HoneyGeethan
Active member
- Messages
- 175
- Reaction score
- 169
- Points
- 43
பகை 3
அந்த இருட்டு ரூமில் கைகள் கட்டப்பட்டு, வாயில் துணி அடைக்கப்பட்டு அமர்த்தி வைக்கப்பட்டிருந்தாள் ஒரு பெண். அந்த பெண்ணின் கண்கள் அச்சத்தை பரதிபலித்தது. காரணம் அவளின் முன் கூர்மையான ஆயுதம் ஒன்றினை ஏந்திக் கொண்டு நின்றிருந்தான் அவன். அந்த கூர் ஆயுதத்தையும் அவனையும் பார்த்தவளுக்கு, கண்களில் பயத்தையும் மீறி கண்ணீர் வர ஆரம்பித்தது. அவள் அழுவதைப் பார்த்தவன் அவள் அருகில் வேகமாக வந்து, அவளது கண்களில் இருந்து விழும் கண்ணீரை தன் கையில் தொட்டு பார்த்துக் கொண்டே பேச ஆரம்பித்தான்.
"மைவிழி! மைவிழி! எதுக்கு இப்ப நீ அழுகுற? இங்கே கொஞ்சம் என்னை பார்!" என்று சொல்லிக் கொண்டே அவன் அவளது வாயில் இருந்த துணியை எடுத்துவிட்டு அவளது நாடியை பற்றி தன்னை பார்க்கச் செய்தான். ஆனால் அவன் துணியை எடுத்ததும் அந்தப் பெண் "என்னை காப்பாத்துங்க! என்னை காப்பாத்துங்க!" என்று கத்த ஆரம்பித்துவிட்டாள். அவள் கூச்சலிட ஆரம்பித்ததும் வேகமாக அவள் அருகினில் வந்து அவளது வாயை தன் கைகளால் அடைத்தான் அவன்.
அவளது வாயை அடைத்தவன் "சூ சூ! கத்தக்கூடாது. அதையும் மீறி நீ கத்துனே, இந்த கத்தி உன் தொண்டையில் இறங்கிடும்" என்று அருகில் இருந்த கத்தியை எடுத்து அவளை மிரட்டினான் அவன். அவன் அப்படி மிரட்டியதும் அந்த பெண் வேகமாக தன் வாயை மூடிக் கொண்டாள். அவள் வாயை மூடியதும் " குட்!" என்று கூறியபடியே அவள் அருகில் அமர்ந்த மேலும் பேசினான் அவன்.
"மைவிழி! நீ ‘காப்பாத்துங்கனு‘அப்படி கத்தி இருக்கக்கூடாது? யாராவது பார்த்தா என்னை பற்றி என்ன நினைப்பாங்க? அசடு! அசடு! வளர்ந்திருக்குறீயே தவிர உனக்கு மூளையே கொஞ்சம் கூட இல்லை" என்று சொல்லியபடியே அவளது தலையில் செல்லமாக ஒரு தட்டு தட்டினான் அவன். அதன்பின் சற்று நேரம் யோசித்தவன் மீண்டும் சொன்னதையே சொல்ல ஆரம்பித்தான்." நீ இப்படி பண்ணி இருக்கக்கூடாது மைவிழி. நீ இப்படி பண்ணுவேனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல தெரியுமா? மறுபடியும் நீ இப்படி பண்ண, உன்னை நிரந்தரமா கத்த விடாம பண்ணிடுவேன் பார்த்துக்கோ” என்று கூறிக் கொண்டே அவளது தொண்டையின் அருகில் அந்த கூர் ஆயுதத்தை அவன் கொண்டு செல்ல, அவளது தொண்டை குழி பயத்தில் ஏறி இறங்கியது, அதை பார்த்தவன் அந்த ஆயுதத்தை வேகமாக அவளது தொண்டை குழியில் இருந்து எடுத்து அருகில் வைத்தான்.
பின்பு அவளிடம் திரும்பி, " அய்யோ மறந்துட்டேன் பாரேன். ஆமாம் என்னை காப்பாத்துங்கனு எதுக்கு கத்தின?" என்று அவன் சிரித்துக் கொண்டே கேட்க நிமிடத்திற்கு நிமிடம், நிறம் மாறும் அவனது முகத்தை பயத்துடன் பார்த்துக் கொண்டே அந்த பெண் அவனது கேள்விக்கு பதில் சொன்னாள்
"உன்னைப் பார்த்தா எனக்கு பயமா இருக்கு. நீ என்னை கொலை செய்யப் போறீயா?" என்று அந்த பெண் பயந்து கொண்டே கேட்க,
அதை கேட்டு அருகில் இருந்த கத்தியை எடுத்து தன் தலையில் தட்டிக் கொண்டே சற்று நேரம் யோசித்தான் மிஸ்டர் எக்ஸ்.
"மைவிழி! என்னை பார்த்தா பயமா இருக்குனு சொன்ன? நீயே என்னை பார்த்து இப்படி சொல்லலாமா? நான் உன் பாவா மைவிழி.! பாவாவை பார்த்து யாராவது பயப்படுவாங்களா? இல்லை கொலை தான் செய்வாங்களா?’’ – என்று அவன் அவளிடமே மறுகேள்வி கேட்க, அதை கேட்ட பெண்ணவளோ திகைத்தாள்.
"இல்லை! இல்லை! நீ என் பாவா இல்லை. நீ ஏதோ தப்பா என்னை புரிஞ்சி வச்சிருக்க. எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல.
பஸ் ஸ்டாண்ட்டில் பஸ்சிற்காக காத்து கொண்டு நின்று கொண்டிருந்த என்னிடம் நீயா வந்து அட்ரஸ் கேட்குற மாதிரி கேட்டுட்டு, இப்படி என்னை இங்கே கடத்திட்டு வந்துட்ட. அதுமட்டுமல்ல நீ இப்படி முறை தவறி என்கிட்ட பேசுறது சரியில்லை" என்று அவள் கூற, அவனோ அவளுக்கு பதில் சொல்லாமல் அவளையே ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.
