யன் கேள்வியாக நோக்க,
"லன்ச் டைம் சார்...நான் போய் சாப்பிட்டுட்டு வரேன்....!",என்றவளுக்கு,
"அதுக்குள்ள லன்ச் டைம் வந்துடுச்சா...?நேரம் போனதே தெரியல....ஒகே நித்திலா...!யூ கோ...!",என அனுமதியளித்தான்.
இவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் பாலாவும் வந்து சேர்ந்து கொண்டான்.
சுமித்ராதான் முதலில் பேச்சை ஆரம்பித்தாள்."அப்புறம் நித்தி...!ஃபர்ஸ்ட் டே எப்படி இருந்துச்சு...?",எனக் கேள்வி எழுப்ப,
"என்ன பர்ஸ்ட் டே வா...?அவ வந்து ஜாயின் பண்ணி ஒரு மாசத்துக்கு மேலே இருக்குமே...?",என்றான் பாலா.
"நான் அதைக் கேட்கல....அவ ஆதித்யன் சார் கூட வொர்க் பண்றதுல இன்னைக்குத்தான் முதல் நாள்..அதைக் கேட்டேன்...!",
"என்னங்க சுமித்ரா சொல்றீங்க...?எனக்குப் புரியல...?",என பாலா விழிக்க,
"ப்ச்....பாலா...!ஆதி சார் இன்னையில இருந்து என்னை...அவரோட கேபினிலேயே வொர்க் பண்ண சொல்லிட்டாரு....அவ அதைத்தான் சொல்றா...",சாப்பாட்டை விழுங்கியபடி நித்திலா விளக்க,
""வாட்...?பட்...ஏன்...?",அவன் விடாமல் கேள்வி கேட்க....சற்று எரிச்சலடைந்த நித்திலா,
"அய்யோ...!அதெல்லாம் பழைய கதை....விட்டுத் தள்ளு....இப்போதைய மேட்டருக்கு வா....நீ என்ன சாப்பாடு...?",என்றபடி அவனது டிபன் பாக்ஸை தன் பக்கம் இழுத்தாள்.
அவள் கூறியதில் பாலாவின் முகம் யோசனைக்கு மாறியது.'ஆதி சார் அவரோட கேபின்க்கு ஒரு பொண்ணை அலோவ் பண்ராருன்னா....யோசனையா இருக்கே....!அவரு அப்படியெல்லாம் ஒரு பொண்ணு கூட க்ளோஸா பழகர ஆள் இல்லையே....?நித்திலா கூட மட்டும் பழகறார்னா....ஒரு வேளை....',அதற்கு மேல் யோசிக்கவே அவனுக்குப் பிடிக்கவில்லை.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ....அவ்வளவு சீக்கிரம் தன்னுடையக் காதலை நித்திலாவிடம் தெரியப்படுத்தி விட வேண்டும் என்ற உறுதியான முடிவு அவனுக்குள் எழுந்தது.
இவ்வாறாக இருவரும் தங்களது காதலை தன்னவளிடம் தெரியப்படுத்த வேண்டும் என்ற துடிப்புடன் காத்திருக்க....அந்தக் காதலுக்கு உரியவளோ....'காதல்' என்ற சொல்லையே தன்னிடம் நெருங்க விடாது நெருப்பாய் எரிந்துக் கொண்டிருந்தாள்.
............................................................................................
நாட்கள் இறக்கைக் கட்டிக் கொண்டு பறக்க...காவ்யாவின் திருமண நாளும் வந்தது.அதிகாலையிலேயே முகூர்த்தம் என்பதால்...முழு நாள் விடுமுறை எடுக்காமல்... இரண்டு மணி நேரம் மட்டும் பெர்மிஷன் கேட்டிருந்தாள் நித்திலா.அந்த இரண்டு மணி நேரம் பெர்மிஷன் வாங்குவதற்குள்ளேயே போதும் போதும் என்றாகிவிட்டது நித்திலாவிற்கு.
அவளைத் தினமும் பார்க்க வேண்டும் என்ற ஆசையில்...அவளுக்கு விடுமுறை அளிப்பதையே மறுத்தான் ஆதித்யன்.
