Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed மந்திர வியூகம் - Exclusive Tamil Novel

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
அழகான அன்பர்களுக்கு வணக்கம்,

உங்களுள் ஒருவளாக வாசகியாக இருந்த நான் எழுத்தாளராக மாறி இருக்கேன் எதுக்கும்மா உனக்கு இந்த தேவையில்லாத வேளையினு நீங்க நினைக்கிறது எனக்கு தெரியுது என்னங்க பண்ண 2019 ஒண்ணத்தையும் கிழிக்கல 2020. லயாவது ஏதாவது கிழிக்கலாம்னு உள்ளுக்குள்ள ஓரே நச்சரிப்பு அதான் இந்த முடிவு என்னையும் ஓர் எழுத்தாளரா அங்கிகாரம் கொடுப்பீங்கனு நம்புறேன்

நன்றி நித்திமா எனக்கு ஓர் இடம் கொடுத்ததுக்கு

புது வருடமே வருக

நிம்மதியை தருக

மகிழ்ச்சியில் திளைக்க

வாழ்வுதனில் சிறக்க

வளத்தினை கொடுக்க

என்று அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து கூறி என் முதல் முயற்சியாக சகாப்தத்தில் என் எழுத்து பணியில் முதல் அடி எடுத்து வைக்கிறேன் . விரைவில் அத்தியாயம் பிரண்ட்ஸ்

உங்களுள் ஒருவள் ஹனிகீதன்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் :1

பனி மூட்டத்தின் மத்தியில் இராட்சஷ கோபுரங்களின் இடையில் மாணிக்க கற்களாகவும், பவளக் கற்களாகவும் அலங்கரிக்கப்பட்ட கதவு வாயிலில் அசுரன் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

அவன் தன் நீண்ட கடாயுதம் கொண்டு வருபவரை தடுத்து நிறுத்தி அவர்களிடம் ஏதோ கேட்டு எழுதிக் கொண்டிருந்தான் .


வரிசை நீண்டு பலர் உள்ளேயும், வெளியேயும் சென்று கொண்டிருக்க இறுதியில் நின்று கொண்டிருந்தான் அவன்.

அவன் அசுரன் அருகில் சென்றதும் அசுரன் அவனிடம் பேசினான்.

"வாரும் வேந்தளே! தீரரே! எமலோகத்திற்கு உம்மை வரவேற்கிறோம் "என்று அசுரன் கூற முழித்தான் காளை அவன் .


“என்னது எமலோகமா என்ன இவ்வளவு கேவலமா இருக்கு”.

You see mr.அசுரன் நீங்க ஏதோ ஆள் மாற்றி கூட்டிட்டு வந்துட்டீங்கனு நினைக்கிறேன்.

இப்ப என்ன உங்களுக்கு ஒரு ஆள் தான வேணும் என் நண்பன் இருக்கான் எனக்காக எதையும் செய்வான் Afterall உயிர் தான அதை தர மாட்டானா So me Going he coming வரட்டா Mr.அசுரன் என்று கூறிவிட்டு ஓட்டத்திற்கு அவன் தயாராக அப்போது ஓர் அசரீரி ஒலித்தது.


“வேந்தளே!தீரரே! வந்துவிட்டீரா! உம்மை காண பல ஜென்மங்கள் கடந்தும் காத்திருக்க்றேன் நான் "என்று கூறிய படி ஒரு கை நீண்டு அவனை பிடிக்க வர அலறிக் கொண்டே ஓடினான் தீரன்.

அதுவும் துரத்தி அவனை பிடித்து விட அதன் கைகளிலிருந்து தப்பிக்க அதன் கையை தீரன் பிடித்து முறுக்க “ அம்மா “என்ற கூச்சலில் கண் விழித்தான் தீரன்.


“அம்மா !அம்மா! என்ற சத்தம் ரூமில் எதிரொலிக்க தீரன் சுற்றி முற்றி பார்த்துவிட்டு பேசினான்.

"என்னடா இது சத்தம் மட்டும் வருது ஆளக் காணோம்" என்று தீரன் மேலே பார்த்தபடி பேச

“டேய் எரும கீழ பாருடா “ என்று அவன் நண்பன் லிங்கேஷ் கத்த சட்டென்று கீழே பார்த்தான் தீரன்.

அங்கு கட்டிலின் அடியில் தன் கைகளை பிடித்தபடி லிங்கேஷ் கத்திக் கொண்டிருந்தான்.

லிங்கேஷைப் பார்த்ததும் தீரன் சிரித்தான்

“டேய் மச்சி அங்க என்னடா பண்ணிக்கிட்டு இருக்க என்று தீரன் கேட்க

“ஹம்ம்ம் வரவு செலவு கணக்கு பார்க்கிறேன் என்று லிங்கேஷ் கூற

” மச்சி light போட்டு பார்டா அப்புறம் கண்ணு கேட்டு போய்ரும் "என்று தீரன் கூற

"நாயே தள்ளிவிட்டுட்டு ஏகத்தாளமா செய்ற அய்யோ என் கை" என்று கைகளை பிடித்துக் கொண்டே லிங்கேஷ் தீரனைப் பார்த்து கத்தினான் .

தீரன் தன் காதுகளை தேய்த்து விட்டுக் கொண்டே லிங்கேஷிடம் பேசினான்

“கத்தாத மச்சான் காது வலிக்குது ஏதோ கனவுல Confuse ஆகி இப்படி பண்ணிட்டேன் சாரிடா மச்சி" என்று தீரன் சொல்ல

லிங்கேஷ் கத்தினான்செய்றத செஞ்சிட்டு சாரி வேறயா அப்படி என்னடா கனவு கண்ட என்று லிங்கேஷ் கேட்க கனவினை சொன்னான் தீரன்.

தீரன் கனவினை கேட்ட லிங்கேஷ் தீீரனை முறைத்தான்

“ஏன்டா அங்கேயும் என்னை கோர்த்து விட்ற, நல்லா வச்சி செய்றடா என்னை !"என்று லிங்கேஷ் புலம்பிக் கொண்டே மேலே தொடர்ந்தான்.

“ நீ வர வர சரியில்ல மச்சி ! நீயா பேசுற, கத்துற" என்று லிங்கேஷ் கூற

“விட்றா! விட்றா " ஏதோ கனவு அதுக்குப்போய் என்று கூறிய தீரன் முகம் சீரியசாகியது.

“மச்சான் என்னை யாரோ கூப்பிடுறாங்கடா அடிக்கடி ஒரு வாய்ஸ் என் கூட பேசுதுடா" என்று லிங்கேஷிடம் கூற

, “ஆமா உன் செத்துப் போன ஆயா கூப்பிடுது போய் சாவு நானாவது நிம்மதியா இருப்பேன்" என்று லிங்கேஷ் கடுப்புடன் கூற

“ஏய் ரொம்ப பேசுற நீ" என்று தீரன் கத்த லிங்கேஷ் தொடர்ந்தான்.

“ஆமா மச்சி கூப்பிடற வாய்ஸ் ஸ்வீட்டா இருக்குமா, பார்க்கிற மாதிரி இருக்குமா,பொண்ணு தான என்னை கோர்த்துவிடேன் .

உன் கிட்ட போய்இதையெல்லாம்

சொல்லிட்டு இருக்கேன் பாரு நான். நீ கோர்த்து விட மாட்ட பிரிச்சு வேனா விடுவ" என்று அலுத்துக் கொண்டான் லிங்கேஷ்


ஏன்டா ரொம்ப அலுத்துக்குற என்று தீரன் கூற லிங்கேஷ் தொடர்ந்தான்.

“மிலிட்டரி ஆபிசர் மாதிரி வெறப்பா போற உன் கூட சேர்ந்தா எவ என்னை திரும்பி பார்பா"

ஹம்ம்ம் எனக்கு இந்த ஜென்மத்தில் ஒரு தடவ கூட திருமணம் நடக்காது என்று ஏக்க பெருமூச்சு விட்டபடி லிங்கேஷ் கூற

" போதும் நிறுத்துறியா உன் பாட்ட போய் ஆபிஸிற்கு கிளம்பும் வழியப் பாரு" என்று தீரன் கூற

"ஆமா! ஆமா! கிளம்பனும் அப்புறம் திரும்பவும் கனவு கண்டு உன் கிட்ட அடி வாங்க நான் என்ன மடையனா "என்று கூறிக் கொண்டே பாத்ரூமில் புகுந்து கொண்டான் லிங்கேஷ் .

டேய் கொன்றுவேன்டா என்று தீரன் கத்த

இவர்கள் இங்கு கத்திக் கொண்டிருக்கட்டும் நாம போய் இவங்க அறிமுகப்படலத்தை பார்க்கலாம்.

தீரன் மற்றும் லிங்கேஷ் சென்னையில் புகழ்பெற்ற ஒரு I T கம்பெனியில் 6 லகர எண்ணில் சம்பாதித்து வருகின்றனர் .

தீரன் காந்தர்வன் - மீனாட்சி தம்பதியரின் தவபுதல்வன் .

படித்து முடித்துவிட்டு கிராமத்தில் சுற்றித் திரிந்தவனை காந்தர்வன் சென்னையில் உள்ள தன் நண்பன் குணசேகரன் கம்பெனியில் வேளைக்கு சேர்த்தார்.

இவனுக்கு ஒரு தங்கை குழலினி . பாசப்பிணைப்பில் வல்லவர்களான இவர்கள் கைகளில் தான் அதிகம் பேசியுள்ளனர்.


லிங்கேஷ் தீரனின் நண்பன் இப்பதைக்கு அவ்வளவுதான் இவனைப் பற்றி கூற முடியும்.

ஏன்னா சார்வாள் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லைங்க.

என்ன நடக்குது இங்க! ஆண்டவா இவங்க அடிக்கிற கூத்து இருக்கே அப்பப்பா பாத்ரூமில் இருந்து வெளிவந்த லிங்கேஷ் தீரனைக் கண்டு Tension ஆனான்.

"டேய் மச்சி என்னடா பன்ற மூஞ்சில கீரிம்அ அப்பி வச்சிருக்க ஏதோ சுவர்க்கு வெள்ளையடிக்கிற. மாதிரி , எதற்கு இந்த ஆர்ப்பாட்டம்" என்று லிங்கேஷ் நக்கலடிக்க தீரன் கடுப்பானான்.

"ஏய் என்னடா Overa பேசிட்டு இருக்க Comedian நீயே இவ்வளவு Makeup போடும்போது ஹீரோடா நான்" .

இதுகூட பண்ணலேனா எப்படிடா ?அதுமட்டும் இல்லைடா ஹீரோயின் Entry வேற இருக்காம் Next Scene la அதுக்குத்தான் இந்த பில்டப் என்று தீரன் கூற,

"காக்காக்கு என்ன தான் கலர் அடிச்சாலும் அது கொக்காக முடியாது So சீக்கிரம் கிளம்பி வெளிய வா உனக்காக Wait பண்றேன்" என்று கூறிவிட்டு சிட்டாக பறந்து விட்டான் லிங்கேஷ்.

"டேய் நாயே !உன்னை!" என்று கத்திய தீரன் சற்று நேரத்தில் கிளம்பி வெளியே வந்து கதவினை சாற்ற முயல அசரீரி ஒலித்தது.


“தீரா விரைந்து வா! உன் தேடலுக்கான வேளை தொடங்கிவிட்டது. தாமதிக்காதே! “ என்று அது கூற தீரன் சுற்றி சுற்றி பார்த்தான்யாரும்தென்படவில்லை அதனைக் கண்டு தீரன் திகைத்தான்.


ஆட்டிவிக்கிறான் ஈசன் அவன்அத னை ஊன் கண் கொண்டு பார்க்க முற்படுகிறான் பேதையவன் .எல்லாம் அவன் செயல்.

ஓம் நமச்சிவாய
வியூகம் தொடரும்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் 2

தீரன் , லிங்கேஷ் ஆபிஸிற்கு உள்ளே வந்ததும் பியூன் வேகமாக இவர்களை நோக்கி வந்தான்.

