Nirmala Krishnan
Saha Writer
- Messages
- 76
- Reaction score
- 13
- Points
- 6
அத்தியாயம் 20
மதியம் நித்திலா,சுமித்ரா மற்றும் பாலா ஆகிய மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது....சுமித்ரா எதையோ கூற வருவதும்...பிறகு தயங்குவதுமாக சாப்பாட்டைக் கொறித்துக் கொண்டிருந்தாள்.அவளை கவனித்த பாலா,
"என்னங்க சுமித்ரா...!சாப்பாட்டை சாப்பிடாம...கொறிச்சுக்கிட்டு இருக்கீங்க....?",அவன் கேட்ட பிறகுதான் அவளைப் பார்த்த நித்திலா,
"ஆமா டி...!இன்னும் ஃபுல் டிஃபன் பாக்ஸை அப்படியே வைச்சிருக்கிற...?",என்று கேள்வியெழுப்ப,
"ஹ்ம்ம்....சாப்பிடணும்....!அதுக்கு முன்னாடி உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்....!",என்றாள் தயங்கியவாறு.
"ம்...என்னன்னு சொல்லுங்க....!",பாலா அவளை ஊக்க,
"அது....அது வ...வந்து...",என்று அவள் இழுக்க,
"அதுதான் வந்துட்டியே....!இன்னும் வரணுமா....?என்னன்னு சொல்லித் தொலை டி...!",என்ன விஷயம் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் அவளைத் திட்டினாள் நித்திலா.
அப்பொழுதும் அவள் தயங்கியபடி,"அது....நானும்...எ..எனக்கு....",என்று இழுத்துக் கொண்டிருக்க,
அவள் முகத்தில் இருந்த வெட்கத்தைப் பார்த்த நித்திலா,"ஹே....!உனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சா....?அதனாலதான்....நீ இவ்ளோ வெட்கப்படற....!யா....!ஐ காட் இட்....!",என ஆர்ப்பரிக்க,
"அச்சோ....இல்லைடி...!",அவசர அவசரமாக மறுத்தாள் சுமித்ரா.
"நித்தி....!நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு....அவங்க என்ன சொல்ல வர்றாங்கன்னு கேட்போம்....!",என்று பாலா ஒரு அதட்டல் போடவும்,
"ஒகே...ஒகே....!நான் எதுவும் பேசலை....நீயே சொல்லு....!",என்றபடி அமைதியானாள்.
சிறிது நேரம் தனது கை விரல் நகங்களை ஆராய்ந்தபடி அமைதியாக அமர்ந்திருந்தவள்...பிறகு ஒரு பெருமூச்சை வெளியிட்டவாறு....இருவரையும் நிமிர்ந்து பார்த்து,"நானும்...கௌதமும் லவ் பண்றோம்....!",என்று விஷயத்தைப் போட்டு உடைத்தாள்.
மற்ற இருவரும் அவளை அதிர்ச்சியுடன் பார்த்திருக்க முதலில் சுதாரித்தது பாலாதான்."ஓ...கங்க்ராட்ஸ் சுமித்ரா....!வாழ்த்துக்கள்....!",என்று வாழ்த்து கூற,
"தேங்க்ஸ் பாலா....!",என்றபடி அவனைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தவள்,இன்னும் அதிர்ச்சி விலகாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த நித்திலாவை உலுக்கியவள்,"ஹே....நித்தி....!ஏன் இப்படி பார்க்கிற....?ஏதாச்சும் பேசு டி...!",என்று அவளை உலுக்க,
தன் நிலைக்கு வந்த நித்திலா...சுமித்ராவிடம் கேட்ட முதல் கேள்வி,"இந்த விஷயம் உங்க வீட்டுக்குத் தெரியுமா....?",என்பதுதான்.
அதைக் கேட்ட பாலாவிற்கு சிரிப்புதான் வந்தது."ஹா....ஹா...!நித்தி....!வீட்டுக்கு எல்லாம் சொல்லிட்டா....எல்லாரும் லவ் பண்ணுவாங்க....!விட்டால்....ஊரைக் கூட்டி சொல்ல சொல்லுவ போல.....!ஹா...ஹா...!",அவன் பாட்டிற்க்கு சிரித்துக் கொண்டிருக்க,
"யூ....ஷட்டப் பாலா....!நான் சுமித்ராக்கிட்ட பேசிட்டு இருக்கேன்.....!",கோபமாக அவனை அதட்டியவள்....சுமித்ராவிடம் திரும்பி,"சொல்லு டி....!இந்த விஷயம் உங்க வீட்டுக்குத் தெரியுமா....?",சற்று வேகமாக வந்தன அவளது வார்த்தைகள்.
ஏற்கனவே தன் குடுமபத்தை நினைத்து பயத்தில் இருந்த சுமித்ரா...இப்பொழுது இவள் இப்படி கேட்கவும்,"இ...இல்ல....தெரியாது....!",என்றாள் முகம் வெளிற.
நம் நாயகிக்கு இந்த பதில் போதாதா....?ரோட்டில் போகிறவர்கள் யாரவது 'நான் காதலிக்கிறேன்...!',என்று கூறினாலே போர்க்கொடி தூக்குபவள்....தன் உயிர்தோழியை சும்மாவா விடுவாள்.....?அவள் அர்ச்சனையை ஆரம்பித்துவிட்டாள்.
"லுக் சுமி....!இது தப்புன்னு தெரியல....?உங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருந்ததுன்னா....கெளதம் சாரை உங்க வீட்ல வந்து பேசச் சொல்லு....!அதை விட்டுட்டு....இப்படி வீட்டுக்குத் தெரியாம லவ் பண்றதெல்லாம் தப்பு....!",என்று அந்நியன் பெண் அம்பியாக மாறி அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தாள்.
வீடு என்றதுமே கலவரமடைந்த சுமித்ரா,"அய்யோ....!என் அப்பாவுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்....என்ன நடக்கும்ன்னே தெரியாது....!இந்த லட்சணத்துல வீட்டுக்கு வேற வந்து பேசி....அவங்க சம்மதத்தோட லவ் பண்ணச் சொல்ற....நடக்கற கதையை பேசு நித்தி....!",என்று பயம் பாதி....எரிச்சல் மீதியாகக் கூறி முடித்தாள்.
"அப்போ...உங்க வீட்டுக்குத் தெரியாம ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கறதா உத்தேசமா...?",கூர்மையாக அவளையே பார்த்தப்படி நித்திலா வினவ...தோழி என்ன கூற வருகிறாள் என்பது சுமித்ராவிற்குப் புரிந்து போனது.
