Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed மழையோடு நம் காதல் - கதை

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
1

ஈருயிராய் இருந்த தன் மனைவி ப்ரசவ வார்டினுள் சென்று ஒரு மணி நேரம் ஆகியும் நல்ல செய்தி வரவில்லையே என்று தனக்கு தெரிந்த தெரியாத எல்லா கடவுளையும் வேண்டி கொண்டிருந்தான் இந்த கதையின் நாயகன்.

தன் இதயத்துடிப்பு தனக்கே கேட்பது போல் உணர்வு தோன்ற உள்ளுக்குள் தனக்கே பிரசவம் நடப்பது போல் ஒரு சொல்லமுடியாத பயம் வலி எல்லாம் சேர்ந்து உடல் நடுங்க சுவரில் கைகளை கட்டியபடி கண்களை மூடி சாய்ந்து நின்றிருந்தவனை கலைத்தது ஒரு அந்நிய குரலோடு இன்னொரு மெல்லிய அழுகை "சார்! உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு. இந்தாங்க" என்று தன்னிடம் பிறந்து சில நொடிகளே ஆன தன் குழந்தையை செவிலியர் தர...

தன் உயிர்குருதியில் முளைத்த சின்ன ரோஜா மொட்டு இதழ் விரித்து தன் பட்டு போன்ற சின்னஞ்சிறு கை கால்களை உதைத்து தன் மெல்லிய அழுகையால் இந்த உலகிற்கு வந்துவிட்டதை உணர்த்துவது போல் இருக்க கண்களில் பொங்கும் ஆனந்த கண்ணீர் ஆறாய் வழிந்தோட தன் நடுங்கும் கரத்தினால் வாங்கி கொண்டு உச்சி முகர்ந்தவன்.

"என்

உயிர்குருதியில் ஜனித்து

என்னவளின்

உயிர்கருவில் குடிகொண்டு

ஈரைந்து மாதங்கள் வளர்ந்து

வெளிவந்த எம் செல்வி நீயே?

என்னை ஈன்றெடுக்காத

தாய் நீயே!"


சடாரென தலை நிமிர்த்தி "சிஸ்டர் என் மனைவி எப்டி இருக்காங்க? நல்லா இருக்காங்கல்ல?"என்றான் நடுங்கும் குரலில்...

பின்னோடு வந்த டாக்டர் "சாரி டு செ திஸ் சார்! எவ்ளோ முயற்ச்சி பண்ணியும் நாம பயந்த மாதிரியே நடந்துருச்சி அவங்கள எங்களால காப்பாத்த முடியல. வெரி சாரி! மனச தேத்திகொங்க" என்றார்.

தன் தலையில் இடி விழுந்ததை போல் உணர்ந்தவன் இந்த உலகமே தன் காலடியில் இருண்டு கிடப்பதை போல் தோன்ற சற்று முன் நடந்ததை நினைத்தான்....

சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன் "என்னங்க எனக்கு இடுப்பு ரொம்ப வலிக்குது சீக்கிரம் வாங்க " என்று தன் மனைவி அலறியதில் உள்ளே இருந்து வேகமாக ஓடி வந்தவன் அவளை தாங்கி பிடித்து "என்னம்மா! எ்ன பண்ணுது?" என்றான் பதட்டமாக...

பதட்டம் கலந்த பயத்துடன் "எனக்கு பிரசவ வலி ஸ்டார்ட்ஆகிடுச்சுன்னு நினைக்கிறன்" என்றவளிடம்

"சரி டா! எதுக்கும் டென்ஷன் ஆகாதே ரிலாக்ஸாக இரு நாம இதோ ஹாஸ்பிடல் போய்டலாம்" என்று தனக்குள் எழும் பயத்தை வெளிக்காட்டாமல் தன்னவளுக்கு தைரியம் கூற அவ்வளவு மரண பயத்திலும் அவனின் வார்த்தைகள் அவளுக்கு தெம்பூட்ட மெல்லிய சாரலாய் அரும்பியது அவளின் புன்னகை...

"இதோ வந்துடறேன்" என்று உள்ளே பொறுமையாக சென்றவள். குளியறை சென்று வலியோடு அணிந்திருந்த நைட்டியை கழட்டி சிறு குளியலை குளித்து முடித்து வந்து தன் கணவன் தனக்காக முதன் முதலில் வாங்கி குடுத்த அடர் கருநீலநிற புடவையை எடுத்து கட்டிக்கொண்டு பூஜை அறை முன் சென்று நின்றவள் "என்னங்க இங்க வாங்க"என்று குரல் குடுக்க

"இதோ வந்துட்டேன்" என்று உள்ளே வந்தவன் "ஏம்மா இப்ப இது ரொம்ப முக்கியமா? அப்படியே கிளம்புவியா ?"என்றவன் அப்பொழுது தான் கவனித்தான் அவள் அணிந்திருந்த புடவையை, அவன் உதட்டில் மெல்ல புன்னகை அரும்ப அவள் முறைப்பதை பார்த்து "சரி சரி நான் எதுவும் சொல்லவில்லை"என்று சிரித்தான்.

கற்ப்பூரத்தை ஏற்றி கையெடுத்து கும்பிட்டவள் குங்குமச்சிமிழை அவனிடம் நீட்ட அதில் இருந்து எடுத்த குங்குமத்தை அவளின் நெற்றியில் கீற்றாய் இட்டவன் நெற்றிவகிட்டிலும் வைத்து அவளின் உச்சியில் ஒரு முத்தத்தை தந்த பின் " போலாம் டா லேட்டா ஆகுது "

"ஹ்ம்..." என்று பெருமூச்சு வெளிப்பட கண்களில் கண்ணீரோடு அவனை தழுவிக்கொண்டாள்.

"டாக்டர் சொல்றதையும் மீறி எல்லாம் நல்லபடியா நடக்கும் கவலை படாதே போலாம்" என்றான்

சரி என்று தலை ஆட்டியவள் "ஆ...ஆ ..... ரொம்ப வலிக்குதுங்க சீக்கிரம் போகலாம் என்னால வலி தாங்க முடியலை " என்று வலியில் துடிக்க

"இதோ உடனே ஹாஸ்பிடல் போகலாம் " என்று அவளை வெளியே மெதுவாக அழைத்து வந்து தன் காரில் உட்கார வைத்தான்.

"ஒரு ரெண்டு நிமிஷம் இதோ வந்துடறேன" உள்ளே ஓடியவன் சட்டையை எடுத்து வேகமாக போட்டு கொண்டு வீட்டை பூட்டிகொண்டு ஓடி வந்து காரை ஸ்டார்ட் செய்தான்.

"செல்வி! பத்து நிமிஷம் இதோ ஹாஸ்பிடல் போய்ட் ரொம்ப வலிக்குதாடா கொஞ்சம் பொறுத்துகோடா " என்று அவள் துடிப்பதை பார்த்து தன்னால் அந்த வலியை வாங்கி கொள்ளமுடியவில்லையே என்று வேதனை பட்டு கூற

அவ்வளவு வலியிலும் "என்னங்க! இந்த பிரசவத்துல நான் நல்லபடியா பிழைச்சி வந்துட்டா சரி அப்டி ஒரு வேளை எனக்கு ஏதாவது ..." எனும் போதே அவளின் வாயை தன் கைகள் கொண்டு மூடி "அப்டிலாம் ஒன்னும் நடக்காது நீயும் நம்ம பாப்பாவும் நல்லபடியா வந்துருவிங்க" என்று தன் கணவன் சொல்ல

அவன் கையை தன் வாயில் இருந்து விலக்கி "டாக்டரே இப்பவரைக்கும் அதுக்கு உத்திரவாதம் தரலையே! அப்டி எனக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா நம்ம பாப்பாவ என்னை காரணம் காட்டி வெறுத்து ஒதுக்க கூடாது ஏன்னா நான் தான் உ ங்களுக்கு பொண்ணா பிறந்து உங்க கூட இருக்க வருவேன்" என்று கூற அவள் கூறுவது நடக்க கூடாது என்று வேண்டினாலும் அவளின் திருப்திக்காக சரி என்று தலை ஆட்டினான்.

"சார்! சார்!" என்ற குரல் கேட்க நினைவுகளில் இருந்து மீண்டவன் ஒரு மணி நேரத்திற்கு முன் உயிரோடு இருந்தவள், யாருமற்ற அனாதையாக இருந்தவனை நான் இருக்கிறேன் உனக்கு என்று சொல்லி தன் உயிராய் என்னை நேசித்தவள் இப்பொழுது இல்லை தன்னை மறுபடியும் தனிமரமாக தவிக்கவிட்டு சென்றுவிட்டாள் என்பதை நினைக்கும் பொழுதே துக்கம் தொண்டையை அடைக்க குழந்தையை அணைத்தபடி சுவரோடு சாய்ந்து தரையில் அமர்ந்து கதறி அழுதான்.

"சார்! உங்ககூட யாரும் வரலையா?" சிஸ்டர் கேட்கவும் "இல்லை" என்று தலை ஆட்டியவன். தன் போனை எடுத்து வேகமாக அழுதுகொண்டே டயல் செய்தான்.

எதிர் முனையில் "ஹலோ!" என்று குரல் கேட்கவும் "டேய் பிரபு! உன் தங்கச்சி நம்ம எல்லாரையும் தவிக்க விட்டுட்டு போய்ட்டாடா" என்று கதற

"டேய் என்னடா உளர்ற? செல்வி எங்க?"என்று பதட்டதோட கேட்க

"அவ நம்ம எல்லாரையும் விட்டுட்டு போய்டாடா! நான் தலபாடா அடிட்சிகிட்டேன் இந்த குழந்தை வேணாம்னு என் பேச்சை கேக்கலையே? இப்ப பாரு ..."என்று கேவ

"டேய் இப்ப நீ எங்க இருக்க ?" என்று பிரபு கேட்க

"நான் இங்க செல்விக்கு பிரசவ வலி வந்துச்சுனு ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்தேண்டா இங்க என் கைல ஒரு பட்ச குழந்தைய குடுத்துட்டு எங்க ரெண்டு போரையும் ஆனாதையா விட்டு போய்டா " என்று புலம்பினான்

"டேய் தமிழ் நீ அங்கேயே இரு இன்னும் பத்து நிமிஷத்துல நான் அங்க இருப்பேன் " என்று போனை கட் செய்தவன் அடுத்த பத்து நிமிஷத்தில் அங்கு இருந்தான்.

பிரபுவை கண்டதும் சிறு குழந்தையென ஓடி சென்று அவனை கட்டிக்கொண்டு கதற தொடங்கினான் நம் நாயகன் சரவணத்தமிழன்.

எல்லா பார்மாலிட்டிசையும் தான் ஒருவனே முன் நின்று முடித்து செல்வியின் உடலை வீட்டிற்கும் கொண்டு வந்துவிட்டான் பிரபு.

தனகென்று யாருமில்லாத நேரத்தில், தனக்காக, வீட்டிற்கு ஒரே பெண்ணாய் செல்லமாக வளம் வந்த பெற்றவீட்டை துறந்து வந்த செல்வியை தலைமுழுகிய அவளின் பெற்றோருக்கு சரவணத்தமிழன் பிரபுவின் மூலம் தகவல் சொல்ல "எங்கள் பெண் செல்வி என்று அவனை கூட்டி கொண்டு இந்த வீட்டு வாசலை தாண்டினாளோ அன்றே இறந்து விட்டாள். இது யாரோ? முன் பின் தெரியாதவர்ன்களின் சாவுகேல்லாம் எங்களால் வரமுடியாது" என்று கூறி அனுப்பி விட்டனர்.

தன் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் தன் தொழில் முறை தெரிந்தவர்கள் அக்கம் பக்கத்தினர் என எல்லோரும் துக்கவீட்டில் சூழ்ந்திருக்க எல்லா காரியங்களையும் தான் ஒருவனே நண்பனின் துணைகொண்டு செய்து முடித்தான் தமிழ்.

தன் மனையாள் கூறியது சரியாக இருக்கிறது "உனக்கு நான் எனக்கு நீ! அவ்வளவு தான் சிறிய கூட்டில் சந்தோசமாக இருக்கலாம் அவர்களை பற்றி பேச்சு எதற்கு உங்களை மதிகாதவர்களின் உறவு நமக்கு தேவை இல்லை. " என்று கூறினாள்.

இரண்டு வருடம் பின்னோக்கி சிந்தனையில் மூழ்கியவனை மீட்க தேவதையாய்

"அப் ...ப் ...பா!" என்று மழலை குரலில் தன் அப்பாவை கொஞ்சும் தமிழில் கூப்பிட்டது இரண்டு வயதான குழந்தை...

தன் காலை கட்டிக்கொண்டு சிரித்தபடி நிற்கும் குழந்தையிடம் "சர்வதா குட்டி! என்னடா குட்டி ?" என்று கொஞ்சியபடி தூக்கி கொண்டான்.

"ஆம்! தங்கள் இருவரின் ஆசை மகளுக்கு தன் பெயரின் முதல் எழுத்தான "சரவ" வும் தன் காதல் மனைவி பெயர் தாமரைச்செல்வியின் முதல் எழுத்தான "தா"வும் சேர்த்து "சர்வதா" என்று வைத்திருந்தான்.
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43

2. சரவணனின் அறிமுகம்!​

திருமணம் என்னும் பந்தத்தில் ஆசையாய் அன்போடு இணையாமல் கடமைக்காக கல்யாணம் செய்து கொண்டு இல்லறம் நடத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் அவர்களுக்கு மட்டும் இல்லை அவர்களால் உருவாகும் பிள்ளைகளுக்கும் தான் என்பதை நாம் இங்கு நம் நாயகனின் மூலம் கண்கூடாக காணபோகிறோம்.

ஆம்! நம் நாயகனின் பெற்றோர் இருவரும் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்துகொள்ளாது சண்டையிட்டு பிரிந்ததால் சரவணத்தமிழன் சிறு வயதிலேயே காப்பகத்தில் விட்டுவிட்டு இருவரும் பிரிந்து அவரவர் வாழ்க்கையை வேறு ஒரு துணையோடு சென்று வாழ ஆரம்பித்து, பாதிப்பை நம் நாயகனுக்கு மட்டும் உண்டாக்கி விட்டார்கள்.

சிறுகுழந்தை என்றும் பாராமல் அவர்கள் செய்த செயலால் முழுவதும் பாதிக்கப்பட்டது சரவணத்தமிழன் தான்.

மற்றவரின் ஏளன பார்வையோ, பரிதாப பார்வையோ, அவன் மேல் விழுவதை விரும்பாமல் எல்லோரும் அவனை பாராட்டி மட்டுமே பேச வேண்டும் என்று முடிவெடுத்து, படிப்பு, விளையாட்டு என அவன் கால் பதியும் எல்லா இடத்திலும் அவனது அயராத உழைப்பால் அவனுக்கே முதலிடம் கிடைத்தது.