"சார் சார் இன்னைக்குமா லேட்! அம்மா வந்துட்டாங்க !"என்று பதட்டத்தோடு அவன் கூற தீரன் அதை கண்டு கொள்ளாமல் தன் கேபினை நோக்கி செல்ல லிங்கேஷ் பதறினான்.

"டேய் தீரா அப்பவே சொன்னேன் கேட்டீயா? பாரு இப்ப நல்லா மாட்டிகிட்டோம் பூலான் தேவி வந்துட்டா ,என்ன சொல்லப்போறாளோ?" என்று லிங்கேஷ் கூறியபடியே தீரன் பின் சென்றான்.

"மச்சி இன்னைக்கு10 மணிக்குள்ள ஆபிஸ் வந்தாச்சு அவ முன்னாடி வந்து உட்கார்ந்துட்டா அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது என்று தீரன் கத்திக் கொண்டே கூற லிங்கேஷ் அலறினான்.

"டேய் சவுண்ட குறை டா அவ காதுல கேட்க போகுது" என்று லிங்கேஷ் கூற

"அவ காதுல கேட்டா எனக்கு என்ன ? அவளுக்கு கேட்கணும் தான்டா கத்தி பேசுறேன் , ராங்கி என்ன செய்றானு நானும் பார்க்கிறேன் "என்று கூறிய தீரா பின்னால் திரும்பி பார்த்த படி மேலே தொடர்ந்தான் .

அப்புறம் மச்சான் காளையில் கிளம்பும் போது பூலான் தேவினு யாரையோ சொன்னியே, யார்டா அது ? என்று தீரன் கேட்க லிங்கேஷ் அவனை புரியாமல் பார்த்தபடியே கூறினான் . நம்ம மேடத்த தான் சொன்னேன். எதுக்குடா ? இப்ப அதை கேட்குற என்று லிங்கேஷ் கேட்க

தீரன் திரும்பிப் பார்த்தபடியே “ மச்சான் வாங்குறத வாங்கிட்டு சீக்கிரம் வாடா” என்று கூறி விட்டு செல்ல

" என்னாச்சு இவனுக்கு ! எதுக்கு இப்படி பேசிட்டு போகுது இந்த பயபுள்ள !ஏதோ சரியில்லையே ! "என்று நினைத்த வண்ணம் திரும்பிய லிங்கேஷ் எதிரில் இவர்களால் அர்ச்சனை செய்யப்பட்ட கனிஷ்கா காளி ரூபத்தில் நின்று கொண்டிருந்தாள். அவளை கண்டதும் லிங்கேஷ் அரண்டு பயத்தில் அவன் தந்தியடித்தபடியே தொடர்ந்தான்.

மேம் அது வந்து என்று லிங்கேஷ் ஏதோ சொல்ல வர,

“ you idiot வந்தது லேட் இதுல அரட்டை வேறயா எங்க அவன் என்று கூறியபடியே தீரனிடம் சென்றாள் கனிஷ்கா. இவ நம்ம ஹீரோகிட்ட போறதுக்குள்ள இவளை பத்தி பார்த்துட்டு வந்துரலாம்

கனிஷ்கா :

குணசேகரன் – லட்சுமி தம்பதியரின் ஒரே மகள். அவளின் தாய் அவளின் சிறு வயதில் இறந்துவிட தந்தையினால் தனியாக வளர்க்கப்பட்டாள் . தனியாக வளர்ந்ததால் ஆளுமையோடு , கோபம், திமிர் ,கர்வம் போன்றவை அதிகம் இருக்கும் இவளிடம் . கர்வம், அறிவு , தன்னம்பிக்கை மூன்றின் மொத்த உருவமானவள் கனிஷ்கா.

(இனி லிங்கேஷ் – லிங் எனவும் , கனிஷ்கா – கனி எனவும் சுருக்கமாக அழைக்கப்படுவர் வேற ஒண்ணும் இல்லை மக்காஸ் type பண்ண முடியல )

கனி தீரனை நோக்கி செல்ல லிங் பின் தொடர்ந்தான்.

தீரா தன் கேபினில் அமர அவன் எதிரில் நின்றாள் கனி .

“டைம் என்னாச்சு மேன்” என்று கனி கேட்க

“ஹம்ம்ம் நேத்து இந்நேரம்” என்று இடக்காக பதில் சொன்னான் தீரன்.

You idiot ஆபிஸ் க்கு லேட்டா வந்துட்டு திமிரா வேற பதில் சொல்றியா?

ஆபிஸ் க்கு வர நேரமா மேன் இது ? என்று கனி கேட்க

“ஏன் 10 மணி நல்ல நேரம் தான. நான் என்ன பொண்ணா பார்க்க வந்துருக்கேன் நேரம் பார்த்து வரதுக்கு . வேளை பார்த்துட்டு இருக்கேன் disturb பண்ணாம போறியா” என்று தீரன் பதில் சொல்ல

"Just Shut up man! இங்க நான் எம் . டி யா இல்ல நீ எம் .டி யா திமிரா பதில் சொல்ற என்று அவள் தீரனை கேட்க அவன் அவளை கண்டு கொள்ளவே இல்லை.

நான் உன் கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் பதில் சொல்லு மேன் " .

"ம்ச்ச் நீ தான் எம். டி !நானா எம் டி னு சொன்னேன்.அதான் லேட் ஆகிருச்சுல்ல விடேன் .சும்மா நொய்யு நொய்யுனு மனுசனை வேளை செய்ய விடாம torture பண்ணிகிட்டு" என்று தீரன் கடுப்புடன் கூற

கனிக்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது.

என்ன திமிரா ? என்னை எதுத்தா பேசுற இனி உன்னை வேளையில் வச்சுக்க முடியாது என் ருமிற்கு வந்து உன் resignation letter வாங்கிக்கோ மேன் என்று கோபமாக அவள் கூற ,

என்னை வேளையில் சேர்த்தது குணசேகரன் சார்.அவர் வந்து சொல்லட்டும் நான் கிளம்புறேன் . நான் ஒண்ணும் உன் புருசன் இல்லை நீ கூப்பிட்டவுடன் உன் பின்னாடி வரதுக்கு . பைக் ஒட்டிட்டு வந்தது களைப்பா இருக்கு அதனால எனக்கு பதில் என் செல்லம் வரும்.

போடா லிங் மேம் கிட்ட வாங்குறத வாங்கிட்டு வந்து சேரு என்று தீரன் சொல்ல கனி லிங்கை முறைத்தாள் . லிங் இவர்களிடம் மாட்டிக்கொண்டு விழித்தான். அவளை சமாதனப் படுத்தும் நோக்கில் லிங் பேசினான்.

மேம் நான் வேணா உங்க ருமிற்க்கு வரவா என்று அவன் கேட்க

“You Just shut up and get last man” என்று கோபத்தில் கத்திவிட்டு அவள் செல்ல லிங் தீரனிடம் வந்தான் .

ஏன் மச்சான் இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு கத்திட்டு போறா உனக்கு பதில் நான் வந்து லெட்டரை வாங்கிறேன்னு தானடா சொன்னேன் அதுக்கு எதுக்கு கத்திட்டு போறா .

இவ என்ன ஒண்ணு shutup னு சொல்றா இல்லை get last னு சொல்றா .வேற வார்த்தை இவளுக்கு தெரியாதோ என்று அதி முக்கியமான சந்தேகத்தை லிங் தீரனிடம் கேட்டான்.

மச்சி நீ இவ்வளவு தெளிவா அப்ப நீ சொல்லலடா அவ ருமிற்கு நீ வரென்னு சொன்னா தீட்டாம கொஞ்சுவாங்களா என்று தீரன் விவரிக்க லிங் பதறினான். அய்யோ சொதப்பிட்டேனா.

அய்யோ கடவுளே இவங்க ரெண்டு பேர்க்கு நடுவுல மாட்டிக்கிட்டு நான் முழிக்கிறேன்.என்னை காப்பாத்து ஆண்டவா என்று கடவுளுக்கு அவசரமாக ஒரு கோரிக்கை வைத்தான் லிங்.

கோபமாக ரூமிற்குள் சென்ற கனி மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள். “ராஸ்கல் என்ன பேச்சு பேசுறான் , எல்லாம் அப்பா கொடுக்கிற இடம், அவர் வரட்டும் இவனை ஒரு வழி பண்றேன்” என்று கனி தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

ஏன் தீரனுக்கு குணசேகரன் சார் இவ்வளவு support பண்றார் ?ஏன் பையன் இவ்வளவு துள்ளுறான் ? வாங்க பார்க்கலாம்.

குணசேகரன் – காந்தர்வன் சிறு வயது தோழர்கள் . குணசேகரன் சென்னையில் வந்து தொழில் தொடங்கியதில் இருந்து அவரின் வளர்ச்சிக்கு , அவரின் இந்த செல்வ நிலைக்கு காந்தர்வன் பங்கு மிகவும் பெரிது. ஆகையால் குணசேகரன் அவரின் மீது பெரும் மதிப்பு வைத்துள்ளார். தன் மகனை சென்னைக்கு அனுப்பி வைத்து தீரனை பார்த்துக்கொள்ளுமாறு காந்தர்வன் கேட்டுக் கொண்டதன்படி குணசேகரன் அவனை வேளைக்கு அமர்த்தியுள்ளார்.

குணசேகரனுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை தன் மகனை எந்த காரணம் கொண்டும் கிராமத்திற்கு அனுப்பக்கூடாது எனவும் , கவனமாக பார்த்துக் கொள்ளுமாறும் காந்தர்வன் அவரிடம் கேட்டுக் கொண்டது மட்டும் ஏன் என்று அவர்க்கு புரியவில்லை ஆயினும் தன் நண்பன் காரணமின்றி எதுவும் செய்ய மாட்டான் என்று கருதி இன்று வரை அவர் சொல்லியபடி தீரனை பார்த்து வருகிறார் குணசேகரன்.

காலத்தின் கணக்குதனை மனிதன் மாற்ற முயல்கிறான்.
விதியை மனிதனின் மதி வெல்லுமா ?
இருள் தன் சதியை தொடருமா ?
பதில் பின் வரும் அத்தியாயத்தில் .......


வியூகம் தொடரும்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம்: 3

பச்சை பசேல் என புல்வெளியும் அருகே வயல் வரப்புமாக , பசுமையாக, செழிப்போடு காட்சியளிக்கும் தேனி மாவட்டத்தின் ஒரு அங்கமான வடுகப்பட்டி கிராமம்

வானம் கருமை நிறம் பூசிக் கொண்டும், நிலவு தன் முகத்தை மேகப் போர்வைக்குள் பாதி மறைத்துக் கொண்டும் அழகோவியமாக காட்சியளிக்கும் பனி சூழ்ந்த,பொழுது புலராத அந்த அதிகாலை மார்கழி பொழுது!

குளிரின் குளுமையை பொருட்படுத்தாமல் காதுகளில் பஞ்சினை அடைத்துக் கொண்டு பெண்கள் வீட்டின் வாசலை வண்ண கோலங்களால் அழகாக்கிக் கொண்டிருந்தனர்.

வீடுகள் ஒவ்வொன்றும் கோலங்களால் ஜொலிக்க அந்த தெரு கடைசியில் உள்ள அந்த பிரம்மாண்ட வீட்டின் வாசல் மட்டும் கேட்பாரின்றி கிடந்தது.

வீட்டின் உள்ளே மெத்தையில் சுகமான துயிலில் முடங்கியிருந்தாள் காந்தர்வன் – மீனாட்சி தம்பதியரின் தவபுதல்வி, தீரனின் தங்கை குழலினி .

“ குழல் ! குழல் ! அம்மா குழல் எழுந்திரிமா ! “ என்று மீனாட்சியம்மா எழுப்ப சுகமாக தூங்கிக் கொண்டிருந்தாள் அவள்.