தன்னை அவன் பார்க்கும் பார்வையை கவனித்த அந்த பெண் தன் பேச்சை வேகமாக நிறுத்திக் கொண்டு, " ஏன்? என்னை அப்படி பார்க்குற?” என்று பயத்தோடு கேட்டாள்.
‘ம்ம்ம்...' என்று சற்று நேரம் யோசித்தவன் அவளது முகத்தை பற்றி முன்னே பின்னே திருப்பி திருப்பிப் பார்த்தான். பின்பு கோபம் தலைகேற
"மைவிழி! உன் அழகான கண்கள் எங்க போச்சு?” என்று எக்ஸ் அவளைப் பார்த்து கத்தினான். அவன் அப்படி கத்த ஆரம்பித்ததும் அந்த பெண் வேகமாக
"நான் உன் மைவிழி இல்லை. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ! என்னை என் வீட்டில் தயவு செய்து கொண்டு போய் விட்டுடு ” என்று அந்த பெண் அவனிடம் கெஞ்ச ஆரம்பித்தாள்.
அவள் கெஞ்ச ஆரம்பித்தததும் அதை கேட்டு சற்று நேரம் தலை குனிந்து அமர்ந்திருந்தான் அவன். அந்த பெண் அவனையே பார்த்துக் கொண்டிருக்க அந்த பெண் எக்ஸ் தலை குனிந்தபடியே பேசினான்.
"ஆமா. நீ சொல்றது சரிதான். நீ என் மைவிழி இல்லை. என் மைவிழியின் கண்கள் இப்படி இருக்காது. நீ வேறு யாரோதான்” என்று குனிந்தபடியே அவன் சொல்ல
அதை கேட்ட அந்த பெண் சந்தோசத்தில் மிதந்தாள்.
"தேங்க் காட்.! இப்பவாவது என்னை மைவிழி இல்லைனு புரிஞ்சுக்கிட்டீயே! எனக்கு அதுவே போதும். சீக்கிரமா என்னை என் வீட்டில் கொண்டு போய் விட்டுடு" என்று அவள் சொல்ல வேகமாக தலைநிமிர்ந்தான் அவன்.
தலைநிமிர்ந்தவனின் கண்களை பார்த்த அந்த பெண்ணிற்கு பயம் பிடித்துக் கொண்டது. அவன் கண்கள் சிவந்து பார்ப்பதற்கு பயமாக இருந்தது. அந்த கண்களோடு அவன் அந்த பெண்ணை பார்த்துக் கொண்டே பேசினான்.
"என் மைவிழியின் கண்களைத் தவிர இந்த உலகத்தில் வேறு யாருடைய கண்களையும் நான் பார்க்கவே கூடாது" என்று கூறிக் கொண்டே அவன் கீழே இருந்த கூர் ஆயுதத்தை மறுபடியும் தன் கைகளில் எடுத்துக் கொண்டு அந்த பெண்ணின் அருகில் வந்தான். அவன் ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டு தன்னை நோக்கி வரவும் " நோ! நோ!" என்னை எதுவும் பண்ணிடாத விட்டுடு" என்று அந்த பெண் அலற ஆரம்பித்தாள்.
அவளது அலறலைக் கேட்ட அவனோ
"ஏய்! கத்தாத. எனக்கு தேவை அந்த கண்கள் மட்டும் தான். உனக்கு வலி எதுவும் குடுக்காம எனக்கு தேவையானதை மட்டும், உன்கிட்ட இருந்து எடுத்துட்டு , உன்னை நான் விட்டுடுவேன், எனக்கு தேவையானதை கொடுத்துட்டு நீ எங்க வேணா போ. உன்னை நான் தொந்தரவு செய்ய மாட்டேன். பிராமிஸ்!." என்று சொல்லிக் கொண்டே அவள் அருகில் சென்றான் அவன். அவன் அவளை இழுத்து பற்றி அவளது கைகளில் ஊசி ஒன்றை போட்டான்.
ஊசியை அவன் கைகளில் போட்டதும் சற்று நேரத்தில் மயங்கினாள் அந்த பெண். அந்த பெண் மயங்கியதும் அந்த பெண்ணின் அருகில் சென்றவன், ஏதோ செய்துவிட்டு விலக, அந்த பெண் பேச்சு மூச்சின்றி கீழே கிடந்தாள். அவளது கண்களோ களவாடப்பட்டிருந்தது.
*****
நேகாவும், சுப்ரதாவும் காலேஜ் கேண்டினில் அமர்ந்து காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
சுப்ரதா அமைதியாக அமர்ந்து காபி பருகிக் கொண்டிருக்க, நேகாவின் கைகளோ காபி தட்டில் தாளம் போட்டுக் கொண்டிருந்தது. அதை கண்ட சுப்ரதா நேகாவை பார்த்து கத்தினாள்.
"ஏய் அடச்சீ நிறுத்து? என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி காபி தட்டில் தாளம் போடுட்டு இருக்குற நேகா?" – சுப்ரதா.
"ஏது? தாளம் போடுறேனா? பயத்தில் கை தானாக ஆடுதுடி, சுப்பு ’’ – நேகா.
"பயமா? எதுக்கு?” – சுப்ரதா.
"என்ன சுப்பு? இவ்வளவு சாதாரணமா கேட்டுட்ட? சாரி கேட்டுட்டீங்க... நீங்க நேற்று கனவுல பார்த்து சொன்ன மாதிரியே நம்ம வார்டன் இறந்து போயிட்டாங்க. அதுக்கு பயப்படாம என்ன செய்யனும்னு கேட்குறீங்க?"– நேகா.
"நான் தான் நேற்றே சொன்னேன்லடி எனக்கு கனவுல நடக்குறது எல்லாம் நேரில் நிஜமா நடக்குதுனு. நீ நம்பினாத்தான? இப்பவாவது என் பேச்சை நம்புறீயா நேகா?” – சுப்ரதா.
"இனி நம்பி தானே ஆகணும் வேற வழி?" – நேகா.
