Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நான்கு பாதை!ஒரு வழி!

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
மகேந்திரபுரி கோலாகல கொண்டாட்டத்தில் இருந்தது.வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் வேட்டை திருவிழா தொடங்க இன்னும் ஒரு நாள்தான் இருந்தது.வெவ்வேறு நாடுகளிலிருந்து துணிவு மிகுந்த வீரர்கள் தங்கள் உயிரை துச்சமாக மதித்து வேட்டை விழாவில் கலந்து கொள்ள மகேந்திரபுரியில் குவிந்திருந்தனர்.வெகு வேகமாக செல்லக்கூடிய குதிரைகளும் தேர்களும், சாரட் வண்டிகளும் நகரத்தின் வீதிகளில் உலா வந்து கொண்டிருந்தன.மகேந்திரபுரியின் மக்கள் நமுட்டு சிரிப்போடு வீரர்களை கவனித்து கொண்டிருந்தனர்.அவர்களுக்கு நன்றாக தெரியும்.வேட்டை திருவிழாவில் கலந்து கொண்ட யாரும் வெற்றியோடு ஊர் திரும்பியதில்லை.உடல் ஊனமுற்றோ, தோற்றோதான் நாடு திரும்பியுள்ளனர்.கடந்த பத்தாண்டுகளாக வேட்டை விழாவில் தொடர்ந்து வெற்றி பெறுபவன் மகேந்திரபுரியின் தளபதி கருணாகரன் மட்டுமே.அது எப்படி என்பது யாருக்கும் தெரியாத ரகசியம்.மகேந்திரபுரியின் மன்னனுக்கு இதில் தாள முடியாத பெருமை.அந்த பெருமைக்கு குந்தகம் விளைவிக்க கோட்டையை நோக்கி விரைந்து கொண்டிருந்தன இரு புரவிகள்.அவற்றின் வாய் நுரை தொலைதூரத்திலிருந்து அந்த புரவிகள் வருகின்றன என்பதை சொல்லாமல் சொல்லின.அவற்றில் அமர்ந்திருந்த இருவரும் பயணத்தால் சற்றே களைப்புற்றிருந்தாலும் களையான முகத்துடன் இருந்தனர்.அவர்களின் மேனியில் மேலாடை போடப்படாது இருந்த இடங்களில் தெரிந்த தழும்புகள் இருவரும் சண்டையில் தேர்ந்தவர்கள் என்பதையும் அதில் காயப்பட அஞ்சாதவர்கள் என்பதை் பார்ப்பவர்கள் ஊகிக்கும்படியும் அவர்களிடம் வாலாட்ட நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை தருவது போலவும் இருந்தன.அவர்களின் கச்சையிலிருந்த குறுவாள்கள் ஒழுங்காகவும், கச்சிதமாகவும் சொருகப்பட்டிருந்தன.இடுப்பிலிருந்த வாள் வலது கையை ஒட்டியபடியே இருந்ததால் எந்த நேரத்திலும் வாளை சுழற்றி அவர்களால் தாக்க முடியும் என்பதை எதிரிகள் உணர்ந்து கொள்ளவாகாக இருந்தன.குதிரையை மெல்ல நடத்திக் கொண்டிருந்த இளையவன் “அண்ணா! நமக்கு கிடைத்த தகவல் சரிதானா? “என்றான்.



“அரபு வணிகன் பொய் சொல்ல மாட்டான்.ஆறு விரல் கொண்ட ஒரு மனிதன் மகேந்திரபுரியில் இருப்பதாகத்தான் அவன் கூறினான்.!”



“கடந்த ஆறு திங்கள்களில் நாம் பல நாடுகளில் பல ஆறு விரல் உள்ள மனிதர்களை பார்த்து விட்டோம்.ஆனால் யாருமே நாம் தேடி வரும் நபருடன் பொருந்தி போகவில்லை! “



“உண்மைதான்! இங்காவது நம் தேடல் முடிவுற வேண்டும்! “



ஆதித்தன் தன் ஆடையிலிருந்து அந்த ஆபரணத்தை எடுத்தான்.கழுத்தில் அணியும் ஆபரணங்களில் ஒன்று அது.”இதை பார்த்தவுடன் யாருடைய முகம் மாறுகிறதோ அவனே நாம் தீர்க்க வேண்டிய ஆள்! துரதிர்ஷ்டவசமாக இந்த நகையுடன் முன் அனுபவம் உள்ள ஆறு விரல் ஆசாமி நம் கண்களில் தட்டுப்படவில்லை! “



“ஆமாம்! இந்த நகையை பார்த்து முகம் மாறியவர்கள் யாருமில்லை.மேலும் பத்மாவதி பொய் உறைத்திருக்கலாம்! “



“பத்மாவதியாவது பொய் கூறுவதாவது? “



“இல்லை! அவளை ஏமாற்றியவன் பொய் கூறி இருக்கலாம் அல்லவா? “



“பொய் மட்டுமா கூறினான்? ஒரு இனத்தையே அழித்து விட்டல்லவா காணாமல் போயிருக்கிறான்.?அவன் மட்டும் என் கையில் கிடைத்தால்? “



“பொறு ஆதித்தா! கோட்டை நெருங்கி விட்டது! “என்றான் அரிஞ்சயன்.அவர்கள் கோட்டை தலைவனின் கேள்விகளுக்கு பதில் கூறி விட்டு வணிகர் தெருக்களில் நடக்க துவங்கினர்.மகேந்திரபுரியின் செல்வ செழிப்பை கடைவீதி தெள்ள தெளிவாக காட்டி கொண்டிருந்தது.ஒவ்வொன்றாக பார்த்தபடி இருவரும் ஆறுவிரல் கொண்ட யாராவது நாட்டில் உள்ளனரா என்று விசாரித்து கொண்டிருந்தனர்.வணிகர்களின் பார்வையில் ஆறு விரல் கொண்ட கை பார்வைக்கு தப்பாது என்பதாலேயே இருவரும் வணிகர் வீதிகளில் விசாரிக்க தலைப்பட்டனர்.குதிரையை நடத்தியபடி சாலையின் ஒரத்தில் நடந்து சென்ற ஆதித்தன் வெகு வேகமாக வந்த ஒரு புரவியால் மோதி தள்ளப்பட்டான்.திடிரென தள்ளி விடப்பட்டதால் கடும் கோபமடைந்த ஆதித்தன் அருகிலிருந்த பழக்கடையில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த பழங்களில் ஒன்றை இடித்து சென்றவனின் தலையை நோக்கி குறி பார்த்து வீசினான்.பழம் அவனுடைய தலையில் மோதி முகத்தை சாறாக்கியது.நல்லவேளையாக அவன் யவனர்களின் முக கவசத்தை அணிந்திருந்ததால் அவனுடைய முக சேதாரம் குறைவாகவே இருந்தது.



“எங்கேயப்பா இவ்வளவு அவசரமாக செல்கிறாய்? உன் மனைவியை கற்பழிப்பவர்களிடமிருந்து காப்பாற்ற செல்கிறாயா? “சற்று இடக்காகவே வந்தன ஆதித்தனின் வார்த்தைகள்.



“எனக்கு இன்னும் திருமணமாகவில்லை குருடனே! “என்றவன் புரவியிலிருந்து இறங்கினான்.அவனது முகத்தை பார்த்ததும் கடைவீதியில் பரபரப்பு கிளம்பியது.”தளபதி கருணாகரன்! “என்று யாரோ சொன்னார்கள்.அரிஞ்சயனுக்கு சூழ்நிலை சட்டென்று புரிந்தது.அரசின் உயர் மட்ட அதிகாரியோடு தம்பி தெரியாமல் மோதி விட்டான் என்று உணர்ந்தவன் ஆதித்தனின் கைகளை பிடித்தான்.”வேண்டாம் ஆதித்தா! “என்ற அரிஞ்சயன் கருணாகரனின் அடுத்த செயலை பார்த்து அதிர்ந்தான்.



“இந்த அந்நியனுக்கு சரியான பாடம் கற்பிக்கிறேன்! “என்ற கருணாகரன் தன் புரவியை முடுக்குவதற்காக வைத்திருந்த சவுக்கை எடுத்து ஆதித்தனை நோக்கி வீசினான்.தன்னை நோக்கி வந்த சவுக்கின் நுனியை லாவகமாக பற்றிய ஆதித்தன் கருணாகரனை பார்த்து கேலியாக புன்னகைத்தான்.இனி என்ன செய்ய உத்தேசம் என்ற ஆதித்தனின் புன்னகை கேள்வியில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற கருணாகரன் சவுக்கை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்ய ஆரம்பித்தான்.அப்படியான முயற்சியில் கருணாகரன் ஈடுபட்ட போது அவனது வலதுகையில் இருந்த ஆறாவது விரலை சகோதரர்கள் இருவருமே பார்த்தனர்.அரிஞ்சயன் நாட்டின் தளபதியை கொன்று விட்டு இருவரும் வெளியேறுவது நடக்கக்கூடிய காரியமா? என்ற அச்சத்தில் உறைந்தான்.ஆதித்தனின் கண்கள் பழி வாங்கும் வெறியில் சிவக்க தொடங்கின.!
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம்2



சவுக்கின் நுனியை பிடித்திருந்த ஆதித்தன் மறு கையால் வாளை உருவினான்.ஆதித்தன் வாளை உருவுவதை கண்டதும் கருணாகரன் மனதிற்குள் வியப்பு மலையென எழுந்தது.ஒரு அந்நியன் வேறு நாட்டிற்குள் நுழைந்தவுடன் அந்த நாட்டின் தளபதியுடன் மோதுகிறோம் என்பது தெரிந்தும் மோத தயாராவது அவனது வியப்பிற்கு காரணமாக இருந்தது.அந்த அந்நியனின் தைரியத்தை மனதிற்குள் வியந்த கருணாகரன் ஆதித்தனுக்கு பதிலடி கொடுக்க தன் வாளை மற்றோரு கையால் உருவினான்.



