Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் - Tamil Novel

Status
Not open for further replies.

Aara dilfar

Member
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.

நிலவு - 20


"நான் போகத்தான் போறேன் இதுக்கு மேல எனக்கு இங்க என்ன வேலை" காலையிலே ராஜேஸ்வரி ஆரம்பிக்க

"என்ன அத்தை சின்னப்புள்ளை போல பிடிவாதம் பிடிக்கீங்க நாங்க ஊருக்கு போறதுக்கு எப்படியும் நாலஞ்சு நாளாகும் அதுவரை நீங்க எப்படித் தனியா இருப்பீங்க. முதல்ல யார் கூட போகப் போறீங்க எல்லோரும் இங்கதானே இருக்காங்க அனுபமாவும் இரண்டு நாளைக்குப் பிறகுதானே போவா அப்போ எப்படி அத்தை போவீங்க அதையும் விட எவ்வளவு நாள் கழிச்சு நம்ம ஊருக்கு வந்திருக்கீங்க. எங்களோடேயே போகலாமே இருங்களேன்."

"இங்கப்பாரு காயத்ரி எனக்கு உன்னை விட்டா யாருமில்லை என்று நினைச்சுட்டாயா? என் மகளிருக்கா மருமகனிருக்காரு என்னோட ஷனாக் கண்ணு இருக்கா அவங்க கூடதான் போகப்போறேன்." காயத்ரி எவ்வளவு தடுத்தும் பிடிவாதமாக இருந்தார் ராஜேஸ்வரி. அப்போது அவ்விடம் வந்த தனலட்சுமி என்ன நடக்குது என விசாரிக்க நடந்ததைக் கூற அவரும் தன் பங்குக்கு ராஜேஸ்வரியிடம் எடுத்துக் கூறியும் அவர் செல்வதிலே குறியாயிருந்தார். அதற்கு மேல் எதுவும் செய்யமுடியாது சசிகலாவிடம் திரும்பிய காயத்ரி

"சசி அத்தையை கவனாமா பார்த்துக்கோ உங்க வீட்டுக்கே கூட்டிட்டு போயிடுங்க நான் வந்ததும் அவங்களை வீட்டுக்கு கூப்பிட்டுக்கிறேன்"

"நான் ஏன் அங்க போகனும் நான் என் வீட்டுலதான் இருப்பேன்" ராஜேஸ்வரி அழுத்தமாகக் கூற

"ஐயோ அத்தை ஏன் சின்னப்புள்ள மாதிரி பிடிவாதம் பிடிக்கீங்க, சரி நீங்க நம்ம வீட்டுலேயே இருங்க. சசி நான் வர்ர வரைக்கும் அம்மாகூட இருந்து பார்த்துக்குவாயா?"

"அண்ணி அவங்க உங்களுக்கு அத்தை ஆனால் எனக்கு என்னைப் பெத்தவங்க நாங்க நல்லாவே பார்த்துக்கோம்" முகத்திலடித்தால் போல கூற

"என்ன சசி இப்படிக் கதைக்குற நீயாவது அத்தைக்கு எடுத்து சொல்லியிருக்கலாம்."

"அண்ணி உங்க மகனுக்கு வெளியில பொண்ணு பார்த்தப்போ எங்க மகளுக்கு அந்த பங்கில்ல என்று நாங்க மனசை மாத்திக்கிட்டோம் ஆனால் எங்கம்மாவாலேயும் என் மகளாலேயும் அது முடியல்ல ஏன்னா எங்கம்மாக்கு அது கனவென்றால் என் மகளுக்கு அவ வாழ்நாள் லட்சியம். இங்க நடக்குற கூத்தெல்லாம் பார்த்துட்டு அவங்களால நிம்மதியா இருக்க முடியல்ல நாங்க போறோம் அண்ணி நீங்க உங்க சந்தோசத்தையெல்லாம் முடிச்சிட்டு மெல்லவே வாங்க." அத்துடன் பேச்சு முடிந்ததென பெட்டிகளை அடுக்கத் தொடங்கினாள். தன் வீட்டில் வேலை செய்யும் மரகத்தை அழைத்த காயத்ரி அவரையும் ராஜேஸ்வரியுடன் ஊருக்குப் போகச் சொன்னவர் வீட்டையும் சுத்தம் செய்து வைக்கச்சொன்னார். ராஜேஸ்வரி தன் மகள் குடும்பத்துடன் கொழும்புக்கு புறப்பட்டார்.

தொடர்ந்து உறவிலுள்ளவர்கள் ஒருவர் மாறி ஒருவராய் விருந்து கொடுத்தனர். ஒருவாறாய் அவர்கள் புறப்படும் நாளும் நெருங்கியது அன்று காலையில் மொட்டைமாடியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த ஆதித்யனிடம் வந்த காயத்ரி

"ஆதி இன்றைக்கு நயனிவோட வீட்டுல நம்ம எல்லோரையும் விருந்துக்கு வரச் சொல்லியிருக்காங்க. ஆனால் நான் உன்கிட்ட ஒரு வேண்டுகோள் வைக்கத்தான் வந்திருக்கேன்."

"இப்போ என்னம்மா அதான் எல்லாம் உங்க ஆசைப்படிதானே நடக்குது"

"இதுவும் என் ஆசை என்றே வச்சுக்கோப்பா ஒன்னுமில்லப்பா நாளைக்கு நாம ஊருக்குப் போயிடுவோமில்ல அதனால நயனிக்கும் அவ குடும்பத்தோட இருக்கனுமென்று தோணுமில்ல அத்தோட ஒருநாளாவது அவங்க வீட்டுல தங்கல்ல என்றால் அவங்களுக்கும் மனசு கஷ்டபடுமில்லை யோசிச்சுப்பாரு அவங்க இங்க ஒரு மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிருந்தா நயனி அவங்க வீட்டுலதானே இருந்திருப்பா ஆனால் இப்போ நம்ம கூட அவ்வளவு தூரத்துக்கு வரப்போறா அதானால இன்னைக்கு ஒருநாள் மட்டும் ப்ளீஸ்ப்பா அம்மாக்காக" எண்ண நினைத்தானோ அவனும் சரியென ஒத்துக் கொண்டான்.

விருந்துக்கு சங்கரும் வந்திருந்தான் தாரணியையும் அழைத்திருந்தாள் நயனதாரா. வந்ததிலிருந்து தாரணியிடம் தனியாக பேச சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் சங்கர் அதற்கேற்ப தாரணியும் வாழைஇலை வெட்ட தனியாக வர அவளை தொடர்ந்து வந்த சங்கரன்

"ஒரு நிமிஷங்க நான் உங்ககிட்ட இன்றைக்கு கதைச்சுத்தான் ஆகனும் ஏன்னா நானும் நாளைக்கு ஆதிகூடவே ஊருக்குப் போயிடுவேன் அதுக்கு முன்ன உங்க மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க நினைக்குறேன். நான் சொன்னதை இப்பவாவது யோசிச்சீங்களா? நீங்க ஓகே சொன்னா இப்பவே உங்க வீட்டுக்கு வந்து கதைக்குறேன் எங்க வீட்டுல எந்தப் பிரச்சனையுமில்லை. ப்ளீஸ் என்ன முடிவு பண்ணிருக்கீங்க"

"ஏங்க உங்களுக்கு ஒரு தடவை சொன்னா விளங்காதோ அந்த மாதிர எந்த ஃபீலிங்சும் எனக்கில்லை என்னை ஆள விட்டுட்டுங்கோ. ஏன் உங்களுக்கு வேற ஆள் கிடைக்கல்லையா? கொழும்புல வேற இருக்கீங்க கலர்கலரா ஆயிரம் புள்ளைங்க இருப்பாங்க அதுல ஒன்றைப் பார்க்க வேண்டியதுதானே"

"கதைச்சு முடிச்சாச்சா? ஆயிரம் பேரோட பழகியிருக்கேன் ஆனால் யாருமேலேயும் காதல் வந்ததுமில்லை பார்த்த உடனே கட்டிக்கத் தோனினதுமில்லை. அது எல்லாமே உங்கள்ல மட்டும்தான் வந்துச்சு உங்க முடிவை நீங்க சொல்லிட்டீங்க என்னோட முடிவையும் நான் சொல்லிடுறேன். என் லைஃப்ல கல்யாணம் என்றால் அது உங்களோட மட்டும் தான் என்னால எக்காரணத்தைக் கொண்டும் உங்களை இழக்க முடியாது" என்றவன் அவள் எதிர்பாராத நேரத்தில் அவள் கையிலிருந்த கைப்பேசியைப் பறித்து அதை இயக்க அது லொக் செய்யப்பட்டிருந்தது.

"என் போனைக் கொடுங்க" தாரணி

"பாஸ் வேர்ட் சொல்லு" அவள் முடியாதென மறுக்க அவன் போனைக் கொடுக்காது விடாப்பிடியாய் நிற்க வேறு வழியின்றி பாஸ் வேர்டை சொல்ல போனை இயக்கியவன் அவளது எண்ணிலிருந்து அவன் மொபைலுக்கு ஒரு மிஸ்ட் கோள் கொடுத்தவன் அவள் கைப்பேசியில் அவனுடைய பெயரையும் பதிவேற்றினான். இது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நயனதாரா வந்த சுவடு தெரியாமல் அப்படியே திரும்பிச் சென்றாள்.

மதியவிருந்து முடிய ஆதியின் குடும்பம் விடைபெற்றது. ஆதியும் சங்கரோடு பழைய நண்பர்களைப் பார்த்து வருவதாய் கூறி வெளியே செல்ல தாரணியை அழைத்துக் கொண்டு தனது அறையுள் சென்று தாழிட்ட நயனதாரா அவளை முறைத்துக் கொண்டு நின்றாள்.

"ஏய் என்னடி ஆச்சு ஏன் இப்படி பார்க்குற"

"ஆ... உன்னைக் கொன்னுடலாமா என்றிருக்கு. நான் உனக்கு அவ்வளவு முக்கியமில்லையா?"

"என்னடி இப்படிக் கேக்குற நீ என் உசிருடி"

"ஓ.. அதனாலதான் சங்கரோட விசயத்தை உடனே வந்து சொன்னாயாக்கும் என்ன அப்படிப் பார்க்குற இவளுக்கு எப்படித் தெரியும் என்றா?" அவள் கேட்க முதலில் நயனிடம் மன்னிப்புக் கேட்டவள்

"உனகிட்ட மறைக்க நினைக்கல்ல அதுக்கான சந்தர்ப்பம் கிடைக்கல்ல உன்னோட சொல்லாம மனசுக்கு எவ்வளவு பாரமா இருந்துச்சு தெரியுமா?" என்றவள் அன்று கோயிலில் நடந்ததிலிருந்து இன்றுவரை நடந்த அனைத்தையும் கொட்ட அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள் நயனதாரா. தாரணி தொடர்ந்தாள்

"அதெப்படிடி ஒருநாள்ல அதுவும் பார்த்த உடனே காதல் வரும் இது நம்புற மாதிரியா இருக்கு. அதோட கண்ணுல இருந்து மறைஞ்சதும் கருத்தவிட்டு மறையுற மாதிரி கொழும்புக்குப் போய் கொஞ்ச நாள்ல அவர் என்னை மறந்துடுவார்"

"தாரு ஒன்னு சொல்லட்டா காதல் வாரதுக்கு ஒருநாள் தேவல்லடி ஒருநொடி போதும். உங்கிட்ட ஒரு உண்மையைச் சொல்லுறேன் நான் என்னோட வர்த்தனை முதல்ல போட்டோவில தான் பார்த்தேன் அந்த நிமிஷத்துல விழுந்தவதான். ஆனால் சங்கரண்ணா உன்னை பாதி நாளுக்கு மேல பார்த்துட்டிருந்திருக்காரு. அவர் மனசுல நூறு வீதம் உறுதியானதால தானே உன்கிட்ட கேட்டிருக்காரு அதுவும் கட்டிக்க. ஏன்டி உனக்கு உண்மையில சங்கரண்ணாவைப் பிடிக்கல்லையா?"

"உண்மையச் சொல்லனுமென்றா எனக்கு அவரை ரொம்ப புடிச்சிருக்கு. ஆனால் பயமாயிருக்கு. இந்தக் காதலை எல்லாம் நம்ப பயமாயிருக்கு. எங்க வீட்டை நினைச்சாலும் பயமாயிருக்கு முக்கியமா பெரியம்மாவை. அவங்களாலதான் இன்றைக்கு எங்கக்கா அவ வாழ்க்கையத் தொலச்சுட்டு நிக்குறாங்க."

"இங்கப்பாரு அது நடந்தும் எவ்வளவு காலமாயிடுச்சு உன் பெரியம்மாவும் கொஞ்சமாலும் மாறியிருப்பாங்க. சங்கரண்ணா ரொம்ப நல்லவருடி அவங்க வீட்டுலேயும் உன்னை மாதிரி ஒரு பொண்ணு என்றால் அவங்க அம்மா ஓகே என்றாங்க அது நீதான் என்றால் நிச்சயமாக ஏத்துப்பாங்க. நீ காதலிக்க எல்லாம் வேணாம் ஓகே மட்டும் சொல்லிடு அவர் உங்க வீட்டுக்கு வந்து கதைக்கட்டும்"

"நான் சம்மதிச்சுத்தான் வந்தாங்க என்று தெரிஞ்சா நான் செத்தேன். எங்கக்காவுக்கு நடந்ததும் அதுதானே. பாவம்டி அக்கா ஆனால் ஒன்னுடி அவங்க காதலிச்சவரை மட்டும் கட்டியிருந்தாங்க என்றால் இன்றைக்கு இப்படி யாருமில்லாத அநாதை மாதிரி ஊரை விட்டுப் போய் ஒரு பிள்ளையோட கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லையே. அவங்க காதலிச்சாங்க என்ற ஓரே காரணத்தாலதான் இவ்வளவு கஷ்டமும் அவங்களுக்கு வந்துச்சு. வேணாம்டி இந்தக் காதலே வேணாம். காதலிக்குற அளவு காதலிச்சிட்டு வீட்டுக்கு தெரிஞ்சதும் போராட முடியாம எங்கக்கா மாதிரி மனசுல காதலவச்சுகிட்டு காசுதான் முக்கியம் காதலில்லை காதலிக்கவே இல்லை என்று என்னால யாரையும் பொய் சொல்லி ஏமாத்த முடியாது இது எல்லாமே உனக்குத் தெரியும்தானே நயனி. அந்த அங்கிள் எவ்வளவு பாவமில்லை. இவளை மறக்க முடியாம எவ்வளவு கஷ்டப்பட்டாங்க."

"ஓம் டி என்னோட செல்ல அச்சு மாமா அக்காவால ரொம்பத்தான் கஷ்டப்பட்டுட்டாங்க. ஆனால் அக்காவும் வேணுமென்று எதுவும் பண்ணல்ல இல்லை மாமா நல்லாயிருக்கனும் என்றுதானே செஞ்சாங்க பெரியம்மாவும் அண்ணாவும்தான் இதுக்கெல்லாம் காரணம். நான் அதுக்குப் பிறகு அவங்களை காணவேயில்ல அப்பப்போ நினச்சுக்குவேன். ஏன் தாரு இந்த நாளையில என்னோட அச்சுமாமாவைக் கண்டிருக்காயா? இப்போ அவங்களும் ரொம்ப ரொம்ப பெரியவங்களா இருப்பாங்கயில்ல கல்யாணம் கட்டிருப்பாங்களா?"

"இல்லடி நானும் அப்போ கண்டதுதான். எங்க இருக்காங்க என்றே தெரியாது. ஆனால்.... ஒன்னு சொல்லுவேன் தப்பா எடுத்துப்பாயா?"

"என்னடி உனக்கும் வர்த்தனைப் பார்க்குறப்போ நம்ம அச்சு மாமா போல இருக்கா?"

"ஓம் டி அப்போ உனக்கும் அப்படித்தான் தோனிச்சா. அப்போ நீ நேராவே கேட்டிருக்கலாமே"

"கேட்டிருக்கலாந்தான் ஆனால் இப்போதைக்கு அது கஷ்டம்டி. தாரு ஃபெர்ஸ்ட் என்னை மன்னிச்சுடு ஏன்னா உன்னைப் போலதான் நானும் உங்கிட்ட ஒருவிசயத்தை மறைச்சுட்டேன்" என்றவள் ஆதித்யனுக்கும் தனக்குமிடையில் இருக்கும் சவாலைக் கூறிவிட்டு யாரிடமும் கூறக் கூடாதென்று சத்தியமும் வாங்கிக் கொண்டாள். ஒருவழியாய் தாரணிக்கு சங்கரின் காதலைப் புரியவைத்தவள் நன்றாக யோசித்து நல்ல முடிவை எடுக்கச் சொன்னாள்.

மறுநாள் காலை ஆகாரத்தின் பின் கொழும்புக்குச் செல்வதாக ஏற்பாடு இரவு நயனதாரா வீட்டில் தங்கியவர்கள் காலையில் நேரத்தோடே தனம் வீட்டுக்குச் சென்று உணவை முடித்துக் கொண்டு ஒவ்வொருவரிடமும் விடைபெற்றவர்கள் மீண்டும் நயனதாராவின் வீட்டுக்குச் சென்றனர். சங்கரும் உடன் சென்றான் அவன் கண்கள் தாரணியைத் தேடின அவளைக் கண்டதும் மற்றையவர்களின் கவனத்தை ஈர்க்கா வண்ணம் அவளிடம் நெருங்கியவன்

"தாரு உங்க முடிவுக்காக ஒவ்வொரு நிமிசமும் காத்திட்டிருப்பேன். என்னை ஏமாத்திடாதீங்க" அப்போதும் எதுவும் பேசாது சிலையாக நின்றாள். இதனைப் பார்த்திருந்த நயனி தன் தோழி நல்லதாயொரு முடிவெடுக்க வேண்டுமென கடவுளிடம் பிராத்தித்துக் கொண்டாள்.

நயனதாராவின் வீட்டினரிடமும் விடைபெற்றுச் செல்லத் தயாராக நயனியின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தது. அதைப் பார்த்து மற்றையவர்களும் அழ அந்த சென்டிமென்ட் காட்சியைப் பார்த்து உதட்டை சுழித்தான் ஆதித்யன். சும்மா இருக்குமாறு அவனுக்குக் கண்ணைக் காட்டினார் காயத்ரி. ஒருவாறு சமாதானவள் தாரணியிடம் வர தாரணியும் அவளுக்கு விடை கொடுத்தவள் முடியாமல் அவளைக் கட்டிக் கொண்டு அழுதுவிட்டாள் நயனியின் கண்களும் கண்ணீரில் கரைந்தது. இந்தக் காட்சியைக் கண்ட ஆதித்யன் நண்பனுடன் சேர்ந்து கிண்டலடிக்க எண்ணி சங்கரின் புறம் திரும்ப அவனோ முகமெல்லாம் சோகமப்பிக்கிடக்க வைத்த கண் வாங்காமல் தாரணியையே பார்த்திருந்தான். அப்போதுதான் ஆதித்யனுக்கு சங்கரின் மனம் புரிந்தது. ஒருவாறு தோழிகள் இருவரும் சமாதானமாகி தாரணியிடம் கண்களால் சங்கரைக் காட்டிய நயனி அவளுக்கு மட்டும் கேட்கும்படியாக

"நல்லா யோசிச்சு நல்லதொரு முடிவெடுடி உன்னோட நல்ல பதிலுக்காக காத்திட்டிருப்பேன். அதோட அடிக்கடி கோள் பண்ணு நானும் பண்ணுவேன்." என்றவள் மீண்டும் அனைவரிடமும் விடைபெற மற்றையவர்களும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப சங்கரும் தன்னவளிடம் கண்களால் விடை பெற அவ்வளவு நேரமும் எதுவும் விளங்காது நின்றவள் அவன் தன்னைவிட்டுச் செல்லப் போகிறான் என்ற எண்ணம் எழ கண்ணிலிருந்து நீர் வடிய அவளையும் அறியாமல் அவனுக்கு தலையசைத்து விடை கொடுத்தாள். இந்த ஊமை நாடகத்தைப் பார்த்திருந்த நயனிக்கு தோழியின் பதில் அவள் சொல்லாமலே புரிந்தது. எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு அவளும் தன் குடும்பத்துடன் புறப்பட்டாள்.

வளரும்.....

Please share your comments here👇

 

Aara dilfar

Member
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.

நிலவு - 21


அந்தி மாலை நேரம் வீடு முழுக்க அலங்கார சருகைகள் தொங்கிக் கொண்டிருக்க அதன் நடுநடுவே பலூன்களும் கதவின் முன்னால் ரிப்பனும் கட்டிவிடப்பட்டிருந்தன. பூஜையறையும் அழகாக அலங்கரிக்கப்பட்டு குத்துவிளக்குகளும் ஏற்றுவதற்கு தயார் நிலையிலிருக்க மரகதத்தின் கை வண்ணத்தில் வீடே கமகமத்துக் கொண்டிருந்தது. அனுபமாவும் ஆரத்தியைக் கரைத்துவிட்டு அவர்களின் வருகைக்காக காத்திருந்தாள். இவை அனைத்தையும் பார்த்திருந்த ராஜேஸ்வரியும் சசிகலாவும் மனம் வருந்த ஷனாவோ கோபத்தின் உச்சியிலிருந்தாள். நல்ல நேரம் பார்த்து வீட்டினுள் நுழைய வந்தவர்களை வாசலிலே நிற்க வைத்து அனுபமா ஆலம் சுற்றத் தயாராக அவளிடம் வந்த விக்‌ஷனா தானும் அவளுடன் சேர்ந்து சுற்றுவதாகக் கூற அவளின் நோக்கம் புரிந்தவர்களாய் காயத்ரியும் நயனியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சட்டென்று ஞாபகம் வந்தவளாய் கணவனைப் பார்க்க அவன் விழிகள் மெல்லிய சிரிப்புடன் அந்த ஷனாவையே பார்த்திருந்தது. லேசாக முகம் வாடித் தலை குனிந்த நயனியின் கவலை முகம் அந்தக் கழுகுக் கண்களுக்குத் தப்பவில்லை. தனக்குள் சிரித்துக் கொண்டவாரே அனுபமாவுடன் சேர்ந்து புதுத் தம்பதியருக்கு ஆரத்தி எடுத்தாள். நயனிக்கு மட்டும் கேட்கும் குரலில்

"வந்துட்ட இல்லை என் ஆதி அத்தானை கட்டிக்கிட்டு வந்துட்டல்ல இனிமே இந்த ஷனாவோட ஆட்டத்தைப் பார்ப்ப. என் ஆதி என்னை ஒருநாளும் மறக்கமாட்டார் நான் மறக்கவிடமாட்டேன்."

"ஷனா நயனிக்கிட்ட மட்டும் என்ன கதச்சுட்டிருக்கம்மா" ராகவன் கேட்க

"வாழ்த்து சொல்லிட்டிருந்தேன் மாமா" என்றாள். கதவு ரிப்பனை நயனி வெட்டிய பின் ஆதித்யனும் அவளும் வலதுகாலை எடுத்து வைத்து உள் நுழைந்தவர்கள் நேராக பூஜையறைக்குச் சென்றனர் நயனதாரா அவள் வாழப்போகும் வீட்டில் விளக்கேற்றியவள் தங்கள் வாழ்வு என்றும் நல்லபடியாக அமைய கடவுளிடம் மனமுருகி வேண்டிக் கொண்டாள். பின் அவன் காலில் விழுந்து வணங்கியவள் குங்குமத்தை அவனிடம் கொடுக்க அவனும் நெற்றியில் வைத்துக் கொண்டான் மீண்டும் குங்குமத்தை அவனிடமே நீட்ட அவன் அவளை புரியாமல் பார்க்க

"நான் இன்றைக்குத்தான் இந்த வீட்டுக்குள்ள வந்திருக்கேன் நம்ம ரெண்டு பேரோட வாழ்க்கையும் நல்லாயிருக்கனுமென்று வேண்டிக்கிட்டு இந்தக் குங்குமத்தை எனக்கு வச்சுவிடுங்க."அவன் அவளை முறைக்க காயத்ரியும் அதே சொல்ல வேறு வழியன்றி அவளுக்கு திலகமிட்டான். அதைப் பார்த்த ஷனாவிற்கு உடல் முழுவதும் பற்றியெரிவது போல் இருந்தது. நயனதாராவை காயத்ரி சமையலறைக்கு அழைத்துச் சென்று பால் காச்சிய பின் பயணக் களைப்புத் தீர குளித்துவிட்டு வரச் சொன்னவர் ஆதியை நோக்கி

"ஆதிம்மா நயனாவை உன்னோட ரூமுக்கு கூட்டிட்டுப் போப்பா அவ ஃப்ரெஸாகட்டும் நீயும் ஃப்ரெஸாகிட்டு ரெண்டு பேரும் சீக்கிரம் சாப்பிடுறதுக்கு வாங்கோ" அவளை அழைத்துக் கொண்டு படியேறியவன் அறையுள் நுழைந்ததும் கதவைத் தாழிட்டவன்

"உன் மனசுல என்ன நினைச்சுட்டிருக்க ஓவரா நடிக்குற உன் நடிப்பைக் கொஞ்சம் குறைச்சுக்கோ அம்மாக்கு சந்தேகம் வராதளவு நடிச்சாப் போதும் என்ன விளங்கிட்டா?"

"யாரு ஓவரா நடிச்சாங்க. நான் உண்மையாத்தான் நடந்துக்கிட்டேன் அன்றைக்கே சொல்லிட்டேன் என்னால நடிக்க முடியாது. நீங்க வேணுமென்றா நடிச்சுக்கோங்க. சரி, அத்தை காத்துட்டிருப்பாங்க நான் குளிச்சுட்டு வந்திடுறேன்" என்றவள் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

இரவு உணவை உண்டவர்கள் அனுபமா செய்து வைத்திருந்த கேக்கை வெட்டி ஆதிக்கு ஊட்டிவிடச் சொல்ல அவளும் அவனுக்கு ஊட்டிவிட்டாள்.

"ஆதி நீயும் நயனிக்கு கொடேண்டா அவ தந்ததை மட்டும் சாப்பிட்டுட்டு அப்படியே கல்லு மாதிரி நிக்குற" அஸ்வினி ஆதியிடம் சொல்ல சங்கரும் அவளுடன் சேர்ந்து கொள்ள அவனும் தன்னவளுக்கு ஊட்டிவிட அதனைப் பொறுக்க முடியாமல் ஆதியிடம் வந்த ஷனா

"ஆதி அத்தான் எனக்கு ஊட்டிவிட மாட்டீங்களா?" சிறு குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டதும் நயனி அவளை முறைக்க காயத்ரிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது ஆனால் மனைவியின் முகத்தைப் பார்த்தவனுக்கு அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்பது புரிபட

"ஏய் விக்‌ஷ் ஏன் கவலைப்படுற புதுசா வந்தவங்களுக்கே ஊட்டும் போது உனக்கில்லாமலா நீ என்னோட விக்‌ஷில்ல" என்றவன் அவளுக்கு ஊட்டிவிட கடைக் கண்ணால் காயத்ரியையும் நயனியையும் பார்த்தவள் உள்ளம் குதூகலிக்க நயனியின் உள்ளம் சுக்கு நூறாக உடைந்தது ஆனால் அதனை யாரிடமும் காட்டாமல் சிரித்த முகமாய் நின்றவளின் பக்கதில் வந்த சங்கர் அவள் காதில்

"என்ன நயனி யோசிச்சுட்டு நிக்குற என்னடா இவன் இவளைப்போய் விக்‌ஷ் என்று சொல்லிட்டிருக்கான் என்று நினைக்குறாயா? இவளுக்கு இது கொஞ்சமும் பொருத்தமில்லாதது எங்க அது உன் வீட்டுக்காரனுக்கு விளங்குதா விக்‌ஷ்ட வேலை தலவலிய போக்காட்டுறது இவ வந்தா இல்லாத தலைவலியும் தானா நம்மள தேடி வந்துடும் நியாயமா இவளுக்கு தலவலின்னுதான் பெயர் வச்சிருக்கனும் ஆனால் இவன் நோய குணப்படுத்துற விக்‌ஷ் என்று இவளை கூப்பிட்டுட்டிருக்கான்" அவள் காதில் முணுமுணுக்க பக்கென்று சிரித்துவிட்டாள். அவள் புறம் திரும்பிய ஆதித்யன் 'ஏன் சிரிக்குற' என்று கண்களால் கேட்க அவளோ 'ஒன்றுமில்ல' என்று தலையாட்டினாள்.

"ஏன்ம்மா ஷனா நேரமாயிடுச்சில்ல நீ வீட்டுக்கு போறல்லையா நாங்களும் பயணத்துலயிருந்து வந்தவங்க தூங்க வேண்டாமா அம்மா வேற காத்திட்டிருப்பா அதோட இன்னொரு விசயம் ஊர்உலகம் கெட்டுக் கிடக்கு ஒன்னுகிடக்க ஒன்னு ஆயிடுச்சென்றா ஒரு பொம்பளப்புள்ளை ராத்திரியில இப்படி சுத்திட்டிருக்குறது நல்லாவா இருக்கு இதையெல்லாம் சசி உனக்கு சொல்லித்தரல்லையா? சரி சரி சீக்கிரம் போம்மா" காயத்ரி அவளை விரட்டாத குறையாகப் பேசியைதைக் கேட்டதும் ஷனா அவமானத்திலும் கோபத்திலும் சிவக்க அவள் முகம் போன போக்கைப் பார்த்து இப்போது நயனதாராவின் உள்ளம் குதூகலிக்கத் தொடங்கியது.