அதோடு மட்டும் நில்லாமல் தன் ஒய்வு நேரத்தில் அந்த காப்பகத்தில் இருந்த அனைத்து பிள்ளைகளுக்கும் அவனே படிப்பும் சொல்லிக்கொடுத்தான்.

படிப்பின் உச்சத்தில் இருந்தாலும் அவனுக்கு ஆடிட்டராக வேண்டும் என்று ஆசை. அதனால் அக்கௌண்ட்ஸ் குரூப் எடுத்து படித்தான்.

தன் நண்பன் பிரபுவின் உதவியால் சென்னையிலேயே பெரிய ஆடிட்டரான அவனது பெரியப்பாவிடம் பேசி வேலைக்கு சேர்ந்துவிட்டான்.

முதல் நாள் படபடக்கும் இதயத்தோடு அவர் வீட்டின் உள்ளே அடியெடுத்து வைத்து அவரை அணுக, ”குட் மார்னிங் சரவணா! பிரபு உங்களை பற்றி சொன்னான். இன்னைக்கே வேலைல ஜாயின் பண்ணிக்கோங்க. எனக்கு வேலைல கரெக்டா இருக்கனும்” என்றார் கண்டிப்பாக.

"சரி சார்!" என்றான் சரவணத்தமிழன்.

"சரி. இந்த ரூம் தான் என்னோட ஆபீஸ் இங்கயே வெயிட் பண்ணு. நான் போய் ரெடியாகிட்டு வந்துடறேன். ஒரு பெரிய கம்பனில இன்னைக்கு ஆடிட்டிங் இருக்கு. நாம போகணும்" என்று அவனை பார்த்தார்.

"சரி சார்" என்றான் சரவணத்தமிழன்.

"இந்தா. இது தான் அந்த பைல் பார்த்துட்டு இரு" ஒரு பைலை அவனிடம் கொடுத்துவிட்டு வெளியே சென்றார்.

அந்த பைலை பார்த்துக்கொண்டிருந்த சரவணத்தமிழன் திடிரென்று சத்தம் வரவே தலை நிமிர்த்தி பார்த்தான். வேகமாக ஓடி வந்த ஒரு பெண்,

"எங்க அம்மா வந்து கேட்டா நான் இருக்கறதை சொல்லகூடாது" என்று மிரட்டும் தொனியில் கூறிவிட்டு அவன் அமர்ந்திருந்த சோபாவின் பின்னால் ஒளிவதை பார்த்து ஒன்றும் புரியாமல் முழிக்க, பின்னாடியே நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி கத்தி கொண்டே கையில் மாத்திரையோடு வந்தார்.

"செல்வி! செல்வி! நீ எங்க தான் ஒளிஞ்சிட்டு இருக்க? ஒழுங்கு மரியாதையா வந்து இந்த மாத்திரைய போட்டுக்க. இல்ல.. நான் உன்னை கண்டுபிடிச்சா ஒரு ஊசி போடறதுக்கு பதில் ரெண்டு ஊசி போட்ருவேன் சொல்லிட்டேன்." என்று கத்த, அசையாமல் அந்த பெண் சிலை போல் அமர்ந்திருப்பதை பார்த்து சிரிப்பு வந்தது அவனுக்கு. ‘அடிப்பாவி ஊசி போட்டுக்கறதுக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்றா?’ என்று தனக்கு தானே மனதில் கேட்டு கொண்டான்.

"தம்பி! இங்க என் பொண்ணு வந்தாளா? நேத்து சொல்ல சொல்ல கேக்காம அவங்க பிரெண்ட் கூட போயி மழைல நனைஞ்சுட்டு வந்து இன்னைக்கு ஜுரம் அதிகமா இருக்கு. ஊசி போட்டு மாத்திரை சாப்பிட்றதுக்கு என்னை போட்டு பாடா படுத்துறா. நான் ஒரு டாக்டர் எனக்கு இவ உடம்பு சரி இல்லனா எப்டி இருக்கும் ?" என்று கூற தமிழ் அந்த பெண்ணை பார்த்தான்.

‘சொல்லவேண்டாம்’ என்று விழிகளை உருட்டி அவள் தலையாட்ட

நம்ம ஆள் சும்மா இல்லாம, ”இங்க ஒரு பொண்ணு உக்கார்ந்துருக்கு இந்த பொண்ணா பாருங்க?" என்று கரெக்டாக மாட்டிவிட்டான்.

அவள் எழுந்து ஓடும் முன் அவளை பிடித்துகொண்ட செல்வியின் அம்மா ”ஒழுங்கா மாத்திரை சாப்பிடுடி" என்று மிரட்டி ஒரு வழியாக மாத்திரையை விழுங்க வைத்தார்கள்.

"இப்போ போய் கொஞ்ச நேரம் அங்கயும் இங்கயும் ஓடாம போய் ரெஸ்ட் எடு" என்று கூறிவிட்டு செல்ல அவருக்கு பழிப்பு காட்டி விட்டு சரவணத்தமிழனிடம் திரும்பி நின்று இரண்டு கைகளை இடுப்பில் வைத்து முறைத்தாள்.

"ஹலோ என்ன எதுக்கு முறைக்கிறிங்க? உங்க அம்மா உங்கள கேட்டாங்க அதான் பெரியவங்க கேட்கும் போது பொய் சொல்ல முடியாம உண்மைய சொல்லிட்டேன்" என்று பாவமாய் வேண்டுமென்று அவளை வெறுபேற்றும்படி கூறினான்.

"யோவ்! யாருயா நீ? எங்க வீட்ல வந்து உட்கார்ந்துகிட்டு எங்க அம்மாகிட்ட வேற என்னை மாட்டிவிட்டு தேவையில்லாம மாத்திரை சாப்பிட வச்சிட்ட" என்று எண்ணெயில் விழுந்த கடுகாய் பொரிந்து தள்ளினாள்.

"இங்க பாரு. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு. பார்த்தா படிச்ச பொண்ணு மாதிரி இருக்க. எப்படி பேசணும்னு தெரில?" என்று அவளை சீண்டினான் சரவணத்தமிழன்.

"இவர் பெரிய கலெக்டர். உனக்கு எல்லாம் என்ன மரியாதை வேண்டி கிடக்கு? என் வாழ்நாள்ல இதுவரைக்கும் மாத்திரை போடாம எங்க அம்மாகிட்ட தப்பிச்சிட்டு வந்தேன். உன்னால இன்னைக்கு மாட்டிகிட்டேன்" என்று புலம்பினாள்.

"செல்வி! வாட் இஸ் திஸ்? வாட் ஆர் யூ டூயிங் ஹியர்? முன்ன பின்ன தெரியாத ஒருத்தர்கிட்ட இப்படி தான் பீகேவ் பண்றதா? சே சாரி டு ஹிம்" என்று கடுமையான அதட்டல் வாசலில் இருந்து வரவே திரும்பி பார்த்தாள் செல்வி.

அங்கு அவளின் அப்பா கோவமாய் நின்று கொண்டிருந்தார்.

"சாரி!" என்று வேண்டா வெறுப்பாய் சொல்லிவிட்டு வெளியே செல்ல.

அப்பாவின் குரல் தடுத்தது செல்வியை.

”ஒரு நிமிஷம் டா! இவர் மிஸ்டர்.சரவணத்தமிழன். நம்ம பிரபு தான் இங்க எனக்கு அச்சிஸ்டென்ட்டா அனுப்பி இருக்கான். சோ, இன்னைலர்ந்து இவர் இங்க என் கூட தான் வொர்க் பண்ண போறார். அம்மாகிட்ட சொல்லி டீ கொடுத்தனுப்ப சொல்லு" என்று கூறினார்.

"சரிப்பா” என்று அங்கிருந்து வேகமாக சமையலறைக்கு சென்றவள் தாட் பூட் தஞ்சாவூர் என வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பித்தாள்.

"மாம்! எனக்கு அப்பாகிட்ட வேலை செய்ய வந்திருக்கவர சுத்தமா பிடிக்கல. அப்பாகிட்ட சொல்லி இங்க வேலைக்கு வெக்க கூடாதுன்னு சொல்லுங்க" என்று கத்தினாள்.

"என்னடி? அப்பாவோட வொர்க் விஷயத்தில எல்லாம் நான் தலையிட மாட்டேன். உனக்கு வேணும்னா நீயே சொல்லிக்கோ" என்று அவள் அம்மா வேலையை கவனித்தார்.

செய்வதறியாது செல்வி கோவத்தில் காலை தரையில் ஓங்கி மிதித்து, ”அப்பா அவருக்கு டீ கேட்டார் கொடுத்தனுப்ப சொன்னாங்க” என்று போக திரும்பியவளை ”இந்தா டீ போட்டாச்சு இதை கொண்டு போய் கொடு” என்று டீ கப்பை கொடுத்தார்.

"என்னால முடியாது, வள்ளி இருந்தா கொடுக்க சொல்லுங்க” என்று முறைத்தாள்.

"செல்வி! எனக்கு ஹாஸ்பிட்டல்க்கு டைம் ஆகுது. இன்னைக்கு வள்ளி வரல வம்பு பண்ணாம போய் கொடு" என்று கத்தினார்

"சரி. போய் தொலைக்கிறேன் கத்தாதிங்க” என்று டீ கப்பை வாங்கிகொண்டு வேகமாக கோவத்தில் முனகி கொண்டு சென்றாள்.

செல்வியின் அப்பா போன் பேசிக்கொண்டே வெளியே சென்ற நேரத்தில் உள்ளே வந்து டீ கப்பை அவன் முன் நீட்டினாள் நம் நாயகி தாமரைச்செல்வி .

அவள் குழந்தை போன்ற முகத்தை கண்டு சிறு புன்முறுவல் பூத்து, ”தேங்க்ஸ்" என்று வாங்கி கொண்டான்.

"ஹம்.." என்று ஒரு சின்ன முனகலுடன் வெளியே போக திரும்பினாள்.

"ஒரு நிமிஷம்!" என்றான் தமிழ்.

"என்ன?" என்பது போல் அவள் திரும்பி அவனை பார்க்க.

"சாரி. நான் உங்க அம்மாகிட்ட சொன்னதுக்கு... உங்களுக்கு அக்கறை காட்ட உங்க அம்மா இருக்கறதுனால அவங்களோட அருமைய பத்தி தெரியல. எங்களுக்கு எல்லாம் அக்கறை காட்ட யாருமே இல்லன்னு ஏங்கறோம். உங்களுக்கு எங்க வலி சொன்னா புரியாது விடுங்க, சாரி! இனி உங்க விஷயத்துல தலையிடமாட்டேன்" என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட அவனின் வார்த்தைகள் அவள் செவிகளில் ரீங்காரமிட்டு கொண்டே இருந்தது.
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43

3. பணம்!​

பணம்! பண்டைய காலத்தில் நம் முன்னோர் பொருட்களை பண்ட மாற்று முறையில் மாற்றி பெற்றுகொண்டனர். அப்பொழுது எல்லாம் பணம் பற்றிய பைத்தியம் இல்லாமல் இருந்தது. மனிதனுக்கு மனிதன் உதவுவது தான் முதல் கடமையாக இருந்தது.

பின் பொருள் பெற்றுக்கொண்டு அதற்கு பதிலாக நாணயங்களை கொடுத்து வர்த்தக முறையை விரிவு படுத்தினர். ஆயிரம் இருந்தாலும் ஏதோ ஒரு நல்ல திட்டத்தோடு தான் இதை நடைமுறைக்கு கொண்டு வந்திருப்பர். ஆனால், அதன்பின் வந்த சில சுயநலவாதிகளின் தீய திட்டமிடலால் இன்று பணம் என்பது தேவைக்கு ஏற்ப சம்பாதித்தும் கூட அடுத்தவரின் உயிரை பறித்தாவது இன்னும் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற மனநிலைக்கு மாறப்பட்டுள்ளனர் பல மக்கள்.

நம் கதைக்கும் இதில் சிறு சம்பந்தம் உண்டு அதனால் கதைக்கு வருவோம்.

அமுதா- பாஸ்கர் பிறப்பிலேயே இருவரும் நல்ல வசதியான கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்து வசதியாய் வளர்ந்தவர்கள். அமுதா டாக்டர்க்கு படிக்க, பாஸ்கர் சி.ஏ படித்து ஆடிட்டரானார், பின் இருவரும் நெருங்கிய சொந்தமென்பதால் இருவருக்கும் பெற்றோர்கள் பேசி திருமணம் செய்துவைக்க தங்களின் வாழ்க்கையை அன்போடு வாழ ஆரம்பித்தனர். அவர்களுக்கு ஒரே செல்ல மகளாய் பிறந்தாள் நம் நாயகனின் நாயகி தாமரைச்செல்வி.

குழந்தையிலேயே குறும்பு செய்வதில் மிகவும் தேர்ந்தவள் தாமரைச்செல்வி.

மூன்று வயதில் தான் அவளுக்கு காது குத்தினார்கள். ”உனக்கு காது குத்த போறாங்க அழகூடாது" என்று எல்லோரும் பயமுறுத்த.

எல்லோரும் வேலை செய்து கொண்டிருந்த வேளையில் அமைதியாக யாரும் கவனிக்காத படி கோவிலின் கருவறை உள்ளே சென்று மூலையில் யார் கண்ணிலும் படாதபடி உட்கார்ந்து கொண்டாள்.

குழந்தையை காணாமல் எல்லோரும் அலறியடித்து எல்லா இடத்திலும் தேடி கிடைக்காததால் அழுது கொண்டிருக்க, பூஜை செய்ய உள்ளே சென்ற பூசாரி குழந்தையை பார்த்து ”இங்க பாருங்கோ குழந்தை இங்க உக்கார்ந்துண்டு இருக்கா" என்று தூக்கி கொண்டு போக அவர் கன்னத்தை தன் பால் பற்களால் பதம் பார்த்துவிட்டாள். அதன் பிறகு அவளை சமாதானம் செய்து காது குத்த வெகுநேரமானது. அது வேறு கதை...

இருவரும் தொழிலில் சுத்தமானவர்கள், நேர்மையானர்வர்கள், அன்புள்ளவர்கள் தங்கள் பெண்ணிற்காக என்ன வேண்டுமானாலும் செய்பவர்கள் என்றாலும் பிறப்பிலேயே வசதிபடைத்தவர்கள் என்பதால் அவர்களின் குருதியிலேயே பணத்திமிர் இருக்கத்தான் செய்தது. அதிலும் அமுதா சற்று பாசம் அதிகமுடையவள் என்றாலும் பாஸ்கர் அதில் இருந்து மாறுபட்டவர் பாசம் இருந்தாலும் அந்தஸ்து எனும் வரும்பொழுது தங்களுக்கு நிகரானவர்களிடையே நட்பு பாராட்ட தான் விரும்புவார்.