தன்னுடன் மோத கருணாகரன் தயாராகி விட்டதை உணர்ந்த ஆதித்தன் சவுக்கின் நுனியை வீசி எரிந்தான்.சவுக்கை விட்டெரிந்த கருணாகரன் வாளை கையில் எடுத்து கொண்டு முன்னேறினான்.முழு வேகத்தில் தம்பி களமிறங்குவதை பதைபதைப்புடன் பார்த்து கொண்டிருந்த அரிஞ்சயன் தளபதிக்கு பின்புறமாக குதிரைகளில் வந்த காவலர்களை கவனிக்க தவறினான்.தன்னுடைய ஆட்கள் வருவதை கவனித்த கருணாகரன் “இந்த அன்னியர்களை கைது செய்யுங்கள்! “என்றான்.கூரிய வேலக்ளும், அம்புகளும் சகோதரர்களை சூழ்ந்தன.வாளை உறையிலிட்ட ஆதித்தன் “எங்களை கைது செய்ய என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளலாமா? “என்றான்.



“அரசாங்க அதிகாரியை பொதுமக்களுக்கு முன் அவமானப்படுத்தியிருக்கிறாய்.அதற்காக நீ கைது செய்யப்படுகிறாய்.!”என்றான் கருணாகரன்.



“பாத சாரிகளை இடித்து தள்ளுவது குற்றமல்லவா? “



“அதை மாலை நீதி விசாரணையின் போது மன்னர் முடிவு செய்வார்.!”



“இந்த நாட்டில் விசாரணை கூட நடக்கிறதா? “



“விசாரணை நடக்கும்.முடிவில் உன் மரணமும் சம்பவிக்கும்.!”



“ஆகா! தளபதியின் கோபத்தை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறதே! “என்றான் ஆதித்தன் பயப்படுவதை போல் நடித்தபடி.



சகோதரர்கள் இருவரும் சிறைச்சாலை நோக்கி நடத்தி செல்லப்பட்டனர்.கருணாகரன் தன் வீரர்களை நோக்கி “இந்த அன்னியர்களை பற்றிய முழு விவரமும் வேண்டும்! அவர்களைப்பற்றி விசாரியுங்கள்! “என்று உத்தரவிட்டான்.



சிறைச்சாலையினுள் இருவரும் அடைபட்டு கிடந்தனர்.சிறைக்குள் அடைப்பதற்கு முன்பாக இருவரின் உடமைகளும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

“நீ அவசரப்பட்டு விட்டாய் ஆதித்தா! சற்று பொறுமையாக இருந்திருக்கலாம்! “என்றான் அரிஞ்சயன்.



“இருந்திருப்பேன்.அவனது ஆறாவது விரலை பார்க்காதிருந்தால்.அதை விடவும் இன்னொரு விசயம் முக்கியமானது.அதை கவனித்தாயா அண்ணா? “



“என்ன அது? “



“பத்மாவதியின் ஆபரணம் இரண்டு ஜோடியால் ஆனது.அதன் இன்னொரு ஜோடியை நான் கருணாகரனின் கழுத்தில் கண்டேன்.!”



“என் கண்களுக்கு தட்டுப்படவில்லையே? “



“நான் கவனித்தேன்.நம் தேடல் இன்றோடு முடிவுக்கு வருகிறது.நாம் தேடிய ஆசாமி இவன்தான்.!”



“இருக்கலாம்! ஆனால் இப்போது நாம் அவன் பிடியில் இருக்கிறோம்.தப்புவது எளிதல்ல! “



“நமக்கு சாதகமாக எதாவது நடக்கும்வரை காத்திருப்போம்! “



சிறை காவலன் அவர்களை பார்த்து “பேசாதீர்கள்! அமைதியாக இருங்கள்.தளபதியை தாக்க துணிந்து விட்டு அரட்டை வேறா அடிக்கிறீர்கள்? “என்றான்.



“மன்னித்து விடுங்கள் ஐயா! தெரியாமல் செய்து விட்டோம்.!”என்றான் அரிஞ்சயன்.



“வேட்டை திருவிழாவிற்கு வந்தால் அதில் கலந்து கொண்டு சாக வேண்டியதுதானே? ஏன் இப்படி வீணே சாகிறீர்கள்? “



“நாங்கள் அதில் கலந்து கொள்ள வந்தவர்கள் என்றா நினைக்கிறீர்கள்? “



“இல்லையா என்ன? அதில் எங்கள் தளபதியை யாரும் வென்றதில்லை! “



“அப்படியா சேதி! நாங்கள் வந்தது வேறு வேலையாக! ஆனால் இப்போது வேட்டை விழாவில் பங்கு கொள்ள தீர்மானித்து விட்டோம்! “



“அது நடக்காது! “என்ற கணீர் குரல் உரையாடலில் குறுக்கிட்டது.வாசலில் நின்ற கருணாகரனை பார்த்த காவலன் முகமன் கூறி நகர்ந்தான் “கள்வர் குல திலகங்களே! உங்கள் பூர்வாசிரம கதை முழுதும் தெரிந்து விட்டது.இனி நீங்கள் உயிர் தப்ப முடியாது.!”என்றான்.



“எங்களை என்னசெய்ய போகிறீர்கள் தளபதி? “என்றான் அரிஞ்சயன்.



“கள்வர் புரத்தின் பிரசித்தி பெற்ற திருடர்களே! உங்கள் வாழ்வு நாளை காலையோடு முடிய போகிறது.மகேந்திர புரியில் திருடிய குற்றத்திற்காக நாளை இருவரின் தலையும் துண்டிக்கப்படும்.!”



“நாங்கள் எதையும் திருடவில்லையே? “என்றான் ஆதித்தன்.



“உங்களின் மீது பொய்யான வழக்கை புனைய போகிறேன்.கடை வீதியில் நீங்கள் திருட முயற்சி செய்தீர்கள்.அதை நான் தடுத்ததால் என்னை தாக்கினீர்கள்.நீங்கள் திருடர்கள் என்பதால் உலகம் இதை நம்பும்.மன்னரும் நம்புவார்.!”என்றான் கருணாகரன்.



“அப்படியானால் எங்கள் கதி!?”என்றான் அரிஞ்சயன்.



“அதோ கதி! “என்ற கருணாகரன் கடகடவென்று நகைக்க தொடங்கினான்.விரைவிலேயே அந்த சிரிப்புடன் இன்னோரு சிரிப்பொலி கலந்தது.அது ஆதித்தனுடையது.”நீ எதற்கு நகைக்கிறாய்? “என்றான் கருணாகரன்.



“நீர் சொன்னதை நினைத்தேன்.நகைத்தேன்.நாங்கள் மன்னரால் விடுவிக்கப்படுவதுடன், வேட்டை விழாவிலும் கலந்து கொள்வோம்! உன் கனவு ஒரு போதும் நிறைவேறாது! “



“அது நிச்சயம் நடக்காது! நடக்க விட மாட்டேன்! “



“நடக்கும்! எங்களை வேட்டை விழாவில் கலந்து கொள்ள வழி மொழியப் போவதே நீர்தான்! “என்ற ஆதித்தன் கருணாகரனை பார்த்து கண்ணடித்து விட்டு மீண்டும் நகைக்க துவங்கினான்.கருணாகரன் எதுவும் விளங்காமல் குழம்பி போய் நின்றிருந்தான்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம்3



முன்பின்தெரியாத நாட்டில் பொய்யான திருட்டு குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைபட்ட நிலையிலும் எந்த கவலையுமின்றி ஆதித்தன் நகைத்தது கருணாகரனுக்கு குழப்பத்தை தந்ததுடன் அவனது தைரியத்தை நினைத்து சற்று அச்சமும் அடைந்தான்.அன்று மாலை மகேந்திரபுரியின் நீதி மண்டபத்தில் ஆதித்தன் நிறுத்தப்பட்ட போது நடந்த நிகழ்வுகள் அவனது அச்சத்தை அதிகரித்தன.எதிரி சாமான்யமானவன் அல்லவென்பதையும் அவனிடம் எச்சரிக்கையாக இல்லா விட்டால் தன் உயிர் தப்பாதென்பதையும் கருணாகரன் தெள்ள தெளிவாக அறிந்து கொண்டு விட்டான்.