‘இவள இப்படிலாம் எழுப்பினா சரிப்பட மாட்டா உன்னை ‘

“அடியெ எழுந்துருடி மணி 5 ஆகிடுச்சு பொம்பள பிள்ளைக்கு என்ன தூக்கம் வேண்டிகிடக்கு " என்று கத்திக் கொண்டே குழலை அடித்து எழுப்பிக் கொண்டிருந்தாள் மீனாட்சி.

“அம்மா பிளிஸ் ! கொஞ்ச நேரம்மா! நைட் படுக்க லேட்டாகிடுச்சு ! கொஞ்ச நேரம் தூங்கிக்குறேன் மா” என்று கூறியபடியே தூங்க முயன்றாள் குழல்.

“மீனு விடுமா !அவதான் நைட் லேட்டா படுத்தேன்னு சொல்றால , விடு அவ தூங்கட்டும் தொந்தரவு பண்ணாதமா , அவ என்ன உன் பிள்ளை மாதிரியா சூரியன் உதித்து பல மணி நேரம் கழிச்சு எழும்ப” என்று மகளுக்கு பரிந்து பேசினார் காந்தர்வன்.

“இப்ப எதுக்கு என் பிள்ளையை இழுக்குறீங்க” என்று மீனாட்சி கடுப்புடன் கூற

“அது என்னடி உன் பிள்ளை ! நான் இல்லாம அவன் வந்துட்டானோ ! நீ மட்டும் தான் பெத்த மாதிரி பேசுற !” - காந்தர்வன்

“ஆமா நான் மட்டும் தான் பெத்தேன் . வாந்தி எடுத்து , தூக்கம் கெட்டு போய் , பிரசவ வலி தாங்கி நான் தான் பெத்தேன் . நீங்க என்னமோ பெத்த மாதிரி பேசிக்குறிங்க” – மீனாட்சி

“ ஹேய் அவனை பேசினவுடனே வந்துடுவியே வாரி சுருட்டிக்கிட்டு வக்காலத்து வாங்க. அவன் ஒரு முட்டாபய! ஏதோ நான் பார்த்து படிக்க வச்சு வேலைக்கு சேர்த்துவிடலேனா அவன் என்ன ஆவானோ “ – காந்தர்வன்




“சும்மா அவனை தீட்டிட்டு இருக்காதீங்க .நீங்க வேணா பாருங்க அவன் வருங்காலத்தில் சரித்திரம் படைக்கப் போறான் !அத நீங்க கண் குளிர பார்க்கத்தான போறிங்க” – மீனாட்சி

“ ஆமா சார் அப்டியே கிழிச்சுடுவாரு போடி அங்குட்டு அவன் சரித்திரம் படைக்கிறானோ இல்லையோ ! தரித்திரம் ஆகாம இருந்தா சரி “– காந்தர்வன்.

இவர்கள் இங்கு ஏட்டிக்கு போட்டி பேசிக் கொண்டிருக்க குழல் தான் விட்ட வேலையை தொடர்ந்தாள். அது தாங்க தூங்குற வேலைய

இவர்கள் சண்டையில் முதலில் சுதாரித்தது மீனாட்சிதான். அவர் திரும்பிப் பார்க்க குழல் தூங்கிக் கொண்டிருந்தாள். தன் பேச்சை நிறுத்திவிட்டு குழலிடம் சென்றார்.

“ஏய் எழுந்துருடி !” - மீனாட்சி

“ அம்மா இன்னைக்கு ஒரு நாள் தூங்கவிடேன் “ – குழல்

“ ஊரே பனிக்காத்த பொருட்படுத்தாம கோலம் போட்டுட்டு இருக்கு , உனக்கு என்ன தூக்கம் வேண்டிகிடக்கு ! எந்துருச்சு போய் கோலம் போடுடி ! நம் வீடு மட்டும் வெறிச்சோடி போய் இருக்கு என்று மீனாட்சி சலித்துக் கொள்ள

“ ம்ச் கத்தாதமா ! சரி நான் கோலம் போடுறேன் அதுக்கு முன்னாடி எனக்கு காபி வேணும்” என்று கொட்டாவி விட்டபடி சோம்பல் முறித்தாள் குழல்.

“அதலாம் முடியாது , போடி ! போய் பல் விளக்கிட்டு வா காபி தரேன் “என்று தன் பிடியில் உறுதியாக இருந்தார் மீனாட்சி

“ அம்மா பல் விளக்கிட்டு காபி குடிக்குறதுல என்ன கிக் இருக்குமா ! நீ இப்ப காபி தரப் போறியா இல்லையா ? “ – குழல் எகிற

“கிக் வேணுமா கிக்கு காலால வேணா தரேன் ஒரு kick , காபி தர மாட்டேன்டி !என்னடி செய்வ? “ என்று கோபத்தோடு அவர் கேட்க

“நீ தரலனா போ நான் போய் போட்டு குடிச்சுக்கிறேன் “ – குழல்

“ பொம்பள பிள்ளைக்கு இவ்வளவு வீம்பு இருக்கக் கூடாதுடி! போய் நான் சொன்னத செய் “- மீனாட்சி

“ அட போமா !” - குழல்

“ இப்டி எதுத்து பேசி, பிடிவாதம் பிடிக்காதடி ! போற வீட்டுல அடி வாங்குவ “ – மீனாட்சி

“ நான் எதுக்கு அடி வாங்கப் போறேன்மா. உனக்கு என் அப்பா கிடைச்ச மாதிரி எனக்கு ஒரு

கேணப் பையன் கிடைக்காமலா போயிடுவான் . நீ எனக்கு செய்ற வேலையெல்லாம் அவன்

எனக்கு செய்வான்மா’’ என்று கூறிவிட்டு சிட்டாகப் பறந்துவிட்டாள் அவள்.

‘’அடிக்கழுதை ! அப்பாவயா கேணப்பயன்னு சொல்ற உன்னை ! என்ன சொல்லிட்டு போறா பார்த்தீங்களா ? “ என்று காந்தர்வனிடம் முறையிட்டார் மீனாட்சி

“ விடு மீனு அவ உண்மையத்தான சொல்லிட்டு போறா . இன்னும் கொஞ்சம் நல்ல பொண்ணா பார்த்திருக்கலாம் நான் , ம்ம் ஏமாந்துட்டேன்” என்று கூறி காந்தர்வன் பெருமூச்சுவிட

“என்ன சொன்னீங்க இப்ப ? “என்று சொல்லி இடுப்பில் கை வைத்தபடி தன்னை முறைக்கும் மனைவியை பார்த்த காந்தர்வன்

“ சும்மாமா ! ஒரு பேச்சுக்கு சொன்னேன்மா . உனக்கு நிகர் நீதான் ! “என்று புகழ் ஆரம் சூட்ட தொடங்கிவிட்டார் அவர்.

ஆயினும் வீம்பாக இருந்தார் மீனாட்சி

“ தண்ணி கொண்டு வாமா ! நாக்கு வரண்டு போச்சு “ – காந்தர்வன்

“ இதுக்கு மட்டும் நான் வேணும் “ என்று நொடித்துக் கொண்டே காபி போட சென்றார் அவர்.

அவர் பின்னோடு சென்ற காந்தர்வன்

“மீனும்மா என் மேல் கோபமா ? “ என்று காந்தர்வன் கெஞ்ச

“பேசாதீங்க ! அவ தான் சின்ன பிள்ளை மாதிரி பேசினா நீங்களும் அவ கூட ஜோடி சேர்ந்துட்டு என்னை பேசுறீங்க “ என்று மீனாட்சி வருத்தப்பட

“ அப்டியில்லம்மா ! பெண் பிள்ளைங்க இங்க தான்மா நினைச்சத பேசிட்டு , செஞ்சிட்டு சந்தோசமா சுற்றி திரியுங்க அதுகளுக்குனு ஒரு கல்யாணம் நடந்ததுனா பொறுப்பா மாறிடுவாங்க . இங்கேயாவது அவ அவளா இருக்கட்டுமே” என்று அவர் கூற மீனு மொனமாக அதை ஆமோதித்தார்.

அவரே தொடர்ந்தார்.

“மீனு குழலுக்கு படிப்பு முடியப் போகுது அவளுக்கு வரன் பார்க்கலாம்னு நினைக்கிறேன், நீ என்ன சொல்ற “ - காந்தர்வன்

“ என்னங்க இது ? அதுக்குள்ள கல்யாணமா ! அவளுக்கு இன்னும் பொறுப்பு வரல இன்னும் 1 வருசம் போகட்டும். என் மகன தான் தூரமாஅனுப்பிட்டீங்க இவளாவது கொஞ்ச நாள் என் கூட இருக்கட்டுமே ! “ – மீனாட்சி

“நீ புரிஞ்சு தான் பேசுறியா ! ஜோசியர் என்ன சொன்னார்? குழலுக்கு சீக்கிரம் திருமணம் முடிச்சு வெளியூர் அனுப்பனும் இங்க வச்சிருக்கக் கூடாதுனு சொன்னார்ல மறந்துட்டீயா?” – காந்தர்வன்.

“ அதில்லைங்க ஜோசியம்லா ஒரு அளவு தாங்க நம்பணும் எல்லாத்தையும்மா நம்பிட்டு இருக்கிறது “ – மீனாட்சி

அப்டியில்லைமா சிவன் கோவிலுக்கு போயிட்டு வெளி வரும் போது அகோரி ஒருவர் என் கிட்ட வந்து பேசினார்.


“ இருள் சுழ்ந்து வந்து உயிர் தனை காவு வாங்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது! உன்னை காத்துக் கொள்வாயாக ! பிறந்த மக்கள் இருவரையும் வேறு இடம் அனுப்புவாயாக! "
என்று சொல்லிட்டு போயிட்டார் . அதான் யோசனையா இருக்கு என்று காந்தர்வன் சொல்ல

“ என்னங்க சொல்றிங்க ? ஏன் ? என் கிட்ட இத பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லல ?”பதறினார் மீனாட்சி

“ நீ இப்படி பயப்படுவேன்தான்மா சொல்லல . நீ பயப்படும்படி ஒண்ணும் நடக்காது நமது குல தெய்வம் நம்மளை காக்கும்மா “ என்று அவரை சமாதனப்படுத்தினார் காந்தர்வன்.

“ பெத்தது இரண்டு ஆனா பக்கத்துல வச்சு பார்த்துக்க முடியல , நீங்க என்ன , வெளியில போயிருவீங்க! நான் தான வீட்டுக்குள்ள தனியா இருக்கேன், அதான் நினைப்பு எல்லாம் பிள்ளைங்களயே சுற்றி வருது” என்று கூறியபடி தன் கலங்கிய கண்களை சேலை தலைப்பில் துடைத்துக் கொண்டே மேலே பேசினார் மீனாட்சி

“ தீரனை ஒரு எட்டு பார்த்துட்டு வந்துரலாமாங்க ? – மீனாட்சி

“ இல்லைமா நாம போனா பின்னாடியே வால பிடிச்சுட்டு வந்துருவான் அந்த பய . அங்க இருந்தா தான் பய உருப்படியா இருப்பான். கொஞ்ச நாள் பொறுத்துக்கோமா நானேஅவனை கூட்டிட்டு வரேன்” – காந்தர்வன்

கணவன் கூறிய நியாயத்தில் “ சரிங்க !” என்று ஏற்றுக் கொண்டார் மீனாட்சி

“ஏன்மா! நான் போய் அந்த அகோரிய பார்த்து இதுக்கு ஏதும் பரிகாரம் இருக்கானு கேட்டுட்டு வரவா” – காந்தர்வன்.