"என்ன காயத்ரி இது இப்படித்தான் வீட்டுக்கு வந்த புள்ளைக்கிட்ட கதைப்பையா? பார்த்தாயா ராகவா உன் பொண்டாட்டிய புது மருமக வந்ததுதான் மத்தவங்களை அவமானப்படுத்துற மாதிரி கதைச்சிட்டிருக்கா என்னம்மோ மகாராணியக் கொண்டு வந்த மாதிரி ஒரு எண்ணம் உன் பொண்டாட்டிக்கு. நம்ம அந்தஸ்த்துக்கும் வசதிக்கும் கொஞ்சமும் பொருத்தமில்லாத சம்மந்தம் வேற ஒன்னுத்துக்கும் வக்கில்லாத பொண்ணக் கொண்டு வந்துட்டு என் பேத்திய விரட்டுறாயா காயத்ரி." ராஜேஸ்வரி கத்த நயனதாரா அவரின் விஷவார்த்தைகளில் கலங்கி நிற்க மருமகளின் அந்த கோலத்தைப் பார்க்க முடியாத காயத்ரி தன் மாமியாரிடம்

"இல்லை அத்தை நான் என்ன பிழையா சொல்லிட்டேன். எல்லோரோட முகத்தையும் பாருங்க களைப்பு அப்பிக் கிடக்கு தூங்கி எழும்பினாத்தானே நல்லது. காலையில வெளிக்கிட்ட பயணம் இப்போ மணி ஒன்பதாகுது அதுக்குத்தான் சொன்னேன். அதுமட்டுமில்ல இந்த நேரத்துல ஒரு பொண்ணு தனியாப் போறது உங்களுக்கோ உங்க மகளுக்கோ சாதாரணமா இருக்கலாம் ஆனால் என்னால அப்படி விட்டுட்டு இருக்க முடியாது நான் என் மகளுங்கள இநம் மாதிரி வளர்க்கல்ல எனக்கு ஷனாவும் ஒரு மகள் மாதிரித்தான் அதுதான் ஒரு தாயா அவளுக்கு எடுத்துச் சொன்னேன். ஏன் ஷனா நான் சொன்னது தப்பா என்னைக் கோவிச்சுக்கிட்டாயா?" காயத்ரியின் நியாயமான பதிலை மறுத்துக் கூற முடியாதவள் 'இல்லை' எனத் தலையாட்டினாள்.

"அத்தை சொல்லுறது சரிதான் நான்தான் அதை புரிஞ்சு நடந்திருக்கனும் சொரி அத்தை சரி நான் போயிட்டு வாரேன்." ஒரு தலையசைப்புடன் அனைவரிடமும் விடைபெற்று அவமானப்பட்ட கோபத்துடன் தன் வீடு நோக்கிப் புறப்பட்டாள். அவள் சென்ற சிறிது நேரத்தில் அவரவர் அறைக்குச் சென்றுவிட்டனர். அறையுள் நுழைந்த நயனதாரா அப்போதுதான் அவனுடைய அறையை முழுதாகப் பார்த்தாள். முதல்தரம் வந்த போது அவனது குற்றச்சாட்டில் கருத்தில்படாத அறை இப்போது அவளை மயக்கியது. உண்மையில் ஒரு நட்சத்திர ஹோட்டலின் சொகுசுகளோடு மிகவும் அழகாக இருந்தது. குளியலறையும் அப்படியே ஏன் மொத்த வீடும் அழகாகவும் அதோடு பணச் செழுமையையும் பறைசாட்டியது. 'காசிருந்தா என்ன என்றாலும் செய்யலாம் போல' என தனக்குள் நினைத்தவள் மீண்டும் அந்த அறையைச் சுற்றிப் பார்க்க அவளின் செயலை பார்த்துக் கொண்டிருந்தவன் 'என்ன இவ அன்னைக்கு ஹோட்டல்லேயும் இதத்தான் பண்ணினா இன்னைக்கும் இதைத்தான் பண்றா. அதுசரி அவ இதுக்காகத் தானே இந்தக் கல்யாணத்தைக் கட்டிக்கிட்டா.' நினைத்த மாத்திரத்தில் அவனுள் தீப்பற்றி எரிய அவள் முன்னால் ஒரு விரிப்பையும் போர்வையையும் தூக்கி வீசினான். அவள் கேள்வியாய் நோக்க

"இங்கப்பாரு ஊருல இதைப் பண்ண முடியல்ல அதனால நீ கதைச்செதெல்லாம் கேட்டு அமைதியா இருந்துட்டேன் ஆனால் இது என் வீடு என்னோட ரூம் அதுல உன்னை மாதிரி ஒருத்தி இருக்குறதே எனக்கு விருப்பமில்லை. இதுல என் கட்டில்ல என் பக்கதுல என் கூட நீ படுத்துப்பாயா? ஆ... இனிமே அதுதான் உன் இடம்" என்றவன் அதிர்ந்து நின்றவளை சிறிதும் கணெக்கெடுக்காது தூங்கத் தொடங்கினான். அவன் வார்த்தைகள் தேள் கொட்டியது போல் இருக்க துடித்துப் போனாள் பெண். விரிப்பை விரித்து படுத்தவளுக்கு தூக்கம் வராமல் புரளத் தொடங்கினாள். ஆனால் அவனோ நிம்மதியாக தூங்கினான்.

காலையில் துயில் கலைந்தவன் திரும்பிப் பார்க்க அவள் ஆழமான தூக்கத்திலிருந்தாள். ஜோக்கிங்குக்கான உடை உடுத்தியவன் கீழே வர அவனைக் கண்ட காயத்ரி

"என்னப்பா இன்றைக்கு சன்டேதானே இன்னும் கொஞ்ச நேரம் நல்லாத் தூங்கியிருக்கலாமே அதோட இவ்வளவு லேட்டா ஜோக்கிங்க்கு போக மாட்டேயேடா சங்கர் வேற ஏற்கனவே போய்ட்டானேப்பா."

"நான் கூட வரமாட்டேன்னு நினச்சிருப்பான் சன்டே என்றதாலதான் இவ்வளவு நேரம் நல்லாத் தூங்கினேன். அதனாலதான் கொஞ்சம் லேட்டாவே போறேன் சரிம்மா நான் வரட்டா" என்றவன் புறப்பட எத்தனிக்க

"நயனா எங்கடா எழும்பிட்டாளாப்பா?" தாயின் கேள்வியில் 'ஆ... அவ எங்க எழும்பினா நல்லாக் குரட்டைவிட்டுத் தூங்கிட்டில்ல இருக்கா' நக்கலாக நினைத்தவனிடம் தாய் மீண்டும் கேட்க

"அவ தூங்கிட்டிருக்காம்மா"

"சரிப்பா அவ எழும்பினதும் நான் டீ கொடுத்துக்கிறேன். நீ போப்பா ஆனால் லேட் பண்ணாம வந்துடு அவளுக்கும் இங்க புதுசில்ல நீ கூட இருந்தா இன்னும் கொஞ்சம் ப்ரீயா பீல் பண்ணுவா" தாயின் பேச்சில் ஞாபகம் வந்தவனாய்

"அம்மா எனக்கு கொஞ்சம் சுடுதண்ணி கொடுக்குறீங்களா? என்னோட போனை மறந்துட்டேன் எடுத்துட்டு் வந்துடுறேன்" என்று அவரை சமயலறைக்கு அனுப்பி விட்டு தன் அறைக்கு சென்றவன் நேராக அவளிடம்தான் வந்தான் அவளை தொடக்கூடாது என்று 'நயனி, நயனி' என எழுப்ப அவள் எழும்பாமல் தூங்கிக் கொண்டேயிருக்க பொறுமை இழந்தவன் அவளைத் தொட்டு எழுப்பத் தொடங்கினான். அதில் அவள் துயில் கலைய மெல்லக் கண்களைத் திறந்தவள் தனக்கருகே ஆதித்யனைக் கண்டதும் அடித்துப்பிடித்து எழுந்தமர்ந்தாள்.

"ஏய் கூல் கூல் இங்கப்பாரு நான் ஜோகிங்க் போகப்போறேன் நீ தூங்கிட்டிருக்க அம்மா ஒருவேள நம்ம ரூமுக்கு வந்தாலும் வருவாங்க நீ இப்படி தூங்குறதைப் பார்த்தாங்க அதுக்குப் பிறகு எல்லாம் கொலாப்ஸாகிடும் ஸோ முதல்ல இதெல்லாம் கிளியர் பண்ணிடு அதோட நீ இன்னும் தூங்கனுமென்றால் மேல பெட்ல தூங்கு என்ன சீக்கிரம் இந்த வேலைய முடி" அவளை எழுப்பி அந்த இடத்தை சரி செய்தவன் அவளை தூங்கச் சொல்ல

"இல்லை நைட் சரியா தூங்கல்லை அதனாலதான் நானும் இவ்வளவு நேரம் தூங்கிட்டேன் சொரி. நல்லவேளை நீங்க வந்து எழுப்பினீங்க தைங்ஸ்."

"அது பரவாயில்ல சரி நான் வரேன்" என்று அறையை விட்டு வெளியேறிவன் தாயிடம் விடைபெற்று கிளம்பினான். குளித்து பூஜையை முடித்துவிட்டு நேராக காயத்ரியிடம் வந்து முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவர் கொடுத்த டீயை அருந்தியவள் சமையல் வேலைகளில் அவருக்கு உதவி செய்தாள். ஜோகிங்கை முடித்து விட்டு வந்த ஆதியும் சங்கரும் தோட்டத்தில் அமர ராகவனும் நடைபயிற்சியை முடித்துக் கொண்டு அவர்களுடன் அமர்ந்தார். அவர்களுக்கு நயனியே டீயைக் கொண்டு போய் கொடுக்க

"குட் மோர்னிங் சிஸி" அப்போது தான் நயனாவைக் கண்ட சங்கர் அவளுக்கு காலை வணக்கம் கூற பதிலுக்கு அவளும் காலை வணக்கம் கூறி தேநீர் கோப்பையை நீட்ட அவனும் நன்றி சொல்லி பருகத் தொடங்கினான். ராகவனுக்கும் கொடுத்து விட்டு அடுத்ததாக கணவனிடம் சென்றவள் அவனுக்கு காலை வணக்கம் சொல்லி தேநீரைக் கொடுக்க மற்றையவர்கள் முன்னால் எதுவும் செய்ய முடியாதவன் அவளுக்கு பதில் கூறி தேநீரை வாங்கி அருந்தினான். பின் ராகவன் இவர்களுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு உள்ளே செல்ல சங்கரும் ஆதியும் அலுவலகம் சம்மந்தமாக சிறுநேரம் பேசிக் கொண்டிருக்க இரவில் சரியாகத் தெரியாத தோட்டம் இப்போது அவள் கண்களுக்கு விருந்து படைத்தது. தன்னையுமறியாமல் ஒரு குழந்தை போல குதூகலித்துக் கொண்டவளை பார்த்தவன் 'என்ன இவ ரூமுக்கு வந்தா அங்க சுத்தி சுத்தி பார்க்குறா இங்கயும் அதேயத்த செய்றாளே இவளுக்கென்ன சுத்திப் பார்க்குற வியாதியா?' ஏதோ கேள்வி கேட்டு விட்டு பதிலுக்காக காத்திருந்த சங்கர் அவனிடமிருந்து பதில் வராமல் போகவே அவன்புறம் திரும்ப அவனோ நயனியைப் பார்த்துக் கொண்டிருந்தான் தனக்குள் சிரித்துக் கொண்ட சங்கர்

"என்னடா ரொம்ப அழகா இருக்காங்களா?"

"என்னடா லூசுத் தனமா உளர்ர"

"இல்லை ரொம்ப நேரமா வச்ச கண்ணு வாங்காம அவங்களைத்தான் பார்த்துட்டிருக்க அதான் கேட்டேன்"

"அதை விடு நீ என்ன கேட்டுட்டிருந்த" தொழில் விசயத்துக்கு மாறியவன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு குளிக்கச் சென்றனர்.

ஆதித்யனும் சங்கரும் எங்கோ வெளியில் சென்றுவிட காயத்ரி தடுத்த போதும் அவருக்கு சமையலில் உதவியவள் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு மாமியாரின் உத்தரவில் சிறிது ஓய்வெடுக்க அறைக்கு வந்தவள் வீட்டினரின் ஞாபகம் வர உடனே அழைப்பை ஏற்படுத்தினாள். 'சொல்லுக்கா'என்றவாறே உதயா அழைப்பை ஏற்றாள்.

"உதய் எப்படியிருக்க அப்பா எங்க அம்மா என்ன செய்யுறாங்க அக்காளுங்க வந்தாங்களா? எல்லாரும் நலமாடி?" கேள்விகளை அடுக்க

"அக்கா ஒவ்வொன்னா கேளேன் இப்படி மொத்தமாக் கேட்குற சரி நாங்க எல்லோரும் நல்லாயிருக்கோம். நீ எப்படியிருக்க அதோட நேற்றைக்குத்தானேக்கா போன ரொம்ப காலம் காணாத மாதிரி கேட்டுட்டிருக்க"

"நான் நல்லா இருக்கேன் ஓம் டி எனக்கு அப்படித்தான் தோனுது நிறைய நாள் உங்களை எல்லாம் விட்டுட்டு இருக்குறது போல கடும் கஷ்டமா இருக்குடி."

"உங்க வீடு எப்படியிருக்குக்கா உனக்கு பிடிச்சிருக்கா?"

"சூப்பரா இருக்குடி நம்ம ஊரு கணக்குப்படி ஒரு முழுவளவு இருக்கும்டி கார் வாரதுக்கு ரோடு மாதிரி செஞ்சிருக்காங்க ரெண்டு பக்கமும் கலர்கலரா ஜீனியஸூம் நித்தியகல்யாணியும் வச்சிருக்காங்க அத்தைக்கு கார்ட்டினிங் ரொம்பவும் பிடிக்கும் போல வீட்டுக்கு முன்னால சூப்பரா ஒரு அழகான தோட்டம் வச்சிருக்காங்க ஒரு சைட் முழுக்க எனக்குப் பிடிச்ச ரோசாகன்டு சின்னது பெரிசென்டு எத்தனையோ வகையில அதோட சேர்த்து ஜர்பராஸூம் பல கலர்ல இருக்குடி எல்லா வகையான பூக்கன்றுகளும் அங்கயிருக்கும் போல அந்த தோட்டத்துக்கு நடுவுல கம்பியால கதிரை அமைப்புல ஒரு ஊஞ்சல் இருக்குடி அதைச்சுத்தி கொடி மல்லிகைய படரவிட்டிருக்காங்க. அதோட மணமே வேற லெவல்ல இருக்கு அந்த இடத்துல ராத்திரியில இருந்தா சூப்பரா இருக்குமென்று நினைக்குறேன். அதுமட்டுமில்ல வீட்டுக்குப் பின்னாலேயும் சைட்லேயும் நிறைய காய்கறிகளும் பழ மரங்களும் வச்சிருக்காங்க டி பார்க்கவே அவ்வளவு அழகா இருக்கு"

"அக்கா நீயும் ஒரு கார்டினிங் பைத்தியமென்று எனக்கு நல்லாத் தெரியும் அதான் இன்னும் வீடு எப்படியிருகென்று சொல்லாம தோட்டத்தைப் பத்தியே சொல்லிட்டிருக்க போதும் வீடெப்படி இருக்குன்னு சொல்லு."

"ஐயோ அது வீடில்ல பங்களாடி ரொம்பப் பெரிசாயிருந்துச்சு முதல்ல வீட்டுக்குள்ள வந்தா பெரிய ஒரு ஹோல் அதுல வெல்வெட் குசன் பண்ணின அழகான ரெண்டு வகையான சோபா போட்டிருக்கு. கீழ மட்டும் ஐஞ்சு அறையிருக்கு அதுவும் வொஷ் ரூமோட சேர்த்து பார்க்குறதுக்கு படங்கள்ல வருமே பணக்காரங்க வீட்டு பெட் ரூம் மாதிரி இருக்குடி அத்தை மாமா பாட்டி அத்தோட அஸ்வினிக்கா அவங்க எல்லோரும் கீழதான். மேலயும் அதே மாதிரிதான் ஆனால் கிச்சன் மட்டும் இல்லை அந்த இடத்துல பெல்கனி மாதிரி இருக்கு அதுலேயும் ஒரு சின்ன பிரம்பால செஞ்ச ஊஞ்சல் இருக்குடி குட்டியா ஒரு தோட்டமும் வச்சிருக்காங்க. அந்த வீட்டுலேயே எங்க பெட்ரூம்தான் ரொம்ப பெரிசு பார்க்குறதுக்கு பைவ் ஸ்டார் ஹோட்டல் ரூம் போல இருக்கும். அதோட மேலதான் சங்கரண்ணாவோட ரூமும் அதுமட்டுமில்ல எல்லா ரூம்லேயும் ஏசி வேற இவங்களோட வசதி அவங்க வீட்டைப் பார்த்தாலே தெரியுது. இந்த மொத்த வீட்டுலேயும் எனக்கு ரொம்ப பிடச்ச இடம் எது தெரியுமா கீழ அந்த தோட்டமும் மேல ஊஞ்சலிருக்குற பெல்கனியும்தான்."

"நீ சொல்லும் போதே பார்க்கனும் போல இருக்குக்கா ஆனாலும் ஒரு நாளைக்குள்ள இவ்வளவு பார்த்திருக்க?"

"அத்தை நேற்றிரவே வீட்டை சுத்திக்காட்டினாங்க இருட்டுல தோட்டம் அவ்வளவா விளங்கல்ல இப்போ காலையிலதான் பார்த்தேன் ப்பா... பார்க்க கோடி கண்கள் வேண்டும் உதய் நீயும் பார்த்த மயங்கிடுவ அந்தளவுக்கு சூப்பரா இருக்கு. கொழும்புல வீடெல்லாம் குட்டி குட்டியா இருக்கும் என்றுதான் நினைச்சேன் ஆனால் அப்படியில்லடி பெரிய வளவுல பெரிய வீடு. கட்டாயம் உனக்கு வீடியோ எடுத்து அனுப்புறேன்."

"கொழும்புல எந்த இடம்க்கா அது?"

"இது வெள்ளவத்தை இங்கன சுத்தி நிறைய தமிழர்கள் தான் இருக்காங்களாம் அத்தை சொன்னாங்க. அதோட எங்க வீட்டுல இருந்து இரண்டு வீடு தாண்டினா பீச்சுமிருக்கு. கோயிலும் நடந்து போர் தூரத்துல தானாம் அதுமட்டுமில்ல ரெயில்வே ஸ்டேசன் கூட பக்கத்துலதானாம் இருக்கு. காலையில இருந்து கடகடன்னு எத்தன தடவை ரயின் போய் வந்துட்டிருந்தது தெரியுமா நல்லாத்தான் இருக்கு அது சரி தாரு வரல்லையா?"

"அப்படியாக்கா ரெயின் பார்த்தே நேரத்தைப் போக்காட்டிடுவ போல தாருக்கா எங்களைப் பார்க்க எப்ப வந்தாங்க நீ இருந்தாத்தானே வருவா நீதான் போயிட்டேயே. அவ இனி எங்க வரப்போறா ஆனால் உன்னைப் பார்க்காம இனி எப்படித்தான் இருக்கப் போறாளோ தெரியல்ல."

"அது என்றா உண்மைதான் எனக்கும் அவளிட்ட கதைக்காம இருக்க முடியாது. நான் பிறகு கோள் பண்ணிக் கதைக்குறேன்"

"ஆ...அக்கா அம்மா வாராங்க அவங்களுகிட்ட கொடுக்குறேன்"

"சரி கொடு" தாயிடம் நலம் விசாரித்து சிறிது நேரம் பேசியவள் தந்தையிடமும் பேசிவிட்டு மனசேயில்லாமல் அழைப்பைத் துண்டித்தவள் சிறிது நேரம் அழுகையில் கரைந்தாள். மொத்தக் குடும்பத்தையும் விட்டுவந்தவளுக்கு ஆறுதலாகவும் அன்பாகவும் இருக்க வேண்டியவன் தன்னை விட்டு மொத்தமாக எட்ட நிற்பதையும் எண்ணி மேலும் ஒரு மூச்சு அழுதாள். அனைத்தையும் நினைக்க நினைக்க கண்ணீர் நிற்காது பெருக்கெடுத்துக் கொண்டிருக்க இது சரிவராது என்றெண்ணியவள் ஒருவாறு தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு முகத்தை நன்றாக சோப் போட்டு கழுவி துடைத்துப் பொட்டிட்டவள் தன் நாத்தனார்களைத் தேடிப் போனாள்.

வளரும்.....

Please share your comments here👇❤

 

Aara dilfar

Member
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.

நிலவு
-22

அன்று மதியம் குடும்பத்திலிருந்தவர்கள் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தனர்.

"ஏன்ப்பா ஆதி நாளைக்கு ஒபீஸூக்குப் போற ஐடியா இருக்கா?" ராகவன் கேட்க

"ஓம் அப்பா கட்டாயம் போகனும் துபாய் போனது, பிறகு கல்யாணம் என்று கிட்டத்தட்ட இருபத்தஞ்சு நாளாயிடுச்சு லீவெடுத்து. நான் நேரடியா பார்த்து முடிக்க வேண்டிய வேலை ஆயிரம் கிடக்குப்பா அடுத்த ஒரு மாதத்துக்கு நான் கடும் பிஸியா இருப்பேன்."

"ஆதி நான் ஒன்னு சொல்லுவேன் மறுக்காம செய்வாயா?" பீடிகையுடன் ஆரம்பித்தார் காயத்ரி தனக்குப் பிடிக்காத எதையோதான் இவங்க சொல்லப் போறாங்க எனப் புரிந்து கொண்ட ஆதித்யன் அமைதியாக இருக்க

"ஒன்னுமில்லப்பா நீ ஒபீஸ், வேலையென்று வந்துட்டா எதையும் யோசிக்கமாட்ட அதனால நயனாவை இன்றைக்கு எங்கவாவது கூட்டிட்டுப் போப்பா ஈவினிங் போனா டின்னரையும் வெளியே முடிச்சுட்டு வரலாம். என்ன சொல்லுற" நயனதாரா ஒரு எதிர்பார்ப்போடு அவன் முகத்தைப் பார்க்க அவளின் எண்ணத்தை புரிந்தும் அப்போதும் அமைதியாக இருந்தான் ஆதித்யவர்தன்

"என்னப்பா எதுவும் சொல்லாம இருக்க?"

"நாளைக்கு நான் கொஞ்சம் ஏர்லியாவே ஒபீஸூக்குப் போகனும் அதோட நைட் பார்க்க வேண்டிய ஃபைல்ஸூம் இருக்கு அதனால இன்னொரு நாள் பார்க்கலாமே."
அதிலிருந்தே அவனுக்கு அவளை அழைத்துச் செல்வதில் உடன்பாடில்லை என்பதை புரிந்து கொண்டாள் பெண். ஆனால் காயத்ரி விடுவதாக இல்லை. மீண்டும் வற்புறுத்த

"இல்லைம்மா எங்க கூட்டிட்டு போறென்று யோசிக்கிறேன்"

"இவ்வளவுதானா இந்த கொழும்புல போறதுக்கு இடமாயில்ல சரி நான் சொல்லுற மாதிரி செய் முதல்ல ரெண்டு பேரும் கோயிலுக்குப் போங்க. பிறகு கோள்பேஸ், பார்க், பிறகு மூவிக்கும் போயிட்டு லாஸ்ட்டா டின்னர் முடிச்சுட்டு வாங்க"

"இல்லைம்மா மூவி, டின்னருக்கு எல்லாம் போக முடியாதும்மா நான்தான் சொன்னேனே நைட் கொஞ்சம் வேலையிருக்கென்று"

"சரி அப்படியென்றால் இன்னொன்ரு செய் நயனிம்மாவ சோப்பிங் கூட்டிட்டுப் போ அவளுக்கு என்னெல்லாம் புடிக்குமோ வாங்கிக் கொடு" தனக்காக யோசிக்கும் ஒரு மாமியார் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தவளின் முகத்தைப் பார்த்து தவறாக யூகித்தவன் 'இதுக்காகத் தானே ஆசைப்பட்ட ஆனால் உன் ஆசையை நிறைவேற விடமாட்டேன்.'

"இல்லை அத்தை சோப்பிங் எல்லாம் வேணாம் இப்போதானே கல்யாணத்துக்கு எல்லாம் எடுத்தோம் இப்போதைக்கு எதுவும் வேணாம். தேவைப்படும் போது வாங்கிக்கலாம் எதுக்கத்தை வேஸ்ட்டா?" மருமகளின் வார்த்தையில் இப்படியுமொரு பெண்ணா என காயத்ரி நெகிழ ஆதித்யனோ 'எதுக்கு இப்போ இந்த நடிப்பு ஓ... அம்மாவை நம்பவச்சு நல்லவளாகப் பார்க்குறாயா? ஆனால் நான் உன்னை ஒருநாளும் நம்ப மாட்டேன். நானிருக்குற வரை உன் எந்த எண்ணமும் நிறைவேறாது.' சூளுரைத்துக் கொண்டான். அன்றுமாலை தாயின் சொற்படி நயனதாராவை முதலில் கோயிலுக்கு அழைத்துச் சென்றவன் பின் கோள்பேஸ் பார்க் என சென்ற போதும் இருவர் இடையே அமைதியே ஆட்சி செய்தது. வானெங்கும் இருள் பரவத் தொடங்க இருவரும் வீடு திரும்பினர் அப்போது என்ன நினைத்துக் கொண்டானோ அவளை அழைத்துக் கொண்டு ஒரு உயர்தர ஹோட்டலுக்குச் சென்றான். 'அட அத்தை சொன்னப்போ முடியாதென்று சொல்லிட்டு இப்போ டின்னருக்கு கூட்டிட்டு வந்திருக்கிறார் அப்போ நான் வேண்டிக்கிட்டது உங்களுக்கு கேட்டுடிச்சா கடவுளே. இப்படியே எங்களை நல்லபடியா வாழவைங்க ஆயுசுக்கும் உங்களுக்கு கடமைப்பட்டவளா இருப்பேன்.' தனக்குள்ளே பேசிக் கொண்டு அமர்ந்தவள் முன்னால் சொடக்கிட்டான் அவன். நிமிர்ந்து பார்த்தவளிடம்

"என்ன உனக்கு காது கேக்காதா எவ்வளவு நேரமா கூப்பிட்டுட்டிருக்கேன். ஏதோ தியானத்துல இருக்குற மாதிரி இருக்குற சரி உனக்கு வேண்டியதை ஓடர் பண்ணிக்க" என்றவன் மெனுகார்ட்டை அவள் புறம் நகர்த்திவிட்டு தனக்கானதை ஓடர் செய்தான். அவன் தன்னை மதித்து தனக்கானதை தெரிவு செய்யும் உரிமையையும் கொடுத்ததை எண்ணி உள்ளூர மகிழ்ந்தவள்

"இல்லைங்க உங்களுக்கு சொல்லுறதையே எனக்கும் சொல்லுங்கோ" என அவன் இடியப்பக் கொத்து சிக்கன் கிரேவி என இரண்டு் பிளேட்டாக ஓடர் செய்தான். உண்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது

"என்னங்க ரொம்ப தைங்க்ஸ். உங்கம்மா சொன்னப்போ மறுத்துட்டு டின்னருக்கு கூட்டிட்டு வந்ததுக்கு"

"ரொம்பக் கனவு காணாத எனக்குப் பசிச்சது சாப்பிடுற டைம் வேற அதனாலதான் ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனேன் உன்னைப் பார்க்கவச்சுட்டு சாப்பிட முடியாதில்லை அதனாலதான் உனக்கும் ஓடர் பண்ணினேன். உனக்காக இல்லை சும்மா தேவையில்லாத கற்பனைய வளர்த்துக்காத விளங்கிட்டா" அவனின் பதிலில் அன்றைய நாளின் சந்தோசமெல்லாம் வடிந்தது போல் இருந்தது. கண்ணில் நீர் கோர்க்கத் தொடங்க அதை அவனுக்கு மறைப்பதற்காக சாலையின் புறம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

மறுநாள் அவனுக்கு முன்னமே எழுந்த நயனதாரா தலைக்கு குளித்து காலைப் பூஜையை முடித்தவள் சூடான டீயுடன் கணவனிடம் வர அவளைக் கண்டவன் எரிந்து விழுந்தான்.

"இங்கப்பார் இதெல்லாம் செஞ்சு என் மனசுல இடம் புடிக்க நினைச்சா அது நடக்காது. இந்த மாதிரி கொண்டு வாரது இதுதான் கடைசி நீ போகலாம்." அவன் முகத்திலடித்தாற் போல கூற ட்ரேயுடன் திரும்பிச் சென்றவள் காயத்ரியிடம் ஆதி குளிக்கிறான் என்றும் காலை உணவுடன் டீ குடிப்பதாகவும் சொன்னான் என்றும் கூறியவள் உணவை மேசையில் எடுத்து வைக்க தயாராகி வந்தவன் உண்ண அமர்ந்ததும் அவனுக்கு எடுத்து வைக்கத் தொடங்கினாள் நயனி. தாயின் முன் எதுவும் கூறாது அமைதியாக அமர்ந்திருந்தவன் உணவைக் கண்டதும்

"அட பொல் ரொட்டி சம்பல் இறைச்சிகறி வேற எவ்வளவு நாளாச்சு இதைச் சாப்பிட்டு ம்.... இது என்ன ஆஹா பூரிக் கிழங்கு அட எல்லாமே எனக்குப் புடிச்ச டிஷெஸ் பரவாயில்ல மரகதம்மா ரொம்ப நாள் கழிச்சு என்னோட பேவரானதை செஞ்சிருக்கீங்க." பேசிக் கொண்டே ஒரு வாய் வைத்தவன் எதுவும் பேசாது அமைதியாக உண்ண

"ஏன்ப்பா சாப்பாடு எப்படியிருக்கு எதுவும் சொல்லாம சாப்பிட்டுட்டிருக்க"

"அம்மா ரசிச்சு சாப்பிட்டுட்டிருக்கேன். உண்மைய சொல்லனுமென்றால் மரகதம்மாவோட டேஸ்ட் இன்றைக்கு இன்னும் கொஞ்சம் தூக்கலா வேற லெவல்ல இருக்கு." அவன் கூற கேட்டுக் கொண்டிருந்தவர்கள் சிரித்தனர் என்ன என்பது போல் பார்த்தவனிடம்

"தூக்கலாத்தான் இருக்கும் ஏன்னா சமச்சது மரகதம்மாயில்ல உன்னோட வீட்டுக்காரம்மாதான்" அந்த வார்த்தையில் உண்டு கொண்டிருந்தவனுக்குப் புரையேற அவசரமாக அவன் தலையில் தட்டி நயனி தண்ணீரை எடுத்துக் கொடுத்தாள்.

"பார்த்து சாப்பிடப்பா, என்னங்க உங்களுக்கு ஒன்னு தெரியுமா? மரகதம்மாவும் நானும் சமைப்போம் நீ சும்மா இரும்மா என்று சொல்லுறேன் கேட்டாத்தானே. அவ வீட்டுக்காரனுக்கு அவதான் சமைக்கனுமென்று ஒத்தக்கால்ல நின்னு சமச்சிருக்கா ஆதிக்கு என்னெல்லாம் புடிக்குமென்று கேட்டு அவளே பார்த்துப் பார்த்து சமச்சிருக்கா"

"அப்படியா நயனாம்மா உண்மையிலே சாப்பாடு சூப்பரா இருக்கு" உடனமர்ந்து உண்டு கொண்டிருந்த ராகவன் கூற

"நயனி சாப்பாடு செம்ம டேஸ்ட்டுங்க. இனிமேல் இன்னும் கொஞ்சம் கூட உடற்பயிற்சி செய்யனும் போல"

"ஏன் அப்படிச் சொல்லுறீங்க அண்ணா?"