"என்னடி சொல்ற. எனக்கு ஒன்றும் புரியல"- சுப்ரதா.
"ம்ம்ம்... அதை விடுடி. சாரி விடுங்க மேம். இப்ப அதுவா முக்கியம் நம்ம விசயத்துக்கு வாங்க. இனிமேல் நான் எதுவும் உங்க கனவுல வந்தா, தயவு செய்து அதை மறைக்காம என்கிட்ட வந்து சொல்லிடுங்க சுப்பு மேம்.’’ – நேகா.
"ஏன்?" – சுப்ரதா.
"அப்ப தான் நான் பாதுகாப்பா இருக்க முடியும் சுப்பு மேம், அதான்" என்று நேகா பயத்தோடு சொல்ல, சுப்ரதா அப்போது தான் அந்த வித்தியாசத்தை உணர்ந்தாள்.
"ஏய்! நேகா! என்னாச்சு உனக்கு? ஏன் தீடீர்னு என்னை மரியாதையோட கூப்பிடுற? "– சுப்ரதா
"நான் எங்க கூப்பிடுறேன் பயத்துல அதுவா வருதுடி’’ – நேகா.
"அது... சரி! இது கூட நல்லா தான்டி இருக்கு. நீ எத்தனை நாள் என்னைய ஓட்டிருப்ப. இப்ப பார்த்தீயா? உன்னை ஓட்ட கடவுளா பார்த்து எனக்கு சான்ஸ் கொடுத்திருக்கார்.. அதை நான் விட மாட்டேன். இனி எதாவது என்கிட்ட வம்பு பண்ண, அப்புறம் உன்னை வச்சி கனவு காண்பேன் பார்த்துக்கோ. பீ கேர்புல்" என்று சுப்ரதா அவளை மிரட்ட, அதை கேட்ட நேகாவோ அவளை பார்த்து திகைத்தாள்.
அதை பார்த்த சுப்ரதா சிரித்துக் கொண்டே "சும்மா உன்கிட்ட விளையாடினேன்டி நேகா. நான் எப்பவும் உன் உயிர் தோழி தான். உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன்டி’’என்று சொல்ல, நேகா வேகமாக ஏதோ சொல்ல, அதை கேட்ட சுப்ரதா அதிர்ச்சியடைந்தாள்.
*****
அந்த யாருமற்ற வீட்டின் உள்ளே இருந்த கிட்சனில் எதையோ கிண்டி கொண்டு இருந்தாள் மாயா.
சற்று நேரம் அதை கிண்டியவள் அதை எடுத்துக் கொண்டு ஒரு அறையின் உள்ளே சென்றாள். அங்கு படுத்த நிலையில் முகத்தை போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள் ஒரு பெண். அந்த பெண்ணின் அருகில் சென்ற மாயா, அந்த போர்வையை விலக்கி விட்டு அவளை எழுப்பினாள்.
" குண்டு! ஏய் குண்டு! எழுந்திரி. இந்தா. இந்த கசாயத்தை குடிச்சிட்டு படுத்துக்க டா." – மாயா.
அதை கேட்ட அந்த பெண்ணோ கஷ்டப்பட்டு எழுந்தவள் கண்ணை திறவாமலேயே தன் கைகளால் பெட்டை தடவி, வேகமாக அருகில் இருந்த கருப்பு நிற கண்ணாடியை எடுத்து, தன் கண்களில் அணிந்து கொண்டே மாயாவிடம் திரும்பினாள்.
" எனக்கு இது வேண்டாம் மாயா. குடிக்க கஷ்டமா இருக்கு " என்று அவளால் குண்டு என்று அழைக்கப்பட்ட வாணி அவள் குடுத்த கசாயத்தை குடிக்க மறுத்துவிட்டு திரும்பவும் படுத்துக் கொண்டாள்.
ஆனால் மாயா அவளை விடுவதாக இல்லை. "ஏய் படுக்காத! எழுந்திரு வாணி! நீ இதை குடிச்சே ஆகணும். நீ இதை குடிக்கலைனா உன் கை சரியாகாது” என்று கூறியபடி அவளது ஒரு கைகள் மட்டும் இழுத்து பக்க வாதம் போல இருந்த அவளது கைகளை காட்டி சொன்னாள் மாயா.
அதை கேட்ட வாணியின் முகம் வாடியது.
"இதை குடிச்சு கை சரியாகி நான் என்ன செய்யப் போறேன்கா. நான் இப்படியே இருந்துட்டு போறேனே என்னை விட்டுடுக்கா. கடைசி வரைக்கு உன் தங்கச்சியா உன்கூடவே நான் இருந்துடுறேன்கா. ப்ளீஸ் ” என்று வாணி சொல்ல அதை கேட்ட மாயாவிற்கோ கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
"நீ இப்படியே பேசிகிட்டே இரு. அப்பதான் உன்னுடைய இன்னொரு கையையும் அவன் வந்து உடைச்சுட்டு போக வசதியா இருக்கும்” – மாயா
மாயா அப்படி சொன்னதும் "அக்கா!" என்று அதிர்ச்சியில் கத்தினாள் வாணி. வாணி அப்படி கத்தியதும் மாயா அமைதியாகி அவளின் அருகில் அமர்ந்து அவளது கைகளையும் அவளது முகத்தையும் பார்த்தபடியே மெதுவாக பேச ஆரம்பித்தாள்.
"இங்க பார் வாணி. நீ வாழ்ந்து தான் ஆகணும். நீ வாழ்ந்தா தான் அவன் சாக முடியும்!" என்று மாயா எதையோ நினைத்துக் கொண்டு சொல்ல அதை கேட்ட வாணி சற்று நேரம் அமைதியாக இருந்தாள்.
