- Messages
- 969
- Reaction score
- 1,132
- Points
- 93
கூத்தும் கொண்டாட்டமுமாய் ஒரு வாரம் கழிந்த நிலையில் காஷ்மீர் புறப்பட்டான் வீரப்பாண்டியன்.
அப்போது திடீரென அவனுக்கு தலை சுற்றுவது போலிருக்க அதனை சாதாரண தலைவலியென நினைத்துக் கொண்டு, கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டான். தான் அப்போதே மருத்துவமனை சென்றிருந்தால் தன் இறப்பை அவன் தடுத்திருக்கலாமோ என்னவோ?
கிளம்பும் முன் தன் மனையாளிடம், "மும்பைல இருக்க உன் தம்பி ஹரியை அலமேலு கல்யாணத்துல பார்த்தப்போ, இங்க பண்ணைபுரத்துல வந்து தங்கிக்கோனு சொன்னேன். அவனும் சரிங்க மாமானு சொன்னான். அலமேலு போயிட்டால்ல? இனி ராதா உனக்கு கொஞ்சம் ஒத்தாசையாயிருப்பா" என்று சொல்லிவிட்டு இராணுவத்துக்கு செல்லத் தயாரானான்.
நாச்சியம்மையால் தன் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
“மாமா, என்னால முடியல" எனக் கதறவும் அவளை அணைத்துக்கொண்டு தங்கள் அறைக்குச் சென்றவன்,
"ஏய் ரவுடி! ஏன்டி இப்படி அழுது என்னை பலவீனமாக்குற? நான் என்ன பந்து விளையாடவா அங்கப்போறேன்? உயிர் போறதெல்லாம் அங்க சகஜம். இதெல்லாம் எதிர்பார்த்து தானே போறேன்? ஒருவேளை எனக்கு ஏதாவது ஆனாலும்.."
"மாமா.." எனப் பதறி அவனின் வாயை மூடினாள் நாச்சியம்மை.
அவளின் கையை அகற்றியவன், "ஒருவேளை எனக்கு ஏதாவது ஆனாலும் அங்க இருக்கற பத்து பேரோட தலையை மண்ணுல சாய்ச்சிட்டு தான் என் உயிர் போகும். எனக்கப்புறம் நீ தான் இந்த வீட்டைப் பார்த்துக்கணும். எந்த ஒரு நிலையிலயும் தவறான முடிவு எடுத்துறாத. என் உயிர் போனாலும் உயிரோட இருக்கும் போது உன்கூட இருக்க முடியலையேனு ஏக்கத்துல உன்னையே தான் சுத்தி சுத்தி வரும்" என தன் இறப்பை முன்பே அறிந்த ஞானி போல் பேசினான்.
"இப்படியெல்லாம் பேசாதீங்க மாமா எனக்கு பயமாயிருக்கு" என அவன் நெஞ்சில் விழுந்து விக்கி விக்கி அழுதாள் நாச்சியம்மை.
"சரி, சரி, என் பம்பரமிட்டாய் இல்ல? சீனிமிட்டாயில்ல?" எனக் கொஞ்சி சமாதானப்படுத்தி இறுதியாக பல நாட்களுக்குத் தாங்கும்படியாக முத்தம் ஒன்றையும் வைத்துவிட்டே புறப்பட்டான்.
அவன் சுவைத்த சீனிமிட்டாயின் சுவை உள்நாக்கு வரை தித்தித்தது.
மறுபுறம் தன்னை முத்துப்பாண்டியன் தேனிலவிற்கு பட்டணம் அழைத்துச் செல்வான் என்ற ஆசையிலிருந்த அலமேலுமங்கைக்கு தற்போது அவன் வயலுக்கு அழைத்து வந்ததும் ஏமாற்றமாக இருந்தது.
"என்ன மாமா கல்யாணம் முடிஞ்சு ஹனிமூனுக்கு ஊட்டி, கொடைக்கானல்னு கூட்டிட்டு போவீங்கன்னு பார்த்தா, உங்க தோட்டத்து வீட்டுல தங்கியிருக்கலாம்னு இங்க கூட்டிட்டு வந்துட்டீங்க? ஆனா, இந்த இடமும் குடிலைச் சுத்தி தோட்டம்னு நல்லாத்தான் இருக்கு" என்றதும்,
"அம்முலு இங்கயிருக்க தோட்டத்துல பயிர் மகசூலை அதிகரிக்கிற விதமா, குறைஞ்ச செலவுல இராசயனப்பொருட்கள் எதுவும் கலக்காத உரத்தை நான் பயன்படுத்தியிருக்கேன். கூடவே குறைஞ்ச அளவு மட்டுமே தண்ணீரை உறிஞ்சக்கூடிய பயிரையும் கண்டுபிடிக்க, ஆராய்ச்சி அறை கட்டியிருக்கேன். அந்த ஆராய்ச்சியில ஒரு நாள் வெற்றியும் அடைவேன் பாரேன். ஒவ்வொரு நாளும் நம்ம இந்தியாவுல வறட்சியினால எவ்வளவு விவசாயிங்க தற்கொலை செஞ்சு இறந்துப் போறாங்கத் தெரியுமா? என்ன போரடிக்கிறேனா?" என்றதும், மையமாக தலையசைத்தாள் அலமேலு.