கைப்பற்றிய பொருட்களை திரும்ப கொடுத்த காவலர்கள் இருவரையும் நீதிமண்டபத்தை நோக்கி அழைத்து சென்றனர்.அங்கே வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த குற்றவாளிகளை விசாரித்து அவர்களின் குற்றங்களுக்கேற்ற தண்டனையை வாரி வழங்கி கொண்டிருந்தான் மன்னன் மகேந்திரன்.பெரிய குற்றங்களுக்கு மரண தண்டனையும், சிறிய குற்றங்களுக்கு சிறை தண்டனையும் வழங்கப்படுவதை பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் ஆதித்தன்.வரிசையில் ஆதித்தனின் முறை வந்ததும் தன்னுடைய கட்டுக்கதையை அவிழ்த்து விட்டான் கருணாகரன்.கள்வர்புரத்தின் பிரசித்தி பெற்ற திருடர்கள் இவர்களென்றும், வேங்கியிலிருந்து மோகினி என்னும் குதிரையை களவாடி வந்ததிலிருந்து இவர்களின் திருடும் திறமையை அறியலாம் என்று சற்று வஞ்சப் புகழ்ச்சியாகவே அறிமுகத்தை ஆரம்பித்தான் கருணாகரன்.கடைவீதியில் திருட முற்பட்டவர்களை தான் தடுத்து நிறுத்தியதால் தன்னை தாக்க முனைந்ததாகவும் கருணாகரன் புதிய கதை ஒன்றை புனைந்த போது ஆதித்தன் தனக்குள் சிரித்து கொண்டான்.



“கள்வர்களே! இவர் சொல்வதை ஒப்பு கொள்கிறீர்களா? “என்றான் மகேந்திரன்.



“இதை ஏற்க இயலாது மன்னரே! சில கேள்விகளை கேட்டால் நீங்களும் ஏற்க மாட்டிர்கள்! “என்றான் ஆதித்தன்.



“புதிதாக நுழைந்த இடத்தில் சில மணி நேரங்களில் யாராவது திருட துணிவார்களா? நோட்டம் பார்க்க காலம் வேண்டாமா? மோகினியை கூட 15 நாட்களுக்கு நோட்டம் இட்டுத்தான் தூக்கினோம்.சரியான சமயம் வாய்த்தால்தானே திருடுவது எளிது! “



“ஆம்! நீர் சொல்வதும் சரிதான்.!”



“மேலும் களவாடிய பொருளை உடனே கை மாற்றுவதுதானே பாதுகாப்பு.அதற்கு மற்றோரு கள்வன் தூர இருந்து உதவுவதுதானே வழக்கம்.?இங்கோ இருவரும் அருகருகே இருந்தோம்.திருடிய பொருளை எங்களிடமே வைத்திருந்தால் சிக்கி கொள்ள மாட்டோமா? “



“அதுவும் சரிதான்.உங்களின் கேள்விகளின்படி யோசித்தால் நீங்கள் திருட முகாந்திரமில்லை.மேலும் திருடிய பொருள் சபைக்கு வரவில்லை.!”



“ஆம்! குற்றசாட்டு மட்டுமே வந்திருக்கிறது.பொருள் வரவில்லை.என்ன பொருளை திருடினோம் என்று தெரியாமலேயே இங்கு வந்திருக்கிறோம்! “



“அப்படியானால் என் நாட்டில் களவு செய்ய நீங்கள் வரவில்லை? “



“அந்த நோக்கத்திற்காக நாங்கள் வரவில்லை! “



“எத்தனையோ பேர் வேட்டை திருவிழாவிற்கு வரும்போது கருணாகரன் உங்களை மட்டும் ஏன் கைது செய்ய வேண்டும்? “



“பயம் அரசே! “



“கருணாகரனுக்கு பயமா? யார் மீது? “



“எங்களின் மீது! மோகினியை களவு செய்த எங்களின் திறமை மீது.எங்கே வேட்டை விழாவில் நாங்கள் வென்று விடுவோமோ என்று பயப்படுகிறார்.அதனால் வீணாக திருட்டு குற்றம் சுமத்தி எங்களை ஆட்டத்திலிருந்து அப்புறப்படுத்த நினைக்கிறார்.நாங்கள் கள்வர்கள் என்பது அவருக்கு வசதியாகி விட்டது!"



“கருணாகரா! இதற்கு என்ன சொல்கிறாய்?”



“பத்தாண்டுகள் தொடர்ந்து வென்ற நான் இவர்களைப் பார்த்து பயப்படுவதா? வெட்கம்! இவர்கள் கலந்து கொள்ளட்டும்.இவர்களை களப்பலியாக்கி இவர்களின் கூற்றை பொய்யாக்குகிறேன்.!”



“அவர்கள் போட்டியில் கலந்து கொள்வார்கள்.அதை நான் வரவேற்கிறேன்.இந்த வழக்கு? “



“தளபதியின் காழ்ப்புணர்ச்சியால் விளைந்த பொய் வழக்கு! “என்றான் ஆதித்தன்.



“கருணாகரா! கவனம்.உன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மக்களிடம் காட்டாதே! அது நல்லதல்ல! இதுவே கடைசி முறை.விருந்தாளிகளே தளபதியின் தவறுக்கு மன்னித்து விடுங்கள்.வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.!”என்றான் மகேந்திரன்.



“மன்னித்து விடுங்கள்! இனி தவறு நேராது! “என்றான் கருணாகரன்.



“வழக்கு முடியவில்லை மன்னரே! இனிதான் துவங்குகிறது! “என்றான் ஆதித்தன்.



“என்ன சொல்கிறாய்? “என்றான் கருணாகரன்.



“என் உடமைகளில் ஒரு ஆபரணத்தை காணோம்! அதை தளபதி எடுத்திருக்ககூடுமென நினைக்கிறேன்! “என்றான் கணீர் குரலில் ஆதித்தன்.சபை அமைதியானது.தளபதியின் மீதே திருட்டு குற்றமா என்ற கேள்வி அனைவரின் நெஞ்சிலும் எழுந்தது.கருணாகரனின் இதயம் சில நிமிடங்கள் துடிக்க மறந்தது.எதிரி சாதாரணமானவன் அல்லவென்று கருணாகரன் உணர தொடங்கியிருந்தான்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம்4



ஆதித்தனின் குற்றச்சாட்டு அவையை அமைதியாக்கியதுடன் மட்டுமல்லாது அவனின் துணிச்சலை வெளிக்காட்டுவதாகவும் அமைந்திருந்தது.சற்றும் பயமின்றி தளபதியின் மீதே திருட்டு குற்றத்தை மன்னரிடம் கூறும் அந்த வாலிப வீரனின் துணிச்சலை சிலர் வாய் விட்டு பாராட்டவும் தலைபட்டனர்.கருணாகரன் நிலையோ இருதலை கொள்ளி எறும்பானது.ஆதித்தனின் ஆபரணத்தை தான் எடுத்தது இவ்வளவு பெரிய ஆபத்தை கொண்டு வரும் என்று கருணாகரன் கனவிலும் கருதினானல்லன்.காவலர்கள் ஆதித்தனின் உடமைகளை திரும்ப கொடுத்த போது தன்னுடைய ஆபரணம் காணாமல் போய் விட்டதென்று ஆதித்தன் குரல் எழுப்பாமல் மவுனமாக இருந்ததன் பொருள் அவனுக்கு அப்போதுதான் விளங்க தொடங்கியிருந்தது.ஆனாலும் ஆதித்தனின் குற்றசாட்டிலிருந்து மீள சில சாதகமான விசயங்கள் தனக்கிருப்பதையும், அதை பயன்படுத்தி மீண்டும் ஆதித்தனை சிக்க வைக்க முடியும் என்பதை உணர்ந்த ஆதித்தன் துணிச்சலுடன் பேச ஆரம்பித்தான்.



“அவையோர்களே! ஒரு நாட்டின் தளபதியாகிய நான் ஒரு கள்வனின் ஆபரணத்தை களவாடியிருப்பேன் என்று நம்புகிறீர்களா? “என்றான்.



“இல்லை! “என்ற ஓசை அவையின் நாலாபுறத்திலும் எழுந்தது.



“அவையோரின் நம்பிக்கைக்கு பணிகிறான் கருணாகரன்.இந்த கள்வன் அந்த ஆபரணத்தை யாரிடமிருந்து திருடினானோ? “என்றான் இகழ்ச்சி புன்னகையுடன்.



“களவாடிய பின் அது என் பொருள் ஐயா! அந்த பொருளின் சொந்தக்காரர் யார் என்பது எனக்கு தெரியாது! “என்றான் ஆதித்தன்.



“திருட்டின் நியதி அப்படி இருக்கலாம்.அந்த பொருளின் உரிமையாளன் நான்.!”



“நிஜமாகவா? “



“ஆம்! “



“அப்படியானால் இணைந்தே அணிய வேண்டிய அந்த ஆபரணங்களில் ஒன்றை மட்டுமே ஏன் ஐயா அணிந்திருக்கிறீர்.?மற்றொண்று என்ன பாவம் செய்தது! “வில்லிலிருந்து பாய்ந்த அம்பு போல் ஆதித்தனிடமிருந்து கேள்வி பறந்தது.எதிர் பாராத இந்த கேள்வியால் சற்று தடுமாறிய கருணாகரன் “அதன் மற்றோரு ஜோடியில் சற்றே சேதம்.அதனால் அணியவில்லை.!”என்றான்



“சேதத்தை காட்டும்.நம்புகிறேன் அரிசந்திரன் நீயேயேன! “ஆதித்தனிடமிருந்து இடக்காக வந்தது பதில்.



இருவரின் வாதங்களை கேட்ட மகேந்திரன் “கருணாகரா! ஏன் தயங்குகிறாய்? உன் பக்கம் நியாயம் இருந்தால் இவர்களை நானே தண்டிப்பேன்! “என்றான்.



