- Messages
- 873
- Reaction score
- 1,132
- Points
- 93
கீழே அனைவரும் எப்போதும் உணவருந்தும் நேரத்திற்கு சரியாக டைனிங் டேபிளை வந்தடைந்தனர். அனைவரும் சாப்பிட்டுவிட்டு அவரவர் அறைக்கு செல்லவிருந்த நேரத்தில், விக்ரமனை மட்டும் தனியே அழைத்த நாச்சியம்மை தன்னறையில் காத்திருக்குமாறு கூறினார்.
பின், ராதாவின் அருகில் சென்றவர் மெல்லிய குரலில், "அந்த புதுசா வந்திருக்கற குட்டிக்கு சாப்பாடு ஏதாவது கொடுத்து நம்ம விக்ரமன் ரூம்ல விட்டிரு" எனவும், சரியென்ற ராதா சமையலறை நோக்கிச் சென்றார்.
அவர் சென்றவுடன் விக்ரமனிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்காக தன் அறை நோக்கி புறப்பட்டார் நாச்சியம்மை.
அதிதி, ஜானகியம்மாளிடம் கேட்டக் கேள்விகளை எல்லாம் மாடிப்படியில் ஏறும்போதே கேட்டுவிட்ட ராதா, ஜானகியம்மாள் எதையும் உளறி விடுவாரோ? என்று வேகமாக எட்டுக்களை எடுத்து வைத்தார்.
அவர்களை சமீபித்ததும், "அட! ஜானகி நீ இங்க தான் இருக்கியா? நேரமாயிடுச்சிப் பாரு. வீட்டுக்கு கிளம்பல?" என அவரை அனுப்பி வைத்துவிட்டு, ஊஞ்சலில் அமர்ந்திருந்தவளிடம் சென்று, அவள் தலையை மெதுவாய் வருடியபடியே, "ம், சாப்பிடுமா." எனத் தன் கையிலிருந்த தட்டை அவளிடம் நீட்டினார்.
அதனை வாங்கத் தயங்கியவளை, "இதப்பாருடா, நான் உனக்கு அம்மா மாதிரி. என்கிட்ட உனக்கு என்ன தயக்கம்? இனிமே நீ என்னை ராதாம்மானு தான் கூப்பிடனும், சரியா? ம் சாப்பிடுடா" எனக்கூறி அவளை சாப்பிட வைக்க முயன்றார்.
உணவை கையில் வாங்கியவள் சாப்பிடாமல் அலைந்துகொண்டே இருந்தாள்.
"விக்ரமன் உன்கிட்ட சரியா பேசலைனு குழப்பத்துல இருக்கியாடா?" எனக் கேட்கவும், உணவை அலைவதை நிறுத்திவிட்டு, பாவமாய் ஆமென தலையசைத்தாள் அதிதி.
"விக்ரமனோட அம்மாவும், அப்பாவும் இறந்தப்போ அவனுக்கு வயசு ஏழுடா. எப்பவும் குறும்பு பண்ணி, அலுமேலு அண்ணியை அலைய விட்டுக்கிட்டே இருப்பான். அப்போல்லாம் வீடே கலகலனு இருக்கும். அண்ணணும் அண்ணியும் இறந்ததுக்கப்பறம் புள்ள பாவம் ரொம்ப துவண்டு போயிடுச்சி. அதான் யார்கிட்டயும் பேசாம உர்ருனு ஆகிட்டான். நீ தான்டா இனிமே அவனை ஒரு தாயாவும் தாரமாவும் இருந்துப் பார்த்துக்கணும். என் பொண்ணு மாயாவுக்கு அவனை விட அஞ்சு வயசு அதிகம். இல்லைனா இப்ப உன் புருஷன் உனக்கு கிடைச்சிருக்க மாட்டான்." என சிரித்தவர், அவள் சாப்பிட்டு முடித்தவுடன் விக்ரமன் அறையைக் காண்பித்து, “தைரியமா போடா” என்றார்.
