பகை 2
சிவப்பு நிற உடையை உடுத்திக் கொண்டு, அதன் மேலே கருப்பு நிறத்திலான பெரிய அங்கி ஒன்றை அணிந்து கொண்டு, முகத்தில் கண்கள் மட்டும் தெரியும் வண்ணம் மற்ற பாகங்கள் துணி கொண்டு மறைக்கப்பட்டு, தன் கைககளில் கத்தி ஒன்றை ஏந்திக் கொண்டு அந்த விடுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது உருவம் ஒன்று.
அந்த உருவத்தின் கண்களோ வேட்டை நாயின் வெறியை பிரதிபலித்தது . அந்த கண்களை சற்று உற்று நோக்கினால், அவை ஒரு பெண்ணின் கண்களை போன்றிருந்தது.
இருளில் சென்று கொண்டிருந்தவள் அந்த விடுதியின் முன் சென்று நிற்க, அந்த விடுதியை காவல் காத்துக் கொண்டிருந்தவனோ உட்கார்ந்தபடியே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.
அவனை எழுப்பாமல் மெதுவாக அவனை தாண்டிச் சென்றவள், விடுதிக்குள் சென்று ஒரு அறையின் முன் நின்று கதவைத் தட்டியவள், அவர்கள் கதவை திறப்பதற்குள் தன் கை விரல்கள் ஒவ்வொன்றையும் மடக்கி மடக்கி விரித்தாள். அவளது பொறுமையை சற்று நேரம் சோதித்துவிட்டு கதவை திறந்தார் ஒரு பெண்மணி.
அந்த பெண்மணி கதவை திறந்து 'யார்?' என்று அங்கு நின்றவளைப் பார்த்து கேட்டது தான் தாமதம், பெண்ணவள் அவரது வாயை பொத்திக் கொண்டு அவரை உள்ளே இழுத்துச் சென்றுவிட்டாள்.
உள்ளிருந்து சற்று நேரத்தில் திரும்பி வெளியில் வந்தவள் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு தன் கைகளில் வழிந்த ரத்தத்தை அது கீழே வழிவதற்குள் வேகமாக தன் கையில் இருந்த துணி கொண்டு தன் கைகளை வேகமாக சுற்றிக் கொண்டு யாரும் பார்ப்பதற்குள் அந்த இடத்தைவிட்டு அகன்றாள்.
*****
தன் அறையில் குளித்துவிட்டு பேண்ட் மற்றும் சட்டை அணிந்து கொண்டு கண்ணாடியில் தலையை வாரிக் கொண்டிருந்தான் அமுதன்.
கண்ணாடியில் தன் தலையை வாரி முடித்தவன் அருகில் இருந்த மேஜையில் இருந்த அந்த கோட்டை அணியாமல் தன் கையில் எடுத்துக் கொண்டு வெளியில் வந்து அங்கிருந்த உயர்ந்த ரக காரில் ஏறினான்.
காரில் ஏறி அமர்ந்தவன் அதனை உயிர்பித்து தன் கைகளை ஸ்டீரிங்கில் தட்டியபடியே மிதமான வேகத்தில் சென்று கொண்டு இருந்தான். அரை மணி நேர பயணத்தின் பின் கார் அந்த உயர்ந்த கட்டிடத்தின் முன் சென்று நின்றது.
காரை நிறுத்திவிட்டு கட்டிடத்தின் உள்ளே நுழைந்தவன் தன் அறையை நோக்கி சென்று கொண்டிருக்க, அவனை வழியில் பார்த்த அனைவரும் அவனுக்கு வணக்கம் வைத்தனர். அனைவரின் வணக்கத்தையும் தன் ஒற்றை தலையசைப்பால் ஏற்று கொண்டவன், அவன் அறையின் முன் நின்று, தன் முன் இருந்த அமுதன் MBBS., பெயர் பலகையை தன் கைகளால் ஆசையோடு வருடினான்.
பின் ஊள்ளே சென்று தன் இருக்கையில் அமர்ந்ததும் அவள் அருகில் வந்து நின்றாள் செவிலி. அவளைப் பார்த்த அமுதன் கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தான்.
"மிஸ் ஷீலா! அந்த பத்தாம் நம்பர் பேசண்ட்டிற்கு டிரிப்ஸ் போட்டாச்சா?" -அமுதன்.
" எஸ் டாக்டர்!" - ஷீலா.
" அந்த பெரியவர்க்கு பிபி, பிரஷர் செக் பண்ணியாச்சா?" - அமுதன்.
" எஸ் டாக்டர்! எவிரிதிங் நார்மல்" - ஷீலா.
"ஓ.பி ல எத்தனை பேசண்ட்ஸ் வெயிட் பண்றாங்க?" - அமுதன்.
"30 பேர் சார்..." - ஷீலா.
"ஓ! ஏன்? முதலலேயே எனக்கு போன் பண்ணி இன்டிமேட் பண்ணல?" என்று நர்சை பார்த்து கத்தினான்.
"உங்களுக்கு போன் பல தடவை பண்ணேன் சார். ஆனால் உங்க போன் நம்பர் அவுட் ஆஃப் கவரேஜ்னு சொல்லுச்சு சார்.." என்றதும்,
சற்று நேரம் எதையோ யோசித்த அமுதன் "ஓ.. சரி.. ஷீலா 5 மினிட்ஸ் கழிச்சு பேசண்ட்ஸை வரச் சொல்லுங்க" என்று அவன் சொல்லிவிட்டு அங்கிருந்த மீன் தொட்டியின் அருகே சென்று நின்றதும்,
"ஓகே சார்..." என்று ஷீலா தலையசைத்துவிட்டு வெளியே சென்றாள்.
அவள் சென்றதும் சற்று நேரம் அந்த மீன்களைப் பார்த்தபடியே தன் தலையை முன்பக்கம், பின்பக்கம் அசைத்தவன் அதன்பின் தன் கண்களை மூடியபடியே நெற்றியை தன் கை கொண்டு குத்தினான்.
இப்படியாக ஐந்து நிமிடங்கள் அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டே கழிய, கதவை தட்டிக் கொண்டு நோயாளிகள் ஒருவரின் பின் ஒருவர் உள்ளே வர ஆரம்பித்தனர்.
அவர்களை பார்த்ததும் தன்னை மறந்தவன், அவர்களிடம் அன்போடும் சிரித்த முகமாகவும் பேசியபடியே அவர்களது நோயினை ஆராய்ந்தான். அவனது சிகிச்சையில் குணமடைந்த நோயாளிகள் பலர் .
-----
இப்ப அமுதன் பத்தி சின்ன இண்ட்ரோ பார்த்துடலாம். வாங்க அன்பர்களே!
அமுதன், இறுகிய கட்டமைப்பு கொண்ட உடல்வாகு, மீசை, தாடி என ஏதுமின்றி முகம் சவரம் செய்யப்பட்டு, தாடியின்றி சாக்லேட் பாய் என்று கூறும் அளவிற்கு அழகன். ஒரு தலைசிறந்த மருத்துவன். ஆரம்பத்தில் சிறிய அளவிலான கிளினிக் ஒன்றை வைத்து நடத்திக் கொண்டு வந்தவன் இப்பொழுது பெரிய அளவில் மருத்துவமனை ஒன்றினை வைத்து அனைவருக்கும் சிறந்த முறையில் வைத்தியம் பார்த்துக் கொண்டு வருகிறான்.
இப்ப இங்க வாங்கய்யா.
-----
அன்று வந்த நோயாளிகளை பார்த்து முடித்த அமுதன் அருகிலிருந்த தன் பர்ச்சை எடுக்க முயல,அப்போது அதிலிருந்து வளையல் துண்டுகள் கீழே விழுந்தன. அதை எடுத்து பார்த்தவனின் முகம் வருத்தமடைந்தது.
அவனையும் மீறி அவளது உதடுகள் சாரு… என்று முணுமுணுத்தது.
*****
தன் எதிரில் நின்று தன்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பவனை கண்ட கனகா வேகமாக எழுந்து, சலூயூட் அடித்தபடியே "குட்மார்னிங் சார்!" என்று அவனுக்கு வணக்கம் வைக்க, அதை கண்டவனுக்கோ கோபம் தலைக்கு ஏறியது.
"கான்ஸ்டபிள் கனகா, வணக்கம் வைக்குற நேரமா இது. யூ ஆர் 5 மினிட்ஸ் லேட். நீ டெய்லி லேட்டா தான் வருவியா? இன்னைக்கு ஒரு படி மேல போய் வீர சாகசம்லா பண்ற? என்ன இதெல்லாம்? என்று தன் ஜீப்பின் முன் உடைந்து தொங்கிக் கொண்டிருந்த பம்ப்பரை காட்டி அவன் அவளை திட்ட , கனகாவோ என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தாள். அவள் விழிப்பதை பார்த்தவன் மேலும் கத்தினான்.
" அப்பா செத்துட்டாங்கனு அவர் வேலையை வாங்கிட்டா மட்டும் பத்தாது. அதற்குண்டான வேலையையும் செய்யணும். வேலையில் சேர்ந்து என் கழுத்தை அறுக்கனே வந்திருக்குதுங்க" என்று கனகாவை திட்ட, அதை கேட்ட கனகாவோ வருத்தமடைந்தாள்.
அவள் வருத்தத்தை பார்த்தவன் அருகில் இருந்த ஏட்டைப் பார்த்து " ஏட்டு! அந்த ***மாணவியர் விடுதிக்கு அவங்களை வரச் சொல்லுங்க" என்று சொல்லிவிட்டு அவன் தன் ஜீப்பில் ஏற. கனகாவும் வேகமாக ஜீப்பின் பின்னால் ஏறி அமர்ந்தாள். திரும்பவும் தாமதமாக சென்று அவனிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள அவள் தயாராக இல்லை.
கனகாவையும், ஏட்டு பெருமாளையும் ஏற்றிக் கொண்டு அந்த மாணவியர் விடுதியை நோக்கி தன் வண்டியை செலுத்தினான் அவன், நந்தவர்மன்., அசிஸ்டண்ட் கமிஷ்னர் ஆப் போலீஸ் .
-----
இப்ப நந்தவர்மன்,கனகா பத்தி சின்ன இண்ட்ரோ பார்த்துடலாம். வாங்க அன்பர்களே!
நந்தவர்மன் காவல் அதிகாரிக்கு ஏற்ற உடலமைப்போடும், நடை பாவனைகளில் கண்டிப்போடும் நேர்மை தவறாத ஒரு சிறந்த கமிஷ்னராக விளங்கினான்.
அவனுக்கு கீழ் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள் கனகா. கனகாவின் தந்தை கேஸ் ஒன்றில் தீவிரவாத அமைப்பினால் சுட்டுக் கொல்லப்பட அந்த வேலை வீட்டில் மூத்த வாரிசான கனகாவிற்கு கொடுக்கப்பட்டது.
மென்மையின் இலக்கணமாக, பயத்தின் முழு உருவமாக இருந்த கனகா குடும்ப சூழ்நிலை காரணமாக தன்னை மாற்றிக் கொள்ள முயன்றாலும் நந்தவர்மன் அவளை திட்டிக் கொண்டே இருந்தான்.
சரி.. சரி.. கனகாவையும், நந்தவர்மனை பற்றிய அறிமுகம் பார்த்தாச்சு. கதைக்குள்ள போகலாம் அன்பர்களே.
-----
கனகாவை அழைத்துக் கொண்டு அந்த விடுதியை நோக்கி பயணப்பட்டவன் சற்று நேரத்தில் அந்த மாணவியர் தங்கும் விடுதியின் முன் வண்டியை நிறுத்தினான்.
வண்டியை நிறுத்திவிட்டு இறங்கியவன் கனகாவைப் பார்க்க, அவனது பார்வையின் பொருளை படித்த கனகா வேகமாக விடுதியின் உள்ளே சென்றாள். உள்ளே சென்றவள் சற்று நேரத்தில் வெளியே வர, அங்கு ஆம்புலன்ஸும் வந்து நின்றது.
அதை தொடர்ந்து அந்த விடுதியின் வார்டன் வண்டியில் ஏற்றப்பட, கனகா நந்தவர்மன் அருகில் வந்தாள்.
"சார்!தூக்கு போட்டு தொங்கி இருக்காங்க. ஆனால் இது தற்கொலை மாதிரியும் தெரியுது. கொலை மாதிரியும் தெரியுது என்று அவள் சொல்ல, நந்தவர்மன் சற்று நேரம் யோசித்தான்.
"இதே மாதிரி தான போன வாரம் அந்த ****காலேஜ் வார்டன் இறந்து போனாங்க" நந்தவர்மன்
"எஸ் சார்" - கனகா.
"சோ! இது தற்கொலையல்ல! கொலை. விரைவில் இதை பூருவ் பண்றேன் என்று அவன் சொல்ல கனகா தலையசைத்தாள்.
*****
அந்த அறையில் கண் மூடி கிடந்தவனோ எழுந்து தன் கையில் இருந்த மாத்திரை டப்பாவை தூக்கி எறிந்து
"மை விழி! மைவிழி!" என்று பிதற்ற சற்று நேரத்திற்குள் அவன் கையில் நடுக்கம் ஏற்பட, வேகமாக தன் காரை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.
வெளியே சென்றவன் காரை இலக்கற்று ஒட்டிக் கொண்டிருக்க, அவன் கண்களில் விழுந்தாள் ஒரு பெண். அந்த பெண்ணை பார்த்ததும் அவனின் கைகளின் நடுக்கம் குறைய. "மைவிழி" என்று அழைத்துக் கொண்டே அந்த பெண்ணின் அருகில் வண்டியை நிறுத்தினான் அவன்.
தீர்ப்பாள்.