சற்றே பதட்டத்துடன் தன் ஆடைகளுக்குள் கையை நுழைத்து தேடிய கருணாகரன் ஆபரணம் தட்டுப்பட்டதும் தன் வலுவான விரல்களால் அதை இரண்டு துண்டாக்கினான்.வெட்டுப்பட்ட பாகத்தை வெளியே எடுத்தவன் “இதுதான் நான் ஆபரணத்தை ஒளித்து வைக்க காரணம்! “என்றான்.அவன் முகத்தில் வெற்றி பெருமிதம் இருந்தது.



“இதற்கு என்ன பதில் சொல்ல போகிறாய்? “என்றான் மகேந்திரன் ஆதித்தனை நோக்கி.



“பொறுங்கள் மன்னா! சேதத்தை நிருபித்து விட்டார்.ஆனால் வெட்டுப்பட்டஆபரணம் அவருடையது என்று நிருபிக்கவில்லையே? “என்றான் ஆதித்தன்.



“அதை நான் நிருபிக்கிறேன்! “என்ற குரல் சபையில் எழுந்தது.

அனைவரும் திரும்பி பார்த்த போது அரண்மனை பொற்கொல்லர் நின்றிருந்தார்.



“அந்த ஜோடி ஆபரணங்களை செய்து கொடுத்தவன் நான்தான்.அந்த ஆபரணங்களின் கொக்கியில் என் குடும்ப லட்சினையான மீனை பொருத்தியிருப்பேன்.கவனியுங்கள் மன்னா! “என்ற பொற் கொல்லன் கருணாகரனின் கழுத்தில் கிடந்த நகையை வாங்கினான்.அறுபட்ட சங்கிலியின் மறு முனையிலிருந்த கொக்கியை திருப்பியவன் இரண்டிலும் இருந்த மீன் சின்னத்தை காட்டினான்.



“இந்த ஜோடி ஆபரணம் தளபதி கருணாகரனுக்கு மலை கொள்ளையனும், புரட்சிகாரனுமான கரிகாலனை கொன்றதற்காக வழங்கப்பட்ட பரிசுகளில் ஒன்று.இதை செய்து கொடுத்தவன் நானே.இதை மன்னர்தான் கருணாகரனுக்கு பரிசாக கொடுத்தார்.இந்த நகை கருணாகரனுக்கு சொந்தமானது! “



அவையில் மயான அமைதி நிலவியது.கருணாகரனின் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.தொலைந்தான் எதிரி என்று எண்ண தொடங்கினான்.தான் வழக்கில் தோற்றதை பற்றி எந்த கவலையுமின்றி புன்னகையுடன் நின்றிருந்தான் ஆதித்தன்.



“நீதி மண்டபத்தில் பொய் கூறி ஏமாற்றியதற்காக இவர்களை சிரசேதம் செய்யுங்கள்! “என்ற உத்தரவு மகேந்திரனிடமிருந்து பறந்தது.அடுத்த நொடியில் ஆதித்தன் நகைக்க தொடங்கினான்.அலையலையாக எழுந்த அவனது சிரிப்பொசை அவையையும் மன்னனையும், கருணாகரனையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.மற்றவர்கள் அஞ்சி நடுங்கும் ஒரு உத்தரவை பார்த்து ஒருவன் நகைக்கிறானென்றால் அவனுக்கு எவ்வளவு மன தைரியம் இருக்க வேண்டும் என்று அவை விக்கித்தது.ஆதித்தனின் சிரிப்பு கல் விழுந்த குளமாக விரிந்து கொண்டே சென்றது.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம்5



அவை முழுவதும் அலையென பரவிய ஆதித்தனின் சிரிப்பை மகேந்திரனின் குரல் தடுத்து நிறுத்தியது.”உன் நகைப்பின் மூலம் இந்த அவையை அவமதிக்கிறாய் ஆதித்தா! “என்று குற்றம் சாட்டியது கொற்றவனின் குரல்.



“இந்த அவையை அவமதித்தது நான் அல்ல மன்னரே! நீர்தான் நீதி வழங்க வேண்டிய மன்றத்தில் அநீதியை தீர்ப்பாக வழங்கியிருக்கிறீர்கள்! “என்றான் ஆதித்தன்.



“மன்னரின் தீர்ப்பில் குறை காண்கிறாயா? இப்போதே உன் தலையை தனியாக்குகிறேன் பார்! “என்ற கருணாகரன் தன் வாளை உருவ முற்பட்டான்.



“நாம் களத்தில் மோதுவோம் கருணாகரா.இப்போதைய விவாதம் எனக்கும் மன்னருக்கும் மட்டுமே! நீர் சற்று அமைதியாக இருப்பது உமது உடலுக்கு நல்லது.!”என்றான் ஆதித்தன் சற்றும் அலட்டி கொள்ளாமல்.!



“நான் தந்த தீர்ப்பில் என்ன குறை கண்டாய்? சொல் வீரனே? “என்றான் மகேந்திரன்.



“நீதி ஆளுக்கு தகுந்தாற்போல் மாறுபடக்கூடாது மன்னரே.அப்படி மாறினால் அது அநீதியாகவே கருதப்படும்! “



“ஆம்! உண்மை! “



“அவையோரே! நன்றாக கவனியுங்கள்.சற்று முன் கருணாகரன் என்மீது தவறான குற்றத்தை சாட்டி என்னை தண்டனைக்குள்ளாக்க முயன்றான்.என் மீதான குற்றசாட்டு பொய்யானதென்று நான் நிருபித்தேன்.அதை நிருபிக்கும்வரை என் மனம் பட்ட வேதனையை நான் மட்டுமே அறிவேன்.உண்மையை அறிந்த மன்னர் கருணாகரனை எச்சரித்து மன்னித்தார்.நான் அடைந்த வேதனையை மன்னரும் அறிய மாட்டார்.கருணாகரனும் அறிய மாட்டான்.தன் தவறை கருணாகரன் உணர வேண்டுமென்று விரும்பினேன்.அதனால் ஆபரணம் களவு போனதாக பொய் கூறினேன்.அந்த பொய்யின் பலனை அந்த வேதனையை கருணாகரன் இப்போது அனுபவித்தான்.நான் அடைந்த வேதனைக்கும் அவன் அடைந்த வேதனைக்கும் சரியாக போயிற்று.பொய் குற்றசாட்டை சொன்ன கருணாகரனை மன்னித்த மன்னர் அதே குற்றம் செய்த என்னை சிரச்சேதம் செய்ய உத்தரவிடுகிறார்.இதுதான் மகேந்திரபுரியின் நீதி பரிபாலனமா? ஆளுக்கு தகுந்தது போல் இந்த நாட்டின் நீதி மாறுபடுமா? அவையோரே! நீங்களே பதில் சொல்லுங்கள்.நான் செய்தது தவறென்று நீங்கள் சொன்னால் நவகண்டம் செய்து என் உயிரை நானே மாய்த்து கொள்கிறேன்.!”ஆதித்தனின் பேச்சு அவையின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது.பொது மக்கள் மெல்ல தங்களுக்குள் கிசு கிசுக்க ஆரம்பித்தனர்.”ஆதித்தனின் கேள்வி நியாயமானது.!”என்ற குரல் எங்கிருந்தோ ஒலித்தது.”மன்னரின் தீர்ப்பு அநீதியானது! “என்றது மற்றொரு குரல்.”அநீதி! “என்ற கோஷம் மெல்ல கிளம்பலாயிற்று.



கை உயர்த்தி அவையின் சத்தத்தை அடக்கிய மகேந்திரன்.



“தவறு செய்யவிருந்தேன்.சரியாக சுட்டி காட்டிவிட்டாய்.உங்கள் இருவரையும் விடுவிக்கிறேன் ஆதித்தா! போ! போய் நாளைய போட்டிக்கு தயாராகு! “என்றான்.”மன்னர் வாழ்க! “என்ற கோஷத்தில் மகேந்திரன் நனைந்து கொண்டிருந்த போது சகோதரர்கள் இருவரும் கிளம்பினர்.அவர்களை முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க முறைத்து கொண்டிருந்தான் கருணாகரன்.தன்னை கடந்தவர்களை பார்த்து “உங்களின் முடிவு என் கையில்! “என்றான்.



“அதில் வெறும் ரேகை மட்டுமே இருக்கிறது தளபதி.அதில் ஆயுள் ரேகை என்ற ரேகை ஒன்று ஓடுகிறது.அது இன்னும் இரண்டு நாட்களுக்கு பிறகு ஓடாது.நின்று விடும்! “என்ற ஆதித்தன் அலட்சியத்தோடு வெளியேறினான்.நீதி மண்டபத்தை விட்டு வெளியேறி புரவிகள் கட்டப்பட்ட இடத்தை நோக்கி நடந்தார்கள் இருவரும்.



“அடையாளம் காட்டும் அந்த ஆபரணத்தை நாம் இழந்து விட்டோம்! “என்றான் அரிஞ்சயன்.



“இல்லை! அது என்னிடமிருக்கிறது! “என்ற ஆதித்தன் தன் கையை விரித்தான்.அதில் துண்டாக்கப்பட்ட ஆபரணம் காட்சியளித்தது.



“இது எப்போது நடந்தது? “என்றான் அரிஞ்சயன்.



