Aara dilfar
Member
- Messages
- 46
- Reaction score
- 85
- Points
- 18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.
நிலவு - 20
"நான் போகத்தான் போறேன் இதுக்கு மேல எனக்கு இங்க என்ன வேலை" காலையிலே ராஜேஸ்வரி ஆரம்பிக்க
"என்ன அத்தை சின்னப்புள்ளை போல பிடிவாதம் பிடிக்கீங்க நாங்க ஊருக்கு போறதுக்கு எப்படியும் நாலஞ்சு நாளாகும் அதுவரை நீங்க எப்படித் தனியா இருப்பீங்க. முதல்ல யார் கூட போகப் போறீங்க எல்லோரும் இங்கதானே இருக்காங்க அனுபமாவும் இரண்டு நாளைக்குப் பிறகுதானே போவா அப்போ எப்படி அத்தை போவீங்க அதையும் விட எவ்வளவு நாள் கழிச்சு நம்ம ஊருக்கு வந்திருக்கீங்க. எங்களோடேயே போகலாமே இருங்களேன்."
"இங்கப்பாரு காயத்ரி எனக்கு உன்னை விட்டா யாருமில்லை என்று நினைச்சுட்டாயா? என் மகளிருக்கா மருமகனிருக்காரு என்னோட ஷனாக் கண்ணு இருக்கா அவங்க கூடதான் போகப்போறேன்." காயத்ரி எவ்வளவு தடுத்தும் பிடிவாதமாக இருந்தார் ராஜேஸ்வரி. அப்போது அவ்விடம் வந்த தனலட்சுமி என்ன நடக்குது என விசாரிக்க நடந்ததைக் கூற அவரும் தன் பங்குக்கு ராஜேஸ்வரியிடம் எடுத்துக் கூறியும் அவர் செல்வதிலே குறியாயிருந்தார். அதற்கு மேல் எதுவும் செய்யமுடியாது சசிகலாவிடம் திரும்பிய காயத்ரி
"சசி அத்தையை கவனாமா பார்த்துக்கோ உங்க வீட்டுக்கே கூட்டிட்டு போயிடுங்க நான் வந்ததும் அவங்களை வீட்டுக்கு கூப்பிட்டுக்கிறேன்"
"நான் ஏன் அங்க போகனும் நான் என் வீட்டுலதான் இருப்பேன்" ராஜேஸ்வரி அழுத்தமாகக் கூற
"ஐயோ அத்தை ஏன் சின்னப்புள்ள மாதிரி பிடிவாதம் பிடிக்கீங்க, சரி நீங்க நம்ம வீட்டுலேயே இருங்க. சசி நான் வர்ர வரைக்கும் அம்மாகூட இருந்து பார்த்துக்குவாயா?"
"அண்ணி அவங்க உங்களுக்கு அத்தை ஆனால் எனக்கு என்னைப் பெத்தவங்க நாங்க நல்லாவே பார்த்துக்கோம்" முகத்திலடித்தால் போல கூற
"என்ன சசி இப்படிக் கதைக்குற நீயாவது அத்தைக்கு எடுத்து சொல்லியிருக்கலாம்."
"அண்ணி உங்க மகனுக்கு வெளியில பொண்ணு பார்த்தப்போ எங்க மகளுக்கு அந்த பங்கில்ல என்று நாங்க மனசை மாத்திக்கிட்டோம் ஆனால் எங்கம்மாவாலேயும் என் மகளாலேயும் அது முடியல்ல ஏன்னா எங்கம்மாக்கு அது கனவென்றால் என் மகளுக்கு அவ வாழ்நாள் லட்சியம். இங்க நடக்குற கூத்தெல்லாம் பார்த்துட்டு அவங்களால நிம்மதியா இருக்க முடியல்ல நாங்க போறோம் அண்ணி நீங்க உங்க சந்தோசத்தையெல்லாம் முடிச்சிட்டு மெல்லவே வாங்க." அத்துடன் பேச்சு முடிந்ததென பெட்டிகளை அடுக்கத் தொடங்கினாள். தன் வீட்டில் வேலை செய்யும் மரகத்தை அழைத்த காயத்ரி அவரையும் ராஜேஸ்வரியுடன் ஊருக்குப் போகச் சொன்னவர் வீட்டையும் சுத்தம் செய்து வைக்கச்சொன்னார். ராஜேஸ்வரி தன் மகள் குடும்பத்துடன் கொழும்புக்கு புறப்பட்டார்.
தொடர்ந்து உறவிலுள்ளவர்கள் ஒருவர் மாறி ஒருவராய் விருந்து கொடுத்தனர். ஒருவாறாய் அவர்கள் புறப்படும் நாளும் நெருங்கியது அன்று காலையில் மொட்டைமாடியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த ஆதித்யனிடம் வந்த காயத்ரி
"ஆதி இன்றைக்கு நயனிவோட வீட்டுல நம்ம எல்லோரையும் விருந்துக்கு வரச் சொல்லியிருக்காங்க. ஆனால் நான் உன்கிட்ட ஒரு வேண்டுகோள் வைக்கத்தான் வந்திருக்கேன்."
