dharshini chimba
Saha Writer
- Messages
- 308
- Reaction score
- 228
- Points
- 43
21. திடீர் திருப்பம்
வெகு தூரம் இருவரும் அமைதியாக இருக்க ஷக்தியே மௌனத்தை கலைத்தான்.
"மஹா இன்னும் டூ ஆர் த்ரீ டேஸ்ல உங்க ஊருக்கு போறோம்." என்றான்.
"என்ன?... அங்க எதுக்கு... இல்ல நான் வரமாட்டேன்." என்றாள் அதிர்சசியாக
"மஹா! இதுக்கு முன்னாடி உனக்கு யாரும் இல்ல. அதனால பயந்த.. இப்ப நான் இருக்கேன்ல எதுக்கு டா பயப்படற?" என்று கார் ஒட்டியபடி மஹாவை தன்னருகே இழுத்து ஒரு கையால் அணைத்து கொண்டான்.
"இல்ல ஷக்தி நான்.. எனக்கு..." என்று திணறினாள் .
"ஷ் பயப்பட கூடாது. வி ஆர் கோயிங் தட்ஸ் பைனல்".
"லாயர் அங்கிள்கிட்ட பேசி உங்க சித்தி மாமா மேல கேஸ் போட சொல்லிருக்கேன்."
"எதுக்கு?" என்றாள்.
"எதுக்கா...? என்ன கேள்வி கேக்கற உன்ன அவங்க பண்ண கொடுமைக்கு எனக்கு இருக்க கோவத்துக்கு அவங்கள என்ன செய்வேனே தெரியாது... நீ என்னடான்னா எதுக்குன்னு கேக்கற?" என்று கோவத்தில் சரமாரியாய் பொரிந்து தள்ளினான்.
"அவங்க உனக்கு பண்ண கொடுமைக்கு பதில் சொல்லியே ஆகணும். உனக்கு சேர வேண்டிய சொத்தை உன் கைல கொடுத்துட்டு வெளியே போய்டணும். உனக்கு பண்ண துரோகத்துக்கு அவங்க நடுத்தெருவில நிக்கணும், அவங்கள சும்மாவிட மாட்டேன்." என்று கோவமாக பற்களை கடித்தான்
"வேண்டாம் ஷக்தி! அந்த பாவம் நமக்கு வேண்டாம். என்ன தான் இருந்தாலும் அவங்க என்னை இத்தனை நாளா வளர்த்துருக்காங்க."
"ஹ்ஹமம் முடியாது. உனக்காக ஒன்னுவேணா செய்றேன். அவங்களுக்கு சின்னதா ஒரே ஒரு இடம் இருக்கறதுக்கு ஏற்பாடு செய்றேன். எனக்கு இருக்குற கோவத்துக்கு அவங்கள ஆயுள் முழுக்க உள்ளே வச்சி களி சாப்பிட வச்சிருப்பேன். உனக்காக தான் இதுகூட" என்று மஹாவின் தலை கோதினான்.
"நாம நேர்ல வரணும்னு லாயர் சொல்றாரு." என்று மஹாவை நோக்கினான்.
மஹா அமைதியாக இருந்தாள்.
"ஏன் உனக்கு பிடிக்கலையா நான் வேணா இதுலேர்ந்து ஒதுங்கிக்கிடட்டுமா?" என்றவுடன் ஷக்தியை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
"இல்ல நீங்க என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க. அவங்கள்ல்லாம் ரொம்ப மோசமானவங்க. சொத்துக்காக என்ன வேணா செய்வாங்க. உங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்துருமோன்னு எனக்கு பயமா இருக்கு." என்றாள் விழிகளில் நீர் தேங்க..
"ஹே செல்லம். எனக்கு ஒன்னும் ஆகாது. நான் பார்த்துகிறேன். நீ கவலைப்படாதே." என்று அவள் நெற்றியோடு தன் நெற்றியை மோதி புன்னகைத்தான்.
"எனக்கு உங்கள விட்டா யாரும் இல்ல. உங்களுக்கு ஏதாவதுன்னா என்னால தாங்க முடியாது. அடுத்த நொடி நான் உயிரோட இருக்க மாட்டேன்." என்றவளின் இதழை சட்டென ஷக்தி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தான்.
