Priyamudan Vijay
New member
- Messages
- 11
- Reaction score
- 9
- Points
- 3
BK-31, கூட்டத்திலெது ஓநாய்?, அத்தியாயம் – 5
“அப்போ அவங்களுக்குத் தான் முடிவு கட்டணும்னு சொன்னீங்களா ராஷ்?” என்று அதிர்ச்சியிலிருந்து மீளாமல் ஷின் கேட்க.. அவளும் ‘ஆமாம்’ என்பது போல் தலையில் கை வைத்தபடி மேலும் கீழுமாய் தலையசைத்தாள். அதனைப் பார்த்தவனுக்கு மேலும் அதிர்ச்சி..
‘முடிவு கட்டணும்னா, எதைச் சொல்லுறாங்க?’ என்றெண்ணியபடி ரஷிகாவை நோக்கியவன், “சரிங்க ராஷ். நம்ம அப்புறம் மீட் பண்ணலாம்” என்று கூறிவிட்டு நகர்ந்தான்.
கூடத்திற்கு வந்த ஷின்னிற்கு அதைவிடப் பெரிய அதிர்ச்சி ஒன்று காத்துக்கொண்டிருந்தது. ஃபர்ஹானிடம் அந்த எலிசா மிக நெருக்கமாகப் பேசிக்கொண்டிருந்தாள். ஃபர்ஹான் காதல் மொழிகளைப் பேசவும், அதைக் கேட்டு அவள் வெட்கி சிவப்பதுமாக இருந்தாள். அதனைக் கண்டவனுக்கு,
‘அய்யயோ! இந்த நாய் இந்தப் பொண்ண, அவனோட புகழாசைக்குப் பலியாக்க பிளான் பண்ணிருச்சு போலையே!’ என்றெண்ணியபடி அவர்கள் இருவரையும் கடந்து சென்ற ஷின், அவன் அறைக்குச் சென்று தன் மெத்தையில் அமர்ந்தான். ஷின்னின் நினைவெல்லாம் அன்றைய பொழுதில் நடந்த மர்மங்களிலேயே இருந்தது. ஒருமுறை காலையிலிருந்து நடந்தவைகளைக் கண்மூடி எண்ணிப்பார்த்தான்..
‘காலைல, இந்த சௌந்தரியா ஏதோ பிரச்சனை வரும்னு சொன்னாள்.. என்ன பிரச்சனைனு கேட்ட அப்புறம் ஆளையே காணோம். இப்போ வரைக்கும் கூடப் பேசலை. அப்புறம் அந்த ஆண்ட்ரூ... அவனே ஆள் மர்மமா தான் இருக்கான். இந்தப் பங்களாவோட மூளைமுடுக்கெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கான். நான் பார்க்க, சிரிச்சுட்டே என் பின்னாடி வந்தவனோட முகத்துல, தோட்டத்துக்குப் பின்னாடி இருக்குற காட்டுப் பகுதிய பத்தி கேட்கவும் முகம் சுருங்கிருச்சு. கடைசியா இந்த ரஷிகா.. எலிசாவ போட்டுத்தள்ளணும்னு பகீரங்கமா சொல்லுறாள்...’ என்றெண்ணியவனுக்குத் தலை லேசாக வலிக்கவே, எழுந்து சென்று தண்ணீர் ஜாடியை எடுத்தான். அதில் தண்ணீர் காலியான நிலையிலிருக்கவே, தன் தலையில் கை வைத்த நிலையில், அவ்வறையிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
‘ம்ம்ச்ச்... இப்போ தண்ணீர் எடுக்க, கீழே போகணுமா?’ என்றெண்ணிச் சலித்தவன், மெதுவாக எழுந்து அடுப்படிக்குச் சென்றான். கைக்கடிகாரத்தைப் பார்த்த ஷின், அது மணி ஏழு என்று கூறவே..
‘காமெரா ரோல்லிங் முடிஞ்சிருக்கும்...’ என்றெண்ணியபடி அடுப்படிக்குள் அவன் செல்ல எத்தனிக்க... அங்கே அடுப்படிக்கு அருகிலிருந்த மாடிப்படியின் அடிப்பகுதியில் ஃபர்ஹானும் எலிசாவும் உதட்டில் முத்தமிட்டுக்கொண்டிருக்க... ஷின் அதனைக் கண்டு அதிர்ந்தான்.
‘அச்சசோ!!! என்ன இது?!!!’ என்றெண்ணி அதிர்ந்த ஷின், கண்களை மூடிக்கொண்டு அடுப்படிக்குள் சென்றான். அவனால் அவன் கண்களை நம்ப முடியவில்லை. ஏனென்றால், தன் அழகில் மயங்கி அனைவரும் பேசிய முகஸ்துதிக்கு மயங்காத எலிசா, எவ்வாறு ஃபர்ஹானின் வலையில் விழுந்தாள் என்று வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது..
‘முத்தங்கள் கொடுக்குறது, இந்த அமெரிக்காவுல சாதாரணம் தான். ஆனால், எலிசா புகழ்ச்சிக்கு மயங்காதவள் போலல தெரிஞ்சா? இந்த பாவி பேசி பேசியே அந்தப் பிள்ளைய லவ் பண்ணுறது போலக் காட்டி, பேமஸ் ஆகலாம்னு முடிவுக்கு வந்துட்டான்.. ச்சே! என்ன மாதிரி புத்தி இவனுக்கு?’ என்று தன் மனதிற்குள் ஃபர்ஹானை புகழ்ந்து தள்ளியவன், மெல்ல நடந்து போய் அடுப்பு மேடைக்கருகிலிருந்த ஃபில்டரைத் திறந்து தண்ணீர் ஜாடியைக் கீழே வைத்துப்பிடித்தபடி நின்றான். திடீரென்று ஃபர்ஹானும் எலிசாவும் சிரித்துப் பேசும் சப்தம் அருகில் கேட்கவும்,
‘ஆஹா! இதுங்க ரெண்டும் இங்கே வருதுங்க போலையே!’ என்று தனக்குத் தானே பேசியவன், ஒளிந்துகொள்ள இடத்தைத் தேடியவனை ஒரு கை, இழுத்துச் சென்றது. அடுப்படியிலிருந்த ஃபிரிட்ஜிற்கு அருகில் போய் ஒளிந்தவன், தன்னை இழுத்தது யாரென்று திரும்பிப் பார்க்க.. அருகில் சௌந்தரியாவும் அவர்கள் இருவருக்கும் தெரியாதவாறு மறைந்து உட்கார்ந்திருப்பது தெரியவரவே,
“ஹேய் சௌந்தரியா..!!” என்று ஷின் அழைக்கவும், அவன் வாயை தன் கைக்கொண்டு மூடியவள் மெதுவாக எட்டிப்பார்த்தாள். அங்கே எலிசாவும் ஃபர்ஹானும் அடுப்பு மேடைக்கு அருகில் நின்று சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்துவிட்டு, ஷின்னின் பக்கம் வந்தவள்,
“லூசு மாதிரி சத்தம் போட பார்த்தியே!! என்று மிகவும் மெல்லிய குரலில் சௌந்தரியா ஷின்னிடம் பேசுவதும், அவர்கள் இருவரும் சென்றுவிட்டனரா? என்று பார்ப்பதுமாக இருக்க.. ஷின் சௌந்தரியாவின் அருகாமையை ரசித்துக்கொண்டிருந்தான். இரவின் நிலவொளி அவ்வடுப்படியில் சாளரம் வழியாக வந்து, அவள் முகத்தில் பட்டு, அவளது தோல் மின்னுவதைப் பார்த்தான். கழுத்தில் மெல்லிய தங்கச்செயின் உருண்டு விளையாட, அதன் விளையாட்டில் ஷின் லயித்துப்போனான்... காதுகளில் மிகச்சிறிய அளவில் தொங்கும் தோடு, அங்கே ஓடிய மின்விசிறியின் காற்றுபட்டு மெதுவாக அசைய, அதன் அசைவில் ஷின் சொக்கி தான் போனான்..
“ஹும்ம்ம்ம்... அந்த தோடாக நானிருக்கக் கூடாதா?????” என்று பெருமூச்சுவிட்டபடி, சௌந்தரியாவின் காதுகளுக்கு மட்டும் கேட்கும் வகையில் ஷின் வாய்விட்டுப் பேசிவிட.. சட்டென்று அவன் புறம் திரும்பியவள்,
“என்ன?!” என்று கேள்வியாகக் கேட்டவளுக்கு ஷின்னின் உதட்டை தன் கையால் மூடியிருப்பது அப்பொழுது தான் உறைத்தது. அதனை உணர்ந்தவளாகத் தன் கீழுதட்டை மடித்துக் கடித்தபடி, தன் கரத்தை அவன் உதட்டிலிருந்து எடுத்தவளின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்திருந்தது. அதனைக் கவனித்த ஷின்னின் கண்கள் குஷியில் மின்ன.. மெதுவாக அவள் காதுப்பக்கம் சென்று, மெல்லிய குரலில்,
“என்னமோ கேட்க வந்த?” என்று ஷின் கேட்கவும், வெட்கத்தில் புன்னகைத்தவாறு தலைகுனிந்த சௌந்தரியா, ஷின்னைப் போல் மிகவும் மெல்லிய குரலில்..