“ சரிங்க அப்படியே செய்ங்க ! எப்படியோ என் பிள்ளைகள் நல்லா இருந்தா சரி தாங்க “ என்று கூறிவிட்டு மீனாட்சி உள்ளே சென்றுவிட

காந்தர்வன் அகோரியை பார்க்க கிளம்பி வீட்டின் வாசல்படி தாண்டி அவர் வெளியே வர , அவரை நோக்கி மேகத்தின் மத்தியில் இருந்து ஒரு கை வந்து அவரை பிடிக்க முயல, வாசல்படி முன் நின்று இருந்தது ஒரு கருப்பு உருவம் . அதன் கண்களில் இருந்து வந்த வெளிச்சத்தின் தீட்சணம் தாங்காமல் கை தானாக மறைந்தது.

கை மறைந்ததும் அந்த கருப்பு உருவம் கல்லாக மாறி வாசல்படியில் படிகளாக மாறியது.


“ காவல் நிற்கும் தெய்வம் அனைத்து இடர்களுக்கும் துணை நிற்குமா ? தீமை அவற்றை வெற்றி கொள்ளுமா ! “
விடை விரைவில் ....

வியூகம் தொடரும்...
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் : 4

வடுகப்பட்டி கிராமத்திற்கு அருகில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற தனியார் கல்லூரியில் தன் இறுதியாண்டு படிப்பை படித்துக் கொண்டிருந்தாள் குழல் . குழல் அவள் தோழி ரூபாவோடு பஸ்சில் கல்லூரிக்குச் சென்று வந்து கொண்டிருந்தாள்

ரூபா , குழல் இருவரும் சிறு வயது தோழியர்கள் .ஒன்றாக பள்ளியில் படித்து இப்போது கல்லூரியிலும் ஒன்றாக சேர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அன்றும் கல்லூரிக்குச் செல்ல பேருந்து நிற்கும் இடத்திற்கு குழல் முன்னால் நடந்து சென்று கொண்டிருக்க , ரூபா பின்னால் அவள் பெயரை கத்திக் கொண்டே வந்தாள்.

“ குழல் ! குழல் ! அடியே நில்லுடி ! கூப்பிட்டுட்டே இருக்கேன் நீ கண்டுக்காம போனா என்ன அர்த்தம் ? “ என்று மூச்சு வாங்க குழல் முன் நின்று ரூபா கேட்க

“ ஹம்ம் நிற்க விருப்பம் இல்லைனு அர்த்தம்” என்று சொல்லிவிட்டு குழல் திரும்பி நடக்க

“ ஏன்டி ? “ – ரூபா

“ உனக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன் குழல்னு கூப்பிடாதேன்னு. .அப்டி கூப்பிட்டா நிக்க மாட்டேன்டி .” – குழல்

“ இது என்னடி வம்பா போச்சு குழல் தான உன் பெயர் . அப்டி கூப்பிடாம எப்டி கூப்பிடுறது ? “ – ரூபா

“ அப்டி கூப்பிடாதனு சொன்னா விடேன். சும்மா கேள்வி கேட்டுட்டு .இந்த பெயரை கேட்டாலே பத்திக்கிட்டு வருது “ – குழல்

“ ஏன்டி பேர்ல என்ன இருக்கு ? அழகான தமிழ் பெயர் தான “ – ரூபா

“ ஹம்ம் தமிழ் பெயரா ! உனக்கு நல்லா மாடர்னா பெயர் வச்சுருக்காங்கல நீ ஏன் சொல்லமாட்ட! . எனக்கு அப்டியா?” – குழல்

“ உங்க ஊர்ல ரூபா மாடர்ன் பெயராக்கும், சரிதான் ! “ - ரூபா

“ என் பெயர் பக்கத்துல உன் பெயர் மாடர்ன் தான்டி “- குழல்

“ அட ஆத்தா பெயர்க்கு ஒரு பிரசங்கமே பண்ணிட்டடி. இனி உன்னை குழல்னு கூப்பிடாம சண்டிராணினு கூப்பிடுறேன். சரிதானமா ? ” – ரூபா

“ ஏய் கொன்றுவேன்டி “ – குழல்

“ என்னம்மா அப்டியும் கூப்பிட விட மாட்ற இப்டியும் கூப்பிட விட மாட்ற ! சரி அதவிடு பரிட்சைக்கு படிச்சுட்டியா ? “ – ரூபா

“ம்ம் படிச்சிட்டேன், நீ?”- குழல்

“ நீ படிச்சுட்டேல நீ படிச்சா நான் படிச்ச மாதிரிமா “ –ரூபா

“ அடிப்பாவி! ஒழுங்கா படிச்சா என்னடி? எத்தனை நாள் தான் பிட் அடிச்சு , என்னை பார்த்து எழுதி பாஸ் ஆவ ? – குழல்

“ நான் படிக்கமாட்டேனா சொல்றேன்டி அதான் எனக்கு வரமாட்டிங்குதுல” – ரூபா

“ நீ திருந்தவே மாட்ட ! எக்கேடும் கெட்டுப் போ !” என்று திட்டிவிட்டு குழல் முன்னால் நடக்க ரூபா திரும்பிப் பார்த்தபடியே வந்தாள்.

அவள் பார்ப்பதை உணர்ந்த குழல் “ என்னடி திரும்பிப் பார்த்துக்கிட்டே வர “என்று ரூபாவிடம் கேட்க

“ இல்லை உன் ஆள் வரானானு பார்க்குறேன்” – ரூபா

“ ஏய் செருப்பு பிஞ்சுடும்டி உன் ஆள்னு சொன்னேனா ! அந்த நாய பத்தி பேசாத ! அந்த நாய் இப்ப எவ பின்னாடி சுத்திட்டு திரியுதோ ! “ – குழல்

ரூபா சிரித்துக் கொண்டே “ எங்கேயும் திரியல உன் பின்னாடி தான் திரியுது . “ அங்கே பார் என்று ரூபா கை காட்ட திரும்பிப் பார்த்தாள் குழல்.

அங்கு தூரத்தில் ஒரு இளைஞன் இவர்களை தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்.அவனை பார்த்ததும்

“ இவனை! இன்னைக்கு ஒரு வழி பண்ணல , நான் குழல் இல்லடி “ என்று கூறி கொண்டே கோபத்தோடு அவனை நோக்கி சொன்றாள் குழல்.

‘ போச்சு செத்தடா நீ’ ரூபா மனதில் நினைத்துக் கொண்டாள்.

அவள் தன்னை நோக்கி கோபத்தோடு வருவதைப் பார்த்தவன் ஓட்டத்திற்கு தயாராக குழல் கத்தினாள்.

“ நில்லுடா பரதேசி ! என்கிட்ட வந்து தைரியமாக பேச துப்பில்லை உனக்கு என்ன காதல் வேண்டிக்கிடக்கு “ என்று அவள் கத்த

இவள் கத்தலில் பயந்து போன அவன்

“ அம்மா தாயே பார்க்க அழகா இருக்கேனு பின்னாடி வந்தேன். ஆனா வாய திறந்தா ரவுடியால இருக்க ,போடி! நீயும்! உன் மூஞ்சியும் ! உன் பின்னாடி சுத்தினதுக்கு வேறவ பின்னால் சுத்தினா இந்நேரம் அவளை கரெக்ட் பண்ணியிருப்பேன்.”

“ போடி ! ராட்சஸி ! என்று கத்திவிட்டு அவன் பறந்துவிட

“ ஏய் டியா ? நில்லுடா நான் உனக்கு ராட்சஸியா ? இனி பின்னாடி வந்த கொன்றுவேன்டா ! “ என்று குழல் கத்திக் கொண்டிருக்க ,

“ ஏய் விடுடி! அவன் ஓடிட்டான் . ஏன்டி உனக்கு இவ்வளவு கோபம் வருது , அதிரடியா இருக்கடி நீ ! கொஞ்சம் உன் கோபத்தை குறை என்று அக்கரையில் ரூபா சொல்ல அதுவே அவளுக்கு கோபத்தை அதிகரிக்க செய்தது “

“ எவடி இவ பொறுமை , அமைதினு பாடம் நடத்திட்டு இருக்குறா ! பையன் பின்னாடி வந்தா பயந்திட்டு பேசாம போகணுமா! அதெல்லாம் முடியாது , நாம அமைதியா போற நாளதான் அவனுங்க இப்டி நம்ம பின்னாடி சுத்திட்டு திரியுறாங்க” என்று அவளிடம் கத்திக் கொண்டே சென்றவளை தொலைவில் இருந்த மரத்தில் அமர்ந்து இருந்த கிளி ரசித்து சிரித்தது.


“ அல்லிராணி ஜென்மம் பல கடந்தாலும் உன் திமிர் அடங்கவில்லையடி.!
உன்னை அடக்க காளை அவன் வந்து கொண்டிருக்கிறானடி தோழியே “
என்று கிளி சொல்லிச் சிரித்தது.

************************************************************

வடுகப்பட்டி கிராமத்தில் புழுதி பறக்க வந்து நின்றது அந்த போலிஸ் வாகனம் . வண்டி நின்றவுடன் அதிலிருந்து கம்பீரமாக, ஆறடி உயரத்தில் , இளமை துடிப்போடு நெஞ்சில் திண்மையோடு , மீசையை முறுக்கியபடி ஆணின் முழு இலக்கணமாக வந்து இறங்கினான் தேவ இனியன் .


“வஞ்சிக்கொடி காத்திருக்க
வஞ்சிக்கொடி தலைவன் இதோ எதிரில்
சொற்போர் புரிந்து
விழிப்போர் நடத்தி
கரங்களில் மாலை சேர்ப்பது எப்போது? “




வியூகம் தொடரும்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் : 5

ஆபிசில் தீரனை முறைத்துப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் லிங் . அவன் முறைப்பதை பார்த்த தீரன்

“ என்னடா லிங் ? இவ்வளவு பாசத்தோடு என்னை பார்த்துட்டு இருக்க , என்ன விசயம்? “ – தீரன்

“ டேய் உன்னை முறைச்சுட்டு இருக்கேன்டா ! கொலைவெறில பார்த்துட்டு இருக்கேன்டா ! “ – லிங்

“ ஓ ! அப்டியா ! பாரேன் ! நீ சொல்லித்தான் தெரியுது முறைக்கிறேன்னு ! ஆமா எதுக்கு உனக்கு வராத விசயம்லாம் செய்ற ? “ – தீரன்

“ மச்சி, இந்த இடத்துல எதுக்குடா கோபமா இருக்கேன்னு ? நீ என்கிட்ட கேட்கனும்டா ! அதவிட்டுட்டு தேவையில்லாத விசயமெல்லாம் பேசிட்டு இருக்க ! உன்னால ரைட்டர் ஜி எவ்வளவு டைப் பண்ண வேண்டியிருக்கு பாருடா “ – லிங்

“ஓ அது வேறயா ! சரி சொல்லித் தொலை , எதுக்குடா கோபமா இருக்கனு சொல்லு கேட்போம் எனக்கும் கொஞ்சம் டைம் பாஸ் ஆகும்ல “ – தீரன்.