ரமேஷின் வீட்டில் காவ்யாவை ஏற்றுக் கொண்டதால்....இரண்டு நாட்களுக்கு முன்பே வந்து அவளை அழைத்துச் சென்று விட்டனர்.தோழிகள் அனைவரும் பட்டுப் புடவைக் கட்டிக் கொண்டுத் தயாராகினர்.
நித்திலாவும் அழகிய இளம்பச்சை நிற பட்டுப்புடவையில்....அதற்குத் தோதாக முத்துக்கள் பதித்த நகை செட் அணிந்து கொண்டு....தளரப் பின்னியக் கூந்தலுடன்....தோளின் இருபுறமும் வழியுமாறு வைத்துக் கொண்ட மல்லிகைப் பூவுடனும்....அழகியத் தேவதையாக ஜொலித்துக் கொண்டிருந்தாள்.
நந்தினி கூட கிண்டல் செய்தாள்."வாவ்....!அழகா இருக்க நித்தி...!இப்ப மட்டும் எவனாவது உன்னைப் பார்த்தான்....அப்படியே தூக்கிட்டுப் போயிடுவான்...",என்க,
சிறு வெட்கப் புன்னைகையைப் பதிலாகத் தந்தவள்,"போகலாம் டி....நேரமாச்சு...!",என்றாள் நாணத்துடன்.
அனைவரும் ஒரு டாக்சி பிடித்துக் கோவிலுக்குச் சென்றனர்.கண்களில் கனவுகளுடனும்....செம்மைப் பூசியக் கன்னங்களுடனும்....ஒரு மணப்பெண்ணிற்குரிய சர்வ லட்சணங்களுடன் காணப்பட்டாள் காவ்யா,
இவர்களைப் பார்த்ததும் ஆவலுடன் வரவேற்றவளை....கட்டி அணைத்து வாழ்த்துச் சொல்லினர் தோழிகள்.நண்பர்களின் கேலியுடனும்...பெரியவர்களின் ஆசியோடும்....இனிதே நடந்தேறியது காவ்யா-ரமேஷின் திருமணம்.
திருமணம் முடிந்தவுடன் தம்பதிகளை ரமேஷின் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வதாக இருந்தது.எனவே....தோழிகள் அனைவரும் தாங்கள் வாங்கி வந்தப் பரிசை மணமக்களுக்குக் கொடுத்து விட்டு....சாப்பிட்டு விட்டுக் கிளம்பினர்.
நித்திலா அலுவலகத்தை அடைந்த போது மணி பதினொன்று ஆகியிருந்தது. லேசாகக் கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தவளை நிமிர்ந்து பார்த்தவன்.....கண்ணிமைக்கவும் மறந்து போனான்.இதுவரை சுடிதாரில் மட்டுமே அவளைப் பார்த்திருந்தவன்....முதன் முதலாக அவளைப் புடவையில் பார்க்கிறான்.
அதுவும் தழையத் தழையப் பட்டுப்புடவைக் கட்டி....அதற்குத் தோதான அணிகலன்கள் அணிந்து கொண்டு....அழகாக இருந்தவளைக் கண்டவனின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது.
குறு குறுவென்று தன்னையேப் பின்தொடர்ந்த ஆதித்யனின் பார்வையை உணர்ந்தவளுக்குப் படபடப்பாக வந்தது.
'என்ன இவர் இப்படி பார்க்கிறாரு....?',என்று மனதில் நினைத்தவள் அமைதியாகத் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.மறந்தும் அவன் பக்கம் அவள் பார்வையைத் திருப்பவில்லை.
சிறு ஏக்கப் பெருமூச்சுடன் தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தவனுக்கு...தன் மனம் தன் வசம் இல்லை என்பது புரிந்தது.அடிக்கடி அவளைப் பார்வையிட்டவாறு வேலை செய்து கொண்டிருந்தவனை அவள் கண்டு கொண்டாள்.ஒருமுறை அவள் புறம் திரும்பிய....அவனது விழிகளை தனது விழிகளால் சிறையிட்டு நிறுத்தினாள் நித்திலா.