வாணியின் அமைதியை கண்ட மாயா அவள் அருகில் அமர்ந்து அவளது தோளில் கை போட்டபடியே பேச ஆரம்பித்தாள். "வாணி.! நடந்ததை நினைத்து கவலைப்பட்டுக்கிட்டு அமர்ந்து இருந்தா எதுவும் மாறப் போவது இல்லை.. நான் சொல்றதை கேள். நீ உன்னை திடப்படுத்திக்கோ! அப்ப தான் அவனை நாம் அழிக்க முடியும் "என்று மாயா சொல்ல வாணியின் முகம் சற்றுத் தெளிந்தது.
அவள் முகம் தெளிந்ததை பார்த்த மாயா "குட்.! அப்படியே இந்த கசாயத்தை குடிச்சிடுமா! " என்று சொல்லிக் கொண்டே கசாயத்தை அவளிடம் நீட்டினாள்.
ஆனால் இந்த தடவை மறுப்பேதும் சொல்லாமல் கசாயத்தை குடித்துவிட்டாள் வாணி. வாணி கசாயத்தை குடித்ததும் அந்த டம்ளரை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாள் மாயா.
மாயா சென்றதும் தன் கண்ணாடியை கழட்டி தன் கண்களை தடவிப் பார்த்தாள் வாணி. அவள் கண்களில் ஒரு கண் முற்றிலும் எரிந்து காணப்பட்டது. தன் கண்களை தடவிப் பார்த்தவளின் முகம் மிகவும் வருத்தமடைந்தது.
*****
அந்த மாணவியர் தங்கும் விடுதியை விட்டு வந்து கொண்டிருந்தனர் கனகாவும், நந்தவர்மனும். நந்தவர்மன் ஏதோ யோசனையில் வர, கனகா அவனையே பார்த்துக் கொண்டு அமைதியாக அவனோடு நடந்து வந்து கொண்டிருந்தாள்.. ஆனால் அந்த அமைதியை கலைத்தது நந்தவர்மன் தான்,
" மிஸ் கனகா! எதுக்கு என்னையவே வச்ச கண் வாங்காம பார்த்துகிட்டே வரீங்க. உங்களுக்கு என்கிட்ட எதுவும் கேட்கணும்னா தாராளமா நீங்க கேட்கலாம்" - நந்தவர்மன்
நந்தவர்மன் அப்படி சொன்னதும் தன் தைரியத்தை வரவழைத்து பேச ஆரம்பித்தாள் கனகா.
" சார்! அது வந்து..." என்று அவள் தயங்க, " ம்ம்ம் கேளுங்க என்று நந்தவர்மன் சொன்னதும் கனகா ஆரம்பித்தாள்.
" சார்! அந்த வார்டன் எதனால் இறந்திருப்பாங்க சார்? யார் அவங்களை கொன்றிருப்பாங்க? " – கனகா.
" தெரியல! யார் கொன்னாங்கனு இனி மேல் தான் கண்டுபிடிக்கணும். ஆனால் அவங்க இறந்து போயிட்டாங்கனு தெரிஞ்சும் அவங்களை கத்தியால பல தடவை குத்தி இருக்கான் கொலையாளி. இதை பார்க்கும் போது இது கண்டிப்பா இது பகை தீர்க்க நடந்த கொலையா இருக்கலாம் னு எனக்கு தோணுது " – நந்தவர்மன்.
" ஓ அப்படினா! வார்டனால பாதிக்கப்பட்ட யாரோ தான் இந்த கொலையை செஞ்சிருக்கணும்" – கனகா
"ம்ம்ம் யூ ஆர் கரெக்ட். பரவாயில்லையே உனக்கு கூட கொஞ்சம் அறிவு வேலை இருக்கு." என்று அவளை பாராட்டியவன் ஒரு புகைபடத்தை தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்து அவளிடம் காட்டினான்.
அந்த புகைபடத்தை பார்த்த கனகா "சார்! இது... " என்று அவள் இழுக்க நந்தவர்மன் அவளிடம் அந்த புகைப்படத்தைகாட்டி விளக்கம் சொல்ல ஆரம்பித்தான்.
அந்த புகைபடத்தில் இறந்து கிடந்த வார்டனின் அருகில் ஒரு பேப்பர் கிடந்தது. அந்த பேப்பரில் இறப்பதற்கு முன் தன் ரத்தத்தால் எதையோ எழுதியிருந்தார் வார்டன்.
அதில் ‘10008716’ என்று நம்பர் ஒன்று எழுதப்பட்டிருந்தது. அதை பார்த்தவள் குழப்பமாக நந்தவர்மனைப் பார்த்தாள்.
"சார்! இது என்ன நம்பராக இருக்கும்? பார்த்தா போன் நம்பர் மாதிரியும் தெரியல?" – கனகா.
"ம்ம்ம்... அதை தான் நானும் யோசிச்சுட்டு இருக்கேன்., ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நாம இந்த நம்பரை கண்டுபிடிச்சுட்டோம்னா கொலையாளியை நாம ஈஸியா ரீச் பண்ணிடலாம் " என்று அவன் சொல்ல அதை கேட்ட கனகா சம்மதமாக தலையசைத்தாள்.
" அப்புறம் இன்னொரு சந்தேகம் சார் " - கனகா.
"ம்ம்ம் சொல்லுங்க சார்" - நந்தவர்மன்.
"சார்! நான் சாதாரண கான்ஸ்டபிள்.. என்கிட்ட போய் நீங்க இப்படி கேஸ் பற்றிலா டிஸ்கஸ் பண்றது ஆச்சரியா இருக்கு" - கனகா.
" ம்ம்ம் ஐ நோ! உங்களுக்குள்ள ஒரு தேடல் இருக்கு தெரிஞ்சுக்கணும்னு ஒரு ஆர்வம் இருக்கு. அதான் உங்ககிட்ட சொல்றேன். ஐ ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட்! " என்று சொல்லிவிட்டு அவன் முன்னால் செல்ல கனகா அவனை மெச்சியபடியே அவன் பின்னால் சென்றாள்.
எண்கணின் குறீயிட்டின் உள்ளே கொலையாளியின் முகக் குறீயிடு.
பகையை தீர்க்கும் முன் காவலன் குறீயீட்டினை கண்டிடுவானா? கண்டிடுவாளா?