“என்னமோ சொன்னீங்களே! அது என்னனு கேட்க வந்தேன்....” என்று வெட்கத்தில் அவள் தனக்கு மரியாதைத் தந்து பேசியதை கவனித்த ஷின், சௌந்தரியாவைக் கண்ணிமைக்காமல் பார்த்துவைக்க... அவன் கண்களைப் பார்க்க வேண்டாமென்று முடிவெடுத்தவளாகக் குனிந்த தலை நிமிராமல் இருந்தாள் அவள். அவளின் இச்செயல் ஷின்னிற்குப் பிடித்துப் போகவே, குறும்பு மின்னும் கண்களோடு சௌந்தரியாவிடம்..
“உன் காதுல அழகா ஆடும் அந்தத் தோடாக நான் இருந்திருக்கக் கூடாதா? னு வருத்தப்பட்டேன்.” என்று ஷின் தன் உதட்டோர புன்னகையோடு சௌந்தரியாவின் குனிந்த முகத்தைப் பார்த்தவாறு கூற.. அவளுக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது. அவளது வெட்கத்தை ஷின் ரசித்துப்பார்த்துக்கொண்டிருக்க, அங்கே ஃபர்ஹானும் எலிசாவும் அவ்விடத்தைவிட்டு அகழும் சப்தம் கேட்டு, சௌந்தரியா அவர்கள் சென்றுவிட்டதை உறுதி செய்யும் விதமாக மெல்ல எட்டிப்பார்த்தாள். ஃபர்ஹானும் எலிசாவும் அவ்விடத்தைவிட்டு வெகுதொலைவில் சென்றுவிட்டதை உறுதி செய்த சௌந்தரியா, மெதுவாக எழுந்து ஷின்னையும் எழுந்திருக்கச் சொன்னாள்.
“நல்ல வேலை.. அதுங்க ரெண்டும் நம்மல பார்க்கல..” என்று கூறியபடி ஷின்னை நோக்க, அவன் கண்ணோ கிண்டலாகப் பார்த்தது. “என்ன பா? எதுக்கு இப்படிக் கிண்டலாப் பார்க்குற?” என்று யோசனையாகக் கேட்டாள் சௌந்தரியா.
“நீ எதுக்கு இங்கே வந்த? எதையாவது பார்த்து வச்சுட்டீயா?” என்று வினவிய ஷின் வெடித்துச் சிரிக்க.. தனது நாக்கினை பற்களால் கடித்தவள்,
“நீ பார்த்தியா?” என்று ஷின்னின் கேள்வியை அவனுக்கே சௌந்தரியா திருப்பிவிட..
“ஆ.. அதெல்லாம் கேட்கக்கூடாது.” என்று கூறி சிரித்தவனுக்கு அன்று காலை சௌந்தரியா தன்னிடம் விசித்திரமாக நடந்துகொண்டது நினைவிற்கு வரவே.. “உன்கூட நான் பேசமாட்டேன் சௌண்ட்..” என்று தன்னை மீறி அவளை ‘சௌண்ட்’ என்று ஷின் அழைக்க.. அதனை மனதிற்குள் ரசித்தாள் அந்த மங்கை. ஆனாலும் அவனது இந்த கோபத்தின் காரணம் அறிய அவளது மூளை அவளை பிறாண்ட,
“எதுக்காம்?” என்று ஷின்னின் கண்ணைப் பார்த்து சௌந்தரியா கேட்ட விதத்தில் அப்படியே சிலையாகிப் போனான் ஷின். பிறகு தன் தலையை உலுக்கி,
‘ஆஹா!! நம்மல கவுக்கப் பார்க்குறாள்... நான் அசையமாட்டேனே..’ என்று தனக்குத் தானே உறுதிப்பூண்டு மீண்டும் அவளை ஷின் நோக்க.. சௌந்தரியாவோ அதே மாயப்பார்வையை ஷின்னின் பக்கம் செலுத்தினாள். ‘என்னமா இப்படி பண்ணுறாளே மா..!! ஷின்... அவளோட எந்த ஃபயர் லுக்கும் உன்னைய ஒன்னும் பண்ணமுடியாது டா. நீ கேட்க வந்த விசயத்த, அதே கோபத்தோட கேட்டுடு..’ என்று ஷின் தன் மனதுடன் வாதாடிவிட்டு சௌந்தரியாவின் கண்ணைப் பார்க்காமல் பேசினான். “இன்னைக்கு காலைல இருந்து நீ விசித்திரமாவே நடந்துக்குற சௌண்ட்.. முதல்ல ஏதோ பிரச்சன வரும் ங்கற ரீதியில சொல்லுற.. என்னனு கேட்டா அமைதியாகிடுற. அப்புறம், ஆண்ட்ரூ கூட வெளியே போகவானு நான் வாட்ஸ்-அப்ல மெசேஜ் பண்ணதுக்கு நீ அதைப் பார்த்தும் பதிலனுப்பல. அதான் உன்கூட பேசமாட்டேன்னு இருக்கேன்.” என்று பொய் கோபத்துடன் பேசிவிட்டு, சௌந்தரியாவிற்கு முதுகு காட்டி நின்றுகொண்டான். அவன் விளையாட்டாகக் கோபித்துக்கொண்டான் என்பதை உணர்ந்தாலும், அவனது கேள்வி ஏனோ சௌந்தரியாவை உறுத்த..
“ஷின்! என்னால எதையும் முழுசா சொல்லமுடியாது. ஆனால், மேலோட்டமா சொல்லுறேன். இங்கே, இந்த பங்களாவுல சில பிரச்சனைகள் வரும்.. அந்த பிரச்சனைகள்ல இருந்தும் உன்னைய பாதுகாத்துக்கணும்னா, நீ பங்களாவோட பின்பக்கத்துல ஒரு தோட்டம் இருக்கு. அங்கே போகாத... அங்கே யாரும் போகக்கூடாதுனு தான் அதுக்குப் போற வழி எங்கே இருக்குனு யாருகிட்டையும் சொல்லாம மறைச்சு வச்சிருக்கோம். சொல்லப்போனா, அப்படி ஒரு தோட்டம் இருக்குதுங்கறதையே நீங்கள் யாரும் தெரிஞ்சிருக்க மாட்டீங்க. ஆனாலும், அங்கே எப்படிப் போறாங்கங்கற விசயம் மட்டும் மர்மமாவே இருக்கு.” என்று கூறியவள் ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டு தன் பேச்சைத் தொடர்ந்தாள். “ம்ம்... அந்த பின்பக்க தோட்டத்துல தான் பிரச்சனை. நாளைக்கு ஒருவேளை, நீ அங்கே தெரியாம போய்ப் பிரச்சனைல சிக்கினாலும், உன்னைய காப்பாத்த, உன் பிரண்ட்ஸ் வரணுங்கற காரணத்துக்காகத் தான் நான் காலைல அப்படிச் சொன்னேன். நீ சட்டுனு கேட்கவும், என்னால சொல்ல முடியல. இப்போ கூடப் பிரச்சனை என்னனு, முழுசா என்னால சொல்லமுடியலைனாலும், பின்பக்க தோட்டம் ஆபத்தானதுனு சொல்லிட்டேன். இதைக்கூட வேற யாருகிட்டையும் சொல்லிடக்கூடாதுனு மேலிடத்தோட உத்தரவு. அந்த உத்தரவையும் மீறி உன்கிட்ட மட்டும் தான் சொல்லிருக்கேன். வேற யாருகிட்டையும் இதை நான் சொன்னதில்ல. சொல்லவும் மாட்டேன். நீ பிரச்சனைல மாட்டி, உனக்கு ஏதாவது ஆயிட்டா.....” என்றுக்கூறியவளுக்கு அதற்கு மேல் பேச இயலாமல், அழுகையில் மூச்சு முட்ட, ஷின் அவளைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.
“எனக்கு ஒன்னும் ஆகாது. சரியா? உன் விருப்பம் போல, நான் பின்பக்க தோட்டத்துக்குப் போகல. சரியா?” என்று அவளை அணைத்தபடி ஆறுதலாகக் கூறவும் அமைதியானாள் சௌந்தரியா. சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, தன்னிலை வந்த இருவரும், சட்டென்று விலகிக்கொண்டனர்.