அவனின் செயலுக்கு இணங்குவது போல் மஹாவும் தடுக்காமல் சம்மதம் தெரிவிக்க ஒரு சில நொடி இருவரின் மூச்சுகளும் பரிமாறிக் கொண்டன.
சிறிதுநேரம் கழித்து அவளின் இதழை விடுதலை செய்து மூச்சு விட இடம் கொடுக்க, மஹாவின் முகம் வெட்கத்தில் மிளிர்வதை தன் ஒரே விழியால் பருகியபடி அமைதியாக புன்னகைத்துக் கொண்டிருந்தான்.
இருவரும் அமைதியாக வர ஷக்தி,
"மழை வர மாதிரி க்ளைமேட் நல்லா இருக்கு கொஞ்சம் நடக்கலாமா?" என்று காரை நிறுத்தினான்.
"சரி" என்று மஹா தலையாட்ட காரை விட்டு இருவரும் கீழே இறங்கினார்கள். ஆள் நடமாட்டமே இல்லாத சிறிது நிலா வெளிச்சம் மட்டும் இருந்த இடம்.
சில அடிகள் நடந்தவுடன் ஷக்தி மஹாவின் விரல்களை தன் விரல்களோடு கோர்த்தபடி நடந்தான்.
சக்தியின் ஸ்பரிசம் தனக்குள் ஒரு ரசாயன மாற்றம் ஏற்பட்டு தன் உடலினுள் சிலிர்ப்பு தோன்றுவதை மஹாவால் உணர முடிந்தது.
ஒரு வித படபடப்பு உண்டானாலும் இதை அவள் மனம் விரும்பியது.
"மஹா நான் ஒன்னு கேப்பேன். பதில் சொல்றியா?" என்று மஹாவை விழியால் கண்டு கொண்டே வந்தான்.
"ஹ்ம் கேளுங்க" என்றாள் அவனை பார்க்காமலே...
"நான் உன் கழுத்துல தாலி கட்டும் போது நீ என்ன நினைச்ச?" என்றான்
"அது..." என்று இழுத்தாள்.
"ஹ்ம் என்கிட்டே சொல்ல என்ன தயக்கம் சொல்லு?" என்று அவளின் தோளில் கை போட்டபடி நடந்தான்.
மஹாவின் வலப்புறம் முழுவதும் சக்தியின் இடப்புறம் தீண்டியபடி நடக்கவும்,
மஹாவின் தோள் சக்தியின் மார்போடு மோதியபடி நடக்க கொஞ்சம் அல்ல நிறையவே திணறி தான் போனாள்.
சுற்றுப்புற சூழலும் மழை காற்றும் சேர்ந்து கொள்ள இருவருக்குள்ளும் இடைவெளி மிகவும் குறையவும் அவர்களுக்குள் வெப்பம் அதிகரிப்பதை உணர்ந்து ஒருவரை ஒருவர் அறியாவண்ணம் பார்வையை செலுத்தியபடி நடந்து வந்தனர்.
சக்தியின் போன் அடிக்கவே எடுத்தவன் மஹாவிடம் இருந்து விலகி சற்று தள்ளி நின்று பேசினான்.
சக்தியின் முகத்தை பார்த்தபடியே நின்றிருந்தாள் மஹா.
"இந்த முகத்துல ஏதோ ஒரு விதமான காந்த ஷக்தி இருக்கு. இல்லனா என்னால அவர் முகத்தில் இருந்து பார்வையை எடுக்க முடியவில்லையே" என்று தனக்குள் பேசியபடி நின்று சக்தியை பார்த்திருந்தவள் திடிரென்று தன் பார்வையை கூர்மையாக்கினாள்.
இருட்டில் ஒரு உருவம் சக்தியின் பின்னால் சக்தியை நோக்கி வருவதை கவனித்தாள். அதுமட்டும் இல்லாமல் அந்த உருவத்தின் கண்களை தவிர முகம் முழுவதுமாக மூடப்பட்டிருந்தது.