“ டேய் என் புலம்பல் உனக்கு டைம் பாஸ்ஆ மச்சான் “ – லிங்

“ இப்ப நீ சொல்றியா! நான் இடத்த காலி பண்ணவ “ – தீரன்

“ மச்சி இருடா சொல்றேன் ! நேத்து உன் கிட்டயிருந்த கோபத்தை எல்லாம் அவ என் மேல காட்டிட்டா மச்சான் . இன்னைக்கு டீ குடிக்கக் கூட என்னை வெளில விடல மச்சான். வேலைய குடுத்து புழிஞ்சிட்டா! இதுல இங்கிலிஷ் ல வேற திட்டி என் காத பஞ்சர் ஆக்கிட்டாடா . இப்டியே போனா சூடு , சுரணை இல்லாம போயிருவேன் போல மச்சான் .பொண்ணா அவ!“ என்று லிங் இங்கு புலம்பிக் கொண்டிருக்க

தீரன் வேகமாக எங்கோ சென்றான். அவன் செல்வதை பார்த்த லிங் குழம்பியபடியே “ தீரா எங்கடா போற ? “ என்று கேட்க

“ நீ அவள பொண்ணா அவ? னு கேட்டியா “ – தீரன்

“ அதுக்கு ! – லிங்

“ எனக்கும் அந்த சந்தேகம் இருக்குடா மாப்பி அதனால வா நாம போய்

அவகிட்டயே கேட்டு நம்ம சந்தேகத்தை தீர்த்துக்கலாம் “ – தீரன்

“ டேய் நீ நல்லா வருவடா ! என்னை அவகிட்ட கோர்த்து விடுறதயே வேலையா வச்சுருக்கடா ! ஏற்கனவே அவ கத்தி ஒரு காது வலிக்குது .இன்னோரு காதையும் பஞ்சர் பண்ணிடாதடா ! “ – லிங்

“ அவ எப்டி உனக்கு டீ குடிக்கக் கூட டைம் குடுக்காம வேலை வாங்கலாம் . இப்ப உனக்கு டீ டைம் மச்சான் ! வா என்கூட என்று தீரன் இழுக்க லிங் முடியாது என்க இருவரும் இங்கு வாக்குவாதம் செய்து கொண்டிருக்கவும் கனிஷ்கா இவர்கள் அருகில் வரவும் சரியாக இருந்தது.

“ வேலை நேரத்தில வேலை செய்யாம இரண்டு பேரும் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க ? – கனி

“ பார்த்தா தெரியல டீ குடிக்கப் போறோம் “ – தீரன்

“ இது ஒண்ணும் டீ டைம் யில்லையே “ – கனி

“ என் நண்பனை டீ குடிக்கக்கூட விடாம வேலை வாங்கி கொடுமைபடுத்தியிருக்க ! அதனால அவனுக்கு இப்ப தான் டீ டைம்! .நீ வாடா நண்பா ! என்று தீரன் கூற கனி லிங்கை முறைத்துப் பார்த்தாள்.

அவள் பார்வையை சந்தித்த லிங் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான். பின்பு தீரனை பார்த்து கத்தினாள் கனி.

“ இது என்ன உன் அப்பன் கட்டி வச்ச ஆபிஸா ! நீ நினைச்ச நேரம் வர, போக,டீ குடிக்க. !

“ Go and do your work “ மேன் என்று கத்திவிட்டு அவள் சென்றுவிட,

“ இவள ! எப்டி பேசிட்டு போறா பாரேன் ! இரு மச்சான் ! இவள ஒரு கை பார்த்துட்டு வரேன் ! – தீரன்

“ நீ ஒரு கையும் பார்க்க வேண்டாம் , இரண்டு கையும் பார்க்க வேண்டாம் மூடிட்டு இரு மாப்பி ! நீ எதாவது ஏடாகூடமா செஞ்சு என் வேலைக்கு ஆப்பு வச்சிட்டு போயிறாத ! இத நம்பி தான் என் பொழப்பே இருக்கு ! “ – லிங்

“ இல்லை மச்சான் ரொம்ப சவுண்டு விட்டு போறா ! அவள என்னனு கேட்டுட்டு வரேன்டா “. இந்த வேலையில்லேனா என்ன ! வேற வேலை பார்த்திட்டா போச்சு ! விடு மச்சான் பார்த்துக்கலாம் “ – தீரன்

“ இல்லை டா எனக்குனு ஒரு லட்சியம் இருக்கு அத இங்க வச்சி தான் நிறைவேத்த முடியும் அதுக்கு மூடு விழா பண்ணிடாதடா “ – லிங்

என்னடா சொல்ற ? –தீரன்

“ அதான் மச்சான் பொண்ணுங்கள கரெக்ட் பண்றது “ – லிங்

“ புரியுற மாதிரி சொல்லித் தொலைடா “ - தீரன்

“ இந்த ஆபிசில் கேரளா, ஆந்திரா , கர்நாடகம்னு ரகம் ரகமா பொண்ணுக இருக்குக . அதுல யாரையாவது கரெக்ட் பண்ணனும்றத என் லட்சியமாகவே வச்சிருக்கேன்டா மச்சான்“ – லிங்

“ அட நாயே ! இதலாம் ஒரு லட்சியமா ? உன் கிட்ட போய் கேட்டேன் பாரு ! என்ன சொல்லனும் ! நீ எங்க உருப்படப் போற ! “என்று அவனை கத்திவிட்டு தீரன் கேன்டீனை நோக்கிச் செல்ல

“ டேய் இருடா நானும் வரேன் “ என்று அவனை பின் தொடர்ந்தான் லிங்.


************************************************************************



“ காந்தர்வன் சிவ ஆலயத்திற்குள் சென்று அடியாரை தேட அவர் அங்கிருந்த ஒரு தூணில் அமர்ந்தபடி தியானம் செய்து கொண்டிருந்தார் . அவரை பார்த்ததும் காந்தர்வன் அவர் அருகில் செல்ல அவர் கண்களை மூடியபடியே பேசத் தொடங்கினார் .

“ மானிடா பயம் கொள்ளாதே !
“ உரியவள் அருகில் இருக்கிறாள்
உடையவனை பார்த்துக் கொள்வாள். ! கவலை வேண்டாம் “ என்று
அவர் தன் கண்களை மூடியபடி கூறினார் .

இதை கேட்ட காந்தர்வன் தயங்கியபடியே பேசினார் .

“ அதில்லை சுவாமி நடு சாமத்துல வீட்டுல ஏதோ சத்தம்லாம் கேட்குது .கனவில் கருப்பா ஒரு உருவம் வந்து என்னை தினமும் துரத்துது . ஏதோ விபரிதம் நடக்க போற மாதிரி மனசு ரொம்ப அடிச்சுக்குது . அதான் உங்ககிட்ட இதுக்கு ஏதும் பரிகாரம் செய்யலாமானு கேட்க வந்தேன் சாமி என்று அவர் பயத்தோடு கூற

இதை கேட்ட அடியார் சற்று நேரம் மொனமாக யோசித்தார்

பின்பு கண்களை திறந்து அவரிடம் பேசத் தொடங்கினார் .


“ விதியின் வழியே நம் பயணம்
ஈசனை நம்பு அவன் பார்த்துக் கொள்வான் அனைத்தையும் “ என்று
சொல்லிவிட்டு அவர் கண்மூடிக் கொள்ள, காந்தர்வன் வருத்தத்தோடு அந்த இடத்தை விட்டு அகன்றார்.

அவர் சென்றவுடன் அடியார் கண்மூடியபடியே வார்த்தைகளை உச்சரித்தார்.


“ வஞ்சகன் சூழ்ச்சியினை முறியடிக்கும் வியூகம்தனை
மன்னவன் அவன் படைத்திடுவானோ ?
மந்திர வியூகம்தனை மதியினால் கண்டெடுத்து உரியவன் அவனிடம் சேர்த்திடுவானோ ?
கொண்டவள் துணையிருக்க , வேங்கையவன் பலம் இருக்க !
ஈசனவன் ஆட்டம்தனில் பகையை அழித்துவிட்டு மன்னவன்
அவன் இங்கு வெற்றி வாகை சூடிடுவானோ ?


வியூகம் தொடரும்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் : 6

அன்று ஆபிசில் இருந்து சீக்கிரமாக கிளம்பிவிட்டான் தீரன். லிங்கையும் தன்னுடன் சேர்த்து அழைத்துச் செல்ல அவன் கேபினுக்குச் சென்றான்.அவன் வந்ததும் லிங் அவனை கேள்வியாக பார்க்க

“ வாடா மச்சான் வீட்டுக்கு போகலாம்! “ – தீரன்

“ டேய் அதுக்குள்ளேயா ! வேலை இருக்குடா !. கொஞ்சம் பொறு மச்சான்

வேலைய முடிச்சிட்டு வரேன் “ என்று லிங் கூற

“ அதெல்லாம் முடியாது ! இப்ப வரதா இருந்தா வா ! இல்லை நான் முன்னாடி போறேன் நீ பின்னாடி மெதுவா வா “ - தீரன்

“ அப்படி என்ன மச்சான் அவசரம் இப்படி பறக்குற ! ஆமா ! நீ உன் வேலைய முடிச்சிட்டியா! நீ பாட்டுக்க கிளம்பிட்ட”- லிங்

“ போறேனா விடுடா சும்மா தொண தொணனு . அப்புறம் மச்சான்! என் வேலை பெண்டிங் அத கொஞ்சம் முடிச்சிடு செல்லம் ! வரட்டா “ என்று சொல்லிவிட்டு திரும்பியவன் திரும்பி வந்து அவனிடம்

‘ நான் போறேன்னு ராங்கிட்ட சொல்லிடு மச்சான்” –தீரன்

“ டேய் ! டேய் ! அவகிட்ட சொல்லாம போறியா , அவளுக்கு தெரிஞ்சா கொன்றுவாடா ! “ லிங்

“ நீ இருக்க எனக்கு என்ன பயம் மச்சான் சமாளிடா “என்று அவனிடம் கூறிவிட்டு தீரன் லிப்டின் உள்ளே புகுந்து கொண்டான் .

“ ஹம்ம் ! லிங்கேஷா என்ன வாழ்க்கைடா இது ! இங்க இவன் இடிக்கிறான் அங்க அவ இடிக்கிறா ! சே ! முடியலடா சாமி ! என்று புலம்பிவிட்டு தன் வேலையை தொடர்ந்தான் லிங்.

லிப்டின் உள்ளே சென்ற தீரன் கீழ் தளத்திற்கு செல்லும் பட்டனை அழுத்திவிட்டு காத்திருக்க லிப்ட் சற்று தூரம் சென்றதும் நின்றது.

“ போச்சுடா இது வேறயா ? இன்னைக்கு வீட்டிற்கு போனமாதிரி தான் ! “ என்று தீரன் சலிப்படைய லிப்ட் தன் இயக்கத்தை மறுபடியும் தொடங்கியது . லிப்ட் ஒரு தளத்தில் சென்று நிற்க உள்ளே நுழைந்தாள் கனி

அவளை பார்த்ததும் தீரன் கடுப்பானான். “ ஹம்ம் நினைச்சேன் என்னடா இது நல்லா போயிட்டு இருக்கேனு , ஒண்ணும் நடக்கலயேனு !வந்துட்டா ராங்கி இனி நான் வீட்டுக்கு போன மாதிரி தான் என்று தீரன் முணுமுணுக்க அது சரியாக அவள் காதில் விழுந்தது .

ஏய் மேன் ! யார பார்த்து ராங்கினு சொன்ன ? – கனி

“ இங்க நீயும் நானும் மட்டும் தான இருக்கோம் வேற யார நான் சொல்லிருப்பேன் “ – தீரன்

“ ஹேய் ! வார்த்தைய அளந்து பேசு மேன்” - கனி

“ அப்டீங்களா மேடம் அளக்குறதுக்கு ஏதும் கொண்டு வரல நீங்க கொஞ்சம் குடுத்தீங்கனா வசதியா இருக்கும் அளந்து பார்த்து சொல்லிடுவேன் “ – தீரன்

“ ஹேய் ! என்ன திமிரா மேன் ? என்று ஆரம்பித்தவள் ஏதோ தோன்ற ஆமா ஆபிஸ் டைம்ல இங்க என்ன பண்ற நீ ! வேலை எல்லாம் முடிச்சிட்டீயா ஜெர்மன் கம்பேனிக்கு கொட்டேஷன் ரெடி பண்ண சொன்னேன்னே பண்ணிட்டீயா ? இதலாம் செய்யாம சார்ர்ர் எங்க கிளம்பிட்டீங்க ? – கனி

“ ஹம்ம்ம் பெர்சனல் வேலை! எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு போக முடியுமா நீ என் பொண்டாட்டி பாரு “ – தீரன்

“ ஹேய் ! என்ன பொண்டாட்டி அது இதுனு சொல்ற ! ஒழுங்கா பேசு மேன்” – கனி

“ ச்ச்சு ! ஏன்டி கொல்ற இப்ப என்னதான்டி வேணும் உனக்கு ? தீரன்

“ ஹேய் ! என்ன டி போட்டு பேசுற ! அப்புறம் நான் டா சொல்லி கூப்ட வேண்டியிருக்கும்” – கனி

“ ஓ ! அந்தளவு தைரியம் வந்துருச்சா எங்க என்ன அப்டி கூப்டுடி பார்க்கலாம் வாய உடைச்சுடுறேன் “ – தீரன்

“ அப்டி தான்டா கூப்பிடுவேன் எங்க வாய உடைடா பார்க்கலாம் “ – கனி

இவர்கள் இங்கு சண்டையிட்டுக் கொண்டிருக்க லிப்ட் பாதியில் நின்றது .