வருவாள்
அந்த இருட்டு ரூமில் கைகள் கட்டப்பட்டு, வாயில் துணி அடைக்கப்பட்டு அமர்த்தி வைக்கப்பட்டிருந்தாள் ஒரு பெண். அந்த பெண்ணின் கண்கள் அச்சத்தை பரதிபலித்தது. காரணம் அவளின் முன் கூர்மையான ஆயுதம் ஒன்றினை ஏந்திக் கொண்டு நின்றிருந்தான் அவன். அந்த கூர் ஆயுதத்தையும் அவனையும் பார்த்தவளுக்கு, கண்களில் பயத்தையும் மீறி கண்ணீர் வர ஆரம்பித்தது. அவள் அழுவதைப் பார்த்தவன் அவள் அருகில் வேகமாக வந்து, அவளது கண்களில் இருந்து விழும் கண்ணீரை தன் கையில் தொட்டு பார்த்துக் கொண்டே பேச ஆரம்பித்தான்.
"மைவிழி! மைவிழி! எதுக்கு இப்ப நீ அழுகுற? இங்கே கொஞ்சம் என்னை பார்!" என்று சொல்லிக் கொண்டே அவன் அவளது வாயில் இருந்த துணியை எடுத்துவிட்டு அவளது நாடியை பற்றி தன்னை பார்க்கச் செய்தான். ஆனால் அவன் துணியை எடுத்ததும் அந்தப் பெண் "என்னை காப்பாத்துங்க! என்னை காப்பாத்துங்க!" என்று கத்த ஆரம்பித்துவிட்டாள். அவள் கூச்சலிட ஆரம்பித்ததும் வேகமாக அவள் அருகினில் வந்து அவளது வாயை தன் கைகளால் அடைத்தான் அவன்.
அவளது வாயை அடைத்தவன் "சூ சூ! கத்தக்கூடாது. அதையும் மீறி நீ கத்துனே, இந்த கத்தி உன் தொண்டையில் இறங்கிடும்" என்று அருகில் இருந்த கத்தியை எடுத்து அவளை மிரட்டினான் அவன். அவன் அப்படி மிரட்டியதும் அந்த பெண் வேகமாக தன் வாயை மூடிக் கொண்டாள். அவள் வாயை மூடியதும் " குட்!" என்று கூறியபடியே அவள் அருகில் அமர்ந்த மேலும் பேசினான் அவன்.
"மைவிழி! நீ ‘காப்பாத்துங்கனு‘அப்படி கத்தி இருக்கக்கூடாது? யாராவது பார்த்தா என்னை பற்றி என்ன நினைப்பாங்க? அசடு! அசடு! வளர்ந்திருக்குறீயே தவிர உனக்கு மூளையே கொஞ்சம் கூட இல்லை" என்று சொல்லியபடியே அவளது தலையில் செல்லமாக ஒரு தட்டு தட்டினான் அவன். அதன்பின் சற்று நேரம் யோசித்தவன் மீண்டும் சொன்னதையே சொல்ல ஆரம்பித்தான்." நீ இப்படி பண்ணி இருக்கக்கூடாது மைவிழி. நீ இப்படி பண்ணுவேனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல தெரியுமா? மறுபடியும் நீ இப்படி பண்ண, உன்னை நிரந்தரமா கத்த விடாம பண்ணிடுவேன் பார்த்துக்கோ” என்று கூறிக் கொண்டே அவளது தொண்டையின் அருகில் அந்த கூர் ஆயுதத்தை அவன் கொண்டு செல்ல, அவளது தொண்டை குழி பயத்தில் ஏறி இறங்கியது, அதை பார்த்தவன் அந்த ஆயுதத்தை வேகமாக அவளது தொண்டை குழியில் இருந்து எடுத்து அருகில் வைத்தான்.
பின்பு அவளிடம் திரும்பி, " அய்யோ மறந்துட்டேன் பாரேன். ஆமாம் என்னை காப்பாத்துங்கனு எதுக்கு கத்தின?" என்று அவன் சிரித்துக் கொண்டே கேட்க நிமிடத்திற்கு நிமிடம், நிறம் மாறும் அவனது முகத்தை பயத்துடன் பார்த்துக் கொண்டே அந்த பெண் அவனது கேள்விக்கு பதில் சொன்னாள்
"உன்னைப் பார்த்தா எனக்கு பயமா இருக்கு. நீ என்னை கொலை செய்யப் போறீயா?" என்று அந்த பெண் பயந்து கொண்டே கேட்க,
அதை கேட்டு அருகில் இருந்த கத்தியை எடுத்து தன் தலையில் தட்டிக் கொண்டே சற்று நேரம் யோசித்தான் மிஸ்டர் எக்ஸ்.
"மைவிழி! என்னை பார்த்தா பயமா இருக்குனு சொன்ன? நீயே என்னை பார்த்து இப்படி சொல்லலாமா? நான் உன் பாவா மைவிழி.! பாவாவை பார்த்து யாராவது பயப்படுவாங்களா? இல்லை கொலை தான் செய்வாங்களா?’’ – என்று அவன் அவளிடமே மறுகேள்வி கேட்க, அதை கேட்ட பெண்ணவளோ திகைத்தாள்.
"இல்லை! இல்லை! நீ என் பாவா இல்லை. நீ ஏதோ தப்பா என்னை புரிஞ்சி வச்சிருக்க. எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல.
பஸ் ஸ்டாண்ட்டில் பஸ்சிற்காக காத்து கொண்டு நின்று கொண்டிருந்த என்னிடம் நீயா வந்து அட்ரஸ் கேட்குற மாதிரி கேட்டுட்டு, இப்படி என்னை இங்கே கடத்திட்டு வந்துட்ட. அதுமட்டுமல்ல நீ இப்படி முறை தவறி என்கிட்ட பேசுறது சரியில்லை" என்று அவள் கூற, அவனோ அவளுக்கு பதில் சொல்லாமல் அவளையே ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.