“கடைசியாக கருணாகரனிடம் பேசிய போது கை வரிசையை காட்டி விட்டேன்.!இப்போது ஆபரணத்தை தேடும் அவனின் முகம் இஞ்சி தின்ற குரங்காக மாறியிருக்கும்! “என்று நகைத்தான் ஆதித்தன்.



“அப்படியானால்? “



“பத்மாவதியையும், கரிகாலனையும் கொன்றவன் இவன்தான். ஆபரணத்தை களவாடியதன் மூலம் உண்மையை ஒப்புக் கொண்டு விட்டான்..எப்போதும் எச்சரிக்கையாக இருக்கும் கரிகாலனையே வீழ்த்தியிருக்கிறானென்றால் இவனை நாம் சாதாரணமாக எண்ண முடியாது.வலுவான எதிரியோடுதான் மோதப் போகிறோம்! “என்றான் ஆதித்தன் சிந்தனை வசப்பட்டவனாக!



அதே நேரம் கருணாகரன் தனிமையில் யோசித்து கொண்டிருந்தான்.யார் இவர்கள்? பத்மாவதியிடம் பரிசாக கொடுத்த ஆபரணம் இவர்களிடம் எப்படி வந்தது.?பூண்டோடு அழித்து விட்டதாக கருதும் கரிகாலனின் உயிர் தப்பிய ஆட்களில் யாராவது பழைய கணக்கை நேர் செய்து கொள்ள கிளம்பி வந்திருக்கிறார்களா? பலவாறு சிந்தித்தவன் ஆபரணத்தை எடுக்க ஆடைக்குள் கையை விட்டான்.அங்கே ஆபரணத்தை காணாமல் அதிர்ந்தவன் “எமகாதகர்கள்! “என்று முணு முணுத்தான்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம்6



அன்று இரவு தங்கும் விடுதி ஒன்றில் தங்கிய சகோதரர்கள் இருவரும் தனிமையில் உரையாட ஆரம்பித்தனர்.”அண்ணா! இந்த வேட்டை விழாவை பற்றி நமக்கு எந்த விசயமும் தெரியாது.அதை நாம் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.”



“வாஸ்தவம்தான்! அதை தெரிந்து கொள்ள என்னிடம் ஒரு உபாயம் உள்ளது! “என்றான் அரிஞ்சயன்.



“சொல்லுங்கள்! செய்து பார்ப்போம்! “என்றான் ஆதித்தன்.



“இப்போது விடுதியிலிருந்து வெளியேறி ஆளுக்கு ஒரு திசையில் செல்வோம்.வேட்டை விழாவை பற்றி நகர மக்களிடம் விசாரிப்போம்.மீண்டும் விடுதியில் சந்தித்து நமக்கு கிடைத்த தகவல்கள் ஒத்து போகிறதா என்று சரி பார்ப்போம்.பிறகு விளையாட்டில் வெல்லும் வழியை கண்டு பிடிப்போம்! “



சம்மதத்திற்கு அறிகுறியாக தலையை அசைத்த ஆதித்தன் “அடுத்த சில மணி நேரங்கள் நாம் தனித்தனியாக இருக்கப் போகிறோம்.அதை சாதகமாக்கி கொள்ள நம் கருநாகம் முயற்சி செய்யலாம்! “



“நம் கருணாகரனுக்கு பொருத்தமான பெயரைத்தான் வைத்திருக்கிறாய்! “என்று புகழ்ந்த அரிஞ்சயன் “அடிபட்ட பாம்பிடம் எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும்! உன் எச்சரிக்கையை கவனத்தில் வைக்கிறேன்.!”



“நேரடியாக மோத துணிய மாட்டான் என்பதால் நாம் கண்ணில்பட்டவர்களிடம் சந்தேக கண் கொண்டே பழகியாக வேண்டும்! “என்ற ஆதித்தன் “ஆமாம் மோகினியும், உனது குதிரையும் எங்கே? “என்றான்.



“வாடகை குதிரை லாயத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்திருக்கிறேன்.கவலைப்பட வேண்டாம்.நம் நகர் உலா கால்நடையாகவே நிகழப் போகிறது! “



அடுத்த சில நிமிடங்களில் சகோதரர்கள் இருவரும் விடுதியிலிருந்து வெளியேறி ஆளுக்கொரு திசையில் நடந்தனர்.அதே நேரம் கருணாகரன் தனக்கு விசுவாசமான படை வீரர்களுடன் குயுக்தியான திட்டம் ஒன்றை தீட்டி கொண்டிருந்தான்.அபிமன்யு சக்ர வியூகத்தில் சிக்கி உயிரை விட்டதற்கு ஒப்பான ஒரு திட்டம் அவன் மனதில் உதயமாகியிருந்தது.அதில் சிக்கியவர்கள் மீள்வது எளிதல்ல! ஆதித்தனின் மனப்போக்கை ஓரளவு ஊகித்திருந்த கருணாகரன் இரண்டு விதமான திட்டங்களை தீட்டி வைத்திருந்தான்.ஆதித்தன் எந்த வழியை தேர்ந்தெடுத்தாலும் அது மரணத்தின் நுழைவாயிலாகவே இருக்கும் என்று தெளிவாக தெரிந்த பின்பே கருணாகரன் படுக்கைக்கு போனான்.



முதல் ஜாமம் முடிவடையும் நேரத்தில் சகோதரர்கள் இருவரும் விடுதியில் சந்தித்து கொண்டனர்.இருவருக்கும் எந்த இடையூறும் நேராதிருந்த போதே கருணாகரன் மிகப்பெரிய வலை ஒன்றை தங்களுக்காக விரித்திருப்பான் என்பதை ஆதித்தன் யூகித்திருந்தான்.உணவருந்தி படுக்கையில் உட்கார்ந்த ஆதித்தன் “சொல் அண்ணா? நீ கேள்விப்பட்டவற்றை! “என்றான்.



பெருமூச்சு விட்ட அரிஞ்சயன் “இது உயிர்பலி நிறைந்த விளையாட்டு ஆதித்தா! யுத்தவெறி பிடித்த மகேந்திரனின் கொடூரத்திற்கு இந்த விளையாட்டு ஒரு சாட்சி! “



“ஆம்! நானும் அதைத்தான் நினைத்தேன்.!”என்றான் ஆதித்தன்.



“போட்டி இரண்டு வழிகளில் நடக்கும்.ஒன்று நீலமலையை அடையும் நேர்வழி! “



“அதில் பயணிக்கும் வீரர்களை மகேந்திரனும் அவனது வீரர்களும் அம்புகளாலும் வேலாலும் தாக்கி கொல்வார்கள்! கணவாய் பகுதிகளில் பாறைகள் உருட்டி விடப்படும்.யானைகளை பிடிக்கும் குழி வேல் கம்புகள் நடப்பட்டு மணல் போர்த்தி காணப்படும்.அதில் விழுபவர்களின் கதி அதோ கதிதான்.!”



“நீல மலைக்கான நேர்வழியில் ஆபத்து நேராகவே காத்திருக்கும்.அதில் தப்பி தொடர்ந்து இலக்கு நோக்கி பயணிக்க வேண்டும்.!”என்றான் ஆதித்தன்.



“உயிர் போனாலும் கவலையில்லை என்று வீரர்களிடம் முதலிலேயே பிராமண பத்திரம் எழுதி வாங்கி கொள்வதால் உயிர்பலிக்கு நடவடிக்கை இல்லை.போட்டி இரண்டு பகல், இரண்டு இரவுகள் தொடர்ந்து நடக்கும்.தாக்குதல் இரவிலும் நடக்கும்.ஒருவரையொருவர் முந்தி செல்ல தங்களுக்குள்ளாக அடித்து கொண்டு வீரர்கள் இறப்பதும் உண்டு.!”



“கேள்விப்பட்டேன்.கருணாகரன் இதில்தான் பயணிக்கிறானா? “



“அப்படித்தான் தெரிகிறது.போட்டியில் முதல் ஆளாக அவன்தான் கிளம்புகிறான்.தங்கள் நாட்டு வீரன் என்பதால் தாக்குதல் நடத்தப்படுவதில்லையென்ற புகாரும் நகரில் நிலவுகிறது! “



“அது உண்மையாக கூட இருக்கலாம்! அடுத்த வழி? “



“அது வழியல்ல! நரகத்தின் வாசல்! “என்றான் அரிஞ்சயன்.



“உண்மைதான்.!இரண்டாவது வழி மாயமான் கரடு! அதனுள் நுழைந்தவர்கள் உயிருடன் திரும்பியதில்லை! இதுவரை அதில் பயணம் செய்ய முயற்சி செய்த 160 பேர் இறந்திருக்கின்றனர்!அந்த வழி நான்கு பாதையாக பிரியும்.அதில் ஒன்றுதான் சரியான வழி.!தவறான வழியில் சென்றாலும் தவறான வழியில் சென்றாலும் மரணம் நிச்சயம்.அது ஒரு புதிர் வழி “என்றான் அரிஞ்சயன்.



“அப்படியானால் நாம் அதில்தான் பயணிக்க போகிறோம்! “என்றான் ஆதித்தன்.!



“அது மரணத்திற்கு சமம்! “என்றான் அரிஞ்சயன்.



“அதையும் நேரில் சந்தித்து பார்ப்போம் அண்ணா! “என்றான் ஆதித்தன்.



