- Messages
- 969
- Reaction score
- 1,132
- Points
- 93
அத்தியாயம் 19
ஏற்கனவே கட்சியில் உள்ள பெரிய தலைகள் எல்லாம், இந்தத் தேர்தலில் சங்கரப்பாண்டியன் தோற்றால் அதைவிட கேவலம் எதுவுமில்லை எனவும், அதிலும் ஒரு பெண்ணிடம் தோற்றால் ஆணென்ற அடையாளத்திற்குரிய மீசையையே எடுத்துவிட வேண்டியது தான் எனவும் ஏற்றி விட்டிருந்ததால், தன் முன் நின்ற நாச்சியம்மையையும் முத்துப்பாண்டியனையும் விரோதிகளை போல் முறைத்துக் கொண்டிருந்தார் சங்கரப்பாண்டியன்.
பிரபு தன் பற்ற வைக்கும் வேலையை துவங்கினான்.
"என்ன நாச்சியம்மை தேர்தல்ல நிக்கிறாப் போலயிருக்கு? புருஷன் செத்துட்டான்னா, புள்ளக்குட்டிகளோட ஆஃப் பண்ணின மிஷின் மாதிரி வீட்டுல கிடக்கறது தான் பொறுப்பான ஒரு பொம்பளைக்கு அழகு. அதை விட்டுட்டு உனக்கு எதுக்குமா இந்த வேண்டாத வேலை எல்லாம்?" என்றான் நக்கலாக.
"ஹேய்! யார்கிட்ட பேசுறோம்னு தெரிஞ்சு பேசு. இல்ல பேசவே முடியாத மாதிரி பண்ணிடுவேன்" என முத்துப்பாண்டியன் பிரபுவை மிரட்டவும், வரம்பு மீறிப்பேசினான் அவன்.
"மரியாதையா? அவளுக்கென்ன, உனக்கு கூட மரியாதை கொடுக்க மாட்டேன்டா. எல்லாம் பொம்பளப் பின்னாடி போய் கூட்டமா நிக்கிறீங்களேடா. நீங்களும் சேலை கட்டிக்கிட்டு வர வேண்டியது தானே? என்ன கட்டிக்க சேலையில்லையா? நான் வேணும்னா வாங்கித் தரவா?" என்றதும், கோபமடைந்த முத்துப்பாண்டியன் பட்டென்று பதிலடி கொடுத்தான்.
"நாங்க எதுக்குடா சேலை கட்டிட்டு வரணும்? இந்தப் பெரிய மனுசனோட குடும்பத்துக்கே நல்லா ஜிங்ஜாங் போட்டுட்டு திரியுறியே, நீ தான் உன் கையில ஜால்ராவை தூக்கிக்கிட்டு வரணும்" என்றதும், தன் ஆட்களிடம் கண்ணைக் காட்டிய பிரபு முத்துப்பாண்டியனை அடிக்குமாறு அவர்களை ஏவிவிட்டான்.
அவர்களும் வேல் கம்புடன் அவனை அடிக்கப் பாய்ந்தனர். அவர்கள் ஒவ்வொருவரையும் தனியாளாக நின்று அடித்து நொறுக்கினான் முத்துப்பாண்டியன்.
இரு தரப்பினருக்கிடையேயும் கலகம் வெடிக்க, அந்த இடமே போர்க்களமானது.
இன்னும் அதிக அடியாட்கள் வருவதைப் பார்த்து பயந்து போன நாச்சியம்மை சங்கரப்பாண்டியனிடம் கெஞ்சி நின்றார்.
"ஐயா, உங்க ஆளுகளை சண்டப்போட வேணாம்னு சொல்லுங்க. மொதல்ல தப்பா பேசினது அவங்க தான். எல்லாத்தையும் நிறுத்தச் சொல்லுங்கய்யா" என்றார்.
"என் குலம் என்ன? அந்தஸ்து என்ன? நேத்து முளைச்ச காளான் நீ. என்னையே எதிர்த்து நிற்கறியா? உனக்கு எவ்வளவு தைரியம்? என்னது? என் ஆளுங்க தான் தப்பாப் பேசினாங்களா? சரியாத்தானே பேசினாங்க? பிரபு சரியாத் தானே கேட்டிருக்கான்? வீட்ல இருக்க வேண்டிய மெஷின் நீ. எதுக்காக அரசியலுக்கு வந்த? ஒருவேளை சம்பாதிக்கற காசுப் பத்தலையோ?" என்று குத்தலாய் கேட்டார்.
இதில் பிரபுவும் அவருடன் கூட்டு சேர்ந்துக் கொண்டான்.
"சரியா சொன்னீங்க மாமா. பணம் சம்பாரிக்கத் தான் இவங்க அரசியலுக்கு வந்திருக்காங்க. அது தெரியாம இந்த சேரி பயலுகளும் இவங்களை தலையில தூக்கி வச்சி கொண்டாடுறானுக. எளிமையா பணம் சம்பாரிக்க நான் ஒரு வழி சொல்லவா நாச்சியம்மா? உன் புருஷன் வேற மண்டைய போட்டுட்டான்ல?" என நாச்சியம்மையை மேலிருந்து கீழ்வரை பார்வையால் அளந்தான்.