தன்னை அவன் பார்க்கும் பார்வையை கவனித்த அந்த பெண் தன் பேச்சை வேகமாக நிறுத்திக் கொண்டு, " ஏன்? என்னை அப்படி பார்க்குற?” என்று பயத்தோடு கேட்டாள்.
‘ம்ம்ம்...' என்று சற்று நேரம் யோசித்தவன் அவளது முகத்தை பற்றி முன்னே பின்னே திருப்பி திருப்பிப் பார்த்தான். பின்பு கோபம் தலைகேற
"மைவிழி! உன் அழகான கண்கள் எங்க போச்சு?” என்று எக்ஸ் அவளைப் பார்த்து கத்தினான். அவன் அப்படி கத்த ஆரம்பித்ததும் அந்த பெண் வேகமாக
"நான் உன் மைவிழி இல்லை. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ! என்னை என் வீட்டில் தயவு செய்து கொண்டு போய் விட்டுடு ” என்று அந்த பெண் அவனிடம் கெஞ்ச ஆரம்பித்தாள்.
அவள் கெஞ்ச ஆரம்பித்தததும் அதை கேட்டு சற்று நேரம் தலை குனிந்து அமர்ந்திருந்தான் அவன். அந்த பெண் அவனையே பார்த்துக் கொண்டிருக்க அந்த பெண் எக்ஸ் தலை குனிந்தபடியே பேசினான்.
"ஆமா. நீ சொல்றது சரிதான். நீ என் மைவிழி இல்லை. என் மைவிழியின் கண்கள் இப்படி இருக்காது. நீ வேறு யாரோதான்” என்று குனிந்தபடியே அவன் சொல்ல
அதை கேட்ட அந்த பெண் சந்தோசத்தில் மிதந்தாள்.
"தேங்க் காட்.! இப்பவாவது என்னை மைவிழி இல்லைனு புரிஞ்சுக்கிட்டீயே! எனக்கு அதுவே போதும். சீக்கிரமா என்னை என் வீட்டில் கொண்டு போய் விட்டுடு" என்று அவள் சொல்ல வேகமாக தலைநிமிர்ந்தான் அவன்.
தலைநிமிர்ந்தவனின் கண்களை பார்த்த அந்த பெண்ணிற்கு பயம் பிடித்துக் கொண்டது. அவன் கண்கள் சிவந்து பார்ப்பதற்கு பயமாக இருந்தது. அந்த கண்களோடு அவன் அந்த பெண்ணை பார்த்துக் கொண்டே பேசினான்.
"என் மைவிழியின் கண்களைத் தவிர இந்த உலகத்தில் வேறு யாருடைய கண்களையும் நான் பார்க்கவே கூடாது" என்று கூறிக் கொண்டே அவன் கீழே இருந்த கூர் ஆயுதத்தை மறுபடியும் தன் கைகளில் எடுத்துக் கொண்டு அந்த பெண்ணின் அருகில் வந்தான். அவன் ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டு தன்னை நோக்கி வரவும் " நோ! நோ!" என்னை எதுவும் பண்ணிடாத விட்டுடு" என்று அந்த பெண் அலற ஆரம்பித்தாள்.
அவளது அலறலைக் கேட்ட அவனோ
"ஏய்! கத்தாத. எனக்கு தேவை அந்த கண்கள் மட்டும் தான். உனக்கு வலி எதுவும் குடுக்காம எனக்கு தேவையானதை மட்டும், உன்கிட்ட இருந்து எடுத்துட்டு , உன்னை நான் விட்டுடுவேன், எனக்கு தேவையானதை கொடுத்துட்டு நீ எங்க வேணா போ. உன்னை நான் தொந்தரவு செய்ய மாட்டேன். பிராமிஸ்!." என்று சொல்லிக் கொண்டே அவள் அருகில் சென்றான் அவன். அவன் அவளை இழுத்து பற்றி அவளது கைகளில் ஊசி ஒன்றை போட்டான்.
ஊசியை அவன் கைகளில் போட்டதும் சற்று நேரத்தில் மயங்கினாள் அந்த பெண். அந்த பெண் மயங்கியதும் அந்த பெண்ணின் அருகில் சென்றவன், ஏதோ செய்துவிட்டு விலக, அந்த பெண் பேச்சு மூச்சின்றி கீழே கிடந்தாள். அவளது கண்களோ களவாடப்பட்டிருந்தது.
*****
நேகாவும், சுப்ரதாவும் காலேஜ் கேண்டினில் அமர்ந்து காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
சுப்ரதா அமைதியாக அமர்ந்து காபி பருகிக் கொண்டிருக்க, நேகாவின் கைகளோ காபி தட்டில் தாளம் போட்டுக் கொண்டிருந்தது. அதை கண்ட சுப்ரதா நேகாவை பார்த்து கத்தினாள்.
"ஏய் அடச்சீ நிறுத்து? என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி காபி தட்டில் தாளம் போடுட்டு இருக்குற நேகா?" – சுப்ரதா.
"ஏது? தாளம் போடுறேனா? பயத்தில் கை தானாக ஆடுதுடி, சுப்பு ’’ – நேகா.
"பயமா? எதுக்கு?” – சுப்ரதா.
"என்ன சுப்பு? இவ்வளவு சாதாரணமா கேட்டுட்ட? சாரி கேட்டுட்டீங்க... நீங்க நேற்று கனவுல பார்த்து சொன்ன மாதிரியே நம்ம வார்டன் இறந்து போயிட்டாங்க. அதுக்கு பயப்படாம என்ன செய்யனும்னு கேட்குறீங்க?"– நேகா.
"நான் தான் நேற்றே சொன்னேன்லடி எனக்கு கனவுல நடக்குறது எல்லாம் நேரில் நிஜமா நடக்குதுனு. நீ நம்பினாத்தான? இப்பவாவது என் பேச்சை நம்புறீயா நேகா?” – சுப்ரதா.
"இனி நம்பி தானே ஆகணும் வேற வழி?" – நேகா.
"என்னடி சொல்ற. எனக்கு ஒன்றும் புரியல"- சுப்ரதா.