பயந்துக்கொண்டே அறையினுள் தன் காலடியை எடுத்து வைத்த அதிதி, உள்ளே சென்றதும் அறையை நோட்டமிட்டாள். பால்கனியுடன் சேர்த்து முழுவதும் நவீன மயமாக்கப்பட்டதாக இருந்தது அந்த அறை.
அந்த அறையின் ஓரத்தில் இரண்டு கதவுகள் தென்பட, ஒவ்வொன்றாக திறந்துப் பார்த்தாள். அதில் ஒன்று உடற்பயிற்சி செய்யத் தேவையான உபகரணங்களுடன் கூடிய ஜிம். மற்றொன்று பெரிய பாத்டப் மற்றும் கழிவறை வசதியுடன் கூடிய குளியலறை. அனைத்தையும் பார்த்தவள், அடுத்து என்ன செய்வதென்றுத் தெரியாமல் பால்கனி சென்று அங்குள்ள திண்டில் அமர்ந்து, வானத்தையே வெறித்துப் பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாளோ தெரியாது. காலையிலிருந்து தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளையெல்லாம் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். தற்போது அவள் எண்ணம் முழுவதும் அவள் தாத்தாக் கூறிய வார்த்தைகளிலேயே சுழன்றுக் கொண்டிருந்தது.
ஒரு வாரத்திற்கு முன்பு வாட்ஸப்பில் ஒரு போட்டோவை அனுப்பி, இவர் தான் மாப்பிள்ளை. இவரை நீ திருமணம் செய்து கொண்டால் என் பிஸினஸ் மற்றும் அரசியல் வாழ்விற்கு உதவியாக இருக்கும் என்று ஒலிக்குறிப்பு அனுப்பியிருந்த தாத்தா, இன்று காலையில் வேறு ஒருவரிடம் தன்னை ஒப்படைத்ததை எண்ணி, ஏன்? என யோசித்துக் கொண்டிருந்தாள்.
காரணம் தெரியாவிடினும் தன் வீட்டைப் போலவே இங்குள்ளவர்களும் கூட்டுக் குடும்பமாக வாழ்வதை நினைத்து மகிழ்ந்தாள்.
பின், ராதாவின் அருகில் சென்றவர் மெல்லிய குரலில், "அந்த புதுசா வந்திருக்கற குட்டிக்கு சாப்பாடு ஏதாவது கொடுத்து நம்ம விக்ரமன் ரூம்ல விட்டிரு" எனவும், சரியென்ற ராதா சமையலறை நோக்கிச் சென்றார்.
அவர் சென்றவுடன் விக்ரமனிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்காக தன் அறை நோக்கி புறப்பட்டார் நாச்சியம்மை.
அதிதி, ஜானகியம்மாளிடம் கேட்டக் கேள்விகளை எல்லாம் மாடிப்படியில் ஏறும்போதே கேட்டுவிட்ட ராதா, ஜானகியம்மாள் எதையும் உளறி விடுவாரோ? என்று வேகமாக எட்டுக்களை எடுத்து வைத்தார்.
அவர்களை சமீபித்ததும், "அட! ஜானகி நீ இங்க தான் இருக்கியா? நேரமாயிடுச்சிப் பாரு. வீட்டுக்கு கிளம்பல?" என அவரை அனுப்பி வைத்துவிட்டு, ஊஞ்சலில் அமர்ந்திருந்தவளிடம் சென்று, அவள் தலையை மெதுவாய் வருடியபடியே, "ம், சாப்பிடுமா." எனத் தன் கையிலிருந்த தட்டை அவளிடம் நீட்டினார்.
அதனை வாங்கத் தயங்கியவளை, "இதப்பாருடா, நான் உனக்கு அம்மா மாதிரி. என்கிட்ட உனக்கு என்ன தயக்கம்? இனிமே நீ என்னை ராதாம்மானு தான் கூப்பிடனும், சரியா? ம் சாப்பிடுடா" எனக்கூறி அவளை சாப்பிட வைக்க முயன்றார்.
