HoneyGeethan
Active member
- Messages
- 175
- Reaction score
- 169
- Points
- 43
மந்திரம் : 10
குகை முழுவதும் இருட்டில் மூழ்கி இருக்க நடுவில் அகல் விளக்குகள் எரிந்து கொண்டிருக்க ,நட்சத்திர அமைப்பு கொண்ட வடிவம் வரையப்பட்டு அதன் மத்தியில் உருவ பொம்மை ஒன்று வைக்கப்பட்டு அதன் அருகில் எழும்பு கூட்டின் தலை வைக்கப்பட்டிருந்தது . நட்சத்திர அமைப்பின் மத்தியில் யாகம் வளர்க்கப்பட்டு அதில் தீ எரிந்து கொண்டிருக்க , யாகத்தீயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தான் ஒருவன் .. அவன் கருப்பு உடை அணிந்து மண்டை ஓட்டினால் செய்த மாலையை கழுத்தில் அணிந்து நெற்றியில் சிவப்பு நிற குங்குமம் பெரிதாக வைத்து மந்திரம் உச்சரித்துக் கொண்டிருந்தான் அவன் கலிங்கா .
ஓம் ! கிளிம் ! கிளிம் ! சாமுண்டாய நமக ! என்று கைகளில் ஒன்றினை வைத்து மந்திரத்தை உச்சரித்து தீக்குள் அவன் இட
கரும்புகை ஒன்று உருவாகி அவன் பக்கத்தில் சென்று பருந்து உருவம் பெற்று அமர்ந்தது .
கலிங்கா தன் கையை கிழித்து இரத்தத் துளிகளை பொம்மையின் நெற்றியில் இட்டவன் அருகில் 9 குடுவைகளில் வைக்கப்பட்ட இரத்ததினால் பொம்மையின் பாதங்களை கழுவி குடுவையை எடுத்து காளி ரூபத்தில் நின்று கொண்டிருந்த சிலையின் மத்தியில் வைத்தான். கலிங்கா
அவன் இங்கு ஒவ்வொன்றாக செய்ய பருந்து மனிதனாக உருமாறிக் கொண்டே வந்தது. முழு உருவம் பெறும் தருணத்தில் மீண்டும் தன் பழைய உருவத்தை அடைந்தது பருந்து .
“ கலிங்கா ! என்னை வெளியில் கொண்டு வா ! எனக்கு உருவம் கொடு ! என்று அது சொல்ல
“ குருவே ! நீங்க சொன்ன அனைத்தும் செஞ்சுட்டேன் . நவ கன்னிகளை பலி கொடுத்து அவங்க இரத்த துளிகளால் அபிஷேகமும் பண்ணியாச்சு ஆனாலும் வடிவம் கிடைக்கல வேற நான் என்ன செய்யனும் குருவே “ என்று அவன் பருந்திடம் கேட்க
இன்னும் ஒருவரின் இரத்த துளிகள் தேவைப்படுது கலிங்கா என்று அது கூற
அது யார் குரு ? –கலிங்கா
பருந்து அந்த பெயரை உச்சரித்துவிட்டுப் பறந்து சென்றது.
****************************************************************************************************************
கனிஷ்கா தன் தந்தையின் முன் நின்று கத்திக் கொண்டிருந்தாள்.