நித்திலாவைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தவள்....அவளது கையைப் பற்றியபடி,"நித்தி....!நீ நினைக்கிற மாதிரியெல்லாம் நடக்காது....!என் அப்பா அம்மா மேல நானும் ரொம்ப மதிப்பும்....மரியாதையும் வைச்சிருக்கிறேன்....!அவங்க சம்மதம் இல்லாம....எங்க கல்யாணம் நடக்காது....!என் குடும்பத்தை சம்மதிக்க வைக்கிற பொறுப்பை....அவரு பார்த்துக்கறதா சொல்லியிருக்காரு....!",கடைசி வார்த்தையைக் கூறும் போதே....சுமித்ராவின் முகம் நாணத்தால் சிவந்தது.
தோழி முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும்....அழகான வெட்கமும்....அவளது தெளிவான சிந்தனையும்....நித்திலாவின் மனதில் இருந்த சஞ்சலங்களை விரட்டியடித்தன.
அவள் கன்னத்தைப் பிடித்து செல்லமாக ஆட்டியபடி,"உன் முகத்துல தெரியற இந்த வெட்கத்துக்காகவே....எதை வேணும்ன்னாலும் செய்யலாமே....!எனிவே....வாழ்த்துக்கள் டி....!பட்....என்ன நடந்தாலும் உன் பேரண்ட்ஸை நீ மறக்கக் கூடாது...!",என்று அவளுக்கு அறிவுறுத்தவும் மறக்கவில்லை.
இருவரும் பேச ஆரம்பித்ததில் இருந்து....இருவர் முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்த பாலாவிற்கு 'பக்'கென்று இருந்தது.
'அடக் கடவுளே....!இவகிட்ட காதலை சொல்றதுக்குப் பதிலா....இவ அப்பா அம்மா கால்ல போய் விழுந்தடலாம் போல இருக்கே....!இவ பேசறதை வைச்சுப் பார்த்தா....இந்த ஜென்மத்துல இல்ல....வேற எந்த ஜென்மத்துலேயும் லவ் பண்ண மாட்டான்னு தோணுதே....!',என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டான்.
இப்படி பேசிக் கொண்டிருக்கிறவளும்....ஒருநாள் காதல் வயப்படப் போகிறாள்....அதுவும் இந்த ஜென்மத்திலேயே....மொத்த ஜென்மத்திற்கும் போதுமான காதலை தன்னவனிடம் பொழியப் போகிறாள்....!பெற்றவர்களுக்குத் தெரியாமல் காதலிக்கக் கூடாது என்று சட்டம் பேசுகிறவள்தான்....ஒருநாள்....தன் வாழ்வின் மிக முக்கியமான தீர்மானத்தை அவர்களுக்குத் தெரியாமல் எடுக்கப் போகிறாள்....!
காதல் பூ மனதில் பூக்கும் போது.....அது வேறு எதையும் கவனிக்க விடாது....!தன் இணையின் சந்தோசம் மட்டுமே....அப்பொழுது அனைத்தையும் விட பிரதானமாகத் தெரியும்....!
தன் இணைக்காக மலையையும் புரட்டச் சொல்லும்....!வானத்தையும் தாண்டச் சொல்லும்....!அப்பேற்பட்ட காதல் நடத்தும் ஆட்சியில்....காதல் வயப்பட்டவர்கள்....காதலுக்கு அடிமையாகத்தான் ஆக வேண்டும்....!ஆனால்....அந்த அடிமைத்தனத்திலும்....ஒரு கோடி சுகத்தை காதல் மட்டுமே அள்ளி அள்ளித் தரும்....!இதில்....நித்திலா மட்டும் விதி விலக்கா என்ன....?
...........................................................................................................................
காலை....எப்பொழுதும் போல் வழக்கமாக தனது வேலைகளில் மூழ்கியிருந்தான் ஆதித்யன்.அவனை நிமிர்ந்து பார்ப்பதும்....பிறகு தன் சிஸ்டமை பார்ப்பதுமாக....மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் நித்திலா.
தான் பார்த்துக் கொண்டிருந்த ஃபைலில் இருந்து கண்களை எடுக்காமலேயே....,"என்ன வேணும் பேபி....?எதுக்கு இப்படி மாமாவையே குறுகுறுன்னு பார்த்துட்டு இருக்க....?",அவளைக் கண்டு கொண்டவனாய் அவன் வினவ,
"ஹ்ம்ம்....ஆசைதான்....!",அவள் சலித்துக் கொள்ள,
"அப்படியா....!இதோ ஒரு ஜஸ்ட் டென் மினிட்ஸ்....!இந்த வொர்க்கை முடிச்சிட்டு மாமா ஓடி வந்துடறேன்....!",
"ப்ச்....!",என்றவள் ஒன்றும் பேசாமல் திரும்பிக் கொண்டாள்.
சிறிது நேரம் கழித்து அவனே,"சரி....சொல்லு....!என்ன விஷயம்....?",கையிலிருந்த பைலை மூடி வைத்தபடி அவளிடம் கேட்க,
"ம்....அது....சுமித்ரா அண்ட் கெளதம் சார் விஷயம் உங்களுக்குத் தெரியுமா....?",
"ம்ம்....தெரியும்....!தெரியும்...!தெரிஞ்சு என்ன பண்றது....?உன் பிரெண்டுக்கு இருக்கற மூளை கூட....உனக்கு இல்லையே....!",என பெருமூச்சு விட,
"சார்....!ப்ளீஸ்.....!நான் சீரியஸா பேச விரும்பறேன்....!",அவள் முகத்தில் தெரிந்த உறுதியில் அவன் தன் விளையாட்டுத்தனத்தை கை விட்டான்.
"ஒகே....ஒகே...!சொல்லு....!",
"உங்க பிரெண்ட் எப்படி....?அதாவது அவரு கேரக்டர் பத்தி கேட்கிறேன்....",
"ஓ....!உன் பிரெண்டுக்காக விசாரணை கமிஷன் நடத்தறயாக்கும்....!",
"இதுல என்ன தப்பு இருக்கு....?என் பிரெண்டுக்கு நல்லது எது...?கெட்டது எதுன்னு சொல்றது என் கடமைதான...?",
"ம்....அஃப் கோர்ஸ்....!பட்....இந்த விஷயத்துல நீ பயப்பட வேண்டிய அவசியமே இல்ல....!கெளதம்....நூறு சதவீதம் நல்ல பையன்....!என்ன....கொஞ்சம் கோபமும்....அவசர புத்தியும் இருக்கு...!",
"உங்க பிரெண்டா இருந்துட்டு....கோபம் இல்லாம இருந்தாதான் ஆச்சரியம்.....",என்று அவள் முணுமுணுக்க....அவன் காதில் அது தெளிவாக விழுந்தது.