அதன் கைகளில் கூர்மையான பளப்பளக்கும் கத்தி ஒன்று ஷக்தியை நோக்கி வருவதை பார்த்து அதிர்ந்தபடி, "ஷக்தி" என்று கத்தியபடி ஓடவும் அந்த உருவம் நெருங்கி கத்தியை சக்தியின வயிற்றில் சொருகவும் மஹா இடையில் புகுந்து அந்த கத்திக்குத்தை வாங்கவும் சரியாக இருந்தது.
"ஆஹ்... அ...ம்...மா...." என்ற அலறலுடன் ஷக்தியின் மீதே சாய்ந்து கீழே சரிந்தாள்.
"ஹே யாருடா நீ நீல்லு டா?" என்று எழுந்தவனை சட்டையை இறுக்கி பிடித்து "ப்ளீஸ் என்னை விட்டு போகாதீங்க ஷக்தி." என்றாள்.
"இல்ல மஹா உனக்கு ஒன்னும் ஆகாது." என்று தன் சட்டையை கழுட்டி மஹாவின் வயிற்றில் கட்டினான்.
மஹாவின் கண்கள் சொருக, "மஹா ப்ளீஸ் கண்ண மூடாதடா." என்று அவளுடன் பேசியவாறே அவளை தூக்கி வேகமாக காரில் படுக்க வைத்தான்.
"ஆஹ்...ஆ..." என்று அலற "கொஞ்சம் பொறுத்துகோடா. தோ பைவ் மினிட்ஸ் உடனே ஹாஸ்பிடல் போய்டலாம் மஹா." என்று காரை மின்னல் வேகத்தில் செலுத்தினான்.
"ஷக்தி ப்ளீஸ் என்...ன எப்படி... யாவது காப்பாத்... திடுங்க... நான் உ...ங்க கூட வாழ...னும்" என்று கண்களை இறுக மூடி திறந்தாள்.
"உனக்கு ஒன்னும் ஆகாதுடா நான் இருக்கேன்." அவளின் கைகளை ஆதரவாய் பிடித்தபடி வண்டியை ஓட்டினான் தன் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் நிற்காமல் வருவதை உணர்ந்தான்.
வெகு தூரம் இருவரும் அமைதியாக இருக்க ஷக்தியே மௌனத்தை கலைத்தான்.
"மஹா இன்னும் டூ ஆர் த்ரீ டேஸ்ல உங்க ஊருக்கு போறோம்." என்றான்.
"என்ன?... அங்க எதுக்கு... இல்ல நான் வரமாட்டேன்." என்றாள் அதிர்சசியாக
"மஹா! இதுக்கு முன்னாடி உனக்கு யாரும் இல்ல. அதனால பயந்த.. இப்ப நான் இருக்கேன்ல எதுக்கு டா பயப்படற?" என்று கார் ஒட்டியபடி மஹாவை தன்னருகே இழுத்து ஒரு கையால் அணைத்து கொண்டான்.
"இல்ல ஷக்தி நான்.. எனக்கு..." என்று திணறினாள் .
"ஷ் பயப்பட கூடாது. வி ஆர் கோயிங் தட்ஸ் பைனல்".
"லாயர் அங்கிள்கிட்ட பேசி உங்க சித்தி மாமா மேல கேஸ் போட சொல்லிருக்கேன்."
"எதுக்கு?" என்றாள்.
"எதுக்கா...? என்ன கேள்வி கேக்கற உன்ன அவங்க பண்ண கொடுமைக்கு எனக்கு இருக்க கோவத்துக்கு அவங்கள என்ன செய்வேனே தெரியாது... நீ என்னடான்னா எதுக்குன்னு கேக்கற?" என்று கோவத்தில் சரமாரியாய் பொரிந்து தள்ளினான்.
"அவங்க உனக்கு பண்ண கொடுமைக்கு பதில் சொல்லியே ஆகணும். உனக்கு சேர வேண்டிய சொத்தை உன் கைல கொடுத்துட்டு வெளியே போய்டணும். உனக்கு பண்ண துரோகத்துக்கு அவங்க நடுத்தெருவில நிக்கணும், அவங்கள சும்மாவிட மாட்டேன்." என்று கோவமாக பற்களை கடித்தான்
"வேண்டாம் ஷக்தி! அந்த பாவம் நமக்கு வேண்டாம். என்ன தான் இருந்தாலும் அவங்க என்னை இத்தனை நாளா வளர்த்துருக்காங்க."