"இப்போ என்னம்மா அதான் எல்லாம் உங்க ஆசைப்படிதானே நடக்குது"
"இதுவும் என் ஆசை என்றே வச்சுக்கோப்பா ஒன்னுமில்லப்பா நாளைக்கு நாம ஊருக்குப் போயிடுவோமில்ல அதனால நயனிக்கும் அவ குடும்பத்தோட இருக்கனுமென்று தோணுமில்ல அத்தோட ஒருநாளாவது அவங்க வீட்டுல தங்கல்ல என்றால் அவங்களுக்கும் மனசு கஷ்டபடுமில்லை யோசிச்சுப்பாரு அவங்க இங்க ஒரு மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிருந்தா நயனி அவங்க வீட்டுலதானே இருந்திருப்பா ஆனால் இப்போ நம்ம கூட அவ்வளவு தூரத்துக்கு வரப்போறா அதானால இன்னைக்கு ஒருநாள் மட்டும் ப்ளீஸ்ப்பா அம்மாக்காக" எண்ண நினைத்தானோ அவனும் சரியென ஒத்துக் கொண்டான்.
விருந்துக்கு சங்கரும் வந்திருந்தான் தாரணியையும் அழைத்திருந்தாள் நயனதாரா. வந்ததிலிருந்து தாரணியிடம் தனியாக பேச சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் சங்கர் அதற்கேற்ப தாரணியும் வாழைஇலை வெட்ட தனியாக வர அவளை தொடர்ந்து வந்த சங்கரன்
"ஒரு நிமிஷங்க நான் உங்ககிட்ட இன்றைக்கு கதைச்சுத்தான் ஆகனும் ஏன்னா நானும் நாளைக்கு ஆதிகூடவே ஊருக்குப் போயிடுவேன் அதுக்கு முன்ன உங்க மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க நினைக்குறேன். நான் சொன்னதை இப்பவாவது யோசிச்சீங்களா? நீங்க ஓகே சொன்னா இப்பவே உங்க வீட்டுக்கு வந்து கதைக்குறேன் எங்க வீட்டுல எந்தப் பிரச்சனையுமில்லை. ப்ளீஸ் என்ன முடிவு பண்ணிருக்கீங்க"
"ஏங்க உங்களுக்கு ஒரு தடவை சொன்னா விளங்காதோ அந்த மாதிர எந்த ஃபீலிங்சும் எனக்கில்லை என்னை ஆள விட்டுட்டுங்கோ. ஏன் உங்களுக்கு வேற ஆள் கிடைக்கல்லையா? கொழும்புல வேற இருக்கீங்க கலர்கலரா ஆயிரம் புள்ளைங்க இருப்பாங்க அதுல ஒன்றைப் பார்க்க வேண்டியதுதானே"
"கதைச்சு முடிச்சாச்சா? ஆயிரம் பேரோட பழகியிருக்கேன் ஆனால் யாருமேலேயும் காதல் வந்ததுமில்லை பார்த்த உடனே கட்டிக்கத் தோனினதுமில்லை. அது எல்லாமே உங்கள்ல மட்டும்தான் வந்துச்சு உங்க முடிவை நீங்க சொல்லிட்டீங்க என்னோட முடிவையும் நான் சொல்லிடுறேன். என் லைஃப்ல கல்யாணம் என்றால் அது உங்களோட மட்டும் தான் என்னால எக்காரணத்தைக் கொண்டும் உங்களை இழக்க முடியாது" என்றவன் அவள் எதிர்பாராத நேரத்தில் அவள் கையிலிருந்த கைப்பேசியைப் பறித்து அதை இயக்க அது லொக் செய்யப்பட்டிருந்தது.
"என் போனைக் கொடுங்க" தாரணி
"பாஸ் வேர்ட் சொல்லு" அவள் முடியாதென மறுக்க அவன் போனைக் கொடுக்காது விடாப்பிடியாய் நிற்க வேறு வழியின்றி பாஸ் வேர்டை சொல்ல போனை இயக்கியவன் அவளது எண்ணிலிருந்து அவன் மொபைலுக்கு ஒரு மிஸ்ட் கோள் கொடுத்தவன் அவள் கைப்பேசியில் அவனுடைய பெயரையும் பதிவேற்றினான். இது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நயனதாரா வந்த சுவடு தெரியாமல் அப்படியே திரும்பிச் சென்றாள்.
மதியவிருந்து முடிய ஆதியின் குடும்பம் விடைபெற்றது. ஆதியும் சங்கரோடு பழைய நண்பர்களைப் பார்த்து வருவதாய் கூறி வெளியே செல்ல தாரணியை அழைத்துக் கொண்டு தனது அறையுள் சென்று தாழிட்ட நயனதாரா அவளை முறைத்துக் கொண்டு நின்றாள்.
"ஏய் என்னடி ஆச்சு ஏன் இப்படி பார்க்குற"
"ஆ... உன்னைக் கொன்னுடலாமா என்றிருக்கு. நான் உனக்கு அவ்வளவு முக்கியமில்லையா?"