சிறுவயதில் இருந்தே செல்வி ஆசைபடுவதை வாய் திறந்து கேட்க வேண்டிய அவசியம் இல்லாமல் அவளின் கண் பார்வையிலேயே எல்லாம் வந்து சேர்ந்தது. செல்விக்கு பிடிவாத குணம் மிகவும் ஜாஸ்தி. தனக்கு ஒரு பொருள் வேண்டும் என்று நினைத்து விட்டாள் யார் தடுத்தாலும் அவர்களை தூர வைப்பாளே தவிர, அவள் நினைத்ததை முடிக்காமல் விடமாட்டாள்.

படிப்பில் படுசுட்டி மிகவும் புத்தி கூர்மையுடையவள். அழகிற்கும் குறைவில்லை. பெண்மைக்கே உரிய உடற்த்தோற்றம் முதற்கொண்டு எல்லாம் கனகட்சிதமாய் இருக்க தேவையற்ற அலங்காரத்தில் துளி இஷ்டம் இல்லாதவள்.

இவர்கள் இருவரின் குணமும் நம் நாயகியிடம் கலந்து இருந்தது. ஆதலால் சரவணத்தமிழனிடம் கோபப்பட்டாலும் அவன் கடைசியாய் சொல்லி விட்டு சென்ற வார்த்தைகள் அவளின் மனதை குடைய செய்தது.

அவளின் பார்வையில் யாரோ ஒரு புதியவன் தங்களின் வீட்டில் இருந்து கொண்டு தான் கூறிய பின்னும் தன்னை அம்மாவிடம் மாட்டி விட்டுவிட்டானே என்று கோபத்தில் பட்டாசாய் அவனிடம் வெடித்தவள். அவன் கடைசியாய் கூறியதில் சற்று குழப்பமடைந்தாள்.

"எனக்கு என் அம்மாவின் அருமை புரியவில்லையா? இவன் யார் என்னை பற்றி பேசுவதற்கு? என்னை பற்றி என்ன தெரியும்? ஆனாலும் அவன் கூறியதில் ஒன்று மட்டும் புரிந்தது தனகென்று அம்மா அப்பா இருப்பது போல் பாசம் காட்ட அவருக்கு யாரும் இல்லை போல். ச்சே பாவம் தேவை இல்லாமல் நான் அவனை திட்டி இருக்க கூடாது, ஆனாலும், அதற்கு நான் என்ன செய்ய முடியும்? என் கோபத்தை தேவையில்லாமல் சீண்டினால்...” என்று அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டு வெளியே சென்றுவிட்டாள்.

அதன்பிறகு அவனை சற்று வித்யாசமாக காண ஆரம்பித்தாள்.

மறுநாள் காலை சரவணன் தங்களின் அலுவலக அறையில் அன்றைய வேலைகளின் குறிப்பெடுத்து கொண்டிருக்க, பூனை நடைப்போட்டு அவனின் பின்னால் அமைதியாக வந்து நின்றாள். கடமையே கண்ணாயிருந்த சரவணனுக்கு இது தெரியவில்லை.

"உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே!

இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்....

.....................

மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய்!

விழுந்தாய் ஓர் விதையென நான் எழுந்தேன் .....

.............................................................................................

விரலுக்கும் விரலுக்கும் பிறந்ததும் இசையென இருப்போம்..."


கண்களை கையில் இருந்த கோப்புகளில் மேயவிட்டபடி அவனது இனிமையான குரலில் வசீகரமாய் பாடி கொண்டிருந்தான்.

தன் கண்களை மூடியபடி அந்த பாடலின் சுகத்தில் பெருமூச்சு விட, அவனின் இனிமையான பாடலை கேட்டு அங்கேயே மெய்மறந்த படி நின்றாள் செல்வி. பின் சுயநினைவு வந்தவளாய்.

"ஹ்க்கும்.." என்று செல்வி செரும திடுக்கிட்டு திரும்பினான்.

செல்வி நிற்பதை பார்த்து ” ஹேய்! நீங்க எப்போ வந்திங்க? நான் உங்களை கவனிக்கவே இல்லை சாரி" என்றான் லேசாக சிரித்து.

"நீங்க முதல் வரி பாடறதுக்கு முன்னாடியே வந்துட்டேன். உங்களோட வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு." என்று அவனை பார்த்து சிரித்தாள்.

"ஒஹ்! நீங்க வேற கிண்டல் பண்ணாதிங்க. நான் சும்மா ஏதோ பாடனும் போல இருந்தது சும்மா முனுமுனுதேன். அதுக்கு போய்..." என்றான் லேசான வெட்கம் கலந்த குரலில்.

"இல்ல உண்மையாகவே நல்லா இருந்தது. பை தி வே உங்க நேம் என்ன?" என்றாள் செல்வி.

"என் பெயர் சரவணத்தமிழன். உங்களுக்கு இப்ப பிவர் சரி ஆகிடுச்சா?" என்று அவளை நேருக்கு நேர் பார்த்து கேட்டான்.

" ஹம் இப்ப பரவால்ல” என்று மென்மையாய் சிரித்தாள்.

"மாத்திரை போடறிங்களா இல்ல இன்னைக்கும் எங்கயாவது போய் ஒளிஞ்சிட்டிங்களா?"என்று கிண்டலாய் கேட்டான்.

"இல்ல மாத்திரை சாப்பிட்டேன்" என்றாள் அமைதியாக.

"நீங்க என்ன படிச்சிருக்கீங்க?” என்று கேட்டாள்.

"நான் இப்ப சி.ஏ பண்ணிட்டு இருக்கேன். நீங்க என்ன பண்றிங்க?" என்றான் சரவணத்தமிழன்.

"நான் பி.பி.ஏ பைனல் இயர் படிக்கிறேன்" என்றவள் அறையை நோட்டமிட.

"என்ன பார்க்கறிங்க?" என்று கேட்டான்.

"இல்ல டேடி இங்க தான் இருக்கறதா மாம் சொன்னாங்க. அதான் பார்க்கலாம்னு வந்தேன்" என்றாள்.

"இப்போ தான் பிரெண்ட் யாரோ வந்துருக்காங்க பார்த்துட்டு வந்துடறேன்னு போயிருக்கார்" என்று கூறினான்.

"அப்படியா சரி. நான் அங்க போய் பார்த்துக்குறேன்" என்று திரும்பி போக எத்தனிதவளை தன் குரலால் தடுத்து நிறுத்தினான்.

"ஹலோ! ஒரு நிமிஷம்" என்றவனிடம் திரும்பி, "சொல்லுங்க” என்றாள்.

"உங்க பேர் என்னன்னு சொல்லவே இல்லையே?" என்று கேட்டான்.

"உங்களுக்கு என் பேர் தெரிஞ்சிக்க விருப்பமில்லைன்னு தான் கேக்கலையோன்னு நினைச்சு சொல்லலை" என்றாள்.

"சரி. உங்க பேர் என்ன சொல்லுங்க?" என்றான் மெல்லிதாய் புன்னகைத்தபடி.

"தாமரைச்செல்வி” என்றவுடன்.

"அழகான பெயர் உங்களை போலவே" என்று மீண்டும் தன் வேளையில் கவனம் செலுத்தியவனிடம்.

"தேங்க்ஸ் அப்புறம் பார்க்கலாம்" என்று வெளியே தன் தந்தை இருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள்.

"என்னடா என்னை தேடினதா சொன்னாங்க அம்மா! என்ன வேணும்?" என்று கேட்டபடி உள்ளே இருந்து வந்தார் அவளின் அப்பா.

"அப்பா எங்களுக்கு பைனல் இயர்ல? அதனால காலேஜ் டூர் கூட்டிட்டு போறாங்க" என்று அவரிடம் வந்து ஆசையாய் கட்டிகொண்டாள்.

"எங்க கூட்டிட்டு போறாங்க?" என்று கேட்டவரிடம்.

"கொடைக்கானல்" என்று விழிவிரிய கூறிய மகளின் நெற்றியோடு நெற்றி மோதி ”எத்தனை நாள் டூர் டா?" என்று செல்வியின் தலையை கோதிய படி கேட்டார்.

"ஓன் வீக் டேட்” என்று தந்தையின் நெஞ்சில் சாய்ந்திருந்தவள் தலையை தூக்கி பார்த்து சொன்னார்.

"என்னது ஒரு வாரமா? நோ வே. நான் அனுப்பமாட்டேன். உன்னை விட்டுட்டு எங்களால இருக்க முடியாது" என்று மறுப்பாய் தலையசைத்தார்.

"ப்ளீஸ் டேட்! இந்த ஒரு வாரம் மட்டும் எனக்காக. இதுவரைக்கும் என்னை எங்கயுமே அனுப்புனதில்ல. இது பைனல் இயர். இப்ப விட்டா அவ்ளோ தான் ப்ளீஸ்” என்று தன்னிடம் கெஞ்சும் மகளுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் தன் மனைவியை பார்க்க அவரும் ”போகட்டும்" என்று கண்ணசைவிலேயே கூற பெருமூச்சி விட்டவர்

"சரி டா இந்த ஒரே ஒரு வாட்டி மட்டும் தான் அனுப்புவேன். ஓக்கேவா பத்திரமா போய்ட்டு வரணும்" என்றார்.

"ஹை! ரொம்ப தேங்க்ஸ் டேட்'"என்று அவரை கட்டி பிடித்து கன்னத்தில் ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு துள்ளி குடித்து ஓடினாள்.

"என்ன அம்மு? ஒரு வாரம் எப்பிடி அனுப்பறது நீ பாட்டுக்கு அனுப்ப சொல்லிட்ட?" என்றார் முக சுனக்கமாய்

"சரி விடுங்க! சின்ன பொண்ணு ஆசை படறா பிரெண்ட்ஸ் கூட போகணும்னு போயிட்டு வரட்டும்" என்று சமாதானம் சொல்லிவிட்டு சென்றார்.

அவளும் அதுக்கப்புறம் தன் படிப்பில் கவனம் செலுத்தியதால் நம்ம ஹீரோ பக்கம் வரவே இல்ல.

சரவணனும் தன் வேலையின் நுணுக்கங்களை கற்று கொள்ள ஆர்வமாய் இருந்ததால் வேலையை கற்று கொள்வதிலேயே முழு கவனத்தையும் செலுத்தினான்.

எதிரிலே எப்பொழுதாவது பார்க்கும் பொழுது புன்னகை செய்து ஒரு ஹலோ சொல்வதோடு சரி.
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43

4. எதிர் பாராத விபத்து!​

இப்படியே சரவணத்தமிழன் வேலையில் சேர்ந்த முதல் மாதம் முழுவதும் முடிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்கொண்டால் சின்ன சிரிப்பு ஒரு ஹலோ அதையும் மீறி ”சாப்டிங்களா?" இப்படியே போய் கொண்டிருக்க ஒரு நாள்.

தாமரைச்செல்வி கல்லூரியில் அழைத்து செல்லும் டூர் செல்ல தந்தையிடம் ஏற்கனவே அனுமதி வாங்கியதால் நாளை போவதற்கு தயாராகி கொண்டிருந்தாள்.

அவளுக்கு பிடித்த உடையில் இருந்து மற்ற தேவையான எல்லா பொருட்களையும் எடுத்து வைத்து கொண்டிருந்தாள்.

அன்று காலை அப்பாவை பார்க்க வரும் சாக்கில் சரவணத்தமிழனை பார்க்க சென்ற பொழுது சிறிது ஏமாற்றம் குடிகொள்ள, அவன் இல்லாமல் அவனிடம் சொல்லாமல் திரும்பி வந்தாள்.

மறுநாள் காலை தன் தந்தை தாயிடம் சொல்லிக்கொண்டு கொடைக்கானல் கிளம்பி சென்றாள் செல்வி.

"அப்பா நான் கிளம்புறேன். இன்னும் என்ன பண்றிங்க? நீங்க மொதல்ல வாங்க வெளியிலே" என்று தன் தந்தையின் அறை நோக்கி குரல் கொடுத்தாள்.

"தோ வந்துட்டேன்டா! இந்தா இது என்னோட சார்பா உனக்கு. எனக்கு மறக்காம போன் செய்" என்று போனை அவளிடம் நீட்டினாள்.

எல்லா மாணவிகளையும் ஆன் த வேயில் பிக் அப் செய்வது போல் திட்டம் தீட்டியதால் அவளின் தந்தை செல்வியின் மேடமை பார்க்க நேர்ந்தது.

செல்வியின் மேடமிடம் அவளின் தந்தை, ”மேம்! இதுவரை என் பெண்ணை எங்குமே அனுப்பியதில்லை. இது தான் முதல்முறை. கொஞ்சம் பார்த்துகோங்க" என்றார்.

"சரி சார்! நான் பத்திரமாய் பார்த்துகிறேன். நீங்க கவலைப்படாதிங்க" என்று அவர்களுக்கு தைரியம் கூறினார்.

"சரி. பார்த்து பத்திரமாய் போயிட்டு வரணும் டா" என்று மகளுக்கு பிரிய மனம் இல்லாமல் விடை கொடுத்தனர் செல்வியின் பெற்றோர்.

"சரி அப்பா. நான் ரொம்ப பத்திரமாய் இருப்பேன். நீங்க கவலை படாதிங்க. நான் போய் உடனே உங்களுக்கு போன் செய்கிறேன்" என்று பெற்றவர்களுக்கு சொல்லிவிட்டு செல்வி அங்கிருந்து கிளம்பினாள்.

கொடைக்கானல் டுர்க்கு செல்வியின் கிளாசில் எல்லோருமே வந்திருந்தனர்.

கொடைக்கானலில் ஒவ்வொரு நாளும் ஒரு இடத்திற்கு சென்று சுற்றி பார்த்து என்ஜாய் செய்து கொண்டிருந்தனர் .

செல்வி சக தோழிகளுடன் நன்கு விளையாடி சந்தோஷமாக பட்டாம்பூட்சியாய் துள்ளி குதித்து கொண்டு இருந்தாள்.

இதற்கிடையில் நம்ம ஹீரோ.

"சார். எனக்கு மூணு நாள் லீவ் வேணும்” என்றான் தயங்கியபடி.

"என்ன சரவணா திடிர்னு லீவ் கேக்குறிங்க?" என்றார் பாஸ்கர்.

"சார்! என் நெருங்கிய தோழனுக்கு திருமணம் அதான் நான் கண்டிப்பா போகணும் அதனால் தான்...." என்றான் மெதுவாக.