கருணாகரன் ஆதித்தன் இந்த வழியைத்தான் தேர்ந்தெடுப்பான் என்று யூகித்து வகுத்த சக்ர வியூகத்தில் காலை வைத்தான் ஆதித்தன்
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம்7



மரணத்தின் நுழைவாயிலாக கருதப்படும் நீலமலைக்கான நேர்வழியை விடுத்து தன் தம்பி பொய்மான் கரடு வழியை தேர்ந்தெடுத்ததுடன் அதிலேயே பயணம் செய்வேன் என்று அடித்து கூறியதால் அரிஞ்சயன் குழப்பமடைந்ததுடன் அதை ஆதித்தனிடம் கேட்கவும் செய்தான்.இளையவனோ புன்னகையுடன் பதில் கேள்வியை தொடுத்தான்.”நீலமலைக்கான நேர் வழியில் ஆபத்து நேராகவே வரும்.ஆனால் பொய் மான் கரடின் வழியில் ஆபத்து எப்படி வரும் அண்ணா? நீ கேட்டறிந்ததை கூறு? “



“அந்த வழி நான்கு பாதையாக பிரிகிறது.அதில் ஒரு வழிதான் எளிதானது.மற்ற மூன்று வழிகள் ஆபத்து நிறைந்தவை.கொடிய மிருகங்கள், மனித கறி உண்ணும் காட்டுவாசிகள், ஆளை விழுங்கும் புதை குழிகள், சுய நினைவை இழக்க செய்யும் மதிமயக்கி வனம் போன்ற ஆபத்துகள் நிறைந்தவை.நீலமலையின் வழியில் மகேந்திரனால் உருவாக்கப்படும் செயற்கையான அபாயங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல இந்த இயற்கை அபாயங்கள்.இதில் சரியான பாதையை கண்டறிய இயலாமல் உயிரை விட்டவர்கள் இதுவரை 160 பேர்! உள்ளே நுழைந்தவர்கள் இதுவரை திரும்பி வந்ததில்லை! “



“அந்த காரணத்தினால்தான் நான் அந்த வழியை தேர்ந்தெடுத்தேன்.!”



“புரியவில்லை ஆதித்தா! “



“அண்ணா! நன்றாக யோசித்து பார்.உள்ளே சென்றவர்கள் உயிருடன் வந்ததில்லை என்றால் அங்கிருக்கும் அத்தனை அபாயங்களும் வெளி உலகிற்கு எப்படி தெரிய வந்திருக்கும்? “இடியென இறங்கியது இளையவனின் கேள்வி.அதுவரை அந்த கோணத்தில் யோசிக்காத அரிஞ்சயன் தன் தம்பியின் புத்திசாலித்தனத்தை மனதிற்குள் வியந்தான்.



“சரியான கேள்வியைத்தான் கேட்டிருக்கிறாய்! இந்த கேள்விக்கு பதில்? “



“இந்த கேள்விக்கு பதில் தெரிந்தவர்கள் இருவர்.ஒருவன் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை.இன்னொருவன் மகேந்திரன்! “



“புரியவில்லை ஆதித்தா! “



“புரியும்படியாக சொல்ல வேண்டுமானால் நாம் மகேந்திரன் மன்னனாக பதவியேற்ற பத்தாண்டுகளுக்கு முன்பாக செல்ல வேண்டும்.ஏனென்றால் மகேந்திரன் மன்னனாகும் போது பொய்மான் கரடு நீலமலைக்கான குறுக்கு வழியாக இருந்தது.அடர்ந்த காடு என்பதைத்தவிர வேறு பயம் எதுவுமில்லை.மகேந்திரபுரி என்னும் இந்த புதிய தலைநகரை நிர்மாணித்த மகேந்திரனின் கண்கள் இந்த காட்டின் மீது விழுந்தது.புதிர் விளையாட்டில் விருப்பம் கொண்ட யாரோ ஒரு கட்டிட கலைஞனின் மூலம் பொய்மான் கரட்டை ஆபத்தான இடமாக மாற்றி இருக்க வேண்டும்.அதில் இருக்கும் ஆபத்தை மகேந்திரனும் அவனும் மட்டுமே அறிந்திருக்க வேண்டும்.ரகசியம் வெளிப்படாதிருக்க அந்த கலைஞனை மகேந்திரன் கொன்றிருக்க வேண்டும்.இல்லையென்றால் அவனை சிறைப்படுத்தியிருக்க வேண்டும்! “



“இது எப்படி உனக்கு தெரியும்? “



“நகரத்தின் வயது முதிர்ந்த பெரியவரிடம் பேசிய போது கிடைத்த தகவல்கள் இவை! “



“இந்த தகவல்கள் புதிய கதையை கூறுகின்றன! “



“ஆம்! பத்மாவதி தீ விபத்தில் இறந்தாள் என்று நாம் பத்தாண்டுகளாக நினைத்து வந்தோம்.ஆறு மாதங்களுக்கு முன் நம்மை சந்தித்த முதியவர் அது விபத்தல்ல கொலை என்று புதிய கதையை கூறவில்லையா? கரிகாலனை அரசு கொன்றது என்று நாம் நினைத்தோம்.ஆனால் நீதி மண்டபத்தில் கருணாகரன் கொன்றதாக புதிய கதை கிடைக்கவில்லையா?”



“உண்மைதான்! நீ கூறியபடி பார்த்தால் பொய்மான் கரடின் வழியை அதன் அபாயத்தை மகேந்திரன் மட்டுமே அறிவான்.அந்த நான்கு பாதைகளில் இருக்கும் எளிய ஒரு வழியை அறிந்தவர்கள் யாருமில்லை போலிருக்கிறதே?”



“மகேந்திரனை தவிரவும் இன்னொருவனுக்கு அந்த வழி தெரியும்! “



“அது யார்? “



“நம் நண்பர் கருணாகரன்தான் அது! “



“அந்த வழியை கூறியது மகேந்திரனாக இருக்குமோ? “



“இருக்கலாம்! இல்லாமலும் இருக்கலாம்! “



“புதிர் போட்டு பேசுகிறாய்! “



“எனக்கே கொஞ்சம் குழப்பம்தான் அண்ணா! ஆனால் நிச்சயமாக சொல்வேன்.போட்டியின் போது கருணாகரன் நீலமலை வழியில் செல்வதில்லை.பொய்மான் கரட்டு வழியாகத்தான் செல்கிறான்.!”



“அது எப்படி? போட்டியில் முதலில் கருணாகரன்தானே கிளம்புகிறான்! “



“வாஸ்தவம்தான்! ஆனால் போட்டியின் நடுவில் அவன் தட்டுப்படுவதில்லை.கடைசியில்தான் காட்சியளிக்கிறான்.!”



“அதுவும் உண்மைதான்.அதற்கு என்ன காரணம்? “



“பொய்மான் கரட்டின் எளிய வழி கருணாகரனுக்கு தெரியும் என்பதுதான் காரணம்.போட்டியில் முதலாவதாக கிளம்பும் கருணாகரன் ஒரு கல் தொலைவை கடந்த பின் பொய்மான் கரட்டு வழியில் புகுந்து விடுவான்.போட்டியாளர்கள் குற்றுயிரும், குலையுயிருமாக நீலமலை அடிவாரத்தை அடையும் போது கருணாகரன் குறுக்கு வழியில் இலக்கை அடைந்து விடுவான்! “



“சரியான திட்டம்.!இதை நாம் எப்படி முறியடிப்பது? “



“யோசிப்போம் அண்ணா!பொய்மான் கரடின் அபாயங்கள் கற்பனையாக கூட இருக்கலாம்! “என்றபடி படுக்கையில் சாய்ந்தான் ஆதித்தன்.இருவரும் உறங்க தொடங்கினர்.ஆதித்தனுக்கு தெரியாது மறுநாள் போட்டியின் போது துவக்கத்திலேயே கருணாகரன் தன்னை யோசிக்க விடாமல் கதற வைப்பான் என்று!
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம்8



மறுநாள் காலை ஆதவன் கிழக்கே உதித்தான்.அந்த சூரிய உதயம் எத்தனை பேரின் தலை எழுத்தை மாற்றி எழுதப்போகிறதென்பதை யார் அறிவார்? .அணி, அணியாகவும், குழுவாகவும், தனியாகவும் போட்டியாளர்கள் வகைவகையாக வந்து சேர்ந்திருந்தனர்.விழா மேடையில் மகேந்திரனை காணவில்லை.அவன் போட்டி நடக்கும் வழியின் மூன்றாவது கல் தொலைவில் தன் காவலர்களுடன் வில், அம்புகளுடனும், ஈட்டியுடனும் காத்திருந்தான்.தாக்குதல் நடத்திய பின் அடுத்த தாக்குதலை நடத்தும் இலக்கில் ஆயுதங்களும், வீரர்களும் காத்திருந்தனர்.விளையாட்டு துவங்கும் மைதானத்தில் அறிவிப்பாளன் தோன்றியதும் மைதானம் ஆழ்ந்த அமைதியில் ஆழ்ந்தது.அவன் தொண்டையை கனைத்து கொண்டு உரத்த குரலில் பேச ஆரம்பித்தான்.”வீரர்களே! நமது மன்னரின் வீர விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.இந்த போட்டியில் வெல்லும் வீரருக்கு ஏராளமான பொன்னையும் பொருளையும் மன்னர் பரிசளிப்பார்.கடந்த பத்தாண்டுகளாக இந்த போட்டியில் வெற்றி பெற்றிருப்பவர் நம் தளபதி கருணாகரன்.!”