"என்னடி இப்படிக் கேக்குற நீ என் உசிருடி"
"ஓ.. அதனாலதான் சங்கரோட விசயத்தை உடனே வந்து சொன்னாயாக்கும் என்ன அப்படிப் பார்க்குற இவளுக்கு எப்படித் தெரியும் என்றா?" அவள் கேட்க முதலில் நயனிடம் மன்னிப்புக் கேட்டவள்
"உனகிட்ட மறைக்க நினைக்கல்ல அதுக்கான சந்தர்ப்பம் கிடைக்கல்ல உன்னோட சொல்லாம மனசுக்கு எவ்வளவு பாரமா இருந்துச்சு தெரியுமா?" என்றவள் அன்று கோயிலில் நடந்ததிலிருந்து இன்றுவரை நடந்த அனைத்தையும் கொட்ட அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள் நயனதாரா. தாரணி தொடர்ந்தாள்
"அதெப்படிடி ஒருநாள்ல அதுவும் பார்த்த உடனே காதல் வரும் இது நம்புற மாதிரியா இருக்கு. அதோட கண்ணுல இருந்து மறைஞ்சதும் கருத்தவிட்டு மறையுற மாதிரி கொழும்புக்குப் போய் கொஞ்ச நாள்ல அவர் என்னை மறந்துடுவார்"
"தாரு ஒன்னு சொல்லட்டா காதல் வாரதுக்கு ஒருநாள் தேவல்லடி ஒருநொடி போதும். உங்கிட்ட ஒரு உண்மையைச் சொல்லுறேன் நான் என்னோட வர்த்தனை முதல்ல போட்டோவில தான் பார்த்தேன் அந்த நிமிஷத்துல விழுந்தவதான். ஆனால் சங்கரண்ணா உன்னை பாதி நாளுக்கு மேல பார்த்துட்டிருந்திருக்காரு. அவர் மனசுல நூறு வீதம் உறுதியானதால தானே உன்கிட்ட கேட்டிருக்காரு அதுவும் கட்டிக்க. ஏன்டி உனக்கு உண்மையில சங்கரண்ணாவைப் பிடிக்கல்லையா?"
"உண்மையச் சொல்லனுமென்றா எனக்கு அவரை ரொம்ப புடிச்சிருக்கு. ஆனால் பயமாயிருக்கு. இந்தக் காதலை எல்லாம் நம்ப பயமாயிருக்கு. எங்க வீட்டை நினைச்சாலும் பயமாயிருக்கு முக்கியமா பெரியம்மாவை. அவங்களாலதான் இன்றைக்கு எங்கக்கா அவ வாழ்க்கையத் தொலச்சுட்டு நிக்குறாங்க."
"இங்கப்பாரு அது நடந்தும் எவ்வளவு காலமாயிடுச்சு உன் பெரியம்மாவும் கொஞ்சமாலும் மாறியிருப்பாங்க. சங்கரண்ணா ரொம்ப நல்லவருடி அவங்க வீட்டுலேயும் உன்னை மாதிரி ஒரு பொண்ணு என்றால் அவங்க அம்மா ஓகே என்றாங்க அது நீதான் என்றால் நிச்சயமாக ஏத்துப்பாங்க. நீ காதலிக்க எல்லாம் வேணாம் ஓகே மட்டும் சொல்லிடு அவர் உங்க வீட்டுக்கு வந்து கதைக்கட்டும்"
"நான் சம்மதிச்சுத்தான் வந்தாங்க என்று தெரிஞ்சா நான் செத்தேன். எங்கக்காவுக்கு நடந்ததும் அதுதானே. பாவம்டி அக்கா ஆனால் ஒன்னுடி அவங்க காதலிச்சவரை மட்டும் கட்டியிருந்தாங்க என்றால் இன்றைக்கு இப்படி யாருமில்லாத அநாதை மாதிரி ஊரை விட்டுப் போய் ஒரு பிள்ளையோட கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லையே. அவங்க காதலிச்சாங்க என்ற ஓரே காரணத்தாலதான் இவ்வளவு கஷ்டமும் அவங்களுக்கு வந்துச்சு. வேணாம்டி இந்தக் காதலே வேணாம். காதலிக்குற அளவு காதலிச்சிட்டு வீட்டுக்கு தெரிஞ்சதும் போராட முடியாம எங்கக்கா மாதிரி மனசுல காதலவச்சுகிட்டு காசுதான் முக்கியம் காதலில்லை காதலிக்கவே இல்லை என்று என்னால யாரையும் பொய் சொல்லி ஏமாத்த முடியாது இது எல்லாமே உனக்குத் தெரியும்தானே நயனி. அந்த அங்கிள் எவ்வளவு பாவமில்லை. இவளை மறக்க முடியாம எவ்வளவு கஷ்டப்பட்டாங்க."
"ஓம் டி என்னோட செல்ல அச்சு மாமா அக்காவால ரொம்பத்தான் கஷ்டப்பட்டுட்டாங்க. ஆனால் அக்காவும் வேணுமென்று எதுவும் பண்ணல்ல இல்லை மாமா நல்லாயிருக்கனும் என்றுதானே செஞ்சாங்க பெரியம்மாவும் அண்ணாவும்தான் இதுக்கெல்லாம் காரணம். நான் அதுக்குப் பிறகு அவங்களை காணவேயில்ல அப்பப்போ நினச்சுக்குவேன். ஏன் தாரு இந்த நாளையில என்னோட அச்சுமாமாவைக் கண்டிருக்காயா? இப்போ அவங்களும் ரொம்ப ரொம்ப பெரியவங்களா இருப்பாங்கயில்ல கல்யாணம் கட்டிருப்பாங்களா?"