"அப்படியா எங்க கல்யாணம்?" என்றார் நெற்றியை சுருக்கியபடி.

"கொடைக்கானல் சார்" என்றவனிடம் சடாரென திரும்பி.

"அப்படியா! என் பொண்ணு செல்வி கூட அங்க தான் காலேஜ் டூர் போயிருக்கா!" என்றார் கண்கள் பிரகாசமாய் மின்ன அவனுக்கு இதை பற்றி எதுவும் தெரியாததால்.

"ஒஹ்! அப்படியா சார்?" என்றான் சரவணத்தமிழன்.

"ஆமா சரவணா. நான் இதுவரைக்கும் என் பொண்ண எங்கயுமே தனியா அனுப்பனதே கிடையாது. இப்போ தான் போயிருக்கா. பத்திரமா திரும்பி வந்துருணம்" என்றார் கவலையாக.

"வந்துருவாங்க சார். நீங்க கவலைப்படாதிங்க" என்றான் ஆறுதலாக.

"சரி சரவணா. போயிட்டு வந்துடுங்க" என்றார்.

சரவணனும் கொடைக்கானல் வந்து சேர்ந்தாயிற்று.

காரில் வெகுதூரம் அவனே ஒட்டி கொண்டு வந்ததால் வழியில் ஒரு ஹோட்டலில் இரவு சாப்பாடு சாப்பிட்டு விட்டு நண்பனின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வழியில்..

--------------------------------------------

அங்கே நம் வாண்டு தோழிகள் பட்டாளம் அவர்களுக்குள் ஒரு பந்தயம் வைத்து கொண்டிருந்தனர்.

"ஹேய்! நைட் பன்னிரெண்டு மணிக்கு யாரு தனியா வண்டிய ஓட்டிட்டு போறாங்க பார்க்காலாம்?" என்றாள் கூடத்தில் இருந்த ஒருத்தி.

"என்னடி சொல்ற?" என்றாள் இன்னொருவள்.

"ஹேய் ஆமா டி. யாரு தனியா போறா பார்க்கலாம்? அவங்களுக்கு நம்ம டீம்ல எல்லாரும் சேர்ந்து ஐநூறு ருபாய் தரலாம். என்ன சொல்றிங்க?" என்றாள் எல்லோர் முகத்தையும் ஆவலாய் பார்த்தபடி.

“வண்டிக்கு என்ன பண்றது?” என்றாள் ஒருத்தி.

“என்கிட்ட இருக்கு? எங்க சித்தப்பா இங்க இருக்காரு. அவர் வண்டியை வாங்கி வச்சிருக்கேன்.” என்றாள் ஒருத்தி.

"எனக்கு பயமா இருக்கு டி” என்றாள் அந்த பெண்.

"எதுக்கு பயப்படுற? அதெல்லாம் ஒன்னும் ஆகாது. நீ சும்மா வாய மூடிட்டு இரு. சும்மா நீ பயபட்றதில்லாம எங்களையும் சேர்த்து பயமுறுத்திட்டு இருக்க" என்று கடிந்து கூறினாள்.

"ஹேய்! வேணாம்டி இந்த ரிஸ்கெல்லாம். நாமளே வெளி ஊருக்கு வந்துருக்கோம்" என்று திரும்பி எச்சரிக்க யாரும் கேட்பதாக இல்லை.

"நான் வரல. நீங்க போங்க" என்று அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

முதலில் இருவர் பாதி தூரம் வரை சென்று பயத்தில் திரும்பி வந்துவிட்டார்கள்.

"இப்போ நான்” என்று துள்ளி ஓடினாள் நம்ம செல்வி.

அவளும் பயப்படாமல் ஒட்டிக்கொண்டு தான் இருந்தாள். திடிரென்று பின்னால் இருந்து ஒரு புதியவனின் குரல் கேட்க பயந்துபோய் வண்டியை வேகமாக ஓட்டினாள்.

பயத்திலே பதட்டத்துடன் வேகமாக வண்டியை ஓட்டியதால் பேலன்ஸ் தவறி கிழே விழுந்தாள்.

நண்பனின் வீடு நோக்கி வண்டியை செலுத்தி கொண்ருடிருந்த நம் நாயகனின் கூர்மையான விழிகளில் அவளின் உருவம் பதிந்துவிட, பின்னால் ஒருவன் துரத்திக்கொண்டு வருவதையும் கவனித்து காரை அவர்களின் நெருக்கத்தில் வேகமாக கொண்டு நிறுத்தினான்.

பின்னால் துரத்தி கொண்டு வந்த புதியவன் அவளை நெருங்கி, ”என்ன சிஸ்டர்! எவ்ளோ நேரம் கூப்பிட்றேன்? நீங்க இவ்ளோ வேகமா வந்து விழுந்துட்டிங்க?" என்றான் வருத்தமாக.

"இந்தாங்க உங்க பர்ஸ். அங்க கிழ விழுந்துருச்சு. அதை கொடுக்கத்தான் கூப்பிட்டுகிட்டு வந்தேன். நீங்க என்ன நினைச்சிங்கன்னு தெரியல?" அந்த புதியவன் பேசிகொண்டிருக்கும் போதே தாமரைச்செல்வி மயக்கமானாள்.

"ஐயையோ! சிஸ்டர் என்ன ஆச்சு?” என்று அவன் அவளை தொடும் வேளையில் சரவணத்தமிழன் அவனை தடுத்து, ”என்னடா தனியா வந்துகிட்டு இருக்க பொண்ணுகிட்ட வம்பு பண்றியா?" என்று கை ஓங்கிய சரவணத்தமிழனை பார்த்து.

"சார் அதெல்லாம் இல்ல சார். நீங்க வேற என்ன தப்ப நினைக்காதிங்க" என்று நடந்தவற்றை சுருக்கமாக கூறினான்.

"ஒஹ்! அப்படியா சாரி ப்ரோ! உங்கள இந்நேரம் தப்பா நினைச்சு அடிச்சுருப்பேன். இவங்க எனக்கு தெரிஞ்சவங்க தான். நான் பார்த்துக்குறேன்" என்று செல்வியிடம் திரும்பினான்.

"செல்வி! செல்வி! இங்க பாருங்க” என்று அவளின் கன்னத்தை தட்ட, அவள் கண் திறக்காததால் அவளை தூக்கி தன் காரில் படுக்கவைத்து விட்டு அவளின் வண்டியை தூக்கி ஓரமாக நிறுத்தி சைடு லாக் போட்டு சாவியை எடுத்துகொண்டான்.

பின் வண்டியை வேகமாக அருகில் ஏதாவது மருத்துவமனை தென்படுகிறதா என்று பார்வையை செலுத்தியபடி வண்டி ஓட்டினான்.

சிறிது தூரம் வந்தவுடன் ஒரு கிளினிக் தெரிய அங்கு அவளை கொண்டு சென்றான். அவர்களும் விவரங்களை கேட்டு பின் சிகிச்சை தொடங்க முதல்முறையாக அவன் மனம் அவளுக்காக இறைவனிடம் வேண்டியது.

”கடவுளே! இந்த பொண்ணு இப்படி இருக்கறத பார்த்தா இவங்க அப்பா அம்மா எவ்ளோ வேதனை படுவாங்க? அவளுக்கு ஒன்னும் ஆகக்கூடாது." என்று கண் மூடி வேண்டினான்.

அவன் கைகளில் இருந்த அவளின் பர்சில் இருந்து போன் அடித்தது. அதை வெளியே எடுத்து ”ஹலோ!" என்றான்.

"ஹலோ! நீங்க யாரு?" என்று எதிர்முனையில் கேட்க.

"நீங்க தானே போன் பண்ணிங்க? நீங்க யாரு முதல்ல அதை சொல்லுங்க ?" என்றான் கோபமாக.

"ஹலோ சார்! இது என் பிரெண்ட் செல்வியோட மொபைல். உங்ககிட்ட எப்படி வந்தது? அவளுக்கு என்ன ஆச்சு?" என்று எதிர்முனையில் பதட்டமாக கேட்க.

ஏக கடுப்பில் இருந்தவன் பொரிந்து தள்ளினான்.

”அவ பிரெண்டா? நீ யாரா இருந்தாலும் எனக்கு கவலை இல்ல. இன்னும் பத்து நிமிஷத்துல உன்னோட மேடம்கூட இங்க இருக்கனும். இல்ல நடகறதே வேற”என்று செல்வி இருக்கும் கிளினிக் பெயரை கூறினான்.

"சார்! பேஷன்ட் பெயர் மத்த எல்லா டிடைல்சும் இதுல பில் பண்ணிடுங்க" என்று ஒரு பாரத்தை கொடுத்து விட்டு சென்றாள்.

அதை கையில் வாங்கி எல்லா விபரத்தையும் நிரப்பி அவர்களிடத்தில் கொடுத்து விட்டு வந்து அமைதியாக அமர்ந்தான்.
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43

5. பட்டாசு தான்​

அப்பொழுது தான் உறக்கத்தில் இருந்து எழுவது போல் எழுந்த தாமரைச்செல்வி சில நிமிடம் கடந்த பின் தான், அவள் மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்து, இரவு நடந்ததை நினைவுக்கு கொண்டு வர முயன்று கொண்டிருந்தாள்.

"செல்வி! முழிச்சிட்டியாடி. என்னடி எங்கள எல்லாரையும் இப்படி பயமுறுத்திட்ட?" என்று அவள் சிநேகிதி மாலா கேட்டாள்.

"ஹேய்! நான் எப்படி டி இங்க வந்தேன்?" என்று குழப்பமாய் செல்வி கேட்டாள்.

"உனக்கு தெரிஞ்சவர்னு சொன்னார். அவர் தான் உன்னை இங்க கூட்டிட்டு வந்து அட்மிட் பண்ணிட்டு எங்களுக்கு போன் பண்ணார்" என்று மாலா சொன்னாள்.

"யார் டி அது?" என்றாள் செல்வி.

"அவர் வெளில தான் இருக்கார். இங்க உன்னை கூட்டிட்டு வந்து சேர்த்ததுல இருந்து அவர் உன்னை விட்டுட்டு எங்கயுமே போகல. இரு கூப்பிட்றேன்”என்று மாலா வெளியே சென்றாள்.

வெளியே கண்களை மூடியபடி அமர்ந்திருந்த சரவனத்தமிழனின் அருகில் சென்று, ”சார்! செல்வி கண் விழிச்சிட்டா” என்று மாலா கூறியதும் வேகமாக எழுந்து உள்ளே வந்தான்.

சரவணத்தமிழனை பார்த்ததும் செல்வியின் முகம் மலர்ந்தது.

”சரவணன்! நீங்களா? நீங்க எப்படி இங்க?" என்று கேட்டாள் ஆச்சர்யமாக.

செல்வியுடன் அவளின் இரண்டு தோழிகள் இருந்ததால் செல்வியை பார்த்தபடி, ”நான் அவங்ககிட்ட தனியா பேசணும். நீங்க எல்லாரும் கொஞ்சம் வெளிய இருங்க" என்றான்.

செல்வியின் தோழிகள் செல்வியை தயக்கமாய் பார்க்க, அவள் வெளியே போகும்படி சைகை செய்தவுடன் அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறினர்.

"சொல்லுங்க சரவணன்" என்றவளின் அருகில் வந்தவன் அவளை முறைத்துவிட்டு, ”பளார்!" என்று ஒரு அரை விழுந்தது அவள் கன்னத்தில்.

வலியின் தாக்கம் அதிகமாக இருக்க கன்னத்தை தடவியபடி கண்கள் கலங்க சரவணனை பார்த்தாள்.

”அறிவு இருக்காடி உனக்கு? யாராவது நைட் பன்னிரெண்டு மணிக்கு தான் ரேஸ் வச்சு விளையாடுவாங்களா? அதுவும் டூர் வந்த இடத்துல? டோன்ட் யூ ஹாவ் எனி காமன் சென்ஸ்? யாரோ ஒருத்தன் பின்னாடி வர்றத பார்த்தவுடனே டென்ஷன் ஆகி கிழே மயக்கம் போட்டு விழுந்துட்ட? அந்த நேரம் நான் அங்க வரலன்னா என்ன ஆகியிருக்கும்? அவன் ஏதோ உன் பர்ஸ் கிழ விழுந்துச்சு அத கொடுக்க தான் பின்னாடி வந்தேன்றான். என்ன இதெல்லாம்? அங்க உங்க அப்பா அம்மா உன்னை அனுப்பி வச்சிட்டு உன்னை எப்ப பார்ப்போம்னு தவிச்சிட்டு இருக்காங்க. நீ என்னடான்னா இங்க ரேஸ் வச்சு விளையாடி காலை உடைச்சிட்டு இருக்க. சப்போஸ் உயிருக்கு ஏதாவது இல்ல உனக்கு எதாவது ஆகியிருந்தா என்ன பண்ணுவ? உங்க அப்பா அம்மாவை பத்தி நினைச்சு பார்த்தியா? உனக்கு பெண்மையோட மதிப்பும் உயிரோட மதிப்பும் தெரியல இல்ல?" என்று வேப்பமர உச்சியில் இருந்து இறங்கும் பேய் போல் படபடவென இறங்கினான்.

சிறுவயதில் இருந்து இதுவரை தன் தாய் தந்தை கூட அதட்டி அடித்திராத தன்னை இவன் எந்த உரிமையில் அடித்து பேசிகொண்டிருகிறான் என்று புரியவில்லை என்றாலும் அவனின் இந்த கோபம் கலந்த உரிமை அவளுக்கு பிடித்திருந்தது.

சிறிது நேரம் வேறு எங்கோ பார்த்து கொண்டிருந்த சரவணன் அவளிடம் திரும்பி, ”சாரி இருந்த டென்ஷன்ல உன்னை அடிச்சிடேன். நீங்க இங்க இருந்து எப்போ கிளம்பறிங்க?" என்று கேட்டான்.

"நாளைக்கு ஈவனிங்” என்றாள் அவனை பார்க்காமல்.

"சரி. ஹெல்த் பார்த்துக்க. நான் வரேன்” என்று அவளை பார்க்காமல் விடுவிடுவென்று வேகமாய் வெளியே சென்றுவிட்டான்.

சரவணன் சென்றவுடன் உள்ளே வந்த மாலா ”ஹேய்! யாருடி அவர்?" என்று கேட்டாள்.

"ஏன்? அவர் எங்க அப்பாகிட்ட ட்ரைனிங் எடுத்துகிட்டு இருக்காரு. எங்க வீட்ல தான் ஆபிஸ். அதனால அடிக்கடி பார்த்துப்போம். எதுக்குடி கேட்கற?" என்று சரவணன் அடித்ததையும் மறந்து ஆர்வமாய் கேட்டாள்.