"என்ன பண்றது பேபி....?இந்த கோபமும்....பிடிவாதமும் இல்லைன்னா....எப்பவோ இந்த பிசினெஸ்ஸை இழுத்து மூடிட்டு போயிருக்க வேண்டியதுதான்.....!இங்க நிலைச்சு நிற்கறதுக்கு....அது ரெண்டும் கட்டாயம் வேணும்....!",
அவன் கூறுவதும் சரியாகத்தான் பட்டது நித்திலாவிற்கு.இவ்வளவு பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை வெறும் அன்பினால் மட்டுமே கட்டி ஆண்டுவிட முடியாது....!எதிராளியை வீழ்த்துவதற்குத் தேவையான பலத்தை கோபத்தால் மட்டுமே கொடுக்க முடியும்....!அதே போல்....தோல்வி வந்தாலும் எதிர்கொள்ளும் வைராக்கியத்தை பிடிவாதம் மட்டுமே கொடுக்கும்....!
"கடைசியில உன் பிரெண்டும்....என் பிரெண்டும் ஜோடி சேர்ந்துட்டாங்க....!நீயும் நானும்தான் ஒரு முன்னேற்றமும் இல்லாம இப்படியே இருக்கோம்....!",அவளை ஓரக் கண்ணால் நோக்கியபடி பெருமூச்சு விட்டான் ஆதித்யன்.
"அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது....!",என்றாள் அவள் பட்டென்று.
"தப்பா சொல்ற பேபி....!நீ நினைச்சாதான் எல்லாம் பண்ண முடியும்....!",அவன் சொன்னதன் அர்த்தத்தை உணராமல்,
"நான் எதையும் நினைக்கத் தயாரா இல்ல....!",என்றாள் அழுத்தமாக,
"பார்ப்போம்....!இன்னும் எவ்வளவு நாள் இப்படி சொல்லிக்கிட்டு இருக்கேன்னு....?",
"இன்னும் ரெண்டு வருஷம்....!இங்கே இருந்து ரிசைன் பண்ணிட்டு போகிற வரைக்கும் இதையேதான் சொல்லிக்கிட்டு இருப்பேன்....!",
அவளைப் பார்த்து மர்மமாகப் புன்னகைத்தவன்,"ஒகே பேபி....!நீ சொல்லிக்கிட்டே இரு....!இப்ப மாமாக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு....!அதை பார்க்க விடு....!",எனவும்,
"ப்ச்....!",என்றபடி தன் சிஸ்டமை தட்ட ஆரம்பித்தாள்.
கதவைத் தட்டிவிட்டு கௌதமின் அறைக்குள் நுழைந்த சுமித்ராவை....அவன் இல்லாத வெறுமையான இருக்கையே வரவேற்றது.'நம்மை வரச் சொல்லிட்டு இவரு எங்க போனாரு....?',என்று எண்ணியபடியே உள்ளே நுழைந்தாள்.
உள்ளே நுழைந்தவளை இரு வலிய கரங்கள்....பின்னிருந்து அணைத்தது.'அய்யோ....!',என்று அலறப் போனவளின் வாயை கரம் கொண்டு மூடியவன்,"ஹே....!நான்தான் டி....!கத்தி ஊரைக் கூட்டாதே.....!",பின்னாலிருந்து அணைத்தபடியே அவள் காதுக்குள் கூறினான் கெளதம்.
"நீங்களா....?நான் யாரோன்னு நினைச்சு பயந்துட்டேன்.....!",
"என்னைத் தவிர வேற எவனால...உன்னை இப்படி கட்டிப் பிடிக்க முடியும்....?இல்ல....அதுக்குத்தான் நான் விட்டுருவேனா....?",அவனது மீசையும்....உதடுகளும் அவளது காது மடலை உரசிச் சென்றன.
"சரி....விடுங்க.....!என்னை எதுக்கு கூப்பிட்டிங்க....?",அவனிடமிருந்து விலக முயன்றபடி அவள் வினவ,
"ப்ச்....ஹனி....!கொஞ்ச நேரம் இப்படியே அமைதியா நில்லு....!",என்றவன் அவளது கூந்தலில் முகம் புதைத்து வாசம் பிடிக்க ஆரம்பிக்க,
அவனது அருகாமையில் நெகிழத் தொடங்கிய தன் மனதையும்....உடலையும் கட்டுப்படுத்தியபடி....,"விடுங்க.....!எனக்கு வேலை இருக்கு....!வெளியே போகணும்....!",என்றபடி அவனைத் தள்ளி விட,
"இப்பதானே வந்த....கொஞ்ச நேரம் கழிச்சுப் போகலாம்....!",அவளது அருகாமை விலகிய எரிச்சலில் சற்று கடுப்பாகக் கூறினான்அவன்.
"ம்ஹீம்....!ஏற்கனவே....உங்களோட என்னை இணைச்சு வைச்சு கலாய்ப்பாங்க....!இதுல....அடிக்கடி உங்க ரூமுக்கு வந்துட்டுப் போனா....ஏதாவது சந்தேகம் வந்துரும்....!",அவனது எரிச்சலை கவனித்தாலும் கவனிக்காததைப் போல் கூற,
"ஒகே....!அப்ப....இன்னைக்கு ஈவ்னிங் வெளியே போகலாம்....!",
"அய்யோ....!ம்ஹீம்....!வெளில எல்லாம் வேண்டாம்....!",
"ஏய்....!என்ன டி விளையாடறியா...?ஆபிஸ்லேயும் வேண்டாம்....வெளியேயும் வேண்டாம்ன்னா....நாம எங்கேதான் பேசிக்கறது....?",
"போன்ல பேசிக்கலாம்....!இன்னைக்கு நைட் நானே உங்களுக்கு கால் பண்றேன்....ஓகே வா...?",
"என்னதான் இருந்தாலும் நேர்ல பேசிக்கற மாதிரி இருக்குமா....?",அவனுக்கு அவளுடன் தனிமையில் நேரம் செலவழிக்க வேண்டும் போல் இருந்தது.