“சரி.. நம்ம காலைல மீட் பண்ணலாம்..” என்று கூறிவிட்டு சௌந்தரியா திரும்பி பார்க்காமல் ஓடினாள்.
அவள் செல்லும் வரை அவளையே பார்த்துக்கொண்டிருந்த ஷின், தன் பற்கள் தெரிய சிரித்துவிட்டு தன் கைக்கடிகாரத்தை பார்த்தான். அது மணி 9 என்க, இரவு உணவைச் சாப்பிட அமர்ந்தான் அவன்.
இரவு உணவை முடித்துவிட்டு, தன் அறைக்குச் சென்றவனுக்குத் தூக்கம் சொக்க.. அப்படியே மெத்தையில் படுத்துக் கண்ணயர்ந்தான்.
இரவு 11 மணியான நிலையில், எலிசாவின் அலறல் சப்தம், அப்பங்களாவெங்கும் ஒலித்தது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஷின் கண் விழித்தான். ஓர்லியன் பங்களாவிலிருந்த அனைவரும், ஷின் உட்பட, எல்லோரும் சப்தம் வந்த திசையை நோக்கி விரைந்தனர். மீண்டும் அவளின் அலறல் குரல் கேட்க, பங்களாவின் பின்புறத்திலிருந்த அந்தத் தோட்டத்திலிருந்து தான் எலிசாவின் அலறல் சப்தம் கேட்பதையறிந்தவர்கள், வேகவேகமாக அத்தோட்டத்திற்கு ஜெனிபர் காட்டிய பாதையில் ஓடினர். அங்குச் செல்வதற்கான கதவுகள் நிறையப் பாதுகாப்புகளுடன் பூட்டியிருக்கவே, ஜெனிபர் தன்னிடமிருந்த சாவிக்கொத்தினை வைத்து அந்த பூட்டுகளைத் திறந்து, கதவுகளைத் திறந்தார்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும் சென்றதைவதற்குள் எலிசா அங்கே மாய்ந்துக்கிடந்தாள். அவளின் உயிரற்ற உடல் மட்டுமே அங்கே இருந்தது. அவள் உடல் முழுக்க, ஒரு விலங்கின் நகக் காயங்கள் இருந்தன. அவளின் ஆடை, அவ்விலங்கின் நகம்பட்டுக் கிழிந்துக்கிடந்தது. அப்பெண்ணின் கழுத்துப் பகுதிச் சதை, அவ்விலங்கின் பற்களால் கடித்தெறியப்பட்டது என்று தெரிந்தது.
பங்களாவிலிருந்த போட்டியாளர்களில் சிலர் அவரவர் கண்களை இறுக மூடிக்கொண்டனர். அப்படியிருந்தது, எலிசாவின் உயிரற்ற உடலின் நிலை. அவளின் இந்நிலையைக் கண்ட ஷின், சௌந்தரியாவிடம் சென்று,
“ஏன் பா எலிசாவுக்கு இப்படி ஆச்சு? இவங்களுக்கு இந்த நிகழ்ச்சியில நல்ல வரவேற்பு வந்துச்சுனு, நம்ம சீனியர் டைரக்டர் ஜெனிபர் கூட சொன்னாங்களே?! அதுக்குள்ள இவங்களுக்கு ஏன் தான் இப்படி நடந்துச்சோ?! இவங்களோட உடலப் பார்க்கைல ஏதோ விலங்கு வேட்டையாடிருக்குறது போலத் தெரியுது. என்ன விலங்கு இவங்கள இப்படிச் செஞ்சிருக்கும்? அதுவும் பங்களாவோட பின்பக்கத்துல என்ன விலங்கோட நடமாட்டம் இருக்கு?” என்று ஷின் கேட்கவும், அதுவரை அப்பெண்ணின் உயிரற்ற உடலைக் கண்டு கண்ணீர் வடித்தவள், ஷின்னின் கேள்வியில் அவனை நிமிர்ந்துப்பார்த்தாள்.
“எனக்கும் தெரியல ஷின். நிகழ்ச்சி டெலிகேஸ்ட் ஆகைல, எல்லா சோசியல் மீடியாலையும் நேயர்கள் இந்தப் எலிசாவைப் பத்தித் தான் புகழ்ந்துப் பேசிட்டிருந்தாங்க. அதவச்சுத் தான் ஜெனியே அப்படிச் சொன்னாங்க. நான் கூட இந்தப் பொண்ணு இறுதிச்சுற்றுக்கு வரும்னு நம்புனேன்.. ஆனா.....” என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டையடைத்தது. சௌந்தரியாவை சமாதானம் செய்யும் வழி தெரியாமல் ஷின் விழித்துக்கொண்டிருந்த வேளையில், ஓர்லியன் பங்களாவிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்த வனப்பகுதியில் விலங்குகளின் வெறிகொண்ட நான்கு கண்கள், அப்பங்களாவைப் பார்த்துக்கொண்டிருந்தன.
நிலைமை இப்படிப் போய்க்கொண்டிருக்க, ஷின்னின் மூளையோ,
‘முதல்ல எலிசாவுக்கு இந்தத் தோட்டத்தப் பத்தி எப்படித் தெரியும்?’ என்று யோசிக்கத்தொடங்கியது.
சௌந்தரியா அன்றிரவு கூறியது போல, இந்த பின்பக்கத் தோட்டத்தைப் பற்றி, எவரும் அறிந்திலர். அப்படியே அறிந்திருந்தாலும், அதற்குரிய பாதையை அறிந்தவர் எவரும் இல்லை.
இவ்வாறாக யோசித்துக்கொண்டிருந்த அவனது மூளைக்கு அலாரம் அடித்தது போல ஆண்ட்ரூவின் ஞாபம் வரவே, சட்டென்று அவன் நிற்கும் திசையை நோக்கினான். கண்களைச் சுருக்கி, ஆண்ட்ரூவின் நடவடிக்கைகளைக் கவனித்தான். எலிசாவின் உடலுக்கு அருகில் கூடியிருந்த போட்டியாளர்கள் அனைவரது முகத்திலும் வருத்தம் தென்பட்டது. ஆனால், ஆண்ட்ரூவின் முகம் வருத்ததைப் பிரதிபலிக்காமல் ஒருவித அசட்டையைப் பிரதிபலிக்கவே... கண்கொட்டாமல் ஆண்ட்ரூவையே நோக்கினான். ஆண்ட்ரூவிற்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. சட்டென்று ஷின்னைப் பார்த்தான் அவன். ஷின்னைப் பார்க்கவும் அவனது முகத்தில் ஒரு பிரகாசம். அவனைக்கண்டு, ஆண்ட்ரூ புன்னகைத்தவன் ஷின்னின் யோசனையான பார்வையைக் கண்டதும் அவனது புருவங்கள் நெறித்தது. சட்டென்று தன் முகத்தை வேறுபுறம் திருப்பிய ஆண்ட்ரூ, மீண்டும் ஷின்னை நோக்க.. அவனோ வைத்த கண் வாங்காமல் அதே யோசனையான பார்வையைப் பார்த்துவைத்தான். வேறுபுறம் தன் தலையைத் திருப்பியவனுக்கு, எதனாலையோ அக்குளிர் வேளையிலும் முகம் வியர்த்தது.
ஓரக்கண்ணால் ஷின்னைப் பார்த்தபடி தனது பேண்ட் பாக்கெட்டினுள் கைவிட்டு எதையோ எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆண்ட்ரூவின் கைகளுக்கு எதுவும் கிடைக்காமல் போகவே, அவன் முகத்தில் பதட்டம் அப்பட்டமாகத் தெரிந்தது. எதையும் பார்க்காமல் ஆண்ட்ரூ, வேகவேகமாக பங்களாவிற்குள் நுழைந்தான். இதனையே பார்த்துக்கொண்டிருந்த ஷின்னிடம் சௌந்தரியா அழுகுரலில் பேசினாள்.