“ பாருடி நீ வந்த பிறகு தான் லிப்ட நின்னுடுச்சு . எல்லாம் உன்னால் தான்டி “ – தீரன்

“ லிப்ட் நீ இருக்குறதுனால தான்டா வேலை செய்யல” - கனி

“ இப்ப நாம இரண்டு பேரும் நல்லா மாட்டிக்கிட்டோம். நான் இப்ப இருக்குற நிலைமையில உன் கூட சண்டை போட நான் தயாரா இல்லை நாம இப்ப எப்படி வெளியே போகப் போறோம்னு தெரியலயே ! கத்தாம கதவை திறக்குற வழியை பாருடி” என்று தீரன் கத்த

“ என்னை அதிகாரம் பண்ணாம கதவை திறக்குற வழியை பாருடா ! ராஸ்கல் என்று அவள் கூற

“ ஹேய் ராஸ்கல்னு சொன்ன அவ்வளவுதான் “ மறுபடியும் சீறினான் அவன்.

“ என்னடா பண்ணுவ ? – கனி

‘ அவனே சும்மா இருந்தாலும் இவ விட மாட்டா போலயே இன்னைக்கு அவன்கிட்ட நீ செமத்தியா வாங்கப் போறமா ‘

இவர்கள் இங்கு சண்டை போட்டுக் கொண்டிருக்க கனி அப்போது தான் கவனித்தாள் லிப்டின் மேற்பரப்பில் இருந்த பாகம் ஒன்று உடைந்து தீரனை நோக்கி வர, சட்டென்று தீரனை கீழே தள்ளிவிட்டு கனி விலகுவதற்குள் அது அவள் மேல் விழுந்தது . அப்போது அதில் இருந்த கம்பி ஒன்று அவள் கைகளை கிழிக்க அதிலிருந்து இரத்தம் வரத் தொடங்கியது .அதிர்ச்சியில் மயங்கி விழுந்தாள் கனி

அவள் தள்ளியவுடன் அருகில் இருந்த சுவரில் இடித்துக் கொண்டு நின்ற தீரன் திரும்பி பார்க்கும் போது கனி மயக்க நிலையில் இருந்தாள். அவளை அந்த நிலையில் பார்த்ததும் தீரனுக்கு சர்வமும் அடங்கியது. வேகமாக அவள் அருகில் சென்று அவளை எழுப்பினான்.

“ ஹேய் ! தேவி ! எழுந்துருடி ! என்னை கண்ணை திறந்து பாருடி !

யாராவது இருக்கீங்களா நாங்க லிப்டுக்குள்ள மாட்டிட்டு இருக்கோம் யாராவது எங்கள காப்பாத்துங்க “ என்று அவன் கத்துவதற்கும் லிப்டின் கதவுகள் திறப்பதற்கும் சரியாக இருந்தது .

கதவு திறந்ததும் அவளை கைகளில் ஏந்திக் கொண்டு தீரன் வெளியெ வர ஆபிஸ் பரபரப்பானது . சூழ்நிலையை புரிந்து கொண்ட லிங் வேகமாக சென்று காரை எடுத்து வந்து தீரன் அருகில் நிப்பாட்ட தீரன் அவளை தூக்கிச் சென்று பின்பக்கம் படுக்க வைத்து இரத்தம் கசியும் இடத்தில் பஞ்சை வைத்து அழுத்தி பிடித்தபடி பதற்றமாக அமர்ந்திருக்க கார் ஆஸ்பிட்டலை நோக்கி வேகம் பிடித்தது .

சென்னையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமணையில் கனி அனுமதிக்கப்பட தீரனும்,லிங்கும் வெளியில் பதட்டமாக அமர்ந்திருந்தனர்.


**********************************************************************

லிப்டின் உள்ளே மேற்பரப்பில் நின்று கொண்டிருந்தது இரு உருவம்.

அதிலிருந்த ஒரு உருவம் அருகில் நின்று இருந்த பருந்திடம்

“ தப்பிச்சுட்டான் குரு ! அவள் உள்ளே புகுந்து அவனை காப்பாத்திட்டா “ என்று அந்த உருவம் பருந்திடம் கூற ,

“ அடியாரே ! நீ அவனை காப்பாற்ற முயலாதே ! நீ என்ன செய்தாலும் அவனை நான் அழித்தே தீர்வேன்! என்று அந்த பருந்து கத்திவிட்டு அருகில் இருந்த உருவத்திடம் திரும்பி பேசியது.

“ தேவி அருகில் இருக்கும் வரை அவனை நாம் தீண்ட முடியாது கலிங்கா .பொறுமையாக இரு நமக்கு சந்தர்ப்பம் அமையும் “ என்று அருகில் இருந்த

உருவத்திடம் சொல்லிவிட்டு அது பறந்து செல்ல அந்த உருவமும் மறைந்தது .

இதனை தன் ஞான சிஷ்டி மூலம் பார்த்துக் கொண்டிருந்தார் அடியார் . அவர் தன் தாடையை தடவியபடியே பேசினார்.

எல்லாம் அவன் செயல் .ஓம் நமச்சிவாய!


“ தேவியின் இரத்தம்தனில் வேந்தன் அவன் சித்தம் தெளிந்ததோ !!
ஈசனவன் சூழ்ச்சிதனில் அசுரன் அவன் அழிந்திடுவானோ !”
வியூகம் தொடரும்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் : 7

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கனிக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது . மருந்தின் உபயத்தால் அவள் நன்கு தூங்கிக் கொண்டிருக்க இங்கு தீரனோ ஒரு நிலையில் இல்லை .

“ தேவி வந்துருமா !’’ என்று மனதுக்குள் பலமுறை சொல்லிக் கொண்டான்.

கனியை பரிசோதித்துவிட்டு வெளியில் வந்த டாக்டரை கண்டதும் தீரன் வேகமாக அவரிடம் விரைந்தான். அவனை பின்பற்றி லிங்கும் அவரிடம் செல்ல,

தீரன் அவரிடம் “ சார் அவளுக்கு எப்டியிருக்கு ஒண்ணும் பிரச்சனையில்லையே’’ என்று பதற்றமாக கேட்க

“ பயப்பட ஒண்ணும் இல்லை சார், சாதாரண மயக்கம் அவ்வளவுதான். ரத்தம் அதிகமா போயிருக்கனால ரத்தம் ஏறிட்டு இருக்கு கொஞ்ச நேரத்துல கண் முழிச்சிடுவாங்க அப்புறம் போய் நீங்க பார்க்கலாம்’’ என்று கூறிவிட்டு அவர் செல்ல அப்போது தான் தீரன் சற்று அமைதியடைந்தான்.

தீரன் அமைதியாக அங்கிருந்த இருக்கையில் அமர லிங் அவனிடம் வந்தான் .

“ மச்சான் ட்ரெஸ் எல்லாம் ஒரே இரத்தமா இருக்கு, இந்தா போய் இத மாத்திட்டு வாடா ‘’ என்று ஒரு பார்சலை அவனிடம் நீட்ட அதை வாங்க மறுத்தான் தீரன் .

“ மச்சான் பயப்பட ஒண்ணும் இல்லைனு டாக்டரே சொல்லிட்டாருலடா, பின்ன என்ன ? நீ போய் மாத்திட்டு வா , அது வரை நான் அவங்கள பாத்துக்குறேன்.

குணசேகரன் சார்க்கு போன் பண்ணியிருக்கேன் அவரும் வந்திட்டு இருக்காரு, அதனால நீ பயப்பட வேண்டாம் மச்சான்’’ என்று அவனை பேசி அனுப்பி வைத்தான் லிங்

இப்படி அனைவரும் அவளுக்காக காத்திருக்க அரைமணி நேரம் சென்று கண் விழித்தாள் கனி.

அவள் விழித்ததை நர்ஸ் வந்து கூற வேகமாக உள்ளே விரைந்தான் தீரன்.அவன் உள்ளே சென்று பார்க்க அவள் படுக்கையில் அமர்ந்து பழச்சாறு பருகிக் கொண்டு இருந்தாள் . இவன் வரவைப் பார்த்ததும் அவளிடம் ஒர் அலட்சியம் தோன்ற அது தீரனுக்கு கோபமூட்டியது .அவள் நலனை கேட்க விழைந்த மனம் வார்த்தையை மாற்றியது.

“ அப்புறம் மகாராணி ஒரு வழியா கண் முழிச்சிட்டீங்க போல !உன் அப்பாவுக்கு கால் பண்ணிருக்கேன் இப்ப வந்துருவாரு .நானும் எவ்வளவு நேரம் தான் உன் மூஞ்சியையும் மொகரையும் பார்க்குறது. அதனால நான் கிளம்பறேன்’’ என்று தீரன் சொல்ல

கனிஷ்காவிற்கு கோபம் ஏறியது .

“ உன்னை யாரும் இங்க இருனு ஒண்ணும் கெஞ்சல மேன் ! போயேன் உன் வேலைய பார்த்துட்டு " என்று அவள் கோபத்தோடு கூற

“ ஓ ! அப்ப ரொம்ப நல்லதா போச்சு! நான் கிளம்புறேன் . அப்புறம் போகாம உனக்கு சேவகம் செய்வேன்னு நினைச்சியோ ? என்று சொல்லிவிட்டு திரும்பியவன் ஏதோ நினைவு வந்தவனாக திரும்ப , கனியும் ஆவலாக அவன் முகத்தை பார்த்தாள்.

“ சொல்ல மறந்துட்டேன் பாரேன் ! மருந்து , மாத்திரை னு உனக்கு தண்டமா பில் கட்டி இருக்கேன் அத என் அக்கவுண்ட்ல மறக்காம போட்டு விடுமா ! வரட்டா ! "என்று சொல்லிவிட்டு அவன் செல்ல

இவள் இங்கு கொதிநிலையில் இருந்தாள். எப்படியிருக்கேன்னு ஒரு வார்த்தை கேட்டா கொறஞ்சா போயிடுவான் .திமிர்! உடம்பு பூரா திமிர் ! இவன காப்பாத்த போய் தான் எனக்கு இந்த நிலைமை எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.

“ ராட்சஸா ! உன்னை! “ என்று தனக்குள் அவனை அர்ச்சனை செய்தாள் கனிஷ்கா

இவள் இங்கு அவனை அர்ச்சனை செய்து கொண்டிருக்க வெளியே வந்த தீரன் லிங்கை அவசரப்படுத்தினான்.

“ வாடா ! வீட்டுக்கு போகலாம் அதான் ராங்கி எழுந்துருச்சுட்டால அப்புறம் நமக்கு இங்க என்ன வேலை " என்று தீரன் கூற அவனையே ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் லிங்.