"ஹ்ஹமம் முடியாது. உனக்காக ஒன்னுவேணா செய்றேன். அவங்களுக்கு சின்னதா ஒரே ஒரு இடம் இருக்கறதுக்கு ஏற்பாடு செய்றேன். எனக்கு இருக்குற கோவத்துக்கு அவங்கள ஆயுள் முழுக்க உள்ளே வச்சி களி சாப்பிட வச்சிருப்பேன். உனக்காக தான் இதுகூட" என்று மஹாவின் தலை கோதினான்.
"நாம நேர்ல வரணும்னு லாயர் சொல்றாரு." என்று மஹாவை நோக்கினான்.
மஹா அமைதியாக இருந்தாள்.
"ஏன் உனக்கு பிடிக்கலையா நான் வேணா இதுலேர்ந்து ஒதுங்கிக்கிடட்டுமா?" என்றவுடன் ஷக்தியை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
"இல்ல நீங்க என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க. அவங்கள்ல்லாம் ரொம்ப மோசமானவங்க. சொத்துக்காக என்ன வேணா செய்வாங்க. உங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்துருமோன்னு எனக்கு பயமா இருக்கு." என்றாள் விழிகளில் நீர் தேங்க..
"ஹே செல்லம். எனக்கு ஒன்னும் ஆகாது. நான் பார்த்துகிறேன். நீ கவலைப்படாதே." என்று அவள் நெற்றியோடு தன் நெற்றியை மோதி புன்னகைத்தான்.
"எனக்கு உங்கள விட்டா யாரும் இல்ல. உங்களுக்கு ஏதாவதுன்னா என்னால தாங்க முடியாது. அடுத்த நொடி நான் உயிரோட இருக்க மாட்டேன்." என்றவளின் இதழை சட்டென ஷக்தி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தான்.
அவனின் செயலுக்கு இணங்குவது போல் மஹாவும் தடுக்காமல் சம்மதம் தெரிவிக்க ஒரு சில நொடி இருவரின் மூச்சுகளும் பரிமாறிக் கொண்டன.
சிறிதுநேரம் கழித்து அவளின் இதழை விடுதலை செய்து மூச்சு விட இடம் கொடுக்க, மஹாவின் முகம் வெட்கத்தில் மிளிர்வதை தன் ஒரே விழியால் பருகியபடி அமைதியாக புன்னகைத்துக் கொண்டிருந்தான்.
இருவரும் அமைதியாக வர ஷக்தி,
"மழை வர மாதிரி க்ளைமேட் நல்லா இருக்கு கொஞ்சம் நடக்கலாமா?" என்று காரை நிறுத்தினான்.
"சரி" என்று மஹா தலையாட்ட காரை விட்டு இருவரும் கீழே இறங்கினார்கள். ஆள் நடமாட்டமே இல்லாத சிறிது நிலா வெளிச்சம் மட்டும் இருந்த இடம்.
சில அடிகள் நடந்தவுடன் ஷக்தி மஹாவின் விரல்களை தன் விரல்களோடு கோர்த்தபடி நடந்தான்.
சக்தியின் ஸ்பரிசம் தனக்குள் ஒரு ரசாயன மாற்றம் ஏற்பட்டு தன் உடலினுள் சிலிர்ப்பு தோன்றுவதை மஹாவால் உணர முடிந்தது.
ஒரு வித படபடப்பு உண்டானாலும் இதை அவள் மனம் விரும்பியது.
"மஹா நான் ஒன்னு கேப்பேன். பதில் சொல்றியா?" என்று மஹாவை விழியால் கண்டு கொண்டே வந்தான்.
"ஹ்ம் கேளுங்க" என்றாள் அவனை பார்க்காமலே...
"நான் உன் கழுத்துல தாலி கட்டும் போது நீ என்ன நினைச்ச?" என்றான்
"அது..." என்று இழுத்தாள்.