“ அப்பா! தீரனுக்கு நீங்க ரொம்ப இடம் கொடுக்குறீங்க .அதனால அவன் என்னை மதிக்கக் கூட மாட்டிங்கிறான் . என்று அவள் அவனை பத்தி புகார் வாசிக்க
“ விடுமா ! அந்த புள்ள பயப்படாம எதையும் நேருக்கு நேரா கேட்குற னால உனக்கு அப்படி மதிக்காத மாதிரி தெரியுதுமா , ரொம்ப தங்கமான புள்ளமா ! – குணசேகரன்
தங்கமான புள்ளயா ?யாரு அவனா ? அப்பா லேட்டா ஆபிஸ்க்கு வரது,ஏன்னு கேட்டா திமிரா பதில் சொல்றது , வேலை பெண்டிங் ,ஒரு வேலையும் ஒழுங்கா செய்றது இல்லை, நினைச்ச நேரம் டீ குடிக்குறது என்று அவள் அடுக்கிக் கொண்டே போக
“ அம்மா கனி ! போதுமா! இது எல்லாம் எனக்கு முன்னமே தெரியும் . அவன் என்கிட்ட சொல்லிட்டு தான்மா போனான் .வேலை பெண்டிங் பத்தியும் என்கிட்ட காரணம் சொல்லிட்டான் மா ! – குணசேகரன்
எல்லாத்தையும் உங்ககிட்டயே சொல்லிட்டா அப்புறம் நான் எதுக்கு இருக்கேன் – கனி
கனி !அவன் தன்மானம் அதிகமுள்ளவன் ! நீ எடுத்தெரிஞ்சு பேசுவ அதான் அவன் உன்கிட்ட பாய்றான். நீ கொஞ்சம் அன்பா சொல்லுமா? கேட்டுக்குவான் – குணசேகரன்
இப்டி வந்து உங்ககிட்ட புகார் சொன்னானா அவன்? – கனி
உன்னபத்தி அவன் சொல்லி தான் தெரியணும் இல்லைமா ? எனக்கு தெரியாதா என் பொண்ண பத்தி , அதுமட்டும் இல்லைமா !அவன் வேலை செஞ்சுதான் சாப்டணும்னு இல்லை . அவங்க வசதியான குடும்பம் . சொத்து நிறையா இருக்கு . அவன் அப்பா ஏதோ காரணமா அவனை இங்க அனுப்பி வச்சுருக்காரு ! கொஞ்ச நாள் தான்மா ! கொஞ்சம் பொறுத்துக்கோ என்று அவர் சொல்ல
என்னவோ பண்ணுங்க என்று அவரிடம் சொல்லிவிட்டு அவள் செல்ல முயல குணசேகரன் அவளை தடுத்து நிறுத்தினார் .
கனிம்மா ! ஒரு 2,3 நாள் நாம நம்ம கிராமத்திற்கு போயிட்டு வரலாம்மா !என்று அவர் கூற மறுத்து பேச வந்தவளை குணசேகரன் தடுத்தார்.
ஆபிஸ் பொறுப்பெல்லாம் என் பிரண்ட் கங்காதரன்கிட்ட ஒப்படைச்சுட்டேன் அவன் பார்த்துக்குவான் .நீ எதுவும் பேசாம என் கூட வந்தா மட்டும் போதும் என்று சொல்லிவிட்டு அவர் செல்ல கனி கடுப்புடன் நின்றாள்.
*******************************************************************************************************
வடுகப்பட்டி மக்களில் கிணற்றில் விழுந்து இறந்து போனவங்க பெயர் பட்டியலையும் , மரத்தில் பொறிக்கப்பட்டிருந்த பெயர்களையும் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருந்த ஆறுமுகம் குழம்பி நின்றார்.