"பின்ன என்னம்மா இவ்வளவு டேஸ்ட்டா சமைச்சா. உங்க சாப்பாட சாப்பிட்டா ஒரு மாசத்துலே வெயிட் போட்டுவன் போல அதனாலதான்" அவன் கூற சிரித்தாள் பெண் அவளின் மகிழ்ந்த முகத்தைப் பார்த்து எதுவும் செய்ய முடியாமல் ஆதித்யன் பற்களை கடிக்க

"சங்கர் இனிமே நீ கொஞ்சமில்லப்பா நிறையத்தான் செய்ய வேண்டியிருக்கும். இவ்வளவு நாளும் எனக்கு டிமிக்கி காட்டிட்டு லன்ஞ்ச கேன்டின்ல சாப்பிட்டுப்போம் என்று சொல்லுவீங்க இல்ல இனி அது நடக்காது ஏன்னா இனிமே பகல் சாப்பாடும் வீட்டுல இருந்துதான் அதுவும் நயனி கையால சமச்சதுதான் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது."

"ஐயோ அம்மா நயனி கைச் சமையல் என்றால் ஏன் ஓடனும் ஒளியனும் நான் பத்து தரம் உடற்பயிற்சி செய்யவும் தயாரா இருக்கேன். மறக்காம அனுப்பிடுங்க என்ன மச்சான் நான் சொல்லுறது." ஆதியோ அவனைப் பார்த்து முறைக்க

"உனக்கு வேணாமென்றால் போ நயனிம்மா எனக்கு அனுப்பிடுங்க" அந்தப் புகழ்ச்சியைத் தாங்க முடியாத ராஜேஸ்வரி

"நீங்கெல்லாம் புகழ்றளவு அப்படி ஒன்றுமில்லை, சாப்பாடு பரவாயில்லை. சுமாரா இருக்கு அதோட காலையில ஒபீஸூக்குப் போறவனுக்கு இப்படி கணமான எண்ணெச் சாப்பாடா கொடுப்ப பாரு அவனுக்குப் புரைக்கேறிட்டு" ராஜேஸ்வரியின் பேச்சில் காயத்ரி கடுப்பாக நயனதாராவோ அமைதியா பதிலளித்தாள்.

"அப்படி இல்லை பாட்டி பெரிய லீவு எடுத்தாங்க இல்லையா கட்டாயம் ஒபீஸ்ல இன்னைக்கு நிறைய வேலையிருக்கும் வேலை பிஸியில பகல் சாப்பாடு கூட பிந்தலாமில்லை. அதனாலதான் காலைச்சாப்பாடு கொஞ்சம் ஹெவியா இருந்தா நல்லதுன்னு நினைச்சேன். தப்பா பாட்டி"

"ஆதி பார்த்தாயாப்பா நயனி இப்பவே உனக்கு எது நல்லதுன்னு யோசிக்குறா உண்மையிலே நீ கொடுத்து வச்சவன்தான்" ராகவன் மகிழ்ந்து கூற

"நான் பார்த்த பொண்ணில்லையா அத்தோட என் ஆதிக்கு என்னோட அம்மா பார்த்தவ வேற அன்பானவளா பொறுப்பானவளாத்தான் இருப்பா" காயத்ரி சமயம் பார்த்து தன் பக்கத்தை நியாயப்படுத்த
'இவ எவ்வளவு பேர்பக்ட்டா நடிக்குறா அது தெரியாம இவங்க சந்தோசப்பட்டுக்கிறாங்க' தனக்குள் சிரித்துக் கொண்டான் மைந்தன். ஆனால் அவன் எண்ணத்தை முகத்தில் படித்த பெண்ணவளோ 'வர்தன் நான் நடிக்கவே இல்லை அதை நீங்க சீக்கிரம் புரிஞ்சுக்குவீங்க என்னையும் என் காதலையும் நிச்சயமா ஏத்துப்பீங்க' தன்னோடு பேசிக் கொண்டாள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை திருமணத்திற்காக வந்த அவள் நாத்தனார் இருவரும் நாளை வெளிநாடு செல்ல இருப்பதனாலும் ஆதித்யனும் லீவாக வீட்டிலிருந்ததாலும் அனைவருக்காகவும் பார்த்துப் பார்த்து பிரியாணி சமைத்துக் கொண்டிருந்தாள் நயனதாரா. அப்போது வீட்டினுள் நுழைந்தாள் விக்‌ஷனா. சமயலறையிலிருந்தவாறே எட்டிப் பார்த்த நயனதாரா 'இவ எதுக்கு இங்க வந்திருக்கா அதுவும் என் வர்தன் வீட்டுல இருக்குற நாளாப் பார்த்து வந்திருக்கா அவருக்காக ஆசையா சமச்சிட்டிருக்கேன். என்ன குட்டை குழப்ப வந்திருக்காளோ.' எண்ணமிட்டவள் முன்னால் வந்து நின்ற ஷனாவைக் கணெக்கெடுக்காது தன் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவளை வம்புக்கிழுத்தாள் அவள்.

"ம்..... வாசனை சூப்பரா இருக்கே என்ன மேடம் என் அத்தானுக்காகவா இந்த ஏற்பாடு."

"அதுல என்ன சந்தேகம் ஷனா பார்த்தாயா நயனிய, பார்த்துப் பார்த்து சமச்சிட்டிருக்கா எங்க தம்பி கொடுத்து வச்சவனில்ல." அகிலா பெருமைப்பட

"ஓ... அப்படியா அப்போ நமக்கெல்லாம் இல்லையா அவருக்கு மட்டுந்தானா? ம்.... அப்ப கொடுத்து வச்சவருதான்" ஷனா நக்கலாக பதிலளிக்க

"அவனுக்கு ஃபெஸ்ட்டு நமக்கெல்லாம் நெக்ஸ்ட்டு" ரைமிங்காய் பதில் சொன்னாள் அஸ்வினி

"ஐயோ அப்படியில்லை நாளைக்கு அகிலா மதினியும் நீங்களும் கனடா போறீங்க இல்லை அத்தோட அவருக்கும் இன்றைக்கு லீவுதானே அதனாலதான் பிரியாணி சமைக்குறேன்."

"அதானே பார்த்தேன் கேட்டீங்களாக்கா அவரும் வீட்டுல இருக்காராம்" அஸ்வினி மீண்டும் கிண்டலடிக்க

"அதான் அவருக்கு செய்யுறதுல நீங்களும் நனஞ்சுக்கோங்க என்று சொல்லுறா விளங்கிட்டா" அனுபமாவும் தன் பங்குக்கு கிண்டலடிக்க நயனி சிணுங்க அகிலா அவளை ஆறுதல் படுத்த

"என்னங்கடி என் மருமகளை குழற வைக்குறீங்களா?" என வந்த தாயிடம் நடந்ததைக் கூற அவரும் சேர்ந்து கொண்டு மருமகளை கிண்டல் செய்ய சந்தோசமாக இருந்த அந்தக் குடும்பத்தை பார்த்த ஷனாவிற்கு வயிறெரிந்தது. நயனியிடம் தனியாக பேசும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தவள் அது கிடைத்ததும்

"நீ என்ன மாயாஜாலம் செஞ்சாலும் என் அத்தான் உன்கிட்ட மயங்கமாட்டாரு. ஏன்னா அவர் மனசுல நான்தான் இருக்கேன் என்றைக்கும் நான் மட்டும்தான் இருப்பேன்." அவளின் வார்த்தைகள் அவளுக்குள் சுருக்கென்று வலியை கொடுத்த போதும் அதனை வெளிக்காட்டாது

"இங்கப்பார் நீங்க ரெண்டு பேரும் காதலிச்சிருக்கலாம் ஒன்றா வாழ ஆசைப்பட்டிருக்கலாம் ஆனால் கடவுள் எங்க ரெண்டு பேருக்கும்தான் முடிச்சுப் போட்டிருக்கார் சட்டப்படி நான்தான் அவரோட மனைவி இனி நீதான் உன் மனசை மாத்திக்கிட்டு நல்ல மாப்பிள்ளை ஒன்றைப் பார்த்து கட்டிக்கோ சரியா" அவளின் திமிரான பதிலில் கோபங் கொண்டவள்

"நான் மாத்திக்குறது இருக்கட்டும் என் அத்தான் மனசை மாத்திக்கிட்டாரா உன்னை ஏத்துக்கிட்டாரா முதல்ல அதை யோசிச்சுப்பாரு மாற வேண்டியதும் போக வேண்டியதும் யாருன்னு விளங்கும்" சரியாக கல்லை எறிந்தவள் தன் பாட்டியின் அறைக்குள் சென்றுவிட்டாள்.

உணவிற்காக அனைவரும் வந்தமர காயத்ரி தான் பரிமாறுவதாகவும் நயனியையும் அமர்ந்து உண்ணும் படியும் கூற அவளும் சரியென்று ஆதியின் பக்கத்திலிருந்த இருக்கையில் அமர வர அதற்குள் முந்திக் கொண்டு வந்து ஷனா அமர்ந்து கொண்டாள். திகைத்து நின்ற மருமகளைப் பார்த்த காயத்ரிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

"ஏய் ஷனா உனக்கு அறிவே இல்லையா இப்படித்தான் நடந்துக்குவாயா? ஆதி பக்கத்துல நயனிதான் இருக்கனும். நீ உட்கார்ந்துட்டிருக்க முதல்ல எழும்பி இந்தப் பக்கம் வந்து உட்காரு. நயனி நீ அங்க போய் இரும்மா"

"சாப்பிட உட்கார்ந்தவளை எழுப்பிவிடுற நல்லாயிருக்கா காயத்ரி உனக்கு" ராஜேஸ்வரியும் கோபமாய் கேட்க

"என்ன அத்தை என் வீட்டுல சோறில்லாமலா நான் உங்க வீட்டுக்கு வந்தேன் இன்றைக்கு அத்தானுக்கு லீவு அவரைப் பார்க்கலாம் என்றுதான் வந்தேன். வந்தவங்களை இப்படித்தான் வரவேற்பாங்களா. அத்தோட என் அத்தானுக்குப் பக்கத்துல எப்பவும் நான்தானே உட்காருவேன். அந்த உரிமைய நான் யாருக்கும் விட்டுத்தர மாட்டேன்" அவள் ஆணித்தரமாக பேச

"ஆதிக்கு அப்போ கல்யாணமாகல்ல இப்போதான் அவனுக்கென்று ஒருத்தி வந்துட்டாயில்ல அதனால இந்த உரிமையெல்லாம் இனி அவளுக்கு மட்டும்தான் என்ன ஷனா விளங்கிட்டா" காயத்ரி கூற ஷனாவை வெற்றிப் பார்வை பார்த்தாள் நயனதாரா அதற்கு அசருபவளா அந்த விஷப்பாம்பு ஆதியிடமே நயமாகப் பேச நயனியின் பக்கத்தில் அமரப்பிடிக்காதவனுக்கு அதுவே நல்லதொரு வாய்ப்பாக அமைய

"அம்மா சாப்பிட உட்கார்ந்தவளை இப்படி எழுப்பி விடுறது முறையில்லை நம்ம விக்‌ஷ் என்பக்கத்துலே இருந்து சாப்பிடட்டும் அவ அஸ்வி அக்காக்குப் பக்கத்துல உட்காரட்டும். நயனி நீ அக்கா பக்கத்துல உட்காரதுல உனக்கேதும் பிரச்சனையா" எனக் கேட்டவனிடம் மறுப்பாக தலையசைத்தவள் அஸ்வினியின் பக்கத்தில் அமர இப்போது வெற்றிப்பார்வையை வீசுவது ஷனாவின் முறையானது. வாடிய மருமகளின் முகத்தைப் பார்த்த காயத்ரிக்கு மகனை நான்கு அறைவிடலாம் போல இருந்தது ஆனாலும் அடக்கிக் கொண்டு உணவைப் பரிமாறினார். உண்டு முடித்தவர்கள் எல்லோரும் எழுந்து செல்ல ஆதியிடம் வந்த அகிலா

"தம்பி உன்கிட்ட கொஞ்சம் கதைக்கனும்"

"சொல்லுங்கக்கா என்ன விசயம் ஏதாவது செய்யனுமா?"

"இல்லடா அது எதுவுமில்ல இங்கப்பாரு தம்பி ஒவ்வொரு பொண்ணும் தன் புருஷன் முதல்ல தன்னைத்தான் பார்க்கனும் கவனிக்கனுமென்று நினைப்பா. இன்றைக்கு நீ நடந்துகிட்டது கொஞ்சமும் சரியில்லடா ஷனாவை உன் பக்கத்துல உட்கார வச்சப்போ நயனி முகம் செத்துப் போச்சு எல்லாருக்காகயும் காலையில இருந்து பார்த்துப் பார்த்து சமைச்சா கடைசியில அவளால நிம்மதியா சாப்பிட முடியாம போச்சு. அத்தோட இன்னொரு விசயமும் சொல்லிக்கிறேன். ஷனாவோட நடவடிக்கை எதுவுமே சரியில்ல அவ மனசுல ஏதோ தப்பிருக்கு என்னமோ நயனிய காயப்படுத்தனுமென்று செய்ற மாதிரி இருக்கு. அந்த புள்ளை உன்னை நம்பி வந்திருக்கா நீதான் அவளுக்கு பக்க பலமா இருக்கனும். ஷனாக்கு அளவுக்கதிகமா இடங்கொடுக்காத என்ன விளங்கிட்டா?" சரி என தன் தமக்கையிடம் தலையாட்டியவன் நயனதாராவை காயப்படுத்த இன்னொரு வழி கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தான்.

காயத்ரியும் சாப்பிட்டு விட்டு மற்றைய வேலைகளை கவனிக்க சமயலறைக்குள் நுழைந்து கொண்டார் நயனி உண்ட இடத்தை துப்பரவு செய்யத் தொடங்கினாள். அவளிடம் வந்த ஷனா

"என்ன நயனி பார்த்தயில்ல என் அத்தான் என்றைக்கும் என்னை விட்டுக் கொடுக்கமாட்டான் என்னம்மோ சொன்ன உரிமையுள்ள மனைவின்னு இப்போ விளங்குதா யாருக்கு உரிமைகூட என்று. இது வெறும் ஆரம்பந்தான்மா போகப் போக இந்த ஷனாவோட ஆட்டத்தை பார்ப்ப என் அத்தானை அடையுற வரை நான் ஓயமாட்டேன். இந்த வீட்டுல இருந்து உன்னை மொத்தமா துரத்திட்டுத்தான் இனி நான் ஓய்வேன் என்ன சொன்னீங்க உன்னால முடிஞ்சதைப் பாருன்னா என்கிட்டேயே அத்தையும் மருமகளும் சவால் விடுறீங்களா? இனி பாருங்க என்னால என்னல்லாம் முடியும்னு" சொன்னவள் ஹாலில் அமர்ந்திருந்த ஆதியின் பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டாள். இப்படியாக ஷனா வீட்டுக்கு வருவது வர வர அதிகரிக்கத் தொடங்கியது. ஆதியும் அவளின் உள் நோக்கமறியாது அவளது எண்ணத்துக்குத் துணை போகத் தொடங்கினான். அதுவும் அவள் வரும் நேரங்களில் நயனியின் முகத்தில் எழும் பொறாமையைப் பார்த்தவன் மேலும் அவளைக் காயப்படுத்த ஷனாவுடன் நெருங்கிப் பழகலானான். இது அவளை மிகவும் பாதிக்கத் தொடங்கியது.

நயனியின் தொலைபேசி தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தது. கைவேலையாக இருந்தவள் திரையைப் பார்க்க அதில் தாரு என்று ஒளிர முகம் முழுக்க சந்தோசமாக கைகளைக் கழுவியவள் மிகுதி வேலையை காயத்ரியிடம் ஒப்படைத்து விட்டு தன் அறைக்குள் சென்று அவள் அழைப்பை ஏற்க

"ஹேய் நயனி என்னடி ரொம்ப பிஸியோடி நான் எதுவும் டிஸ்டொப் பண்ணிட்டேனா ஒவ்வொரு நாளும் உன்னோட கதச்சுப் பழகின எனக்கு இப்படி இரண்டு நாளுக்கொருக்கா கதைக்குறது கஷ்டமாயிருக்குடி ஒவ்வொரு நாளும் உன்கூட கதைக்காம கடும் கஷ்டமாயிருக்குடி" படபடத்துப் பேசிய தாரணியை சமாதானப்படுத்தியவள்

"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ஈவினிங் டீயோட சாப்பிடத்தான் ஸ்னெக்ஸ் ரெடி பண்ணினேன். பெருமட்டுக்கு முடிச்சிட்டேன் மிச்சத்தை அத்தையும் மரகதம்மாவும் பார்த்துக்குவாங்க. அத்தோட நானும் உனக்கு கோள் பண்ண நினைச்சேன் ஆனால் கொஞ்சம் பிஸியாகிட்டேன்ப்பா சொரிடி. இனி எப்போ டைம் கிடச்சாலும் உனக்கு உடனே கோள் பண்ணிடுவேன் அதே மாதிரி நீயும் டைம் கிடைக்கும் போது கோள் பண்ணு. சரி சரி நீ சொல்லு எப்படியிருக்க?"

"நல்லா இருக்கேன்டி நீ எப்படியிருக்க ஆதி சேர் எப்படியிருக்காங்க காயத்ரிம்மா ராகவன் சேர் எல்லாம் எப்படியிருக்காங்க."

"நாங்க எல்லோரும் நல்லாயிருக்கோம் மேடம் நீங்க எதிர்பார்க்குறவங்களும் ரொம்ப ரொம்ப நல்லாயிருக்காங்க."

"நான் யாரையும் எதிர்பார்க்கல்லையே"

"அப்படியா மேடம் சங்கரைப்பத்தி உங்க மனசு கேக்கல்ல"

"அப்படியில்லடி சரி அதவிடு உன்னோட லைஃப் எப்படி போகுதுடி உன் ஆளு என்ன சொல்லுறாங்க"

"அதை ஏன் கேக்குற மனிசன் ரொம்ப மோசம்டி நம்ம வழிக்கு கொண்டு வர முழு முயற்சி எடுக்கனும் போல பார்க்கலாம்டி கடவுள் என்னை கைவிடமாட்டார் என்று நம்புறேன் நிச்சயமா அவர் மாறுவாரென்றும் நம்புறேன் ஆனால் இந்த ஷனாதான் அப்பப்போ குட்டைய குழப்ப வாரா. அவளுக்கு சரியான பாடம் சொல்லிக் கொடுக்கனும் அதுக்குப் பிறகு இந்தப் பக்கம் தலவச்சுப் படுக்க மாட்டா. சரி அது என் பிரச்சனை இப்போ உன்னோட விசயத்துக்கு வா என்ன முடிவெடுத்திருக்க"

"உன்கிட்ட சொன்னேன் தானே எனக்கும் அவரைப் புடிச்சிருக்கு ஆனால் எங்க வீட்ட நினைச்சாத்தான்..... இல்ல நயனி அதுசரி வராது."

"சங்கரண்ணா உண்மையிலே ரொம்ப நல்லவங்கடி மிஸ் பண்ணிடாதே அவ்வளவுதான் சொல்லுவேன். இப்பயும் சொல்லுறேன் நல்லா யோசிச்சு முடிவெடு"
தோழிகள் இருவரும் கொஞ்ச நேரம் அரட்டையடித்துவிட்டு போனை வைத்தனர்.

நாட்கள் அதன்பாட்டில் நகரத் தொடங்கின நயனதாரா தன்னவனை எவ்வளவுக்கெவ்வளவு நெருங்கினாளோ ஆதித்யன் அந்தளவுக்கு அவளை விட்டு விலகிப் போனான் அதுமட்டுமல்ல எந்தளவு அவள் மனதைக் காயப்படுத்த முடியுமோ அந்தளவு காயப்படுத்தினான். ஆனாலும் அவன் எவ்வளவு காயப்படுத்திய போதும் அதனை எல்லாம் பொருட்படுத்தாது தன் காதலை மனதில் கொண்டு மீண்டும் மீண்டும் அவனை நெருங்கினாள் ஆனால் அவனோ அவளை எட்டி உதைத்தான். அதற்கு ஷனாவும் ராஜேஸ்வரியும் மேலும் தூபம் போட மற்றையவர்கள் முன் காட்டா விட்டாலும் தங்கள் அறையின் தனிமையில் அவன் வெறி கொண்ட வேங்கையானான். அவள் மனதை சொல்லம்புகளால் காயம் செய்ய இதற்கெல்லாம் ஷனாவின் மேல் வைத்த காதல் தான் காரணம் என தவறாக புரிந்து கொண்டு மனமுடைந்தவள் கடவுளிடம் சரணடைந்தாள் காயப்பட்ட அவள் மனதுக்கு கடவுள் ஒரு ஆறுதல் என்றால் மற்றையது அவள் ஆருயிர் தோழி தாரணிதான்.

வளரும்.....

Please share your comments here👇

 

Aara dilfar

Member
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றைநிலவின் மேல் இரண்டு மேகங்கள்.

நிலவு -23

காலம் யாருக்காகவும் காத்திராமல் கரைந்து கொண்டிருந்தது. ஷனாவின் ஆட்டமும் சிறிது சிறிதாக அதிகரிக்கத்
தொடங்கியது. முன்னெல்லாம் வாரம் இரு முறை வந்தவள் இப்பொழுது தினமும் வரத் தொடங்கினாள். அதுவும் ஆதித்யன் வீட்டிலிருக்கும் சமயமாகப் பார்த்து வரத் தொடங்கினாள். அந்த சமயத்தில்தான் ராஜேஸ்வரி குளியலறையில் வழுக்கி விழ அவரைக் கவனிப்பது நயனியின் பொறுப்பானது. அவளும் அவர் காயப்படுத்திய எதையும் மனசில் வைத்துக் கொள்ளாது நன்றாகவே பார்த்துக் கொண்டாள். ஆனாலும் சில சமயங்களில் முக்கியமாக ஷனா வரும் போது ராஜேஸ்வரி சுருக்கென வலிப்பது போல் பேசிவிடுவார்.

"ஐயோ பாட்டி இவ உன்னை ஏமாத்தத்தான் உன்னை கவனிச்சுக்குற மாதிரி நடிக்குறா இவள நம்பிடாதே பாட்டி"

"ஏன் ஷனா இப்படியெல்லாம் கதைக்குறீங்க. உங்களுக்கு மனசாட்சியே இல்லையா நான் நல்ல எண்ணத்துலதான் கவனிச்சுக்கிறேன். நான் அவங்கள பார்க்குறது கஷ்டமா இருந்தா நீங்களே உங்க பாட்டிய பார்த்துக்க வேண்டியது தானே"

"என்ன நல்லவ மாதிரி உன் புருஷனுக்கு முன்னால வேஷம் போடுறயா? நீ என்ன மந்திரம் பண்ணினாலும் நானும் சரி என் பேரனும் சரி உன்னை நம்ப மாட்டோம். நீ இந்த காசுக்கு வந்தவ தானே உன்னாலதான் என் பேத்தி வாழ்க்கை பாழாகிடுச்சு நீ நல்லா இருப்பயா? என்ன சொன்ன நல்ல எண்ணதுல கவனிக்கிறயா அப்படி கவனிச்சிருந்தா என் பேத்திய பார்த்து நீ கவனிச்சுக்கோ என்று சொல்லியிருக்க மாட்ட வேணாம்மா நீ என்னைப் பார்த்துக்கவே வேணாம் இனி உன் வேலய நீ பாரு என்ன கவனிக்க என் பேத்தியிருக்கா அவ பார்த்துப்பா" அவரின் வார்த்தையில் துடித்தவள் கண்ணீரோடு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள். அதுதான் சாக்கென்று தன் பெட்டி படுக்கையுடன் காயத்ரி வீட்டுக்கு வந்தாள் அந்த பிசாசு. அப்பொழுதான் ஒபிஸிலிருந்து வந்து உடை மாற்றியவன் படியிறங்கி வர

"ஹாய் அத்தான்"

"ஹாய் என்ன பெட்டி படுக்கையோட வந்திருக்க என்ன விசயம்?"

"அது ஒன்னுமில்ல பாட்டிக்கு சுகமில்லதானே அவங்கள கவனிக்கத்தான் இங்க யாருமில்லையே அதனால அவங்க கூட கொஞ்ச நாள் இருந்து அவங்களப் பார்த்துட்டுப் போகலாம் என்று வந்தேன்"

"அவங்கள பார்த்துக்க இங்க எல்லோரும் இருக்காங்க ஷனா உனக்கு உன் பாட்டியோட இருக்கனும் அவங்களப் பார்த்துக்கனும் என்று நினச்சா நீ தாராளமா வந்து தங்கு அதுக்கு நீ யாருகிட்டயும் பெமிஷன் கேட்க வேண்டிய அவசியமில்ல ஆனால் பார்த்துக்க யாருமில்ல அதுக்குத்தான் வந்தேன் என்று யார் மேலயும் பழி போடாதே சரியா?"

"சொரி அத்தான் நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாதுதான். சரி டீ குடிச்சிட்டீங்களா?"

"இல்லை இனிமேல் தான்"

"ஒபீஸ்ல இருந்து வந்த உங்கள கவனிக்காம அந்த நயனி என்னதான் வெட்டி முறிக்கிறாளோ பாட்டி விசயத்துலயும் இதுதான் நடந்துச்சு அதத்தான் சொன்னேன். இருங்கத்தான் நான் போய் உங்களுக்கு சூடா டீயும் சாப்பிட எதுவும் கொண்டு வாரேன்."

"உனக்கு தாராவோட என்ன பிரச்சனை எப்ப பாரு அவளோட மல்லுக்கு நிக்குற. இங்கப்பாரு விக்‌ஷ் முதல்ல என்ன நடந்ததென்று தெரியாம மத்தவங்கள குற சொல்லுறத நிப்பாட்டு. தாரா முதல்ல வீட்டுல இல்லை அவ அனு அக்கா கூட கோயிலுக்குப் போயிருக்கா. அதோட என்கிட்ட சொல்லிட்டுத்தான் போனா நானும் இப்பதான் வந்தேன் ரெப்ரஸாகிட்டு வாரேன் அம்மா எனக்கு டீ போடத்தான் போயிருக்காங்க. நீயும் டீ குடிக்கிறயா?" தாரா என்ற அவனின் அழைப்பிலே அதிர்ந்து நின்றவள் இல்லை என்பதாய் தலையாட்டினாள். அவன் பேசிய அனைத்தையும் சமயலறையிலிருந்து கேட்டிருந்த காயத்ரி மனமகிழ்ந்தவராய் தேநீரை கொண்டு வந்து மகனிடம் கொடுத்தவர் விக்‌ஷனாவை ஒரு பொருட்டாகவே மதிக்காது சென்று விட்டார். தேநீரை அமைதியாக அருந்திக் கொண்டிருந்தவன் உள்ளமோ சற்று முன் ஷனாவுடன் பேசியதை அசை போட ஆச்சரியமாக இருந்தது.

'இந்த நயனிக்கு நான் ஏன் சப்போட் பண்ணனும் என்னாச்சு எனக்கு. கொஞ்ச நாளாவே என்னமோ அவள பத்தி அடிக்கடி யோசிக்குறேன்.' ஆனாலும் ஆச்சரியப்படத்தக்க வகையில் அது அவனுக்குப் பிடித்தும் இருந்தது. அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஷனாவிற்கு அவனின் உதட்டோரப் புன்னகை சரியாகப் படவில்லை அவர்களின் உறவின் விரிசல் முழுவதாகத் தெரியாவிடினும் இலைமறை காயாக அவளுக்குத் தெரியும் உடனே தான் ஏதாவது செய்யாவிடின் ஆதித்யன் முழுதாக தன் கைவிட்டுப் போய்விடுவான் என்பது அவளுக்கு உறுதியானது. அதற்கான முயற்சிகளை எடுக்கலானாள். அதன்படி ஆதித்யனுக்கான நயனியின் வேலைகளை மெல்ல மெல்ல தன்னகத்தே கொண்டு வரலானாள்.

"ஏன் நயனி அத்தான் ஜோக்கிங் போய் வந்து எவ்வளவு நேரமாகுது நீ ஏன் அவருக்கு இன்னமும் டீ கொடுக்கல்ல இதான் நீ அத்தானைப் பார்த்துக்குற லட்ஷணமா? இந்த அத்தைக்கு எங்க இதெல்லாம் விளங்குது."

"சும்மா தேவைக்கில்லாம கதைக்காதீங்க ஷனா. அவர் எப்பவுமே காலச் சாப்பாட்டோட தான் டீ குடிப்பாரு. அவருக்கு எப்போ என்ன செய்யனுமென்று எனக்குத் தெரியும் இதுல நீங்க தலையிடாதீங்க உங்க வேலை என்னயோ இந்த வீட்டுல எதுக்காக வந்து இருக்கீங்களோ அதமட்டும் பாருங்க சரியா?" என்றவள் தன் வேலைகளை கவனிக்க ஷனாவோ தேநீரைக் கலந்தவள் எடுத்துக் கொண்டு படியேற

"நான்தான் சொல்லுறேனில்ல நீங்க எதுக்காக தேவைக்கில்லாத வேலையெல்லாம் செய்றீங்க"

"நீதானே சொன்ன அதான் என் வேலைய நான் பார்க்குறேன். என் அத்தானை கவனிக்குறத விட எனக்கு வேறென்ன வேலை இங்கப்பார் நயனி, அத்தான் எப்பவும் காலையில எழும்பினதும் டீ குடிச்சிட்டுத்தான் குளிக்கவே போவாரு ஆனால் அதை மாத்திருக்காரென்றா என்னமோ இடிக்குது இப்போ நான் இதக் கொண்டு் போய் என்னோட ஆதிகிட்ட கொடுக்கப் போறேன் மறுவார்த்தை கதைக்காம குடிக்கிறாரா இல்லையா என்று மட்டும் பாரு. என் அத்தான் நான் சொன்னா என்ன வேணுமென்றாலும் செய்வார்." திடமாகக் கூறிவிட்டுச் செல்ல அதுதான் நடக்கப் போகுதா என்ற எண்ணத்தில் அவள் திரும்பி வரும்வரை தடதடக்கும் இதயத்தோடு காத்திருந்தாள். வெற்றுக் கோப்பையுடன் வந்தவள் நயனியை வெற்றிப் பார்வை பார்க்க அவள் சின்ன இதயமோ உடைந்து சுக்கு நூறாகியது. இப்படியே டீயை அறைக்கே கொண்டு்போய் கொடுப்பது காலை உணவை அவனுக்குப் பரிமாறி அவனுடனே தானும் அமர்ந்து உண்ணுவது அலுவலகம் முடிந்து வரும் வேளை சீவி சிங்காரித்து அவனை வரவேற்பது என்று ஒரு உரிமையுள்ள மனைவி போல் ஷனா நடந்து கொள்ள ஆதித்யனும் அவளின் உள் நோக்கமறியாது அவனையறியாமலே அவளை ஆதரிக்க நயனதாரா மேலும் மேலும் உடையத் தொடங்கினாள்.