"எப்பா! நீ மயக்கமாய்ட்ட. நம்ம மேடம போட்டு லெப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டாரு டி" என்று மாலா கூறினாள்.

"என்னடி சொல்ற? புரியற மாதிரி தெளிவா சொல்லு" என்று ஆர்வமாய் விழிகள் மின்ன கேட்டாள்.

"அதுவா நீ மயக்கமாகிட்ட! நடந்தது எதுவும் தெரியாம உன் போன்கு நான் ட்ரை பண்ணா இவர் தான் எடுத்தார்.

”நீ உங்க மேடம் எல்லாரும் இன்னும் பத்து நிமிஷத்துல இங்க இருக்கனும்... இல்லனா? என்ன நடுக்கும் எனக்கே தெரியாது”ன்னு சொல்லிட்டு போன கட் பண்ணிட்டாரு. அப்புறம் நானும் மத்த பிரெண்ட்ஸ் மேடம் எல்லாரும் பதறி அடிச்சிட்டு இங்க வந்தோம். வந்தா மேடம்கிட்ட,

“நீங்க தான் இன்சார்ஜா?” என்று கேட்டார்.

மேடம் “ஆமா சார். செல்விக்கு என்ன ஆச்சு?” என்று பதட்டமா கேட்டாங்க.

"நீங்க எல்லாம் என்ன வேலைல செய்றிங்க? உங்கள நம்பி இவ்ளோ பொண்ணுங்கள பெத்தவங்க அனுப்பி வச்சா பொறுப்பே இல்லாம இருக்கீங்க? இவங்க எல்லாரும் நைட் வெளில இருக்கறது கூட தெரியாம நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருந்திங்க? நீங்க முதல்ல உங்க பிரின்சிபால் நம்பர் கொடுங்க நான் உங்கள பத்தியும் இவங்க எல்லார பத்தியும் கம்ப்ளைன்ட் பண்ண போறேன்." என்று கடு கடுவென கத்தினார்.

மேடம் வேர்த்து விறுவிறுத்துபோய் நடுங்கிட்டாங்க.

"சார்! சார்! அப்படி எல்லாம் எதுவும் செஞ்சிராதிங்க. நேத்து எனக்கு கொஞ்சம் பிவர். உடம்பு சரி இல்லன்னு சீக்கரம் டேப்லெட் போட்டு படுத்திட்டேன். சாரி சார்! நாளைக்கு வீட்டுக்கு எல்லாரையும் சேர்க்கற வரைக்கும் இனி ஜாக்கரதையா இருக்கேன்" என்று கெஞ்சினார்.

"மேடம்! இப்ப செல்விக்கு கால்ல சதை பிரண்டுருக்கு. ரெண்டு நாள் நடக்க முடியாதுன்னு சொல்லிருக்காங்க. இது பரவால்ல. ரெண்டு நாள்ல சரியாகிடும். பட், அவ உயிருக்கோ அவளின் மானத்துக்கோ ஏதாவது பிரச்சனைனா நீங்க என்ன பண்ணியிருப்பிங்க? உங்களால் அவ இழந்தத திரும்பி தரமுடியுமா? அதனால் தான் அப்படி பேசிட்டேன் அவளை கூட இருந்து பார்த்துக்கோங்க" என்றவன்.

மறுபடியும் அவரிடம் திரும்பி, ”செல்வி எனக்கு வேண்டியவங்க தான். நாளைக்கு ஈவனிங் நீங்க கிளம்பும் போதே நானும் இங்க இருந்து கிளம்பறேன். உங்க பின்னாடியே தான் கார்ல வர்றேன். செல்வியால ப்ரியா பஸ்ல உக்கார முடியாது. அதனால அவ என்கூட கார்ல வரட்டும். அவ வீட்டுகிட்ட நெருங்கனவுடனே நீங்க அவளை பஸ்ல கூப்பிட்டுகோங்க. பத்திரமா அவங்க வீட்ல இறக்கிடுங்க. அவ பாரன்ட்ஸ்கு ஆக்ஸிடென்ட் பத்தி தெரிய வேண்டாம். தெரிஞ்சா உங்க வேலை இருக்காது. அவ அப்பா அவள் மேல் உயிரையே வச்சிருக்கார். வேற ஏதாவது சொல்லி சமாளிட்சிடுங்க” என்றான் சரவணத்தமிழன்.

“நம்ம மேடமும் உடனே சரின்னு சொல்லிட்டாங்க" என்று முழுவதையும் சொல்லி முடித்தாள்.

"இவ்ளோ நடந்துருக்கா நம்ம மயக்கமானதால?" என்று தன்னையே கேட்டுக்கொண்டு இருக்க.

"யம்மா தாயே! அதோட விட்டாரா அவரு? எங்களையும் விடல." என்று கூறினாள்.

"என்ன?" என்று ஆச்சர்யமாய் பார்த்தாள் செல்வி.

"அட ஆமாடி! எங்ககிட்ட ‘நீங்க எல்லாம் மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? ஒருத்தர் கெட்றது இல்லாம மத்தவங்களையும் சேர்த்து கெடுக்குறிங்க? உங்களால தான் இப்ப செல்வி இப்படி இருக்கா. அவ உயிருக்கு ஏதாவது ஆகியிருந்தா ரெண்டு நாள் அழுதுட்டு போயிருவீங்க. நீங்க செய்ற தப்பால காலம் முழுக்க அவள பெத்தவங்க அழுதுகிட்டே இருக்கணுமா? நீங்க எல்லாரும் ஒன்னும் சின்ன குழந்தைங்க இல்ல? எல்லாருக்குமே எல்லாம் தெரியும் அப்படி இருக்க, மேடம் உடம்பு சரி இல்லன்னா சான்ஸ் கிடைச்சுச்சுடுன்னு இப்படி தான் பண்ணுவிங்களா? உங்கள பெத்தவங்களுக்கு இது தெரிஞ்சா மறுபடியும் நீங்க எங்கயாவது போகணும்னு கேட்டா தனியா விடுவாங்களா? ஏதாவது செய்யறதுக்கு முன்னாடி ஒன்னுக்கு ரெண்டு தடவை யோசிச்சு செய்ங்க" என்று சொல்லிவிட்டு போய்ட்டார்” என்று முடித்தாள்.

ஏற்கனவே அவன் அடித்தும் கோபம் வராத நிலையில் இவை எல்லாம் கேட்ட செல்விக்கு அவளையும் அறியாமல் அவளின் மனம் அவனிடம் சாய்ந்தது.

அங்கிருந்து செல்வியை டிச்சார்ஜ் செய்து கூட்டி சென்றுவிட்டனர்.

காலில் சதை பிரண்டதால் அவளால் சரியாக நடக்க முடியவில்லை மாலாவின் உதவியோடு எல்லாம் செய்து கொண்டிருந்தாள். இரவு சாப்பிட்டு விட்டு மாத்திரை சாப்பிடாமல் நேரம் கடத்தி கொண்டிருந்தாள்.

இவளின் குணம் அறிந்த நமது நாயகன் அவளுக்கு கரெக்டாக கால் செய்தான்.

தன் மொபைலில் அவனின் பெயர் மின்ன நொடி நேரத்தில் பிரகாசமானது அவளின் முகம் ‘இது எப்படி என்கிட்டே அவன் நம்பர் இல்லையே?’ என்று யோசித்து கொண்டே எடுத்து அமைதியாய் இருக்க, ”ஹலோ!" என்றான் அவனே முதலில்.

"ஹலோ!" என்று இவள் மெலிதாய் கூற.

"சாப்பிட்டியா? கால் வலி இப்ப எப்படி இருக்கு?" என்று கேள்விகளை அடுக்கி கொண்டே போனான்.

"ஹம்! சாப்டேன். நீங்க சாப்டிங்களா?” என்றாள் மனதில் சிரித்துகொண்டு.

"இன்னும் இல்ல. இங்க மேரேஜ் ரிசப்ஷன் இப்ப தான் நடந்துட்டு இருக்கு. இனி தான் சாப்பிடனும்" என்று அமைதியாகிட.

"ஒஹ்!" என்றாள்.

"நான் கேட்டதுக்கு இன்னும் பதிலே சொல்லல கால் வலி எப்படி இருக்கு?" என்றான் மென்மையாய்.

"கால் வலி இல்லன்னுலாம் பொய் சொல்லமுடியாது ரொம்ப வலிக்குதுப்பா. எதுவுமே செய்ய முடியவில்லை" என்று சிறுகுழந்தை போல் சிணுங்க, சரவணன் சிரித்தபடி ”அப்புறம் கண்டிப்பா மாத்திரை போட்ருக்க மாட்டாயே?" என்று கேட்டான்.

‘ஐயோ! இவனுக்கு என்னை பத்தி தெரியும்ல’ என்று நாக்கை கடித்தாள்.

செல்வி அமைதியாகவே இருக்க,

"என்ன சவுண்டே காணோம். நான் சொன்னது கரெக்ட் தான?.. நீ இன்னும் மாத்திரை போட்ருக்க மாட்டியே" என்று கலகலவென சிரித்தான்.

அவனின் சிரிப்பு அவன் முகம் எதிரில் இல்லை என்றாலும் அவள் மனதில் நிழலாய் ஓடியது.

"இல்லை. இன்னும் போடல... ஒரு மாத்திரையே போட மாட்டேன்... இப்போ மூணு மாத்திரை கொடுத்துருக்காங்க. எப்படி சாபிட்றது?" என்று மீண்டும் சிணுங்கினாள்.

"அத ரேஸ் போறதுக்கு முன்னாடியே யோசிச்சிருக்கணும். சரி விடு. ஒரு கிளாஸ் தண்ணிய கைல எடு” என்றான்.

அவளும் அவன் வார்த்தைக்கு கட்டுபட்டவளாய் தண்ணீரை எடுத்துக்கொண்டு ”எடுத்துட்டேன்" என்றாள்.

"குட்! இப்போ மூணு மாத்திரையும் பிரிச்சு கைல வச்சிக்க. அப்புறம் அன்னார்ந்து கண்ண மூடி வாயில தண்ணி ஊத்திகிட்டு உனக்கு பிடிச்ச ஸ்வீட் ஏதாவது நினைச்சிட்டு மாத்திரைய அப்படியே போட்டு முழுங்கிடு” என்றான்.

அவளும் அவன் சொன்னபடியே செய்தும் முடித்தாள்.

"போட்டியா?" என்று அவன் குரல் கேட்ட பின் தான், தான் மாத்திரை போட்டதையே அவள் உணர்ந்தாள்.

"ஹையா! நான் மாத்திரை போடுட்டேனேன்" என்று சிறுபிள்ளை போல் அவள் மகிழ்வதை கேட்டு அவனும் புன்முறுவல் பூத்தான்.
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43

6. சரவணனுடன் செல்லும் பயணம்!​

"பரவால்லையே! மாத்திரை போட்டுட்டியா? வெரிகுட் ! சரி நல்லா தூங்கு. நாளைக்கு ஈவனிங் நீங்க கிளம்பும் போது நான் வந்து உன்னை கூப்பிட்டுகிறேன். ரெடியா இரு. சரியா?" என்றான் கனிவாய்.

"எதுக்கு?" என்றாள் ஒன்றும் தெரியாதவள் போல்.

பதிலே வராமல் அமைதியாக இருக்க, ”ஹலோ! லைன்ல இருக்கிங்களா?" என்று மீண்டும் செல்வி கேட்டாள்.

"லைன்ல தான் இருக்கேன். இதென்ன கேள்வி? உனக்கு ஏற்கனவே கால்ல அடிபட்டு இருக்கு. பஸ்ல் உட்கார கஷ்டமா இருக்கும் அதனால்தான் கேட்டேன். வேணாம் என்றால் சொல்லிவிடு நான் கிளம்பி விடுகிறேன். நீ உன் காலேஜ் பஸ்லயே போ!" என்றான் சற்று காட்டமாக.

உடனே பதட்டமான தாமரைச்செல்வி ”இல்லல்ல. நீங்க சொல்றதும் கரெக்ட் தான். கார்ல வந்தா நான் கொஞ்ம் பிரியா வரலாம், அதனால நாளைக்கு நீங்க வந்துருங்க. நான் கிளம்பும் போது போன் பண்றேன்" என்று மூச்சுவிடாமல் வேகமாக சொல்லி முடித்தாள்.

அவளின் செய்கையால் தன்னுள் இருந்து வெடித்து கிளம்பிய சிரிப்பை அடக்கிக்கொண்டு, ”சரி. இப்ப டைம் ஆச்சு. டாக்டர் கண்டிப்பா வலி குறையறதுக்கு பெய்ன் கில்லர் அண்ட் ஸ்லீப்பிங் டோஸ் கொடுத்து இருப்பாங்க. சோ! நீ நல்லா தூங்கு. நாளைக்கு பார்க்கலாம். குட் நைட். ஸ்வீட் டிரீம்ஸ். பை" என்று போனை கட் செய்தான்.

ஆனால் செல்விக்கோ, டாக்டர் எவ்வளவு ஹெவி டோஸ் கொடுத்திருந்தாலும் அதை புறம் தள்ளியது சரவணனின் இந்த அக்கறை.

ஆம்! எதனால் தனக்கு இவ்வளவு உதவி செய்கிறான் என்று தெரிந்து கொள்ள அந்த இளம்பெண்ணின் மனது ஆவல் கொண்டது.

ஒரு வேளை தன்னை காதலிக்கறானோ? என்ற சந்தேகம் அவளின் ஆழ் மனதில் உதித்திருந்தது.

அதை எப்படியாவது இன்று அவனிடம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது செல்விக்கு.

இந்த எண்ணங்களிலேயே மூழ்கி தன்னையும் அறியாமல் உறங்கி போனாள் தாமரைச்செல்வி.

காலை புத்துணர்வோடு எழுந்தவுடன், தான் அவனோடு காரில் ஒன்றாக பயணிக்க போகும் அந்த தருணத்திற்காக பொறுமையில்லாமல் காத்திருக்க ஆரம்பித்தாள்.

மறக்காமல் காலையும் போன் செய்து அவள் சாப்பிட்டு மாத்திரை போட்டுக்கொண்டதை உறுதி செய்தவனை எண்ணி மனம் ஏங்க ஆரம்பித்தது.