அங்கு....நான்கு விழிகளின் சங்கமம் நிகழ்ந்து...ஒரு புதுக் கவிதை மிக அழகாகப் பிறந்து கொண்டிருந்தது....!அவன் விழிகளுடன் கலந்த தன் விழிகளைப் பிரித்தெடுக்க முடியாமல்....தத்தளித்துக் கொண்டிருந்தாள் நித்திலா.'வேறு பக்கம் பார்வையைத் திருப்பு...!',என்று அவளது மூளை கட்டளையிட....அவளது மனமோ....மூளையின் கோரிக்கையை நிராகரித்துக் கொண்டிருந்தது.
தன் உள்ளத்துக் காதல் மொத்தத்தையும் தன் விழிகள் வழியாக....அவள் இதயத்துக்குள் பாய்ச்சி விட வேண்டும் என்ற வேகத்துடன்....தன் விழிகளை அவள் விழிகளோடுப் பிணைத்திருந்தான் ஆதித்யன்...!
எவ்வளவு நேரம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனரோ..... தெரியவில்லை...?நித்திலாதான் முதலில் சுய உணர்வை அடைந்து தன் விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள்.
"எ...என்ன சார்...?",அவள் தடுமாற,
தனக்குத் தானேப் புன்னைகைத்துக் கொண்டவன்,"இன்னைக்கு என்ன ஸ்பெஷல்...?புடவையெல்லாம் கட்டியிருக்க...?",அவள் தடுமாற்றத்தை ரசித்தபடி கேட்க,
"அதுதான் நேற்றே சொன்னேனே சார்....என் பிரெண்ட் மேரேஜ்ன்னு...அங்க போய்ட்டு அப்படியே வந்துட்டேன்...",
"ஓ...நைஸ்...!ரொம்ப அழகாயிருக்க...!",இடக்கையால் தன் முடியைக் கோதியவாறு சொன்னவன்....அவனுக்கேப் புதிதாகத் தெரிந்தான்.ஏதோ டீனேஜ் பையனைப் போன்று இந்த குறுகுறுப்பும்....மனதுக்குள் வரும் படபடப்பும் அவனுக்குப் புதிது.
ஏன் என்று தெரியாமலேயே கன்னம் சிவந்தவள்....அவனை ஏறிட்டும் பார்க்காமல்."தே...தேங்க் யூ...",என்று விட்டுத் தன் முகத்தை.... பார்த்துக் கொண்டிருந்த ஃபைலில் புதைத்துக் கொண்டாள்.
இதழோரங்கள் புன்னைகையில் விரிய...தலையைக் குலுக்கிக் கொண்டவன்...லேப்டாப்பின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினான்.
சிறிது நேரத்திற்குப் பிறகு....,"நித்திலா...!",என்று அவன் அழைக்க,"சார்...!",என்றபடி நோட்பேடும்...பேனாவுமாக அவன் முன் வந்து நின்றாள்.
"நமக்கு வந்திருக்கிற ஒரு கம்பெனியோட ப்ரொஜெக்ட்டுக்கு கொட்டேஷன் ரெடி பண்ண வேண்டி இருக்கு...நான் சொல்றதை நோட் பண்ணிக்க...!",என்றபடி மளமளவென்று விபரங்களைக் கூற ஆரம்பித்தான்.
அவன் வேகத்திற்கு ஈடு கொடுத்தபடி...அனைத்தையும் கவனமாகக் குறிப்பெடுத்துக் கொண்டாள் நித்திலா.
"இதைக் கொஞ்சம் ஃபார்மலா ரெடி பண்ணனும்...",என்றபடி நிமிர்ந்தவனின் பார்வையில்...அவளது புடவை மறைக்காத இடுப்பு பிரதேசம் விழுந்தது. வளவளவென்று....பளபளப்பாக இருந்த அந்தப் பகுதியிலிருந்து விழிகளைப் பிரித்தெடுக்க முடியாமல்....கண்களை ஓட விட்டவனின் பார்வையில்....அவள் இடையில் இருந்த கரு மச்சம் வந்து விழுந்தது.
'எங்க எல்லாம் மச்சத்தை வைச்சிருக்கறா பாரு....?',என்று எண்ணியவனின் இதழ்களில் ரகசியப் புன்னகை ஒன்று குடிவந்தது.