அதற்கேற்ப ஷனாவும் ஆதித்யனும் ஒன்றாக இருந்தால் அதைத்தாங்க முடியாதவள் அவர்கள் பேச்சுக் குரல் கூட கேட்காத தூரத்துக்கு சென்று விடுவாள். அதுவும் ஷனா தங்கள் அறைக்குள் நுழைந்தால் அடுத்த நொடி அறையை விட்டு வெறியேறினாள். இப்போதெல்லாம் அவள் முகத்தில் மருந்துக்கும் சந்தோசமில்லை முதலில் நயனியின் செயல் புரியாதவன் பின்புதான் இவளின் செய்கை ஷனாவினால்தான் என்பது புரிபட அவன் உள்ளமோ அதை தடுப்பதற்கான வழிகளைத் தேட அவன் அறிவோ அந்த எண்ணத்தையே தடுத்ததோடு அவளின் வாடிய முகத்தைப் பார்த்தும் மகிழ்ந்தது.

"என்ன மேடம் எங்களுக்கு தனிமை தந்து வெளிய போறீங்களா இல்லை நாங்க ஒன்னா இருந்து கொஞ்சிக்குறதப் பார்க்க முடியாம தவிச்சு ஓடுறீங்களா. ஹா.... எது எப்படியோ இந்த ரூம விட்டு ஓடுற உன்னை சீக்கிரமாவே இந்த வீட்டை விட்டும் ஓடவப்பேன் அதுவும் ஆதியோட சேர்ந்து" அவளின் புண்பட்ட மனதிற்கு பெல்கனித் தோட்டம்தான் ஆறுதலாக இருந்தது. இதனை பார்த்திருந்த ராஜேஸ்வரி உள்ளம் மகிழ காயத்ரியோ கவலை கொண்டார். ஆரம்பத்தில் இதைக் கவனிக்காத ஆதித்யனுக்கும் ஏதோ தவறு என்பது புரிபடத் தொடங்கியது. ஷனாவின் எல்லை மீறல்களை பார்த்த காயத்ரி இதற்கு மேலும் பொறுக்க முடியாதவராய் மகனிடம் வந்தவர்

"ஆதி நீ தப்பு பண்ணுற என் வளர்ப்பு தப்பா போயிட்டிருக்கு. உனக்கு கல்யாணமாயிடுச்சு உன்னை நம்பி ஒருத்தி இருக்கா நீ இப்போ செய்யுறது நல்லா இருக்கா ஆ... அந்த ஷனாவோட என்ன வேண்டியிருக்கு அவ கையால டீ குடிக்கிற சாப்பாடு சாப்பிடற என்னமோ அவதான் உன் பொண்டாட்டி மாதிரி நடந்துக்குறா நீயும் இழிச்சிகிட்டு இருக்க அவளத்தான் புடிச்சிருக்குன்னா உன்னக் கேட்டப்பவே சொல்லருக்கலாமே. எதுக்காக ஒரு பொண்ணோட வாழ்க்கைய கெடுத்த சீச்சீ இத நான் உன்கிட்ட எதிர் பார்க்கல்லடா பாவம் அந்த புள்ள அவ முகத்தப் பார்க்கவே முடயல்ல எல்லாம் என்னாலதான்"

"அம்மா நான் எப்பயும் போலதான் ஷனாவோட பழகுறேன். அது ஏன் உங்களுக்கு வித்தியாசமாபடுது ஒருநாளுமில்லாம ஏம்மா திடீரென்று இப்படிக் கேட்குறீங்க. அதுவும் அருவருப்பா வேற என்னம்மா தாராதான் உங்ககிட்ட இப்படிச் சொன்னாளா? அவ புதுசா வந்த அவளுக்கு எங்க உறவு பத்தி என்ன தெரியும் சொல்லுங்க. அவளுக்குத்தான் விளங்காட்டியும் நீங்க விளங்கப்படுத்தி இருக்கலாமே அத விட்டுட்டு என்கிட்ட இப்படி கதைச்சுட்டிருக்கயல். நீங்க கவலப்படுற அளவு இங்க எதுவும் தப்பாகல்ல உங்க வளர்ப்பு எப்பவும் தப்பாகாது. என்னை நம்புங்கம்மா இது உறுதி." என்று அவன் கூறிய பின்தான் காயத்ரி நிம்மதியடைந்தார் அதனோடு சேர்த்து தன் மருமகளுக்கும் புரிய வைத்தார் அவள் கலங்கிய மனதும் மெல்ல தெளிந்தது.

ஒருநாள் காலையிலே ஆதித்யனைத் தேடி அவனுடைய அறைக்குள் நுழைந்த ஷனா அவனைத் தேட ஆதித்யன் அங்கு இல்லை ஆனால் அவள் கண்ட காட்சி அவளை எல்லையில்லா மகிழ்ச்சியடைய வைத்தது. கள்ளுண்ட நரி போல ஆனாள்.
இதுதான் தக்க சமயமென நினைத்தவள்
அந்தக் காலைப் பொழுதிலே காயத்ரியை சத்தமாக அழைத்துக் கொண்டு வந்தாள் விக்‌ஷனாவின் சத்தத்தில் என்னவோ ஏதோ என்று பயந்து வந்த காயத்ரியிடம்

"என் அத்தானுக்கு என்னைக் கட்டி வச்சிருந்தா நான் இந்நேரம் வாந்தி எடுத்திருப்பேன் ஆனால் ரொம்ப நல்லவ வல்லவ என்று அந்த நயனியைக் கட்டி வச்சீங்களே அவ என்ன செஞ்சு வச்சிருக்கா என்று தெரியுமா?"

"ஏன் என்னாச்சு" நிதானமாக கேட்ட காயத்ரியை கொல்லலாம் போல இருந்தது அவளுக்கு

"ஆ... உங்க புள்ளைய கட்டில்ல இருந்து தள்ளி வச்சிருக்கா"

"அது எப்படி உனக்குத் தெரியும்?"

"அதான் நான் பார்தேனே என் கண்ணால பார்த்தேனே" அவள் உறுதியாகக் கூற அவருக்கு பக்கென்றது 'இது என்ன புதுக் கதை' குழம்பியவர் செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்த வேளை படியிறங்கி வந்த நயனதாராவைக் கண்டதும் பாய்ந்து சென்று அவள் கைகளைப் பற்றி சமயலறைக்குள் அழைத்து சென்றார் பின்னோடு விக்‌ஷனாவும் செல்ல கண்கள் முழுக்க ஒரு எதிர்பார்ப்புடன்

"நயனி நான் ஒன்று கேட்பேன் மறைக்காம உண்மைய சொல்லனும்"

"சொல்லுங்கத்தை என்ன விசயம்?" எப்படிக் கேட்பதென்று புரியாமல் தவித்தவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு

"அது... அது வந்து"

"என்ன அத்தை இழுத்துட்டிருக்கீங்க இந்த நல்லவக்கிட்ட கேட்டுட வேண்டியதுதானே? நீங்க கேக்குறீங்களா இல்லை நான் கேட்கவா?" ஷனா இடையில்புக

"நீ கொஞ்சம் சும்மா இரு நானே என் மருமகளுக்கிட்ட கேட்டுக்கிறேன். நயனி நான் இப்படிக் கேட்கிறேன் என்று தப்பா எடுத்துக்காதம்மா உனக்கும் என் புள்ளைக்கும் நடுவுல உ... உறவு எப்படிம்மா?" ஒரு வழியாய் கேட்க அவர் கேள்வியில் அதிர்ந்தவள்

"ஏன் அத்தை ஏன் இப்படிக் கேட்குறீங்க?"

"என் புள்ளை உன்னோட சந்தோசமா இருக்கானாம்மா?"

"ஓம் அத்தை அவர் நல்லா சந்தோசமாத்தான் இருக்காரு அதோட என்னையும் நல்லத்தான் வச்சிருக்காரு ஆனால் ஏன் திடீரென்று இந்தக் கேள்வி அதான் எனக்கு விளங்கல்ல"

"அம்மாடி என் புள்ளைக்கு கல்யாணம் கட்ட விருப்பமில்லை என்று உன்கிட்ட ஏற்கனவே சொல்லிருக்கேன் என் பிடிவாத்துலதான் அவன் கல்யாணத்துக்கு சம்மதிச்சான். பிடிவாதம் என்று சொல்லுறதவிட மிரட்டித்தான் உன்னைக் கட்டி வச்சிருக்கேன். அது தப்புத்தான் ஆனால் எனக்கு வேற வழி தெரியல்ல. என்னோட மிரட்டல்ல ஒரு வழியா ஒத்துக்கிட்டான் இந்த சொத்துக்காகவும் காசுக்காகவும் அவனைக் கட்டிக்க நினைச்சவங்களுக்கிட்ட இருந்து அவனைக் காப்பாத்திட்டேன்" காயத்ரி ஷனாவை வெற்றிப் பார்வை பார்க்க ஷனாவோ அவரை முறைத்துக் கொண்டு நின்றாள் இதனை பார்த்துக் கொண்டிருந்த நயனிக்கு எல்லாம் வெட்ட வெளிச்சமாகியது.
'அப்போ நான் நினச்ச மாதிரி இவங்க காதல் அத்தைக்கு தெரிஞ்சிருக்கு இந்த சொத்துக்காக கல்யாணம் கட்ட நினச்ச இந்த ஷனாவோட எண்ணமும் கேடு கெட்ட குணமும் தெரிஞ்சுதான் அவளை இந்த வீட்டுக்கு மருமகளாக்காம இருந்திருக்காங்க. ஆனால் அத்தை நீங்க இவங்கள பிரிச்சிருக்கலாம் ஆனால் உங்க மகனோட மனசுல இருந்து அவளை எப்படி அத்தை பிரிப்பீங்க உங்களுக்குத் தெரியல்ல அத்தை ஷனாவோட காதல் பொய்யா இருக்கலாம் ஆனால் அவர் இவள உண்மையா நேசிச்சிருக்கார் அதனாலதான் அவரால இந்த ஷனாவ மறக்கவும் முடியாம என்னோட வாழவும் முடியாம என் மேல தேவையில்லாம பழி போட்டுகிட்டு என்னை தள்ளி வச்சிருக்கார். இந்த ஷனா இப்பவும் சுத்தி சுத்தி வரா என்றால் இவர் கொடுக்குற இடந்தானே. அத்தை நீங்க வருத்துப்படாதீங்க இந்த ஷனாவால ஒன்னும் பண்ண முடியாது. அதோட உங்க புள்ள நினைக்குறதும் நடக்காது ஆனால் ஒன்று நிச்சயமா இந்த பந்தத்தை உடைய நான் விடமாட்டேன் அவருக்கு இந்த ஷனாவோட குணத்தை புரிய வச்சு அவர் மனசுலயிருந்தும் அவரோட வாழ்க்கையில இருந்தும் நிரந்தரமா இந்த விஷப்பாம்பை விரட்டுவேன் இது உறுதி.' தனக்குள் சபதமெடுத்தவளை உலுக்கிய காயத்ரி

"என்னம்மா யோசிக்குற"

"ஒன்னுமில்ல அத்தை நீங்க சொல்லுங்கோ"

"எனக்குப் பிறகு அவனை நல்லாப் பொறுப்பா அன்பா பார்த்துக்குற ஒரு நல்லவள அவனுக்கு கட்டி வைக்கனும் என்று நினைச்சேன். நான் நினச்ச மாதிரியே ஒரு தங்கத்தை என் மகனுக்கு கொடுத்திருக்கேன் அந்த சந்தோசம் எனக்குப் போதும்"

"யாரு இவளா? ஏன் அத்தை நான் காசுக்குத்தான் என் அத்தானை கட்டிக்க நினச்சேன் என்றுதானே எங்களப் பிரிச்சீங்க அப்போ இவ மட்டும் ஒழுங்கா இவளும் சொத்துக்கும் காசுக்கும் சொகுசு வாழ்க்கைக்கும்தான் கட்டிக்கிட்டா." கணவனின் அதே வார்த்தைகளை ஷனாவிடம் கேட்ட பொழுது அவள் துடித்துப் போனாள். 'தங்களுக்குள் நடப்பெதெல்லாம் இவளுக்கு தெரியுதென்றால் அவர்தானே சொல்லனும். அப்போ எல்லாமே இவங்களோட பிளான்தானா இல்லாத பொல்லாத பழியைப் போட்டு அதை அத்தையையும் நம்ப வச்சுட்டு என்னை அவரோட வாழ்க்கையில இருந்து விலக்கிட்டு இவளைக் கட்டிக்க நினைக்கிறாரா?' அவள் உள்ளூரக் கலங்க

"சரி அத்தை இவ நல்லவளாவே இருக்கட்டும் இவள எதுக்காக கூப்பிட்டீங்களோ அதை இன்னும் நீங்க கேட்கல்லையே முதல்ல அது என்ன என்று தெரிஞ்சுக்கோங்க பிறகு என்னுல குத்தம் புடிக்கலாம்" நயனி கேள்வியாய் காயத்ரியை நோக்க

"அது வந்து நயனி நீங்க சந்தோசமாத்தான் இருக்கீங்க உங்க உறவும் நல்லாயிருக்கென்று சொல்லுறாய் அப்படியென்றால் ஏன்ம்மா உங்க படுக்கை மட்டும் தனியா இருக்கு" அவரின் கேள்வியில் அதிர்ந்தவள் உடனே தன்னை மீட்டெடுத்து

"அத்தை அது வந்து நான் சுத்தமில்லாம இருக்கேன் அந்த நாட்கள்ல எனக்கு கடும் கஷ்டமாயிடும் அதானால நான் எப்பவும் அந்த நேரத்துல பெட்டெல்லாம் யூஸ் பண்ணிக்க மாட்டேன் நிலத்துல விரிப்பை விரிச்சு படுத்துக்குவேன். அதுவும் முதல் நாள் வேற அதான் கொஞ்சம் கூட நேரமும் தூங்கிட்டேன் மத்தப்படி ஒன்னுமில்ல. அது சரி அத்தை எங்க படுக்க தனியா இருக்குன்னு உங்ககிட்ட யாரு சொன்னாங்க என்று தெரிஞ்சுக்கலாமா?"

"இதோ நிக்குறாளே இந்த ஷனாதான்"
'ஓ அப்போ இதையும் சொல்லியாச்சா' நயனியின் உள்ளம் வலித்தது

"என்ன ஷனா இது, தேவையில்லாத கதையெல்லாம் கதைச்சிருக்கீங்க அதோட எங்க ரூமுக்கு எப்போ வந்தீங்க? அதுவும் இவ்வளவு காலையில இது என்ன பழக்கம்"

"ஏய் ஷனா ஒரு நிமிஷத்துல கதி கலங்க வச்சுட்டாயே. அதுசரி புருஷன் பொண்டாட்டி இருக்குற ரூமுக்குள்ள உனக்கென்ன அலுவல் நீ எதுக்காக அவங்க ரூமுக்கு போன."

"என் அத்தானைப் பார்க்க"

"வெட்கமாயில்லையா உனக்கு. ஒரு ஆம்பளப்பிள்ளட ரூமுக்கு தனியாப் போறதே தப்பு இதுல புருஷன் பொண்டாட்டி இருக்குறப்போ அதுவும் விடியக் காலையிலே போயிருக்க அறிவு வேணாம் இதுக்குத்தான் பாட்டிக்கி உடம்பு சரிய்யில்ல நான் கூட இருக்கப் போறேன் என்று இங்க தங்கினாயா? பாட்டிய கண்ணுங்கருத்துமா நயனி பார்த்துகிட்டதையும் தடுத்துட்டு இங்க வந்து உட்கார்ந்துகிட்டு இந்த வேலையத்தான் பண்ணுறாயா? சசியோட மகளா மட்டும் வாரதென்றால் வா இல்லென்றால் இந்தப் பக்கமே வராதே. என்ன விளங்கிட்டா. இங்கப்பார் இதுவே கடைசியா இருக்கட்டும் இதுக்கு மேல ஏதாவது செஞ்ச தொலச்சிடுவேன்" கோபமாக கத்திய காயத்ரியை முறைத்துப் பார்த்தவள்

"என்னையா தொலச்சிடுவேன் என்று சொன்னீங்க நீங்க கொண்டு வந்த இந்த ஊருல இல்லாத மருமகளை உங்க மகன் கூட வாழவிடமாட்டேன் அவளாவே இந்த வாழ்க்கையையும் என் அத்தானையும் விட்டுப் போகவப்பேன் என் அத்தான் வாயாலே அதைச் சொல்லவும் வைப்பேன் இது நடக்குதா இல்லையா என்று பாருங்கோ"

"இப்பதான் இவ்வளவு சொல்லுறேன் திரும்பயும் அதே சொல்லுற திமிரு புடிச்சவளே. குரைக்குற நாய் கடிக்காது சரிதான் போ இப்பவும் சொல்லுறேன் உன்னால முடிஞ்சத செய்" அவரின் வார்த்தையில் கோபமாக ஷனா அங்கிருந்து செல்ல நயனிடம் திரும்பியவர்

"நயனி அவ சொல்லுறதெல்லாம் கணக்கெடுக்காதே அவளுக்கு ஆதி கிடைக்காத கோபத்துல கத்திட்டுப் போறா அவ்வளவுதான் அதைவிடும்மா உண்மையிலே உங்களுக்குள்ள எல்லாம் நல்லம்தானே"

"ஓம் அத்தை நீங்க ஒன்னும் யோசிக்காதீங்க அவர் என்னை கடும் நல்லா வச்சிருக்கார் நான் கடும் சந்தோசமாத்தான் அத்தை இருக்கேன். நீங்களே பார்க்குறீங்கல்ல அதுக்குப் பிறகும் இந்த கேள்வி தேவையா? அந்த ஷனா ஒராள் என்று அவ கதைய நம்பிக்கிட்டு ஏன் அத்தை சும்மா தேவையில்லாம கவலைப்படுறீங்க."

"அது சரிம்மா இந்த லூசு காலையில டென்ஷன் படுத்திடுச்சு இரும்மா டீ போட்டுத்தாரேன் ஆதி எங்க?" கேட்டுக் கொண்டிருக்கும் போதே

"தாரா எனக்கும் டீ எடுத்துட்டு நம்ம ரூமுக்கு வா" ஆதித்யன் மேலிருந்து குரல் கொடுக்க காண்பது கனவா நனவா என்பது தெரியாமல் நயனி திகைத்து நிற்க காயத்ரியோ மகன் மருமகளுடன் நன்றாகத்தான் இருக்கிறான் என்று பூரிப்படைந்தார்.

வளரும்.....

கருத்துக்களுக்கு👇❤

 

Aara dilfar

Member
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.

நிலவு - 24


ஆதி கூப்பிட்டுட்டு போறான் நீ்என்னமோ காணதைக் கண்டது போல திகச்சு நிக்குற என்னம்மா சரி சரி நான் இப்பவே டீ போட்டுத்தாரேன் எடுத்துட்டுப் போம்மா" மாமியாரின் கேள்வியில் தன்னை சுதாகருத்தவள்

"ஐயோ அதெல்லாம் ஒன்னுமில்ல. அத்தை நீங்க போங்க நானே டீ போட்டு எடுத்துட்டுப் போறேன்" என்றவள் தனக்கும் அவனுக்குமான தேநீரை தயாரித்துக் கொண்டு தங்கள் அறைக்குச் சென்றவளை கேள்வியாய் எதிர்கொண்டான் ஆதித்யன். இப்பொழுதெல்லாம் ஆதி நயனியுடன் கோபம் கொள்வதில்லை கடுகடுப்பதுமில்லை தேவைக்காக மட்டும் பேசுவான் அவனின் இந்த சின்ன மாற்றத்தை அவள் கண்டு கொள்ளவுமில்லை. அப்பொழுதே அவள் அதைக் கண்டு கொண்டிருந்தால் எதிர்காலத்தில் அவளுக்கு தேவையற்ற எண்ணங்களும் வந்திருக்காது அவனைப் பிரிந்து செல்ல முடிவும் எடுத்திருக்க மாட்டாள்.

"என்னாச்சு கீழ ஒரே சத்தமா இருந்துச்சு என்ன விசயம்"

"ஒன்னுமில்ல"

"என்ன ஒன்னுமில்ல அம்மா கொஞ்சம் சூடா கதைச்ச மாதிரி இருந்துச்சு என்ன என்றுதான் சொல்லேன்"

"அதைத் தெரிஞ்சுட்டு நீங்க என்ன செய்யப் போறீங்க?"

"என்ன ஒரு கேள்வி கேட்டதுக்கு ஏட்டிக்கு போட்டியா கதைச்சிட்டிருக்க விசயம் என்ன என்று சொல்லப்போறாயா இல்லையா?"

"ஷனாக்கும் அத்தைக்குமிடையில சண்டையாயிடுச்சு அதான் அத்தை ஷனாவ ஏசிட்டிருந்தா"

"எதனால சண்டை அம்மா எதுக்காக அவளுக்கு ஏசுறாங்க?" 'ஓ... அவளை ஏசினா சேருக்கு வலிக்குதாக்கும்' அவள் அமைதியாக இருக்க

"உன்கிட்டதான் கேட்குறேன்"

"தேவையில்லாத விஷயத்துல மூக்கை நுழச்சா அப்படித்தான்"

"ஆனால் அம்மா உன்னோடதானே ஏதோ கதைச்சிட்டிருந்த மாதிரி இருந்துச்சு அங்க ஷனா இல்லையே"

"ஓ.... நீங்க கீழ வந்தீங்களா? அப்போ எல்லாத்தையும் பார்த்துட்டுத்தானா என்கிட்ட கேட்டுட்டிருக்கீங்க?"

"அப்படியில்ல அவசரமா மெயில் பண்ண வேண்டிய ஒரு பைல் அப்பா ரூம்ல இருக்கு அதை எடுக்கத்தான் வந்தேன். என்னமோ பிரச்சனை ஒன்னு ஓடிட்டிருக்குன்னு விளங்கிச்சு ஆனால் நின்னு என்ன என்று கேட்க எனக்குத்தான் நேரமில்லை அதுக்காகத் தான் உனகிட்ட கேட்குறேன் இப்பவாவது சொல்லும்மா என்னதான் நடந்துச்சு?"

"ம்..... அவங்க மகன் அதான் நீங்க என்னை சந்தோசமா வச்சிருக்கீங்களா என்று கேட்குறாங்க?"

"ஏன் இந்தக் கேள்வி என்னாச்சு நீ ஏதாவது சந்தேகம் வார மாதிரி நடந்துகிட்டாயா?"

"அவங்க சந்தேகத்துக்கு நான் என்ன பண்ண முடியும்"

"அதுக்கெதுக்கு கோபமா கேட்கனும்?"

"ஓ... அதுவா முதல்ல அவங்க கோபப்பட்டது என்னோட இல்லை ஷனாவுலதான். நம்ம ரூம்ல படுக்கை தனியாயிருக்காம் அப்போ எப்படி சந்தோசமா இருக்கீங்க என்று கேட்குறாங்க?"

"என்ன இது எப்படி அவங்களுக்குத் தெரியும். இந்த அம்மாக்கு எதுக்கு தேவைக்கில்லாத ஆராய்ச்சி சரி நீ என்ன சொன்ன"

"அது உங்க அன்பும் ஆசையுமான உங்களோட ஷனா சொரி சொரி விக்‌ஷ் தான் சொன்னா நம்ம ரூமுல நாம எப்படிப் படுத்திருக்கோம் என்று அவளுக்கெப்படித் தெரியும் உங்க ஆசை கா... விக்‌ஷூகிட்ட நீங்கதான் சொன்னீங்களா?"

"நீ என்ன லூசா நான் ஏன் அவளுக்கிட்ட போய் சொல்லனும்"

"நீங்க சொல்லாமலா நம்ம தனித் தனியா படுக்குறது அவளுக்குத் தெரியும்"

"நான் ஒன்றும் அவகிட்ட சொல்லல்ல. அம்மாதான் எப்படியோ தெரிஞ்சுக்கிட்டிருக்காங்க. நான் உனகிட்ட படிச்சுப் படிச்சு சொன்னேன் அம்மாக்காகத் தான் எல்லாம் கவனமா இருன்னு. அவங்களப் பொறுத்தவரை நீ தங்கமான மருமகள் நாம சந்தோசமா இருக்கமா என்று சந்தேகம் போல அவங்களுக்கு நம்ம வாழ்க்கை நல்லா இருக்கனும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கும்தானே அது தப்பில்லையே"

"அவங்களுக்கு தெரியல்ல போல காதலைப் பிரிச்சு கல்யாணம் பண்ணி வச்சவங்க இதையெல்லாம் எதிர்பார்க்கக் கூடாதுன்னு"

"என்ன உளர்ர யார்ர காதலை யாரு பிரிச்சா?" காதல், பிரிவு என்றதில் தடுமாறியவன் தன்னை சுதாகரித்துக் கொண்டு கேட்க அவன் தடுமாற்றம் அவள் கண்களுக்கு தப்பவில்லை.

"உங்க காதலைத் தான், உங்கம்மாதான். பிரிச்சுத்தானே துளியும் விருப்பமில்லாத உங்களை என் தலையில கட்டிருக்காங்க. அவங்களுக்கு சந்தேகத்தை நாம வர வைக்கத் தேவையே இல்லை அவங்களுக்கு அது எப்பவும் இருந்துகிட்டே இருக்கும்."

"நீ என்ன லூசா? என் காதலை அம்மா பிரிச்சாவா கிறுக்குத்தனமா கதைக்காம விசயத்தைச் சொல்லு"

"நீங்களும் ஷனாவும் காதலிக்கல்ல ஒன்னா வாழல்ல....." என ஷனா தன்னிடம் கூறிய காதல் கதையை அவனிடம் கூற அவன் விழுந்து விழுந்து சிரித்தான்.

"எங்கம்மாதான் எனகிட்ட வந்து விக்‌ஷ கட்டிக்கிறாயா என்று கேட்டாங்க. நான் முடியாதென்று ஒத்த வார்த்தையில மறுத்துட்டேன். நீ என்னடா என்றா மாத்தி சொல்லிட்டிருக்க. அவ உன்கிட்ட வந்து ஏன் அப்படிச் சொன்னா என்று தெரியல்லை. ஒருவேளை அவளுக்கு அந்த மாதிரி எண்ணம் இருந்திருக்கலாம். ஆனால் விக்‌ஷ் எனக்கு தங்கச்சி மாதிரி அவளை எப்படி நான் காதலிக்க முடியும் இல்லை கட்டிக்கத்தான் முடியும். அபடி ஒரு எண்ணம் எனக்கு இல்லவே இல்லை நீ என்னை தாராளமா நம்பலாம்" அவன் பேச்சில் உண்மை இருப்பதை புரிந்து கொண்டவள் தன் மாமியார் தன்னிடம் கூறிய அனைத்தும் உண்மை என்பதையும் உணர்ந்தாள். அவனுடைய அந்த வார்த்தைகளில் அவளின் கணத்த மனது அமைதி கண்டது.

"தங்கச்சி மாதிரி என்று சொன்னா மட்டும் போதாது அதுக்கேத்தாப்போல நடந்துக்கவும் வேணும் அப்பதானே நம்பிக்கை வரும். ஒருத்தி சரியான எண்ணத்துல நெருங்குறாளா இல்லையா்என்று கூட தெரியல்ல நீங்கெல்லாம் தொழில் வச்சு நடத்துறீங்க. பார்த்துங்க எவனாவது மொளகா அரச்சிடப்போறான்."

"அவ்வளவு மடையனெல்லாம் இல்லை இந்த ஷனாவோட பிரச்சனைய இன்றைக்கே முடிச்சுவக்கிறேன் அதவிடு அம்மாவோட கேள்விக்கு நீ என்ன பதில் சொன்ன" ஆவலே உருவாக்க் கேட்டவனிடம்

"ஆ... உண்மையைச் சொன்னேன்."

"என்ன உண்மை?"அவனின் அடுத்த கேள்விக்கு அவள் அங்கு இல்லை.

''அடிப்பாவி அதுக்குள்ள போயாச்சா ஒருவேள இவ வடிவேலுக்கு ப்ரண்டா இருந்திருப்பாளோ" வாய் விட்டே புலம்பியவன் தனக்குள் சிரித்துக் கொண்டான் தன் மாற்றத்தை எண்ணி

அன்றும் ஷனாவே காலை உணவை பரிமாற அதைத் தடுத்த ஆதித்யன்

"தாரா இங்க வா இது உன்னோட வேலை என்று உனக்குத் தெரியாதா வீட்டுக்கு வந்த விருந்தாளிய வச்சு செய்விக்குற இது என்ன பழக்கம்"

"ஏன் ஆதித்தான் நான் உங்களுக்கு செய்யக் கூடாதா?"