"இல்லடி நானும் அப்போ கண்டதுதான். எங்க இருக்காங்க என்றே தெரியாது. ஆனால்.... ஒன்னு சொல்லுவேன் தப்பா எடுத்துப்பாயா?"
"என்னடி உனக்கும் வர்த்தனைப் பார்க்குறப்போ நம்ம அச்சு மாமா போல இருக்கா?"
"ஓம் டி அப்போ உனக்கும் அப்படித்தான் தோனிச்சா. அப்போ நீ நேராவே கேட்டிருக்கலாமே"
"கேட்டிருக்கலாந்தான் ஆனால் இப்போதைக்கு அது கஷ்டம்டி. தாரு ஃபெர்ஸ்ட் என்னை மன்னிச்சுடு ஏன்னா உன்னைப் போலதான் நானும் உங்கிட்ட ஒருவிசயத்தை மறைச்சுட்டேன்" என்றவள் ஆதித்யனுக்கும் தனக்குமிடையில் இருக்கும் சவாலைக் கூறிவிட்டு யாரிடமும் கூறக் கூடாதென்று சத்தியமும் வாங்கிக் கொண்டாள். ஒருவழியாய் தாரணிக்கு சங்கரின் காதலைப் புரியவைத்தவள் நன்றாக யோசித்து நல்ல முடிவை எடுக்கச் சொன்னாள்.
மறுநாள் காலை ஆகாரத்தின் பின் கொழும்புக்குச் செல்வதாக ஏற்பாடு இரவு நயனதாரா வீட்டில் தங்கியவர்கள் காலையில் நேரத்தோடே தனம் வீட்டுக்குச் சென்று உணவை முடித்துக் கொண்டு ஒவ்வொருவரிடமும் விடைபெற்றவர்கள் மீண்டும் நயனதாராவின் வீட்டுக்குச் சென்றனர். சங்கரும் உடன் சென்றான் அவன் கண்கள் தாரணியைத் தேடின அவளைக் கண்டதும் மற்றையவர்களின் கவனத்தை ஈர்க்கா வண்ணம் அவளிடம் நெருங்கியவன்
"தாரு உங்க முடிவுக்காக ஒவ்வொரு நிமிசமும் காத்திட்டிருப்பேன். என்னை ஏமாத்திடாதீங்க" அப்போதும் எதுவும் பேசாது சிலையாக நின்றாள். இதனைப் பார்த்திருந்த நயனி தன் தோழி நல்லதாயொரு முடிவெடுக்க வேண்டுமென கடவுளிடம் பிராத்தித்துக் கொண்டாள்.
நயனதாராவின் வீட்டினரிடமும் விடைபெற்றுச் செல்லத் தயாராக நயனியின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தது. அதைப் பார்த்து மற்றையவர்களும் அழ அந்த சென்டிமென்ட் காட்சியைப் பார்த்து உதட்டை சுழித்தான் ஆதித்யன். சும்மா இருக்குமாறு அவனுக்குக் கண்ணைக் காட்டினார் காயத்ரி. ஒருவாறு சமாதானவள் தாரணியிடம் வர தாரணியும் அவளுக்கு விடை கொடுத்தவள் முடியாமல் அவளைக் கட்டிக் கொண்டு அழுதுவிட்டாள் நயனியின் கண்களும் கண்ணீரில் கரைந்தது. இந்தக் காட்சியைக் கண்ட ஆதித்யன் நண்பனுடன் சேர்ந்து கிண்டலடிக்க எண்ணி சங்கரின் புறம் திரும்ப அவனோ முகமெல்லாம் சோகமப்பிக்கிடக்க வைத்த கண் வாங்காமல் தாரணியையே பார்த்திருந்தான். அப்போதுதான் ஆதித்யனுக்கு சங்கரின் மனம் புரிந்தது. ஒருவாறு தோழிகள் இருவரும் சமாதானமாகி தாரணியிடம் கண்களால் சங்கரைக் காட்டிய நயனி அவளுக்கு மட்டும் கேட்கும்படியாக
"நல்லா யோசிச்சு நல்லதொரு முடிவெடுடி உன்னோட நல்ல பதிலுக்காக காத்திட்டிருப்பேன். அதோட அடிக்கடி கோள் பண்ணு நானும் பண்ணுவேன்." என்றவள் மீண்டும் அனைவரிடமும் விடைபெற மற்றையவர்களும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப சங்கரும் தன்னவளிடம் கண்களால் விடை பெற அவ்வளவு நேரமும் எதுவும் விளங்காது நின்றவள் அவன் தன்னைவிட்டுச் செல்லப் போகிறான் என்ற எண்ணம் எழ கண்ணிலிருந்து நீர் வடிய அவளையும் அறியாமல் அவனுக்கு தலையசைத்து விடை கொடுத்தாள். இந்த ஊமை நாடகத்தைப் பார்த்திருந்த நயனிக்கு தோழியின் பதில் அவள் சொல்லாமலே புரிந்தது. எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு அவளும் தன் குடும்பத்துடன் புறப்பட்டாள்.
வளரும்.....