“இந்த எலிசா எப்படி இங்கே வந்தாள்னே தெரியலையே ஷின்! இங்கே வர்றதுக்குறிய கதவுகள கூட ஜெனி தானே இப்போ நம்ம கண்ணு முன்னாடி திறந்தாங்க? அப்புறம் எப்படி இவள், இங்கே.....” என்று வார்த்தைகள் வராமல் அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வரவே.. ஷின் அவளைச் சமாதானம் செய்யும் பொருட்டு,
“அழாத சௌந்தரியா.. ப்ளீஸ்! நான் சொல்லுறத கேளு. எலிசா இறந்ததப் பத்தி அழுதுட்டு இருக்குற நேரத்துல, அடுத்து யாரும் இந்த இடத்துக்குப் போகாத மாதிரி பாதுகாப்புகள வலுபடுத்துங்க.” என்று சமாதானம் கூறிய ஷின்னின் மனம் ஆண்ட்ரூவின் விசித்திர நடவடிக்கைகள் பக்கம் செல்லவே... சௌந்தரியாவிடம், “எனக்கு மனகஷ்டத்துல தலை லேசா வலிக்குது. நான் கிளம்புறேன்” என்று கூறிவிட்டு அவளிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு, ஆண்ட்ரூ சென்ற வழியில் போய் அவனைப் பின்தொடர்ந்தான்.
பங்களாவிற்குள் வந்த ஷின், ஆண்ட்ரூவின் அறைக்குச் செல்ல.. அங்கே ஆண்ட்ரூ ஒரு நாட்குறிப்பில் ஏதோ குறிப்பெழுதுவதைக் கண்டு, அப்படியே அறை வாசலில் நின்று அவன் செயல்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தான். எதையோ எழுதிக்கொண்டிருந்த ஆண்ட்ரூ, சட்டென்று நிமிர்ந்து அறை வாசல் பக்கம் தன் பார்வையைத் துழாவவிட.. ஷின் அப்படியே மறைந்து நின்றுகொண்டான்.
‘ஹப்பா.. ஜஸ்ட் மிஸ்ஸு..! இல்லைனா, இவன் கண்ணுல பட்டிருந்தால், என்ன நடந்திருக்குமோ?’ என்றெண்ணியவனுக்கு அதிர்ச்சியில் மூச்சிரைக்க.. தனது நெஞ்சில் கைவைத்து, தட்டிக்கொடுத்தபடி தனக்கு தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டான். ஆண்ட்ரூவின் அறைக்குள்ளே பொருட்களைப் புழங்கும் சப்தம் கேட்கவே, மெதுவாகத் தலையை மட்டும் நீட்டி எட்டிப்பார்த்தான். அங்கே ஆண்ட்ரூவோ, கையில் டவலை எடுத்துக்கொண்டு, குளிக்க குளியலறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டான்.
‘என்ன இவன்? ஒரு பொண்ணு கீழே செத்துக்கிடக்கு.. இவன் என்னடானா, அப்படி ஒன்னு நடந்ததே தெரியாத மாதிரி ஜாலியா குளிக்கப்போறான்?’ என்றெண்ணியவனின் மூளைக்கு அந்த நாட்குறிப்பைப்பார்க்கும் யோசனை வரவே... பூனையைவிட மெல்லிய அடிகளை எடுத்துவைத்து ஆண்ட்ரூவின் அறைக்குள் நுழைந்து, ஆண்ட்ரூ சற்றுமுன் நின்ற மேசையருகில் சென்றான். மேசையின் மேல் பகுதியில் வெறும் தண்ணீர் ஜாடியிருப்பதைக் கண்ட ஷின், மெதுவாக அம்மேசையின் முதல் இரண்டு இழுப்பறைகளைத் திறந்துப்பார்த்தான். அவ்விரண்டு இழுப்பறைகளிலும் நாட்குறிப்பு இல்லாமல் போகவே, அதே மேசையின் கடைசியிலிருந்த அலமாரிக் கதவைத் திறந்த ஷின்னிற்கு இம்முறை ஏமாற்றமில்லை. அங்கிருந்த நாட்குறிப்பை எடுத்து, அதன் பக்கங்களைப் புரட்டியவன் கடைசியாக ஆண்ட்ரூ எழுதியிருந்த பக்கத்தை எடுத்தான். அதிலோ அன்றைய தேதியை எழுதியிருந்ததை அடுத்து,
“நாள்-1 (போட்டியாளர்-1) எலிசாவின் மரணம்.
நாள்-7 : (போட்டியாளர்-2) ___________“
என்று ஆண்ட்ரூ தன் கைப்பட ஆங்கிலத்தில் எழுதியிருந்த குறிப்பில் ஷின்னின் சந்தேகம் மேலும் வலுவானது. அதன் தலைப்பை வாசித்தவனுக்குத் தூக்கிவாறிப்போட்டது.
“ஓர்லியன் பங்களாவில் நடக்கவிருக்கும் மரணங்கள்”
என்றிருந்த அந்த தலைப்பைக் கண்ட ஷின்னிற்குத் தொண்டை அடைத்தது. அதற்கு முன் எழுதியிருந்த பக்கங்களைப் பார்க்கும் பொருட்டு, அந்த நாட்குறிப்பின் பக்கங்களைப் புரட்ட.. ஆண்ட்ரூ தன் குளியலறையின் தாழ்ப்பாள் திறக்கும் சப்தம் கேட்டு, கையிலிருந்த அவன் நாட்குறிப்பை எடுத்துக்கொண்டு அவ்வறையைவிட்டு ஓடினான் ஷின். தன் அறைக்குள் வந்தவன், முதல் வேலையாக அறைக்கதவை தாழிட்டுக்கொண்டான். பின் தன் மெத்தையில் அமர்ந்து வேகவேகமாக அந்த நாட்குறிப்பைத் திறந்த ஷின், அதன் முதல் பக்கத்தில் ஆண்ட்ரூவின் பெயர் இருப்பதைக் கண்டுவிட்டு, அடுத்தப்பக்கத்திற்குச் சென்றான். அதில் சென்ற வருடத்தின் தேதி குறிப்பிட்டிருப்பதை கவனித்தவனுக்குப் பேரதிர்ச்சி தரக்கூடிய தகவலிருந்தது.
“ ‘அமெரிக்காவின் நாளைய சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி, சீசன்-8’
நாள்-93 : (போட்டியாளர்-13) ஆலியாவின் மரணம்.
நாள்-98 : வஞ்சகத்தால் நான் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டேன்.”
இதனைப் பார்த்த ஷின் அதிர்ந்து போனான்.
“போன வருசம் நடந்த இந்த போட்டியில ஏற்கனவே இவன் கலந்திருக்கான். போன சீசன்ல ஏற்கனவே ஆலியாங்கற பொண்ணு இறந்திருக்காள். அதை இவன் குறிப்பிட வேற செஞ்சிருக்கான். யாரு அவள்? போன சீசனோட போட்டியாளரா இருந்த இவன், எதுக்கு மறுபடியும் இந்த வருசப் போட்டியில கலந்துக்க வந்திருக்கான்? அப்படியே வெற்றிப்பெறும் ஆசைல வந்திருந்தாலும் அதை ஏன் இரகசியமா வச்சுக்கணும்? என்கிட்ட இதைப்பத்தி ஒன்னுமே ஆண்ட்ரூ சொல்லலையே!!! அதுகூட அவன் சுயலாபத்துக்கு மறைச்சான்னு வச்சுப்போம். சௌந்தரியா என்கிட்ட கொடுத்த அந்தப் பைல்ல (கோப்புல) கூட இவன் போன சீசனோட போட்டியாளர்னு குறிப்பிடலையே?! சௌந்தரியாவுக்கு, இவன பத்தி தெரியாம இருந்திருக்காது. ஆனால், அவளும் இதைப் பத்தி என்கிட்ட சொல்லாம மறைச்சுட்டாள். இன்னைக்கு நடந்த எலிசாவோட மரணத்த குறிப்பிட்டவன், சரியா ஏழாம் நாள்ல இன்னொரு போட்டியாளர் இறப்பாங்கங்கற மாதிரி ஒரு இடத்தை வேற காலியா விட்டு வச்சிருக்கான். அப்போ, இன்னைக்கு நடந்த மரணத்துக்கும் ஆண்ட்ரூவுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு....” என்று தனக்குத் தானே வாய்விட்டு மெதுவாகப் பேசிய ஷின்னை, அவன் அறை பின்பக்கமிருந்த சாளரம் வழியே இருகண்கள் நோட்டமிட்டுக் கொண்டிருந்தன.
Comments link :-
Thread 'கூட்டத்தில் எது ஓநாய்? - Comments' https://www.sahaptham.com/community/threads/கூட்டத்தில்-எது-ஓநாய்-comments.448/
“அப்போ அவங்களுக்குத் தான் முடிவு கட்டணும்னு சொன்னீங்களா ராஷ்?” என்று அதிர்ச்சியிலிருந்து மீளாமல் ஷின் கேட்க.. அவளும் ‘ஆமாம்’ என்பது போல் தலையில் கை வைத்தபடி மேலும் கீழுமாய் தலையசைத்தாள். அதனைப் பார்த்தவனுக்கு மேலும் அதிர்ச்சி..