உணவை கையில் வாங்கியவள் சாப்பிடாமல் அலைந்துகொண்டே இருந்தாள்.
"விக்ரமன் உன்கிட்ட சரியா பேசலைனு குழப்பத்துல இருக்கியாடா?" எனக் கேட்கவும், உணவை அலைவதை நிறுத்திவிட்டு, பாவமாய் ஆமென தலையசைத்தாள் அதிதி.
"விக்ரமனோட அம்மாவும், அப்பாவும் இறந்தப்போ அவனுக்கு வயசு ஏழுடா. எப்பவும் குறும்பு பண்ணி, அலுமேலு அண்ணியை அலைய விட்டுக்கிட்டே இருப்பான். அப்போல்லாம் வீடே கலகலனு இருக்கும். அண்ணணும் அண்ணியும் இறந்ததுக்கப்பறம் புள்ள பாவம் ரொம்ப துவண்டு போயிடுச்சி. அதான் யார்கிட்டயும் பேசாம உர்ருனு ஆகிட்டான். நீ தான்டா இனிமே அவனை ஒரு தாயாவும் தாரமாவும் இருந்துப் பார்த்துக்கணும். என் பொண்ணு மாயாவுக்கு அவனை விட அஞ்சு வயசு அதிகம். இல்லைனா இப்ப உன் புருஷன் உனக்கு கிடைச்சிருக்க மாட்டான்." என சிரித்தவர், அவள் சாப்பிட்டு முடித்தவுடன் விக்ரமன் அறையைக் காண்பித்து, “தைரியமா போடா” என்றார்.
பயந்துக்கொண்டே அறையினுள் தன் காலடியை எடுத்து வைத்த அதிதி, உள்ளே சென்றதும் அறையை நோட்டமிட்டாள். பால்கனியுடன் சேர்த்து முழுவதும் நவீன மயமாக்கப்பட்டதாக இருந்தது அந்த அறை.
அந்த அறையின் ஓரத்தில் இரண்டு கதவுகள் தென்பட, ஒவ்வொன்றாக திறந்துப் பார்த்தாள். அதில் ஒன்று உடற்பயிற்சி செய்யத் தேவையான உபகரணங்களுடன் கூடிய ஜிம். மற்றொன்று பெரிய பாத்டப் மற்றும் கழிவறை வசதியுடன் கூடிய குளியலறை. அனைத்தையும் பார்த்தவள், அடுத்து என்ன செய்வதென்றுத் தெரியாமல் பால்கனி சென்று அங்குள்ள திண்டில் அமர்ந்து, வானத்தையே வெறித்துப் பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாளோ தெரியாது. காலையிலிருந்து தன் வாழ்வில் நடந்த நிகழ்வுகளையெல்லாம் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். தற்போது அவள் எண்ணம் முழுவதும் அவள் தாத்தாக் கூறிய வார்த்தைகளிலேயே சுழன்றுக் கொண்டிருந்தது.
ஒரு வாரத்திற்கு முன்பு வாட்ஸப்பில் ஒரு போட்டோவை அனுப்பி, இவர் தான் மாப்பிள்ளை. இவரை நீ திருமணம் செய்து கொண்டால் என் பிஸினஸ் மற்றும் அரசியல் வாழ்விற்கு உதவியாக இருக்கும் என்று ஒலிக்குறிப்பு அனுப்பியிருந்த தாத்தா, இன்று காலையில் வேறு ஒருவரிடம் தன்னை ஒப்படைத்ததை எண்ணி, ஏன்? என யோசித்துக் கொண்டிருந்தாள்.
காரணம் தெரியாவிடினும் தன் வீட்டைப் போலவே இங்குள்ளவர்களும் கூட்டுக் குடும்பமாக வாழ்வதை நினைத்து மகிழ்ந்தாள்.