நாடோடி வாழ்க்கை
நாடோடி போல நகரத்தை தேடி அலைக்கிறோம்,
ஒரு குடிசையாவது கிடைக்காத என குக்கிராமத்தை தேடி அலைக்கிறோம்,
நிழல் கூட நிலைக்க வில்லை, எங்கள் நிலைமையை எடுத்து சொல்ல...
ஒதுக்கிறது சமூகம், துரத்துக்கிறது துரோகம்,
பதுக்குழி வாழ்க்கை...
எங்களை துரத்தும் துப்பாக்கி முனை வேட்கை,
இதில், எங்களுக்கு அகதியேனும் அங்கீகாரம் வேறு,
என் தாய் மண்ணுக்கும் எனக்கும் உள்ள தொப்புள் கொடியை
உறவை அறுப்பதற்கு நீ யார்,
என் ஈழத் தமிழ் இனத்தை இரக்கமற்று அழிக்க நீ யார்,
சிறிய தீவாய் திரிந்து வருகிறோம், வாழ்க்கையை தொலைத்து,
தாக்கத்திற்கு தண்ணீர் இல்லை, பசிக்கோ போஜனமில்லை,
ஆழ்ந்து உறங்க உறைவிடமில்லை,
உணா்வுகளுக்கோ மதிப்பில்லை,
சுமை துாக்கி போல சுமந்து செல்லும் அர்த்தமற்ற வாழ்க்கை, அனாதையாய் ஒரு தோற்றம்,
இந்த நிலைமையை எங்களுக்கு தீர்மானித்து யார் செய்த குற்றம்,
நாங்கள் பிறந்தது குற்றமா, இல்லை நாங்கள் பிறந்த மண்ணின் மீது குற்றமா.......?
கணக்கிறது இதயம், கடக்கிறது எங்கள் காலமும்,காலும்.......!
அமைதி பொங்கும் கண்ணியமான நாங்கள் கண்ட கனவு உலகத்தை தேடி......!
- மீனாகூஷி சிவக்குமாா்