"ப்ளீஸ்ங்க....!இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க....!யாரவது தெரிஞ்சவங்க பார்த்துட்டா....வம்பா போயிடும்....!",
"போடி....!",அவள் கூறியதைக் கேட்டு முகத்தை 'உம்'மென்று வைத்துக் கொண்டு நின்றான் அவன்.
அவன் அருகில் நெருக்கமாக வந்து நின்றவள்....அவனது சட்டை பட்டனை திருகியபடியே,"கோபமா....?",அவன் முகம் பார்த்துக் கேட்க,
அவளது அந்த உரிமையான செய்கையிலும்....அவள் அருகாமை ஏற்படுத்திய மயக்கத்திலும்,"ம்ம்...",என்று முணுமுணுத்தான்.
அவன் சட்டை பட்டனை நிமிண்டியபடியே,"இங்கே பாருங்க....!என் அம்மா...அப்பா...சித்தி...சித்தப்பா...அத்தை....மாமான்னு எல்லாரும் இந்த ஊர்லதான் இருக்காங்க....!",
குழந்தைக்குச் சொல்வது போல்....அவள் பொறுமையாக எடுத்துக் கூறிக் கொண்டிருக்க....அந்தக் கள்வன் எங்கே அவள் கூறுவதைக் கேட்டான்....?தன் அருகில் நின்றவளின்....கழுத்தில் முகம் புதைத்தவாறு....வாசம் பிடித்துக் கொண்டிருந்தான்.இதை எதையும் உணராமல்....அவன்....தான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்ற நினைப்பில்....அவள் பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்தாள்.
"நாம எங்கேயாவது வெளியில சுத்தும் போது....அவங்க நம்மளை பார்த்துட்டா....என்னாகும்....?",
"ம்....!",
"அப்புறம்...எப்படியாவது என் அம்மா அப்பா காதுக்கு நம்ம விஷயம் போயிடும்....!",
"ம்....!",
"அப்படி எங்க அப்பாவுக்கு மட்டும் தெரிஞ்டுச்சுன்னா....எங்க அப்பா என்னை ஆபிஸ்க்கு போக வேண்டாம்ன்னு சொல்லிடுவாரு.....!என்னை வேலையை விட்டே நிறுத்திடுவாரு.....!",
"ம்....!",அவள் கழுத்தில் இருந்த தனது உதடுகளை....அவளது காது மடலை நோக்கி நகர்த்தியவாறு 'ம்....' கொட்டினான் அந்தக் காதல் திருடன்.
"அதுக்கு அப்புறம்....நமக்கு நம்ம பக்கம் இருக்கிற நியாயத்தை சொல்றதுக்கு வாய்ப்பே கிடைக்காம போயிடும்....!",
"ம்....",இப்போது அவனது உதடுகள் அவளது கன்னத்தை நோக்கி பயணித்தன.
"என்னை வேலையை விட்டு நிறுத்திட்டாங்கன்னா அப்புறம்....நாம ரெண்டு பேரும் மீட் பண்றதுக்கு சான்ஸ் கிடைக்காது....!",
"ம்.....!",அவளது கன்னத்தில் ஊர்ந்து கொண்டிருந்த அவனது உதடுகள்....மீண்டும் அவளது காதுமடலை நோக்கி தனது ஊர்வலத்தை தொடங்கியது.
"நாம வெளியே போக வேண்டாம்ன்னு....நான் ஏன் சொல்றேன்னு இப்ப உங்களுக்குப் புரியுதா....?",
"ம்....!",என்றவனின் உதடுகள் அவளது காதுமடலில் அழுத்தி ஒரு முத்தம் வைக்கவும்தான்....அவளுக்குத் தற்போதைய நிலை உரைத்தது.
"ஹேய்...!என்ன பண்றீங்க....?",சிறு கூச்சலுடன் அவன் முடியைப் பிடித்து இழுத்து....அவனைத் தள்ளிவிட்டாள்.
இவ்வளவு நேரம் இருந்த ஏகாந்தமான நிலை தடைபடவும்....,"ப்ச்....என்னடி....?",என்றான் அவன் வாட்டமாக.
"என்ன....என்னடி....?இவ்வளவு நேரம் நான் என்ன பேசிக்கிட்டு இருந்தேன்னு....சொல்லுங்க பார்க்கலாம்....?",இடுப்பில் கை வைத்தபடி கேட்டவளைப் பார்த்தவன்....திருட்டு முழி முழித்தான்.
"என்ன பேசிக்கிட்டு இருந்த....?",என்று அவளைத் திருப்பிக் கேள்வி கேட்க வேறு செய்தான்.
அவனைப் பார்த்து முறைத்தவள்,"அப்ப....இவ்வளவு நேரம் நான் என்ன பேசினேன்னு கேட்கவே இல்ல....அப்படித்தானே....?",கோபமாக கேட்க,
"ஆமா டி....!சும்மா முறைக்காத....!இவ்வளவு பக்கத்துல வந்து நின்னு பேசினா....கேட்கவா தோணும்....?வேற ஏதாச்சும்தான் தோணும்....!",அவனும் கோபமாக முணுமுணுத்தான்.
"சரி...அப்ப இனிமேல் உங்க பக்கத்துல வந்து நின்னு பேச மாட்டேன்.....!தூரமா தள்ளியே நின்னுக்கிறேன்.....!",என்றவள் அவனை விட்டுத் தள்ளி நிற்க,
"இல்லல்ல ஹனி....!நீ இப்படி பக்கத்துலேயே நின்னுக்கலாம்...!",என்றவன் அவளைத் தன் கை வளைவிற்குள் கொண்டு வந்தபடி."சரி....!இப்ப சொல்லு....என்ன சொன்ன....?",என்று கேட்க,
"நான் இன்னைக்கு உங்ககூட வெளியே வர முடியாது....!",
"சரி....வேண்டாம்....!இன்னொரு நாளைக்குப் பார்த்துக்கலாம்....!",
"இன்னொரு நாளும் சந்தேகம்தான்...!",
அதை....அந்த இன்னொரு நாளைக்குப் பார்த்துக்கலாம்....!",
இப்பொழுதே மறுத்தால் அவனுக்கு கோபம்தான் வரும் என்று எண்ணியவள்....அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்.
"ஒகே....!இப்ப நான் கிளம்பட்டுமா....?வொர்க் இருக்கு....!",
"ஹ்ம்ம்...கிளம்பறதுலேயே இரு....!",என்றவன் அவளை ஒருமுறை இறுக அணைத்த பின்தான் விடுவித்தான்.