Please share your comments here👇
www.sahaptham.com
நிலவு - 20
"நான் போகத்தான் போறேன் இதுக்கு மேல எனக்கு இங்க என்ன வேலை" காலையிலே ராஜேஸ்வரி ஆரம்பிக்க
"என்ன அத்தை சின்னப்புள்ளை போல பிடிவாதம் பிடிக்கீங்க நாங்க ஊருக்கு போறதுக்கு எப்படியும் நாலஞ்சு நாளாகும் அதுவரை நீங்க எப்படித் தனியா இருப்பீங்க. முதல்ல யார் கூட போகப் போறீங்க எல்லோரும் இங்கதானே இருக்காங்க அனுபமாவும் இரண்டு நாளைக்குப் பிறகுதானே போவா அப்போ எப்படி அத்தை போவீங்க அதையும் விட எவ்வளவு நாள் கழிச்சு நம்ம ஊருக்கு வந்திருக்கீங்க. எங்களோடேயே போகலாமே இருங்களேன்."
"இங்கப்பாரு காயத்ரி எனக்கு உன்னை விட்டா யாருமில்லை என்று நினைச்சுட்டாயா? என் மகளிருக்கா மருமகனிருக்காரு என்னோட ஷனாக் கண்ணு இருக்கா அவங்க கூடதான் போகப்போறேன்." காயத்ரி எவ்வளவு தடுத்தும் பிடிவாதமாக இருந்தார் ராஜேஸ்வரி. அப்போது அவ்விடம் வந்த தனலட்சுமி என்ன நடக்குது என விசாரிக்க நடந்ததைக் கூற அவரும் தன் பங்குக்கு ராஜேஸ்வரியிடம் எடுத்துக் கூறியும் அவர் செல்வதிலே குறியாயிருந்தார். அதற்கு மேல் எதுவும் செய்யமுடியாது சசிகலாவிடம் திரும்பிய காயத்ரி
"சசி அத்தையை கவனாமா பார்த்துக்கோ உங்க வீட்டுக்கே கூட்டிட்டு போயிடுங்க நான் வந்ததும் அவங்களை வீட்டுக்கு கூப்பிட்டுக்கிறேன்"
"நான் ஏன் அங்க போகனும் நான் என் வீட்டுலதான் இருப்பேன்" ராஜேஸ்வரி அழுத்தமாகக் கூற
"ஐயோ அத்தை ஏன் சின்னப்புள்ள மாதிரி பிடிவாதம் பிடிக்கீங்க, சரி நீங்க நம்ம வீட்டுலேயே இருங்க. சசி நான் வர்ர வரைக்கும் அம்மாகூட இருந்து பார்த்துக்குவாயா?"
"அண்ணி அவங்க உங்களுக்கு அத்தை ஆனால் எனக்கு என்னைப் பெத்தவங்க நாங்க நல்லாவே பார்த்துக்கோம்" முகத்திலடித்தால் போல கூற
"என்ன சசி இப்படிக் கதைக்குற நீயாவது அத்தைக்கு எடுத்து சொல்லியிருக்கலாம்."
"அண்ணி உங்க மகனுக்கு வெளியில பொண்ணு பார்த்தப்போ எங்க மகளுக்கு அந்த பங்கில்ல என்று நாங்க மனசை மாத்திக்கிட்டோம் ஆனால் எங்கம்மாவாலேயும் என் மகளாலேயும் அது முடியல்ல ஏன்னா எங்கம்மாக்கு அது கனவென்றால் என் மகளுக்கு அவ வாழ்நாள் லட்சியம். இங்க நடக்குற கூத்தெல்லாம் பார்த்துட்டு அவங்களால நிம்மதியா இருக்க முடியல்ல நாங்க போறோம் அண்ணி நீங்க உங்க சந்தோசத்தையெல்லாம் முடிச்சிட்டு மெல்லவே வாங்க." அத்துடன் பேச்சு முடிந்ததென பெட்டிகளை அடுக்கத் தொடங்கினாள். தன் வீட்டில் வேலை செய்யும் மரகத்தை அழைத்த காயத்ரி அவரையும் ராஜேஸ்வரியுடன் ஊருக்குப் போகச் சொன்னவர் வீட்டையும் சுத்தம் செய்து வைக்கச்சொன்னார். ராஜேஸ்வரி தன் மகள் குடும்பத்துடன் கொழும்புக்கு புறப்பட்டார்.
தொடர்ந்து உறவிலுள்ளவர்கள் ஒருவர் மாறி ஒருவராய் விருந்து கொடுத்தனர். ஒருவாறாய் அவர்கள் புறப்படும் நாளும் நெருங்கியது அன்று காலையில் மொட்டைமாடியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த ஆதித்யனிடம் வந்த காயத்ரி
"ஆதி இன்றைக்கு நயனிவோட வீட்டுல நம்ம எல்லோரையும் விருந்துக்கு வரச் சொல்லியிருக்காங்க. ஆனால் நான் உன்கிட்ட ஒரு வேண்டுகோள் வைக்கத்தான் வந்திருக்கேன்."