"ஏன் கூடாது செய்யலாம் அது உன் வீட்டுக்கு நாங்க விருந்துக்கு வரப்போ செய் உன்னை யாரு தடுத்தா இது அவளோட வீடு இது அவளுக்கான அதாவது என் மனைவிக்கான உரிமை அதுல நீ இல்ல யாரும் தலையிடக் கூடாது"
அவனின் வார்த்தைகளில் நயனியும் காயத்ரியும் அகமகிழ்ந்து போக ஷனாவோ கோபமானாள் இருந்தும் அவனருகிலே அமர்ந்து விடாப்பிடியாக அவனுக்குப் பரிமாறத் தொடங்க அதுவரை அமைதியாக அவளுக்குப் புரியும் படி சொல்லிக் கொண்டிருந்த
ஆதித்யன் அவளின் செயல் எல்லை மீறுவதையும் நயனியுடன் போட்டிக்கு நிற்பதையும் ஒரு மனைவிக்கான உரிமைகளை எடுத்துக் கொள்வதையும் கண்டவனுக்கு எல்லையில்லாக் கோபம் வந்தது. அம்மாவினதும் அக்காவினதும் வார்த்தைகள் அவன் காதில் எதிரொலித்தன. கைகளை உதறிக் கொண்டு எழுந்தவன்

"ஏய் ஷனா உனக்கு அறிவில்ல கிளிப்பிள்ளைக்கு சொல்லுற மாதிரி சொல்லிட்டிருக்கேன் திரும்பத் திரும்ப அதையே செய்யுற. நீ பண்ணின தப்புக்கு நாலு அற விட்டு இப்பவே உன் பெட்டி படுக்கையோட இந்த வீட்டை விட்டு துரத்தியிருக்கனும் அதைச் செய்யாம நம்ம அத்தையோட மகள் என்று பாவம் பார்த்தா என்ன ஓவரா பண்ணிட்டிருக்க நான் உன்கூட புருஷனா வாழ்ந்தேன்னு தாராகிட்ட சொல்லிருக்க அசிங்கமா இல்ல உனக்கு அது இல்லாமல் இருக்கலாம் ஆனால் எங்கம்மா அப்படி என்னை வளர்க்கல்ல என்ன விளங்கிட்டா சீச்சீ உன்னப் பார்க்கவே அருவருப்பா இருக்கு. இங்கப்பார் சசி அத்தையோட மகளா மட்டும் இங்க வாரதா இருந்தா வா இல்ல இந்தப் பக்கமே தலவச்சுப் படுத்துடாத" என்றவன் அலுவலகத்திற்குப் புறப்பட்டுவிட்டான் அதிர்ந்து நின்றவளிடம் வந்த நயனியும் காயத்ரியும்

"என்னம்மா இது போதுமா இல்ல....." காயத்ரி ராகமாய் இழுக்க

"யாரை வீட்ட விட்டு துரத்துறேன் என்று சொன்ன இப்ப விளங்கிட்டா இந்த வீட்ட விட்டும் அவரோட வாழ்க்கைய விட்டும் யாரு போகனும்மென்று" அவமானம் தாங்காமல் அன்றே தன் பெட்டி படுக்கையைக் கட்டிவிட்டாள்.

வளரும்.....

கருத்துக்களுக்கு👇

 

Aara dilfar

Member
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.

நிலவு - 25


ஆதி, நயனி திருமணம் நடந்து இரண்டு மாதங்களாகின. அவர்கள் உறவில் எந்த மாற்றங்களும் இல்லாது போனாலும் ஆதித்யன் மாறியிருந்தான் தண்டவாளம் போல் என்றும் சேராது என்று கூறியவனே அவளிடம் அவ்வப்போது நின்று பேசினான். முதலில் மற்றையவர்களுக்கு முன்னால் அதுவும் நடிப்பிற்காக மட்டுமே பேசிக் கொண்டருந்தவன் இப்போதெல்லாம் அவர்களின் அறையிலும் அதுவும் தேவைகளே இல்லாத போதும் அவளுடன் பேசினான். அவனின. இந்த மாற்றம் அவளுக்கு எல்லைநில்லா மகிழ்ச்சியைக் கொடுத்தது. தங்கள் உறவு இன்றில்லாவிடினும் ஒரு நாள் நிச்சயம் மலரும் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனுமே தன் நாளை ஆரம்பிப்பாள் நயனதாரா.

அன்று காயத்ரி வேலையாக இருந்ததால் நயனிதான் சில முக்கியமான பொருட்கள் வாங்க கடைக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆடையை மாற்றிக் கொண்டு வந்தவள் மாமியாரிடம் சொல்லிக் கொண்டு வெளியேற அலுவலகத்திலிருந்து வந்திறங்கிய ஆதித்யன் அவளை அழைத்தான்

"தாரா எங்க போற?"

"கொஞ்சம் சாமான் வாங்க வேண்டியதா இருக்கு அதுக்குத்தான் சுப்பர் மார்கெட் போறேன்."

"அப்படியா சரி காருல ஏறு நானே கூட்டிட்டுப் போறேன்" தன் காதுகள் சரியாகத்தான் கேட்டதா என காதைத் தேய்த்துவிட அவள் செயலில் சிரித்தவன் அவள் அமர்ந்ததும் காரை ஸ்டார் செய்தான்.

வாங்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் வாங்கிவிட்டு அதற்கு பில்போட ஆதித்யன் செல்ல நயனதாராவோ ஒரு ஓரமாய் நின்று அவன் வருகைக்காக காத்திருந்தாள். அந்த நேரத்தில் தான் அவள் கண்களில் பட்டாள் அவளுடைய நித்திக்கா. மற்றையது மறந்து அக்காவிடம் சென்றவள்

"நித்திக்கா" அந்தக் குரலில் ஆவலே வடிவாகத் திரும்பிய அந்த நித்திக்கா அவளைக் கண்டதும் கண் கலங்க அவளை சமாதானப்படுத்தியவள்,

"எப்படி இருக்கீங்கக்கா உங்களப் பார்த்து கதைச்சு எவ்வளவு நாளாச்சு. நீங்க தாருகிட்டக் கூட கதைக்குறல்ல என்று ரொம்ப கவலைப்பட்டா ஏங்க்கா இப்படியிருக்கீங்க. தனிமையான இந்த வாழ்க்கை உங்களுக்குத் தேவையா?" கேள்விகளை அடுக்க

"நான் நல்லா இருக்கேன் பப்பு எனக்கு துணையா என்னோட மகனிருக்கான் கல்விய சொல்லிக் கொடுக்குற ஆசிரியர் தொழில் இருக்கு எனக்கு யாருமே வேணாமென்றுதான் இப்படித் தனியா வந்திருக்கேன் சந்தோசமா இல்லாட்டியும் நிம்மதியா இருக்கேன் பப்பு."

"அக்கா நீங்க இந்த பப்புவ மறக்கல்லையா? இப்பவும் கூப்பிடுறீங்க என்னோட அச்சு மாமாதான் இப்படிக் கூப்பிடுவாங்க"

"வாழ் நாளுக்கும் சில விஷயங்கள மறக்க முடியாது பப்பு, சிலதை இழந்த பிறகுதான் நமக்கு அது முக்கியமென்று தோனும் சில நினைவுகளை மறக்கனும் என்ற காரணத்துக்காகத்தான் உன்னை அப்படிக் கூப்பிடுறதை நான் நிறுத்திக்கிட்டேன் ஆனால் இப்போ அதுதான் என்னை வாழ வச்சுட்டிருக்கு அதைவிடு நீ எப்படி இருக்க பப்பு"

"நல்லாயிருக்கேன் அக்கா" அப்போதுதான் அவள் கழுத்தில் கிடந்த கணமான சங்கிலியையும் உச்சிவகிட்டுக் குங்குமத்தையும் கண்டவள்

"ஏய் பப்பு உனக்கு கல்யாணமாயிடுச்சா?"

"ஓம் அக்கா இப்பதான் இரண்டு மாசமாகுது"

"ஹேய் அப்போ உன் வீட்டுக்காரரோட தான் இங்க வந்திருக்காயா எங்க அவரு?"

"ஓம் அக்கா அவர் பில் கவுண்டர்ல நிக்குறார். நானும் அங்க தான் நின்னேன் உங்களைப் பார்த்ததும் ஒன்னும் விளங்கல்ல அவர்ட்ட கூட சொல்லாம ஓடி வந்துட்டேன். அவர் வரட்டும் உங்களுக்கு அவரை அறிமுகப்படுத்துறேன். எங்க வீடு வெள்ளவத்தையில இருக்கு கட்டாயம் வீட்டுக்கு வாங்க அக்கா நீங்களும் இங்கதான் இருக்கீங்களா உங்க வீடு எங்க?

"நான் கல்கிஸ்ஸயில இருக்கேன் அதோ நிக்குறாங்களே அவங்க என் ப்ரெண்ட் அவ வீட்டுக்கு வந்தேன் அவ கொஞ்சம் பொருள் வாங்கனுமென்றா அதான் அவளோட இங்க வந்தேன்" என்றவளிடம் அவள் வீட்டு முகவரியையும் தொலைபேசி இலக்கங்களையும் வாங்கியவள் தன்னுடையதையும் அந்த நித்தியிடம் கொடுத்தாள்

"அதுசரி உங்க மகன் எங்க?

"இதோ ஆதுக் கண்ணா ஆன்ட்டிக்கு ஹாய் சொல்லுங்கோ" அவள் குழந்தையை அழைத்த பெயரில் நயனி சட்டென நிமிர்ந்து பார்க்க அந்தப் பார்வையை தவிர்த்தவள் குழந்தையிடம் ஏதோ பேசிக் கொண்டிருக்க தன்னை சுதாகரித்துக் கொண்டு நயனதாராவும் குழந்தையிடம் தன் கவனத்தைச் செலுத்தினாள்

"அட இங்க இருக்கீங்களா செல்லம் உங்க பெயரென்ன? அக்கா இவனோட முழுப் பெயரென்ன?" சிறு தயக்கத்துக்குப் பின்

"ஆதித்யன்"

"என்னக்கா இதெல்லாம், எது வேணாமென்று அச்சு மாமாவைக் கஷ்டப்படுத்தினீங்களோ அதையே இப்போ நீங்க செஞ்சுட்டிருக்கீங்க இதுக்குப் பேசாம அவரையே கட்டியிருக்கலாமில்ல இந்த கஷ்டமே இருக்காதே. வாழ் நாள் முழுக்க ரெண்டு பேரும் சந்தோசமா இருந்திருப்பீங்களே பாவம் என் மாமா உங்களால கடும் கஷ்டப்பட்டுட்டாங்க. இப்போ எங்க இருக்காங்க என்றே தெரியல்ல. ஏன் அக்கா உங்க மகனுக்கு இந்த பெயர வச்சீங்க வாழ் நாள் முழுக்க என் மாமாவ மறக்காம இருக்கத்தானா?"

"என் வாழ்க்கையிலயும் சரி என் மனசுலயும் சரி இப்போ உன்னோட மாமா இல்லை ஏன்னா அவருக்கு கல்யாணமாகியிருக்கலாம் குழந்தைங்க கூட இருக்கலாம் ஆனால் என்னோட ஆது என்னைக் காதலிச்ச என் ஆது என் மனசுல இருக்கிறார் என்றைக்கும் இருப்பார். அதனாலதான் என் மகனுக்கு அந்தப் பெயர வச்சேன் என் ஆதுகிட்ட சொன்ன மாதிரி கடைசி மூச்சு வர அதைக் கூப்பிட்டுக்கிட்டே இருப்பேன் முன்ன மாதிரி அதை யாராலும் தடுக்க முடியாதில்ல. இப்போ அந்தப் பெயர் எனக்கு மட்டும்தான் சொந்தம்"

"ஏன் அக்கா அவர் பொண்டாட்டி அந்த பெயர வச்சு கூப்பிட்டா என்ன பண்ணுவீங்க" வீம்புக்கு கேட்ட நயனதாராவின் தலையில் ஒரு குட்டு வைத்தவள்

"கூப்பிடமாட்டா ஏன் தெரியுமா ஆது அதுக்கு அனுமதிக்க மாட்டார். என்னோட நினைவுகளக் கொடுக்குற எதையும் அவர் வாழ்க்கையில அனுமதிக்க மாட்டார். உன்கிட்ட ஒன்னு கேட்கவா? என் ஆதுவ கிட்டத்துல பார்த்திருக்காயா?"

"அக்கா நான் என் அச்சு மாமாவை கடைசியா அந்த நாள்லதான் பார்த்தேன் ஆனால் அதுக்குப் பிறகும் உங்களைப் பார்க்க வந்திருக்காங்க அப்படிப் பார்த்தா நீங்கதான் அக்கா மாமாவ கடைசியாப் பார்த்திருக்கீங்க" என்றவளின் கைகளை ஒரு வலிய கரம் இறுக்கிப் பிடிக்க சட்டென்று திரும்பிப் பார்த்தவள் ஆதித்யனைக் கண்டதும்

"நித்திக்கா இவர்தான் என் ஹஸ்பென்ட்..." என்று சொல்லி முடிப்பதற்குள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க

"உனக்கு அறிவில்லையா யாரோட பழகனும் கதைக்கனும் என்றது தெரியாதா போயும் போயும் இவளோட கதச்சிட்டிருக்க" என்றவன் அவளை இழுத்துச் செல்ல அவ்வளவு நேரமும் அதிர்ந்து நின்ற நித்தியின் உதடுகள்

"ஆது...." என்று உச்சரிக்க அவளையே பார்த்துச் சென்ற நயனியின் செவிகளில் அந்தப் பெயர் தெளிவாகவே விழுந்தது. ஆதித்யனைத் திரும்பிப் பார்த்தவளுக்கு வருந்துவதா மகிழ்வதா என்று தெரியாத நிலை. அவளை இழுத்து வந்தவன் காரினுள் தள்ளி ஓங்கி கதவைச் சாத்த அதிலே அவன் கோபம் பெண்ணவளுக்கு புரிந்தது. ஆனாலும் எதுவும் கேட்காது அமைதியாகவே இருந்தாள் அதற்கு இன்னுமொரு காரணம் கற்சிலையாக இறுகி இருந்த அவன் தோற்றமும்தான். இருவரிடையேயும் எந்தவித பேச்சுமின்றியே வீடு போய் சேர்ந்தனர். வீட்டிற்கு சென்றவன் பொருட்களுடன் அவளை இறக்கிவிட்டு அசுர வேகத்தில் காரைக் கிளப்பிக் கொண்டு சென்றான். தன் அறைக்குள் நுழைந்தவள் கதவைத் தாழிட்டு விட்டு ஒரு மூச்சு அழுது தீர்த்தாள். அதன் பிறகு அவள் மனது லேசாக தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள்.

"அப்போ என் அச்சு மாமாதான் என் வர்த்தனா ஐயோ என்னால நம்பவே முடியல்லையே அதனாலதான் முதல் நாள் பார்த்தப்போ எங்கோ பார்த்த மாதிரி இருந்துச்சா. ஆனால் இவர் இப்போ கடும் கோபமா போயிருக்காரே அது என் மேல இருக்குற கோபமா இல்லை நித்திக்கா மேலயா? இவ்வளவு நேரமாச்சு அவர் இன்னும் வரல்லையே" அவள் தவித்துக் கொண்டிருக்க காயத்ரி அவளைத் தேடி வந்தார்.

"நயனிம்மா ஆதி உனக்கு போன் பண்ணினான் போல ஆனால் நீ எடுக்கல்லயாம் அதனால எனக்கு போன் பண்ணிருக்கான். இன்றைக்கு நைட் வீட்டுக்கு வரமாட்டானாம் ஏன்னா முக்கியமான டீலர்ஸ் கொஞ்சம் வந்திருக்காங்க போல அதனால அவங்க கூடவே நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல தங்கிட்டானாம்."

"அத்தை வழமையா இப்படி நடக்குமா? சங்கரும் கூடத் தங்குறாரா?"

"ஓம் நயனி இது நடக்கும்தான் வழமையா சங்கரும் கூடத் தங்குவான் ஆனால் இன்றைக்கு என்னமோ அவன் வந்துட்டான் ஆதி மட்டும்தான் அவங்க கூட தங்குறான்."

"சரி அத்தை இப்போ சங்கர் எங்க?"

"ரூம்ல தான் இருக்கான்" என்றவர் அவளை சாப்பிட அழைக்க தனக்கு வயிறு சரியில்லை அதனால ஒருநாள் சாப்பிடாம இருந்தால் சரியாயிடும் என்று அவர் சமாதானமாகும் வகையில் கூறியவள் காயத்ரி அறையை விட்டு வெளியேறியதும் சங்கருக்கு அழைப்பை ஏற்படுத்தியவள்

"சங்கர் அண்ணா உங்க கூட கொஞ்சம் கதைக்கனும் மொட்ட மாடிக்கு வாரீங்களா?" அவன் சரி என்றதும் அழைப்பைத் துண்டித்தவள் மொட்டை மாடிக்குச் சென்றாள். சங்கர் வந்துவிட ஒரு சில கணங்கள் அமைதியாக இருந்தவள் அவனை நேராக நோக்கி

"அண்ணா அவர் எங்க?"

"கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கான்ம்மா முக்கியமான டீலர்ஸ் வந்திருக்காங்க"

"இது அத்தைக்கு சொன்ன கதை உண்மைய எங்கிட்ட சொல்லுங்கோ"

"என்ன நயனி சொல்லுறீங்க?"

"அத்தைகிட்ட நான் கேட்டன் வழமையா நீங்களும் தானாமே கூடப் போவீங்க இன்னைக்கு ஏன் அண்ணா போகல்ல"

"அது அது எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல அதான்"

"நல்லா நடிக்குறீங்க ஆனால் அண்ணா ப்ளீஸ் என்கிட்ட இப்படி நடிக்க வேணாம்
அவர் ஏன் அங்க போய் ஒளிஞ்சுகிட்டாரென்று எனக்குத் தெரியும். நீங்க ஏன் தங்கல்ல என்றும் தெரியும்"

"......"

"உங்களுக்கிட்ட ஒன்னு கேட்கவா இல்ல சொல்லவா?"

"என்னம்மா புதிர் போடுறீங்க சரி என்ன கேட்கனுமோ கேளுங்க நயனி"

"சங்கரண்ணா வர்த்தன்தான் என்னோட அச்சு மாமாவா?"

"அச்சு மாமாவா அப்போ அப்போ நீ... நீ..."

"பப்பு" அவன் ஆச்சரியமாக கண்களை விரிக்க அவளோ சிரித்தாள்.

"பப்புவா ஐயோ என்னால நம்பவே முடியல்லையே."

"என்னாலேயும்தான் நம்ப முடியல்ல. ஆனால் எனக்கு ஒரு டவுட் இருந்துச்சு பட் அப்படியிருக்காதுன்னு விட்டுட்டேன்."

"ஆனாலும் நீ அப்போ சொன்ன மாதிரி உன் வர்த்தன இல்லயில்ல உன்னோட அச்சு மாமாவ கல்யாணம் கட்டிகிட்டயில்ல"

"அதத்தான் என்னாலயும் நம்ப முடியல்ல அங்கிள்"

"ஏய் நயனி ப்ளீஸ் இப்படிக் கூப்பிடாத பெரிய பொண்ணானதும் உங்களேயே கட்டிக்கிறேன் மாமா நீங்க கவலப்படாதீங்க என்று சொன்ன. அது உனக்கு ஞாபகமிருக்கா?" அவன் கேட்டதும் அவள் வெட்கப்பட்டவாறே தலையாட்ட

"சொன்ன மாதிரியே கட்டிக்கிட்டு வந்துட்ட ஆனால் இரண்டு பேருக்கும் யாருன்னு தெரியாமலே, ஆச்சரியமா இருக்குள்ள ஆனால் எனக்கும் உன்னை கொஞ்சமும் அடையாளம் தெரியல்ல நயனி"

"ஓம் அண்ணா அப்போ நான் சின்னப்புள்ளதானே அதனால நீங்க மதிக்கல்ல ஆனால எனக்கும் உங்களை அறவே ஞாபகமில்ல."

"இத இப்பவே ஆதிக்கிட்ட சொல்லனும்"

"ஐயோ அண்ணா ப்ளீஸ் நீங்க ஆதிகிட்ட சொல்ல வேணாம் நானே சொல்லிக்கிறேனே ப்ளீஸ் அப்போ அவர் முகத்துல வார சந்தோசத்தை நான் பார்க்கனும். அண்ணா இப்போ இது எல்லாத்தையும் விட முக்கியம் வர்த்தனோட மனநில இன்னைக்கு நித்திக்காவ கடையில பார்த்தோம் அண்ணா" நடந்ததைக் கூற

"தெரியும் அதனாலதான் அவன் தனியா தங்கியிருக்கான் அதோட வீட்டுலயும் சொல்ல வேணாம் என்று சொல்லிட்டான் அதனாலதான் மறச்சேன். ஆனால் சத்தியமா நீ பப்புவா இருப்ப என்று நினைக்கவே இல்லை. அதுசரி நீ பப்பு என்றால் உன் கூட சுத்திட்டு இருந்தாளே அந்த ரவுடி பேபி அவ எங்க?"

"ரவுடி பேபி தானே இருக்கா இருக்கா" லேசான சிரிப்புடன் சொல்ல

"என்ன பண்ணுறா கல்யாணம் ஆயிடுச்சா எத்தனை புள்ளைங்க இப்போ எப்படியிருப்பா" அவள் அடக்க முடியாமல் சிரிக்க சங்கர் புரியாமல் விழிக்க சிரித்து முடித்தவள்

"ரவுடி பேபி யாருன்னு தெரிஞ்சா நீங்க சாக்காகிடுவீங்க"

"அப்படியா எனக்குத் தெரியுமா அப்போ நான் அந்த ரவுடி பேபியப் பார்த்திருக்கேனா யாரவ?" ஆவலே உருவாக கேட்டான் சங்கரன்

"அதுவா அதுவா ரவுடி பேபி யார் தெரியுமா அது வேற யாருமில்ல உங்க தாரணி தான்"

"என்ன?" இன்பமாய் அதிர்ந்தவன் தன்னை சுதாகரித்துக் கொண்டு

"என்னோட தாரணியா என்ன சொல்லுற?"

"அண்ணா எனக்கு எல்லாம் தெரியும்."

"ஏன் அவ இந்த மாதிரி நடந்துக்குறா"

"அவளுக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு ஆனால் அவ அதைச் சொல்லாம இருக்குறதுக்கு இவங்க காதல்தான் காரணம்."

"என்ன குழப்புற நயனி எனக்கு ஒன்றும் விளங்கல்ல."

"நித்திக்கா தாருவோட பெரியம்மா மகள் நித்திக்காவோட லவ் மெட்டர் அவங்க வீட்டுல தெரிஞ்சப்போ நித்திக்காவ உண்டில்லை என்று ஆக்கிட்டாங்க அதையெல்லாத்தையும் கூடயிருந்து பார்த்தவ அதனாலதான் உங்க காதல அவளால ஏத்துக்க முடியல்ல அவங்க வீட்ட நினைச்சுத்தான் ரொம்ப பயப்படுறா முக்கியமா அவங்க பெரியம்மாவ அதுதான் நித்தக்காவோட அம்மாவ ஆனால் ஒன்னு அவளுக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு அது மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும்"

"உண்மையா என் தாருக்கு என்னப் புடிச்சிருக்கா?"

"ஓம் அங்கிள் உங்க ரவுடி பேபிக்கு உங்களை ரொம்ப புடிச்சிருக்கு அங்கிள்" அவள் குழந்தை போல் பேசிக்காட்ட அவன் சிரித்தான்

"அண்ணா உடனே நான் தாருக்கு கோள் பண்ணனும் இந்த விசயத்தை சொல்லியாகனும்" என்றவாறே அழைத்தவள் மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டதும்

"தாரு தாரு உனகிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லனும்" தோழியின் குரலிலிருந்த உற்சாகம் அவளையும் தொற்றிக் கொள்ள என்ன விசயம் எனக் கேட்க

"தாரு என் வர்த்தன் யாரு தெரியுமா நம்ம சந்தேகப்பட்ட மாதிரி நம்ம அச்சு மாமா தான்டி"

"என்னடி சொல்லுற உண்மையாவா உனக்கெப்படித் தெரியும் அப்போ அவருக்கிட்ட கேட்டுட்டயா உங்களுக்குள்ள எல்லாம் ஓகே ஆயிடுச்சா"

"அதெல்லாம் ஒன்றுமில்ல தாரு நான் இன்னைக்கு நித்திக்காவ பார்த்தேன்" மறுமுனையில் சிறு அமைதி

"என்னடி சொல்லுற அக்கா எப்படியிருக்காங்க"

"நல்லா இருக்காங்க." என்றவள் அன்றைய விபரங்களைக் கொடுத்து விட்டு

"உனக்கு இன்னொரு செப்ரைஸ் இருக்கு கொஞ்சமிரு உன் கூட ஒருத்தர் கதைக்கனுமாம்" அவள் அலைப்பேசியை சங்கரிடம் கொடுக்க

"ஹாய் ரவுடி பேபி"

"நீங்களா எதுக்காக நயனி போன்ல இருந்து கதைக்குறீங்க உங்களுக்கு வேற வேலையே இல்லையா அவளுகிட்ட போனைக் கொடுங்க அதுசரி இப்போ நீங்க என்ன சொன்னீங்க ரவுடி பேபியா உங்களுக்கெப்படி....?" சத்தமிட்டவள் சிந்தனையில் ஆழ

"ஏய் ரவுடி நல்லா யோசிச்சு சொல்லு என்னைத் தெரியல்லையா?"

"ஹேய் அங்கிள் நீங்களா?"

"ஓம் ரவுடி பேபி நானேதான் ஆனால் தயவு செஞ்சு அங்கிள் என்று மட்டும் கூப்பிடாத"

"அப்போ என்ன என்று கூப்பிடனும்"

"உனக்குப் புடிச்ச மாதிரி எப்படி வேணுமென்றாலும்"

"அப்படியா என்ன வேணுமென்றாலுமா?" அவளின் குறும்பு புரிந்தவன்.

"ஐயோ அதுக்காக ஐஞ்சறிவுல கூப்பிட்டுறாதம்மா"

"சரிங்க அ... இல்லல்ல கரன்"

"கரனா?"

"நீங்கதானே எனக்குப் புடிச்ச மாதிரி கூப்பிட சொன்னீங்க" அதில் அவள் மனது புரிந்தவன் நயனியின் கைப்பேசியை அவளிடம் கொடுத்துவிட்டு தன் பேசியிலிருந்து அழைத்தவன் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான். அவனிடமிருந்து கைப்பேசியை வாங்கிக் கொண்டு தன் அறைக்கு வந்த நயனிக்கு பழைய நினைவுகள் ஒன்றன் பின் ஒன்றாக வரத் தொடங்கின. அதே நேரம் கெஸ்ட்ஹவுஸில் தன் மனதுடனே போராடிக் கொண்டிருந்தவனின் நினைவுகளும் அந்த நாட்களுக்கே திரும்பியது.


வளரும்.....

Please share your comments here👇

 

Aara dilfar

Member
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.

நிலவு -26

பாடசாலை வளாகமே விளையாட்டுப் போட்டிக்காக விழாக் கோலம் பூண்டிருக்க அந்தந்த இல்லங்களுக்கான நிறங்களுடன் இல்லங்கள் அழகாக அமைக்கப்படிருந்தது. எங்கும் வண்ண மலர்களாய் மாணவர்கள் கூட்டம் பார்வையாளர்களால் மைதானமே நிரம்பி வழிந்தது. பிரதம அதிதிகள் மேடைக்கு வர விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகத் தொடங்கின.

"ஏய் பேபி இப்படித்தான் மத்தவங்க மேல பந்த அடிப்பீங்களா?" கைகளிலே பந்தைப் போட்டு விளையாடிக் கொண்டே தனக்கு முன்னால் நின்ற அந்தச் சிறுமியிடம் ஆதித்யன் கேட்க அவளோ இரு கைகளையும் கட்டிக் கொண்டு முறைத்தவள்

"அங்கிள் நானொன்னும் பேபியில்ல. அயிம் நயன் என் பந்தைக் கொடுங்க."

"நயன் என்றாலே பேபிதானே"

"நான் பேபியில்ல இது எங்க சைட்டு. இங்கெல்லாம் போயிஸ் வரக் கூடாது நீங்க முதல்ல உங்க சைட்டைப் பார்த்துப் போங்க அங்கிள்'' சொன்ன அந்த குட்டிப் பெண்ணின் பாதரச கண்களும் குண்டு கன்னங்களும் அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது. அவளை ரசித்தவாறே

"அங்கிளா? பேபி எனக்கு அந்தளவு ஒன்னும் வயசாகல்ல அண்ணா என்றே கூப்பிடும்மா"

"நீங்க அண்ணா மாதிரி இல்லையே" அவளுக்குப் பக்கத்திலிருந்த இன்னொரு வாண்டு சொல்ல

"அப்போ யாரு மாதிரி இருக்கான்" ஆதித்யனின் பக்கத்திலிருந்த சங்கர் கேட்க

"அண்ணா என்றால் இவ்வளவுதான் இருப்பாங்க" முதலாமவள் தன் கைகளால் அவள் உயரத்தை விட சற்று உயர்த்திக் காட்ட

"இது என்னடா மச்சான் புதுசா இருக்கு?" சங்கர் ஆதித்தயனைக் கேட்க

"இது ஒன்னும் புதுசில்ல எங்க நிரு அண்ணன் எங்களை விட கொஞ்சம்தான் உயரமா இருக்கான் இவ்வளவு வளர்ந்திருக்கீங்க இது கூட தெரியல்ல" அந்த வாண்டு சங்கரை திட்ட அதில் கடுப்பானவன்

"ஏய் ரவுடி பேபி யாருக்கு என்ன தெரியல்ல உனக்கும் உன் ப்ரண்டுக்கும் தான் எதுவும் தெரியல்ல. அண்ணன் என்றால் குட்டியா இருப்பாங்களாம் ஆக்களப் பாரு." அதில் இருவரும் ஒன்றாக முறைத்துவிட்டு ஆதித்யனின் புறம் திரும்பிய குண்டு கன்னத்தழகி

"நீங்க இவ்வளவு பெரிசா இருக்கீங்க நீங்க எப்படி அண்ணாவாக முடியும் உங்களுக்கு அங்கிள் பிடிக்கல்ல என்றால் அப்போ நாங்க உங்களை மாமா என்று கூப்பிடுறோம். மாமா என் பந்தைக் கொடுத்துட்டு போயிஸ் பக்கம் போங்க" உடனே பிரச்சனைக்கான தீர்வை கண்டு பிடித்த அந்தக் குண்டுக் கன்னங்களை அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது. கூட நின்ற வாண்டையும் தான்.

"அப்போ என்னை என்ன சொல்லிக் கூப்பிடுவீங்க?" கேட்ட சங்கரை எதிர் கேள்வி கேட்டாள் அந்த ரவுடி பேபி.

"உங்களை நாங்க எதுக்கு கூப்பிடனும்"

"பாவம் டி அப்படிச் சொல்லாத அவர மாமா என்று கூப்பிடுவோம் இவரை அங்கிள் என்று கூப்பிட்டுக்குவோம் அப்போதான் நமக்கு மாற மாட்டா சரி மாமா நீங்க இங்க நிக்கக்கூடாது உங்க சைட் போங்க"

"நான் உங்க ஹவுஸோட லீடர் இவன் உதவி லீடர் எல்லாம் தயாரா இருக்கா என்று பார்க்க வந்தேன். என்னைப் போகச் சொல்லுறீங்களே"

"ஓ அப்படியா மாமா சரி எங்களை மன்னிச்சிடுங்க நீங்க உங்க வேலையப் பாருங்க நாங்க போறோம் பாய் மாமா பாய் அங்கிள்" சொன்னவர்கள் அந்த இடத்தை விட்டு நகர எத்தனிக்கையில்

"உங்க பெயரென்ன?" கேட்டதுதான் தாமதம்

"தெரியாதவங்க கிட்ட நாங்க பெயர் சொல்ல மாட்டோம். அதுவும் ஆம்பள புள்ளைங்களுக்கு சொல்லவே மாட்டோம்"

"அப்போ தெரிஞ்சுட்டு சொல்லுங்கோ"

"நாங்க எதுக்கு உங்களைத் தெரிஞ்சிக்கிடனும் அதோட பெயரையும் சொல்ல மாட்டோம்" உறுதியாக நின்ற அந்த இரண்டு சிட்டுகளையும் பார்த்த சங்கரும் ஆதியும் ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரித்துக் கொண்டனர்.