அவர் குழப்பமாக இருப்பதை பார்த்த இனியன் அவர் அருகில் வந்து
“ என்னாச்சு ஆறுமுகம் ? ஏன் குழப்பமா இருக்கீங்க” – இனியன்
“ சார் ! மரத்தில் இருந்த பெயர்கள் இறந்து போனவங்க பெயரோட பொருந்த மாட்டிங்கிது . இப்ப என்ன பண்ண ? – ஆறுமுகம்
ஏன் ?என்னாச்சு ? – இனியன்
சார் மரத்தில் உள்ள பெயர்கள் எல்லாம் ஏதோ புராணகால பெயர்களா இருக்கு . நாம வச்சிருக்குற பெயர் பட்டியலோட அது பொருந்தவில்லை சார் – ஆறுமுகம்
ஓ ! இங்க குடுங்க நான் பார்க்குறேன் என்று கூறியவன் அதை வாங்கி பார்த்து சற்று நேரம் யோசித்தவன் ஆறுமுகம் இதில் பாதி பெயரை மட்டும் எடுத்து ஒப்பிட்டு பாருங்க என்று இனியன் கூற
புரியலை சார்! என்று கூறி தலையை சொறிந்தார் அவர்
அவர் அப்படி கூறியதும் இனியன் அவருக்கு பொறுமையாக விளக்கினான்
இதில் யாழ்வதனினு இருந்தா ஒன்று யாழ் இல்லை வதனின்ற பெயர் இருக்கானு பாருங்க என்று அவன் கூற ஆறுமுகம் அதன்படி ஆராய்ந்து சற்று நேரத்தில் வந்தார்
சார் ! நீங்க சொன்னமாதிரி பார்த்தா எல்லாம் பெயரும் இருக்கு சார்! – ஆறுமுகம்
மரத்தில பொறிக்கப்பட்டிருந்த பெயர்கள்ல இருக்குறவங்க எல்லாரும் இறந்துட்டாங்களா? இல்லை யாரும் உயிரோடு இருக்காங்களா? – இனியன்
இல்லை சார் ! இன்னும் இரண்டு பேர் உயிரோடு இருக்காங்க - ஆறுமுகம்
யார் அவங்க ஆறுமுகம்? என்று இனியன் கேட்க
“தேன்குழலாள் , லவலிங்கேஷ்” என்று ஆறுமுகம் அந்த இரு பெயர்களை சொல்ல அதை கேட்டதும் இனியன் யோசனையில் ஆழ்ந்தான்.
“ எல்லாம் பொண்ணுங்க பெயரா இருக்கு. இதில் ஒன்று மட்டும் ஆணின் பெயர் வருது ? என்ன காரணமா இருக்கும் ? அவன் இப்போ எங்கே ? "என்று இனியன் பல கேள்விகளை தனக்குள் கேட்டுக் கொண்டான்.
வியூகம் தொடரும்
குகை முழுவதும் இருட்டில் மூழ்கி இருக்க நடுவில் அகல் விளக்குகள் எரிந்து கொண்டிருக்க ,நட்சத்திர அமைப்பு கொண்ட வடிவம் வரையப்பட்டு அதன் மத்தியில் உருவ பொம்மை ஒன்று வைக்கப்பட்டு அதன் அருகில் எழும்பு கூட்டின் தலை வைக்கப்பட்டிருந்தது . நட்சத்திர அமைப்பின் மத்தியில் யாகம் வளர்க்கப்பட்டு அதில் தீ எரிந்து கொண்டிருக்க , யாகத்தீயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தான் ஒருவன் .. அவன் கருப்பு உடை அணிந்து மண்டை ஓட்டினால் செய்த மாலையை கழுத்தில் அணிந்து நெற்றியில் சிவப்பு நிற குங்குமம் பெரிதாக வைத்து மந்திரம் உச்சரித்துக் கொண்டிருந்தான் அவன் கலிங்கா .
ஓம் ! கிளிம் ! கிளிம் ! சாமுண்டாய நமக ! என்று கைகளில் ஒன்றினை வைத்து மந்திரத்தை உச்சரித்து தீக்குள் அவன் இட
கரும்புகை ஒன்று உருவாகி அவன் பக்கத்தில் சென்று பருந்து உருவம் பெற்று அமர்ந்தது .
கலிங்கா தன் கையை கிழித்து இரத்தத் துளிகளை பொம்மையின் நெற்றியில் இட்டவன் அருகில் 9 குடுவைகளில் வைக்கப்பட்ட இரத்ததினால் பொம்மையின் பாதங்களை கழுவி குடுவையை எடுத்து காளி ரூபத்தில் நின்று கொண்டிருந்த சிலையின் மத்தியில் வைத்தான். கலிங்கா
அவன் இங்கு ஒவ்வொன்றாக செய்ய பருந்து மனிதனாக உருமாறிக் கொண்டே வந்தது. முழு உருவம் பெறும் தருணத்தில் மீண்டும் தன் பழைய உருவத்தை அடைந்தது பருந்து .