‘முடிவு கட்டணும்னா, எதைச் சொல்லுறாங்க?’ என்றெண்ணியபடி ரஷிகாவை நோக்கியவன், “சரிங்க ராஷ். நம்ம அப்புறம் மீட் பண்ணலாம்” என்று கூறிவிட்டு நகர்ந்தான்.
கூடத்திற்கு வந்த ஷின்னிற்கு அதைவிடப் பெரிய அதிர்ச்சி ஒன்று காத்துக்கொண்டிருந்தது. ஃபர்ஹானிடம் அந்த எலிசா மிக நெருக்கமாகப் பேசிக்கொண்டிருந்தாள். ஃபர்ஹான் காதல் மொழிகளைப் பேசவும், அதைக் கேட்டு அவள் வெட்கி சிவப்பதுமாக இருந்தாள். அதனைக் கண்டவனுக்கு,
‘அய்யயோ! இந்த நாய் இந்தப் பொண்ண, அவனோட புகழாசைக்குப் பலியாக்க பிளான் பண்ணிருச்சு போலையே!’ என்றெண்ணியபடி அவர்கள் இருவரையும் கடந்து சென்ற ஷின், அவன் அறைக்குச் சென்று தன் மெத்தையில் அமர்ந்தான். ஷின்னின் நினைவெல்லாம் அன்றைய பொழுதில் நடந்த மர்மங்களிலேயே இருந்தது. ஒருமுறை காலையிலிருந்து நடந்தவைகளைக் கண்மூடி எண்ணிப்பார்த்தான்..
‘காலைல, இந்த சௌந்தரியா ஏதோ பிரச்சனை வரும்னு சொன்னாள்.. என்ன பிரச்சனைனு கேட்ட அப்புறம் ஆளையே காணோம். இப்போ வரைக்கும் கூடப் பேசலை. அப்புறம் அந்த ஆண்ட்ரூ... அவனே ஆள் மர்மமா தான் இருக்கான். இந்தப் பங்களாவோட மூளைமுடுக்கெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கான். நான் பார்க்க, சிரிச்சுட்டே என் பின்னாடி வந்தவனோட முகத்துல, தோட்டத்துக்குப் பின்னாடி இருக்குற காட்டுப் பகுதிய பத்தி கேட்கவும் முகம் சுருங்கிருச்சு. கடைசியா இந்த ரஷிகா.. எலிசாவ போட்டுத்தள்ளணும்னு பகீரங்கமா சொல்லுறாள்...’ என்றெண்ணியவனுக்குத் தலை லேசாக வலிக்கவே, எழுந்து சென்று தண்ணீர் ஜாடியை எடுத்தான். அதில் தண்ணீர் காலியான நிலையிலிருக்கவே, தன் தலையில் கை வைத்த நிலையில், அவ்வறையிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
‘ம்ம்ச்ச்... இப்போ தண்ணீர் எடுக்க, கீழே போகணுமா?’ என்றெண்ணிச் சலித்தவன், மெதுவாக எழுந்து அடுப்படிக்குச் சென்றான். கைக்கடிகாரத்தைப் பார்த்த ஷின், அது மணி ஏழு என்று கூறவே..
‘காமெரா ரோல்லிங் முடிஞ்சிருக்கும்...’ என்றெண்ணியபடி அடுப்படிக்குள் அவன் செல்ல எத்தனிக்க... அங்கே அடுப்படிக்கு அருகிலிருந்த மாடிப்படியின் அடிப்பகுதியில் ஃபர்ஹானும் எலிசாவும் உதட்டில் முத்தமிட்டுக்கொண்டிருக்க... ஷின் அதனைக் கண்டு அதிர்ந்தான்.
‘அச்சசோ!!! என்ன இது?!!!’ என்றெண்ணி அதிர்ந்த ஷின், கண்களை மூடிக்கொண்டு அடுப்படிக்குள் சென்றான். அவனால் அவன் கண்களை நம்ப முடியவில்லை. ஏனென்றால், தன் அழகில் மயங்கி அனைவரும் பேசிய முகஸ்துதிக்கு மயங்காத எலிசா, எவ்வாறு ஃபர்ஹானின் வலையில் விழுந்தாள் என்று வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது..
‘முத்தங்கள் கொடுக்குறது, இந்த அமெரிக்காவுல சாதாரணம் தான். ஆனால், எலிசா புகழ்ச்சிக்கு மயங்காதவள் போலல தெரிஞ்சா? இந்த பாவி பேசி பேசியே அந்தப் பிள்ளைய லவ் பண்ணுறது போலக் காட்டி, பேமஸ் ஆகலாம்னு முடிவுக்கு வந்துட்டான்.. ச்சே! என்ன மாதிரி புத்தி இவனுக்கு?’ என்று தன் மனதிற்குள் ஃபர்ஹானை புகழ்ந்து தள்ளியவன், மெல்ல நடந்து போய் அடுப்பு மேடைக்கருகிலிருந்த ஃபில்டரைத் திறந்து தண்ணீர் ஜாடியைக் கீழே வைத்துப்பிடித்தபடி நின்றான். திடீரென்று ஃபர்ஹானும் எலிசாவும் சிரித்துப் பேசும் சப்தம் அருகில் கேட்கவும்,
‘ஆஹா! இதுங்க ரெண்டும் இங்கே வருதுங்க போலையே!’ என்று தனக்குத் தானே பேசியவன், ஒளிந்துகொள்ள இடத்தைத் தேடியவனை ஒரு கை, இழுத்துச் சென்றது. அடுப்படியிலிருந்த ஃபிரிட்ஜிற்கு அருகில் போய் ஒளிந்தவன், தன்னை இழுத்தது யாரென்று திரும்பிப் பார்க்க.. அருகில் சௌந்தரியாவும் அவர்கள் இருவருக்கும் தெரியாதவாறு மறைந்து உட்கார்ந்திருப்பது தெரியவரவே,
“ஹேய் சௌந்தரியா..!!” என்று ஷின் அழைக்கவும், அவன் வாயை தன் கைக்கொண்டு மூடியவள் மெதுவாக எட்டிப்பார்த்தாள். அங்கே எலிசாவும் ஃபர்ஹானும் அடுப்பு மேடைக்கு அருகில் நின்று சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்துவிட்டு, ஷின்னின் பக்கம் வந்தவள்,
“லூசு மாதிரி சத்தம் போட பார்த்தியே!! என்று மிகவும் மெல்லிய குரலில் சௌந்தரியா ஷின்னிடம் பேசுவதும், அவர்கள் இருவரும் சென்றுவிட்டனரா? என்று பார்ப்பதுமாக இருக்க.. ஷின் சௌந்தரியாவின் அருகாமையை ரசித்துக்கொண்டிருந்தான். இரவின் நிலவொளி அவ்வடுப்படியில் சாளரம் வழியாக வந்து, அவள் முகத்தில் பட்டு, அவளது தோல் மின்னுவதைப் பார்த்தான். கழுத்தில் மெல்லிய தங்கச்செயின் உருண்டு விளையாட, அதன் விளையாட்டில் ஷின் லயித்துப்போனான்... காதுகளில் மிகச்சிறிய அளவில் தொங்கும் தோடு, அங்கே ஓடிய மின்விசிறியின் காற்றுபட்டு மெதுவாக அசைய, அதன் அசைவில் ஷின் சொக்கி தான் போனான்..
“ஹும்ம்ம்ம்... அந்த தோடாக நானிருக்கக் கூடாதா?????” என்று பெருமூச்சுவிட்டபடி, சௌந்தரியாவின் காதுகளுக்கு மட்டும் கேட்கும் வகையில் ஷின் வாய்விட்டுப் பேசிவிட.. சட்டென்று அவன் புறம் திரும்பியவள்,
“என்ன?!” என்று கேள்வியாகக் கேட்டவளுக்கு ஷின்னின் உதட்டை தன் கையால் மூடியிருப்பது அப்பொழுது தான் உறைத்தது. அதனை உணர்ந்தவளாகத் தன் கீழுதட்டை மடித்துக் கடித்தபடி, தன் கரத்தை அவன் உதட்டிலிருந்து எடுத்தவளின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்திருந்தது. அதனைக் கவனித்த ஷின்னின் கண்கள் குஷியில் மின்ன.. மெதுவாக அவள் காதுப்பக்கம் சென்று, மெல்லிய குரலில்,
“என்னமோ கேட்க வந்த?” என்று ஷின் கேட்கவும், வெட்கத்தில் புன்னகைத்தவாறு தலைகுனிந்த சௌந்தரியா, ஷின்னைப் போல் மிகவும் மெல்லிய குரலில்..