"ம்ம்ம்... அதை விடுடி. சாரி விடுங்க மேம். இப்ப அதுவா முக்கியம் நம்ம விசயத்துக்கு வாங்க. இனிமேல் நான் எதுவும் உங்க கனவுல வந்தா, தயவு செய்து அதை மறைக்காம என்கிட்ட வந்து சொல்லிடுங்க சுப்பு மேம்.’’ – நேகா.
"ஏன்?" – சுப்ரதா.
"அப்ப தான் நான் பாதுகாப்பா இருக்க முடியும் சுப்பு மேம், அதான்" என்று நேகா பயத்தோடு சொல்ல, சுப்ரதா அப்போது தான் அந்த வித்தியாசத்தை உணர்ந்தாள்.
"ஏய்! நேகா! என்னாச்சு உனக்கு? ஏன் தீடீர்னு என்னை மரியாதையோட கூப்பிடுற? "– சுப்ரதா
"நான் எங்க கூப்பிடுறேன் பயத்துல அதுவா வருதுடி’’ – நேகா.
"அது... சரி! இது கூட நல்லா தான்டி இருக்கு. நீ எத்தனை நாள் என்னைய ஓட்டிருப்ப. இப்ப பார்த்தீயா? உன்னை ஓட்ட கடவுளா பார்த்து எனக்கு சான்ஸ் கொடுத்திருக்கார்.. அதை நான் விட மாட்டேன். இனி எதாவது என்கிட்ட வம்பு பண்ண, அப்புறம் உன்னை வச்சி கனவு காண்பேன் பார்த்துக்கோ. பீ கேர்புல்" என்று சுப்ரதா அவளை மிரட்ட, அதை கேட்ட நேகாவோ அவளை பார்த்து திகைத்தாள்.
அதை பார்த்த சுப்ரதா சிரித்துக் கொண்டே "சும்மா உன்கிட்ட விளையாடினேன்டி நேகா. நான் எப்பவும் உன் உயிர் தோழி தான். உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன்டி’’என்று சொல்ல, நேகா வேகமாக ஏதோ சொல்ல, அதை கேட்ட சுப்ரதா அதிர்ச்சியடைந்தாள்.
*****
அந்த யாருமற்ற வீட்டின் உள்ளே இருந்த கிட்சனில் எதையோ கிண்டி கொண்டு இருந்தாள் மாயா.
சற்று நேரம் அதை கிண்டியவள் அதை எடுத்துக் கொண்டு ஒரு அறையின் உள்ளே சென்றாள். அங்கு படுத்த நிலையில் முகத்தை போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தாள் ஒரு பெண். அந்த பெண்ணின் அருகில் சென்ற மாயா, அந்த போர்வையை விலக்கி விட்டு அவளை எழுப்பினாள்.
" குண்டு! ஏய் குண்டு! எழுந்திரி. இந்தா. இந்த கசாயத்தை குடிச்சிட்டு படுத்துக்க டா." – மாயா.
அதை கேட்ட அந்த பெண்ணோ கஷ்டப்பட்டு எழுந்தவள் கண்ணை திறவாமலேயே தன் கைகளால் பெட்டை தடவி, வேகமாக அருகில் இருந்த கருப்பு நிற கண்ணாடியை எடுத்து, தன் கண்களில் அணிந்து கொண்டே மாயாவிடம் திரும்பினாள்.
" எனக்கு இது வேண்டாம் மாயா. குடிக்க கஷ்டமா இருக்கு " என்று அவளால் குண்டு என்று அழைக்கப்பட்ட வாணி அவள் குடுத்த கசாயத்தை குடிக்க மறுத்துவிட்டு திரும்பவும் படுத்துக் கொண்டாள்.
ஆனால் மாயா அவளை விடுவதாக இல்லை. "ஏய் படுக்காத! எழுந்திரு வாணி! நீ இதை குடிச்சே ஆகணும். நீ இதை குடிக்கலைனா உன் கை சரியாகாது” என்று கூறியபடி அவளது ஒரு கைகள் மட்டும் இழுத்து பக்க வாதம் போல இருந்த அவளது கைகளை காட்டி சொன்னாள் மாயா.
அதை கேட்ட வாணியின் முகம் வாடியது.
"இதை குடிச்சு கை சரியாகி நான் என்ன செய்யப் போறேன்கா. நான் இப்படியே இருந்துட்டு போறேனே என்னை விட்டுடுக்கா. கடைசி வரைக்கு உன் தங்கச்சியா உன்கூடவே நான் இருந்துடுறேன்கா. ப்ளீஸ் ” என்று வாணி சொல்ல அதை கேட்ட மாயாவிற்கோ கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
"நீ இப்படியே பேசிகிட்டே இரு. அப்பதான் உன்னுடைய இன்னொரு கையையும் அவன் வந்து உடைச்சுட்டு போக வசதியா இருக்கும்” – மாயா
மாயா அப்படி சொன்னதும் "அக்கா!" என்று அதிர்ச்சியில் கத்தினாள் வாணி. வாணி அப்படி கத்தியதும் மாயா அமைதியாகி அவளின் அருகில் அமர்ந்து அவளது கைகளையும் அவளது முகத்தையும் பார்த்தபடியே மெதுவாக பேச ஆரம்பித்தாள்.
"இங்க பார் வாணி. நீ வாழ்ந்து தான் ஆகணும். நீ வாழ்ந்தா தான் அவன் சாக முடியும்!" என்று மாயா எதையோ நினைத்துக் கொண்டு சொல்ல அதை கேட்ட வாணி சற்று நேரம் அமைதியாக இருந்தாள்.
வாணியின் அமைதியை கண்ட மாயா அவள் அருகில் அமர்ந்து அவளது தோளில் கை போட்டபடியே பேச ஆரம்பித்தாள். "வாணி.! நடந்ததை நினைத்து கவலைப்பட்டுக்கிட்டு அமர்ந்து இருந்தா எதுவும் மாறப் போவது இல்லை.. நான் சொல்றதை கேள். நீ உன்னை திடப்படுத்திக்கோ! அப்ப தான் அவனை நாம் அழிக்க முடியும் "என்று மாயா சொல்ல வாணியின் முகம் சற்றுத் தெளிந்தது.