“ கலிங்கா ! என்னை வெளியில் கொண்டு வா ! எனக்கு உருவம் கொடு ! என்று அது சொல்ல
“ குருவே ! நீங்க சொன்ன அனைத்தும் செஞ்சுட்டேன் . நவ கன்னிகளை பலி கொடுத்து அவங்க இரத்த துளிகளால் அபிஷேகமும் பண்ணியாச்சு ஆனாலும் வடிவம் கிடைக்கல வேற நான் என்ன செய்யனும் குருவே “ என்று அவன் பருந்திடம் கேட்க
இன்னும் ஒருவரின் இரத்த துளிகள் தேவைப்படுது கலிங்கா என்று அது கூற
அது யார் குரு ? –கலிங்கா
பருந்து அந்த பெயரை உச்சரித்துவிட்டுப் பறந்து சென்றது.
****************************************************************************************************************
கனிஷ்கா தன் தந்தையின் முன் நின்று கத்திக் கொண்டிருந்தாள்.
“ அப்பா! தீரனுக்கு நீங்க ரொம்ப இடம் கொடுக்குறீங்க .அதனால அவன் என்னை மதிக்கக் கூட மாட்டிங்கிறான் . என்று அவள் அவனை பத்தி புகார் வாசிக்க
“ விடுமா ! அந்த புள்ள பயப்படாம எதையும் நேருக்கு நேரா கேட்குற னால உனக்கு அப்படி மதிக்காத மாதிரி தெரியுதுமா , ரொம்ப தங்கமான புள்ளமா ! – குணசேகரன்
தங்கமான புள்ளயா ?யாரு அவனா ? அப்பா லேட்டா ஆபிஸ்க்கு வரது,ஏன்னு கேட்டா திமிரா பதில் சொல்றது , வேலை பெண்டிங் ,ஒரு வேலையும் ஒழுங்கா செய்றது இல்லை, நினைச்ச நேரம் டீ குடிக்குறது என்று அவள் அடுக்கிக் கொண்டே போக
“ அம்மா கனி ! போதுமா! இது எல்லாம் எனக்கு முன்னமே தெரியும் . அவன் என்கிட்ட சொல்லிட்டு தான்மா போனான் .வேலை பெண்டிங் பத்தியும் என்கிட்ட காரணம் சொல்லிட்டான் மா ! – குணசேகரன்
எல்லாத்தையும் உங்ககிட்டயே சொல்லிட்டா அப்புறம் நான் எதுக்கு இருக்கேன் – கனி
கனி !அவன் தன்மானம் அதிகமுள்ளவன் ! நீ எடுத்தெரிஞ்சு பேசுவ அதான் அவன் உன்கிட்ட பாய்றான். நீ கொஞ்சம் அன்பா சொல்லுமா? கேட்டுக்குவான் – குணசேகரன்
இப்டி வந்து உங்ககிட்ட புகார் சொன்னானா அவன்? – கனி
உன்னபத்தி அவன் சொல்லி தான் தெரியணும் இல்லைமா ? எனக்கு தெரியாதா என் பொண்ண பத்தி , அதுமட்டும் இல்லைமா !அவன் வேலை செஞ்சுதான் சாப்டணும்னு இல்லை . அவங்க வசதியான குடும்பம் . சொத்து நிறையா இருக்கு . அவன் அப்பா ஏதோ காரணமா அவனை இங்க அனுப்பி வச்சுருக்காரு ! கொஞ்ச நாள் தான்மா ! கொஞ்சம் பொறுத்துக்கோ என்று அவர் சொல்ல
என்னவோ பண்ணுங்க என்று அவரிடம் சொல்லிவிட்டு அவள் செல்ல முயல குணசேகரன் அவளை தடுத்து நிறுத்தினார் .