அகம் தொட வருவான்...!!!
மதியம் நித்திலா,சுமித்ரா மற்றும் பாலா ஆகிய மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது....சுமித்ரா எதையோ கூற வருவதும்...பிறகு தயங்குவதுமாக சாப்பாட்டைக் கொறித்துக் கொண்டிருந்தாள்.அவளை கவனித்த பாலா,
"என்னங்க சுமித்ரா...!சாப்பாட்டை சாப்பிடாம...கொறிச்சுக்கிட்டு இருக்கீங்க....?",அவன் கேட்ட பிறகுதான் அவளைப் பார்த்த நித்திலா,
"ஆமா டி...!இன்னும் ஃபுல் டிஃபன் பாக்ஸை அப்படியே வைச்சிருக்கிற...?",என்று கேள்வியெழுப்ப,
"ஹ்ம்ம்....சாப்பிடணும்....!அதுக்கு முன்னாடி உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்....!",என்றாள் தயங்கியவாறு.
"ம்...என்னன்னு சொல்லுங்க....!",பாலா அவளை ஊக்க,
"அது....அது வ...வந்து...",என்று அவள் இழுக்க,
"அதுதான் வந்துட்டியே....!இன்னும் வரணுமா....?என்னன்னு சொல்லித் தொலை டி...!",என்ன விஷயம் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் அவளைத் திட்டினாள் நித்திலா.
அப்பொழுதும் அவள் தயங்கியபடி,"அது....நானும்...எ..எனக்கு....",என்று இழுத்துக் கொண்டிருக்க,
அவள் முகத்தில் இருந்த வெட்கத்தைப் பார்த்த நித்திலா,"ஹே....!உனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சா....?அதனாலதான்....நீ இவ்ளோ வெட்கப்படற....!யா....!ஐ காட் இட்....!",என ஆர்ப்பரிக்க,
"அச்சோ....இல்லைடி...!",அவசர அவசரமாக மறுத்தாள் சுமித்ரா.
"நித்தி....!நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு....அவங்க என்ன சொல்ல வர்றாங்கன்னு கேட்போம்....!",என்று பாலா ஒரு அதட்டல் போடவும்,
"ஒகே...ஒகே....!நான் எதுவும் பேசலை....நீயே சொல்லு....!",என்றபடி அமைதியானாள்.
சிறிது நேரம் தனது கை விரல் நகங்களை ஆராய்ந்தபடி அமைதியாக அமர்ந்திருந்தவள்...பிறகு ஒரு பெருமூச்சை வெளியிட்டவாறு....இருவரையும் நிமிர்ந்து பார்த்து,"நானும்...கௌதமும் லவ் பண்றோம்....!",என்று விஷயத்தைப் போட்டு உடைத்தாள்.
மற்ற இருவரும் அவளை அதிர்ச்சியுடன் பார்த்திருக்க முதலில் சுதாரித்தது பாலாதான்."ஓ...கங்க்ராட்ஸ் சுமித்ரா....!வாழ்த்துக்கள்....!",என்று வாழ்த்து கூற,
"தேங்க்ஸ் பாலா....!",என்றபடி அவனைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தவள்,இன்னும் அதிர்ச்சி விலகாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த நித்திலாவை உலுக்கியவள்,"ஹே....நித்தி....!ஏன் இப்படி பார்க்கிற....?ஏதாச்சும் பேசு டி...!",என்று அவளை உலுக்க,
தன் நிலைக்கு வந்த நித்திலா...சுமித்ராவிடம் கேட்ட முதல் கேள்வி,"இந்த விஷயம் உங்க வீட்டுக்குத் தெரியுமா....?",என்பதுதான்.
அதைக் கேட்ட பாலாவிற்கு சிரிப்புதான் வந்தது."ஹா....ஹா...!நித்தி....!வீட்டுக்கு எல்லாம் சொல்லிட்டா....எல்லாரும் லவ் பண்ணுவாங்க....!விட்டால்....ஊரைக் கூட்டி சொல்ல சொல்லுவ போல.....!ஹா...ஹா...!",அவன் பாட்டிற்க்கு சிரித்துக் கொண்டிருக்க,
"யூ....ஷட்டப் பாலா....!நான் சுமித்ராக்கிட்ட பேசிட்டு இருக்கேன்.....!",கோபமாக அவனை அதட்டியவள்....சுமித்ராவிடம் திரும்பி,"சொல்லு டி....!இந்த விஷயம் உங்க வீட்டுக்குத் தெரியுமா....?",சற்று வேகமாக வந்தன அவளது வார்த்தைகள்.
ஏற்கனவே தன் குடுமபத்தை நினைத்து பயத்தில் இருந்த சுமித்ரா...இப்பொழுது இவள் இப்படி கேட்கவும்,"இ...இல்ல....தெரியாது....!",என்றாள் முகம் வெளிற.
நம் நாயகிக்கு இந்த பதில் போதாதா....?ரோட்டில் போகிறவர்கள் யாரவது 'நான் காதலிக்கிறேன்...!',என்று கூறினாலே போர்க்கொடி தூக்குபவள்....தன் உயிர்தோழியை சும்மாவா விடுவாள்.....?அவள் அர்ச்சனையை ஆரம்பித்துவிட்டாள்.
"லுக் சுமி....!இது தப்புன்னு தெரியல....?உங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருந்ததுன்னா....கெளதம் சாரை உங்க வீட்ல வந்து பேசச் சொல்லு....!அதை விட்டுட்டு....இப்படி வீட்டுக்குத் தெரியாம லவ் பண்றதெல்லாம் தப்பு....!",என்று அந்நியன் பெண் அம்பியாக மாறி அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தாள்.
வீடு என்றதுமே கலவரமடைந்த சுமித்ரா,"அய்யோ....!என் அப்பாவுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்....என்ன நடக்கும்ன்னே தெரியாது....!இந்த லட்சணத்துல வீட்டுக்கு வேற வந்து பேசி....அவங்க சம்மதத்தோட லவ் பண்ணச் சொல்ற....நடக்கற கதையை பேசு நித்தி....!",என்று பயம் பாதி....எரிச்சல் மீதியாகக் கூறி முடித்தாள்.
"அப்போ...உங்க வீட்டுக்குத் தெரியாம ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கறதா உத்தேசமா...?",கூர்மையாக அவளையே பார்த்தப்படி நித்திலா வினவ...தோழி என்ன கூற வருகிறாள் என்பது சுமித்ராவிற்குப் புரிந்து போனது.