ஆம்! இன்று சாதாரணமாக வேலைக்கு செல்லும் பெற்றோர் இருக்கும் வீட்டில் குழந்தைகளின் நிலை இதுவாக தான் உள்ளது. அவர்கள் என்னவோ குடும்பத்தின் நிலை காரணமாகவோ அல்லது தன் பிள்ளைகளுக்காகவோ தான் வேலைக்கு செல்கிறார்கள், ஆனால் பிள்ளைகளுக்கு கிடைக்கவேண்டிய அன்னையின் அரவணைப்பில் சிறிய அல்லது பெரிய இடைவெளி விழுந்துவிடுகிறது. இதில் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் பிள்ளைகள் கொஞ்சம் தனிமையை உணருவதில்லை. பெரியவர்கள் இல்லாத வீட்டில் குழந்தைகள் தனிமையை தான் வரமாக பெறுகிறார்கள். அதன் விளைவு தேவையில்லாத சிந்தனைகள் மனதில் உதிப்பதோடு அவற்றை செயல்படுத்தவும் ஆரம்பிக்கின்றனர், அன்பு எங்கு கிடைக்கிறதோ அங்கே செல்லத்தான் அவர்களின் மனம் துடிக்கிறது. அங்கு இருக்கும் ஆபத்தை உணராமல் செல்வதால் சிலநேரம் அவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடுகிறது. முக்கியமாக பெண் பிள்ளைகளுக்கும் இது பொருந்தும்.

நமது தாமரை செல்வியின் நிலையும் இதுதான், அவளின் தாய் தந்தை எவ்வளவு தான் அன்பு செலுத்தினாலும் பெற்றோர் இருவரும் வேலை! வேலை! என்று காலில் சக்கரம் கட்டி கொண்டு ஓடுவதால் தனிமை சில நேரங்களில் அவளையும் ஆட்டிவைக்கிறது, இருந்தாலும் அவளின் ஓரளவு தெளிந்த மனது யாரையும் நெருங்க விடாமல் செய்ய சரவணத்தமிழன் மட்டும் அவளின் மனதில் பசை போல் ஒட்டி கொண்டுவிட்டான்.

மாலை நான்கு மணியளவில் சரவணத்தமிழன் வந்துவிட்டான் செல்வியை அழைத்து செல்வதற்கு. மாலாவின் உதவியோடு காரில் செல்வி அமர சரவணின் விழிகள் அவளையே பார்த்து கொண்டிருந்தன.

செல்வியின் கல்லூரி வாகனமும் இவர்களின் முன்னாள் கிளம்ப சரவணத்தமிழனின் காரும் கிளம்பியது.

சரவணன் எதுவும் பேசாமல் வர செல்விக்கு எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.

‘எதாவது பேசறானா பாரு. ஊமை மாதிரி அமைதியா வரான். இதுக்கு நான் அந்த வண்டிலேயே போயிருக்கலாம்’ என்று மனதில் புலம்பி கொண்டு வந்தவள்.

சிறிது நேரம் எதையோ யோசித்துக்கொண்டு வந்தவள் அவனிடம் திரும்பி எதையோ கண்டுபிடித்ததை போல் ”இது உங்க காரா?" என்று கேட்டாள்.

"ஆமாம்! ஏன் கேக்குற?" என்றான் புருவத்தை சுருக்கியபடி.

"இல்ல.. நீங்க எங்க அப்பாகிட்ட வேலைக்கு சேர்ந்தே ஒரு மாசம் தான ஆகுது? அதான் கேட்டேன்" என்றாள்.

"உங்க அப்பாகிட்ட தான் முதல்ல வேலைக்கு சேர்ந்தேன்னு நினைக்கிறியா?"என்று சிரிப்புடன் கேட்க.

"ஆமாம்" என்று தலையாட்டினாள் செல்வி.

"நீ நினைச்சது தப்பு. நான் உங்க அப்பாகிட்ட வாங்கற சம்பளத்த விட டபுள் மடங்கு சேலரி மூணு வருஷமா இதைவிட பெரிய கம்பனில வேலை செஞ்சி வாங்கிட்டு இருந்தேன்." என்றான் அமைதியாக.

சற்று குழப்பமாக ஒன்றும் புரியாமல் ”அப்புறம் எதுக்கு இங்க வந்து வேலை செய்றிங்க? அந்த வேலை என்ன ஆச்சு?" என்று கேட்டாள்.

"எனக்கு சி.ஏ, ஆகணும்றது தான் சின்ன வயசு கனவு. அதை நிறைவேத்திக்க தான் உங்க அப்பாகிட்ட இந்த ஒன் இயர் மட்டும் ஜூனியறா சேர்ந்துருக்கேன். இது உங்க அப்பாக்கும் தெரியும். சில நுணுக்கங்களை வேலையில் இருந்து கற்று கொண்டால் தான் சரியாக இருக்கும். நான் சம்பாரிச்சதுல என் சேவிங்க்ஸ் போக மீத அமௌன்ட்ல இந்த கார் வாங்கினேன். இது ஒரு பிசினஸ்காக தான் வாங்கினேன். நான் முதல்ல வொர்க் பண்ண கம்பனிலயே கான்ட்ராக்ட்ல ஓடிட்டு இருக்கு, எனக்கு தேவைன்னா மட்டும் எடுத்துப்பேன்." என்றவனை ஆச்சர்யமாய் பார்த்துக்கொண்டே ”அப்போ அந்த வேலை?" என்றாள் சந்தேகமாய்.

"அதுவா? அவங்களே எனக்கு ஓன் இயர் லீவ் கொடுத்து படிப்ப முடிச்சிட்டு வர சொல்லி அனுப்பிருக்காங்க. அடுத்து டிகிரியோட உள்ள போனா பெரிய ப்ரோமோஷன் கிடைக்கும்" என்று சிரித்தான்.

சிறிது நேரம் இருவரும் அமைதியாக வர சரவணன் செல்வியின் புறம் திரும்பி, ”உங்க அப்பா கேட்டா என்ன சொல்லுவ?" என்றான் வண்டி ஒட்டியபடி.

"எதுக்கு?" என்றாள் ஒன்றும் புரியாமல்.

"எப்படி அடிபட்டதுன்னு கேட்டா என்ன சொல்லுவ? நாங்க ரேஸ் வச்சு விளையாடினோம் அதனால் தான் இப்படி ஆகிடுச்சுன்னு சொல்லுவியா?" என்றான் மெல்லிய புன்னகையோடு.

"என்னது?... அப்படி சொன்னேன்!... அவ்ளோ தான்... ஏற்கனவே எங்கயும் அனுப்ப மாட்டார். அதுக்கு அப்புறம் காலேஜ் தவிர என்னை வீட்டு வாசலகூட தாண்ட விடமாட்டார். கண்டிப்பா வீட்டையே ஜெயில் ஆக்கிடுவார். தப்பி தவறிகூட எங்க அப்பாகிட்ட சொல்லிடாதிங்க" என்று அவனை பார்டத்தாள்.

"சரி" என்றான் ஒற்றை வார்த்தையில், வேண்டுமென்றே ”அப்புறம் அன்னைக்கு எங்க அம்மாகிட்ட சொல்லாதிங்கன்னு சொல்லியும் சொன்னிங்கல்ல? அதுமாதிரி நினைச்சு எதுவும் சொல்லிட போறிங்க" என்றாள் பாவமாய்.

"அன்னைக்கு நடந்தது வேற உனக்கு உடம்பு சரி இல்ல. அதனால சொல்லிட்டேன். இன்னைக்கு அப்படி இல்ல உனக்கு பிரச்சனை வரும்ன்னா எப்படி சொல்லுவேன்?" என்றான் அக்கறையாய்.

அவனின் சொற்களில் மயங்கிய செல்வி தன்னையும் மீறி, ”நீங்க என்னை விரும்பறிங்களா?" என்று வாய்விட்டு கேட்டுவிட்டாள்.

அவள் கூறியதை கேட்ட சரவணனுக்கு அதிர்ச்சியில் வண்டியை சட்டென் ப்ரேக் போட்டு நிறுத்தினான்.

"இப்ப என்ன கேட்ட?" என்று கேட்டான்.

"நீங்க என்னை விரும்பறிங்களா?" என்று கேட்டாள் அழுத்தம் திருத்தமாக.

"என்ன முட்டாள் தனமா பேசற? உனக்கு என்னை பத்தி என்ன தெரியும்?" என்று சிறிது காட்டமாக கேட்க.

"இல்ல... நீங்க இவ்ளோ தூரம் என் மேல அக்கறையா இருக்கறத பார்த்து தான் கேட்டேன்..." என்றாள் தவிப்பாய் உள்ளே சென்ற குரலில்.

"ஷட் அப்! திஸ் இஸ் யுவர் லிமிட் ! நீ என் பாஸோட பொண்ணு. அதனால சகஜமா ஹெல்ப் பண்ணேன். நீ அதை தப்பா புரிஞ்சிகிட்டு இருக்க. லிசன் நான் ஏற்கனவே ஒரு பெண்ணை விரும்புறேன். அவங்கள தான் கல்யாணம் பண்ணிக்க போறேன். நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்கிட்டு இருக்காத. ஒழுங்கா படிப்புல கவனம் செலுத்து" என்றான் அவளை பார்க்காமல் வண்டி ஒட்டிக்கொண்டே.

கண்களில் துளிர்த்த கண்ணீரை அவனுக்கு தெரியாமல் வேறுபுறம் திரும்பி துடைத்தெறிந்தாள்.

"உண்மையாவே நீங்க வேற பெண்ணை காதலிக்கிறிங்களா?" என்றாள் நம்பாமல்.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்து ”நான் ஒரு பெண்ணை காதலிக்கறேன். அடுத்த வருஷம் நாங்க கல்யாணம் பண்ணிக்க போறோம். உனக்கு கண்டிப்பா கல்யாணப்பத்திரிக்கை வைப்பேன் வந்துரு" என்று கூறிவிட்டு வண்டி ஓட்டுவதை கவனித்தான்.
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43

7. சரவணத்தமிழனின் மனம்!​

சரவணத்தமிழனின் வார்த்தைகள் அவளின் செவிகளில் மீண்டும் மீண்டும் வட்டமடித்து கொண்டிருக்க, ‘நிச்சயமாக நீ என்னை மட்டும் தான் விரும்பற. அது எனக்கு கண்டிப்பா தெரியும். உன் கண்களில் அந்த அன்பு தெரியுது. ஏதோ ஒரு காரணத்தால நீ என்கிட்டே உண்மைய ஒத்துக்கமாட்டேங்கற. நீயா என்கிட்டே கண்டிப்பா ஒரு நாள் வந்து சொல்லுவ! அப்ப பார்த்துக்கறேன் உன்னை’ என்று மனதினுள் பூக்களால் இல்லாமல் தன் திட்டுகளால் அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள் தாமரைச்செல்வி.

ஆனால், அவள் மனம் கவர்ந்த நாயகனின் மனதிலோ ஏகப்பட்ட மனப்போராட்டம் நடந்து கொண்டிருந்தது.

சிறிதுநேரம் அமைதியாக வெளியே வேடிக்கை பார்த்தபடி வந்த தாமரைசெல்வியை ஓரக்கண்களால் அவளுக்கு தெரியாமல் அளந்துகொண்டு வந்தான்.

பயணத்தின் களைப்பால் செல்வி நன்கு ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள். கைகளை கட்டி கொண்டு தலையை சாய்த்தபடி தன் இருக்கையில் அமர்ந்தபடியே உறங்கும் அவளின் நெற்றியில் சுருண்டு விழும் முடியின் அழகில் கண்களை அகற்றாமல். அந்த முடியை தன் கரம் கொண்டு சரி செய்தவன்.

பெருமூச்செறிந்து பின் மெதுவாக ”ஐ ஆம் சாரிடா செல்வி... உன்னை ஹர்ட் பண்ணனும்னு நான் சொல்லல. உன்னோட நல்லதுக்காக தான் சொன்னேன். என்னைக்கு சிட்டுகுருவி பறந்து வரது போல பறந்து வந்து என் பின்னாடி மாத்திரை போடறதுக்கு பயந்து ஒளிஞ்சி உட்கார்ந்தியோ? அப்ப என் மனசுல நீ புகுந்துட்டடி...

இருந்தாலும் உங்கப்பா சாதரணமா அவரோட பிரெண்ட்ஸ் வட்டத்துல கூட ஸ்டேடஸ் பார்க்கிறவரு... அது அவரோட குணம். ஆனா, உன் மேல உயிரையே வச்சிருக்காங்க உங்க அம்மா அப்பா ரெண்டு பேரும். ஒரு வேளை நாம விரும்புறோம்னு தெரிஞ்சா அவளோ தான் உன்மேல உள்ள மொத்த நம்பிக்கையும் போய்டும். அதோட நீ எப்படியும் அவங்கள விட்டு பிரிஞ்சு என்கூட வரணும்னு துடிப்ப, கடைசில அடம்பிடிச்சி வந்துருவ. அது நடக்கக்கூடாதுன்னு நினைச்சேன்.

எனக்கு தான் சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்ல. ஆனா, உனக்கு மலைபோல் பாசத்த காட்ற அம்மாவும், தரையில உன் பாதம் படாம தாங்கணும்னு நினைக்கிற உன் அப்பாவும் இருக்காங்க. எனக்காக நீ அவங்கள மிஸ் பண்ணிட்டு என் கூட தனிமரமா நிக்ககூடாதுன்னு நினைக்கிறேன்.

இதெல்லாம் உனக்கு சொல்லி புரியவைக்க முடியாது. அப்படியே சொன்னாலும் நீ என்னை தான் சமாதானப்படுத்துவ. அதனாலதான் அப்படி பேசிட்டேன். என் மனசுல இந்த ஜென்மத்துல மட்டும் இல்ல. இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கும் நீ மட்டும்தான் இருப்ப. மரணம் என்று ஒன்று வந்தால்கூட உன் நினைவோடு மட்டுமே இறக்க ஆசை படுகிறேன்.

நீ நல்லா இருக்கணும். சப்போஸ் என் மனச எப்படியோ புரிஞ்சிகிட்டு நீ என்னை கட்டாயப்படுத்தினா. நான் அப்புறம் உன் கண் முன்னாடி வரக்கூடாதுன்னு தான் நினைச்சிட்டு இருக்கேன்" என்று அவளின் நெற்றியை வருடியவன், பின் வாகனம் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.

அட நம்ம ஆள பத்தி தான் உங்களுக்கு தெரியுமே! சின்ன வயசுலேயே கோவில்ல என்ன ஆர்பாட்டம் பண்ணான்னு வாலுன்னா சாதாரண வாலு இல்ல, ஒண்ணா நம்பர் அறுந்த வாலு தான?

அவ தூங்கினது என்னவோ உண்மை தான். ஆனா, அவனோட விரல் ஸ்பரிசம் தனக்குள்ப்பட, கண்களை திறக்காமல் எழுந்துவிட்டாள். இருந்தாலும் வெளியே காட்டி கொள்ளாமல் அவன் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள அமைதியாக கண்களை மூடியபடி உட்கார்ந்திருந்தாள். அவள் நினைத்தது போலவே அவனின் மனதில் உள்ள வார்த்தைகள் வெளிவந்தது. நெகிழ்ச்சியில் கண்களில் ஆனந்தக்கண்ணீர் வர, அது அவனுக்கு தெரியக்கூடாது என்று சிரமப்பட்டு அடக்கினாள்.