தன்பெயர் குறிப்பிடப்பட்டதும் கருணாகரனின் முகத்தில் பெருமிதம் படர்ந்தது.பார்த்தாயா என் பெருமையை என்பது போல் மீசையை முறுக்கியபடி ஆதித்தனை பார்த்தான்.ஆதித்தனோ வாயை கையால் பொத்தி சிரிப்பை அடக்கி அவனை கேலி செய்தான்.



அறிவிப்பாளன் போட்டி விதிமுறைகளை அறிவிக்க தொடங்கினான்.



“இங்கிருந்து நீலமலைக்கான நேர்வழி தொடங்குகிறது.இந்த வழியில் ஒரு காத தூரம் சென்ற பின் வலது புறம் பொய்மான்கரடு என்ற குறுக்கு வழி செல்கிறது.போட்டியாளர்கள் இரண்டு வழிகளில் எதில் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்.இரண்டு பகல், இரண்டு இரவுக்கு பிறகான சூரிய உதயத்தின் போது நீலமலை அடிவாரத்தை அடைபவர்களே வெற்றி பெற்றவர்கள்! “



அடுத்ததாக அவன் கூறியது இரண்டு வழிகளிலும் இருக்கும் அபாயத்தை பற்றியது.அது சகோதரர்கள் இருவரும் கேள்விப்பட்டவற்றுடன் ஒத்து போனது.போட்டியாளர்களை பின்பற்றி வரும் முதலுதவி படை களத்தில் காயமடைந்தவர்களை, இறந்தவர்களை அப்புறப்படுத்தும்.அதுவும் நீலமலைக்கான நேர்வழியில் மட்டுமே இந்த படை செயல்படும்.இவற்றை சொல்லி முடித்த அறிவிப்பாளன் தன் கையிலிருக்கும் சிகப்பு துணியை நழுவ விடும் போது குதிரைகளும், தேர்களும் கிளம்பலாம் என்று கூறினான்.கருணாகரன் தன் புரவியின் கடிவாளத்தை இறுக பிடித்திருந்தான்.ஆதித்தனும், அரிஞ்சயனும் சுவாதீனமாக குதிரைகளில் உட்கார்ந்திருந்தனர்.அறிவிப்பாளனின் கையிலிருந்த சிகப்புதுணி நழுவியதும் கருணாகரனின் குதிரை மின்னலென முதலில் கிளம்பியது.அடுத்தடுத்து ஒவ்வொரு போட்டியாளர்களின் குதிரைகளும் போட்டி போட்டு கொண்டு வெளியேறின.எல்லா குதிரைகளுமபுழுதியை் கிளப்பி கொண்டு கிளம்பிய பின்பும் சகோதரர்கள் இருவரின் குதிரையும் ஆணி அடித்தது போல் நின்ற இடத்தை விட்டு அசையாமல் நின்றன.அவர்களின் இந்த வினோத செயல் மைதானத்தில் சிரிப்பொலியை கிளப்பியது.

“அண்ணா! புழுதியிலிருந்து நம்மை காத்து கொள்ள துணியை முகத்தில் கட்டி கொள்வோம்! “என்றான் ஆதித்தன்.



அரிஞ்சயன் துணியை முகத்தில் கட்டி கொண்டு குதிரையை முடுக்கினான்.ஆதித்தன் தன் இடுப்பிலிருந்த செந்நிற துணியை முகத்தில் கட்டியதும் மைதானம் ஒரு நிமிடம் திடுக்கிட்டது.செந்நிற முகமூடியணிந்திருந்த ஆதித்தனின் உருவம் அவர்களின் மனதிலிருந்த மற்றோரு வீரனை பற்றிய நினைவுகளை தட்டி எழுப்பியது.அறிவிப்பாளன்தான் அந்த உணர்வை முதலில் உரத்த குரலில் வெளிப்படுத்தினான்.”கரிகாலன்! “

அந்த குரல் திரும்பவும் மைதானத்திலிருந்த மக்களிடமிருந்து உரத்த குரலில் எதிரொலித்தது.அனைத்து திசைகளிலிருந்தும் "கரிகாலன்!கரிகாலன்! "என்ற முழக்கம் கிளம்பியது. அறிவிப்பாளனின் உதடுகள் வியப்பில் விரிந்ததுடன் “மாண்டவன் மீண்டான்! “என்று நடுக்கத்துடன் உச்சரிக்கவும் செய்தது.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம்9



மைதானத்திலிருந்த மக்கள் “கரிகாலன்! கரிகாலன்! “என்று உணர்ச்சிமயமாக கத்தி கொண்டிருப்பதை பார்த்து குழப்பமடைந்த அரிஞ்சயன் “யார் இந்த கரிகாலன்? உன்னை பார்த்து ஏன் கரிகாலன் என்று கத்துகிறார்கள்? “என்றான்.



“அதுதான் எனக்கும் புரியவில்லை.ஏதோ ஒரு விதத்தில் நான் கரிகாலனை நினைவுபடுத்தியிருக்க வேண்டும்.அதனால்தான் கத்துகிறார்கள்.இப்போது அது முக்கியமில்லை.போட்டியில் மனதை செலுத்துவோம்.!”என்ற ஆதித்தன் குதிரையை விரட்டினான்.மோகினி நாலு கால் பாய்ச்சலில் முன்னேறியது.பொய்மான் கரடிற்கு அரை காத தூரம் இருக்கும் போது ஆதித்தனின் கண்கள் மரங்களின் மறைவில் இருந்த ஒரு காட்சியை கண்டன.அந்த காட்சியை பார்த்ததும் ஆதித்தனின் மனதில் முதல் முறையாக பயம் தோன்றியது.”அண்ணா! அந்த மரத்தின் மறைவில் பார்! “என்றான் அரிஞ்சயனை நோக்கி.பாதையில் கவனமாக இருந்த அரிஞ்சயன் ஆதித்தன் காட்டிய திசையில் பார்த்து விட்டு “நான்கு பேர் ஆயுதங்களுடன் குதிரையில் மறைந்திருக்கின்றனர்.போட்டியில் கலந்து கொள்ள வந்தவர்களாக இருக்குமோ? கடைசியாக வந்தால் உயிர் தப்பலாம் என்று பதுங்கியுள்ளனரோ? “



“அவர்கள் போட்டியாளர்களாக இருந்தால் மைதானத்தில் பங்கேற்பாளர்களாக இருந்திருப்பார்களே? “



“அப்படியானால் அவர்கள்? “



“கருணாகரனின் ஆட்கள்.நம்மை கொல்ல நியமிக்கப்பட்டவர்கள்.அதோ பின் தொடர ஆரம்பித்து விட்டனர்.!”



“நாம் நீல மலைக்கான வழியில் பயணித்தால் என்ன செய்வார்கள்? “



“நம் முதுகில் அம்பை பாய்ச்சி விட்டு காணாமல் போவார்கள்! “



“அப்படியானால் நாம் சீக்கிரமாக பொய்மான் கரடு வழியில் புகுந்து விட வேண்டும்.!”



“அங்கேயும் கருணாகரன் ஆட்களை நிறுத்தியிருப்பான்.முன்னும் பின்னுமாக எதிரிகள்.நடுவில் நாம்.தப்பிக்க வழியேயில்லை! “



“மரணம் நிச்சயம்.இப்போதாவது முடிவில் மாற்றமுண்டா? “



“ஒரு மாற்றமும் இல்லை.முன் வைத்த காலை பின் வைக்க போவதில்லை.!”



“நான்கு பாதைகள் பிரியும் இடத்தில் கருணாகரன் ஆட்களை நிறுத்தியிருப்பான்.இரண்டு பக்கமும் சுற்றி வளைக்கப்படும் நாம் தப்ப வழியில்லை! கருணாகரன் எமகாதகன்தான்! “



ஆதித்தன் தன் வலுவான எதிரியின் முற்றுகையில் திணற ஆரம்பித்திருந்தான்.கருணாகரனின் இந்த சக்ரவியூகம் ஆதித்தன் எதிர்பாராதது.இறுகி வரும் வியூகத்தை உடைக்கும் யோசனையில் ஆதித்தன் ஆழ்ந்தான்.



அதே நேரம் மைதானத்தில் கரிகாலன் கரிகாலன் என்று மக்கள் அலறி கொண்டிருந்தது ஒருவனை பதட்டத்திற்குள்ளாக்கியது.பரபரப்பாக மைதானத்தை விட்டு கிளம்பிய கந்த மாறன் தன் புரவியை அவிழ்த்தான்.தன் அருகிலிருந்தவனை அழைத்தவன் “பூபதி! அந்த இருவரை பற்றிய முழு தகவலும் எனக்கு வேண்டும்.விசாரித்து விட்டு அமைச்சர் மதிவாணரின் இல்லத்திற்கு வா! “என்று கட்டளையிட்டு விட்டு சிட்டாக பறந்தான்.அமைச்சரின் இல்லத்திற்குள் பரபரப்பாக நுழைந்தவன் அவரை வணங்கி நின்றான்.”சொல் கந்தமாறா? என்ன விசயம்? “என்றார் மதிவாணன்.