கனிம்மா ! ஒரு 2,3 நாள் நாம நம்ம கிராமத்திற்கு போயிட்டு வரலாம்மா !என்று அவர் கூற மறுத்து பேச வந்தவளை குணசேகரன் தடுத்தார்.
ஆபிஸ் பொறுப்பெல்லாம் என் பிரண்ட் கங்காதரன்கிட்ட ஒப்படைச்சுட்டேன் அவன் பார்த்துக்குவான் .நீ எதுவும் பேசாம என் கூட வந்தா மட்டும் போதும் என்று சொல்லிவிட்டு அவர் செல்ல கனி கடுப்புடன் நின்றாள்.
*******************************************************************************************************
வடுகப்பட்டி மக்களில் கிணற்றில் விழுந்து இறந்து போனவங்க பெயர் பட்டியலையும் , மரத்தில் பொறிக்கப்பட்டிருந்த பெயர்களையும் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருந்த ஆறுமுகம் குழம்பி நின்றார்.
அவர் குழப்பமாக இருப்பதை பார்த்த இனியன் அவர் அருகில் வந்து
“ என்னாச்சு ஆறுமுகம் ? ஏன் குழப்பமா இருக்கீங்க” – இனியன்
“ சார் ! மரத்தில் இருந்த பெயர்கள் இறந்து போனவங்க பெயரோட பொருந்த மாட்டிங்கிது . இப்ப என்ன பண்ண ? – ஆறுமுகம்
ஏன் ?என்னாச்சு ? – இனியன்
சார் மரத்தில் உள்ள பெயர்கள் எல்லாம் ஏதோ புராணகால பெயர்களா இருக்கு . நாம வச்சிருக்குற பெயர் பட்டியலோட அது பொருந்தவில்லை சார் – ஆறுமுகம்
ஓ ! இங்க குடுங்க நான் பார்க்குறேன் என்று கூறியவன் அதை வாங்கி பார்த்து சற்று நேரம் யோசித்தவன் ஆறுமுகம் இதில் பாதி பெயரை மட்டும் எடுத்து ஒப்பிட்டு பாருங்க என்று இனியன் கூற
புரியலை சார்! என்று கூறி தலையை சொறிந்தார் அவர்
அவர் அப்படி கூறியதும் இனியன் அவருக்கு பொறுமையாக விளக்கினான்
இதில் யாழ்வதனினு இருந்தா ஒன்று யாழ் இல்லை வதனின்ற பெயர் இருக்கானு பாருங்க என்று அவன் கூற ஆறுமுகம் அதன்படி ஆராய்ந்து சற்று நேரத்தில் வந்தார்
சார் ! நீங்க சொன்னமாதிரி பார்த்தா எல்லாம் பெயரும் இருக்கு சார்! – ஆறுமுகம்
மரத்தில பொறிக்கப்பட்டிருந்த பெயர்கள்ல இருக்குறவங்க எல்லாரும் இறந்துட்டாங்களா? இல்லை யாரும் உயிரோடு இருக்காங்களா? – இனியன்
இல்லை சார் ! இன்னும் இரண்டு பேர் உயிரோடு இருக்காங்க - ஆறுமுகம்
யார் அவங்க ஆறுமுகம்? என்று இனியன் கேட்க
“தேன்குழலாள் , லவலிங்கேஷ்” என்று ஆறுமுகம் அந்த இரு பெயர்களை சொல்ல அதை கேட்டதும் இனியன் யோசனையில் ஆழ்ந்தான்.
“ எல்லாம் பொண்ணுங்க பெயரா இருக்கு. இதில் ஒன்று மட்டும் ஆணின் பெயர் வருது ? என்ன காரணமா இருக்கும் ? அவன் இப்போ எங்கே ? "என்று இனியன் பல கேள்விகளை தனக்குள் கேட்டுக் கொண்டான்.
“ மறைத்து வைத்த பொருள் ஒன்று புதைந்து இங்கு கிடக்குதோ ! கொல்லும் தீயை அணைக்கும் யுக்தியை அது அடையப் பெற்றதோ!
வியூகம் தொடரும்