“என்னமோ சொன்னீங்களே! அது என்னனு கேட்க வந்தேன்....” என்று வெட்கத்தில் அவள் தனக்கு மரியாதைத் தந்து பேசியதை கவனித்த ஷின், சௌந்தரியாவைக் கண்ணிமைக்காமல் பார்த்துவைக்க... அவன் கண்களைப் பார்க்க வேண்டாமென்று முடிவெடுத்தவளாகக் குனிந்த தலை நிமிராமல் இருந்தாள் அவள். அவளின் இச்செயல் ஷின்னிற்குப் பிடித்துப் போகவே, குறும்பு மின்னும் கண்களோடு சௌந்தரியாவிடம்..
“உன் காதுல அழகா ஆடும் அந்தத் தோடாக நான் இருந்திருக்கக் கூடாதா? னு வருத்தப்பட்டேன்.” என்று ஷின் தன் உதட்டோர புன்னகையோடு சௌந்தரியாவின் குனிந்த முகத்தைப் பார்த்தவாறு கூற.. அவளுக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது. அவளது வெட்கத்தை ஷின் ரசித்துப்பார்த்துக்கொண்டிருக்க, அங்கே ஃபர்ஹானும் எலிசாவும் அவ்விடத்தைவிட்டு அகழும் சப்தம் கேட்டு, சௌந்தரியா அவர்கள் சென்றுவிட்டதை உறுதி செய்யும் விதமாக மெல்ல எட்டிப்பார்த்தாள். ஃபர்ஹானும் எலிசாவும் அவ்விடத்தைவிட்டு வெகுதொலைவில் சென்றுவிட்டதை உறுதி செய்த சௌந்தரியா, மெதுவாக எழுந்து ஷின்னையும் எழுந்திருக்கச் சொன்னாள்.
“நல்ல வேலை.. அதுங்க ரெண்டும் நம்மல பார்க்கல..” என்று கூறியபடி ஷின்னை நோக்க, அவன் கண்ணோ கிண்டலாகப் பார்த்தது. “என்ன பா? எதுக்கு இப்படிக் கிண்டலாப் பார்க்குற?” என்று யோசனையாகக் கேட்டாள் சௌந்தரியா.
“நீ எதுக்கு இங்கே வந்த? எதையாவது பார்த்து வச்சுட்டீயா?” என்று வினவிய ஷின் வெடித்துச் சிரிக்க.. தனது நாக்கினை பற்களால் கடித்தவள்,
“நீ பார்த்தியா?” என்று ஷின்னின் கேள்வியை அவனுக்கே சௌந்தரியா திருப்பிவிட..
“ஆ.. அதெல்லாம் கேட்கக்கூடாது.” என்று கூறி சிரித்தவனுக்கு அன்று காலை சௌந்தரியா தன்னிடம் விசித்திரமாக நடந்துகொண்டது நினைவிற்கு வரவே.. “உன்கூட நான் பேசமாட்டேன் சௌண்ட்..” என்று தன்னை மீறி அவளை ‘சௌண்ட்’ என்று ஷின் அழைக்க.. அதனை மனதிற்குள் ரசித்தாள் அந்த மங்கை. ஆனாலும் அவனது இந்த கோபத்தின் காரணம் அறிய அவளது மூளை அவளை பிறாண்ட,
“எதுக்காம்?” என்று ஷின்னின் கண்ணைப் பார்த்து சௌந்தரியா கேட்ட விதத்தில் அப்படியே சிலையாகிப் போனான் ஷின். பிறகு தன் தலையை உலுக்கி,
‘ஆஹா!! நம்மல கவுக்கப் பார்க்குறாள்... நான் அசையமாட்டேனே..’ என்று தனக்குத் தானே உறுதிப்பூண்டு மீண்டும் அவளை ஷின் நோக்க.. சௌந்தரியாவோ அதே மாயப்பார்வையை ஷின்னின் பக்கம் செலுத்தினாள். ‘என்னமா இப்படி பண்ணுறாளே மா..!! ஷின்... அவளோட எந்த ஃபயர் லுக்கும் உன்னைய ஒன்னும் பண்ணமுடியாது டா. நீ கேட்க வந்த விசயத்த, அதே கோபத்தோட கேட்டுடு..’ என்று ஷின் தன் மனதுடன் வாதாடிவிட்டு சௌந்தரியாவின் கண்ணைப் பார்க்காமல் பேசினான். “இன்னைக்கு காலைல இருந்து நீ விசித்திரமாவே நடந்துக்குற சௌண்ட்.. முதல்ல ஏதோ பிரச்சன வரும் ங்கற ரீதியில சொல்லுற.. என்னனு கேட்டா அமைதியாகிடுற. அப்புறம், ஆண்ட்ரூ கூட வெளியே போகவானு நான் வாட்ஸ்-அப்ல மெசேஜ் பண்ணதுக்கு நீ அதைப் பார்த்தும் பதிலனுப்பல. அதான் உன்கூட பேசமாட்டேன்னு இருக்கேன்.” என்று பொய் கோபத்துடன் பேசிவிட்டு, சௌந்தரியாவிற்கு முதுகு காட்டி நின்றுகொண்டான். அவன் விளையாட்டாகக் கோபித்துக்கொண்டான் என்பதை உணர்ந்தாலும், அவனது கேள்வி ஏனோ சௌந்தரியாவை உறுத்த..
“ஷின்! என்னால எதையும் முழுசா சொல்லமுடியாது. ஆனால், மேலோட்டமா சொல்லுறேன். இங்கே, இந்த பங்களாவுல சில பிரச்சனைகள் வரும்.. அந்த பிரச்சனைகள்ல இருந்தும் உன்னைய பாதுகாத்துக்கணும்னா, நீ பங்களாவோட பின்பக்கத்துல ஒரு தோட்டம் இருக்கு. அங்கே போகாத... அங்கே யாரும் போகக்கூடாதுனு தான் அதுக்குப் போற வழி எங்கே இருக்குனு யாருகிட்டையும் சொல்லாம மறைச்சு வச்சிருக்கோம். சொல்லப்போனா, அப்படி ஒரு தோட்டம் இருக்குதுங்கறதையே நீங்கள் யாரும் தெரிஞ்சிருக்க மாட்டீங்க. ஆனாலும், அங்கே எப்படிப் போறாங்கங்கற விசயம் மட்டும் மர்மமாவே இருக்கு.” என்று கூறியவள் ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டு தன் பேச்சைத் தொடர்ந்தாள். “ம்ம்... அந்த பின்பக்க தோட்டத்துல தான் பிரச்சனை. நாளைக்கு ஒருவேளை, நீ அங்கே தெரியாம போய்ப் பிரச்சனைல சிக்கினாலும், உன்னைய காப்பாத்த, உன் பிரண்ட்ஸ் வரணுங்கற காரணத்துக்காகத் தான் நான் காலைல அப்படிச் சொன்னேன். நீ சட்டுனு கேட்கவும், என்னால சொல்ல முடியல. இப்போ கூடப் பிரச்சனை என்னனு, முழுசா என்னால சொல்லமுடியலைனாலும், பின்பக்க தோட்டம் ஆபத்தானதுனு சொல்லிட்டேன். இதைக்கூட வேற யாருகிட்டையும் சொல்லிடக்கூடாதுனு மேலிடத்தோட உத்தரவு. அந்த உத்தரவையும் மீறி உன்கிட்ட மட்டும் தான் சொல்லிருக்கேன். வேற யாருகிட்டையும் இதை நான் சொன்னதில்ல. சொல்லவும் மாட்டேன். நீ பிரச்சனைல மாட்டி, உனக்கு ஏதாவது ஆயிட்டா.....” என்றுக்கூறியவளுக்கு அதற்கு மேல் பேச இயலாமல், அழுகையில் மூச்சு முட்ட, ஷின் அவளைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.
“எனக்கு ஒன்னும் ஆகாது. சரியா? உன் விருப்பம் போல, நான் பின்பக்க தோட்டத்துக்குப் போகல. சரியா?” என்று அவளை அணைத்தபடி ஆறுதலாகக் கூறவும் அமைதியானாள் சௌந்தரியா. சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, தன்னிலை வந்த இருவரும், சட்டென்று விலகிக்கொண்டனர்.
“சரி.. நம்ம காலைல மீட் பண்ணலாம்..” என்று கூறிவிட்டு சௌந்தரியா திரும்பி பார்க்காமல் ஓடினாள்.
அவள் செல்லும் வரை அவளையே பார்த்துக்கொண்டிருந்த ஷின், தன் பற்கள் தெரிய சிரித்துவிட்டு தன் கைக்கடிகாரத்தை பார்த்தான். அது மணி 9 என்க, இரவு உணவைச் சாப்பிட அமர்ந்தான் அவன்.