"ஹ்ம் என்கிட்டே சொல்ல என்ன தயக்கம் சொல்லு?" என்று அவளின் தோளில் கை போட்டபடி நடந்தான்.
மஹாவின் வலப்புறம் முழுவதும் சக்தியின் இடப்புறம் தீண்டியபடி நடக்கவும்,
மஹாவின் தோள் சக்தியின் மார்போடு மோதியபடி நடக்க கொஞ்சம் அல்ல நிறையவே திணறி தான் போனாள்.
சுற்றுப்புற சூழலும் மழை காற்றும் சேர்ந்து கொள்ள இருவருக்குள்ளும் இடைவெளி மிகவும் குறையவும் அவர்களுக்குள் வெப்பம் அதிகரிப்பதை உணர்ந்து ஒருவரை ஒருவர் அறியாவண்ணம் பார்வையை செலுத்தியபடி நடந்து வந்தனர்.
சக்தியின் போன் அடிக்கவே எடுத்தவன் மஹாவிடம் இருந்து விலகி சற்று தள்ளி நின்று பேசினான்.
சக்தியின் முகத்தை பார்த்தபடியே நின்றிருந்தாள் மஹா.
"இந்த முகத்துல ஏதோ ஒரு விதமான காந்த ஷக்தி இருக்கு. இல்லனா என்னால அவர் முகத்தில் இருந்து பார்வையை எடுக்க முடியவில்லையே" என்று தனக்குள் பேசியபடி நின்று சக்தியை பார்த்திருந்தவள் திடிரென்று தன் பார்வையை கூர்மையாக்கினாள்.
இருட்டில் ஒரு உருவம் சக்தியின் பின்னால் சக்தியை நோக்கி வருவதை கவனித்தாள். அதுமட்டும் இல்லாமல் அந்த உருவத்தின் கண்களை தவிர முகம் முழுவதுமாக மூடப்பட்டிருந்தது.
அதன் கைகளில் கூர்மையான பளப்பளக்கும் கத்தி ஒன்று ஷக்தியை நோக்கி வருவதை பார்த்து அதிர்ந்தபடி, "ஷக்தி" என்று கத்தியபடி ஓடவும் அந்த உருவம் நெருங்கி கத்தியை சக்தியின வயிற்றில் சொருகவும் மஹா இடையில் புகுந்து அந்த கத்திக்குத்தை வாங்கவும் சரியாக இருந்தது.
"ஆஹ்... அ...ம்...மா...." என்ற அலறலுடன் ஷக்தியின் மீதே சாய்ந்து கீழே சரிந்தாள்.
"ஹே யாருடா நீ நீல்லு டா?" என்று எழுந்தவனை சட்டையை இறுக்கி பிடித்து "ப்ளீஸ் என்னை விட்டு போகாதீங்க ஷக்தி." என்றாள்.
"இல்ல மஹா உனக்கு ஒன்னும் ஆகாது." என்று தன் சட்டையை கழுட்டி மஹாவின் வயிற்றில் கட்டினான்.
மஹாவின் கண்கள் சொருக, "மஹா ப்ளீஸ் கண்ண மூடாதடா." என்று அவளுடன் பேசியவாறே அவளை தூக்கி வேகமாக காரில் படுக்க வைத்தான்.
"ஆஹ்...ஆ..." என்று அலற "கொஞ்சம் பொறுத்துகோடா. தோ பைவ் மினிட்ஸ் உடனே ஹாஸ்பிடல் போய்டலாம் மஹா." என்று காரை மின்னல் வேகத்தில் செலுத்தினான்.
"ஷக்தி ப்ளீஸ் என்...ன எப்படி... யாவது காப்பாத்... திடுங்க... நான் உ...ங்க கூட வாழ...னும்" என்று கண்களை இறுக மூடி திறந்தாள்.
"உனக்கு ஒன்னும் ஆகாதுடா நான் இருக்கேன்." அவளின் கைகளை ஆதரவாய் பிடித்தபடி வண்டியை ஓட்டினான் தன் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் நிற்காமல் வருவதை உணர்ந்தான்.