லிங் பார்ப்பதை உணர்ந்த தீரன் ‘’ என்னடா நான் பாட்டுக்க பேசிட்டு இருக்கேன் என்னை அப்டி பார்த்திட்டு நிக்கிற’’ – தீரன்

இல்ல இவ்வளவு நேரம் தேவி ! தேவி ! னு பொலம்பிட்டு , பதட்டமா ஒருத்தன் சுத்திட்டு திரிந்தான் . அவ்வளவு உருகியவன் இப்ப அவகிட்ட நலம் விசாரிக்காம திமிரா பேசிட்டு வந்து நிக்கிறான். இதுல எவன் உண்மைனு பார்த்துட்டு இருக்கேன்டா. – லிங்

“ என்னது தேவியா ? யாருடா அது ? எனக்கு தெரியாம ஆள் ஏதும் பிடிச்சுட்டியா மச்சான்’’ – தீரன்

“ என்னது ஆள் பிடிச்சுட்டேனா ! ஏன்டா சொல்லமாட்ட? இவ்வளவு நேரம் நீ பிணாத்திட்டு இப்ப என்னை சொல்ற ! பேச்ச மாத்தாதடா ! எதுக்கு அப்டி உள்ளே பேசிட்டு வந்த – லிங்

‘’நான் பிணாத்துனேனா ! அப்டி எனக்கு எந்த ஞாபகமும் இல்லையேடா !

போய் எப்டி இருக்கனு கேட்கலாம்னு போனா அவ என்னை பார்த்து திமிரா ஒரு லுக் விட்றா மச்சான்.

கொஞ்சம் கூட நன்றி உணர்ச்சியே இல்லை. அதான் இப்டி பேசிட்டு வந்தேன்’’ என்று தீரன் சொல்ல அவனை ஒரு பார்வை பார்த்தான் லிங்.

நம்பு மச்சான் என்று அவனிடம் தீரன் பேசிக் கொண்டிருக்க குணசேகரன் வேகமாக அவர்களை நோக்கி வந்தார் .

“ அப்பா தீரா! என் பொண்ணுக்கு என்னாச்சுப்பா ? எங்கப்பா அவ ?’’ என்று அவர் பதட்டமாக கேட்க , தீரன் அவரிடம் நடந்ததை எடுத்துச் சொன்னான். அதை கேட்டவர் பதட்டமாக கனியிடம் விரைந்தார்.

அம்மா கனி ! என்று கூறியபடி பதட்டமாக உள்ளே நுழைந்தார் குணசேகரன்.

அவரைப் பார்த்ததும் அப்பா ! என்று கூறிக் கொண்டே அவர் தோளில் சாய்ந்து கொண்டாள் கனி

“ இப்ப எப்படிமா இருக்கு ? கொஞ்சம் சூதானமா இருந்திருக்கக் கூடாதாமா? பாரு எவ்வளவு பெரிய காயம் "என்று கூறி அவள் கைகளை வருடிக் கொடுத்தார்.

“ அப்பா எனக்கு ஒண்ணும் இல்லை ! நான் நல்லாத்தான் இருக்கேன் . லேசான அடிதான் பயப்படும்படி ஏதும் இல்லைபா!’’ என்று கூறி அவரை சமாதானப்படுத்தினாள் கனி.

“ என்னவோ மா ! நல்ல வேளை தீரன் பக்கத்தில் இருக்க போய் கரெக்டா ஆஸ்பிட்டல் சேர்த்தான் "என்று அவர் அவனை பாராட்ட

“ எல்லாம் அவனால தான் இது தெரியாம அவனை பாராட்டுறீங்களே பா "என்று தனக்குள் புலம்பிக் கொண்டாள் கனி

‘இவனை யார் அந்நேரத்துல லிப்டுக்கு போகச் சொன்னது ஒழுங்கா வேலை பார்த்துட்டு இருந்திருந்தா இந்த சம்பவமே நடந்திருக்காது என்று தனக்குள் சொல்லிக் கொண்டே இருந்தவள் திடீரென்று ஞாபகம் வந்தவளாக

நான் ஏன் இப்ப அவனை பற்றி நினைச்சுட்டு இருக்கேன் ?

அவனுக்கு எதாவது ஆச்சுன்னா நான் ஏன் துடிக்கிறேன் ? என்று பல கேள்விகள் அவளுள் தோன்றி மறைந்தது.’

குணசேகரன் டாக்டரிடம் சென்று பேசிவிட்டு வர கனி மாலையே வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.

மறுநாளே ஆபிஸ்க்கு செல்ல இருந்தவளை அடக்கினார் குணசேகரன்.


"என்னம்மா கை இன்னும் சரியா தூக்கக் கூட முடியல அதுக்குள்ள வேலைக்கு போறேனு சொல்ற , அதெல்லாம் முடியாது! 1 வாரம் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் போ ஆபிஸ்க்கு, அது வரைக்கும் தீரன் ஆபிஸை பார்த்துக்குவான் ‘’ என்று அவர் சொல்ல

‘’ யாரு அவன் பார்த்துக்குவானா ! போங்கப்பா நல்லா காமெடி பண்ணிகிட்டு , அவன் வேலைய செய்றதுக்கே ஒரு ஆள் வேணும் , இதுல துறை என் வேலையையும் செஞ்சுடப் போறாராமா !அதெல்லாம் முடியாது ! நீங்க சொன்னதால வேணா 2 நாள் வீட்டில் ரெஸ்ட் எடுக்கிறேன் . அப்புறம் ஆபிஸ்ற்கு கிளம்பிடுவேன்’’ என்று அவள் பிடிவாதமாக சொல்ல குணசேகரனும் வேறு வழியின்றி சம்மதித்தார்.

ஒரு மாலை வேளையில் குணசேகரன் பேப்பர் படித்துக் கொண்டிருக்க அவர் நினைவு முந்தய நாள் நினைவுகளை அசைபோட்டது. கனிக்கு கைகளில் காயம் பட்டதும் அவர் மனதில் ஏதோ நெருடலாக இருக்க அவர் சென்று ஜோசியரை சந்தித்தார்.

கனியின் ஜாதகத்தை ஆராய்ந்த ஜோசியர்

“ குணசேகரா! உன் பொண்ணுக்கு தோசம் இருக்கு அவளுக்கு மாங்கல்யம் பலம் இருந்தாலும் தன்னவனை அவள் அருகில் இருந்து காக்க வேண்டிய தருணம் இது. அதோடு அவளுக்கு 3 கண்டம் வேற இருக்கு கொஞ்சம் கவனம் சிதறினாலும் உயிர் இலக்க நேரிடும் . பரிகாரம் செஞ்சா நலம் பயக்கும் ! "என்று அவர் கூற

அதை கேட்ட குணசேகரனுக்கு பயம் பிடித்துக் கொண்டது .

‘’பரிகாரம் என்னனு சொன்னிங்கனா அதை செய்றேன் ஜோசியரே ! ‘’ என்று அவர் வேகமாக கூற

"குலதெய்வம் அருள் இல்லாம இருக்கு உன் குல தெய்வம் தாய் பரமேஸ்வரி அம்பாள் தான . அவள்கிட்ட கூட்டிட்டு போய் அம்பாளுக்கு மஞ்சள் ,குங்குமத்தால அபிசேகம் பண்ணி அங்க இருக்குற குளத்துல 3 தடவை முங்கி எழுந்தா தோசம் நீங்கப் பெற்று அம்பாள் அருள் கிடைக்கப் பெறுவாள் . அதன்பின் எல்லாம் அவள் பார்த்துக்குவாள். அது மட்டும் இல்லை இதை நீ செஞ்சு முடித்தவுடன் அவளுக்கு திருமணம் கூடி வரும் வாய்ப்பு இருக்கு "என்று ஜோசியர் சொல்ல , அதை கேட்ட குணசேகரன்

‘’அப்படியே செய்றேன் ஜோசியரே ‘’ என்று கூறிவிட்டு மகிழ்ச்சியுடன் விடைபெற்றார் குணசேகரன் .

இதை நினைத்துப் பார்த்த குணசேகரன் கனியை குலதெய்வ கோவிலுக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தார் .


***************************************************************

“ தோசக் கணக்கை நிவர்த்தி செய்ய துடிக்கும் மானிடா
ஆண்டவன் போட்ட கணக்கை நிவர்த்தி செய்ய முடியுமாடா !!
மூக்கண் கொண்டு மூவுலகையும் ஆட்டிப் படைக்கும் எம்மானின் சூச்சமத்தை விரைவில் புரிந்து கொள்வாய டா குணசேகரா!
ஓம் நமச்சிவாய என்று கண் மூடியபடியே பேசினார் அடியார்.

வியூகம் தொடரும்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் :8

வடுகப்பட்டி காவல் நிலையத்தின் உள்ளே கம்பீரமாக நுழைந்தான் தேவ இனியன் . அவன் உள்ளே நுழைந்து தன் இருக்கையில் அமர்ந்ததும் சுமார் 50 வயது மதிக்கத்தக்க மனிதர் அருகில் வந்தார் .

வந்தவர் அவனை வணங்கிவிட்டு “ சார் நான் ஆறுமுகம் உங்களுக்கு அசிஸ்டண்ட் “ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

“ ஓ! ஓகே ! mr. ஆறுமுகம் கொஞ்சம் பெண்டிங் பைல்ஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு வரீங்களா என்று அவன் கட்டளையிட அவர் பணிந்து அவன் சொன்னதை செய்ய விரைந்தார்.அவர் சற்று நேரத்தில் பைலை கொண்டு வந்து டேபிளில் வைக்க

இனியன் அந்த பைலை பார்வையிட்டுக் கொண்டே அவரிடம் பேசினான் .

அப்புறம் ஆறுமுகம் இந்த வடுகப்பட்டி கிராமம் எப்படி ? – இனியன்

“அந்த கிராமம் கொஞ்சம் பழைமை வாய்ந்தது சார் . மக்கள் சில பேர் பழைமை கருத்துக்களோடு பழைமைவாதிகளா இன்னும் வாழ்ந்துட்டு இருக்காங்க சார் “ என்று அவர் சொல்ல

“ஓ ! ஐ.சி! என்று நெற்றியை தடவி யோசித்தவன் , நீங்க போகலாம் “என்று அவரை அனுப்பிவிட்டு பைலில் ஆழ்ந்தான் இனியன்

சுமார் 1 மணி நேரம் சென்று ஆறுமுகத்தை மறுபடியும் அழைத்தான் .

“ என்ன ஆறுமுகம் வடுகப்பட்டி கிராமத்தில் தொடர்ந்து மக்கள் பலர் இறந்து போயிருக்காங்க ஆனால் ஏன் அந்த கேஸ் இன்னும் சரியா விசாரிக்கப்படாம இருக்கு ? என்று இனியன் கேட்க

அது வந்து சார் என்று தயங்கினார் ஆறுமுகம்.

அவன் அவரை கூர்மையாகப் பார்த்துக் கொண்டே

“அந்த கிராமத்துல இருக்குற கிணற்றில் தொடர்ந்து பல பேர் விழுந்து இறந்து போயிருக்காங்க .கணக்குபடி பார்த்தா 25 பேர்கிட்ட செத்துப் போயிருக்காங்க அது கொலையா ? தற்கொலையானு கூட விசாரிக்காம பைலை மூடி இருக்கீங்க என்று அவரை பார்த்து இனியன் கேட்க அவர் ஏதும் சொல்லாமல் வார்த்தைகளை மென்று முழுங்கினார்.

இப்ப சொல்லப் போறீங்களா இல்லையா ஆறுமுகம் ? என்று அவன் கத்தவும்

“ சார் ! சொல்றேன் ! அங்க கிணத்துல ஏதோ ஆவி, பூதம் உலாத்துறதாகவும் அது அடிச்சுடுச்சுனும் சொல்றாங்க சார் “ என்று அவர் பயத்தோடு கூற

இந்த காலத்துல போய் ஆவியாவது , பூதமாவது அந்த பைலை எடுங்க . இப்பவே நாம் வடுகப்பட்டிக்கு போயி அந்த கேஸ் பற்றிய விவரங்களை சேகரிக்கனும் போய் ஜீப்ப ரெடி பண்ணுங்க என்று அவன் சொல்ல

அவர்க்கு பயத்தில் வேர்க்க ஆரம்பித்தது.