"நீங்க சொல்லவே வேணாம் டேய் மச்சி நான் இந்த வாண்டுக்கு ரவுடி பேபி என்று பெயர் வச்சுட்டேன் அந்த வாண்டுக்கு நீ ஒரு பெயர் வை" சங்கர் நண்பனிடம் கூற சிறிது யோசித்தவன்

"உனக்கு பேபி சொன்னாக் கோபம் வருதில்ல அதனால இனி அப்படிக் கூப்பிடல்ல. இனிமே நீ என்னோட பப்பு நல்லாயிருக்குல்ல"

"நல்லாவே இல்லை சரி நாங்க உள்ள போறோம் வாடி போகலாம்" என்று அந்த சின்னச் சிட்டுகள் திரும்ப

"ஓய் நீங்க இங்கதான் இருக்கீங்களா உங்க ரெண்டு பேரையும் எவ்வளவு நேரமா தேடிட்டிருக்கேன்." என்ற இனிமையான குரலில் வந்தவளை நிமிர்ந்து பார்த்த ஆதித்யவர்த்தன் அவள் அழகில் மயங்கித்தான் போனான். அவளும் அந்த சிண்டுகளுக்கு பின்னால் நின்றவனை நிமிர்ந்து பார்த்தவள் அப்படியே நின்று விட இருவர் கண்களும் ஒன்றோடொன்று கலந்தது காதலும் மலர்ந்தது.

"ஏன் அக்கா அந்த மாமாவப் பார்த்துட்டு நிக்குற அவங்கதான் நம்ம ஹவுஸ் லீடராம்" என்றதும் அவளிடம் விளையாட்டுப் போட்டி சம்பந்தமான கேள்விகள் கேட்க அவளும் அவனுக்கான பதிலைக் கொடுத்தவள் அவ்விடம் விட்டு நகர்ந்தாள். விளையாட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது ஆதித்யனும் ஓட்டப்போட்டியில் முதல் பரிசை வென்றான்.ஆனால் அவனுக்கு வென்ற மகிழ்ச்சியை விட அந்த மஞ்சள் சுடிதாரில் தன் முன்னே தேவதை போல் வந்தவளைப் பார்த்ததுதான் முழு மகிழ்ச்சியாக இருந்தது ஆதித்யனுக்கு.
அன்றைய நாள் முழுக்க அவன் கண்களுக்கு அவள் மட்டுமே தெரிந்தாள். எல்லோரும் போட்டியில் பங்கு பற்றி களைத்திருக்க தன் இல்லத்தின் உறுப்பினர்களுக்கு தொண்டைக்கு இதமாக குளிர்பானம் வாங்கிக் கொடுத்தவன் அவளுக்கும் கொடுக்க அவளோ அதை வாங்க மறுத்தாள் அதில் கோபம் கொண்டவன் சற்று அதட்டலாகவே 'பிடி' என்று சத்தமிட அடுத்த கணம் அவன் கையிலிருந்த குளிர்பானம் அவள் கைக்கு மாறியது. விளையாட்டுப் போட்டி முடிந்து எல்லோரும் கலையத் தொடங்க அவனிடம் கண்களால் விடை பெற்றாள் அந்த மஞ்சள் அழகி. அன்றிலிருந்து அந்த விழிகளுக்கு அவன் அடிமையானான். அவளைப் பற்றி மொத்த விபரங்களையும் சேகரித்தவன் நிதமும் அவள் நினைப்பாகவே இருந்தான் அவளும் அப்படியே. இருவரும் ஒருவரை ஒருவர் பார்ப்பதற்காகவே பாடசாலைக்கு செல்லலாயினர்.

இன்னும் மூன்று மாதத்தில் உயர்தரப் பரீட்சை நடைபெறயிருப்பதால் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு படிப்பு விடுமுறை இரு வாரத்தில் வழங்கப்பட இருந்தது அன்றுடன் ஆதித்யனின் பள்ளி வாழ்க்கை முற்றுப் பெற்றுவிடும் அதற்குள் எப்படியாவது அவளிடம் தன் காதலை சொல்ல நினைத்தவன் அதைப் பிற்போடாமல் அன்றே சொல்லிவிட நினைத்தான். இடைவேளையின் போது அவளைத் தேடி வந்தவன்

"ஒரு நிமிஷம் உங்களோட கொஞ்சம் கதைக்கனும் நித்திலா"

"உங்களுக்கு என் பெயர் எப்படித் தெரியும் என்ன விசயம்?"

"உங்க பெயர் மட்டுமில்ல உங்களோட ஜாதகமே எனக்குத் தெரியும். சொல்லட்டா உங்க பெயர் நித்திலா. உயிர்த்தோழி நிர்மலா அவங்களுக்கு நீங்க நித்தி உங்களுக்கு அவங்க நிம்மி உங்களுக்கு ஒரு அக்கா பெயர் நிவேதா வீட்டுக்குத் தெரியாம தனக்குப் புடிச்சவன கல்யாணம் கட்டிக்கிட்டாங்க ஒரு அண்ணா நவநீதன் நீங்கதான் கடைசி உங்களுக்கு புக்ஸ் என்றால் ரொம்பப்பிடிக்கும். நல்லா படிக்கிற ஆளு கிளாஸ்லேயும் ஃபெஸ்ட் மார்க்ஸ்தான். அதோட எனக்கு நீங்க மூனு வயசு சின்னவ. என்ன இந்த விபரம் போதுமா இல்ல இன்னும் கொஞ்சம் வேணுமா?" வைத்த கண் வாங்காமல் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து சிரித்தவன்

"சரி விசயத்துக்கு வாரேன் இன்னும் இரண்டு கிழமையில நான் ஸ்கூல்ல விட்டுப் போயிடுவேன். அதனால என் மனசுல இருக்குறத இப்பவே சொல்லனுமென்று முடிவு பண்ணிட்டேன். எப்போ உன்ன முதல் முதல்ல பார்த்தேனோ அப்பவே முடிவு பண்ணிட்டேன் நீதான் எல்லாமே என்று. எனக்கு உன்னைப் புடிச்சிருக்கு உனக்கு என்னைப் புடிச்சிருக்கா. இப்பவே சொல்லனுமென்று அவசியமில்ல நிதானமா யோசிச்சு எனக்கு உன் முடிவ சொல்லு ஆனால் நல்ல முடிவா சொல்லிடு." அவள் எதுவும் பேசாது சென்றுவிட்டாள் ஆனால் இரண்டுநாள் கழித்து வந்தவள் அவனைப் பார்த்த நொடியிலிருந்து தானும் காதல் கொண்டதாய் கூறி அவன் காதலை ஏற்றுக் கொண்டாள். இருவரும் காதல் வானில் பறக்கத் தொடங்கினர். அவனின் குடும்பம் மொத்தமாக கொழும்பில் சென்று செட்டில் ஆகிவிட அவனின் பரீட்சை முடிந்த பிறகும் அவளுக்காகவே கொழும்புக்குப் போகாமல் தன் பாட்டி தனலட்சுமியுடன் திருகோணமலையிலே வசித்திருந்தான் ஆதித்யன்.

காலங்கள் கடந்தன இவர்கள் காதலும் வளர்ந்தது. அவளுக்கு அவன் ஆதுவாக அவனுக்கு அவள் நிதுவானாள். ஒருவரின்றி மற்றையவர் இல்லை என்ற அளவு காதல் செய்தனர். அவளைப் பார்க்காமல் இருக்க முடியாதவன் தினமும் அவள் ஸ்கூல் தொடங்கும் போதும் முடியும் போதும் அவளைக் கண்ணார கண்டு மனசார ரசிக்கத் தொடங்கினான். அப்போதைக்கு இருவருக்கும் பார்வை மட்டுமே போதுமாக இருந்தது. ஆனால்
தன் காதலால் அவள் படிப்பு பாழாகிவிடக் கூடாது என்பதில் ஆதித்யன் உறுதியாக இருந்தான். நித்திலாவுடன் சேர்த்து இந்த சின்னச் சிட்டுகளுடனான நட்பும் வளர்ந்தது அதிலும் பப்புவுக்கும் ஆதிக்குமிடையே ஒரு ஆழ்ந்த உறவு ஏற்படத் தொடங்கியது.

"ஹாய் என் பப்புக் குட்டிக்கு ஒன்னு கொண்டு வந்திருக்கேன்" என்று அவளிடம் சாக்லேட்டை நீட்ட

"தைங்க்ஸ் ஆத்து மாமா" என்றதுதான் தாமதம்

"ஏய் பப்பு அவர அப்படிக்கக் கூப்பிடாதே அது எனக்கு மட்டும்தான் சொந்தமான பெயர் என்ன விளங்கிட்டா" அவ்வளவு நாளும் அமைதியே உருவான தன் நித்திக்கா கோபம் கொண்டதைக் கண்டதும் கவலை கொண்டவளாக

"சொரி நித்திக்கா நீங்களே அப்படி சொல்லிக்கோங்க நான் இனி சொல்லவே மாட்டேன். சரி தைங்க்ஸ் அச்சு மாமா"

"என்னது.... அச்சு மாமாவா?" சங்கர் இழுக்க

"ஓம் எங்களுக்கு எவ்வளவு சாக்லேட்ஸ் டோல்ஸ் பிஸ்கட்ஸ் பென்சில்ஸ் எல்லாம் கொடுத்திருக்காங்க அப்போ இவர் அச்சா தானா அதோட ஆத்து தான் இவர் பேரு சோ இரண்டும் வார மாதிரி அச்சு மாமா சரிதானே" அவள் தனக்கு வைத்த பெயருக்கான விளக்கத்தை சொல்ல அப்படியே அவளை தூக்கி சுற்றியவன் அவனுக்குப் பிடித்த அந்த குண்டுக் கன்னத்தை வலிக்காது கிள்ளிவிட்டான்.

நித்திலாவும் தன் உயர்தரப் பரீட்சையை நல்ல படியாக எழுதிவிட்டு பெறுபேறுகளுக்காக காத்திருந்தாள். பல்கலைக்கழகம் செல்வதே அவளின் விருப்பம். நித்தியின் பாடசாலைக்காலம் முடிந்ததும் அவளை காணாமல் இருக்க முடியாத ஆதித்யன் நித்திலாவை அந்த ஊர் கோயிலின் பின்னுள்ள குளத்திலே சந்திக்கத் தொடங்கினான்.

"எங்க போறதுக்கு நித்தி இப்படி சீவி சிங்காரிச்சுட்டு் வந்திருக்க"

"அது வந்தும்மா கோயிலுக்கு நிம்மி கூடத்தான் போறேன்"

"இப்போல்லாம் அடிக்கடி வெளிய போக ஆரம்பிச்சிட்ட சரியில்ல பார்த்து நடந்துக்க உங்கக்கா மாதிரி ஏதாவது தப்புத்தண்டா பண்ணின தொலச்சிடுவேன்"

"அம்மா அப்படியெல்லாம் ஒன்னுமில்ல நான் கோயிலுக்குத்தான் போறேன் வேணுமென்றால் தங்கச்சியையும் கூடக் கூட்டிட்டுப் போறேன்" தாயின் வார்த்தைகளில் தடதடத்த இதயத்தை அமைதிப்படுத்தியவளாய் தனக்குத் துணையாக தன் குட்டித்தங்கை ரவுடி பேபியை அழைத்து வர நிர்மலா தனக்குத் துணையாக தன் தங்கை பப்புவை அழைத்து கொண்டு கோயிலுக்குச் சென்றனர். சங்கருடன் வரும் ஆதித்யன் கோயிலுக்குள் சென்றதும் முதலில் தன் அழகு பப்புவுடன் இரண்டு வார்த்தையாவது பேசிவிட்டுத்தான் நித்திலாவைத் திரும்பிப் பார்ப்பது வழக்கம் அன்றும் அவன் தன் பப்புவுக்கும் ரவுடி பேபிக்கும் சாக்லேட்டையும் பிஸ்கட்களையும் கொடுக்க

"தைங்க்ஸ் அச்சு மாமா" என்று இருவரும் வாங்கிக் கொண்டனர் அதில் சிரித்தவாறே நித்திலாவின் பக்கம் திரும்ப முகமெங்கும் கவலையாக நின்றவளைக் கண்டதும் சங்கரை மற்றையவர்களுடன் விட்டு விட்டு நித்திலாவை மட்டும் தன்னுடன் அழைத்துச் சென்றான். தனியாக வந்த மறுநிமிடம் ஆதித்யனை ஒரு கதறலுடன் அணைத்திருந்தாள் பெண். உயிருக்குயிராய் காதலித்த போதும் அவளை இதுவரை அவன் விரல் கூட தீண்டியதில்லை. ஏன் பார்வை கூட தவறாகவில்லை. அதனால் அவள் அணைத்ததும் அதை எதிர் பாராதவன் தடுமாறி பின் தன்னை சுதாகரித்துக் கொண்டு அவளை அமைதிப் படுத்தியவன் என்னவெனக் கேட்க வரும் போது தாய் கூறிய விடயங்களை கூறிவிட்டு

"ஆது எனக்கென்னம்மோ அம்மாவுக்கு சந்தேகம் வந்திடுச்சோ என்று தோணுது. ஆது எங்கக்கா வீட்ட விட்டுப் போனதில அம்மா கடும் வைலன்ட் ஆகிட்டாங்க முக்கியமா என்னோட விசயத்துல எனக்கென்னமோ பயமாயிருக்கு அக்கா மாதிரி வீட்ட விட்டுப் போகெல்லாம் கூப்பிட மாட்டீங்களே" அவன் எதுவும் சொல்லாது

"அப்படி ஒரு நில நம்ம வாழ்க்கையில வரும் என்று எனக்குத் தோனல்லம்மா" என்று சொன்னதுன் பின்னே அவள் நிதானமானாள் அதன் பிறகே தான் நின்ற நிலை புரிந்து விலகியவள். வெட்கத்துடன் அவனிடம் மன்னிப்புக் கேட்டாள் இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு புறப்பட்டனர்.
இவர்களின் இப்படியான இந்த சந்திப்பு வாரம் ஒருமுறை நடக்கத் தொடங்கியது அன்று நித்துலா சொன்னதை அவன் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவள் சொன்னது போல் அவள் வீட்டிலுள்ளவர்களுக்கு உறுதியே ஆகிவிட்டது. அதனால் அவர்கள் காதலுக்கு அவள் வீட்டலிருந்து தான் முதல் எதிர்ப்புக் கிளம்பியது. அவளை வீட்டிலே அடைத்து வைத்தனர் ஆதித்யனும் அவளைப் பார்க்க பல வழிகளில் முயற்சிக்க அது முடியாமல் தோற்றுத் தான் போனான்.

வளரும்.....

கருத்துக்களுக்கு👇👇❤

 

Aara dilfar

Member
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.

நிலவு - 27


ஒரு நாள் ராகவன் தன் தாயுடன் கொழும்பிலிருந்து ஒரு வேலையாக ஊருக்கு வந்திருந்தார். அவர் புறப்படும் நாளன்று ஆதித்யனை தனியாக அழைத்தவர்

"ஆதி உன்னோட ஒரு விசயம் சொல்லப் போறேன் குறிக்கிடாம கேளுப்பா. இந்த வயசுல காதல் ஆசை எல்லாம் வாரது சகஜம்தான் ஆனால் அது ஒரு குடும்பத்தைப் பாதிக்கக் கூடாதுப்பா உன்னால ஒரு குடும்பம் அவமானப்பட்டு நிக்கக் கூடாதுப்பா நமக்கு அந்தப் பொண்ணு வேணாம்ப்பா விட்டுடு அதோட அந்தப் பொண்ணோட அம்மா பேச்சும் சரியில்ல அவங்க நம்ம குடும்பத்துக்கு ஒத்துவரமாட்டாங்கடா வேண்டாம் விட்டுடு"
அவன் அமைதியாக நிற்க அவன் முகத்திலோ 'இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும் என்ற' கேள்வி பொதிந்திருந்தது.

"ஆதி அந்தப் பொண்ணோட மாமாவும் அண்ணனும் என்னை வந்து சந்திச்சாங்க. உன்னையும் நம்ம குடும்பத்தையும் பத்தி எதுவுமே தெரியாம எவ்வளவுக்கெவ்வளவு தரக் குறைவா கதைக்க ஏலுமோ அந்தளவுக்கு கதைசிட்டுப் போனாங்க. என்னால சத்தியமா அவங்களோடெல்லாம் சம்மந்தம் வச்சுக்க முடியாதுப்பா."

"அப்பா நிது ரொம்ப நல்லவப்பா" முதன்முதலில் வாயைத் திறந்த மைந்தனின் தோள்களில் தட்டியவர்

"ஆனால் அது முளச்ச இடம் சேராயிருக்குப்பா. தாமரை புடிக்கும் என்றதுக்காக சேத்துல இறங்குவாயா அப்போ நாமளும் சேர்ந்து சேராகிடுவோம். நான் சொல்லுறத சொல்லிட்டேன் பார்த்து நடந்துக்க. அதுசரி உனக்கு கொழும்பு வார ஐடியா இல்லையா இங்க ஹோட்டல் கட்டிட்டிருக்க சங்கருகிட்ட கேட்டப்போ இங்கேயே செட்டில் ஆகுற ஐடியாலதான் இருக்கான் என்று சொன்னானே. ஹோட்டல்ல பெயர் கூட 'ஹோட்டல் நித்திலம்' என்று வைக்க சொன்னயாமே அவளோட பெயரா என்ன எல்லாம் அந்தப் பொண்ணுக்காகத் தான் இல்லையா? வேண்டாமடா நீ முதல்ல வெளிக்கிட்டு என்னோடயே கொழும்புக்குப் போகலாம் வா"

"இல்லப்பா ஹோட்டல் வேலை இன்னும் கொஞ்ச நாள்ல முடியப்போகுது பாதியில விட்டுட்டு வர முடியாது நீங்க போங்க எல்லாத்தையும் மொத்தமா முடிச்சிட்டு நானே வரேன்" அவன் பேச்சின் தோரணை சரியால்லாததை உணர்ந்த ராகவன்

"தப்பா எதுவும் பண்ணிடாத. அவ்வளவு தான் சொல்லுவேன்" என்றவர் அன்று மாலையே புறப்பட்டு போய்விட்டார் அவர் தலை மறைந்த அடுத்த நொடி அவன் நித்திலாவின் வீட்டு ஹோலில் நின்றான் சங்கரும் உடன் வந்திருந்தான்.

"ஏய் நிது முதல்ல ரூம விட்டு வெளிய வா உன் ஆது வந்துட்டேன். யாருக்கும் பயப்படாதே வாம்மா" அவனின் குரல் கேட்டு பாய்ந்து வந்தவள் கைகளை இறுக்கிப் பிடித்து அவள் அன்னை தடுத்து நிறுத்த கண்களில் நீர் வடிய கெஞ்சிக் கொண்டிருந்தாள் பெண்

"ஏய் யார் வீட்டுக்கு வந்து யாரக் கூப்பிடுற போடா வெளியே அவ வரமாட்டா" அவள் அண்ணன் நவநீதன் கத்த

"கொஞ்சம் மரியாதையாப் பேசுங்க" சங்கர் கோபத்தை அடக்கியவனாய் அமைதியாகச் சொல்ல

"என்னங்கடா மரியாதை வேண்டிக் கிடக்கு நாய்ங்களா என்னடா படிச்சிட்டிருந்த பொண்ணோட மனச கலச்சு உன் காதல் வலையில விழ வச்சிருக்கயா நாங்க சம்மதிக்காட்டி அவளை கூட்டிட்டுப் போகப் போறயா போடா வெளிய இல்ல உன்னை வெட்டி வீசிடுவேன்." இது அவள் மாமா வாகீசன் அவ்வளவு உதாசீனத்தையும் தன் நிதுக்காக தாங்க சங்கரோ தன் நண்பனுக்காக தாங்கிக் கொண்டான்.

"நீங்க வெட்டுற வர கழுத்தக் கொடுத்துட்டு நிக்க நான் என்ன பைத்தியமா இங்கப்பாருங்க அவ என்னோட நிது என்னால அவள விட்டுட்டுப் போக முடியாது. போக சொல்லுற உரிமை உங்க யாருக்கும் கிடையாது. நான் அவள மகாராணி மாதிரி வச்சுப் பார்த்துப்பேன் தயவு செஞ்சு என் நிதுவ எனக்கு குடுத்திடுங்கோ ப்ளீஸ் எங்கள பிரச்சிடாதீங்க." அவன் கெஞ்ச அவளோ அழுதவாறே 'வேண்டாம் யாரிடமும் கெஞ்ச வேண்டாம்' என தலையாட்டிக் கொண்டிருந்தாள். இருதரப்பிற்குமிடையே வாய் வார்த்தையாகி கடைசியில் கோபத்தின் உச்சிக்கு சென்ற ஆதித்யன் நவநீதனையும் வாகீசனையும் அறைந்துவிட்டான். அதில் அனைவரும் அதிர்ந்து நிற்க நித்தியாவின் தாய் ஜெயவாணி தன் உரத்த குரலில் கத்த ஆரம்பித்தார்.

"இதுக்குத்தான் சொன்னேன் கேட்டயாடி மரியாதை தெரியாதவனுங்க. பார்த்தாயா இப்போ கண் குளிர பார்த்தாயா நீ பார்த்து வச்சிருக்கிற கேடு கெட்டவன. உனக்கு கல்யாணம் வேணும் புருஷன் வேணுமென்று சொன்னா பாழாப் போன உன்னப் பெத்த எங்கிட்ட சொல்லிருக்கனும் அப்பவே உன் படிப்ப நிறுத்திட்டு ஒருவனப் பார்த்து கட்டி வச்சிருப்பேன் அத விட்டுட்டு எவன் பின்னாடியோ சுத்திட்டிருக்க உடம்பு என்ன புருஷனுக்கு அலையுதா?" ஒரு தாய்ககான தகுதியே இல்லாத அந்தப் பேய் கத்த அதில் கூசியவள்

"வேண்டாம் இப்படிக் கதைக்க வேண்டாம்" எனக் கதற 'தாமரைக்காக சேத்துல இறங்குவாயா?' என்ற தன் தந்தையின் குரல் அவன் காதுக்குள் ஒலித்தது. அழுது கொண்டிருந்தவள் ஒரு முடிவெடுத்தவளாய் கண்களைத் துடைத்துக் கொண்டு

"ஆது போயிடுங்க ஆது என்னை விட்டுப் போயிடுங்க எனக்கு உங்க மேல காதலே இல்லை தயவு செஞ்சு இங்க இருந்து இப்பவே இந்த நிமிசமே போயிடுங்க எனக்கு நீங்க வேண்டாம்." அவள் உள்ளமோ 'இந்த சாக்கடையில நிக்காதீங்க போயிடுங்க ஆது' என்று கதறிக் கொண்டிருந்தது.

"நிது நீ ஆத்திரத்துல முடிவெடுக்குற இவங்க எல்லோரும் எனக்கு கதைக்குறத தாங்க முடியாம முடிவெடுக்குற" கண்ணில் நீர் வடிய சரியாக தன் மனதிலுள்ளதைக் கூறியவனை நிமிர்ந்து பார்த்தவள்

"இல்லை ஆதித்யன் நீங்க எனக்கு வேண்டாம் போயிடுங்க இங்க இனிமேல் வராதீங்க"

"அதான் அவளே சொல்லிட்டா இல்ல எங்களுக்குத்தான் உரிமையில்ல என்று சொன்ன அவளுக்கிருக்கில்ல போடா வெளியே" என்று அவனைப் பிடித்து நவநீதன் தள்ளி விட சங்கர் அவனைப் பிடித்துக் கொள்ள தன்னை சுதாகரித்து நிமிர்ந்தவன்

"நான் போயிடுறேன் அதுக்கு முன்ன எனக்கு நிதுகிட்ட கொஞ்சம் கதைக்கனும்" என்றவன் மற்றையவர்கள் தடுக்கத் தடுக்க அவளை நெருங்கினான்.

"என் கண்ணப் பார்த்து சொல்லு இப்ப நீ சொன்னதெல்லாம் உன் மனசில இருந்துதான் சொன்ன என்று என் கண்ணப் பார்த்து சொல்லு" அவனை நிமிர்ந்து நோக்கியவள் முடியாமல் தலை குனிந்தவாறே அவனுக்கு பதிலளிக்க அவன் மீண்டும் கண் பார்த்து பேசச் சொல்ல தன்னை திடப்படுத்தியவள் அவன் கணகளை நேராகப் பார்த்து

"ஓம் ஆதி நான் சொன்னதெல்லாம் என் மனசுல இருந்து சொன்னதுதான் தயவு செஞ்சு இங்கயிருந்து போயிடுங்க"

"அப்போ நம்ம காதல்"

"செத்திடுச்சு" என்றவள் தன் அறைக்குள் சென்று தாளிட்டாள்

"அதான் உரிமையுள்ளவளே சொல்லிட்டா போடா வெளிய" அதற்கு மேல் ஒரு நொடியும் அந்த சாக்கடைக்குள் அவன் நிற்கவில்லை. இதைக் கேள்விப்பட்ட நிர்மலா பப்புவையும் அழைத்துக் கொண்டு ஆதித்யனை சந்திக்க வந்தாள் நடந்ததை சங்கர் கூற வருத்தப்பட்டவள்

"நித்திய என்னோட கூட கதைக்க விட மாட்டேங்குறாங்க உங்க ரவுடி பேபியையும் என்னமோ சொல்லி மிரட்டியிருக்காங்க போல அவளும் வாயே தொறக்க மாட்டேங்குறா. பப்புவும் சொன்னா அவ கூடயும் சரியா கதைக்க மாட்டேங்குறா என்று. ஆதிண்ணா நீங்க கவலைப்படாதீங்க அவ மனசுல உங்களைத் தவிர வேற யாரும் வர முடியாது. அவளே இத உணர்ந்து வருவா நீங்க வருத்தப்படாதீங்க" நிர்மலா அவனுக்கு ஆறுதல் சொல்ல கேட்டுக் கொண்டிருந்த பப்புவிற்கு அப்போது தான் தன் அச்சு மாமா வருத்தமாக இருக்கிறார் என்று விளங்கியது. உடனே அவனிடம் சென்றவள் கலங்கிய அவன் கண்களை துடைத்து விட்டு

"அச்சு மாமா உங்களுக்கு அந்த நித்திக்கா இல்லாட்டி என்ன உங்க பப்பு எப்பவும் கூடவே இருப்பேன் அவ உங்களைக் கட்டிக்காட்டி பரவாயில்ல நான் பெருத்து வந்து உங்கள கட்டக்கிறேன் நீங்க குழறாதீங்க." என்றவள் அவன் கன்னத்தில் முத்தமிட அவன் மேல் அவ்வளவு அன்பு வைத்திருந்த அவன் பப்புவை அள்ளி அணைத்துக் கொண்டவன் அழுதுவிட்டான். நித்திலாவை நினைத்து மறுகிய ஆதித்யனின் மனநிலையை மாற்ற சங்கர் அவனை கொழும்பிற்கு அழைத்துச் சென்றான் தன் குடும்பத்துடன் இருக்கும் போது அவளை மறக்கலாம் என்று நினைத்தான்.

காலம் யாருக்காகவும் காத்திருக்கவில்லை அதுபாட்டுக்கு சென்று கொண்டிருந்தது அவனால் அவன் நிதுவை மறக்க முடியவில்லை. தன்னை வேண்டாம் என்றவளையே நினைத்துக் கொண்டிருக்கிறோமே என்று தன் மேலே கோபம் கொண்டவன் தன்னைக் காயப்படுத்தத் தொடங்கினான். இதற்கு ஒரு முடிவை எடுத்தாக வேண்டும் என்பதற்காக மீண்டும் தன் நிதுவைத் தேடி திருகோணமலைக்கு வந்தவன் நேராக அவளுடைய பல்கலைக் கழகத்திற்கே சென்று அவளுக்கு செய்தி அனுப்பிவிட்டுக் காத்திருந்தான். ஆனால் அவளுக்காக காத்திருந்தவனுக்கோ காத்திருந்தது பெரிய அதிர்ச்சி.

"என்ன விஷயம்?" வேற்றாளிடம் பேசுபவளைப் போல தன் முன் வந்து நின்று கேட்ட தன் நிதுவை பார்த்தவனுக்கு ஏனோ அவள் முற்று முழுதாக அந்நியமாய்த் தோன்றினாள்.

"நிது என்னால உன்னை மறக்க முடியல்ல ப்ளீஸ் நிது"

"அதுக்கு நான் என்ன பண்ணணும்" வெட்டு ஒன்று துண்டுரெண்டாக பதில் வந்தது.

"நம்ம காதல் சாகக் கூடாது உங்க வீட்டுல ஒத்துக்காட்டியும் பரவாயில்ல நாம எங்காயாவது போய் சந்தோசமா வாழ்வோம்"

"சந்தோசமாவா ஓ..."

"சரி நிது இப்பவே என்கூட வா நாம ஒன்னா வாழலாம் உன்னைக் கூட்டிட்டுப் போற எண்ணத்துலதான் கொழும்புல இருந்து வந்தேன் அதுவும் ஊர் பக்கம் போகாம இங்கே வந்தேன் வாம்மா போயிடலாம் நீ இல்லாம என்னால முடியில்லடி ப்ளீஸ்"

"அதெல்லாம் தப்பு என்னால என் வீட்ட அவமானப்படுத்திட்டு உங்க கூட வர முடியாது உங்க மேல எனக்கு காதலே இல்லை நான் ஏன் உங்க கூட வரணும் ஒரு வருஷத்துக்கு முன்னமே சொல்லிட்டேன் நீங்க வேண்டாம் என்று திரும்ப திரும்ப கூப்பிடுறீங்க. ஒரு முழு வருஷம் உங்களையும் உங்க நினைவுகளையும் மறந்து என் புது வாழ்க்கைய ஆரம்பிக்க போதுமா இருந்தது. நான் உங்கள மிஸ் பண்ணவே இல்லை ஏன்னா நீங்க இப்போ என் மனசுல இல்லவே இல்லை. தெரியாமத்தான் கேட்கிறேன். என்னைக் கூட்டிட்டுப் போய் எப்படி பார்த்துப்பீங்க தொழிலிருக்கா இல்லை ஒழுங்கான படிப்புத்தான் இருக்கா ஏ/ எல் எல்லாம் ஒரு தகுதியா யூனிவர்ஸிட்டி முடிஞ்சா நான் ஒரு டிகரி ஹோல்டர் ஆனால் நீங்க என் பின்னாடி சுத்துறதுல உங்க படிப்ப விட்டுட்டீங்க. உங்களுக்கான எந்தத் தகுதியும் இல்ல உங்க காசு கூட உங்களுக்கு சொந்தமில்ல இப்போ நான் உங்கள நம்பி வாரேன் என்றே வச்சுக்குவோம் எங்க வீட்டப் போல உங்க வீட்டுலையும் எதுத்தா என்ன பண்ணுறது அதவிட உங்க சொத்துக்கள தராம வெளிய அனுப்பிட்டா உங்களுக்கு என்ன இருக்குன்னு உங்க பின்னாடி வரச் சொல்லுறீங்க என்னால முடியாது உங்கள நம்பி வர என்னால முடியாது முதல்ல ஆம்பளையா உங்க தகுதிய வளர்த்துக்கப் பாருங்க அதுக்கு பிறகு பொம்பள தேடி அலையலாம்."