இரவு உணவை முடித்துவிட்டு, தன் அறைக்குச் சென்றவனுக்குத் தூக்கம் சொக்க.. அப்படியே மெத்தையில் படுத்துக் கண்ணயர்ந்தான்.
இரவு 11 மணியான நிலையில், எலிசாவின் அலறல் சப்தம், அப்பங்களாவெங்கும் ஒலித்தது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஷின் கண் விழித்தான். ஓர்லியன் பங்களாவிலிருந்த அனைவரும், ஷின் உட்பட, எல்லோரும் சப்தம் வந்த திசையை நோக்கி விரைந்தனர். மீண்டும் அவளின் அலறல் குரல் கேட்க, பங்களாவின் பின்புறத்திலிருந்த அந்தத் தோட்டத்திலிருந்து தான் எலிசாவின் அலறல் சப்தம் கேட்பதையறிந்தவர்கள், வேகவேகமாக அத்தோட்டத்திற்கு ஜெனிபர் காட்டிய பாதையில் ஓடினர். அங்குச் செல்வதற்கான கதவுகள் நிறையப் பாதுகாப்புகளுடன் பூட்டியிருக்கவே, ஜெனிபர் தன்னிடமிருந்த சாவிக்கொத்தினை வைத்து அந்த பூட்டுகளைத் திறந்து, கதவுகளைத் திறந்தார்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும் சென்றதைவதற்குள் எலிசா அங்கே மாய்ந்துக்கிடந்தாள். அவளின் உயிரற்ற உடல் மட்டுமே அங்கே இருந்தது. அவள் உடல் முழுக்க, ஒரு விலங்கின் நகக் காயங்கள் இருந்தன. அவளின் ஆடை, அவ்விலங்கின் நகம்பட்டுக் கிழிந்துக்கிடந்தது. அப்பெண்ணின் கழுத்துப் பகுதிச் சதை, அவ்விலங்கின் பற்களால் கடித்தெறியப்பட்டது என்று தெரிந்தது.
பங்களாவிலிருந்த போட்டியாளர்களில் சிலர் அவரவர் கண்களை இறுக மூடிக்கொண்டனர். அப்படியிருந்தது, எலிசாவின் உயிரற்ற உடலின் நிலை. அவளின் இந்நிலையைக் கண்ட ஷின், சௌந்தரியாவிடம் சென்று,
“ஏன் பா எலிசாவுக்கு இப்படி ஆச்சு? இவங்களுக்கு இந்த நிகழ்ச்சியில நல்ல வரவேற்பு வந்துச்சுனு, நம்ம சீனியர் டைரக்டர் ஜெனிபர் கூட சொன்னாங்களே?! அதுக்குள்ள இவங்களுக்கு ஏன் தான் இப்படி நடந்துச்சோ?! இவங்களோட உடலப் பார்க்கைல ஏதோ விலங்கு வேட்டையாடிருக்குறது போலத் தெரியுது. என்ன விலங்கு இவங்கள இப்படிச் செஞ்சிருக்கும்? அதுவும் பங்களாவோட பின்பக்கத்துல என்ன விலங்கோட நடமாட்டம் இருக்கு?” என்று ஷின் கேட்கவும், அதுவரை அப்பெண்ணின் உயிரற்ற உடலைக் கண்டு கண்ணீர் வடித்தவள், ஷின்னின் கேள்வியில் அவனை நிமிர்ந்துப்பார்த்தாள்.
“எனக்கும் தெரியல ஷின். நிகழ்ச்சி டெலிகேஸ்ட் ஆகைல, எல்லா சோசியல் மீடியாலையும் நேயர்கள் இந்தப் எலிசாவைப் பத்தித் தான் புகழ்ந்துப் பேசிட்டிருந்தாங்க. அதவச்சுத் தான் ஜெனியே அப்படிச் சொன்னாங்க. நான் கூட இந்தப் பொண்ணு இறுதிச்சுற்றுக்கு வரும்னு நம்புனேன்.. ஆனா.....” என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியாமல் தொண்டையடைத்தது. சௌந்தரியாவை சமாதானம் செய்யும் வழி தெரியாமல் ஷின் விழித்துக்கொண்டிருந்த வேளையில், ஓர்லியன் பங்களாவிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்த வனப்பகுதியில் விலங்குகளின் வெறிகொண்ட நான்கு கண்கள், அப்பங்களாவைப் பார்த்துக்கொண்டிருந்தன.
நிலைமை இப்படிப் போய்க்கொண்டிருக்க, ஷின்னின் மூளையோ,
‘முதல்ல எலிசாவுக்கு இந்தத் தோட்டத்தப் பத்தி எப்படித் தெரியும்?’ என்று யோசிக்கத்தொடங்கியது.
சௌந்தரியா அன்றிரவு கூறியது போல, இந்த பின்பக்கத் தோட்டத்தைப் பற்றி, எவரும் அறிந்திலர். அப்படியே அறிந்திருந்தாலும், அதற்குரிய பாதையை அறிந்தவர் எவரும் இல்லை.
இவ்வாறாக யோசித்துக்கொண்டிருந்த அவனது மூளைக்கு அலாரம் அடித்தது போல ஆண்ட்ரூவின் ஞாபம் வரவே, சட்டென்று அவன் நிற்கும் திசையை நோக்கினான். கண்களைச் சுருக்கி, ஆண்ட்ரூவின் நடவடிக்கைகளைக் கவனித்தான். எலிசாவின் உடலுக்கு அருகில் கூடியிருந்த போட்டியாளர்கள் அனைவரது முகத்திலும் வருத்தம் தென்பட்டது. ஆனால், ஆண்ட்ரூவின் முகம் வருத்ததைப் பிரதிபலிக்காமல் ஒருவித அசட்டையைப் பிரதிபலிக்கவே... கண்கொட்டாமல் ஆண்ட்ரூவையே நோக்கினான். ஆண்ட்ரூவிற்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. சட்டென்று ஷின்னைப் பார்த்தான் அவன். ஷின்னைப் பார்க்கவும் அவனது முகத்தில் ஒரு பிரகாசம். அவனைக்கண்டு, ஆண்ட்ரூ புன்னகைத்தவன் ஷின்னின் யோசனையான பார்வையைக் கண்டதும் அவனது புருவங்கள் நெறித்தது. சட்டென்று தன் முகத்தை வேறுபுறம் திருப்பிய ஆண்ட்ரூ, மீண்டும் ஷின்னை நோக்க.. அவனோ வைத்த கண் வாங்காமல் அதே யோசனையான பார்வையைப் பார்த்துவைத்தான். வேறுபுறம் தன் தலையைத் திருப்பியவனுக்கு, எதனாலையோ அக்குளிர் வேளையிலும் முகம் வியர்த்தது.
ஓரக்கண்ணால் ஷின்னைப் பார்த்தபடி தனது பேண்ட் பாக்கெட்டினுள் கைவிட்டு எதையோ எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆண்ட்ரூவின் கைகளுக்கு எதுவும் கிடைக்காமல் போகவே, அவன் முகத்தில் பதட்டம் அப்பட்டமாகத் தெரிந்தது. எதையும் பார்க்காமல் ஆண்ட்ரூ, வேகவேகமாக பங்களாவிற்குள் நுழைந்தான். இதனையே பார்த்துக்கொண்டிருந்த ஷின்னிடம் சௌந்தரியா அழுகுரலில் பேசினாள்.
“இந்த எலிசா எப்படி இங்கே வந்தாள்னே தெரியலையே ஷின்! இங்கே வர்றதுக்குறிய கதவுகள கூட ஜெனி தானே இப்போ நம்ம கண்ணு முன்னாடி திறந்தாங்க? அப்புறம் எப்படி இவள், இங்கே.....” என்று வார்த்தைகள் வராமல் அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வரவே.. ஷின் அவளைச் சமாதானம் செய்யும் பொருட்டு,
“அழாத சௌந்தரியா.. ப்ளீஸ்! நான் சொல்லுறத கேளு. எலிசா இறந்ததப் பத்தி அழுதுட்டு இருக்குற நேரத்துல, அடுத்து யாரும் இந்த இடத்துக்குப் போகாத மாதிரி பாதுகாப்புகள வலுபடுத்துங்க.” என்று சமாதானம் கூறிய ஷின்னின் மனம் ஆண்ட்ரூவின் விசித்திர நடவடிக்கைகள் பக்கம் செல்லவே... சௌந்தரியாவிடம், “எனக்கு மனகஷ்டத்துல தலை லேசா வலிக்குது. நான் கிளம்புறேன்” என்று கூறிவிட்டு அவளிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு, ஆண்ட்ரூ சென்ற வழியில் போய் அவனைப் பின்தொடர்ந்தான்.