அவன் எதுவும் கூறாமல் இருக்கவும்...அவனைக் கேள்வியாக நிமிர்ந்து பார்த்தாள் நித்திலா.அவன் ஒரு மார்க்கமாக சிரித்துக் கொண்டிருக்கவும்,"என்னாச்சு சார்...?ஏன் சிரிக்கிறீங்க...?",என்றாள் அப்பாவியாக அவன் பார்வையை உணராது.
அவளது கேள்வியில் தன்னை சுதாரித்துக் கொண்டவன், "ஹ...ஒண்ணுமில்ல... நீ போய் கொட்டேஷன் ரெடி பண்ணு...!",என்றபடி திரும்பிக் கொண்டான்.
மதிய உணவின் போது அவளைப் பார்த்த பாலாவும் மெய் மறந்துதான் போனான்...!
"ஹேய்...என்னப்பா....இங்கே ஏதாவது பட்டுப்புடவை விளம்பரம் எடுக்கறாங்களா....?",என்றபடி சுற்றும் முற்றும் தேடுவதைப் போல் பாவனை செய்தவனின் கையில் 'நறுக்'கென்று கிள்ளியவள்,
"ஏய்...கிண்டல் பண்ணாதப்பா...",என்று சிணுங்கினாள்.
அவளது சிணுங்களில் தன்னைத் தொலைத்தவன்,"ச்ச்சும்மா டா...!பட்...ரியலி யூ ஆர் லுக்கிங் வெரி பியூட்டிஃபுல்...!",என்றவனின் விழிகள் இதமாக அவளை வருட....குரலும் குழைந்து இனிமையாக வந்தது.
ஆனால்....அவனிடம் நிகழ்ந்த எந்த மாற்றத்தையும் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை...!தனக்கு மிகவும் பிடித்த பனீர் பிரைட் ரைஸை உள்ளே தள்ளியபடி, "அதெல்லாம் எனக்கே தெரியும்....!நீ ஒண்ணும் சொல்ல வேண்டியதில்ல....",என்று பழிப்புக் காட்டினாள்.
பாலாவுடன் இருக்கும் போது...நித்திலாவின் அத்தனைக் குறும்புத் தனங்களும் வெளிவந்து விடும்...அவன் தோழமையுடன் பழகுவதாலோ...என்னவோ....அவனுடன் அவளால் இயல்பாக ஒன்ற முடிந்தது.ஆனால்...அந்த உணர்வில் நட்பு என்பதைத் தவிர வேறு எந்த உணர்வும் இல்லை என்பதுதான் உண்மை....!
அவள் கூறிய விதத்தை ரசித்துச் சிரித்தவன்...தன் உணவை சாப்பிட ஆரம்பித்தான்.
"ஏண்டி நித்தி...உன் பிரெண்ட் காவ்யா லவ் மேரேஜ்தான...?",என சுமித்ரா கேட்க,
"ம்ம்...ஆமாம்...",
"அப்ப நீயும் லவ் மேரேஜ்தான் பண்ணிக்க போறயா...?",சுமித்ரா ஆர்வத்துடன் கேட்க,
"செருப்பு பிஞ்சிடும்....",அவளைப் பார்த்து முறைத்தபடி கூறினாள் நித்திலா.
"ஏன் நித்தி...?காதலிச்சு கல்யாணம் பண்றதுல நம்பிக்கை இல்லையா...?",முகம் இருள கேட்டான் பாலா.
"நம்பிக்கை இல்லைன்னு இல்ல....பட்...பிடிக்காது...!",
"ஏன்...?",
"ஏன்னா....அந்தப் பொறுப்பை நான் என் அப்பா அம்மாகிட்ட கொடுத்துட்டேன்...!"
"ஹ்ம்ம்...வெரி நைஸ்...!",ரசித்துக் கூறினாள் சுமித்ரா.
அதைக் கேட்ட பாலாவிற்குத்தான் முகம் வாடிப் போனது.மூவரும் சாப்பிட்டு முடித்துக் கிளம்பும் வரை....அவன் முகம் குழப்பத்துடன்தான் இருந்தது.
மதியத்திற்கு மேல் ஆதித்யனை அலுவலகத்தில் பார்க்க முடியவில்லை.ஏதோ வேலையாக வெளியே சென்றிருப்பதாக...நித்திலாவிற்கு தகவல் மட்டும் வந்தது.அவன் இல்லாத அறையில் வேலை செய்வது...ஏனோ வெறுமையாக இருந்தது அவளுக்கு.