நித்திலாவைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்தவள்....அவளது கையைப் பற்றியபடி,"நித்தி....!நீ நினைக்கிற மாதிரியெல்லாம் நடக்காது....!என் அப்பா அம்மா மேல நானும் ரொம்ப மதிப்பும்....மரியாதையும் வைச்சிருக்கிறேன்....!அவங்க சம்மதம் இல்லாம....எங்க கல்யாணம் நடக்காது....!என் குடும்பத்தை சம்மதிக்க வைக்கிற பொறுப்பை....அவரு பார்த்துக்கறதா சொல்லியிருக்காரு....!",கடைசி வார்த்தையைக் கூறும் போதே....சுமித்ராவின் முகம் நாணத்தால் சிவந்தது.
தோழி முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும்....அழகான வெட்கமும்....அவளது தெளிவான சிந்தனையும்....நித்திலாவின் மனதில் இருந்த சஞ்சலங்களை விரட்டியடித்தன.
அவள் கன்னத்தைப் பிடித்து செல்லமாக ஆட்டியபடி,"உன் முகத்துல தெரியற இந்த வெட்கத்துக்காகவே....எதை வேணும்ன்னாலும் செய்யலாமே....!எனிவே....வாழ்த்துக்கள் டி....!பட்....என்ன நடந்தாலும் உன் பேரண்ட்ஸை நீ மறக்கக் கூடாது...!",என்று அவளுக்கு அறிவுறுத்தவும் மறக்கவில்லை.
இருவரும் பேச ஆரம்பித்ததில் இருந்து....இருவர் முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்த பாலாவிற்கு 'பக்'கென்று இருந்தது.
'அடக் கடவுளே....!இவகிட்ட காதலை சொல்றதுக்குப் பதிலா....இவ அப்பா அம்மா கால்ல போய் விழுந்தடலாம் போல இருக்கே....!இவ பேசறதை வைச்சுப் பார்த்தா....இந்த ஜென்மத்துல இல்ல....வேற எந்த ஜென்மத்துலேயும் லவ் பண்ண மாட்டான்னு தோணுதே....!',என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டான்.
இப்படி பேசிக் கொண்டிருக்கிறவளும்....ஒருநாள் காதல் வயப்படப் போகிறாள்....அதுவும் இந்த ஜென்மத்திலேயே....மொத்த ஜென்மத்திற்கும் போதுமான காதலை தன்னவனிடம் பொழியப் போகிறாள்....!பெற்றவர்களுக்குத் தெரியாமல் காதலிக்கக் கூடாது என்று சட்டம் பேசுகிறவள்தான்....ஒருநாள்....தன் வாழ்வின் மிக முக்கியமான தீர்மானத்தை அவர்களுக்குத் தெரியாமல் எடுக்கப் போகிறாள்....!
காதல் பூ மனதில் பூக்கும் போது.....அது வேறு எதையும் கவனிக்க விடாது....!தன் இணையின் சந்தோசம் மட்டுமே....அப்பொழுது அனைத்தையும் விட பிரதானமாகத் தெரியும்....!
தன் இணைக்காக மலையையும் புரட்டச் சொல்லும்....!வானத்தையும் தாண்டச் சொல்லும்....!அப்பேற்பட்ட காதல் நடத்தும் ஆட்சியில்....காதல் வயப்பட்டவர்கள்....காதலுக்கு அடிமையாகத்தான் ஆக வேண்டும்....!ஆனால்....அந்த அடிமைத்தனத்திலும்....ஒரு கோடி சுகத்தை காதல் மட்டுமே அள்ளி அள்ளித் தரும்....!இதில்....நித்திலா மட்டும் விதி விலக்கா என்ன....?
...........................................................................................................................
காலை....எப்பொழுதும் போல் வழக்கமாக தனது வேலைகளில் மூழ்கியிருந்தான் ஆதித்யன்.அவனை நிமிர்ந்து பார்ப்பதும்....பிறகு தன் சிஸ்டமை பார்ப்பதுமாக....மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் நித்திலா.
தான் பார்த்துக் கொண்டிருந்த ஃபைலில் இருந்து கண்களை எடுக்காமலேயே....,"என்ன வேணும் பேபி....?எதுக்கு இப்படி மாமாவையே குறுகுறுன்னு பார்த்துட்டு இருக்க....?",அவளைக் கண்டு கொண்டவனாய் அவன் வினவ,
"ஹ்ம்ம்....ஆசைதான்....!",அவள் சலித்துக் கொள்ள,
"அப்படியா....!இதோ ஒரு ஜஸ்ட் டென் மினிட்ஸ்....!இந்த வொர்க்கை முடிச்சிட்டு மாமா ஓடி வந்துடறேன்....!",
"ப்ச்....!",என்றவள் ஒன்றும் பேசாமல் திரும்பிக் கொண்டாள்.
சிறிது நேரம் கழித்து அவனே,"சரி....சொல்லு....!என்ன விஷயம்....?",கையிலிருந்த பைலை மூடி வைத்தபடி அவளிடம் கேட்க,
"ம்....அது....சுமித்ரா அண்ட் கெளதம் சார் விஷயம் உங்களுக்குத் தெரியுமா....?",
"ம்ம்....தெரியும்....!தெரியும்...!தெரிஞ்சு என்ன பண்றது....?உன் பிரெண்டுக்கு இருக்கற மூளை கூட....உனக்கு இல்லையே....!",என பெருமூச்சு விட,
"சார்....!ப்ளீஸ்.....!நான் சீரியஸா பேச விரும்பறேன்....!",அவள் முகத்தில் தெரிந்த உறுதியில் அவன் தன் விளையாட்டுத்தனத்தை கை விட்டான்.
"ஒகே....ஒகே...!சொல்லு....!",
"உங்க பிரெண்ட் எப்படி....?அதாவது அவரு கேரக்டர் பத்தி கேட்கிறேன்....",
"ஓ....!உன் பிரெண்டுக்காக விசாரணை கமிஷன் நடத்தறயாக்கும்....!",
"இதுல என்ன தப்பு இருக்கு....?என் பிரெண்டுக்கு நல்லது எது...?கெட்டது எதுன்னு சொல்றது என் கடமைதான...?",
"ம்....அஃப் கோர்ஸ்....!பட்....இந்த விஷயத்துல நீ பயப்பட வேண்டிய அவசியமே இல்ல....!கெளதம்....நூறு சதவீதம் நல்ல பையன்....!என்ன....கொஞ்சம் கோபமும்....அவசர புத்தியும் இருக்கு...!",
"உங்க பிரெண்டா இருந்துட்டு....கோபம் இல்லாம இருந்தாதான் ஆச்சரியம்.....",என்று அவள் முணுமுணுக்க....அவன் காதில் அது தெளிவாக விழுந்தது.