பங்களாவிற்குள் வந்த ஷின், ஆண்ட்ரூவின் அறைக்குச் செல்ல.. அங்கே ஆண்ட்ரூ ஒரு நாட்குறிப்பில் ஏதோ குறிப்பெழுதுவதைக் கண்டு, அப்படியே அறை வாசலில் நின்று அவன் செயல்பாடுகளை கவனிக்க ஆரம்பித்தான். எதையோ எழுதிக்கொண்டிருந்த ஆண்ட்ரூ, சட்டென்று நிமிர்ந்து அறை வாசல் பக்கம் தன் பார்வையைத் துழாவவிட.. ஷின் அப்படியே மறைந்து நின்றுகொண்டான்.
‘ஹப்பா.. ஜஸ்ட் மிஸ்ஸு..! இல்லைனா, இவன் கண்ணுல பட்டிருந்தால், என்ன நடந்திருக்குமோ?’ என்றெண்ணியவனுக்கு அதிர்ச்சியில் மூச்சிரைக்க.. தனது நெஞ்சில் கைவைத்து, தட்டிக்கொடுத்தபடி தனக்கு தானே ஆசுவாசப்படுத்திக்கொண்டான். ஆண்ட்ரூவின் அறைக்குள்ளே பொருட்களைப் புழங்கும் சப்தம் கேட்கவே, மெதுவாகத் தலையை மட்டும் நீட்டி எட்டிப்பார்த்தான். அங்கே ஆண்ட்ரூவோ, கையில் டவலை எடுத்துக்கொண்டு, குளிக்க குளியலறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டான்.
‘என்ன இவன்? ஒரு பொண்ணு கீழே செத்துக்கிடக்கு.. இவன் என்னடானா, அப்படி ஒன்னு நடந்ததே தெரியாத மாதிரி ஜாலியா குளிக்கப்போறான்?’ என்றெண்ணியவனின் மூளைக்கு அந்த நாட்குறிப்பைப்பார்க்கும் யோசனை வரவே... பூனையைவிட மெல்லிய அடிகளை எடுத்துவைத்து ஆண்ட்ரூவின் அறைக்குள் நுழைந்து, ஆண்ட்ரூ சற்றுமுன் நின்ற மேசையருகில் சென்றான். மேசையின் மேல் பகுதியில் வெறும் தண்ணீர் ஜாடியிருப்பதைக் கண்ட ஷின், மெதுவாக அம்மேசையின் முதல் இரண்டு இழுப்பறைகளைத் திறந்துப்பார்த்தான். அவ்விரண்டு இழுப்பறைகளிலும் நாட்குறிப்பு இல்லாமல் போகவே, அதே மேசையின் கடைசியிலிருந்த அலமாரிக் கதவைத் திறந்த ஷின்னிற்கு இம்முறை ஏமாற்றமில்லை. அங்கிருந்த நாட்குறிப்பை எடுத்து, அதன் பக்கங்களைப் புரட்டியவன் கடைசியாக ஆண்ட்ரூ எழுதியிருந்த பக்கத்தை எடுத்தான். அதிலோ அன்றைய தேதியை எழுதியிருந்ததை அடுத்து,
“நாள்-1 (போட்டியாளர்-1) எலிசாவின் மரணம்.
நாள்-7 : (போட்டியாளர்-2) ___________“
என்று ஆண்ட்ரூ தன் கைப்பட ஆங்கிலத்தில் எழுதியிருந்த குறிப்பில் ஷின்னின் சந்தேகம் மேலும் வலுவானது. அதன் தலைப்பை வாசித்தவனுக்குத் தூக்கிவாறிப்போட்டது.
“ஓர்லியன் பங்களாவில் நடக்கவிருக்கும் மரணங்கள்”
என்றிருந்த அந்த தலைப்பைக் கண்ட ஷின்னிற்குத் தொண்டை அடைத்தது. அதற்கு முன் எழுதியிருந்த பக்கங்களைப் பார்க்கும் பொருட்டு, அந்த நாட்குறிப்பின் பக்கங்களைப் புரட்ட.. ஆண்ட்ரூ தன் குளியலறையின் தாழ்ப்பாள் திறக்கும் சப்தம் கேட்டு, கையிலிருந்த அவன் நாட்குறிப்பை எடுத்துக்கொண்டு அவ்வறையைவிட்டு ஓடினான் ஷின். தன் அறைக்குள் வந்தவன், முதல் வேலையாக அறைக்கதவை தாழிட்டுக்கொண்டான். பின் தன் மெத்தையில் அமர்ந்து வேகவேகமாக அந்த நாட்குறிப்பைத் திறந்த ஷின், அதன் முதல் பக்கத்தில் ஆண்ட்ரூவின் பெயர் இருப்பதைக் கண்டுவிட்டு, அடுத்தப்பக்கத்திற்குச் சென்றான். அதில் சென்ற வருடத்தின் தேதி குறிப்பிட்டிருப்பதை கவனித்தவனுக்குப் பேரதிர்ச்சி தரக்கூடிய தகவலிருந்தது.
“ ‘அமெரிக்காவின் நாளைய சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி, சீசன்-8’
நாள்-93 : (போட்டியாளர்-13) ஆலியாவின் மரணம்.
நாள்-98 : வஞ்சகத்தால் நான் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டேன்.”
இதனைப் பார்த்த ஷின் அதிர்ந்து போனான்.
“போன வருசம் நடந்த இந்த போட்டியில ஏற்கனவே இவன் கலந்திருக்கான். போன சீசன்ல ஏற்கனவே ஆலியாங்கற பொண்ணு இறந்திருக்காள். அதை இவன் குறிப்பிட வேற செஞ்சிருக்கான். யாரு அவள்? போன சீசனோட போட்டியாளரா இருந்த இவன், எதுக்கு மறுபடியும் இந்த வருசப் போட்டியில கலந்துக்க வந்திருக்கான்? அப்படியே வெற்றிப்பெறும் ஆசைல வந்திருந்தாலும் அதை ஏன் இரகசியமா வச்சுக்கணும்? என்கிட்ட இதைப்பத்தி ஒன்னுமே ஆண்ட்ரூ சொல்லலையே!!! அதுகூட அவன் சுயலாபத்துக்கு மறைச்சான்னு வச்சுப்போம். சௌந்தரியா என்கிட்ட கொடுத்த அந்தப் பைல்ல (கோப்புல) கூட இவன் போன சீசனோட போட்டியாளர்னு குறிப்பிடலையே?! சௌந்தரியாவுக்கு, இவன பத்தி தெரியாம இருந்திருக்காது. ஆனால், அவளும் இதைப் பத்தி என்கிட்ட சொல்லாம மறைச்சுட்டாள். இன்னைக்கு நடந்த எலிசாவோட மரணத்த குறிப்பிட்டவன், சரியா ஏழாம் நாள்ல இன்னொரு போட்டியாளர் இறப்பாங்கங்கற மாதிரி ஒரு இடத்தை வேற காலியா விட்டு வச்சிருக்கான். அப்போ, இன்னைக்கு நடந்த மரணத்துக்கும் ஆண்ட்ரூவுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு....” என்று தனக்குத் தானே வாய்விட்டு மெதுவாகப் பேசிய ஷின்னை, அவன் அறை பின்பக்கமிருந்த சாளரம் வழியே இருகண்கள் நோட்டமிட்டுக் கொண்டிருந்தன.
ஷின்னை நோட்டமிடும் அந்த மர்மக் கண்கள் யாருடையது? ஷின்னின் கணிப்பு போன்று, எலிசாவின் மரணத்திற்கும் ஆண்ட்ரூவிற்கும் ஏதேனும் சம்பந்தமிருக்குமா? சென்ற வருடம் நடந்த இப்போட்டியின் போட்டியாளர்களில் ஒருவனாக வந்த ஆண்ட்ரூ எதற்காக, மறுபடியும் இப்போட்டியில் கலந்துகொள்ள வந்திருக்கிறான்? அவன் சென்ற வருடப் போட்டியாளர் என்பதை சௌந்தரியா அறிந்தும் அதனை அவள் ஷின்னிடம் மறைத்தது ஏன்?
அடுத்த மிரட்டலான அத்தியாயத்துடன்.....
வார்த்தைகளின் எண்ணிக்கை :- 1,912.
அடுத்த மிரட்டலான அத்தியாயத்துடன்.....
வார்த்தைகளின் எண்ணிக்கை :- 1,912.
Comments link :-
Thread 'கூட்டத்தில் எது ஓநாய்? - Comments' https://www.sahaptham.com/community/threads/கூட்டத்தில்-எது-ஓநாய்-comments.448/