Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காதலா! காதலா!- கதைத்திரி

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,011
Reaction score
1,132
Points
113
அசோகா மது அருந்திக் கொண்டிருந்த தன் இரட்டையனைப் பார்த்து, அவனால் தற்போது காரோட்ட இயலாது என்பதை புரிந்து எரிச்சல்பட்டான்.


அலைபேசியில் ஓட்டுநர் ஒருவரை அழைத்து, அக்னியை வீட்டில் விடும்படி கட்டளையிட்டான்.


வந்தவருடன் போதையில் தள்ளாடியபடியே சென்று தன் காரில் ஏறப்போன அக்னியை, தடுத்து நிறுத்தியது ஒரு பெண் குரல். அந்தக் குரலுக்கு சொந்தக்காரி வேறு யாருமில்லை கல்பனா தான்.


அவன் அருகில் வந்தவள், "என்னப்பா கருப்பா சீக்கிரமே கிளம்பிட்ட? என்ன கண்ணெல்லாம் சிவந்து போயிருக்கு? ஸ்ட்ரெஸா இருக்கியா? உன்னைப் பார்த்தாலே தெரியுது நல்லா இல்லைனு. சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கோப்பா. ஏன்னா சும்மாவே உன்னை எவளும் கல்யாணம் பண்ணிக்க மாட்டா. இதுல நீ கிழவனா வேற ஆகிட்டா பார்க்க சகிப்பியா சொல்லு? அப்பறம் சொல்ல மறந்துட்டேனே, என் தம்பி ப்ரைம் ஸ்டார் ப்ரித்விஹாசன் பெரிய சினிமா ஆக்டர். பெட்டி நிறைய சம்பளம். இன்னும் ரெண்டு வருஷத்துல சூப்பர் ஸ்டார் ஆகக்கூட சான்ஸ் இருக்கு. உன் வயசு தான் அவனுக்கும். பாரு, இப்ப அவனுக்கு கல்யாணம் நடக்கப் போகுது. உங்கம்மா பூர்ணிமா ரொம்ப கவலைப்படுறாப்பா. எப்படி இந்த கருப்பனுக்கு முடிக்காம அச்சுவுக்கு கல்யாணம் பண்றதுனு. இன்னொரு முக்கியமான விசயம், எல்லாத்தையும் கஷ்டப்பட்டு செஞ்சா மட்டும் பத்தாது தம்பி. அதை பத்திரமா வச்சுக்கவும் தெரியணும். நான் என்ன சொல்றேனு கேட்கறியா? நான் எல்லாத்தையும் தான்பா சொல்றேன்." என்றவள் நகர்ந்துவிட, கண்கள் சிவக்க ஆத்திரத்தில் தன் காரின் கண்ணாடியில் ஓங்கி குத்தினான் அக்னிமித்ரன்.


அதன் விளைவால் கண்ணாடியில் பல விரிசல்கள் விழுந்தன.


ஓட்டுநர் பதறினார். தனது கைக்குட்டையால் அவனது கையைக் கட்டினார்.


ஆனால், வீம்புக்காரன் அதனை கழற்றி வீசினான். அவனுக்கு ஏதோ போதை மொத்தமும் இறங்கியது போல் இருந்தது.


ஓட்டுநரை தனது நிறுவனத்துக்கு காரை விடச்சொன்னவன், அந்நேரம் தன் ஆள் ஒருவனுக்கு அழைப்பு விடுத்து, “நான் கேட்டது ரெடியா? நான் கேட்ட டீட்டெயில்ஸ், இப்பவே.. இப்பவே.. எனக்கு வந்தாகனும்” என்று உறுமினான்.


அடுத்த ஐந்து நிமிடங்களில் அவன் கேட்டது கிடைத்தது. சிங்கம் வேட்டைக்கு தயாரானது.


அந்நேரம் பார்த்து அசோகமித்ரனிடமிருந்து அழைப்பு வர, அழைப்பை ஏற்று கடுத்தக்குரலில் என்னவென்று கேட்டான்.


"ஏய்! கையை புண்ணாக்கிக்கிட்டியாம்? அந்த கல்பனா வேற ஏதோ சொன்னாங்களாம்? நீ எதுக்கு இப்போ கம்பெனி போயிருக்க?" என்று அடுக்கடுக்காக கேள்விக்கணைகளை தொடுத்தான்.


எரிச்சலடைந்த அக்னியோ, "ப்ச், சும்மா என்னை கேள்விகேட்டு டார்ச்சர் பண்ணாத? ஐ டோன்ட் லைக் இட் ஃப்ரம் எனிபடி. இன்னொரு விசயம்‌ நம்ம நினைக்கற மாதிரி, என் இன்னொரு ப்ராஜெக்ட் ஒன்னும் மினிஸ்டர் சந்தானத்துக்கிட்ட இல்ல. இன்ஃபாக்ட் அந்தாளுக்கு இதைப் பத்தி எதுவுமே தெரியல. வெறும் ஒன்செவன்டி சி கிடைச்சதையே பெருமையா பேசிட்டு இருக்கான். பட், கல்பனா டேஞ்சரஸ். அவ என்கிட்ட பேசின வரைக்கும், அது அவகிட்ட இருக்கறதா தான் சொன்னா. ஃபைவ் ஹன்ட்ரெட் சி சும்மா விடுவாளா? அவ வேற கம்பெனிக்கு அதை தாரை வார்க்க‌ இருக்கானு நினைக்கறேன். அதான் அதைத் தன் புருஷனுக்கே தெரியாம மறைச்சு வச்சிருக்கா. சோ, வேலை சிம்ப்பிள். அவ எப்படி என் வீட்டுள்ள வந்து என் டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு போனாளோ, அதே மாதிரி நானும் அவ வீட்டுக்குள்ளப் போய் அவ டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும் எடுக்கப் போறேன். குட் நைட் வொய்ட்டி" என்று அழைப்பைத் துண்டித்தான்.


"வாட்?" என அதிர்ந்து போயிருந்தான் அசோகா.


மறுபுறம் மேசையில் தனது கைகளை ஊன்றி கோணல் சிரிப்பு சிரித்த அக்னி, "வெய்ட் அண்ட் சீ மிஸ்டர் அண்ட் மிசஸ் சந்தானம். நான் நல்லவனுக்கு நல்லவன். அதே சமயத்துல கெட்டவனுக்கு ரொம்பக்கெட்டவன். யூ வில் சீ மை அனதர் ஃபேஸ்" என்று குரோதத்துடன் சொன்னான்.



தொடரும்...
 

Shivani Selvam

Well-known member
Saha Writer
Messages
1,011
Reaction score
1,132
Points
113
இந்த நாவல் பிடிச்சிருந்தா லைக் பண்ணவும் கமெண்ட் பண்ணவும் மறக்காதீங்க க்ளோப்ஜாமூன்ஸ்🙂
 
Status
Not open for further replies.

Latest posts

New Threads

Top Bottom