"இப்போ என்னம்மா அதான் எல்லாம் உங்க ஆசைப்படிதானே நடக்குது"
"இதுவும் என் ஆசை என்றே வச்சுக்கோப்பா ஒன்னுமில்லப்பா நாளைக்கு நாம ஊருக்குப் போயிடுவோமில்ல அதனால நயனிக்கும் அவ குடும்பத்தோட இருக்கனுமென்று தோணுமில்ல அத்தோட ஒருநாளாவது அவங்க வீட்டுல தங்கல்ல என்றால் அவங்களுக்கும் மனசு கஷ்டபடுமில்லை யோசிச்சுப்பாரு அவங்க இங்க ஒரு மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிருந்தா நயனி அவங்க வீட்டுலதானே இருந்திருப்பா ஆனால் இப்போ நம்ம கூட அவ்வளவு தூரத்துக்கு வரப்போறா அதானால இன்னைக்கு ஒருநாள் மட்டும் ப்ளீஸ்ப்பா அம்மாக்காக" எண்ண நினைத்தானோ அவனும் சரியென ஒத்துக் கொண்டான்.
விருந்துக்கு சங்கரும் வந்திருந்தான் தாரணியையும் அழைத்திருந்தாள் நயனதாரா. வந்ததிலிருந்து தாரணியிடம் தனியாக பேச சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் சங்கர் அதற்கேற்ப தாரணியும் வாழைஇலை வெட்ட தனியாக வர அவளை தொடர்ந்து வந்த சங்கரன்
"ஒரு நிமிஷங்க நான் உங்ககிட்ட இன்றைக்கு கதைச்சுத்தான் ஆகனும் ஏன்னா நானும் நாளைக்கு ஆதிகூடவே ஊருக்குப் போயிடுவேன் அதுக்கு முன்ன உங்க மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க நினைக்குறேன். நான் சொன்னதை இப்பவாவது யோசிச்சீங்களா? நீங்க ஓகே சொன்னா இப்பவே உங்க வீட்டுக்கு வந்து கதைக்குறேன் எங்க வீட்டுல எந்தப் பிரச்சனையுமில்லை. ப்ளீஸ் என்ன முடிவு பண்ணிருக்கீங்க"
"ஏங்க உங்களுக்கு ஒரு தடவை சொன்னா விளங்காதோ அந்த மாதிர எந்த ஃபீலிங்சும் எனக்கில்லை என்னை ஆள விட்டுட்டுங்கோ. ஏன் உங்களுக்கு வேற ஆள் கிடைக்கல்லையா? கொழும்புல வேற இருக்கீங்க கலர்கலரா ஆயிரம் புள்ளைங்க இருப்பாங்க அதுல ஒன்றைப் பார்க்க வேண்டியதுதானே"
"கதைச்சு முடிச்சாச்சா? ஆயிரம் பேரோட பழகியிருக்கேன் ஆனால் யாருமேலேயும் காதல் வந்ததுமில்லை பார்த்த உடனே கட்டிக்கத் தோனினதுமில்லை. அது எல்லாமே உங்கள்ல மட்டும்தான் வந்துச்சு உங்க முடிவை நீங்க சொல்லிட்டீங்க என்னோட முடிவையும் நான் சொல்லிடுறேன். என் லைஃப்ல கல்யாணம் என்றால் அது உங்களோட மட்டும் தான் என்னால எக்காரணத்தைக் கொண்டும் உங்களை இழக்க முடியாது" என்றவன் அவள் எதிர்பாராத நேரத்தில் அவள் கையிலிருந்த கைப்பேசியைப் பறித்து அதை இயக்க அது லொக் செய்யப்பட்டிருந்தது.
"என் போனைக் கொடுங்க" தாரணி
"பாஸ் வேர்ட் சொல்லு" அவள் முடியாதென மறுக்க அவன் போனைக் கொடுக்காது விடாப்பிடியாய் நிற்க வேறு வழியின்றி பாஸ் வேர்டை சொல்ல போனை இயக்கியவன் அவளது எண்ணிலிருந்து அவன் மொபைலுக்கு ஒரு மிஸ்ட் கோள் கொடுத்தவன் அவள் கைப்பேசியில் அவனுடைய பெயரையும் பதிவேற்றினான். இது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த நயனதாரா வந்த சுவடு தெரியாமல் அப்படியே திரும்பிச் சென்றாள்.
மதியவிருந்து முடிய ஆதியின் குடும்பம் விடைபெற்றது. ஆதியும் சங்கரோடு பழைய நண்பர்களைப் பார்த்து வருவதாய் கூறி வெளியே செல்ல தாரணியை அழைத்துக் கொண்டு தனது அறையுள் சென்று தாழிட்ட நயனதாரா அவளை முறைத்துக் கொண்டு நின்றாள்.
"ஏய் என்னடி ஆச்சு ஏன் இப்படி பார்க்குற"
"ஆ... உன்னைக் கொன்னுடலாமா என்றிருக்கு. நான் உனக்கு அவ்வளவு முக்கியமில்லையா?"