"என்ன பண்றது பேபி....?இந்த கோபமும்....பிடிவாதமும் இல்லைன்னா....எப்பவோ இந்த பிசினெஸ்ஸை இழுத்து மூடிட்டு போயிருக்க வேண்டியதுதான்.....!இங்க நிலைச்சு நிற்கறதுக்கு....அது ரெண்டும் கட்டாயம் வேணும்....!",
அவன் கூறுவதும் சரியாகத்தான் பட்டது நித்திலாவிற்கு.இவ்வளவு பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை வெறும் அன்பினால் மட்டுமே கட்டி ஆண்டுவிட முடியாது....!எதிராளியை வீழ்த்துவதற்குத் தேவையான பலத்தை கோபத்தால் மட்டுமே கொடுக்க முடியும்....!அதே போல்....தோல்வி வந்தாலும் எதிர்கொள்ளும் வைராக்கியத்தை பிடிவாதம் மட்டுமே கொடுக்கும்....!
"கடைசியில உன் பிரெண்டும்....என் பிரெண்டும் ஜோடி சேர்ந்துட்டாங்க....!நீயும் நானும்தான் ஒரு முன்னேற்றமும் இல்லாம இப்படியே இருக்கோம்....!",அவளை ஓரக் கண்ணால் நோக்கியபடி பெருமூச்சு விட்டான் ஆதித்யன்.
"அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது....!",என்றாள் அவள் பட்டென்று.
"தப்பா சொல்ற பேபி....!நீ நினைச்சாதான் எல்லாம் பண்ண முடியும்....!",அவன் சொன்னதன் அர்த்தத்தை உணராமல்,
"நான் எதையும் நினைக்கத் தயாரா இல்ல....!",என்றாள் அழுத்தமாக,
"பார்ப்போம்....!இன்னும் எவ்வளவு நாள் இப்படி சொல்லிக்கிட்டு இருக்கேன்னு....?",
"இன்னும் ரெண்டு வருஷம்....!இங்கே இருந்து ரிசைன் பண்ணிட்டு போகிற வரைக்கும் இதையேதான் சொல்லிக்கிட்டு இருப்பேன்....!",
அவளைப் பார்த்து மர்மமாகப் புன்னகைத்தவன்,"ஒகே பேபி....!நீ சொல்லிக்கிட்டே இரு....!இப்ப மாமாக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு....!அதை பார்க்க விடு....!",எனவும்,
"ப்ச்....!",என்றபடி தன் சிஸ்டமை தட்ட ஆரம்பித்தாள்.
கதவைத் தட்டிவிட்டு கௌதமின் அறைக்குள் நுழைந்த சுமித்ராவை....அவன் இல்லாத வெறுமையான இருக்கையே வரவேற்றது.'நம்மை வரச் சொல்லிட்டு இவரு எங்க போனாரு....?',என்று எண்ணியபடியே உள்ளே நுழைந்தாள்.
உள்ளே நுழைந்தவளை இரு வலிய கரங்கள்....பின்னிருந்து அணைத்தது.'அய்யோ....!',என்று அலறப் போனவளின் வாயை கரம் கொண்டு மூடியவன்,"ஹே....!நான்தான் டி....!கத்தி ஊரைக் கூட்டாதே.....!",பின்னாலிருந்து அணைத்தபடியே அவள் காதுக்குள் கூறினான் கெளதம்.
"நீங்களா....?நான் யாரோன்னு நினைச்சு பயந்துட்டேன்.....!",
"என்னைத் தவிர வேற எவனால...உன்னை இப்படி கட்டிப் பிடிக்க முடியும்....?இல்ல....அதுக்குத்தான் நான் விட்டுருவேனா....?",அவனது மீசையும்....உதடுகளும் அவளது காது மடலை உரசிச் சென்றன.
"சரி....விடுங்க.....!என்னை எதுக்கு கூப்பிட்டிங்க....?",அவனிடமிருந்து விலக முயன்றபடி அவள் வினவ,
"ப்ச்....ஹனி....!கொஞ்ச நேரம் இப்படியே அமைதியா நில்லு....!",என்றவன் அவளது கூந்தலில் முகம் புதைத்து வாசம் பிடிக்க ஆரம்பிக்க,
அவனது அருகாமையில் நெகிழத் தொடங்கிய தன் மனதையும்....உடலையும் கட்டுப்படுத்தியபடி....,"விடுங்க.....!எனக்கு வேலை இருக்கு....!வெளியே போகணும்....!",என்றபடி அவனைத் தள்ளி விட,
"இப்பதானே வந்த....கொஞ்ச நேரம் கழிச்சுப் போகலாம்....!",அவளது அருகாமை விலகிய எரிச்சலில் சற்று கடுப்பாகக் கூறினான்அவன்.
"ம்ஹீம்....!ஏற்கனவே....உங்களோட என்னை இணைச்சு வைச்சு கலாய்ப்பாங்க....!இதுல....அடிக்கடி உங்க ரூமுக்கு வந்துட்டுப் போனா....ஏதாவது சந்தேகம் வந்துரும்....!",அவனது எரிச்சலை கவனித்தாலும் கவனிக்காததைப் போல் கூற,
"ஒகே....!அப்ப....இன்னைக்கு ஈவ்னிங் வெளியே போகலாம்....!",
"அய்யோ....!ம்ஹீம்....!வெளில எல்லாம் வேண்டாம்....!",
"ஏய்....!என்ன டி விளையாடறியா...?ஆபிஸ்லேயும் வேண்டாம்....வெளியேயும் வேண்டாம்ன்னா....நாம எங்கேதான் பேசிக்கறது....?",
"போன்ல பேசிக்கலாம்....!இன்னைக்கு நைட் நானே உங்களுக்கு கால் பண்றேன்....ஓகே வா...?",
"என்னதான் இருந்தாலும் நேர்ல பேசிக்கற மாதிரி இருக்குமா....?",அவனுக்கு அவளுடன் தனிமையில் நேரம் செலவழிக்க வேண்டும் போல் இருந்தது.