ஏற்கனவே கட்சியில் உள்ள பெரிய தலைகள் எல்லாம், இந்தத் தேர்தலில் சங்கரப்பாண்டியன் தோற்றால் அதைவிட கேவலம் எதுவுமில்லை எனவும், அதிலும் ஒரு பெண்ணிடம் தோற்றால் ஆணென்ற அடையாளத்திற்குரிய மீசையையே எடுத்துவிட வேண்டியது தான் எனவும் ஏற்றி விட்டிருந்ததால், தன் முன் நின்ற நாச்சியம்மையையும் முத்துப்பாண்டியனையும் விரோதிகளை போல் முறைத்துக் கொண்டிருந்தார் சங்கரப்பாண்டியன்.
பிரபு தன் பற்ற வைக்கும் வேலையை துவங்கினான்.
"என்ன நாச்சியம்மை தேர்தல்ல நிக்கிறாப் போலயிருக்கு? புருஷன் செத்துட்டான்னா, புள்ளக்குட்டிகளோட ஆஃப் பண்ணின மிஷின் மாதிரி வீட்டுல கிடக்கறது தான் பொறுப்பான ஒரு பொம்பளைக்கு அழகு. அதை விட்டுட்டு உனக்கு எதுக்குமா இந்த வேண்டாத வேலை எல்லாம்?" என்றான் நக்கலாக.
"ஹேய்! யார்கிட்ட பேசுறோம்னு தெரிஞ்சு பேசு. இல்ல பேசவே முடியாத மாதிரி பண்ணிடுவேன்" என முத்துப்பாண்டியன் பிரபுவை மிரட்டவும், வரம்பு மீறிப்பேசினான் அவன்.
"மரியாதையா? அவளுக்கென்ன, உனக்கு கூட மரியாதை கொடுக்க மாட்டேன்டா. எல்லாம் பொம்பளப் பின்னாடி போய் கூட்டமா நிக்கிறீங்களேடா. நீங்களும் சேலை கட்டிக்கிட்டு வர வேண்டியது தானே? என்ன கட்டிக்க சேலையில்லையா? நான் வேணும்னா வாங்கித் தரவா?" என்றதும், கோபமடைந்த முத்துப்பாண்டியன் பட்டென்று பதிலடி கொடுத்தான்.
"நாங்க எதுக்குடா சேலை கட்டிட்டு வரணும்? இந்தப் பெரிய மனுசனோட குடும்பத்துக்கே நல்லா ஜிங்ஜாங் போட்டுட்டு திரியுறியே, நீ தான் உன் கையில ஜால்ராவை தூக்கிக்கிட்டு வரணும்" என்றதும், தன் ஆட்களிடம் கண்ணைக் காட்டிய பிரபு முத்துப்பாண்டியனை அடிக்குமாறு அவர்களை ஏவிவிட்டான்.
அவர்களும் வேல் கம்புடன் அவனை அடிக்கப் பாய்ந்தனர். அவர்கள் ஒவ்வொருவரையும் தனியாளாக நின்று அடித்து நொறுக்கினான் முத்துப்பாண்டியன்.
இரு தரப்பினருக்கிடையேயும் கலகம் வெடிக்க, அந்த இடமே போர்க்களமானது.
இன்னும் அதிக அடியாட்கள் வருவதைப் பார்த்து பயந்து போன நாச்சியம்மை சங்கரப்பாண்டியனிடம் கெஞ்சி நின்றார்.
"ஐயா, உங்க ஆளுகளை சண்டப்போட வேணாம்னு சொல்லுங்க. மொதல்ல தப்பா பேசினது அவங்க தான். எல்லாத்தையும் நிறுத்தச் சொல்லுங்கய்யா" என்றார்.
"என் குலம் என்ன? அந்தஸ்து என்ன? நேத்து முளைச்ச காளான் நீ. என்னையே எதிர்த்து நிற்கறியா? உனக்கு எவ்வளவு தைரியம்? என்னது? என் ஆளுங்க தான் தப்பாப் பேசினாங்களா? சரியாத்தானே பேசினாங்க? பிரபு சரியாத் தானே கேட்டிருக்கான்? வீட்ல இருக்க வேண்டிய மெஷின் நீ. எதுக்காக அரசியலுக்கு வந்த? ஒருவேளை சம்பாதிக்கற காசுப் பத்தலையோ?" என்று குத்தலாய் கேட்டார்.
இதில் பிரபுவும் அவருடன் கூட்டு சேர்ந்துக் கொண்டான்.
"சரியா சொன்னீங்க மாமா. பணம் சம்பாரிக்கத் தான் இவங்க அரசியலுக்கு வந்திருக்காங்க. அது தெரியாம இந்த சேரி பயலுகளும் இவங்களை தலையில தூக்கி வச்சி கொண்டாடுறானுக. எளிமையா பணம் சம்பாரிக்க நான் ஒரு வழி சொல்லவா நாச்சியம்மா? உன் புருஷன் வேற மண்டைய போட்டுட்டான்ல?" என நாச்சியம்மையை மேலிருந்து கீழ்வரை பார்வையால் அளந்தான்.