***************************************************************************************************************

சென்னையில் தன் ரூமில் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்த தீரன் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான் .அவன் அருகில் லிங் நல்ல தூக்கத்தில் இருந்தான் . அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு படிக்க ஆரம்பித்த தீரன் திடீரென்று புத்தகத்தின் எழுத்துக்கள் எழுந்து ஒன்றுடன் ஒன்று சேர்ந்து சுவரில்

“ தீரா ! உன் கடமையை செய்யும் காலம் நெருங்கிவிட்டது ! விரைந்து வா!” என்று ஒரு வாக்கியத்தை அமைத்துவிட்டு சற்று நேரத்தில் அது மறைந்தும்விட்டது .

இதை பார்த்த தீரன் கனவா ? நனவா ? என்று புரியாமல் குழம்பினான்.

********************************************************************

இனியன் ! ஆறுமுகம் மற்றும் தடவியல் நிபுணர்கள் இருவரை அழைத்துக் கொண்டு வடுக்கப்பட்டி கிராமத்திற்கு விரைந்தான். கிராமத்தில் இறங்கியவர்கள் அதன் அருகில் இருக்கும் கிணற்றை தேடி சென்றார்கள் . கிணற்றையும் அதன் சுற்றி உள்ள இடங்களையும் ஆராயந்த இனியன் ஆறுமுகத்தை அழைத்தான்.

‘இறந்து போனவங்க பெயர் பட்டியல் எடுக்கச் சொன்னேன் எடுத்தீங்களா ? கேஸ் பற்றி ஏதும் விசாரிச்சிங்களா ஆறுமுகம் ?” என்று அவரை கேள்வி கேட்டுக் கொண்டே கிணற்றை சுற்றி பார்த்தான் இனியன்.

“ஆமா சார் ! விசாரிச்சேன் . நான் விசாரிச்ச வரை அந்த கிணத்துல 25 பேர் விழுந்து இறந்து போயிருக்காங்க .அதில் எல்லாரும் பொண்ணுங்க சார் . அவங்க வயசு சுமார் 15-25 வயசுக்குள் இருக்கும்னு சொல்லப்படுது” என்று அவர் கூற இனியன் சற்று நேரம் யோசித்தான்.

“அது மட்டுமில்லை சார் இறந்து போனவங்க முந்தின நாள் இரவு வந்து கிணற்றை சுற்றி எதையோ தேடிட்டு இருந்ததா சொல்றாங்க “என்று அவர் கூறி முடிக்க அதனை கேட்டுக் கொண்டே நடந்து வந்த இனியன் பார்வை வட்டத்தில் விழுந்தது கிணற்றின் பக்கவாட்டில் இருந்த காய்ந்து கிடந்த இரத்தத் துளிகள்.

அதை பார்த்த இனியன் தடவியல் நிபுணர்களை அழைத்து இரத்தத் துளிகளை ஆய்வு கூடத்திற்கு பரிசோதனை செய்ய அனுப்புமாறு சொன்னான்.

அவன் கட்டளையை ஏற்று அவர்கள் அங்கு விரைய இனியன் நடந்து

கொண்டே சென்று எதிரில் உள்ள ஒரு மரத்தின் அருகில் சென்று நின்றான்.அங்கு ஒரு ஆலமரம் தன் கிளைகளை பரப்பி விரிந்து காணப்பட்டது. பார்வையை சூழலவிட்டபடி அதன் அருகில் சென்றவன் கிளைகளினால் மூடப்பட்ட மரத்தின் ஒரு பகுதியை ஒதுக்கிப் பார்க்க அவன் கண்களில் பட்டது அது . அங்கு மரத்தில் பல பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்க, பெயர்களை பார்த்தவன் ஆறுமுகத்தை அருகில் அழைத்தான்.

“ஆறுமுகம் இந்த மரத்தில் உள்ள பெயர்களும் இறந்து போனவங்க பெயர்களும் ஒத்துப் போதானு பாருங்க” என்று கூறிவிட்டு திரும்பியவன் தன் ஜீப்பை நோக்கி நடந்து செல்ல அப்போது ஒரு பருந்து வந்து அவன் தலை மேலே வட்டமடித்து பின் சென்றது.


“ தோள் கொடுப்பவன் இங்கே இருக்க வேங்கையவன் வருகைதனை தந்திடுவானோ !
கொண்டவள் கண்டம்தனை உற்றவன் அவன் வந்து நீக்கிடுவானோ !"
வியூகம் தொடரும்
 

HoneyGeethan

Active member
Messages
175
Reaction score
169
Points
43
மந்திரம் :9

இரண்டு நாள் முடிந்து இன்று தான் ஆபிசிற்குள் நுழைந்தாள் கனி.அவள் தன் ரூமிற்கு சென்று தன் இருக்கையில் அமர அவள் முன் வீற்றிருந்தது ஒரு அழகிய பூங்கொத்து. அதை பார்த்ததும் வியந்தவள் அனுப்பியது யார்? என்று அதை எடுத்துப் பார்க்க அதில் கார்டு ஒன்று இருந்தது . அதை அவள் திறந்து பார்க்க அதில் “ மயக்கும் மைவிழியாளுக்கு மனம் கவரும் பூங்கொத்து “ என்று ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது . அதை பார்த்தவள் அனுப்பியது யாரா இருக்கும் ? என்ற யோசனையுடன் பார்வையை சூழல விட அங்கு அருகில் யாரும் இல்லை . அப்போது திடீரென்று அவள் யோசனை வட்டத்தில் வந்து நின்றான் தீரன்.

“ அவனா இருக்குமோ ? சே ! சே ! அவனா இருக்காது நீ ரொம்ப யோசிக்கிற கனி” என்று தன்னையே திட்டிக் கொண்டவள் தன் வேலையை தொடர்ந்தாள் .

இங்கு தீரன் முன் லிங் ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தான் . அவன் கைகளில் பூங்கொத்து வாங்கிய ரசீது இருந்தது.

என்ன மச்சான் இதெல்லாம் ? – லிங் ரசீதை தீரனிடம் காண்பித்து கேட்க

“ பார்த்தா தெரியல மச்சான் பில் “ – தீரன்

“ அது தெரியுது! என்ன புதுசா ? எப்ப நீங்க இரண்டு பேரும் ஒண்ணா சேர்ந்தீங்க ?” – லிங்

“ நீ ரொம்ப யோசிக்கிற மச்சான் . அவ என்னை காப்பாத்தினா அதற்கு பூங்கொத்து வழியா ஒரு நன்றி சொன்னேன் அவ்வளவு தான்! மத்தபடி நீ நினைக்கிற மாதிரியேல்லாம் வேற ஒண்ணும் இல்லைடா “ – தீரன்

“ஓ ! அப்படியா மச்சான் ! பாரேன்! நீ இவ்வளவு சீரியஸ்சா சொல்ற ஆனால் எனக்கு எல்லாம் பொய்யாவே தோணுது .

நன்றி சொல்ல பூங்கொத்தா தருவாங்க ? எங்க ஊரில எல்லாம் லவ்வர்க்குத் தான் இதெல்லாம் தருவாங்க.

சரி அத கூட விட்டுரலாம் மச்சான் ! அது என்ன மான்விழி , மைவிழினு ஒரு கொசுறு” - லிங்

“ ஹேய் நீ என்ன ? என்னை நிக்க வச்சி கேள்வி கேட்குற?” – தீரன்

“இல்லையே மச்சான்! உக்கார வச்சிதான கேள்வி கேட்குறேன்”- லிங்

“ என்ன நக்கலா ! அவ செஞ்ச உதவிக்கு நன்றி சொன்னேன் அவ்வளவு தான் அதை பத்தி தேவையில்லாம பேசாம போய் வேலைய பாருடா” என்று தீரன் அவனை கத்திவிட்டு அந்த இடத்தை விட்டு சென்று விட

லிங் தனக்குள் சிரித்துக் கொண்டான் .

இவர்கள் பேச்சு எதேச்சையாக அவர்களை தாண்டி சென்ற கனி காதுகளில் விழுந்தது . அதை கேட்டவள் தனக்குள் சிரித்துக் கொண்டே சொல்லிக் கொண்டாள்.

‘ஹம்ம் பூங்கொத்த நீ தான் வச்சதா ? நேரடியா எப்படியிருக்கேனு கேட்டா கொறஞ்சா போயிருவ ? பூங்கொத்து வழியா தான் நன்றி சொல்லுவியோ கருவாயா ?

“ என்னமோ இருக்குடா நமக்குள்ள! உன்னை பார்த்தவுடன் எனக்குள் ஏதோ தோணுது ? உள்ளுக்குள் ஓர் அதிர்வு ! ஒரு உரிமை உணர்வு ஏற்படுதுடா! இதற்கு பெயர் என்ன தீரேந்திரரே ! ''என்று அவள் தனக்குள் கூறிக் கொண்டாள்.

லிங்கிடம் இருந்து தப்பித்து வெளியே வந்த தீரன் முன் வந்து நின்றார் ஒரு மனிதர்

வெள்ளை சீருடையில் அமைதியே உருவாக தீட்சணம் பொருந்திய கண்களுடன் ஞானி போல் ஒருவர் நின்றிருந்தார். அவரை பார்த்ததும் தீரனுக்கு ,அவர் தான் போகும் வழியில் அடிக்கடி பார்க்கும் மனிதர் எனவும் , அவர் இது நாள் வரை அவன் அருகில் வரவும் இல்லை , பேச முற்படவும் இல்லை எனவும் நினைவில் தோன்றி மறைந்தது .ஆனால் இன்று அவரை தன் ஆபிசில் பார்க்கவும் அவனுக்கு குழப்பம் அதிகமாகியது.

அவரை பார்த்துக் கொண்டே கடந்து செல்ல அவன் முயல அவர் வாய் திறந்தார்.

தீரா! என்று அவர் அவனை அழைக்க. அந்த குரல் அடிக்கடி கேட்கும் அசரீரியை ஒத்திருந்தது. அதை கேட்டு .அதிர்ச்சியில் நின்றான் அவன்

“ தீரா ! அவனை எழுப்பும் வேலை நடந்து கொண்டிருக்கிறது அவன் எழும்பிவிட்டால் அழிவின் தொடக்கம் ஆரம்பமாகிவிடும் . ஏன் உயிர்பலிகள் கூட நேரலாம் . ஆகையால் அதற்குள் அவனை அழிக்கும் மார்க்கத்தை நீ கண்டுபிடிக்க வேண்டும் . விரைந்து என்னுடன் வா ! என்று அவர் கூறிக் கொண்டே தீரன் அருகில் வர தீரன் இரு அடிகள் பின்னால் சென்று நின்று அவரிடம் பேசினான்.

சார் ! யார் நீங்க ? யாரையோ எழும்பிடுவான் அது இதுனு சொல்றீங்க ? நீங்க ஆள் மாற்றி வந்து பேசிட்டு இருக்கீங்கனு நினைக்கிறேன் . முதல இடத்தை காலி பண்ணுங்க .பலி, அழிவுனு பேசிகிட்டு என்று அவரை தீட்டிவிட்டு அவன் அகன்று விட

போகும் அவனையே பார்த்தபடி பேசினார் ஞானி

ஈசா ! காப்பாற்றுவாயாக என்று இறைவன் நாமத்தை ஜெபிக்கத் தொடங்கினார் அவர்

********************************************************************************************************

கரும்புகை ஒன்று வானத்தில் தோன்றி அது பருந்தின் உருவம் பெற்று சிரித்தது .

‘ தீரா ! நான் உன்னை வீழ்த்தாமல் விட மாட்டேன்னடா ! உன் அழிவு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறதடா என்று கூறிச் சிரித்தபடி அது ஒரு குகையை நோக்கிச் சென்று அதனுள் மறைந்தது


“ அழிக்க நினைக்கும் ஒருவன்
இதை அறியாத நிலையில் மற்றோருவன்
யார் வெல்வார் ? யார் தோல்வி அடைவார் ?


விடை விரைவில்

வியூகம் தொடரும்
 

New Threads

Top Bottom