"என்னடி இப்படிக் கேக்குற நீ என் உசிருடி"
"ஓ.. அதனாலதான் சங்கரோட விசயத்தை உடனே வந்து சொன்னாயாக்கும் என்ன அப்படிப் பார்க்குற இவளுக்கு எப்படித் தெரியும் என்றா?" அவள் கேட்க முதலில் நயனிடம் மன்னிப்புக் கேட்டவள்
"உனகிட்ட மறைக்க நினைக்கல்ல அதுக்கான சந்தர்ப்பம் கிடைக்கல்ல உன்னோட சொல்லாம மனசுக்கு எவ்வளவு பாரமா இருந்துச்சு தெரியுமா?" என்றவள் அன்று கோயிலில் நடந்ததிலிருந்து இன்றுவரை நடந்த அனைத்தையும் கொட்ட அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள் நயனதாரா. தாரணி தொடர்ந்தாள்
"அதெப்படிடி ஒருநாள்ல அதுவும் பார்த்த உடனே காதல் வரும் இது நம்புற மாதிரியா இருக்கு. அதோட கண்ணுல இருந்து மறைஞ்சதும் கருத்தவிட்டு மறையுற மாதிரி கொழும்புக்குப் போய் கொஞ்ச நாள்ல அவர் என்னை மறந்துடுவார்"
"தாரு ஒன்னு சொல்லட்டா காதல் வாரதுக்கு ஒருநாள் தேவல்லடி ஒருநொடி போதும். உங்கிட்ட ஒரு உண்மையைச் சொல்லுறேன் நான் என்னோட வர்த்தனை முதல்ல போட்டோவில தான் பார்த்தேன் அந்த நிமிஷத்துல விழுந்தவதான். ஆனால் சங்கரண்ணா உன்னை பாதி நாளுக்கு மேல பார்த்துட்டிருந்திருக்காரு. அவர் மனசுல நூறு வீதம் உறுதியானதால தானே உன்கிட்ட கேட்டிருக்காரு அதுவும் கட்டிக்க. ஏன்டி உனக்கு உண்மையில சங்கரண்ணாவைப் பிடிக்கல்லையா?"
"உண்மையச் சொல்லனுமென்றா எனக்கு அவரை ரொம்ப புடிச்சிருக்கு. ஆனால் பயமாயிருக்கு. இந்தக் காதலை எல்லாம் நம்ப பயமாயிருக்கு. எங்க வீட்டை நினைச்சாலும் பயமாயிருக்கு முக்கியமா பெரியம்மாவை. அவங்களாலதான் இன்றைக்கு எங்கக்கா அவ வாழ்க்கையத் தொலச்சுட்டு நிக்குறாங்க."
"இங்கப்பாரு அது நடந்தும் எவ்வளவு காலமாயிடுச்சு உன் பெரியம்மாவும் கொஞ்சமாலும் மாறியிருப்பாங்க. சங்கரண்ணா ரொம்ப நல்லவருடி அவங்க வீட்டுலேயும் உன்னை மாதிரி ஒரு பொண்ணு என்றால் அவங்க அம்மா ஓகே என்றாங்க அது நீதான் என்றால் நிச்சயமாக ஏத்துப்பாங்க. நீ காதலிக்க எல்லாம் வேணாம் ஓகே மட்டும் சொல்லிடு அவர் உங்க வீட்டுக்கு வந்து கதைக்கட்டும்"
"நான் சம்மதிச்சுத்தான் வந்தாங்க என்று தெரிஞ்சா நான் செத்தேன். எங்கக்காவுக்கு நடந்ததும் அதுதானே. பாவம்டி அக்கா ஆனால் ஒன்னுடி அவங்க காதலிச்சவரை மட்டும் கட்டியிருந்தாங்க என்றால் இன்றைக்கு இப்படி யாருமில்லாத அநாதை மாதிரி ஊரை விட்டுப் போய் ஒரு பிள்ளையோட கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லையே. அவங்க காதலிச்சாங்க என்ற ஓரே காரணத்தாலதான் இவ்வளவு கஷ்டமும் அவங்களுக்கு வந்துச்சு. வேணாம்டி இந்தக் காதலே வேணாம். காதலிக்குற அளவு காதலிச்சிட்டு வீட்டுக்கு தெரிஞ்சதும் போராட முடியாம எங்கக்கா மாதிரி மனசுல காதலவச்சுகிட்டு காசுதான் முக்கியம் காதலில்லை காதலிக்கவே இல்லை என்று என்னால யாரையும் பொய் சொல்லி ஏமாத்த முடியாது இது எல்லாமே உனக்குத் தெரியும்தானே நயனி. அந்த அங்கிள் எவ்வளவு பாவமில்லை. இவளை மறக்க முடியாம எவ்வளவு கஷ்டப்பட்டாங்க."
"ஓம் டி என்னோட செல்ல அச்சு மாமா அக்காவால ரொம்பத்தான் கஷ்டப்பட்டுட்டாங்க. ஆனால் அக்காவும் வேணுமென்று எதுவும் பண்ணல்ல இல்லை மாமா நல்லாயிருக்கனும் என்றுதானே செஞ்சாங்க பெரியம்மாவும் அண்ணாவும்தான் இதுக்கெல்லாம் காரணம். நான் அதுக்குப் பிறகு அவங்களை காணவேயில்ல அப்பப்போ நினச்சுக்குவேன். ஏன் தாரு இந்த நாளையில என்னோட அச்சுமாமாவைக் கண்டிருக்காயா? இப்போ அவங்களும் ரொம்ப ரொம்ப பெரியவங்களா இருப்பாங்கயில்ல கல்யாணம் கட்டிருப்பாங்களா?"