"ஹேய் என்னடி சொன்ன ச்சீ என்ன பொம்பள நீ" அடிக்க கை ஓங்கியவன் கைகளை சங்கர் பிடித்துக் கொள்ள உதறியவன் பக்கத்திலிருந்த சுவற்றில் கைகளை முட்டிக் கொண்டான்.

"இதெல்லாம் தேவையே இல்ல தகுதியும் உங்க சொந்த உழைப்புல சேர்ர பணமுமிருந்தா பொம்பளைங்க உங்களைத் தேடி வருவாங்க. இனியாவது இங்க டைம்ம வேஸ்ட் பண்ணாம தகுதியையும் காசையும் சேர்த்துக்கிற வழியப் பாருங்க இதுக்கு மேல என் பின்னாடி வந்தீங்க செருப்புப் பிஞ்சிடும்"
சேற்றில் முளைத்தது இறுதியில் சேற்றுடனே கலந்துவிடும் என்பதை அன்றுதான் அவன் புரிந்து கொண்டான். அவள் அங்கிருந்து செல்ல அதுவே நித்திலாவை அவன் கடைசியாகப் பார்த்தது. அத்துடன் அந்த ஊருக்கு முழுக்குப் போட்டவன் தன் திருமணத்தின் போதே மீண்டும் வந்தான்.அதன் பிறகு தன் தகுதிகளை வளர்த்துக் கொண்டவன் அசுர வேகத்தில் உழைக்கத் தொடங்கினான். இளந் தொழிலதிபருமானான்.

பழைய நினைவுகளில ஆழ்ந்திருந்த ஆதியும் நயனியும் விடியலின் போதே கண்ணசந்தனர்.

மறுநாள் காலையில் வீடு வந்த ஆதித்யனைக் கண்டதும் 'அச்சுமாமா நான்தான் உங்க பப்பு' என்று சொல்லி அவன் ஆச்சரியப்படுவதையும் அவன் முகம் சந்தோசத்தில் மலர்வதையும் காண நினைத்தவள் அவன் பின்னோடு செல்ல அவனோ நயனியை திரும்பிக் கூட பார்க்கவில்லை அன்று மட்டுமல்ல அதைத் தொடர்ந்து வந்த நாட்களிலும் அப்படியே அதையும் தாண்டி அவள் அவனுடன் பேசப்போனால் எரிந்து விழ ஆரம்பித்தான் அதோடு சேர்த்து அவளைக் காயப்படுத்துமளவுக்குப் பேசினான்.

அதில் வருந்தியவளுள் பல குழப்பங்கள் எழுந்தன தான் அடுத்து என்ன செய்வதென்றும் அவளுக்குப் புரியவில்லை. ஆனால் தன் கணவன் நித்திலா அக்காவை மறக்க முடியாமல் தவிக்கிறார் என்ற ஒரு விசயம் மட்டும் உறுதியாக தெரிந்தது. சிந்தித்துக் கொண்டிருந்தவளுக்கு தான் அடுத்து என்ன முடிவெடுக்க வேண்டும் என்று விளங்கியது. நன்றாக யோசித்து உறுதியும் இறுதியுமாக முடிவெடித்தவள் தாரணியிடம் தன் திட்டத்தைக் கூறி அதைச் செயற்படுத்துவதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தாள்.

வளரும்.....

Please share your comments here

 

Aara dilfar

Member
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.

நிலவு - 28



"ஆதி ஆதி" பட்டமாக அழைத்து கொண்டு அலுவலகத்தில் ஆதித்யனுடைய கேபினுக்கு வந்தான் சங்கர்

"என்னடா மச்சான்"

"டேய் நீ நயனிக்கிட்ட என்ன சொன்ன அவ தப்புத்தப்பா முடிவுடுத்திட்டிருக்கா"

"என்னடா சொல்லுற நான் எதுவும் சொல்லல்லயே என்ன தப்பு என்ன முடிவு?" புரியாமல் நண்பனை நோக்க

"மச்சான் அவ உன்னோட வாழ்க்கைய விட்டுப் போக முடிவெடுத்துட்டாடா"

"என்ன சொல்லுற அவளாவது போறதாவது அதுக்கு வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பே இல்ல நீதான் ஏதோ தப்பா விளங்கியிருக்க." அவன் கூலாகக் கூற

"உனக்கு எல்லாம் விளையாட்டுத்தான் அவ போன பிறகாவது அதோட சீரியஸ் உனக்கு விளங்குமா?"

"அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காதுடா அது சரி இந்த விஷயம் எப்படி உனக்குத் தெரியும்?"

"அது அவ தாரணிகிட்ட கதைச்சிருக்காடா அவளுக்கும் என்ன செய்யுற என்று தெரியாமல்தான் எனக்கு கோள் பண்ணிருந்தா. நீ நித்திலாவ பார்த்ததுல இருந்து அவளோட கதைக்கவே இல்லையாமே மனசு நோகுற மாதிரி வேற கதைச்சிருக்க அது வேற அவளை ரொம்ப பாதிச்சிருக்கு. நீ நித்திலாவ மறக்க முடியாமத்தான் இதெல்லாம் பண்ணுற என்றுதான் இந்த முடிவு. அதுவும் எப்படி நித்திலா கூட உன் வாழ்க்கைய நீ வாழுறதுக்காக உன்ன விட்டுப் போக முடிவெடுத்துட்டா"

"அவ என்ன லூசா ஆனால் அவளுக்கு எப்படி நித்திலாட விசயம் தெரியும் நீ சொன்னயா?"

"நான் ஏன்டா அவகிட்ட சொல்லுறேன்"

"ஆனால் அன்றைக்கு அவ நித்திலாவ நல்லா தெரிஞ்ச மாதிரித்தான் கதைச்சுட்டிருந்தா அப்போ இந்த விஷயம் தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்குத்தான். நான் நித்திலா கூட வாழ என்னை விட்டுப் போறாளாமா சிரிக்கத்தான் வேணும் இவளோட அறிவுக்கு இன்னொரு விஷயம் நித்திலா கூட அவ்வளவு நெருக்கமா கதைச்சிட்டிருந்தவளுக்கு அவ ஏற்கனவே கல்யாணம் கட்டின விஷயம் தெரயாதாமா? அதோட புள்ளையும் இருக்குப் போல அன்றைக்கு அவ கையில கண்டேன் பார்த்த உடனே அது அவ புள்ள என்று எனக்கு விளங்கிட்டு கூட கதச்சிட்டிருந்தவளுக்கு தெரியாதா?"

"அவளுக்கு எல்லாம் தெரியும் உனக்குத்தான் எதுவும் தெரியல்ல"

"என்னடா சொல்லுற"

"மச்சான் நித்தி கல்யாணமாகி ஆறு மாசத்துல அதுவும் வயித்தில பிள்ளையோட அவ புருஷனைப் பிரிஞ்சி கிட்டத்தட்ட மூனு வருஷமா தனியாத்தான் வாழுறா அதுவும் ஒரு வருஷமா கொழும்பில்தான்"

"என்னடா சொல்லுற?"

"இதை இப்போ உன்கிட்ட சொல்லலாமா வேண்டாமா என்று தெரியல்ல ஆனால் நயனியோட இந்த முடிவுக்கு இப்ப நான் சொல்லப் போறதுதான் காரணம்." ஆதித்யன் சங்கரின் பேச்சை அமைதியாக கேட்டுக் கொண்டிருக்க அவன் தொடர்ந்தான்.

"ஆதி முதல் தடவை நீ நித்திலாவோட வீட்டுக்குப் போனப்போ நீங்க வேண்டாம் போயிடுங்க என்று நித்தி சொன்னதுக்கு அவங்க வீட்டுல இருக்குறவங்கதான் காரணம் நம்ம தான் அன்றைக்குப் பார்த்தோமே நித்திலாவோட அம்மா அந்த ஜெயா பெத்த மகள் என்று கூட பார்க்காம எப்படி அசிங்கமா கதைச்சா அப்போ அந்த நித்திய என்ன பாடு படுத்திருப்பாங்க. அதுமட்டுமில்ல உன்னை ரொம்ப தரக்குறைவாக் கதைச்சிருக்காங்க அதைத் தாங்க முடியாம அவளாலதான் இந்த அவமானமெல்லாம் அவளோட ஆதுக்கு வருதென்று நினைச்சுத்தான் அவ அன்றைக்கு அப்படிக் கதைச்சா. அதுமட்டுமில்லடா ஒரு வருஷத்துக்குப் பிறகு யூனிவர்ஷிட்டிக்குப் போனப்ப நித்தி உன்னை வெறுப்பேத்துற மாதிரி கதைச்சா இல்லை அதுக்கு என்ன காரணம் என்று தெரியுமா? அக்காவால பாதி மானம் போக தங்கச்சி மிச்ச மானத்தை போக்காட்டப் போறியா என்று அடிச்சி பட்டினி வேற போட்டுட்டிருக்காங்க. அப்ப கூட அவ உன்னை விடமாட்டேன் நான் அவரைத்தான் காதலிப்பேன் கட்டிக்குவேன் என்று சொல்லியிருக்கா ஆனால் அவங்க அவளை அடக்க மிரட்டியிருக்காங்க நித்திலா உன்னைப் பார்த்தாலோ இல்லை கதைச்சாலோ அவங்க குடும்பத்தோட செத்துடுவோம் என்று மிரட்டியிருக்காங்க. ஒரு பொம்பளப் புள்ளைய தன்ட குடும்பமே இப்படி மிரட்டினா பாவம் அவ என்ன செய்வா அதோட விட்டிருந்தாலும் பரவாயில்ல உன்னை என்னவாவது செய்வோம் என்று மிரட்டினப்போதான் அவளால உனக்கு எதுவும் ஆக்ககூடாதுன்னு அவ அந்த முடிவ எடுத்திருக்கா. அதனாலதான் அன்றைக்கு உன்னை ரொம்ப கேவலப்படுத்தி கதைச்சிருக்கா அப்படி கதைச்சான் தான் நீ அவளை வெறுத்து ஒதுக்கி உனக்கான ஒரு நல்ல வாழ்க்கைய தேடிக்குவ என்று நம்பியிருக்கா அதே மாதிரி நீ அவளை வெறுத்து ஒதுக்கி மொத்தமா அவளை விட்டுப் போயிட்ட ஆனால் அவளோட மத்த ஆசை இன்றைக்கு நயனியப் பார்த்து அவதான் உன் பொண்டாட்டி என்று தெரிஞ்சதும் நிறைவேறியிருக்கும். அதுக்குப் பிறகு யூனிவர்ஷிட்டிய முடிச்சவ தனக்கான ஒரு தொழிலைத் தேடிக்கிட்டா வீட்டுல ஒரு டீச்சர் மாப்பிள்ளைய பார்த்து கட்டிவைக்க அவனோ பல பெண்களோட இரவில் போன்லயும் குடும்பம் நடத்திருக்கான் இதை நித்தி அவங்க வீட்டுல சொன்னப்போ யாரும் நம்பல்ல உன்னை மறக்க முடியாமத்தான் இதெல்லாம் செய்யுறா என்று நினச்சிருக்காங்க. அத்தோட அவளும் கன்சிவ் ஆகியிருக்கா அப்போதான் அந்தப் படுபாவி இன்னொருத்தியுடனும் குடும்பம் நடத்திக் கொண்டு இருக்கான் என்று தெரிய வந்திருக்கு. அத்தோட அவனை விட்டு வந்தவ தான் குடும்பத்தவங்களையும் எதிர்த்து இந்த நிமிஷம் வரை அவ மகனோட தனியா வாழ்ந்துட்டிருக்கா மகனோட பெயர் என்ன தெரியுமா? ஆதித்யன் இவ்வளவு நேரமும் சொன்னதவிட இப்போ சொல்லப் போறதுதான் நீ கட்டாயமா தெரிஞ்சுக்க வேண்டியது. நித்திலா வீட்டுல உங்க காதல் விஷயம் தெரிய யார் காரணம் தெரியுமா? உங்க ஆச்சியும் அந்த விக்‌ஷனாவும் தான். நித்தியோட வீட்டுக்கே போய் நீயும் அவளும் காதலிச்சதாவும் நித்திலா தான் உங்க ரெண்டு பேரைப் பிரிச்சதாவும் நீ கிடைக்கல்ல என்றால் தற்கொலை பண்ணிக்கிறதாவும் மிரட்டியிருக்கா அதோட இந்த ஆச்சி நித்திலா உன்னை கல்யாணம் கட்டி வாழ வந்தா சொத்து தராம நடு ரோட்டுல விட்டுவாங்க அந்த வீட்டுல இருக்குறவங்க ரொம்ப மோசமானவங்க நித்திய வாழ விடாம அழிச்சிடுவாங்க என்றும் சொல்லியிருக்காங்க அதுக்குப் பிறகுதான் அவ மாமா அந்த வாகீசனும் அந்த நவநீதனும் உங்கப்பாவ தேடி வந்திருக்காங்க. வாய்க்கு வந்த மாதிரி அப்பாவ அசிங்கப்படுத்தி இருக்காங்க. இதெல்லாம் நித்திலாக்கு அவ கல்யாணத்துக்குப் பிறகுதான் தெரியும். அந்த வேலையத்தான் பாட்டியும் பேத்தியும் நயனிக்கிட்ட காட்டிருக்காங்க" அவன் சொல்லி முடிக்க தலையிலே இடி விழுந்தது போல் அமர்ந்துவிட்டான்.

"இதனாலதான் இந்த உண்மை எல்லாம் தெரிஞ்ச நயனி நீ நடந்துக்கிட்டத வச்சி இன்னும் உன் மனசுல நித்திலாதான் இருக்கா என்று நினக்குறா அதோட தனி மரமா நிக்குற நித்திலாக்கும் அவ இழந்த வாழ்க்கை திரும்பக் கிடைக்கனும் என்று நினைக்குறா அதனாலதான் உன்னை விட்டுப் போக முடிவெடுத்துட்டா இப்போ நீதான் முடிவெடுக்கனும் உன் வாழ்க்கையில இருக்க வேண்டியது எல்லார்ர ஆசிர்வாத்ததோடயும் ஊரறிய உன் கைப்புடிச்ச நயனதாராவா இல்ல உன் மனசுக்குப் புடிச்சி உயிருக்குயிரா காதலிச்ச நித்திலாவா?"

"டேய் இதுல முடிவெடுக்க என்ன இருக்கு நான் நித்திலாவ காதலிச்சது கட்டிக்க நினச்சது எல்லாம் உண்மை தான். ஆனால் அது எல்லாம் என் வாழ்க்கைய விட்டு என்னைக் கடந்து போன விசயம். போன பஸ்ஸுக்கு கை காட்ட நான் தயாராயில்ல நித்திலா என்னோட இறந்த காலம். ஆனால் என் தாரா என் நிகழ்காலம் மட்டுமில்ல என் எதிர்காலம் கூட அவதான். இனிமே என் வாழ்க்கையில இருக்கப் போறது என் தாரா மட்டும்தான் என்னால என் தாராவை யாருக்காகவும் இழக்க முடியாதுடா. என்னம்மோ தெரியல்லடா என் தாரா கூட இருக்கும் போது என் பப்பு கூட இருக்குற மாதிரியே தோனுதுடா." அதில் சங்கர் மர்மமாக புன்னகைக்க

"என்னடா ஒரு மாதிரி சிரிக்குற"

"ஒன்றுமில்லடா உன் மனசு இப்பவாவது உனக்குப் புரிஞ்சதே உடனே வீட்டுக்குப் போ உன் தாராகிட்ட எல்லாத்தையும் சொல்லு பிறகு அவ கொடுக்குற இன்ப அதிர்ச்சிய தாங்க ரெடியாகு என்ன."

"இன்ப அதிர்ச்சியா அது என்னடா?"

"அது ஒன்னுமில்லடா இன்பம் என்று சொல்ல வந்தேன் தங்கு சிலிப்பாகி அதிர்ச்சியும் கூடச் சேர்ந்துடிச்சு. அவ்வளவுதான் வேறொன்றுமில்ல"

"ஒரு மாதிரி சிரிக்குற தங்கு சிலிப் என்று பொய் வேற சொல்லுற இல்லடா உனக்கு என்னமோ தெரிஞ்சிருக்கு சொல்ல மாட்டேங்குற. என்ன என்று தெரியட்டும் உன்ன பிறகு வச்சுக்கிறேன்."

"சரி சரி டைம் வேஸ்ட் பண்ணாம கிளம்புடா மச்சான்"

"அதுசரி இதுக்கு மேல என் காதல மறைக்காம என் தாராகிட்ட சொல்லப் போறேன். அதுவும் இப்பவே பை மச்சான்" என்றவன் அகத்தில் நிறைந்த மகிழ்ச்சிவோடும் முகத்தில் விரிந்த சிரிப்போடும் சங்கரிடம் விடைபெற்றுக் கிளம்ப தன் நண்பனின் முகத்தில் மட்டுமன்றி வாழ்விலும் இந்த மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்க வேண்டும் என கடவுளிடம் கேட்டுக் கொண்டான். ஆனால் ஆதித்யன் தன் காதலை நயனியிடம் சொல்ல முடியாமல் போகப் போவதை அவர்கள் இருவரும் அறியவில்லை.

முடிவெடுத்து விட்டவளுக்கு அவனை மொத்தமாய் பிரிவது உயிர் போகும் வலியாக இருக்க மனம் முழுக்க நிம்மதியின்றித் தவித்த நயனதாரா
காயத்ரியிடம் வந்து கோவிலுக்கு சென்று வருவதாக சொல்ல

"அம்மாடி எனக்கு கொஞ்சம் சுகமில்லம்மா அதோட அனுவும் வெளிய போயிருக்கா. மழ வேற இருட்டியிருக்கு நாளைக்குப் போகலாமே."

"ஒன்றும் பிரச்சனையில்ல அத்தை நான் பார்த்துப் போயிட்டு வாரேன். மழ வாரதுக்குள்ள வந்துடுவேன் ப்ளீஸ் போயிட்டு வாரேனே" அவளின் முகத்தை பார்த்தவர் என்ன நினைத்துக் கொண்டாரோ சரியென சம்மதித்து விட விடைபெற்று கொண்டாள்.

அகிலமே அதிருமளவு இடியிடிக்க வானத்தையே கிழித்துக் கொண்டு மழை சோவெனப் பெய்து கொண்டிருந்தது பதட்டத்துடன் கைகளைப் பிசைந்து கொண்டிருந்த காயத்ரி அப்போதுதான் அலுவலகத்திலிருந்து வந்த ஆதித்யனை கண்டதும் வேகமாக அவனிடம் வந்தார்

"ஆதி ஆதி" என்றவர் மேல பேசாமல் தடுமாற அவரை ஒருவாறு அமைதிப்படுத்தியவன்

"என்னம்மா என்னாச்சு?"

"ஆதி நயனி பின்னேரம் கோயிலுக்குப் போனாப்பா இன்னும் வரல்ல மழை வேற விடாம பேஞ்சிகிட்டிருக்கு எனக்கு பயமாயிருக்குடா"

"அவளை ஏன்ம்மா தனிய விட்டீங்க. முதல்ல எந்தக் கோயிலுக்குன்னு சொல்லுங்கோ?" அவனையும் பதட்டம் தொற்றிக் கொண்டது.

"இல்லைடா நான் அவளை தனிய விடலப்பா எனக்கு மத்தியானத்திலிருந்து கொஞ்சம் தலவலி அவகிட்ட சொன்னேன்டா நாளைக்குப் போயிக்கலாம் என்று ஆனால் அவ பரவாயில்ல நான் பார்த்துக்கிறேன் நீங்க ரெஸ்ட்டெடுங்கோ பக்கத்துல தானே சுணங்கமாட்டேன் என்று சொன்னாடா அதான் நானும் விட்டுட்டேன் இப்படியாகுமென்று நினைக்கல்ல"

"சரி எந்தக் கோயிலென்று சொல்லுங்கோ நான் போய் பார்க்குறேன்"

"நம்ம பிள்ளையார் கோயில்ப்பா"

"சரிம்மா நான் போய் பார்த்துட்டுவாரேன் நீங்க டென்ஸனாகாதீங்க மழைக்காக வரமுடியாம கோயில்லதான் நிப்பா நான் வரேன்ம்மா" அவசரமாக கோயிலை நோக்கிப் பறந்தது அவனது விலையுயர்ந்த வெளிநாட்டுக் கார். அங்கு சென்றவன் அவசரமாக கோயில் முழுக்கத் தேட அவன் கண்களில் அவள்படவே இல்லை. அவனுள் ஒருவித பதட்டம் தொற்றிக் கொண்டது மழையிருட்டுடன் சேர்ந்து பொழுதும் சாய்ந்து கொண்டிருந்த வேளையது மின்சாரமும் தடைப்பற்றிருக்க கோவில் இருளில் மூழ்கியிருந்தது. அவன் மீண்டும் மீண்டும் தேடிக் கொண்டிருந்தான். கோயில் மண்டபத்தின் ஒரு ஓரமாய் சேலையை இழுத்துப் போர்த்தியவளாய் நடுங்கிக் கொண்டிருந்தவளைக் கண்டதும்தான் அவனுக்கு போன உயிர் வந்தது போல இருக்க அவளிடம் விரைந்தவன்

"தாரா" என்று அவளை இழுத்து அணைக்க இருட்டில் யாரெனத் தெரியாதவள் அவனைத் தள்ளிவிட்டாள்.

"தாரா நான் ஆதித்யன் வா வீட்டுக்குப் போகலாம்" என்றவாறு அவள் கைப்பிடித்து அழைத்துக் கொண்டு காரிற்கு வந்தவன் தான் அணிந்திருந்த கோட்டை கழற்றி அவளுக்குப் போட்டு விட்டு அவளை உள்ளே அமர வைத்து காரை கிளப்பினான். காரின் ஏசி அவள் நடுக்கத்தை அதிகரிக்க அதனை நன்றாக குறைத்தவன் அவள் புறமாகத் திரும்பி அவள் கைகளில் தன் கைகளை வைக்க அவளோ தன் கைகளை மெதுவாக அவனிடமிருந்து விலக்கிக் கொண்டாள். வீட்டு வந்து சேர்ந்ததும் காரிலிருந்து இறங்கியவள் நிற்க முடியாமல் தடுமாற அவள் தடுக்கத தடுக்க தன் கைகளில் அவளை அள்ளிக் கொண்டவன் கார்ச் சத்தம் கேட்டு வாசலுக்கு வந்த காயத்ரியிடம்

"அம்மா தாரா நல்லா மழையில நனஞ்சிட்டா கடும் நடுக்கமா இருக்கு அவளால நிக்கக் கூட முடியல்ல நான் ரூமுக்குப் போறேன்மா சூடா ஏதாவது குடிக்கக் கொண்டு வாங்க" என்றவன் அவர்கள் அறையில் நுழைந்து கதவை சாத்தி விட்டு அவளின் மறுப்பைக் கூட பொருட்படுத்தாது அவள் ஆடையை மாற்றியவன் ஏசியை முழுவதுமாக நிறுத்தி இருந்தான். காயத்ரி சூடாக தேநீர் கொண்டு வந்து கொடுக்க மடமடவென்று குடித்து விட்டு வெற்றுக் கோப்பையை நீட்ட வாங்கிய வாறே கொண்டு வந்த சாப்பாட்டை ஆதித்யனிடம் கொடுத்து அவள் வேண்டாம் என்று மறுத்த போதும் சாப்பிட வைத்த பின்னர் அவள் அருகிலமர்ந்த காயத்ரி

"என்னாச்சு நயனிம்மா எங்கதான் போன?"

"அத்தை மழ லேசா தூரல் போடத் தொடங்கும் போதே வெளியிறங்கிட்டேன். சட்டென்று பெருத்த மழை பெய்யத் தொடங்கிட்டு ஆட்டோ ஒன்றும் கிடைக்கல்ல மொத்தமா நனஞ்சிட்டேன். வேற வழியில்லாம திரும்ப கோயிலுக்கே போயிட்டேன் மழ அப்பவிடும் இப்பவிடும் என்று பார்த்தா விடவேயில்ல அதுக்குள்ள கரெண்ட் வேற கட்டாயிடுச்சு. தாங்க முடியாத குளிர் அதுல உடம்பு நடுங்க ஆரம்பிச்சிடுச்சு. என்ன பண்ணுறதென்றே தெரியல்ல குழறிட்டேன் தெரியுமா நல்லவேள இவர் வந்தாரு இல்ல நான் குளிர்ல நடுங்கியே செத்திருப்பேன்'' அவள் கூற தாயும் மகனும் அவள் கடைசி வாக்கியத்தில் ஒரு சேர அதட்டினர்.

"ஆதி நான் நயனி கூட இங்க படுத்துக்குறேன் நீ அப்பா கூட படுத்துக்கப்பா நான் நல்லபடியா நயனிய பார்த்துக்கறேன்"

"இல்லம்மா அவள நானே பார்த்துக்குறேன் அவ என் பொண்டாட்டி இது என்னோட கடமை என் கடமய நான்தானே செய்யனும். அத மத்தவங்க மேல திணிக்கக் கூடாது."
'அப்போ கடமைதான் அன்பு இல்லை' நினைத்து மனம் கலங்கியவளின் முடிவு இன்னும் வலுப் பெற்றது.

"நான் அவளைப் பார்த்துக்கிறேன். நீங்க போய்த்தூங்குங்கம்மா." அவனின் மாற்றம் தாயின் நெஞ்சை மகிழ்விக்க அவர்களிடம் கூறிக் கொண்டு காயத்ரி சென்ற பின் அவளை இரண்டு பெனடோல் போட வைத்து கட்டிலில் தூங்க சொல்ல தான் கீழேயே தூங்குவதாகக் கூறி விரிப்பை விரித்துப் படுத்துக் கொண்டாள். நடுநிசியில் ஏதோ முனகல் சத்தம் கேட்க கண்விழித்த ஆதித்யன் மின்விளக்கைப் போட்டு சத்தம் வந்த திசையை நோக்க அங்கே படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள் நயனதாரா. 'என்னாச்சு இவளுக்கு' எண்ணியவனாய் அவளை எழுப்ப அவள் தோள் தொட அது அனலாய் கொதித்தது. அவளை தூக்கியவன் கட்டிலில் கிடத்த முதலில் மறுத்து கட்டிலை விட்டு இறங்க அவன் அதட்டலில் அப்படியே கட்டிலில் படுத்தாள். ஏசி அணைக்கப்படிருந்த போதும் அவள் நடுங்கிக் கொண்டிருக்க போர்வையை போர்த்தியவன் தன் அணைப்புக்குள் அவளைக் கொண்டு வந்தான் அவள் திமிர அவளை அழகாக அதட்டி அடக்கி அமைதிப்படுத்தி தூங்க வைத்தான். தொடர்ந்து மூன்று நாள் அவளுக்கு காய்ச்சல் அடிக்க அவனே கண்ணுங்கருந்துமாய் அவளைப் பார்த்துக் கொண்டான். அந்த கவனிப்பில் அவள் சீக்கிரமாகவே குணமடைந்தும்விட்டாள்.

நித்திலாவின் சந்திப்புக்குப் பிறகு அவன் அவளை ஏறெடுத்தும் பார்க்கவுமில்லை பேசவுமல்லை பல வழிகளில் காயமும் படுத்தியிருந்தான். அதன் பிறகு அதாவது இந்தக் காய்ச்சலின் பிறகுதான் அவளிடம் பேசினான். அவனின் இந்த மாற்றத்தை எண்ணி உள்ளூர மகிழ்ந்தாலும் அவள் எடுத்த முடிவிலிருந்து மாறுவதற்கு அவள் தயாராக இல்லை. அவன் பேச்சிலும் செயலிலும் அவள் மேல் இருந்த அக்கறை தெள்ளத் தெளிவாக விளங்கியது. ஆனால் அது கடமைக்காக வந்தது போல் தோன்றியது. அது காதலாவே இருந்தாலும் கடமைக்காக வந்த காதல் காதலே இல்லை என்பது அவள் எண்ணம் .

இப்போதெல்லாம் அவன் வந்து அவளிடம் பேசினாலும் அவனை விட்டு மெல்ல மெல்ல அவள் விலகத் தொடங்கினாள். முதலில் அவள் விலகலை அவன் உணரவில்லை. உணர்ந்த போது அதை அவனால் தாங்க முடியவில்லை நேரடியாக அவளிடம் கேட்டு விட முடிவு செய்தான்

"தாரா நில்லு எதுக்கு என்னை விட்டு விலகிப் போற?"

"நான் எப்போ உங்களோட சேர்ந்திருந்தேன் இப்போ விலகுறதுக்கு?"

"அப்போ நாம சேரவே இல்லையா?"

"அது உடம்பு சரியில்லாதப்போ உங்க கடமையா நினச்சுப் நீங்க என்னைப் பார்த்துகிட்டீங்க வேற என்ன ஒன்றுமில்லயில்லையே" என்றவள் அறையை விட்டு வெளியேறினாள். அவளுக்கு எப்படித் தன் காதலை தன் மனதைப் புரியவைப்பது என்று தெரியாமல் தடுமாறினான்.

வளரும்.....

Please share your comments here

 

Aara dilfar

Member
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.

நிலவு - 29

காயத்ரியின் தொலைபேசி விடாமல் அடித்துக் கொண்டிருக்க அழைப்பை ஏற்றவர்

"சொல்லு சங்கர் என்ன இந்த நேரத்துல கோள் பண்ணிருக்க என்ன விசயம்"

"......."