“மைதானத்தில் கரிகாலனின் அடையாளத்தோடு ஒருவன் கலந்து கொண்டிருக்கிறான். ஒருவேளை மக்கள் நினைப்பது போல் கரிகாலன் உயிரோடு இருக்க கூடுமோ? “



“உயிரோடு இருக்க வாய்ப்பில்லை.மகேந்திரன் கரிகாலனின் உடலை உருத்தெரியாமல் அழித்து விட்டான்.வந்திருப்பவன் கரிகாலனின் ஆப்த நண்பனாக இருக்கலாம்.இல்லையென்றால் கரிகாலனின் அடையாளத்தை தற்செயலாக புனைந்திருக்கலாம்.!”



“அப்படியும் இருக்கலாம்.கரிகாலன் உயிரோடு இருந்தால் காணாமல் போன இளவரசர் மாறவர்மனும் உயிரோடு இருப்பதாகத்தானே அர்த்தம்! கரிகாலன் இறந்து விட்டானென்றால் இளவரசரும்? “



“இளவரசர் இறக்கவில்லை! உயிரோடுதான் இருக்கிறார்.!”



“துறவறம் பூண்டு துறவியாகவா? அப்படி சொல்லித்தானே மகேந்திரன் மக்களை நம்ப வைத்திருக்கிறான்.அவர் உயிரோடு இருப்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? அவர் எங்கே இருக்கிறார்!? “



“இளவரசர் உயிரோடு இருப்பதற்கு ஆதாரம் இன்று வந்த இந்த ஓலை.!”



“இந்த ஓலை வந்த வழி? “



“புறாவின் மூலம் வந்தது.”



ஓலையை படித்த கந்தமாறனின் முகத்தில் சவக்களை படர்ந்தது.”இளவரசர் உயிரோடு இருக்கிறார்.ஆனால் யாரும் அவரை மீட்க முடியாது.அவராலும் தப்பி வர இயலாது.விபரீதமான நிலை அமைச்சரே! “



“ஆம்! அதைப்பற்றித்தான் யோசிக்கிறேன்! “என்றார் மதிவாணர்.



ஆதித்தனும், மதிவாணரும் வெவ்வேறு திசையில் வெவ்வேறு யோசனையில் இருந்தாலும் அவர்களின் சிந்தனை குவிந்திருந்தது ஒரே இலக்கில்தான்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 10



குதிரையை விரட்டி கொண்டிருந்த ஆதித்தன் முன்னும் பின்னுமாக தன்னை சூழப் போகும் அபாயத்திலிருந்து தங்களை எப்படி காப்பாற்றி கொள்வது என்று யோசித்தவனின் மூளை கடகடவென சில திட்டங்களை தீட்டியது.பொய்மான் கரட்டின் உள்ளே நுழையும் சமயம் ஆதித்தன் பரபரப்பானான்.”அண்ணா! உன்னிடமுள்ள கயிற்றை சாலையின் ஓரத்திலுள்ள மரங்களின் கிளைகளை நோக்கி வீசு.ஒடிந்து விழும் மரக்கிளைகளை இழுத்து செல்வோம்.கயிற்றின் முனையில் நங்கூரத்தை கட்ட மறக்காதே! “

அரிஞ்சயன் துரித கதியில் ஆதித்தனின் உத்தரவை நிறைவேற்றினான்.அண்ணனுக்கு உத்தரவிட்ட ஆதித்தன் தானும் ஒரு கிளையை கயிற்றின் உதவியால் கீழே வீழ்த்தினான்.கிளைகள் தரையில் இழுபட்டதால் பிரமாண்டமான புழுதி புயல் கிளம்பியது.பின் தொடர்ந்து வந்தவர்களால் சகோதரர்கள் இருவரையும் பார்க்க முடியவில்லை.அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் புழுதி புயல் மட்டுமே!



“அண்ணா தொடர்ந்து போய் கொண்டே இரு! பின்னால் பார்க்காதே! “என்றான் ஆதித்தன்.பாதை நான்காக பிரியும் இடத்திலிருந்த ஐந்து வீரர்களில் ஒருவன் அந்த புழுதி புயலை பார்த்து பதட்டமடைந்தான்.”இருவர் மட்டுமே வருவதாகத்தானே தளபதி சொன்னார்.?ஒரு படையே வரும் போல் தெரிகிறதே? “என்றான்.புழுதி புயலை கிளப்பிய படி வந்த அரிஞ்சயன் அந்த வீரர்களால் மறிக்கப்பட்டான்.”இதென்ன இரண்டு குதிரைகள் இருக்கின்றன.ஒருவன்தான் வந்திருக்கிறான்! “வீரர்கள் குழம்பி கொண்டிருந்த போது துரத்தி வந்தவர்கள் அவர்களை நெருங்கினார்கள்.



“எங்கே இன்னொருவன்? “



“தெரியவில்லையே? இரண்டு குதிரைகளுடன் இவன் ஒருவன்தான் வந்தான்.!”



“கள்வனே! எங்கே உன் சகோதரன்? “



“அவன் போட்டிக்கு பயந்து ஓடி விட்டான் ஐயா! “என்றான் அரிஞ்சயன்.



“நமக்கு வேலை மிச்சம்.உன் தம்பி புத்திசாலி.அதுதான் உயிரை காப்பாற்றி கொள்ள ஓடி விட்டான்.ஆனால் நீ பாவம்.பரிதாபமாக இறக்க போகிறாய்! “



குதிரையிலிருந்து இறக்கப்பட்ட அரிஞ்சயனிடமிருந்து ஆயுதங்கள் பறிக்கப்பட்டன.மண்டியிட்டு அமர வைக்கப்பட்ட அரிஞ்சயனின் தலையை துண்டிக்க ஒருவன் தயாரானான்.அவன் வாளை உயர்த்திய போது எங்கிருந்தோ வந்த அம்பு அவனை வீழ்த்தியது.பாதி வழியில் புழுதியை பயன்படுத்தி கொண்டு புதர் மறைவில் குதித்து பதுங்கிய ஆதித்தன் வில் அம்போடு இப்போது காட்சியளித்தான்.விக்கித்து நின்ற வீரர்களில் இருவரை கண நேரத்தில் வீழ்த்தினான் அரிஞ்சயன்.இருவரின் தாக்குதலில் சிறிது நேரத்திலேயே அவர்கள் சரணடைந்தனர்.அவர்களின் கைகளை பின்புறமாக கட்டி உருட்டிய ஆதித்தன் அவர்களில் ஒருவனை கத்தி முனையில் மிரட்ட ஆரம்பித்தான்.



“இந்த நான்கு பாதைகளில் கருணாகரன் பயணித்த சரியான பாதை எது? ஒழுங்காக சொல்லி விடு! “



“சத்தியமாக சொல்கிறேன்.எங்களில் யாருக்கும் சரியான வழி தெரியாது.நம்புங்கள்.!”



மறுபடியும் சிக்கலில் சிக்கி தவிக்க ஆரம்பித்தான் ஆதித்தன்.



அதே நேரம் கந்தமாறனும் மதிவாணரும் உரையாடிக் கொண்டிருந்தனர்.



“இளவரசரை மீட்க யாராலும் இயலாது போல் தோன்றுகிறது அமைச்சரே? “



“பதட்டப்படாதே கந்தமாறா! கரிகாலனின் மறைவிற்கு பின் அவனுடைய ஆட்கள் மக்களோடு மக்களாக கலந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அவர்களை மறுபடியும் ஒன்று திரட்டு.இந்த போலி கரிகாலனின் வரவை நமக்கு சாதகமாக்கி கொள்வோம்.எதை செய்தாவது மகேந்திரனை வீழ்த்தி இளவரசனை மீட்போம்.கடந்த ஒரு வருடமாக இளவரசர் உயிரோடு இருப்பது எனக்கு தெரியும்.நானும் அவரும் கடித தொடர்பில் இருக்கிறோம்.சரியான சமயத்திற்காக காத்திருந்தேன்.மக்களுக்கு கரிகாலனின் நினைவு வந்து விட்டது.இனி புரட்சியை தூண்டுவது எளிது.!”



அதே நேரம் பூபதி குதிரையில் வந்து இல்லத்தின் முன் இறங்கினான்.தான் விசாரித்தவற்றை விலாவரியாக கூறி முடித்தான்.



“கருணாகரனிடம் மோதி உள்ளதால் இவர்கள் நமக்கு நண்பர்கள்! “



“ஆம்! எதிரிக்கு எதிரி நண்பன்தானே? “



“ஆனால் அமைச்சரே இந்த வேட்டை திருவிழாவில் நாம் அவர்களுக்கு உதவி செய்யலாமே? “



“அவர்கள் திறமையானவர்கள்.நம் உதவி அவர்களுக்கு தேவைப்படாது.”



“அது உண்மைதான்.ஆனால் நமக்கு கருணாகரன் உயிரோடு வேண்டும்.அப்போதுதான் இளவரசரை மீட்க முடியும்.”



“கண்டிப்பாக! “



“மாறாக அவர்கள் கருணாகரனை கொன்று விட்டால்? “கந்தமாறனின் கேள்வி இடியென இறங்கியது.



“அவர்களால் அவனை நிச்சயமாக கொல்ல முடியாது.அப்படி கொன்றால் அவர்களும் சேர்ந்தே இறப்பார்கள்! “மதிவாணரின் குரல் தீர்க்கமாக ஒலித்தது.
 

New Threads

Top Bottom