"ப்ளீஸ்ங்க....!இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க....!யாரவது தெரிஞ்சவங்க பார்த்துட்டா....வம்பா போயிடும்....!",
"போடி....!",அவள் கூறியதைக் கேட்டு முகத்தை 'உம்'மென்று வைத்துக் கொண்டு நின்றான் அவன்.
அவன் அருகில் நெருக்கமாக வந்து நின்றவள்....அவனது சட்டை பட்டனை திருகியபடியே,"கோபமா....?",அவன் முகம் பார்த்துக் கேட்க,
அவளது அந்த உரிமையான செய்கையிலும்....அவள் அருகாமை ஏற்படுத்திய மயக்கத்திலும்,"ம்ம்...",என்று முணுமுணுத்தான்.
அவன் சட்டை பட்டனை நிமிண்டியபடியே,"இங்கே பாருங்க....!என் அம்மா...அப்பா...சித்தி...சித்தப்பா...அத்தை....மாமான்னு எல்லாரும் இந்த ஊர்லதான் இருக்காங்க....!",
குழந்தைக்குச் சொல்வது போல்....அவள் பொறுமையாக எடுத்துக் கூறிக் கொண்டிருக்க....அந்தக் கள்வன் எங்கே அவள் கூறுவதைக் கேட்டான்....?தன் அருகில் நின்றவளின்....கழுத்தில் முகம் புதைத்தவாறு....வாசம் பிடித்துக் கொண்டிருந்தான்.இதை எதையும் உணராமல்....அவன்....தான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்ற நினைப்பில்....அவள் பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்தாள்.
"நாம எங்கேயாவது வெளியில சுத்தும் போது....அவங்க நம்மளை பார்த்துட்டா....என்னாகும்....?",
"ம்....!",
"அப்புறம்...எப்படியாவது என் அம்மா அப்பா காதுக்கு நம்ம விஷயம் போயிடும்....!",
"ம்....!",
"அப்படி எங்க அப்பாவுக்கு மட்டும் தெரிஞ்டுச்சுன்னா....எங்க அப்பா என்னை ஆபிஸ்க்கு போக வேண்டாம்ன்னு சொல்லிடுவாரு.....!என்னை வேலையை விட்டே நிறுத்திடுவாரு.....!",
"ம்....!",அவள் கழுத்தில் இருந்த தனது உதடுகளை....அவளது காது மடலை நோக்கி நகர்த்தியவாறு 'ம்....' கொட்டினான் அந்தக் காதல் திருடன்.
"அதுக்கு அப்புறம்....நமக்கு நம்ம பக்கம் இருக்கிற நியாயத்தை சொல்றதுக்கு வாய்ப்பே கிடைக்காம போயிடும்....!",
"ம்....",இப்போது அவனது உதடுகள் அவளது கன்னத்தை நோக்கி பயணித்தன.
"என்னை வேலையை விட்டு நிறுத்திட்டாங்கன்னா அப்புறம்....நாம ரெண்டு பேரும் மீட் பண்றதுக்கு சான்ஸ் கிடைக்காது....!",
"ம்.....!",அவளது கன்னத்தில் ஊர்ந்து கொண்டிருந்த அவனது உதடுகள்....மீண்டும் அவளது காதுமடலை நோக்கி தனது ஊர்வலத்தை தொடங்கியது.
"நாம வெளியே போக வேண்டாம்ன்னு....நான் ஏன் சொல்றேன்னு இப்ப உங்களுக்குப் புரியுதா....?",
"ம்....!",என்றவனின் உதடுகள் அவளது காதுமடலில் அழுத்தி ஒரு முத்தம் வைக்கவும்தான்....அவளுக்குத் தற்போதைய நிலை உரைத்தது.
"ஹேய்...!என்ன பண்றீங்க....?",சிறு கூச்சலுடன் அவன் முடியைப் பிடித்து இழுத்து....அவனைத் தள்ளிவிட்டாள்.
இவ்வளவு நேரம் இருந்த ஏகாந்தமான நிலை தடைபடவும்....,"ப்ச்....என்னடி....?",என்றான் அவன் வாட்டமாக.
"என்ன....என்னடி....?இவ்வளவு நேரம் நான் என்ன பேசிக்கிட்டு இருந்தேன்னு....சொல்லுங்க பார்க்கலாம்....?",இடுப்பில் கை வைத்தபடி கேட்டவளைப் பார்த்தவன்....திருட்டு முழி முழித்தான்.
"என்ன பேசிக்கிட்டு இருந்த....?",என்று அவளைத் திருப்பிக் கேள்வி கேட்க வேறு செய்தான்.
அவனைப் பார்த்து முறைத்தவள்,"அப்ப....இவ்வளவு நேரம் நான் என்ன பேசினேன்னு கேட்கவே இல்ல....அப்படித்தானே....?",கோபமாக கேட்க,
"ஆமா டி....!சும்மா முறைக்காத....!இவ்வளவு பக்கத்துல வந்து நின்னு பேசினா....கேட்கவா தோணும்....?வேற ஏதாச்சும்தான் தோணும்....!",அவனும் கோபமாக முணுமுணுத்தான்.
"சரி...அப்ப இனிமேல் உங்க பக்கத்துல வந்து நின்னு பேச மாட்டேன்.....!தூரமா தள்ளியே நின்னுக்கிறேன்.....!",என்றவள் அவனை விட்டுத் தள்ளி நிற்க,
"இல்லல்ல ஹனி....!நீ இப்படி பக்கத்துலேயே நின்னுக்கலாம்...!",என்றவன் அவளைத் தன் கை வளைவிற்குள் கொண்டு வந்தபடி."சரி....!இப்ப சொல்லு....என்ன சொன்ன....?",என்று கேட்க,
"நான் இன்னைக்கு உங்ககூட வெளியே வர முடியாது....!",
"சரி....வேண்டாம்....!இன்னொரு நாளைக்குப் பார்த்துக்கலாம்....!",
"இன்னொரு நாளும் சந்தேகம்தான்...!",
அதை....அந்த இன்னொரு நாளைக்குப் பார்த்துக்கலாம்....!",
இப்பொழுதே மறுத்தால் அவனுக்கு கோபம்தான் வரும் என்று எண்ணியவள்....அதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்.
"ஒகே....!இப்ப நான் கிளம்பட்டுமா....?வொர்க் இருக்கு....!",
"ஹ்ம்ம்...கிளம்பறதுலேயே இரு....!",என்றவன் அவளை ஒருமுறை இறுக அணைத்த பின்தான் விடுவித்தான்.
அகம் தொட வருவான்...!!!