"என்ன என்னடா சொல்லுற ஐயோ...." கதறியவர் போனைத் தவற விட அவரின் அலறல் கேட்டு சமயலறையிலிருந்து வந்த நயனதாரா தரையில் விழுந்து கதறிக் கொண்டிருந்த காயத்ரியைக் கண்டவள் அவரிடம் விரைந்தாள் ராகவனும் மனைவியிடம் வந்தார்

"என்னாச்சு அத்தை ஏன் அப்படி இருக்கீங்க. என்ன என்று சொல்லுங்களேன் எனக்கு பயமாயிருக்கு." அவள் காயத்ரியை உலுக்க இது எதனையும் உணராது அவர் கதறிக் கொண்டிருந்தார். காயத்ரியின் சத்தம் கேட்டு மற்றையவர்களும் ஹோலுக்கு வர அவரின் நிலையைக் கண்டு ராகவனும் மனைவியிடம் சென்று என்ன நடந்ததெனக் கேட்க

"என்னங்க..... என்னங்க.... நம்ம..... நம்ம.... ஆ...." மேலே கூற முடியாமல் அவள் தவிக்க அப்போது காயத்ரியின் கைப்பேசி மீண்டும் ஒலியெழுப்பியது. ராகவன் போனை எடுத்து பேச மறுபக்கம் சொன்ன சேதியில் அதிர்ந்து நின்றார். அவரின் அதிர்ந்த தோற்றத்தைக் கண்ட அனைவருக்கும் பதட்டம் தொற்றிக் கொள்ள

"அப்பா என்னாச்சு ஏன் இப்படி நிக்குறீங்க யாரு போனுல?" அனுபமா கேட்க

"ராகவா என்னப்பா ஆச்சு ஏன் இப்படி அதிர்ந்து நிக்குற என்னன்டு சொல்லுடா"

"மாமா என்னாச்சு என்ன என்று சொல்லுங்கோ அத்தை ஏன் இப்படி இருக்காங்க சொல்லுங்கோ மாமா"

"அம்மாடி ஐயோ நம்ம ஆ... ஆதிக்கு எக்ஸிடென்ட் ஆயிடுச்சாம் சங்கர் போன் பண்ணினான்." அந்த சேதியை கேட்ட நயனி கதறித் தீர்த்து விட்டாள். அவளைப் பார்த்து மொத்தக் குடும்பமும் அழ முதலில் சுதாகரித்துக் கொண்டது அனுபமாவின் கணவர்தான் மற்றையவர்களையும் கிளப்பி அவசரமாக ஆதித்யனை அனுமதித்திருந்த வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றார். அங்கே தலையில் கட்டுடன் அமர்ந்திருந்த சங்கரைப் பார்த்த அனைவரும் அவனிடம் சென்று நடந்ததைக் கேட்க

"பெரியப்பா, ஆதி இன்றைக்கு என்னமோ வீட்டுக்குப் போய் சாப்பிடனும் போல இருக்கு போயிட்டு வந்துடலாம் என்று சொன்னான் அதனாலதான் நானும் அவனும் லஞ்சுக்காக ஒபீஸ்ல இருந்து வீட்டுக்கு வந்துட்டிருந்தோம் அப்போ எதிர்பக்கமா ஒரு கன்டெயினர் வந்துட்டிருந்தது. நாங்க சரியாத்தான் வந்துட்டிருந்தோம் ஆனால் அந்த கன்டெயினர்தான் பிரேக் புடிகல்லையோ என்னமோ எங்கள்ல மோதுர மாதிரி வந்துட்டிருந்தான் அதனால ஆதி மத்தப்பக்கம் பிரேக்கை உடச்சி திருப்பும் போது எலெக்ரிக் போஸ்ட்டுல போய் பயங்கரமா மோதிடுச்சு எனக்கு அடி குறையத்தான் ஆனால்..... ஆனால் ஆதிக்குத்தான் அடி பலமா பட்டிடுச்சு ஐசியூ வில இருக்கான் டொக்டர் வந்து சொன்னாத்தான் இப்போ என்ன நிலமை என்று தெரியும்" என்றவன் கண்களில் கண்ணீர் வடிய அந்த செய்தியில் குடும்பமே அதிர்ந்து நின்றது.

"ஆதித்யவர்த்தன் கூட வந்தது யாருங்க என்று கேட்டுக் கொண்டு நர்ஸ் வர ராகவன் முன்னால் செல்ல

"டொக்டர் உங்களைக் கூப்பிடுறாங்க கொஞ்சம் அவசரமா வாங்க"

"மாமா நானும் கூட வாரேன்"

"என்னங்க நானும் வாரேங்க" என்ற காயத்ரியையும் நயனதாராவையும் அனுபமாவின் பொறுப்பில் விட்டவர் டொக்டரைக் காணச் சென்றார்.

"டொக்டர் நான் ஆதியோட அப்பா" என்றதும் அவரை அமரச் சொன்னவர்

"ஆதித்யனுக்கு கால் தசை வெடிச்சிருக்கு கையிலேயும் லேசான வெடிப்பிருந்துச்சு சின்ன ஒப்ரேஷன் செய்திருக்கோம் அதனால அந்த கையையும் காலையும் அசைக்கவே கூடாது. அதோட மூன்று கிழமை கட்டாயம் பெட் ரெஸ்ட் எடுக்கனும். அதுக்குப் பிறகும் கொஞ்சம் கவனமாத்தான் இருக்கனும் நெஞ்சுலேயும் லேசா அடிபட்டிருக்கு வெளிக்காயம்தான் கூடுதலாயிருக்கு அதுல பயப்படத் தேவையில்ல ஆனால் தலையில அடிபட்டிருக்குறதால அவருக்கு இன்னும் மயக்கம் தெளியல்ல அவர் கண்ணு முழுச்ச பிறகுதான் தலயில ஏதாவது பிரச்சனையா என்றும் தெரியும் எதுவுமிருக்கக் கூடாதென்று கடவுளுக்கிட்ட வேண்டிக்கோங்க" என்று பெரிய இடியைத் தூக்கித் தலையில் போட இதனை எப்படி மனைவியிடமும் மருமகளிடம் சொல்வதெனத் தெரியாமல் வெளிவந்தவரை கண்டதும் இருவரும் அவரிடம் பாய்ந்து வந்தவர்கள் டொக்டர் கூறியதைக் கேட்க எப்படியும் சொல்லித்தான் ஆகவேண்டும் என்று முடிவெடுத்தவராய் டாக்டர் கூறிய அனைத்தையும் கூற காயத்ரி இடிந்து போய் அமர நயனதாராவின் கண்களோ கண்ணீரைச் சொரிந்தது. விசயம் கேள்விப்பட்டு தன் குடும்பத்துடன் வந்த ஷனா நயனதாராவின் கன்னத்தில் அறைந்துவிட்டாள். எல்லோரும் திகைத்துப் பார்க்க

"அடிப்பாவி இப்படி என் அத்தானை படுக்க வச்சுட்டாயே. நீ இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்சத்துல இருந்து என் அத்தான் முகத்துல இருந்த சந்தோசத்தைப் பறிச்ச அவரோட நிம்மதியைப் பறிச்ச இப்போ அவர் உயிரை எடுக்கப் போறாயா? நீ மட்டும் அவர் வாழ்க்கையில இல்லையென்றால் என் அத்தான் நல்லா இருந்திருப்பாருடி." ஷனா தேள் போல் கொட்ட ராஜேஸ்வரியும் உடன் சேர்ந்து கொண்டார்

"இவ ராசிதான் என் பேரனை இப்படி படுக்க வச்சிடுச்சு. இவ்வளவு நாள்லையும் ஒரு தலவலி காய்ச்சல் என்று கூட ஆதி படுத்ததில்லையே இப்படி மொத்தமா படுக்க வச்சுட்டேயேடி பாவி. பொறுப்பானவளாப் பார்த்தீங்க ஆனால் நல்ல ராசியுள்ளவளா தாலி பலம் கூடினவளா பார்க்காம விட்டுட்டீங்களே"

"இது ஹோஸ்பிட்டல் ரெண்டு் பேரும் முதல்ல இப்படி கதைக்குறத நிப்பாட்டுங்க. எனக்கும் தான் எக்ஸிடென்டாகியிருக்கு எனக்கு எந்தப் பொண்டாட்டி இருக்கா அவ ராசியாலதான் எக்ஸிடென்ட் ஆகியிருக்குன்னு சொல்ல சும்மா தேவைக்கில்லாம கதைச்சிட்டிருக்கீங்க ஆச்சி"

"அதான் சொன்னேனே இவ நம்ம வீட்டுல காலடி எடுத்து வச்ச நேரம் உங்களுக்கு இப்படி ஆயிடுச்சே நல்லாப்பாரு உனக்கு பாதிப்புக் குறைய ஆனால் என் பேரனுக்கு அடி ரொம்ப பலமாயிருக்குன்னு டொக்டர் சொல்லுறாரே. ஏன்னா இவ ஆதியோட பொண்டாட்டி தானே" அவளில் முழுக் குற்றச்சாட்டையும் திணிக்க அவள் கண்கள் கண்ணீரை உகுத்தன.

"குழறுகிறாயா நல்லாக் குழறு உன்னாலதான்டி பாவி ராசி கெட்டவளே. உன் ராசிதான் இப்படி என் அத்தானை படுக்க வச்சுடுச்சு நீ அவர் வாழ்க்கைக்குள்ள வந்த இரண்டே மாசத்துல இப்படி ஆக்கிட்டயே" ஏற்கனவே பாதியுடைந்திருந்தவள் ஷனாவின் கொடும் வார்த்தையில் உள்ளம் சுக்கு நூறாக உடைய காயத்ரியைப் பார்த்தாள் ஆனால் அவரோ 'அப்படியும் இருக்குமோ' என்பது போல் இவள் புறம் திரும்பாமல் எதுவும் பேசாது இருந்த இடத்தை விட்டும் சிறிதும் நகராமல் இருக்க பெண்ணவளோ மொத்தமாக உடைந்தாள். அதற்கு மேல் அவ்விடத்தில் நிற்க முடியாமல் ஆஸ்பத்திரியை விட்டு அவசரமாக வெளியேறிச் சென்றவளின் பின்னால் சங்கரும் சென்றான். போனவள் நேராக கோயிலுக்குத்தான் சென்றாள். அம்மன் சந்நிதிக்கு முன்னால் வந்தவள்
'நான் என்ன பாவம் பண்ணினேன். ஏன் இப்படி என் மேல பழிபோடுறாங்க. ஆனால் அவங்க எல்லாப் பழியையும் ஏத்துக்க நான் தயாரா இருக்கேன். என் வர்த்தனை எனக்கு திருப்பிக் கொடு அவர் வாழ் நாளுக்கும் என்னை ஏத்துக்கிடல்ல என்றாலும் பரவாயில்ல அவர் நல்லா இருக்கனும் அவரை விட்டு நான் போனாலும் அவர் நல்லாயிருக்கார் என்ற அந்த எண்ணமே எனக்குப் போதும். என் வர்த்தனை காப்பாத்திக் கொடு, என்னால உனக்கு என்னெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை நேத்திக் கடன்களையும் செய்யுறேன் என் வர்த்தனை திருப்பிக் கொடு கடவுளே அவர் கண்ணு முழுச்சிட்டார் என்ற சேதி தெரியுற வரை இந்த இடத்தை விட்டு நான் நகர மாட்டேன் இது உன் மேல சத்தியம்' என்றவள் தன் கைகளில் சூடத்தை ஏற்றி அம்மனுக்கு பூஜை செய்து கொண்டிருந்தாள் அவளைத் தேடிக் கொண்டு வந்த சங்கரின் கண்களில் இந்தக் காட்சி பட அவளிடம் வந்து

"என்ன நயனி இது என்ன பண்ணிட்டிருக்க?"

"அண்ணா அவர் கண்ணு முழிக்குற வரை நான் அங்க வரமாட்டேன் ஒரு வேளை அவங்க சொல்லுற மாதிரி என் ராசியால தான் இப்படி ஆயிருந்தா. அதனை நான் தானே போக்கனும். இந்த அம்மன்தான் அதுக்கு பதில் சொல்லனும் அதுவரை நான் இந்த இடத்தை விட்டு வரதாயில்ல."

"என்னம்மா அவங்கதான் உன்னைக் காயப்படுத்த கிடச்ச சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கிட்டாங்க அது விளங்காம நீயும் அவங்கள மாதிரியே கதைச்சிட்டிருக்க"

"அவங்க காயப்படுத்தத்தான் சொன்னாங்க என்று எனக்கும் நல்லாவே தெரியும் ஆனால் அத்தை மாமா யாருமே அவங்களை எதிர்த்து ஒரு வார்த்தை கதைக்கல்லையே அத்தை என்னை திரும்பிக் கூட பாரக்கல்லையே அப்படியே நான் செத்துட்டேன் அண்ணா"

"அப்படியெல்லாம் எதுவுமில்ல நயனி அடிபட்டிருக்குறது அவங்க புள்ள அதை நீ புரிஞ்சுக்கோ இந்த சமயத்துல இந்த ஆச்சியும் ஷனாப் பேயும் கதைச்சது அவங்க காதுல விழுந்துச்சோ என்னவோ. முதல்ல இந்தக் கையில இருக்குறத அணைச்சுட்டு என் கூட வா"

"நான் வரமாட்டேன் எனக்கு ஒரு பதில் தெரியாம நான் அங்க வரமாட்டேன். ஆனால் அவங்க சொன்னதுல ஒரு உண்மையிருக்கு அண்ணா நான் உங்க ப்ரண்டுக்கு சந்தோசத்தை நிம்மதிய கொடுக்கவே இல்ல. ஆனால் இனி அப்படி நடக்காது அவங்க எதைச் சந்தோசமென்று நினைக்காங்களோ அந்த சந்தோசத்தை அவங்களுக்காக கட்டாயம் நான் கொடுப்பேன்" அவள் என்ன பேசுகிறாள் என்பது விளங்காவிடினும் ஏதோ ஒன்றை உறுதியாக முடிவெடுத்து விட்டாள் என்பது மட்டும் அவள் முகத்தைப் பார்த்த சங்கருக்கு மிகத் தெளிவாய் தெரிந்தது. அனுவின் கணவருக்கு அழைத்தவன் ஆதி கண் முழிச்சதும் உடனே தனக்கு தகவல் கூறச் சொல்லி அழைப்பைத் துண்டித்தவன் அதற்கு மேல் நயனியை தொந்தரவு செய்யாது ஒரு ஓரமாய் ஒதுங்கி அமர்ந்தவன் நண்பனுக்காய் பிரார்த்திக்கத் தொடங்கினான்.

செக்கன்கள் நிமிடங்களாக நிமிடங்கள் கடந்து சில மணித்துளிகளையும் கடந்து விட்டது அவன் கண் திறக்கவேயில்லை. ஒருவாறாய் அனைவரையும் பயமுறுத்தியவன் கண் திறக்கும் போது ஆறு மணி நேரம் கடந்திருந்தது. அவனைப் பரிசோதித்து விட்டு வெளியே காத்து நின்றவர்களிடம் வந்த டாக்டர்

"அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிட்டார் ஆனால் அவருக்கு கால்லயும் கைலயும் ஒபரேசன் பண்ணியிருக்குறதால கட்டாயம் மூனு கிழமையச்சும் பெட் ரெஸ்ட் எடுத்துத்தான் ஆகனும்"

"நாங்க எங்க புள்ளைய பார்க்கலாமா டொக்டர்" ராகவன் கேட்க

"ஓ.. தாராளமா ஆனால் பேசனட்டை டிஸ்டொப் பண்ணாம அமைதியாகப் போய் பாருங்க" என்றதும் காயத்ரி முதலில் செல்ல மற்றையவர்கள் அவளைப் பின் தொடர்ந்தனர். உடலில் அங்கங்கே கட்டுக்கள் போடப்பட்டு கிடந்த மகனைப் பார்த்ததும் வாய்மூடி அழத் தொடங்கிய காயத்ரி மகனின் இடது கை நீண்டு தன்னை அழைக்கவும் மகனிடம் விரைந்தார். அனைவரும் அவனைச் சுற்றி நிற்க அவன் விழிகள் எல்லோரையும் ஒரு முறை சுற்றி வந்தது அவன் கண்களோ மீண்டும் மீண்டும் எதையோ தேடி அலைந்து தோற்க கண்களை மூடியவன்
'ஏன் தாரா உனக்கு இந்த நிலமையில என்னைப் பார்க்க பிடிக்கல்லையா அதனாலதான் வாராம விட்டுட்டாயா? உன் காதல் அதை யாருக்காகவும் எதுக்காகவும் விட மாட்டேன்னு சொன்ன இப்போ அந்த காதல் எங்க தாரா உன் வர்தன் உன்னைப் பார்க்க துடிச்சிட்டிருக்கேன் தாரா நீ எங்க. என்னை விட்டுட்டு போயிட்டாயா? அப்போ உன்னைப் பத்தி நான் முதல்ல கணிச்சதுதான் சரியா?' உள்ளூர எண்ணித் துடித்தவன் ஏதோ தோன்ற மீண்டும் கண்களைத் திறக்க அவன் எதிரே வந்து கொண்டிருந்தாள் அவன் தேவதை. கூந்தல் கலைந்து காற்றில் பறக்க நெற்றி நிறைய விபூதியோடு லேசாக நனைந்த ஆடையோடு கலையிழந்தவளாய் அவன் தாரா வைத்த கண் வாங்காமல் அவனை நெருங்கி வந்தவள் அவன் கோலத்தைக் கண்டதும் காலையிலிருந்து உண்ணாதது வேறு அவளை வாட்ட அப்படியே மயங்கி விழுந்தாள். மயக்கம் தெளிந்து எழுந்தவளிடம்

"எங்கம்மா போயிட்டா?" காயத்ரியின் கேள்விக்கு அவள் அமைதியாக நிற்க

"என்ன ஸீன் போட போயிருக்கா பார்த்தா தெரியல்ல" ஷனா குத்தம் சொல்ல

"ஏய் விக்‌ஷ் வாயக் கொஞ்சம் மூடு அவ கோயில்ல இருந்து இவ்வளவு நேராமா ஆதித்யனுக்காக சூடத்தைக் கையில வச்சுக்கிட்டு வேண்டிக்கிட்டு வாரா நீ என்னடா என்றால் ஸீன் அது இதென்று வாய்க்கு வந்ததை கதைக்குற உனக்கு நயனியோட போட்டி போடுறதே வேலையாப் போச்சு" சங்கர் சொன்னதில் மருமகளிடம் வந்த காயத்ரி அவள் கைகளைப் பார்த்து கண்ணீர் விட்டவர் நர்ஸிடம் சொல்லி மருந்துபோடச் சொல்ல சற்று நேரத்தின் முன் அவரை தவறாக நினைத்தற்காக மானசீகமாக மன்னிப்பை வேண்டிக் கொண்டாள்.

"அவள ஏன் ஏசுற ஆ.... போனவ அப்படியே போக வேண்டியதுதானே எதுக்காக வந்த நீ போனதும் அவன் கண்ண முழிச்சிட்டான். திரும்பி வந்திருக்க அவனுக்கு என்னவாகப் போகுதோ" ராஜேஸ்வரி அவளின் மேல் பழி சுமத்த காயத்ரி அவரை அடக்க வாயைத் திறந்தபோது

"ஆ...ச்சி போதும் இதுக்கு மேல எதுவும் கதைக்க வேணாம்." விழிகளோ விக்‌ஷனாவை வெறித்திருக்க ஆதித்யன் வாயிலிருந்து மெதுவாக ஆனால் அழுத்தமாக வந்து விழுந்தன வார்த்தைகள் ராஜேஸ்வரி வாயை கப்பென்று மூடிக் கொள்ள அடுத்த நொடி பேத்தியின் கைகளை பிடித்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினார்.

ஆதியின் விபத்தைக் கேள்விப்பட்ட தனலட்சுமி அடுத்த நாள் கொழும்புக்கு வந்து இறங்கி விட்டார் அவருடன் வாசுதேவன் ரஞ்சனியோடு உதயாவும் தாரணியும் வந்திருந்தனர். தன் பேரனைக் கண்டு தனலட்சுமி கண்கலங்க ஆதித்யனின் நிலையை பார்த்துக் கதிகலங்கியவர்கள் ஒரு நாளைக்குள் பாதியாகி விட்ட தங்கள் மகளையும் எண்ணி மனம் வருந்தினர் நயனியின் வீட்டினர். ஆதிக்கும் சங்கருக்கும் விபத்து என்று கேள்விப்பட்டவளுக்கு வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை நிச்சயமாக நயனி இதைத்தாங்கிக் கொள்ள மாட்டாள் உடைந்து விடுவாள் அவளைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபுறமிருக்க தன்னவனுக்கு என்னவோ ஏதோ என்று பயந்தவள் இந்த நிலையில் நயனியிடம் கேட்க முடியாதென்பதால் அவனையும் ஒருமுறையாவது கண்ணால் பார்த்து விட எண்ணியே நயனி குடும்பத்துடன் புறப்பட்டு வந்துவிட்டாள் தாரணி. அவனைக் கண்களால் கண்ட பின்னே அவளால் மூச்சுவிட முடிந்தது.

"கரன் எப்படி இருக்கீங்க கேள்விப்பட்டதுல இருந்து என்னால வீட்டுல நிம்மதியா இருக்க முடியல்ல அதான் அம்மாகிட்ட கெஞ்சிக் கூத்தாடி இவங்களோட வந்துட்டேன்." என்றவள் கண்கள் குளமாக

"ஏய் முதல்ல இந்தக் கண்ணுல குளங்கட்டுற வேலைய நிப்பாட்டு எனக்கு நெற்றியில தான் லேசான அடி கையிலயும் லேசான சிராய்ப்பு மத்தப்படி ஒன்னுமில்லம்மா" அப்போதும் அவள் தெளியாமல் இருக்க

"பாரு நான் நல்லாத்தானே இருக்கேன். உனக்கு சந்தேகமென்றால் தொட்டுப் பாரேன்" அடுத்த நொடி அவனை தனக்குள் அணைத்திருந்தாள். சங்கரைப் பார்க்க வந்த தனலட்சுமியின் கண்களில் இந்தக் காட்சி பட அவர்களிடம் வந்தவரைக் கண்டு அவனை விட்டு தாரணி விலக அவனும் அசடு வழிய தனலட்சுமியை நோக்கினான் அவரோ அவன் காதுகளை திருகியவர்

"படவா இவதான் அன்றைக்கு நீ சொன்ன உன் ஆளா?" அவனிடம் கேள்வியை எழுப்பியவர் அவன் 'ஆம்' என்று தலையையாட்ட தாரணி புறம் திரும்பியவர்

"நானும் நயனிக்கு ஆறுதலா இருக்க இந்தப் பொண்ணு ஊருல இருந்து வருது எப்படிபட்ட கூட்டாளி இவங்க நம்ம நயனிப் பொண்ணு கொடுத்து வச்சவ என்று நினைச்சேன் இப்போதுதான் விளங்குது யாரு கொடுத்து வச்சதுன்னு"

"ஐயோ பாட்டி அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது நயனியையும் அதே நேரம் கரனையும் தான் பார்க்க வந்தேன். எனக்கு ரெண்டு பேரும் ரொம்ப முக்கியம் பாட்டி"

"பரவாயில்ல நல்ல குணமான புள்ளையத்தான் பார்த்திருக்க காவியா கூட இவங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு வருவாங்க நயனாவப் புடிக்கிற மாதிரித்தான் தாருவையும் எனக்கு ரொம்பப் புடிக்கும். இவளை தங்கத்துக்கும் புடிக்கும். அட வாசுகி ஏற்கனவே புடிச்சிருக்குன்னு சொல்லிட்டா இல்ல. அப்போ இனி கல்யாணத்துக்கான வேலைய பார்க்க வேண்டியதுதான். எனக்கு பிடிச்ச ரெண்டு புள்ளைங்கள்ல ஒருத்தி ஏற்கனவே நம்ம வீட்டுக்குள்ள வந்துட்டா அடுத்தவளையும் சீக்கிரமா வரவச்சிடலாம்."

இரண்டு நாளில் வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்கு வந்தவனுக்கு தாயாய் மாறி சேயாய் அவனை தாங்கிக் கொண்டாள் நயனதாரா. சாப்பாடு ஊட்டுவதிலிருந்து குளித்து உடை மாற்றுவது வரை அவளே செய்தாள். அவன்அவளிடம் தயங்க

"உங்களால நிச்சயமா தனியா எதுவும் செய்ய முடியாது கட்டாயம் இன்னொருத்தங்களோட உதவி வேணும் நான் இதச் செய்யல்ல என்றால் நர்ஸ் வக்கனும் அவங்களும் இதத்தானே செய்யப் போறாங்க. அதுக்கு ஊருக்காக உங்க பொண்டாட்டியா இருக்குற நான் செஞ்சுட்டுப் போறேனே. இது என் கடமையில்லையா நீங்கதானே சொல்லுவீங்க நம்ம கடமைய இன்னொருத்தருக்கிட்ட திணிக்கக் கூடாதுன்னு. அதனால நானே செய்யுறன். ஓ... பொண்டாட்டி என்றால் கட்டிலுக்கு கூப்பிட்டிடுவேன் என்ற பயமா கவலைப்படாதீங்க எனக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லை. நீங்களும் என்னை பொண்டாட்டியா நினைக்க வேணாம் உங்களப் பார்க்க வந்த நர்ஸா நினைச்சுக்கோங்க பிரச்சனையே இல்ல." அவளின் குத்தலிலும் நான் உனக்குரியவள் இல்லை என்று சொன்னதிலும் மனம் வலிக்க அமைதியானான். அவளுக்கு அவனுடன் வாழும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் முக்கியமானவை அதைத் தனக்குள் பொக்கிஷமாக சேர்த்துக் கொண்டாள். அவள் வாழ்நாளுக்கும் அவளுக்கு கூட வரப்போவது அந்த நினைவுகள் மட்டுமே என்பது அவள் மட்டும் அறிந்த உண்மை.

தனலட்சுமி மகள் வீட்டில் தங்கிவிட வாசுதேவன் குடும்பத்தினர் ஆதித்யன் வீட்டுக்கு வந்த மூன்று நாட்களில் ஊரை நோக்கிப் புறப்பட தாரணியும் உடன் புறப்பட்டாள். தனலட்சுமி அங்கே இருப்பதால் ராஜேஸ்வரி மொத்தமாக அடங்கிவிட ஷனா அந்தப் பக்கம் கூட தலை வைத்துப் படுக்கவில்லை. ஆதித்யனுக்கான வேலைகளை முடித்து விட்டு அவனுக்காக வேண்டிக் கொண்டு ஒவ்வொரு கோவிலாக ஏறி இறங்கினாள் நயனதாரா அத்தோடு விரதங்களும் இருந்தாள்.

நாட்கள் நகர்ந்தன கண்ணை இமை காப்பது போல் காத்தவளின் கவனிப்பில் பூரண குணமடைந்த ஆதித்யன் இப்போது தன் காதலை அவளிடம் சொன்னால் தன்னை பார்த்துக் கொண்டதற்குத்தான் தன்னை ஏற்றுக் கொள்கிறான் என்று தவறா நினைத்துவிடுவாள் என நினைத்து அவளிடம் தன் காதலை சொல்வதற்காக சரியான சந்தர்ப்பத்துக்காக காத்துக் கொண்டிருந்தான்.

ஆதித்யனின் விபத்துக்குப் பிறகு அவனுக்கு காலில் சக்கரம் கட்டியது போல் ஆயிரம் வேலைகள் இருக்க அதோடு டீலர்ஸ் மீட்டங்களும் அடிக்கடி நடக்க சில வேளைகளில் அவன் கெஸ்ட் ஹவுஸில் தங்க வேண்டியதாகியது. அந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்த நயனதாரா

"பாட்டி நாளைக்கு ஊருக்குபோறாங்க இல்லையா அத்தை நானும் அவங்களோட ஊருக்கு கொஞ்சம் போகனும் ஏன்னா அவர் அடிப்பட்டிருக்கும் போது எங்க ஊருல இருக்குற பத்ரகாளி அம்மன் கோயில்ல தீ மிதிக்குறதா வேண்டிக்கிட்டேன் அத்தை இப்போ அவர் முழுக்க குணமாயிட்டாரில்ல அதனால இதுக்குப் பிறகும் லேட்டாக்காம உடனே செய்யனுமென்று நினைக்குறேன். அவர் கடும் பிஸியா இருக்கார் அதனாலதான் பாட்டியோட போகலாம் என்று நினைச்சேன்"

"எதுக்காகம்மா அப்படி கடுமையா வேண்டிக்கிட்ட சரிம்மா வேண்டிக்கிட்டு செய்யாம விட்டா வேற குத்தமாயிடும் பாட்டி கூடவே போ உன்னை கூட்டிட்டு வர ஆதிய அனுப்புறேன் அதுசரி அவன்கிட்ட சொல்லிட்டயாம்மா?"

"இல்லத்தை உங்களுக்கே தெரியும் அவருக்கிதுல எல்லாம் பெருசா நம்பிக்கை இல்லை என்று அதனால நான் அவர்கிட்ட சொன்னால் வேண்டாமென்று சொல்லிடுவாரோ என்று பயமாயிருக்கு நாளைக்கு போறதுக்கு கொஞ்சம் முன்ன சொல்லிக்கலாம்." அவன் இரவு வீட்டுக்கு வரமாட்டான் என்று தெரிந்தே காயத்ரி நம்பும்படியாக காரணம் சொன்னவள் அறைக்குள் சென்று தன் வீட்டிலிருந்து கொண்டு வந்த சில துணிகளை மட்டும் எடுத்து பையில் வைத்தவள் அவனைப் பிரிவதை எண்ணி கண்ணீரில் கரைந்தாள்.

அதிகாலையிலே புறப்படுவதால் நேரத்தோடு எழுந்து ஆயத்தப்பட்டவள்
தன் மனதிலுள்ள அனைத்தையும் கண்ணீரில் மடலாக வரைந்து அவன் பார்வை படுமிடத்தில் வைத்து விட்டு மாமியார் உட்பட அனைவரிடமும் விடைபெற

"நயனிம்மா நேர்ச்சைய நிறைவேத்திட்டு அங்கேயே தங்கிடாம உடனே வாம்மா என்ன" அதற்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்தாள் ராகவனுடன் சேர்த்து அவரின் காலில் விழுந்தவள் அனுபமாவை அணைத்துக் கொண்டாள். ஒருவாறு விடை பெற்று தனலட்சுமியுடன் தன் உயிரை அங்கே விட்டு விட்டு உடல் மட்டுமாக அந்த வீட்டை விட்டு அவனை விட்டு நிரந்தரமாக பிரிந்து போனாள்.

வளரும்.....

கருத்துக்களுக்கு👇👇👇💙

 
Last edited:
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom