dharshini chimba
Saha Writer
- Messages
- 308
- Reaction score
- 228
- Points
- 43
வணக்கம் ப்ரெண்ட்ஸ்!
வண்ணங்கள் போட்டிக்கான என் இரண்டாவது கதை இது, "பைந்தமிழின் தீந்தமிழ்"
படித்துவிட்டு தங்களின் கருத்துகளை கண்டிப்பாக பகிரவும்...
***
"டேய்! நல்லா யோசிச்சிட்டியாடா? அப்புறம் பின்னாடி எதுக்கும் வருத்தபடக்கூடாது" என்று தன்னையே பார்த்து கொண்டிருக்கும் நண்பனை முறைத்தான்.
"நான் நல்லா யோசிச்சிட்டேன் மஹி. இன்னும் ரெண்டு நாள்ல கிளம்புறேன். நீ தான் வீட்ல சமாளிக்கணும்" என்றான்.
"நீ போறது உன் வாழ்க்கையை தேடி கண்டுபிடிக்க. ஆனா, அதுக்கு ஏன்டா என் வாழ்க்கைய உங்க அப்பாகிட்ட அடகு வைக்க சொல்ற? என்னால முடியாது" என்றான் மஹி.
"அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ தான் சமாளிக்கனும். சமாளிக்கிற.." என்றான் தீந்தமிழ்.
பெருமூச்சோடு நண்பனை நோக்கி, "எனக்கு பயமெல்லாம் இல்ல.. கொஞ்சம் பயம் தான். உங்கப்பா மீசைய முறுக்கிட்டு ஒருமுறை முறைச்சா எனக்கு ரெஸ்ட்ரூம் வந்துரும். அதான் பார்த்தேன். நான் ஏதாவது உளர போறேன்னு, சரி. நீ இவ்ளோ தூரம் சொல்ற. பார்த்து பத்திரமா போய்ட்டு வா. ஊர் பேர் தெரியாத இடத்துக்கு போற. உஷாரா இரு." என்று சிரித்தான் மஹி.
"ரொம்ப தாங்க்ஸ் டா. நான் பார்த்துக்குறேன்." என்று நண்பனை ஆரத்தழுவி கொண்டான்.
"எல்லாம் எடுத்து வச்சிட்டியா பா?" என்று தன் பின்னாலேயே சுற்றி கொண்டிருக்கும் அன்னையை நின்று திரும்பி பார்த்து புன்னகைத்தான்.
"அம்மா! எனக்கு தேவையானது எல்லாம் எடுத்து வச்சிக்கிட்டேன். நான் ஒண்ணும் இன்னும் சின்ன புள்ளை இல்லம்மா." என்று சிணுங்கிக்கொண்டே அன்னையை கட்டிக்கொண்டான்.
"ஆமா. நீ எவ்ளோ வளர்ந்தாலும் எனக்கு சின்ன புள்ள தான்டா" என்று சிரித்தார்.
"சரி. அப்படியே வச்சிக்கோங்க" என்று தன் பெட்டியில் எல்லாவற்றையும் சரி பார்த்து கொண்டிருந்தான் தீந்தமிழன்.
"சரியா ஒரு மாசம் தான் டா. உன் வேலை முடிஞ்சி வந்தப்புறம், இத்தனை நாள் தள்ளி போட்ட மாதிரி இனி தள்ளி போட கூடாது. நான் பார்க்கிற பெண்ணை தான் கல்யாணம் பண்ணிக்கனும்" என்றார் அவனின் அன்னை அழுத்தமாய்.
'நான் என் வாழ்க்கையை தேடி போறேன்மா. பார்க்கலாம் நீங்க சொல்றது நடக்க போகுதா? இல்ல இத்தனை வருஷ என்னோட கனவு நினைவாக போகுதான்னு' என்று நினைத்தவன்.
"சரி மா. அதெல்லாம் போய்ட்டு வந்தப்புறம் பேசிக்கலாம்" என்றான் தீந்தமிழன்.
"சிவகாமி. இன்னும் என்ன பண்றிங்க உள்ள அம்மாவும் பையனும்? கேப் வந்துடுச்சு. அவங்கிட்ட சொல்லு." என்றார் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தபடி செய்திதாளை புரட்டிக்கொண்டே.
"உன் புருஷருக்கு கொஞ்ச நேரம் நாம பேசனா புடிக்காதே?" என்றான் கடுப்பாய்.
"டேய்! என்ன பேச்சு இது? அவர் உன்னோட அப்பா. அந்த மரியாதை மனசில இருக்கணும்" என்றார் முகவாட்டமாய்.
"சரிம்மா. இனி அப்படி சொல்லமாட்டேன். போதுமா? நீ உடனே முகத்தை தூக்கி நம்ம வீட்டு மோட்டுவலைல வச்சிக்காத" என்றான் கிண்டலாய்.
"கூட கூட பேசுற. வாய் மேலயே போடப்போறேன் பாரு" என்றார் சிவகாமி.
அழிந்து போனதாய் அனைவரும் கூறும் தன் வாழ்க்கை தொலைந்து தான் போயிருக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தன்னுடைய பயணத்தை தொடங்கினான் தீந்தமிழ்.
"தீனா பார்த்துக்கோடா. பத்திரமா போய்ட்டு வா" என்றான் மஹி.
"எல்லாம் நான் பார்த்துக்குறேன். நான் வரவரைக்கும் ஆஃபீசை பொறுப்பா பார்த்துக்கோ" என்றான் தீந்தமிழ் என்கிற தீனா.
"சரி டா" என்று பிரியா விடைகொடுத்து அனுப்பினான் நண்பனுக்கு மஹி என்கிற மஹேந்திரன்.
எந்த விமானத்தில் தன் வாழ்க்கை பறந்து போனது என்று நினைத்தானோ அதே விமானத்திலேயே பயணம் மேற்கொண்டான்.
பயணத்தில் அசதியில் அவனது விழிகளும் மெல்ல துயிலில் கரைந்தது.
**
"பாலா! என்னை கல்யாணம் பண்ணிபல்ல" என்பாள்.
"உன்னை மட்டும் தான் கல்யாணம் பண்ணிப்பேன்" என்று சிரிப்பான்.
"சத்தியமா?" என்பாள் நம்பாத தொனியில்.
"என் மேல சத்தியமா நீ மட்டும் தான் என் பொண்டாட்டி" என்று அவளுக்கு சத்தியமும் செய்தான்.
இரண்டு வாரங்கள் கழிந்தது.
"நான் தான் சொன்னேன்ல உன்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு. இப்போவாவது நம்புறியா?" என்று மணமக்களின் அலங்காரத்தில் மலராத மொட்டாய் தன் அறையில் அமர்ந்திருந்தவளின் முன் கன்னத்தில் குழிவிழ சிரித்தான் தீந்தமிழன்.
"எனக்கு தெரியும் பாலா. இருந்தாலும் அந்த மதன் இருக்கான்ல நீ தான் என் புருஷன்னு நான் சொன்னா நம்பவே இல்ல. அதெல்லாம் நடக்காது. சும்மா, அவன் பெருசானவுடனே அழகான பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிப்பான்னு சொன்னானா அதான் உன்கிட்ட அப்படி கேட்டேன். சாரி.... நீ கோவிச்சிக்காத." என்றாள் விழிகளை படபடக்கும் மின்மினி பூச்சியின் அசைவு கொண்டு.
"சரிடி,. வீடு" என்றான் தீந்தமிழ்.
"பாலா. நீயும் நானும் கல்யாணம் பண்ணவுடனே அவன்கிட்ட நீ சொல்லணும் சரியா? இவ தான் எப்பவும் என்னோட பைந்தமிழ். என்னோட பொண்டாட்டின்னு. சொல்றியா?" என்றாள் நம்பிக்கையோடு அதட்டும் உரிமையில் குழந்தை மனம் மாறாமல், திருமணமென்பது பொம்மைகள் விளையாட்டாய் எண்ணி. .
"ஹ்ம்.. சொல்றேனே" என்று அவளுடைய பாலாவும் சிரிக்க.
"பாலா!" என்று வெளியில் இருந்து அம்மா அழைக்கவும், "என்னை கூப்பிட்றாங்க பொண்டாட்டி நான் முதல்ல போறேன். நீ பின்னாடியே வா" என்று பால் மனம் மாறாமல் ஓடினான் பதிமூன்று வயதே நிரம்பிய தீந்தமிழன்.
பாலன், பைந்தமிழின் பெற்றோர் இருவரும் தலைமுறைகளாய் தொடர்ந்து வந்த நெருங்கிய குடும்ப சிநேகிதர்கள்.
பிறந்ததில் இருந்தே விரல் பிடித்து சுற்றி வந்தனர் பாலனும் பைந்தமிழும்.
மற்றவரின் பேச்சோ பெற்றவரின் பேச்சோ இருவரின் மனதிலும் ஆணித்தரமாய் வேரூன்றியது ஒருவருக்கு ஒருவர் தான் என்று.
பால்ய விவாகம் ஒழிந்ததாய் நாம் கூறிக்கொண்டிருந்த வேளைகளில் இரு வீட்டு தாத்தாகளும் பாட்டிகளும் தங்கள் பிள்ளைகளை சம்மதிக்க வைத்து "தீந்தமிழ் பாலன்- பைந்தமிழ்" பால்யவிவாகம் நடந்து முடிந்தது.
பத்து வயது நிரம்பிய பைந்தமிழின் கழுத்தினில் திருமணம் என்ற பந்தத்தின் பொருள் முழுமையாய் விளங்கும் முன் இருவரின் முதல் எழுத்துகளும் பொருந்திய லாக்கெட்டுடன் இருந்த தங்கசங்கிலியை கழுத்தினில் அணுவித்து மனைவியாய் எற்றுக்கொண்டான் பாலன்.
வண்ணங்கள் போட்டிக்கான என் இரண்டாவது கதை இது, "பைந்தமிழின் தீந்தமிழ்"
படித்துவிட்டு தங்களின் கருத்துகளை கண்டிப்பாக பகிரவும்...
***
"டேய்! நல்லா யோசிச்சிட்டியாடா? அப்புறம் பின்னாடி எதுக்கும் வருத்தபடக்கூடாது" என்று தன்னையே பார்த்து கொண்டிருக்கும் நண்பனை முறைத்தான்.
"நான் நல்லா யோசிச்சிட்டேன் மஹி. இன்னும் ரெண்டு நாள்ல கிளம்புறேன். நீ தான் வீட்ல சமாளிக்கணும்" என்றான்.
"நீ போறது உன் வாழ்க்கையை தேடி கண்டுபிடிக்க. ஆனா, அதுக்கு ஏன்டா என் வாழ்க்கைய உங்க அப்பாகிட்ட அடகு வைக்க சொல்ற? என்னால முடியாது" என்றான் மஹி.
"அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ தான் சமாளிக்கனும். சமாளிக்கிற.." என்றான் தீந்தமிழ்.
பெருமூச்சோடு நண்பனை நோக்கி, "எனக்கு பயமெல்லாம் இல்ல.. கொஞ்சம் பயம் தான். உங்கப்பா மீசைய முறுக்கிட்டு ஒருமுறை முறைச்சா எனக்கு ரெஸ்ட்ரூம் வந்துரும். அதான் பார்த்தேன். நான் ஏதாவது உளர போறேன்னு, சரி. நீ இவ்ளோ தூரம் சொல்ற. பார்த்து பத்திரமா போய்ட்டு வா. ஊர் பேர் தெரியாத இடத்துக்கு போற. உஷாரா இரு." என்று சிரித்தான் மஹி.
"ரொம்ப தாங்க்ஸ் டா. நான் பார்த்துக்குறேன்." என்று நண்பனை ஆரத்தழுவி கொண்டான்.
"எல்லாம் எடுத்து வச்சிட்டியா பா?" என்று தன் பின்னாலேயே சுற்றி கொண்டிருக்கும் அன்னையை நின்று திரும்பி பார்த்து புன்னகைத்தான்.
"அம்மா! எனக்கு தேவையானது எல்லாம் எடுத்து வச்சிக்கிட்டேன். நான் ஒண்ணும் இன்னும் சின்ன புள்ளை இல்லம்மா." என்று சிணுங்கிக்கொண்டே அன்னையை கட்டிக்கொண்டான்.
"ஆமா. நீ எவ்ளோ வளர்ந்தாலும் எனக்கு சின்ன புள்ள தான்டா" என்று சிரித்தார்.
"சரி. அப்படியே வச்சிக்கோங்க" என்று தன் பெட்டியில் எல்லாவற்றையும் சரி பார்த்து கொண்டிருந்தான் தீந்தமிழன்.
"சரியா ஒரு மாசம் தான் டா. உன் வேலை முடிஞ்சி வந்தப்புறம், இத்தனை நாள் தள்ளி போட்ட மாதிரி இனி தள்ளி போட கூடாது. நான் பார்க்கிற பெண்ணை தான் கல்யாணம் பண்ணிக்கனும்" என்றார் அவனின் அன்னை அழுத்தமாய்.
'நான் என் வாழ்க்கையை தேடி போறேன்மா. பார்க்கலாம் நீங்க சொல்றது நடக்க போகுதா? இல்ல இத்தனை வருஷ என்னோட கனவு நினைவாக போகுதான்னு' என்று நினைத்தவன்.
"சரி மா. அதெல்லாம் போய்ட்டு வந்தப்புறம் பேசிக்கலாம்" என்றான் தீந்தமிழன்.
"சிவகாமி. இன்னும் என்ன பண்றிங்க உள்ள அம்மாவும் பையனும்? கேப் வந்துடுச்சு. அவங்கிட்ட சொல்லு." என்றார் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தபடி செய்திதாளை புரட்டிக்கொண்டே.
"உன் புருஷருக்கு கொஞ்ச நேரம் நாம பேசனா புடிக்காதே?" என்றான் கடுப்பாய்.
"டேய்! என்ன பேச்சு இது? அவர் உன்னோட அப்பா. அந்த மரியாதை மனசில இருக்கணும்" என்றார் முகவாட்டமாய்.
"சரிம்மா. இனி அப்படி சொல்லமாட்டேன். போதுமா? நீ உடனே முகத்தை தூக்கி நம்ம வீட்டு மோட்டுவலைல வச்சிக்காத" என்றான் கிண்டலாய்.
"கூட கூட பேசுற. வாய் மேலயே போடப்போறேன் பாரு" என்றார் சிவகாமி.
அழிந்து போனதாய் அனைவரும் கூறும் தன் வாழ்க்கை தொலைந்து தான் போயிருக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தன்னுடைய பயணத்தை தொடங்கினான் தீந்தமிழ்.
"தீனா பார்த்துக்கோடா. பத்திரமா போய்ட்டு வா" என்றான் மஹி.
"எல்லாம் நான் பார்த்துக்குறேன். நான் வரவரைக்கும் ஆஃபீசை பொறுப்பா பார்த்துக்கோ" என்றான் தீந்தமிழ் என்கிற தீனா.
"சரி டா" என்று பிரியா விடைகொடுத்து அனுப்பினான் நண்பனுக்கு மஹி என்கிற மஹேந்திரன்.
எந்த விமானத்தில் தன் வாழ்க்கை பறந்து போனது என்று நினைத்தானோ அதே விமானத்திலேயே பயணம் மேற்கொண்டான்.
பயணத்தில் அசதியில் அவனது விழிகளும் மெல்ல துயிலில் கரைந்தது.