....................................................................................................................
சுமித்ராவிற்கு வேலையில் ஏதோ சந்தேகம் வரவும்....அதை கௌதமிடம் கேட்டுத் தீர்த்துக் கொள்வதற்காக....அவனுடைய அறைக்குச் சென்றாள்.இருமுறை கதவைத் தட்டியும் உள்ளிருந்து எந்தப் பதிலும் வரவில்லையாதலால்....அவளே கதவைத் திறந்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
கௌதமின் அறையை ஒட்டி இன்னொரு சிறிய அறை இருக்கும்.முக்கியமான ஃபைல்கள் எல்லாம் அங்குதான் அடுக்கப்பட்டிருக்கும்.
அவன் அங்குதான் இருப்பான் என்ற எண்ணத்தில்...அந்த அறையின் கதவைத் தள்ள...மிகச் சரியாக அதே நேரத்தில்...உள்ளிருந்து கெளதம் வெளியே வருவதற்காக கதவை இழுக்க...அவன் இழுத்த வேகத்தில் இவள் தடுமாறினாள்.
கீழே விழப் போனவளைத் தாங்கிப் பிடித்தான் கெளதம்.அவனது ஒரு கரம் அவளது இடையை அழுந்தப் பற்றியிருக்க....இன்னொரு கரம் அவளது தோளைத் தழுவியிருந்தது. அவளும்...'எங்கே...கீழே விழுந்து விடுவோமோ....?',என்ற பயத்தில் அவனது சட்டைக் காலரை இறுகப் பற்றியபடி...விழிகளை அழுந்த மூடியிருந்தாள்.
துடிக்கும் இதழ்களுடன்....தன் மீது சாய்ந்திருந்தவளைப் பார்த்தவனுக்கு....காதல் போதை தலைக்கேற...அவள் அதரங்களை சிறை செய்யும் நோக்கத்துடன்....அவளது இதழ்களை நோக்கி மெல்ல குனிந்தான்.
அவனது சூடான மூச்சுக்காற்று தன் முகத்தின் மேல் படவும்....மெல்ல விழியுயர்த்திப் பார்த்தவளின் வெகு அருகில் தெரிந்தது அவன் முகம்....!அவன் முகத்தில்....இதுவரை அவள் பார்த்திராத உணர்வுகள் குடி கொண்டிருந்தன.
முத்தமிடும் நோக்கத்துடன்....அவள் இதழ்களை நெருங்கியவன்...அவள் விழி திறந்துப் பார்க்கவும்...சட்டென்று தன் உணர்வுக்கு வந்தான்.அதுவரை அவனைச் சுற்றியிருந்த மாயவலை அறுந்து விழுந்தது.
அவள் மீதிருந்த தன் கைகளை விலக்கியவன்....தன் சட்டையைப் பற்றியிருந்த அவளது கரங்களை முரட்டுத்தனமாகத் தள்ளி விட்டான்.அவன் தள்ளிய வேகத்தில் கீழே விழப் போனவள்...அருகிலிருந்த கதவைப் பிடித்து சமாளித்து நின்றாள்.
அனல் கக்கும் பார்வையை அவளை நோக்கி வீசியவன்,"பார்த்து வர தெரியாதா...?இப்படித்தான் மேலே வந்து மோதுவியா...?",என வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.
"இல்ல சார்...!நீங்க இந்த ரூம்லதான் இருப்பீங்கன்னு...நான் கதவைத் திறந்தேன்...அதுக்குள்ள...",
"வாயை மூடு...!முதல்ல இப்படி எதிர்த்து பேசறதை நிறுத்து....எதைக் கேட்டாலும்....ஒரு பதில் வைச்சிருப்பியே...?",அவன் அரட்டிய அரட்டலில் அவள் எதுவும் பேசாமல் தலைகுனிந்து நின்று கொண்டாள்.