அவன் பாவம் பார்க்கவில்லை.
அப்போது திடீரென அவனுக்கு தலை சுற்றுவது போலிருக்க அதனை சாதாரண தலைவலியென நினைத்துக் கொண்டு, கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டான். தான் அப்போதே மருத்துவமனை சென்றிருந்தால் தன் இறப்பை அவன் தடுத்திருக்கலாமோ என்னவோ?
கிளம்பும் முன் தன் மனையாளிடம், "மும்பைல இருக்க உன் தம்பி ஹரியை அலமேலு கல்யாணத்துல பார்த்தப்போ, இங்க பண்ணைபுரத்துல வந்து தங்கிக்கோனு சொன்னேன். அவனும் சரிங்க மாமானு சொன்னான். அலமேலு போயிட்டால்ல? இனி ராதா உனக்கு கொஞ்சம் ஒத்தாசையாயிருப்பா" என்று சொல்லிவிட்டு இராணுவத்துக்கு செல்லத் தயாரானான்.
நாச்சியம்மையால் தன் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
“மாமா, என்னால முடியல" எனக் கதறவும் அவளை அணைத்துக்கொண்டு தங்கள் அறைக்குச் சென்றவன்,
"ஏய் ரவுடி! ஏன்டி இப்படி அழுது என்னை பலவீனமாக்குற? நான் என்ன பந்து விளையாடவா அங்கப்போறேன்? உயிர் போறதெல்லாம் அங்க சகஜம். இதெல்லாம் எதிர்பார்த்து தானே போறேன்? ஒருவேளை எனக்கு ஏதாவது ஆனாலும்.."
"மாமா.." எனப் பதறி அவனின் வாயை மூடினாள் நாச்சியம்மை.
அவளின் கையை அகற்றியவன், "ஒருவேளை எனக்கு ஏதாவது ஆனாலும் அங்க இருக்கற பத்து பேரோட தலையை மண்ணுல சாய்ச்சிட்டு தான் என் உயிர் போகும். எனக்கப்புறம் நீ தான் இந்த வீட்டைப் பார்த்துக்கணும். எந்த ஒரு நிலையிலயும் தவறான முடிவு எடுத்துறாத. என் உயிர் போனாலும் உயிரோட இருக்கும் போது உன்கூட இருக்க முடியலையேனு ஏக்கத்துல உன்னையே தான் சுத்தி சுத்தி வரும்" என தன் இறப்பை முன்பே அறிந்த ஞானி போல் பேசினான்.
"இப்படியெல்லாம் பேசாதீங்க மாமா எனக்கு பயமாயிருக்கு" என அவன் நெஞ்சில் விழுந்து விக்கி விக்கி அழுதாள் நாச்சியம்மை.
"சரி, சரி, என் பம்பரமிட்டாய் இல்ல? சீனிமிட்டாயில்ல?" எனக் கொஞ்சி சமாதானப்படுத்தி இறுதியாக பல நாட்களுக்குத் தாங்கும்படியாக முத்தம் ஒன்றையும் வைத்துவிட்டே புறப்பட்டான்.
அவன் சுவைத்த சீனிமிட்டாயின் சுவை உள்நாக்கு வரை தித்தித்தது.
மறுபுறம் தன்னை முத்துப்பாண்டியன் தேனிலவிற்கு பட்டணம் அழைத்துச் செல்வான் என்ற ஆசையிலிருந்த அலமேலுமங்கைக்கு தற்போது அவன் வயலுக்கு அழைத்து வந்ததும் ஏமாற்றமாக இருந்தது.
"என்ன மாமா கல்யாணம் முடிஞ்சு ஹனிமூனுக்கு ஊட்டி, கொடைக்கானல்னு கூட்டிட்டு போவீங்கன்னு பார்த்தா, உங்க தோட்டத்து வீட்டுல தங்கியிருக்கலாம்னு இங்க கூட்டிட்டு வந்துட்டீங்க? ஆனா, இந்த இடமும் குடிலைச் சுத்தி தோட்டம்னு நல்லாத்தான் இருக்கு" என்றதும்,
"அம்முலு இங்கயிருக்க தோட்டத்துல பயிர் மகசூலை அதிகரிக்கிற விதமா, குறைஞ்ச செலவுல இராசயனப்பொருட்கள் எதுவும் கலக்காத உரத்தை நான் பயன்படுத்தியிருக்கேன். கூடவே குறைஞ்ச அளவு மட்டுமே தண்ணீரை உறிஞ்சக்கூடிய பயிரையும் கண்டுபிடிக்க, ஆராய்ச்சி அறை கட்டியிருக்கேன். அந்த ஆராய்ச்சியில ஒரு நாள் வெற்றியும் அடைவேன் பாரேன். ஒவ்வொரு நாளும் நம்ம இந்தியாவுல வறட்சியினால எவ்வளவு விவசாயிங்க தற்கொலை செஞ்சு இறந்துப் போறாங்கத் தெரியுமா? என்ன போரடிக்கிறேனா?" என்றதும், மையமாக தலையசைத்தாள் அலமேலு.
அவன் பாவம் பார்க்கவில்லை.