அவள் முகம் தெளிந்ததை பார்த்த மாயா "குட்.! அப்படியே இந்த கசாயத்தை குடிச்சிடுமா! " என்று சொல்லிக் கொண்டே கசாயத்தை அவளிடம் நீட்டினாள்.
ஆனால் இந்த தடவை மறுப்பேதும் சொல்லாமல் கசாயத்தை குடித்துவிட்டாள் வாணி. வாணி கசாயத்தை குடித்ததும் அந்த டம்ளரை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாள் மாயா.
மாயா சென்றதும் தன் கண்ணாடியை கழட்டி தன் கண்களை தடவிப் பார்த்தாள் வாணி. அவள் கண்களில் ஒரு கண் முற்றிலும் எரிந்து காணப்பட்டது. தன் கண்களை தடவிப் பார்த்தவளின் முகம் மிகவும் வருத்தமடைந்தது.
*****
அந்த மாணவியர் தங்கும் விடுதியை விட்டு வந்து கொண்டிருந்தனர் கனகாவும், நந்தவர்மனும். நந்தவர்மன் ஏதோ யோசனையில் வர, கனகா அவனையே பார்த்துக் கொண்டு அமைதியாக அவனோடு நடந்து வந்து கொண்டிருந்தாள்.. ஆனால் அந்த அமைதியை கலைத்தது நந்தவர்மன் தான்,
" மிஸ் கனகா! எதுக்கு என்னையவே வச்ச கண் வாங்காம பார்த்துகிட்டே வரீங்க. உங்களுக்கு என்கிட்ட எதுவும் கேட்கணும்னா தாராளமா நீங்க கேட்கலாம்" - நந்தவர்மன்
நந்தவர்மன் அப்படி சொன்னதும் தன் தைரியத்தை வரவழைத்து பேச ஆரம்பித்தாள் கனகா.
" சார்! அது வந்து..." என்று அவள் தயங்க, " ம்ம்ம் கேளுங்க என்று நந்தவர்மன் சொன்னதும் கனகா ஆரம்பித்தாள்.
" சார்! அந்த வார்டன் எதனால் இறந்திருப்பாங்க சார்? யார் அவங்களை கொன்றிருப்பாங்க? " – கனகா.
" தெரியல! யார் கொன்னாங்கனு இனி மேல் தான் கண்டுபிடிக்கணும். ஆனால் அவங்க இறந்து போயிட்டாங்கனு தெரிஞ்சும் அவங்களை கத்தியால பல தடவை குத்தி இருக்கான் கொலையாளி. இதை பார்க்கும் போது இது கண்டிப்பா இது பகை தீர்க்க நடந்த கொலையா இருக்கலாம் னு எனக்கு தோணுது " – நந்தவர்மன்.
" ஓ அப்படினா! வார்டனால பாதிக்கப்பட்ட யாரோ தான் இந்த கொலையை செஞ்சிருக்கணும்" – கனகா
"ம்ம்ம் யூ ஆர் கரெக்ட். பரவாயில்லையே உனக்கு கூட கொஞ்சம் அறிவு வேலை இருக்கு." என்று அவளை பாராட்டியவன் ஒரு புகைபடத்தை தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்து அவளிடம் காட்டினான்.
அந்த புகைபடத்தை பார்த்த கனகா "சார்! இது... " என்று அவள் இழுக்க நந்தவர்மன் அவளிடம் அந்த புகைப்படத்தைகாட்டி விளக்கம் சொல்ல ஆரம்பித்தான்.
அந்த புகைபடத்தில் இறந்து கிடந்த வார்டனின் அருகில் ஒரு பேப்பர் கிடந்தது. அந்த பேப்பரில் இறப்பதற்கு முன் தன் ரத்தத்தால் எதையோ எழுதியிருந்தார் வார்டன்.
அதில் ‘10008716’ என்று நம்பர் ஒன்று எழுதப்பட்டிருந்தது. அதை பார்த்தவள் குழப்பமாக நந்தவர்மனைப் பார்த்தாள்.
"சார்! இது என்ன நம்பராக இருக்கும்? பார்த்தா போன் நம்பர் மாதிரியும் தெரியல?" – கனகா.
"ம்ம்ம்... அதை தான் நானும் யோசிச்சுட்டு இருக்கேன்., ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நாம இந்த நம்பரை கண்டுபிடிச்சுட்டோம்னா கொலையாளியை நாம ஈஸியா ரீச் பண்ணிடலாம் " என்று அவன் சொல்ல அதை கேட்ட கனகா சம்மதமாக தலையசைத்தாள்.
" அப்புறம் இன்னொரு சந்தேகம் சார் " - கனகா.
"ம்ம்ம் சொல்லுங்க சார்" - நந்தவர்மன்.
"சார்! நான் சாதாரண கான்ஸ்டபிள்.. என்கிட்ட போய் நீங்க இப்படி கேஸ் பற்றிலா டிஸ்கஸ் பண்றது ஆச்சரியா இருக்கு" - கனகா.
" ம்ம்ம் ஐ நோ! உங்களுக்குள்ள ஒரு தேடல் இருக்கு தெரிஞ்சுக்கணும்னு ஒரு ஆர்வம் இருக்கு. அதான் உங்ககிட்ட சொல்றேன். ஐ ஹோப் யூ அண்டர்ஸ்டாண்ட்! " என்று சொல்லிவிட்டு அவன் முன்னால் செல்ல கனகா அவனை மெச்சியபடியே அவன் பின்னால் சென்றாள்.
எண்கணின் குறீயிட்டின் உள்ளே கொலையாளியின் முகக் குறீயிடு.
பகையை தீர்க்கும் முன் காவலன் குறீயீட்டினை கண்டிடுவானா? கண்டிடுவாளா?
வருவாள்