**
"பாலா! என்னை கல்யாணம் பண்ணிபல்ல" என்பாள்.
"உன்னை மட்டும் தான் கல்யாணம் பண்ணிப்பேன்" என்று சிரிப்பான்.
"சத்தியமா?" என்பாள் நம்பாத தொனியில்.
"என் மேல சத்தியமா நீ மட்டும் தான் என் பொண்டாட்டி" என்று அவளுக்கு சத்தியமும் செய்தான்.
இரண்டு வாரங்கள் கழிந்தது.
"நான் தான் சொன்னேன்ல உன்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு. இப்போவாவது நம்புறியா?" என்று மணமக்களின் அலங்காரத்தில் மலராத மொட்டாய் தன் அறையில் அமர்ந்திருந்தவளின் முன் கன்னத்தில் குழிவிழ சிரித்தான் தீந்தமிழன்.
"எனக்கு தெரியும் பாலா. இருந்தாலும் அந்த மதன் இருக்கான்ல நீ தான் என் புருஷன்னு நான் சொன்னா நம்பவே இல்ல. அதெல்லாம் நடக்காது. சும்மா, அவன் பெருசானவுடனே அழகான பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிப்பான்னு சொன்னானா அதான் உன்கிட்ட அப்படி கேட்டேன். சாரி.... நீ கோவிச்சிக்காத." என்றாள் விழிகளை படபடக்கும் மின்மினி பூச்சியின் அசைவு கொண்டு.
"சரிடி,. வீடு" என்றான் தீந்தமிழ்.
"பாலா. நீயும் நானும் கல்யாணம் பண்ணவுடனே அவன்கிட்ட நீ சொல்லணும் சரியா? இவ தான் எப்பவும் என்னோட பைந்தமிழ். என்னோட பொண்டாட்டின்னு. சொல்றியா?" என்றாள் நம்பிக்கையோடு அதட்டும் உரிமையில் குழந்தை மனம் மாறாமல், திருமணமென்பது பொம்மைகள் விளையாட்டாய் எண்ணி. .
"ஹ்ம்.. சொல்றேனே" என்று அவளுடைய பாலாவும் சிரிக்க.
"பாலா!" என்று வெளியில் இருந்து அம்மா அழைக்கவும், "என்னை கூப்பிட்றாங்க பொண்டாட்டி நான் முதல்ல போறேன். நீ பின்னாடியே வா" என்று பால் மனம் மாறாமல் ஓடினான் பதிமூன்று வயதே நிரம்பிய தீந்தமிழன்.
பாலன், பைந்தமிழின் பெற்றோர் இருவரும் தலைமுறைகளாய் தொடர்ந்து வந்த நெருங்கிய குடும்ப சிநேகிதர்கள்.
பிறந்ததில் இருந்தே விரல் பிடித்து சுற்றி வந்தனர் பாலனும் பைந்தமிழும்.
மற்றவரின் பேச்சோ பெற்றவரின் பேச்சோ இருவரின் மனதிலும் ஆணித்தரமாய் வேரூன்றியது ஒருவருக்கு ஒருவர் தான் என்று.
பால்ய விவாகம் ஒழிந்ததாய் நாம் கூறிக்கொண்டிருந்த வேளைகளில் இரு வீட்டு தாத்தாகளும் பாட்டிகளும் தங்கள் பிள்ளைகளை சம்மதிக்க வைத்து "தீந்தமிழ் பாலன்- பைந்தமிழ்" பால்யவிவாகம் நடந்து முடிந்தது.
பத்து வயது நிரம்பிய பைந்தமிழின் கழுத்தினில் திருமணம் என்ற பந்தத்தின் பொருள் முழுமையாய் விளங்கும் முன் இருவரின் முதல் எழுத்துகளும் பொருந்திய லாக்கெட்டுடன் இருந்த தங்கசங்கிலியை கழுத்தினில் அணுவித்து மனைவியாய் எற்றுக்கொண்டான் பாலன்.