"உள்ளே வர்றதுக்கு முன்னாடி கதவைத் தட்டிட்டு வரணும்ங்கிற பேசிக் மேனர்ஸ் கூட இல்லையா...?",அவன் பாட்டுக்கு அவளை வறுத்தெடுத்துக் கொண்டிருக்க...அவள் உடல் வெடுவெடுக்க நின்று கொண்டிருந்தாள்.
அவள் அமைதியைக் கண்டு அவனுக்கு இன்னும் கோபம்தான் வந்தது."வாயைத் திறந்து பேசு....இங்க ஒருத்தன் காட்டுக் கத்தல்லா கத்திக்கிட்டு இருக்கேன்...!நீ பாட்டுக்கு 'யாருக்கு வந்த விருந்தோ'ன்னு நின்னுக்கிட்டு இருக்க....?பேசிக்கிட்டு இருக்கற நான் என்ன பைத்தியமா....?",என்று எரிந்து விழ,
அவள் பேசினாலும்,'எதிர்த்து பேசறயா...?',என்று கத்தினான்....அதைக் கேட்டு அவள் அமைதியாய் இருந்தாலும்,'பேச மாட்டயா...?' என்று குதறினான்.மொத்தத்தில் தன் நிலைமை என்ன என்று தெரியாமல்...அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.
"சாரி சார்...!என் மேல தான் தப்பு....ரூம் கதவை நாக் பண்ணாம வந்தது...என் தப்புதான்...!ஸாரி...!",
அவள் இப்பொழுதெல்லாம் இப்படித்தான் மாறிவிட்டாள்.முதலில் தான் கெளதம் திட்டுவதற்கு பயந்து கொண்டு அழுது விடுவாள்.போகப் போக...அவன்...அவள் மீது எரிந்து விழுந்துக் கொண்டே இருந்ததாலோ...என்னவோ....அவள்...அவளது கோபத்திற்குப் பழகி விட்டாள்.தவறு அவள் மீது இல்லையென்றாலும் மன்னிப்புக் கேட்டு...விட்டுக் கொடுத்து விடுவாள்.
அவள் எதற்காக...அவனது கோபத்தைத் தாங்கிக் கொண்டு....பொறுத்துப் போகிறாள் என்று அவளும் எண்ணிப் பார்க்கவில்லை.அவன் எதற்காக...அவள் மீது உரிமையுடன் கோபித்துக் கொள்கிறான்...என்பதை அவனும் யோசிக்கவில்லை...!
அவள் மன்னிப்புக் கேட்கவும்...அவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.'ச்சே...இப்ப யார் மேலேயும் தப்பில்லை...!நான் எதுக்கு தேவையில்லாம ரியாக்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன்....?',என்று எண்ணியவன்,"சரி....இப்போ எதுக்கு இங்க வந்த...?",என்று கேட்டபடி தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்தான்.
பிறகு அவள் தன் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு படுத்திக்கொண்டு ஒரு "நன்றி"யுடன் வெளியேறி விட்டாள்.அவள் சென்ற பிறகு யோசனையில் ஆழ்ந்தவனின் மனதில்,'இன்னும் கொஞ்ச நேரம்....அவ கண்ணைத் திறக்கலைன்னா...நான் அவளை கிஸ் பண்ணியிருப்பேன்...!கடவுளே...!என்ன காரியம் செய்ய இருந்தேன்...?', என்று எண்ணமிட்டவனின் முகத்தில் அவளை முத்தமிட முடியாத ஏமாற்றம் படிந்தது என்னவோ உண்மைதான்...!
அவளை முத்தமிட முடியாத ஏக்கத்தில்தான் அவன்...அவளைக் கண்டபடித் திட்டியது என்ற உண்மையை அவனது மனசாட்சி அவனுக்கு வெட்ட வெளிச்சமாக்க.... ஆனால்....அவனது மூளையோ அதை ஏற்றுக் கொள்ள மறுத்து சண்டித்தனம் செய்தது.
பார்ப்போம்....!காதலுக்கு முன் எந்த மனிதனின் மூளையும் வேலை செய்யாது....!காதல் தேவனின் முன்...காதல் கொண்ட மனது மண்டியிட்டுத்தான் ஆக வேண்டும்...என்பதை அவனது அறிவே அவனுக்கு உணர்த்தும் காலம் வரும்....!
அகம் தொட வருவான்...!!!