'உன் வாய்லர்ந்து எனக்கு வேண்டியது கிடைச்சிருச்சு. எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன் இனி' என்று தனக்குள் நினைத்து கொண்டாள்.

மெதுவாக ஒன்றும் தெரியாமல் கண்விழிப்பது போல் விழித்து அவனை பார்த்தாள்.

"சரி. நீங்களும் யாரோ ஒரு பெண்ணை விரும்பறேன்னு சொல்லிட்டிங்க. இனி உங்கள தொந்தரவு பண்ண மாட்டேன். பட், நாம ரெண்டு பேரும் இனி பிரெண்ட்ஸ். ஒகேவா?" என்று கேட்டவளை பார்த்து முறுவலித்தவன் ”ஓகே” என்றான்.

இரவு எட்டுமணி மிகவும் வாகன நெரிசலில் மாட்டிக்கொண்டார்கள். ”உங்க பஸ்சு இவ்ளோ ஸ்லோவா போகும்னு எனக்கு தெரியல. பேசாம நாம முன்னாடி போய்டலாம். என்னால இவ்ளோ ஸ்லோவா வண்டி ஓட்டமுடியாது செல்வி” என்றான் உரிமையோடு. அந்த உரிமை அவளுக்கு பிடித்திருந்தது.

"ஒஹ்... போலாமே! இவ்ளோ ஸ்லோவா போனா எனக்கும் ரொம்ப போர் அடிக்குது, நாம பாஸ்ட்டா போலாம்" என்று முதல்முறை காரில் செல்லும் சின்னஞ்சிறு குழந்தை போல் குதித்தாள். அவளின் இந்த துள்ளல் அவனுக்கு அவள் மேல் உள்ள அன்பை இன்னும் பல மடங்காக்கியது.

ஒரு சிக்னலில் அவர்களின் வண்டி வேகம் எடுத்து எல்லா வண்டிகளையும் பின்னுக்கு தள்ளி முன்னேறி சென்றனர்.

"ஏதாவது சாப்பிட்றியா?" என்று கேட்டவன் ஒரு ஹோட்டலின் முன் வண்டியை நிறுத்தி நேராக சென்று, அவளுக்கு பிடித்த மசால் தோசையை வாங்கி வந்தான்.

அவனிடம் இருந்து, ”ஹய்யா! எனக்கு ரொம்ப பிடிக்கும். கொடுங்க" என்று ஆசையாய் வாங்கி சாப்பிட்டாள்.

அவள் சாப்பிட்டு முடித்தும் நிம்மதியாய் மீண்டும் பயணத்தில் உறங்கிக்கொண்டு வந்தாள்.
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43

8. செல்வியின் கோபம்!​

மாலைநேரம் ரம்மியமாக இருக்க தன்னுடன் தனக்கு மட்டுமே தெரிந்த தன் ரகசிய காதலும், 'காதலிக்கிறேன்' என்று தெரியாமல் தன்னுடன் அழகாய் நிலவொளியில் தேவதை போல் ஜொலிக்கும் தன் காதலியும ஒன்றாய் பயணிக்க, உள்ளுக்குள் சொல்லமுடியாத ஒரு காதல்உணர்வு பொங்கி வழிந்து கொண்டிருக்க, இது தன் வாழ்க்கை முழுவதும் நிலைக்காதே என்ற வருத்தமும் மேலோங்கி அவன் முகத்தை வாடச்செய்தது.

தன் மனதை கொள்ளை கொண்டவன் சிந்தனையில் தான் மட்டும் அல்லாமல் தன் குடும்பத்தின் மேல் உள்ள அக்கரையை கண்டதில் இருந்து அவன் மேல் உள்ள மதிப்பு இன்னும் பலமடங்காக உயர்ந்தது தாமரைச்செல்விக்கு.

'எப்படியோ? ஒரு வழியா உன் மனசுல இருந்ததை சொல்லிட்டடா. அந்த கடவுளுக்குதான் நன்றி சொல்லணும், ஆனாலும், கடவுளே! இது ரொம்ப ஓவர்... என்னால முடியலை! நல்லவனா இருக்க வேண்டியதுதான், அதுக்காக அநியாயத்துக்கு இவ்வளவு நல்லவனா இருந்தா என்ன பண்றது?'

'காதலுக்காகவும் காதலிக்காகவும் என்ன வேணாலும் செய்வேன்னு சொல்ற பசங்கள பார்த்துருக்கேன். ஆனா காதலிக்கிற பொண்ணு அவங்க அப்பா அம்மாவோட சேர்ந்து இருக்கனும். தன்னை மாதிரி யாருமில்லாம கஷ்டப்படக்கூடாதுன்னு தன் காதலை சொல்லாம வச்சிருக்குற ஆள, முதல் முறையா இப்பத்தான்டா பார்க்கிறேன்.

என்ன ஆனாலும் உன் கையால தான் என் கழுத்துல தாலி கட்ட போற, கண்டிப்பா கட்ட வைப்பேன். அதுக்காக யார வேணாலும் எதிர்க்கறதுக்கு நான் ரெடி, எங்கப்பாவையும் சேர்த்து...

நிச்சயமா நீ எதுவும் செய்ய மாட்ட, நானா தான் எதுவும் செய்யணும் போல இருக்கே? அதுவரைக்கும் எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சு சந்தோஷமாயிரு. எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கிறேன்.

உன் கையில் விட்டா ஒன்னும் பண்ண மாட்ட, வேற யாராவது என்னை கல்யாணம் பண்ணிக்குறத பார்த்து வாழ்த்திட்டு தாடி இல்லாத தேவதாஸா அலைய போறியா?' என்று தனக்குள்ளே பெரும் போராட்டமே நடத்தி கொண்டிருந்தாள்.

சீரான வேகத்தில் கார் போய் கொண்டிருந்த நேரம், திடிரென்று சடன் பிரேக் அடித்து நிறுத்தினான் சரவணன். அடித்த வேகத்தில் தூங்கி கொண்டிருந்த செல்வி முன்னே சென்று தலையில் முட்டி பின்னுக்கு வந்தாள்.

ஒரு நொடி ஒன்றும் புரியாமல் விழிக்க, சரவணத்தமிழனிடம் திரும்பி தலையை தேய்த்துக்கொண்டே ”என்ன ஆச்சு? தூங்கிட்டிங்களா?" என்று கேட்டாள்.

"ப்ட்ச்! முன்னாடி கொஞ்சம் பார்த்துட்டு பேசு" என்றான் கடுப்பாக.

"என்ன?" என்று முன்னே பார்க்க, சுற்றிலும் ஒரே இருட்டு முழுவதும் மரங்கள் நிறைந்த காடு போல் தெரிய, முன்னால் யாரோ ஒருவர் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் படுத்திருப்பது தெரிந்தது. கூர்ந்து கவனித்தாள், ”தண்ணி, தண்ணி” என்று அவர் முனகுவது தெளிவாக கேட்டது.

"ஐயையோ! இடிச்சிட்டீங்களா? தண்ணி கேக்கறாரு. முதல்ல இறங்குங்க" என்று தண்ணீர் பாட்டில் எடுத்துக்கொண்டு இறங்குவதற்கு கார் கதவை திறக்க போனவளின் கரம் பற்றி நிறுத்தினான்.

"ஏய்! செல்வி என்ன பண்ற நீ? முதல்ல கதவை மூடு” சொன்னதோடு நிக்காமல் அவளின்புறம் சாய்ந்து அவனே மூடியும் விட்டான்.

'நம்ம கார் எங்க இருக்கு? இவன் எப்படி இங்கு வந்து விழுந்து கிடக்கிறான்? நிச்சயமா நான் அவனை மோதலை. அப்ப, இது ஏதோ டிராமா மாதிரி தெரியுது. நாம உடனே இந்த இடத்தை விட்டு செல்ல வேண்டும்' என்று தனக்குள்ளே யோசித்தவன்.

"ஐ திங்க் வி ஆர் இன் ரிஸ்க், சோ வி ஹவ் டு மூவ் பாஸ்ட்" என்று சொல்லிக்கொண்டே காரை ரிவர்ஸ் எடுத்து சரி செய்த பின்னர், அந்த இடத்தைவிட்டு வேகமாக ஓட்டினான்.

"அங்க விழுந்து கிடக்கற மனுசன காப்பாத்தாம, நீங்க பாட்டுக்கு வண்டிய ஓட்டிட்டு வந்துட்டீங்க. ஏன் இப்படி பண்றிங்க? உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா?" என்று கோபமாக செல்வி கேட்டாள்.

"ஏய்! கொஞ்ச நேரம் வாய மூடிட்டு இருக்கியா? ஆளு தான் வளர்ந்துருக்கியே தவிர அறிவு வளரவே இல்லடி உனக்கு. நம்ம கார் முன்னாடியே இருக்கு அவன் எங்கயோ விழுந்துகிடக்கறான். இந்த இடத்தை பார்த்தியா இல்லையா? எனக்கு ஏதோ தப்பா படுது. இரு” என்று 108ற்கு போன் செய்து விபத்து நடந்த இடத்தை குறிப்பிட்டு அங்கே வருமாறு கூறினான்.

இவர்கள் வெகுதூரம் சென்ற பின் மீண்டும் தனக்கு போன் வர, ஸ்பிக்கரில் ஆன் செய்தான்.

"ஹலோ! சார்! நீங்க சொன்ன இடத்துல யாருமே இல்ல" என்றார்.

"சார். அங்க ஒருத்தர் ரத்த வெள்ளத்துல இருந்ததால தான் உங்களுக்கு போன் பண்ணேன்" என்று சரவணன் கூற.

"ஏற்கனவே ரெண்டு பேர் இதே மாதிரி சொல்லி வந்து பார்த்து யாருமில்லாம திரும்பி போனோம்." என்று வைத்துவிட.

"பார்த்தியா? சொன்னேன்ல?" என்று முறைத்தபடி வண்டி ஓட்டினான்.

"சரி சாரி. நான் தான் தெரியாம சொல்லிட்டேன்" என்று பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு கூற இவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

"சரி விடு" என்று மென்மையாய் புன்னகைத்தான்.

"உங்களை பத்தி சொல்லுங்க" என்று மெதுவாக தன் வேலையை ஆரம்பித்தாள்.

"என்னை பத்தி என்ன தெரியணும் உனக்கு?" என்று ஆழமாய் அவள் விழிகளில் ஊடுருவ, ”சும்மா தான் தெரிஞ்சிகிலாம்னு கேட்டேன். சொல்ல விருப்பம் இல்லன்னா விட்ருங்க" அவன் விழிகளில் இருந்து தப்பிக்க கோவம் எனும் ஆயுதத்தை போலியாக உபயோகப்படுத்தினாள்.

"சரி சொல்றேன்" என்று தன்னை பற்றி எல்லாவற்றையும் கூறிக்கொண்டு வந்தான்.

அவளும் ஆர்வமாக கேட்டுகொண்டு வந்தாள்.

அவர்களின் உரையாடலின் முடிவில் அவளது வீட்டின் பக்கத்துக்கு தெருவில் காரை நிறுத்தி ”உன் பிரெண்டுக்கு போன் பண்ணு, அவங்க எங்க இருக்காங்கன்னு கேளு" என்றான் வெளியே நோட்டம் விட்டபடி.

அவளும் பேசிவிட்டு ”அவர்கள் இங்கு வர இன்னும் இருபது நிமிடங்கள் ஆகும்னு சொல்லிருக்காங்க" என்றவுடன்.

"சரி" என்றவன் தன் போனை எடுத்து ”பிரபு! எங்கடா இருக்க?" என்று தன் நண்பனுக்கு போன் செய்திருந்தான்.

"ஏன்டா? எங்க சித்தப்பா வீட்ல இருக்கேன்" என்று கூறவும்.

"எதுவும் பேசாம பக்கத்துக்கு தெருவுக்கு வா" என்று போனை கட் செய்தான்.

"இந்த எருமை இந்த நேரத்துக்கு இங்க எதுக்கு வர சொல்லுது?" என்று திட்டிக்கொண்டே வந்த பிரபு, சரவணின் காரை பார்த்துவிட்டு, ”இவன் இந்த நேரத்துல இங்க என்ன

Start

பண்றான்?" என்று நெருங்கியதும் செல்வி அதில் இருப்பதை பார்த்துவிட்டு,”ஏய்! நீ இங்கே என்ன பண்ற? நீ டூர் போயிருக்கன்னு தான அப்பா சொன்னாரு. இவன் கூட என்ன பண்ணிட்டு இருக்க?" என்று அவளை முறைத்தான்.

"யெஹ் பக்கி! நான் தான போன் பண்ணி வர சொன்னேன். அங்க எதுக்கு கோபப்படற? முதல்ல உள்ள ஏறு" என்று அவன் திட்டியவுடன் உள்ளே ஏறி அமர்ந்து”இப்ப சொல்லுங்க" என்று இருவரையும் மாறி மாறி பார்த்தான்.

செல்வி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

"நான் சொல்றேன்" என்று நடந்த எல்லாவற்றையும் கூறினான் சரவணன்.

"உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல. இப்படியா நடந்துப்பாங்க" என்று திட்ட ஆரம்பித்தவனை அதட்டினான் சரவணன்.

"டேய்! நானே ஏற்கனவே திட்டிட்டேன், நீ வேற எதுக்குடா திட்ற? சும்மா இரு"

"ஹ்க்கும். சும்மாவே இது அடங்காது. நீ வேற சப்போர்ட் பண்றியா? சுத்தம்" என்று போலியாய் கிண்டல் செய்தான்.

"எனக்கு முக்கியமா ஒருத்தர மீட் பண்ணனும் உனக்கு தான் சொல்லி இருந்தேன் இல்ல. இன்னும் கொஞ்ச நேரம் ஆகுமாம் இவங்க பஸ் வர. சோ, நீ அவங்கள கூப்பிடிட்டு போய் அவங்க வீட்ல விட்ருடா" என்று கூறினான்.

"ஆமாடா! ஏற்கனவே சொன்னியே, அவங்க எப்போ வராங்க?" என்று கேட்க.

'யாரடா பார்க்க போற நீ? இவ்ளோ நேரம் பேசிட்டு வந்தேன் என்கிட்டே நீ எதுவும் சொல்லவே இல்லையே? யாரா இருக்கும் அது?' என்று தன் சிறுமூளையை போட்டு கசக்கி கொண்டிருந்தாள் செல்வி.