"இல்லடி நானும் அப்போ கண்டதுதான். எங்க இருக்காங்க என்றே தெரியாது. ஆனால்.... ஒன்னு சொல்லுவேன் தப்பா எடுத்துப்பாயா?"
"என்னடி உனக்கும் வர்த்தனைப் பார்க்குறப்போ நம்ம அச்சு மாமா போல இருக்கா?"
"ஓம் டி அப்போ உனக்கும் அப்படித்தான் தோனிச்சா. அப்போ நீ நேராவே கேட்டிருக்கலாமே"
"கேட்டிருக்கலாந்தான் ஆனால் இப்போதைக்கு அது கஷ்டம்டி. தாரு ஃபெர்ஸ்ட் என்னை மன்னிச்சுடு ஏன்னா உன்னைப் போலதான் நானும் உங்கிட்ட ஒருவிசயத்தை மறைச்சுட்டேன்" என்றவள் ஆதித்யனுக்கும் தனக்குமிடையில் இருக்கும் சவாலைக் கூறிவிட்டு யாரிடமும் கூறக் கூடாதென்று சத்தியமும் வாங்கிக் கொண்டாள். ஒருவழியாய் தாரணிக்கு சங்கரின் காதலைப் புரியவைத்தவள் நன்றாக யோசித்து நல்ல முடிவை எடுக்கச் சொன்னாள்.
மறுநாள் காலை ஆகாரத்தின் பின் கொழும்புக்குச் செல்வதாக ஏற்பாடு இரவு நயனதாரா வீட்டில் தங்கியவர்கள் காலையில் நேரத்தோடே தனம் வீட்டுக்குச் சென்று உணவை முடித்துக் கொண்டு ஒவ்வொருவரிடமும் விடைபெற்றவர்கள் மீண்டும் நயனதாராவின் வீட்டுக்குச் சென்றனர். சங்கரும் உடன் சென்றான் அவன் கண்கள் தாரணியைத் தேடின அவளைக் கண்டதும் மற்றையவர்களின் கவனத்தை ஈர்க்கா வண்ணம் அவளிடம் நெருங்கியவன்
"தாரு உங்க முடிவுக்காக ஒவ்வொரு நிமிசமும் காத்திட்டிருப்பேன். என்னை ஏமாத்திடாதீங்க" அப்போதும் எதுவும் பேசாது சிலையாக நின்றாள். இதனைப் பார்த்திருந்த நயனி தன் தோழி நல்லதாயொரு முடிவெடுக்க வேண்டுமென கடவுளிடம் பிராத்தித்துக் கொண்டாள்.
நயனதாராவின் வீட்டினரிடமும் விடைபெற்றுச் செல்லத் தயாராக நயனியின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தது. அதைப் பார்த்து மற்றையவர்களும் அழ அந்த சென்டிமென்ட் காட்சியைப் பார்த்து உதட்டை சுழித்தான் ஆதித்யன். சும்மா இருக்குமாறு அவனுக்குக் கண்ணைக் காட்டினார் காயத்ரி. ஒருவாறு சமாதானவள் தாரணியிடம் வர தாரணியும் அவளுக்கு விடை கொடுத்தவள் முடியாமல் அவளைக் கட்டிக் கொண்டு அழுதுவிட்டாள் நயனியின் கண்களும் கண்ணீரில் கரைந்தது. இந்தக் காட்சியைக் கண்ட ஆதித்யன் நண்பனுடன் சேர்ந்து கிண்டலடிக்க எண்ணி சங்கரின் புறம் திரும்ப அவனோ முகமெல்லாம் சோகமப்பிக்கிடக்க வைத்த கண் வாங்காமல் தாரணியையே பார்த்திருந்தான். அப்போதுதான் ஆதித்யனுக்கு சங்கரின் மனம் புரிந்தது. ஒருவாறு தோழிகள் இருவரும் சமாதானமாகி தாரணியிடம் கண்களால் சங்கரைக் காட்டிய நயனி அவளுக்கு மட்டும் கேட்கும்படியாக
"நல்லா யோசிச்சு நல்லதொரு முடிவெடுடி உன்னோட நல்ல பதிலுக்காக காத்திட்டிருப்பேன். அதோட அடிக்கடி கோள் பண்ணு நானும் பண்ணுவேன்." என்றவள் மீண்டும் அனைவரிடமும் விடைபெற மற்றையவர்களும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்ப சங்கரும் தன்னவளிடம் கண்களால் விடை பெற அவ்வளவு நேரமும் எதுவும் விளங்காது நின்றவள் அவன் தன்னைவிட்டுச் செல்லப் போகிறான் என்ற எண்ணம் எழ கண்ணிலிருந்து நீர் வடிய அவளையும் அறியாமல் அவனுக்கு தலையசைத்து விடை கொடுத்தாள். இந்த ஊமை நாடகத்தைப் பார்த்திருந்த நயனிக்கு தோழியின் பதில் அவள் சொல்லாமலே புரிந்தது. எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு அவளும் தன் குடும்பத்துடன் புறப்பட்டாள்.
வளரும்.....
Please share your comments here👇
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் - Comments
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏, வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...