"ஜெனி இன்னும் அரைமணி நேரத்துல நான் வர சொன்ன இடத்துக்கு வந்துருவாங்கடா. நான் போகணும்” என்று சரவணன் செல்வியை பார்த்தபடி கூறினான்.

அவளின் மனவலைகள் அவனுக்கு புரிந்தது. இருந்தாலும் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே”நீங்க உங்க அண்ணன் கூட போய்டுங்க மிஸ்.செல்வி” என்று கூற மிகவும் கடுப்பாகி போனாள் செல்வி.

"நான் எப்படி திருமதி.சரவணன் ஆகறதுன்னு யோசிச்சுட்டு இருந்தா? இந்த பக்கி பாரு என்ன வெறுப்பேத்துறதிலையே குறியா இருக்கு. இப்ப நான் எப்படி தெரிஞ்சுகிறது யாரு அந்த ஜெனி? அவ மட்டும் என் கைல மாட்டினா அவ்ளோ தான் இருக்குற கொலைவெறில அவளை கைமா பண்ணிடுவேன்." என்று அவனை முறைத்துக்கொண்டிருந்தாள்.
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43

9. செல்வியின் முடிவு​

"சரி. நான் வரேன்" என்று காரைவிட்டு கிழே இறங்கியவுடன் சரவணனின் விழிகளில் அவளுக்காக மறைத்து வைத்திருக்கின்ற அன்பை காணமுடியுமா? என்று தேடி கொண்டிருந்தாள் செல்வி.

அவள் எங்கே தன்னை கண்டுகொள்வாளோ என்று ஒருநிமிடம் தவித்தவன் அவள் முகத்தை காணாது பிரபுவிடம்”வீட்ல எதுவும் சொல்லாதடா திட்டபோறாங்க. அவளே எதாவது சொல்லி சமாளிக்கட்டும், நீ உன் வாய வச்சிகிட்டு அமைதியா இரு" என்று சிரித்தபடி எச்சரித்தான்.

'சரிடா! ஆனா இன்னொரு தடவ இதுமாதிரி பண்ணா நானே அப்பாகிட்ட சொல்லிடுவேன் பார்த்துக்க" என்று அவளை முறைததான்.

"அதுமாதிரி எல்லாம் இனி நடக்காதுடா, அதுதான் ஒரு தடவை அடிபட்டுடுச்சில்ல விடு" என்று அவளிடம் திரும்பி,”நல்லா ரெஸ்ட் எடு, ஸ்ட்ரயின் பண்ணாம இருந்தா ரெண்டு நாள்ல சரி ஆகிடும்" என்றான்.

"சரி" என்று கூறிவிட்டு”போலாமா? வா" என்று நடக்க கால் எடுத்துவைக்க, முடியாமல் சரவணனின் கையை சட்டென்று பிடித்துக்கொண்டாள்.

"சாரி" என்று உடனே அவன் கையை விடுத்து பிரபுவின் கையை பிடித்தபடி நடக்க தயாரானாள்.

"பரவால்ல ! எதுலயும் அவசரப்படாதே, உங்க அண்ணன் தடிமாடு மாதிரி வளர்ந்துருக்கானே, அவனே கூட்டிட்டு போவான்". என்று பிரபுவை பார்த்து சிரிக்க.

பிரபு முறைத்து கொண்டிருந்தான்,”அவளுக்கு புத்தி சொல்றேன்ற சாக்குல என்னை தடிமாடுன்னு சொல்றல்ல? நீ எல்லாம் ஒரு நண்பனாடா? நல்லா வருவ" என்று செல்வியை தாங்கிப்பிடித்தபடி நடந்தான்.

"தான் இருந்து தாங்கிபிடித்து கூட்டி செல்லவேண்டிய இடத்தில்... தன்னால் முடியவில்லையே” என்று ஏக்கமாய் அவர்கள் செல்வதையே நின்று பார்த்துகொண்டிருந்தான் சரவணத்தமிழன்.

பின் அங்கிருந்து கிளம்பி, தான் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றான்.

மறுநாள் வழக்கம் போல் தன் பணிகளை தொடர்ந்தான் தாமரைசெல்வியை நோட்டமிடுவது உள்பட தன் பணிகளை செவ்வனே செய்ய தொடங்கினான்.

"என்ன ஆச்சு சார்? உங்க டாட்டர் டூர் போயிருக்கறதா சொன்னிங்க? ஏதோ அடி பட்டுடுட்சி போல இருக்கு?" என்று ஏதுமறியா பிள்ளைபோல் முகத்தை சோகமாய் வைத்துகொண்டு கேட்க.

வெளியில் சோபாவில் அமர்ந்திருந்த தாமரைசெல்வி,”அடப்பாவி ஒண்ணுமே தெரியாதவன் போலவே கேக்குறானே? இது உலக மகா நடிப்புடா சாமி." என்று தனக்குள் சொல்லி கொண்டாள்.

"அது டூர் போன இடத்துல எங்கயோ கால் தவறி விழுந்துட்டு இருக்கா. அதான், ஒண்ணுமில்ல லேசா சதை பொறண்டுருக்கு ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரி ஆகிடும்னு டாக்டர் அதான் அவங்கம்மா சொன்னாங்க சரவணத்தமிழன்" என்றார் லேசான கவலையோடு.

"அய்யய்யோ பார்த்து போயிருக்கக்கூடாது, லேசான அடியோடு போச்சு. இல்ல பெரிய அடியா பட்டுருந்தா என்ன ஆகி இருக்கும்?" என்றான் தன் பப்பி பேசை வைத்துகொண்டு.

"அய்யய்யோ! இவன் இப்ப உண்மையாவே என்மேல உள்ள அக்கறைல சொல்றானா? இல்ல கோர்த்துவிட்றானா? இவனே வீட்ல சொல்லவேணாம்னு சொல்லிட்டு இப்படி பாவமா பேசி எங்க அப்பாவ இன்னும் உசுப்பேத்திவிட்றானே? ஏற்கனவே காலைல டாக்டர் போனப்ப ஆரம்பிச்ச டோசை இப்போ தான் திட்டறதுக்கு ரெஸ்ட் கொடுத்துட்டு அவர் ரெஸ்ட் எடுக்க போயிருக்கார். இவன் கிளப்பி விடறதுல ரெஸ்ட் எடுக்கறதை பாதிலயே விட்டுட்டு திரும்பி வந்து திட்டுவாரோ? ஐயோ என்னால எழுந்து வேகமா கூட நடக்க முடியாதே! எப்பா சாமி! நிறுத்துடா. திருப்பி எங்கப்பாவ என் பக்கம் திருப்பி விட்றாத" என்று தனக்குள் புலம்பி அர்ச்சனை கொண்டிருந்தாள்.

அவனிடம் வேலைகளை சொல்லிவிட்டு தாமரைசெல்வியை நோக்கி வந்துகொண்டிருந்தார் அவளின் அப்பா.

"அப்பா வேற என்கிட்டே தான் வரார், திரும்பி திட்டுவாரோ? எதுக்கு வம்பு நாம் வேற வேலை ஏதாவது செய்வோம். அப்ப தான் அவர் பாட்டுக்கு போய்டுவார்" என்று தன் புத்தகத்தை எடுத்து வைத்துகொண்டு படிப்பதை போல் பாவலா செய்து கொண்டிருந்தாள்.

அவளின் அருகே வந்து நின்றவர்”செல்விம்மா படிக்கிறியாடா?"என்று அவளின் தலையை கோதியபடி கேட்க”ஆமாப்பா" என்றாள். அவளின் முகத்தை பார்க்காமலே,”படிக்கறது நல்ல விஷயம் தான். ஆனா, புஸ்தகத்த தலைகிழா வச்சி படிக்காம நேர வச்சி படிடா" என்று லேசாக அவள் தலையில் செல்லமாக குட்டிவிட்டு போக.

"ஐயோ! அவசரத்துல இப்படி பண்ணிட்டேனே, எல்லாம் இவனால தான்" என்று தலையில் அடித்துகொண்டதை, உள்ளே இருந்து அவளின் நடவடிக்கைகளை கவனித்து கொண்டிருந்த சரவணத்தமிழன் வயிறு வலிக்க சிரித்தான். 'குறும்புக்கார பொண்ணு' என்று தனக்குள் சொல்லிக்கொண்டு தன் வேலைகளை மீண்டும் கவனிக்க தொடங்கினான்.

செல்வியின் கால் இரண்டு நாளைக்கு பிறகு சரியாகி நடக்க ஆரம்பித்தாள். இருந்தாலும் அவளை கல்லூரிக்கு அனுப்பாமல் இன்னும் இரண்டு நாள் விடுப்பு எடுக்க சொல்லிவிட்டனர் அவளின் பெற்றோர்.

இப்படியே இரண்டு மாதங்கள் சரவணத்தமிழன் அவளை கவனிப்பதும் செல்வி அவனை கவனிப்பதும் வழக்கம் போல் நடந்து கொண்டிருக்க, அவளின் தந்தையும் தன் மகளை கவனிக்க ஆரம்பித்தார்.

மகளின் நடவடிக்கைகளில் சிறிது சந்தேகம் வர, அவளை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்த அவருக்கு எல்லாம் புரிந்து போனது. இவர்கள் இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலும் இருவரும் எந்தவித நெருக்கத்திலும் இல்லை என்பதை அறிந்துகொண்டார்.

இதற்கு கூடிய விரைவில் ஒரு முடிவுகட்ட வேண்டும் என்று ஒரு முடிவோடு சில வேலைகளை மகளுக்கு தெரியாமல் செய்து கொண்டிருந்தார்.

பத்து நாள் கழிந்தபின், ஒரு மாலை வேளை தாமரைச்செல்வி கல்லூரி முடிந்து வீட்டிற்கு உள்ளே வந்த நேரத்தில், அவளுக்கு தெரியாத புதுமுகங்கள் அவளை வரவேற்றன. எல்லோரின் பார்வையும் அவளின் முகத்தில் ஈக்கள் மொய்ப்பது போல் மொய்த்தன.

"என்னடா நடக்குது இங்க? இவங்கல்லாம் யாரு? எனக்கே தெரியாம எங்க அப்பா எதாவது ஏடாகூடம் பண்ணி வச்சிடாரோ?" என்று அவள் யோசிக்கும் போதே அவளின் அம்மா அவளை உள்ளே அழைத்துக்கொண்டு போனார்.

"அம்மா! யாரு அவங்க எல்லாம் எதுக்கு வந்துருக்காங்க?" என்று பதட்டமாக கேட்டாள்.

"உங்க அப்பாவோட பிசினஸ் பார்ட்னர் மோகன் அவங்க பையனுக்கு பொண்ணு கேட்டு திடிர்னு வந்துட்டாங்க. எனக்கே இப்ப தான் உங்க அப்பா சொன்னார்" என்று அவள் தலையை அவசரமாக வாரி கொண்டிருந்தாள்.

"அம்மா என்ன இதெல்லாம்? என்கிட்டே ஒரு வார்த்த சொல்லி இருக்கலாம்ல? நான் இப்ப தான படிச்சிட்டு இருக்கேன் இன்னும் படிப்பே முடியல அதுக்குள்ள எதுக்கு இதெல்லாம்?" என்று செல்வி கத்தினாள்.

"ஏய் கத்தாத. அவங்களுக்கு கேக்க போகுது" என்று செல்வியின் அம்மா அதட்டினார்.

"கேக்கட்டுமே. எனகென்ன? எனக்கு சொல்லாம வந்தது அவங்க தப்பு. இதுக்கு சம்மதம் சொன்னது உங்க தப்பு. அதுக்கு நான் என்ன செய்ய?" என்றாள் கோவமாக.

வேகமாக உள்ளே வந்த பாஸ்கர்”என்ன அம்மு ரெடி பண்ணிட்டியா? அவங்க எல்லாரும் வெளிய பண்ணிட்டு இருக்காங்க?" என்று தன் மனைவியை நோக்க.

"என்னை எதுக்கு கேக்கறிங்க? உங்க பொண்ண கேளுங்க. எனக்கு ஏன் சொல்லலைன்னு கோபப்படுறா" என்று கூறினார்.

தன் மகளிடம் திரும்பி,”என்னடா அம்மா சொல்றதெல்லாம் உண்மையா? அவர் என் பிசினஸ் பார்ட்னர்மா, அன்னைக்கு வந்தப்ப உன்னை பார்த்துட்டு ரொம்ப பிடிச்சி போய் அவங்க வீட்ல சொல்லி அவரே இன்னைக்கு அவங்க பையன கூட்டிட்டு வந்துருக்காரு. ஏகப்பட்ட பிசினஸ் டீலிங் இருக்கு எனக்கும் அவருக்கும், அதுகூட முக்கியம் இல்ல உனக்கு முன்னாடி. அவங்க கொடும்பம் ரொம்ப நல்ல கொடும்பம்டா. வீடு தேடி வந்த அவங்கள நாம் அசிங்க படுத்தக்கூடாது. உனக்கு பிடிச்சிருக்கோ இல்லையோ சும்மா வந்து நில்லு எதுவா இருந்தாலும் அப்புறம் அவங்க போனப்புறம் பேசிக்கலாம்" தன் வாய் மொழிகளால் தன் மகளை சம்மதிக்க வைத்தார்.

தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் தன் அப்பா இவ்வளவு சொல்லும்போது தான் சும்மா அங்கு சென்று நிற்பதில் தவறில்லை என்று சிறிய அலங்காரத்தோடு அங்கு வந்து எல்லோரையும் வணங்கி நின்றாள்.

"எத்தனை பேர் வேணா வந்து பார்த்துகோங்கடா, ஆனா தாலி மட்டும் என் மனசுக்கு பிடிச்சவன் கையால தான் கட்டிக்குவேன்." என்று எண்ணியபடி அமைதியாய் நிற்க.

"என் மகனுக்கு உன் பொண்ணை பிடிச்சிருக்காம் பாஸ்கர்" என்றார் மகனின் தந்தை மோகன்.

"உனக்கு என் மகனை பிடிச்சிருக்காம்மா?" என்று நேரடியாக செல்வியை கேட்டார்.

"நான் மாப்ள கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்" என்றாள் தரையை பார்த்தபடி.

"தாராளமா போய் பேசிட்டு வாங்க" என்று தனியே அனுப்பி வைத்தார் மோகன்.

தன் மகள் என்ன சொல்லுவாளோ?.... என்று கொஞ்சம் கவலையாக அமர்ந்திருந்தார் பாஸ்கர்.

சிறிது நேரம் கழித்து வந்த செல்வி,”எனக்கு மாப்பிள்ளைய பிடிச்சிருக்கு" என்றாள்.
 

New Threads

Top Bottom